வியாழன், 28 ஜனவரி, 2016
ஐபோனில் Facebook மற்றும் YouTube வீடியோகளை Download செய்வது...? Direct Camera Roll
Author: Infomas | ஜனவரி 28, 2016 |
இந்த APPLICATION முழுமையாக Chines மொழியில் உள்ளது.
முதலில் உங்களுடைய Apps Store உள்ள இந்த Application Download செய்து கொள்ளுங்கள். Apps name : VEDITOR
அதன் பின்னர் அந்த Application ஓபன் செய்து கொள்ளுங்கள்; அதில் வரும் அதில் உள்ள Download Icon கொடுத்து கொள்ளுங்கள்./
அதன் பின்னர் உங்களுக்கு இவ்வாறு வரும். அதில் Youtube வீடியோ Download செய்வது என்றால் Youtube கிளிக் செய்து கொள்ளுங்கள் அல்லது பேஸ்புக் வீடியோ என்றால் முதலில் உங்களுடைய பேஸ்புக் Login செய்த பின்னர் Download செய்யலாம்.
அதன் பின்னர் கீழ் நான் இலக்கம் இரண்டு போட்ட இடத்தில கிளிக் செய்து பாருங்கள் உங்களுடைய வீடியோ Download ஆகும்.
இது Download ஆனதும் இலக்கம் முன்று 3 போட்ட இடத்தை கிளிக் செய்து கொள்ளுங்கள். அதில் உங்களுடைய வீடியோ மேல் கிளிக் செய்து நான் வட்டம் இட்டு காடியதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
அவ்வளவுதான் oK கொடுங்க
உங்கள் ஐபோனை வேகமாக செயல்பட வைக்கும் யுக்திகள்:
Author: Infomas | ஜனவரி 28, 2016 |
அன்றாடம் பயன்படுத்தும் ஐபோன்கள் நாளடைவில் மிகக் மெதுவாக செயல்படுவது பலருக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு பிரச்சனையே! இது போன்ற பிரச்சனைகளை சில வழிமுறைகளை கையாண்டால் எளிதில் நீக்கி விடலாம். ஐபோன் பயனர்களுக்கான முக்கிய வழிமுறைகள் பின்வருமாறு :
*மொபைலில் அளவுக்கதிகமாக சேமித்து வைத்துள்ள பழைய புகைப்படங்களை மற்றும் தேவையில்லாத டாக்குமெண்ட்டுகளை நீக்குவதும் மிக அவசியமே . நூற்றுக்கணக்கான அளவு புகைப்படங்கள் இருப்பின் அவற்றை கணினியில் ஒரு போல்டரில் போட்டு வைப்பது சிறந்தது.
*அதிகளவு ஏற்றி வைத்துள்ள பயன்பாடுகளை நீக்க வேண்டும் . ஏனெனில் அவை அதிக அளவு இடங்களை ஐபோனில் ஆக்கிரமிப்பு செய்து ஐபோனை மெதுவாக இயங்கவைக்கும் . இவை எந்த அளவுக்கு இடங்களை ஆக்கிரமித்து கொண்டுள்ளன என்பதை அறிய போனில் Settings > General > Storage & iCloud Usage > Manage Storage.- க்கு சென்று பார்த்தால் அறியலாம் . இதனால் மிக முக்கியமான பயன்பாடுகளை மட்டும் சேமித்து வைப்பது நன்று.
*பழைய குறுந்தகவல் செய்திகளை மாதக்கணக்கில் வைத்திருந்தால் அது மொபைலின் வன்பொருளை பாதிக்கும் வாய்ப்புண்டு.இதற்கு தகுந்த தீர்வு என்னவென்றால் உங்கள் போனில் உள்ள குறுந்தகவல்களை குறிப்பிட்ட கால வரையறைக்கு மட்டும் சேமித்து வைத்திருக்கும் அமைப்புகளை அமைத்துவிட்டால் அவை குறிப்பிட்ட காலம் வரைக்கும் இன்பாக்ஸில் காணும்படி செய்யலாம்.இதற்கு Settings > Messages > Keep Messages. என்று தேர்ந்தெடுக்க வேண்டும்.
*ஐபோனை உங்களது கணினி போன்று பயன்படுத்த வேண்டும். அதாவது அடிக்கடி இணைய தேடல் வரலாறுகளை நீக்கிக் கொண்டே இருப்பது அவசியமே. இடைமாற்று நினைவகம் என்று கூறப்படுகின்ற அதாவது பலமுறை அணுகப்படும் தரவுகளுக்கு ஒதுக்கப்படும் ஒரு விரைவு நினைவகத்தினை அடிக்கடி அழித்து விடுவது அவசியம் . இதற்கு மொபைலில் Settings > Safari,-க்கு சென்று Clear History and Website Data வை தட்டினால் போதும்.
