COVID19 | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil: COVID19

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

COVID19 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
COVID19 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 26 நவம்பர், 2020

Covid - கொரோனா - தெளிவான விளக்கம்

கொரோனா - தெளிவான விளக்கம்

கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்யும் டாக்டர் பவித்ரா என்பவரின் நேர்காணலைப் பார்க்க நேர்ந்தது. கேள்விகளுக்கு மிகத் தெளிவாகப் பதில் அளித்திருந்தார். அந்த வீடியோவைப் பகிரலாம் என்று நினைத்திருந்தேன். நண்பர் ஸ்ரீகாந்த் சத்யநாராயணன், அந்த நேர்காணலின் சாரத்தை கேள்வி பதில்களாகத் தொகுத்துப் பதிவு எழுதியிருந்தார். எனவே, அவருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டு, அப்படியே பகிர்கிறேன். அனைவருக்கும் சென்று சேர வேண்டிய விஷயம் இது. (நேர்காணலின் வீடியோ இணைப்பு முதல் கமென்ட்டில்.�)
டாக்டர் பவித்ரா வேங்கடகோபாலன். Ph.D. கொரோனா வைரஸ் ஆய்வாளர்.
எல்லா வதந்திகளையும் மூட்டை கட்டி தூக்கிப் போட்டு விட்டு 2006-2012 வரை கொரோனா வைரஸில் Ph.D செய்த சயின்டிஸ்ட் ஆன அவரிடமிருந்தே அறிந்து கொள்ளுங்கள். நேர்காணலின் தமிழின் எழுத்துத் தொகுப்பு மட்டுமே என்னுடையது.
- Srikanth Sathyanarayanan

முதலில் நல்ல செய்திகள் —
• COVID-19 பாதிக்கப் பட்டால் நூற்றில் 97 சதவிகிதம் குணமாகி உயிர் பிழைக்கும் வாய்ப்பு.
• 1950லேயே கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் குடும்பத்தின் புதிய வைரஸ்தான் இது. அவ்வளவே.
• இதற்கு முன்னும் மனிதர்களைத் தாக்கி இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் மனிதர்களில் வரும் மூன்றில் ஒரு பங்கு சளிக் காய்ச்சலுக்கு கொரோனா வைரஸே காரணம்.
• எல்லா விலங்கிலும் கூட கொரோனா வைரஸ் இருக்கிறது.
• சபீனா சோப்பில் கை கழுவினால் கூட போதுமானது.
• பொதுமக்களுக்கு முகமூடிகள் தேவையில்லை. (மருத்துவ, சுகாதாரப் பணியில் ஈடுபடுகிறவர்களுக்குத்தான் வேண்டும்). பாதிக்கப்பட்டவர்கள் சரியான முறையில் பயன்படுத்தத் தெரிந்தால் மட்டுமே உபயோகிக்க வேண்டும்.
• குழந்தைகளிலும், கர்ப்பிணிப் பெண்களிலும் பாதிப்பின் வீரியம் குறைவே.
• ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் உயிர் பிழைக்கும் சதவிகிதம் மிக அதிகம் (99.1%).
• உலகில் மருந்து கண்டுபிடிக்க முடியாத பல வியாதிகள் இருக்கின்றன. குறிப்பாக டெங்கு. எனவே கொரோனாவிற்கு கூடுதல் அச்சம் தேவையில்லை.
• சிகிச்சை என்பது பாதிப்பைப் பொறுத்தது; நோயைப் பொறுத்தது அல்ல. எனவே நடைமுறையில் உள்ள சிகிச்சைகளே போதுமானது.
• நாய், பூனை, பறவைகள் வைத்திருப்பவர்கள் பொதுவான சுகாதாரத்தைப் பின்பற்றினாலே போதும். செல்லப் பிராணிகளுக்கு என்று குறிப்பாக பாதுகாப்பு எதுவும் தேவை இல்லை.
• பாதிக்கப் பட்டவர்களிலும் 15% பேருக்கு மட்டுமே  ICU, Ventilator தேவைப் படும்.
• பதற்றம் தேவையே இல்லை.

இப்போது புரளிகளைப் பற்றிப் பார்ப்போம்.
• புரளி நம்பர் 1 - வெய்யிலில் வராது.
— வெய்யிலில் கண்டிப்பாக வரும். வெயிலில் காற்றில் ஈரத்தன்மை சற்று அதிகம் இருக்கும். எனவே, பரவும் வேகம் குறைவாக இருக்கலாம். குளிர் காலத்தில் காற்று சற்று காய்ந்து இருக்கும். பரவுதல் சற்று எளிது. அதுவே வித்தியாசம்.

