பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

ஞாயிறு, 12 அக்டோபர், 2014

பென்டிரைவைப் பாதுகாக்க default safe remove வசதி

Quickly remove USB devices without using Safe Removal

ரீமூவல் டிவைஸ் என்று சொல்லப்படும் பென்டிரைவ் போன்றவைகளை யு.எஸ்.பி  போர்ட்டில் செருகிப் பயன்படுத்துவீர்கள்.

சிலநேரங்களில் வேலை முடிந்ததும் Pendrive-வை USB Port லிருந்து எடுக்கும்பொழுது Safe Removal கொடுக்காமலேயே அப்படியே அதை உருவி எடுத்துவிடுவோம்.


சிலருக்கு Safe Removal கொடுக்காவிட்டால் என்ன நிகழும் என்று தெரிந்திருந்தும், அப்படிச் செய்யாமல் உடனடியாக USB Port லிருந்து Pendrive வை நீக்கிவிடுவார்கள்.

காரணம் வேலை செய்து முடித்துவிட்டு, உடனடியாக அதை எடுத்துவிட வேண்டும் என்ற எண்ணம்தான் காரணம்.

சரி.. இப்படி நீங்களாகவே Safe Remove கொடுக்காமல்,

usb safe remove default

usb safe remove default

தானாகவே Safe Remove கொடுப்பது எப்படி?  

என்பதைப் பார்ப்போம்.

  1. உங்களுடைய கணினியில் பெட்டிரைவை செருகவும்.
  2. இப்போது mycomputer Icon மீது ரைட் கிளிக் செய்யவும்.
  3. தோன்றும் பெட்டியில் Manage என்பதைச் சொடுக்கவும்.
  4. தோன்றும் பெட்டியில் Device Manager என்பதில் கிளிக் செய்யவும்.
  5. கிளிக் செய்தவுடன் கணினியில் உள்ள அனைத்து டிவைஸ்களும் அதில் காட்சியளிக்கும்.
  6. தோன்றும் காட்சியில் Disk Drives என்பதில் டபுள் கிளிக் செய்யவும்.
  7. தோன்றும் கீழ்விரி பட்டியலில் உங்களுடைய பென்டிரைவின் பெயரைத் தேடி அதில் டபுள் கிளிக் செய்யவும்.
  8. இப்போது தோன்றும் விண்டோவில் இரண்டாவதாக உள்ள Polices என்பதைக் கிளிக் செய்து,  Quick Removal (Default) என்பதைக் கிளிக் செய்து தேர்வு செய்து வெளியேறுங்கள். 

இனி, நீங்கள் ஒவ்வொரு முறையும் பென்டிரைவை USB port-லிருந்து நீக்கும்பொழுதும் Safe Remove கொடுக்கத் தேவையில்லை. உங்களுடைய பென்டிரைவும் எந்த பாதிப்பும் அடையாமல் பாதுகாப்புடன் இருக்கும்.

வெள்ளி, 10 அக்டோபர், 2014

சுறுசுறுப்பா இருக்கணுமா? இரத்தத்தை சுத்தமாக்குங்க..!

உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும்.

இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.
பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். இதுதவிர, செம்பருத்திப் பூவை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.

முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.

நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் கூட இரத்தம் விருத்தி ஆகிறது.
இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது. தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் கூட இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.
இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொ‌‌ண்டது.
இன்றைய காலகட்டத்தில் பெரும் அச்சுறுத்தல் இரத்தக் குழாய் அடைப்பு. இதனை சாதாரண தவிர்த்துவிடலாம் என்கிறது இயற்கை வைத்தியம். தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் போதும் இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும்.

இதற்கடுத்தது இரத்தம் அழுத்தம். இதனை முற்றிலுமாக போக்க வழி உண்டு. கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீரகப் பொடி 12 நேரம் ஊறவைத்து குடித்து வந்தால் போதும். மேலும், ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சீர்படும். இதுதவிர, அகத்திக் கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டால் வந்தாலும் இரத்தக் கொதிப்பு குணமாகும்.

இரத்தக்கட்டு, சுளுக்கு நிவர்த்தியாக, மஞ்சள், உப்பு, சுண்ணாம்பு ஆகியவற்றை வெந்நீர் விட்டு அரைத்து அந்த விழுதை சூடு செய்து சுளுக்கின் மீது பற்றுபோட்டால் போதும்.

விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.

இயற்கையான அழகு குறிப்புகள் Natural beauty tips

தற்காலத்தில் தங்களின் அழகை வெளிப்படுத்திக் காட்டுவதில் பெண்களுக்கு அதிக ஆர்வமும், போட்டியும் இருக்கிறது..
ஒவ்வொருவரும் தன்னைவிட அழகானவர்கள் யாரும் இல்லை என மனதில் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.
அவரவர் மனதில் அவரவர்களே கதாநாயகனாக, கதாநாயகியாக உருவகித்துக்கொண்டு வாழ்ந்துவருகிறோம். இது அனைவருக்கும் மனதில் இருக்கும் பொதுவான எண்ணங்கள்தான்.

இருப்பினும் இயற்கையை மீறி சில செயற்கைத் தனங்களைச் செய்வதன் மூலம் தம்முடைய அழகை வெளிப்படுத்த எத்தனை முயற்சிகளில் இறங்கி பரீசித்துப் பார்ப்பவர்கள் இன்று ஏராளம். இதில் ஆண் பெண் என்ற பேதம் இல்லை..
இயற்கையான முறையில், இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே நம்முடைய உடலழகைப் பேண முடியும்.

இயற்கையான அழகு குறிப்புகள்

முதலில் நகம். நகத்தை தூய்மையாக வைத்துக்கொண்டாலே உடலில் பாதி நோய்கள் அண்டாது. மருத்துவர்கள் கூட வைத்தியம் பார்த்தவுடன் அடிக்கடி கைக்களை சோப்பு நீரில் கழுவுவதை நாம் பார்த்திருப்போம்.
காரணம் மனிதர்களுக்கு கிருமிகள் பெரும்பாலும் கைகளின் மூலமாகவே வாயிற்கும், வயிற்றும் சென்று பல உபாதைகளை ஏற்படுத்துகிறது. அதனால்தான் கைகளை நன்றாக கழுவி சுத்தம் செய்து பிறகே சாப்பிட வேண்டும் என்றும், அடிக்கடி நகத்தை கடிக்க கூடாதென்றும் பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள்.

நகத்தைப் பராமரிக்க: 

பாலில் பேரிச்சம் பழத்தை கலந்து பருகிவர நகங்கள் கூடுதல் பலமடைவதோடு, உடைவதும் குறையும். பாதாம் எண்ணையை நகத்தில் தடவி வர நகங்களுக்கு கூடுதல் பளபளப்பு கிடைக்கும்.

இதழ்களை பராமரிக்க: 

நம் வீட்டில் பொரியலுக்கு வாங்கும் பீட்ருட் சிறிதளவு இருந்தாலே போதும். உங்களுக்கு எந்த வித Lipstick-ம் தேவையில்லை. பீட்ரூட்டை வெட்டி உங்கள் இதழ்களில் இலாசக லிப்ஸ்டிக் பூசுவதைப் போல அழுத்தி தேய்த்து வந்தாலே போதும். உங்களுக்கு இயற்கை கொவ்வைச் செவ்வாய் இதழ்கள் கிடைக்கும்.
பலரையும் கவர்ந்திழுக்கும் இயற்கையான செந்நெறி உதடுகளைப் பெறலாம்.
கூடவே இந்தப் பதிவில் இருப்பதைப் போலவும் நீங்கள் செய்து பார்க்கலாம்.

