பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

சனி, 19 மார்ச், 2016

எலுமிச்சை - சிறிய பழம் பயன்கள் அதிகம் இதனைப்பயன்படுத்தி நோயற்ற வாழ்க்கை வாழ்வோம்.

🎾எலுமிச்சை - இதை தேவக்கனி,
இராஜக்கனி என்றும் கூறுவார்கள்.
எல்லா பழங்களையும் எலி கடித்து
விடும் ஆனால் எலுமிச்சையை
மட்டும் எலி தொடவே தொடாது.

🎾எலி
மிச்சம் வைத்ததாதல்தானோ என்னவோ
இந்தப் பழத்திற்கு எலிமிச்சை என்று
பெயர் வந்திருக்கலாம் என சித்தர்கள் மூலம் அறியப்படுகிறது.

🎾எலுமிச்சை
புளிப்பு சுவை மிக்க மஞ்சள் நிறப்
பழத்தைக் கொடுக்கும் ஒரு வகைத்
தாவரம். இது சிட்ரஸ் லிமன்
(Citrus
limon) என்னும் அறிவியல் பெயர்
கொண்டது.

🎾எலுமிச்சம் பழச் சாற்றில் 5% அளவுக்கு
சிட்ரிக் அமிலம் உண்டு. இதனால் இது
புளிப்புச் சுவை.

🎾இதன் pH
அளவு 2 முதல் 3 வரை இருக்கும்.
இதனால் இதைப் பள்ளிகளில் கற்பித்தல்
சோதனைகளில் மலிவான அமிலமாகப்
பயன்படுத்துகிறார்கள்.

🎾இதன்
தனித்துவமான சுவை காரணமாக
இதனை அடிப்படியாகக் கொண்டு பல
வகையான பானங்களும், இனிப்பு
வகைகளும் தயாரிக்கப் பட்டு ஆக்கப்பட்டு
வருகின்றன.

🎾100 கிராம் எலுமிச்சை பழத்தில் உள்ள
சத்துக்கள்
நீர்ச்சத்து - 50 கிராம்
கொழுப்பு - 1.0 கிராம்
புரதம் - 1.4 கிராம்
மாவுப்பொருள் - 11.0 கிராம்
தாதுப்பொருள் - 0.8 கிராம்
நார்ச்சத்து - 1.2 கிராம்
சுண்ணாம்புச் சத்து - 0.80 மி.கி.
பாஸ்பரஸ் - 0.20 மி.கி.
இரும்புச் சத்து - 0.4 மி.கி.
கரோட்டின் - 12.மி.கி.
தையாமின் - 0.2 மி.கி.
நியாசின் - 0.1 மி.கி.
வைட்டமின் ஏ - 1.8 மி.கி.
வைட்டமின் பி - 1.5 மி.கி.
வைட்டமின் சி - 63.0 மி.கி
      இதிலுள்ள அதிகமான வைட்டமின் 'சி' சத்தும்,
ரிபோஃப்ளோவினும்
புண்களை ஆற்ற வல்லது. எலுமிச்சை
சாறுடன் நீர் கலந்து சிட்டிகை உப்பு
போட்டு தொண்டையில் படுமாறு
பலமுறை கொப்பளிக்க தொண்டைப்
புண், வாய்ப்புண் ஆறும்.

🎾எலுமிச்சைச் சாறுடன் நீர் கலந்து
அடிக்கடி வாய் கொப்பளித்தால் வாய்
துர் நாற்றம் மறையும்.

🎾வாந்தியா?
எலுமிச்சைச் சாறுடன், இஞ்சிச் சாறு,
சிறிதளவு தேன் சேர்த்து,
வெதுவெதுப்பான நீரில் கலந்து
சாப்பிட விரைவில் குணம் தெரியும்.

🎾எலுமிச்சைச் சாறுடன் வெந்நீர்
கலந்து குடிக்கும் போது
நெஞ்செரிச்சல், ஏப்பம், வயிறு உப்புசம்
குறையும். ஜீரணசக்கியும்
அதிகரிக்கும்.

🎾கல்லீரலைப் பலப்படுத்த சிறந்த டானிக் எலுமிச்சை.

🎾பித்தநீர் சரியான அனவில் சுரக்க
வழிசெய்கிறது. பித்தப்பையில்
ஏற்படும் கற்களைக் கரைக்க
உதவுகிறது.

🎾சருமப் புண்களுககு
ஆன்டிசெப்டிக்காகப் பயன்படுகிறது.
எலுமிச்சைச் சாற்றை முகத்தில்
தடவிவர, முகத்திலுள்ள
கரும்புள்ளிகள் மற்றும் சுருக்கங்கள்
மறைகின்றன.

🎾பாலேட்டுடன்
எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில்
தடவினால் சரும நிறம் பளிச்சிடும்.

🎾தினமும் காலையில் வெறும்
வயிற்றில் இளஞ்சூடான நீரில்
எலுமிச்சைச் சாறு, ஒரு டீஸ்பூன்
தேனூடன் பருகி வர உடல் எடை
குறையும்.