• புரளி நம்பர் 2 - மாமிசம் தின்றால் வரும்.
— ரசத்திலிருந்து மட்டன் பிரியாணி வரை எதை வேண்டுமானாலும் உண்ணலாம். எதைத் தின்றாலும் சுத்தமான தண்ணீரில் சமைத்துச் சாப்பிடுங்கள். சமைத்த உணவில் வைரஸ் பிழைக்காது.

• புரளி நம்பர் 3 - நிறைய தண்ணீர் குடித்தால் வராது.
— தேவையான தண்ணீர் குடிப்பது உடல் நலத்திற்கு நல்லது. எந்த நோயையும் எதிர்த்துப் போராடுவதற்கு உடலுக்கு கூடுதல் பலம் கிடைக்கிறது. மற்றபடி, கொரோனா தாக்குதலுக்கும், தண்ணீர் குடிப்பதற்கும் தொடர்பு இல்லை.

• புரளி நம்பர் 4 - இளவயதினருக்கு வராது.
— வயது வித்தியாசமின்றி எல்லாரையும் தாக்கும், ஆனால் வயதானவர்கள், மற்ற உடல் உபாதைகளுக்கு ஆளானவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் ஆகியோருக்கு பாதிப்பு அதிகம். (குறிப்பாக, Diabetes, HBP, Transplant candidates, Cancer patients etc.,)

• புரளி நம்பர் 5 - கிராமங்களில் வராது.
— காற்று இருக்கும் எல்லா இடங்களிலும் பரவும். கொரோனாவிற்கு நகரம் கிராமம் என்ற வித்தியாசம் எல்லாம் தெரியாது.

• புரளி நம்பர் 6 - மாற்று மருந்துகளில் குணமாகும்.
— எந்தவொரு நோய்க்கும், எந்தவொரு மருந்தும் சந்தைக்கு வருவதற்கு முன், நோயைக் கட்டுப்படுத்தும் அதன் தன்மைக்காகவும், அது பாதுகாப்பானதா என்பதற்காகவும் சோதனை செய்யப்பட்ட பிறகே பரிந்துரைக்கப்படும். கொரோனாவைப் பொறுத்தவரையில், இன்று வரை எந்த மருத்துவத்திலும், பரிசோதிக்கப்பட்ட எந்த மருந்தும் கிடையாது. கொரோனாவிற்கு அப்படி ஒரு மருந்து வர இன்னும் பல மாதங்கள் ஆகலாம். எனவே அறிகுறிகள் இருந்தால், எந்த மருந்தையும் எடுத்துக் கொள்ளாமல் மருத்துவரைப் பாருங்கள். உயிரிழப்பைத் தவிருங்கள்.

• புரளி நம்பர் 7 - அறுபது வயதிற்கு மேற்பட்ட சீனர்களை முடித்துக் கட்ட சீனா உருவாக்கிய வைரஸ்.
— இது அறிவியல் கூடத்தில் உருவாக்கப் பட்ட வைரஸ் அல்ல. GENOME SEQUENCE கொண்டு விலங்கிடமிருந்து எந்த நாளில் மனிதனுக்கு கடத்தப் பட்டது என்பது வரை மிகத் தெளிவாக ஆராய்ந்து கண்டு பிடித்து விட்டார்கள்.

• புரளி நம்பர் 8 - கொரோனா வைரஸ் இருப்பவர்களைக் கடந்து சென்றாலே நமக்கும் வந்து விடும்.
— வராது. நம் மேல் இருமினாலோ, தும்மினாலோ, அவர்களின் எச்சில் விரவி இருக்கும் காற்றை நாம் சுவாசித்தாலோதான் நம்மைத் தாக்கும். அவர்களின் எச்சில் பட்டு ஒரு இடம் காய்ந்து விட்டால், அந்த இடத்தை நாம் தொட்டாலும் வராது.

விழிப்புணர்வுத் தகவல்கள்
• அறியாமை நம்பர் 1 - முகமூடி அணிந்து விட்டால் கை கூட கழுவ வேண்டாம்.
— முதலாவதாக, முகமூடி அணியத் தேவையில்லை. அணிந்தால் சரியாக அணிய வேண்டும். அணிந்தாலும் 4-6 மணி நேரங்களுக்கு ஒரு முறை புதிய முகமூடி அணிய வேண்டும். ஒரு வேளை அதற்கு முன் மாஸ்க்கை வெளிப்புறமாக வடிகட்டியில் தொட்டு விட்டால் தூக்கி எறிந்து விட்டு புதிய மாஸ்க் அணிய வேண்டும். மாஸ்க்  அணிந்தாலும் கை கழுவ வேண்டும்.

