*அன்பு*
*அன்பு*
நாம் நம்முடன் இருக்கும் நபர்களிடம் அன்புசெலுத்த முடியாமல் போனால், நம்மால்பார்க்க முடியாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்த முடியும்?
நீங்கள் எப்போதும் வாழ்க்கையில் 4 விஷயங்களை மட்டும் உடைத்து விடாதீர்கள். அதாவது, நம்பிக்கை, சத்தியம், உறவு, இதயம். ஏனெனில், இதில் எதையாவது உடைத்தால் அதிகமாக சத்தம் கேட்காது ஆனால் வலி அதிகமாக இருக்கும்.
மன்னிக்கும் குணம், ஆற்றல் வாய்ந்தவர்களுக்கு ஓர் அடையாளம்.
கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது.
அதைக்காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது.
பகைமையை அன்பால் வெல்லுங்கள்; சோம்பலை செயல் ஊக்கத்தால் வெல்லுங்கள்.
மற்றவர்களை அன்பால் மகிழச் செய்வதே, ஒருவன் பெற்றிருக்க வேண்டிய பாக்கியங்களில் எல்லாம் மேலான பாக்கியம்.
எத்தனை துன்பங்கள் பகைவர்களால் வந்தாலும், அதை அன்பாலேயே வென்று விடுங்கள்.
எதற்கும் அஞ்சாதே, எதையும் வெறுக்காதே, யாரையும் ஒதுக்காதே; உன் பணியை ஊக்கத்துடன் செய்.
அன்பில்லாத இடத்தில் தான் கோபம், முட்டாள்தனம், விரோதம் எல்லாம் இருக்கும்.
அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது. நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம் நம்மால் அன்புசெலுத்த முடியாது.