🎾பொட்டாசியம் அதிகமான அளவில்
இருப்பதால் இதயக் குறைபாடுகளை
நீக்க உதவுகிறது.

🎾உயர் இரத்த அழுத்தம்,
தலைச்சுற்றல், வயிற்றுப் பிரட்டல்
போன்ற உபாதைகள் நீங்கும்.

🎾இரவு நேரத்தில் வெதுவெதுப்பான
நீரில், எலுமிச்சைச் சாறுடன் தேன்
கலந்து குடித்தால் நல்ல தூக்கம் வரும்.
உடல் மட்டுமின்றி, மனமும் அமைதி
அடையும்.

🎾மனஅழுத்தம், ஸ்ட்ரெஸ்,
நீங்கும்.
உடலிலிருந்து நச்சுப்
பொருள்களையும்,
பாக்டிரியாக்களையும் வெளியேற்றி
மூட்டுவலிக்கு நிவாரணம்
அளிக்கிறது.

🎾இரத்த சுத்தகரிப்பாக உதவுகிறது.

🎾காலரா, மலேரியா போன்ற
காய்ச்சலின் போது
விஷக்கிருமிகளின் தாக்கத்தை நீக்கப்
பெரிதும் உதவுகிறது.

🎾சில துளிகள் எலுமிச்சைச் சாறை
நீர் கலக்காமல் அப்படியே விட்டுக்
கொண்டால் நாக்கின் சுவை
அரும்புகள் தூண்டப்பட்டு, சுவை
தெரியும்.

🎾தலையில் பொடுகுத் தொல்லை
நீங்க, எலுமிச்சைச் சாறினை தடவி
சிறிது நேரம் ஊறியபின் குளித்தால்,
பொடுகுத் தொல்லை நீங்கும்.

🎾சிறிய
பழம் பயன்கள் அதிகம்
இதனைப்பயன்படுத்தி நோயற்ற
வாழ்க்கை வாழ்வோம்.

🎾இயற்கை அழகு, புத்துணர்ச்சி,
உற்சாகம் இவையனைத்தையும் தரும்.

🎾தேள்கொட்டினால்,
அந்த இடத்தில்
எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி
இரண்டு துண்டையும் தேய்க்க விஷம்
இறங்கும்.

🎾தலைவலிக்கு
கடுங்காபியில் எலுமிச்சையின்
சாற்றை கலந்து கொடுத்தால் உடனே
குணமாகும்.

🎾நீர் சுருக்கு, பித்தநோய், வெட்டை
சூடு, மலச்சிக்கல் ஆகியவற்றுக்கு
எலுமிச்சம் பழச்சாற்றுடன் சர்க்கரை
அல்லது உப்பு சேர்த்து கலந்து
குடித்து வந்தால், தகுந்த நிவாரணம்
பெறலாம்.

🎾மயக்கம், வாந்தி, வாய் குமட்டல்,
நீர்வேட்கை, வெறி, கண் நோய், காது
வலி போன்றவற்றை குணப்படுத்தும்
தன்மை எலுமிச்சம் பழத்திற்கு உண்டு.

🎾கழிச்சலுக்காக மருந்துகள்
உட்கொண்டு, அதனால் அடங்காத
கழிச்சலும், வாந்தியும் ஏற்பட்டால்,
சீரகத்தை தேன் விட்டு பொன்னிறமாக
வறுத்து, அதனுடன் எலுமிச்சம்
பழச்சாற்றையும் சேர்த்து நீர் விட்டு
காய்ச்சி, உட்கொள்ள கொடுத்தால்
உடனே வாந்தியும், கழிச்சலும்.

🎾எலுமிச்சை பழச்சாற்றை தலையில்
தேய்த்து தலை முழுகி வர பித்தம்,
வெறி, உடல் சூடு அடங்கும்.

🎾அடிபட்டு ரத்தம் கட்டியிருந்தால்
எலுமிச்சை சாற்றில் கரிய போளத்தை
(கரிய போளம் என்பது கற்றாழையின்
உலர்ந்த பால். இது நாட்டு மருந்து
கடைகளில் கிடைக்கும்) சேர்த்து
காய்ச்சி அடிபட்ட இடத்தில் பூசிவர
ரத்தக்கட்டு கரையும்.

🎾நகச்சுற்று ஏற்பட்டவுடன் எலுமிச்சை
பழத்தில் துளையிட்டு விரலை
அதனுள் சொருகி வைக்க வலி
குறையும்.

🎾எலுமிச்சம் பழச்சாற்றுடன் தேன் கலந்து
குடிக்க வறட்டு இருமல் தீரும்.
இதனுடன் மோர் கலந்து குடிக்க ரத்த
அழுத்தம் குறையும்.
சிலருக்கு பாதத்தில் எரிச்சல் ஏற்படும்.
அப்படிப்பட்டவர்கள்,
மருதாணியை
அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றில்
கலந்து பாதத்தில் தடவி வந்தால்
எரிச்சல் குணமாகும்.

🎾சிறிதளவு எலுமிச்சை இலைகளை
அரைத்து சாறு பிழிந்து, அதனுடன்
சிறிது உப்பு சேர்த்து நீரில் கலந்து
குடித்தால் வாந்தி நிற்கும்.