• அறியாமை நம்பர் 2. பூண்டு, இஞ்சி, மிளகு சாப்பிட்டால் வராது.
— இவற்றையெல்லாம் சாப்பிட்டாலும் கொரோனா வைரஸ் வரும். மேலும், பூண்டு அதிகமாக பச்சையாயகச் சாப்பிட்டால் தொண்டையில் inflammation வரும். எச்சரிக்கை. Magic ஆன எந்த காய்கறிகளும், பழங்களும் இல்லை.

• கொரோனா வைரஸ்க்கு பயப்பட வேண்டுமா?
- புது வைரஸ். பின்னால் வருத்தப்படுவதை விட இப்போதே பாதுகாப்பாக இருப்பது நல்லது.
- காற்றில் பரவும் வைரஸ். நேரடித் தொடர்பைக் குறைப்பதன்மூலம் கட்டுப்படுத்த வாய்ப்புகள் அதிகம்.
- பாதிக்கப்பட்ட ஒருவர் 2 மீட்டர் தூரத்திற்கு ஒன்றிலிருந்து மூன்று பேர் வரை ஒரே சமயத்தில் பரப்ப முடியும்.
- பாதிக்கப்பட்டவர்கள் கட்டுப்பாடுடன் இருந்தால் பரவலின் வீரியத்தைக் குறைக்க முடியும்.
- தனக்கு கொரோனா இருக்கிறதா இல்லையா என்பதை தனிநபரால் தெரிந்து கொள்ள முடியாது. 
- பரிசோதிப்பதற்கு Proper Test Kit வேண்டும். Inaccurate test kit = Inaccurate results.

• ஏன் இவ்வளவு பதற்றம்?
புது வைரஸ். பரவும் வேகம் அதிகம். மேலும் கடந்த காலங்களை விட நாம் பயணிப்பதும், பொதுவில் ஒன்று கூடுவதும் அதிகமாகி விட்டது. சமூக வலை தளங்கள். 99.5% புரளிப் பரிமாற்றங்கள்.

• என்ன செய்ய வேண்டும்?
1. தனிப்பட்ட சுகாதாரம். 
முடிந்த வரை அடிக்கடி கை கழுவுங்கள். குறைந்த பட்சமாக சாப்பாட்டிற்கு முன், பின். கழிவறைக்குச் செல்லும் முன், பின். வெளியில் இருந்து வந்தால், அழுக்கான இடங்களைத் தொட்டால். இது அனைத்தும் பொதுவாகவே நமக்கு கற்றுக் கொடுக்கப் பட்ட விஷயங்கள் தான். கொரோனா special இல்லை.
2. கூட்டம் தவிருங்கள்.

• முக்கியமாக எதை செய்யக் கூடாது.
வதந்திகளைப் பரப்பாதீர்கள்.
வதந்திகளைப் பரப்பாதீர்கள்.
வதந்திகளைப் பரப்பாதீர்கள்.

ஞாயிறு, 22 நவம்பர், 2020

#மீள்_பதிவு - கொரானாவில் இருந்து உங்களை பாதுகாப்பதற்காக கியூபா மருத்துவர்களின் பரிந்துரைகள் பின்வருமாறு

#மீள்_பதிவு

இத்தாலிக்கு சென்ற கியூபா மருத்துவர்களின் இறந்த நோயாளிகளை அவர்கள் பரிசோதனை செய்ததில் இருந்து கிடைத்த தகவல்கள் இவை.

நாமும் அலட்சியம் செய்யாமல் முடிந்தவரை கொரோனா வைரசை அழிப்பதில் ஒத்துளைப்போம்

கீழ் உள்ள தகவல் வைத்தியர்களின் ஆய்வின் அடிப்படையில் பெறப்பட்டவை முடிந்தவரை நாம்மையும் காத்து மற்றவரையும் காக்க முயற்சிப்போம்

- இந்த கொரோனா வைரஸ் சுவாசக் கால்வாயில் தடித்த சளியை உருவாக்கி, அந்த சளி உறைவதன் மூலமாக சுவாசப் பாதையை அடைக்கிறது.

- மருந்தின் மூலம் சிகிச்சை செய்வதற்கு அடைப்புகள் நீக்கப்பட்டு, சுவாசப்பாதை திறக்கப்படவேண்டும். இப்படி அடைப்பை நீக்கி, சுவாசப் பாதையை திறப்பதற்கு பல நாட்கள் தேவை. அதற்குள் நோயாளி இறந்து விடுகிறார்.

 கொரானாவில் இருந்து உங்களை பாதுகாப்பதற்காக கியூபா மருத்துவர்களின் பரிந்துரைகள் பின்வருமாறு

1. சூடான நீராகாரங்களை அடிக்கடி எடுங்கள். தேநீர், காபி, சூப், வெந்நீர் போன்றவை. அத்துடன், 20 நிமிடத்திற்கு ஓர் தடவை ஓர் மிடறு வெந்நீரை உள்கொள்வது, வாயை ஈரலிப்பாக வைத்திருப்பதுடன், வைரஸை (வாய்க்குள் இருந்தால்) உணவுக் கால்வாய் வழியாக கழுவி வயிற்றை அடைந்து ஜீரண தொகுதியினால் நடுநிலையாக்கப்படும் (neutralise).

