பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

வியாழன், 24 ஜனவரி, 2019

90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி?

90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி?

மற்றவர்களைப் போல விதை போட்டு நாற்று வெச்சு மரம் வளர்த்தா எந்தக் காலத்துல நடக்கிறதுன்னு வேகமா வளர்க்கிற வழியைக் கண்டுபிடித்தாராம்.
கிராமங்களில் சாலைகளில் நிறைய மரங்களை நட்டு வருறேன். ஆலமரம், அரச மரம், பூவரசு, அத்திமரம், வாகை மடக்கி போன்ற மரங்களின் கிளையைக் கொண்டு வந்துடுவேன்.
சாக்குப் பையில் செம்மண் மற்றும் கரம்பை மணலோடு இயற்கை உரமான மக்கிய குப்பைகளைக் கலந்து தண்ணீர் ஊற்றி ஊறவிடுவேன்.
அதற்குப் பிறகு 6 அடி உயரமுள்ள மரக்கிளையை அதில் நடுவேன். 14வது நாள் துளிர்க்க ஆரம்பிச்சுடும். 30வது நாள் இலைகள் வந்துடும். 70வது நாள் ஒரு மரம் நடத் தயாராயிடும்.
ஆடு, மாடு, நாற்றைத் தின்னுடும். வெயிலில் காய்ஞ்சுடும்னு கவலையில்லாம ஒரு ஃபாஸ்ட் ஃபுட் மாதிரி ஒரு ஃபாஸ்ட் ட்ரீ ரெடி” என்கிறார் அர்ச்சுனன்.

அரசு கொஞ்சம் உதவினால்… 20 மீட்டர் இடைவெளியில் 700 கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்னை முதல் குமரி வரை நாற்கரச் சாலையில் 35 ஆயிரம் மரங்களை நட்டால் ஒரு மினி காட்டுக்குள் ஏஸிக்குள்ளே தமிழ்நாடே இருக்கும்.

செடி நட்டு, அது மரமாக வளர ஆண்டுக் கணக்காகும். அதனால், மரக்கிளைகளை வெட்டி, நட்டு, மரங்களாக உருவாக்கும் முயற்சி செய்தேன். விதை போட்டு மூன்றாண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகள், மரக்கிளைகளை வெட்டி நட்டால் 90 நாட்களிலேயே மரமாக வளர்ந்து விட்டன. மரக்கிளைகளை வெட்டி நட்ட ஆயிரம் மரங்கள் இராஜவல்லிபுரத்தைச் சுற்றி உள்ளன. இதை என் சொந்தச் செலவிலேயே செய்தேன். மேலும் எங்கள் ஊர் குளத்துக்கரையைச் சுற்றிலும் பனங்கொட்டைகளை சும்மா விதைத்து வைத்தேன். தற்போது சுமார் 2,000 பனைகள் குருத்துவிட ஆரம்பித்துள்ளன.

கடந்த மூன்றாண்டுகளில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கோயில்கள், தனியார் நிறுவனங்களுக்கு 27 ஆயிரம் மரங்களை இலவசமாக வழங்கியுள்ளேன்" என்கிறார் அர்ஜுனன்.

90நாட்களில் மரம் வளர என்ன செய்ய வேண்டும்?

*பெரிய மரத்தின் நடுத்தர அளவு உடைய கிளைகளின் கம்புகளை 6 அடி நீளத்தில் வெட்ட வேண்டும்.

*ஒரு சிமெண்ட் கோணிப்பையில் மண் நிரப்பி வைத்துக்கொண்டு, கம்பின் பச்சைத்தன்மை மாறுவதற்குள் நட்டு விட வேண்டும்.

* கால்நடைகளின் சாணம் போன்ற இயற்கை உரங்களே போதுமானது. குறைந்தளவு நீர் ஊற்றிவர வேண்டும்.

* நடப்பட்ட கம்பை அசைக்கவோ, மாற்றவோ கூடாது. கால்நடைகள் இலையை மேய்ந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்படிப் பராமரித்தால், 30 நாள்களில் தளிர ஆரம்பித்து விடும். 90 நாள்களிலிருந்து நிழல் கொடுக்கிற அளவுக்கு மரம் வளர்ந்துவிடும்.

* வேம்பு, அத்தி, மா, பூவரசு போன்ற தமிழக தட்பவெப்ப நிலைக்கு உகந்த அனைத்து மரங்களையும் இம்முறையைப் பயன்படுத்தி வளர்க்கலாம்.