🎾எலுமிச்சம்பழத்தின் விதைகளை நீரில்
போட்டு காய்ச்சி,
அதில் இருந்து
எழும் ஆவியை முகத்தில் படும்படி
பிடிக்க நீர்பினிசம் தீரும்.

🎾சீமையகத்தி எனப்படும் வண்டு கொல்லி
இலையை அரைத்து எலுமிச்சம்
பழச்சாற்றில் கலந்து மேலே பூசி வர
படர்தாமரை குணமாகும்.

🎾சீரகத்தை எலுமிச்சம் பழச்சாற்றில் 2 நாள் ஊற வைத்து, பின் அந்த சாற்றுடன்
வெயிலில் காய வைக்கவும். நன்றாக
காய்ந்ததும் மீண்டும் எலுமிச்சம்
பழச்சாற்றில் ஓர் இரவு ஊற வைத்து
மீண்டும் வெயிலில் காய வைக்கவும்.
நன்றாக உலர்ந்தபின் அதை எடுத்து
பொடியாக்கி ஒரு ஸ்பூன் அளவு
தேன் அல்லது தண்ணீரில் கலந்து
மூன்று வேளை சாப்பிட்டுவர
அஜீரணம், பித்தம் தணியும். ரத்த அழுத்தம்
சீராகும்.

🎾ரத்தக் கொதிப்பைத் தடுப்பதில்
எலுமிச்சம் பழம் மிக முக்கிய
பங்காற்றுகிறது. மேலும் கெட்ட
ரத்தத்தை தூய்மைப்படுத்து வதற்கு
எலுமிச்சம் பழத்தை விட மேலான
ஒன்று கிடையாது.

🎾முக்கிய
வைட்டமின் சத்தான வைட்டமின் சி,
எலுமிச்சம் பழத்தில் நிறைய
இருக்கிறது.
எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக்
அமிலம் கிருமிகளை அழிக்கும்
தன்மை கொண்டது. அதனால் தொற்று
நோய் கிருமிகளின் தாக்குதலில்
இருந்து உடலை கண் போல
பாதுகாக்கிறது.

🎾எலுமிச்சம் பழ ரசத்தை சாப்பிட்டால்
மண்ணீரல் வீக்கம் பிரச்சினையில்
இருந்து விடுபடலாம்.

🎾எலுமிச்சம் பழத்தின் சாற்றை தேனில்
கலந்து சாப்பிடுவது ஒரு சத்து மிக்க
டானிக் ஆகும்.
உடலுக்கு வேண்டிய
உயிரூட்டத்தையும், ஒளியையும்
எலுமிச்சம் பழத்தின் மூலம் மனிதர்கள்
பெற இயலும்.

🎾இத்தனை நன்மை செய்யக்கூடிய
எலுமிச்சம் பழத்துக்கு மலத்தை
கட்டக்கூடிய குணமும் உண்டு.
ஆனாலும் தேன் சேர்த்து உண்டு
வந்தால் மலக்கட்டு நீங்கி விடும்.

🎾உடல்
பருமன், கொலஸ்ட்ரால், அதிக எடை
அன்பர்கள், நீரிழிவு வியாதியால்
அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு
எலுமிச்சைச்சாறு அருந்தலாம்.

🎾வயிற்றுவலி, வயிற்று உப்புசம்,
நெஞ்சு எரிச்சல், கண் வலி ஆகியவற்றை
சரியாக்கும் ஒப்பற்ற சாறு. உயர்ந்த
கிருமி நாசினி. பொட்டாசியமும்
இதில் உள்ளது.
உயர் இரத்த அன்பர்கள் எலுமிச்சையால்
நலம் பெறலாம்.

🎾சிறுநீர் அடைப்பு
விலகும். உடல் நச்சுக்களை
வெளியேற்றும். உடலின் தற்காப்பு
சக்தி எலுமிச்சையால் பெருகும்.
கடல் உப்பினால் உப்பிய உடம்பு
எலுமிச்சைச் சாறால் கட்டழகு மேனி
பெறும்.

🎾கனிகளில் மதியூக மந்திரி
குணத்தை உடையது எலுமிச்சை.

🎾எலுமிச்சைச் சாறை அப்படியே
பயன்படுத்தக் கூடாது. நீருடன் அல்லது
தேன் போன்றவற்றுடன் பயன் படுத்த வேண்டும்.

🎾எலுமிச்சை, வெங்காயம்
போன்றவைகளை வெட்டியதும்
பயன்படுத்தி விட வேண்டும்.

🎾இவ்வளவு பயன் தரும் தேவகனி (எலுமிச்சை) வரலாற்றுச்
சிறப்பு மிக்கது என்றால் அது மிகையல்ல.

