indian Political | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil: indian Political

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

indian Political லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
indian Political லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 3 ஏப்ரல், 2021

தா.பாண்|டியன் - கம்யூனிஸ்ட் கட்சி - D.Pandiyan life History - Communist party


உசிலம்பட்டி அருகே உள்ள வெள்ளைமலைப்பட்டி கிராமத்தில் தாவீது (டேவிட்) - நவமணி தம்பதிக்கு நான்காவது மகனாகப் பிறந்தவர் தா.பாண்|டியன் (18.5.1932). அந்தக் காலத்தில் கல்விச் சேவை செய்வதற்காக கிறிஸ்தவ மிஷனரி தொடங்கிய பள்ளியில் ஆசிரியர்களாக இருந்தனர் பாண்டியனின் பெற்றோர். காமக்காபட்டி கள்ளர் சீரமைப்புத் துறைப் பள்ளியில் ஆரம்பக்கல்வி. பின்னர், உசிலம்பட்டி போர்டு உயர்நிலைப் பள்ளியில் பயின்றார் பாண்டியன்.

மேடையில் கன்னிப்பேச்சு சிறந்த பேச்சாளர். உசிலம்பட்டியில் 8-ம் வகுப்பு படித்தபோது அவரைக் கேட்காமலேயே பேச்சுப் போட்டியில் சேர்த்துவிட்ட ஆசிரியர், “உன் அப்பா வாத்தியார்தானே, அவரை எழுதித் தரச் சொல்லிப் பேசு” என்று சொல்லிவிட்டார். தந்தையோ, “படிக்கிற வயசுல மேடையேறுன யாரும் உருப்பட்டதில்லை” என்று சொல்லிவிட்டார். உரை எழுதிக் கொடுத்து பயிற்சியும் தந்தவர் அண்ணன் தா.செல்லப்பா. பிற்காலத்தில் கல்லூரிப் பேராசிரியராக இருந்தவர் இவர். ஒருகட்டத்தில் “நீயே போட்டிக்குத் தயாராகு” என்று அண்ணன் தந்த ஊக்கத்தில் சிறந்த பேச்சாளராக உருவானார் பாண்டியன். காரைக்குடி கம்பன் கழகத்துக்கும் இதில் பெரும் பங்குண்டு.
துடிப்பான மாணவர் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் இன்டர்மீடியட் சேர்ந்தபோதே (1953) கட்சியிலும் சேர்ந்துவிட்டார். மாணவர் பேரவைத் தேர்தலிலும் வெற்றி. பின்னர், அதே கல்லூரியில் ஆங்கில ஆசிரியரான பிறகு, கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டினார். 1957 தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் புனைப்பெயரில் அவர் பேச, ஒரு பத்திரிகையில் உண்மையான பெயர் வந்துவிட்டது. வேலையை ராஜினாமா செய்யச் சொன்னார் கல்லூரி முதல்வர்.

அந்நேரம் பார்த்து பாண்டியனை அழைத்த அழகப்பா கல்லூரி நிறுவனரான அழகப்பச் செட்டியார், “தலைமறைவாக இருந்துகொண்டே போலீஸிடம் சிக்காமல் அரசியல் நடத்துகிற சாமர்த்தியசாலிகள் அல்லவா கம்யூனிஸ்ட்டுகள்... நீ இப்படி மாட்டிக்கொண்டாயே?” என்றார். கூடவே, லண்டனில் தான் சட்டம் படித்த போது வாங்கிய மார்க்ஸ் எழுதிய புத்தகங்களை தா.பா.விடம் கொடுத்தார் செட்டியார். “நம் கல்லூரியில் மாணவர் பேரவைத் தலைவராக வென்ற எந்த மாணவனும், ‘அரியர்’ வைக்காமல் தேர்ச்சி பெற்றதில்லை. நீ இரண்டிலும் வென்றாயல்லவா... அதற்குத்தான் இந்தப் பரிசு!” என்று ஆச்சரியப்பட வைத்தார்.

