மௌனம் - Silence
மௌனம்
மௌனம் பாதுகாப்பானது
என்று நினைத்து கொண்டு
பலரும் தங்களை தாங்களே
சிறை வைத்து கொள்கிறார்கள்
பேசும் சக்தியையும்
பேசும் மொழியையும்
இறைவன் தந்தது
மௌனமாய் இருப்பதற்கா
மௌனமாய் பக்தியையோ பாசத்தையோ
காட்ட முடியாது
அன்பு வெறுப்பது
மௌனத்தை மட்டும் தான்
ஒரு குழ்ந்தையை மௌனமாக
எப்படி கொஞ்சுவது
மௌனத்தால்
நீதியை எப்படி
நிலை நாட்டுவது
மௌனம் தனிமைக்கு உகந்தது
அந்த ஊமை நிலையை
உறவாடும் இடத்தில்
உட்கார வைக்காதீர்கள்
பாலைவனத்தில் தான்
மௌனம் பாய்விரித்து படுத்திருக்கும்
அழகிருக்கும் இடங்களில் எல்லாம்
ஓசை ஆலோலம் பாடி இருக்கும்
பேசுவதினால்
பிரச்சினைகள்
பெரிதாவதாக பிதற்றாதீர்கள்
அது பேசத் தெரியாமல்
பேசவதினால் ஏற்படும் பின்னடைவு
பேசா விட்டால்
பிரச்சினைகள்
புரையோடும் நிறைவேறாது
இதழ்களை பூட்டி வைத்து
இதயத்தை இருட்டாக்காதீர்
மௌனம் மனதில் எடை ஏறச் செய்யும்
பேச்சொன்றே சகலத்திற்கும்
விடைகானச் செய்யும்
உதடுகளை உடைத்து
உள்ளத்தில் இருப்பதை கொட்டுங்கள்
கொண்ட வேண்டிய இடத்தில்
உள்ளம் பஞ்சாகும்
இல்லை நஞ்சாகும்🎈🧸🎈
Amazing facts in tamil, facts in tamil, Interesting facts in tamil, kavithai, Silence, Tamil Awareness, tamil poem