info | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil: info

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

info லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
info லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 31 மே, 2018

தமிழகத்தில் இருக்கும் அனைவரையும் ஒருவன் மொட்டையடித்த கதை தெரியுமா???

தமிழகத்தில் இருக்கும் அனைவரையும் ஒருவன் மொட்டையடித்த கதை தெரியுமா???
1 சர்க்கரை அதிகமாக சாப்பிடக்கூடாது
2 அயோடின் உப்பு மட்டுமே சாப்பிடவேண்டும்
3 நாள் ஒன்றிற்கு 8 லிட்டர் நீர் குடித்தே ஆகவேண்டும்
4 இரண்டு தேக்கரண்டி எண்ணையை தினமும் குடித்தால் உடலுக்கு நல்லது
5. ஆயில் புல்லிங்
6. காம்பிளான் குடித்தால் வளரலாம்
7. ஹார்லிக்ஸ் ஆக்குமே பிள்ளைகளை ஸ்ட்ராங்கா ஹைக்டா சார்பா
8. கிளினிக் பிளஸ் கூந்தலை ஆக்கிடுமே அடர்த்தியா
9. பூஸ்ட் இஸ் த சீக்ரட் ஆஃப் மை எனர்ஜி
10. 2 நிமிடத்தில் சமைத்திடுங்கள் நூடுல்ஸ்
வீட்டில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டிகளில் ஓடும் பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பரங்களினால் ஒருவர் நம்மை எளிமையாக ஏமாற்ற முடியுமென்றால் உயர்நிலைப்பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்று நாம் கல்வி பயல்வதால் என்ன பயன் ????
நமது ஊரில் விளையும் நிலக்கடலையை உண்டால் ஆண்மைக்குறைபாடு ஏற்படும் என சில வருடங்களுக்கு முன் செய்திகள் வெளியாயின
அதன் பிறகு நிலக்கடலை மோகம் நம்மைவிட்டு பிரிந்துசென்றது அதனை தொடர்ந்து பாதாம் பிஸ்தா என வாங்கி உண்டோம்
அந்த இடைவெளியில் கடலைகள் நம் ஊரில் அதிகமாக தேங்க இதுதான் சமையம் என்று ஒட்டுமொத்தமாக உலகின் மிகப்பெரிய சாக்லேட் நிறுவனம் அதை குறைந்த விலைக்கு அள்ளிச்சென்றது
பின்விளைவு
பாதாம் பிஸ்த்தா பதித்த சாக்லேட்டுக்கு பதில் வெளிநாடுகளில் நிலக்கடலைகள் பதித்த சாக்லேட்டுகள் அமோக விற்பனையாக தொடங்கியது ஏனென்றால் அவர்களுக்கு தெரியும் நிலக்கடலை உடலுக்கு மிகவும் உகந்ததென்று
சில வருடங்களுக்கு முன் அரிசியை அதிகளவு உண்பதால் நம் உடலின் சர்க்கரை அளவு அதிகமாகிறது என்ற தகவல் பரவி அது அனைவரையும் அரிசியை அதிகம் உண்ணவிடாமல் செய்தது அதற்கு மாறாக நாம் கோதுமை உணவை அதிகம் எடுத்துக்கொண்டோம்
பின்விளைவு
அதிக விலைக்கு பன்னாட்டு நிறுவனங்களால் மேலை நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்பட்ட்து
உணமையாக நமது உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் உணவு எது தெரியுமா மைதா
சச்சின் கூறினார் என்று பூஸ்ட் வாங்கினோம் ஆனால் அதில் நாம் விளைவிக்கும் மக்காச்சோளமும் கேப்பையும்தான் இருக்கிறது என்பதை அறியாமல்
டோனி கூறினார் என்று பெப்சி குடித்தோம் இன்று இளநீரின் எல்லாம் மருத்துவகுணங்களை அறிந்தவன் கைக்கு கிடைத்துக்கொண்டிருக்கிறது
இப்படியே ஒவ்வொன்றையும் இழந்துகொண்டிருக்கிறோம் நாம் ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்று உணராமல்
இன்னும் கொஞ்ச நாட்கள் சினிமாவிலும் கிரிக்கெட்டிலும் மூழ்கி விடுங்கள் நாளை நீங்கள் உங்களையே இழந்துவிடுவீர்கள்
இறுதியாக ஒன்றே ஒன்றை கூறிக்கொள்கிறேன்
மதுக்கடைகள் அதிகரிப்பது மட்டும் தீங்கு அல்ல
மருத்துவமனைகள் அதிகரிப்பதும் தீங்கின் அடையாளம்தான் ..

யார் ஏழை ❓❓❓

யார் ஏழை  ❓❓❓

🔰ஒரு பணக்கார அம்மா துணி கடைக்குப் போய்_கடைக்காரரிடம் எனது மகனுக்கு திருமணம்' ஆகவே எனது வீட்டில் வேலைசெய்யும் பணிப்பெண்ணிற்கு கொடுக்க மிக குறைந்த விலையில் ஒரு சேலை கொடுங்கள் என்று வாங்கிச் செல்கிறார்..❗

🔰சற்று நேரத்திற்கு பிறகு அதே கடைக்கு அந்த வீட்டு பணிப்பெண்
வருகிறார் கடைக்காரரிடம் என் முதலாலியின் பையனுக்கு கல்யாணம் அதனால் எனது முதலாளி அம்மாவுக்கு பரிசாக கொடுப்பதற்கு உங்க கடையில் மிக உயர்ந்த விலையுடைய சேலைகளை எடுத்துப்போடுங்கள் என்று பார்த்து மிக உயர்ந்த விலையுடைய ஒரு சேலையை வாங்கிச் செல்கிறார்..❗

♻இதில் யார்_பணக்காரர்...❓❗

🔰3'ஸ்டார் 🏬ஹோட்டலில் தங்கி இருக்கும் சுற்றுலாவிற்கு வந்த ஒரு பணக்காரவீட்டு 6 மாத குழந்தையின் அம்மா,

🏬ஹோட்டல் மேலாளரிடம் குழந்தைக்கு ஒரு கப் பால் 🍼வேண்டும் என்று கேட்கிறார்,

அதற்கு அந்த மேலாளர் 🍼பாலுக்கு நீங்கள் தணியாக 💶பணம் செலுத்த வேண்டும் என்று கூற ,
பணக்கார அம்மாவும் 💶பணத்தை செலுத்தி 🍼பாலை வாங்கி குழந்தைக்கு ஊட்டுகிறார்...❗