முகத்தைப் பராமரிக்க: 

உங்களுக்கு அமுல்பேபி போன்ற கொழுக் மொழுக் முகத்தைப் பெற வேண்டுமா? நீங்கள் செய்வதென்னவோ சுலபமான வேலைதான்.
நன்கு பழுத்த பப்பாளிப் பழத்தை முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து உங்கள் முகத்தை கழுவிப் பாருங்கள்.
பயற்றம்பருப்பு மாவுடன், தர்பூசணி பழச்சாற்றைக் கலந்து, அக்கலவையை முகத்தில் பூசி வர உங்கள் முகம் பொலிவு பெறுவது உறுதி.
இந்த இரண்டு முறைகளை நீங்கள் பின்பற்றினாலே உங்கள் முகம் “பளிச் பளிச்” போங்க..!

கழுத்தை பராமரிக்க: 

நிறையப் பெண்கள் செய்யும் தவறே இதுதான்.. அழகாக முகத்தை பரிமரிக்க தெரிந்தவர்கள் கழுத்தை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள். இதனால் கழுத்து கருத்துப்போய் முகம் மட்டும் பொலிவாக காட்சி தரும்.
சிறிதளவு ரோஸ்வாட்டர், சிறுது வெங்காயச்சாறு, ஆலிவ் எண்ணெய் இரண்டு சொட்டு, இவற்றுடன் சிறிதளவு பயத்த மாவு கலந்து கழுத்தைச் சுற்றி பூசிவிடுங்கள். ஒரு பத்து நிமிடம் கழித்து கழுத்திலிருந்து தாடை நோக்கி இலேசாக மசாஜ் செய்துவிடுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்ய நாளடைவில் உங்கள் கழுத்தும் கருமை நிறம் நீங்கி பள பளக்கும்.

சருமத்தைப் பராமரிக்க: 

ஒரு ஸ்பூன் ஈஸ்ட்டுடன், முட்டைகோசின் இலையில் சாறு எடுத்து கலந்துகொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சருமம் எங்கும் பூசி வர சூரிய ஒளியால் கருமை அடைந்த தோலின் நிறம் இயற்கை நிறத்திற்கு மாறிவிடும். முன்பு இருந்ததைவிட சருமத்தில் நிறம் சிவப்பாக காட்யளிக்கும்.

கருவளையம் நீங்க: 

கருவளையம் என்றாலே கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையத்தைத்தான் குறிக்கும். கருவளையம் நீங்க இதுதான் சிறந்த வழி. வெள்ளரிக்காய் விடையை பொடி செய்து, அதில் தயிர் சேர்த்து பசைப்போல(Paste)ஆக்குங்கள். இந்த பேஸ்ட்டை கருவளையும் உள்ள பகுதியில் தொடர்ந்து பூசி வர முப்பது நாளில் கருவளையும் இருந்த இடம் காணாமல் போயிருக்கும்.

கருப்பு திட்டுகளை நீக்க: 

சிலருக்கு முகத்தில், மூக்கில், கண்ணங்கள் என அசிங்கமாக கருப்பு நிற திட்டுகள் காணப்படும். இதை கிராம புறத்தில் “மங்கு” என குறிப்பிடுவார்கள். இவற்றைப் போக்க, ஜாதிக்காய், சந்தனம், வேப்பங்கொழுந்து ஆகியவற்றை நீர்கலந்து நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்த பற்றை முகத்தில் இருக்கும் கருப்பு திட்டுகள் இருக்கும் இடத்தில் பசைப்போல தடவுங்கள். சில முறை இந்த முறையை நீங்கள் கையாண்டால் போதும் முகத்தில் உள்ள அசிங்கமான மங்கு(கருந்திட்டு)மறைந்துவிடும்.

Nature cleanser (இயற்கை கிளென்சர்)

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பால் ஒரு நல்ல cleanser ஆகும். குளிர்ந்த பாலில் பஞ்சை நனைத்து முகம் துடைக்கலாம். இது ஒரு சிறந்த க்ளென்சிங் ஆகும்.
இளநீரும் ஒரு மிகச்சிறந்த க்ளென்சிங் பொருள். எனவே நீங்கள் தேங்காய் உடைக்கும்போது வெளியேறும் நீரை வீணாக்காமல் அவற்றை முகத்தில் தடவிக்கொள்ளலாம்.
எண்ணெய் பசை உள்ள சருமத்தை உடையவர்கள் எலுமிச்சை சாற்றில் சில துளிகள் பால் சேர்த்து கலந்து, கலவையில் பஞ்சினை நனைத்து சருமத்தை துடைக்காலம்.
வறண்ட சருமத்தை உடையவர்கள் பாலுடன் தேன் கலந்து பயன்படுத்தலாம்.

முகப்பரு போக்க: 

முகத்தை, முகத்தின் அழகை கெடுப்பதில் முகப்பருவிற்கு பெரும்பங்கு உண்டு. பரு வந்து காய்ந்து போனால் முகத்தில் திட்டு திட்டாக, கருமை நிறத்துடன் முகம் பொலிவிழந்து காணப்படும். எனவே முகத்தில் பரு வராமல் பார்த்துக்கொள்வது நல்லது. முகப்பருவை நீக்க ஜாதிக்காயை நீரில் ஊறவைத்து அரைத்துக்கொள்ளுங்கள்.
அதனுடன் சந்தனத் தூளைக் கலந்து முகப்பரு, முகப்பரு தழும்புகளின் மீது தடவி வர முகப்பருக்கள் நீங்கும். முகம் பொலிவு பெறும்.
இரண்டு ஸ்பூன் புதினா சாற்றுடன், ஒரு ஸ்பூன் பயிற்ற மாவைக் கலந்து முகப்பரு தழும்புகளின் மீது பூசிவர முகப்பரு தழும்புகள் நீங்கும்.

முகம் பொலிவு பெற ஒரு Hi-tech இயற்கை மருத்துவ முறை: 

பாதாம் பருப்பு. பெயரிலேயே இது ஒரு அந்தஸ்தை கொண்டுள்ளது. இந்த பாதாம் பருப்பை ஊறவைத்து  பாலுடன் சேர்த்து நன்றாக அரைத்தெடுங்கள். பேஸ்ட்போல ஆக்கிக்கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை முகத்தில் பூசுங்கள். 20-25 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவிப் பாருங்கள்.. நீங்களே வித்தியாசத்தை உணர்வீர்கள்…
முகம் பளிச் பளிச்தான் போங்க…!!

மற்றொரு இயற்கையான எளிய முறை:

கடலை மாவு.. இது நம் வீட்டிலேயே அடிக்கடி பயன்படக்கூடியது இல்லையா…? காலையில் குளிக்கப் போகும் முன் இதை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் குழநைத்து முகத்தில் தடவுங்கள். அரைமணி நேரம் ஊறிய பிறகு குளித்துவிடுங்கள். தொடர்ந்து இரண்டு வாரங்கள் இந்த முறையைப் பின்பற்றினாலே உங்கள் முகம் பளபளக்க ஆரம்பித்துவிடும். விரைவான பலனைக் கொடுப்பதில் கடலைமாவு முன்னணி வகிக்கிறது.

