பன்றிக்காய்ச்சல் - அறிந்ததும் அறியாததும் !
பொதுவாக நம் மக்களிடையே , பன்றிக்காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வுகளைக் காட்டிலும் , பயம் தான் அதிகமாக உள்ளது..
மக்களின் பயத்தை மூலதனமாகக்கொண்டு ,பல்வேறு தொழில்துறையினர் அதன்மூலம் லாபம் அடைகின்றனர்! இறுதிவரை நம் மக்கள் பயத்துடனே , பன்றிக்காய்ச்சலை பற்றிய அடிப்படை விடயங்களை தெரிந்து கொள்ளாமலே போய் விடுகின்றனர்..
2009 ஆம் ஆண்டு , உலகம் முழுவதும் உள்ள மக்கள் இந்த வைரஸ் நோய்கிருமிகளால் பாதிக்கப்பட்ட போதே , நம் ஆட்சியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதனை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.. ஆனால் அது நம் மக்களை முறையாக சென்றடையவில்லை.. நமது அரைகுறை புரிதலின் தாக்கமே , இப்போது 2015ஆம் ஆண்டு மீண்டும் பயத்துடன் பன்றிக்காய்ச்சலை அணுகுகின்றோம்..
மக்கள் பலருக்கு உள்ள சந்தேகங்களும் , அதற்கான விடைகளையும் சற்று ஆராய்வோம் ..
கேள்வி - ஏன் இதற்கு பன்றிக்காய்ச்சல் என பெயரிடப்பட்டது ?
பதில்- இந்தக் காய்ச்சல் முதன்முதலில் பன்றிகளிடம் அதிகளவு காணப்பட்டதால் இதற்கு அந்தப் பெயர் கொடுப்பட்டது.. இது குறிப்பாக பன்றிகளின் நுரையீரல் மண்டலத்தைத் தாக்கக்கூடிய வைரஸ்நோய்!
கேள்வி - பன்றிகள் அதிகம் உள்ள ஊர்களில் தான் இந்த காய்ச்சல் இருக்குமா ?
பதில் - அவ்வாறு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த வைரஸ் , பன்றிகள் மூலமாக மனிதர்களைத் தாக்கினாலும். பிறகு பாதிக்கப்பட்ட நபரின் சளி , இருமல், தும்மல் மூலமாக சக மனிதர்களுக்குப் பரவும்...
கேள்வி - இது எய்ட்ஸ் , எபோலா போன்றதொரு கொடிய வைரஸா ?
பதில்-இல்லவே இல்லை..இது ஒரு சாதாரணமான வைரஸ்..பனிக்காலங்களில் இதனின் உக்கிரம் சற்று அதிகமாக காணப்படுவதால் ,நாம் விழிப்புடன் இருப்பது நல்லது!
கேள்வி - இந்த வைரஸ் யாரை எல்லாம் எளிதாகத் தாக்கும்?
பதில்-பொதுவாக நோய்எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள நபர்களை இந்த வைரஸ் எளிதாகத் தாக்கும். குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் , கர்ப்பிணி தாய்மார்கள், சக்கரை நோயாளிகளிடம் இந்த பாதிப்பு அதிகளவில் காணப்படும். இருப்பினும் இது யாரை வேண்டுமானாலும் தாக்கலாம் ,.
கேள்வி - இந்த வைரஸ் காய்ச்சலில் இருந்து எப்படி தப்பிப்பது ?
பதில்- மிகவும் எளிதான வழிமுறை தான்.. ஆனால் நாம் தான் அவற்றை கடைப்பிடிக்க மறுக்கின்றோம்..
இந்த வைரஸ், பாதிக்கப்பட்ட நபரின் சளி , இருமல், தும்மல் மூலமாகத் தான் சக மனிதர்களுக்குப் பரவுகின்றது.
1.எனவே , பொது இடங்களில் இருமல் , மற்றும் தும்மல் வரும்போது மற்றவர்கள் மேல் படாதவாறு ஒரு துணி , கர்சீப் அல்லது டிஷூ பேப்பரை பயன்படுத்த வேண்டும்..