*உங்கள் ஐபோன் மெதுவாக இயங்க ஒரு முக்கிய காரணம் அதிலிருக்கும் பயன்பாடுகளின் ஆட்டோ அப்டேட்டுகலாகத்தான் இருக்கும். தேவையற்ற பயன்பாடுகளின் அப்டடேட்டுகளை நீக்க இது ஒரு சிறந்த வழியாகும். இதற்கு உங்கள் மொபைலில் Settings > iTunes & App Store-க்கு சென்று OFF MODE யை தேர்ந்தெடுக்க வேண்டும்.
*மேற்கூறியது போன்றே ஆட்டோமேட்டிக் அப்டேட்டுகளை தேவையற்ற இசை ,நூல்கள் போன்றவற்றை பதிவிறக்கங்கள் செய்யாமல் தவிர்கும்படி செய்யலாம்.இதற்கு மொபைலில் Settings > iTunes & App Store-க்கு சென்று apps, books, music -இல் OFF MODE யை தட்டினால் போதும்.
*மேலும் அடிக்கடி உங்கள் மொபைலில் உங்களுக்கு அருகிலிருக்கும் வை-பை இணைப்புகளுடன் இணைக்கவா? என்பது போன்ற கேள்விகளுக்கு ஆம் என்ற பதிலை கொடுத்தால் அது உங்கள் சாதனத்தை மிக மெதுவாக செயல்பட வைக்கும். இதனை நீக்க Settings > Wi-Fi > Ask to Join Networks இல் OFF MODE யை தேர்ந்தெடுக்க வேண்டும் .
*அன்றாடம் முடிந்த வரையில் ஒருமுறையாவது ஐபோனை ரீஸ்டார்ட் செய்வதும் மொபைல் வேகத்தை அதிகரிக்கும் வழிகளில் ஒன்றே ! இதனால் ஐபோன் அடிக்கடி மந்தாமாகாமல் தடுக்கலாம்.
*பேட்டரி டாக்டர் என்ற பயன்பாட்டினைக் கொண்டு உங்கள் ஐபோன்கள் எவ்வளவு மெதுவாக இயங்குகிறது என்பதை அறியலாம். மெதுவாக இயங்குகிறது என்றால் அதிலுள்ள நினைவகத்தை மறு ஒதுக்கீடு செய்து வழங்க உதவுகிறது.
இது போன்ற வழிமுறைகளை கடைபிடித்தால் ஐபோனின் ஆயுள்காலத்தினை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் உங்கல் ஐபோன் சாதனம் மெதுவாக செயலபாடாமல் தடுக்கலாம்.
திங்கள், 25 ஜனவரி, 2016
மெல்ல கொள்ளும் நஞ்சு( slow poison ) ரீபைண்ட் ஆயில்( Refined oil)
Author: Infomas | ஜனவரி 25, 2016 |
ரீபைண்ட் ஆயில்( Refined oil)
ரீபைண்ட் ஆயில் பயன்படுத்தாதிங்க!நோயை விலை கொடுத்து வாங்காதிங்க !நாமெல்லாம் நினைக்கிறது போல ரீபைண்ட் ஆயில்னா சுத்திகரிக்க பட்ட எண்ணெய் மட்டும் இல்லங்க சுத்தமா உயிர் சத்துகளே இல்லாதஎண்ணெய்.
ரீபைண்ட் ஆயில் எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா?
மில்லில் இருந்து பெறப்பட்ட எண்ணெய்யில் காஸ்டிக் சோடாவை சேர்த்து கொதிக்க வைத்து முதலில் அதிலிருந்து சோப்பு எடுக்கிறார்கள்.பிறகு அதிகம் இருக்கும் காஸ்டிக் அமிலத்தின் மூலம் அகற்றி நீயூட்ரலைஸ் செய்து அதில் இருக்கும் வாசனையை அறவே நீக்கிவிடுகிறார்கள்.பிறகு அதை சால்வெண்ட் எக்ஸ்ட்ராக்சன் மூலம் பிரித்து எடுக்கிறார்கள்.இதை எல்லாம் நேரில் பார்த்தால் நம்மில் பலருக்கு சாப்பிடவே பிடிக்காது. திரைமறைவில் நடக்கும் இந்த வேலைகள் எல்லாம் மக்களுக்கு தெரியாத காரணத்தால் " சுத்தம் செய்யப்பட்ட எண்ணெய் "என்று நினைத்து ரீஃபைண்ட் ஆயிலை உபயோகித்து கொண்டு இருக்கிறார்கள்.