மரம் தேவைப்படும் கிராம பஞ்சாயத்துகள் விரும்பினால், ஒரு கிராமத்திற்கு 1,000 மரங்கள் வரை இலவசமாகக் கொடுக்கத் தயாராக உள்ளேன். தனிநபர்கள் என்றால், பயிற்சி தர தயாராக உள்ளேன்" என்கிறார் அர்ஜுனன்.

தொடர்புக்கு : திரு.அர்ஜுனன்

அலைபேசி : 97903 95796

வாழ்த்துகள்

இந்த பதிவை எவ்வளவு  குரூப்புக்கு அனுப்ப முடியுமோ அத்தனை பேருக்கும் தெரியப்படுத்துங்கள்.
அன்பு நண்பர்களே  உங்களுக்கு தெரிந்த கிராம நகர பஞ்சாயத்துக்கு  தெரிவிக்க வேண்டுகோள் வைக்கிறேன் நான்  படித்த பதிவில் மிக மிக சிறந்த பதிவு வீணா போன அரசியல் செய்திகளுக்கு நேரத்தை செலவிட்டு என்ன கண்டோம் இது போல நல்ல *செயதிகளை பரப்பி வான் மழை பெறுவோம்
*
*நன்றி*
    🙏🏻🙏🏻🙏🏻

திங்கள், 21 ஜனவரி, 2019

உங்கள் ஊரில் மோசமான தார் சாலையா ....? என்ன செய்ய வேண்டும் ? யாருக்கு புகார் அனுப்ப வேண்டும் ? எப்படி புகார் அனுப்ப வேண்டும் ?. எப்படி எழுதுவது ?

உங்கள் ஊரில் மோசமான தார் சாலையா ....?
என்ன செய்ய வேண்டும் ? யாருக்கு புகார் அனுப்ப வேண்டும் ?
எப்படி புகார் அனுப்ப வேண்டும் ?. எப்படி எழுதுவது ?

அந்த தார் சாலை பற்றிய விபரங்களை உங்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் / வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள பொது தகவல் அலுவலர் /துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (பணிகள் ) அவருக்கு தகவல் அறியும் உரிமை சட்ட விண்ணப்பம் அனுப்பி அந்த தார் சாலை பற்றிய விபரங்களை பெறுங்கள் .,

அதன் பின்  புகார் மனு எழுதுங்கள் ...,

புகார் மனுவில் பொது மக்கள் கையொப்பம் குறைந்தது 10 நபர்கள் கையொப்பம் பெறுங்கள் .,

புகார் மனுவை அனுப்ப வேண்டிய முகவரி.,

மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பதிவு தபால் அனுப்புங்கள் .,

புகார் கொடுப்பதற்கான அடிப்படை காரணங்கள் (GROUNDS OF MAKING COMPLAINT):

          1.  தரமில்லாத தார் சாலையால் பொது மக்கள் மிகவும் பாதிப்பு   
               அடைந்துள்ளனர்
           2.  தரமில்லாத தார் சாலையை போட்ட ஓப்பந்தகாரர் மீது
                நடவடிக்கை எடுக்கவும்.
           3.  தரமில்லாத தார் சாலை அமைக்கும்போது ஆய்வு செய்த 
                மேற்பார்வையாளர்,  சாலை பொறியாளர் ஆகியவர்கள் மீது
                நடவடிக்கை எடுக்கவும்.
           4.  தரமில்லாத தார் சாலையை ஆய்வு  
                வளர்ச்சி (கிராம-ஊராட்சி) அவர்கள் மீது நடவடிக்கை 
                எடுக்கவும்.
            5.  தரமில்லாத தார் சாலையை சீரமைத்து தருமாறு
                 கேட்டுக்கொள்கிறோம்.
             6.  பொது மக்களின் வரி பணத்தை தவறாக பயன்படுத்திய
                 அனைத்து அரசு ஊழியர்கள் மீதும் நடவடிக்கை
                 எடுத்து,அதனை புகார்தாரர் ஆகிய எங்களுக்கு
                 தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்....

புகார் மனுவில் நகல் என்று போட்டு...

1.முதல் அமைச்சர் தனி பிரிவு ,முகவரி.
2.குற்றவியல் விசாரணை முறை சட்டம் 1973 சட்டப்பிரிவு 2(7)இன் கீழ் உங்கள் வட்டத்திற்கு/தாலுக்கா க்கு உட்பட்ட மாஜிஸ்ட்ரேட் அவர்கள் முகவரி.
3.மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ,மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ,முகவரி.
4.வட்டார வளர்ச்சி அலுவலர்,வட்டார வளர்ச்சி அலுவலகம் ,முகவரி.