2. நாம் பயன்படுத்திய துணி , கர்சீப் , டிஷூ பேப்பரை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும் ஒரே துணி மற்றும் கர்சீபை பல நாட்கள் பயன்படுத்துவதும் தவறு.அவற்றை வெந்நீரில் கொதிக்க வைத்தப்பின் தான் மறுபடியும் பயன்படுத்த வேண்டும்.
3. ஒரே வீட்டில் உள்ள நபர்கள் , அவர்களுக்கென்று தனித்தனியாக டவல் , கர்சீப் , சோப்புகளை பயன்படுத்த வேண்டும்..
4.யாருக்காவது சற்று அதிகமாக சளி , இருமல் இருப்பின் அவர்களுக்கு அருகில் நீண்ட நேரம் இருக்கக்கூடாது.குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பாதிக்கப்பட்ட நபரை 3-7 நாட்கள்வரை பார்க்காமல் இருப்பதே நல்லது..
5.குழந்தைகளுக்கு இந்த காய்ச்சலின் அறிகுறி இருந்தால் , அவர்களை பள்ளிக்கூடங்களுக்கு 5 நாட்கள் வரை அனுப்புவதை தவிர்க்கவேண்டும். (ஒரு வாரம் அவர்களுக்கு ஓய்வு மிக அவசியம்.. பெற்றோர்கள் அவர்களை வலுக்கட்டாயமாக பள்ளிக்கு அனுப்புவதை தவிர்க்கவேண்டும்).
6. மக்கள் அதிகம் கூடும் இடத்திற்கு செல்வதை குறைத்துக்கொள்ள வேண்டும். (கோவில்கள், திரை அரங்குகள் , மார்கெட், நெடுதூர இரயில், பேருந்து பயணங்கள் போன்றவை)
கேள்வி - பன்றிக்காய்ச்சல் நோயின் அறிகுறிகள் என்ன?
பதில்-சாதாரண காய்ச்சல் , சளி , இருமல், தொண்டை கரகரப்பு , உடம்பு வலி , தலைவலி , குளிர்காய்ச்சல் , மற்றும் சிலருக்கு வாந்தி , பேதி கூட இருக்கலாம்..
இவை அனைத்தும் 99 % நபர்களுக்கு ஒரு வாரத்தில் குணமடைந்து விடும்.
கேள்வி - மருத்துவமணைகளில் கிடைக்கும் அறுவை சிகிச்சை மாஸ்க் பயன்படுத்தினால் , இந்த வைரஸ் பரவுவதை தடுக்க முடியுமா?
பதில்-அறுவைசிகிச்சை மாஸ்க் பயன்படுத்துவது பயன்அளிக்காது..ஏனெனில் வைரஸுகள் அதுமுழுமையாக கட்டுப்படுத்தாது.. மேலும் இரண்டு மணிநேரத்திற்கு மேல் ஒருமுறை அவற்றை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.. மேலும் , அவற்றை முறையாக அப்புறப்படுத்த வேண்டும்.. எனவே
சாதாரண சர்ஜிகல் மாஸ்க் கை நோய்தடுப்பிற்காக உபயோகிப்பது வீண்.. அவசியம் ஏற்பட்டால் ஒன்றின் மீது ஒன்றாக மூன்று மாஸ்க்குகளை அணிந்து கொள்ளலாம்( இவற்றையும் இரண்டு மணிநேரத்திற்குத் தான் பயன்படுத்தவேண்டும்.). அல்லது N-95 என்ற சிறப்பு மாஸ்க்கை பயன்படுத்தலாம்..
கேள்வி - இந்த பன்றிக்காய்ச்சலுக்கு வைத்தியம் என்ன? கண்டிப்பாக மருத்துவரை நாட வேண்டுமா ?
பதில்-முதலாவது மற்றும் முக்கியமானது ,முழுமையான ஓய்வு (டிவி பார்ப்பது , செல்போன் அதிகமாக பயன்படுத்துவதையும் சேர்த்து).. பிறகு தங்குமிடத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளுதல் - பயன்படுத்திய கர்சீப் , துணிகளை முறையாக அப்புறப்படுத்துதல் , அதிகளவு தண்ணீர் குடித்தல்( 2-3 லிட்டர் ), எளிதில் ஜீரணிக்க கூடிய உணவுகளை உண்ணுதல் போன்றவையே 99%பன்றிக்காய்ச்சலை குணப்படுத்திவிடும்.. காய்ச்சலுக்கு பாராசிடமால் மாத்திரைகளை பயன்படுத்தலாம்..ஆண்டிபயாடிக் மருந்துகள் பெரிதாக பயன்தராது..
