பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

செவ்வாய், 13 ஜூன், 2017

கணினி சார்ந்த பொது அறிவு


கணினி சார்ந்த பொது அறிவு!

தற்போது இன்டர்நெட் பயன்பாடு என்பது மிகவும் பிரபலம் ஆகிவிட்ட விஷயமாகும். இன்டர்நெட் பயன்படுத்துவர் சிலர் கணினி சார்ந்த பொதுவான தகவலை இன்னுமும் தெரியாமல் தான் உள்ளனர். கணினி பற்றிய பொது அறிவை இதோ தெரிந்து கொள்ளுங்கள்......!


* இன்டர்நெட்டின் தந்தை என்று அழைக்கப்படுபவர் - வின்ட் ஸர்ப்

* www (World wide web) என்னும் இன்டர்நெட் தாரக மந்திரத்தை உருவாக்கியவர் - திமோத்திஜான் பெர்னர்ஸ்லீ. இதன் துவக்க பெயர் Enquire

* கணினி வழி தகவல் பரிமாற்றத்தில் புன்னகை தவழும் முகம் என்பதை குறிக்க :- எனும் கூறியீடு பயன்படுத்தப்படுகிறது. இதை முதன் முதலாக 1982ல் பயன்படுத்தத் துவங்கியவர் - ஸ்காட் பால்மன்

* கூகுள் தேடுபொறியை உருவாக்கியவர்கள் - லாரிபேஜ், ஸ்சேர்கி பிரின்

* விகிபீடியா வலைதளத்தை உருவாக்கியவர் - ஜிம்மி வேல்ஸ்

* பேஜ்மேக்கர் எனும் பப்ளிஷிங் சாப்வேரை உருவாக்கியவர்  - பால் பிரெயினார்ட், இவர் இந்தியாவின் சூப்பர் கம்ப்யூட்டர் என்றும் அழைக்கப்படுகின்றார்.

* சி++ எனும் கணினி மொழியை வடிவமைத்தவர் - பியான் ஸ்ட்ரூ ஸ்டெரெப்

* MS-Dos எனப்படும் கணினி நிரலை உருவாக்கியவர் - டிப் பாட்டர்ஸன்

* ஆப்பிள் கணினியை துவக்கியவர் - ஸ்டீவ் வோஸ்னியாக்

* CD என்ற குறுந்தகடை கண்டுபிடித்தவர் - ஜேம்ஸ் ரஸ்ஸல்

* Vital Information Resources Under Seas எனும் கணினி வார்த்தையின் சுருக்கம் தான் VIRUS

* Commonly operated machine purposely used for trade and Engineering research என்பதன் சுருக்கம் தான் COMPUTER

* கணினி மவுஸை கண்டுபிடித்தவர் - டக்ளஸ் எங்கல்பர்ட்

* Uniform Resource Location என்பதன் சுருக்கம் தான் URL முகவரியாகும்.

Web Development Language- களை இலவசமாக படிக்க சிறந்த இணையத் தளங்கள்.!


Web Development Language- களை இலவசமாக படிக்க சிறந்த இணையத் தளங்கள்.!
Web Development குறித்து படிக்க விரும்பும் நண்பர்கள் நிறைய பேருக்கு அது குறித்த அறிவு இருந்த போதும் நேரமின்மை மற்றும் சில காரணங்களினால் வெளியே எங்கும் சென்று படிக்க முடியாத நிலை இருக்கும். ஆனால் இணையத்தில் இருந்தால் எளிதாக அவர்கள் படிக்க முடியும் என்று நினைப்பார்கள். அத்தகைய வசதியை இலவசமாக பெற முடிந்தால்? ஆம் Web Development மொழிகளை இலவசமாக கற்க உதவும் தளங்களை பற்றி பார்க்கலாம் .
Web Development Language என்ன ?
இவற்றின் மூலம் தான் எந்த ஒரு தளமும் இயங்குகிறது. ஒரு தளத்தை உருவாக்க, நடத்த, மேம்படுத்த இவை அவசியம் ஆகிறது.

1. W3Schools - http://www.w3schools.com/
மிக அதிகமான தகவல்களை கொண்டுள்ள இந்த தளம் Web Development க்கு தேவையான அனைத்தையும் இலவசமாகவே சொல்லித் தருகிறது. மிக எளிமையாக கற்று தரும் இந்த தளத்தின் மூலம் Web Development குறித்த அடிப்படை அறிவே இல்லாதவர் கூட விரைவில் அவற்றை கற்றுக் கொள்ளலாம். Certificate வேண்டும் என்பவர்கள் 95$ கட்டி பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அதற்கு அந்த குறிப்பிட்ட மொழியில் உங்களுக்கு Knowledge இருக்க வேண்டும்.

2. Hscripts - http://www.hscripts.com/tutorials/index.php
இந்த தளமும் மேலே உள்ளதை போல எளிமையாக சொல்லி தருகிறது. Flash, JSP, UNIX commands, Perl போன்றவற்றையும் படிக்கும் வசதி உள்ளது.

3. HTML Codes, Tags and  CSS,போன்றவற்றை படிக்க சிறந்த தளம்.

https://html.com/      (formerly Quackit )

4. HTML.net - http://www.html.net/
HTML, CSS, PHP, Java Script போன்றவற்றை படிக்க சிறந்த தளம்.

5. jQuery - http://jquery.com/
Query ஆனது ஒரு தளத்தின் செயல்பாட்டை தீர்மானிக்க உதவும் Java Script இன் Library ஆகும். இதை jquery தளத்திலேயே கற்கலாம்.
இதை வீடியோ Tutorials ஆக முப்பது நாளில் படிக்க 30 நாளில் இலவசமாக jQuery கற்கலாம்.

6. HTML Code Tutorial - http://www.htmlcodetutorial.com/
மிக அடிப்படையான மொழியான HTML -ஐ அடிப்படையில் இருந்து கற்க இது உதவுகிறது. அத்தோடு CSS ம் இங்கு படிக்க முடியும்.

7. HTML 5
இணையத்தின் எதிர்கால மொழி என்று சொல்லப்படும் HTML 5 பற்றி படிப்பது ஒவ்வொரு Web Developer-க்கும் பயனுள்ளது. அவற்றை W3Schools இலவசமாக கற்று தருகிறது, 

மற்ற சில தளங்கள்





இவை தவிர்த்து அனைத்து Web Development படிக்க மற்ற சில தளங்கள்:


Quackit -   Now -  https://html.com/


Web Developers Notes -
http://learn.appendto.com/

appendto - jQuery & Java Script -
http://www.webdesign.org/

(குறிப்பு- நாம் மேற்குறிப்பிட்ட தளங்களுக்குள் பிரவேசிக்க இணையத்தள முகவரிக்கு மேல் click செய்யவும்)

நீங்கள் அறிந்திராத Youtube தளத்தின் அருமையான சில வசதிகள்! (Youtube Tips & Tricks)



YouTube தளம் பற்றி அறியாதவர்கள் யார்தான் இருக்க முடியும்?

இணையத்தில் வீடியோ கோப்புக்களை சேமித்து அதனை பயனர்களின் பார்வைக்கு வழங்க எத்தனயோ தளங்கள் இருந்தாலும் அதில் YouTube தளத்துக்கு தனிச்சிறப்பு உண்டு.

அந்த வகையில் Google ஆல் நிருவகிக்கப்படும் இந்த தளத்தில் ஏராளமான வசதிகளும் பலசுவாரஷ்யமான அம்சங்களும் கொட்டிக் கிடக்கின்றன ஆனால் அவற்றுள் அதிகமானவற்றை நாம் அறியத்தான் தவறி விடுகின்றோம்.

எனவே YouTube தளம் மூலம் அடைய முடிகின்ற சில வசதிகளை கீழே பார்ப்போம்.

நீங்கள் YouTube தளத்தில் இருக்கும் ஒரு வீடியோ கோப்பினை தரவிறக்க விரும்பினால் பின்வரும் முறையை பின்பற்றுக.

