Political maneuvering | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil: Political maneuvering

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

Political maneuvering லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Political maneuvering லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 26 நவம்பர், 2020

*🏛அரசியல் சூழ்ச்சி 💪🏻* Political maneuvering

*🏛அரசியல் சூழ்ச்சி 💪🏻* Political maneuvering



*மூன்று பெண்களை மையப்படுத்தி நகர்ந்ததுதான் இந்த நிர்பயா வழக்கு.......*


 *பாதிக்கப்பட்ட பெண் நிர்பயா, நிர்பயாவின் தாயார் ஆஷாதேவி, குற்றவாளியின் மனைவி புனிதா.. இந்த பெண்கள்தான் பல தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளனர்!*


*நிர்பயா என்பது ஒரு கற்பனை பெயர்... அதன் பொருள் பயம் அற்றவள் என்பது..*


*நண்பனுடன் சினிமா பார்த்துவிட்டு வரும்போதுதான் 5 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்...*



 *பலாத்காரத்தை எதிர்த்ததால், நிர்பயாவின் வயிறு உள்ளிட்ட பகுதிகளில் மனிதாபிமானம் பெயரளவுக்குகூட இன்றி, 5 பேரும் மிருகம் போல தாக்கி ரத்தம் வழிய அடித்தனர்...*


*கதற கதற பலாத்காரம் செய்தனர்...*


*அவரது நண்பரும் தாக்கப்பட்டு, இருவருமே நிர்வாணமாக்கப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டனர்."*


*ஐயாம் ஸாரி மம்மி.. என்னால இந்த வலி, வேதனையை தாங்கவே முடியவில்லை" இதுதான் நிர்பயாவின் கடைசி வார்த்தை..*


 *நிர்பயாவுக்கு தீவிர சிகிச்சை ஆஸ்பத்திரியில் நடந்த நேரம்.. ஒவ்வொரு குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டு வந்ததும் அப்போதுதான்.*


*டெல்லி மாஜிஸ்திரேட்டிடம் நிர்பயாண மரண வாக்குமூலத்தில்*


*எனக்கு வாழணும்னு ஆசையா இருக்கு.. எப்படியாவது என்னை காப்பாற்றுங்கள்.. குற்றவாளிகளை மட்டும் தப்பவிட்டு விடாதீர்கள்" என்றார். நிர்பயாவின் ஆசை இப்போது நிறைவேற்றப்பட்டுள்ளது!*


*அன்று தீர்ப்பை கேட்டதுமே குற்றவாளி முகேஷின் தாயார், நீதிபதிக்கு கை கூப்பி கண்ணீர் மல்க கருணை காட்டுமாறு கோரிக்கை விடுத்தார்..*


*பிறகு மனசு கேட்காமல் நிர்பயாவின் தாயாரிடம் வேகமாக ஓடினார்.. அவரது சேலையைப் பிடித்து பிச்சை கேட்பது "என் பையனை மன்னிச்சுருங்க... அவனோட உயிர் இப்ப உங்க கையில்தான். இரக்கம் காட்டுங்க" என்று அழுதபடி கெஞ்சினார்*


 *நிர்பயாவின் தாயார் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றார்.*


 *ரொம்ப வலிக்குது மம்மி என்று அம்மாவிடம் ஈனகுரலில் அழுத நிர்பயாவின் வார்த்தைகள் அபபோது நினைவுக்கு வந்திருக்கவே செய்யும்... "*



*தெருவில் இனிப்புகளை வைத்தால் அதை நாய்கள் வந்து சாப்பிடதானே செய்யும்? நிர்பயாவின் பெற்றோர் அவரை எதற்காக ராத்திரி நேரத்தில் யாருடனும் வெளியே அனுப்புகிறார்கள்? குற்றவாளிகளின் வக்கீல் சர்மா கேட்ட கேள்வியும் நினைவுக்கு வந்து போயிருக்கவே செய்யும்!*


*பிறகு அமைதியாக சொன்னார், "எனக்கும் ஒரு மகள் இருந்தாள். அவளுக்கு நடந்ததை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா?*


*இந்த நீதிக்காகத்தான் நான் 7 வருஷமா காத்திருந்தேன்.." என்றார். ஒரு வயிறு துடித்தது... இன்னொரு வயிறு தவித்தது.. இருவரின் கண்ணீரால் கோர்ட்டே அந்த சமயம் மயான அமைதியுடன் காட்சி அளித்தது.*


*அநேகமாக இந்த 7 வருஷங்களில் ஆஷாதேவியின் பெரும்பாலான வார்த்தை அவங்களை தூக்குல போடுங்க என்பதுதான்..*


 *ஒவ்வொரு முறை குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பிக்கும்போதும் ஆஷாதேவி துடித்த துடிப்பும், தவிப்பும் வார்த்தைகளில் அடைத்துவிட முடியாது..*


*அன்று ஆஷாதேவி அழுதது போலவே இன்றும் அழுதார்.*


 *ஆனால் நிறைய வித்தியாசம்! இந்த தாயின் ஆசையும் நிறைவேற்றப்பட்டுள்ளது!!*


*இதில் சம்பந்தமே இல்லாதவர் அக்‌ஷய் மனைவி புனிதா.. அப்பாவி பெண்.. அபலை பெண்.. கணவனை மலை போல நம்பியிருந்தவர்..*


*ஒருவேளை அக்‌ஷய் உயிருடன் இருந்திருந்தால் புனிதாவின் நிலைமை அதோகதி என்றுதான் சொல்ல வேண்டும்..*


 *தன் தாலியை காப்பாற்றி கொள்ள கோர்ட் வளாகத்தில் இந்த பெண்ணின் தவிப்பினை உணர முடிகிறது..*


*எங்கோ பிறந்து வளர்ந்து, ஒரு கழிசடைக்கு வந்து கழுத்தை நீட்டி தாலியை வாங்கி கொண்ட இந்த பெண்ணை நினைத்தால் பரிதாபத்தை தவிர எதுவுமே தோன்றவில்லை*



*புனிதாவாகட்டும், அக்‌ஷயாவின் அம்மாவாகட்டும், ஆஷாதேவியாகட்டும்.. இவர்கள் எல்லாருமே தாய்மார்கள்தான்.. 7 வருடமாக இவர்களின் தவிப்புகள், துடிப்புகள், முயற்சிகள், பதறல்கள், கதறகல்கள் எல்லாமே ஒரு முடிவுக்கு வந்துவிட்டன...*



*ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை உண்டு பண்ணி உள்ளனர்.. இவர்களின் கண்ணீர் ஏதோ ஒரு கற்புக்குரிய பாடத்தை தந்திருக்கிறது..*


 *இவை யாவுமே தாய்மையின் வெளிப்பாடுதான்.. இந்த தாய்மையும் ஒரு பெண்மை என்பதை ஆண்கள் உணர்ந்தாலே பாதி குற்றங்கள் குறைந்து விடும்...*


 *இல்லையென்றால் நம் கண்ணதாசன் சொன்னது போலதான்... 'கூக்குரலாலே கிடைக்காது; அது கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது; அந்தக் கோட்டையில் நுழைந்தால் திரும்பாது.*

Popular Posts

Facebook

Blog Archive