2. இயலுமானவரை, ஒவ்வொருநாளும் வெந்நீராலும், உப்பு அல்லது எலுமிச்சம் சாறு அல்லது ‘வினிகர்’ தொண்டையையும், வாயையும் அலசுங்கள் (gargle).

3. covid-19 வைரஸ் உடையிலும், மயிரிலும் ஒட்டிக் கொள்ளும் தன்மை உள்ளது. எந்த சவர்க்காரமும்(சோப்) அல்லது detergent உம் covid-19 ஐ கொல்லக் கூடியது. எனவே, வெளியில் சென்று வீடு திரும்பியவுடன், ஓர் இடத்திலும் தொடாமலும், இருக்காமலும்,(உட்காராமல்) நேரடியாக குளியல் செய்யுங்கள். அல்லது உடலின் அனைத்து பாகங்களையும் சோப்பு போட்டு கழுவிடுங்கள்.

4. நாள்தோறும் உடைகளை தோய்க்க முடியாவிட்டால், சூரிய வெய்யிலில் உலர்த்துவது வைரஸ் ஐ கொல்லக் கூடியது.

5. உலோக மேற்பரப்புகள் மற்றும் தொடு பரப்புகளை (Metalic surface) மிகவும் கவனாமாக கழுவுங்கள். ஏனெனில், உலோக தொடுபரப்புக்களில் பல நாட்கள் வரைக்கும் இந்த வைரஸ் தாக்கு பிடிக்க கூடியது.
கைபிடி சட்டங்கள், கதவின் கைப்பிடிகள் போன்றவற்றில் கவனமெடுத்து, தொடுவதை தவிருங்கள் அல்லது தவிர்ப்பதற்கான முறைகளை (கையுறை) கடைபிடியுங்கள். உங்கள் வீடுகளில் கைபிடி சட்டங்கள், கதவின் கைப்பிடிகள் போன்றவற்றை சுத்தமாக வைத்திருங்கள்.

6. புகை பிடிப்பதை தவிருங்கள்.

7. உங்கள் கைகளை 20 நிமிடத்திற்கு ஓர் தடவை நுரைக்கும் சவர்க்காரத்தினால்(சோப்) 20 நொடி கழுவுங்கள்.

8. மரக்கறி(காய்கறி) மற்றும் பழவகைளை உட்கொள்ளுங்கள். விட்டமின் C மாத்திரமின்றி, உங்களுக்கு நாகத் தாது (Zinc) ஊட்டச்சத்தை தரக்கூடிய உணவுகளை தேடி உண்ணுங்கள்.

9. மிருகங்கள் covid-19 ஐ மனிதருக்கு கடத்துவதில்லை. மனிதனில் இருந்து மனிதனுக்கே கடத்தப்படுகிறது.

10. இயலுமானவரை தடிமன் காய்ச்சலை தவிர்ப்பதற்கு முயற்சியுங்கள். குளிரான உணவுகளை தவிருங்கள்.
எதாவது தொண்டை கரகரப்பு அல்லது தொண்டை அரிப்பு வருவதற்கான அறிகுறிகளோ அல்லது உணர்வோ தென்பட்டால், மேற்கூறிய நடைமுறைகளின் மூலம் தொண்டை கரகரப்பு அல்லது தொண்டை அரிப்பு போன்றவற்றிற்கு எதிர்ப்பை ஏற்படுத்தி கொள்ளுங்கள்.

11.covid-19 தொண்டை கரகரப்பு அல்லது தொண்டை அரிப்பு மூலம் தொற்றி, 3-4 நாட்கள் வரை தொண்டையில் தங்கி இருந்து, சுவாசப் பாதை வழியாக நுரையீரலை சென்றடையும். எனவே தொண்டை கரகரப்பு அல்லது தொண்டை அரிப்பு போன்றவற்றிற்கு மேற்கூறிய முறைகள் மூலம் எதிர்ப்பை ஏற்படுத்தி கொள்ளுங்கள்.

