பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

புதன், 4 ஜூலை, 2018

*சாதி தோன்றிய வரலாற்றை சுருக்கமாக தற்போது பார்ப்போம்*

*நான் படித்த சில செய்திகளை உங்களுக்கு தருகின்றேன். இதை நாம் அனைவரும் படித்தால் மிகவும் நல்லது.*

1. 2000 ஆண்டுகளுக்கு முன் எழுத்தப்பட்ட சங்க இலக்கியங்களை படிக்கும் போது தமிழ் மக்கள் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் யார் என்றால்

1. துடியன்
2. பாணன்
3. பறையன்
4. கடம்பன்

இந்த நான்கு குடிகளைத் தவிர வேறு குடிகள் இல்லை என்று புறநானூறு 335 தெளிவாகக் கூறுகின்றது.

இது தவிற வேறு எந்த சாதி பெயரும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படவில்லை. *தமிழ் மக்கள் அனைவரும் இந்த நான்கிற்குள் அடங்குவர்.*

2. உலக பிரசித்தம் வாய்ந்த சிதம்பரம் நடராஜர் கோவிலின் தலைமை குருவாக இருந்தவர் நந்தனார் என்பவர். இவர் ஒரு பறையர் குடியை சார்ந்தவர். இவர் 63 நாயன்மார்களில் ஒருவர். இவரை ஆரியர்கள் உயிருடன் எரித்துவிட்டு சிதம்பரம் கோயிலை கைப்பற்றினார்.

3. திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் பறையர் குடியை சேர்ந்தவர்.*(ஐரோப்பியர்களின் ஆட்சியில் தமிழக அரசு இத்தகவலை வெளியிட்டது. ஆண்டு 1905. வெளியிட்டவர் W.பிரான்சிஸ் - Civil Service)*

மேற்கண்ட தகவலின்படி பறையர்கள் என்பவர்கள் கீழ்சாதி என்று எப்போதுமே கண்டதில்லை. தமிழகத்தில் கீழ் சாதியென்றும் மேல் சாதியென்றும் ஒருவரும் இருந்ததில்லை.

அப்படியிருக்க எப்படி ஒரு கூட்டம் மேல் சாதியென்றும் மற்றொரு கூட்டம் கீழ் சாதியென்றும் ஆனாது என்னும் கேள்வி எழும்புகின்றது.

*சாதி தோன்றிய வரலாற்றை சுருக்கமாக தற்போது பார்ப்போம்* 


கி.பி.900 பின் ஆரியர்கள் தமிழகத்திற்குள் படையெடுத்து வந்து தமிழகத்தை வென்றனர். இப்படி படையெடுத்து வந்தவர்களை ஒரு கூட்ட மக்கள் அண்டி பிழைத்தனர். ஒரு கூட்ட மக்கள் அமைதி காத்தனர். ஒரு கூட்ட மக்கள் எதிர்த்தனர். ஒரு கூட்ட மக்கள் மலைகளுக்கு ஓடி சென்றனர்.

1. யாரெல்லாம் அண்டி பிழைத்தனரோ அவர்களுக்கு சகல செல்வாக்கு வழங்கப்பட்டது. அவர்கள்தான் இன்றைய உயர்சாதி என்று அழைக்கப்படுகின்றனர்.

2. யாரெல்லாம் அமைதி காத்தனரோ அவர்கள்தான் இன்றைய இடைசாதி என்று அழைக்கப்படுகின்றனர்.

3. யாரெல்லாம் எதிர்த்தார்களோ அவர்களது நிலங்கள் மற்றும் உடைமைகள் பிடுங்கப்பட்டு ஊருக்கு புறம்பே தள்ளப்பட்டனர். அவர்கள்தான் இன்றைய கீழ்சாதி என்று அழைக்கப்படுகின்றவர்கள்.

4. யாரெல்லாம் பயந்து மலைகளுக்கும் காடுகளுக்கும் ஓடினார்களோ அவர்கள் மலைசாதி ஆயினர். (இத்தகவலை சொன்னவர் ராபர்ட் கால்டுவெல் அவர்கள்)

*சாதிப்பிரிவு இப்படிதான் இந்தியாவிற்குள் வந்தது. எதிர்த்தவன் கீழ்சாதியானான். அண்டி பிழைத்தவர்கள் உயர்சாதியானார்கள்.*

கால்ட்வெல் ஐயா அவர்கள் கூறுவது மிகவும் ஏற்றுக்கொள்ளக்கூடியது.