ஆகியோருக்கும் அனுப்பவும் 

குறிப்பு : நீங்கள் முதலிலேயே தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம்  ஆவணங்கள் / ஆதாரங்கள் பெற்ற பின்..அவைகளையும் இணைத்து புகார் அனுப்புவது கூடுதல் வலு சேர்க்கும்,  அதுவே உசிதமானது .,

தங்கள் பகுதியை ஊழல் இல்லாத ஊராக மாற்ற முதல் படியை எடுத்து வையுங்கள்..வாழ்த்துக்கள்..!!
Akram Khan

ஞாயிறு, 25 நவம்பர், 2018

புயல் எப்படி உருவாகிறது...* *புயல் என்றால் என்ன..*


*புயல் எப்படி உருவாகிறது...*

*புயல் என்றால் என்ன..*

கொஞ்சம் பெரிய பதிவுதான்

புயல் உருவாகும் போதெல்லாம் துறைமுகங்களில் ஒன்றாம் எண், இரண்டாம் எண், மூன்றாம் எண் கூண்டு ஏற்றப்படுவதாக அறிவிக்கிறார்களே, இவை ஒவ்வொன்றும் எதைக் குறிக்கின்றன? இதனால் என்ன பயன்?

முதலில் புயல் என்றால் என்ன? குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை என்றால் என்ன? தாழ்வுநிலை என்றால் என்ன? சுழற்காற்று என்றால் என்ன?

தண்ணீரின் இயல்பு , பள்ளத்தை நோக்கிப் பாய்வது. காற்றின் இயல்பு மேல்நோக்கி எழுவது. வெப்பக் காற்று விரைவாக மேலெழும். ஈரக்காற்று மெல்ல மெல்ல மேல் நோக்கிச் செல்லும். காற்றின் நகர்விற்கு வானிலை ஆய்வாளர்கள் வைத்துள்ள பெயர் சலனம். ஈரக்காற்று வெகு உயரம் செல்லாமல் வானில் தங்கிவிடுவதால் அது தாழ்வுநிலை. அந்தத் தாழ்வுநிலை காரணமாக காற்றின் அழுத்தம் அதிகரித்தால் காற்றழுத்தத் தாழ்வுநிலை.

காற்றழுத்தத் தாழ்வு நிலையின்போது காற்று சாதாரணமாக மணிக்கு 31 கி.மீ. வேகத்தில் வீசும். மணிக்கு 32 கி.மீட்டரிலிருந்து 51 கி.மீ. வரை வீசினால் அதற்கு (காற்று) அழுத்தம் (Depression) என்று பெயர். அதுவே வேகம் அதிகரித்து 52-லிருந்து 61 கி.மீ. வேகத்தில் வீசினால் அது தீவிர அழுத்தம் (Deep Depression). 62.கி.மீட்டரிலிருந்து 88 கி.மீ.வரை வீசினால் புயல் (Cyclonic strom). அதற்கு மேல் கடும்புயல் (89 முதல் 118 கி.மீ.), மிகக் கடும் புயல் (119 முதல் 221 கி.மீ.), சூப்பர் புயல் (222 கி.மீ.க்கு மேல்).

Cyclone என்பது, ‘சுருண்டு கிடக்கும் பாம்பு’ என்பதற்கான கிரேக்க மொழிச் சொல்லில் இருந்து உருவான வார்த்தை.

புயல் வீசும்போது பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாவது கடலோரப் பகுதிகள். குறிப்பாக துறைமுகங்கள். துறைமுகங்களை நோக்கி வரும் படகுகள், கப்பல்கள். கடலில் இருந்து கரையை நோக்கி வருபவர்களை, மீனவர்களை எச்சரிக்க விடுக்கப்படும் ‘சிக்னல்’தான் இந்தக் கூண்டுகள்....
இந்த எச்சரிக்கையைத் தெரிவிக்க, கடலில் இருந்து காண ஏதுவாக, துறைமுகத்தில் ஓர் உயர்ந்த கம்பத்தில் பகல் நேரத்தில் கூண்டுகளையும் இரவு நேரத்தில் சிகப்பு-வெள்ளை விளக்குகளையும் ஏற்றுவார்கள். கொடி ஏற்றினால் காற்றில் கிழிந்துவிட வாய்ப்புண்டு. அதனால் கூண்டு.

இந்த எச்சரிக்கையில் 11 நிலைகள் இருக்கின்றன. நிலைமையின் தீவிரம் அதிகரிக்க அதிகரிக்க… எண்ணிக்கை உயர்ந்துகொண்டு போகும். இந்த நிலைக்கு இந்தக் கூண்டு என்பதை இந்திய வானிலைக் கழகம் தீர்மானித்து வைத்திருக்கிறது.

