பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

சனி, 21 மே, 2016

Search Duplicate File ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள டூப்ளிகேட் பைல்களை கண்டறிந்து நீக்க வேண்டுமா?

எமக்கு பிடித்த பாடல்கள், திரைப்படங்கள், புகைப்படங்கள் என ஏராளமானவற்றை நாம் எமது ஸ்மார்ட்போனில் சேமித்திருப்போம் அல்லவா?

ஆண்ட்ராய்டு டூப்ளிகேட் பைல்

சில வேளைகளில் நாம் எமது ஸ்மார்ட்போனுக்கு தரவிறக்கிய பாடல்கள், வீடியோ கோப்புக்கள் புகைப்படங்கள் போன்றவற்றை நண்பர்களிடம் இருந்தும் பெற்றிருப்போம், அல்லது பேஸ்புக், வாட்ஸ்அப் மூலம் வந்தவைகள் தானாகவே எமது ஸ்மார்ட்போனில் சேமிக்கப்பட்டிருக்கும், அல்லது நாமே அவற்றை ஒன்றுக்கு பல தடவை எமது ஸ்மார்ட்போனில் வெவ்வேறு இடங்களில் சேமித்திருப்போம்.




இதனால் எமது ஸ்மார்ட்போனில் உள்ள நினைவகம் எம்மை அறியாமலேயே நிரப்பப்பட்டுவிடுகிறது.

எனவே இவ்வாறு ஒன்றுக்கு பல தடவை சேமிக்கப்பட்டுள்ள கோப்புக்களை கண்டறிந்து அவற்றை நீக்கிக் கொள்ள உதவுகிறது Search Duplicate File எனும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான செயலி நாம் கீழே வழங்கியுள்ள இணைப்பு மூலம் இதனை தரவிறக்கிக் கொள்ளலாம்.


இதன் மூலம் ஒன்றுக்கு மேலதிகமாக சேமிக்கப்பட்டுள்ள MP3 பாடல்கள், வீடியோ கோப்புக்கள், புகைப்படங்கள், ஆவணங்கள், APK கோப்புக்கள் (செயலிகள்) என எந்த ஒன்றையும் குறுகிய நேரத்திலேயே கண்டறிந்து நீக்கிக்கொள்ள முடியும்.

இந்த செயலியின் மூலம் உங்கள் ஸ்மார்ட்போன் முழுவதுமாகவோ அல்லது நீங்கள் விரும்பும் கோப்புறைகளை மாத்திரமோ தெரிவு செய்து சோதிக்க (Scan) முடியும்.



பின்னர் உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் ஒரே தன்மையை கொண்ட ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புக்கள் (Files) இருந்தால் அவைகள் அனைத்தும் பட்டியலிடப்படும். 


இனி அவற்றில் ஒன்றை வைத்துவிட்டு ஒரே தன்மையை கொண்ட ஏனைய கோப்புக்களை (டூப்ளிகேட் பைல்களை) குறிப்பிட்ட செயலியின் மூலமே மிக இலகுவாக நீக்கிக் கொள்ளலாம்.

மேலும் தேடல் முடிவில் நூற்றுக்கணக்கான கோப்புக்கள் பட்டியலிடப்பட்டால் அவற்றில் உள்ள புகைப்படங்கள், ஆவணங்கள், வீடியோ கோப்புக்கள், இசைகள்/பாடல்கள் போன்றவற்றை தனித்தனியாக பெற்றுக்கொள்வதற்கு குறிப்பிட்ட செயலியில் Filter எனும் வசதியும் தரப்பட்டுள்ளது.

இது தவிர மேலும் பல வசதிகளை தரும் இந்த செயலியை நீங்களும் ஒருமுறை பயன்படுத்திதான் பாருங்களேன்.

Third Eye ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை இயக்க முயற்சிப்பவரை போட்டோவுடன் கையும் களவுமாக பிடிக்க வேண்டுமா?

இன்று நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்கள் வெறும் ஸ்மார்ட்போன் மாத்திரம் அல்ல.



அது விலைமதிப்பற்ற எமது தனிப்பட்ட தகவல்கள் அடங்கிய ஒரு பெட்டகம் எனவும் குறிப்பிடலாம்.


எனவே ஸ்மார்ட்போன் என்பது ஒவ்வொருவருக்கும் ஒரு பயனுள்ள கருவியாக அமைந்தாலும் கூட துரதிஷ்டவசமான சில சந்தர்பங்களில்  அது எமக்கு அச்சுறுத்தலாக அமைவதும் உண்டு.

இது போன்ற துரதிஷ்டவசமான நிகழ்வுகளானது எமது ஸ்மார்ட்போன் இன்னும் ஒருவரது கைகளுக்கு செல்லும்போதே இடம்பெறுகிறது.

எமது ஸ்மார்ட்போனை ஏனையவர்களால் பயன்படுத்த முடியாதவாறு அவற்றுக்கு கடவுச்சொல் இட்டு பயன்படுத்தினாலும் கூட அவற்றை ஊகித்து பயன்படுத்த முயற்சிப்பவர்களும் நம்மில் இல்லாமல் இல்லை.

எனவே எமது ஸ்மார்ட்போனை அவ்வாறு தவாறாக பயன்படுத்த முயற்சிப்பவர்களை கையும் களவுமாக பிடித்துக்கொள்ள உதவுகிறது Third Eye எனும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான செயலி. கீலுள்ள இணைப்பு மூலம் இதனை தரவிரக்கிக் கொள்ளலாம்.


ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் தவறாக கடவுச்சொல்லை உள்ளிட்டு உங்கள் ஸ்மார்ட்போனை இயக்க முயற்சிக்கும் போது குறிப்பிட்ட நபரை இந்த செயலி மூலம் கையும் களவுமாக படம்பிடித்துக் கொள்ளலாம்.




மேலும் தவறாக கடவுச்சொல்லை உள்ளிட்டு உங்கள் ஸ்மார்ட்போனை யாராவது இயக்க முயற்சித்திருந்தால் அதனை நோட்டிபிகேஷன் மூலம் அறிந்து கொள்வதற்கான வசதியும் இந்த செயலியில் தரப்பட்டுள்ளது.




ஒருவேளை உங்களுக்குத் தெரியாமல் சரியான கடவுச்சொல்லை உள்ளிட்டு இன்னுமொருவர் பயன்படுத்தியிருக்கலாம் அல்லவா? அவ்வாறன சந்தர்பங்களில் உங்கள் ஸ்மார்ட்போன் இறுதியாக அன்லாக் (Unlock) செய்யப்பட்ட நேரத்தை இந்த செயலி மூலம் அறியலாம். எனவே இந்த வசதியை வைத்தும் இன்னும் ஒருவரால் எமது ஸ்மார்ட்போன் உளவு பார்க்கப்பட்டிருக்கிறதா? என்பதை ஊகித்துக் கொள்ளலாம்.

