Amazing facts in tamil | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil: Amazing facts in tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

Amazing facts in tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Amazing facts in tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 9 மார்ச், 2022

Vaccine - தடுப்பூசி -Tamil

தடுப்பூசி போட்டு தான் புற்றுநோய் வந்தது என்று கூறி பல அமெரிக்கர்கள் அரசாங்கத்தை எதிர்த்து நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர்ந்தனர்!!

இந்த அந்த விசாரணை பல ஆண்டுகள் நடைபெற்றது இறுதியாக 1985இல் அரசின் தவறு நிரூபிக்கப்பட்டு அரசு ஒப்புக்கொண்டது!! மன்னிப்பு கோரியது!!

பலரின் உயிர்காக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையில் ஏற்பட்ட சிறு பிழையாம்!!

 தாமதமாக ஒப்புக்கொண்ட நோக்கம் வழக்கு தொடர்ந்தவர்கள் யவரும் உயிருடன் இல்லை! எல்லாம் கொடிய நஞ்சான அலோபதி புற்றுநோய் சிகிச்சைக்கு பலியாகினர்!!

ஆரம்பத்தில் மறுத்த அமெரிக்க அரசு இறுதியாக ஆயிரத்து 1985 அரசின் தவறை ஒப்புக் கொண்டது!!!



இவர்களின் நஞ்சு கெமிக்கல்களால் இவர்கள் உருவாக்கிய செயற்கை பிரச்சினைக்கு ஏற்பட்ட வைரஸ் காய்ச்சலுக்கு இவர்களே கொண்டுவந்த செயற்க்கை ஊரடங்கு முகமூடி நஞ்சு கெமிக்கல் கிருமிநாசினி போன்ற காய்ச்சல் நோயை அதிகரிக்கும் செயல்பாடுகளுக்கு இவர்களே தீர்வு என்று தடுப்பு ஊசியை கொண்டு வந்து அதன் மூலம் பலரை புற்றுநோயால் சாகடித்து விட்டு பழியை தூக்கி பல மக்களை காக்க எடுத்த அவர்களின் பொன்னான தீர்வுக்கு சிலர் பலிஆகியது வருத்தம் அளிப்பதாக கூறி பழியை மக்கள் நலன் மீது போடுகின்றனர்!!!
 அப்பாவித்தனமாக காட்டிக் கொள்கின்றனர் இந்த நயவஞ்சக நரி தந்திர கொலைகாரக் பாவிகள்!!

 
1986 இல் இனி தடுப்பூசியால் மக்கள் பலியாகி நாள் நிரந்தர நோயாளியாக நாள் ஊனமாகி நாள் அதற்கு தடுப்பூசி உற்பத்தியாளர்கள் மீது வழக்கு தொடர முடியாது என்று ஒரு சட்டத்தை அமெரிக்க அரசு கொண்டு வந்தது இனிமேல் தடுப்பூசி மூலம் யாருக்காவது ஊனமும் மரணமோ ஏற்பட்டால் அதற்கு இழப்பீடு *அரசாங்கமே மக்களின் பணத்தை வைத்து தரும்* என்று ஒரு புதிய சட்டத்தை கொண்டு வந்தது இது தடுப்பூசித் உற்பத்தியாளர்களை காக்கவே கொண்டு வந்தது காரணம் அதற்கு முன்பு வரை தடுப்பூசியால் பாதிக்கப்பட்டவர்கள் தடுப்பூசி கம்பெனிக்கு எதிராகப் பல ஆயிரம் கோடிகளுக்கு நட்ட ஈடு வழக்கு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே சென்றது!!

 *அரசு என்றுமே கார்பரேட்டின் கை தானே!!* 

 இது போன்ற ஒரு முட்டாள்கள் நிறைந்த அமெரிக்க மக்கள், அரசு போன்ற ஒரு அரசை தான் தமிழ்நாட்டில் கொண்டுவர திராவிட வாரிசுகள், விஜய் கமல் உள்ளிட்ட எல்லா நடிகர்களும் என எல்லோரும் தமிழ்நாட்டை நஞ்சான செயற்க்கை அடிமையில் வளர்ந்த அமெரிக்கா போன்று உருவாக்க களமிறக்கப்பட்டுள்ளனர்!!

அமெரிக்கா மோகத்தை சினிமா ஊடகம் பத்திரிக்கை கல்வி மூலம் பல ஆண்டு ஆசை, எண்ண விதைப்பு செய்து வருவதன் நோக்கம் இதுவே!!

Palmyra Palm Tree - பனை மரம்

Palmyra Palm  Tree - பனை மரம் 

 "பனை"


மனிதனுக்கு இயற்கை அளித்த அற்புத வரம் பனைமரம் . இவற்றின் பயன்களும் மருத்துவ குணங்களும், எண்ணில் அடக்க முடியாது. பனை  மரத்தை பெண் தெய்வமாம் பத்திரகாளியின் அம்சமாக மக்கள் வணங்கி வருகிறார்கள்.


தமிழக அரசின் சின்னமாகவும் பனை மரம் விளங்கி வருகிறது.


பனை (Palmyra Palm), புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரம்.


பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. இளம் பனைகள் வடலி என்று அழைக்கப்படுகின்றன.


பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் வரை எடுக்கும் எனக் கூறப்படுகிறது. அதன் வயது மனிதனின் சராசரி வயதிலும் கூடியது என்பது குறிப்பிடக்கூடியது.


 பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. கிளைகளும் கிடையா. இதன் உச்சியில், கிட்டத்தட்ட 30 – 40 வரையான விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும்.

பெயரிடல்

****
பொது வழக்கில் மரம் என்று தமிழில் வழங்கப்படினும், இது மர வகையைச் சார்ந்தது அல்ல. தற்காலத் தாவரவியல் அடிப்படையில் மட்டுமன்றித் தமிழ் இலக்கண மரபுகளின்படியும் பனையை மரம் என்பது தவறு. தமிழில் உள்ள மிகப் பழைய இலக்கண நூலான தொல்காப்பியம் புல், மரம் என்பவற்றுக்கு இடையேயான வேறுபாட்டைப் பின்வருமாறு வரையறை செய்கிறது.
புறக் காழனவே புல்லெனப் படுமே (பாடல் 630)
அகக் காழனவே மரமெனப் படுமே (பாடல் 631)
பலவகையான பயன்களை நெடுங்காலத்துக்குத் தருவதால் பனையை, கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம் எனத் தொன்மங்கள் கூறும் கற்பகதருவுக்கு ஒப்பிடுவர்.

வகை

**
பனை மரத்தில் மொத்தம் 34 வகை இருக்கின்றன. அவை
1. ஆண் பனை, 2. பெண் பனை, 3. கூந்தப்பனை, 4. தாளிப்பனை, 5. குமுதிப்பனை, 6.சாற்றுப்பனை, 7. ஈச்சம்பனை, 8. ஈழப்பனை, 9. சீமைப்பனை, 10. ஆதம்பனை, 11. திப்பிலிப்பனை, 12. உடலற்பனை, 13. கிச்சிலிப்பனை, 14. குடைப்பனை, 15. இளம்பனை 16. கூறைப்பனை, 17. இடுக்குப்பனை, 18. தாதம்பனை, 19. காந்தம்பனை, 20. பாக்குப்பனை, 21. ஈரம்பனை, 22. சீனப்பனை, 23. குண்டுப்பனை, 24. அலாம்பனை, 25. கொண்டைப்பனை, 26. ஏரிலைப்பனை, 27. ஏசறுப்பனை, 28. காட்டுப்பனை, 29. கதலிப்பனை, 30. வலியப்பனை, 31. வாதப்பனை, 32. அலகுப்பனை, 33. நிலப்பனை, 34. சனம்பனை.

பனையின் பயன்கள்

********
பனைமரம் உணவு மற்றும் உணவிலிப் பொருள்களை நல்குகிறது. உணவுப் பொருள்களில் பதநீர் முதன்மையானது. இதுவே கருப்பட்டி, வெல்லம், பனஞ்சீனி, பனங்கற்கண்டு, பனம் மிட்டாய், பனங்கூழ் எனப் பல்வேறு உணவுப் பொருள்களாக வடிவம் பெறுகிறது. பனந்தும்பு, தூரிகைகள், கழிகள், பனையோலைப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள், மரம், மரப் பொருள்கள் ஆகியன பனையிலிருந்து பெறப்படும் உணவிலிப் பொருள்களாகும். கதர் மற்றும் சிற்றூர்த் தொழில் குழுமக் கணக்கின்படி ஒரு பனை மரமானது ஓராண்டில் 150 லிட்டர் பதநீர், 1 கிலோ தும்பு, 1.5 கிலோ ஈர்க்கு, 8 ஓலைகள், 16 நார் முடிகள் ஆகியவற்றை நல்கும் வளவாய்ப்புடையது. மேலும் ஒரு பனை மரத்திலிருந்து 24 கிலோ பனை வெல்லம், 2 கூடைகள், 2 தூரிகைகள், 6 பாய்கள் ஆகியவற்றைப் பெறமுடியும் எனவும் கணக்கிடப்பட்டு உள்ளது.


அமெரிக்கா, பிரிட்டன், செர்மன், இத்தாலி, பெல்சியம், பிரான்சு, ஆசுதிரேலியா, சப்பான் போன்ற நாடுகளுக்கு பனைப் பொருள்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் இந்தியாவிற்கு ஆண்டுதோறும் 200 கோடி ரூபாய்க்கும் மேல் அந்நியச் செலாவணி கிடைக்கிறது. உள் நாட்டிலே உணவிலிப் பனைப் பொருள்கள் பெரிதும் கோவா, கன்னியாகுமரி, பெல்லாரி ஆகிய இடங்களுக்கு விற்பனைக்கென அனுப்பி வைக்கப்படுகின்றன. இவற்றுள் கோவா முன்னணியில் இருக்கிறது.

