Awareness.Tamil Awareness | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil: Awareness.Tamil Awareness

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

Awareness.Tamil Awareness லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Awareness.Tamil Awareness லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 8 ஜூன், 2018

✍ *மரமும்* *மனிதனும்* 🌴🌴🌴🌴🌴🌴🌴“மரம் வளர்ப்போம்”,

✍ *மரமும்* *மனிதனும்* 🌴🌴🌴🌴🌴🌴🌴“மரம் வளர்ப்போம்”, “இயற்கையைக் காப்போம்”, “இயற்கையை நேசி” “இயற்கையோடு வாழ்வோம்” இதுபோன்ற சொல்லடைகள் சமீப காலமாக அதிகம் பேசப்பட்டு வருகின்றன. காரணம் புவி வெப்பம் அடைந்து மனிதன் அழிவை நோக்கி செல்ல வேண்டிய கட்டாயமாகிவிட்டது. இதனை தவிர்க்கவே மனித மனங்கள் இயற்கை பக்கம் வேகமாக திரும்பியிருக்கின்றது. எனவே புவி வெப்பமயமாவதைத் தடுக்கும் முக்கிய காரணியாக இருக்கும் மரங்களை வளர்க்க வேண்டும். இது இன்றைய இன்றியமையாத அவசியமாகயிருக்கின்றது. எனவே “வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்” என்ற நிலைமாறி “ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்” என்று பேசும் நிலைக்கு வந்துள்ளோம். எனவே இன்று இயற்கை அழிவை காக்க, வெப்பம் தவிர்க்க முதற்காரணியாக மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் என்ற உணர்வை பெறுவோம்.

“இன்றிருக்கும் நிலையே தொடர்ந்தால் இன்னும் 10 ஆண்டுகளில் தமிழகம் பாலைவனமாகும் என்பதில் சந்தேகமில்லை” என்று ஓர் ஆய்வு கட்டுரையில் படித்தேன். எனவேதான் இத்தகைய அவல நிலையை போக்க அரசு, பல தொண்டு நிறுவனங்கள், ஆர்வலர்கள், கல்வி நிறுவனங்கள் போன்ற அமைப்புகள் மரம் வளர்க்கும் பல ஏற்பாடுகளை செய்கின்றன. அவ்வப்போது விழிப்புணர்வு பேரணிகளையும் நடத்தி வருகின்றன.

“மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்” இது ஒவ்வொருவர் மனதிலும் ரீங்காரமிட வேண்டிய சொல்லாகும். மரங்கள் இயற்கையின் கொடை, இவைகள் பூமித்தாய் என்ற முதல் குழந்தைகள். இதை நாம் அழிக்க கூடாது. மாறாக அதைக் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. ஏனெனில் இயற்கையன்னை அனைத்தையும் நமது நலனுக்குத்தானே தந்து கொண்டிருக்கிறாள்.

நலம் தரக்கூடிய நம்மை, வாழ வைக்கக்கூடிய மரங்களை இயற்கை செல்வங்களை நாம் அழிக்கலாமா ? அழிக்கக் கூடாது. இன்று நடப்பது என்ன ? இயற்கை அழிக்கப்படுகிறது, மரங்கள் கொலை செய்யப்படுகின்றன. மணல் அள்ளப்படுகின்றன.

விவசாய நிலம் வாழுமிடமாக (பிளாட்) மாறுகிறது. அதனால் தான் நாம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றோம். (எ.கா.) சுனாமி, நிலநடுக்கம், அதிக வெப்பம், புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை சீற்றங்களால் நாம்தான் பாதிக்கப்படுகின்றோம். ஒன்றை நாம் மறந்துவிடக்கூடாது. “நாம் எந்தளவு இயற்கையை நேசிக்கிறோமோ, அதைவிட பன்மடங்கு இயற்கை நம்மை நேசிக்கும்.

“ஆற்றிலே போட்டாலும் அளந்துபோடு”

அதுபோலவே இயற்கையை நாம் அழிக்கும்போது அதன் சீற்றமும் பன்மடங்காகத்தான் இருக்கும். இதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். மரம் நடுவதன் அவசியத்தை நாம் தெரிந்து கொள்வோம்.

மரங்களினால் கிடைக்கும் நன்மைகள் :

1. தொழில்நுட்பங்களால் ஏற்படும் மாசு நிறைந்த சூழலை மரங்கள் தூய்மைப்படுத்தும்.

2. மரங்கள் தூய்மையான காற்றை வழங்கும்.

3. மரங்கள் வெப்பம் தணிக்கும்.

4. மரங்கள் பறவைகளின் சரணாலயம்.

5. மரங்கள் மண் அரிப்பை தடுக்கும்.

6. நிலத்தடி நீரைக் காக்கும்.

7. முக்கியமாக மழை பெய்ய பெரிதும் உதவுகின்றன.

8. பூ, காய், கனி, கீரை போன்ற உணவு வகைகளை தருகின்றன.

9. மருந்தாக பயன்படுகின்றன.

10. அழகு தரும் மர வேலைபாடுகளுக்கு உதவுகின்றன.

11. இயற்கை உரம் தருகின்றன.

12. இயற்கை சீற்ற அழிவை தடுக்கின்றன.

13. வீடு, கட்டடங்கள் கட்ட பயன்படுகின்றன.

14. நோய் தடுப்புக்கு உதவுகின்றன.

எனவே அன்பர்களே !

மரங்களை வளர்ப்போம் !

காடுகளை உருவாக்குவோம் !

மழை பெறுவோம்.

“பசுமையான தமிழகம் உருவாக்குவோம்.

இது நம்மால் முடியும்”

உங்களாலும் முடியும். செய்வீங்களா ? நம்புகிறேன். நீங்க நிச்சயம் ஒரு மரமாவது நடுவீங்க
🌱🌱🌱🌱🌱

வெள்ளி, 25 மே, 2018

இதை செய்தால் பிள்ளைகளிடம் நல்லவிதமான மாற்றங்களை விரைவில் காண்பீர்கள்.

1. உங்கள் குழந்தைகளை உறக்கத்திலிருந்து எழுப்புவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னிருந்தே அவர்கள் அருகே அமர்ந்து அவர்களை தொட்டு எழுப்புங்கள்.

2. அவர்கள் தூங்குமிடத்திற்கு சென்று அவர்களோடு நாளைய அவர்களது வேலைகளை ஞாபகப்படுத்தி அவர்களது உள்ளங்களை குளிரச் செய்து அவர்களை தூங்க வையுங்கள் அது அவர்கள் காலை வேளையில் உற்சாகமாகமாகவும் சுறுசுறுப்புடன் எழும்புவதற்குதுணை புரியும்.

3. உங்கள் பிள்ளைகளுக்கு அருகில் அமர்ந்து அவர்களிடம் நான் உங்களை அதிகம் நேசிக்கிறேன் உன்னால் நான் அதிகம் பெருமைப் படுகிறேன்
உனக்கு ஏதாவது நான் உதவிகள் செய்து தரவேண்டுமா?
நீ நல்ல ஒரு திறமை சாலி ஆற்றல் மிக்கவன் என்று சொல்லுங்கள்
அவர்களை அன்பாக அனைத்து முத்தமிடுங்கள்.