குறிப்பிட்ட வீடியோ கோப்பிற்கான URL இற்கு முன் இருக்கும் https://www. என்பதனை நீக்கி விட்டு ss என்பதனை தட்டச்சு செய்து Enter அலுத்துக

உதாரணத்திற்கு https://www.youtube.com/watch?v=Rxz9Rn98MDs எனும் இந்த இணைப்பின் https://www.என்பதனை நீக்கிவிட்டு ss என்பதனை சேர்த்தல் அது பின்வருமாறு அமையும்.

ssyoutube.com/watch?v=Rxz9Rn98MDs

இனி அது savefrom எனும் தளத்துக்கு உங்களை அழைத்துச் செல்லும் பிறகென்ன உங்களுக்குத் தேவையான வீடியோ கோப்பின் வடிவத்தை தெரிவு செய்து சுட்டுக. பிறகு குறிப்பிட்ட வீடியோ கோப்பு உங்கள் கணனிக்கு தரவிறக்கப்படும். (படத்தினை தெளிவாகக் காண படத்தின் மேல் சுட்டுக)


வீடியோ கோப்பொன்றினை அதன் தெரிவு செய்யப்பட்ட இடத்திலிருந்து பார்க்க

நீண்ட நேரம் இயங்கக் கூடிய ஒரு வீடியோ கோப்பினை நீங்கள் விரும்பும் இடத்திலிருந்து பார்க்க விரும்பினால் அதற்கான இணைப்பின் இறுதிப்பகுதியில் இயங்க ஆரம்பிக்க வேண்டிய நேரத்தினை சேர்க்க வேண்டும்.

உதாரணத்திற்கு 5 நிமிடம் இயங்கக் கூடிய ஒரு வீடியோ கோப்பினை அதன் 2 நிமிடம் 20 வினாடிகளுக்குப் பின் இயங்கக் கூடிய பகுதியை மாத்திரம் நீங்கள் பார்க்க விரும்பினால் குறிப்பிட்ட இணைப்புடன் #t=02m20s என சேர்க்க வேண்டும். (இங்கு m என்பது நிமிடத்தினையும் s என்பது வினாடியையும் குறிக்கும்)

உதவிக்கு பின்வரும் இணைப்பினை பார்க்க

https://www.youtube.com/watch?v=Rxz9Rn98MDs#t=03m22s

ஒரு வீடியோ கோப்பினை உச்ச தெளிவுத் திறனில் (HD) வடிவில் பார்க்க.

நீங்கள் YouTube தளத்தில் பார்க்கும் வீடியோகோப்புக்கு கீழ் தரப்பட்டிருக்கும் Settings Icon ஐ சுட்டி 720p HD, அல்லது 1080P HD என்பதனை சுட்டுக. இனி குறிப்பிட்ட வீடியோ கோப்பினை உச்ச தெளிவுத்திறனில் காணலாம். (இது ஒரு சில வீடியோ கோப்புக்களுகு பொருந்தாது)


YouTube தளத்தில் இயங்கும் ஒரு வீடியோ கோப்பினை தானாக மீள இயங்கச் செய்ய வேண்டுமா?

குறிப்பிட்ட இணைப்புக்கு முன் https://www.youtube.com என்பதனை நீக்கி விட்டு youtuberepeater.com என்பதனை சேர்த்து Enter அலுத்துக. இனி அது youtuberepeater.com எனும் தளத்துக்கு மாற்றப்பட்டு தானாகவே மீண்டும் மீண்டும் இயங்கும் (Auto Replay)

உதாரணத்திற்கு https://www.youtube.com/watch?v=xyzxyzxyz எனும் இணைப்பினைyoutuberepeater.com/watch?v=xyzxyzxyz என மாற்றி அமைக்க வேண்டும்.

மேலும் infinitelooper எனும் தளமும் இந்த சேவையை தருகின்றது. இந்த தளமானது மேற்கூறிய தளத்தினை விட ஒரு படி மேல் சென்று தானாக மீள இயங்க வேண்டிய வீடியோ கோப்பின் கால வரையறையையும் தெரிவு செய்து கொள்ள வசதியை வழங்குகின்றது.

எனவே குறிப்பிட்ட வீடியோ கோப்பினை இந்த தளத்தின் மூலம் நீங்கள் பார்க்க உங்கள் வீடியோ கோப்பிற்கான இணைப்பை பின்வருமாறு மாற்றி அமைக்க வேண்டும்.

infinitelooper.com/watch?v=xyzxyzxyz



உங்கள் நாட்டில் இயங்குவதற்கு தடை செய்யப்பட ஒரு வீடியோ கோப்பினை இயங்கச் செய்ய வேண்டுமா?

குறிப்பிட்ட வீடியோ கோப்பில் உள்ள watch?v= என்பதனை /v/ ஆக மாற்றுக

உதாரணத்திற்கு உங்கள் வீடியோ கோப்பின் இணைப்பு https://www.youtube.com/watch?v=xyzxyzxyz எனின் அதனை https://www.youtube.com/v/xyzxyzxyz என்றவாறு மாற்றுக.

வீடியோ கோப்பொன்றினை பிறகொரு சந்தர்பத்தில் பார்க்க

YouTube தளத்தில் இருக்கும் ஒரு வீடியோ கோப்பினை நீங்கள் பிறகு ஒருசந்தர்பத்தில் பார்க்கலாம் என எண்ணினால் YouTube தளத்தில் வலது பக்கம் தரப்பட்டிருக்கும் Watch Later என்பதனை சுட்டுக. இனி குறிப்பிட்ட வீடியோ கோப்பினை பிறகு ஒருசந்தர்பத்தில் பார்க்கலாம். (இதற்கு Google தளத்தின் கணக்கொன்று அவசியம்.)

குறைந்த இணைய வேகத்திலும் சிறந்த அனுபவத்தினை பெற.

குறைந்த வேகத்தில் அமைந்த இணைய இணைப்பின் போதும்  தங்கு தடையின்றி வீடியோ கோப்புக்களை இணையத்தில் பார்க்க Feather beta எனும் வசதியை YouTube தளம் தருகின்றது. குறிப்பிட்ட பக்கத்திற்குச் சென்று Join the "Fether" Beta என்பதனை அழுத்துவதன் மூலம் நீங்களும் இந்த வசதியை செயற்படுத்திக் கொள்ளலாம்.

இதோ அதற்கான பக்கம் ====> இங்கே சுட்டுக



குறிப்பிட்ட ஒரு சொல்லை அடிப்படையாக கொண்ட தேடல் முடிவுகளை பெற.

YouTube தளம் மூலம் நாம் வீடியோ கோப்புக்களை தேடுகையில் குறிப்பிட்ட ஒரு சொல் அடங்கிய அனைத்து வீடியோ கோப்புக்களையும் தேடல் முடிவில் பெறுவதற்கு allintitle:என்பதுடன் குறிப்பிட்ட சொல்லை இட்டு தேட வேண்டும்.


உதாரணத்திற்கு "தமிழ்" என்ற சொல் அமைந்த அனைத்து வீடியோ கோப்புக்களையும் தேடல் முடிவில் பெற வேண்டுமாயின் YouTube தளத்தின் Search Bar இல் allintitle:தமிழ் என தட்டச்சு செய்து தேடல் வேண்டும்.




YouTube தளம் மூலம் வீடியோ கோப்புக்களை Edit செய்வதற்கு.

நீங்கள் YouTube தளத்தில் வீடியோ கோப்புக்களை பதிவேற்றி பகிர்ந்து கொள்பவர் எனின் உங்கள் வீடியோ கோப்புக்களில் மாற்றங்களை ஏற்படுத்த (Edit செய்வதற்கு) YouTube தளம் வசதியை தருகின்றது. குறிப்பிட்ட பக்கத்திற்குச் செல்ல கீழுள்ள இணைப்பில் செல்க.