பனையின் மருத்துவ குணங்கள்

************
பழுத்து கனிந்தால் பனம்பழம் கிடைக்கும், பழத்தை உண்டு விட்டு போடும் கொட்டை முளைவிட்டு வளரும், கொஞ்ச நாட்கள் போனால் கொட்டைக்குள் உருவாகும் சீப்பை கிடைக்கும், இந்த சீப்பை குழந்தைகள் உண்பதற்கு சுவையாகவும், சத்தானதாகவும் இருக்கும்.
அதை இன்னும் கொஞ்சநாள் விட்டால் பனங்கிழங்கு கிடைக்கும் சத்து மிகுதியான இந்த கிழங்கு மனிதனின் வயிற்றுப் புண்ணுக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.


நுங்கில் அதிகஅளவு வைட்டமின் பி, சி இரும்புச்சத்து, கால்சியம், துத்தநகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், மற்றும் புரதம் போன்ற சத்துகள் அதிகமாக இருக்கிறது. பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு நீரை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடை காலத்தில் ஏற்படும் வேர்க்குரு நீங்கும். தோலுடன் நுங்கை சாப்பிட்டு வர சீதக்கழிச்சல் நீங்கும்.
நுங்கில் உள்ள நீர் சத்தானது, வயிற்றை நிரப்பி பசியையும் தூண்டுவதோடு மலச்சிக்கல், வயிற்றுபோக்கு இவ்விரண்டிற்கும் நல்ல மருந்தாகப் பயன்படுகிறது.


 பனங்கிழங்கிற்கு ஊடல் குளிர்ச்சியை தரும் தன்மை உண்டு. இந்த கிழங்கை சாப்பிட்டு வந்தாலுடல் அழகு பெறும். உடல் பலமும் அதிகரிக்கும்.
தொடர்ந்து பதனீரை 40 நாட்கள் குடித்து வந்தால் மேக நோய் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்துபோகும். உடல் வீக்கம், வயிற்றுக்கோளாறு, வெள்ளைப்படு, வெட்டை நோய்களை குணமாக்கவும், சிறுநீர் வெளியேற்றவும் பதனீர் நமக்கு உதவுகிறது.


பன கிழங்கை மாவாக்கி அதோடு கருப்பட்டியும் சேர்த்து உருண்டை பிடித்து தினமும் சாப்பிட்டால் உடலுக்கு வலு கிடைக்கும்.
நுங்குக்கு கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் ஆற்றல் கொண்டது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் நுங்கு சாப்பிட்டால் நல்ல பயன்பெற முடியும்.


பனங்கிழங்குடன் தேங்காய்ப் பால் சேர்த்து சாப்பிட்டால் உடல் உறுப்புகள் வலுவடையும். பனம் பழத்தின் சாறு தோல் நோய்களுக்கு மிகவும் சிறந்தது.
பனம் பூவை நெருப்பில் சுட்டு சாம்பலாக்கி மருந்தாக பயன்படுத்தலாம். இதன்மூலம் சிறுநீர் பெருக்கு, வாய்வு நோய்கள், பல் வலி, நாள்பட்ட காய்ச்சலுக்கும் மருந்தாகி உதவுகிறது.


உடல் வீக்கம், நெஞ்சு எரிச்சலும், பித்தக்கோளாறுகளுக்கும் கல்லீரல் வீக்கம் மற்றும் மண்ணீரல் வீக்கத்தையும் குணப்படுத்தவும் பனை பூந்தண்டு சாம்பலை மருந்தாக நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.


பனைமரம் பாலை விட்டு காய்க்க தொடங்கினால், அந்த பாலையிளிருந்து பதநீர் கிடைக்கும், அதே பதநீரில் சுண்ணாம்பு அடிக்காமல் விட்டால், கொஞ்சம் போதை தரும், இயற்கையான கள் என்ற பானம் கிடைக்கும்.


பனைத்தொழில்

******
விவசாயம், கைத்தறிக்கு அடுத்தபடியாக பேரளவு வேலை வாய்ப்பினைக்கொண்டதாக பனைத்தொழில் விளங்குகிறது. 1985 – 86ஆம் ஆண்டில் தேசிய அளவில் 6.94 லட்சம் வேலை வாய்ப்பினையும் தமிழ் நாட்டு அளவில் 5.87 லட்சம் வேலை வாய்ப்பினையும் பனைத் தொழில் வழங்கி இருக்கிறது. இதில் பனைத் தொழிலாளர்கள் வெல்லம் காய்ச்சும் பெண்கள், தும்புக் கைவினைஞர்கள், வியாபாரிகள் ஆகியோர் அடங்குவர். இளம் மரங்கள் நீங்கலாக பனையேறத் தகுந்த எல்லா மரங்களையும் பயன்படுத்தினால் தமிழகத்தில் மட்டும் மேலும் 10 லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பினை இத்தொழில் வழங்கும்.


உணவிலிப் பனைப்பொருள்களை உற்பத்தி செய்தல், சந்தையிடல் ஆகியவற்றிலும் கூடச் சிக்கல்கள் உள்ளன. போதிய முதலீடின்மை, தொழிலாளர் எண்ணிக்கைக் குறைவு ஆகியன பெரும் சிக்கல்கள் எனக் கூறப்படுகின்றன. மிகக் குறைந்த வருமானத்தையே நல்கும்நிலையில் பனைத்தொழில் இருப்பதால் தொழிலாளர்களை பெருமளவில் ஈர்க்க முடியாமல் இத்தொழில் மெல்ல மெல்ல நலிந்து கொண்டிருக்கிறது.
எவ்வாறாயினும் பனைத்தொழில் பெருமளவு வேலைவாய்ப்பும்; உணவு மற்றும் உணவிலிப் பனைப் பொருள்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தேவை அதிகம்.


பதநீரைக் கொண்டு வெல்லம் காய்ச்சுவதைக் காட்டிலும் பனங்கற்கண்டு தயாரித்தல் இலாபமுடையது என்று கண்டறியப்பட்டுள்ளது. இவ்வுற்பத்தியால் பனைத்தொழிலாளர் வாழ்வும் தொழிற்றுறையின் வளர்ச்சியும் மேம்படுவது ஐயத்திற்கு இடமின்றி நிரூபனமானது.


உணவிலிப் பனைப்பொருள்களை உற்பத்தி செய்யும் அலகுகளை தோற்றுவிக்கும் பணியில் கூட்டுறவுத்துறையும் தன்னார்வத் தொண்டகங்களும் தனியார்களும் ஈடுபட்டுள்ளனர். வடிவமைத்தல் பயிற்சி, உற்பத்திப் பொருள்களை பரவலாக்கல், சரியான முதலீடு, சந்தையிடல் வசதிகள் ஆகியன உணவிலிப் பொருள்களின் உற்பத்தியையும் சந்தையிடலையும் அதிகப்படுத்தியுள்ளன.


தமிழகம் முழுவதும் உள்ள பனைத் தொழிலாளர்களுக்கு பனைத் தொழில் கொண்டுள்ள வளவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு தந்து அவர்கள் வாழ்க்கையை சீர்படுத்துவதில் பொது மக்கள் நமக்கும் பொறுப்பு உள்ளது.


🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴



****

மௌனம் - Silence

 மௌனம்

மௌனம் பாதுகாப்பானது
என்று நினைத்து கொண்டு
பலரும் தங்களை தாங்களே
சிறை வைத்து கொள்கிறார்கள்

பேசும் சக்தியையும்
பேசும் மொழியையும்
இறைவன் தந்தது
மௌனமாய் இருப்பதற்கா

மௌனமாய் பக்தியையோ பாசத்தையோ
காட்ட முடியாது

அன்பு வெறுப்பது
மௌனத்தை மட்டும் தான்

ஒரு குழ்ந்தையை மௌனமாக
எப்படி கொஞ்சுவது

மௌனத்தால்
நீதியை எப்படி
நிலை நாட்டுவது

மௌனம் தனிமைக்கு உகந்தது

அந்த ஊமை நிலையை
உறவாடும் இடத்தில்
உட்கார வைக்காதீர்கள்

பாலைவனத்தில் தான்
மௌனம் பாய்விரித்து படுத்திருக்கும்

அழகிருக்கும் இடங்களில் எல்லாம்
ஓசை ஆலோலம் பாடி இருக்கும்

பேசுவதினால்
பிரச்சினைகள்
பெரிதாவதாக பிதற்றாதீர்கள்
அது பேசத் தெரியாமல்
பேசவதினால் ஏற்படும் பின்னடைவு

பேசா விட்டால்
பிரச்சினைகள்
புரையோடும் நிறைவேறாது

இதழ்களை பூட்டி வைத்து
இதயத்தை இருட்டாக்காதீர்

மௌனம் மனதில் எடை ஏறச் செய்யும்
பேச்சொன்றே சகலத்திற்கும்
விடைகானச் செய்யும்

உதடுகளை உடைத்து
உள்ளத்தில் இருப்பதை கொட்டுங்கள்
கொண்ட வேண்டிய இடத்தில்
உள்ளம் பஞ்சாகும்
இல்லை நஞ்சாகும்🎈🧸🎈


 

மனித உடலில் உள்ள முக்கியமான உறுப்புகள் - Important organs in the human body

மனித உடலில் உள்ள முக்கியமான உறுப்புகள் - Important organs in the human body



மனித உடலில் உள்ள முக்கியமான 12 உறுப்புகளில் ஒவ்வொரு உறுப்பும் 2 மணி நேரம் அதனுடைய உயிர்ச்சக்தி ஓட்டத்தின் உச்ச கட்ட இயக்கத்தில் இருக்கும். இது இயற்கை.

ஒருவர் இயற்கையின் விதிகளை மீறும் போது இயற்கை அவருக்கு அளிக்கும் தண்டனையே நோய்.

ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருக்க வேண்டு மென்றால் அவனுடைய உடல் மொழியைக் கேட்கக் கற்றுக் கொள்ளவேண்டும்.