முகச்சுருக்கம் போக்க: 

ஆவாரை இருக்கும்போது சாவாரைக் கண்டதுண்டோ..? இது பழமொழி. இந்த பழமொழியிலிருந்தே ஆவாரையின் மருத்துவ குணத்தை நாம் உணரலாம். இது முகச்சுருக்கத்தைப் போக்கவும் பயன்படுகிறது. ஆவாரம் பூவை காய வையுங்கள்.  காய்ந்த ஆவாரம் பூ பொடி செய்து 5 கிராம் எடுத்துக்கொள்ளுங்கள். கூடவே காய்ந்த புதினா இலைப் பொடி 5 கிராம், கடலை மாவு 5 கிராம், பாசிப்பயிறு மாவு(பயற்ற மாவு)5 கிராம்.
இவற்றுடன் Olive Oil கலந்து நன்கு குழைத்து முகத்தில் பூசி பதினைந்து நிமிடங்கள் ஊறவிடுங்கள். பிறகு நன்கு குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவுங்கள். தொடர்ந்து இரண்டு வாரங்கள் இந்த முறையைச் செய்து வந்தால் தோலில் சுருக்கங்கள் மறைந்து தோல் இளமை பெறும். புதுப்பொலிவுடன் காட்சி தரும்.

மற்றொரு முறை: வெள்ளிக் காய் துண்டு இரண்டும், நாட்டுத் தக்காளி ஒன்றும், சிறிதளவு புதினா இலை அவற்றை எடுத்து நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். பிறகு அரைத்த விழுதை முகத்தில் நன்றாக பூசி பதினைந்து நிமிடங்கள் ஊறவிடுங்கள். பிறகு முகத்தை நல்ல தூய்மையான, குளிர்ந்த நீரில் கழுவுங்கள். உங்கள் முகத்தோற்றத்தில் பளபளப்பை காண முடியும். தொடர்ந்து இவ்வாறு இரண்டு வாரங்கள் செய்து வர உங்களால் நம்ப முடியாத அளவிற்கு உங்கள் முகம் பொலிவு பெற்றிருக்கும்.
மேலே குறிப்பிட்ட அனைத்தும் இயற்கையாக விளைந்த பொருட்களைப் பயன்படுத்தி செய்வதால் எந்த வித பக்கவிளைவுகள் ஏற்படாது. மேலும் இயற்கை மருத்துவப் பொருட்களைக் கொண்டு செய்வதால் முழுப் பயன்களையும் பெற குறைந்த பட்சம் இரண்டு வாரங்கள், பதினைந்து நாட்கள் ஆகும். நம்பிக்கையோடு செய்து பாருங்கள்.. நீங்களும் உலக அழகிதான்…!!! உலக அழகன்கள்தான்…!!!

இந்த பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா?
 உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்.
 
 நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.ஏதேனும் சந்தேகம் எனில் மின்னஞ்சல் செய்யுங்கள்.நன்றி நண்பர்களே.. மற்றுமொரு புதிய பயனுள்ள பதிவின் வழி சந்திப்போம். 

வியாழன், 9 அக்டோபர், 2014

இணைய வேகத்தை அதிகரிக்க இலவச மென்பொருள்

உங்கள் Internet speed குறைவாக உள்ளதா? ஏதாவது இணையதளத்தில் தரவிறக்கம் செய்யும்போது மிக குறைந்த வேகத்தில் இணையம் செயல்படுகிறதா?

ஒரு மென்பொருளையோ, அல்லது நீங்கள் விரும்பும் விடியோ, படங்கள் தரவிறக்கம் செய்ய அதிக நேரம் எடுத்துக்கொள்கிறதா? அப்படியெனில் இந்த மென்பொருள் உங்களுக்குப் பயன்படும்.
free download manager software
 speed up your internet speed -free software (FDM)
FDM எனும் இம்மென்பொருளைப் பயன்படுத்தி, நீங்கள் விரும்பிய கோப்புகள் எதுவாயினும் இணையத்தில் விரைவாக தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். தரவிறங்கும் வேகம் அதிகரிக்கும்.

FDM என்பதன் விரிவாக்கம் Free Download Manager என்பதாகும்.
Free Download Manager Software-ன் பயன்கள்:
இந்த மென்பொருள் மூலம் ஒரு கோப்பைத் தரவிறக்கம் செய்யும்போது கிடைக்கும் வேகம் எவ்வளவு தெரியுமா? 600% சதவிகிதம் தரவிறங்கும் வேகம் அதிகரிக்கிறது.
ஒரு மென்பொருளை தரவிறக்கம் செய்துகொண்டிருக்கும்போது, பாதியில் ஏதேனும் தடை ஏற்பட்டால், மீண்டும் அம்மென்பொருளை புதியதாக தரவிறக்கம் செய்ய தேவையில்லை. எதுவரைக்கும் தரவிறங்கியிருக்கிறதோ, அதிலிருந்து தொடர்ந்து தரவிறங்குகிறது. இதனால் உங்கள் நேரமும், இணைய நேரமும் மிச்சமாகிறது.
YouTube, Flash Video க்களை தரவிறக்கம் செய்துகொள்ளும் வசதி..!
Http, FTB, Bit Torrent ஆகியவற்றிலிருந்து எளிதாக, விரைவில் தரவிறக்கும் வசதி..
இந்த FDM மென்பொருளை download செய்ய :
http://www.freedownloadmanager.org/download.htm
மென்பொருளைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள இந்த காணொளியைக் காணுங்கள்..!

 AII SO READ IN ENGLISH==>>   http://masinfom.blogspot.in/2014/10/how-to-increase-your-download-speed.html
நன்றி நண்பர்களே..!

அழிந்துபோன சிம்கார்ட் தகவல்களை மீட்டெடுக்க இலவச மென்பொருள்

சிம்கார்டிலிருந்து தவறுதலாக அழிக்கப்பட்ட தகவல்களை மீட்டெடுக்க பல்வேறு வகையான மென்பொருள் உள்ளன. அவற்றை SIM Card Data Recovery மென்பொருட்கள் என்போம். இப்பதிவில் நான் அறிந்துகொண்ட சிம் டேட்டா ரெகவர் மென்பொருட்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளேன். 

GSM மொபைல் போன்களில் போன் மெமரி மட்டுமல்லாமல், சிம்கார்டிலும் தகவல்களை சேமிக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியும். சிம்கார்டில் சேமிக்கக்கூடிய தகவல்கள்: 

1. Call History
2. Phone Book Numbers
3. SMS

இதுபோன்ற தகவல்களை தேவையில்லை என அழித்திருப்பீர்கள். அல்லது தவறுதலாக அழிக்கப்பட்டிருக்கும். 
 Sim Card Data Recover software
அழிக்கப்பட்ட தகவல்களிலிருந்து ஒன்றிரண்டு போன் நம்பர்களோ அல்லது கால் ஹிஸ்டரியிலிருந்து உங்களுக்கு ஏதேனும் ஒருசில தகவல்கள் தேவைப்படும். ஆனால் அந்த சமயத்தில் அத்தகவல்களைத் திரும்ப பெற வழியின்றி தவித்திருப்பீர்கள். 


அதுபோன்ற சூழலில் உங்களுக்குப் பயன்படக்கூடியவைதான் SIM Card Data Recovery மென்பொருள்கள்.

இதுபோன்ற சிம்கார்ட் டேட்டா ரெகவரி மென்பொருள்களை பல்வேறு நிறுவனங்கள் தயாரித்து வழங்குகிறது.

