பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

வியாழன், 28 ஜனவரி, 2016

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் மூலம் பேஸ்புக் பயன்படுத்துபவர்களுக்கான பயனுள்ள உதவிக்குறிப்புகள்

                                               


பேஸ்புக் தளமானது உலகளாவிய ரீதியில் பயன்படுத்தப்படும் மிகப்பெரியதொரு சமூக வலைத்தளமாகும். இதனை கணினி மூலம் பயன்டுத்துபவர்களை விட ஸ்மார்ட் போன்கள் மூலம் பயன்படுத்துபவர்களே இன்று அதிகம்.

அந்த வகையில் இன்று பேஸ்புக் செயலி நிறுவப்படாத ஒரு ஸ்மார்ட் போன் இல்லை என்றே கூற வேண்டும். அத்துடன் பெரும்பாலான மொபைல் சாதனங்களை புதிதாக வாங்கும் போதே அதில் பேஸ்புக் செயலி நிறுவப்பட்டிருக்கின்றன.

எது எப்படியோ சமூக வலைதளத்தில் பேஸ்புக் போல மொபைல் சாதனங்களுக்கான இயங்குதளம் என்றால் ஆண்ட்ராய்டு என்றே கூற வேண்டும். இதனடிப்படையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் மூலம் பேஸ்புக் தளத்தை வலம் வரும் பயனர்களே ஏராளம்.

எனவே நீங்களும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் மூலம் பேஸ்புக் தளத்தை பயன்படுத்துபவர் எனின் பின்வரும் உதவிக்குறிப்புகள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையலாம்.


10. எழுத்துக்களை வெவ்வேறு தோற்றங்களில் பகிர்ந்து கொள்ள 

பொதுவாக பேஸ்புக் தளத்தில் எண்கள் எழுத்துக்கள் குறியீடுகளைக் கொண்டு எமது நிலைத் தகவல்களை பகிந்துகொள்ள முடிந்தாலும் நாம் அதில் தட்டச்சு எழுத்துக்களை வெவ்வேறு தோற்றங்களுக்கு மாற்ற முடிவதில்லை எனினும் Fsymbols எனும் இணையதளமானது நாம் எழுதக்கூடிய எழுத்துக்களை பல அட்டகாசமான தோற்றங்களுக்கு மாற்றித்தருகிறது. பின் அவற்றை பேஸ்புக் தளத்தில் பகிர்ந்து கொள்ளலாம். நாம் எழுதக்கூடிய எழுத்துக்களை சுற்று வட்டமிடப்பட்டதாகவும், தலைகீழாகவும், வலம் இருந்து இடமாகவும் என பல அருமையான தோற்றங்களுக்கு மாற்றிப்பெற்றுக்கொள்ள முடியும்.


9. நண்பர்களின் இற்றைபடுத்தல்களை அறிய பேஸ்புக் விட்ஜெட் வசதியை பயன்படுத்தலாமே 

ஆண்ட்ராய்டு பேஸ்புக் விட்ஜெட்


எமது ஸ்மார்ட் போனுக்கு நாம் செயலிகளை நிறுவும் போது பெரும்பாலான செயலிகள் அவற்றுக்கான விட்ஜெட்டை வசதியுடன் நிறுவப்படுகின்றன. இவற்றின் மூலம் குறிப்பிட்ட செயலியில் உள்ள வசதிகளை ஹோம் ஸ்க்ரீனில் இருந்தவாறே மிக இலகுவில் பெற்றுக்கொள்ளலாம்.

அதே போல் பேஸ்புக் செயலிக்கான விட்ஜெட் வசதியை உங்கள் ஸ்மார்ட் போனின் ஹோம் ஸ்க்ரீன் பகுதியில் இணைத்துக் கொள்வதன் மூலம் ஹோம் ஸ்க்ரீனில் இருந்தவாறே உங்கள் நண்பர்களின் இடுகைகளை கண்காணிக்கலாம்.

விட்ஜெட்டை இணைக்கும் முறையானது சாதனத்துக்கு சாதனம் வேறுபடலாம் இருப்பினும் பெரும்பாலான ஸ்மார்ட் போன்களில் அதன் ஹோம் ஸ்க்ரீனை தொடர்ச்சியாக சிறிது நேரம் அழுத்துவதன் மூலம் விட்ஜெட்களை இணைப்பதற்கான வசதியை பெறலாம்.


8. நோட்டிபிகேஷகளை நிர்வகிக்க 

பேஸ்புக் தளத்தில் எமக்கு புதியதொரு செய்தி (Message) வரும் போதும், புதிய நண்பர்களின் கோரிக்கை வரும் போதும், புகைப்படங்களில் நாம் Tag செய்யப்படும் போதும் என இன்னும் பல்வேறு சந்தர்பங்களில் எமது பேஸ்புக் கணக்கில் நிகழும் பல்வேறு மாற்றங்களை நாம் உடனுக்குடன் அறிந்து கொள்வதற்காக பேஸ்புக் செயலியில் நோட்டிபிகேஷன் வசதி தரப்பட்டுள்ளது.

பேஸ்புக் ஆண்ட்ராய்டு நோட்டிபிகேஷன்


இது ஒரு சிறந்த வசதியாக இருந்தாலும் அளவுக்கு அதிகமான நோட்டிபிகேஷன்கள் வரும் போது அதுவே எமக்கு தொந்தரவாகவும் அமைந்துவிடுவதுண்டு.

எனவே எமது பேஸ்புக் கணக்கில் ஏற்படும் மிக முக்கியமான மாற்றங்களுக்கு மாத்திரம் நோட்டிபிகேஷன்கள் தோன்றும் வகையில் பேஸ்புக் செயலியை அமைத்துக் கொள்ள முடியும்.

பேஸ்புக் செயலியின் வலது மேல் மூலையில் தோன்றும் மூன்று கோடுகளாலான மெனு பட்டனை சுட்டும் போது தோன்றும் App Settings ===> Notification எனும் பகுதி மூலம் மேற்குறிப்பிட்ட செயற்பாட்டை மேற்கொள்ளலாம்.


7. அருகிலுள்ள நண்பர்களையும் இடங்களையும் அறிய 

அத்துடன் கணினியின் மூலம் பெறமுடியாத ஆனால் ஸ்மார்ட் போன்கள் மூலம் பெற முடிகின்ற ஒரு வசதியே Nearby Places மற்றும் Nearby Friends என்பதாகும். நீங்கள் உலகின் எந்த ஒரு பகுதிக்கு சென்றாலும் உங்களுக்கு அருகில் இருக்கும் விடுதிகள், உணவகங்கள், விற்பனை நிலையங்கள் போன்ற இன்னும் பல இடங்களையும் Nearby Friends என்பதன் மூலம் உங்களுக்கு அருகில் இருக்கும் உங்களது முகநூல் நண்பர்களையும் அறிந்து கொள்ளலாம்.