 கீழ்க்கண்ட வழிகளை உடல் உறுப்புகள் உங்களைப் பின்பற்றக் கூறுகின்றன.

நமது உடல், உள் உறுப்பு ஒவ்வொன்றும் ஓய்வில்லாமல் நாள் முழுவதும் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் தினசரி ஒவ்வொரு உறுப்பும் இரண்டு மணி நேரம் மிகவும் சக்தியுடன் இயங்குகிறது.

 Lungs – நுரையீரல் :


 சக்தி ஓட்டம் அதிகம் உள்ள நேரம் விடியற்காலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை நுரையீரலின் அதிக சக்தி நேரம். இந்த நேரத்தில்சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராண சக்தியை உடலுக்குள்அதிகமாகச் சேகரித்தால்ஆயுள் நீடிக்கும்.

தியானம் செய்யவும் ஏற்ற நேரம் இது. ஆஸ்துமா நோயாளிகள் இந்த நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்கள்.

 Large Intestine பெருங்குடல் :  


சக்தி ஓட்டம் அதிகம் உள்ள நேரம் விடியற்காலை 5.00 - 7.00 மணிவரை பெருங்குடலின் அதிக சக்தி நேரம். காலைக்கடன்களை இந்த நேரத்துக்குள் முடித்தே தீர வேண்டும்.

 மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த நேரத்தில் எழுந்து கழிவறைக்குச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் நாளடைவில் மலச்சிக்கல் தீரும்.

 உயிரணுக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ள நேரமும் கூட இதுவே. குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். அதனால் நரம்புத் தளர்ச்சி ஏற்படாது.

 Stomach இரைப்பை :

 சக்தி ஓட்டம் அதிகம் உள்ள நேரம் காலை 7.00 - 9.00 மணிவரை வயிற்றின் அதிக சக்தி நேரம். இந்த நேரத்தில் கல்லைத்தின்றாலும் வயிறு அரைத்துவிடும்.

 காலை உணவை பேரரசன் போல் உண்ணவேண்டும். இந்த நேரத்தில் சாப்பிடுவதுதான் நன்குசெரிமானமாகும்.

 Spleen மண்ணீரல் :

 சக்தி ஓட்டம் அதிகம் உள்ள நேரம்  காலை 9.00 - 11.00 மணி வரை. காலையில் உண்டஉணவை மண்ணீரல் செரித்து ஊட்டச் சத்தாகவும், இரத்தமாகவும் மாற்றுகிற நேரம் இது. இந்த நேரத்தில் பச்சைத் தண்ணீர்கூடக் குடிக்கக்கூடாது.மண்ணீரலின் செரிமானசக்தி பாதிக்கப்படும்.

அப்படி எதுவும் சாப்பிட்டால் மண்ணீரல் பாதிப்பு ஏற்படும் உடலில் வெப்பம் அதிகரிக்கும். சாப்பிட்டதும் ஏற்பட வேண்டிய சுறுசுறுப் பிற்கும், புத்துணர்ச்சிக்கும் பதிலாக அசதியும், தூக்கமும் வரும்.

 நாளடைவில் பசி குறையும். (நீரிழிவு நோயளிகளுக்கு படபடப்பு, மயக்கம், தூக்கக் கலக்கம் ஏற்படும்.) நீரழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரம் இது.

 Heart இருதயம் :


 முற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணி வரை இதயத்தின் அதிக சக்தி நேரம்.

இந்த நேரத்தில் அதிகமாகப் பேசுதல், அதிகமாகக் கோபப்படுதல்,அதிகமாகப் படபடத்தல்கூடாது. கடினமான வேலை ஏதும் செய்யாமல் தண்ணீர் மட்டும் குடிக்கலாம், மருத்துவ மனைகள் எல்லாம் விழிப்புடன் இருக்கும் நேரமிது. இதயம் பாதிக்கப்படும். இதய நோயாளிகள் மிகமிக எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நேரம்.

 காரணம் இந்த நேரத்திற்தான் இருதய நோயாளிகளுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கும் மாரடைப்பு ஏற்படும் சாத்தியக் கூறுகள் அதிகமாக இருக்கும். இதைத் தவிர்க்க இவர்கள் இந்த நேரத்தில் தூங்காமல் இருக்க வேண்டும்.

 தூங்கினால் அபான வாயு பிராண வாயுவுடன் கலந்து மாரடைப்பு, முகவாதம், பக்கவாதம் அல்லது மூட்டுவாதம் மற்றும் உடல் வலிகளை நிச்சயம் ஏற்படுத்தும்.

 Small Intestine சிறுகுடல் :

சக்தி ஓட்டம் அதிகம் உள்ள நேரம் பிற்பகல் 1.00 மணிமுதல் 3.00 மணிவரை சிறுகுடலின் அதிக சக்தி நேரம் இந்த நேரத்தில் மிதமாக மதிய உணவை உட்கொண்டு மதிய உணவை முடித்து 3 – 5நிமிடங்கள் கண்களை மூடி ஓய்வு எடுக்கலாம். படுத்து உறங்குவதை இந்த நேரத்தில் தவிர்க்க வேண்டும்.

 Urinary Bladder சிறுநீர்ப்பை :

பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை சிறுநீர்ப்பையின் அதிக சக்தி நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம்.

பானங்களோ, தண்ணீரோ குடிக்க உகந்த நேரம். முதுகு, இடுப்பு வலிகள் வரும் நேரம்.

 Kidney சிறுநீரகம் :

மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை சிறுநீரகங்களின் அதிக சக்தி நேரம். வழக்கமான வேலையில் இருந்து விடு பட்டு இரவுக்கு முன்பாகவே வீடு வந்து சேரவேண்டும். ரீனல்பெயிலியர் முதல் நீர்க்கடுப்பு வரை ஏற்படும்.

பகல் நேர பரபரப்பிலிருந்து விடுபட்டு அமைதி பெற, எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க,தியானம் செய்ய, வழிபாடுகள் செய்ய சிறந்த நேரம்.

 Pericardium இருதயஉறை :

இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை,பெரிகார்டியத்தின் அதிக சக்தி நேரம்.

 பெரிகார்டியம்என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும். ஒரு ஜவ்வு. இதயத்தின் Shock absorber. இரவுஉணவுக்கு உகந்த நேரம்.மார்பு வலி, பாரம், படபடப்புத் தோன்றும்.

Riple Warmer மூவெப்பமண்டலம் :


 இரவு 9.00 மணி முதல் 11.00 மணி வரை அதிக சக்தி நேரம்.

டிரிப்பிள் கீட்டர் ஒரு உறுப்பல்ல, உச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ள மூன்று பகுதிகளை இணைக்கும்பாதை. இந்த நேரத்தில் உறங்கச் செல்வது நல்லது.இந்த நேரத்திற்குப் பின்பு கண் விழித்திருப்பதோ படிப்பதோ கூடாது.

 Gall Bladder பித்தப்பை :

இரவு 11.00 மணி முதல் 1.00 மணி வரை பித்தப்பை இயங்கும் அதிக சக்தி நேரம்.

 இந்த நேரத்தில் தூங்காது விழித்திருந்தால் பித்தப்பை இயக்க குறைபாடு ஏற்படும், அடுத்த நாள் உங்கள் முழு சக்தியையும் இழக்க நேரிடும்.

 Liver கல்லீரல் :


இரவு 1.00 மணி முதல் விடியற்காலை 3.00 மணி வரை கல்லீரலின் அதிக சக்தி நேரம். இந்தநேரத்தில் நீங்கள் உட்காந்திருக்கவோ விழித்திருக்கவோ கூடாது.

கட்டாயம் படுத்திருக்க வேண்டும் உடல் முழுவதும் ஓடும் ரத்தத்தை கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது.

இந்த பணியை நீங்கள் பாதித்தால் மறுநாள்முழுவதும் சுறுசுறுப்பில்லாமல் அவதிப்படுவீர்கள், கண்டிப்பாக கண்ணின் பார்வை சக்தி குறையும். உறக்கம் பாதிக்கும். உடலில் அரிப்பு, நமைச்சல் அதிகரிக்கும்.



🌷🌷

Tamil Health Tips 

சனி, 20 நவம்பர், 2021

Atlantis Exchange - Biggest Airdrop - New login offer

 

Biggest Airdrop. 


20000AC Coin worth $2000USD


Exchange link - https://atlantiscex.com/r/A0031294730

Refer Code - A0031294730

Atlantis Exchange is a blockchain-based, high-tech and high-speed platform that allows global users to easily buy, sell, store, and earn cryptocurrencies such as BTC, ETH, DOGE, USDT, USDC, BNB, TRX, and AC, etc., in addition to fiat money such as US dollars, based on its secured website and smartphone APPs,


As a US-based cryptocurrency exchange registered with the State Government and the U.S. Department of the Treasury, Atlantis Exchange supports both crypto-crypto trading and crypto-USD trading. It accepts fiat currencies via wire transfers, credit card payments, and other forms of payment in exchange for cryptocurrencies. In addition to US dollars, other fiat money services will be provided later.

Atlantis Exchange provides global users with an easy to use, fast, low-cost, reliable, and secure environment for digital asset trading based on the latest MIT's blockchain technology:

1) As a market matching platform, it charges VERY COMPETITIVELY LOW transaction fees to benefit its users.

2) Meanwhile, it offers BIG rewards, bonuses, and discounts to its users who have referred others to use Atlantis Exchange from time to time.


Exchange link - https://atlantiscex.com/r/A0031294730


#Airdrop #NewExchange

சனி, 6 நவம்பர், 2021

Cryptocurrency-யை பாதுகாப்பது எப்படி?

உங்கள் Cryptocurrency-யை பாதுகாப்பாக வைப்பது எப்படி? 