ஃப்ரீ டவுன்லோட்ஸ் சென்டர் என்ற தளத்தில் இதுபோன்ற பல மென்பொருள்கள் மிகுந்து கிடக்கின்றன.

அவற்றில் சிம்கார்ட் டேட்டா ரெகவரி, சிம்கார்ட் ரெகவரி டூல், சிம் ரீஸ்டோர், சிம்கார்ட் கான்டாக்ட் ரெகவரி சாப்ட்வேர், சிம்கார்ட் கான்டாக்ட் ரெட்ரைவல் டூல், ரெகவர் யுவர் சிம்கார்ட், சிம் ரெகவரி, எஸ்.எம்.எஸ். ரெகவரி யுட்டிலிட்டி, ரெகவர் டெலீட்டட் எஸ்.எம்.எஸ், ரிகவர் சிம்கார்ட் போன்ற இருபதுக்கும் மேற்பட்ட மென்பொருள்கள் உள்ளன.

ஒவ்வொரு சிம்கார்ட் ரிகவரி மென்பொருளைப் பற்றியும், அந்த மென்பொருளுக்குரிய நிறுவனம் அல்லது மென்பொருள் கிடைக்கக்கூடிய தளத்தைப் பற்றிய விளக்கங்களும் அத்தளத்தில் குறிக்கப்பட்டுள்ளன. 

உங்களுக்கு விருப்பமான மென்பொருளை அதிலிருந்து தரவிறக்கம் செய்து, அத்தளத்தில் கூறப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றி நீங்கள் உங்கள் சிம்கார்டில் அழிக்கப்பட்ட தகவல்களை மீட்டெடுக்கலாம்.

மென்பொருள் பற்றிய மேலதிக தகவல்களுக்கு நீங்கள் செல்ல வேண்டிய முகவரி: Free Downloads center

முக்கிய குறிப்பு: மென்பொருள்கள்பற்றிய நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பு குறித்த தகவல்களை நன்றாக படித்தறிந்த பிறகு தேவையான மென்பொருளை டவுன்லோட் செய்யவும்.
நன்றி.

பென்டிரைவில் File Transfer Speed அதிகரித்திட

சில நேரங்களில் பென்டிரைவில் கோப்பு பரிமாற்றம் (File Transfer to Pendrive)செய்திடும்பொழுது, அதன் வேகம் மிக குறைவானதாக இருக்கும்.

உதாரணமாக ஒரு பெரிய கோப்பொன்றை கம்ப்யூட்டரிலிருந்து பென்டிரைவிற்கு மாற்றிடும்பொழுது, பறிமாற்றம் செய்துகொள்ளும் வேகம் மிக குறைவாகவும், பறிமாற்றத்திற்கான நேரம் அதிகமாகவும் இருக்கும்.

இதுபோன்ற சூழல்களில் பயனர்களுக்கு அதிக டென்சன் ஏற்படும்.

இவ்வாறான மெதுவான டேட்டா பரிமாற்றம் ஏற்படாமல் தவிர்த்து, விரைவான தகவல்கள் பறிமாற்றம் செய்திட வழியுண்டு.
To-increase-pen-drive-data-transfer-speed

பென்டிரைவில் தகவல் பரிமாற்ற வேகத்தை அதிரிக்கும் வழிமுறைகள்:

1. கீபோர்டில் Start Button + E அழுத்தி My Computer செல்லவும்.
2. பென்டிரைவிற்கான Drive-ல் ரைட் கிளிக் செய்து Properties செல்லவும்.
3. தோன்றும் விண்டோவில் Hardware எனும் டேபை கிளிக் செய்யவும்.
4. காட்டப்படும் விண்டோவில் பென்டிரைவிற்கான டிரைவை தேர்ந்தெடுத்துக்கொண்டு, கீழுள்ள Properties என்பதை கிளிக் OK கொடுக்கவும்.
5.  தற்பொழுது திறக்கும் விண்டோவில் Change Settings என்பதை சொடுக்கவும்.
6. உடன் தோன்றும் விண்டோவில் Policies என்ற டேபை  கிளிக் செய்து, கீழிருக்கும் Better Performance என்பதை தேர்ந்தெடுத்து, OK கிளிக் செய்யவும்.

முடிந்தது. இனி உங்களுடைய பென்டிரைவின் தகவல் பரிமாற்ற வேகம் முன்பு இருந்ததை விட அதிக வேகமாக இருக்கும்.

புதன், 8 அக்டோபர், 2014

இலவசமாக கோப்புகளை இணையத்தில் சேமிக்க

எதற்கெடுத்தாலும் நம்முடைய கம்ப்யூட்டரையே நம்பி இருக்க முடியுமா? கம்ப்யூட்டரும் மிஷின்தானே..! அதுவும் வெப்பமடைந்தால் பழுதாக வாய்ப்பிருக்கிறது..!

ஏதாவது முக்கியமான கோப்புகளை சேமித்து வைத்திருப்பீர்கள். திடீரெனப் பார்த்தால் ஒரு நாள் கம்ப்யூட்டர் கிராஷ்(Computer Crash) ஆகி, கோப்புகள் அனைத்தும் மாயமாகியிருக்கும். எங்கேடா அந்த முக்கியமான பைல் என்று தேடிப்பார்த்து, பைத்தியம் பிடிக்காத குறையாக தேடியிருப்பீர்கள்.


இதுபோன்ற சூழ்நிலைகள் வராமல் இருக்க, அதுபோன்ற முக்கியமான கோப்புகளை (Very Important Files) இரண்டு மூன்று பேக்கப்கள் வைத்திருப்பது மிகவும் பயன்தரும். அதுவும் ஆன்லைனில் கோப்புகளை பாதுகாத்தால் எப்பொழுது வேண்டுமானாலும் அவற்றை நாம் தரவிறக்கிப் பயன்படுத்திக்கொள்ள முடியும் இல்லையா?

ஆன்லைனில் கூட நிறைய தளங்கள் இதுபோன்ற வசதிகளைக் கொடுக்கிறது. கூகிள் ட்ரைவ் (Google Drive) உட்பட....

அதுபோன்றதொரு தளம்தான் Just Cloud. இத்தளத்தில் நீங்கள் விரும்பிய கோப்புகளை தரவேற்றம் செய்து, பிறகு வேண்டிய நேரத்தில் தரவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும்.

இத்தளத்தில் உங்களுடைய கோப்புகளை (அது எவ்விதமான கோப்புகளாக இருப்பினும்)சேமித்தப் பிறகு எவ்வளவு நாட்கள் கழித்துப் பார்த்தாலும் சேமிக்கப்பட்ட கோப்புகள் அப்படியே இருக்கும். அதனால் வேண்டும்போது கோப்புகளை பார்வையிடலாம். தேவைப்பட்டால் கோப்புகளை தரவிறக்கம் செய்தும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

கோப்புகளை உங்களிடம் உள்ள கணினி, டேப்ளட் பிசி, ஆண்ட்ராய்ட் மொபைல் என எந்த சாதனமாக இருந்தாலும் பார்வையிட முடியும் என்பது இதன் சிறப்பு வசதியாகும்.
  1. இவ்வசதியைப் பெற ஜஸ்ட் குலூட் டாட் காமிற்குச் செல்லுங்கள்.
  2. அத்தளத்தில் sign up செய்யுங்கள்.
  3. கணினியில் உள்ள கோப்புகளைத் தேர்ந்தெடுங்கள்.
  4. குளூட் டாட் காமில் தரவேற்றம் செய்யுங்கள்.
  5. நீங்கள் எங்கு இருப்பினும், எந்த ஒரு இன்டர்நெட் டிவைஸ் (computer, tablet pc, android mobile, iPhone, iPad ) வைத்திருந்தாலும், அங்கிருந்தே உங்களுடைய கோப்புகளை அணுகுங்கள்.
All so Read in English: http://masinfom.blogspot.in/



மிகச்சிறந்த வசதியைக் கொடுக்கும் இத்தளம் கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை.. முற்றிலும் இலவசமே.. பயன்படுத்த எளிதானது. தெளிவானது...