பேஸ்புக் செயலியின் மெனு பகுதியில் தரப்பட்டுள்ள Nearby Places மற்றும் Nearby Friends என்பவற்றை சுட்டுவதன் மூலம் மேற்குறிப்பிட்ட வசதிகளை பெறலாம்.


6. தானாக இயங்கும் வீடியோ கோப்புக்களின் செயற்பாட்டை தடுக்க:

பேஸ்புக் தளத்தில் பகிரப்படக்கூடிய வீடியோ கோப்புக்கள் தானாகவே இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் எமது பேஸ்புக் பக்கத்தில் தோன்றக்கூடிய அனைத்து வீடியோ கோப்புக்களும் தானாக இயங்குவதால் தேவையற்ற விதத்தில் எமது தரவுப்பாவனை அதிகரிக்கின்றது.



எனவே இதனை தவிர்த்துக்கொள்ள Video Auto Play வசதியை நிறுத்திக் கொள்ளலாம். இதனை மேற்கொள்ள நாம் மேலே குறிப்பிட்ட வகையில் App Settings பகுதிக்கு சென்று அதில் தரப்பட்டிருக்கும் Auto Play என்பதை சுட்டுக. பின் Never Auto Play Video என்பதை தெரிவு செய்வதன் மூலம் வீடியோ கோப்புக்கள் தானாக இயங்குவதை தடுக்கலாம்.


5. பதிவுகளை சேமிக்க:

பேஸ்புக் தளத்தில் பகிரப்படக்கூடிய கருத்துக்கள், புகைப்படங்கள், வீடியோ கோப்புக்கள், இணைய இணைப்புகள் போன்றவற்றை பிறகொரு சந்தர்பத்தில் பார்ப்பதற்காக அதனை சேமித்து வைக்க முடியும்.

இதனை மேற்கொள்வதற்கு குறிப்பிட்ட பதிவின் வலது மேல் மூலையில் தரப்பட்டுள்ள அம்புக்குறி அடையாளத்தை சுட்டும் போது பெறப்படும் சாளரத்தில் Save Video அல்லது Save Link எனும் பட்டனை சுட்டுவதன் மூலம் அவற்றை பிறகொரு சந்தர்பத்தில் பார்த்துக் கொள்ளும் வகையிலும் சேமித்துக் கொள்ளலாம்.

சேமிக்கப்பட்டவற்றை பெற்றுக்கொள்ள மெனு பகுதியில் தரப்பட்டுள்ள Saved என்பதை சுட்ட வேண்டும்.


4. வேண்டாமே கவலை:

உங்கள் பேஸ்புக் கணக்கை இன்னும் ஒருவர் உபயோகப்படுத்துவதாக உணர்கிறீர்களா? 

இதற்கு பெரும்பாலும் எமது கவனயீனமே ஒரு காரணமாக அமைந்துவிடலாம். நாம் பொது இடங்களில் இருக்கும் கணினிகளிலோ அல்லது நண்பர்களின் ஸ்மார்ட் போன்கள் மூலமாகவோ எமது முகநூல் கணக்கை பயன்படுத்தி விட்டு அதனை Logout செய்ய மறந்தால் இவ்வாறான நிலைமைகள் ஏற்படுவதுண்டு.

இருப்பினும் இதற்கு கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

பேஸ்புக் செயலியின் மெனு பகுதியில் தரப்பட்டுள்ள Account settings ===> Security ===> Active Sessions எனும் பகுதி மூலம் நாம் Logout செய்ய மறந்த சாதனங்களில் இருந்து எமது பேஸ்புக் கணக்கை Logout செய்துகொள்ள முடியும்.



3. நண்பர் தான் ஆனால் பதிவுகள் வேண்டாம்:

முகநூலில் இருக்கும் நண்பர் ஒருவர் பகிரக்கூடிய தகவல்கள் உங்களுக்கு பிடிக்கவில்லைய? எனவே அவரது பதிவுகள் உங்களுக்கு தோன்றாமல் இருக்க அவரை நண்பர் பட்டியலில் இருந்து நீக்கிவிட வேண்டும் என்ற அவசியமில்லை. இதற்கு பதிலாக அவரை Unfollow செய்யலாம். இதன் போது அவர் தொடர்ச்சியாக எமது நண்பர் பட்டியலில் இருந்தாலும் அவர் பகிரக்கூடிய தகவல்கள் எமக்கு தோன்ற மாட்டாது.




இதனை மேற்கொள்ள குறிப்பிட்ட நண்பரின் சுயவிவர (Profile) பகுதிக்குச் சென்று Following என்பதை சுட்டுவதன் மூலம் Unfollow என்பதை தெரிவு செய்ய வேண்டியது தான்.


2. பதிவுகளை தவறாமல் பார்க்க வேண்டுமெனில்:

மேலே குறிப்பிட்ட முறைக்கு மாறாக ஒரு நண்பரின் அல்லது உங்களுக்கு பிடித்த ஒரு பேஸ்புக் பக்கத்தின் பதிவுகளை தவறாமல் பெற்றுக்கொள்ள விரும்பினால் அதற்கும் வசதி தரப்பட்டுள்ளது.

இதனை மேற்கொள்ள வேண்டுமெனில் குறிப்பிட்ட நண்பரின் அல்லது முகநூல் பக்கத்தின் Profile பகுதிக்கு சென்று  Following என்பதை சுட்டும்போது பெறப்படும் சாளரத்தில் See First என்பதை அழுத்த வேண்டும்.



1. அடிக்கடி அரட்டையில் ஈடுபடும் நண்பர்களை Pin செய்துகொள்ள:

நீங்கள் அடிக்கடி அரட்டையில் ஈடுபடும் நண்பர்களை அரட்டைக்கான பகுதியில் (Chatting Window) Pin செய்துகொள்ள முடியும். இதன் மூலம் நீங்கள் Pin செய்யும் நண்பர்களின் பெயர்கள் அரட்டைக்கான சாளரத்தின் மேற்பகுதியில் தோன்றும். 

எனவே அரட்டையில் ஈடுபடவேண்டிய ஒவ்வொரு சந்தர்பங்களிலும் உங்கள் நண்பர் பட்டியலில் இருந்து அவர்களை தேடிப்பெற வேண்டிய அவசியம் இருக்காது.



பேஸ்புக் செயலியின் வலது மேல் மூலையில் தரப்பட்டுள்ள நண்பர்களை அடையாளப்படுத்தும் குறியீட்டை சுட்டுவதன் மூலம் உங்கள் நண்பர்களின் பட்டியலை பெறலாம்.

பின் அதில் தரப்பட்டுள்ள EDIT என்பதை சுட்டுவதன் மூலம் நீங்கள் அடிக்கடி அரட்டையில் ஈடுபடும் நண்பர்களை Pin செய்துகொள்ள முடியும்.