உங்கள் Cryptocurrency-யை பாதுகாப்பாக வைத்திருக்க 6 சிறந்த வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

கிரிப்டோகரன்சிகள் சந்தையில் தோன்றியதிலிருந்து, அவை பல தொழில்களை சீர்குலைத்துள்ளன. இருப்பினும் Bitcoin, Ethereum மற்றும் பிற பிரபலமான நாணயங்களில் மக்கள் அதிகமாக ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

பணம் இருக்கும் இடத்தில் எப்போது வேண்டுமானாலும் திருட்டு நடக்கலாம். அதற்கு கிரிப்டோகரன்சி மட்டும் விதிவிலக்கு அல்ல. பணத்தை கையிலும் பையிலும் வைத்திருக்கும்போது மட்டுமல்ல, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்திற்கு ஏற்ப இணையத்திலும் இப்போது ஹாக்கிங் என்ற பெயரில் திருட்டு நடக்கிறது. யார் எடுத்தார் என்பது கூட தெரியாமல் நம் பணம் காணாமல் போய்விடும்.



இப்போது திருடர்கள் கிரிப்டோ நாணயங்களையும், அது தொடர்பான தளங்களில் வைத்திருக்கும் பணத்தையும் திருட ஆரம்பித்துவிட்டனர்.

கிரிப்டோகரன்சிகள் பல வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு ஒரு சிறந்த நிதி சொத்து. ஆனால் அவை மிகவும் பயனுள்ளதாக இருந்தபோதிலும், அவை அபாயங்கள் இல்லாமல் இல்லை - உங்கள் private Keys இழப்பு, கணினி செயலிழப்பு மற்றும் திருட்டு ஆகியவை உங்கள் நாணயங்களை நிரந்தரமாக வெற்றிடமாக மாற்றிவிடும்.

உங்கள் Private Keys என்பது உங்கள் கிரிப்டோகரன்சி வாலட்டுக்கான அணுகலை வழங்கும் முக்கியமான தகவலாகும். தொலைந்து போகாமல் அல்லது திருடப்படாமல் பாதுகாக்க, அவற்றை பாதுகாப்பான இடத்தில் வைத்திருப்பது அவசியம்.


உங்கள் கிரிப்டோகரன்சியை எவ்வாறு பாதுகாப்பது?

 கிரிப்டோகரன்சிகள் வேகத்தை அதிகரித்து வருகின்றன, ஆனால் அவை அபாயங்களுடன் வருகின்றன. Bitcoin, Etherium, Litecoin போன்றவற்றின் மதிப்பு தொடர்ந்து ஏற்ற இறக்கமாக இருக்கும். கிரிப்டோகரன்சியை வர்த்தகம் செய்யும் போது உங்கள் ஆன்லைன் வாலட்டை பாதுகாக்க பல வழிகள் உள்ளன. உங்கள் வாலட்டை பாதுகாக்க உதவும் சில குறிப்புகள் இங்கே உள்ளன.

1-வலுவான கடவுச்சொல் (Password) மூலம் உங்கள் கிரிப்டோகரன்சி வாலட்டைப் பாதுகாக்கவும்:

பல சேவைகளில், குறிப்பாக கிரிப்டோகரன்சி சேவைகளில் ஒரே கடவுச்சொல்லைப் பயன்படுத்த வேண்டாம். பாதுகாப்பை தீவிரமாக எடுத்துக்கொள்வது முக்கியம். இரண்டு காரணி அங்கீகாரத்தை (two-factor authentication) செயல்படுத்துவதை உறுதிசெய்து, சேவை மீறப்பட்டால் உங்கள் கடவுச்சொற்களை தவறாமல் மாற்றவும். password manager-ஐ பயன்படுத்துவது இந்த செயல்முறையைத் தானியங்குபடுத்துவதற்கும் உங்கள் நேரத்தை மிச்சப்படுத்துவதற்கும் உதவும்.

2- ஆன்லைன் வாலட்களில் அதிக கிரிப்டோவை வைக்க வேண்டாம்:

கிரிப்டோகரன்சியை ஆஃப்லைனில் வைத்திருப்பதே அதைச் சேமிப்பதற்கான சிறந்த வழியாகும். ஹேக்கர்கள் சமீபகாலமாக ஓன்லைன் வாலட்களை குறிவைத்து வருகின்றனர், எனவே நுகர்வோர் தாங்கள் எதைப் பயன்படுத்த வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். ஆஃப்லைன் சேமிப்பகம் சிறந்த வழி, அதைச் செய்வதற்கு hardware wallet ஒரு சிறந்த கருவியாகும். ஒரு பாதுகாப்பானது, மேலும் அதை பயன்படுத்த எளிதானது - USB வழியாக அதை கணினி அல்லது தொலைபேசியில் செருகவும், பிறகு உங்கள் நாணயத்தை மாற்றவும்.



3- எந்த நம்பகத்தன்மையற்ற கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தை (cryptocurrency exchange) நம்புவதைத் தவிர்க்கவும்:

நீங்கள் கிரிப்டோகரன்சி சந்தையில் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால், யாரை நம்புவது மற்றும் யாரிடமிருந்து ஓடுவது என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். நீங்கள் Ethereum அல்லது வேறு ஏதேனும் கிரிப்டோ நாணயத்தை வாங்குவதற்கு முன் Trustpilot இல் மதிப்புரைகளைச் சரிபார்ப்பது ஒரு நல்ல தொடக்கத் தளமாகும்.

4- உங்கள் mobile traffic-ல் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்:

கிரிப்டோகரன்சி விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவதால், Phishing campaigns மோசமாகிவிடும். ஃபிஷிங்கைத் தவிர, தீங்கிழைக்கும் பயன்பாடுகள் உங்கள் மொபைல் சாதனத்திற்கான அணுகலைப் பெறலாம் மற்றும் உங்கள் உள்நுழைவுச் சான்றுகளைத் திருடலாம். நம்புவதற்கு சற்று கடினமாக இருக்கலாம், ஆனால் இந்த தீங்கிழைக்கும் மொபைல் பயன்பாடுகள் நீங்கள் என்ன தட்டச்சு செய்கிறீர்கள் அல்லது உங்கள் திரையில் படங்களை எடுக்கலாம். உங்கள் மொபைல் சாதனத்திலும் வைரஸ் தடுப்பு மென்பொருளை (antivirus software) வாங்குவது நல்லது.



5- உங்கள் private key-ஐ பகிர்வதைத் தவிர்க்கவும்:

Private key என்பது ஒரு பயனரின் டிஜிட்டல் நாணயத்திற்கான அணுகல் குறியீடாகும். உங்கள் தனிப்பட்ட விசையை உங்கள் பயனர் பெயராகவும், உங்கள் பொது முகவரியை உங்கள் மின்னஞ்சல் முகவரியாகவும் கருதுங்கள். உங்கள் private keyயை வேறு யாரேனும் அணுகினால், அவர்கள் உங்களின் அனைத்து கிரிப்டோகரன்ஸிகளையும் திருடலாம். அதனால்தான் இந்தத் தகவலைப் பாதுகாப்பாக வைத்திருப்பது முக்கியம், அதை யாருடனும் பகிர வேண்டாம். தகவல் கசிவு அல்லது ஹேக் தாக்குதல்களைத் தவிர்க்க ஒரு துண்டு காகிதத்தில் அதனை குறித்து கொள்வது சிறந்தது.



6- வழங்குநர்கள் வழங்கும் வாலட்களில் இருந்து ஓடிவிடுங்கள்:

மூன்றாம் தரப்பினரால் கட்டுப்படுத்தப்படும் சேவையகங்களில் தனிப்பட்ட விசைகளை ("வாலட்") சேமிக்கும் முறை ஒரு பெரிய பாதுகாப்பு அபாயமாகும். உங்கள் நாணயங்களின் தலைவிதி வேறொருவரின் கைகளில் உள்ளது என்று அர்த்தம். யாரேனும் தங்கள் சேவையகங்களில் ஒன்றை அணுகினால், அவர்கள் அவற்றை தொலைதூரத்தில் காலி செய்யலாம். யாராவது உள்ளே நுழைந்தால், அவர்கள் எல்லாவற்றையும் திருடலாம். மற்றும் அதை திரும்ப பெற வழி இல்லை.

Cryptocurrency மிகவும் பிரபலமான நிலையில், புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கும் கெட்ட எண்ணம் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடுமையான பாதுகாப்பு நெறிமுறையைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் கிரிப்டோகரன்சி சொத்துக்களைப் பாதுகாக்கவும், மோசடி செய்பவர்களிடமிருந்து அவற்றைப் பாதுகாக்கவும் மற்றும் சாத்தியமான இழப்புகளிலிருந்து பாதுகாப்பாகவும் இருக்க முடியும். 

சனி, 3 ஏப்ரல், 2021

தா.பாண்|டியன் - கம்யூனிஸ்ட் கட்சி - D.Pandiyan life History - Communist party


உசிலம்பட்டி அருகே உள்ள வெள்ளைமலைப்பட்டி கிராமத்தில் தாவீது (டேவிட்) - நவமணி தம்பதிக்கு நான்காவது மகனாகப் பிறந்தவர் தா.பாண்|டியன் (18.5.1932). அந்தக் காலத்தில் கல்விச் சேவை செய்வதற்காக கிறிஸ்தவ மிஷனரி தொடங்கிய பள்ளியில் ஆசிரியர்களாக இருந்தனர் பாண்டியனின் பெற்றோர். காமக்காபட்டி கள்ளர் சீரமைப்புத் துறைப் பள்ளியில் ஆரம்பக்கல்வி. பின்னர், உசிலம்பட்டி போர்டு உயர்நிலைப் பள்ளியில் பயின்றார் பாண்டியன்.