*புயல் எப்படி உருவாகிறது*

புயல் உருவாவதற்கு முக்கிய காரணம் பூமியின் அமைப்புதான். ஒரு ஆரஞ்சுப்பழம் போன்ற அமைப்புடைய பூமி அதன் அச்சில் நேர் செங்குத்தாக நிற்காமல் ஒருபக்கமாக அதாவது 23 1/2 டிகிரி சாய்ந்து சுற்றுவதால் சூரியனிடமிருந்து வரும் உஷ்ணம் பூமியின் எல்லாப் பரப்பின் மேலும் ஒரே சீராகப்படுவதில்லை. இதன் காரணமாக பூமியின் ஒரு பகுதி அதிக வெப்பமாகவும் இன்னொரு பகுதி குறைவான வெப்பமாகவும் இருக்கும்.

வெப்பம் அதிகமாக உள்ள பகுதிகளில் காற்று விரிவடைந்து மேலே செல்கிறது. அப்போது அந்த இடத்தில் காற்றின் அழுத்தம் குறைந்து ஒரு வெற்றிடம் உண்டாகிறது. அந்த வெற்றிடத்தை நோக்கி காற்றின் அழுத்தம் அதிகமாக உள்ள பகுதியிலிருந்து காற்று வேகமாய் வீச ஆரம்பிக்கிறது. அப்போது பூமியின் சுழற்சியின் காரணமாக காற்று அலைக்கழிக்கப்பட்டு சூறாவளியாக மாறி புயலாய் அதாவது குறைந்த காற்று அழுத்த மண்டலமாக உருவாகிறது.

புயலுக்குப் பெயர் வைப்பது ஏன்

வங்காள விரிகுடாவில் சமீபத்தில் உருவான புயல்களின் பெயர்கள் என்ன தெரியுமா? பைலின், ஹெலன், லெஹர். அடுத்து வரவிருப்பது மடி புயல். இந்தப் பெயர்களுக்கு என்ன அர்த்தம்?

பைலின் (நீலக்கல்), ஹெலன் (பிரகாச ஒளி), லெஹர் (அலை). சரி, புயலுக்குப் பெயர் வைப்பது அவசியமா? இதற்கான விடையைப் பின்னால் பார்ப்போம்.

சாதாரணமாக வெப்பநிலையில் ஏற்படும் மாற்றத்தாலேயே புயல்கள் உருவாகுகின்றன. எப்பொழுதெல்லாம் காற்று சூடாகிறதோ, அது விரிந்து லேசாகிறது. லேசான காற்று மேலே செல்கிறது. அது ஏற்படுத்திய வெற்றிடத்தை நிரப்பக் கனமான குளிர்ந்த காற்று ஓடோடி செல்கிறது. இந்தக் காற்று செல்லும் வேகம் காரணமாகவே புயல்கள் உருவாகுகின்றன.

புயலின் வகைகள்...
புயலின் வேகம், அது ஏற்படுத்தும் விளைவுகளைப் புரிந்துகொள்வதற்கு ஓர் அளவுகோல் தேவை என்று பிரிட்டிஷ் ராணுவ அட்மிரல் சர் பிரான்சிஸ் பீபோர்ட் 19ஆம் நூற்றாண்டில் நினைத்தார். இதையடுத்துப் புயலை வகைப்படுத்த ஓர் அளவுகோலை அவர் உருவாக்கினார்.

இந்த அளவுகோலின்படி பூஜ்யம் என்றால் எதுவுமே அசையாது. 5 என்றால் மிதமான தென்றல் காற்று. 8 என்றால் ஓரளவு புயல் காற்று (Gale), மரக்கிளைகள் ஓடியலாம். 10 என்றால் புயல் காற்று (Strom). 11 தொடங்கி 17 வரையிலான வேகத்தில் வீசும் காற்றுகள் வெப்பமண்டலப் புயல்கள். இவை அனைத்துமே மணிக்கு 74 கி.மீ. வேகத்துக்கு அதிகமாக காற்று வீசுபவை.

அதேநேரம் புயல் என்பது உலகின் பல்வேறு பகு

திகளில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. மேற்கிந்திய தீவுகளில் Hurricane (சூறாவளி), அமெரிக்காவில் Tornado (சுழன்றடிக்கும் சூறாவளி), சீனக் கடற்கரைப் பகுதிகளில் Typoon (சூறாவளிப் புயல்), மேற்கு ஆஸ்திரேலியக் கடற்கரைப் பகுதிகளில் Willy Willy என்று அழைக்கப்படுகிறது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் Cyclone (புயல்) எனப்படுகிறது. இவை அனைத்தும் ஒரே விஷயத்தையே குறிக்கின்றன.