மேலும் விபரங்கள் அறிய இத்தளத்திற்கு Cloud Storage தளத்திற்குச் செல்லுங்கள்.

இப்பதிவு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். பிடித்திருந்தால் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களிடமும் பேஸ்புக், ட்விட்டர், கூகிள் ப்ளஸ் தளங்களின் வழியாக பகிர்ந்துகொள்ளுங்கள்.


All so Read in English: http://masinfom.blogspot.in/
நன்றி..

ஸ்மார்ட் போன்களுக்கான இலவச PDF கிரியேட்டர்

இது ஸ்மார்ட் போன்களுக்கான இலவச PDF Creator மென்பொருளாகும். Sonic PDF Creator என்றழைக்கப்படும் இந்த மென்பொருளானது Android Mobile முதல் டேப்ளட் பிசி- Tablet PC வரைக்கும் அனைத்து ஸ்மார்ட் போன்களில் செயல்படுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஸ்மார்ட் போனிலிருக்கும் பிரிண்டபிள் கோப்புகளை (Printable Files) பி.டி.எப் கோப்புகளாக மாற்றம் செய்யலாம்.
இதைப் பயன்படுத்தி Microsoft Documents களிலிருந்து உடனடியாக PDF கோப்புகளை உருவாக்க முடியும்.

ஸ்மார்ட்போனிலுள்ள அனைத்துவிதமான Printable கோப்புகளை PDF கோப்பாக உருவாக்கிவிடலாம்.

இனி ஒவ்வொரு முறையும் கோப்புகளை கம்ப்யூட்டர் மூலம் பி.டி.எப் கோப்பாக மாற்றி, பிறகு ஸ்மார்ட்போன்களில் தரவேற்றம் செய்து பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

Sonic PDF Creator - ஐ பயன்படுத்தி ஒரு கோப்பினை எப்படி PDF கோப்பாக மாற்றுவது என்பதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 Sonic PDF Creator -ல் PDF File உருவாக்கும் முறை:

  • உங்கள் ஸ்மார்ட் போனில் உள்ள டாக்குமெண்ட்களை Sonic PDF Creator மூலம் திறவுங்கள். 
  • Sonic Pdf Creator -ல் கோப்பு இறங்கியவுடன் PDF conversion ஆரம்பித்துவிடும். 
  • புதியதாக உருவாக்கப்பட்ட PDF கோப்புகள் உங்கள் ஸ்மார்ட் போனில் (Smart Phone's Storage ) சேமிக்கப்பட்டுவிடும். 
  • சேமிக்கப்பட்ட  PDF கோப்புகளை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம். இமெயில் அனுப்பலாம். மற்ற அப்ளிகேஷ்னகளிலும் (Use them Other applications) பயன்படுத்த முடியும்.
Android Smartphone, Tablet PC போன்ற ஸ்மார்ட் போன் சாதனங்களுக்காகவே உருவாக்கப்பட்ட இச்சிறந்த மென்பொருள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இம்மென்பொருளை தரவிறக்கம் செய்யவும், மேலும் அதிக விபரங்களைப் பெறவும் கீழிருக்கும் சுட்டியை அழுத்தவும்.

Download Sonic PDF Creator for Smart Phones

Sonic PDF Creator is a application to create PDF files. It is for tablets, smartphones and android Mobile. It is lightweight mobile PDF solution that provides accurate and high quality conversions on the go.

Instantly create PDF files from Microsoft Office documents right from Your Android phone in just to simple taps. 
thanks & source: https://play.google.com

All so Read in English: http://masinfom.blogspot.in/



நன்றி:

பி.டி.எப். கோப்பு உருவாக்கிட, PDF பக்கங்களை Scrap செய்து சேமித்திட ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்




ஆன்ட்ராய்ட் போன்களில் பி.டி.எப் கோப்புகளை உருவாக்க, அவற்றை எடிட் செய்திட, குறிப்புகள் எழுத, PDF பக்கங்களில் உள்ள குறிப்பிட்ட பகுதியை மட்டும் தனியே பிரித்தெடுத்து புதிய கோப்பாக மாற்றிட, குறிப்பிட்ட பகுதியை மட்டும் கட்செய்து வேண்டிய இடத்தில் ஒட்டிட, இப்படி பல்வேறு வழிகளின் பயன்படும் ஓர் அற்புதமான PDF Slicer, Maker, Scraper அப்ளிகேஷன்  PDF Clip and Scrap ஆகும்.

இதை சுருக்கமாக CUP app என அழைக்கின்றனர்.

Unidocs என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி, மேற்குறிப்பிட்ட அனைத்து செயல்களையும் செய்திடலாம்.

pdf slicer, scraper, maker for android phone
முதல் ஆண்ட்ராய்ட் PDF Clipping புரோகிராம் இதுவாகும்.  CUP அப்ளிகேஷனின் முழுமையான பொருள் CUt (Copy) and Past என்பதாகும்.

மொபைல் போன்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த அப்ளிகேஷனானது, பி.டி.எப் Page - ல் உள்ள குறிப்பிட்ட பகுதியை தேர்வு செய்து, கட் செய்து அதை வேறொரு பி.டி.எப். கோப்பில் பேஸ்ட் செய்வதற்கும், அல்லது புதிய பி.டி.எப் கோப்பாக சேமிப்பதற்கும் பயன்படுகிறது. இந்த செயல்களின் போது PDF Properties மாறாமல் அப்படியே இருக்கும்.

அதாவது ஒரு குறிப்பிட்ட PDF கோப்பு பக்கத்தில் கட் செய்யவிருக்கும் பகுதியும் PDF Properties இழக்காமல், PDF பார்மட்டிலேயே இருக்கும்.

 PDF Clip and Scrap பயன்கள்: 