மேடையில் கன்னிப்பேச்சு சிறந்த பேச்சாளர். உசிலம்பட்டியில் 8-ம் வகுப்பு படித்தபோது அவரைக் கேட்காமலேயே பேச்சுப் போட்டியில் சேர்த்துவிட்ட ஆசிரியர், “உன் அப்பா வாத்தியார்தானே, அவரை எழுதித் தரச் சொல்லிப் பேசு” என்று சொல்லிவிட்டார். தந்தையோ, “படிக்கிற வயசுல மேடையேறுன யாரும் உருப்பட்டதில்லை” என்று சொல்லிவிட்டார். உரை எழுதிக் கொடுத்து பயிற்சியும் தந்தவர் அண்ணன் தா.செல்லப்பா. பிற்காலத்தில் கல்லூரிப் பேராசிரியராக இருந்தவர் இவர். ஒருகட்டத்தில் “நீயே போட்டிக்குத் தயாராகு” என்று அண்ணன் தந்த ஊக்கத்தில் சிறந்த பேச்சாளராக உருவானார் பாண்டியன். காரைக்குடி கம்பன் கழகத்துக்கும் இதில் பெரும் பங்குண்டு.
துடிப்பான மாணவர் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் இன்டர்மீடியட் சேர்ந்தபோதே (1953) கட்சியிலும் சேர்ந்துவிட்டார். மாணவர் பேரவைத் தேர்தலிலும் வெற்றி. பின்னர், அதே கல்லூரியில் ஆங்கில ஆசிரியரான பிறகு, கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டினார். 1957 தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் புனைப்பெயரில் அவர் பேச, ஒரு பத்திரிகையில் உண்மையான பெயர் வந்துவிட்டது. வேலையை ராஜினாமா செய்யச் சொன்னார் கல்லூரி முதல்வர்.

அந்நேரம் பார்த்து பாண்டியனை அழைத்த அழகப்பா கல்லூரி நிறுவனரான அழகப்பச் செட்டியார், “தலைமறைவாக இருந்துகொண்டே போலீஸிடம் சிக்காமல் அரசியல் நடத்துகிற சாமர்த்தியசாலிகள் அல்லவா கம்யூனிஸ்ட்டுகள்... நீ இப்படி மாட்டிக்கொண்டாயே?” என்றார். கூடவே, லண்டனில் தான் சட்டம் படித்த போது வாங்கிய மார்க்ஸ் எழுதிய புத்தகங்களை தா.பா.விடம் கொடுத்தார் செட்டியார். “நம் கல்லூரியில் மாணவர் பேரவைத் தலைவராக வென்ற எந்த மாணவனும், ‘அரியர்’ வைக்காமல் தேர்ச்சி பெற்றதில்லை. நீ இரண்டிலும் வென்றாயல்லவா... அதற்குத்தான் இந்தப் பரிசு!” என்று ஆச்சரியப்பட வைத்தார்.

தாமதமாக உணர்ந்த பேரன்பு! தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்காக, இரண்டு வயதில் தந்தையை இழந்த ஜாய்சி என்ற பெண்ணை தா.பா.வுக்குத் திருமணம் செய்துவைத்தார் அப்பா தாவீது. பாண்டியனுக்கு டேவிட் ஜவஹர் என்ற மகனும், அருணா, பிரேமா ஆகிய மகள்களும் உள்ளனர். வெகுசீக்கிரமே, கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளரானதால் வேலையை விட்டுவிட்டு சென்னைக்குப் போய்விட்டார் தா.பா. அரசியலுக்காக சென்னையில் சட்டம் படித்தவர், நீதிமன்றத்துக்குச் செல்லாமல் ‘ஜனசக்தி’யில் கட்டுரை எழுதுவது, பொதுக்கூட்டம் என்று இயங்கிவந்தார். காரைக்குடியில் பள்ளி ஆசிரியையாக இருந்த தனது மனைவி அனுப்பிவைத்த சம்பளத்திலேயே இவரது ஜீவனம் நடந்தது. “திருமணமான புதிதில் அவளது சின்ன எதிர்பார்ப்பான பூவைக் கூட நான் வாங்கிக் கொடுத்ததில்லை. பட்டது போதும் என்று 2012-ல் மறைந்துவிட்டாள். இப்போது அவளது படத்துக்குப் பூச்சூடி கடனைத் தீர்க்கிறேன்” என்கிறார் பாண்டியன்.

தலைசிறந்த ஜனநாயகவாதி! இந்த உலகத்தை மீட்க ஒரே ஒரு கட்சியால்தான் முடியும் என்றெல்லாம் கருத மாட்டார். மாற்றுக் கட்சிகள், தலைவர்களின் கொள்கைகளையும் மதிப்பவர். ஆரம்பகால கம்யூனிஸ்ட் கட்சியினர், திகவை ‘திராவிடர் கலகம்’ என்று இழிவுபடுத்தி வந்த காலத்திலேயே பெரியாரைப் புகழ்ந்துபேசி கட்சியின் கண்டனத்துக்கு உள்ளானவர். எந்தக் கட்சி எங்கே பொதுக்கூட்டம் போட்டாலும் முதல் ஆளாகப்போய்விடுவார். அண்ணாவை அவரது மேடையிலேயே எதிர்த்துப் பேசியிருந்தாலும், 1967-ல் திமுக வெற்றிவிழா சென்னை கடற்கரையில் நடந்தபோது, பார்வையாளர் வரிசையில் போய் உட்கார்ந்து கவனித்தவர். இப்போதும்கூட திராவிடக் கட்சிகளின் ஆட்சியை விமர்சிக்கிறபோது, அவற்றின் சாதனைகளைச் சொல்லாமல் மறைப்பதில்லை.

கைகொடுத்த ‘கை’! கட்சியில் இருந்து நீக்கப்பட்டபோது, தோழர் டாங்கே, கல்யாணசுந்தரம் போன்றோர்களோடு சேர்ந்து ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கிய பாண்டியன், 1983 முதல் 2000-ம் வரையில் அதன் மாநிலச் செயலாளராக இருந்தார். சட்டமன்றத்துக்கு 6 முறை, நாடாளுமன்றத்துக்கு 3 முறை என்று மொத்தம் 9 தேர்தல்களில் போட்டியிட்ட தா.பாண்டியன் ஒருமுறைகூட தன் கட்சி சின்னத்தில் வென்றதில்லை. ஆனால், தனிக்கட்சி நடத்திவந்த காலகட்டத்தில் வடசென்னையில் கை சின்னத்தில் போட்டியிட்டு இருமுறை எம்.பி.யாகியிருக்கிறார்.

மும்முறை செயலாளர்! 2000-ல், ஐககவைக் கலைத்துவிட்டு தாய்க்கட்சியில் மீண்டும் இணைந்தார். 2005-ல், கட்சியின் மாநிலச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து மும்முறை அப்பொறுப்புக்குத் தேர்வுசெய்யப்பட்டவர், 2015 வரையில் தொடர்ந்து 10 ஆண்டுகள் அப்பொறுப்பில் இருந்தார். இளம் வயதிலேயே கட்சியின் தேசியக்குழு உறுப்பினரான அவர், இப்போதும் அப்பொறுப்பில் தொடர்கிறார்.
செத்துப் பிழைத்தவர்! சிறந்த மொழிபெயர்ப்பாளர். 

இந்திரா காந்தி தொடங்கி ராஜீவ் காந்தி வரையில் பலரது பேச்சுக்களை மேடையில் மொழிபெயர்த்திருக்கிறார். 1991 மே 21-ல் குண்டுவெடிப்பில் ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட சம்பவத்தின்போது அவருக்குப் பின்னால் இருந்த தா.பா.வும் தூக்கிவீசப்பட்டார். பத்திரிகையில் வெளியான இறந்த 19 பேர் பட்டியலில் முதலில் இவரது பெயரும் இடம்பெற்றது. போலீஸ் அதிகாரிகளும் வீட்டுக்கு போன் செய்து பாண்டியன் இறந்ததாகச் சொல்லிவிட்டார்கள். ஆனால், சென்னை அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்டு அதிசயமாக உயிர்பிழைத்தார் தா.பா. அங்கேதான் ராஜீவின் உடல் வைக்கப்பட்டிருந்தது என்பதால், அந்த மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தியின் பெயரைச் சூட்டக் காரணமாக இருந்தார். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு விடுதலைப் புலிகளைக் கடுமையாக எதிர்த்தார். ஆனால், ஈழத்தமிழர்களின் உரிமைக்காக நெடுமாறனுடன் சேர்ந்து தொடர்ந்து குரல் கொடுத்தார்.

பிடிவாதக்காரர்! சென்னை துறைமுகத்தில் தினக்கூலித் தொழிலாளர்கள் 58 பேர் நீதிமன்றத்தை நாடி, 1992-ல் பணி நிரந்தர உத்தரவு பெற்றனர். அதை ஏற்காமல் அப்போதைய இயக்குநர் மேல்முறையீடு செய்ததால், அதைக் கண்டித்து காலவரையறையற்ற உண்ணாவிரதம் இருந்தார் தா.பா. அப்போது ஆளுங்கட்சியாக இருந்த, இவரது கூட்டணியில் இருந்த அதிமுகவும், காங்கிரசும் கேட்டுக்கொண்டும் தன் பிடிவாதத்தைக் கைவிடவில்லை.

 கடைசியில், வழக்கை வாபஸ் பெற்று 58 பேரையும் பணிநிரந்தரம் செய்தது துறைமுகக் கழகம். எளிமையிலும் பிடிவாதம். இப்போதும்கூட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதையே வழக்கமாக வைத்திருக்கிறார்.
எழுத்தாளர் தா.பா.! 1962-ல் ‘ஜனசக்தி’யில் எழுத ஆரம்பித்தவர், இப்போதும் எழுதிக்கொண்டிருக்கிறார். ஆரம்ப காலத்தில் ‘சவுக்கடி' என்ற புனைப்பெயரில் இவர் எழுதிய கட்டுரைகளுக்குக் கட்சி எல்லையைத் தாண்டியும் வாசகர்களுண்டு. சுய கட்சி விமர்சனத்தில் இவரை மிஞ்சிய சமகாலப் பொதுவுடமைவாதி யாருமில்லை. 16 ஆண்டு காலம் 'ஜனசக்தி' ஆசிரியராக இருந்த இவர் இதுவரையில் 13 சிறு வெளியீடுகள், 8 நூல்கள், 6 மொழிபெயர்ப்பு நூல்கள் போன்றவற்றை எழுதியுள்ளார். அதில் ‘மேடைப்பேச்சு’, ‘பொதுவுடமையரின் வருங்காலம்’ நூல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றவை!

