கப் காஃபி விற்பனை செய்யும் சாம்ராஜ்யத்தின் ராஜா...இந்த சித்தார்த்தா...
150 வருடங்களாக காபி எஸ்டேட் வைத்து வாழ்ந்த செல்வ செழிப்பான குடும்பம்...Born with Golden Spoon..... அதிலிருந்து வந்து.. ஒரு ஜெர்மானிய காஃபி அவுட்லெட் செயின் கண்டு inspire ஆகி , நாமும் நம் நாட்டில் அப்படி ஆரம்பித்தால் என்ன என யோசித்து..
1994ல் பெங்களூரில் முதல் அவுட்லெட் ஆரம்பித்தார், with a tag line
"A Lot Can Happen Over A Cup Of Coffee"...
"A Lot Can Happen Over A Cup Of Coffee"...
அது அப்படியே வளர்ந்து...இந்தியா முழுவதும் இருநூறு நகரங்களில்...1850 கஃபே காபி டே CCD அவுட்லெட் வைத்த one of the most powerful indian business men , இந்த சித்தார்த்தா... இதல்லாமல் வெளிநாட்டிலும் சில நகரங்களில் அவுட்லெட் உண்டு...
2017-18 ஆம் ஆண்டு total revenue மட்டும் 530 கோடி ரூபாய்..
இருபதாயிரம் ஊழியர்கள் வேலை செய்கிறார்கள்..
ஆறு நாடுகளில், ஒரு நாளைக்கு 18 கோடி கப் காஃபி விற்பனை செய்யும் சாம்ராஜ்யத்தின் ராஜா...இந்த சித்தார்த்தா...
வாழ்க்கையில் தொழிலில்... தோற்று விட்டேன் என கடிதம் எழுதி வைத்து விட்டு... ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
5000 ரூபாய் கடன் வாங்கிய விவசாயியும் தற்கொலை செய்து கொள்கிறார்... பல கோடி ரூபாய் சாம்ராஜ்யத்தின் ராஜா வும் தற்கொலை செய்து கொள்கிறார்.
இங்கே பணம் தான் எல்லாமே என நினைக்கும் அனைவருக்குமான சம்மட்டி அடி இது !
After the game , the King and the pawn go into the same Box என ஒரு கூற்று உண்டு
இதை உணர தான் நமக்கு ஒரு வாழ்க்கையே தேவை படுகிறது...
இந்த நிலையற்ற வாழ்வில்... நாம் அந்த கொஞ்ச நேரத்தில் செய்யும் அலப்பறைகள் தான் எத்தனை எத்தனை... வஞ்சம்..சூது... பித்தலாட்டம்.. துரோகம்.. வன்மம்.. மற்றவர்களை சுலபமாக காய படுத்துவது.... இத்தியாதி இத்தியாதி..
பாபா திரைப்படத்தில் ரஜினி சொல்லும் ஒரு டயலாக்...
" ... இதெல்லாம் பந்தா.. எவன் அப்பன் வீட்டு சொத்து ... வேஸ்ட்... மேலேர்ந்து அழைப்பு வந்தா போயிடணும்...."
இது தான் நிதர்சனம்.. ரஜினி பட டயலாக் களில் எனக்கு மிகவும் பிடித்தது .
ஆயிரமாண்டுக்கு முன் நம் தமிழ் மறை கூறியதும் அதான்...
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.
விழிப்பது போலும் பிறப்பு.
வாழ்க்கை
மகத்தானது... விசித்திரமானது... விவரிக்க முடியாதது... மிக சிறியது...நிவையற்றதும் கூட.
மகத்தானது... விசித்திரமானது... விவரிக்க முடியாதது... மிக சிறியது...நிவையற்றதும் கூட.
இருக்கும் வரை நாமாக நம்பகமாக தீயவை தூக்கி எறிந்து நல்லதை மட்டும் சுமந்து செல்வோம்...அந்த பாரம் தான் விட்டு செல்லும் போது மிக சுலபமாக இறக்கி வைக்க முடியும்.
நன்றி சித்தார்த்தா....
For all your good deeds in the Indian Entrepreneurship World...and For all the worthy lessons you've left behind .
RIP Sidhdhartha.