செவ்வாய், 3 ஜூலை, 2018

தமிழர்களின் கண்டுபிடிப்புக்கள் இன்று தமிழர்கள் அறியாமல் அடையாளம் இழந்து கொண்டு உள்ளனர்...

தமிழர்களின் கண்டுபிடிப்புக்கள் இன்று தமிழர்கள் அறியாமல் அடையாளம் இழந்து கொண்டு உள்ளனர்...

தினசரி காலண்டரில் " கெர்போட்ட நிவர்த்தி" என்று ஒரு குறிப்பு கண்டேன். அப்படி என்றால் என்ன? ஏதேனும் விசேட நாளா?.

சிலர் காலண்டரின் பின் பக்கம் என்றைக்கெல்லாம் தமிழகஅரசு விடுமுறைன்னு பாக்கும் போதெல்லாம் *கெர்போட்ட நிவர்த்தி* என்று ஒன்று இருப்பதையும் கவனித்திருப்பீர்கள் .

இது எதும் விசேட தினமோ அல்லது மார்கழி மாத கோவில் திருநாளோ அல்ல.

உண்மையில் தமிழர்கள் அடுத்த வருட மழை கணிப்பு முறை.

அதாவது "கரு ஓட்டம்" என்பதே கர்ப ஓட்டம் என்று மாறி கர்ப்போட்டம் என்றாகி இன்று காலண்டர்களில் கெர்ப்போட்டம் என்று காண்கிறது.

நம்முடைய தமிழகத்தில் சூரியனின் சுழற்சியை மையமாக கொண்ட சூரிய வழி மாதங்கள் பின்பற்ற படுகிறது

இது தவிர வானியல் நட்சத்திரங்களை இருபத்தேழு மண்டலங்களாகவும் பன்னிரு ராசி மண்டலங்களாகவும் பிரித்துள்ளனர்.

அவ்வகையில் தனூர் மாதம் எனப்படும் மார்கழியில் சூரியன் தனூர் ராசி மண்டலத்தை கடக்கும் போது பூராட நட்சித்திரத்தை கடக்க பதினான்கு நாட்களை எடுத்து கொள்கிறது.

இந்நாட்களில் கருமேகங்கள் தெற்கு நோக்கி நகருவதை கண்டு கொள்ளலாம்.

இந்த பதினான்கு நாட்களும் கர்ப்போட்ட நாட்கள் ஆகும்.

அதாவது

மழை கரு கொள்ளும் நாள் அல்லது மேகம் சூல் ஆகும் நாள்.

இதனை பெண்ணின் பத்து மாத கர்ப்ப காலத்துடன் ஒப்பிடுங்கள்.மார்கழியில் கர்ப்பம் தரிக்கும் பெண் ஒருவள்்ஒன்பது மாதம் கழித்து புரட்டாசிக்கு பின் பிள்ளை பெறுவாள்.

அவ்வகையில் இந்த கர்போட்ட நாட்களில் மழை முறையாக சூல் கொண்டால்
ஒன்பது மாதம் கழித்து அடுத்த ஆண்டில் ஐப்பசி கார்த்திகையில் மழை பொழிவு அளவும் முறையாக இருக்கும்.

இந்த கர்போட்ட நாட்கள் தோராயமாக டிசம்பர் 28 முதல் ஐனவரி 11ஆந் தேதி வரை அமைகிறது.

ஒரு எளிய விவசாயிக்கு தனூர் மாதம் பூராடம் நட்சத்திரம் எல்லாம் தெரியாது இல்லையா??.

எனவே மார்கழி மாதம் அமவாசையில் இருந்து அடுத்து வரும் பதினான்கு நாட்கள் "கர்போட்ட நாட்கள்" என்று நினைவில் வைத்து கொள்வார்கள்.

இந்நாட்களில் லேசான தூறல் மெல்லிய சாரல் போன்ற மழை இருந்தால் மேகம் சரியாக கரு கட்டி இருக்கிறது என்று பொருள்.