ஐபோனில் Facebook மற்றும் YouTube வீடியோகளை Download செய்வது...? Direct Camera Roll

                                    


இந்த APPLICATION முழுமையாக Chines மொழியில் உள்ளது.

முதலில் உங்களுடைய Apps Store உள்ள இந்த Application Download செய்து கொள்ளுங்கள். Apps name : VEDITOR



அதன் பின்னர் அந்த Application ஓபன் செய்து கொள்ளுங்கள்; அதில் வரும் அதில் உள்ள Download Icon கொடுத்து கொள்ளுங்கள்./




அதன் பின்னர் உங்களுக்கு இவ்வாறு வரும். அதில் Youtube வீடியோ Download செய்வது என்றால் Youtube கிளிக் செய்து கொள்ளுங்கள் அல்லது பேஸ்புக் வீடியோ என்றால் முதலில் உங்களுடைய பேஸ்புக் Login செய்த பின்னர் Download செய்யலாம்.


நான் Youtube வீடியோ ஒன்றை Download செய்து காடுரன் அது போல செய்து பாருங்கள் முதலில் Youtube கிளிக் செய்து ஒரு வீடியோ தேடுங்கள். வீடியோ Play பண்ணுங்கள்.


அதன் பின்னர் வீடியோ Play ஆகும் பொது இவ்வாறு வரும் அதில் நான் காடியத்தை கிளிக் செய்து கொள்ளுங்கள் ( வட்டம் போட்டு காடியத்தை)



அதன் பின்னர் கீழ் நான் இலக்கம் இரண்டு போட்ட இடத்தில கிளிக் செய்து பாருங்கள் உங்களுடைய வீடியோ Download ஆகும்.



இது Download ஆனதும் இலக்கம் முன்று 3 போட்ட இடத்தை கிளிக் செய்து கொள்ளுங்கள். அதில் உங்களுடைய வீடியோ மேல் கிளிக் செய்து நான் வட்டம் இட்டு காடியதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.




அவ்வளவுதான்  oK கொடுங்க


இப்ப உங்களுடைய CAMERA Roll பாருங்க வீடியோ இருக்கும்




பதிவு நல்லா இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் . நன்றி  கமெண்ட்ஸ் இருந்தால் தயவு செய்து பதிவு செய்யுங்கள்.

உங்கள் ஐபோனை வேகமாக செயல்பட வைக்கும் யுக்திகள்:

iPhone_7_illustration_Yasser_Farahi_1000e

அன்றாடம் பயன்படுத்தும் ஐபோன்கள்  நாளடைவில் மிகக் மெதுவாக செயல்படுவது பலருக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு பிரச்சனையே! இது போன்ற பிரச்சனைகளை  சில வழிமுறைகளை கையாண்டால் எளிதில் நீக்கி விடலாம்.   ஐபோன் பயனர்களுக்கான முக்கிய வழிமுறைகள் பின்வருமாறு :

*மொபைலில் அளவுக்கதிகமாக சேமித்து வைத்துள்ள பழைய  புகைப்படங்களை மற்றும் தேவையில்லாத  டாக்குமெண்ட்டுகளை  நீக்குவதும்    மிக  அவசியமே .  நூற்றுக்கணக்கான  அளவு புகைப்படங்கள்  இருப்பின் அவற்றை   கணினியில் ஒரு போல்டரில் போட்டு வைப்பது சிறந்தது.

*அதிகளவு ஏற்றி வைத்துள்ள பயன்பாடுகளை நீக்க வேண்டும்  . ஏனெனில் அவை அதிக அளவு இடங்களை ஐபோனில் ஆக்கிரமிப்பு செய்து ஐபோனை மெதுவாக இயங்கவைக்கும் . இவை எந்த அளவுக்கு  இடங்களை  ஆக்கிரமித்து கொண்டுள்ளன என்பதை அறிய  போனில்  Settings > General > Storage & iCloud Usage > Manage Storage.- க்கு சென்று பார்த்தால் அறியலாம் . இதனால் மிக முக்கியமான பயன்பாடுகளை மட்டும் சேமித்து வைப்பது நன்று.

*பழைய குறுந்தகவல் செய்திகளை    மாதக்கணக்கில் வைத்திருந்தால்   அது மொபைலின் வன்பொருளை பாதிக்கும் வாய்ப்புண்டு.இதற்கு தகுந்த தீர்வு  என்னவென்றால் உங்கள் போனில் உள்ள குறுந்தகவல்களை குறிப்பிட்ட கால வரையறைக்கு மட்டும் சேமித்து  வைத்திருக்கும்  அமைப்புகளை அமைத்துவிட்டால்  அவை குறிப்பிட்ட காலம் வரைக்கும்  இன்பாக்ஸில் காணும்படி செய்யலாம்.இதற்கு  Settings > Messages > Keep Messages. என்று தேர்ந்தெடுக்க வேண்டும்.

*ஐபோனை உங்களது கணினி போன்று பயன்படுத்த வேண்டும். அதாவது  அடிக்கடி இணைய தேடல் வரலாறுகளை  நீக்கிக்  கொண்டே இருப்பது அவசியமே. இடைமாற்று நினைவகம் என்று கூறப்படுகின்ற அதாவது  பலமுறை அணுகப்படும் தரவுகளுக்கு ஒதுக்கப்படும் ஒரு விரைவு நினைவகத்தினை  அடிக்கடி அழித்து  விடுவது அவசியம் . இதற்கு  மொபைலில் Settings > Safari,-க்கு சென்று  Clear History and Website Data  வை தட்டினால் போதும்.

*உங்கள் ஐபோன் மெதுவாக இயங்க ஒரு முக்கிய காரணம் அதிலிருக்கும்  பயன்பாடுகளின்  ஆட்டோ  அப்டேட்டுகலாகத்தான் இருக்கும். தேவையற்ற பயன்பாடுகளின் அப்டடேட்டுகளை நீக்க இது ஒரு சிறந்த வழியாகும். இதற்கு உங்கள் மொபைலில் Settings > iTunes & App Store-க்கு சென்று    OFF MODE  யை  தேர்ந்தெடுக்க வேண்டும்.

*மேற்கூறியது போன்றே  ஆட்டோமேட்டிக்  அப்டேட்டுகளை  தேவையற்ற இசை ,நூல்கள் போன்றவற்றை பதிவிறக்கங்கள் செய்யாமல்   தவிர்கும்படி  செய்யலாம்.இதற்கு  மொபைலில் Settings > iTunes & App Store-க்கு சென்று   apps, books, music -இல்   OFF MODE  யை தட்டினால் போதும்.

*மேலும் அடிக்கடி உங்கள் மொபைலில்  உங்களுக்கு அருகிலிருக்கும் வை-பை இணைப்புகளுடன் இணைக்கவா? என்பது போன்ற கேள்விகளுக்கு ஆம் என்ற பதிலை கொடுத்தால் அது  உங்கள் சாதனத்தை மிக மெதுவாக செயல்பட வைக்கும். இதனை  நீக்க   Settings > Wi-Fi > Ask to Join Networks  இல்   OFF MODE  யை தேர்ந்தெடுக்க வேண்டும் .

