வாட்ஸ் குரூப்பில் புதிய வசதி : உறுப்பினர்களின் எண்ணிக்கை 256 ஆக அதிகரிப்பு
இலவச கால்கள் செய்ய, மெசேஜ் அனுப்ப என எல்லா வகையிலும் முதன்மையான இருக்கும் வாட்சப் பயனர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது.
வாட்சப்பில் புதிய வசதி
இதில் உள்ள குரூப் வசதியை பயன்படுத்தி, நண்பர்கள் ஒரு குழுமத்தை அமைத்து, ஏராளமான தகவல்களை பகிர்ந்துகொள்கிறார்கள். அந்த வகையில் வாட்சப் குரூப்பில் உறுப்பினர்களின் அதிகபட்சமாக 256 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் வாட்சப் குரூப்பில் 50 பேர்தான் இருக்க முடியும். பிறகு அது 100 ஆக உயர்த்தப்பட்டது. தற்பொழுது அதிகபட்சமாக 225 உறுப்பினர்கள் இருக்கும்படி உயர்த்தப்பட்டுள்ளது.
ஆன்ட்ராய்டு போன் உள்ளவர்கள் மட்டுமே இப்புதிய வாட்ஸ்அப் வசதியை பெற முடியும்.