🔰ஒருநாள் சுற்றிப் பார்த்தவிட்டு 🏬ஹோட்டலுக்கு திரும்பும் வழியில் குழந்தை பசியால் அழுததால் ,
ரோட்டின் ஓரத்தில் இருந்த டீ கடையில் ஒரு கப் 🍼பால் வாங்கி குழந்தைக்கு ஊட்டினார் பிறகு 🍼பால் எவ்வளவு
என்று டீ கடைக்காரரிடம் கேட்க,

டீ கடைக்கார பெரியவர் குழந்தைக்கு கொடுக்கும் பாலுக்கு நாங்கள் 💶காசு வாங்குவதில்லை எனறு சிரித்த முகத்தோடு பதில் அளித்தார்...❗

பணம்💶 உள்ளவர் எல்லாம் பணக்காரர் அல்ல ......❗❗
அதை கொடுக்க நினைப்பனே உண்மையான பணக்காரன்....❗❗

இந்த உலகத்தில் நிறைய நல்ல மனிதர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள் ,.....
நம் 👀கண்களுக்கு தென்படவில்லை என்றாலும் பரவாயில்லை நாம் அவர்களில் ஒருவராக இருக்க முயற்சி செய்வோம்.....❗❗

தொடக்கம் நாமாக இருப்போமே...❗❗
பொதுநலம் என்பது புல்லாங்குழல் போன்றது. சுயநலம் என்பது ⚽கால்பந்து போன்றது. இவை இரண்டுமே காற்றால் இயங்குகின்றன.ஆனால் ஒன்று முத்தமிடப்படுகின்றது. மற்றொன்று உதைக்கப் படுகின்றது. தான் வாங்கிய காற்றை சுயமாக வைத்துக் கொள்வதால் கால்பந்து உதை படுகிறது. ஆனால் தான் வாங்கிய காற்றை இசையாக புல்லாங்குழல் தருவதால் அது முத்தமிடப் படுகிறது.

சுயநலம் உள்ள மனிதன் புறக்கனிக்கப் படுவான். பொதுநலம் உள்ளவன் போற்றப் படுவான்.
👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽
பிடித்திருந்தால் நீங்களும் உங்கள் நண்பர்களுக்கு பகிரலாம்.🌠👌🏽உண்மையில்நல்லசெய்தி👍பகிரலாம்பணக்காரர்கள் மனம்மாற.🙏🏾

வெள்ளி, 25 மே, 2018

குற்றவாளி கூண்டில் நீதிபதியைய் தள்ளி சரமாறியாக கேள்வி கேட்ட சிறுவன்..!

ஒரே ஒரு ஹெல்மெட்தானே போடச்சொன்னாங்க……?அதுக்கு இவ்ளோ கோவமா?

உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்
வேட்டையாடும்
காவல்துறையின் கண்டிப்பு
மேலும் விரிவடைய விரும்புகிறேன்.

பஸ்ஸில் பயணம் செய்ய 55 பேருக்கு
மட்டுமே license தரப்படுகின்றது. ஆனால்
சராசரியாக 110 பேர்வரை திணிக்கப்படுகின்றனர். படிக்கட்டில் மட்டும் 18
பேர் தொங்கவிடப்படுகின்றனர்.

ரயிலில் ஒருபெட்டிக்கு 72 பேர்தான்.
ஆனால் பயணம்..?

3. ஒவ்வொரு பத்திரப்பதிவு அலுவலகத்திலும்
லஞ்சம் கொடுக்காமல் வேலை
முடியுமா?

4. ஓவர் லோடு கேஸ் போட்டால் லாரிபஸ்
ஒருநாள் கூட ஓடாது.

5. Share Auto வில் 22 பேரை ஏத்தறாங்க.
தடுக்கலாமே?

6. அரசு cable tv கட்டணம் 70 ரூபாய். கேள்வி
கேட்டா படம் தெரியுமா மக்களுக்கு.
தடுக்கலாமே?

7. Point to point Lss Express அடடா.
கட்டணக்கொள்ளையை இரண்டே நாளில் அரசு
தடுக்கலாமே?

8. ஸ்டாம்ப் பேப்பர் 20% அதிகவிலை. ஒரு நாள் போதுமே. தடுத்து விடலாம். பாவம் அப்பாவி பொதுமக்கள்.

9.பஸ்ஸுல 2ரூபாய் சில்லறை வாங்காம இறங்கக் கூடாதுன்னு தூங்காமயே வர்றான் பொது ஜனம்.

10. 30 ரூபாய் டிக்கெட் 90ரூபாய். online book செஞ்சா மேலும் ரூபாய்20. Cyber Crime ல கேஸ் போடலாமா தியேட்டர்காரன்
மேல?
———————————————
எப்படிப்பட்ட கேப்மாரித்தனம் /
மொள்ளமாரித்தனம் !?!
ஹெல்மெட் அணியாவிட்டால் ஆவணங்கள்
அனைத்தும் பறிமுதல் செய்யபடுமாம் …
ஊழல் செய்து சிக்கிய மந்திரிகளின்
சொத்துக்களை/ஆவணங்களை பறிமுதல்
செய்ய மாட்டார்கள் …

பல மாடி கட்டிடங்கள் இடிந்து பல பேர்
பலியாகினாலும் கட்டுவதற்கு உரிமம்
கொடுத்த அதிகாரிகளின் ஆவணங்களை
பறிமுதல் செய்ய மாட்டார்கள் ..

தவறான மருத்துவத்தால் பல பேர்
பலியாகியும் மருத்துவம் கொடுத்த
மருத்துவர்களின் சான்றிதழ்களை பறிமுதல்
செய்ய மாட்டார்கள் …

ஆற்று மணலை கொள்ளையடிப்பதற்கு
உடந்தையாக செயல்படும் வருவாய்த்துறை
அதிகாரிகளின் பதவிகளை பிடுங்கமாட்டார்கள் ….