YouTube Editor ====> இங்கே சுட்டுக 

YouTube தளத்தில் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்சிகளை கண்டுகழிக்க

இவைகள் தவிர YouTube தளம் மூலம் தமிழ் உட்பட இன்னும் ஏராளமான மொழிகளில் அமைந்த முழுமையான திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்சிகள்போன்றவற்றினையும் இலவசமாக பார்க்கலாம். இவற்றினை நீங்களும் பார்க்க விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.

திரைப்படம் ====> இங்கே சுட்டுக.

தொலைக்காட்சி நிகழ்சிகள் =====> இங்கே சுட்டுக.

உலகின் முதல் 5G தொழில்நுட்பத்தை சோதனை செய்தது Samsung!



தென்கொரிய நிறுவனமான சாம்சங் குறித்து நாம் அனைவரும் அறிவோம். மின்னணு சாதனங்களுக்கு பெயர் பெற்ற இந்த அலைபேசி நிறுவனம் தற்போது உலகிலேயே முதல் முறையாக 5G தொழில்நுட்பத்தை சோதித்து பார்த்துள்ளது. இதன் மூலம் இப்போது நாம் பெறும் இணைய வேகத்தை விட பல மடங்கு அதிக அளவுக்கு மிக வேகமான இணைய இணைப்பை பெற முடியும் என்றும் அறிவித்துள்ளது அந்த நிறுவனம்.

5G தொழில்நுட்பத்தை 28 GHz அலைகற்றையில் சோதித்து 1GB தகவலை ஒரே நொடியில் பரிமாறி உள்ளது சாம்சங். அதாவது இதன் மூலம் ஒரு முழு திரைப்படத்தை நாம் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் தரவிறக்கம் செய்ய முடியும். இது தற்போது நாம் பயன்படுத்தும் 2G மற்றும் 3G ஐ விட பல ஆயிரம் மடங்கு வேகம் ஆகும். சொல்லப் போனால் Broadband ஐ விடவும் மிக அதிக வேகம்.

இதன் மூலம் மிக அதிக தரமுள்ள HD வீடியோக்களை மிகக் குறைந்த நேரத்தில் பரிமாற்ற முடியும், அதே போல 3D திரைப்படங்கள் மற்றும் விளையாட்டுகளை பார்க்க முடியும், Ultra HD வீடியோக்களை Real time streaming மூலம் பார்க்கலாம்.

இது 2020 முதல் பயனர்களுக்கு கிடைக்கும் என்றும் அறிவித்துள்ளது சாம்சங் நிறுவனம். இந்தியா, சீனா போன்ற பல ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் இன்னும் 4G தொழில்நுட்பமே வந்திராத நிலையில் 5G என்பது நமக்கு எப்போது கிடைக்கும் யூகிக்க முடிகிறதா?

புளூடூத் : தெரிந்ததும், தெரியாததும்!


புளூடூத் : தெரிந்ததும், தெரியாததும்!

நிறைய விஷயங்களை நாம் அடிக்கடி பேசுவோம். ஆனால் அதன் பின்னணியில் என்ன நடக்கிறது ? அதன் தொழில் நுட்ப நுணுக்கங்கள் என்ன என்பது பலருக்கும் தெரியாது.

புளூடூத் பற்றித் தெரியுமா ? என சில ஆண்டுகளுக்கு முன்னால் கேட்டால் அது ஏதோ பல் சம்பத்தப்பட்ட விஷயம் என நினைத்திருப்போம். அந்த நிலையைத் தாண்டி இப்போது புளூடூத் என்பது என்ன என்பது நமக்குத் தெரியும்.

தெரியும் என்றால், எந்த அளவுக்குத் தெரியும் என்பது கேள்விக்குறிதான். “அதான் போன்ல இருக்குமே… பாட்டு எல்லாம் ஷேர் பண்ணலாமே” எனுமளவுக்குத் தான் பெரும்பாலானவர்களுடைய புளூடூத் அறிவு இருக்கும். அதில் தப்பில்லை. நமக்கு பயன்பாட்டு அளவிலான அறிவே போதும். இருந்தாலும் இந்தக் கட்டுரையில் புளூடூத் என்றால் என்ன அதன் தொழில் நுட்பங்கள் என்ன என்பதை எளிமையாய் பார்ப்போம்.

பல்லுக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை, எதுக்காக புளூ டூத் ன்னு பெயரை வெச்சாங்க ? எனும் குழப்பம் பலருக்கும் உண்டு. இந்த பெயருக்கும் பல்லுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த வார்த்தை பிலாட்டென்ட் அல்லது பிலாட்டன் எனும் ஸ்கான்டினேவியன் வார்த்தையின் ஆங்கில வடிவம்.

பத்தாம் நூற்றாண்டுகளில் டென்மார்க்கையும், நார்வேயின் சில பகுதிகளையும் ஆண்டு வந்த மன்னன் முதலாம் ஹெரால்ட் பிலாட்டன் கோர்ம்ஸன். ஆங்கிலத்தில் அவரது பெயரை ஹெரால்ட் புளூடூத் கோர்ம்ஸன் என்பார்கள். பிரிந்து கிடந்த நாட்டை ஒன்றாய் சேர்க்கவேண்டுமென முயற்சி எடுத்த மன்னர் அவர் ! அதனால் தான் நமது “இணைக்கும் தொழில்நுட்பத்துக்கும்” அவருடைய பெயரான புளூடூத் எனும் பெயரை வைத்தார்கள். இதுவே சுருக்கமான பெயர் புராணம் !

புளூடூத் சிம்பலை உற்றுப் பார்த்தால் ஒரு “B” தெரியும். அது அவருடைய கையெழுத்தின் பழங்கால ரூனிக் வடிவம் தான் !

புளூடூத் ஒரு குறுகிய எல்லைக்குள் கம்பியில்லா இணைப்பு மூலம் தகவல்களைப் பரிமாற்றும் முறையே. அது நமக்குத் தெரிந்தது தான்.

உதாரணமாக அருகருகே இருக்கும் இரண்டு மொபைல் போன்களிலிருந்து பாடலையோ, படத்தையோ பரிமாறிக் கொள்வது இந்த முறை தான். இதற்காக குறைந்த அலைவரிசையுடைய ரேடியோ அலைகள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக 2400 முதல் 2480 மெகா ஹெட்ஸ் அளவு !

PAN தெரியுமா என்றால், “தெரியுமே. அதன் விரிவாக்கம் பெர்மனன்ட் அக்கவுண்ட் நம்பர். வருமான வரி செலுத்துபவர்கள் அனைவரும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்பது இந்திய அரசின் சட்டம்.” என்பீர்கள். நல்லது ! புளூடூத் விஷயத்தின் இன்னொரு PAN உண்டு. அது பெர்சனல் ஏரியா நெட்வர்க் என அழைக்கப்படும். பாதுகாப்பான இந்த குறுகிய நெட்வர்க் தான் தகவல் பரிமாற்றத்தின் ஏரியா.

புளூடூத் ஸ்பெஷல் இன்டரஸ்ட் குரூப் (Bluetooth Special Interest Group ) என்றொரு குழு இருக்கிறது. சுமார் 15000 நிறுவனங்கள் இதில் இணைந்திருக்கின்றன. இந்த குழு தான் புளூடூத் தொடர்பான எல்லா தரம், லைசன்ஸ், சட்ட திட்டங்கள் எல்லாவற்றையும் நிர்ணயிப்பவர்கள். ஆனால் இவர்கள் புளூடூத் பொருட்களைத் தயாரிப்பதில்லை என்பது குறிப்பிடத் தக்கது !