4. காலையில் நித்திரையிலிருந்து எழும்பிய உடன்டீவி பார்ப்பதையோ ஐபேட் மொபைல் போன்ஸ் போன்றவைகள் பாவிப்பதையோ ஒருகாலமும் அனுமதித்து விடாதீர்கள்.
ஏனெனில் அதன் கதிர்கள் தூங்கி எழும்பிய நிலையில் இருக்கும் கண்களுக்கு பாதிப்பை உண்டு பண்ணிவிடும்.

5.உங்கள் குழந்தைகள் உறங்கும் முன் அவர்களது முதுகை தடவி விடுங்கள்.
அது உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும்
இடையே ஓர் உணர்வு பூர்வமான தொடர்பை உண்டு பண்ணும்.
சிறந்த முறையில் குழந்தை நித்திரை கொள்வதற்கும், சாப்பிட்ட உணவு விரைவில் செரிமானமாவதற்கும் காரணமாய் அமையும்

6.குழந்தைகள் சற்று வளர்ந்து விட்டாலும் வாரத்தில் ஒரு நாளாவது குடும்பமாக கணவன் மனைவி குழந்தைகள் என்று ஒரே இடத்தில் உறங்குங்கள்.
அது உங்கள் குழந்தைகளின் உள்ளத்திலிருக்கும் பாரத்தை மனக் கவலைகளை நீக்கி உங்கள் மீது அவர்களையறியாத ஓர் உள்ளார்ந்த பிணைப்பை ஏற்படுத்தி விடும்.

7. குழந்தைகளின் வேண்டுதல்கள் தேவைகள் நிறைவேறாத பொழுது அவர்கள் அழுது மன்றாடி ஒரு பொருளை அடைய முயற்சிப்பதை தடுத்து நிறுத்துங்கள்.
ஏனெனில் அழுதால் ஒரு பொருள் கிடைக்கும் என்ற மனப்பதிவை அது அவர்களுக்கு உண்டு பண்ணி பிடிவாதத்தால் சாதிக்க நினைக்கின்ற எண்ணம் அவர்களிடம் உண்டாகி விடும்.

8. உண்மை, நேர்மை, துணிவு, விட்டுக் கொடுத்தல், மன்னித்தல்,
அன்பு காட்டல் போன்ற நல்ல பண்புகள் மீது அவர்களுக்கு ஆர்வத்தை
ஊட்டுங்கள்.

9. பொய், ஏமாற்று, திருட்டு, அநீதியிழைத்தல், பெருமை, பொறாமை, சூழ்ச்சி செய்தல் போன்ற கெட்ட குணங்களை வளரவிடாமல் அவர்களை எச்சரித்து வையுங்கள்.

10. பாதை ஒழுங்குகளைக் கற்றுக்கொடுங்கள்.
பாதையில் செல்லும் போது அமைதியாகவும், நிதானமாகவும் நடந்து கொள்ளப் பழக்குங்கள்.
உங்கள் குழந்தைகள் உங்களை அப்படியே பின்பற்ற முயற்சிப்பர். எனவே, நீங்கள் நல்ல முன்மாதிரியாக நடந்து அவர்களை வழிநடத்துங்கள்.

11. குழந்தைகளை படிக்கும் படி திணிக்காதீர்கள். கல்வியின் முக்கியத்துவம், ஏன் கற்க வேண்டும் என எடுத்துரையுங்கள்.

12. பிறருக்கு மத்தியில் குழந்தைகளை திட்டாதீர்கள்.
பெற்றோர்களாகிய நீங்கள் குழந்தைகளுக்கு முன் சண்டை பிடிக்காதீர்கள்.
அது உளவியல் பிரிவினைகளை ஏற்படுத்தும்.

13. அவர்களின் விளையாட்டு, ஓய்வு நேரம், மகிழ்ச்சிகரமான நேரங்களில் நீங்களும் அவர்களுடன் பங்கெடுங்கள்.
அவர்கள் பூரண பாதுகாப்புடனும், அன்பான அரவணைப்புடனும் வாழ்கின்றனர் என்பதை அவர்கள் உணரும் வண்ணம் நடந்துகொள்ளுங்கள்.

14. பிள்ளைகளின் அறிவை கண்ணியப்படுத்துங்கள்;
அவர்கள், பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதை அவதானியுங்கள்.

15. குழந்தைகள் நவீன தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொள்ள உதவுங்கள்;
கணினி-இணையப் பயன்பாட்டை அவர்கள் அறிந்துகொள்ளவும்,
அதன் மூலம் பயன்பெறவும் வழிகாட்டுங்கள்.

16. சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு நீதிக்கதைகளை போதிக்க வேண்டும்.
அது எதிர்காலத்தில் நேர்மையானவர்களாக வாழ்வதற்கு உதவியாக இருக்கும்.

17. அவர்கள் உடல் ஆரோக்கியம் மிக்க விளையாட்டுக்களில் ஈடுபட வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள்.

18. இயற்கை உபாதைகளை அடக்கி வைக்க கூடாது என்பதை கற்றுக்கொடுங்கள்.
குறிப்பாக சிறுநீரை அடக்கி வைப்பது ஆபத்தானது
(பயந்த சுபாவத்தையும் தாழ்வு மனப்பான்மையையும் உண்டுபண்ணும்,
சிறுநீரகத்தில் மற்றும் சிறுநீர்ப் பாதையில் கற்கள் உருவாகும்) என்பதை புரியவையுங்கள்.

இப்படி தொடர்ந்து பழக்கப்படுத்திக் கொண்டால் பிள்ளைகளிடம் நல்லவிதமான மாற்றங்களை விரைவில் காண்பீர்கள்.

குறிப்பு:
நம் தவறான வாழ்கைமுறையால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு
எந்த மருந்துகளாலும் மருத்துவ முறைகளாலும் நிரந்தராமான
தீர்வை தர இயலாது.
என்றும் நட்புடன்.....!

வியாழன், 13 ஜூலை, 2017

Earn Freebitcoin in Every 1 Hour -- Best Site Forever %100 Payout - Freebitco

வணக்கம்  பிட்காயின் பற்றி நான் புதியதாக எதையும் கூறத்தேவையில்லை.
இப்பொழுது நான் தரக்கூடிய இந்த தளம் Freebitco

இந்த படத்தை  கிளிக் செய்து இணையவும்.  

https://freebitco.in/?r=2792202
மிகவும் நேரமையான தளம். இதில் பல வருடமாக நான் வேலை செய்து நிறைய பிட்காயின்  வருமானமாக பெற்றுள்ளேன்.

நீண்ட நாட்கள் வேலை செய்யும் என்னை போன்றவர்களுக்கு நிறைய போனஸ் ஆபர்கள் தருகிறார்கள். 

முதலில் இணைந்து வேலை செய்ய ஆரம்பிக்கவும்.
ஒரு 100 பாயின்ட்ஸ் பெற்றவுடன் என்னை தொடர்புக்கொள்ளவும்.