இவைகள் தவிர இன்னும் பல வசதிகளை தரும் இந்த செயலியை நீங்களும் பயன்படுத்திதான் பாருங்களேன்
Dow here

Send Anywhere - உலகின் எந்த மூலையில் இருப்பவருக்கும் எவ்வளவு பெரிய கோப்புக்களையும் பகிர உதவும் செயலி

புகைப்படங்கள், ஆவணங்கள், வீடியோ கோப்புக்கள் போன்ற எந்த ஒரு கோப்புக்களையும் ஒரு சாதனத்தில் இருந்து இன்னுமொரு சாதனத்துக்கு பகிர்ந்துகொள்ளும் வழிமுறைகள் இன்று மிகவும் இலகுபடுத்தப்பட்டுள்ளது.

Send anywhere

அருகில் இருக்கும்  சாதனங்களுக்கு ப்ளூடூத், வை-பை ஹொட்ஸ்பொட் போன்ற தொழினுட்பங்களை பயன்படுத்தி நாம் கோப்புக்களை பகிர்ந்தாலும்கூட தூர இடங்களில் இருக்கும் ஒருவருக்கு கோப்புக்களை அனுப்ப நாம் இணையத்தையே நாடவேண்டி உள்ளது.


எனவே இதற்கு பலரும் மின்னஞ்சல் முறைமையை பயன்படுத்தி வருகின்றனர் இருப்பினும் இதில் சில வரையறைகள் இருப்பதால் சில சந்தர்பங்களில் அது சாத்தியமாகமலும் இருப்பதுண்டு.

என்றாலும் எவ்வளவு பெரிய கோப்புக்களையும், எந்த ஒரு சாதனத்தை பயன்படுத்தியும் மிக வேகமாகவும் இலகுவாகவும் பகிந்துகொள்ள உதவுகிறது Send Anywhere எனும் சேவை

இதனை பயன்படுத்துவதற்கான ஆண்ட்ராய்டு ஐபோன் செயலிகளை கீழே வழங்கியுள்ள இணையச்சுட்டி மூலம் தரவிறக்கிக் கொள்ளலாம்.


மொபைல் சாதனங்கள் மாத்திரமல்லாது Send Anywhere எனும் இணையதளத்தின் ஊடாகவும் கோப்புக்களை அனுப்பவும் பெறவும் முடியும்.

இதனை பயன்படுத்துவதற்கு எவ்வித கணக்குகளையும் உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது இதன் சிறப்பம்சமாகும்.

Send Anywhere மூலம் கோப்புக்களை பகிர்வது எப்படி?

1. உங்கள் ஸ்மார்ட்போனில் நிறுவப்பட்டுள்ள Send Anywhere எனும் செயலி மூலமோ அல்லது Send Anywhere இணையதளத்தின் மூலமோ நீங்கள் பகிர வேண்டிய கோப்புக்களை தெரிவு செய்ய வேண்டும்.

Send Anywhere


2. இனி Send என்பதை அழுத்தும் போது தோன்றும் ஆறு இலக்கங்களை கொண்ட எண் தொடரை குறிப்பிட்ட நபருக்கு வழங்குவதன் மூலம் அவர்கள் அந்த கோப்பை தரவிறக்கிக் கொள்ள முடியும். (இந்த இரகசிய எண் 10 நிமிடங்களுக்கு மாத்திரமே செல்லுபடியாகும்)

  • அத்துடன் கோப்புக்களை தெரிவு செய்து அவற்றை வாட்ஸ்அப், வைபர் மற்றும் பேஸ்புக் போன்றவற்றின் ஊடாக பகிர்ந்து கொள்வதற்கான வசதியும் இதில் தரப்பட்டுள்ளது. (இவ்வாறு பகிரப்படும் இணைப்புகள் 48 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும்) 


ஒருவரால்  உங்களுக்கு அனுப்பப்பட்ட கோப்புக்களை பெறுவது எப்படி?

1. முதலில் அந்த கோப்பை அனுப்பியவரிடம் இருந்து அதற்கான 6 எண்களை கொண்ட எண் தொடரை பெற்றுக்கொள்ள வேண்டும்.


Send Anywhere app


2. பின்னர் Send Anywhere செயலியில் தரப்பட்டுள்ள Receive எனும் பட்டனை சுட்டும்போது தோன்றும் இடைமுகத்தில் நீங்கள் பெற்றுக்கொண்ட எண்ணை உள்ளிட வேண்டும்.

இனி அந்த கோப்பு தானாகவே தரவிறக்கப்படும்.




DiskDigger ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் அழிந்த புகைப்படங்களை திரும்பப் பெறுவது எப்படி?

எமக்குத் தேவையான எந்த ஒரு புகைப்படத்தையும் நாம் நினைத்த மாத்திரத்தில் இணையத்தில் இருந்து உடனுக்குடன் தரவிறக்கிக் முடியும்.

Android Photo recovery

என்றாலும் சுற்றுலா பயணங்களின் போதோ, திருமண வைபவங்களின் போதோ அல்லது இது போன்ற மேலும் பல இனிமையான தருணங்களில் நாம் எமது உறவினர்கள் நண்பர்களுடன் பிடிக்கும் புகைப்படங்கள் தவறுதலாகவோ அல்லது மறதியாலோ அழிக்கப்பட்டுவிட்டால் அது எமக்கு பாரிய வருத்தத்தை தருவதாக அமைந்து விடும்.


இருப்பினும் அவ்வாறு எம்மை அறியாமலேயே அழிக்கப்பட்ட புகைப்படங்களை மீட்டுக்கொள்ள உதவுகிறது டிஸ்க்டிக்கர் (DiskDigger) எனும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான செயலி. கீழுள்ள இணையச் சுட்டி மூலம் இதனை தரவிறக்கிக் கொள்ளலாம்.


இதனை பயன்படுத்துவதற்கு உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் ரூட் (Root) செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

இதனை நிறுவிய பின்னர் குறிப்பிட்ட செயலியின் பிரதான இடைமுகத்தில் தோன்றும் START BASIC PHOTO SCAN என்பதை சுட்டுவதன் மூலம் நீக்கிய புகைப்படங்களை தேடிப் பெற்றுக்கொள்ள முடியும்.