மலைகளே காணாமல் போகும் அளவிற்கு
கணிமவள கொள்ளைக்கு உடந்தையாக இருந்த
அதிகாரிகளின் சான்றிதழ்களை பறிமுதல்
செய்யமாட்டார்கள் …

“மறந்து வீட்டில் விட்டுவிட்டு போய்விடும்
ஹெல்மெட்டுக்காக உங்கள் இருசக்கர
வாகனத்தின் ஆவணங்கள் பறிமுதல்
செய்யப்படுமாம்” …

கேணப்பய ஊர்ல கிறுக்குப்பய நாட்டாமை
பண்ணாணாம்…!

ஹெல்மட் விஷயத்தில் கடுமையாக நெருக்கடி கொடுக்கும் நீதியரசர்களே காவல்துறையினரே!


உங்களிடம் சாமானிய மக்களில் ஒருவனாக சில கேள்விகள் கேட்க ஆசைப்படுகிறேன்!

ஹெல்மெட் அணியாமல் வந்த கிட்டத்தட்ட 1,40,000 பேர் வரை வழக்கு பதிவுசெய்து வாகனங்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் அலைய வைத்துக் கொண்டு இருக்கிறீர்களே. …

புகை பிடித்தால் மரணம் நிச்சயம் என்று தெரிந்தும் அதில் கருகிய நுரையீரல் படத்தை மட்டும் போட்டு விட்டு விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது சரியா. …

குடிப்பழக்கம் உயிருக்கும், வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு என்று அச்சிட்டு விட்டு அதை அரசாங்கமே விற்பனை செய்வது நியாயமா….

நீங்கள் தீர்த்து வைக்க வேண்டிய கோடிக்கணக்கான வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது சாமானிய மக்களை வாட்டி வதைக்கும் இந்த வழக்குகள் அவசியம்தானா. ….

தமிழகத்தில் உள்ள அனைத்து சாலைகளும் தரமானதாக உள்ளது என்று உங்களால் உத்தரவாதம் அளிக்க முடியுமா….

நீதிபதிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு பத்து நாட்களுக்கு ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்களில் வலம் வந்து
ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தி காட்டமுடியுமா.

ஹெல்மெட் என்பது அவசியம் தான் இல்லையென்று மறுக்க முடியாது. ..
அது நெடுந்தூர பயணங்களில் நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு பொருந்தும்..

20 – 30 கி.மீ வேகத்தில் செல்லும் நகரவாசிகளை ஏதோ குற்றவாளிகளை பிடிப்பதுபோல் விரட்டி விரட்டி பிடிப்பதுதான் உங்களுடைய விருப்பமா…

சமீபத்தில் ஹெல்மட் அணியாத ஒருத்தரை ஒரு காவலர் விரட்டி அந்த இருசக்கர ஓட்டுநர் விபத்தில் சிக்கி பலியானார்…

இந்த சட்டம் அமலுக்கு வந்த பின் இதுவரை ஹெல்மெட் அணிந்தும் முப்பதுக்குமமேற்பட்டவர்கள் சாலை விபத்தில் பலியாகி உள்ளார்களே அதற்கு என்ன விளக்கம் தரப்போகிறீர்கள். .

சாலை விதிமுறைகளை பற்றிய தகவல்களை பள்ளிகளிலும்
கல்லூரிகளிலும் கட்டாய பாடமாக கொண்டு வந்து விழிப்புணர்வை ஏற்படுத்தலாமே…

ஹெல்மெட்_அணிவதால். …
சிலருக்கு வியர்வை, அலர்ஜி, தலைவலி, முடி கொட்டுதல்,தலையில் புண் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. ..

கொலை,கொள்ளை,வழிப்பறி செய்யும் சமூக விரோதிகளுக்கு சாதகமாக அமைகிறது…

ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை மட்டும் வலியுறுத்தி விட்டு போகலாமே…

மீத்தேன் ஹை கார்பன் நீயூட்ரினோ இவையெல்லாம் எதற்காக .?

வண்டி ஓட்டுபவர்களுக்கு இல்லாத அக்கறை உங்களுக்கு ஏன். …

இப்பொழுது சொல்லுங்கள்
ஹெல்மெட் அணிவதை நீங்கள் கட்டாயப்படுத்துவது எந்த வகையில் நியாயம்….

இந்த பதிவை ஏற்றுக்கொள்பவர்கள்
முடிந்த அளவுக்கு ஷேர் பண்ணுங்கள்..!

சனி, 30 ஜூலை, 2016

Hack செய்யப்பட்ட Facebook கணக்கை திரும்பப் பெறுவது எப்படி…???


Facebook தளத்தின் அறிவிப்பின் படி ஒரு நாளைக்கு சராசரியாக 600,000 Hacking முயற்சிகள் நடக்கிறதாம். நீங்கள் எவ்வளவு கடினமான கடவுச்சொல் வைத்திருந்தாலும் இப்பொழுது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் சுலபமாக கடவுச் சொல்லை திருடி கணக்கை முடக்கி விடுகின்றனர். அப்படி Facebook கணக்கை முடக்கிவிட்டால் எப்படி மீட்பது என பார்ப்போம்.

இதற்கு Facebookல் ஒரு வசதி கொடுத்து உள்ளனர். அந்த வசதியின் மூலம் சுலபமாக hack செய்யப்பட கணக்கை திரும்பப் பெறலாம். நீங்கள் Facebookல் இருந்தால் signout கொடுத்து வெளியேறுங்கள். பிறகு இந்த லிங்கில் https://www.facebook.com/hacked  செல்லுங்கள். உங்களுக்கு ஒரு window வரும். அந்த windowவில் உள்ள My Account Is Compromised என்ற பட்டனை click செய்யவும். உங்களுக்கு அடுத்த window open ஆகும். அந்த windowவில் உங்கள் கணக்கை திரும்ப பெற பல வசதிகள்(email, mobile number, friends name) இருக்கும். அதில் உங்களுக்கு எந்த வழியில் வேண்டுமோ அந்த வழியை தேர்வு செய்து கொள்ளுங்கள். (இங்கு எப்படி ஈமெயில் மூலம் மீட்பது என பார்ப்போம்).
மின்னஞ்சல் முகவரியை கொடுத்த பின்னர் கீழே உள்ள Search என்ற பட்டனை அழுத்துங்கள்.