தாமதமாக உணர்ந்த பேரன்பு! தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்காக, இரண்டு வயதில் தந்தையை இழந்த ஜாய்சி என்ற பெண்ணை தா.பா.வுக்குத் திருமணம் செய்துவைத்தார் அப்பா தாவீது. பாண்டியனுக்கு டேவிட் ஜவஹர் என்ற மகனும், அருணா, பிரேமா ஆகிய மகள்களும் உள்ளனர். வெகுசீக்கிரமே, கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளரானதால் வேலையை விட்டுவிட்டு சென்னைக்குப் போய்விட்டார் தா.பா. அரசியலுக்காக சென்னையில் சட்டம் படித்தவர், நீதிமன்றத்துக்குச் செல்லாமல் ‘ஜனசக்தி’யில் கட்டுரை எழுதுவது, பொதுக்கூட்டம் என்று இயங்கிவந்தார். காரைக்குடியில் பள்ளி ஆசிரியையாக இருந்த தனது மனைவி அனுப்பிவைத்த சம்பளத்திலேயே இவரது ஜீவனம் நடந்தது. “திருமணமான புதிதில் அவளது சின்ன எதிர்பார்ப்பான பூவைக் கூட நான் வாங்கிக் கொடுத்ததில்லை. பட்டது போதும் என்று 2012-ல் மறைந்துவிட்டாள். இப்போது அவளது படத்துக்குப் பூச்சூடி கடனைத் தீர்க்கிறேன்” என்கிறார் பாண்டியன்.

தலைசிறந்த ஜனநாயகவாதி! இந்த உலகத்தை மீட்க ஒரே ஒரு கட்சியால்தான் முடியும் என்றெல்லாம் கருத மாட்டார். மாற்றுக் கட்சிகள், தலைவர்களின் கொள்கைகளையும் மதிப்பவர். ஆரம்பகால கம்யூனிஸ்ட் கட்சியினர், திகவை ‘திராவிடர் கலகம்’ என்று இழிவுபடுத்தி வந்த காலத்திலேயே பெரியாரைப் புகழ்ந்துபேசி கட்சியின் கண்டனத்துக்கு உள்ளானவர். எந்தக் கட்சி எங்கே பொதுக்கூட்டம் போட்டாலும் முதல் ஆளாகப்போய்விடுவார். அண்ணாவை அவரது மேடையிலேயே எதிர்த்துப் பேசியிருந்தாலும், 1967-ல் திமுக வெற்றிவிழா சென்னை கடற்கரையில் நடந்தபோது, பார்வையாளர் வரிசையில் போய் உட்கார்ந்து கவனித்தவர். இப்போதும்கூட திராவிடக் கட்சிகளின் ஆட்சியை விமர்சிக்கிறபோது, அவற்றின் சாதனைகளைச் சொல்லாமல் மறைப்பதில்லை.

கைகொடுத்த ‘கை’! கட்சியில் இருந்து நீக்கப்பட்டபோது, தோழர் டாங்கே, கல்யாணசுந்தரம் போன்றோர்களோடு சேர்ந்து ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கிய பாண்டியன், 1983 முதல் 2000-ம் வரையில் அதன் மாநிலச் செயலாளராக இருந்தார். சட்டமன்றத்துக்கு 6 முறை, நாடாளுமன்றத்துக்கு 3 முறை என்று மொத்தம் 9 தேர்தல்களில் போட்டியிட்ட தா.பாண்டியன் ஒருமுறைகூட தன் கட்சி சின்னத்தில் வென்றதில்லை. ஆனால், தனிக்கட்சி நடத்திவந்த காலகட்டத்தில் வடசென்னையில் கை சின்னத்தில் போட்டியிட்டு இருமுறை எம்.பி.யாகியிருக்கிறார்.

மும்முறை செயலாளர்! 2000-ல், ஐககவைக் கலைத்துவிட்டு தாய்க்கட்சியில் மீண்டும் இணைந்தார். 2005-ல், கட்சியின் மாநிலச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து மும்முறை அப்பொறுப்புக்குத் தேர்வுசெய்யப்பட்டவர், 2015 வரையில் தொடர்ந்து 10 ஆண்டுகள் அப்பொறுப்பில் இருந்தார். இளம் வயதிலேயே கட்சியின் தேசியக்குழு உறுப்பினரான அவர், இப்போதும் அப்பொறுப்பில் தொடர்கிறார்.
செத்துப் பிழைத்தவர்! சிறந்த மொழிபெயர்ப்பாளர். 