அவ்வாறு பெறப்பட்ட புகைப்படங்களில் உங்களுக்கு தேவையானவற்றை மாத்திரம் தெரிவு செய்து உங்கள் ஸ்மார்ட்போனில் சேமித்துக்கொள்ள முடியும் 

இவ்வாறு சேமித்துக் கொள்வதற்கு குறிப்பிட்ட புகைப்படத்தின் வலது மேல் மூலையில் இருக்கும் மூன்று சிறிய புள்ளிகளை கொண்ட குறியீட்டை சுட்ட வேண்டும். பின்னர் தோன்றும் Save this file locally என்பதை சுட்டுவதன் மூலம் அவற்றை உங்கள் ஸ்மார்ட்போனில் சேமித்துக்கொள்ள முடியும்.


DiskDigger android application 



மேலும் Recover this file என்பதை சுட்டுவதன் மூலம் அவற்றை கூகுள் டிரைவ், ட்ராப்பாக்ஸ் போன்ற இணைய சேமிப்பகங்களில் சேமித்துக்கொள்ளவும் முடியும்.

முயற்சித்துப்பாருங்கள் நீங்கள் இழந்த ஆயிரக்கணக்கான புகைப்படங்கள் மீட்கப்படுவதை அவதானிப்பீர்கள். இருப்பினும்  அது  மேலோட்டமானது தான் ரூட் செய்யப்பட்டிருந்தால் ஆழமான தேடல் முடிவுகளையும் பெற்றுக்கொள்ளலாம்.

வியாழன், 19 மே, 2016

Android Mobile ல் Antivirus அவசியம்தானா? இதை படித்து தெரிந்துகொள்ளுங்கள்..!



     Android மொபைல்களில் Anti Virus Install செய்து உபயோகிக்காத நபர்களே இல்லை
அவர்களிடம் இதை பற்றிய காரணத்தை கேட்கையில சில பேர் ( இது என்ன கேள்வி virusஇடம் இருந்து மொபைலை காத்துக்கொள்ளதான்) என்றும் சில பேர்  (யாருக்கு தெரியும்friends எல்லாரும் சொன்னாய்ங்க அதுனாலதா போட்ருக்கேன் ஆனா இதுவரைக்கும, இது ஒரு Virusa கூட புடுச்சதில்ல சாமி )என்றும் கூறினார்கள். ஆனால் ஒரு SMARTER தன்னுடைய மொபைலில்anti virus மென்பொருளை Install செய்திருக்க மாட்டார்.




  நானும் அதைத்தான் கூறுகிறேன் .நமது போனிற்கு anti virus தேவையே இல்லை சில பேர் கூறலாம் நான் உபயோகிக்கும்AntiVirus மென்பொருள் சில
Applicationஐ install செய்கையில் அதிலுள்ள virusஐ பிடித்துள்ளது என்று அவர்கள் முதலில் இதை தெரிந்து கொள்ளுங்கள் அதில் பிடிபட்ட
அந்த சர்ச்சைக்குறிய applicationகளால் நமது மொபைலை ஒன்றும் செய்திட முடியாது.


 
 Android என்பது ஒரு secure செய்யப்பட்ட OS இதனுடைய சிஸ்டம் memory அனைத்தையும் அது தன்னுடைய கட்டுப்பாட்டில்வைத்திருக்கும்
ஆதலால் எந்த ஒரு eraserம் crackerம் இதனை நெருங்க முடியாது இதை நான் மட்டும் கூறவில்லை android osஐ வடிவமைத்த Andy Rubinம் இதைத்தான் கூறுகிறார் சிந்தித்து பாருங்கள் இது வரை மொபைல் போன்
virusஆல் தாக்கப்பட்டு செயலிலந்து விட்டது என
யாராவது கூறி கேள்வி பட்டுள்ளீர்களா ? அப்படி ஆகியிருந்தால் அது Root செய்யப்பட்ட மொபைலாகத்தான் இருக்கும்
ஏனெனில் அதுமட்டுமே secure செய்யப்பட்டதை மீறிய ஒன்று
இதை நான் சாதாரணமாக கூறவில்லை முழுக்க
முழுக்க சோதித்த பின்னரே இதை உடனடியாக இங்கு பதிவிடுகிறேன் anti virus install செய்வது anti Theftற்காகவே தவிர அதனால் virusஐ முழுமையாக நீக்க முடியாது இதை புரிய வைக்க இன்னொரு பதிப்புதான் போட வேண்டும்
ஆக தனது மொபைலின் வேகம் குறைவாக இருப்பதாக உணருபவர்கள் இதனை உடனே uninstall செய்துவிடுங்கள் வேகத்தையாவது சற்று அதிகப்படுத்தலாம்
See more:  www.masinfom.blogspot.com

Google Space Application- கூகுள் அறிமுகப்படுத்தியிருக்கும் புத்தம் புதிய சேவை! வாருங்கள் இன்றே பயன்படுத்தலாம்!

கூகுள் அதன் பயனர்களுக்கு ஸ்பேஸ் (Space) எனும் புதியதொரு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

கூகுள் ஸ்பேஸ் (Space) குழு

இந்த வசதி மூலம் ஒரே நேரத்தில் பலர் இணைந்து தகவல்களை பரிமாறிக்கொள்ள முடியும்.




எந்த ஒருவராலும் ஒரு குழுவை உருவாக்கி அதில் கருத்துக்கள், புகைப்படங்கள், வீடியோ கோப்புக்கள், இணைய இணைப்புகள் என எந்த ஒன்றையும் பகிர முடியும்.

மேலும் குழு உருவாக்கப்பட்டதன் பின்னர் பெறப்படும் அழைப்பு விடுப்பதற்கான இணைப்பை (Invite Link) நண்பர்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்களால் உங்கள் குழுவில் இணைய முடியும்.

இந்த வசதியை நேரடியாக கணினி மூலம் பயன்படுத்திக் கொள்ள முடிவதுடன் ஆண்ட்ராய்டு, ஐபோன் மூலம் பயன்படுத்துவதற்கான செயலிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கீலே வழங்கியுள்ள சுட்டி மூலம் இந்த செயலிகளை தரவிரக்கிக் கொள்ளலாம்.




உங்கள் குழுவில் இணையும் எந்த ஒருவராலும் ஏனைய உறுப்பினர்களுடன் தகவல்களை பகிர முடியும்.




ஸ்பேஸ் (Space) செயலியின் மத்தியில் தரப்பட்டுள்ள பட்டனை சுட்டுவதன் மூலம் இணையதளங்கள், யூடியூப் வீடியோ கோப்புக்கள் போன்றவற்றை நேரடியாக இணையத்தில் இருந்து தேடிப்பெற்று அவற்றை உடனுக்குடன் பகிர்ந்துகொள்வதற்கான வசதி இந்த செயலியில் தரப்பட்டுள்ளது.