அடுத்து உங்களுக்கு இன்னொரு window open ஆகும். நீங்கள் கொடுத்த மின்னஞ்சல் முகவரியில் உள்ள facebook கணக்கை காட்டும்.உங்கள் கணக்கில் கடைசியாக இருந்த கடவுச் சொல்லை அந்த இடத்தில் கொடுக்கவும். கடவுச் சொல்லை கொடுத்தவுடன் கீழே உள்ள Continue என்ற பட்டனை அழுத்தவும். அடுத்த window open ஆகும். அதில் உள்ள Send Codes and Login to Gmail என்ற பட்டனை அழுத்தவும்.

உங்களுக்கு இன்னொரு Pop-up window open ஆகும். அதில் இந்த ஜிமெயிலின் முகவரி மற்றும் கடவுச் சொல் கேட்கும் அதை சரியாக கொடுத்த பின்னர் ஜிமெயிலின் அனுமதி கேட்கும் அதில் Allow கொடுத்து விட்டால் போதும் உங்களுக்கு ஒரு window வரும். இப்பொழுது புதிய கடவுச் சொல்லை தெரிவு செய்து கொண்டு கீழே உள்ள Change Password என்பதை கொடுத்து விட்டால் போதும் உங்களின் கணக்கு திரும்ப பெறப்படும். இனி நீங்கள் உங்கள் facebook கணக்கை எப்பொழுதும் போல உபயோகிக்கலாம்.

Android N - ஆன்ராயிடு என் 7.0 இயங்குதளத்தின் பெயர் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது.

இன்று ஸ்மார்ட் போன் பாவனையாளர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபல்யமாக பேசப்படும் ஒரு விடயம், பிரிஸ்மா போட்டோ செயலி. அடுத்தவர் கண்களை கவரும் வண்ணத்தில் எமது போட்டோகளை உண்மையான ஓவியம் போலவே மாற்றும் இந்த செயலி அதிகாரபூர்வமாக ஐபோன் பாவனையாளர்களுக்கு மட்டும் வெளியாகி உள்ளது. அனைத்து ஸ்மார்ட் போன் பாவனையாளர்களையும் கவர்ந்திருக்கும் இந்த ப்ரிஸ்மா அப்ஸ் தரும் ஓவிய எபெக்ட்-ஐ இப்போது உங்களது ஆன்ராயிடு போனிலும் பெற்றுக்கொள்ள முடியும். ஆன்ராயிடு ப்ரிஸ்மா செயலியை பெற்றுக்கொண்டு உங்களது போட்டோக்களையும் அழகிய ஓவியம் போல மாற்றிடுங்கள்.

ஸ்மார்ட் போன் பாவனையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமாக காணப்படும் ஒரு இயங்குதளமாக ஆன்ராயிடு இயங்குதளம் காணப்படுகின்றது. இன்று சந்தைக்கு அறிமுகமாகி நியாயமான விலையில் கிடைக்கக்கூடிய பெரும்பாலான ஸ்மார்ட் போன்கள் ஆன்ராயிடு இயங்குதளத்தினுடனேயே வெளிவருவது நாம் யாவரும் அறிந்த விடயமே.

அந்த வகையில் ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பாவனையாளர்கள் மத்தியில் கடந்த சில மாதங்களாக பரவலாக பேசப்பட்ட ஒரு விடயம் தான் ஆன்ராயிடு 7.0 இயங்குதளம்.

ஆன்ராயிடு இயங்குதளத்தின் அடுத்த பதிப்பிட்கான டிவிலப் வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போது இது குறித்தான அதிகாரபூர்வ செய்தியை கூகுள் வெளியிட்டு இருந்தது.


ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பாவனையாளர்கள் மத்தியில் வைரலாக பரவிய இந்த செய்தியில் கூகுள் சிறியதொரு விளையாட்டையும் சேர்த்திருந்தது. அதாவது ஆன்ராயிடு இயங்குதளத்தின் அடுத்த பதிப்பின் பெயர் N எழுத்தில் தான் அமையும் என்றும் உலகம் முழுதிலும் உள்ள ஆன்ராயிடு பாவனையாளர்கள் N எழுத்தில் ஆரம்பிக்கும் எந்தவொரு இனிப்பு பண்டத்தின் பெயரையும் பரிந்துரைக்கலாம் என்று தெரிவித்து இருந்தது.

இதை தொடர்ந்து உலகம் முழுதிலும் உள்ள கோடிக்கணக்கான ஆன்ராயிடு பாவனையாளர்களால் பல்வேறு பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டது. அவற்றிலே ஆன்ராயிடு இயங்குதளம் 7.0-வின் புதிய பெயராக 'நாடெல்லா' எனப்படும் பெயர் வைக்கப்படும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்த அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது கூகுள் நிறுவனம் ஆன்ராயிடு 7.0 இயங்குதளத்தின் புதிய பெயரை அதிகாரபூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதாவது ஆன்ராயிடு நகட் (7.0) என்பதாகும்.


ஆன்ராயிடு நகட் இயங்குதளத்திட்கு உங்களது போனை அப்டேட்  செய்வது எப்படி?

ஆன்ராயிடு நகட்-இன் முழுமையான பதிப்பு அதிகாரபூர்வமாக இன்னும் வெளிவராத போதிலும் கூகுள் நிறுவனம் ஆன்ராயிடு நகட் இயங்குதளத்தின் டிவளப்பர் பதிப்பை ஏற்கனவே வெளியிட்டு இருந்தது.

டிவளர் பதிப்பாக வெளியிடப்பட்ட ஆன்ராயிடு என் நகட் இயங்குதளத்தை உங்களது போனுக்கு டவுன்லோடு  செய்வது எப்படி என்ற பதிவொன்று எமது தளத்தில் ஏற்கனவே எழுதப்பட்டு இருந்தது. அந்த பதிவை கீழே வழங்கப்பட்டிருக்கும் லிங்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

ஆன்ராயிடு நகட் 7.0 இயங்குதளம் பற்றிய மேலதிக செய்திகளை எமது தளத்தில் எதிர்பாருங்கள்.