உங்கள் உடல் நலனில் கவனமெடுப்பதுடன், ஏனையோருக்கும் இந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

கரோணாவை முன்னிட்டு தனிமையில் இருந்தபோது சிந்தித்தது,

கரோணாவை முன்னிட்டு தனிமையில் இருந்தபோது சிந்தித்தது,

“நம் முன்னோர்கள் கற்று கொடுத்தது முக்கியமானது  எண்ணெய் தேய்த்து குளித்தல் மற்றும் துணிகளுக்கு காரமிட்டு தூய்மை படுத்துதல்
1.கழிவறையும்,குளியலறையும் வீட்டிற்குள் வைக்காமல் கொல்லைபுறத்தில் வைத்தார்கள்.ஏன்-பெயர் வைக்காத கண்ணுக்கு தெரியாத கிருமிகள்.
2. சலூனுக்கும்,சாவுக்கும் சென்று வந்தால் எதையும் தொடாமல் குளித்தபின் வீட்டிற்குள் வந்தார்கள்.ஏன்-கிருமிகள்.
3. செருப்பை வீட்டின் வெளியே விட்டார்கள்.ஏன்-கிருமிகள்.
4. பள்ளிக்கும்,வெளியேயும் சென்று வந்தால் கைகால் கழுவி வீட்டிற்குள் வரசொன்னார்கள்.ஏன-கிருமிகள்.
5. பிறந்தாலோ,இறந்தாலோ தீட்டு என்று 10, 16 நாட்கள் தனிமைபடுத்தினர்.ஏன்-கிருமிகள்
6. சாவு வீட்டில் சமைக்க கூடாது என்றார்கள்.ஏன்-கிருமிகள்.
7. குடும்பத்திற்கு சமைக்கும் பெண்கள் குளித்துவிட்டு சமைத்தார்கள்.ஏன்-கிருமிகள்.
8. வாசல் பெருக்கி சாணம்,மஞ்சள் தெளித்து கோலமிட்டார்கள்.ஏன்-கிருமிகள்.
9.மண்,செம்பு,வென்கல பாத்திரங்களை உபயோகித்தார்கள்.ஏன்-கிருமிகள்.
10. வீட்டில் சமைத்த உணவு அதிலும் சைவமே பெரும்பாலும் உண்டார்கள்.ஏன்-கிருமிகள்.
தனிமனித ஆரோக்கியம்,சமூகத்தில் சுத்தம்,அண்டை அயலாரோடு அகலாது அனுகாது உறவாடுதல் போன்ற நம் மூதாதையர் வாழ்வியல் நெறியை கிண்டலடித்து,திட்டமிட்டு சிதைத்த மேலைநாட்டு நாகரிகம் அதற்கான விலையை இன்று கொடுத்து கொண்டிருக்கிறது.இனியாவது இளந்தலைமுறையினர்
“மூத்தோர் சொல் வார்த்தையும்,முழு நெல்லிக்காயும் முதலில் கசக்கும் பின்பு இனிக்கும்”என்றுணர்ந்து வளமான வாழ்வு வாழ்தல் நன்று.💐

சனி, 9 மே, 2020

ஒன்றரை மாதங்களில் சுமார் 12 ஆயிரம் கோடிகளுக்கு விற்பனையை இழந்த ஆங்கில மருந்து ஃபார்மா நிறுவனங்கள்.

ஒன்றரை மாதங்களில் சுமார் 12 ஆயிரம் கோடிகளுக்கு விற்பனையை இழந்த ஆங்கில மருந்து ஃபார்மா நிறுவனங்கள். 

அத்தனை மருந்துகளை உண்ணாமலும் உயிர் வாழும் மனிதர்கள்.

நாளொன்றுக்கு குறைந்தது 10 அறுவை சிகிச்சைகளாவது செய்து வந்த மருத்துவமனைகளில் ஒரு அறுவை சிகிச்சை கூட நடக்கவில்லை.

100, 200 படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனைகளில் காலியாகக் கிடக்கும் படுக்கை அறைகள்.

மூடிக்கிடக்கும் மருத்துவமனைகள்.

அப்படியென்றால் 12 ஆயிரம் கோடிகளுக்கு மருந்து வாங்காதவர்கள், அறுவை சிகிச்சைகள் செய்து கொள்ளாதவர்கள், மருத்துவமனைகளில் படுக்கைகளை நிரப்பாதவர்கள் எல பல ஆயிரக்கணக்கானோர் இறந்திருக்க வேண்டுமே?

ஆனால், இடுகாடு, சுடுகாடுகளிலும் எண்ணிக்கை மிகவும் குறைந்து போனதே.

எங்கே போனார்கள் அத்தனை பேரும் ???

ஆக, 12 ஆயிரம் கோடி ரூபாய்கள் வணிகம் நின்று போனதில் கிழிந்து தொங்குகிறது மருத்துவ வணிக நிறுவனங்களின் முகமூடிகள்.

அடப்பாவிகளா, இதெல்லாம் இல்லாமலே நல்லாதாண்டா நாங்க இருக்கோம்.

அப்போ .. தேவையையும்  செயற்கையா உருவாக்கி பொருட்களை சேவைகளையும் உருவாக்கி விற்பதுதான் "நவீன மருத்துவ அறிவியலா" ?!