இந்திரா காந்தி தொடங்கி ராஜீவ் காந்தி வரையில் பலரது பேச்சுக்களை மேடையில் மொழிபெயர்த்திருக்கிறார். 1991 மே 21-ல் குண்டுவெடிப்பில் ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட சம்பவத்தின்போது அவருக்குப் பின்னால் இருந்த தா.பா.வும் தூக்கிவீசப்பட்டார். பத்திரிகையில் வெளியான இறந்த 19 பேர் பட்டியலில் முதலில் இவரது பெயரும் இடம்பெற்றது. போலீஸ் அதிகாரிகளும் வீட்டுக்கு போன் செய்து பாண்டியன் இறந்ததாகச் சொல்லிவிட்டார்கள். ஆனால், சென்னை அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்டு அதிசயமாக உயிர்பிழைத்தார் தா.பா. அங்கேதான் ராஜீவின் உடல் வைக்கப்பட்டிருந்தது என்பதால், அந்த மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தியின் பெயரைச் சூட்டக் காரணமாக இருந்தார். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு விடுதலைப் புலிகளைக் கடுமையாக எதிர்த்தார். ஆனால், ஈழத்தமிழர்களின் உரிமைக்காக நெடுமாறனுடன் சேர்ந்து தொடர்ந்து குரல் கொடுத்தார்.

பிடிவாதக்காரர்! சென்னை துறைமுகத்தில் தினக்கூலித் தொழிலாளர்கள் 58 பேர் நீதிமன்றத்தை நாடி, 1992-ல் பணி நிரந்தர உத்தரவு பெற்றனர். அதை ஏற்காமல் அப்போதைய இயக்குநர் மேல்முறையீடு செய்ததால், அதைக் கண்டித்து காலவரையறையற்ற உண்ணாவிரதம் இருந்தார் தா.பா. அப்போது ஆளுங்கட்சியாக இருந்த, இவரது கூட்டணியில் இருந்த அதிமுகவும், காங்கிரசும் கேட்டுக்கொண்டும் தன் பிடிவாதத்தைக் கைவிடவில்லை.

 கடைசியில், வழக்கை வாபஸ் பெற்று 58 பேரையும் பணிநிரந்தரம் செய்தது துறைமுகக் கழகம். எளிமையிலும் பிடிவாதம். இப்போதும்கூட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதையே வழக்கமாக வைத்திருக்கிறார்.
எழுத்தாளர் தா.பா.! 1962-ல் ‘ஜனசக்தி’யில் எழுத ஆரம்பித்தவர், இப்போதும் எழுதிக்கொண்டிருக்கிறார். ஆரம்ப காலத்தில் ‘சவுக்கடி' என்ற புனைப்பெயரில் இவர் எழுதிய கட்டுரைகளுக்குக் கட்சி எல்லையைத் தாண்டியும் வாசகர்களுண்டு. சுய கட்சி விமர்சனத்தில் இவரை மிஞ்சிய சமகாலப் பொதுவுடமைவாதி யாருமில்லை. 16 ஆண்டு காலம் 'ஜனசக்தி' ஆசிரியராக இருந்த இவர் இதுவரையில் 13 சிறு வெளியீடுகள், 8 நூல்கள், 6 மொழிபெயர்ப்பு நூல்கள் போன்றவற்றை எழுதியுள்ளார். அதில் ‘மேடைப்பேச்சு’, ‘பொதுவுடமையரின் வருங்காலம்’ நூல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றவை!

தனிநபர் வரலாறு! தமிழக வரலாற்றிலேயே முதல்முறையாக கம்யூனிஸ்ட் தலைவர் ஒருவருக்கு (ஜீவா) சிலை வைத்தபோது, அந்தக்கு ழுவின் தலைவராக இருந்தவர் தா.பா. “தனிநபர்களைவிட இயக்கமே பெரிது” என்று சொல்லும் கம்யூனிஸ்ட் கட்சியில், “தனிநபருக்கும் வரலாற்றில் இடமுண்டு” என்று வாதிடும் துணிச்சலுக்கு மறுபெயர்தான் தா.பா.!
D.Pandiyan life History - Communist party