யாரும் நகைகடை அடைப்புக்கு ஆதரவு தரவேண்டாம் ஆதங்கமும் படவேண்டாம

யாரும் நகைகடை அடைப்புக்கு ஆதரவு தரவேண்டாம் ஆதங்கமும் படவேண்டாம் விஷேசம் வைச்சிருக்கோமேன்னு பதறவேண்டாம்
விஷேசம் வைத்திருப்பவர்கள் தயவு செய்து பொருத்து கொள்ளுங்கள் நாட்டின் வளர்ச்சிக்காக
இதில் என்ன நாட்டு வளர்ச்சி இருக்கு இது எப்பிடி நாட்டை வளர்க்கும் என்று எண்ணினால் மேலும் படியுங்கள் விவரம் புரியும்

2லட்சதுக்கு மேல் வாங்கினால் பான் கார்டு அவசியம்
அது போக இந்த அரசு போட்ட கலால் வரி அவர்களை கலங்கடித்து உள்ளது
அது எப்பிடி எல்லாதிலும் தான் வரி இருக்கு என்று நினைக்கலாம்
இதுல அவங்களுக்கு என்ன கலக்கம் என்று நினைக்கலாம் நம்மகிட்ட தானே வாங்கி கொடுக்க போறான் என்று நினைக்கிலாம்

நம்மகிட்ட வாங்கி அரசுக்கு வரி கட்டுவதற்க்கு எவனாச்சும் போறாடுவானா யோச்சிபாருங்கள்
விலை கிராம் 3000 வித்தப்பையும் மக்கள் நகை வாங்க தானே செய்தார்கள் இந்த 1% விதத்தால் மக்கள் நகை வாங்குவதை விட்டா விடுவார்கள்

கண்டிப்பாக கிடையாது உண்மையான நோக்கம் வேற

மக்களுக்காகவா இவர்கள் இவ்வளோ ஆதங்கம் அடைகிறார்கள் போராட்டம் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள் கிடையவே கிடையாது

அப்பறம் எங்கே இருக்கு ஆப்பு எங்கே இவங்களுக்கு வலிக்குது

அதான் கலால் வரி அது என்ன பண்ணும் என்று நினைக்கிறேர்கள்

இதற்க்கு முன் தங்கம் இறக்குமதிக்கு தான் வரி அப்பிடி என்றால் ஓரு கடை காரான் எவ்வாறு இறக்குமதி செய்கிறானோ அதற்க்கு மட்டும் வரி அந்த நகை கடை காரன் எவ்வளோ விற்பனை செய்கிறான் என்று மத்திய அரசுக்கு தெரியாது அது மாநில அரசுக்கு தான் விற்பனை வரி (vat) அவன் எவ்வளோ விற்கிறான் என்று.அந்த விற்பனைக்கு மட்டும் வரி கட்டிருவான் ஆனால் எவ்வாளோ இறக்குமதி செஞ்சான் என்று மாநில அரசுக்கு தெரியாது

இங்கே தான் இப்போது ஆப்பு

ஓரு நகை கடை காரன் 10 கிலோ நகை வாங்கினால் விற்பனையும் 10 கிலோவாக தானே இருக்கனும்
ஆனால் அந்த கடையின் விற்பனை 12 கிலோவாகவோ 15 கிலோவாக இருந்தால் கலால் வரி மூலம் மத்திய அரசுக்கு தெரிந்து விடும் எப்பிடி இறக்குமதி செய்தது 10 கிலோ விற்பனை செய்வது எப்பிடி 15 கிலோவாக வரும் என்று ஆராய்ந்தால் இவனுகளோட புட்டு வெளி வந்திரும்கிற பதற்றம் தான் இவனுங்களுக்கு

என்னது அது முதலாவதாக தேரத்தின் பின்னனி அடிப்படும் நீங்கள் நகைவாங்கும் போது பில்லில் அவன் உங்கள் நகைக்கு உட்டான சேதாரத்தை தனியாக காட்டமாட்டான் உங்கள் நகையின் கிராம்மோடு கூட்டி தான் பில்போடுவான்
எ.டு 10கிராம் சேதாரம் 10% அதாவது 1 கிராம் இதையும் சேர்த்து 10+1=11கிராம் விற்பனை செய்தாக பில் போட்டு அதுக்கு vat போட்டு வாங்கிருவான் மாநில அரசின் தேவையோ என்னா விற்பனை ஆகுதோ அதற்க்கு தான் வரி அவன்களுக்கு அதுநாலே இப்ப வரைக்கும் பிரச்சனை இல்லை

ஆனா கலால் வரி யால் என்னாகும் 11கிராம் விற்பனை என்று பில் அதற்க்கு 1% விதம் கலால் வரி கட்டினாலும் அவன் நமக்கு கொடுத்தது 10 கிராம் மீதி 1 கிராம் அவன்யிடம் தான் இருக்கு இப்பிடியே சேதாரத்தின் தங்கம் அவனிடம் சேர சேர அவன் வாங்கியதிற்க்கு விற்றதிற்க்கும் கடையில் இருக்கும் இருப்புக்கும் சேர்த்தா அவன் வாங்கியதை விட அதிகமாக இருக்கும் அப்போ அரசு அந்த கடையின் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க அரசுக்கு உரிமை உண்டு

அடுத்து தங்க கடத்தல் இது தான் இப்ப இவைங்களுக்கு பேர்யிடி
கருப்புபணம் உருவாக்குவதே இவைங்க தான் அதுக்கு உடைந்தயாக போவதும் இவைங்க தான் அதான் இப்ப இவைங்களுக்கு புலியை கரைக்கிறது