Share this

வெள்ளி, 24 ஜூன், 2016

How to Download YouTube and other 1000 websits - YouTube உட்பட 10000 இற்கும் மேற்பட்ட தளங்களிலிருந்து வீடியோ கோப்புக்களை தரவிறக்க உதவும் இலவச மென்பொருள்

ஒவ்வொரு மாதமும் 1 பில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களைக் கொண்டதும் பல லட்சக் கணக்கான வீடியோ கோப்புக்களை தன்னகமாக கொண்டதுமான ஒரு மிகப்பெரிய இணையதளமே YouTube ஆகும்.
Youtube tamilinfotech
அந்த வகையில் இன்று சமூக வலைதளங்களிலும் ஏனைய இணையதளங்களிலும் பகிரப்படும் ஏராளமான வீடியோ கோப்புக்கள் YouTube தளத்தில் சேமிக்கப் பட்டவையாகவே இருக்கின்றன.

அவ்வாறு பகிரப்படும் வீடியோ கோப்புக்கள் வெறும் திரைப்படங்கள், பாடல்கள், போன்ற சினிமா துறை சார்ந்தவை மட்டுமின்றி சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பயனளிக்கக் கூடிய விதத்திலும் ஏராளமான வீடியோ கோப்புக்களை கொண்டுள்ளமை மறுப்பதற்கு இல்லை. எனவே எதனை தெரிவு செய்ய வேண்டும் என்பது அவரவர் கைகளில் உள்ளது.
எது எப்படியோ YouTube தளத்தில் இருக்கக் கூடிய வீடியோ கோப்புக்களை நேரடியாக தரவிறக்கிக் கொள்வதற்கான வசதி குறிப்பிட்ட தளத்தில் வழங்கப்படவில்லை. இருந்தாலும் சில மென்பொருள்களை பயன்படுத்தி அல்லது சில இணைய தளங்களின் உதவியுடன் அந்த வீடியோ கோப்புக்களை எம்மால் தரவிறக்கிக் கொள்ள முடியும்.


இதற்கு என ஏராளமான மென்பொருள்கள் இருந்தாலும் அவற்றுள் பெருபாலானவைகள் வரையறுக்கப்பட்ட வசதிகளையே தருகின்றது அத்துடன் முழுமையான பதிப்பை பயன்படுத்த கட்டணம் செலுத்தும் படியும் கேட்கலாம்.

இருப்பினும் Freemake Video Downloader எனும் மென்பொருளானது YouTube வீடியோ கோப்புக்களை மிக வேகமாக தரவிறக்கிக் கொள்ள உதவுவதுடன் YouTube தளம் மட்டுமின்றி இன்னும் பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட தளங்களில் சேமிக்கப்பட்டுள்ள வீடியோ கோப்புக்களை தரவிறக்கிக் கொள்ள உதவுகின்றது.


video downloader tamilinfotech

  • இந்த மென்பொருளானது எவ்வித வரையறையும் இன்றி முற்றிலும் இலவசமாகவே தரவிறக்கி பயன்படுத்திக் கொள்ளக் கூடியதாகும்.
  • இது இலவசம் என்பதால் இதிலுள்ள வசதிகளில் எதுவும் குறைபாடுகளை கொண்டது அல்ல.  இது கட்டண மென்பொருள்களுக்கு ஈடான அதே வசதிகளை அதன் பயனர்களுக்கு வழங்குகின்றது.
  • குறிப்பிட்ட மென்பொருள் மூலம் நீங்கள் தரவிறக்கும் அதே நேரத்தில் அவற்றினை உங்கள் Android அல்லது iOS சாதனங்களுக்கு ஏற்ற வகையில் அதன் வடிவத்தை மாற்றி அமைத்துக் கொள்ள முடிவதுடன்  AVI, MP4, MKV, WMV, 3GP, MP3 போன்ற ஏனைய வடிவங்களுக்கும் மாற்றியமைத்துக் கொள்ள முடியும்.

இவைகள் தவிர இன்னும் பல வசதிகளை தரும் முற்றிலும் இலவசமான இந்த மென்பொருளை நீங்களும் தரவிறக்கி பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.





How to send facebook Messenger sms on mobile பேஸ்புக் மெசெஞ்சர் மூலம் குறுஞ்செய்திகளை (SMS) அனுப்புவதும் பெறுவதும் எப்படி?

ஆரம்பத்தில் பேஸ்புக் செயலி மூலமே நண்பர்களுடன் அரட்டையடிக்கவும் (Chatting) முடிந்தது.

என்றாலும் தற்பொழுது பேஸ்புக் மெசெஞ்சர் வேறு பேஸ்புக் செயலி வேறு என இரு வேறாக அதன் சேவைகளை வழங்கி வருகிறது.



அந்தவகையில் பேஸ்புக் மெசெஞ்சர் சேவையானது வெறும் அரட்டை அடிப்பதற்கு மாத்திரமின்றி காலநிலை தகவல்களை அறிந்துகொள்வது உட்பட இன்னும் ஏராளமான பல வசதிகளை பெற்றுக்கொள்ள உதவுகிறது.
தற்பொழுது பேஸ்புக் மெசெஞ்சர் மூலமே குறுஞ்செய்திகளை நிர்வகிப்பதற்கான வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வசதியை நீங்களும் பெற்றுக்கொள்ள விரும்பினால் கீலே வழங்கப்பட்டுள்ள இணைப்பு மூலம் பேஸ்புக் மெசெஞ்சர் செயலியை புதிய பதிப்பிற்கு மேம்படுத்திக்கொள்க.

பின்னர் பேஸ்புக் மெசெஞ்சர் செயலியின் அமைப்புகளுக்கான பகுதியில் SMS என்பதை தெரிவு செய்து Default SMS app என்பதை செயற்படுத்திக் கொள்க.
அவ்வளவு தான்.
இனி உங்கள் ஸ்மார்ட்போனுக்கு வரும் அனைத்து குறுஞ்செய்திகளையும் பேஸ்புக் மெசெஞ்சர் மூலமே நிர்வகிக்கலாம்.
பேஸ்புக் நண்பர்களுடன் நீங்கள் மேற்கொள்ளும் அரட்டைகளை வழமை போல் அடையாளம் காண முடிவதுடன் குறுஞ்செய்திகளை இலகுவாக அடையாளம் காண்பதற்கு அவைகள் ஊதா நிறத்தால் அடையாளப்படுத்தி தரப்பட்டுள்ளன.
மேலும் உங்களுக்கு புதிய குறுஞ்செய்திகள் கிடைக்கும் போது அவற்றை Chat Heads வசதி மூலமும் அறிந்து கொள்ளலாம்.
பேஸ்புக் மெசெஞ்சர் செயலியை புதிய பதிப்பிற்கு மாற்றிய பின்னரும் குறுஞ்செய்திகளை பேஸ்புக் மெசெஞ்சர் மூலம் பெற முடியாவிட்டால் உங்கள் ஸ்மார்ட்போனில் செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று General > Default Application எனும் பகுதியின் ஊடாக Messages என்பதை தெரிவு செய்து பேஸ்புக் மெசெஞ்சர் செயலியை தெரிவு செய்க.