கேள்வி - எப்போது மருத்துவரை /மருத்துவமணையை அணுகவேண்டும் ?
பதில்-மேற்கூறிய அறிகுறிகளுடன் , முச்சுத்தினறல் இருந்தாலோ , அல்லது அதிகப்படியான காய்ச்சல் -தலைவலி-வாந்தி - குளிர்காய்ச்சல் இருந்தாலோ மருத்துவர்களை அணுகவேண்டும். .
கேள்வி - தடுப்பூசிகள் பயன் அளிக்குமா ? அவசியம் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள வேண்டுமா ?
பதில்-பொதுவாக குளிர்காலம் துவங்குவதற்கு 15 நாட்கள் முன்னே ,
தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள வேண்டும். . சமுதாயத்தில் பன்றிக்காய்ச்சல் பரவிய பின்னர் , தடுப்பூசி போட்டுக்கொள்வது பெரிதாக பயன்தராது..(எனவே இந்த ஆண்டு தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் , நாம் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லையே என்று அச்சப்படத் தேவை இல்லை)
பன்றிக்காய்ச்சல் குறித்தான செய்திகளை உங்கள் நண்பர்களிடத்தில் பகிருங்கள் ! அதன்மூலம் முழுமையான விழிப்புணர்வை சமுதாயத்தில் ஏற்படுத்துவோம் !
பன்றிக்காய்ச்சல் மேல் உள்ள அச்சங்களை முதலில் போக்குவோம்! பன்றிக்காய்ச்சல் பரவுவதைத் தடுப்போம்! அவற்றை எதிர்கொண்டு மீள்வோம்!
-நன்றியுடன்
மரு.கலைக்கோவன் பாலசுப்ரமணியன் , நுரையீரல் மருத்துவர்.
@Kalaikovan Balasubramaniyan
மக்களின் பயத்தை மூலதனமாகக்கொண்டு ,பல்வேறு தொழில்துறையினர் அதன்மூலம் லாபம் அடைகின்றனர்! இறுதிவரை நம் மக்கள் பயத்துடனே , பன்றிக்காய்ச்சலை பற்றிய அடிப்படை விடயங்களை தெரிந்து கொள்ளாமலே போய் விடுகின்றனர்..
2009 ஆம் ஆண்டு , உலகம் முழுவதும் உள்ள மக்கள் இந்த வைரஸ் நோய்கிருமிகளால் பாதிக்கப்பட்ட போதே , நம் ஆட்சியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதனை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.. ஆனால் அது நம் மக்களை முறையாக சென்றடையவில்லை.. நமது அரைகுறை புரிதலின் தாக்கமே , இப்போது 2015ஆம் ஆண்டு மீண்டும் பயத்துடன் பன்றிக்காய்ச்சலை அணுகுகின்றோம்..
மக்கள் பலருக்கு உள்ள சந்தேகங்களும் , அதற்கான விடைகளையும் சற்று ஆராய்வோம் ..
கேள்வி - ஏன் இதற்கு பன்றிக்காய்ச்சல் என பெயரிடப்பட்டது ?
பதில்- இந்தக் காய்ச்சல் முதன்முதலில் பன்றிகளிடம் அதிகளவு காணப்பட்டதால் இதற்கு அந்தப் பெயர் கொடுப்பட்டது.. இது குறிப்பாக பன்றிகளின் நுரையீரல் மண்டலத்தைத் தாக்கக்கூடிய வைரஸ்நோய்!
கேள்வி - பன்றிகள் அதிகம் உள்ள ஊர்களில் தான் இந்த காய்ச்சல் இருக்குமா ?
பதில் - அவ்வாறு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த வைரஸ் , பன்றிகள் மூலமாக மனிதர்களைத் தாக்கினாலும். பிறகு பாதிக்கப்பட்ட நபரின் சளி , இருமல், தும்மல் மூலமாக சக மனிதர்களுக்குப் பரவும்...