வெள்ளி, 24 ஏப்ரல், 2020

*இன்னும் சில நாட்களில் ஊரடங்கு அடங்கி விடும். இன்றைய தலைமுறைக்கு இது ஒரு அழியா பாடம் ஆகும் இந்த ஊரடங்கு.*

*இன்னும் சில நாட்களில் ஊரடங்கு அடங்கி விடும். இன்றைய தலைமுறைக்கு இது ஒரு அழியா பாடம் ஆகும் இந்த ஊரடங்கு.*

*1. மக்களே  நீங்கள் நிச்சயம் வேலைக்கு செல்ல வேண்டும் குடும்பத்துக்காக வருமானம் ஈட்ட வேண்டும். இன்று முதல் ஒரு வருடத்திற்கு சிக்கனமாக இருக்கவும் தேவையற்றவைகளுக்கு செலவு செய்ய வேண்டாம்.* 

*2. கூடிய வரையில் சிறு வியாபாரிகள் கடையில் பொருள்களை வாங்குங்கள். மால் மற்றும் சூப்பர்மார்கெட்களை தவிர்த்து விடுங்கள்.* 

*3. Amazon /flip cart போன்ற online நிறுவனங்கள் செய்தித்தாள்களில் 5 அல்லது 6 பக்கங்களை ஆக்கிரமித்து விளம்பரம் கொடுத்தார்கள் வியாபாரத்தை பெருக்கினார்கள் ஊரடங்கு சமயத்தில் எல்லாம் காணாமல் போனார்கள் ஒரு வருடத்திற்கு நாம் அவர்களைத் தவிர்த்தால் அவர்கள் காணாமல் போய் விடுவார்கள்.*

*4. நகைக் கடைகளை புறக்கணியுங்கள் இன்று சவரன் 5000 ரூபாய்களைத் தொட்டு உள்ளது. ஒரு கிராம் வாங்க வேண்டும் என்றால். நீங்கள் புற்றீசல் போல நகைக் கடைகளை ஆக்கிரமித்தால் லாபம் நகை கடைக்காரர்களுக்கே. இந்த 2 மாத நஷ்டக் கணக்கை உங்கள் தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள் ஜாக்கிரதை. ஒரு வருடத்திற்கு நீங்கள் நகைகள் வாங்கவில்லை என்றால் ஊரில் பாதி நகைக்கடைகள் காணாமல் போய் விடும்.* 

*5. திரை அரங்குகளை புறக்கணியுங்கள். எந்த ஹீரோவும் நமக்கு ஒரு சிறு நன்மை கூடச் செய்யவில்லை. இந்த ஊரடங்கு முடிந்த  நேரத்தில். மனைவியின் தாலியை அறுத்து ஹீரோவின் 70 அடி cut out வைக்க வேண்டாம். அதற்குப் பால் ஊற்றவும் வேண்டாம். ஏன் என்றால் அந்தத் தகுதி அவர்களுக்கு இல்லை. 2000 ரூபாய் கொடுத்து பிடித்த நாயகன் படத்தை முதல் ஷோ பார்ப்பதினால் உங்கள் குடும்பங்களில் மங்களம் பெறப் போவதில்லை. ஒரு மூன்று மாதங்கள் பொறுங்கள் உலக தொலைக்காட்சிகளில் முதன் முறையாக திரைக்கு வந்த சில நாட்களே ஆன படம் என்று தொலைக்காட்சிகளில் நீங்கள் காணலாம்.*  

*6. பெரும் குடிமகன்களுக்கு ஒரு வார்த்தை 2 மாதம் rehabilitation center செல்லாமல் குடியை நிறுத்திய இந்த ஊரடங்கிற்கு நன்றி சொல்லுங்கள். படிப்படியாக குடியை நிறுத்தி உங்கள் குடும்பங்களைக் காப்பாற்றுங்கள்.*

*7. வாகனம் மற்றும் கார் வாங்குவதை அறவே தவிர்த்து விடுங்கள். ஏன் அரசாங்கம்  விதித்த BS 4 வாகனங்கள் நிறைய உள்ளன. அதை விற்பதற்கு வாகன உற்பத்தியாளர்கள் நீதிமன்றம் மூலமாகவோ அல்லது வேறுவிதமாகவோ discount என்கிற பெயரில் RTO ஆபீஸ் மூலமாக உங்கள் தலையில் கட்டி விடுவார்கள் ஜாக்கிரதை. அவர்களைப் பொறுத்தவரை ஆங்கிலத்தில் zero inventory Management என்கிற கொள்கையில் BS 4 வாகனங்களை கழித்துக் கட்டி விடுவார்கள் நீங்கள் ஏமாற வேண்டாம்.*