எனவே வரும் அடுத்த ஆண்டு நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.

மாறாக கர்ப்போட்ட நாட்களில் கன மழை பெய்து சூறைக் காற்று வீசினாலோ கடும் வெயில் இருந்தாலோ மேகத்தின் கரு கலைந்து விட்டது என்று பொருள்.

எனவே மார்கழியில் கன மழை பெய்தால் அடுத்த ஆண்டு பருவ மழை பொய்க்கும் என அர்த்தம்.

இன்றைய வாழ்க்கையின் மாறுபட்ட சூழலியல் கேடுகளும் பருவ நிலை மாற்றமும் மேகத்தின் கருக்கலைக்கும் வில்லன்களாக உருவெடுப்பதால்தான் ஒவ்வொரு வருடமும் மழையளவு குறைகிறது.

இந்த கர்போட்ட நாட்களை கணித்து இன்றும் திருநெல்வேலி பகுதிகளில் விவசாயிகள் தங்கள் நிலங்களில் மானாவாரி (வானம் பார்த்த பயிர் ) பயிர்களை விதைக்கிறார்கள் விவசாயிகள்.

சூரியன்  வடக்கு நோக்கி நகர்வதற்கு.முன்னால் பூமியின் அச்சு அசையாமல் இருக்கும். இதுதான் கர்ப்போட்டம் சங்க கால நூலில் உள்ளது..இந்த காலத்தில் எத்தனை மிமீ மழை எங்கே, எவ்வளவு பதிவு ஆகிறதோ.அதை ஆறு மாத நாள்களால் பெருக்க வேண்டும். உதாரணம் 5மிமீ × 180=900 மிமீ சராசரியாக பெய்யும்..அதற்கு தகுந்தால் போல் நீர் மேலாண்மை செய்வார்கள்.
பயிரை தேர்வு செய்வார்கள்.

நாம் இது பற்றி எல்லாம் தெரியாமல் காலண்டரில் கர்ப்போட்டம் என்று பார்த்ததும் ஏதோ பண்டிகை என்று நினைத்து தேதியை கிழிப்பது போல நம் பாரம்பரியத்தை கிழிக்கிறோம்.

ஆங்கில கல்வியில் நம் பாரம்பரியத்தை இழந்து இன்று மழை வரும் நாட்களை தெரிந்து கொள்ள வானிலை அறிக்கைக்கு டீவியை பார்த்து கொண்டு அமர்ந்து இருக்கிறோம்.

புதுமையின் மோகத்தில் எத்துணை பழமைகளை இழந்து கொண்டிருக்கிறோம் நாம்!!.

ஆராய்ந்து உன் முன்னோரின் யுத்திகளை கையாழு என் தமிழா.

இது போன்ற நுணுக்கங்கங்களை விவசாயிகளுக்கு கற்றுத் தர வேண்டிய நம் தமிழக அரசுக்கு.

இங்கு மெத்த படித்த அறிவியலுக்குதானே அரசு வேலையே !!.

இனியாவது கர்ப ஓட்டத்தை காண்போம்.

காவேரி புஷ்ர விழாவை அடுத்து இந்த மழை 144 ஆண்டுகளுக்கு பிறகு வரப் போகும் தாமிரபரணி புஷ்கர மழை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஆற்றின் மகிமையை போற்றும் தாமிரபரணி புஷ்கர விழாவில் அவசியம் நாம் சந்திப்போம்...நீராடுவோம்.

"என் மக்கள்"
கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்...

தமிழகம் சிறக்க தீரா தாகத்துடன் உங்கள்
T.பாலசுப்ரமணிய ஆதித்தன்

பகிர்வது நம் கடமை.

வெள்ளி, 29 ஜூன், 2018

*பெற்றோரே! விழித்துக் கொள்ளுங்கள்*

*Excellent article by.   Dr.Alok Kar*
தமிழாக்கம்: *அ. மயில்சாமி, தமிழாசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, கண்ணம்பாளையம்*

*பெற்றோரே! விழித்துக் கொள்ளுங்கள்*

பல ஆண்டுகளுக்கு முன்பு, *சாதாரண, படிப்பறிவற்ற பெற்றோர்* தங்கள் குழந்தைகளை
🔹 மருத்துவர்கள்,
🔹 பொறியாளர்கள்,
🔹 அறிவியலாளர்கள்,
🔹 கணக்காளர்கள்,
🔹 வழக்குரைஞர்கள்,
🔹 கட்டிடப் பொறியாளர்கள்,
🔹 தொழிலதிபர்கள் எனப்படும் *Group 'A'* குழந்தைகளை உருவாக்கினார்கள்.