  • ஒரு படத்தை அல்லது கேமிரா ஷாட்டை புதிய PDF கோப்பாக உருவாக்கலாம்.
  • ஒரு பி.டி.எப் பக்கத்தை கட் செய்து சிறிய பகுதிகளாக மாற்றலாம்.
  • (உதாரணமாக இரட்டைப் பக்கத்தை கேமிரா சாட் எடுத்து அவற்றை ஒவ்வொரு தனித் தனிப் பக்கமாக பிரித்து சேமிக்கலாம்)
  • ஒரு பி.டி.எப் பக்கத்தை சதுர வடிவமாக, வட்ட வடிவமாகவே,விருப்பப்பட்ட வடித்திற்கு கட் செய்துகொள்ளலாம்.
  • அவ்வாறு மாற்றியதை புதிய PDF file லிலோ அல்லது ஏற்கனவே இருக்கும் பழைய பி.டி.எப் கோப்பிலோ Stack செய்துகொள்ளலாம். 
  • அல்லது தேவைப்பட்ட PDF கோப்பில் பேஸ்ட் செய்துகொள்ளலாம்
  • பி.டி.எப் கோப்பில் குறிப்புகள், குறியீடுகளை போன்றவற்றை செய்யலாம்.
  • புதிய பி.டி.எப். கோப்பொன்றை உருவாக்கலாம். 
  • புதிய பி.டி.எப். பக்கத்தை உருவாக்கலாம். ஏற்கனவே இருக்கும் பக்கத்தை டெலீட் செய்யலாம்.
  • Scrap செய்யப்பட்ட பகுதியைமற்ற அப்ளிகேஷனுக்கு அனுப்பலாம்
  • Beans மற்றும் Cups தேர்வு செய்து மற்ற CUP பயனர்களுக்கு அனுப்பலாம்
  • CUP பயனர்கள் அல்லாதவர்களுக்கும் இதன் மூலம் உருவாக்கபட்ட பி.டி.எப் கோப்புகள் Cups and Beans களை WiFi மூலம் பகிர்ந்துகொள்ளலாம்.
இதில் Beans என்பது என்ன? CUPS என்பது என்ன போன்ற விளக்கங்கள் இங்கு தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்துகொள்ளவும், விரிவான விளக்கத்தைப் பெற்றிடவும் சொடுக்க வேண்டிய சுட்டி கீழே:

Download ezPDF Cup - PDF Clip and Scrap app for Anroid Devices

நன்றி.
All so Same in English: http://masinfom.blogspot.in/

பாஸ்போர்ட், விசா பற்றிய தகவல்களை அறிய ஆன்ட்ராய்ட் மொபைல் அப்ளிகேஷன்..!




வெளிநாட்டுக்குச் செல்ல விரும்பி பாஸ்போர்ட், விசாவிற்கு அப்ளை செய்ய இருக்கிறவர்களுக்கு இந்த அப்ளிகேஷன் பயனுள்ளதாக இருக்கும்.

All so Read in English: http://masinfom.blogspot.in/
அப்ளிகேஷனின் பயன்கள்: 

உங்கள் அருகில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகங்களின் முகவரியை தெரிந்துகொள்ளலாம். பாஸ்போர்ட்டிற்கு அப்ளை செய்வதற்கான அப்ளிகேஷன் பார்ம் டவுன்லோட் செய்யலாம்.

நீங்கள் அப்ளை செய்த பாஸ்போர்ட் அப்ளிகேஷனின் நிலை பற்றி அறியலாம்.

இந்த அப்ளிகேஷனில் ஹஜ் சேவைகள் உள்ளது. ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்குத் தேவையான தங்குமிடம், விமான சேவை போன்ற தகவல்களை அறியலாம்.

Ask Your Minister வசதி

Ask Your Minister என்ற வசதியின் மூலம் வெளியுறவுத் துறை மந்திரியிடம் கேள்விகளைக் கேட்டு பதில் பெறலாம்.

மற்றுமொரு முக்கியமான அம்சம்  பாராளுமன்றத்தில் கேட்கப்படும் கேள்வி பதில்களை இந்த அப்ளிகேஷன் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

பிரதமர், வெளியுறவுத்துறை மந்திரிகளின் சுற்றுப் பயணங்கள் குறித்த தகவல்களையும் இதன் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

பயன்மக்க பாஸ்போர்ட், விசா பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய சுட்டி:

Download MEA Government of India android apps

செவ்வாய், 7 அக்டோபர், 2014

ஸ்கிரீன் ரெக்கார்டிங் மற்றும் வீடியோ எடிட்டிங் சாப்ட்வேர்

Screen Recording மற்றும் Video Editing செய்வதற்கு பல்வேறு மென்பொருட்கள் பயன்படுகின்றன.

அவற்றில் ஒரு சில மென்பொருட்கள் இலவசமாகவும், ஒரு சில கட்டண மென்பொருட்களாகவும் கிடைக்கின்றன.

சிறந்த டாப் டென் ஸ்கிரீன் ரெக்கார்டிங் மற்றும் வீடியோ எடிட்டிங் சாப்டவேர்கள் கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. தேவையானதை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

1. Ezvid

Ezvid என்பது ஒரு screen recorder program  ஆகும்.  இதன் மூலம் கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் நடைபெறும் இயக்கங்களை ரெக்கார்ட் செய்யலாம்.
ezvid screen recording software
  1. இப் புரோகிராமுடன் in-built video editor-ம் இணைந்துள்ளது.
  2. இதன் மூலம் ரெக்கார்ட் செய்த வீடியோவை, உங்களுடைய விருப்பத்திற்கேற்ப தேவையான இடங்களில் எடிட் செய்துகொள்ள முடியும்.
  3. வீடியோவை இருபகுதிகளாக பிரித்து, இடையே தேவையான இடங்களில் Text -ஐ சேர்த்துக்கொள்ளலாம்.
  4. slideshow effect களை உருவாக்கலாம்.
  5. இப்புரோகிராமின் மூலம்  உருவாக்கப்பட்ட videoக்களை YouTubeக்கு அப்லோட் செய்துகொள்ள முடியும்.
Ezvid screen recorder program  பதவிறக்கம் செய்ய சுட்டி: download Ezvid screen recorder program

2. BlueBerry FlashBack Express Recorder
இது ஒரு வீடியோ ரெக்கார்டர் மென்பொருள் ஆகும். இதன் மூலம் உங்களுடைய வெப் கேமைப் பயன்படுத்தி வீடியோவை ரெக்கார்ட் செய்துகொள்ள முடியும்.

BlueBerry FlashBack Express Recorder

ரெக்கார்டிங்கை நிறுத்தியவுடன் இது தானாகவே FBR கோப்பொன்றை உருவாக்குகிறது. இந்த வீடியோ கோப்புகளை, இதனுடன் இணைந்திருக்கும் வீடியோ எடிட்டரைப் பயன்படுத்தி  அவற்றை எடிட் செய்துகொள்ள முடியும்.

BlueBerry FlashBack Express Recorder program  பதவிறக்கம் செய்ய சுட்டி: downlaod BlueBerry FlashBack Express screen recorder program

3. Screenr
Screenr என்பது online வழியாக Screen Record செய்யப்பயன்படும் ஒரு மென்பொருள் ஆகும். உங்களுடைய கம்ப்யூட்டரில் மென்பொருளை நிறுவ தேவையில்லை.
இப்புரோகிராம் உங்களுடைய கம்ப்யூட்டரில் செயல்பட கண்டிப்பாக Java நிறுவியிருக்க வேண்டும்.

screenr screen and video recording software

உங்களுடைய கம்ப்யூட்டர் திரையில் ரெக்கார்ட் செய்வதற்கான area -வைத் தேர்ந்தெடுத்துவிட்டு, ஸ்கீரீன் ரெக்கார்டிங்கை தொடங்கலாம்.
அதிக பட்சமாக 5 நிமிடங்கள் இந்த முறையில் ரெக்கார்ட் செய்ய முடியும்.

ரெக்கார்ட் செய்த வீடியோவை நண்பர்களுக்கு பகிர, லிங்க் கொடுக்கப்படும். தேவையெனில் MP4 ஆக எக்ஸ்போர்ட் செய்துகொள்ளலாம். அங்கிருந்தே Youtube -லும் அப்லோட் செய்துகொள்ள முடியும். ரெக்கார்ட் செய்யப்படும் வீடியோக்கள் உங்களுடைய அக்கவுண்டிலேயே சேமிக்கப்படும்.