ஒரு தகவலை அனுப்ப வேண்டுமெனில் முதலில் இரண்டு கருவிகளுக்கு இடையேயான பாதுகாப்பான தொடர்பு உருவாக்கப்படுகிறது. பிறகு அனுப்ப வேண்டிய தகவல் சின்னச் சின்னதாக வெட்டப்படுகிறது. வெட்டப்பட்ட துண்டுகள் ஒவ்வொன்றாக பரிமாறப்படுகின்றன. இதை பாக்கெட் பேஸ்ட் புரோடோகால் (packet-based protocol) என்கிறார்கள். அதாவது ஒரு தகவலை பாக்கெட் பாக்கெட்டாக வெட்டி வைப்பது.

இதன் பரிமாற்ற முறை மாஸ்டர் ஸ்லேவ் ஸ்ட்ரக்சர் (master-slave structure ) படி இயங்கும். ஒரு மாஸ்டர் தலைவராக இருப்பார். அவரிடமிருந்து பல கருவிகளுக்கு தகவல் பரிமாறப்படும். இவை குறிப்பிட்ட கால இடைவெளியில் நடக்கும். இதனால் தகவல் பரிமாற்றத்தில் ஒழுங்கான மற்றும் சீரான இயக்கம் நடைபெறும்.

தகவல் பரிமாற்றத்துக்கான அடிபடை கடிகாரத்தை மாஸ்டர் நிர்ணயிக்கும். ஒவ்வொரு கடிகார இடைவெளியும் 312.5 மைக்ரோ செகன்ட் இடைவெளி இருக்கும். இரண்டு இடைவெளிகளுக்கு 625 மைக்ரோ செகன்ட் இப்படி நீளும். ஒன்று இரண்டு மூன்று நான்கு என நீளும் இடைவெளிகளில் “இரட்டை எண்” இழைகளின் வழியாக மாஸ்டர் தகவல்களை அனுப்பும். “ஒற்றை எண்” இழைகளின் வழியாக தகவல்களை பெறும். இது தான் அடிப்படை !

பெரும்பாலும் இந்த பகிர்ந்தல் “ரவுண்ட் ராபின்” முறையில் நடக்கும். ரவுண்ட் ராபின் என்பது எல்லோரையும் கொஞ்சம் கொஞ்சமாய் கவனிப்பது ! சீட்டி குலுக்கிப் போடும் போது ஆளுக்கு ஒன்று போடுவது போல வைத்துக் கொள்ளலாம். இருக்கின்ற நேரத்தையும், இழைகளையும் இணைக்கப்பட்டுள்ள கருவிகளையும் பொறுத்து தகவல்களை பல்லாங்குழி போல ஒவ்வொருவருக்காய் கொடுத்துக் கொண்டே இருப்பது.

இந்த இடைவெளி ரொம்ப ரொம்பச் சின்னது என்பதால் எல்லா கருவிகளும் ஒரே நேரத்தில் தகவல்களைப் பெறுவது போன்ற ஒரு தோற்றம் உருவாகும். ஆனால் உண்மையில் அதற்கிடையே மைக்ரோ செகன்ட் இடைவெளி இருக்கும் !

கருவிகளில் இணைக்கப்பட்டுள்ள மலிவான டிரான்ஸீவர் மைக்ரோசிப்கள் இந்த தகவல் பரிமாற்றத்தைச் செய்யும். இதற்கு மிகவும் குறைவான சக்தியே செலவாகும். இதன் பரிமாற்ற எல்லை கிளாஸ் 1, 2, 3 என வகைப்படுத்தப்பட்டுள்ளது. முதல் வகை 100 மில்லிவாட் சக்தியுடன் சுமார் நூறு மீட்டர் அளவில் செயல்படும். மூன்றாவது கிளாஸ் அமைப்பில் இந்த அளவு வெறும் ஐந்து மீட்டர்கள் எனுமளவிலேயே இருக்கும் !

புளூடூத் இன்றைக்கு பல கருவிகளில் இயங்குவது அறிந்ததே. மொபைல் போன்களின் இதன் பயன்பாடு அதிகம். அதை இன்டர்காம், கார் ஆடியோ போன்றவற்றுடன் இணைக்கும் நுட்பங்களெல்லாம் இன்று இருக்கின்றன. கணினியில் புளூடூத் டெக்னாலஜி மவுஸ், விசைப்பலகை, பிரிண்டர் என பல கருவிகளை இணைக்கிறது !

திங்கள், 12 ஜூன், 2017

Bitcoin பிட்காயின் - கம்ப்யூட்டர் பணம்



பணத்துக்கு இரண்டு அடையாளங்கள் உண்டு - ஒன்று, அது எந்த நாட்டைச் சேர்ந்தது; இரண்டு, அந்த நாட்டு அரசால் அல்லது மத்திய வங்கியால் உருவாக்கப்பட்டது என்பதாகும். ஆனால் எந்தவொரு நாட்டையும் சேராமல், எந்தவொரு நிறுவனத்தையும் சேராமல் கணினி மூலம் அடையாளம் தெரியாத சிலரால் உருவாக்கப்படும் பிட்காயின் என்கிற பணம்தான் இப்போது அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பரவலாக பரிவர்த்தனையில் பயன்படுத்தப் படுகிறது. 

நேரில் பார்க்க முடியாத இந்த பிட்காயின், கணினி மென்பொருளில் மறைந்து கொண்டிருக்கிறது. 

பிட்காயின் சூத்ரதாரிகள்! 

மூன்றாம் நிறுவனத்தின் துணை இல்லாமல் இரு நபர்கள், தங்களிடையே பணப் பரிவர்த்தனை செய்வதையும், அந்தப் பரிவர்த்தனையை உறுதி செய்து, அதே நேரத்தில் இருவரின் அடையாளங்களைப் பாதுகாத்து வைக்கவும் ஒரு கணினி முறையை உருவாக்கியுள்ளதாக ‘Bitcoin: A Peer-to-Peer Electronic Cash System’ என்ற கட்டுரை மூலமாக சதோஷி நகமொடோ (Satoshi Nakamoto) என்பவர் 2008-ல் அறிவித்தார். இது ஒரு புனைப்பெயர் என்று அறியப்பட்ட பிறகு இதனை ஒருவர் அல்லது ஒரு சிலர் எழுதி இருக்கலாம் என்று கூறப்பட்டது. அடுத்த சில மாதங்களில் பிட்காயின் ஆர்வலர்கள் இந்தக் கட்டுரையின் அடிப்படையில் ஒரு கணினி மென்பொருளை உருவாக்கி வெளியிட்டனர். பிட்காயினுக்கான இந்த மென்பொருளை யார் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். 

பிட்காயினை ‘மைனிங்’ மூலம் பெறலாம். மாறாக, இதற்காக உள்ள சந்தைகளில் எந்தவொரு நாட்டின் பணத்தையும் கொடுத்து பிட்காயினை பெறலாம். பிட்காயின் வாட்ச் (Bitcoin Watch) என்ற இணையதளத்தில், இந்த சந்தைகளில் நிலவும் மாற்று விகிதங்கள் தரப்பட்டிருக்கும். தற்போது 16 மில்லியன் பிட்காயின்கள் இருப்பதாகவும், அவற்றின் அமெரிக்க டாலர் மதிப்பு 11 பில்லியன் என்றும் இந்த இணையதளம் கூறுகிறது. 

மைக்ரோசாஃப்ட், விக்கிபீடியா, டெஷ்லா (Tesla) போன்ற பல நிறுவனங்கள் பிட்காயினை பணமாக ஏற்றுக்கொண்டுள்ளன. ஒவ்வொரு நாளும் பிட்காயினை ஏற்றுக்கொள்ளும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்தபடி இருக்கிறது. அதேபோன்று பிட்காயினின் பயன்பாடு புதிதாக பல நாடுகளுக்கு விரிவடையலாம். 

ஸ்பெஷல் அம்சங்கள்! 
 