இந்த *Group 'A* குழந்தைகளில் பெரும்பாலும், தொடக்கப் பள்ளியிலிருந்து,தாங்களே போராடி, *மிகப் பெரிய பதவிகளை* அடைந்தனர். அவர்கள்
👉🏾 *வெறுங்காலில் நடந்தனர்*
👉🏾 *காடுகளுக்குச் சென்றனர்*
👉🏾 *தண்ணீர் பிடித்தும், விறகு சேகரித்தும் வேலை செய்தனர்*
👉🏾 *செல்லப் பிராணிகளைக் கவனித்தனர்*
👉🏾 *வாழ்க்கை நடத்த, பள்ளி நேரத்திற்குப் பிறகு வேலை செய்தனர்*

இன்றோ *Group A* பெற்றோர் *Group 'B'* குழந்தைகளை உருவாக்குகின்றனர்.
இந்த *Group B* குழந்தைகளின் பெற்றோர், குழந்தைகள் மீது
🔹 அதிக கவனம் செலுத்துகின்றனர்
🔹 பாலர் பள்ளி முதல், கல்லூரி வரை, அவர்களது வீட்டுப் பாடம், செய்முறைகள் உள்ளிட்ட அனைத்தையும் செய்ய உதவுகின்றனர்.
🔹 குழந்தைகள், அதிகக் கட்டணம் பெறும் பள்ளிக்குச் செல்ல, தனிக் கார், ஓட்டுனர், வெளிநாட்டில் படிப்பு எனப் பல வசதிகளைத் தருகின்றனர்.
🔹 குழந்தைகளால், காலை முதல் இரவு வரை, திரைப்படங்களைப் பார்க்க முடிகிறது.
🔹 குழந்தைகளை, ராஜா, ராணிகளைப் போல, அதிக மதிப்புக் கொடுத்து, வளர்க்கின்றனர்.
🔹 வீட்டில், குழந்தைகள், சிறு வேலைகளைக் கூட செய்வதில்லை.
🔹 உணவு, மேசைக்கு வந்து விடுகிறது.
🔹 சாப்பிட்ட தட்டுகள் கூட பெற்றோராலோ, வேலைக்காரிகளாலோ கழுவப்படுகின்றன.
🔹 விலையுயர்ந்த துணிமணிகள், போக்குவரத்துச் சாதனங்கள் முயற்சியின்றிக் கிடைக்கின்றன.
🔹 *பணம் வீணாகிறதே என்ற கவலையில்லை* !!!.
🔹 பெற்றோர் இத்தனை உதவிகள் செய்தும்
� அவர்களுள் ஒரு சிலரால் மட்டுமே, சரியாகப் *பேசவும்* or *எழுதவும்* முடிகிறது. 😏

� *Group 'A' குழந்தைகள் * தங்கள் பெற்றோரையும் | குழந்தைகளையும்* நன்கு கவனித்துக் கொண்டனர். *Group 'B', பெற்றோர் தங்கள் குழந்தைகள் 30+ வயதைக் கடந்த பிறகும், சொந்தக்காலில் நிற்க வைக்க உதவுகின்றனர்*.‼
� உதவி பெற்றே வளர்ந்த குழந்தைகள் இன்றும் பெற்றோரின் உதவியையே நாடுகின்றனர். தங்களது வேலைகளைத் தாங்களே செய்து கொள்ள இயலாத போது, பெற்றோருக்கும், சமுதாயத்திற்கும் உதவுவது எப்படி?
இறுதிக் காலத்தில், பெற்றோர், தாங்களே வாழ வேண்டியுள்ளது.