தனிநபர் வரலாறு! தமிழக வரலாற்றிலேயே முதல்முறையாக கம்யூனிஸ்ட் தலைவர் ஒருவருக்கு (ஜீவா) சிலை வைத்தபோது, அந்தக்கு ழுவின் தலைவராக இருந்தவர் தா.பா. “தனிநபர்களைவிட இயக்கமே பெரிது” என்று சொல்லும் கம்யூனிஸ்ட் கட்சியில், “தனிநபருக்கும் வரலாற்றில் இடமுண்டு” என்று வாதிடும் துணிச்சலுக்கு மறுபெயர்தான் தா.பா.!
D.Pandiyan life History - Communist party

சனி, 13 பிப்ரவரி, 2021

ஒரு யானையை பாதுகாப்பது என்பது 18 லட்சம் மரங்களை விதைத்தற்கு சமம்! - Top Facts about elephants


 

ஒரு யானையை பாதுகாப்பது என்பது 18 லட்சம் மரங்களை விதைத்தற்கு சமம்!
"ஒரு நாளைக்கு நீங்க எவ்ளோ சாப்பிடுவீங்க சார்? மிஞ்சிப்போனா ஒரு 5 கிலோ? எவ்ளோ தண்ணி குடிப்பீங்க? ரொம்ப அதிகமா ஒரு 8 லிட்டர்? நீங்க சாப்பிடுறதுனால, உங்களைத் தவிர வேற யாருக்காவது ஏதாவது நன்மை இருக்கா சார்..?"
யானைகள் அப்படி என்ன பெரிதாக செய்துவிடுகிறது என்று கேட்கும் அறிவாளிகளுக்கு இதைவிட எளிமையாக பதிலளிக்க முடியவில்லை. யானைகள் மிக எதார்த்தமான குழந்தைகள். யானை எனும் பேருயிரியின் மீதான நம் காதல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 
"ஒரே ஒரு யானை சாப்பிடுறதுல இருந்து ஒரு காடே உருவாகும் சார். ஒரு யானை, ஒரு நாளைக்கு 200 - 250 கிலோ உணவு சாப்பிடும் சார். சராசரியா அதனோட உடல் எடையில இருந்து 5 சதவிகித உணவை சாப்பிடும். ஒரு நாளைக்கு ஒரு யானை 100 - 150 லிட்டர் தண்ணீர் குடிக்கும். இந்த 250 கிலோ உணவுங்கிறதுல, 10 சதவிகிதம் விதைகள் இருக்கும். அதாவது 25 கிலோ விதைகள், குச்சிகள் இருக்கும். அதுல கடைசிக்கும் கடைசியா 10 கிலோ விதைகளும் குச்சிகளும் திரும்ப மண்ணுல விதைக்கப்படும். நினச்சுப் பாருங்க, ஒவ்வொரு யானையும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 10 கிலோ விதைகளை விதைக்குது சார்! எண்ணிக்கையில சொல்லணும்னா, சராசரியா ஒரு யானை ஒரு நாளைக்கு 300 - 500 விதைகளை விதைக்குது…"
அந்தப் பேருயிரிகளின் பிரமிக்கவைக்கும் பரிமாணத்தைப் புரிந்துகொள்ள முடிகிறதா?
500 விதைகளில் குறைந்தது 100 விதைகளாவது முளைத்துவிடும். இது மிகவும் குறைந்தபட்ச எண்ணிக்கைதான். அப்படியென்றால், ஒரு யானை ஒரு மாதத்திற்கு 3000 மரங்களை நடுகிறது. வருடத்திற்கு 36 ஆயிரத்து ஐநூறு மரங்கள். மொத்தமாகப் பார்த்தால் ஒரே ஒரு யானை தன் வாழ்நாளில் 18 லட்சத்து 25 ஆயிரம் மரங்கள் வளரக் காரணமாகிறது. மீண்டும் சொல்கிறோம், இது மிகவும் குறைந்தபட்ச எண்ணிக்கைதான்!
இன்னும் ஆச்சரியங்கள்!
"இப்போ இவ்வளவு சாப்பிடணும்னா அது எவ்வளவு பயணம் செய்யணும்? இப்போவெல்லாம் நம்மளால இந்த இத்துனூண்டு உடம்ப தூக்கிட்டு 10 கிலோமீட்டர்கூட சேர்ந்தாப்பொல நடக்க முடியல. ஆனா ஒரு யானையால ஒரு நாளைக்கு 190 கிலோமீட்டர் நடக்க முடியும்னு ஆய்வுகள் சொல்லுது. சராசரியா ஒரு நாளைக்கு 30 கிலோமீட்டர் தூரம் யானைகள் நடக்கும். அதுவும் 4-5 மணி நேரத்துல."
அப்படியென்றால் சராசரியாக மணிக்கு 15 லிருந்து 20 கிலோமீட்டர் வேகம். யானைகள் இவ்வளவு வேகமாக நடக்குமா என்று வியப்பா இன்னொரு தகவல். யானைகள் மிக வேகமாக ஓடும். யானைகள் துரத்தினால் மனிதர்களால் ஓடித் தப்பிக்க முடியாது. மனிதர்களைவிட 2 மடங்கு வேகத்தில் யானைகள் ஓடும்.
ஏன் 4-5 மணிநேரம் மட்டுமே நடக்கின்றன? மற்ற நேரங்களில் என்ன செய்யும்?
"சாப்புடும்..."
அவ்வளவு நேரமுமா?
"ஒரு நாளைக்கு 12 - 18 மணி நேரம் சாப்பிட்டுகிட்டே இருக்கும் சார்."
அப்போ தூக்கம்?
"யானைகள் இரண்டு மணிநேரம் மட்டுமே தூங்கும்."
யானைகள் இவ்வளவு பிரமிப்பானவையா?
"இன்னொரு சுவாரஸ்யமான தகவல். எந்த பாலூட்டிகளைவிடவும் அதிகமான பேறு காலம் கொண்டவை யானைகள்தான் சார். 22 மாசம்!"
காடுகளின் மூத்த தாய் யானைகள்தான். பழங்காலத்திற்கும் இன்றைய நவீன உலகுக்கும் உள்ள ஆதி உயிர்த் தொடர்புச் சங்கிலியின் எச்சம் இந்த யானைகள்தான்..

சொல்லக் கூடாதவை - சொல்ல வேண்டியவை - Mention and Not mention to Others

 

சொல்லக் கூடாதவை :
1.படிக்கிலன்னா உருப்படாம போய்டுவ.
2.உழைக்கிலன்னா பிச்சைதான் எடுக்கனும்.
3.பணம் இல்லாட்டி ஒரு நாய் உன்னை மதிக்காது.
4.நீ எல்லாம் எச்சில் இலை எடுக்கவும் எச்சில் தட்டு கழுவதான் லாயக்கு.
5.இந்த வாட்டி பரிட்சைல பாஸாகலன்னா ஸ்டெய்ட்டா எருமை மாடு மேய்க்கதான் உன்னை அனுப்ப போறேன்.
( எருமை மாடு மேய்ப்பது அவ்வளவு எளிதான விஷயமா?)
6.காசு பணம் இல்லன்னா சொந்தக்காரங்க மதிக்க மாட்டாங்க.
(எல்லா உறவுகளுமே அப்படித்தான் இருக்கிறார்களா?)
7.அப்பா அம்மா செத்ததுக்கு அப்புறம் நீ பிச்சைதான் எடுக்கப் போற.
8.வீட்டுக்கு அடங்காத பிள்ளையை ஊர் அடக்கும்.
9.பணம் என்ன மரத்திலா காய்க்கிறது ?
10.உன்னோட திமிருக்கு நீ அழிஞ்சிதான் போகப் போற.

சொல்ல வேண்டியவை :🙏
1.படிச்சா நல்லா வாழலாம்.படிச்சா வாழ்க்கையில முன்னுக்கு வரலாம்.
2.உழைத்தால் நிறைய சம்பாதிக்கலாம்.
3.நிறைய பணம் சம்பாதித்தால் மதிப்புடன் வாழலாம்.
4.படிச்சி முன்னுக்கு வந்து விட்டால் நாலு பேருக்கு வேலை கொடுக்கலாம்.
5.நீ இந்த பரிட்சைலயும் பாஸாய்டுவ.
எல்லா பரிட்சைலயும் பாஸாய்டுவ எனக்கு உன் மேல அந்த நம்பிக்கை இருக்கு.நீ நல்லபடியா மேல வரமுடியும்.
6.காசு பணம் வந்ததுக்கு பிறகும் எல்லா உறவுகளையும் ஒரே மாதிரி மதிப்பா நடத்தனும்.
7.அப்பா அம்மா நான் சாதிச்சிட்டேன்
என்று சொல்லனும்.
8.படித்து ஊர் மெச்ச வாழும் உறவுகள் மற்றும் நண்பர்கள் பட்டியலை பிள்ளைகளிடம் காட்டுங்கள்.
9.உழைப்பின் மூலமாக வரும் பணத்தின் மதிப்பை புரிய வைக்க வேண்டும்.
10.உன்னோட திறமைக்கு நீ ரொம்ப சீக்கிரமா முன்னுக்கு வர முடியும்.