வியாழன், 26 நவம்பர், 2020

*🏛அரசியல் சூழ்ச்சி 💪🏻* Political maneuvering

*🏛அரசியல் சூழ்ச்சி 💪🏻* Political maneuvering



*மூன்று பெண்களை மையப்படுத்தி நகர்ந்ததுதான் இந்த நிர்பயா வழக்கு.......*


 *பாதிக்கப்பட்ட பெண் நிர்பயா, நிர்பயாவின் தாயார் ஆஷாதேவி, குற்றவாளியின் மனைவி புனிதா.. இந்த பெண்கள்தான் பல தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளனர்!*


*நிர்பயா என்பது ஒரு கற்பனை பெயர்... அதன் பொருள் பயம் அற்றவள் என்பது..*


*நண்பனுடன் சினிமா பார்த்துவிட்டு வரும்போதுதான் 5 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்...*



 *பலாத்காரத்தை எதிர்த்ததால், நிர்பயாவின் வயிறு உள்ளிட்ட பகுதிகளில் மனிதாபிமானம் பெயரளவுக்குகூட இன்றி, 5 பேரும் மிருகம் போல தாக்கி ரத்தம் வழிய அடித்தனர்...*


*கதற கதற பலாத்காரம் செய்தனர்...*


*அவரது நண்பரும் தாக்கப்பட்டு, இருவருமே நிர்வாணமாக்கப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டனர்."*


*ஐயாம் ஸாரி மம்மி.. என்னால இந்த வலி, வேதனையை தாங்கவே முடியவில்லை" இதுதான் நிர்பயாவின் கடைசி வார்த்தை..*


 *நிர்பயாவுக்கு தீவிர சிகிச்சை ஆஸ்பத்திரியில் நடந்த நேரம்.. ஒவ்வொரு குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டு வந்ததும் அப்போதுதான்.*


*டெல்லி மாஜிஸ்திரேட்டிடம் நிர்பயாண மரண வாக்குமூலத்தில்*


*எனக்கு வாழணும்னு ஆசையா இருக்கு.. எப்படியாவது என்னை காப்பாற்றுங்கள்.. குற்றவாளிகளை மட்டும் தப்பவிட்டு விடாதீர்கள்" என்றார். நிர்பயாவின் ஆசை இப்போது நிறைவேற்றப்பட்டுள்ளது!*


*அன்று தீர்ப்பை கேட்டதுமே குற்றவாளி முகேஷின் தாயார், நீதிபதிக்கு கை கூப்பி கண்ணீர் மல்க கருணை காட்டுமாறு கோரிக்கை விடுத்தார்..*


*பிறகு மனசு கேட்காமல் நிர்பயாவின் தாயாரிடம் வேகமாக ஓடினார்.. அவரது சேலையைப் பிடித்து பிச்சை கேட்பது "என் பையனை மன்னிச்சுருங்க... அவனோட உயிர் இப்ப உங்க கையில்தான். இரக்கம் காட்டுங்க" என்று அழுதபடி கெஞ்சினார்*


 *நிர்பயாவின் தாயார் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றார்.*


 *ரொம்ப வலிக்குது மம்மி என்று அம்மாவிடம் ஈனகுரலில் அழுத நிர்பயாவின் வார்த்தைகள் அபபோது நினைவுக்கு வந்திருக்கவே செய்யும்... "*



*தெருவில் இனிப்புகளை வைத்தால் அதை நாய்கள் வந்து சாப்பிடதானே செய்யும்? நிர்பயாவின் பெற்றோர் அவரை எதற்காக ராத்திரி நேரத்தில் யாருடனும் வெளியே அனுப்புகிறார்கள்? குற்றவாளிகளின் வக்கீல் சர்மா கேட்ட கேள்வியும் நினைவுக்கு வந்து போயிருக்கவே செய்யும்!*


*பிறகு அமைதியாக சொன்னார், "எனக்கும் ஒரு மகள் இருந்தாள். அவளுக்கு நடந்ததை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா?*


*இந்த நீதிக்காகத்தான் நான் 7 வருஷமா காத்திருந்தேன்.." என்றார். ஒரு வயிறு துடித்தது... இன்னொரு வயிறு தவித்தது.. இருவரின் கண்ணீரால் கோர்ட்டே அந்த சமயம் மயான அமைதியுடன் காட்சி அளித்தது.*