😴 *நீங்கள் இதில் எந்த வகை*❓
🏮 தேவையின்றி குழந்தைகளுக்கு வலியச் சென்று உதவாதீர்கள்.
🏮 உங்கள் குழந்தைகள் *அறிவாளியாக, புத்திசாலியாக, பலசாலியாக வளரட்டும்*.
🏮 வாழ்க்கையின் *நிதர்சனம், உண்மைகளை* நேரடியாகச் சந்தித்து *தானாகச் செயல்படும் இளைஞராக வளரட்டும்*
👉🏾 கடினமான நேரங்களை எதிர்கொள்ள
👉🏾 மற்றவர்களை மதிக்க
👉🏾 தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள உதவுங்கள்.
� உங்கள் பெற்றோரால் முறைப்படி  வளர்க்கப்பட்ட நீங்கள், உங்கள் குழந்தைகளையும் *பயனுள்ள* குழந்தைகளாக வளருங்கள்...
💐*மனம் நிறைந்த வாழ்த்துகள்*💐

செவ்வாய், 19 ஜூன், 2018

கருவுற்ற பெண்ணை மாதம் தவறாமல் scan செய்து சோதிப்பது சரியா?

கருவுற்ற பெண்ணை மாதம் தவறாமல் scan செய்து சோதிப்பது என்பது தாய் சேயின் உடல் நலம் குறித்த அக்கறை என்பது பொய், இதன் மூலம்  குழந்தையின் எடையை பெருக்க வைத்து அதன் மூலம் சிசேரியன் செய்து சம்பாதிக்க தான்

கருவுற்ற உடனேயே போலிக் ஆசிட் மாத்திரைகள் மற்றும் இரும்பு கால்சியம் மாத்திரைகளை திணித்தும்  புரதம் தேவை என் புழுகி சோயாபீன்ஸ்லிருந்து எடுக்கப்பட்ட புரதங்களோடு கரு வளர்ப்பு நடைபெருகிறது

பண்ணை கோழிக்கு எடையை கூட்ட என்னவெல்லாம் செய்கிறார்ககளோ அதை அனைத்தும் செய்கிறார்கள் மருத்துவமனையில், ஏதோ சில நிறுவனங்களின்  நன்மைக்காக  35 வாரங்கள் கடப்பதற்கு முன்பாக நான்கு கிலோ வரை எடை கூடியிருக்க வேண்டும் என்பது பன்னாட்டு கம்பெனிககளின் திட்டம் 

அப்போது தான் குழந்தையின் எடை கூடி விட்டது அதனால் சுக பிரசவத்திற்கு வாய்ப்பே இல்லை சிசேரியன் செய்தால் தான் இல்லையென்றால்  ......ஒரு மரண பீதியை உருவாக்கி, நம்முடைய அறியாமையையும் பயத்தையும்  பணமாக்குகின்றனர் மருத்துவமனைகள் .

அதுசரி பிரசவ தேதி குறிப்பதே மிகப்பெரிய பித்தலாட்டம் தான் ஏனெனில் மாதவிலக்கு ஏற்பட்ட தேதியில் இருந்து 285நாளை கணக்கிட்டு நாள் குறிக்கிறார்கள் 

இது தவறு என்பது உலகமறிந்த உண்மை  ஆண் பெண் உறவுக்கு பின் கருவுறுதல் நடக்கும்  ஒரு மாதவிலக்கிற்கும் அடுத்த மாதவிலக்கும் இடைப்பட்ட 25 நாளில் எப்போது வேண்டுமானாலும் கருத்தரித்தல் நடக்கும்  எதை வைத்து மாதவிடாய் நாளை கணக்கில் கொண்டு சிசேரியன் செய்கிறார்கள்

சில கம்பெனிகளின் நன்மைக்காக தாய் சேயின் ஆரோகியம் அவர்களின் வாழ்நாள் முழுவதும் கெடுத்து,குட்டிசுவராக்குகிறார்கள் சிசேரியன் எனும் பயங்கரவாதத்தின் மூலம்

சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு எதிர் காலத்தில் மரபணுக்கள் சார்ந்த நிறைய குறைபாடுகள் ஏற்படுகின்றன என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்

இது நவீன அறிவியல் ஒப்புகொண்ட முக்கியமான விடயமாகும்  உலகின் அதிபயங்கர கிரிமினல் குற்றவாளிகள்  சிசேரியன் மூலம் பிறந்தவர்கள் என்பதை இங்கு கவனத்தில் கொண்டு மரபுவழி சுக பிரசவத்திற்கு முயலுங்கள்..