மேலும் பகிரப்படும் தகவல்களுக்கு குழுவில் உள்ள எந்த ஒரு உருப்பினராலும் கருத்துக்களை தெரிவிக்க முடிவதுடன் ஓட்டுக்கள் (Sticker), புகைப்படங்கள், இணைய இணைப்புகள் போன்றவற்றை கருத்துரையாக (Comment) இடவும் முடியும் 




அதே நேரம் குழுவில் உள்ள உறுப்பினர்களால் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு செயற்பாடுகளையும் Spaces Activity எனும் பகுதியின் மூலம் அவதானிக்கவும் முடிகிறது.

எனவே கூகுள் கணக்கை பயன்படுத்தி கூகுளின் இந்த புதிய ஸ்பேஸ் (Space) சேவையை உங்களாலும் இன்றே பயன்படுத்திக் கொள்ளலாம்.

உதாரணத்திற்கு எம்மால் உருவாக்கப்பட்ட "Tamil Android -MASinfo"குழுவில் உங்களாலும் இணைந்து தகவல்களை பரிமாறிக்கொள்ளலாம்.




புதன், 18 மே, 2016

Dial Pad ## ட்ரிக் மூலம் அன்ரோயிட் போனில் இருக்கும் மெசேஜ் மற்றும் தொலைபேசி இலக்கங்களை மறைப்பது எப்படி?

எமக்கு தேவையான அனைத்து விடயங்களையும் எமது ஸ்மார்ட் போனில் வைத்து அதை பாதுகாப்பதற்காக ஏதேனும் ஒரு லாக்கர் செயலியை ஸ்மார்ட் போனில் நிறுவி இருப்போம்.

ஆனால் யாரவது எமது ஸ்மார்ட் போனை எடுத்து பார்த்தால், எமது ஸ்மார்ட் போனில் லாக்கர் செயலி ஒன்று நிறுவப்பட்டிருப்பதை கண்டு கொள்ள கூடியதாய் இருக்கும்.

இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்ட நபர் எமது ஸ்மார்ட் போனில் நிறுவப்பட்டிருக்கும் லாக்கர் செயலியை திறந்து பார்க்க முயற்சிக்கலாம்.

ஆகவே இன்று நான் அறிமுகப்படுத்தபோகும் விடயம் என்னவென்றால், எமது ஸ்மார்ட் போனில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் குறிப்பிட்ட குறும் செய்திகள் அல்லது தொலைபேசி இலக்கங்களை ஸ்மார்ட் போனில் இருப்பதே தெரியாமல் மறைப்பது எப்படி என்று பார்ப்போம்.


இதை நான் கீழே வழங்கி இருக்கும் குறிப்பிட்ட செயலி மூலம் செய்து கொள்ளலாம். இந்த செயலியின் சிறப்பம்சம் என்னவென்றால், எமக்கு தேவையான குறும் செய்திகள் மற்றும் தொலைபேசி இலக்கங்களை ஸ்மார்ட் போனில் இருந்து மறைப்பதோடு இந்த செயலியையும் ஸ்மார்ட் போனில் இருந்து மறைத்து விடலாம்.


ஆகவே எமது ஸ்மார்ட் போனில் லாக்கர் செயலி ஒன்று நிருவப்பட்டிருப்பதே யாருக்கும் தெரிய வராது.

முதலாவதாக இந்த லின்க்கில் சென்று Private SMS & Call செயலியை தரவிறக்கி கொள்ளுங்கள்.

தரவிறக்கிய செயலியை உங்களது ஸ்மார்ட் போனில் நிறுவி கொள்ளுங்கள்.

இப்போது இந்த செயலி மூலம் உங்களது ஸ்மார்ட் போனில் இருக்கும் உங்களுக்கு தேவையான குறும் செய்தி அல்லது தொலைபேசி இலக்கங்களை தேர்தெடுத்து Import செய்து கொள்ளுங்கள்.


இந்த செயலிக்கு உங்களது ஸ்மார்ட் போனில் இருக்கும் தொலைபேசி இலக்கங்களை Import செய்து கொள்ளலாம்.


அதே போல் உங்களுக்கு தேவையான குறும் செய்திகளை Import செய்து கொள்ளலாம்.


மற்றும் புதிய தொலைபேசி இலக்கங்களை உருவாக்குவது, உங்களுக்கு தேவையில்லாத உள்வரும் அழைப்புக்களை Block செய்வது என்று மேலும் பல்வேறு வசதிகளை வழங்குகிறது.

அடுத்ததாக இந்த செயலியை எப்படி எமது ஸ்மார்ட் போனில் இருந்து மறைப்பது என்று பார்ப்போம்.
இதை செய்ய இந்த செயலியின் Settings சென்று அங்கே Hide Icon என்று On இருப்பதை செய்யுங்கள்.


அடுத்து இந்த செயலிக்கான உங்களது கடவுச்சொல்லை வழங்குங்கள்.


இப்போது இந்த செயலி உங்களது ஸ்மார்ட் போனில் இருந்து மறைந்து விடும். மறுபடியும் இந்த செயலில் மறைத்து வைக்கப்பட்ட File-களை பார்க்க வேண்டுமானால் உங்களது ஸ்மார்ட் போனில் Dial Pad மூலமாக தான் பார்க்க வேண்டும்.

அதாவது உங்களது ஸ்மார்ட் போனில் Dial Pad-ஐ திறவுங்கள்.

அதிலே ## என்று டைப் செய்து அதற்கு பிறகு குறிப்பிட்ட செயலிக்கான உங்களது கடவுச்சொல்லை வழங்குங்கள்.

உதாரணமாக உங்களது கடவுச்சொல் 1234 என்றால் Dial Pad-இல் ##1234 என்று டைப் செய்து Call பட்டன்-ஐ அழுத்துங்கள். அடுத்த நொடி, மறைந்து கிடக்கும் இந்த செயலியை திறப்பதற்கான திரை தோன்றும். அங்கே உங்களது மறைத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து File-களையும் பார்த்து கொள்ளலாம்.

See This: www.masinfom.blogspot.com

ஆன்ராயிடு போனில் எந்தவிதமான ஆப்ஸ்-ம் இல்லாமல் கேலரி-யில் இருக்கும் போட்டோ, வீடியோகளை மறைப்பது எப்படி?


எமது இணையத்தளத்திட்கு அதிகமான ஸ்மார்ட் போன் பாவனையாளர்கள் வருகை தரத்தொடங்கி விட்டதால், எமது பதிவுகள் ஸ்மார்ட் போன் பாவனையாளர்களுக்கும் உதவும் வகையில் அமைய வேண்டும். ஆகவே இன்றைய பதிவு அன்றொஇட் ஸ்மார்ட் போன் பாவனையாலர்களுக்கனது. இன்றைய பதிவில் அன்றொஇட் ஸ்மார்ட் போனுக்கான அருமையான ஒரு உபாயத்தை கூறவிருக்கிறேன்.