கேள்வி - இது எய்ட்ஸ் , எபோலா போன்றதொரு கொடிய வைரஸா ?
பதில்-இல்லவே இல்லை..இது ஒரு சாதாரணமான வைரஸ்..பனிக்காலங்களில் இதனின் உக்கிரம் சற்று அதிகமாக காணப்படுவதால் ,நாம் விழிப்புடன் இருப்பது நல்லது!
கேள்வி - இந்த வைரஸ் யாரை எல்லாம் எளிதாகத் தாக்கும்?
பதில்-பொதுவாக நோய்எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள நபர்களை இந்த வைரஸ் எளிதாகத் தாக்கும். குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் , கர்ப்பிணி தாய்மார்கள், சக்கரை நோயாளிகளிடம் இந்த பாதிப்பு அதிகளவில் காணப்படும். இருப்பினும் இது யாரை வேண்டுமானாலும் தாக்கலாம் ,.
கேள்வி - இந்த வைரஸ் காய்ச்சலில் இருந்து எப்படி தப்பிப்பது ?
பதில்- மிகவும் எளிதான வழிமுறை தான்.. ஆனால் நாம் தான் அவற்றை கடைப்பிடிக்க மறுக்கின்றோம்..
இந்த வைரஸ், பாதிக்கப்பட்ட நபரின் சளி , இருமல், தும்மல் மூலமாகத் தான் சக மனிதர்களுக்குப் பரவுகின்றது.
1.எனவே , பொது இடங்களில் இருமல் , மற்றும் தும்மல் வரும்போது மற்றவர்கள் மேல் படாதவாறு ஒரு துணி , கர்சீப் அல்லது டிஷூ பேப்பரை பயன்படுத்த வேண்டும்..
2. நாம் பயன்படுத்திய துணி , கர்சீப் , டிஷூ பேப்பரை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும் ஒரே துணி மற்றும் கர்சீபை பல நாட்கள் பயன்படுத்துவதும் தவறு.அவற்றை வெந்நீரில் கொதிக்க வைத்தப்பின் தான் மறுபடியும் பயன்படுத்த வேண்டும்.
3. ஒரே வீட்டில் உள்ள நபர்கள் , அவர்களுக்கென்று தனித்தனியாக டவல் , கர்சீப் , சோப்புகளை பயன்படுத்த வேண்டும்..
4.யாருக்காவது சற்று அதிகமாக சளி , இருமல் இருப்பின் அவர்களுக்கு அருகில் நீண்ட நேரம் இருக்கக்கூடாது.குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பாதிக்கப்பட்ட நபரை 3-7 நாட்கள்வரை பார்க்காமல் இருப்பதே நல்லது..
5.குழந்தைகளுக்கு இந்த காய்ச்சலின் அறிகுறி இருந்தால் , அவர்களை பள்ளிக்கூடங்களுக்கு 5 நாட்கள் வரை அனுப்புவதை தவிர்க்கவேண்டும். (ஒரு வாரம் அவர்களுக்கு ஓய்வு மிக அவசியம்.. பெற்றோர்கள் அவர்களை வலுக்கட்டாயமாக பள்ளிக்கு அனுப்புவதை தவிர்க்கவேண்டும்).
6. மக்கள் அதிகம் கூடும் இடத்திற்கு செல்வதை குறைத்துக்கொள்ள வேண்டும். (கோவில்கள், திரை அரங்குகள் , மார்கெட், நெடுதூர இரயில், பேருந்து பயணங்கள் போன்றவை)
கேள்வி - பன்றிக்காய்ச்சல் நோயின் அறிகுறிகள் என்ன?
பதில்-சாதாரண காய்ச்சல் , சளி , இருமல், தொண்டை கரகரப்பு , உடம்பு வலி , தலைவலி , குளிர்காய்ச்சல் , மற்றும் சிலருக்கு வாந்தி , பேதி கூட இருக்கலாம்..
இவை அனைத்தும் 99 % நபர்களுக்கு ஒரு வாரத்தில் குணமடைந்து விடும்.