*8. 35000 ரூபாய் பெறுமான AC இன்று 10000 ரூபாய்க்கு விற்பனை என்று கூவிக் கூவி விற்பார்கள். இதனால் நஷ்டம் நமக்கே. ஏன் என்றால் Quality Compromise strategy will be adopted. அதே போல சீனாவில் இருந்து வரும் மொபைல் போன்றவைகளை online shop மூலமாக ஏகப்பட்ட discount கொடுத்து உங்கள் கைகளை அரிப்பு எடுக்கச் செய்வார்கள் ஜாக்கிரதை. ஒரு வருடம் மொபைல் வாங்கவில்லை என்றால் நமது குடி முழுகிப் போயிடாது.*

*9. மக்களே வாழ்விற்கு இது தேவை என்கிற நிலை வந்தால் மட்டுமே அந்தப் பொருள்களை வாங்குங்கள். அகலக்கால் அல்லது ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு நிரந்தர கடன்காரனாக அல்லது குடிகாரனாக மாறி விடாதீர்கள்.*

*10. கடன் அட்டை (Credit Card ) உபயோகத்தை கூடிய அளவு தவிர்த்து விடுங்கள். வரவு எட்டணா செலவு பத்தணா என்கிற பாடல்களை நினைவு கொள்ளுங்கள்.*

*11.குழந்தைகளே தயவு செய்து உங்கள் பெற்றோர்களை வருத்தாதீர்கள். என் friend I Phone 12 லேட்டஸ்ட் மாடல் வைத்து* *இருக்கிறான் அதே போல எனக்கும் வேண்டும் என்று அடம் பிடிக்காதீர்கள்.* *விரலுக்கு தகுந்த வீக்கம் வேண்டும்.*

*இன்னும் ஒரு ஆண்டு நமக்கு சோதனையான காலம். அதைக் கடந்து விட்டால் இன்று புறநகரில் 70 லட்சம் விற்கும் வீடு 50 லட்சத்திற்கு வந்து விடும் பிறகு வாங்கிக் கொள்ளலாம். ஒரு வருட பொறுமை உங்களை 20 லட்சம் வரை சேமிப்பிற்கு வழி வகுத்து இருக்கிறது. அதே போல தங்கம் விலையும் நீங்கள் ஒரு வருடம் வாங்க வில்லை என்றால் அடுத்த வருடம் பாதி விலையில் உங்களுக்குக் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. தயவு செய்து காத்திருக்கவும்.*

*ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே என்கிற எம்ஜிஆர் ன் பாடல் வரிகள்  இன்னும் வருடத்திற்கு நமக்குத் தேவை என்பதை மறந்து விடாதீர்கள்.*

*சிக்கனமும் சேமிப்பும் நமக்கு சோறு போடும். ஊதாரித்தனம் நமது வம்சத்தை அழித்து விடும் ஜாக்கிரதை.*

*கலியுகத்தின் கொடுமைகளை இன்னும் ஒரு வருடம் நாம் கண் முன்னே காணப் போகிறோம் ஜாக்கிரதை. விலை உயர்ந்த நகைகளையோ அல்லது வேறு ஏதாவதோ போட்டுக் கொண்டு சாலையில் செல்ல வேண்டாம். ஏன் என்றால் பஞ்சத்தின் கொடுமை நமது நாட்டில் உள்ள சட்டத்தை திருடர்கள் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு திருட்டுச் செயலில் அல்லது அதை விட கொடுமையான செயல்களில் ஈடுபடுவார்கள். ஒரு ரூபாய்க்காக கொலை செய்யும் கயவர்கள் உண்டு இந்த நாட்டிலே.*

*பகிர்வு*

புதன், 25 மார்ச், 2020

சீனவிடம் இருந்து பிந்திய மருத்துவ அறிவுரைகள், சீன மருத்துவர்கள் இறந்த நோயாளிகளை பிரேத பரிசோதனை செய்ததில் இருந்து.

சீனவிடம் இருந்து பிந்திய மருத்துவ அறிவுரைகள், சீன மருத்துவர்கள் இறந்த நோயாளிகளை பிரேத பரிசோதனை செய்ததில் இருந்து.

1) இந்த வைரசு சுவாசக் கால்வாயில் தடித்த சளியை உருவாக்கி, அந்த சளி உறைவதன் மூலமாக சுவாசப் பாதையை அடைகிறது.

2) மருந்தின் மூலம் சிகிச்சை செய்வதத்திற்கு அடைப்புகள் நீக்கப்பட்டு, சுவாசப் பாதை திறக்கப்படவேண்டும். இப்படி அடைப்பை நீக்கி, சுவாசப் பாதையை திறப்பதற்கு எண்ணுக்கணக்கிலான நாட்கள் தேவை.