அன்றொஇட் ஸ்மார்ட் போன் வைத்து இருக்கும் நாங்கள் எமது ஸ்மார்ட் போனிலே இருக்கும் எமது தனிப்பட்ட போட்டோ மற்றும் வீடியோ-களை மறைத்து வைப்பதற்காக ஏதேனும் ஒரு லாக்கர் செயலியை பயன்படுத்திக்கொண்டு இருக்கிறோம். ஆனால் யாரேனும் எமது ஸ்மார்ட் போனை எடுத்து பார்த்தால் லாக்கர் செயலி ஒன்று நிறுவப்பட்டிருப்பது தெரியவரும்.



ஆகவே இன்றைய பதிவில் எந்த விதமான செயலிகளின் உதவியுமின்றி எமது ஸ்மார்ட் போன் Gallery-யில் இருக்கும் எமது தனிப்பட்ட போட்டோ மற்றும் வீடியோ-களை எப்படி மறைத்து வைப்பது என்று கூறுகிறேன்.

முதலாவதாக உங்களது அன்றொஇட் ஸ்மார்ட் போனில் My Files அல்லது File Manager என்று இருக்கும் மெனு-இற்கு செல்லுங்கள்.

அங்கே Device Storage என்பதை கிளிக் செய்யுங்கள்.


அடுத்து மேலே வலது மூலையில் Settings-இற்கு சென்று Create Folder என்பதை கிளிக் செய்யுங்கள்.


இப்போது உங்களால் நினைவில் வைத்து கொள்ள கூடியவாறான ஒரு பெயருடன் Folder-ஐ உருவாக்குங்கள்.

மிக முக்கியமான விடயம் என்னவென்றால், நீங்கள் உருவாக்கும் Folder-ன் பெயருக்கு முன்னால் ஒரு புள்ளியை வைத்து Folder-ஐ உருவாக்குங்கள். நான் கீழே காட்டி இருக்கும் படத்தை பார்த்தால் எப்படி Folder-ஐ உருவாக்க வேண்டும் என்பது உங்களுக்கு புரியும்.


Folder-ஐ உருவாக்கிய பின்னர் My Files-இனுள் இருக்கும் Image என்பதை கிளிக் செய்யுங்கள்.

அங்கே உங்களது Gallery-யில் இருக்கும் அனைத்து போட்டோகளும் காட்டப்படும்.

அடுத்து மேலே வலது மூலையில் காணப்படும் Settings-ஐ கிளிக் செய்து Select என்பதை கிளிக் செய்வதன் உங்களுக்கு தேவையான மறைக்க வேண்டிய போட்டோகளை தெரிவு செய்து கொள்ளலாம்.
தெரிவு செய்த பின்னர் மறுபடியும் மேலே வலது மூலையில் காணப்படும் Settings-ஐ கிளிக் செய்து Move என்பதை தெரிவு செய்யுங்கள்.

அடுத்து நீங்கள் புதிதாக உருவாக்கிய Folder-ஐ திறந்து Move Here என்பதை தெரிவு செய்யுங்கள்.

இப்போது நீங்கள் மறைக்க நினைக்கும் போட்டோ-கள், நீங்கள் புதிதாக இருவாக்கிய Folder-இனுள் காணப்படும்.

அடுத்து My Files-இற்கு மறுபடியும் பின் வந்து மேலே வலது மூலையில் இருக்கும் Settings-ஐ கிளிக் செய்யுங்கள்.


அங்கே Show hidden files என்பதில் வழங்கப்பட்டிருக்கும் டிக்-ஐ எடுத்து விடுங்கள்.


அவ்வளவு தான். இப்போது உங்களது தனிப்பட்ட போட்டோகளை கொண்டுள்ள Folder ஆனது System Files ஆக கருதப்பட்டு மறைக்கப்பட்டு விட்டது.

மறைத்த போட்டோகளை மறுபடியும் பார்க்க வேண்டும் என்றால்
My Files-இற்கு வந்து மேலே வலது மூலையில் இருக்கும் Settings-இல் Show Hidden Files என்பதை டிக் செய்து விடுங்கள்.


இப்போது மறைந்த Folder-ஐ மறுபடியும் பார்க்க கூடியதாய் இருக்கும். இந்த முறையை பயன்படுத்தி உங்களது தனிப்பட்ட போட்டோ வீடியோ உட்பட உங்களது ஸ்மார்ட் போனில் இருக்கும் அனைத்து தரவுகளையும் மறைக்க முடியும்.