இது நான் படித்து அறிந்த கருத்துதான்
இதை ஏற்பதும் மறுப்பதும் அவரவர் விருப்பம்

 

வெள்ளைகழிச்சல் வந்தகோழிகலுக்கு தண்னீரை கொதிக்கவைத்து அதில் meriqun இரண்டு சொட்டு ofm ஐந்துசொட்டு 1mlதண்ணீர் கலந்து கொடுத்துதேன் ஒருநாளைக்கு இரண்டு வேலை தொடர்த்து மூன்று கொடுத்தேன் வெள்ளைகழிச்சல் நின்றுவிட்டது

வெள்ளைகழிச்சல் வந்தகோழிகலுக்கு தண்னீரை கொதிக்கவைத்து அதில்   meriqun இரண்டு சொட்டு ofm ஐந்துசொட்டு 1mlதண்ணீர் கலந்து கொடுத்துதேன் ஒருநாளைக்கு இரண்டு வேலை தொடர்த்து மூன்று கொடுத்தேன் வெள்ளைகழிச்சல் நின்றுவிட்டது

BIGG BOSS வரவு செலவு : 👇

BIGG BOSS வரவு செலவு : 👇

விஜய் டிவியில் Bigg Boss நிகழ்ச்சி...

விஜய் டிவியின் வியாபாரம்..

ஸ்டுடியோ செட்டிங் செலவு ₹20 கோடி.

நிகழ்ச்சி ஆங்கர் கமலுக்கு ₹ 20 கோடி.

மற்ற 14 பேருக்கு ₹ 42 கோடி

100 நாள் படப்பிடிப்பு செலவு ₹25 கோடி

முதல் நாள் மற்றும் கடைசி நாள் விழாச் செலவு ₹ 3 கோடி

மொத்த செலவு ₹110 கோடி

இனி வரவு!

விளம்பரம் மட்டும்.

30 வினாடிக்கு ₹ 25 லட்சம்

ஒரு நாளின் மொத்த வியாபார நிமிடங்கள் 25 (x 60 விநாடி = 1500/30 = 50x.25) = ₹12.5 கோடி

100 நாட்களுக்கு வரவு ₹ 1250 கோடி

மொத்த லாபம் =₹ 1140 கோடிகள்

நிறைய பேருக்கு இந்த நிகழ்ச்சிய பத்தி முழுசா தெரிந்திருக்க வாய்ப்பில்ல !!!

ஹிந்தில பல வருஷமா ஓடிட்டு இருக்குர நிகழ்ச்சி இப்போ தமிழ்நாட்டுக்கு வந்திருக்கு !!!

100 நாள்னு சொன்னாலும் அதோட சூட்டிங்க மிஞ்சி போனா பத்தே நாள்ல முடிச்சிடுவாங்க, அத அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேர கணக்குல பிரிச்சு 100 நாளைக்கு ஒளிபரப்புவாங்க !!!

என்னன்ன நடக்கனும் பேசனும்னு எல்லாமே முன்னடியே ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டு தான் சூட்டிங் தொடங்குமே !!!

ஒவ்வொருத்தரா மக்கள் ஓட்டு போட்டு வெளியேத்திட்டு இருப்பாங்க , ஆனா உண்மையிலேயே யாரு வெளியேரனும்னு முடிவு பண்ணிதான் அதுக்கு ஏத்த மாதிரி காட்சிகள் அமைக்க பட்டிருக்கும் !!!

நிறைய சண்டைகள் , மோதல்கள், விவாதம், சச்சரவில் தொடங்கி காதல், கள்ளகாதல், பாலியல் தொல்லைகள் உட்பட நடப்பதுபோல் காட்சிகள் அரங்கேறும் !!!

மக்கள் அதை கண்டு கொதித்தெழுந்து தவறு செய்தவனுக்கு எதிராக ஓட்டு அளித்து வெளியேற்றும்படி நடைபெறும் !!!

சிலர் தாங்கலாகவே உள்ளே இருக்க முடியாமல் கோபத்தில் வெளியேருவது போல் வைத்து TRP ஏற்றுவார்கள் !!!