சொல்ல கூடாதவை.சொல்ல வேண்டியவை வரிசை எண்படி ஒவ்வொன்றையும் பொருத்தி ஒரு முறை படிக்கவும்.
சொல்ல கூடாதவை பட்டியலில் உள்ள வாசகங்களை அன்றாடம் பெரும்பாலான வீடுகளில் உச்சரிக்கப்படுவதை நாம் கேட்கிறோம்.
ஏன் சார் இப்படி என்றால் அப்படி ஆகிவிடக்கூடாது என்பதற்காகதான்
நான் இப்படி பேசுகிறேன் என்ற பதில் கிடைக்கிறது.
ஆனால் எப்படி ஆகக் கூடாது என்று நாம் நினைக்கிறோமோ அப்படி ஆகி நின்ற பிறகுதான் நாம் எங்கே என்ன தவறு செய்தோம் என்று யோசிக்க தொடங்குகிறோம்.
எப்படி ஆக வேண்டும் என்று நினைக்கும் நினைப்பை விட எப்படி ஆகக் கூடாது என்று அதிகமாக நினைப்பதால் மற்றவர்களை அவ்விதம் ஆகி விடக்கூடாது என்று அறிவுறுத்தும் விஷயம் மட்டுமே நடந்து முடிந்து விடுகிறது.
எந்த விஷயத்தை இது நடக்கக் கூடாது என்று பய உணர்வுடன் சிந்திக்கிறோமோ அந்த பய உணர்வு ஆழ்மனதில் நடக்க விரும்பாத விஷயத்தை ஆழமாக பதியும்படி செய்து விடுகிறது.
பெரும்பாலான பிள்ளைகள் தேர்வுகளில் தோற்பதற்கு படிக்கிலன்னா நீ உருப்பட மாட்ட என்ற பெற்றோரின் தொடர்ச்சியான மிரட்டல் நான் உருப்படாமல் போய் விடுவேனா என்ற அச்ச உணர்வை பிள்ளைகளின் ஆழ்மனதில் ஆழமான எண்ணமாக பதிந்து அப்படியே அவர்கள் உருப்படாமல் போய் விடுகிறார்கள்.
படிப்பு மட்டுமல்ல வாழ்வின் அனைத்து விஷயங்களிலும் எதிர்மறையான விளைவுகளை உதாரணம் காட்டாமல் எந்த விஷயத்தை செய்தாலும் அதில் இருந்து கிடைக்க இருக்கும் நற்பலன்களை திரும்ப திரும்ப வலியுறுத்தி கூறுவதன் மூலமாக பிள்ளைகள் நல்ல மன வலிமையையும் நம்பிக்கையும் அடைவார்கள்.
உன்னால் முடியும்.எனக்கு உன் மேல் நம்பிக்கை இருக்கிறது.நீ திறமைசாலி உனக்கு அது மிகவும் எளிதான விஷயம்.இதை செய்வதன் மூலமாக நீ வெற்றி பெற முடியும் உனக்கு மிகவும் பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது.
சமூகத்தில் நீ பெரிய புகழுடன் வாழ அற்புதமான வாய்ப்பு உனக்காக காத்திருக்கிறது.
இது போன்ற வாக்கியங்கள் அறிவுரை கூறுபவர் பெறுபவர் இருவருக்கும் நல்ல நம்பிக்கையும் சாதனை செய்ய உத்வேகத்தையும் ஏற்படுத்தும் வாக்கியங்கள் ஆகும்.
நம்முள் நினைக்கும் எண்ணங்களையும் பிறரிடம் பேசும் வார்த்தைகளையும் நற் பலன்களை அளிக்கக் கூடிய நேர்மறை வார்த்தைகளை உச்சரிப்போம்‌. வார்த்தைகளால் புது வாழ்வை துவக்குவோம்.👍

world Important Days - *உலகின் முக்கிய தினங்கள் :-

*உலகின் முக்கிய தினங்கள் :-
÷÷÷÷÷÷÷ ÷÷÷÷÷÷ ÷÷÷÷÷÷÷÷

*ஜனவரி*
=========
01 - ஆங்கில வருடப் பிறப்பு / உலக வருட தினம்.
05 - உலக டீசல் எந்திர தினம்
06 - உலக வாக்காளர் தினம்
08 - உலக நாய்கள் தினம்
09 - உலக இரும்பு தினம்
12-தேசிய இளைஞர் தினம் 
15-இராணுவ தினம்
26-இந்திய குடியரசு தினம்
26- உலக சுங்க தினம்
29- இந்திய செய்தித்தாள்கள் தினம்
30- உலக தொழுநோய் ஒழிப்பு தினம்
30 -தியாகிகள் தினம் 

*பிப்ரவரி*
÷÷÷÷÷÷÷÷
01 - உலக கைப்பேசி தினம்
03 - உலக வங்கிகள் தினம்
14 - உலக காதலர் தினம்
15 - உலக யானைக்கால் நோய் தினம்
19 - உலக தலைக்கவச தினம்
24 - தேசிய காலால் வரி தினம் 
25 - உலக வேலையற்றோர் தினம்
26 - உலக மதுபான தினம்
28- தேசிய அறிவியல் தினம்

*மார்ச்*
======
08 - உலக பெண்கள் தினம்
15 - உலக நுகர்வோர் தினம்
20 - உலக ஊனமுற்றோர் தினம்
21 - உலக வன தினம்
22 - உலக நீர் தினம்
23 - உலக வானிலை ஆய்வு தினம் / உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்
24 - உலக காசநோய் தினம்
28 - உலக கால்நடை மருத்துவ தினம்
29 - உலக கப்பல் தினம்

*ஏப்ரல்*
÷÷÷÷÷÷
01 - உலக முட்டாள்கள் தினம்
02 - உலக ஓரினச் சேர்க்கையாளர்கள் தினம்
05 - உலக கடல் தினம்
05 - தேசிய கடற்படை தினம் 
07 - உலக சுகாதார தினம்
12 - உலக வான் பயண தினம்
15 - உலக பசும்பால் தினம்
18 - உலக பரம்பரை தினம்
22 - உலக பூமி தினம்
30 - உலக குழந்தைத் தொழிலாளர் தினம்

*மே*
÷÷÷÷
01 - உலக தொழிலாளர் தினம்
03 - உலக சக்தி தினம்
08 - உலக செஞ்சிலுவை தினம்
09 - உலக கணிப்பொறி தினம்
11 தேசிய தொழில் நுட்ப தினம் 
12 - உலக செவிலியர் தினம்
14 - உலக அன்னையர் தினம்
15 - உலக குடும்ப தினம்
16 - உலக தொலைக்காட்சி தினம்
18 - உலக டெலஸ்கோப் தினம்
24 - உலக காமன்வெல்த் தினம்
27 - உலக சகோதரர்கள் தினம்
29 - உலக தம்பதியர் தினம்
30 - உலக முதிர்கன்னிகள் தினம்
31 - உலக புகையிலை ஒழிப்பு தினம்

*ஜீன்*
÷÷÷÷
01 - உலக டயலசிஸ் தினம்
02 - உலக ஆப்பிள் தினம் (Apple Sys)🛏🛏🛏
04 - உலக இளம் குழந்தைகள் தினம்
05 - உலக சுற்றுப்புற தினம்
10 - உலக அலிகள் தினம்
18 - உலக தந்தையர் தினம்
23 - உலக இறை வணக்க தினம்
25 - உலக புகையிலை தினம்
26 - உலக போதை ஒழிப்பு தினம்
27 - உலக நீரழிவாளர் தினம்
28 - உலக ஏழைகள் தினம்

*ஜீலை*
======
01 - உலக மருத்துவர்கள் தினம்
08 - உலக யானைகள் தினம்
10 - உலக வானூர்தி தினம்
11 - உலக மக்கள் தொகை தினம்
14 - உலக மஞ்சள் தினம் (Turmeric)
16 - உலக தக்காளி தினம் (பிரான்சில் தக்காளித் திருவிழை)

*ஆகஸ்ட்*
========
01 - உலக தாய்ப்பால் தினம்
03 - உலக நண்பர்கள் தினம்
06 - உலக ஹிரோஷிமா தினம்
09 -வெள்ளையனே வெளியேறு தினம் 
09 - உலக நாகசாகி தினம்
18 - உலக உள்நாட்டு மக்களின் சர்வதேச தினம் 
19 - உலக வெளிநாட்டு மக்களின் சர்வதேச தினம் 
29 - உலக தேசிய விளையாட்டு தினம் 
30 - மாநில விளையாட்டு தினம்

*செப்டம்பர்*
÷÷÷÷÷÷÷÷÷÷
05 - ஆசிரியர் தினம் மற்றும் சமஸ்கிருத தினம் 
06 - ஹிந்தி தினம்
07 - பெங்காளி தினம் ( இந்திய தேசியகீதம் எழுதப்பட்ட பெங்காளிய மொழி)
08 - உலக எழுத்தறிவு தினம்
10 - உலக பேனா தினம்
12 - உலக மின்சார தினம்
13 - உலக மாலைக்கண் நோய் தினம்
16 - உலக ஓசோன் தினம்
18 - உலக அறிவாளர் தினம்
20 - உலக எழுத்தாளர்கள் தினம்
21 - உலக பொறியியல் வல்லுனர்கள் தினம்
25 - உலக எரிசக்தி தினம்
26 - உலக ஊமை மற்றும் காது கேளாதோர் தினம்
27 - உலக சுற்றுலா தினம்
28 - உலக எரிமலை தினம்
29 - உலக குதிரைகள் தினம்

*அக்டோபர்*
==========
01 - உலக மூத்தோர் தினம்
02 - உலக சைவ உணவாளர் தினம்
04 - உலக விலங்குகள் தினம்
05 - உலக இயற்கைச் சூழல் தினம்
08 - உலக இயற்கை சீரழிவு குறைப்பு தினம்
08 இந்திய விமானப்படை தினம் 
09 - உலக தபால் தினம்
16 - உலக உணவு தினம்
17 - உலக வறுமை ஒழிப்பு தினம்
24 - உலக ஐக்கிய நாடுகள் சபை தினம்
30 - உலக சிந்தனை தினம்

*நவம்பர்*🛏
÷÷÷÷÷÷÷÷÷
14-குழந்தைகள் தினம் 
18 - உலக மனநோயாளிகள் தினம்
19 - உலக குடியுரிமையாளர்கள் தினம்
26 - உலக சட்ட தினம்
27 - உலக காவலர்கள் தினம்
28 - உலக நீதித்துறை தினம்

*டிசம்பர்*🛏🛏
÷÷÷÷÷÷÷÷
01 - உலக எய்ட்ஸ் தினம்
02 - உலக அடிமைத்தனம் ஒழிக்க ஐ.நா. சபையின் சர்வதேச தினம்
10 - உலக மனித உரிமைகள் தினம்
14 - உலக ஆற்றல் தினம்
15 - உலக சைக்கிள் தினம்
23 - விவசாயிகள் தினம்
25 - திருச்சபை தினம்💐💐💐💐💐💐💐💐💐💐

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2021

சுய ஒழுக்கம் (Self Discipline) - ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டியது

சுய ஒழுக்கம் (Self Discipline) - ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டியது 

 *தொடர்ச்சியாக இரண்டு முறை யாரையும் Phoneல் அழைக்காதீர்கள்*. அவர்கள் முக்கிய வேலையாக இருக்கலாம், அல்லது பேச முடியாத சூழ்நிலையில் இருக்கலாம்

*திருப்பித் தருகிறேன் என்று உங்களிடம் பணம் கடனாக கேட்பவரிடம் மனப்பூர்வமாக கேட்டுக்கொடுங்கள்*. இது திரும்ப வருமா, வராதா என. இது உங்கள் Character ரை அவர் உணரச் செய்யும். இதே போல், இரவல் கொடுக்கும் பேனா, புத்தகம், Lunch box, குடை போன்றவைக்கும்.