See more:  www.masinfom.blogspot.com

செவ்வாய், 17 மே, 2016

வாட்ஸ்அப்-இல் வீடியோ அழைப்புக்களை மேற்கொள்ளும் வசதி அறிமுகம்

பலகோடிக்கணக்கான பயனர்களை கொண்டுள்ள வாட்ஸ்அப் நிறுவனம், தனது பயனர்களின் நன்மை கருதி கருதி அடிக்கடி சிறந்த பல வசதிகளை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது. பல்வேறு பயனுள்ள வசதிகள் காணப்பட்ட போதிலும் வாட்ஸ்அப் மூலம் வீடியோ அழைப்புக்களை எடுக்கும் வசதி வாட்ஸ்அப்-இல் இல்லாதது பெரும் குறையாகவே காணப்பட்டது.
ஆனால் தற்போது வாட்ஸ்அப் நிறுவனமேஅதிகாரபூர்வமாக வாட்ஸ்அப்-இல் வீடியோ அழைப்புக்களை எடுப்பதற்கான வசதியை அறிமுகப்படுத்தும் வேலையில் இறங்கி உள்ளது.எப்படி இதை உறுதிப்படுத்துவது என்று கேட்கிறீர்களா? அதாவது வாட்ஸ்அப் பேட்டா ப்ரோக்ராம்-இல் இணைந்து உள்ள பயனர்கள் வாட்ஸ்அப்-இல் எதிகாலத்தில் அறிமுகமாக இருக்கும் வசதிகளை முன்கூட்டியே பெற்றுக்கொள்ள முடியும்.
www.whatsapp.com
அந்த வகையில் வாட்ஸ்அப் பேட்டா ப்ரோக்ராம் பயனர்கள், ஏற்கனவே வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு வசதியை பெற்று விட்டனர்.ஆகவே நீங்களும் வாட்ஸ்அப் பேட்டா ப்ரோக்ராம்-இல் இணைய வேண்டும் என்றால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில்சென்று வாட்ஸ்அப் பேட்டா ப்ரோக்ராம்-இல் இணைந்து கொள்ளுங்கள். வாட்ஸ் அப் பேட்டா ப்ரோக்ராம் வசதி ஆன்ராயிடு பாவனையாளர்களுக்கு மட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.வாட்ஸ்அப் பேட்டா ப்ரோக்ராம்-இல் இணைவது எப்படி?வாட்ஸ்அப் பேட்டா ப்ரோக்ராம்-இல் இணைந்த பின்னர், உங்களது வாட்ஸ்அப் பதிப்பை அப்டேட் செய்தால் உங்களது வாட்ஸ்அப்-இல் வீடியோ அழைப்புக்களை எடுக்கும் வசதி காணப்படும்.ஆனால் வாட்ஸ்அப் வீடியோ அழைப்புக்களை எடுக்க முற்பட்டால் சர்வர் எரர் என்ற வாசகம் ஒன்று தோன்றும். அதாவது வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு இன்னும் டிவலப் செய்யப்பட்டுக்கொண்டு இருக்கின்றனது என்பதே இதற்கு அர்த்தம் ஆகும்.ஆகவே பெரும்பாலும் எதிர்வரும் ஒருசில தினங்களில் வெளியாகும் புதிய வாட்ஸ்அப் பதிப்பில், வாட்ஸ்அப் வீடியோ அழைப்புக்களை அதிகாரபூர்வமாக பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கபடுகிறது. ஆனால் வாட்ஸ்அப்-இன் அதிகாரபூர்வ பதிப்பிற்கு இந்த வீடியோ அழைப்பு வசதி வர முன்னர், வாட்ஸ்அப் பேட்டாபதிப்பில் வைத்தே அனைத்து (பிழைகளுக்கான) பரிசீலனைகளும் நடைபெறும்.ஆகவே நீங்களும் வாட்ஸ்அப் பேட்டா ப்ரோக்ராம்-இல் இணைந்து இருந்தால்இந்த (வாட்ஸ் அப் வீடியோ அழைப்பு) வசதியை மற்றைய சாதாரண வாட்ஸ்அப் பயனர்கள் பெற முன்னரே உங்களால் பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 6 மே, 2016

எச்சரிக்கை தகவல்..!நண்பர்களே கண்டிப்பாக அனைவருக்கும் பகிரவும்.

ஜோன்சன் & ஜோன்சன் (Johnson & Johnson) கம்பெனியின் தயாரிப்புகளான பேபி ஆயில், சாம்பு, பவுடர், சோப்பு இவைகள் குழந்தைகளுக்கு பயன்படுத்தும் மிக நம்பகமான தயாரிப்பு என்று மக்களால் காலம் காலமாக நம்பப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை குழந்தைகளுக்கு பயன்படுத்தினால் குழந்தைகளுக்கு அலர்ஜி, ஆஸ்மா, கேன்சர், போன்ற நோய்களையும் சில நேரங்களில் உடனே மரணத்தை கூட உண்டாக்க கூடிய அளவுக்கு ஆபத்தானது என்பது தெரியவந்துள்ளது.
கேரளா உணவு தரக்கட்டுப்பாடு வாரியத்தில் இருந்து தொடரப்பட்ட வழக்குக்கு பின்னர் இந்த கம்பெனி சிறிய கண்ணுக்கு தெரியாத எச்சரிக்கை வாசகத்தை அதில் பிரிண்ட் செய்துள்ளது. இதை குழந்தைகள் தொட வேண்டாம் என்று எழுதி இருக்கிறார்கள். இதை குழந்தைகள் தெரியாமல் குடித்து விட்டாலோ அல்லது சுவாசித்தாலோ பெரிய ஆபத்து உண்டாக்கும் என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.
குழந்தைகளுக்கான தாயரிப்பு என்று சொல்லி விட்டு குழந்தைகளை தொடவேண்டாம் என்று சொல்வதில் இருந்து இதன் பயங்கர நச்சு தன்மையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தும் சுத்திகரிக்கபடாத பெட்ரோல்களின் கழிவில் இருந்து தயாரிக்கப்படுவதாகும். இது குறித்து உலக அளவில் இயங்கும் சுகாதார நிறுவனங்கள் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை புறக்கணிக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளன.
இதில் வேடிக்கை என்னவென்றால் Johnson & Johnson தயாரிப்புகளை உபயோகப்படுத்தி அதன் மூலம் வரும் அலர்ஜி மற்றும் நோய்களுக்கு இந்த நிறுவனமே மருந்துக்களையும் தயாரித்து விற்கிறது. எப்படி கம்ப்யூட்டர்களை தயாரித்து விற்று விட்டு, அந்த கம்ப்யூட்டரை ரிப்பேர் ஆக்க வைரஸ்களை பரப்புவதும், அதை சரி செய்ய என்று ஆண்டி வைரஸ் வாங்குங்கள் என்று வியாபாரம் செய்வதும் போன்ற அதே கார்பரேட் கொள்ளைதான் மனித உயிர்களிலும் விளையாடுகிறது. அதுவும் ஒன்றும் அறியாத பச்சிளம் குழந்தைகளின் உயிரோடும் விளையாடுகிறார்கள்.
பெற்றோர்களே உஷார்! இந்த நாசகார ஜோன்சன் & ஜோன்சன் தயாரிப்புகளை புறக்கணிப்போம்! நமது குழந்தைகளை பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாப்போம்!
மேலும் தவலுக்கு இந்த விடியோ கிளிப்பை பார்க்கவும்.
http://www.youtube.com/watch?v=Pn0pYLfF8rQ
-------------------------------------------------------------
JOIN US ══►
▂ ▄ ▅ ▆ ▇ █ See more:  www.masinfom.blogspot.com  █ ▇ ▆ ▅ ▄ ▂

புதன், 4 மே, 2016

ஆதார் கார்டை பயன்படுத்தி புது சிம் வாங்கினால் கட்டணம் குறைப்பு

ஆதார் கார்டு பயன்படுத்தினால், புது சிம் இணைப்பிற்கான கட்டணம் குறைக்கப்படும் என்று தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய (TRAI) தலைவர் சர்மா அறிவித்துள்ளார்.


 

 
ஆதார் அட்டையைப் முகவரிச் சான்றிதழாகப் பயன் படுத்தி புது சிம் காட்டு வாங்கினால் அதற்கான கட்டணம் கணிசமாக குறைக்கப்படும் என்று தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய தலைவர் ஆர்.எஸ்.சர்மா கூறியுள்ளார்.
 