இளைஞர்களை கவர வீட்டினுள் கவர்ச்சியான அரைகுறை ஆடைகளையே அணிந்து வருவார்கள் நடிகைகள் !!!

ஊரெங்கிலும் இதில் நடைபெறும் சம்பவங்களையே பேசுமாறு வைப்பார்கள் !!!

இறுதியில் அவர்கள் முடிவு செய்த படியே ஒருவரை மக்களே தேர்ந்தெடுத்தது போல் பரிசு வழங்கி அடுத்த சீசனுக்கான வேலைகள் தொடங்கி விடும் !!!

இது எல்லாம் தானாக நடப்பதாக நம்பி இதுவரை அக்கம் பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என பார்த்து வந்த மக்கள் , இனி இந்த வீட்டில் என்ன நடக்கிறது என பார்க்க ஆரம்பித்து விடுவார்கள் , அடுத்த சீசனுக்காக ஏங்கவும் செய்வார்கள் !!!

அடுத்தவர் வீட்டில் நடப்பதை மிகுந்த அக்கறை கொண்டு எட்டி பார்க்கும் நம் மன ஓட்டமே இந்த நிகழ்ச்சியின் உயிர் நாடி !!!

அதை வைத்தே கலாச்சாரத்தை அழித்து காசு பார்க்கும் ஒரு கும்பல் !!!

அதை கிண்டல் செய்கிரேன் என மீம்ஸ் போட்டு மக்களிடையே இன்னும் அதிகமாக பகிர வைக்கும் சில இளைஞர்கள் !!!

முடிந்தால் விழிப்புணர்வு மீம்ஸ் போட்டு மக்களுக்கு புரிய வையுங்கள் !!!

இந்த முறையாவது மீடியா TRP பசிக்கு பலி ஆகாமல் சாமர்த்தியமாக விழித்து கொண்டு... 👍

திங்கள், 11 ஜூன், 2018

பெண்கள் தலையில் பூ வைப்பதால் இவ்வளவு நன்மைகளா...???

பெண்கள் தலையில் பூ வைப்பதால் இவ்வளவு நன்மைகளா...???
.
இனிமே தினமும் வைத்து கொள்ளுங்கள்...!!!
.
உலகம் முழுவதும் 38 ஆயிரம் கோடிக்கு மேல் பூ வகைகள் உள்ளன.

ஆனால் ஆயிரம் கோடிப் பூக்கள் மட்டுமே தற்போதைய நடைமுறையில் உள்ளன.

அதிலும் 500 கோடி பூக்களே மருத்துவத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
.
பெரும்பாலான பூக்கள் மணமூட்டிகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
.
பூக்களைச் சூடும் கால அளவு
.
முல்லைப்பூ - 18 மணி நேரம்
அல்லிப்பூ - 3 நாள்கள் வரை
தாழம்பூ - 5 நாள்கள் வரை
ரோஜாப்பூ - 2 நாள்கள் வரை
மல்லிகைப்பூ - அரை நாள்கள் வரை
செண்பகப்பூ - 15 நாள்கள் வரை
சந்தனப்பூ - 1 நாள்கள் மட்டும்
மகிழம்பூ மற்றும் குருக்கத்திப் பூ - சாப்பிடும்போது மட்டும் சூடிக்கொள்ளலாம்.