எப்படி பாயின்ட்களை அதிகமாக பெறுவது என சொல்லிக் கொடுக்கிறேன். ஆனால் ஒவ்வொரு மணி நேரமும் அலார்ம் வைத்து வேலை செய்யுங்கள்.
எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வேலை செய்ய ஆரம்பியுங்கள்.
என்னுடைய வழிகாட்டுதலின்படி வேலை செய்தால் வெற்றி நிச்சயம்.

 ஏதேனும் சற்று வருமானம் வைத்திருந்தால் அந்த பேலன்ஸ்சை இந்த தளத்தில் டெபாசிட் செய்தால் 

தினமும் குறிப்பிட்ட அளவில் நமக்கு வட்டி கொடுப்பார்கள். வருடத்திற்கு 4.08 சதவீதம் கூட்டு வட்டி கிடைக்கும்.

இன்னும் பல வசதிகள் உண்டு.100% நம்பகத்தன்மை நம்பி இணையலாம்.
இணைய விருப்முள்ளவர்கள் கீழ்கானும் லிங்க்கை கிளிக் செய்து இணையவும். நன்றி

இந்த படத்தை  கிளிக் செய்து இணையவும்.   

https://freebitco.in/?r=2792202
 இணைந்த பிறகு HOME PAGE ல் FREE BTC என்ற பக்கத்தில் கீழே Roll என்ற பட்டனை கிளிக் செய்து வருமானம் பெறலாம்.

ஆரம்பத்தில் ரோல் செய்வதற்கு முன நாம் ரோபாட் இல்லை
மனிதர்தான் என்பதை நிருபிக்க CAPTCHA சரியாக உள்ளீடு செய்ய வேண்டும்.



பிறகு அதில் வரும் நேரம் முடிந்த பிறகு மீண்டும் கிளிக் செய்து வருமானம் பெறலாம்.

இப்படி ஒவ்வொரு மணிநேரமும் ஒருமுறை கிளிக் செய்து வருமானம் பெறலாம்.



மேலும் இதில் ஒவ்வொரு இலவச ரோலிலும் லாட்டரி டிக்கட்டும் இலவச
REWARD POINTS களும் கிடைக்கும்.

இந்த ரிவார்டு பாயிண்ட்ஸ்களை வைத்துக் கொண்டு நம்மாள் ஒரு ஆப்பிள் ஐபோனைகூட இலவசமாக வாங்கிக்கொள்ள முடியும்.

அல்லது அதை பிட்காயினாக மாற்றிக்கொள் முடியும். இன்னும் நம்ப முடியாத அளவிற்கு நிறைய சலுகைகள் உள்ளன.

ஆனால் இதற்கு நிறைய பொறுமை தேவை. ஆரம்பத்தில் குறைவாகத்தான் கிடைக்கும்.


 நேரடியாக இணைந்தால் எனக்கு ரெபரல் கிடைக்காது.
  • இந்த படத்தை  கிளிக் செய்து இணையவும். 
https://freebitco.in/?r=2792202

ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிறு ப்ரமோசன் நடக்கும்.
இதில் ஒவ்வொரு இலவச ரோல்களுக்கும் 10 RP கிடைக்கும்.

அமெரிக்க டாலர் போன்று ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு கரன்சி இருக்குமல்லவா ஆனால் எலலா நாட்டு கரன்சியையும் எல்லா நாட்டிலேயும் பயன்படுத்த முடியாது. 

ஆனல் எதிர்கலத்தில் பேப்பர் கரன்சி எதுவும் இருக்காது. பிட்காயின்  எனப்படும் டிஜிட்டல் கரன்சி மட்டுமே இருக்கும்.

இது ஆரம்பத்தில் வெறும் 0.01அமெரிக்க டாலர் ஆனால் இன்றைய மதிப்பு 2500 அமெரிக்க டாலர்களுக்கும் மேல்.

இன்றைய இந்திய மதிப்பில் ஒரு இலட்சத்து அறுபத்தைந்தாயிரம் ரூபாய்க்கும் மேல்.

இதை சிறுக சிறுக வருமானமாக ஈட்டும் வேலைதான் இது.
பிட்காயின் பற்றி யூடியூப்ல் பார்க்கவும். தமிழில் உள்ளது.

ஆனால் இதற்கு நிறைய பொறுமை தேவை. ஆரம்பத்தில் குறைவாகத்தான் கிடைக்கும். 

நீண்ட நாட்கள் வேலை செய்யும் என்னை போன்றவர்களுக்கு நிறைய போனஸ் ஆபர்கள் தருகிறார்கள். 

முதலில் இணைந்து வேலை செய்ய ஆரம்பிக்கவும்.
ஒரு 100 பாயின்ட்ஸ் பெற்றவுடன் என்னை தொடர்புக்கொள்ளவும்.

எப்படி பாயின்ட்களை அதிகமாக பெறுவது என சொல்லிக் கொடுக்கிறேன். ஆனால் ஒவ்வொரு மணி நேரமும் அலார்ம் வைத்து வேலை செய்யுங்கள்.
எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வேலை செய்ய ஆரம்பியுங்கள்.
என்னுடைய வழிகாட்டுதலின்படி வேலை செய்தால் வெற்றி நிச்சயம்.

 ஏதேனும் சற்று வருமானம் வைத்திருந்தால் அந்த பேலன்ஸ்சை இந்த தளத்தில் டெபாசிட் செய்தால் 

தினமும் குறிப்பிட்ட அளவில் நமக்கு வட்டி கொடுப்பார்கள். வருடத்திற்கு 4.08 சதவீதம் கூட்டு வட்டி கிடைக்கும்.

இன்னும் பல வசதிகள் உண்டு.100% நம்பகத்தன்மை நம்பி இணையலாம்.
இணைய விருப்முள்ளவர்கள்  கீழ்கானும் லிங்க்கை கிளிக் செய்து இணையவும். நன்றி


  என்னுடைய முகநூல் குழுவில் இணைய

உங்களுக்கு நேரம் அதிகமாக இருந்தால் நிறையதைளம் இருக்கு ஆனாலும் இதில் ஒன்றில்தான் நான் வேலை செய்கிறேன்.

ஆப்சனை ஆக்டிவேட் செய்தால் உங்களுடைய ஒவ்வொர் இலவச ரோல்களுக்கும்  10 பாயிண்ட்கள் கிடைக்கும். அதிகபட்சம் ஒருநாளைக்கு 23 மணிநேரம் வேலை செய்தால் 230 பாய்ண்ட்ஸ்கள் கிடைக்கும்.