FaceBook
Do you Like Share To Social Networks

Like My Page : 

Computer Tips & Tricks




 Hello Friends......
Subscribe The Channel : Tech & Funny Videos:


வியாழன், 26 மே, 2016

Memory Card உங்களது மெமரி கார்ட் போனில் Detect ஆகவில்லையா ? சரி செய்வது எப்படி?

ஸ்மார்ட் போன்களில் பாவிக்கப்படும் மெமரி கார்டுகள் எமக்கு பல்வேறு அளவுகளில் கிடைக்கிறது. பொதுவாக ஸ்மார்ட் போன் பாவனையாளர்கள் அனைவருமே தங்களுடைய ஸ்மார்ட் போனில் மெமரி கார்டு ஒன்றை நிறுவி இருக்கிறோம். எம்முடைய போனுடன் வரும் குறிப்பிட்ட அளவு மெமரியால் எம்முடைய அனைத்து தரவுகளையும் சேமித்து வைக்க முடியாது. ஆகவே பல்வேறு அளவுகளில் கிடைக்க கூட இந்த மெமரி கார்டு-களானது எம்முடைய தேவையை சரிவர நிறைவேற்றிக்கொள்ள முடிகிறது.

இவ்வாறு எமது ஸ்மார்ட் போனில் முக்கிய பங்கை வகிக்கும் இந்த மெமரி கார்டு-கள் பற்றியது தான் இன்றைய பதிவு.

சில வேளைகளில் எம்முடைய ஸ்மார்ட் போனில் குறிப்பிட்ட ஒரு மெமரி கார்டு-ஐ நிறுவும் போது குறிப்பிட்ட மெமரி கார்டு-ஐ ஸ்மார்ட் போனால் கண்டுபிடித்து கொள்ள முடியவில்லை என்ற பிழைச்செய்தி வரும்.

இவ்வாறு உங்களுடைய மெமரி கார்டு-ஐ ஸ்மார்ட் போன் Detect செய்ய முடியாத சந்தர்ப்பமொன்றில் எப்படி மெமரி கார்டு-ஐ சரி செய்து மறுபடியும் ஸ்மார்ட் போனில் எந்த பிரச்சினையும் இல்லாமல் வேலை செய்ய வைப்பது என்று பார்ப்போம்.


உங்களுடைய ஸ்மார்ட் போனை Off செய்து மெமரி கார்டு -ஐ போனில் இருந்து அகற்றுங்கள்.

இப்போது மெமரி கார்டு-ஐ கார்ட் ரீடர் ஒன்றின் மூலம் கணனியுடன் இணையுங்கள்.

உங்களது மெமரி கார்டு ரீடர் உங்களது கணனியில் தோன்றும் வரை காத்திருங்கள்.

மெமரி கார்டு-ஐ கணணி ஏற்றுக்கொண்டதும் My Computer-இற்கு சென்று மெமரி கார்டு-க்கான எழுத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

மெமரி கார்டு-ஐ கணனியில் இருந்து திறக்க முயற்ச்சிக்க வேண்டாம்.

அடுத்து உங்களது கணனியில் CMD-யை ஆரம்பியுங்கள்.

அதிலே கீழே காட்டி இருப்பது போல் டைப் செய்யுங்கள்.
chkdsk h: /r


உங்களுடைய மெமரி கார்டு-இன் எழுத்து, h என்பதுடன் replace செய்யப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

டைப் செய்த பின்னர் Enter பட்டன்-ஐ அழுத்துங்கள்.
இப்போது உங்களது மெமரி கார்டு -இல் Error செய்திகளை திருத்துவதட்கான ஸ்கேன் நடைபெறும்.

ஸ்கேன் முடிவடையும் வரை பொறுத்திருங்கள்.

Add caption

ஸ்கேன் முடிவடைந்த பின்னர் உங்களது மெமரி கார்டு-ஐ கணனியில் இருந்து அகற்றி மறுபடியும் உங்களது ஸ்மார்ட் போனில் நிறுவி பாருங்கள். இப்போது உங்களுடைய மெமரி கார்டு ஆனது எந்த விதமான பிரச்சினையும் இல்லாமல் ஸ்மார்ட் போனில் வேலை செய்யும்.

எமது பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது நண்பர்களுடன் சமூக வலைத்தளங்களின் ஊடாக பகிர்ந்து கொள்ளுங்கள்.

English Blog  ══►
▂ ▄ ▅ ▆ ▇ █ Please Visit:  www.masinfom.blogspot.com  █ ▇ ▆ ▅ ▄ ▂

புதன், 4 மே, 2016

ஆதார் கார்டை பயன்படுத்தி புது சிம் வாங்கினால் கட்டணம் குறைப்பு

ஆதார் கார்டு பயன்படுத்தினால், புது சிம் இணைப்பிற்கான கட்டணம் குறைக்கப்படும் என்று தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய (TRAI) தலைவர் சர்மா அறிவித்துள்ளார்.


 

 
ஆதார் அட்டையைப் முகவரிச் சான்றிதழாகப் பயன் படுத்தி புது சிம் காட்டு வாங்கினால் அதற்கான கட்டணம் கணிசமாக குறைக்கப்படும் என்று தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய தலைவர் ஆர்.எஸ்.சர்மா கூறியுள்ளார்.
 
அதன்படி, மின்னணு KYC அடிப்படையில் ஆதார் அட்டையை டிஜிட்டல் அங்கீகாரமாக செயல்பட நடைமுறை படுத்தப்படுத்தப்பட்டால் , அதன் அடிப்படையில் புது சிம் கார்டு இணைப்பிற்கான கட்டணம் பூஜ்யமாக குறைக்கப்படும் என்று சர்மா தெரிவித்துள்ளார்.
 