*அன்றாடம்  முடிந்த வரையில் ஒருமுறையாவது  ஐபோனை ரீஸ்டார்ட் செய்வதும் மொபைல் வேகத்தை அதிகரிக்கும் வழிகளில் ஒன்றே ! இதனால் ஐபோன் அடிக்கடி மந்தாமாகாமல் தடுக்கலாம்.

*பேட்டரி டாக்டர் என்ற பயன்பாட்டினைக் கொண்டு உங்கள் ஐபோன்கள் எவ்வளவு மெதுவாக  இயங்குகிறது என்பதை அறியலாம். மெதுவாக இயங்குகிறது என்றால் அதிலுள்ள நினைவகத்தை மறு  ஒதுக்கீடு செய்து  வழங்க உதவுகிறது.

இது போன்ற வழிமுறைகளை கடைபிடித்தால்  ஐபோனின் ஆயுள்காலத்தினை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் உங்கல் ஐபோன் சாதனம்   மெதுவாக செயலபாடாமல் தடுக்கலாம்.

திங்கள், 25 ஜனவரி, 2016

மெல்ல கொள்ளும் நஞ்சு( slow poison ) ரீபைண்ட் ஆயில்( Refined oil)

மெல்ல கொள்ளும் நஞ்சு( slow poison )
ரீபைண்ட் ஆயில்( Refined oil)



ரீபைண்ட் ஆயில் பயன்படுத்தாதிங்க!நோயை விலை கொடுத்து வாங்காதிங்க !நாமெல்லாம் நினைக்கிறது போல ரீபைண்ட் ஆயில்னா சுத்திகரிக்க பட்ட எண்ணெய் மட்டும் இல்லங்க சுத்தமா உயிர் சத்துகளே இல்லாதஎண்ணெய்.
ரீபைண்ட் ஆயில் எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா?


மில்லில் இருந்து பெறப்பட்ட எண்ணெய்யில் காஸ்டிக் சோடாவை சேர்த்து கொதிக்க வைத்து முதலில் அதிலிருந்து சோப்பு எடுக்கிறார்கள்.பிறகு அதிகம் இருக்கும் காஸ்டிக் அமிலத்தின் மூலம் அகற்றி நீயூட்ரலைஸ் செய்து அதில் இருக்கும் வாசனையை அறவே நீக்கிவிடுகிறார்கள்.பிறகு அதை சால்வெண்ட் எக்ஸ்ட்ராக்சன் மூலம் பிரித்து எடுக்கிறார்கள்.இதை எல்லாம் நேரில் பார்த்தால் நம்மில் பலருக்கு சாப்பிடவே பிடிக்காது. திரைமறைவில் நடக்கும் இந்த வேலைகள் எல்லாம் மக்களுக்கு தெரியாத காரணத்தால் " சுத்தம் செய்யப்பட்ட எண்ணெய் "என்று நினைத்து ரீஃபைண்ட் ஆயிலை உபயோகித்து கொண்டு இருக்கிறார்கள்.


‪#‎உண்மையில்‬ ரீஃபைண்ட் ஆயில் என்பது அடர்த்தி இல்லாத தண்ணீர் போன்ற ஒரு திரவம்.சமையலுக்கு இதை பயன்படுத்தும் போது சூடு தாங்காமல் உருக்குலைந்து உடல் ஆரோக்கியத்திற்கு தீமை விளைவிக்கும் ஒரு ரசாயன கலவையாக மாறுகிறது.

‪#‎எண்ணெய்‬ விஷமாக மாறிவிட்டதால் இன்று மக்கள் பலவிதமான நோய்களுக்கு உள்ளாகி சிகிச்சைகள் எடுத்து கொள்வதற்க்காக பெரியதொகைகளை செலவளித்து கொண்டு இருக்கிறார்கள்.நமக்கு வரும் நோய்களுக்கு எல்லாம் சுற்றுசூழல் மாசுப்பட்டு இருப்பது தான் காரணம்என்று சொல்லி நம்மை நாமே ஏமாற்றி கொள்கிறோம். 


‪#‎கடந்த‬ 60-70 ஆண்டுகளில் நோய்கள் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மக்களை வாட்டி வதைத்துக்கொண்டு இருக்கிறது. இதற்க்கானகாரணங்களில் முக்கியமான இடத்தை பிடித்து இருப்பது ரீஃபைண்ட் ஆயில்.
யோசிச்சு பாருங்க இவ்வளவு தீமையான ஒரு பொருளை நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தி, நம் ஆரோக்கியத்தை நாமே விலை கொடுத்து பாழ்படுத்தி கொள்கிறோம்.


அப்போ என்ன எண்ணெய் தான் வாங்குறது?ரீபைண்ட் செய்யாத நல்லெண்ணெய்,கடலை எண்ணெய்,தேங்காய் எண்ணெய் வாங்கி பயன்படுத்தலாம். இதை தானே நம்மதாத்தா பாட்டி பயன்படுத்தினாங்க.ஒரு வேலை நீங்க இப்படி கேட்டா,அய்யய்யோ அதுல நிறைய கொழுப்பு இருக்குனு சொல்லுவாங்களே! 


அது மட்டும் இல்லாம கொழுப்பு உள்ள எண்ணெய் பயன்படுத்தினா ஹார்ட் அட்டேக், B.P. வரும்,ரொம்ப வெய்ட் போடும்னு சொல்லுவாங்களே! கிராமத்து இளைஞனின் கருத்து : சரிங்க ரீபைண்ட் ஆயில் தானே இப்போ பெரும்பாலும் பயன்படுத்துறோம்.யோசிச்சு பாருங்க உங்க ஊர்ல ஹார்ட்வர்றவங்களோட எண்ணிக்கை குறைஞ்சு இருக்கா இல்ல கூடி இருக்கா. 

என்ன கொடுமைனா முன்னயாவது 60,70 வயசு ஆனவங்களுக்கு பெரும்பாலும் ஹார்ட்அட்டாக் வந்தது. இப்போ தெல்லாம் 25,30,35 வயசு உள்ளவங்களுக்கே ஹார்ட் அட்டக் வருது.அப்போ ரீபைண்ட் ஆயில் உபயோகிச்ச பிறகு நோயின் அளவு ஜாஸ்தி தானே ஆகியிருக்கு?..ஒரு வேலை நீங்க இப்படி கேட்டா : 

சரி ரைட்டு வேற எண்ணெய் வாங்கலாம்னா அதாவது,எள்எண்ணெய் (நல்லெண்ணெய்),கடலை எண்ணெய்,தேங்காய் எண்ணெய் வாங்கலாம்னு பார்த்தா விலை பட்ஜெட்ல அடங்காது போல இருக்கே!.