நீங்கள் செலவிடும் அந்த 120 pointsகளை பெற நீங்கள் கண்டிப்பாக 12 hrs வேலை செய்தால் மட்டுமே செய்த முதலீட்டை பெற முடியும். அதற்கு மேல்
வேலை செய்து கிடைக்கும் ஒவ்வொரு பாயிண்ட்களும் லாபமே.
எனவே கடின உழைப்பினால் மிக வேகமாக பாயிண்ட்டுகளை பெறலாம்.
ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் ரிவார்டு பாய்ண்ட்
ப்ரமோசன் தருவார்கள். அதிலும் வருமானம் ஈட்டலாம்.சென்ற வாரம் 5X reward points கொடுத்தார்கள். அந்த நேரத்தில் நாம் ரிவார்டு போனஸை ஆக்டிவேட் செய்தால்  இன்னும் பலனளிக்கும்.


பாயிண்ட்டுகள் ஒரு இலவச ரோலுடன் கிடைக்கும். இது நீங்கள் ஆக்டிவேட் செய்த நேரத்திலிருந்து 24 மணி நேரத்திற்கு கிடைக்கும்.
வேலை செய்யாவிட்டால் கிடைக்காது. நீங்கள் முதலீடு செய்யும் பாயின்ட்டுகளை திரும்ப பெற 10 மணி நேரம் கண்டிப்பாக வேலை செய்யவேண்டும். பிறகு கிடைப்பது  எல்லாமே லாபம்தான்.
அதிகபட்சம் ஒருநாளைக்கு 23 மணிநேரம்தான் வேலை செய்ய முடியும் எனில்  23 X 12 = 228 பாயின்ட்டுகளை பெறலாம். ஆக லாபம் 128 பாயிண்ட்டுகள்.

அதனால் இந்தமாதிரியான வாய்ப்புகளை அலட்சியம் செய்கிறார்கள்.
நானும் ஒருகாலத்தில் அலட்சியம் செய்தவன்தான்.
சிறு துளி பெரு வெள்ளம். எனவே குறைவாக வருகிறதென்று அலட்சியம் செய்யவேண்டாம். தொடர்ந்து வேலை செய்யவும்.
நன்றி

Whats App Group : 
இந்த படத்தை  கிளிக் செய்து இணையவும்.
Free Bitcoin Earn
இந்த படத்தை  கிளிக் செய்து இணையவும்.  

https://freebitco.in/?r=2792202

திங்கள், 2 ஜனவரி, 2017

நாட்டு மாடு தினமும் 20 லிட்டர் பால்... மாதம் ரூ.60 ஆயிரம் வருமானம்! ***பஞ்சகவ்யா***


தினமும் 20 லிட்டர் பால்... மாதம் ரூ.60 ஆயிரம் வருமானம்!
ஆரம்பக் காலத்தில் பஞ்சகவ்யா கரைசலைப் பயன்படுத்தியவர்கள், அதைப் பரவலாக விவசாயிகளிடம் எடுத்துச் சென்றவர்கள் குறித்த தொடர் இது. பயிர்களுக்கும் மட்டுமல்ல, உயிர்களுக்கும் உகந்தது பஞ்சகவ்யா என்பதையும் பல முன்னோடி விவசாயிகள் நிரூபணம் செய்துள்ளனர். அந்த வகையில் கால்நடை வளர்ப்பில் பஞ்சகவ்யாவின் பங்களிப்புக் குறித்துப் பகிர்ந்துகொள்கிறார், திருப்பூர் மாவட்டம், முத்தூர் பகுதியைச் சேர்ந்த முன்னோடி இளம் விவசாயி நந்தகுமார்.
   
நந்தகுமாரின் தோட்டத்துக்கு நாம் சென்றபோது, களத்துமேட்டில் கட்டப்பட்டிருந்த நாட்டு மாடுகளுக்கு மூங்கில் குழாய் மூலம் பஞ்சகவ்யா கரைசலைக் கொடுத்துக் கொண்டிருந்தார், அவர். நம்மைக் கண்டதும் வரவேற்றுப் பேச ஆரம்பித்தார், நந்தகுமார். 

“நான் இன்ஜினீயரிங் படிச்சிட்டு விவசாயத்துல இறங்கிட்டேன். இங்க 25 நாட்டுமாடுகளை வளர்க்கிறேன். இந்த மாடுகள் மூலமா கிடைக்கிற சாணம், சிறுநீர், பால், தயிர், நெய்... பொருட்களைப் பயன்படுத்திதான் பஞ்சகவ்யா தயாரிக்கிறேன். பயிர்களுக்குக் கொடுத்தது போக, மீதம் இருக்குற பஞ்சகவ்யாவை விற்பனையும் செய்றேன். இப்போ, நாட்டுப் பசும்பாலுக்குத் தேவை அதிகமாயிட்டே வருது. கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் பகுதிகள்ல ஒரு லிட்டர் பால் சுமார் 100 ரூபாய் வரை விற்பனையாகுது. எங்கிட்ட இப்போதைக்கு 7 நாட்டு மாடுகள்தான் கறவையில இருக்கு. எங்க தேவை போக மீதியை விற்பனை செய்றேன். தினமும் 20 லிட்டர் அளவுக்குப் பால் விற்பனை  செஞ்சிட்டிருக்கேன். ஒரு லிட்டர் பால் ரூ.70-க்கு விற்பனை செய்றேன். இதன்படி தினமும், 1,400 ரூபாய் வருமானம் கிடைக்குது. ஆக மாசத்துக்கு பால் மூலமா 42 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது. பால் உற்பத்தி அதிகரிச்சு, நேரடியா பாலை விற்பனை பண்ணும்போது, இன்னும் கூடுதல் வருமானம் கிடைக்கும். விவசாயத்துல நல்ல வருமானம் கிடைக்கிறதாலதான், சாஃப்ட்வேர் கம்பெனிகள்ல கிடைச்ச வேலைகளை விட்டுட்டு இங்க வந்துட்டேன்” என்று முன்னுரை கொடுத்த நந்தகுமார் தொடர்ந்தார்.

