அதிக நேரம் தூங்குவது ஆபத்தானது!
அதிக நேரம் தூங்குவது ஒரு விதத்தில் நல்லது தான் என்றாலும், மோசமான பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும்.தினமும் 9 மணிநேரம் தூங்குபவர்களுக்கு சர்க்கரை நோய் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் கூறுகிறது. அதிக நேரம் தூங்குவதால் கொழுப்புகள் உடலில் அப்படியே தங்கிவிடுகிறது, இதனால் மோசமான பக்கவிளைவுகள் ஏற்படும், உடல் பருமனடையும். அதிகமாக தூங்குவதால் மூளையில் உள்ள நரம்பியக்கடத்திகளில் தாக்கம் ஏற்படும், இதனால் கடுமையான தலைவலி, முதுகுவலி உண்டாகும். மிக முக்கியமாக பாதிக்கப்பட போவது உங்கள் இதயமே, இதய நோய்கள் ஏற்படுவதற்கு நீங்களே காரணமாகி விட வேண்டாம். |