நான்: ஒரு லிட்டர் கடலை எண்ணெய் 170 ரூபாய்,ஒரு லிட்டர் ரீபைண்ட் ஆயில் 85 ரூபாய்,அப்போ ரீபைண்ட் ஆயில் வாங்குனா உங்களுக்கு பாதி பணம் அதாவது 85 ரூபாய் மிச்சம். 

அந்த பணத்தை சேர்த்து வச்சு என்னா செய்விங்க? நான் சொல்லட்டுமா!!! இப்படி மிச்சம் பிடிச்ச பணத்தை பேங்குல போட்டு வச்சு வட்டியும் முதலுமா டாக்டர் கிட்ட குடுபிங்க.ஆரோக்கியத்திர்க்கு கேடு விளைவிக்கும் பொருளை குறைந்த விலையில் கிடைக்குதேன்னு வாங்கி உபயோகபடுத்திட்டு பின்னால் நோய் வந்த பிறகு மிச்சம் பிடிச்ச பணத்தை டாக்டர் கிட்ட குடுத்துட்டு,உங்களையும் கஷ்ட படித்திக்கிட்டு இருக்கறதுக்கு, நல்ல தரமான பொருளை வாங்கி பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழலாமே!!! ஆரோக்கியம் தானே மிக பெரிய செல்வம்..

எண்ணெய் விலையை நாம் நினைத்தால் குறைக்கலாம். அது எப்படி ?
நாம் எந்த பொருளை விரும்புகிறோமோ அதை வியாபாரிகள் தயாரித்து கொடுக்க தயாராக இருக்கிறார்கள். எதை அதிகமாக வாங்குகிறோமோ அதன் தயாரிப்பும் அதிகரிக்கும். 


தயாரிப்பு அதிகரித்தால் விலை குறையும்.தரமான பொருளை அதிகமாக வாங்கினால் அதன் தயாரிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதன் மூலம் தரமான பொருளை நியாயமான விலையில் வாங்க முடியும். மட்டமான பொருளை விற்கிறார்களே என்று வியாபாரிகளை குறை சொல்லி பயனில்லை.நாம் எதை கேட்கிறோமோ,எதை அதிகம் வாங்குகிறோமோ அதை தானே அவர்கள் விற்ப்பார்கள்.

நீங்கள் விஷம் குடுங்கள் என்று கேட்டால் விஷம் தான் கொடுப்பார்கள்!.அதை விடுத்து அய்யய்யோ விஷத்தை ஏன்வாங்குகிறீர்கள் அதை சாப்பிட்டால் இறந்து விடுவீர்கள் என்று விளக்கம் சொல்லி கொண்டு இருக்க மாட்டார்கள். விஷம் சாப்பிட்டால் இறந்து விடுவீர்கள் என்று தெரிந்து கொள்ளவேண்டியது உங்கள் பொறுப்பு.மேலும் அவர்கள் எதை தயாரிக்கிறார்களோ,அதை ஆஹா ஓஹோ என்று தான்விளம்பரபடுத்துவார்கள். 


அது அவர்கள் வியாபாரயுக்தி.ரீபைண்ட் ஆயில் தயாரிப்பாளர்கள்ரீபைண்ட் ஆயில், பயன்படுத்தினால் கேன்சர்வராது என்று சொல்லி தான் விற்பார்கள். ஆனால் அது உண்மையா பொய்யா என்று நாம் யோசித்து 

வாங்கவேண்டும்.நாளைக்கே அந்த நிறுவனம் ரீபைண்ட் ஆயில் தயாரிப்பை நிறுத்திவிட்டு எள்ளெண்ணெய் விற்றால் அப்போது சொல்லுவார்கள் ரீபைண்ட் ஆயில் பயன்படுத்தினால் கேன்சர் வரும் என்று!!!!

நம் முன்னோர்கள் அந்த காலத்தில் செக்கில் ஆட்டி எடுத்த தேங்காய் எண்ணெயையும்.,நல்லெண்ணையையும் அப்படியே உபயோகித்தனர்.இந்த எண்ணெய்கள் அடர்த்தியாகவும்.,நிறமாகவும்., மணமாகவும் இருக்கும்.இதற்கு காரணம் அந்த எண்ணெய்களில் உள்ள ஊட்டசத்துக்கள் தான்.இதனால் தான் உடல் ஆரோக்கியத்திற்க்கு தேவையான புரோட்டீன்கள், வைட்டமின்கள்,தாதுப்பொருள்கள், நார்ச்சத்துக்கள் , குளோரோபில்,கால்சியம், மெக்னீசியம்,காப்பர், இரும்பு,பாஸ்பரஸ்,வைட்டமின் " இ " போன்றவை நமக்கு கிடைத்து வந்தன..

இந்த தாதுப்பொருட்கள் மூலம் உற்பத்தியாகும் மெழுகு போன்ற பொருள்கள் மூட்டுகளுக்கு சென்று.,எலும்பு தேய்மானத்தை தடுத்தன.


#‎நம்‬ முன்னோர்கள் உடற்பயிற்சி செய்து முடித்ததும் ஒரு கிண்ணம் நிறைய நல்லெண்ணெய் குடிக்கும் வழக்கத்தையும் வைத்து இருந்தனர்.இதை உணவுக்கு மட்டுமின்றி. குளியலுக்கும்,மசாஜ் செய்வதற்க்கும் உபயோகித்த காரணத்தால் அவர்கள் 80 வயது வரை மூட்டு வலியின்றிகால்நடையாகவே சென்று வந்தனர்.அதனால் தான் எல்லாம் அறிந்த நம் முன்னோர்கள் இதை எள் எண்ணெய் என்று சொல்வதற்கு பதிலாக " நல்ல எண்ணெய் "என்று சொன்னார்கள்.

வெளிநாட்டில் கூட இதை " Queen of Oil "என்று அழைக்கிறர்கள்.ஆனால் இன்று நாம் உபயோகிக்கும் ரீஃபைண்ட் ஆயிலில் உயிர்சத்துக்கள் எதுவுமே இல்லை என்பது அதிர்ச்சியான உண்மை.புதுசா புதுசா எதை எதையோ கண்டுபிடுச்சு அதை குறைந்த விலையில் விற்று நம்மை சோதனை எலிகளை போல் பயன்படுத்துகிறார்கள். இதன் முடிவு பத்து வருஷம் கழித்து தான் தெரியும்.அப்போ தான் சொல்வார்கள் இதை பயன்படுத்தியதால் தான் இப்படி என்று!அனால் அப்போது தெரிந்து என்ன பயன்.