“மாடுகள் அதிகமா இருக்குறதால ஒண்ணு மாத்தி ஒண்ணுக்கு ஏதாவது வியாதி வந்துடும். ஆனா, நான் மாடுகளுக்கு அலோபதி மருந்துகளை உபயோகப்படுத்துறதில்லை. மாடுகளுக்கு முழுக்க முழுக்க பஞ்சகவ்யா வைத்தியம்தான். கால்நடைகளுக்கும் பஞ்சகவ்யா கொடுக்கலாம்னு சொல்லிக் கொடுத்தவர், ‘கொடுமுடி’ டாக்டர் நடராஜன் ஐயாதான். அவரோட ஆலோசனைப்படிதான் மாடுகளுக்குப் பஞ்சகவ்யா கொடுத்து வருமுன் காக்கும் வைத்தியம் செஞ்சுக்குறோம். 50 மில்லி வடிகட்டிய பஞ்சகவ்யாவை தண்ணீர் கலக்காமல் கன்னுக்குட்டிகளுக்கு மாசம் ஒரு வாட்டி கொடுக்கிறோம். இதனால, நோய் எதிர்ப்புச் சக்தி கூடுது. கன்னுக்குட்டிகள் மண்ணைத் தின்னு வயிறு உப்பிப் போய் மூச்சுவிட சிரமப்படுற சமயத்துல 100 மில்லி பஞ்சகவ்யாவை மூணு நாளைக்குக் கொடுத்தா சரியாகிடும்.
மேய்ச்சலுக்குப் போற நாட்டு மாடுகள் சில சமயங்கள்ல இளம் சோளப்பயிர்களைத் தின்னுடுச்சுன்னா ‘சொக்கிப் போயிடும்’. இதனால வயிறு உப்பி, எந்திரிக்க முடியாமப் போயிடும். இதுக்கு உடனே வைத்தியம் பார்க்காட்டி மாடு செத்துப் போயிடும். 500 மில்லி பஞ்சகவ்யாவை மூங்கில் குழாய்ல நிரப்பி நேரடியா தொண்டைக்குள் போகுற மாதிரி ஊத்தி விடணும். ரெண்டு மணிநேரம் கழிச்சு மறுபடியும் அதே அளவு பஞ்சகவ்யாவை வாயில ஊத்திவிட்டு, ஒரு மணி நேரம் வரைக்கும் தீவனம் கொடுக்காம மரத்தடியில தனியா கட்டி வெச்சா... கொஞ்ச நேரத்துல வயித்துப் பொருமல் நீங்கி, மாடு அசைபோட ஆரம்பிச்சுடும். சாணம், சிறுநீர் ரெண்டும் முழுசா வெளியேறிடும். அப்புறமா அந்த மாட்டுக்குத் தண்ணீர் காட்டணும். நல்லா தண்ணி குடிச்சுட்டுப் பசுந்தீவனத்தைச் சாப்பிட ஆரம்பிச்சுடும். தொடர்ந்து அஞ்சு நாளைக்கு 200 மில்லி பஞ்சகவ்யாவைக் கொடுத்துட்டு வந்தா, சொக்கிப் போன மாடு முழுசா குணமடைஞ்சிடும்” என்ற நந்தகுமார்,

 நிறைவாக
“கால்நடைகளுக்கு வைக்கோல், சோளத்தட்டை மாதிரியான உலர்தீவனம் ரொம்ப அவசியம். இதை மொத்தமா கிடைக்கிறப்போ வாங்கிப் போர் போட்டுக்குவோம். அப்படிப் போர் போடுறப்போ, வரிசையா கத்தைகளை அடுக்கி, அது மேல 3 சதவிகித பஞ்சகவ்யா கரைசலை வேப்பிலையில முக்கி நல்லா தெளிச்சு விடுவோம். இதேமாதிரி ஒவ்வொரு அடுக்குக்கும் செஞ்சுவிட்டா உலர்தீவனத்துல சுவை கூடிடும். சத்தானதாகவும் மாறிடும். 

அதேமாதிரி மடிவீக்கம் கண்ட பசுக்களுக்கு 200 மில்லி பஞ்சகவ்யா கொடுத்து... மடிகள்லயும் பூசி விடுவோம். இதுமாதிரி ரெண்டு மாசம் காலையிலயும் சாயங்காலமும் செஞ்சா மடிவீக்கம் குணமாகிடும். கன்னுக்குட்டியா இருந்தாலும் சரி, வளர்ந்த மாடா இருந்தாலும் சரி, அதுக்கு குடற்புழு நீக்கம் அவசியம். கன்னுக்குட்டிகளுக்கு அதிகாலை நேரத்துல வெறும் வயித்துல 100 மில்லி பஞ்சகவ்யாவை தொடர்ந்து மூணு நாளைக்குக் கொடுத்தா குடற்புழுக்கள் வெளியேறிடும். மாடுகளோட வயசுக்கேத்த மாதிரி பஞ்சகவ்யா அளவைக் கூட்டிக்கலாம் இதேமாதிரி கால்நடைகளுக்கு கொடுக்கப்படும் பஞ்சகவ்யாவை வடிகட்டியே கொடுக்க வேண்டும்” என்ற எச்சரிக்கை சொல்லிவிட்டுக் கன்றுகளுக்குப் பஞ்சகவ்யா கொடுக்க ஆரம்பித்தார்.

தொடர்புக்கு, நந்தகுமார், செல்போன்: 96980 57805

“மீன்களுக்குப் பஞ்சகவ்யா கொடுக்கலாமா?”
பசுமை விகடன் வாசகர்கள் பலர், ‘கொடுமுடி’ டாக்டர் நடராஜனைத் தொடர்பு கொண்டு பஞ்சகவ்யா குறித்த பல சந்தேகங்களைக் கேட்டு வருகிறார்கள். டாக்டர் நடராஜனிடம் வாசகர்கள் கேட்ட கேள்விகள், அதற்கு அவர் அளித்த பதில்கள் ஆகியவற்றில் சில இங்கே இடம்பெறுகின்றன. 

“கோ சஞ்சீவி என்பது என்ன... அது எதற்குப் பயன்படுகிறது?”
ஆர்.செண்பகவல்லி, கோவில்பட்டி. 

“கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கு உடனடி நிவாரணம் கொடுக்கும் மூலிகைப் பொடி, கோ சஞ்சீவி. இதை எளிதாக நாமே தயாரித்து கால்நடைகளுக்குக் கொடுக்கலாம்.
அமுக்கிரா கிழங்கு, உசிலை இலை (அரப்பு இலை), வேப்பிலை ஆகியவற்றில் தலா 300 கிராம் எடுத்துக்கொள்ளவும். சீந்தில் இலை கொடி, நிலவேம்புச் செடி ஆகியவற்றில் தலா 50 கிராம் எடுத்துக் கொள்ளவும். இந்த ஐந்து பொருட்களையும் மூன்று நாட்கள் நிழலில் காயவைத்து... உரலில் இடித்து நன்றாகப் பொடியாக்கினால், அதுதான் கோ சஞ்சீவி. இதில் 50 கிராம் பொடியை ஆடு மாடுகள் குடிக்கும் தண்ணீர் அல்லது தீவனத்தில் கலந்து கொடுத்து வந்தால், பருவத்தில் சினைப்பிடிக்கும். நன்றாகத் தீவனம் எடுக்கும். பிறக்கும் கன்றுகள் ஆரோக்கியமாக இருக்கும். அதிகப் பால் சுரக்கும்.” 

“வளர்ப்பு மீன்களுக்குப் பஞ்சகவ்யா கொடுக்கலாமா?”
மு.சக்கரபாணி, பாமணி, நாகப்பட்டினம். 

“தாராளமாக கொடுக்கலாம். சாணத்துடன் கூடிய பஞ்சகவ்யாவை மீன் குட்டையில் போட்டுவர, நீர்த் தாவரங்களும், புழு, பூச்சிகளும் அதிகமாக உருவாகும். அது மீன்களுக்கு ஊட்டமான உணவாக மாறும். குளத்தில் புதிதாகத் தண்ணீர் விடும்போது சாணம் கலந்த பஞ்சகவ்யா ஊற்றுவது நல்லது. இடைப் பருவத்தில் மீன் குட்டையில் பஞ்சகவ்யா கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.”

தொடர்புக்கு, டாக்டர் நடராஜன், செல்போன்: 94433 58379.