மந்தாரைப்பூ, பாதிரிப்பூ, மாசிப்பூ - இந்தப் பூக்களின் வாசம் இருக்கும் வரை மட்டும் சூடிக்கொள்ளலாம்.
.
பூக்களின் பயன்கள்:
.
ரோஜாப்பூ - தலைச்சுற்றல், கண் நோய் போன்றவற்றைக் குணப்படுத்தும்.
.
மல்லிகைப்பூ - மனஅமைதிக்கு உதவும். கண்களுக்குக் குளிர்ச்சி தரும்.
.
செண்பகப்பூ - வாதத்தைக் குணப்படுத்தும். பார்வைத் திறனை மேம்படுத்தும்.
.
பாதிரிப்பூ - காது கோளாறுகளைக் குணப்படுத்தும். செரிமானச் சக்தியை மேம்படுத்தும். காய்ச்சல், கண் எரிச்சல் போன்றவற்றைச் சரிசெய்யும்.
.
செம்பருத்திப் பூ - தலைமுடி தொடர்பான பிரச்னைகளை சரிசெய்யும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்.
.
மகிழம்பூ - தலை சம்பந்தப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்கும். பல் வலி, பல் சொத்தை உள்ளிட்ட பல் குறைபாடுகளை நீக்கும்.
.
வில்வப்பூ - சுவாசத்தைச் சீராக்கும். காச நோயைக் குணப்படுத்தும்.
.
சித்தகத்திப்பூ - தலை வலியைக் குறைக்கும். மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும்.
.
தாழம்பூ - நறுமணம் வீசுவதோடு சீரான தூக்கத்துக்கு உதவும். உடல் சோர்வை நீக்கும்.
.
தாமரைப்பூ - தலை எரிச்சல், தலை சுற்றல் போன்றவற்றைச் சரிசெய்யும். மனஉளைச்சலை நீக்கி மனஅமைதிக்கு வழிவகுக்கும். தூக்கமின்மையை நீக்கி, சீரான தூக்கத்தை ஊக்குவிக்கும்.
.
கனகாம்பரம்பூ - தலை வலி மற்றும் தலை பாரத்தைச் சரிசெய்யும்.
.
தாழம்பூ, மகிழம்பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ செண்பகப்பூ போன்றவை வாதம், கபத்தைக் குறைக்கக் கூடியவை.
.
பூக்களைச் சூடும் முறை:
.
பூக்களைக் காதின் மேல் மற்றும் கீழ் நுனியின் இடைவெளியில் சூடவேண்டும்.
.
உச்சந்தலையிலோ, கழுத்துப் பகுதியிலோ பூக்கள் தொங்கும்படி சூடக் கூடாது.
.
மணமுள்ள பூக்களை வாசனையில்லாதப் பூக்களுடன் சேர்த்துச் சூடக்கூடாது.
அது கூந்தல் வளர்ச்சியைக் குறைக்கும்.
.
ஜாதி மல்லிகைப்பூ, செவ்வந்திப்பூ, குடசப்பாலைப்பூ, பாதிரிப்பூ, மகிழம்பூ, செண்பகப்பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ போன்றவற்றைக் கனகாம்பரத்துடன் சேர்த்துச் சூடினால் மிகவும் நல்லது.
.
மந்தாரை, தாமரை, செவ்வரளி, கருங்குவளைப்பூ போன்றவற்றுடன் கற்பூரத்துடன் சேர்த்துச் சூடினால்
மனம் அமைதி பெற உதவும்.
.
மல்லிகைப்பூவை குளிப்பதற்கு முன் சூட வேண்டும்.
.
முல்லைப்பூ, வில்வப்பூவை
குளித்த பின்பு சூடலாம்.
.
உடலில் எண்ணெய் தேய்க்கும்போது தாழம்பூ சூடலாம்.
.
பூக்களைச் சூடுவதால் ஏற்படும் நன்மைகள்:
.
பூக்களில் உள்ள பிராண ஆற்றல், மூளைச் செல்களால் ஈர்க்கப்பட்டு, நாளமுள்ள மற்றும் நாளமில்லாச் சுரப்பிகளின் சீரான இயக்கத்துக்கு உதவுகிறது.
.
இந்தப் பிராண ஆற்றலானது மனஅழுத்தத்தைக் குறைத்து, மனஅமைதிக்கு உதவுகிறது.
.
தலையில் பூ வைப்பது,
மனமாற்றத்துக்கு உதவும்.
.
ஒரு விஷயத்தைப் பல கோணங்களில் பார்க்கும் தன்மையைக் கொடுக்கும்.
.
மனஅழுத்தத்தால் ஏற்படும் செல் இழப்பைத் தடுக்கிறது.

.
பூவின் மணமானது உடல் செல்களுக்குப் புத்துணர்வை அளிக்கிறது.

மனமாற்றத்துக்கு உதவுகிறது.
.
மனஅழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
மகிழ்ச்சியை உண்டாக்குகிறது.

*சும்மாவா சொன்னாங்க பெரியவங்க பெண்களை  பூவைன்னு*

Popular Posts

Facebook

Blog Archive