கணினி பணத்தில் என்ன புதுமை இருக்கிறது என்று கேட்கிறீர்களா? இன்றும் கணினி முறையில்தான் பணம் பரிவர்த்தனை செய்யப்படுகிறது. இதிலும் அசல் பணம் கைமாறுவதில்லை. உதாரணமாக, ஒரு டெபிட் கார்டை பயன்படுத்தி கடையில் பணம் செலுத்தினால், உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணம் கடைக்காரரின் வங்கி கணக்குக்கு செல்ல இடையில் ஒரு விசா, மாஸ்டர் கார்டு போன்ற ஒரு மூன்றாம் நிறுவனம் இருக்கிறது. இவ்வகையான எந்த ஒரு மூன்றாம் நிறுவனத்தின் துணை இல்லாமல், ஒரு நபர் நேரடியாக மற்றொரு நபருக்கு பணத்தை கணினி மூலம் அனுப்புவது பிட்காயினின் சிறப்பு (Peer to Peer transfer).

எங்கேயும் எப்போதும்! 

இவ்வாறான பிட்காயின் பணப் பரிவர்த்தனைக்குக் கட்டணம் கிடையாது அல்லது மிகக் குறைந்த கட்டணத்தில் (தற்போது உள்ள வங்கிக் கட்டணத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கைவிடக் குறைவு) பத்து நிமிடங்களில் அல்லது அதிகபட்சம் ஒரு மணி நேரத்தில் எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் பிட்காயின் மூலம் அனுப்பலாம். 

நாடுகளுக்கிடையே பிட்காயின் அடிப்படையில் வர்த்தகம் நடைபெறும் போது அந்நியச் செலாவணி மாற்று விகிதத்தைப் பற்றி கவலைப்படாமல் வியாபாரம் செய்ய முடியும். இது பன்னாட்டு வர்த்தகத்துக்கு பெரிய வரப்பிரசாதமாக அமையும். 

உருவமில்லா பணம்!

கணினிப் பணம் என்பதால், பிட்காயினுக்கு உருவம் கிடையாது; ஆனால், எண்ணிக்கை உண்டு. ஒரு பிட்காயின் என்பதை என்று குறிப்பிடலாம். ஒரு பிட்காயினின் ஆயிரத்தில் ஒரு பகுதியை ஒரு மில்லி பிட்காயின் (0.001) என்றும், பத்து லட்சத்தின் ஒரு பகுதியை மைக்ரோ பிட்காயின் (0.000001) என்றும், பத்து கோடியின் ஒரு பகுதியை சதோஷி (0.00000001) என்றும் குறிப்பிடுகின்றனர். ஒரு பொருளின் மதிப்பை மிகத் துல்லியமாக பிட்காயின் மூலம் தெரிவிப்பது எளிது.

பிட்காயின் அளவைக் கணக்குவழக்கு இல்லாமல் உயர்த்த முடியாது. அதிகபட்சம் 21 மில்லியன் பிட்காயின்களைத்தான் உருவாக்க முடியும். 
யாருக்கும் தெரியாது! 
 
சட்ட ரீதியான அரசின் அங்கீகாரம் பெறாத பிட்காயினை எப்படிப் பணம் என்று பலர் பயன்படுத்துகின்றனர்? 

காரணம், அதன் மீது இருக்கும் நம்பிக்கை மட்டுமே. ஒரு பணத்தின் மீது எவ்வாறு நம்பிக்கை வருகிறது? போலிப் பணத்தை உருவாக்க முடியாது என்றால் உண்மைப் பணத்தின் மீது நம்பிக்கை தானாகவே வரும். பிட்காயினை உருவாக் கும் தொழில்நுட்பத்தில் அதன் உண்மை தன்மையும், அதன் அடிப்படையில் அதன் மீதான நம்பிக்கையும் உருவாகிறது. 
இப்போது உள்ள தொழில்நுட்பத்தில் யாராலும் போலி பிட்காயினை உருவாக்க முடியாது. அதே நேரத்தில் ஒருவரிடம் எவ்வளவு பிட்காயின் உள்ளது என்பதை யாராலும் அறியமுடியாது. இதனால் ஒருவர் சேர்த்த சொத்தினை மறைத்து வைப்பதற்கு பிட்காயின் ஒரு சிறந்த முறையாக உருவெடுக்கும் வாய்ப்பு உள்ளது.

ப்ளாக் செயின்! 

பிட்காயினை உருவாக்க, அதன் பரிவர்த்தனை களைப் பதிவு செய்ய, பிட்காயினைச் சேர்த்து வைக்க ஒரு ஒருங்கினைந்த மென்பொருள் உண்டு. இந்த மென்பொருளை பிட்காயின் பயன்படுத்தும் அனைவரும் தங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்து வைப்பார்கள். இந்த மென்பொருளைப் பயன்படுத்தி, ஒவ்வொரு பிட்காயின் பரிவர்த்தனையும் ஓப்பன் லெட்ஜர் முறையில் எல்லாருக்கும் தெரியும் வகையில் கணக்கில் வைக்கப்படும். அதாவது, ஒவ்வொரு பிட்காயின் பரிவர்த்தனையும் எல்லா பிட்காயின் ஆர்வலர்களுக்கும் தெரியும் வகையில் ஓப்பன் லெட்ஜரில் பதிவு செய்யப்படும். இந்த ஓப்பன் லெட்ஜரின் பிரதி, எல்லா பிட்காயின் ஆர்வலர்களின் கணினியிலும் இருக்கும். எனவே, யாருக்கும் தெரியாத வகையில் பிட்காயின் பரிவர்த்தனை நடைபெற வாய்ப்பு இல்லை. கணக்கில் வராத கறுப்பு பிட்காயின் இருக்க வாய்ப்பு இல்லை.

ஒவ்வொரு பத்து நிமிடத்துக்கும் நடைபெறும் பிட்காயின் பரிவர்த்தனைகள் அனைத்தும், ஒரு ப்ளாக் (Block) என்ற அளவில் ஒன்று சேர்க்கப்படும். பிறகு அந்த ப்ளாக் ஏற்கனவே உள்ள ஒரு ப்ளாக் செயினில் சேர்க்கப்படும். பிட்காயின் சமூகத்தில் உள்ளவர்கள் இந்த ஓப்பன் லெட்ஜர் மற்றும் ப்ளாக் செயின் உருவாக்கத்தில் ஈடுபடுகின்றனர். 

பிட்காயின் ஆர்வலர்கள், ஒவ்வொரு ப்ளாக் உருவாக்கத்திலும் ஒரு கணக்குக்கான விடையைக் கண்டுபிடிக்க வேண்டும். இதற்காக அதிநவீன கணினியைப் பயன்படுத்த வேண்டும். நிறைய பொருள் மற்றும் நேரத்தை செலவு செய்யவேண்டும். அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட விடை சரிதானா என்பதை எளிதில் உறுதி செய்யலாம். ஆனால், விடையை அவ்வளவு எளிதில் அறிய முடியாது. 

எனவே, ஒரு கணக்குக்கான செய்முறையை கண்டுபிடித்தால் மட்டுமே அந்த ப்ளாக் செயினில் உள்ள பதிவுகளை மாற்றி, போலியான பிட்காயினை உருவாக்க முடியும். இதை செய்ய பல மில்லியன் டாலர்கள் செலவு செய்யவேண்டும். அவ்வாறு செலவு செய்தாலும் அதற்கு இணையான போலி பிட்காயினை உருவாக்கக்கூடிய அளவுக்கு அந்த ப்ளாக்கில் பிட்காயின் இருக்காது. எனவே, போலி பிட்காயினை உருவாக்கும் முயற்சியில் யாரும் ஈடுபடுவதாகத் தெரியவில்லை.
 
பிட்காயினின் எதிர்காலம்!