*அநேகமாக இந்த 7 வருஷங்களில் ஆஷாதேவியின் பெரும்பாலான வார்த்தை அவங்களை தூக்குல போடுங்க என்பதுதான்..*


 *ஒவ்வொரு முறை குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பிக்கும்போதும் ஆஷாதேவி துடித்த துடிப்பும், தவிப்பும் வார்த்தைகளில் அடைத்துவிட முடியாது..*


*அன்று ஆஷாதேவி அழுதது போலவே இன்றும் அழுதார்.*


 *ஆனால் நிறைய வித்தியாசம்! இந்த தாயின் ஆசையும் நிறைவேற்றப்பட்டுள்ளது!!*


*இதில் சம்பந்தமே இல்லாதவர் அக்‌ஷய் மனைவி புனிதா.. அப்பாவி பெண்.. அபலை பெண்.. கணவனை மலை போல நம்பியிருந்தவர்..*


*ஒருவேளை அக்‌ஷய் உயிருடன் இருந்திருந்தால் புனிதாவின் நிலைமை அதோகதி என்றுதான் சொல்ல வேண்டும்..*


 *தன் தாலியை காப்பாற்றி கொள்ள கோர்ட் வளாகத்தில் இந்த பெண்ணின் தவிப்பினை உணர முடிகிறது..*


*எங்கோ பிறந்து வளர்ந்து, ஒரு கழிசடைக்கு வந்து கழுத்தை நீட்டி தாலியை வாங்கி கொண்ட இந்த பெண்ணை நினைத்தால் பரிதாபத்தை தவிர எதுவுமே தோன்றவில்லை*



*புனிதாவாகட்டும், அக்‌ஷயாவின் அம்மாவாகட்டும், ஆஷாதேவியாகட்டும்.. இவர்கள் எல்லாருமே தாய்மார்கள்தான்.. 7 வருடமாக இவர்களின் தவிப்புகள், துடிப்புகள், முயற்சிகள், பதறல்கள், கதறகல்கள் எல்லாமே ஒரு முடிவுக்கு வந்துவிட்டன...*



*ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை உண்டு பண்ணி உள்ளனர்.. இவர்களின் கண்ணீர் ஏதோ ஒரு கற்புக்குரிய பாடத்தை தந்திருக்கிறது..*


 *இவை யாவுமே தாய்மையின் வெளிப்பாடுதான்.. இந்த தாய்மையும் ஒரு பெண்மை என்பதை ஆண்கள் உணர்ந்தாலே பாதி குற்றங்கள் குறைந்து விடும்...*


 *இல்லையென்றால் நம் கண்ணதாசன் சொன்னது போலதான்... 'கூக்குரலாலே கிடைக்காது; அது கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது; அந்தக் கோட்டையில் நுழைந்தால் திரும்பாது.*

சனி, 14 டிசம்பர், 2019

🤔🤔*மீண்டும் #காங்கிரஸ்_கட்சி_ஆட்சி ஏன் வேண்டும்???.. துல்லியமான விபரம்*

🤔🤔
*மீண்டும் #காங்கிரஸ்_கட்சி_ஆட்சி ஏன் வேண்டும்???.. துல்லியமான விபரம்* 

*ஒவ்வொரு முறையும் பிரதம மந்திரி மோடி மேடையில் கடந்த 60 வருடங்களாக காங்கிரஸ் ஒன்றுமே செய்யவில்லை, ஒன்றுமே செய்யவில்லை என்று முழங்குவார்...*

*இதுதான் அவருக்கு பதில்..... 👇🏻*

*இதை எழுதியது ஜூலியஸ் ரெபைரோ, ஓய்வு பெற்ற IPS அதிகாரி, முன்னாள் DGP, மஹாராஷ்டிரா.* 

*ஒரு சாதாரண இந்திய பிரஜையாகிய நான் சொல்லிய இவைகள் அவர்களுக்கு போய் சேர வேண்டும்.*

*மோடிஜி, இப்படி சொல்லுவதை நிறுத்தி, 60 வருடங்களில் என்ன சாதித்தோம் என்பதை பாருங்கள்,*