தங்கத்தை யாரும் கரைத்து குடித்து விட முடியாது அப்ப கடத்தி வர தங்கம் பிடிபட்டது போக பிடிபாடமல் வருது யார் கைக்கு வரும் இந்த மொடமுழூங்கி நகை கடைகாரர்யிடம் தான் வரும்
இவன் அதற்க்கு 10% இறக்குமதி வரி இல்லாமல் இந்த நகையை கொள்ளை லாபத்திற்க்கு விற்பான்

இப்போ மேற்கூறிய அதே பிரச்சனை தான் இந்த கலால் வரியால் ஓரு நகை கடை காரன் வாங்கியது எவ்வளோ விற்றது எவ்வளோன்னு இப்ப மத்திய அரசின் நேரடி கண் பார்வைக்கு வந்துவிடும் போது இவனால் கடத்தல் தங்கத்தையும் விற்க முடியாது சேதாரத்தில் மிஞ்சிய தங்கத்தையும் விற்க முடியாது

சேதார தங்கத்தை கூட அவன் வாடிக்கையாளர்களுக்கு தரும் நிலை வந்துவிடும் இப்போது நகை கடை காரண்களுக்கு சேதார நகையை விட கடத்தல் தங்கம் வாங்கினால் பிரச்சினை என்பதே அவனுக்கு மிகப்பெரிய அடி

இப்ப தெரியுதா ஏன் இவ்வளோ பெரிய போராட்டம் என்று. please pass as much as you can..............

ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுதுதாம்- இது போலதான் இருக்கு நகை வியாபாரிகளின் கடை மூடல்...

கலால் வரி ஒரு சதவீதம் விதித்ததால் தங்கம் விலை ஏறிடும் மக்கள் கஷ்டப் படுவாங்க என்பது நகைகடை அதிபர்கள் சொல்லும் காரணம் .

ஒரு லட்சம் ரூபாய்க்கு நகை வாங்கினால் ஆயிரம் ரூபாய் வரி செலுத்த வேண்டும். அதனால் மக்கள் பில் கேட்பார்கள்.துண்டு சீட்டு போட்டு காசு வாங்க முடியாது.

அப்படியானால் கலால் வரியினை கணக்கிட்டு அவர்களுக்கு வருமான வரி கட்ட வேண்டி வரும். அதனால்தான் இவர்கள் கூப்பாடு போடுகின்றனர். மத்தபடி மக்கள் கஷ்டம் காரணமில்லை.

மக்களை கஷ்ட படுத்தகூடாதுன்னா செய்கூலி,சேதாரம் 10%-14%போடுவதை விடுங்க..அப்படி சேதாரம் போட்டாலும் அந்த சேதாரமான தங்க துகள்களை பொட்டலம் போட்டு எங்க கிட்ட தந்துடுங்க..சேதாரமான தங்கத்தையும் வைத்து கொள்வார்களாம்.உங்க கிட்ட நாங்க ஏமாந்து தரும் சேதாரமான தங்கத்துக்கு பணமும் வாங்கிப்பீங்களாம்..
என்னங்கப்பா இது ?.

பத்து பவுன் வாங்கினா ஒன்றரை பவுனை சேதாரமா வாங்குற உங்களை விட மத்திய அரசு ஒன்றும் எங்களை வதைக்கவில்லை.

எங்க மேல அவ்வளவு அக்கறையின்னா நீங்களே அந்த ஒரு சதவீதத்தினை செலுத்துகிறோம்னு சொல்லுங்களேன்.

தங்க நகை ஆசாரியை முதலில் கஷ்டம் இல்லாம நல்லா வாழ வையுங்க.

மக்களே கலால் வரி செலுத்திய சீட்டை கேட்டு வாங்குங்கள்..

இவர்கள் தரும் சிறு தள்ளுபடிக்காக துண்டு சீட்டுக்கு பணம் கொடுக்காதீர்கள்.இவர்களுக்கு கிடுக்கி பிடி போடும் இந்த கலால் வரி ...அதனால் தான் இத்தனை நாள் கடையடைப்பை நடத்துகின்றனர்.

திரும்ப முதல் வரியை படிங்க...

சனி, 12 மார்ச், 2016

ரகசிய கேமராவை தெரிந்து கொள்ள.....


பயண நிமித்தமாக வெளியூர் விடுதிகளில் தங்க நேரிடும்போது அறையினுள் ஊசிமுனை அளவேயுள்ள கண்ணுக்குப்புலப்படாத ரகசிய கேமராக்கள் பொருந்தியுள்ளதை எளிதாக கண்டறியலாம்....

முதலில் வெளிச்சம் வராமல் அறைக்கதவு, சன்னல்களை அடைத்துவிட்டு உங்கள் மொபைலில் உள்ள கேமராவை ஆன் செய்யுங்கள், மேலும் மொபைலில் புகைப்படம் எடுக்கும்போது வரும் பிளாஷ் வெளிச்சத்தை ஆப் செய்துவிட்டு அறையில்லுள்ள சுவர் மற்றும்
பொருட்களை புகைப்படம் எடுங்கள்....