இதுவரை எந்த நாடும் பிட்காயினை ஒரு பணமாக ஏற்கவில்லை. இதனை ஒரு பொருள் என்று கூறி, இதன் பரிவர்த்தனை மூலம் பெறப்படும் லாபம், வருவாய்க்கு வரி வசூலிக்க சில நாடுகள் முனைந்துள்ளன. தாய்லாந்து, பிட்காயினை சட்டவிரோதப் பணம் என்று அறிவித்துள்ளது. பிட்காயினை ஏற்காத சீனாவில் பிட்காயினின் வளர்ச்சி வேகமாக உள்ளது. பிட்காயின் மென்பொருளைப் பதிவிறக்கம் செய்யும் நாடுகளில் முன்னணியில் சீனா உள்ளது. ஏற்கெனவே அமெரிக்கா, கனடா, மேற்கு ஐரோப்பிய நாடுகளில் பிட்காயின் பயன்பாடு அதிகரித்துள்ளது. தெற்கு அமெரிக்க நாடுகளில் பிட்காயின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. 

பிட்காயினை சட்டரீதியாக ஒரு பணம் என்று ஏற்பதில் பல சிக்கல்கள் உள்ளன. பிட்காயின் பரிவர்த்தனையில் உள்ளவர்களின் அடையாளம் மறைக்கப்பட்டிருக்கும். ஒருவர் தாமாகவே முன்வந்து தனது பிட்காயின் கணக்கின் அடையாள முகவரியைக் கொடுக்கலாம். தவிர, பிட்காயின் மென்பொருள் என்பது ஒரு பொதுப் பொருள். எனவே, இதில் உள்ள தகவல்களை அரசு பெறவேண்டும் என்றால், அதனைப் பயன்படுத்தும் அனைவரையும் அதற்கு அனுமதிக்க வேண்டும். பிட்காயின் மென்பொருளை பயன்படுத்துபவர்கள் உலகம் முழுவதும் இருப்பதால், இவ்வாறான அனுமதி பெறுவது என்றுமே சாத்தியமில்லை. எனவே, பிட்காயின் போன்ற கணினிப் பணம் ஒரு மாற்றுப் பணமாக உருவெடுக்க முடியாது, அதே நேரத்தில், பிட்காயின் பயன்பாட்டின் வளர்ச்சி, அரசுப் பணத்தில் உள்ள குறைகளை நமக்கு சுட்டிக் காட்டுகிறது. இந்தக் குறைகளை நீக்குவது அவசியம் என்று இப்போது யோசிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். அந்த வகையில், பிட்காயின் மூலம் நாம் பெற்ற ஓப்பன் லெட்ஜர், ப்ளாக் செயின் தொழில்நுட்பங்கள் நிதித் துறையில் பெரிய மாற்றங்களை எதிர்காலத்தில் ஏற்படுத்தும்!

12 விதமான கணினி பணம்!

Litecoin, Peercoin, Primecoin, Namecoin, Ripple, Sexcoin, Quark, Freicoin, Mastercoin, Nxt, Auroracoin, Dogecoin என்று 12 விதமான கணினிப் பணங்கள் உள்ளன. இவை அனைத்தும் பிட்காயின் உருவானபின் வந்த கணினிப் பணங்கள். 
இவை பிட்காயினிலிருந்து சற்று மாறுபட்ட அம்சங்களைக் கொண்டதாக உள்ளன. அதில் ஐந்து வகை பணங்கள்தான் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளன. புழக்கத்தில் உள்ள கணினிப் பணங்களில் 90 சதவிகிதத்துக்கு மேல் பிட்காயின்தான் உள்ளது.

பிட்காயின் பெருவதிக்கான முறைகள்
வல்லெட் 
உங்களுக்கான பிகின் வால்ல்வ்ட் address உருவாக்கவேண்டும்

அந்த address மூலமாக பிட்கின் வழங்கும் தளங்களில் address இ உள்லீடு செய்து பிட்கின் சதோஷி களை பெற முடியும்
வல்லெட் உருவாக்க
1. XAPO
Bitcoin Earning Sits

Every 1 Hour
1.
https://freebitco.in/?r=2792202














2.http://tomygame.com/?ref=arunlive


3.and More Bitcoin Earnings websites AND  Apps and Contect arunprasath1993@gmail.com

வெள்ளி, 9 ஜூன், 2017

எலுமிச்சம் பயன் தரும் தேவகனி (எலுமிச்சை) வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்றால் அது மிகையல்ல..

🎾எலுமிச்சை - எல்லா பழங்களையும் எலி கடித்து
விடும் ஆனால் எலுமிச்சையை
மட்டும் எலி தொடவே தொடாது.

🎾எலி
மிச்சம் வைத்ததால்தான் எலிமிச்சை என்று
பெயர் வந்திருக்கலாம் என சித்தர்கள் மூலம் அறியப்படுகிறது.

🎾எலுமிச்சை
புளிப்பு சுவை மிக்க மஞ்சள் நிறப்
பழத்தைக் கொடுக்கும் ஒரு வகைத்
தாவரம். இது சிட்ரஸ் லிமன்
(Citrus
limon) என்னும் அறிவியல் பெயர்
கொண்டது.

🎾எலுமிச்சம் பழச் சாற்றில் 5% அளவுக்கு
சிட்ரிக் அமிலம் உண்டு. இதனால் இது
புளிப்புச் சுவை.

🎾இதன் pH
அளவு 2 முதல் 3 வரை இருக்கும்.
இதனால் இதைப் பள்ளிகளில் கற்பித்தல்
சோதனைகளில் மலிவான அமிலமாகப்
பயன்படுத்துகிறார்கள்.

🎾இதன்
தனித்துவமான சுவை காரணமாக
இதனை அடிப்படியாகக் கொண்டு பல
வகையான பானங்களும், இனிப்பு
வகைகளும் தயாரிக்கப் பட்டு ஆக்கப்பட்டு
வருகின்றன.

🎾100 கிராம் எலுமிச்சை பழத்தில் உள்ள
சத்துக்கள்
நீர்ச்சத்து - 50 கிராம்
கொழுப்பு - 1.0 கிராம்
புரதம் - 1.4 கிராம்
மாவுப்பொருள் - 11.0 கிராம்
தாதுப்பொருள் - 0.8 கிராம்
நார்ச்சத்து - 1.2 கிராம்
சுண்ணாம்புச் சத்து - 0.80 மி.கி.
பாஸ்பரஸ் - 0.20 மி.கி.
இரும்புச் சத்து - 0.4 மி.கி.
கரோட்டின் - 12.மி.கி.
தையாமின் - 0.2 மி.கி.
நியாசின் - 0.1 மி.கி.
வைட்டமின் ஏ - 1.8 மி.கி.
வைட்டமின் பி - 1.5 மி.கி.
வைட்டமின் சி - 63.0 மி.கி
      இதிலுள்ள அதிகமான வைட்டமின் 'சி' சத்தும்,
ரிபோஃப்ளோவினும்
புண்களை ஆற்ற வல்லது. எலுமிச்சை
சாறுடன் நீர் கலந்து சிட்டிகை உப்பு
போட்டு தொண்டையில் படுமாறு
பலமுறை கொப்பளிக்க தொண்டைப்
புண், வாய்ப்புண் ஆறும்.

🎾எலுமிச்சைச் சாறுடன் நீர் கலந்து
அடிக்கடி வாய் கொப்பளித்தால் வாய்
துர் நாற்றம் மறையும்.

🎾வாந்தியா?
எலுமிச்சைச் சாறுடன், இஞ்சிச் சாறு,
சிறிதளவு தேன் சேர்த்து,
வெதுவெதுப்பான நீரில் கலந்து
சாப்பிட விரைவில் குணம் தெரியும்.

🎾எலுமிச்சைச் சாறுடன் வெந்நீர்
கலந்து குடிக்கும் போது
நெஞ்செரிச்சல், ஏப்பம், வயிறு உப்புசம்
குறையும். ஜீரணசக்கியும்
அதிகரிக்கும்.

🎾கல்லீரலைப் பலப்படுத்த சிறந்த டானிக் எலுமிச்சை.

🎾பித்தநீர் சரியான அனவில் சுரக்க
வழிசெய்கிறது. பித்தப்பையில்
ஏற்படும் கற்களைக் கரைக்க
உதவுகிறது.