பரிசோதனைகள் தொடரும்!
கால்நடைகளுக்குப் பஞ்சகவ்யா கொடுப்பது குறித்துப் பேசிய டாக்டர் நடராஜன், “நானும், கால்நடை மருத்துவர் ஆறுமுகமும் சேர்ந்து ஆடு, மாடு, கோழி, நாய்னு பஞ்சகவ்யா கொடுத்துச் சோதனைகள் செஞ்சோம். சோதனைகளைச் செய்யச் சொன்னவர், நம்மாழ்வார் அய்யாதான். அந்தச் சோதனைகள்ல நல்ல தீர்வு கிடைச்சது. கால்நடைகளுக்குப் பஞ்சகவ்யாவை மேல்பூச்சா பூசும்போது தோல் உண்ணி தொல்லையும் நீங்குச்சு. முடி உதிர்வது குறைஞ்சு தோல் பளபளப்பா மாறுச்சு.

ரொம்ப நாள் சினைப்பிடிக்காம இருந்த பசுமாடுகளுக்கு 200 மில்லி பஞ்சகவ்யாவை தினமும் கொடுத்தப்போ, மூணு மாசத்துல சினைக்குத் தயாரானது. இதுமாதிரி இன்னும் நிறைய சோதனைகள் செஞ்சுதான் கால்நடைகளுக்குப் பஞ்சகவ்யாவைப் பரிந்துரைச்சோம். இன்னமும் சோதனைகள் தொடர்ந்துட்டுதான் இருக்கு” என்றார்.
கழிச்சலைத் தடுக்கும் பஞ்சகவ்யா!

சேவல்களுக்குப் பஞ்சகவ்யா கொடுத்து சிறப்பான முறையில் வளர்த்து வருவதாக, ஈரோடு மாவட்டம், சிவகிரி பகுதியைச் சேர்ந்த சீனுவை நமக்குப் பரிந்துரைத்தார், டாக்டர் நடராஜன். சீனுவின் பண்ணையில் அவரைச் சந்தித்தோம். 

“டாக்டரோட சிஷ்யர் புரவிமுத்து என்னோட நண்பர். அவர் மூலமாகத்தான் சேவல்களுக்கும் பஞ்சகவ்யா கொடுக்கலாம்னு தெரிஞ்சிகிட்டேன். டாக்டர்தான் பஞ்சகவ்யாவ தயாரிக்கிற, பயன்படுத்துற முறைகள சொல்லிக் கொடுத்தார். எங்கிட்ட கீரி, மயிலு, காகம், வல்லூறு, ஆந்தை, பொன்னிறம்னு பல ரகங்கள்ல 150 சண்டைச் சேவல்கள் இருக்கு. வெள்ளைக்கழிச்சல் நோய்தான் கோழி இனங்களுக்கு எமன். கோடைகாலத்துல இந்த நோய் தாக்கும். ஒரு கோழிக்கு கழிச்சல் வந்திட்டா, எல்லா கோழிகளுக்கும் வேகமாப் பரவ ஆரம்பிச்சுடும். இதைச் சரியா கவனிக்காட்டி கோழிகளைக் காப்பாத்த முடியாது. முறையா பஞ்சகவ்யா கொடுக்குற கோழிகளுக்கு, இந்த நோய் தாக்குறதில்லை. வெயில் காலங்கள்ல கோழிகள் தண்ணீர் அதிகமா குடிக்கும். அதனால குடிநீர்லயே பஞ்சகவ்யாவைக் கலந்து வெச்சுடணும். 100 மில்லி தண்ணீருக்கு 3 மில்லி பஞ்சகவ்யானு கலந்து வெச்சுடணும். குறிப்பா பருவம் மாறுற காலங்கள்லயே இதைத் தொடர்ந்து கொடுக்க ஆரம்பிச்சிட்டா, கழிச்சல் நோய் தாக்காது. கம்பு, சோளம், மக்காச்சோளம், கேழ்வரகு மாதிரியான சிறுதானியங்களை, வடிகட்டிய 3 சதவிகித பஞ்சகவ்யா கரைசல்ல நனைச்சு, நிழலில் உலர்த்தி வாரம் ஒரு நாள் கொடுப்போம். அதனால எதிர்ப்புச் சக்தி அதிகரிச்சு எந்த நோயும் வர்றதில்லை” என்றார். 

தொடர்புக்கு: சீனு, செல்போன்: 85268 54774

#TNneed jallikattu

வியாழன், 29 டிசம்பர், 2016

தேனீக்கள் - Theenikal Don't hesitate please forward to all.


தேனீக்கள்மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு
நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம்
இருக்காது! ’ என்று சொல்லியிருக்கிறார்
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து
இனிக்கும் செய்தியல்ல....!

தேனீ............உலகின் மிக சுவாரஸ்யமான,
நுணுக்கமான உயிரினம்.

அந்தத் தேனீக்களைப் பற்றி ஆச்சரியமான
மற்றும் அதிர்ச்சியான விஷயத்தைத்
தெரிந்துகொள்ளலாமா.............?
முதலில்... ஆச்சரியம்.

தக்கனூண்டு
சைஸில் இருக்கும் தேனீதான் உலகின் மிகச்
சிறந்த மகரந்தச் சேர்க்கையாளர்.

தென்னை, வாழை, பூசணி, ஆப்பிள், பீச்
போன்ற பல பழ வகைகள் காபி, ஏலக்காய்,
பருத்தி போன்ற செடிகள் மற்றும் உணவு
தானியங்கள் எனப் பல கோடி மகரந்தச்
சேர்க்கைகளுக்குக் காரணமாக இருக்கும்
தேனீக்கள்தான், உலகின் 80 சதவிகித
உணவுப் பொருள்களின் பெருக்கத்துக்கும்
காரணம்.

தேனீயின் தகவல் பரிமாற்ற முறை, ஸ்கைப்,
வாட்ஸ்அப் முறைகளை விடத்
துல்லியமானது.

யானை, ஆமைகளுக்கு
ஞாபகசக்தி அதிகம் என்போம்.
ஆனால், அவற்றைவிடவும் கூர்மையான ஞாபகசக்தி
கொண்டவை தேனீக்கள்.

இதுபோல இன்னும்
பல ஆச்சரியங்கள் அந்தத் தக்கனூண்டு
உடம்பில் இருக்கின்றன.
ஆனால், அதிர்ச்சி
தரும் விஷயம்...

அந்தத் தேனீக்கள் இப்போது
'அழிந்துவரும் உயிரினங்கள்’ பட்டியலில்
இடம்பிடித்திருக்கின்றன.

ஆம்... 'உலகை உலுக்கும் செய்தி’ என்றால்,
நிச்சயம் இதுதான்.

ஒட்டுமொத்த மக்கள்
தொகையாலும் பூமிக்கு விளையாத
நன்மை, ஒரே ஒரு தேனீயால் விளையும்.

அந்த அளவுக்குத் தேனீயின் ஒவ்வொரு
சிறகசைப்பும் பூமிப் பந்தில் பசுமைப்
போர்வையைப் போத்துகிறது.