#உண்மையில் ரீஃபைண்ட் ஆயில் என்பது அடர்த்தி இல்லாத தண்ணீர் போன்ற ஒரு திரவம்.சமையலுக்கு இதை பயன்படுத்தும் போது சூடு தாங்காமல் உருக்குலைந்து உடல் ஆரோக்கியத்திற்கு தீமை விளைவிக்கும் ஒரு ரசாயன கலவையாக மாறுகிறது.
#எண்ணெய் விஷமாக மாறிவிட்டதால் இன்று மக்கள் பலவிதமான நோய்களுக்கு உள்ளாகி சிகிச்சைகள் எடுத்து கொள்வதற்க்காக பெரியதொகைகளை செலவளித்து கொண்டு இருக்கிறார்கள்.நமக்கு வரும் நோய்களுக்கு எல்லாம் சுற்றுசூழல் மாசுப்பட்டு இருப்பது தான் காரணம்என்று சொல்லி நம்மை நாமே ஏமாற்றி கொள்கிறோம்.
#கடந்த 60-70 ஆண்டுகளில் நோய்கள் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மக்களை வாட்டி வதைத்துக்கொண்டு இருக்கிறது. இதற்க்கானகாரணங்களில் முக்கியமான இடத்தை பிடித்து இருப்பது ரீஃபைண்ட் ஆயில்.
யோசிச்சு பாருங்க இவ்வளவு தீமையான ஒரு பொருளை நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தி, நம் ஆரோக்கியத்தை நாமே விலை கொடுத்து பாழ்படுத்தி கொள்கிறோம்.
அப்போ என்ன எண்ணெய் தான் வாங்குறது?ரீபைண்ட் செய்யாத நல்லெண்ணெய்,கடலை எண்ணெய்,தேங்காய் எண்ணெய் வாங்கி பயன்படுத்தலாம். இதை தானே நம்மதாத்தா பாட்டி பயன்படுத்தினாங்க.ஒரு வேலை நீங்க இப்படி கேட்டா,அய்யய்யோ அதுல நிறைய கொழுப்பு இருக்குனு சொல்லுவாங்களே!
அது மட்டும் இல்லாம கொழுப்பு உள்ள எண்ணெய் பயன்படுத்தினா ஹார்ட் அட்டேக், B.P. வரும்,ரொம்ப வெய்ட் போடும்னு சொல்லுவாங்களே! கிராமத்து இளைஞனின் கருத்து : சரிங்க ரீபைண்ட் ஆயில் தானே இப்போ பெரும்பாலும் பயன்படுத்துறோம்.யோசிச்சு பாருங்க உங்க ஊர்ல ஹார்ட்வர்றவங்களோட எண்ணிக்கை குறைஞ்சு இருக்கா இல்ல கூடி இருக்கா.
என்ன கொடுமைனா முன்னயாவது 60,70 வயசு ஆனவங்களுக்கு பெரும்பாலும் ஹார்ட்அட்டாக் வந்தது. இப்போ தெல்லாம் 25,30,35 வயசு உள்ளவங்களுக்கே ஹார்ட் அட்டக் வருது.அப்போ ரீபைண்ட் ஆயில் உபயோகிச்ச பிறகு நோயின் அளவு ஜாஸ்தி தானே ஆகியிருக்கு?..ஒரு வேலை நீங்க இப்படி கேட்டா :
சரி ரைட்டு வேற எண்ணெய் வாங்கலாம்னா அதாவது,எள்எண்ணெய் (நல்லெண்ணெய்),கடலை எண்ணெய்,தேங்காய் எண்ணெய் வாங்கலாம்னு பார்த்தா விலை பட்ஜெட்ல அடங்காது போல இருக்கே!.
நான்: ஒரு லிட்டர் கடலை எண்ணெய் 170 ரூபாய்,ஒரு லிட்டர் ரீபைண்ட் ஆயில் 85 ரூபாய்,அப்போ ரீபைண்ட் ஆயில் வாங்குனா உங்களுக்கு பாதி பணம் அதாவது 85 ரூபாய் மிச்சம்.
