Vellore | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil: Vellore

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

Vellore லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Vellore லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 1 ஜனவரி, 2020

Tirupattur - திருப்பத்தூர் மாவட்டம்

திருப்பத்தூர் தற்போது வேலூர் மாவட்டத்தில்
அடங்கிய தாலுகா மற்றும் வருவாய்
கோட்டமாக உள்ளது

தமிழ் நாட்டின் சந்தன நகரம் என அழைக்கப்படும்
திருப்பத்தூரில் ஆசியாவின் மிகப்பெரிய
சந்தனமரக் கிடங்கு உள்ளது

1911ல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின்போது 100
ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட ஒரே இடத்தில் சார்
ஆட்சியர் அலுவலகம் ஒருங்கிணைந்த நீதிமன்ற
வளாகம், 
மாவட்ட கல்வி அலுவலகம், மாவட்ட வன
அலுவலகம், 
அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர்
அலுவலகம், உள்ளிட்ட பல்வேறு அரசு
அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

அணைத்து அரசு அலுவலகங்களும் அருகருகே
அமைந்திருப்பது திருப்பத்தூர் நகரின்
தனிச்சிறப்பு ஆகும்

இப்பகுதியில் இயற்க்கை எழில் மிகுந்த ஏலகிரி
ஜலகாம்பறை ஜவ்வாதுமலை உள்ளிட்ட
சுற்றுலா தளங்கள் உள்ளன

இக்கோட்டத்தில் ஆலங்காயம் அருகே உள்ள
வைன்னு பாப்பு தொலைநோக்கி மையம்
ஆசிய அளவில் மிகப்பெரியது ஆகும்

2008 வரை திருப்பத்தூர் ஒரு மக்களவை
தொகுதியாக இருந்து வந்தது. திருப்பத்தூரில் இருந்து வேலூர் 90 கி.மீ
தொலைவிலும் இதனை சார்ந்த மாவட்டத்தின் கடைசி எல்லையில் உள்ள கிராமங்கள் 130 கிலோ மீட்டருக்கும் அதிக தூரத்தில் அமைந்துள்ளது
இதனால் பொதுமக்கள் மாணவர்கள் வணிகர்கள் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள்  திருப்பத்தூரில் இருந்து இரண்டரை மணி
நேரத்திற்கு மேலும் ஜவ்வாது மலை புதுர்நாடு போன்ற மாவட்டத்தின் கடைகோடி  கிராமங்களில் இருந்து 4 மணி நேரத்திற்கு
மேலும் செலவு செய்து தான் மாவட்ட ஆட்சியர்   அலுவலகம் மாவட்ட காவல்துறை  கண்காணிப்பாளர் அலுவலகம் மாவட்ட கருவூலம்
மற்றும் மாவட்ட அரசு வருவாய் துறை  அலுவலகங்களை மிகுந்த சிரமத்துடன் அணுக  வேண்டிய நிலை உள்ளது
இப்பகுதியை சேர்ந்தவர்கள் அவசர
சிகிச்சைக்காக வேலூர் அல்லது தர்மபுரிக்கு
செல்வதற்குள் பலர் உயிரிழக்க நேரிடுகிறது
மாவட்ட தலைநகரம் மிக அதிக தொலைவில்
உள்ளதால் இந்த மாவட்டத்தை நிர்வகிப்பது அரசு
அதிகாரிகளுக்கு மிகவும் சிரமமாக உள்ளது
இந்த பகுதிகளுக்கு அலுவல் நிமித்தம் உயர்
அதிகாரிகள் சென்று வர ஒரு நாளை செலவிட
வேண்டியுள்ளது.


இதனால் மக்கள் நலன் சார்ந்த நிகழ்வுகளில்  கலந்துகொள்ள குறிப்பிட்ட இடத்திற்கு மாவட்ட  ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
மற்றும் பிற அரசு அதிகாரிகள் குறித்த  நேரத்திற்குள் வந்து சேர முடிவதில்லை  இதனால் பொதுமக்கள் அதிகமாக  பாதிக்கப்படுவதோடு மாவட்ட நிர்வாகம்  செயல்பட முடியாத நிலை ஏற்படுகிறது  மேற்கண்ட சூழ்நிலைகள் காரணமாக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக திருப்பத்துரை
தலைமை இடமாக கொண்டு தனி மாவட்டம்  அமைத்திட வேண்டும் என பொதுமக்கள் பட்டதாரி  இளைஞர்கள் வழக்கறிஞர்கள் வணிகர்கள் உள்ளிட்ட  அனைத்து தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்
டு வருகிறது.