பெயர் சூட்டுதல்

அடுத்ததாக ஒவ்வொரு புயலுக்கும் தனித்தனிப் பெயர் சூட்டுவதன் நோக்கம் என்ன என்பதைப் புரிந்துகொள்வோம். வானிலை ஆய்வாளர்களும், கடல் மாலுமிகளும், பொதுமக்களும் வானிலை எச்சரிக்கையைச் சரியாகப் புரிந்துகொண்டு செயல்படுவதற்கும் ஞாபகத்தில் வைத்துக்கொள்வதற்கும் வசதியாகவே பெயர்கள் கொடுக்கப்படுகின்றன. புயலுக்கு முன்பு பேரழிவு ஆபத்து பற்றிய விழிப்புணர்வு, தயாரிப்பு, மேலாண்மை, பாதிப்பு குறைப்பு நட வடிக்கைகள் போன்றவற்றை மேற்கொள்வதற்குப் புயலின் பெயர்கள் உதவும்.

பெரும்பாலான புயல்கள் ஒரு வாரமோ அல்லது அதற்கு அதிகமான காலத்துக்கோ மையம் கொண்டிருக்கலாம். ஒரே கடற்பகுதியில் ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் அடுத்தடுத்து உருவாகியிருக்கலாம். அல்லது ஒரு புயல் வலுவிழக்கும் நேரத்திலேயே, மற்றொரு புதிய புயல் உருவாகலாம். ஒரு புயல் எங்கு உருவானது, எந்தத் திசையில் வருகிறது என்பதை உடனடியாக அறிவதற்கும், எச்சரிக்கை அடைவதற்கும் வசதியாகத்தான் பெயர் வைக்கும் வழக்கம் உருவானது.

புயலுக்கு எண் கொடுப்பதால் ஏற்படும் குழப்பத்தை, இதன்மூலம் தவிர்க்கலாம். பெயர்கள் சுருக்கமாக இருக்க வேண்டும் என்பதே அடிப்படை விதி.

இரண்டாம் உலகப் போர் காலத்தில் (1939-1945) புயல்களை அடையாளம் காண்பதற்குப் பெண்களின் பெயர்களை வைக்கும் வழக்கத்தை வானிலை ஆய்வாளர்கள் தொடங்கி வைத்தனர். 1953இல் இருந்து அமெரிக்காவிலும் இது தொடர்ந்தது. ஆனால், அழிவை ஏற்படுத்தும் புயல்களுக்குப் பெண்களின் பெயரைச் சூட்டுவதா என்று பெண்ணியவாதிகள் எதிர்க்க ஆரம்பித்த பிறகு, 1978 முதல் ஆண்களின் பெயர்களும் இந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டன..
இந்தியப் பெருங்கடலில்…

வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை 2000ஆம் ஆண்டில் தொடங்கியது. புதுடெல்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம் 2004 செப்டம்பரில் இருந்து புயல்களுக்குப் பெயர் வைக்க 64 பெயர்களைப் பட்டியலிட்டுள்ளது.

வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் இந்தப் பெயர்களை வழங்கியுள்ளன. இதில் இந்தியா கொடுத்து ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட பெயர்கள் அக்னி, ஆகாஷ், பிஜ்லி, ஜல் (நான்கு பூதங்கள்), கடைசியாக லெஹர் (அலை). இன்னும் வரவிருப்பவை மேக், சாஹர், வாயு.

புயல் கூண்டுகள் குறித்த விளக்கம்

புயல் எச்சரிக்கை விடுக்க துறைமுகங்களில் ஏற்றப்படும் புயல் கூண்டுகள் குறித்த விளக்கங்களின் விபரம் பின்வருமாறு :

ஒன்றாம் எண் எச்சரிக்கையால், புயல் உருவாகக்கூடிய வானிலைப் பகுதி ஒன்று ஏற்பட்டுள்ளது என அர்த்தம்.

இரண்டாம் எண், புயல் உருவாகியுள்ளது என்று எச்சரிப்பதற்காக ஏற்றப்படுகிறது.

மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை விடப்படுமானால், திடீர் காற்றோடு மழை பொழியக்கூடிய வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்று பொருள்.

நான்காம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகம் புயல் அச்சுறுத்தலுக்கு ஆளாகலாம் என்பது உள்ளூருக்கான எச்சரிக்கை ஆகும்.

5வது எண் கூண்டு, துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கடப்பதால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படலாம் என்பதற்கான எச்சரிக்கை ஆகும்.