அந்த பணத்தை சேர்த்து வச்சு என்னா செய்விங்க? நான் சொல்லட்டுமா!!! இப்படி மிச்சம் பிடிச்ச பணத்தை பேங்குல போட்டு வச்சு வட்டியும் முதலுமா டாக்டர் கிட்ட குடுபிங்க.ஆரோக்கியத்திர்க்கு கேடு விளைவிக்கும் பொருளை குறைந்த விலையில் கிடைக்குதேன்னு வாங்கி உபயோகபடுத்திட்டு பின்னால் நோய் வந்த பிறகு மிச்சம் பிடிச்ச பணத்தை டாக்டர் கிட்ட குடுத்துட்டு,உங்களையும் கஷ்ட படித்திக்கிட்டு இருக்கறதுக்கு, நல்ல தரமான பொருளை வாங்கி பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழலாமே!!! ஆரோக்கியம் தானே மிக பெரிய செல்வம்..
எண்ணெய் விலையை நாம் நினைத்தால் குறைக்கலாம். அது எப்படி ?
நாம் எந்த பொருளை விரும்புகிறோமோ அதை வியாபாரிகள் தயாரித்து கொடுக்க தயாராக இருக்கிறார்கள். எதை அதிகமாக வாங்குகிறோமோ அதன் தயாரிப்பும் அதிகரிக்கும்.
தயாரிப்பு அதிகரித்தால் விலை குறையும்.தரமான பொருளை அதிகமாக வாங்கினால் அதன் தயாரிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதன் மூலம் தரமான பொருளை நியாயமான விலையில் வாங்க முடியும். மட்டமான பொருளை விற்கிறார்களே என்று வியாபாரிகளை குறை சொல்லி பயனில்லை.நாம் எதை கேட்கிறோமோ,எதை அதிகம் வாங்குகிறோமோ அதை தானே அவர்கள் விற்ப்பார்கள்.
நீங்கள் விஷம் குடுங்கள் என்று கேட்டால் விஷம் தான் கொடுப்பார்கள்!.அதை விடுத்து அய்யய்யோ விஷத்தை ஏன்வாங்குகிறீர்கள் அதை சாப்பிட்டால் இறந்து விடுவீர்கள் என்று விளக்கம் சொல்லி கொண்டு இருக்க மாட்டார்கள். விஷம் சாப்பிட்டால் இறந்து விடுவீர்கள் என்று தெரிந்து கொள்ளவேண்டியது உங்கள் பொறுப்பு.மேலும் அவர்கள் எதை தயாரிக்கிறார்களோ,அதை ஆஹா ஓஹோ என்று தான்விளம்பரபடுத்துவார்கள்.
அது அவர்கள் வியாபாரயுக்தி.ரீபைண்ட் ஆயில் தயாரிப்பாளர்கள்ரீபைண்ட் ஆயில், பயன்படுத்தினால் கேன்சர்வராது என்று சொல்லி தான் விற்பார்கள். ஆனால் அது உண்மையா பொய்யா என்று நாம் யோசித்து
வாங்கவேண்டும்.நாளைக்கே அந்த நிறுவனம் ரீபைண்ட் ஆயில் தயாரிப்பை நிறுத்திவிட்டு எள்ளெண்ணெய் விற்றால் அப்போது சொல்லுவார்கள் ரீபைண்ட் ஆயில் பயன்படுத்தினால் கேன்சர் வரும் என்று!!!!
நம் முன்னோர்கள் அந்த காலத்தில் செக்கில் ஆட்டி எடுத்த தேங்காய் எண்ணெயையும்.,நல்லெண்ணையையும் அப்படியே உபயோகித்தனர்.இந்த எண்ணெய்கள் அடர்த்தியாகவும்.,நிறமாகவும்., மணமாகவும் இருக்கும்.இதற்கு காரணம் அந்த எண்ணெய்களில் உள்ள ஊட்டசத்துக்கள் தான்.இதனால் தான் உடல் ஆரோக்கியத்திற்க்கு தேவையான புரோட்டீன்கள், வைட்டமின்கள்,தாதுப்பொருள்கள், நார்ச்சத்துக்கள் , குளோரோபில்,கால்சியம், மெக்னீசியம்,காப்பர், இரும்பு,பாஸ்பரஸ்,வைட்டமின் " இ " போன்றவை நமக்கு கிடைத்து வந்தன..
இந்த தாதுப்பொருட்கள் மூலம் உற்பத்தியாகும் மெழுகு போன்ற பொருள்கள் மூட்டுகளுக்கு சென்று.,எலும்பு தேய்மானத்தை தடுத்தன.