யோசிங்க நீங்க சோதனை மனிதராக இருக்க ஆசைபடுரிங்களா? இல்லை ஏற்கனவே நம்ம முன்னோர்கள் காலம் காலமாக உபயோகபடுத்திய உணவு முறையை பின்பற்றி அவர்கள் போலவே 80,90 வயது வரை ஆரோக்கியமாக வாழஆசை படுறிங்களா?.அட்லீஸ்ட் வாழும் காலம் வரை நோயில்லாமல் வாழ வேண்டும் என்பது தானே அனைவரது விருப்பமும்.எதை வாங்குகிறோம் என்பதில் தெளிவாக இருப்போம்.
 

நன்றி : சரவணக்குமார் வே

ஞாயிறு, 24 ஜனவரி, 2016

புதன், 30 டிசம்பர், 2015

உண்மையான பழமொழி என்ன? அவற்றில் சிலவற்றை காண்போம்,

👉👉👉 நாம் பல பழமொழிகளை அவ்வப்போது பேச்சு வழக்கில் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் பல பழமொழிகளை இப்போது தவறுதலாக சொல்லிக் கொண்டு இருக்கிறோம்.

👉👉👉 உண்மையான பழமொழி என்ன? அவற்றில் சிலவற்றை காண்போம்

🐺🐺🐺"கல்லைக் கண்டால் நாயைக் காணோம்!
நாயைக் கண்டால் கல்லைக் காணோம்!!"

👉👉👉 சரியான பழமொழி :
*************************
👌👌👌 "கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம்,
நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்".

விளக்கம் :
************

இங்கு நாயகன் என்பது கடவுளை குறிக்கிறது.

கல்லால் செதுக்கப்பட்ட ஒரு கடவுள் சிலையை நீங்கள் பார்க்கிறீர்கள். அதை கல்லாகப் பார்க்கும் போது அங்கே கடவுளை பார்க்கமாட்டீர்கள். அதையே நீங்கள் கடவுளாக பார்க்கும்போது கல்லை பார்க்கமாட்டீர்கள்.

இதில் நாயகன் என்ற வார்த்தை மறுவியே நாய் என்றாகிவிட்டது.

கடவுளை நாயாக்கிய பெருமை தமிழர்களையே சேரும்.

மற்றும் சில பழமொழிகள்:
*******************************

1.👨👩 ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு - தவறு.

👌👌👌 ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு - சரி.

2.🐾🐾🐾🔰🔰🎻🎼🎺🎹 படிச்சவன் பாட்டை கெடுத்தான், எழுதுனவன் ஏட்டை கெடுத்தான் - தவறு.
************** **************

👌👌👌 படிச்சவன் பாட்டை கொடுத்தான் , எழுதுனவன் ஏட்டை கொடுத்தான் - சரி.
*************** ***************

3.💉💊💉 ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன். - தவறு.
*******

👌👌👌 ஆயிரம் வேரை (மூலிகை வேரை ) கொண்டவன் அரை வைத்தியன் (கொண்டவன் என்றால் வைத்திருப்பவன்) - சரி.
********

4.🐴🐴🐴 நல்ல மாட்டுக்கு ஒரு சூடு - தவறு.
*****

👌👌👌 நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு - சரி.
******
🐾🐾🐾 ( சந்தையில் மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம் சுவடு...
🐾🐾🐾அழுத்தமான சுவட்டை பதிக்கும் மாடே அதிக பலம் வாய்ந்தது...
🐾🐾🐾ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம் புலனாகும். )

5.🌂🌂🌂 அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் கொடை புடிப்பான் - தவறு.

👌👌👌 அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான். - சரி

நம் முன்னோர்கள் நம் நல்வாழ்வுக்காக சொல்லி வைத்ததை நாம் பிறரை குறை கூற உபயோகிக்கிறோம்.

மாறுவோம்...பிறரை மாற்றுவோம்....
🙌

புதன், 2 டிசம்பர், 2015

கோல்கேட்டில் கலக்கப்படும் இரசாயனம் புற்றுநோய் கட்டியை உண்டாக்குகிறது - ஆய்வில் அதிர்ச்சி!!

உலக அளவில் பெரும் முன்னணி டூத்பேஸ்ட் நிறுவனமாக விளங்கி வருகிறது கோல்கேட். பெரும்பாலான மக்கள் இந்த டூத் பேஸ்ட்டை தான் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், கடந்த வருடம் நச்சுயியல் ஆய்வு கழகத்தினால் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், கோல்கேட் பொருட்களில் பயன்படுத்தப்படும் ஒருவகை இரசாயனம் ஆனது புற்றுநோய் ஏற்படுத்தும் அபாயம் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 
 
வெளிநாடுகளில் தடை செய்யப்பட்டு இந்தியாவில் விற்கப்பட்டு வரும் பொருட்கள்!!! 
இது, துணி துவைக்கும் சோப்பு, வாசனை திரவியம் போன்ற பொருட்களில் கலக்கப்படும் இரசாயனம் என்ற அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ட்ரைக்ளோசான்(triclosan) எனப்படும் இந்த இரசாயனம் குறித்த ஆய்வுகள் கடந்த 2003-ம் ஆண்டில் இருந்தே பெருமளவில் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது....

பயங்கரமான இரசாயனம்
 
 ட்ரைக்ளோசான் எனப்படும் இந்த இரசாயனம் மிகவும் பயங்கரமானது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 
 
இது டியோடிரன்ட், ஆன்டிசெப்டிக், மற்றும் கை கழுவும் திரவங்கள் போன்றவற்றில் பரவலாக சேர்க்கப்படும் இரசாயனம் என்று கூறப்படுகிறது. மேலும் சில வகையான துணி துவைக்கும் சலவை சோப்புகளிலும் கூட இது சேர்க்கப்படுகிறது.
 
நச்சுயியல் ஆய்வு கழகம் 
 
நச்சுயியல் ஆய்வு கழகம் (Chemical Research in Toxicology) வெளியிட்ட ஆய்வறிக்கையில் , இந்த இரசாயனம் புற்றுநோய் கட்டியை உண்டாக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது என ஊர்ஜிதம் செய்யப்பட்டது.
நச்சுயியல் ஆய்வு கழகம் நச்சுயியல் ஆய்வு கழகம் (Chemical Research in Toxicology) வெளியிட்ட ஆய்வறிக்கையில் , இந்த இரசாயனம் புற்றுநோய் கட்டியை உண்டாக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது என ஊர்ஜிதம் செய்யப்பட்டது. 
 
 
முக்கியமான பிரச்சனை 
 
இந்த தீங்கு விளைவிக்கும் மூலப்பொருள், சருமத்தை ஊடுருவி, இரத்தத்தில் கலந்து ஹார்மோன் சமநிலையை சீர்குலைந்து போக செய்கிறது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
 
 
கனடாவில் தடை 
 
உலகிலேயே கனடாவில் மட்டும் தான் ட்ரைக்ளோசான் எனப்படும் இந்த இரசாயனம் தடை செய்யப்பட்டுள்ளது. முதலில் இதன் பக்கவிளைவுகள் பற்றி அறிந்துக் கொண்ட கனடா அரசு பின்னாளில் மொத்தமாக தடை செய்தது.
 