இப்போது புகைப்படத்தை கவனியுங்கள்.... ஊசிமுனை அளவேயுள்ள ரகசிய கேமரா அறையினுள் பொருத்தப்பட்டிருப்பின் அது இருட்டுப்புகைப்படத்தில் சிகப்பு நிற புள்ளிகளாகத் தெரியும்....



இதைவைத்து அறையினுள் இரகசிய கேமராக்கள் பொருந்தியுள்ளதை அறியலாம்..

கொடூர நோய்களை பரப்பும் வாழைப்பழம்


ஓர் அதிர்ச்சி தகவல்.

முன்பெல்லாம் டாக்டர்கள் தினமும் ஓரு வாழைப்பழமாவது சாப்பிடுங்கள், உடம்புக்கு ரொம்ப நல்லது என்பார்கள்.

ஆனால் தற்போது மரபணு மாற்று பெரிய மஞ்சள் வாழைபழத்தை சாப்பிடவே வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள்.

இந்த மஞ்சள் வாழை பழம் பார்பதற்க்கு பச்சை வாழைபழம்
போன்றே சிறிது நீண்டு காணப்படும்,

நிறம் மட்டும் மஞ்சள் நிறமாக இருக்கும் காரணம் தற்போது சென்னை வாசிகள் பெரும்பாலோர் உடலில் – தொண்டையில் அலர்ஜி, சைனஸ், தும்மல், வயிற்றுக் கோளாறு, வயிற்றுவலி, சிறுநீரக கற்கள், அடிக்கடி தலைவலி, புட் பாய்சன், என்று கடுமையாக அவதிப்படுகிறார்கள்.
இவர்களை நோயாளிகளாக மாற்றியது இந்த மரபணு மாற்று
மஞ்சள் வாழைப்பழங்கள் தான்.

இயற்கையான வாழைப்பழம் பழுத்தால் இரண்டொரு நாளில் அழுகிவிடும்.
இயற்கையான மஞ்சள், பச்சை வாடன், ரஸ்தாளி, மலைபழம், தேன்கதளி, நாட்டுப்பழம், நாட்டுச்சக்கைப்பழம், கற்பூர வள்ளி, ஏலக்கி ஆகிய வாழைப் பழங்கள் மணமாகவும், நல்ல ருசியாகவும் இருக்கும்.

இந்த பழங்கள் உடம்புக்கு சத்தாகவும், மற்ற உணவை செரிமானமாக்கவும் பயன்படும்.

மலச்சிக்கலால் பாதிக்கப்படுவோரும் தினமும் இரவில்
வாழைப்பழம் சாப்பிடு வார்கள்.

பொதுவாக இயற்கையான வாழை ரகங்களில் நோய் தொற்று ஏற்படும்.
இவற்றை பூச்சுக் கொல்லிகளை பயன்படுத்தி நோயை கட்டுப்படுத்த வேண்டும். இந்த ரகங்களை பழுத்த உடன் நாம் சாப்பிடுவது வழக்கம்.


பூச்சிக்கொல்லிகளை அழிப்பதற்கு பதிலாக பூச்சிகளை கொல்லும் விஷச்சத்தை வாழைமரத்தின் மரபணுவில் செலுத்தி அமெரிக்க விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர்.

இதைத் தான் நாம் பி. டி.வாழை என்று அழைக்கிறோம்.
கேவின் டிஷ் என்ற பெயருடன் இந்த மரபணு மாற்று

வாழைப்பழம் நம்மூரில் கள்ளத்தனமாக விற்கப்படுகிறது.
இப்பழங்களில் விஷத்தன்மை மிக அதிகமாக இருப்பதால் அமெரிக்காவில் இந்த வாழைப்பழம் பயிரிடவோ விற்கவோ அனுமதிக்கப்படவில்லை
ஏழ்மையிலும் பசிபட்டினியிலும் வாடும் ஆப்பிரிக்க நாடு உகாண்டா.
இங்குதான் முதன் முதலில் 2007 -ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உகாண்டா அதிபரை மிரட்டி அந்நாட்டின் பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வர செய்து பி.டி. வாழை எனப்படும் கேவின் டிஷ் வாழைப்பழத்தை முதன் முதலில் பயிரிட செய்தார்.

நோய்களை பரப்பும்:

உகாண்டாவில் பயிரிடுவதற்கு முன்பாகவே இந்தியாவில் சர்வதேச கம்பெனிகள் இந்திய நிறுவனங்களின் துணையுடன் கள்ளத்தனமாக இவ்வகை மரபணு மாற்று பி.டி. கேவின்டிஷ் வாழைப் பழத்தை பயிரிடவும் விற்பனை செய்யவும் ஆரம்பித்து விட்டனர்.

இந்த கேவின்டிஷ் மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழம் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் விற்கப்படுகிறது.

முதலில் சென்னையில் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையத்தில் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரில் இந்த பி.டி. வாழைப்பழம் விற்கப்பட்டது.
மக்களுக்கோ, வியாபாரிகளுக்கோ இதன் கொடூரத்தன்மை பற்றி எதுவும் தெரியாததால் சென்னை முழுவதும் இந்த வாழைப்பழ விற்பனை விரிவு படுத்தப்பட்டது.