அதன்படி, மின்னணு KYC அடிப்படையில் ஆதார் அட்டையை டிஜிட்டல் அங்கீகாரமாக செயல்பட நடைமுறை படுத்தப்படுத்தப்பட்டால் , அதன் அடிப்படையில் புது சிம் கார்டு இணைப்பிற்கான கட்டணம் பூஜ்யமாக குறைக்கப்படும் என்று சர்மா தெரிவித்துள்ளார்.
 
இந்த முறையை தொலைத் தொடர்புத் துறையிடம் பரிந்துரை செய்துள்ளதாகவும், அதை அவர்கள் வெளிப்படையாக ஏற்றுக் கொண்டதாகவும் சர்மா கூறியுள்ளார். 
 
இதற்கான விதிமுறைகளை அரசு முடிவுசெய்த பிறகு, புதிய சிம்கார்டிற்கான இணைப்பைப் பெற, ஆதார் அட்டை பயோ மெட்ரிக் தகவல் மூலம் அடையாள சரிபார்பு உடனடியாக செயல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.
 
பாக்கிஸ்தானில் அனைத்து சிம் கார்டையும் அங்கீகரிக்க, பயோ மெட்ரிக் பயன்படுத்த முடிவு செய்து கடந்த ஆண்டே அதற்கான திட்டத்தையும் பூர்த்தி செய்துவிட்டது என்று சர்மா குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 28 ஏப்ரல், 2016

கைப்பேசியை எப்படி பயன்படுத்த வேண்டும்...? தெரிந்து கொள்வோமே

1. அலைபேசியை இடதுபுற காதில் வைத்து பேசுவது தான் நல்லது.

2. சார்ஜ் ஆகிக் கொண்டிருக்கும் போது அழைப்பு வந்தால் அப்படியே எடுத்து பேசுதல் கூடாது.
அதுவே சைனா மொபைல் என்றால் ஆபத்து அருகில்.

3. மொபைலில் கடைசி ஒரு புள்ளி சார்ஜ் இருக்கும் போது பேசுவது கூடாது. ஏனென்றால் அப்போதுதான் ரேடியேசன் அதிகம் இருக்கும். கதிர்வீச்சு பாதிப்பு மிகுதியாக இருக்கும்.

4. ஸ்பீக்கரை ஆன் செய்து வைத்து விட்டு மொபைலில் பேசுவது செவிப்பறையை சேதம் ஏற்படுத்தி விடும்.

5. மொபைலில் அழைப்பு வரும் போது தான்ரேடியேஷனும் இருக்கும்.ரிங் ஒசையை விட வைப்ரேட் மோடில் வைத்து இருப்பது அதிக ரேடியேஷனை வெளிப்படுத்தும். சைலன்ட் மோடும் ஆபத்து விளைக்க கூடியது தான்.

6. சட்டைப் பையில் வைப்பதை விட பேன்ட் பாக்கெட்டில் மொபைலை வைத்துக் கொள்ள வேண்டும்.

7. நீங்கள் உபயோகிக்கும் மொபைலில் பேசும் போது காதின் பக்கம் சூடாகிக் கொண்டே போனால் அந்த மொபைலை கை கழுவி விடுதல் நல்லது.

8. ஸ்மார்ட் மொபைலில் ரேடியேஷன் குறைப்பதற்கான கருவிகள் உள்ளே பொருத்தப்பட்டிருக்கும்.

9. குழந்தைகளிடம் மொபைலை கொடுத்து பேச வைத்தல். அதனை பார்த்து ரசித்தல் கூடவே கூடாது.

10. எந்த நேரமும் மொபைலில் பேசி கொண்டே இருப்பதும் நரம்பு மண்டலத்தை தாக்கும். தலைவலி அடிக்கடி வரும் இதுவே அதன் அறிகுறி.

11. பெண்கள் மொபைலை தனியாக ஒரு உறையில் வைத்து கைப்பையில் வைத்துக் கொள்ளுதல் நல்லது.

12. பெண்கள், மாணவியர் தங்கள் மொபைல் எண்களை அறிமுகமில்லாதவர்களிடம் கொடுக்க கூடாது.

13.உயர்கல்வி பயிலும் மாணவியர் முகநூல், வாட்ஸ் அப்பில் உறுப்பினராகி கல்வியையும், வாழ்க்கையையும் கெடுத்துக் கொள்ள கூடாது.

13. பொதுவாக பெயருடன் வரும் அழைப்புகளை மட்டுமே பேசுதல் பெண்களுக்கு நல்லது. அறிமுகம் இல்லாத அழைப்புகள், மிஸ்டு கால்களை எடுத்துப் பேசாமல் இருப்பது நல்லது.

14. வாடகை பெரிதாக கிடைக்கும் என எண்ணி நமது வீட்டு மாடிகளில் டவர் அமைக்க அனுமதிக்க கூடாது.
குறிப்பிட்ட சுற்றளவில் ரேடியேஷன் அதிகமாக இருக்கும்.டவர் அமைந்துள்ள வீட்டின் கீழேயும் ரேடியேஷன் அதிகமாக இருக்கும்.கேன்சர் போன்ற நோய்களுக்கு காரணமாக அமைந்து விடும்.
More info: www.masinfom.blogspot.com

ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள்.

நண்பர்களே கவனியுங்கள்----இது உண்மைச் சம்பவம்....
இச்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தயவு செய்து கவனியுங்கள். உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள்.
நீங்கள் குணமடைவீர்கள்!
தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்ப
ட்டார்.
இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார்.
தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில்,இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.
ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு பரிந்துரைத்தார்.
மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில்
பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல்நாள்ரூ2,25
,000த்தை டெபாசிட் செய்தார்.
நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து வியந்தார்.
ஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு ஏதாவது மருந்து சாப்பீட்டீர்களா? என்று டாக்டர் வினவினார்.
இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்.
இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்.
1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் புண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.
எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.
நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள்.
மகிழ்ச்சியுடன் பானத்தை அருந்துங்கள்....சுவையாகவும் இருக்கும்.
நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

செவ்வாய், 12 ஏப்ரல், 2016

RTE FULL DETAILS AND IMPORTANT POINTS தகவல் அறியும் உரிமை சட்ட விண்ணப்பம் அனுப்பும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை !

RTE FULL DETAILS AND IMPORTANT POINTS
தகவல் அறியும் உரிமை சட்ட விண்ணப்பம் அனுப்பும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை !

1.விண்ணப்பத்தின் தேதி மற்றும் இடம்.
2.உங்கள் முழுமுகவரி மற்றும் பொது தகவல்அலுவலரின் முழுமுகவரி அஞ்சல்குறியீட்டு எண்ணுடன்
3.நீங்கள் முன்னர்எதாவது மனு அனுப்பி இருந்தால் மனுவின்விபரம். பார்வை:என்ற தலைப்பின் கீழ்
4.எந்த தேதிக்குள் வழங்கப்படும்? என்றகேள்வி

5.தேதியுடன் கூடியுடன் உங்கள் கையொப்பம்6.தகவல் கோரும் விண்ணப்பக் கட்டணம். ரூ.10/-செலுத்தப்பட்டதற்கான சான்று. (நீதி மன்றவில்லை எனில்(court fees stamp) மனுவின்மேல் பாகத்தில் ஒட்டி விடலாம்.)7.நீதிமன்ற வில்லையை[court fees stamp](ஒட்டியதும் உங்கள் விண்ணப்பத்தை ஒளிநகல்(xerox) எடுத்து வைக்கவும்8.விண்ணப்பத்தை ஒப்புகை அட்டையுடன்கூடிய பதிவு தபாலில் அனுப்ப வேண்டும்.(மெல் முறையீட்டின் போது ஒப்புதல்அட்டை முக்கியம்.

தகவல் பெரும் உரிமை சட்டத்தில் எந்தெந்ததகவல்கள் கேட்கலாம்?.( What type questions can be asked in RTI act2005 )

1) பதிவேடுகள் (Records),
2) ஆவணங்கள் (Documents),
3) மெமோ எனப்படும் அலுவலக குறிப்புகள்.( Memo Office Tips),
4) கருத்துரைகள் (Comments),
5) அதிகாரிகளின் கோப்பு குறிப்புகள்,
6) அலுவலகங்களின் செய்தி குறிப்புகள்(Offices of the Information notes),
7) சுற்றறிக்கைகள் (Circulars),
8) ஆவணகள் (Documentation),
9) ஒப்பந்தங்கள் (Agreements),
10) கடிதங்கள் (Letters),
11) முன்வடிவங்கள் (Model),
12) மாதிரிகள் (Models),.
13) கணீனி சார்ந்த பதிவுகள் (Informationstored in computer),
14) மின்னஞ்சல்கள் (Emails).
15) பொது நலன் சார்ந்த அனைத்து தகவல்கள்(All information of public good well),
16) சம்மந்தப்பட்ட ஆவணங்கள் மற்றும்பதிவேடுகளைப் பரிசீலனை செய்யும் உரிமை,(The right to review relevant documents andrecords),
17) நகல் எடுக்கும் உரிமை (Right to takeXerox)ஆகியன உறுதிப்படுத்தபட்டுள்ளன.

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மேல்முறையீடு:பொதுத் தகவல் அலுவலர் 30 நாட்களில் தகவல்தரவில்லையென்றாலோ, அல்லது அவர் அளித்ததகவல் திருப்திகரமாகஇல்லையென்றாலோ அந்தந்த துறைகளில்பிரிவு 19ன் கீழ் உள்ள மேல்முறையீட்டு அதிகாரியிடம் 30நாட்களுக்குள் முதல் மேல்முறையீடு செய்யலாம்.மேல் முறையீட்டு அதிகாரியின் பதில்திருப்திகரமாக இல்லையெனில் 90 நாட்களுக்குள் பிரிவு 19 (3)ன் கீழ் மாநில தகவல்ஆணையரிடம் இரண்டாவது மேல்முறையீடு செய்யலாம்.

மாநில தலைமை தகவல் ஆணையர்,தமிழ்நாடு தகவல் ஆணையம்,2, தியாகராயசாலை,ஆலையம்மன் கோவில் அருகில் ,தேனாம்பேட்டை,சென்னை -600018.தொலைப்பேசி எண்: 044 - 2435 7581, 2435 7580

தகவல் தர மறுத்தால் தண்டனை Sec 20 RTI Actதகவல் மறுத்தால் ரூ 25000 அபராதம் &ஒழுங்கு நடவடிக்கைபொது தகவல் அலுவலர் செய்யும் பின்வரும்செயலுக்கு ரூ 25000 அபராதம் மற்றும்துறை ரீதியானஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாகவேண்டிவரும்
1. நியாயமான காரனம் இல்லாமல் விண்னப்பம்வாங்க மறுத்தால்
2. உரிய காலகெடுவில் தகவல் தர மறுத்தால்(30 நாட்கள்)
3. தகவலுக்கான வேண்டுகோளை தீயஎண்ணத்துடம் மறுத்தால்
4. தவறான, முழுமையுறாத, தவறானஎணத்தை தோற்றுவிக்கும் வகையில்தகவலை தெரிந்தே கொடுத்தால்
5. தகவலை அழித்தால்
6. தகவல் கொடுப்பதை தடுத்தால்பிரிவு 20 (1) படி நாள் ஒன்றுக்கு ரூ 250வீதம் அபராதம்ரூ 25,000 உயர்த பட்ச அபராதம்பிரிவு 20 (2) படி துறை ரீதியானஒழுங்கு நடவடிக்கைமேற்படி காரணத்திற்காக தகவல் ஆணையகம்மட்டுமே தண்டனை விதிக்க முடியும்தண்டனை விதிக்கும் முன்பு பொது தகவல்அலுவலர் விளக்கம் கேட்ட பின்னர்தான்தண்டனை விதிக்க முடியும்நியாயமாகவும் கவணமாக செயல்பட்டபொது தகவல் அலுவலர்மீது தண்டனை விதிக்க இயலாது.

குறிப்பு: பொதுவாக தகவல் ஆனையகம்தண்டனை விதிப்பதை தவிர்க்கின்றது.

தண்டனைகள் (பிரிவு-20)
மாநில தகவல் ஆணையமானது, புகார்அல்லது மேல்முறையீடு எதனையும்தீர்மானிக்கும்போது:
1. பொது தகவல் அலுவலர் நியாயமான காரணம்ஏதுமின்றி தகவலுக்கான விண்ணப்பம்ஒன்றினை மறுக்குமிடத்தும் ;
2. பொது தகவல் அலுவலர்காலக்கெடுவிற்குள் தகவலை அளிக்கமறுக்குமிடத்தும் ;
3. பொது தகவல் அலுவலர் தகவலுக்கானகோரிக்கையினை உள்நோக்கத்துடன்மறுக்குமிடத்தும் ;
4. கோரிக்கையின் பொருளாக இருந்ததகவலை அழிக்குமிடத்தும் ;
5. பொது தகவல் அலுவலர்,தகவலை அளிப்பதை எந்த முறையிலும்தடுக்குமிடத்தும்; அந்த விண்ணப்பம்பெறப்படும் வரை அல்லது தகவல்அளிக்கப்படும் வரை ஒவ்வொரு நாளுக்கும்ரூ.250/- தண்டமாக, அந்த பொது தகவல்அலுவலர்.

Popular Posts

Facebook

Blog Archive