*இந்திய பிரஜைகள் எல்லாரும் முட்டாள்கள் இல்லை என்பதை முதலில் உணருங்கள்.* 

*நீங்கள் பிரதான் மந்திரியாக இருக்கும் நம் இந்தியாவை 200 வருடங்களுக்கு மேலாக ஆங்கிலேயன் ஆட்சி செய்தான்.*

*இந்தியர்கள் அனைவரும் அவனுக்கு அடிமைகளாகத்தான் இருந்தார்கள்.* 

*1947ல் காங்கிரஸ் அரசாங்கம் ஆட்சி ஆரம்பித்தபோது, ஆங்கிலேயன் துடைத்து வைத்துவிட்டுப்போன பூஜ்யமான பொருளாதாரம்.*

*ஆங்கிலேயன் விட்டுப்போன குப்பைகளைத்தவிர வேறு ஏதுமில்லை.*

*ஒரு பின் தயாரிக்கக்கூட எவ்விதமான வசதியையும் அவன் விட்டுப்போகவில்லை.*

*இந்தியா முழுவதுமாக 20 கிராமத்தில் மட்டுமே மின்சார வசதி.*

*20 அரசர்களுக்கு மட்டுமே தொலைபேசி.*

*குடிதண்ணீர் கிடையாது.*

*நாடு முழுதும் 10 சிறிய அணைக்கட்டுகள்.*
 
*ஒரு மருத்துவமனையும் கிடையாது.*

*ஒரு கல்வி நிறுவனம் கிடையாது,*

*விவசாயத்திற்கு நீர் வசதி, பயிர்களுக்கு பூச்சி மருந்து எதுவுமே கிடையாது.*

*வேலைகள் கிடையாது.*
*பசி பஞ்சம்தான் நாட்டில். பிஞ்சுகுழந்தைகள்கொத்துக்கொத்தாக மரணம்.*

*எல்லையில் மிக சிறிய அளவில் இராணுவ அதிகாரிகள்,*
*4 விமானங்கள், 20 பீரங்கிகள்,நாட்டின் நான்கு எல்லைகளும் திறந்த நிலை.*

*குறைவான அளவில் சாலைகள் மற்றும் பாலங்கள்.*
*காலியான கருவூலங்கள்.*

*இந்த நிலையில்தான் நேரு பதவியேற்றார்...* 

*60 வருடங்கள் கழித்து இந்தியா?????*

*உலகில் மிகப்பெரிய இராணுவ சேவை.* 

*ஆயிரக்கணக்கில் போர் விமானங்கள், பீரங்கிகள்,* *லட்சக்கணக்கான தொழில்நுட்ப ஸ்தாபனங்கள்,*

 *அனைத்து கிராமங்களிலும் மின் வசதி,* 

*நூற்றுக்கணக்கான மின்சார உற்பத்தி நிலையங்கள்,*

*இலட்சக்கணக்கான கிலோ மீட்டர்கள் சாலைகள் மற்றும் பாலங்கள்,*

*புதிய இரயில் நிலையங்கள்,*

 *ஸ்டேடியங்கள்,*
 
*சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரிகள், அனைத்து பிரஜைகள் இல்லங்களில் தொலைக்காட்சி மற்றும் தொலைபேசி.*

*இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வேலைசெய்யகட்டமைப்பு, வங்கிகள், பல்கலைக்கழகங்கள்,*
*AIIMS, IIMS,அணு ஆயுதங்கள், நீர்மூழ்கி கப்பல்கள்,  அணு ஆயுத ஆராய்ச்சி நிறுவனங்கள்,* 

*விண்வெளி அறிவியல் ஆராய்ச்சி நிலையம், பொதுத்துறை நிறுவனங்கள்.*

*பல வருடங்களுக்கு முன்பே இந்திய இராணுவம் லாஹுர் வரை சென்று, பாகிஸ்தான் நாட்டை இரண்டாக ஆக்கியது,*

*அப்போது ஒரு லட்சத்திற்கும் மேலான பாகிஸ்தான் நாட்டவர்கள்  நம்மிடம் சரணடைந்தது,* 

*இந்தியாவிலிருந்து உணவுப்பொருட்கள் மற்றும் கனிம வளங்களை ஏற்றுமதி செய்தது,*

*வங்கிகள் அனைத்தையும் தேசிய உடைமை ஆக்கியது இந்திரா காந்தி.*

*கணினி அறிமுகம். அதன் மூலம் உள்நாட்டிலும், அயல்நாடுகளிலும் அதிக வேலை வாய்ப்புகள்.* 