தேனீக்களின் 'லைஃப்ஸ்டைல்’ பற்றி
தெரிந்துகொண்டால்தான், அது
காடுகளின் பெருக்கத்துக்கு எப்பேர்ப்பட்ட
நன்மை விளைவிக்கிறது என்று புரியும்.

தேனீக்களின் வாழ்வியல் குணங்களைப்
பற்றி கேட்டதும், சுவாரஸ்யமாகப்
பட்டியலிட்டார் தமிழ்நாடு வேளாண்மை
பல்கலைக்கழகத்தின் பூச்சிகள் துறையைச்
சேர்ந்த டாக்டர் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்.

''உலகத்தில் அஞ்சு வகை தேனீக்கள் இருக்கு.
மலைத் தேனீ, இந்தியத் தேனீ, கொம்புத்தேனீ, இத்தாலியன் தேனீ, கொடுக்கில்லாத்தேனீ.

இதில் இந்திய, இத்தாலிய மற்றும்
கொடுக்கில்லாத் தேனீக்களைத் தான் மனிதர்கள் வளர்ப்பாங்க.

 மத்த தேனீக்கள்
தானாகவே காட்டில் வளரும்..

ஒரு
குடும்பத்தில் ஒரு ராணித் தேனீ, சில
நூறு ஆண் தேனீக்கள், பல்லாயிரம் பணித்
தேனீக்கள் (பெண்கள்) இருக்கும்.

இதில் ஆண்
தேனீக்களுக்கு 90 நாள்களும், பணித்
தேனீக்களுக்கு 70 நாள்களும், ராணித்
தேனீக்கு இரண்டு வருடங்களும் ஆயுள்.

ராணித் தேனீக்களுக்கு முட்டையிடுவது
மட்டும்தான் வேலை.

ஆண் தேனீக்கு,
ராணியோடு புணர்வதும் தேன் கூட்டைப்
பாதுகாப்பதும் கடமை.

மற்ற எல்லா
வேலைகளும் பணித் தேனீக்கள் பொறுப்பு.
உணவுச் சேகரிப்பு, தேன்கூடு கட்டுவது,
தேனைப் பக்குவப்படுத்துவது, கூட்டைச்
சுத்தமாகப் பராமரிப்பதுனு எல்லா
வேலைகளையும் பணித் தேனீக்கள்தான்
கவனிக்கும்.

தேனீக்களின் பொறியியல் அறிவு
அபாரமானது.

தேன் கூட்டை அறுங்கோண
வடிவத்துல கட்டும். ஏன்னா, அப்பத்தான் ஒரு
சென்ட்டிமீட்டர் இடத்தைக்கூட வீணாக்காம
முழுசாப் பயன்படுத்த முடியும்.

ஆண்
தேனீகளுக்குப் பெரிய அறுங்கோண செல், பணித் தேனீக்களுக்குச் சிறிய
அறுங்கோண செல் வடிவத்தில் கூடு
கட்டிட்டு, ராணித் தேனீக்கு சிலிண்டர்
வடிவில் செல் கட்டும்.

கூட்டின் கட்டுமானம்
திருப்தியாக இருந்தால் மட்டுமே, ராணித்
தேனீ அதில் முட்டையிடும்.

பூக்களின் மகரந்தம், மதுரம்... இரண்டும்தான்
தேனீக்களின் உணவு.

அப்போதைய பசிக்கு
அப்போதே சாப்பிட்டுவிடும்.

அப்புறம் ஏன்
தேன் சேகரிக்கிறது?

குளிர் காலங்கள், பூ
பூக்காத காலங்களில் உணவுத்
தட்டுப்பாட்டைச் சமாளிக்கத்தான் தேன்
சேகரிக்கிறது.

தேனீக்கள் தேன் சேகரித்துப்
பதப்படுத்துவதுதான் உலகின் சிறந்த
உணவுப் பதப்படுத்தும் தொழில்நுட்பம்.

தேன் தேடிச் செல்லும் பணித் தேனீக்கள்,
பூக்களின் மதுரத்தை உறிந்து தன் உடலில்
இருக்கும் 'தேன் பை’யில்
சேகரித்துக்கொள்ளும்.

அந்த மதுரம்
முழுவதும் செரிக்காமல், தேனீயின்
வயிற்றில் இருக்கும் நொதிகளுடன்
சேர்ந்து திரவமாக மாறிவிடும்.

கூட்டுக்குத் திரும்பி வரும் தேனீக்கள்,
கூட்டின் வாசலில் காத்திருக்கும்
தேனீக்களிடம் அந்தத் திரவத்தை
ஒப்படைக்கும்.

அதற்காக ஏப்பமிட்டு
ஏப்பமிட்டு தேன் பையில் இருந்து
திரவத்தை வெளியில் கொண்டுவந்து
எதிர் தேனீயின் வாயில் கொட்டும்.

ஒரு தேனீ இப்படி 50 முறை கக்கினால்தான், ஒரு துளி தேன் சேரும்.

கூட்டைப் பராமரிக்கும்
தேனீக்கள் அந்தத் திரவத்தைக் கூட்டின் ஓர்
ஒரத்தில் இருக்கும் தேனடையில் கக்கி,
அதில் இன்வர்டோஸ் எனும் நொதியைச்
சேர்க்கும்.

பிறகு அந்தத் திரவத்தில்
இருந்து நீர்த்தன்மை வற்றிப் போவதற்காக
தன் இறகை ஆட்டி ஆட்டி ஆவியாக்கும்.

பிறகு தேனைப் பாதுகாக்க ஒருவகை
மெழுகைப் பூசிவைக்கும்.

இத்தனை
நடைமுறைகளுக்குப் பிறகுதான் நாம்
சுவைக்கும் தேன் உருவாகும்.

தேன்
எடுப்பவர்கள் கொஞ்சம் தேனை
தேனிக்களுக்கு எனக் கூட்டில்
விட்டுத்தான் எடுப்பார்கள்.

அதுதான் தேன்
சேகரிக்கும் தர்மம் !

இந்த வேலை நடக்கும்போது ராணித் தேனீ
அதை வேடிக்கை மட்டுமே பார்க்கும்.

இனப்பெருக்கக் காலத்தில் மட்டும்தான்
அதற்கு வேலை வரும். அந்தச் சமயத்தில்
வேகமாக ராணித் தேனீ உயரத்துக்குப்
பறக்கும்.

அதை எந்த ஆண் தேனீ துரத்திப்
பிடிக்கிறதோ, அதோடுதான் இணை
சேரும் ராணி.

புணர்ச்சி முடிந்தவுடன்
ஆண் இறந்துவிடும்.

அதன் பிறகு ராணித்
தேனீ முட்டையிட, முட்டையில் இருந்து
வரும் தேனீக்களைப் பணித் தேனீக்கள்தான்
வளர்ப்புத் தாயாக வளர்க்கும்!

தேன் சேகரிப்பதற்கான தகவல்களை
தேனீக்கள் பகிர்ந்துகொள்ளும் முறை
அட்டகாசமானது.