🎾சருமப் புண்களுககு
ஆன்டிசெப்டிக்காகப் பயன்படுகிறது.
எலுமிச்சைச் சாற்றை முகத்தில்
தடவிவர, முகத்திலுள்ள
கரும்புள்ளிகள் மற்றும் சுருக்கங்கள்
மறைகின்றன.

🎾பாலேட்டுடன்
எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில்
தடவினால் சரும நிறம் பளிச்சிடும்.

🎾தினமும் காலையில் வெறும்
வயிற்றில் இளஞ்சூடான நீரில்
எலுமிச்சைச் சாறு, ஒரு டீஸ்பூன்
தேனூடன் பருகி வர உடல் எடை
குறையும்.

🎾பொட்டாசியம் அதிகமான அளவில்
இருப்பதால் இதயக் குறைபாடுகளை
நீக்க உதவுகிறது.

🎾உயர் இரத்த அழுத்தம்,
தலைச்சுற்றல், வயிற்றுப் பிரட்டல்
போன்ற உபாதைகள் நீங்கும்.

🎾இரவு நேரத்தில் வெதுவெதுப்பான
நீரில், எலுமிச்சைச் சாறுடன் தேன்
கலந்து குடித்தால் நல்ல தூக்கம் வரும்.
உடல் மட்டுமின்றி, மனமும் அமைதி
அடையும்.

🎾மனஅழுத்தம், ஸ்ட்ரெஸ்,
நீங்கும்.
உடலிலிருந்து நச்சுப்
பொருள்களையும்,
பாக்டிரியாக்களையும் வெளியேற்றி
மூட்டுவலிக்கு நிவாரணம்
அளிக்கிறது.

🎾இரத்த சுத்தகரிப்பாக உதவுகிறது.

🎾காலரா, மலேரியா போன்ற
காய்ச்சலின் போது
விஷக்கிருமிகளின் தாக்கத்தை நீக்கப்
பெரிதும் உதவுகிறது.

🎾சில துளிகள் எலுமிச்சைச் சாறை
நீர் கலக்காமல் அப்படியே விட்டுக்
கொண்டால் நாக்கின் சுவை
அரும்புகள் தூண்டப்பட்டு, சுவை
தெரியும்.

🎾தலையில் பொடுகுத் தொல்லை
நீங்க, எலுமிச்சைச் சாறினை தடவி
சிறிது நேரம் ஊறியபின் குளித்தால்,
பொடுகுத் தொல்லை நீங்கும்.

🎾சிறிய
பழம் பயன்கள் அதிகம்
இதனைப்பயன்படுத்தி நோயற்ற
வாழ்க்கை வாழ்வோம்.

🎾இயற்கை அழகு, புத்துணர்ச்சி,
உற்சாகம் இவையனைத்தையும் தரும்.

🎾தேள்கொட்டினால்,
அந்த இடத்தில்
எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி
இரண்டு துண்டையும் தேய்க்க விஷம்
இறங்கும்.

🎾தலைவலிக்கு
கடுங்காபியில் எலுமிச்சையின்
சாற்றை கலந்து கொடுத்தால் உடனே
குணமாகும்.

🎾நீர் சுருக்கு, பித்தநோய், வெட்டை
சூடு, மலச்சிக்கல் ஆகியவற்றுக்கு
எலுமிச்சம் பழச்சாற்றுடன் சர்க்கரை
அல்லது உப்பு சேர்த்து கலந்து
குடித்து வந்தால், தகுந்த நிவாரணம்
பெறலாம்.

🎾மயக்கம், வாந்தி, வாய் குமட்டல்,
நீர்வேட்கை, வெறி, கண் நோய், காது
வலி போன்றவற்றை குணப்படுத்தும்
தன்மை எலுமிச்சம் பழத்திற்கு உண்டு.

🎾கழிச்சலுக்காக மருந்துகள்
உட்கொண்டு, அதனால் அடங்காத
கழிச்சலும், வாந்தியும் ஏற்பட்டால்,
சீரகத்தை தேன் விட்டு பொன்னிறமாக
வறுத்து, அதனுடன் எலுமிச்சம்
பழச்சாற்றையும் சேர்த்து நீர் விட்டு
காய்ச்சி, உட்கொள்ள கொடுத்தால்
உடனே வாந்தியும், கழிச்சலும்.

🎾எலுமிச்சை பழச்சாற்றை தலையில்
தேய்த்து தலை முழுகி வர பித்தம்,
வெறி, உடல் சூடு அடங்கும்.

🎾அடிபட்டு ரத்தம் கட்டியிருந்தால்
எலுமிச்சை சாற்றில் கரிய போளத்தை
(கரிய போளம் என்பது கற்றாழையின்
உலர்ந்த பால். இது நாட்டு மருந்து
கடைகளில் கிடைக்கும்) சேர்த்து
காய்ச்சி அடிபட்ட இடத்தில் பூசிவர
ரத்தக்கட்டு கரையும்.

🎾நகச்சுற்று ஏற்பட்டவுடன் எலுமிச்சை
பழத்தில் துளையிட்டு விரலை
அதனுள் சொருகி வைக்க வலி
குறையும்.

🎾எலுமிச்சம் பழச்சாற்றுடன் தேன் கலந்து
குடிக்க வறட்டு இருமல் தீரும்.
இதனுடன் மோர் கலந்து குடிக்க ரத்த
அழுத்தம் குறையும்.
சிலருக்கு பாதத்தில் எரிச்சல் ஏற்படும்.
அப்படிப்பட்டவர்கள்,
மருதாணியை
அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றில்
கலந்து பாதத்தில் தடவி வந்தால்
எரிச்சல் குணமாகும்.

🎾சிறிதளவு எலுமிச்சை இலைகளை
அரைத்து சாறு பிழிந்து, அதனுடன்
சிறிது உப்பு சேர்த்து நீரில் கலந்து
குடித்தால் வாந்தி நிற்கும்.

🎾எலுமிச்சம்பழத்தின் விதைகளை நீரில்
போட்டு காய்ச்சி,
அதில் இருந்து
எழும் ஆவியை முகத்தில் படும்படி
பிடிக்க நீர்பினிசம் தீரும்.

🎾சீமையகத்தி எனப்படும் வண்டு கொல்லி
இலையை அரைத்து எலுமிச்சம்
பழச்சாற்றில் கலந்து மேலே பூசி வர
படர்தாமரை குணமாகும்.

🎾சீரகத்தை எலுமிச்சம் பழச்சாற்றில் 2 நாள் ஊற வைத்து, பின் அந்த சாற்றுடன்
வெயிலில் காய வைக்கவும். நன்றாக
காய்ந்ததும் மீண்டும் எலுமிச்சம்
பழச்சாற்றில் ஓர் இரவு ஊற வைத்து
மீண்டும் வெயிலில் காய வைக்கவும்.
நன்றாக உலர்ந்தபின் அதை எடுத்து
பொடியாக்கி ஒரு ஸ்பூன் அளவு
தேன் அல்லது தண்ணீரில் கலந்து
மூன்று வேளை சாப்பிட்டுவர
அஜீரணம், பித்தம் தணியும். ரத்த அழுத்தம்
சீராகும்.

🎾ரத்தக் கொதிப்பைத் தடுப்பதில்
எலுமிச்சம் பழம் மிக முக்கிய
பங்காற்றுகிறது. மேலும் கெட்ட
ரத்தத்தை தூய்மைப்படுத்து வதற்கு
எலுமிச்சம் பழத்தை விட மேலான
ஒன்று கிடையாது.

🎾முக்கிய
வைட்டமின் சத்தான வைட்டமின் சி,
எலுமிச்சம் பழத்தில் நிறைய
இருக்கிறது.
எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக்
அமிலம் கிருமிகளை அழிக்கும்
தன்மை கொண்டது. அதனால் தொற்று
நோய் கிருமிகளின் தாக்குதலில்
இருந்து உடலை கண் போல
பாதுகாக்கிறது.