கொரானாவில் இருந்து உங்களை பாதுகாப்பதற்கான சீன மருத்துவர்களின் பரிந்துரைகள் பின்வருமாறு:

1) சூடான நீராகாரங்களை அடிக்கடி எடுங்கள் - தேநீர், காபி, சூப், வெந்நீர் போன்றவை. அத்துடன், 20 நிமிடத்திற்கு ஓர் தடவை ஓர் முறடு வெந்நீரை உள்கொள்வது வாயை ஈரலிப்பாக வைத்திருப்பதுடன், வைரஸை (வாய்க்குள் இருந்தால்) உணவுக்கு கால்வாய் வழியாக கழுவி வயிற்ற்றை அடைந்து சமிபாடு தொகுதியினால் நடுநிலையாக்கப்படும் (neutralise)

2)  இயலுமானவரை, ஒவ்வொருநாளும் வெந்நீராலும்,  உப்பு அல்லது எலுமிச்சம் சாறு  அல்லது வினிகர் தொண்டையையும், வாயையும் அலசுங்கள் (gargle)

3) covid-19 வைரஸ் உடையிலும், மயிரிலும் ஒட்டிக் கொள்ளும் தனமாய் உள்ளது. எந்த சவர்க்காரமமும் அல்லது detergent உம் covid-19 ஐ கொல்லக்  கூடியது. எனவே, வெளியில் சென்று வீடு திரும்பியவுடன், ஓர் இடத்தில் தொடாமலும், இருக்காமலும், நேரடியாக குளியல்  செய்யுங்கள்  அல்லது தோயுங்கள்.

4) நாள்தோறும் உடைகளை தோய்க்க முடியாவிட்டால், சூரிய வெய்யிலில் உலர்த்துவது வைரஸ் ஐ கொல்லக்  கூடியது.     

5) உலோக மேற்பரப்புகள் மற்றும் தொடு பரப்புகளை (metalic surface) மிகவும் கவனாமாக கழுவுங்கள்.   ஏனெனில், உலோக  தொடுப்பரப்புக்களில் 9 நாட்கள் வரைக்கும் இந்த வைரஸ் தாக்கு பிடிக்க கூடியது.

6) கைபிடி  சட்டங்கள், கதவின் கைப்பிடிகள் போன்றவற்றில் கவனமெடுத்து, தொடுவதை தவிருங்கள் அல்லது தவிர்ப்பதற்கன முறைகளை (கையுறை) கடைபிடியுங்கள். உங்கள் வீடுகளில் கைபிடி  சட்டங்கள், கதவின் கைப்பிடிகள் போன்றவற்றை சுத்தமாக வைத்திருங்கள்.

7) புகை பிடிப்பதை தவிருங்கள்.

😎 உங்கள் கைகளை 20 நிமிடத்திற்கு ஓர் தடவை நுரைக்கும் சவர்க்கரத்தினால் 20 நொடி கழுவுங்கள்.

9)  மரக்கறி மற்றும் பழவகைளை உட்கொள்ளுங்கள். விற்றமின் C மாத்திரமின்றி, உங்கள் நாக தாது (Zinc) ஊட்டச்சத்தை தரக்கூடிய அல்லது கூட்டக்கூடியதாக இருக்கும் வழிமுறைகளை கையாளுங்கள்.

10) மிருகங்கள் covid-19 ஐ மனிதருக்கு கடத்துவதில்லை. மனிதனில் இருந்து மனிதனுக்கே கடத்தப்படுகிறது.

11) இயலுமானவரை தடிமன் காய்ச்சலை தவிர்பதற்கு முயற்சியுங்கள். குளிரான உணவுகளை தவிருங்கள்.

12) எதாவது தொண்டை கரகரப்பு அல்லது தொண்டை அரிப்பு வருவதற்கன அறிகுறிகளோ அல்லது உணர்வோ தென்பட்டால், மேற்கூறியவற்றின் மூலம்    தொண்டை கரகரப்பு அல்லது தொண்டை அரிப்பு போன்றவற்றிற்கு எதிர்ப்பை ஏற்படுத்தி கொள்ளுங்கள்.

13)    covid-19 தொண்டை கரகரப்பு அல்லது தொண்டை அரிப்பு மூலம் தொற்றி, 3-4 நாட்கள் வரை தொண்டையில் தங்கி இருந்து, சுவாசப் பாதை வழியாக நுரையீரலை சென்றடையும். எனவே தொண்டை கரகரப்பு அல்லது தொண்டை அரிப்பு போன்றவற்றிற்கு மேற்கூறிய படிமுறைகள் மூலம்  எதிர்ப்பை ஏற்படுத்தி கொள்ளுங்கள்.

14) உங்களில் கவனமெடுப்பதுடன், ஏனையோருக்கும் இந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
(நண்பர் ஒருவரின் பதிவில் இருந்து...)

Popular Posts

Facebook

Blog Archive