#நம் முன்னோர்கள் உடற்பயிற்சி செய்து முடித்ததும் ஒரு கிண்ணம் நிறைய நல்லெண்ணெய் குடிக்கும் வழக்கத்தையும் வைத்து இருந்தனர்.இதை உணவுக்கு மட்டுமின்றி. குளியலுக்கும்,மசாஜ் செய்வதற்க்கும் உபயோகித்த காரணத்தால் அவர்கள் 80 வயது வரை மூட்டு வலியின்றிகால்நடையாகவே சென்று வந்தனர்.அதனால் தான் எல்லாம் அறிந்த நம் முன்னோர்கள் இதை எள் எண்ணெய் என்று சொல்வதற்கு பதிலாக " நல்ல எண்ணெய் "என்று சொன்னார்கள்.
வெளிநாட்டில் கூட இதை " Queen of Oil "என்று அழைக்கிறர்கள்.ஆனால் இன்று நாம் உபயோகிக்கும் ரீஃபைண்ட் ஆயிலில் உயிர்சத்துக்கள் எதுவுமே இல்லை என்பது அதிர்ச்சியான உண்மை.புதுசா புதுசா எதை எதையோ கண்டுபிடுச்சு அதை குறைந்த விலையில் விற்று நம்மை சோதனை எலிகளை போல் பயன்படுத்துகிறார்கள். இதன் முடிவு பத்து வருஷம் கழித்து தான் தெரியும்.அப்போ தான் சொல்வார்கள் இதை பயன்படுத்தியதால் தான் இப்படி என்று!அனால் அப்போது தெரிந்து என்ன பயன்.
யோசிங்க நீங்க சோதனை மனிதராக இருக்க ஆசைபடுரிங்களா? இல்லை ஏற்கனவே நம்ம முன்னோர்கள் காலம் காலமாக உபயோகபடுத்திய உணவு முறையை பின்பற்றி அவர்கள் போலவே 80,90 வயது வரை ஆரோக்கியமாக வாழஆசை படுறிங்களா?.அட்லீஸ்ட் வாழும் காலம் வரை நோயில்லாமல் வாழ வேண்டும் என்பது தானே அனைவரது விருப்பமும்.எதை வாங்குகிறோம் என்பதில் தெளிவாக இருப்போம்.
நன்றி : சரவணக்குமார் வே
ஞாயிறு, 24 ஜனவரி, 2016
புதன், 30 டிசம்பர், 2015
உண்மையான பழமொழி என்ன? அவற்றில் சிலவற்றை காண்போம்,
Author: Infomas | டிசம்பர் 30, 2015 |
👉👉👉 நாம் பல பழமொழிகளை அவ்வப்போது பேச்சு வழக்கில் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் பல பழமொழிகளை இப்போது தவறுதலாக சொல்லிக் கொண்டு இருக்கிறோம்.
👉👉👉 உண்மையான பழமொழி என்ன? அவற்றில் சிலவற்றை காண்போம்
🐺🐺🐺"கல்லைக் கண்டால் நாயைக் காணோம்!
நாயைக் கண்டால் கல்லைக் காணோம்!!"
👉👉👉 சரியான பழமொழி :
*************************
👌👌👌 "கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம்,
நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்".
விளக்கம் :
************
இங்கு நாயகன் என்பது கடவுளை குறிக்கிறது.
கல்லால் செதுக்கப்பட்ட ஒரு கடவுள் சிலையை நீங்கள் பார்க்கிறீர்கள். அதை கல்லாகப் பார்க்கும் போது அங்கே கடவுளை பார்க்கமாட்டீர்கள். அதையே நீங்கள் கடவுளாக பார்க்கும்போது கல்லை பார்க்கமாட்டீர்கள்.
இதில் நாயகன் என்ற வார்த்தை மறுவியே நாய் என்றாகிவிட்டது.
கடவுளை நாயாக்கிய பெருமை தமிழர்களையே சேரும்.
மற்றும் சில பழமொழிகள்:
*******************************
1.👨👩 ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு - தவறு.
👌👌👌 ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு - சரி.
2.🐾🐾🐾🔰🔰🎻🎼🎺🎹 படிச்சவன் பாட்டை கெடுத்தான், எழுதுனவன் ஏட்டை கெடுத்தான் - தவறு.
************** **************
👌👌👌 படிச்சவன் பாட்டை கொடுத்தான் , எழுதுனவன் ஏட்டை கொடுத்தான் - சரி.
*************** ***************
3.💉💊💉 ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன். - தவறு.
*******
👌👌👌 ஆயிரம் வேரை (மூலிகை வேரை ) கொண்டவன் அரை வைத்தியன் (கொண்டவன் என்றால் வைத்திருப்பவன்) - சரி.
********
4.🐴🐴🐴 நல்ல மாட்டுக்கு ஒரு சூடு - தவறு.