தற்போது வேலூர் மாவட்டத்தில் 13 வட்டங்களும்
( புதிதாக அறிவிக்கப்பட்ட பேரணாம்பட்டு,
நெமிலி வட்டங்கள் உட்பட), 843 வருவாய்
கிராமங்களும் 39 இலட்சத்து 36 ஆயிரத்து 331
மக்கள் தொகையும் 6067. ச.கி.மீ பரப்பளவும்
கொண்டு உள்ளது

தமிழ் நாட்டில் மொத்தம் உள்ள 32 மாவட்டங்களில்
வேலூர் மாவட்டம் மக்கள் தொகையில் 3வது
பெரிய மாவட்டமாகவும் பரப்பளவில் 4வது
பெரிய மாவட்டமாகவும் உள்ளது
அரசாணை 279 நாள் 09.06.2013ன் படி புதிய
மாவட்டம் அமைக்க 10இலட்சம் மக்கள் தொகையும்
200 கிராமங்களும் 2500 ச.கி.மீ பரப்பளவு மற்றும் 5
வட்டங்கள் தேவை.
திருப்பத்தூர் கோட்டத்தில் மட்டும் 217 வருவாய்
கிராமங்களும் 12 இலட்சத்து 17 ஆயிரத்து 362
மக்கள் தொகையும் உள்ளது
தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் 5143 ச.கி.மீ
பரப்பளவுடன் 18 இலட்சத்து 79 ஆயிரத்து 809 மக்கள்
தொகை கொண்டுள்ளது இம்மாவட்டத்தில்
புதிதாக பர்கூர்
சூளகிரி ஆகிய 2 வட்டங்கள் உருவாக்கப்பட்டு
ள்ளதால் அங்கு இப்போது 7 வட்டங்கள் உள்ளன
ஒரு மாவட்டத்திற்கு 5 வட்டங்கள் போதுமானது
என்பதால்
7 வட்டங்களை கொண்டுள்ள கிருஷ்ணகிரி
மாவட்டத்திலிருந்து ஊத்தங்கரை வட்டத்தை
பிரித்து திருப்பத்தூர் மாவட்டத்தோடு
இணைக்கலாம்
ஊத்தங்கரையிலிருந்து
கிருஷ்ணகிரி 50 கி.மீ தொலைவிலும்,
திருப்பத்தூர் வெறும் 25 கி.மீ தொலைவிலும்
உள்ளது குறிப்பிடத்தக்கது
திருப்பத்தூர் கோட்டத்தில் உள்ள 4 வட்டங்களோடு
ஒரே ஒரு வட்டத்தை இணைத்தாலே தனி
மாவட்டத்திற்கு தேவையான 2500 ச.கி.மீ
பரப்பளவும் 5 வட்டங்களும் கிடைத்துவிடும்
எனவே திருப்பத்தூர் கோட்டத்தில் உள்ள ஆம்பூர்
வாணியம்பாடி திருப்பத்தூர் நாட்றம்பள்ளி
ஆகிய 4 வட்டங்களுடன் ஊத்தங்கரை அல்லது
பேரணாம்பட்டு இவற்றில் எதாவது ஒரு
வட்டத்தை இணைத்து திருப்பத்தூரை தலைமை
இடமாக கொண்டு தனி மாவட்டத்தை உருவாக்கி,
எங்கள் பகுதி மக்களின் நீண்ட காலமாக உள்ள
நியாயமான கோரிக்கையை பரிசீலித்து உரிய
உத்தரவினை பிறப்பித்திட பொதுமக்கள் சார்பில்
வேண்டுகிறேன்.

ஞாயிறு, 17 நவம்பர், 2019

திருப்பத்தூர் மாவட்டம் - Tirupathur District

Image may contain: plant, text, nature and outdoor



சந்தனமும் , ஜவ்வாதும் மணக்கும் எங்கள்
திருப்பத்தூர் மாவட்டம்.

#திருப்பத்தூர்மாவட்டம்.

பத்து திருத்தலங்களை கொண்ட ஊர் திருப்பத்தூர் (திரு+பத்து+ஊர் )

ஆசியாவிலேயே அதிகம் சந்தனம் விளையும்  ஜவ்வாது மலை காடுகள் உள்ளது எங்கள் திருப்பத்தூர் மாவட்டம்.


ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு படித்த இசுலாமிய கல்லூரி உள்ள வாணியம்பாடி.

ஏழைகளின் ஊட்டி என்று போற்றப்படும் ஏலகிரிமலை இருப்பதும் இங்கேதான்.

உலகத்திலேயே முதன்முதலாக விண்கல் விழுந்து இறந்த மனிதனும் எங்கள்  ஊர் (நாட்றம்பள்ளி  காமராஜ்)  தான்.

உலகநாயகன் கமல்ஹாசன் சினிமாவில் பாடிய முதல் பாடல் எழுதிய ஆம்பூர் அடுத்த மிட்டாளம். நேதாஜி.

500 படங்களுக்கு மேல் சண்டை பயிற்சி அளித்த ஆர்.எஸ்.பாபு பிறந்த ஆம்பூர்.

பிரபல "நாயுடு ஹால் "முதலாளியின் சொந்த ஊர் ஆம்பூர் அடுத்த பள்ளித்தெரு (எ) காந்திநகர்.
 
முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரான.ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மாமியார் ஊர் திருப்பத்தூர்.

நக்ஸலைட்டுகளை அழிப்புப் போரில் 7 போலீசார் இறந்து தமிழ்நாடு காவல்துறைக்கு பெருமையை சேர்த்த திருப்பத்தூர்.

முன்னாள் பாரதப்பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் தன் மகன் பேரரறிவாளனை மீட்க நீதி போராட்டம் நடத்தி வரும் பாசத்தாய் அற்புதம்மாள் வாழ்ந்து வரும் சோலையார்பேட்டை.

கவிக்கோ அப்துல் ரகுமானும், கவியருவி அப்துல் காதரும் பேராசிரியர்களாக பணியாற்றிய வாணியம்பாடி இசுலாமிய கல்லூரி.

தமிழ் வளர்த்த மதுரைக்கும், காரைக்குடிக்கும் போட்டியாக முதல்வர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள், வெளிமாநில ஆளுநர்கள், அயல் நாட்டு அமைச்சர்களை அழைத்து வந்து ஆண்டு தோறும் "முத்தமிழ் மன்றம் விழா "நடத்தி தமிழ் வளர்க்கும் வாணியம்பாடி.

 ராஜ் டி.வி.யில அகடவிகடம் நடத்துற V.L.பாஷ்கர்ராஜ்  எங்க ஊரு வாணியம்பாடிதான்.

நடிகர் சந்தானத்துக்கு அத்தை ஊரும் எங்க  ஆம்பூர்தான்.

குளித்து மகிழவும் , கொண்டாட்டம் போடவும் "ஜலகாம்பாறை " நீர்வீழ்ச்சி.

ஆசியாவின் மிகப்பெரிய வான் தொலைநோக்கி உள்ள ஆலாங்காயம் அடுத்த காவனூர்.

திருக்குறள் தெளிவுரை தந்த டாக்டர்.மு.வரதராசன் பணியாற்றிய திருப்பத்தூர்.

டால்மியாபுரத்தை கல்லக்குடியாக்கும் போராட்டத்தில் கலைஞர்.மு.கருணாநிதியோடு இரயில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்த ஆலாங்காயம் அடுத்த முல்லை சத்தியின் ஊர்.

சொல்லின் செல்வர் ஈ.வி.கே.சம்பத்துக்கும் மாமியார் ஊர் திருப்பத்தூர்.

முன்னாள் தமிழக முதல்வர்கள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சி தலைவி ஜெ.ஜெயலலிதா பெரும்பாலான ஆடைகள் தந்து அழகு பார்த்த எம்.ஜி.நாயுடு பிறந்த ஆம்பூர் அடுத்த பள்ளித்தெரு (எ) காந்திநகர்.

தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி தலைவரான விஜயகாந்த் மனைவி பிரேமலதா படித்த ஆம்பூர்

உலக பெரும் பணக்காரன் புரூனே சுல்தான் வீட்டில் சம்பந்தம் வைத்தவர்கள் ஆம்பூர்க்காரர்கள்.

1000 ஆண்டுகளுக்கு முந்தைய வர்ண பூச்சு ஓவியங்கள் இன்று வரை அழியாமல் காட்சி தரும் ஆம்பூர் அடுத்த மலையாம்பட்டு கிராமத்தில் உள்ள அரும்பாவி மலை என்னும் ஆர்மா மலை.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்திக்கு பிரியாணி செய்து போட விமானத்தில் போய் வந்த பக்காத்தியும் (பிரியாணி செய்பவரை எங்க ஊருல அழகா பக்காத்தினுதான் கூப்பிடுவோம்)  எங்கள் ஆம்பூர்தான்.

உலகின் 100 -க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு காலணிகளை ஏற்றுமதி செய்யும் மாவட்டம்.

தமிழ்நாட்டிலேயே 400 ஆண்டுகளுக்கு முன்னரே கலைமகளாம் சரஸ்வதிக்கு கோவில் கட்டப்பட்ட ஆலயம் உள்ள ஆம்பூர் அடுத்த மிட்டாளம் ஊட்டல் கோவில்.

தனித்தமிழ் இயக்கத்துக்கு தன்னையே அர்ப்பணித்த மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் கொஞ்சம் காலம் பயின்றதும், ஆசிரியராக பணியாற்றியதும் (ஆம்பூர் ) வேலூர் மாவட்டம்.

தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய ரயில் விபத்து நடந்த வாணியம்பாடி.

பிரபல நடிகை லட்சுமியின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்தவர்களும் எங்க ஊர் (ஆம்பூர்) தான்.

அண்மை காலத்தில் அதிகமாய் ஆன்மீக பக்தர்கள் வந்து வணங்கும் ஆம்பூர் ஆஞ்சநேயர் கோவில்.

**அருண்பிரசாத்**

Popular Posts

Facebook

Blog Archive