*மோடிஜி நீங்கள் ப்ரதான் மந்திரி ஆனது இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி மூலம்....* 

*நீங்கள் ஆட்சி அமைக்கும்போது இந்தியா பொருளாதார நாடுகளின் உலக அளவில் முதல் 10ல்...* 

*இதை தவிர GSLV, மங்கள்யான், மெட்ரோ ரெயில், மோனோ ரயில்,  பன்னாட்டு வானூர்தி நிலையங்கள்,*

*ப்ரித்வி ஏவுகணை,அக்னி ஏவுகணை, நாக் ஏவுகணை,*
*அணு ஆயுதங்கள் தாங்கிய நீர்மூழ்கிக் கப்பல்கள்.....*
*இவைகள் அனைத்தும் நீங்கள் பிரதமராவதற்கு முன்பே சாதிக்கப்பட்டு விட்டது.*

*தயவுசெய்து நீங்கள் மக்களிடம் வந்து 60 வருடங்களில் காங்கிரஸ் ஒன்றும் செய்யவில்லை என்று சொல்லாதீர்கள்.* 

*கடந்த நான்கு ஆண்டுகள், 6 மாதங்களில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று சொல்லி வாக்கு கேளுங்கள்.* 

*பெயர்கள் மாற்றம்,சிலை அரசியல், மாட்டு அரசியல்,* 

*தோல்வியுற்ற பண மதிப்பு இழப்பு (demonetization), அனுபவில்லாமல் செயல்பட்ட GST, மக்களை வெயிலிலும், மழையிலும் வரிசையில் நிற்க வைத்து அவர்களது பணத்தை எடுக்க முடியாத நிலைக்கு தள்ளியது,*

 *பாஜக எதிர்கட்சியாக இருக்கும்போது எதிர்த்த  வெளிநாட்டு நேரடி பண முதலீடுகள்,
இப்போது வெட்கமில்லாமல் ஆதரிப்பது....* 

நாட்டை அம்பானிகளுக்கும், அதானிகளுக்கும் விற்றது,
அம்பானியின் இரண்டு மாத கம்பெனிக்கு ரஃபேல் விமான ஆர்டரை கொடுத்து....
இந்திய நிறுவனம் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் ஐ செயலிழக்க செய்தது, BSNL நிறுவனத்தை மூடுவதற்கு அம்பானியின் ஜியோ மூலமாக செயல்படுவது....

குருட் ஆயில்
(கச்சா எண்ணெய்) மிகக்குறைந்த விலையில் கிடைக்கும்போது, பெட்ரோலும் டீசலும், எரிவாயுவையும்
அதிக விலைக்கு விற்குமளவிற்கு வரிகள்....

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் கணக்கு வைத்திருந்த
ஏழை, நடுத்தர மக்களின் பணமான
ரூ 1771 கோடிகளை, மினிமம் பேலன்ஸ் வைக்காமல் இருப்பதாக சொல்லி தண்டத்தொகை... 

சப்கே சாத்,
சப்கோ விகாஸ் யாருக்கு என்றால்
அமித்ஷா, அவரின் மகன் சவுரியா தோவல், அம்பானி, அதானி, பாபா ராம்தேவ் பதஞ்சலி குழுமம் மற்றும் பாஜகவின் ஸ்பான்சர்கள்.

கங்கை நதியை தூய்மைப்படுத்த
ரூ 3000 கோடிகள்.... கங்கையில் குளிக்க செல்லும் ஒவ்வொருவருக்கும் தெரியும் இந்த பணம் எங்கே என்று????? 

*இது காங்கிரஸ் கட்சிக்கு விளம்பரமல்ல....* 
*நான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவனுமில்லை.*

*நான் விபரங்கள் தெரிந்த சாதாரண இந்திய குடிமகன்.* 

*ஒவ்வொரு முறையும்60 ஆண்டுகள்* *ஒன்றுமேநடக்கவில்லை என்று சொல்லும்போது என்னுடைய பகுத்தறிவு ஏற்க மறுக்கிறது.....*

*படித்ததில் பிடித்தது*

Popular Posts

Facebook

Blog Archive