 
மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் 
 
இனி, இது குறித்து மக்கள் தான் ட்ரைக்ளோசான் எனப்படும் கேடு விளைவிக்கும் இரசாயன கலப்பு உள்ள பொருட்களை பயன்படுத்தலாமா, வேண்டாமா என முடிவு செய்ய வேண்டும். உங்கள் உடல்நலன் அனைத்தையும் விட முக்கியமானது என்பதை நீங்கள் மறந்துவிட கூடாது.

செவ்வாய், 1 டிசம்பர், 2015

Tamilnadu - நம் மாநிலம் குறித்து நாம் தெரிந்து கொள்ள சில முக்கிய தகவல்கள்

நம் மாநிலம் குறித்து நாம் தெரிந்து கொள்ள சில முக்கிய தகவல்கள்

1 ) இந்திய மக்கள் தொகையில் தமிழகம் எந்த இடத்தில் உள்ளது?

7வது இடம்

2 )  இந்திய மக்கள் வளர்ச்சியில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?

23 வது இடம்

3 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக ஆண்கள் எந்த இடத்தில் உள்ளனர்?

16வது இடம்

4 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக பெண்கள் எந்த இடத்தில் உள்ளனர்?

15வது இடம்

5 ) இந்தியாவின்
கல்வியறிவில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?

14வது இடம்

6 ) சென்னை உயர்நீதி மன்றத்தின் கிளை எங்குள்ளது?

மதுரை

7 )  சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைகிளை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

2004

8 )  தமிழக மக்களின் சராசரி தனிநபர் வருமானம் எவ்வளவு?

72993

9 )  தமிழக உயர்நீதி மன்றம் எங்குள்ளது?

சென்னை

10 ) தமிழக கடற்கரையின் மொத்த நீளம் எவ்வளவு?

1076 கி.மீ

11 ) தமிழக சட்டசபை எந்த ஆண்டு முதல் ஒரு அவையாக மாற்றப்பட்டது

1986

12 )  தமிழகத்தில் அதிக அளவு கல்வியறிவு பெற்ற மாவட்டம் எது?

கன்னியாக்குமரி (92.14 சதவீதம்)

13 ) தமிழகத்தில் அதிக அளவு பெண்கள் உள்ள மாவட்டம்?

சென்னை (23,23,454)

14 ) தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது?

சென்னை (46,81,087)

15 )  தமிழகத்தில் உள்ள ஆண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?

68.45 ஆண்டுகள்

16 ) தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்கள் எத்தனை?

13 மாவட்டங்கள்

17 ) தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

234

18 )  தமிழகத்தில் உள்ள சட்டமன்ற நியமன உறுப்பினர் எண்ணிக்கை எவ்வளவு?

1

19 ) தமிழகத்தில் உள்ள துறைமுகங்கள் எவ்வளவு?

12 துறைமுகங்கள்
தமிழகத்தில் உள்ளன

20 ) பன்னாட்டு விமான நிலையம் எங்குள்ளது?

சென்னை

21 ) தமிழகத்தில் உள்ள பெண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?

71.54 ஆண்டுகள்

22 ) தமிழகத்தில் உள்ள மொத்த கிராமங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

15979

23 ) தமிழகத்தில் உள்ள மொத்த நகர பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கை எவ்வளவு?

561

24 ) தமிழகத்தில் உள்ள மொத்த நகராட்சிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

146

25 )  தமிழகத்தில் உள்ள ராஜ்யசபாவின் எண்ணிக்கை எவ்வளவு?

18

26 )  தமிழகத்தில் உள்ள லோக்சபாவின் எண்ணிக்கை எவ்வளவு?

39

27 )  தமிழகத்தில் குறைந்த எழுத்தறிவு கொண்ட மாவட்டம் எது?

தர்மபுரி (64.71 சதவீதம்)

28 ) தமிழகத்தில் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது?

பெரம்பலூர் 5,64,511

29 ) தமிழகத்தில் மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம்? 

சென்னை (26903பேர் ஒரு சதுர கி.மீட்டரில் வாழ்கின்றனர்)

30 ) தமிழகத்தில் மிகக்குறைந்த மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம் எது?

நீலகிரி (1சதுர கி.மீட்டரில் 288 மட்டுமே வாழ்கின்றனர்)

31 ) தமிழகத்தில் மிக்குறைந்த பெண்கள் கொண்ட மாவட்டம் எது?

3,74,901

32 ) தமிழகத்திலுள்ள மொத்த மாவட்டங்கள் எத்தனை?

32

33 ) தமிழகத்தின் 31 வது மாவட்டம் எது?

அரியலூர்

34 ) தமிழகத்தின் 32 வது மாவட்டம் எது?

திருப்பூர்

35 ) தமிழகத்தின் கல்வியறிவு எவ்வளவு சதவீதம்

80.33 சதவீதம்

36 ) தமிழகத்தின் காடுகளின் பரப்பு எவ்வளவு?

17.58 சதவீதம்

37 ) தமிழகததின் மாநில விலங்கு எது?

வரையாடு

38 ) தமிழகத்தின் முக்கிய 3 துறைமுகங்கள் எது?

சென்னை, எண்ணூர், தூத்துக்குடி

39 ) தமிழகத்தின் முக்கிய ஆறுகள் எது? 

காவேரி, வைகை, தாமிரபரணி, பாலாறு, பவானி

40 ) தமிழகத்தின் முக்கியமான 6 விமானநிலையங்கள் எங்குள்ளது?
1. சென்னை
2.  கோவை
3. மதுரை 
4. திருச்சி   
5 தூத்துக்குடி 
6 சேலம்

41 )  தமிழ்நாட்டில் 2011 கணக்கெடுப்பின்படி பாலின விகிதம் எவ்வளவு?

999பெண்கள்(1000 ஆண்கள்)

42 ) தமிழ்நாட்டில் காடுகள் அதிகமாக உள்ள மாவட்டங்கள் எவை?

1. நீலகிரி         
2. சேலம்         
3. வேலூர்         
4. கன்னியாக்குமாரி

43 ) தமிழ்நாட்டில் காடுகள் குறைவாக உள்ள மாவட்டங்கள் எவை?

1. திருவாரூர்     
2. இராமநாதபுரம் 
3. தூத்துக்குடி     
4. கடலூர்

44 )  தமிழ்நாட்டில் சமத்துவபுரம் தொடங்கப்பட்ட முதல் மாவட்டம் எது?

மதுரை (மேலக்கோட்டை - ஆண்டு 1997)

45 ) தமிழ்நாட்டின் இணைய தளம் எது?

www.tn.gov.in

46 ) தமிழ்நாட்டின் தலைநகரம் எது?