கேள்வி - மருத்துவமணைகளில் கிடைக்கும் அறுவை சிகிச்சை மாஸ்க் பயன்படுத்தினால் , இந்த வைரஸ் பரவுவதை தடுக்க முடியுமா?
பதில்-அறுவைசிகிச்சை மாஸ்க் பயன்படுத்துவது பயன்அளிக்காது..ஏனெனில் வைரஸுகள் அதுமுழுமையாக கட்டுப்படுத்தாது.. மேலும் இரண்டு மணிநேரத்திற்கு மேல் ஒருமுறை அவற்றை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.. மேலும் , அவற்றை முறையாக அப்புறப்படுத்த வேண்டும்.. எனவே
சாதாரண சர்ஜிகல் மாஸ்க் கை நோய்தடுப்பிற்காக உபயோகிப்பது வீண்.. அவசியம் ஏற்பட்டால் ஒன்றின் மீது ஒன்றாக மூன்று மாஸ்க்குகளை அணிந்து கொள்ளலாம்( இவற்றையும் இரண்டு மணிநேரத்திற்குத் தான் பயன்படுத்தவேண்டும்.). அல்லது N-95 என்ற சிறப்பு மாஸ்க்கை பயன்படுத்தலாம்..
கேள்வி - இந்த பன்றிக்காய்ச்சலுக்கு வைத்தியம் என்ன? கண்டிப்பாக மருத்துவரை நாட வேண்டுமா ?
பதில்-முதலாவது மற்றும் முக்கியமானது ,முழுமையான ஓய்வு (டிவி பார்ப்பது , செல்போன் அதிகமாக பயன்படுத்துவதையும் சேர்த்து).. பிறகு தங்குமிடத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளுதல் - பயன்படுத்திய கர்சீப் , துணிகளை முறையாக அப்புறப்படுத்துதல் , அதிகளவு தண்ணீர் குடித்தல்( 2-3 லிட்டர் ), எளிதில் ஜீரணிக்க கூடிய உணவுகளை உண்ணுதல் போன்றவையே 99%பன்றிக்காய்ச்சலை குணப்படுத்திவிடும்.. காய்ச்சலுக்கு பாராசிடமால் மாத்திரைகளை பயன்படுத்தலாம்..ஆண்டிபயாடிக் மருந்துகள் பெரிதாக பயன்தராது..
கேள்வி - எப்போது மருத்துவரை /மருத்துவமணையை அணுகவேண்டும் ?
பதில்-மேற்கூறிய அறிகுறிகளுடன் , முச்சுத்தினறல் இருந்தாலோ , அல்லது அதிகப்படியான காய்ச்சல் -தலைவலி-வாந்தி - குளிர்காய்ச்சல் இருந்தாலோ மருத்துவர்களை அணுகவேண்டும். .
கேள்வி - தடுப்பூசிகள் பயன் அளிக்குமா ? அவசியம் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள வேண்டுமா ?
பதில்-பொதுவாக குளிர்காலம் துவங்குவதற்கு 15 நாட்கள் முன்னே ,
தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள வேண்டும். . சமுதாயத்தில் பன்றிக்காய்ச்சல் பரவிய பின்னர் , தடுப்பூசி போட்டுக்கொள்வது பெரிதாக பயன்தராது..(எனவே இந்த ஆண்டு தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் , நாம் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லையே என்று அச்சப்படத் தேவை இல்லை)
பன்றிக்காய்ச்சல் குறித்தான செய்திகளை உங்கள் நண்பர்களிடத்தில் பகிருங்கள் ! அதன்மூலம் முழுமையான விழிப்புணர்வை சமுதாயத்தில் ஏற்படுத்துவோம் !
பன்றிக்காய்ச்சல் மேல் உள்ள அச்சங்களை முதலில் போக்குவோம்! பன்றிக்காய்ச்சல் பரவுவதைத் தடுப்போம்! அவற்றை எதிர்கொண்டு மீள்வோம்!
-நன்றியுடன்
மரு.கலைக்கோவன் பாலசுப்ரமணியன் , நுரையீரல் மருத்துவர்.
@Kalaikovan Balasubramaniyan

Arun Prasath M