திரையிசைப் பாடல்களில் இலக்கணம்:
_*திரையிசைப் பாடல்களில் இலக்கணம்:*_
திரையுலகம் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையக் கூடியது. அதன் மூலம் நாம் ஒரு செய்தியைக் கூறினால், உடனே புரிந்து கொள்ளும் தன்மை, யாருக்கும் உண்டு. இதில் வரும் இலக்கணங்கள் *இனிப்புத் தடவப்பட்ட "கசப்பு மாத்திரைகள்"* என்று கூறலாம்.
*தமிழ் இலக்கணம் குறித்த சில சான்றுகள் இங்கே உங்களுக்காக...*
*அடுக்குத்தொடர்:*
ஓடிஓடி உழைக்கனும் ஊருக்கெல்லாம் கொடுக்கனும்.
ஓடிஓடி உழைக்கனும் ஊருக்கெல்லாம் கொடுக்கனும்.
*இரட்டைக்கிளவி:*
ஜல்ஜல் எனும் சலங்கை ஒலி சலசல எனச் சாலையிலே.
ஜல்ஜல் எனும் சலங்கை ஒலி சலசல எனச் சாலையிலே.
*சினைப்பெயர்:*
பூப்பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா.
பூப்பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா.
*பொருட்பெயர்:*
கண்ணன் என்னும் மன்னன் பெயரைச் சொல்லச் சொல்ல
கண்ணன் என்னும் மன்னன் பெயரைச் சொல்லச் சொல்ல
*இடப்பெயர்:*
வீடு வரை உறவு வீதி வரை மனைவி!
வீடு வரை உறவு வீதி வரை மனைவி!
*காலப்பெயர்:*
வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்!
வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்!
*குணம் அல்லது பண்புப்பெயர்:*
அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா!
அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா!
*தொழில் பெயர்:*
ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே தான் சுகம்! சுகம்!
ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே தான் சுகம்! சுகம்!
*இறந்த காலப் பெயரெச்சம்:*
வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை!
வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை!
*எதிர்காலப் பெயரெச்சம்:*
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ?
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ?
*இடவாகுபெயர்:*
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீ தான் நீதிபதி
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீ தான் நீதிபதி
*எதிர்மறைப் பெயரெச்சம்:*
துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும்
துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும்
*குறிப்புப் பெயரெச்சம்:*
அழகிய தமிழ்மகள் இவள் இரு விழிகளில் எழுதிய மடல்!
அழகிய தமிழ்மகள் இவள் இரு விழிகளில் எழுதிய மடல்!
*ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்:*
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது.
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது.
*வன்றொடர்க் குற்றியலுகரம்:*
முத்துப்பல் சிரிப்பென்னவோ முல்லைப்பூ விரிப்பென்னவோ!
முத்துப்பல் சிரிப்பென்னவோ முல்லைப்பூ விரிப்பென்னவோ!
*நெடிற்றொடர்க் குற்றியலுகரம்:*
நாடு அதைநாடு அதை நாடாவிட்டால் ஏது வீடு
நாடு அதைநாடு அதை நாடாவிட்டால் ஏது வீடு
*உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்:*
ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள்
ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள்
*இரண்டாம் வேற்றுமை உருபு:*
நிலவைப்பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே.
நிலவைப்பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே.
*மூன்றாம் வேற்றுமை உருபு:*
உன்னால் முடியும் தம்பி! தம்பி!!
உன்னால் முடியும் தம்பி! தம்பி!!
*பெயர்ப் பயனிலை:*
காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம்....
காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம்....
*(பகிருங்கள். ஆசிரியர்களுக்குப் பயன்படும்)*