சென்னை

47 ) தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடர்த்தி எவ்வளவு?

ஒரு ச.கி.மீட்டருக்கு 555 பேர்

48 )  தமிழ்நாட்டின் மாநில அரசு சின்னம் எது?

திருவில்லிபுத்தூர் கோபுரம்

49 ) தமிழ்நாட்டின் மாநில எல்லையை குறிப்பிடுக?

கிழக்கே வங்காள விரிகுடா, மேற்கே கேரளா, வடக்கே ஆந்திரபிரதேசம், தெற்கே இந்தியபெருங்கடல்

50 ) தமிழ்நாட்டின் மாநில தமிழ்தாய் வாழ்த்து எது?

நீராடும் கடலுடுத்த

51 ) தமிழ்நாட்டின் மாநில நடனம் எது?

பரத நாட்டியம்

52 )  தமிழ்நாட்டின் மாநில பறவை எது?

மரகதப்புறா

53 ) தமிழ்நாட்டின் மாநில மரம் எது?

பனைமரம்

54 ) தமிழ்நாட்டின் மாநில மலர் எது?

செங்காந்தர் மலா்

55 ) தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு எது?

கபடி

56 ) தமிழ்நாட்டின் மொத்த பரப்பு எவ்வளவு?

1,30,058 ச.கி.மீ

57 ) தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை எவ்வளவு?

7,21,38,958              
ஆண் 36158871       
பெண் 35980087

கண்டிப்பாக பகிரவும் மற்றவர்கள் தெரிந்துகொள்வார்கள் ....

இவன்
- மக்களில் ஒருவன்

Enaku Oru Aasa Abum Song Lyrics

Song: Aasai
Singer: TeeJay Featuring Pragathi Guruprasad
Album: ‘Vaanavil – The Quest’.
Lyrics & Melody: TeeJay
Music, Mixed & Mastered: Vernon G Segaram (VGS Music)
Cinematography & Editing: One Shot Productions
Label: Rebelstar Records Ltd
Year: 2013


Intro 
Chorus
Enaku Oru Aasa
Enaku Oru Aasa...
Enaku oru aassa iruku (2x)
Pesi palagi paarthu purinjuka'nu 
Pudicha apuram Kaa,dhalikonum
Mutham kuduthu kalampura anachikaa'nu ... yen aasa avaley
Enaku Oru Aasa 
Enaku Oru Aasa...
Enaku oru aassa iruku (2x)
(Bridge)

Verse 1
Avala kandeney, Ava vera yaarum illa, neethan...
edam pudicha manasila.
Aasa Aasa vachirundha,aadha yeppavum vachirupen  
Adho ange odadhu Aaru, aathorama unkuda naan,
vekam vittu aasaiya veesa manasum thaiyangudhey   
Kaadhal mudhal sonnadhu yaaru ? 
Kelvi kettu kaathirunndho, Bayam illama nenja nimithi, unmaiya pesina...  
Kannava idhu nijama inu, Kili paarthum ketta...Enaku oru aassa iruku 
(Bridge)

Verse 2
Apu Saamy, un aasa'ellam saamikitta soliten, sol'aiya?
Maanja Thaali, un kaalithila mudichika aasa, katti vidava?
Aasa Aasa vachirundha, aadha yeppavum vachirupen
Paasa Kaara un maadiyil vilundhu, kadheigal solluven...
Una polla oru chinna PaPa, pethu tharuviya'ma ?
Illanidha sonna paavam, paiyan thanguven'na ?
Kenji ketta, Konji Ketta, Kaya pidichu kettiye...
Enaku Oru Aasa
Enaku Oru Aasa...Enaku oru aassa iruku 
Pesi palagi paarthu purinjuka'nu
Pudicha apuram Kaa,dhalikonum
Mutham kuduthu kalampura anachikaa'nu ... yen aasa avaney
Chorus
Enaku Oru Aasa 
Enaku Oru Aasa...

Enaku oru AASA, avaley



வெள்ளி, 27 நவம்பர், 2015

கொக்கோ கோலா/ பெப்ஸியின் நன்மைகள்

கோக் / பெப்ஸி நன்மையளிக்கும் அதன் பலன்களை காண்போம்

1) டாய்லட் சுத்தம் செய்தல்: டாய்லட் சிங்கில் நாள்பட்ட கறை இருக்கிறதா? கவலைவேண்டாம். கமோடில் ஒரு பாட்டில் கோக் பெப்ஸியை ஊற்றவும். ஒரு மணிநேரம் கழித்து டாய்லட்டை பிளஷ் செய்யவும். கறைகள் மாயமாக மறைந்திருக்கும்

2) துணி துவைத்தல்: துணிகளில் உள்ள கறைகள் போக மறுக்கிறதா? கவலை வேண்டாம். வாஷிங் மெஷினில் டிடர்ஜெண்டை ஊற்றுகையில் உள்ளே சிறிது கோக்/ பெப்ஸியை ஊற்றவும். அதில் பாஸ்பரிக் அமிலமும், கார்போனிக் அமிலமும் இருப்பதால் துணிகள் பளிச் என சுத்தமாகும்

3) கார்கண்னாடி கழுவுதல்: இதில் சிட்ரிக் அமிலம் இருப்பதால் கண்னாடியை கோக் விட்டு துடைக்க கண்னாடி பளிச் என சுத்தமாகும்

4) சூயிங் கம் அகற்றுதல்: தலைமுடியில் சூயிங்கம் ஒட்டிகொண்டதா? கவலை வேண்டாம். கோக்கை மேலே ஊற்றி சிறிது நேரம் பொறுத்து அகற்ற சூயிங்கம் அகன்றுவிடும்

5) டிஷ் வாஷர்: டிஷ் வாஷிங் டிடர்ஜெண்ட் தீர்ந்துவிட்டதால்? கவலை வேண்டாம். கோக் ஊற்றி பாத்திரஙக்ளை கழுவ பாத்திரங்கள் பளிச் என சுத்தமாகும்

6) துரு அகற்றுதல்: நாள்பட்ட துருவை அகற்ற மேலே கோக் ஊற்றி, அல்லது துணியில் கோக்கை நனைத்து துடைத்தால் பாத்திரத்தில் உள்ள துரு அகன்று பளிச் என இருக்கும்

7) கார் கண்னாடியில் இருக்கும் பனியை அகற்றூதல்: குளிர்காலத்தில் மேலைநாடுகளில் கார் கண்ணாட்டியில் பனி படர்ந்து உறைந்துவிடும்.
அதன் மேல் கோக்கை ஊற்றி கொஞ நேரம் காத்திருந்து துடைத்தால் பனி டக் என அகன்றுவிடும்
ஆக இத்தனை நன்மையளிக்கும் கோக்/பெப்ஸியை எல்லாரும் வாங்கி பலனடைவோம்...

Share me Your Friends

Popular Posts

Facebook

Blog Archive