மாதக்கணக்கில் வைத்திருந்து விற்றாலும் கெட்டுபோகாது என்ற ஆசை வார்த்தை கூறி வியாபாரிகள் இந்த மரபணுமாற்று கேவின் டிஷ் வாழைப்பழத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

இதனால் சென்னையில் முக்கிய கம்பெனிகளின் சூப்பர் மார்க்கெட்டுகளில் வாழைப்பழம் மட்டுமே விற்கும் நிலை உள்ளது.
மதுரை, சேலம், கோவை, நெல்லை போன்ற நகரங்களில்
இந்த பி.டி. மரபணு மாற்று வாழைப்பழம் அறிமுகப்படுத்தப்பட்டாலும் இதற்குபோதிய வரவேற்பு இல்லை.

இந்த மரபணு மாற்று வாழைப்பழம் இயற்கை வாழைப்பழம் போல் ருசியாக இருக்காது.

இதனால் மற்ற நகரங்களில் இதனை யாரும் வாங்கவில்லை.

எனவே சென்னையில் அறிவிக்கப்படாத தடைபோல வேறு இயற்கையான வாழைப்பழமே விற்காத வண்ணம், சர்வதேச நிறுவனங்கள் கேவின்டிஷ் வாழைப்பழம் மட்டுமே விற்கும் வண்ணம் ரகசியமாக சதி செய்துவிட்டன.

இதற்கு கார்ப்பரேட் கம்பெனிகள் பெரிதும் உதவியாக உள்ளன.
பி.டி. கத்தரிக்காய்க்கே இன்னும் இந்திய அரசு முழுமையான அனுமதி வழங்கவில்லை.

பி.டி.ரக மரபணு காய்கறி, பழங்கள், உயிரை மெல்லமெல்ல கொல்லும் விஷமாகும். ஒருமுறை மட்டும் காய்த்து கனியாகும்.

செயற்கையாக மலட்டுத்தன்மை ஆக்கப்பட்ட மரபணு மாற்று காய்கறி பழங்களை தொடர்ந்து சாப்பிட்டால் மலட்டுத்தன்மை ஏற்படுவதோ டு, கேன்சர், செரிமான கோளாறு, தோல்நோய், சிறு நீரக நோய்கள், அலர்ஜி போன்றவை உண்டாகும்.

இந்நிலையில் இந்திய அரசிடமோ, விவசாயத்துறையிடமோ, பல்கலை கழகங்கள், ஆராய்ச்சி சாலைகளிலோ எந்தவித அனுமதியும் பெறாமல் கேவின்டிஷ் மஞ்சள் வாழைப்பழம் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரால் விற்பனை செய்யப்படுகிறது.

எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது?

பெங்களூர் வாழைப்பழம் என்று விற்பனை செய்யப்படும் மரபணு மாற்று பி.டி. ரக மஞ்சள் வாழைப்பழம் காட்டு கொட்டை வாழையில், மீன் சோளம், காட்டுமொச்சை இவற்றின் மரபணுவை புகுத்தி கண்டு பிடிக்கப்பட்டதாகும்.
இயற்கையான வாழை ரகங்கள் வாழையடி வாழையாக வாழை மரத்தின் கிழங்கிலிருந்து செடி வளரும்.

அதனை பிரித்து நட்டாலே புதிய வாழையை பயிர் செய்ய முடியும்.
ஆனால் பி.டி. ரக கேவின்டிஷ் வாழை ஒரு முறை மட்டுமே காய்க்கும் வண்ணம் மரபணுவில் மாற்றம் செய்யப்பட்டு செயற்கையாக மலடாக்கப்பட்ட தாகும். எனவே விவசாயிகள் தாமாகவே மறுதடவை பயிர் செய்ய முடியாது.

திசுவளர்ப்பு முறையில் செடி வாழை சர்வதேச கம்பெனிகளின் ஏஜெண்டுகளால் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு பயிரிட வழங்கப்படுகிறது.

இவ்வகை பி.டி. ரக மரபணு மாற்று வாழையை தொடர்ந்து தோட்டத்தில் பயிர் செய்தால் அந்த நிலத்தில் உள்ள நன்மை செய்யும் புழு, பூச்சிகள், பாக்டீரியாக்கள் மொத்தமாக அழிக்கப்பட்டு அந்த நிலம் எந்த பயிரும் வைக்க முடியாத பாலைவனமாக மாறிவிடும்.

அதனை உண்ணும் மனித குலமும் பல நோய்களுக்கு ஆளாக நேரிடும்.

வியாழன், 10 மார்ச், 2016

வெள்ளை சீனி | சக்கரையால் உடல்நலக்கேடு


உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகு...ம். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்?
இனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை; சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்.

இந்த வெள்ளை சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள்.

குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயான‌ப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம்.

1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.

2. பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.

3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.

4. 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.

5. அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.

6. சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது.
-->
7. மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு சீனியாக வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது.

8. இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.

தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.

குடலில் மட்டுமல்ல, பல் வலி, பல் சூத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சீனி வியாதி, இரத்த அழுத்தம் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது.

ஆலைகளில் தயாரான வெள்ளை சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.

செவ்வாய், 8 மார்ச், 2016

தொழிநுட்ப வளர்ச்சியில் பெண்களின் பங்கு - மார்ச் 8 உலக மகளிர் தின சிறப்பு பதிவு.

இன்று மார்ச் 8 ஆம் திகதி. அதாவது இன்றைய தினம் சர்வதேச பெண்கள் தினமாக அங்கீகரிக்கப்பட்ட தினம். ஆகவே இன்று எமது தளத்தின் சார்பில் பெண்களை பெருமைப்படுத்தும் விதமாக இன்றைய நவீன உலகில் நாம் உபயோகிக்கும் தொழிநுட்ப பயன்பாடுகளில் பெண்களின் பங்கு எந்த அளவுக்கு செல்வாக்கு செலுத்துகிறது என்று பார்ப்போம்.

அந்த வகையில் பெண்களால் கண்டுபிடிக்கப்பட்ட அல்லது பெண்களால் முதல் வித்திடப்பட்ட தொழிநுட்ப கண்டுபிடிப்புக்களை கீழே பட்டியலிடுகிறேன்.

உலகின் முதல் DNA தொழிநுட்பம்

மருத்துவத்துறையில் இன்று பெரிய அளவில் செல்வாக்கு செலுத்தி கொண்டு இருக்கும் DNA எனப்படும் மரபணு தொழினுட்பத்தை முதலில் கண்டுபிடித்தவர் Rosalind Franklin என்று அழைக்கப்படும் ஒரு பெண். இவர் இதை 1950 ஆம் ஆண்டுகளில் உலகிற்கு முதன் முதலாக அறிமுகப்படுத்தினார்.

சோலார் வீடுகள்

இன்று உலகில் காணப்படும் அனைத்து விதமான சோலார் வீடுகளுக்கும் முதல் வித்திட்டவர் Maria Telke எனப்படும் ஒரு பெண் ஆவார்.

பெக்ஸ், காலர் ID மற்றும் கால் வைடிங் தொழினுட்பத்தின் பின் ஒரு பெண்

Shirley Jackson என்று அழைக்கப்படும் பெண் ஒருவரே இன்று நாம் பயன்படுத்தும் பெக்ஸ், காலர் ID மற்றும் கால் வைடிங் போன்ற தொளினுட்பங்களுக்கு முதல் வித்திட்டவர். தொலைதொடர்பு துறையில் தனது ஆராய்ச்சிகளை ஆரம்பித்த இவர் குறிப்பிட்ட ஒரு ஆராய்ச்சின் மூலம் மேற்குறிப்பிட்ட தொழினுட்பங்கள் உலகிற்கு அறிமுகமாக காரனமாகினார்.

உலகின் முதாலவது கணணி மொழியை (Coding) அறிமுகப்படுத்தியவர் ஒரு பெண்.

1950 ஆம் ஆண்டுகளில் Admiral Grace Hopper என்று அழைக்கப்படும் பெண் ஒருவராலேயே உலகின் முதலாவது கணணி மொழி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆங்கில கமான்ட்-களை கணணி மொழியாக மாற்றும் இவரது முயற்சி, உலகின் முதலாவது கணணி மொழியாக ஏற்றுக்கொள்ள பட்டது.
கணணிமயமாக்கப்பட்ட தொலைபேசி முறை

Erna Schneider Hoover எனப்படும் அமெரிக்க பெண் ஒருவராலேயே உலகின் முதலாவது கணணி மயமாக்கப்பட்ட தொலைபேசி அழைப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

CCTV தொழிநுட்பத்திற்கு முதல் வித்திட்டவர் ஒரு பெண்.

1969 ஆம் ஆண்டுகளின் Marie Van Brittan Brown என்ற அமெரிக்க பெண் ஒருவர் தனது கணவருடன் இணைந்து தனது வீட்டு நடவடிக்கைளை கண்காணிக்க உருவாக்கிய கேமரா சிஸ்டம் தான் பின்நாட்களில் CCTV தொழிநுட்பம் உருவாக காரணமாக அமைந்தது.

பரிந்துரைக்கப்படும் பதிவு
பெண்களின் ஸ்மார்ட் போனில் கட்டாயமாக இருக்க வேண்டிய பாதுகாப்பு செயலிகள்.

வைபை ப்ளூடூத் தொழினுட்பங்களுக்கு முதல் வித்திட்டவர் ஒரு பெண்

Hedy Lamarr எனப்படும் பிரபல சினிமா நடிகை கண்டுபிடித்த “spread spectrum” மற்றும் “frequency hopping” எனப்படும் இரண்டு தொழினுட்பங்கலுமே இன்று நாம் உபயோகிக்கும் வைபை மற்றும் ப்ளூடூத் தொழினுட்பங்களுக்கு முதல் வித்திட்டது.

SHARE THIS

Popular Posts

Facebook

Blog Archive