6வது புயல் எச்சரிக்கை விடப்படுமானால், துறைமுகத்தில் புயல் வலது பக்கமாக கரையைக் கடந்து செல்லும் நேரத்தில் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும் என்று பொருள்.

7 ஆம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், கடுமையான வானிலைக்கு துறைமுகம் உட்படக்கூடிய ஆபத்து என்பதற்கான எச்சரிக்கை.

8-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கரையைக் கடப்பதால் கடுமையான வானிலைக்கு உட்படும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.

9-ம் எண் புயல் கூண்டுக்கு, துறைமுகத்தை புயல் வலது பக்கமாக கரையைக் கடந்து செல்லும் நேரத்தில் கடும் புயலினால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும்.

10 ஆம் எண் புயல் எச்சரிக்கை விடப்படுமானால், துறைமுகம் அல்லது அதன் அருகே கடந்து செல்லும் புயலினால், பெரிய அபாயம் ஏற்பட்டிருப்பதாக அர்த்தம்.

11-ம் எண் புயல் எச்சரிக்கைதான் உச்சபட்சமானது. இந்த எச்சரிக்கை விடப்படுகிறது என்றால், வானிலை எச்சரிக்கை மையத்துடனான தகவல் தொடர்பற்றுப் போன நிலையில், மோசமான வானிலையால் கேடு விளையலாம் என்று பொருள்...

நோய்கள் உருவாகும் இடங்கள் ! குணமாகும் இடங்கள் !

நோய்கள் உருவாகும் இடங்கள் !
-------------------------------------------
நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ, நீரோ, காற்றோ கிடையாது.

இதோ

1 - இரசாயன வேளாண்மையில் விளைந்த உணவுப்பொருட்கள்

2 - டீ

3 - காபி

4 - வெள்ளை சர்க்கரை

5 - வெள்ளை சர்க்கரையில் செய்த இனிப்பு.

6 - பாக்கெட் பால்.

7 - பாக்கெட் தயிர்

8 - பாட்டில் நெய்

9 - சீமை மாட்டு பால்

10 - சீமை மாட்டு பால் பொருட்கள்.

11 - பொடி உப்பு

12 - ஐயோடின் உப்பு

13 - அனைத்து ரீபையின்டு ஆயில்

14 - பிராய்லர் கோழி

15 - பிராய்லர் கோழி முட்டை

16 - பட்டை தீட்டிய அரிசி

17 - குக்கர் சோறு

18 - பில்டர் தண்ணீர்

19 - கொதிக்க வைத்த தண்ணீர்

20 - மினரல் வாட்டர்

21 - RO தண்ணீர்

22 - சமையலுக்கு அலுமினிய பாத்திரங்கள்

23 - Non Stick பாத்திரங்கள்

24 - மைக்ரோ ஓவன் அடுப்பு

25 - மின் அடுப்பு

26 - சத்துபானம் என்னும் சாக்கடைகள்

27 - சோப்பு

28 - ஷாம்பு

29 - பற்பசை

30 - Foam படுக்கை மற்றும் இருக்கை

31 - குளிர்பானங்கள்

32 - ஜஸ் கீரீம்கள்

33 - அனைத்து மைதா பொருட்கள்

34 - பேக்கரி பொருட்கள்

35 - சாக்லேட்

36 - Branded மசாலா பொருட்கள்

37 - இரசாயன கொசு விரட்டி

38 - Ac

39 - காற்றோட்டம், வெளிச்சம் இல்லா வீடு.

40 - பிஸ்கட்டுகள்

41 - பன்னாட்டு சிப்ஸ்

42 - புகைப்பழக்கம்

43 - மதுப்பழக்கம்

44 - சுடு நீரில் குளிப்பது

45 - தலைக்கு டை

46 - துரித உணவுகள்

47 - குளிர்பெட்டியில் வைத்த அனைத்து உணவுப்பொருட்கள்

48 - சுவை ஏற்றப்பட்ட பாக்கு மற்றும் புகையிலை பொருட்கள்.

49 - ஆங்கில மருந்துகள்

50 - அலோபதி வைத்திய முறை மற்றும் தடுப்பூசிகள்

51 - உடல் உழைப்பு இல்லாமை

52 - பசிக்காமல் உண்பது

53 - அவசரமாக உண்பது

54 - மெல்லாமல் உண்பது

55 - இடையில் தண்ணீர் குடிப்பது

56 - எண்ணை நீக்கப்பட்ட மிளகு சீரகம் போன்ற நறுமண பொருட்கள்.