Screenr Recorder program  பதவிறக்கம் செய்ய சுட்டி: download Screenr screen recorder program

4. Rylstim Screen Recorder
Rylstim Screen Recorder -ல் Start Record பட்டனை அழுத்தியவுடன் ஸ்கிரீன் ரெக்கார்டிங் ஆரம்பமாகிவிடுகிறது. கம்ப்யூட்டரில் ஏற்படும் நிகழ்வுகளை காட்சிப்படுத்திக் காட்ட இந்த ரெக்கார்டிங் மென்பொருள் உபயோகமாக இருக்கும். இதில் Audio Recording செய்வதற்கான வசதி இல்லை.

Rylstim Screen Recorder
Rylstim Screen Recorder program  பதவிறக்கம் செய்ய சுட்டி: download Rylstim Screen Recorder program

5. CamStudio
CamStudio வீடியோ எடிட்டிங் புரோகிராம் பல்வேறு வசதிகளை உள்ளடக்கியுள்ளது. மௌஸ் கர்சரை  enable அல்லது  disable செய்யும் வசதி, மைக்ரோ போன் அல்லது இந்த புரோகிராமின் மூலம் sounds Record செய்யும் வசதி மற்றும் ரெக்கார்ட் செய்யப்பட வேண்டிய ஸ்கிரீன் அளவினை நம் வசதிக்கு தகுந்தாறு மாற்றிக்கொள்ளும் வசதி என்பன போன்ற பல்வேறு வசதிகளை இப்புரோகிராம் உள்ளடக்கியுள்ளது.

undefined

CamStudio Recorder program  பதவிறக்கம் செய்ய சுட்டி: downlaod CamStudio screen recorder program

ஆடியோ ரெக்கார்டிங், எடிட்டிங் செய்ய Audacity மென்பொருள்

ஆடியோ ரெக்கார்டிங் செய்ய பயன்படும் ஒரு அருமையான மென்பொருள் Audacity.

ரெக்கார்டிங் மட்டமல்ல... ரெக்கார்ட் செய்ததை எடிட் செய்திடவும் முடியும்.

ரெக்கார்ட் செய்த பகுதியில் தேவையில்லாத பகுதியை தேர்ந்தெடுத்து நீக்க முடியும்.

அல்லது அவற்றை கட் செய்து வேறொரு இடத்தில் சேர்க்க முடியும்.

புதியதாக ஆடியோ இடைச்செருகல் செய்ய முடியும்.
software-for-audio-recording-and-editing
ரெக்கார்ட் செய்து முடித்தவற்றை ஒலிக்கோப்பாக சேமிக்கலாம்.  உங்களது நண்பர்களுக்கும் அனுப்பி வைக்கலாம். உதாரணமாக வாழ்த்து செய்திகளை ரெக்கார்ட் செய்து அனுப்பலாம்.

சமையல் குறிப்புகள், விபர குறிப்புகள் போன்றவற்றை ரெக்கார்ட் செய்து அனுப்பி வைக்கலாம்.
இது முற்றிலும் இலவசமான மென்பொருள்.

தரவிறக்கம் செய்திட சுட்டி: Download Free audio Recorder, Editor Audacity

ஆடியோ ரெக்கார்ட் செய்யும் முறை: 

மேற்கண்ட சுட்டியை கிளிக் செய்து உங்களுடைய கம்ப்யூட்டரில் நிறுவிக்கொண்டு மென்பொருளைத் திறந்தால் இப்படி காட்சியளிக்கும்.

இதில் மேலே இருக்கும் பட்டன்களை பாருங்கள். வழக்கமான ஒரு ஆடியோ பிளேயரில் இருக்கும் பட்டன்களைப் போல இருக்கும். இதில் கடைசியில் பிரௌன் நிறத்தில் இருக்கும் பட்டனை சொடுக்கி ஆடியோ ரெக்கார்டிங் ஆரம்பிக்கலாம்.

கீழே தெரியும் ஆடியோ கிராபிக்ஸ் , நீங்கள் பேச பேச ரெக்கார்ட் ஆகும் பகுதி. இரண்டும் வலது, இடது ஸ்டீரியோ தடங்கள்.

பேசி முடித்தவுடன் End பட்டனை அழுத்தி ரெக்கார்டிங் நிறுத்திவிடலாம். பிறகு Save கொடுத்து ரெக்கார்ட் செய்ததை சேமிக்கலாம். டிபால்டாக .au பைலாகத்தான் சேமிக்கப்படும்.

தேவையென்றால் File ==>Export தேர்ந்தெடுத்து, தேவையான ஆடியோ பார்மட்டில் சேமித்துக்கொள்ளலாம்.

எடிட்டிங்:

ரெக்கார்ட் செய்த கோப்பில் ஒரு சிலதை சேர்க்க வேண்டும் என்றால், அதை எடிட் செய்து, தேவையானதை ரெக்கார்ட் செய்து அதை இடைச்செருகலாக சேர்க்கலாம்.

ஏற்கனவே ரெக்கார்ட் செய்த கிராபிக்ஸ் பகுதியில் தேவையில்லாத பகுதியை டைமரை நோட் செய்து சரியான இடத்தை தேர்ந்தெடுத்து நீங்கிவிடலாம்.

இந்த பணியை செய்ய வழக்கமாக நாம் நோட்பேடில் பயன்படுத்தும் கட்டளைகளே பயன்படுகின்றன. மௌசை வைத்து டிராக் செய்வதன் மூலம் ரெக்கார்ட் செய்த பகுதியை தேர்ந்தெடுக்கலாம்.

கண்ட்ரோல் சி கொடுப்பதன் மூலம் அதை காப்பி செய்யலாம்.
கண்ட்ரோல் எக்ஸ் கொடுப்பதன் மூலம் கட் செய்யலாம்.
கண்ரோல் வி கொடுப்பதன் மூலம் பேஸ்ட் செய்யலாம்.

கட் செய்த பகுதியை மீண்டும் பேஸ்ட் செய்திடும்பொழுது, கீழே புதிய டிராக்கில் அவை பேஸ்ட் செய்யப்படும்.

வேண்டிய இடத்தில் இடைச்செருக்கலாக செருக, எந்த இடத்தில் சேர்க்க வேண்டுமோ அந்த இடத்தை தேர்ந்தெடுத்து மேலுள்ள Split பட்டனை அழுத்துவதன் மூலம் இடைவெளி ஏற்படும்.

ஸ்பிலிட் செய்யப்பட்ட பகுதியை தேவையான அளவிற்கு நகர்த்தி வைத்துவிட்டு, இடைவெளி ஏற்பட்ட இடத்தில் கீழே புதிய டிராக்கில் சேர்க்கப்பட்ட பகுதியில் இருப்பதை அப்படியே டிராக் செய்து இடைவெளி ஆன இடத்தில் சேர்த்துவிடலாம்.

எடிட்டிங்கை முடித்தவுடன், அவற்றை Save கொடுத்து சேமித்துவிடலாம்.

கம்ப்யூட்டர் வேகம் அதிகரிக்க என்ன செய்யலாம்?

கம்ப்யூட்டர்  வேகம் குறைவாக இருந்தால் அதிக டென்சன் ஏற்படும்.

"நேற்று வரைக்கும் நல்லாதான் இருந்தது.. இன்னைக்கு என்னாச்சுன்னே தெரியல.. கம்ப்யூட்டர் திடீன்னு ஸ்லோ ஆகிடுச்சு.. "

இப்படி நண்பர்கள் அடிக்கடி புலம்புவதைக் கேட்டிருக்கிறேன்.

