🙏 வணக்கம் 🙏 நீங்கள் கேட்ட நான்கு கேள்வி? - பதில் இதோ👇.. | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil 🙏 வணக்கம் 🙏 நீங்கள் கேட்ட நான்கு கேள்வி? - பதில் இதோ👇.. ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

புதன், 15 ஜனவரி, 2020

🙏 வணக்கம் 🙏 நீங்கள் கேட்ட நான்கு கேள்வி? - பதில் இதோ👇..

🙏 வணக்கம் 🙏 முதலில் சகோதரர் விக்கி அவர்களுக்கு நன்றி. 🗣️நீங்கள் கேட்ட நான்கு கேள்விகளில் முதலாவது கேள்வி 👉இனவாதம் பேசுவது சரியா? என்பதற்கு பதில் இதோ👇.. ✍️உள்ளபடி யாதுமென உற்றுணர்ந்தேன் அக்கணமே கள்ளமனம் போனவழி காணேன் பராபரமே✍️ 💓தாயுமானவர் 💓 🗣️எதையுமே கள்ளமனம் கொண்டு சொல்லாமல் உள்ளதை உள்ளபடியே நேர்மையாக கூறவேண்டும் என்று தாயுமானவர் நமக்கெல்லாம் அறிவுறுத்துகின்றார். 💓திருவள்ளுவர் 💓 நல்லாண்மை என்பது ஒருவருக்குத் தான் பிறந்த இல்லாண்மை ஆக்கிக் கொளல்✍️ 🗣️நல்ல ஆண்மகனுக்கு அழகு என்பது தான் 👉பிறந்த வீட்டையும் நாட்டையும் நீயே ஆள்வது போல் பார்த்துக் கொள்ள வேண்டும்👈 என்று ஐயன் 💓திருவள்ளுவர்💓 கூறுகின்றார். 🗣️இது 👉தமிழர்களுக்கு மட்டுமல்ல👈 🗣️உலகில் உள்ள அனைத்து மொழி வழி தேசிய இனங்களுக்கும் பொருந்தும். 🗣️தமிழ்நாட்டை தமிழர் தான் ஆளவேண்டும். அதுபோல 👉ஒவ்வொரு மாநிலத்தின் தாய் மொழியை பேசுகின்ற மக்கள் தான் அந்தந்த மாநிலங்களை ஆளவேண்டும்👈. 🗣️இப்போ சொல்லுங்க திருவள்ளுவர் இனவாதியா???🤔 💓பாரதியார்💓 ✍️தமிழ்த் திருநாடு தன்னைப் பெற்ற-எங்கள் தாயென்று கும்பிடடி பாப்பா✍️ 💓தமிழ்நாட்டை💓, தன்னை பெற்றெடுத்த 👉தாய் 👈 என்று நினைத்து தினமும் 💓பாரதியார்💓 கும்பிடச் சொல்கின்றார். 🗣️இப்போ சொல்லுங்க பாரதியார் இனவாதியா?🤔 💓பாரதிதாசன் 💓 ✍️அவனவன் நாட்டில் அவனவன் வாழ்க-மற்றயல் நாட்டைச் சுரண்டுதல் அடியோடு வீழ்க!✍️ அவன் அவன் அவனுடைய நாட்டில் தான் வாழ வேண்டும் என்று 💓பாரதிதாசன்💓 கூறுவதால், 💓பாரதிதாசன் 💓 இனவாதியா?🤔 💓பாவலரேறு பெருஞ்சித்திரனார் 💓 ✍️கெஞ்சுவதில்லை பிறர்பால்! அவர் செய் கேட்டினுக்கும் அஞ்சுவதில்லை, மொழியையும் நாட்டையும் ஆளாமல் துஞ்சுவதில்லை,✍️ மொழியையும் நாட்டையும் 💓பெருஞ்சித்திரனார் 💓 ஆளச் சொல்லிவிட்டார், 🗣️இதனால் இவர் இனவாதியா?🤔 🗣️இதுபோல் 💓தமிழையும் தமிழ்நாட்டையும்💓 தம் உயிராக நினைத்து வாழ்ந்தவர்களின் கூற்றுக்கள் ஏராளம் உண்டு. அவற்றையெல்லாம் சொல்ல நாட்கள் போதாது🤝 இப்போது சொல்லுங்கள் 💓நாம் தமிழர்💓 👉இனவாதம் பேசுகின்றாதா?🤔 இல்லை 👉தன்மானம் பேசுகின்றார்?🤔

Popular Posts

Facebook

Blog Archive