*****
👌👌👌 நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு - சரி.
******
🐾🐾🐾 ( சந்தையில் மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம் சுவடு...
🐾🐾🐾அழுத்தமான சுவட்டை பதிக்கும் மாடே அதிக பலம் வாய்ந்தது...
🐾🐾🐾ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம் புலனாகும். )
5.🌂🌂🌂 அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் கொடை புடிப்பான் - தவறு.
👌👌👌 அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான். - சரி
நம் முன்னோர்கள் நம் நல்வாழ்வுக்காக சொல்லி வைத்ததை நாம் பிறரை குறை கூற உபயோகிக்கிறோம்.
மாறுவோம்...பிறரை மாற்றுவோம்....
🙌
புதன், 2 டிசம்பர், 2015
கோல்கேட்டில் கலக்கப்படும் இரசாயனம் புற்றுநோய் கட்டியை உண்டாக்குகிறது - ஆய்வில் அதிர்ச்சி!!
Author: Infomas | டிசம்பர் 02, 2015 |
செவ்வாய், 1 டிசம்பர், 2015
Tamilnadu - நம் மாநிலம் குறித்து நாம் தெரிந்து கொள்ள சில முக்கிய தகவல்கள்
Author: Infomas | டிசம்பர் 01, 2015 |
நம் மாநிலம் குறித்து நாம் தெரிந்து கொள்ள சில முக்கிய தகவல்கள்
1 ) இந்திய மக்கள் தொகையில் தமிழகம் எந்த இடத்தில் உள்ளது?
7வது இடம்
2 ) இந்திய மக்கள் வளர்ச்சியில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?
23 வது இடம்
3 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக ஆண்கள் எந்த இடத்தில் உள்ளனர்?
16வது இடம்
4 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக பெண்கள் எந்த இடத்தில் உள்ளனர்?
15வது இடம்
5 ) இந்தியாவின்
கல்வியறிவில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?
14வது இடம்
6 ) சென்னை உயர்நீதி மன்றத்தின் கிளை எங்குள்ளது?
மதுரை
7 ) சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைகிளை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
2004
8 ) தமிழக மக்களின் சராசரி தனிநபர் வருமானம் எவ்வளவு?
72993
9 ) தமிழக உயர்நீதி மன்றம் எங்குள்ளது?
சென்னை
10 ) தமிழக கடற்கரையின் மொத்த நீளம் எவ்வளவு?
1076 கி.மீ
11 ) தமிழக சட்டசபை எந்த ஆண்டு முதல் ஒரு அவையாக மாற்றப்பட்டது
1986
12 ) தமிழகத்தில் அதிக அளவு கல்வியறிவு பெற்ற மாவட்டம் எது?
கன்னியாக்குமரி (92.14 சதவீதம்)
13 ) தமிழகத்தில் அதிக அளவு பெண்கள் உள்ள மாவட்டம்?
சென்னை (23,23,454)
14 ) தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது?
சென்னை (46,81,087)
15 ) தமிழகத்தில் உள்ள ஆண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?
68.45 ஆண்டுகள்
16 ) தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்கள் எத்தனை?
13 மாவட்டங்கள்
17 ) தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
234
18 ) தமிழகத்தில் உள்ள சட்டமன்ற நியமன உறுப்பினர் எண்ணிக்கை எவ்வளவு?
1
19 ) தமிழகத்தில் உள்ள துறைமுகங்கள் எவ்வளவு?
12 துறைமுகங்கள்
தமிழகத்தில் உள்ளன
20 ) பன்னாட்டு விமான நிலையம் எங்குள்ளது?
சென்னை
21 ) தமிழகத்தில் உள்ள பெண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?
71.54 ஆண்டுகள்
22 ) தமிழகத்தில் உள்ள மொத்த கிராமங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
15979
23 ) தமிழகத்தில் உள்ள மொத்த நகர பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கை எவ்வளவு?
561
24 ) தமிழகத்தில் உள்ள மொத்த நகராட்சிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
146
25 ) தமிழகத்தில் உள்ள ராஜ்யசபாவின் எண்ணிக்கை எவ்வளவு?
18
26 ) தமிழகத்தில் உள்ள லோக்சபாவின் எண்ணிக்கை எவ்வளவு?
39
27 ) தமிழகத்தில் குறைந்த எழுத்தறிவு கொண்ட மாவட்டம் எது?
தர்மபுரி (64.71 சதவீதம்)
28 ) தமிழகத்தில் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது?