ஒரே நாளில் கம்ப்யூட்டர் ஸ்லோ ஆகாது என்பதே உண்மை. சிறுக சேமிக்கும் தேவையற்ற கோப்புகள், மென்பொருட்கள், மற்றும் வைரஸ் போன்ற காரணங்களால் கொஞ்சம் கொஞ்சமாக கம்ப்யூட்டர் ஸ்லோ ஆகிவிடும் என்பதே உண்மை.
ஒரு நாளில் திடீஎன  கம்ப்யூட்டர் ஸ்லோவானால் ஏதாவது அதிக கொள்ளளவு உள்ள மென்பொருளை டவுன்லோட் செய்து பாவித்திருப்பீர்கள். அதுதான் காரணமாக இருக்கும்.

பொதுவாக கம்ப்யூட்டர் வேகம் குறைய, என்ன காரணம் என்று ஆராய்ந்தால், உண்மையிலேயே தேவையில்லாத கோப்புகளும், டெம்ப்ரரி பைல்கள் என்று சொல்லப்படும் கணினியில் தேங்கும் தற்காலிக கோப்புகள்தான்.


கம்ப்யூட்டர் ஸ்பீடாக டிப்ஸ்

ஒரு சில வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் கம்ப்யூட்டரை வேகமாக்கலாம்.

வழிமுறைகள்:
  • கம்ப்யூட்டர் Boot ஆகி முடியும் வரை எந்த ஒரு அப்ளிகேஷனை இயக்காமல் இருக்க வேண்டும். 
  • Recycle bin - ல் இருக்கும் கோப்புகளையும் அதிலிருந்து நீக்கிவிட வேண்டும். 
  • டெஸ்டாப்பில் தேவையில்லாத, அதிகம் பயன்படுத்தாத ஷார்கட்கள், பைல்களை வைக்க வேண்டாம். 
  • இன்டர்நெட் பயன்படுத்தி முடித்த பிறகு, Run விண்டோவில் %temp%  என கொடுத்து டெம்ப்ரரி பைல்களை தேர்ந்தெடுத்து நீக்கிவிடுங்கள். 
  • சிஸ்டம் பைல்கள் இருக்கும் Drive -ல் வேறெந்த கோப்புகளையும் சேமித்து வைக்காதீர்கள். பொதுவாக சிஸ்டம் பைல்கள் C டிரைவில்தான் இருக்கும். 
  • ஒரு அப்ளிகேஷனை பயன்படுத்திவிட்டு மூடியவுடன் ஒரு முறை கம்ப்யூட்டரை ரெப்ரஸ் செய்ய மறக்காதீர்கள். அவ்வாறு செய்யும்பொழுது RAM - மெமரியிலிருக்கும் தேவையில்லாத கோப்புகள் நீக்கப்படும். 
  • Refresh செய்ய டெஸ்க்டாப் சென்று f5 அழுத்துங்கள். (உடனே டெஸ்க்டாப் செல்ல Start பட்டனை அழுத்திக்கொண்டு  D எழுத்து விசையை அழுத்துங்கள். டெஸ்டாப் தோன்றிவிடும். )இப்பொழுது F5 கொடுத்துப் பாருங்கள்.. கம்ப்யூட்டர் ரெப்ரஸ் ஆகிவிடும். 
  • டெஸ்க்டாப்பில் அதிக அளவுடைய வால்பேப்பர்களை வைத்தாலும் சிறிது வேகம் குறையும். 
  • தேவையற்ற, பயன்படுத்தாத அப்ளிகேஷன்கள், புரோகிராம்கள் எதுவும் இன்ஸ்டால் செய்து வைத்திருந்தால், அதை UNINSTALL செய்திடுங்கள். 
  • மாதம் ஒரு முறை உங்களுடைய Hard disk - ஐ Defragment செய்யுங்கள். இதனால் அதில் உள்ள கோப்புகள் ஒழுங்கமைப்படுவதோடு, தேவையற்ற இடைவெளிகளும் சரிசெய்யப்படும். 
நன்றி.

திங்கள், 6 அக்டோபர், 2014

புதிய ஆன்ட்ராய்ட் பிரௌசர் அப்ளிகேஷன் Skyfire 4.0















 All So Read in English : www.masinfom.blogspot.in

ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்களில் இன்டர்நெட் பிரௌசிங் செய்ய பயன்படும் Browser Apps - பிரௌசர் அப்ளிகேஷன்கள் பல உள்ளன. அவற்றில் Skyfire Browser சிறப்பாக செயல்படுகிறது. தற்போது இந்த அப்ளிகேஷனின் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது.

இதன் Flash content-சப்போர்ட் செய்யும் தன்மை, யூடியூப் போன்று இணையப்பக்கங்களில் பொதியப்பட்டுள்ள வீடியோக்களை Streamed things தனியாக சிறிய PopUp Windows (பாப் அப் விண்டோ) u  வில் திறப்பது போன்ற சிறப்புகளைப் பெற்றிருக்கிறது.

அனைத்துவிதமான கம்ப்யூட்டர் பொதிகள் Skyfire's server -ஆல் கையாளப்பட்டு, பிறகு உங்களுடைய Handset-ற்கு அனுப்புகிறது. வேகம் குறைந்த ஆன்ட்ராய்ட் போன்களில் கூட வேகமாக செயல்படுகிறது.

இதில் உள்ள மேலதிக வசதிகள் கீழே ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Skyfire 4.0 Android Browser Features

  • Flash Video
  • User Agent Switching
  • Facebook QuickView
  • Fireplace Feed Reader
  • Popular Pages
  • Related Ideas
  • Skyfire OneTouch Search
  • Facebook Like Button
  • Twitter Integration
  • Sports, News & Finance Buttons
  • Google Reader
Skyfire 4.0 Browser Apps டவுன்லோட் செய்ய சுட்டி: Download Skyfire 4.0 Browser apk
All So Read in English : www.masinfom.blogspot.in

சுறுசுறுப்பா இருக்கணுமா? இரத்தத்தை சுத்தமாக்குங்க..!

உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும்.
இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.
பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். இதுதவிர, செம்பருத்திப் பூவை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.
முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.
நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் கூட இரத்தம் விருத்தி ஆகிறது.
இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது. தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் கூட இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.


All So Read in English : www.masinfom.blogspot.in

இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொ‌‌ண்டது.
இன்றைய காலகட்டத்தில் பெரும் அச்சுறுத்தல் இரத்தக் குழாய் அடைப்பு. இதனை சாதாரண தவிர்த்துவிடலாம் என்கிறது இயற்கை வைத்தியம். தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் போதும் இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும்.
இதற்கடுத்தது இரத்தம் அழுத்தம். இதனை முற்றிலுமாக போக்க வழி உண்டு. கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீரகப் பொடி 12 நேரம் ஊறவைத்து குடித்து வந்தால் போதும். மேலும், ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சீர்படும். இதுதவிர, அகத்திக் கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டால் வந்தாலும் இரத்தக் கொதிப்பு குணமாகும்.
இரத்தக்கட்டு, சுளுக்கு நிவர்த்தியாக, மஞ்சள், உப்பு, சுண்ணாம்பு ஆகியவற்றை வெந்நீர் விட்டு அரைத்து அந்த விழுதை சூடு செய்து சுளுக்கின் மீது பற்றுபோட்டால் போதும்.
விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.

All So Read in English : www.masinfom.blogspot.in

Popular Posts

Facebook

Blog Archive