57 - 6 மணி நேரத்திற்கு மேல் ஆன மாமிசம்

58 - அறியாமை

59 - சுற்றுச்சூழல் மாசுபாடு

60 - அனைத்திற்கும் மேலாக உங்கள் மனம்

அரசு சொல்வது போல் நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ கிடையாது

மேலே குறிப்பிட்ட தவறான உணவு மற்றும் வாழ்க்கைமுறையில் தான் நோய்கள் உருவாகிறது.

----------------------------------------------

உயிர் பிழைக்க ஒரே வழி

இயற்கைக்கு திரும்புவது மட்டுமே.

குணமாகும் இடங்கள் !
---------------------------------------------
நோய்கள் குணமாகும் இடங்கள் மருந்தோ மருத்துவமனையோ கிடையாது.

இதோ

1 - இயற்கை வழி வேளாண்மையில் விளைந்த உணவுப்பொருட்கள்.

2 - மூலிகை தேனீர்

3 - சுக்கு மல்லி காபி

4 - பனங்கருப்பட்டி

5 - பனங்கற்கண்டு

6 - வெல்லம்

7 - கரும்பு சர்க்கரை

8 - இதில் செய்த இனிப்புகள்

9 - நாட்டு பசும் பால்

10 - நாட்டு பசு தயிர்

11 - நாட்டு பசு நெய்

12 - நாட்டு பசும்பால் பொருட்கள்

13 - இந்துப்பு

14 - கல் உப்பு

15 - மரச்செக்கில் ஆட்டிய எண்ணெய்கள்

16 - நாட்டு கோழி

17 - நாட்டு கோழி முட்டை

18 - பட்டை தீட்டப்படாத அரிசி

19 - வடித்த சோறு

20 - மண் பானையில் ஊற்றி வைத்த நீர்

21 - பச்சை தண்ணீர்

22 - மூன்றடுக்கு சுத்திகரிப்பு மண் பானை நீர்

23 - மழை நீர்

24 - சமையலுக்கு மண் பாண்டங்கள்

25 - இரும்பு பாத்திரங்கள்

26 - விறகு அடுப்பு

27 - பயோ கேஸ் அடுப்பு

28 - சத்துமாவு கலவை

29 - குளியல் பொடி

30 - சிகைக்காய் பொடி

31 - இயற்கை பற்பொடி

32 - இலவம் பஞ்சு படுக்கை மற்றும் இருக்கை

33 - கோரைப்பாய்

34 - பழச்சாறுகள்

35 - நாட்டுபசும்பால் பழ ஐஸ்கிரீம்கள்

36 - சிறுதானியம், அரிசி தின்பண்டங்கள்

37 - கருப்பட்டியில் செய்த சாக்லேட்

38 - வீட்டில் அரைத்த மசாலா பொருட்கள்

39 - இயற்கை கொசு விரட்டி

40 - வீட்டில் மரம், செடி, கொடிகள்

41 - காற்றோட்டம், வெளிச்சம் உள்ள வீடு

42 - நம் நாட்டு சிப்ஸ்கள்

43 - பனங்கல், பதநீர், தென்னங்கல், இளநீர்

44 - குளிர்ந்த நீரில் குளிப்பது

45 - இயற்கை ஹேர் டை

46 - நம் நாட்டு சிற்றுண்டிகள்

47 - மண் பானை குளிரூட்டி

48 - பச்சை கொட்டை பாக்கு

49 - மரபு மருத்துவங்கள்

50 - உடல் உழைப்பு

51 - பசித்து உண்பது

52 - மெதுவாக சுவைத்து உண்பது

53 - மென்று உமிழ்நீர் கலந்து உண்பது

54 - ஆழ்ந்த நிம்மதியான உறக்கம்

55 - இடையில் தண்ணீர் குடிக்காமல் இருப்பது

56 - எண்ணெய் நீக்கப்படாத நறுமணப்பொருட்கள்

57 - உயிர்பிரிந்து 6 மணி நேரத்திற்குள் சமைத்து சாப்பிட்ட மாமிசம்

58 - புத்திகூர்மை

59 - சுற்றுச்சூழல் தூய்மை

60 - அனைத்திற்கும் மேலாக உங்கள் மன அமைதி

நோய்கள் குணமாகும் இடங்கள் மருந்தோ மருத்துவமனையோ கிடையாது

*உங்களின் உணவுமுறைகளும் வாழ்க்கை முறைகளுமே என்பதுதான் நிதர்சனமான உண்மை

அம்மியில் அரைத்த சட்னி ருசி அதிகம்
   - மிக்ஸி வந்தது;

ஆட்டு உரல் மாவு இட்லி ருசி அதிகம்
   - கிரைண்டர் வந்தது;