உணவுத் தேவை
ஏற்படும்போது 'ஸ்கவுட்’ ஆக சில தேனீக்கள்
முன்னே சென்று பூக்கள் இருக்கும்
இடத்தைக் கண்டுபிடித்துவிட்டுக்
கூட்டுக்குத் திரும்பும்.

கூட்டில் உள்ள மற்ற பணித் தேனீக்களுக்கு ஸ்கவுட் தேனீக்கள்,
தாங்கள் கண்டுபிடித்த தோட்டம் அல்லது
சோலை எந்தத் திசையில் எவ்வளவு
தூரத்தில் உள்ளது என்பதை நடனம் ஆடித்
தெரிவிக்கும்.

இதில் இரண்டு வித நடனங்கள் உள்ளன. வட்ட
நடனம் மற்றும் வாலாட்டு நடனம்.
வட்ட
நடனத்தில் வட்டமிட்டு வட்டமிட்டு பூக்கள்
இருக்கும் தொலைவை மட்டும் குறிக்கும்.

வாலாட்டு நடனத்தில் உயரப் பறந்து வாலை
ஆட்டினால், சூரியன் இருக்கும் அதே திசையில் உணவு உள்ளது என்றும், கீழே
பறந்து வாலை ஆட்டினால், சூரியனுக்கு
நேரெதிர் திசையில் தோட்டம் உள்ளது
என்றும் அர்த்தம்.

வாலை வேகமாக
ஆட்டினால், சோலை அருகில் உள்ளது
என்றும், மெதுவாக ஆட்டினால்,
தொலைவில் உள்ளது என்றும் அர்த்தம்.

சூரியன், சோலையின் திசை, தங்கள்
கூட்டின் இருப்பிடம்... இந்த மூன்றையும்
சம்பந்தப்படுத்தி நடன அசைவுகள் இருக்கும்.

இந்த நுட்பமான நடன ரகசியத்தைக்
கண்டுபிடித்த ஆஸ்திரிய ஸ்காலர்
கார்ல்வான் ஃப்ரிஸ்-க்கு நோபல் பரிசு
கொடுத்தார்கள்.

தேன் சேகரிக்கும் போது தேனீக்களின்
காலில் ஒட்டிக்கொள்ளும் பூக்களின்
மகரந்தம், அடுத்தடுத்து பூக்களின் மேல்
உட்காரும்போது, விதவிதமான
கூட்டணியுடன் பரவும்.

இதுதான்
காடுகளின், சோலைகளின் பரவலுக்குக்
காரணம்.

தேனீக்களை அதிகம்
காடுகளுக்குள் தான் பார்க்க முடியும்.

காரணம், தேனீக்கள் இருக்கிற இடத்திலேயே
இயற்கையாகவே அடர்ந்த காடுகள்
உருவாகிவிடும்!''

''அழியும் உயிரினம் பட்டியலில் இடம்
பிடிக்கும் அளவுக்கு தேனீக்களுக்கு என்ன
ஆபத்து?''

''அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கத்திய
நாடுகளில் தேனீக்கள் அழிந்துவரும்
உயிரினங்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில்
மட்டும் உலகின் மூன்றில் ஒரு பங்கு
தேனீக்கள் அழிந்துவிட்டன.
அதாவது,
தேனீக்களின் அழிவு சதவிகிதம் 42
சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.

இன்னும்
இந்தியாவில் தேனீக்களுக்கு அந்த அளவுக்குப் பெரிய அபாயம் ஏற்படவில்லை.

ஆனால், கூடிய சீக்கிரமே அந்த நிலைமை
வரலாம்.

தேனீக்களின் இந்தப் பேரழிவுக்குக் காரணம்,
Colony Collapse Disorder - சுருக்கமாக... CCD.
அதாவது கூட்டில் இருந்து உணவு
சேகரிக்கச் சென்ற பணித் தேனீக்கள்
கொத்துக் கொத்தாகக்
காணாமல் போய்விடும்.

ராணி மட்டும்
கூட்டில் இருக்கும். பணித் தேனீக்கள்
கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து ஒரு
கட்டத்தில் இல்லாமலேயே போய்விட்டால்,
ராணித் தேனீ என்ன செய்வதெனத்
தெரியாமல் குழம்பி, சீக்கிரமே
இறந்துவிடும்.

இல்லையெனில் வேறுகூடு தேடிப் போய்விடும்.

பணித்
தேனீக்கள் இப்படித் தொலைந்து போவதற்குப் பல காரணங்கள் உண்டு.

அதில்
முக்கியமானது... செயற்கை உரம்,
பூச்சிக்கொல்லி, மரபணு மாற்றப்பட்ட
பயிர்கள்.

செயற்கை உரத்தில் உள்ள நியோ
நிக்டினாய்ட்ஸ் எனப்படும் வேதிப்பொருள்,
தேனீக்களின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து
அவற்றின் நினைவுத்தினை
மழுங்கடித்துவிடும்.

இதனால்
கூட்டுக்குத் திரும்பும் வழி மறந்துபோய்
பறந்துபோய் அலைந்து திரிந்து
இறந்துவிடும்.

மரபணு மாற்றப்பட்ட உணவுப்
பயிர்களின் விதைகளை 'டெர்மினேட்டர்
சீட்ஸ்’ என்பார்கள்.

அதாவது, அந்தப் பயிர்கள்
'விதை தானியத்தை’ உருவாக்காது.
மலட்டு விதைகளைத் தான் உருவாக்கும்.

அப்படியான மரபணு மாற்றப்பட்ட பயிர்களின்
மகரந்தத்தில் உள்ள புரோட்டீன் தேனீக்களிடம்
செரிமானக் கோளாறுகளை உண்டாக்கி,
ஒரு கட்டத்தில் தேனீக்களைக்
கொன்றேவிடும்.

இப்படி விவசாயத்தில் 'வணிக
லாபத்துக்காக’ மனிதன் செய்த பல
மாற்றங்கள் தேனீக்களை அழிக்கின்றன.

ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஐந்து
வருடங்களாக விவசாய உற்பத்தி
பெருமளவு குறைந்து வருவதற்குக்
காரணம் தேனீக்களின் இறப்பு எனத்
தெரியவந்தது.

அதனால், அங்கு செயற்கை
உரம், மரபணு மாற்றப்பட்ட விதைகள்
போன்றவற்றைத் தடை செய்துவிட்டனர்.

வளர்ப்புத் தேனீக்களைப் பிடித்து வந்து
தங்கள் வயல்களில் பறக்கவிட்டு
மகரந்தச்சேர்க்கை உண்டாக்க
முயற்சிக்கிறார்கள்.

பல லட்சம் தேனீக்களை
அழித்த சுயநல மனிதனால், ஒரே ஒரு
தேனீயைக்கூட உருவாக்க முடியாது.

இதை நாம் எப்போது உணர்வோம்?'' என்று
வருத்தமாகச் சொல்கிறார் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்.

'தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து
மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு
நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம்
இருக்காது!’ என்று சொல்லியிருக்கிறார்
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

ORGANIC
FARMING
Don't hesitate   , please forward to all.

Popular Posts

Facebook

Blog Archive