இந்த முறையை தொலைத் தொடர்புத் துறையிடம் பரிந்துரை செய்துள்ளதாகவும், அதை அவர்கள் வெளிப்படையாக ஏற்றுக் கொண்டதாகவும் சர்மா கூறியுள்ளார். 
 
இதற்கான விதிமுறைகளை அரசு முடிவுசெய்த பிறகு, புதிய சிம்கார்டிற்கான இணைப்பைப் பெற, ஆதார் அட்டை பயோ மெட்ரிக் தகவல் மூலம் அடையாள சரிபார்பு உடனடியாக செயல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.
 
பாக்கிஸ்தானில் அனைத்து சிம் கார்டையும் அங்கீகரிக்க, பயோ மெட்ரிக் பயன்படுத்த முடிவு செய்து கடந்த ஆண்டே அதற்கான திட்டத்தையும் பூர்த்தி செய்துவிட்டது என்று சர்மா குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

LPG மான்யம் வேண்டாமென்று … பிரதமருக்கு விட்டுக் கொடுத்து விடலாமா ?

கொஞ்ச நாட்களுக்கு முன்பெல்லாம், சமையல் வாயு
சிலிண்டர் தீர்ந்தவுடன், அடுத்ததற்கு பதிவு செய்ய போன்
செய்தால், எடுத்தவுடன் -“நான் நரேந்திர மோடி பேசுகிறேன்” என்று ஒரு குரல் ஆரம்பித்து ( இந்தியில் தான்…!)

நீங்கள் அரசு கொடுக்கும் சமையல் வாயுவுக்கான மான்யத்தை விட்டுக் கொடுத்து இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு
உதவலாமே ” – என்கிற வகையில் ஒரு லெக்சர் வரும்….!
(நாம் அழைப்பதால், போன் செலவு நம்முடையது தானே…! )

சில நாட்களுக்கு முன் பிரதமர் ஒரு சம்மேளனத்தில்
பேசும்போது ” இதுவரை 2.8 லட்சம் பேர் தங்களுக்கான
மான்யத்தை விட்டுக் கொடுத்திருக்கிறார்கள். இதனால்
நூறு கோடி ரூபாய் மிச்சமாகும். இது இந்த நாட்டின்
ஏழைகளுக்கான வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவும்.
இன்னும் அதிகம் பேர் ” மான்யத்தை தியாகம் செய்ய ”
முன் வரவேண்டும்” என்றார்.

சம்சாரி ஒருவர் இது குறித்து விலாவாரியாக
விவரித்து ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.
“நான் ஏன் என் LPG மான்யத்தை விட்டுக் கொடுக்க மாட்டேன்”
என்று தலைப்பிட்டு ஆங்கிலத்தில் அந்த கடிதம்
அமைந்திருக்கிறது…. ஒரு நண்பர் அதை எனக்கு அனுப்பி
வைத்து இது குறித்து நீங்களும் எழுதுங்களேன்
என்று கேட்டிருக்கிறார்…

அந்த கடிதம் ஏற்படுத்திய தூண்டுதலில்
அதில் அவர் குறிப்பிடும் சில முக்கிய விஷயங்களையும்
உள்ளடக்கி கீழே நான் எழுதி இருக்கிறேன்….

————-

எங்கள் மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களுக்கு –

சமையல் எரிவாயு மான்யத்தை நான் விட்டுக் கொடுக்க
முன்வர வேண்டுமென்று,
வேலை மெனக்கெட்டு,
என் போனிலேயே,
என் செலவிலேயே – வேண்டி, விரும்பி
கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்….!
மகிழ்ச்சியோடு நானும் இதற்கு ஒப்புக்கொள்வேன்…
ஆனால் அதற்கு முன் கீழ்க்கண்ட விஷயங்கள்
நடைபெற்றால் தேவலை….!!!

– நாட்டின் சாதாரண குடிமகன் இதைச் செய்வதற்கு முன் –
இந்த நாட்டை வழிநடத்திச் செல்லும் அரசியல்வாதிகளும்,
அத்தனை அமைச்சர்களும், சட்டமன்ற, பாராளுமன்ற
உறுப்பினர்களும், முதலில் தங்கள் மான்யத்தை விட்டுக்
கொடுப்பதாக அறிவிக்கச் செய்ய முடியுமா …?

– உங்களில் முக்கால்வாசிப் பேர்கள் தேர்தலில்
போட்டியிடும் நேரத்தில், உங்கள் சொத்து விவரத்தை
அறிவித்திருக்கிறீர்கள்.
அதில் உள்ள கோடீஸ்வரர்கள் அனைவரும் – தங்களுக்கு
சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் என்கிற முறையில்
கிடைக்கும் சலுகைகளை விட்டுக் கொடுப்பதாக
அறிவிக்கச் செய்ய முடியுமா …?

– சட்டமன்ற, பாராளுமன்ற – கூட்டங்களில் அநேக
பிரச்சினைகளில் – எதிரும் புதிருமாக நின்று
அடித்துக் கொள்ளும் நீங்கள் அனைவருமே,
அதெப்படி உங்களது சம்பளம், படி, சலுகைகளை
உயர்த்தி மசோதாக்கள் வரும்போது மட்டும்- ஒருமித்த
குரலில் ஒன்றுபட்டு – உடனடியாக விவாதமே இன்றி
நிறைவேற்றி கொள்கிறீர்கள் …?

– கட்சி அடிப்படையில் நாட்டின் பிரச்சினைகளை
விவாதிப்பதை விட்டு விட்டு, மக்களுக்கு எது நன்மை-
எது தீமை என்கிற கோணத்தில் உருப்படியாக நீங்கள்
விவாதிப்பதை நாங்கள் என்று காண்பது …?

– வளம் பெற்ற நாடான ஜெர்மனியின் சான்ஸ்லர் திருமதி
ஏஞ்சலா மெர்கெல் -தன் அலுவலகத்திற்கு பணிக்குச்
செல்லும்போது பொதுமக்கள் பயன்படுத்தும்
சாதாரண ரயிலில் செல்லும்போது –

– கோடிக்கணக்கான மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே
வாழும் இந்த இந்தியத் திருநாட்டில், அரசியல்வாதிகளான,
அமைச்சர்களான, சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களான
நீங்கள் மட்டும், அரசாங்க செலவில் தனித்தனியே ஒன்றுக்கு மேற்பட்ட கார்களை வைத்துக்கொண்டு பயணிப்பது எப்படி …?