உலையில் வைத்த சாதம் ருசி அதிகம்
   - குக்கர் வந்தது;

விறகு அடுப்பு சமையல் ருசி அதிகம்
   - கேஸ் அடுப்பு வந்தது;

வீட்டில் செய்த மசாலா ருசி அதிகம்
   - மசாலா பொடி வந்தது;

பானையில் ஊற்றி வைத்த நீர் ருசி அதிகம்
   - பிரிட்ஜ் வந்தது;

மண்ணில் விளையாட்டு மகிழ்ச்சி அதிகம்
   - வீடியோ கேம் வந்தது;

பாட்டி சொன்ன கதையில் உயிர் இருந்தது
   - டி.வி. வந்தது;

     இயற்கையை நம்பியிருந்தால் இன்பமாய் வாழ்ந்திருப்போம்;

     இயந்திரங்களை நம்பியதால் இயந்திரமாகவே வாழ்கிறோம்..

               முடிந்தவரை இயற்கையை சார்ந்து வாழ்வோம்..

மொத்தத்தில் இயற்கை போய் செயற்கை வந்தது;

1. சர்க்கரை நோய் வந்தது

2.:இரத்தகொதிப்பு வந்தது

3. புற்றுநோய் வந்தது

4. மாரடைப்பு வந்தது

5. ஆஸ்த்துமா வந்தது

6. கொழுப்பு வந்தது

7. அல்சர் வந்தது

ஓட்டுக்கு 2000 ரூபாய்? வீட்டுக்கு வந்தது.                          

கெட்டவர்களின் ஆட்சி நாட்டுக்கு வந்தது .                                                        

இவ்வுளவு வந்தும் நமக்கு புத்தி வந்ததா???

படித்து பகிர வேண்டிய தகவல்...

வெள்ளி, 26 அக்டோபர், 2018

இதுதான் மருந்து, புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது

இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து, புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது, ஒருதடவை சொன்னா சொன்னதுதான் ,
இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள், எக்காலத்திலும் உதவும்,

இப்பாடல்
அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது

சித்த மருத்துவர் பாக்கம் தமிழன்
    தமிழ் மருத்துவ அறிவுரைப்பா

மூளைக்கு வல்லாரை
  முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
   எலும்பிற்கு இளம்பிரண்டை

பல்லுக்கு வேலாலன்
  பசிக்குசீ  ரகமிஞ்சி
கல்லீரலுக்கு  கரிசாலை
  காமாலைக்கு கீழாநெல்லி

கண்ணுக்கு நந்தியாவட்டை
  காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
  தோலுக்கு அருகுவேம்பு

நரம்பிற்கு அமுக்குரான்
  நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு  முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி

முகத்திற்கு சந்தனநெய்
  மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு  மருதம்பட்டை
  அம்மைக்கு வேம்புமஞ்சள்

உடலுக்கு  எள்ளெண்ணை
  உணர்ச்சிக்கு  நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
   கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே

கருப்பைக்கு அசோகுபட்டை
  களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
  குரலுக்கு  தேன்மிளகே!

விந்திற்கு ஓரிதழ்தாமரை
  வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு  தாமரைப்பூ
  சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை

 கக்குவானுக்கு வசம்புத்தூள்
  காய்ச்சலுக்கு  நிலவேம்பு                         
விக்கலுக்கு மயிலிறகு
   வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி

நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
  நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ 
   வெட்டைக்கு சிறுசெருப்படையே

தீப்புண்ணா குங்கிலியவெண்ணை
  சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
   நஞ்செதிர்க்க அவரிஎட்டி

குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
    குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
  பெருவயிறுக்கு மூக்கிரட்டை

கக்கலுக்கு  எலுமிச்சைஏலம்
  கழிச்சலுக்கு தயிர்சுண்டை
அக்கிக்கு வெண்பூசனை
  ஆண்மைக்கு பூனைக்காலி

வெண்படைக்கு பூவரசு கார்போகி
   விதைநோயா கழற்சிவிதை
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
  புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு

கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
  கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்குவெங்காரபனிநீர்
  கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே

உடல்பெருக்க உளுந்துஎள்ளு
   உளம்மயக்க கஞ்சாகள்ளு
உடல்இளைக்க தேன்கொள்ளு
   உடல் மறக்க இலங்கநெய்யே

அருந்தமிழர் வாழ்வியலில்
  அன்றாடம்சிறுபிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
  அறிந்தவரை உரைத்தேனே!!

Popular Posts

Facebook

Blog Archive