பெரம்பலூர் 5,64,511
29 ) தமிழகத்தில் மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம்?
சென்னை (26903பேர் ஒரு சதுர கி.மீட்டரில் வாழ்கின்றனர்)
30 ) தமிழகத்தில் மிகக்குறைந்த மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம் எது?
நீலகிரி (1சதுர கி.மீட்டரில் 288 மட்டுமே வாழ்கின்றனர்)
31 ) தமிழகத்தில் மிக்குறைந்த பெண்கள் கொண்ட மாவட்டம் எது?
3,74,901
32 ) தமிழகத்திலுள்ள மொத்த மாவட்டங்கள் எத்தனை?
32
33 ) தமிழகத்தின் 31 வது மாவட்டம் எது?
அரியலூர்
34 ) தமிழகத்தின் 32 வது மாவட்டம் எது?
திருப்பூர்
35 ) தமிழகத்தின் கல்வியறிவு எவ்வளவு சதவீதம்
80.33 சதவீதம்
36 ) தமிழகத்தின் காடுகளின் பரப்பு எவ்வளவு?
17.58 சதவீதம்
37 ) தமிழகததின் மாநில விலங்கு எது?
வரையாடு
38 ) தமிழகத்தின் முக்கிய 3 துறைமுகங்கள் எது?
சென்னை, எண்ணூர், தூத்துக்குடி
39 ) தமிழகத்தின் முக்கிய ஆறுகள் எது?
காவேரி, வைகை, தாமிரபரணி, பாலாறு, பவானி
40 ) தமிழகத்தின் முக்கியமான 6 விமானநிலையங்கள் எங்குள்ளது?
1. சென்னை
2. கோவை
3. மதுரை
4. திருச்சி
5 தூத்துக்குடி
6 சேலம்
41 ) தமிழ்நாட்டில் 2011 கணக்கெடுப்பின்படி பாலின விகிதம் எவ்வளவு?
999பெண்கள்(1000 ஆண்கள்)
42 ) தமிழ்நாட்டில் காடுகள் அதிகமாக உள்ள மாவட்டங்கள் எவை?
1. நீலகிரி
2. சேலம்
3. வேலூர்
4. கன்னியாக்குமாரி
43 ) தமிழ்நாட்டில் காடுகள் குறைவாக உள்ள மாவட்டங்கள் எவை?
1. திருவாரூர்
2. இராமநாதபுரம்
3. தூத்துக்குடி
4. கடலூர்
44 ) தமிழ்நாட்டில் சமத்துவபுரம் தொடங்கப்பட்ட முதல் மாவட்டம் எது?
மதுரை (மேலக்கோட்டை - ஆண்டு 1997)
45 ) தமிழ்நாட்டின் இணைய தளம் எது?
www.tn.gov.in
46 ) தமிழ்நாட்டின் தலைநகரம் எது?
சென்னை
47 ) தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடர்த்தி எவ்வளவு?
ஒரு ச.கி.மீட்டருக்கு 555 பேர்
48 ) தமிழ்நாட்டின் மாநில அரசு சின்னம் எது?
திருவில்லிபுத்தூர் கோபுரம்
49 ) தமிழ்நாட்டின் மாநில எல்லையை குறிப்பிடுக?
கிழக்கே வங்காள விரிகுடா, மேற்கே கேரளா, வடக்கே ஆந்திரபிரதேசம், தெற்கே இந்தியபெருங்கடல்
50 ) தமிழ்நாட்டின் மாநில தமிழ்தாய் வாழ்த்து எது?
நீராடும் கடலுடுத்த
51 ) தமிழ்நாட்டின் மாநில நடனம் எது?
பரத நாட்டியம்
52 ) தமிழ்நாட்டின் மாநில பறவை எது?
மரகதப்புறா
53 ) தமிழ்நாட்டின் மாநில மரம் எது?
பனைமரம்
54 ) தமிழ்நாட்டின் மாநில மலர் எது?
செங்காந்தர் மலா்
55 ) தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு எது?
கபடி
56 ) தமிழ்நாட்டின் மொத்த பரப்பு எவ்வளவு?
1,30,058 ச.கி.மீ
57 ) தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை எவ்வளவு?
7,21,38,958
ஆண் 36158871
பெண் 35980087
கண்டிப்பாக பகிரவும் மற்றவர்கள் தெரிந்துகொள்வார்கள் ....