– உங்கள் சொந்த வசதி, சௌகரியங்களுக்காக செலவழிக்கப்படும்
ஒவ்வொரு பைசாவும், இந்த நாட்டின் குடிமக்கள் செலுத்தும்
வரியிலிருந்து தான் எடுக்கப்படுகிறது என்பது உங்கள்
நினைவிற்கு வருவதே இல்லையா …?

– நீங்கள் ஒவ்வொருவரும் பயன்படுத்தும்
தொலைபேசிகளுக்காக –
உபயோகப்படுத்தும் மின் வசதிகளுக்காக –
குடும்பத்தோடு தங்கும் சொகுசு பங்களாக்களுக்காக –
இந்தியா முழுவதும் விமானத்திலும், ரயிலிலும்
பயணப்படுவதற்காக – உருப்படியான
வேலை எதுவும் இல்லாமல்,
சும்மாவே ஊர்சுற்றிப்பார்க்க நீங்கள் மேற்கொள்ளும்
வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக –

-எத்தனை கோடி ரூபாய்களை நாங்கள் வரியாகக்
கொடுக்கிறோம் என்பதை என்றாவது நீங்கள் நினைத்துப்
பார்த்திருக்கிறீர்களா ?

– உங்கள் சொந்த சௌகரியங்களுக்காக ஆகும் இந்த
செலவுகளை எல்லாம் நீங்களே ஏற்றுக் கொள்ளும்
சுபதினம் என்றாவது வருமென்று குடிமக்களாகிய நாங்கள்
எதிர்பார்க்கலாமா …?
– மிகச் சாதாரண தலைவலி, வயிற்று வலிகளுக்கெல்லாம் கூட,
நட்சத்திர வசதிகள் நிரம்பப்பெற்ற உயர் மருத்துவ மனைகளில்
தங்கி மருத்துவ உதவி பெறுகிறீர்களே…. உங்கள் சக இந்தியர்கள் எத்தனை பேர் சரியான மருத்துவ உதவி கிடைக்காமல்
தினமும் செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை என்றாவது
நீங்கள் எல்லாம் நினைத்துப் பார்த்தது உண்டா …?
– இந்த வசதிகளை எல்லாம் நீங்கள் உங்கள் சொந்தக்காசில்
செய்துக்
கொள்ளும் நா
ள் என்றாவது வருமா…. ?

– அப்படி என்ன தங்கள் உயிருக்கு ஆபத்து வந்துவிடுமென்று
இத்தனை பூனைப்படைகளையும், துப்பாக்கி ஏந்திய
சிப்பாய்களையும் துணைக்கு வைத்துக்கொண்டு Z என்றும்
Z+ என்றும் சொல்லிக் கொண்டு உங்கள் மந்திரிகள் ?திரிகிறார்கள் ?
தினமும் உங்கள் கூட படாடோபத்திற்காக துணைக்கு வரும்
பூனைப்படை, யானைப்படை – எல்லாவற்றிற்கும் கொடுக்கும்
சம்பளப்பணம் – எங்கள் வரியிலிருந்து வருவது தானே ?

– இந்த நாட்டையே பாதுகாக்க வேண்டிய பொறுப்பில்
இருக்கும் – உங்களை பாதுகாக்க நாங்கள் செலவழிக்க
வேண்டியிருக்கும் இந்த பரிதாப நிலை என்று மாறும் …?

– சம்பாதிப்பது ஒரு வேளை சாப்பாட்டிற்கே பற்றாமல்
எத்தனையோ ஏழைக் குடும்பங்கள் இந்த நாட்டின்
நடைபாதைகளில் பட்டினியோடு படுத்துத் தூங்கும்போது –

– உங்களுக்கு ஏன் பாராளுமன்ற கேண்டீன்களில்
மலிவு விலையில் உணவுப் பொருட்கள் …?
ஒரு கப் டீ ஒரு ரூபாய்க்கும்,
ஒரு சாப்பாடு 12 ரூபாய்க்கும்
எந்த குடிமகனுக்கும் இந்த நாட்டில் கிடைப்பதில்லையே….
கோடீஸ்வரர்களான உங்களிடம் கொடுக்க காசில்லையே
என்றா இந்த மலிவு விலை ….?

– உங்களின் இந்த மலிவு விலை சோற்றுக்கு கூட –
அன்றாடங்காய்ச்சியான இந்த நாட்டின் குடிமகன் தான்
காசு கொடுக்கிறான் என்பது உங்கள் மனசாட்சியை
என்றுமே உருத்தவில்லையா ?

– நாங்கள் செலுத்தும் வரிகள் எத்தனையெத்தனை …
Income tax,
Service Tax,
Professional Tax,
Value Added Tax,
Wealth Tax,
Corporation Tax,
Automobile Registration Tax and Property Tax –

சம்பாதிப்பதில் பாதியை வரியாகப் பிடித்துக் கொள்ளும்
இந்த அரசு நிர்வாகம் உங்களுக்கு மட்டும் எல்லாவற்றிலும்
விலக்கு கொடுத்திருப்பது உங்களுக்கு உறுத்தவில்லையா …?
உங்களுக்கும் சேர்த்து தானே, எங்களிடம் வசூல்
செய்யப்படுகிறது…?

உங்களுக்கு, நீங்களே இயற்றிக்கொண்ட சட்டங்கள் மூலம்
கிடைத்துள்ள அத்தனை சலுகைகளையும் விட்டுக் கொடுத்து
இந்த நாட்டின் கௌரவமுள்ள குடிமகனாக நீங்கள்
எல்லாம் மாறும் நாள் வருமா …?

– இந்த நாட்டை நேர்மையாகவும், பொறுப்புடனும்
நிர்வாகம் செய்வதற்கென்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
நீங்கள் அனைவரும் – என்றைக்கு,
உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொண்டுள்ள
இந்த சலுகைகள் அத்தனையையும் விட்டுக் கொடுக்கிறீர்களோ –
அன்றைக்கு நிச்சயம் குடிமக்களாகிய நாங்கள் அனைவரும்
எங்கள் சமையல் எரிவாயு மான்யத்தை –
நீங்கள் கோராமலேயே நாங்கள் அனைவரும் அவசியம்  விட்டுக் கொடுப்போம்…!!!

Popular Posts

Facebook

Blog Archive