🎾எலுமிச்சம் பழ ரசத்தை சாப்பிட்டால்
மண்ணீரல் வீக்கம் பிரச்சினையில்
இருந்து விடுபடலாம்.

🎾எலுமிச்சம் பழத்தின் சாற்றை தேனில்
கலந்து சாப்பிடுவது ஒரு சத்து மிக்க
டானிக் ஆகும்.
உடலுக்கு வேண்டிய
உயிரூட்டத்தையும், ஒளியையும்
எலுமிச்சம் பழத்தின் மூலம் மனிதர்கள்
பெற இயலும்.

🎾இத்தனை நன்மை செய்யக்கூடிய
எலுமிச்சம் பழத்துக்கு மலத்தை
கட்டக்கூடிய குணமும் உண்டு.
ஆனாலும் தேன் சேர்த்து உண்டு
வந்தால் மலக்கட்டு நீங்கி விடும்.

🎾உடல்
பருமன், கொலஸ்ட்ரால், அதிக எடை
அன்பர்கள், நீரிழிவு வியாதியால்
அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு
எலுமிச்சைச்சாறு அருந்தலாம்.

🎾வயிற்றுவலி, வயிற்று உப்புசம்,
நெஞ்சு எரிச்சல், கண் வலி ஆகியவற்றை
சரியாக்கும் ஒப்பற்ற சாறு. உயர்ந்த
கிருமி நாசினி. பொட்டாசியமும்
இதில் உள்ளது.
உயர் இரத்த அன்பர்கள் எலுமிச்சையால்
நலம் பெறலாம்.

🎾சிறுநீர் அடைப்பு
விலகும். உடல் நச்சுக்களை
வெளியேற்றும். உடலின் தற்காப்பு
சக்தி எலுமிச்சையால் பெருகும்.
கடல் உப்பினால் உப்பிய உடம்பு
எலுமிச்சைச் சாறால் கட்டழகு மேனி
பெறும்.

🎾கனிகளில் மதியூக மந்திரி
குணத்தை உடையது எலுமிச்சை.

🎾எலுமிச்சைச் சாறை அப்படியே
பயன்படுத்தக் கூடாது. நீருடன் அல்லது
தேன் போன்றவற்றுடன் பயன் படுத்த வேண்டும்.

🎾எலுமிச்சை, வெங்காயம்
போன்றவைகளை வெட்டியதும்
பயன்படுத்தி விட வேண்டும்.

🎾இவ்வளவு பயன் தரும் தேவகனி (எலுமிச்சை) வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்றால் அது மிகையல்ல..

சனி, 3 ஜூன், 2017

We have started Pre-Launch - Restoreclix.com

Join
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

  • We have started Pre-Launch where you have get great opportunity to earn money with us.
  • We are offering the following in pre-launch:
  • Signup Bonus : $25.00
  • Referral Signup Bonus : $0.25
  • Earning from Cashlinks Commissions : 100%
  • Direct Referral Limit : Unlimited
  • Revenue Share Adpacks : $5
  • Profit on Adpack : 130% within 10 Days
  • Daily Profit : @13% directly to account balance 










 Repurchase Rule:

(We don't have any repurchase rule)
👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟


🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼

Payment System:

Payza, Perfect Money, Payeer , Bitcoin
More payment system added (Pay Pal, AdvCash, Webmoney in processing)

Every member can earn a huge with us. You also buy adpacks from your purchase balance. So please join and test are system.

                         http://www.restoreclix.com/?ref=arunlive

Officially Launch Date: 27th May 2017 @11:30 PM
                        
                           🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


Join

திங்கள், 20 மார்ச், 2017

Best Online Earn: Ads Cash

My Referral Links
Sr.No. Title Refferal Link Action Sign Up
1 Be first user to use adscash ( AdsCash,worlds first secure and decentralized currency for the advertising industry. )

Use This Landing Page

2 Get 100 adscash for free! Join now ( Worlds First Digital Currency Made Exclusively For The Advertising Industry )

Use This Landing Page


3 Grab world first official cryptocurrency for advertising world (AdsCash.... A New Vision For Cryptocurrency)
Use This Landing Page
4 Major shift in the online industry ( Major shift in the online industry )
Use This Landing Page
5 Free Sign Up ( Click Here To Sign Up )
Use This Landing Page
6 Main Site Sign Up ( Click Here To Sign Up )
https://ads.cash/prelaunch/2.html?id=arunlive&link=1

Best Online Earn. Ads Cash

வணக்கம் நண்பர்களே!!!இன்னும் 2 நாட்களில் புதியதாக அறிமுகம் ஆக இருக்கும் *Ads cash* எனும் அமெரிக்காவின் ஆன்லைன் கிரிப்ட்டோ கரன்ஸியில் தங்களை இணைத்துக்கொன்டு நீங்கள் வீட்டில் இருந்த படியே உங்கள் மொபைல் மூலமாக மாதம் குறைந்தது  15,000 ரூபாய் முதல் சம்பாதிக்கலாம்!!! அது மட்டும் இல்லை நீங்கள் இதில் இணைந்தவுடன் உங்களுக்கு  Sign up போனசாக  100 Ads cash Coins இலவசமாக கிடைக்கும்.     
     2 நாளைக்கு பிறகு Sign Up செய்பவர்களுக்கு இலவச 100 Ads Cash Coin கிடையாது... ஒரு Coin மதிப்பு இந்திய ரூபாயில் 62 ரூபாய்... இப்பொழுதே இணையுங்கள்  
நீங்கள் இணைந்த பிறகு உங்களுடைய நண்பர்களை உங்களது லிங்க் மூலமாக இணைத்து விடுவதன் வழியாக ஒரு நபருக்கு  150 ரூபாய் பெறலாம்..

 ஒரு நாளைக்கு 5 பேரை இணைத்து விட்டால் எளிதாக 750 ரூபாய் பெறலாம்..

 இதை உங்கள் வங்கி கணக்கில் மாற்றி கொள்ளலாம்..
 நீங்கள் சேர்த்து விடும் நபர் மற்றவர்களை சேர்த்தாலும் உங்களுக்கு பணம் உண்டு..

 இப்படி 7 Level Income வசதி உள்ளது..
                                        நீங்கள் செய்ய வேண்டியது : -
  

  Step 1 : முதலில் மேலே உள்ள  லிங்கை கிளிக் செய்யவும்...
Step 2 : பெயர், முகவரி, தொலைபேசி எண், இ-மெயில், பாஸ்வேர்டு, போன்றவற்றை சரியாக பதிவு செய்யவும்... 

https://ads.cash/prelaunch/2.html?id=marunprasath&link=1

https://ads.cash/prelaunch/2.html?id=marunprasath&link=1



https://ads.cash/prelaunch/2.html?id=marunprasath&link=1                        
Step 3 : பின்பு உங்களது இ-மெயில் முகவரிக்கு Confirmation Message வரும் அதை கவனிக்கவும்...                                        

வெள்ளி, 17 மார்ச், 2017

FaceBook
Do you Like Share To Social Networks

Like My Page : 

Computer Tips & Tricks





நமது ஜல்லிக்கட்டிற்க்கு இந்த ஆதரவு பாத்தாது நண்பர்களை உங்கள் நண்பர்களுக்கும் அழைப்பு (invite) கொடுங்க அனைவரையும் இணைய செய்யுங்கள். #Savejallikattu    #save jallikattu

ஜல்லிக்கட்டின் வீரத்தை உலகம் போற்ற செய்யுவோம். ‪#‎ஜல்லிக்கட்டுவேண்டும்‬
எங்கள் பக்கத்தை பகிருங்கள் : JALLIKATTU-Veeravilaiyattu
√ Subscribe this page
√ Share this page in your wall
√ Invite to your friends 
√ We need more supporters to save jallikattu

 Hello Friends......
Subscribe The Channel : Tech & Funny Videos:



Popular Posts

Facebook

Blog Archive