 *Hotelல் சாப்பிடலாம் என நண்பர் உட்பட யார் அழைத்தாலும், Menu cardல் costly யாக உள்ள எதையும் Order செய்யாதீர்கள்.* அழைத்தவரையே உங்கள் விருப்பப்படி Order சொல்லுங்கள் என வேண்டலாம்.

 தர்மசங்கடமான இது போன்ற கேள்விகளை தவிர்க்கலாம்.
*இன்னும் கல்யாணம் ஆகலயா?*
*குழந்தைகள் இல்லையா?*
*இன்னும் சொந்தவீடு வாங்கவில்லையா?*
*ஏன் இன்னும் Car வாங்கவில்லை?*
இது நமது பிரச்சினை இல்லைதானே!"

 *தானியங்கி கதவை திறக்க நேர்ந்தால் பின்னால் வருபவர் ஆணோ, பெண்ணோ, சிறியவரோ, பெரியவரோ அவர்கள் வரும்வரை மூடாமல் பிடித்திருப்பது* அவர்களை சமூகத்தில் பொறுப்புள்ளவர்களாக மாறச்செய்யும்!

 நண்பருடன் Taxiயில் சென்றால. *இம்முறை இயலாவிட்டால் மறுமுறை* நீங்கள் காசு கொடுத்துவிடுங்கள்.

*மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளியுங்கள்*. மோசமாக இருந்தாலும், Choiceல் வைத்திருக்கலாம்.

*அடுத்தவர்கள் பேசும்போது இடைமறிக்காதீர்கள்*. அவர்கள் கொட்டட்டும். இறுதியில் அவர்களுக்கே நல்லது தெரிந்துவிடும்.

 *நீங்கள் கிண்டலடிப்பதை சம்பந்தப்பட்டவர் ரசிக்கவில்லை என்றால், மீண்டும் அதைச் செய்துவிடாதீர்கள்*. அவரை உற்சாகப்படுத்துங்கள். உங்கள் மதிப்பை அது மேம்படுத்தும்.

 யார் உதவினாலும் பாரபட்சமின்றி *நன்றி சொல்லுங்கள்*.

. பொதுவில் புகழுங்கள். *தனியாக இருக்கையில் குறைகளை சுட்டிக்காட்டலாம்*.

 *உடல்பருமனை ஒருபோதும் கிண்டலடிக்காதீர்கள்.*
"நீங்கள் பார்க்க Smartடாக, Cuteடாக இருக்கீங்க" என்று கூறுங்கள். உடல் எடை குறைக்க அவராக கேட்டால் ஒழிய நாம் அறிவுரை வழங்கக் கூடாது.

 *யாராவது அவர்கள் Photoவைக் காட்ட Phoneனைக் கொடுத்தால் Galleryயில் இடது வலதாக தள்ளிப் பார்க்காதீர்கள்*. அடுத்து என்ன இருக்கும் என்று உங்களுக்குத் தெரியாது.

 *யாரும் தனக்கு Doctor Appointment இருக்கிறது, போகவேண்டும் என்றால், உடனே என்ன நோய்க்கு என்று கேட்டுவிடாதீர்கள்*. அவர்களின் தனிப்பட்ட நோய்கள் பற்றி மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்று கருதலாம். *விரைவில் நலமடைவீர்கள் என்று நம்புகிறேன்* என்று கூறலாம்.

 *நண்பர்களிடமோ யாரிடமோ நேரில் சந்தித்துப் பேசும்போது Phoneனை நோண்டிக்கொண்டிருக்காதீர்கள்*.

 *கேட்டால் தவிர அறிவுரை வழங்காதீர்கள்*.

 நீண்ட நாட்கள் கழித்து யாரையும் சந்தித்தால், அவர்களின் *சம்பளம், வயது ஆகியவற்றைக் கேட்காதீர்கள்*. அவர்களாகவே சொன்னால் தவிர.

 தெருவில் யாரையாவது சந்திக்க நேர்த்தால், *Styleகாக கருப்புக்கண்ணாடி அணிந்திருந்தால் கழற்றிவிட்டுப் பேசுங்கள்*. கண்பார்த்து பேசுதல் நம்பிக்கைக்கு நல்லது.

 யார் தனிப்பட்டப் பிரச்சினையிலும் நேரடியாக *வலிய போய் தலையிடாதீர்கள்.*

வியாழன், 21 ஜனவரி, 2021

முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை - old Generation - Tamil Generation

 

தவளை கத்தினால் மழை.

🌝 அந்தி ஈசல் பூத்தால் 
அடை மழைக்கு அச்சாராம். 
🌝 தும்பி பறந்தால் தூரத்தில் மழை.
🌝 எறும்பு ஏறில் பெரும் புயல்.
🌝 மார்கழி மழை மண்ணுக்கு உதவாது. 
🌝 தை மழை நெய் மழை.
🌝 மாசிப் பனி மச்சையும் துளைக்கும். 
🌝 தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு.
🌝 புற்று கண்டு கிணறு வெட்டு.
🌝 வெள்ளமே ஆனாலும் 
பள்ளத்தே பயிர் செய். 
🌝 காணி தேடினும் கரிசல் மண் தேடு.
🌝 களர் கெட பிரண்டையைப் புதை.
🌝 கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி 
கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு.
🌝 நன்னிலம் கொழுஞ்சி 
நடுநிலம் கரந்தை 
கடை நிலம் எருக்கு.
🌝 நீரும் நிலமும் இருந்தாலும் 
பருவம் பார்த்து பயிர் செய்.
🌝 ஆடிப்பட்டம் பயிர் செய். 
🌝 விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.
🌝 மழையடி புஞ்சை
மதகடி நஞ்சை.
🌝 களரை நம்பி கெட்டவனும் இல்லை மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை.
🌝 உழவில்லாத நிலமும் 
மிளகில்லாத கறியும் வழ வழ. 
🌝 அகல உழவதை விட 
ஆழ உழுவது மேல் .
🌝 புஞ்சைக்கு நாலு உழவு 
நஞ்சைக்கு ஏழு உழவு.
🌝 குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை.
🌝 ஆடு பயிர் காட்டும் 
ஆவாரை கதிர் கட்டும்.
🌝 கூளம் பரப்பி கோமியம் சேர் .
🌝 ஆற்று வண்டல் தேற்றும் பயிரை. 
🌝 நிலத்தில் எடுத்த பூண்டு 
நிலத்தில் மடிய வேண்டும்.
🌝 காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும்.
🌝 தேங்கி கெட்டது நிலம் 
தேங்காமல் கெட்டது குளம்.
🌝 கோரையை கொல்ல கொள்ளுப் பயிர் விதை.
🌝 சொத்தைப் போல் 
விதையை பேண வேண்டும்.
🌝 விதை பாதி வேலை பாதி.
🌝 காய்த்த வித்திற்கு பழுது இல்லை. 
🌝 பாரில் போட்டாலும் பட்டத்தில் போடு.
🌝 கோப்பு தப்பினால் 
குப்பையும் பயிராகாது.
🌝 ஆடி ஐந்தில் விதைத்த விதையும் புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர்கள் வைத்த தனம். 
🌝 கலக்க விதைத்தால்
களஞ்சியம் நிறையும்.
அடர விதைத்தால் போர் உயரும்.

வாழ்க வையகம்! 
வாழ்க வளமுடன்! 
எல்லா உயிர்களும் இன்பமாக வாழ்ந்தால் மட்டுமே நாம் நலமோடு வாழ இயலும்.

#உழவே_தலை.
தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.
நீர் இன்றி அமையாது உலகு.

"என் மக்கள்"
கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்.

கடைசி மரமும் வெட்டி உண்டு
கடைசி மரமும் விஷம் ஏறிக்
கடைசி மீனும் பிடி பட
அப்போதுதான் உறைக்கும்.
இனி பணத்தைச் சாப்பிட 
முடியாது என்பது!!

ஆறும் குளமும் மாசு அடைந்தால்
சோறும் நீறும் எப்படி கிடைக்கும்!.
நீர் நிலைகளை காப்போம்.
இணைவோம்.

நம் மூத்த முன்னோர் சொல்மிக்க மந்திரமில்லை.
மேழிச் செல்வம் கோழை படாது...

#முன்னோர்கள் சொன்ன ஒவ்வொரு பழமொழி வார்த்தைகளிலும் அர்த்தங்கள் உள்ளது..

அனைவரும் அறிந்துகொள்ளுங்கள்
old Generation - Tamil Generation 

Popular Posts

Facebook

Blog Archive