இவன்
- மக்களில் ஒருவன்
Enaku Oru Aasa Abum Song Lyrics
Author: Infomas | டிசம்பர் 01, 2015 |
Singer: TeeJay Featuring Pragathi Guruprasad
Lyrics & Melody: TeeJay
Music, Mixed & Mastered: Vernon G Segaram (VGS Music)
Cinematography & Editing: One Shot Productions
Label: Rebelstar Records Ltd
Enaku oru AASA, avaley
வெள்ளி, 27 நவம்பர், 2015
கொக்கோ கோலா/ பெப்ஸியின் நன்மைகள்
Author: Infomas | நவம்பர் 27, 2015 |
கோக் / பெப்ஸி நன்மையளிக்கும் அதன் பலன்களை காண்போம்
1) டாய்லட் சுத்தம் செய்தல்: டாய்லட் சிங்கில் நாள்பட்ட கறை இருக்கிறதா? கவலைவேண்டாம். கமோடில் ஒரு பாட்டில் கோக் பெப்ஸியை ஊற்றவும். ஒரு மணிநேரம் கழித்து டாய்லட்டை பிளஷ் செய்யவும். கறைகள் மாயமாக மறைந்திருக்கும்
2) துணி துவைத்தல்: துணிகளில் உள்ள கறைகள் போக மறுக்கிறதா? கவலை வேண்டாம். வாஷிங் மெஷினில் டிடர்ஜெண்டை ஊற்றுகையில் உள்ளே சிறிது கோக்/ பெப்ஸியை ஊற்றவும். அதில் பாஸ்பரிக் அமிலமும், கார்போனிக் அமிலமும் இருப்பதால் துணிகள் பளிச் என சுத்தமாகும்
3) கார்கண்னாடி கழுவுதல்: இதில் சிட்ரிக் அமிலம் இருப்பதால் கண்னாடியை கோக் விட்டு துடைக்க கண்னாடி பளிச் என சுத்தமாகும்
4) சூயிங் கம் அகற்றுதல்: தலைமுடியில் சூயிங்கம் ஒட்டிகொண்டதா? கவலை வேண்டாம். கோக்கை மேலே ஊற்றி சிறிது நேரம் பொறுத்து அகற்ற சூயிங்கம் அகன்றுவிடும்
5) டிஷ் வாஷர்: டிஷ் வாஷிங் டிடர்ஜெண்ட் தீர்ந்துவிட்டதால்? கவலை வேண்டாம். கோக் ஊற்றி பாத்திரஙக்ளை கழுவ பாத்திரங்கள் பளிச் என சுத்தமாகும்
6) துரு அகற்றுதல்: நாள்பட்ட துருவை அகற்ற மேலே கோக் ஊற்றி, அல்லது துணியில் கோக்கை நனைத்து துடைத்தால் பாத்திரத்தில் உள்ள துரு அகன்று பளிச் என இருக்கும்
7) கார் கண்னாடியில் இருக்கும் பனியை அகற்றூதல்: குளிர்காலத்தில் மேலைநாடுகளில் கார் கண்ணாட்டியில் பனி படர்ந்து உறைந்துவிடும்.
அதன் மேல் கோக்கை ஊற்றி கொஞ நேரம் காத்திருந்து துடைத்தால் பனி டக் என அகன்றுவிடும்
ஆக இத்தனை நன்மையளிக்கும் கோக்/பெப்ஸியை எல்லாரும் வாங்கி பலனடைவோம்...
Share me Your Friends
Popular Posts
-
மனித உடலில் உள்ள முக்கியமான உறுப்புகள் - Important organs in the human body மனித உடலில் உள்ள முக்கியமான 12 உறுப்புகளில் ஒவ்வொரு உறுப்பும் 2 ...
-
மஞ்சள் காமாலை நோய் மிகவும் கொடியது மரனத்தை தரக்௯டியது இந்த நோயை ஆங்கில மருத்துவத்தால் சரி செய்ய இயலாது அப்படி பார்த்தாலும் நோய் வள...
-
Browser Cookies Cookies என்ற வார்த்தையை நாம் அடிக்கடி இணையத்தில் பார்த்து இருப்போம். தொழில்நுட்பத்தோடு தொடர்பில்லாம...
-
அடங்கா காம வெறி அதை அடக்கும் ஞான மூலிகை ...அம்மான் பச்சரிசி நீங்கள் 1.டீன் ஏஜ் பருவத்தினரா ? 2.சுய இன்ப பழக்கத்தை கை விட முடியாத...
-
கணினிப் பயன்படுத்துபவர்கள் அதிகம் உச்சரிக்கக் கூடிய வார்த்தைகளில் ப்ரொகிராம் என்ற வார்த்தையும் அடங்கும். Program என்ற வார்த்தைக்கு தமிழில்...