பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

திங்கள், 11 ஜூன், 2018

!"!💖💖பகவத்கீதை💖💖!"!

!"!💖💖பகவத்கீதை💖💖!"!

1. அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது.

அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது.

அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.

2. கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

3. ந‌ம்மு‌ட‌ன் வா‌ழ்வோரை‌ப் பு‌ரி‌ந்து கொ‌ள்வத‌ற்கு ந‌ம்மை முத‌லி‌ல் பு‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

4. ந‌ம்‌பி‌க்கை குறையு‌ம் போது ஒ‌வ்வொரு ம‌னிதனு‌ம் நெ‌றிய‌ற்ற கொ‌ள்கையை மே‌ற்கொ‌ள்‌கிறா‌ன்.

5. சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான்.

சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.

6. ம‌கி‌ழ்‌ச்‌சி எ‌ன்ற உண‌ர்‌ச்‌சி ம‌ட்டு‌ம் இ‌ல்லா‌வி‌ட்டா‌ல் வா‌ழ்‌க்கை எ‌ன்பது சும‌க்க முடியாத பெ‌ரிய சுமையா‌கி‌யிரு‌க்கு‌ம்.

7. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி.

இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை.

தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.

8. சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல.

அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.

9. எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.

10. அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல; விடாமுயற்சியினால் தான்.

11. முன்நோக்கி செல்லும் போது கனிவாயிரு.

ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்.

12. ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும்,
துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.

13. எல்லோரையும் நம்புவது அபாயகரமானது.

ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.

14. எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன.

ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.

15. எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறு யாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்.

16. ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை.

முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

17. செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது.

18. சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தைவிட,

என்றும் சண்டையே இல்லாத சமாதானம்தான் வேண்டும்.

19. நேற்றைய பொழுதும் நிஜமில்லை;

நாளைய பொழுதும் நிச்சயமில்லை;

இன்றைக்கு மட்டுமே நம் கையில்.

20. மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல.

21. பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.

22. வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி, அழகான பசி.

ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.

23. நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்குக் கிடைக்காம‌ல் போக‌லாம்.

ஆனால் உங்க‌ளுக்குத் த‌குதியான‌து உங்க‌ளுக்குக் க‌ண்டிப்பாக‌க் கிடைத்தே தீரும்.

24. அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து.

அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.

25. தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி _எந்த_ செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது.

சனி, 9 ஜூன், 2018

அடைகோழிகளை நோய்களிடமிருந்து பாதுகாக்க இதை செய்து பாருங்கள் !!


அடைக்காக்கும் கோழி மற்றும் இளம் குஞ்சுகள் பராமரிப்பு !!

 நாட்டுக்கோழிகள் பொதுவாக 10 முட்டைகள் முதல் 20 முட்டைகள் வரை இடும். அந்த நாட்டுக்கோழிகள் அடைக்காக்கும் பொழுதும், குஞ்சு பொரிக்கும் பொழுதும் பராமரிக்க வேண்டிய செயல்முறைகள் பற்றி பார்ப்போம்.

அடைக்காக்கும் கோழி பராமரிப்பு :

 சித்திரை மாதம் மற்றும் மார்கழி மாதத்தில் அடை வைப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதிக வெப்பம் மற்றும் அதிக குளிரால் முகத்தில் அம்மை நோய் தாக்கி சிறு குஞ்சுகள் இறக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.

 நாட்டுக்கோழிகள் பிறந்த 150 நாட்களில் முட்டை இட ஆரம்பிக்கும். முதன்முதலாக அடைக்காக்கும் கோழிகளை தவிர்த்து 2 அல்லது 3-வது முறையாக அடைக்கு வரும் கோழிகளை பயன்படுத்தலாம். ஏனெனில் முதல்முறையாக அடைக்காக்கும் போது பல கோழிகளுக்கு முட்டைகள் மீது சரியாக உட்கார தெரியாது.

 ஒரு அடைக்கு 12 முட்டைகளுக்கு மேல் வைக்கக்கூடாது. ஏனெனில் வெப்பம் சீராக இல்லாமல் குஞ்சு பொரிக்கும் திறன் குறைய வாய்ப்பு அதிகம் உண்டு.

 அடை வைக்கும் முட்டைகளை காய்ந்த வைக்கோல் அல்லது உமி போன்றவற்றின் மீது வைப்பதை விட, இலேசான ஈர மணல் மீது வைப்பதால் பொரிக்கும் தன்மை அதிகரித்து, பேன் போன்ற ஒட்டுண்ணிகள் தாக்காமல் இருக்கும்.

 அடையில் உட்காரும் கோழி தான் விரும்பிய பொழுது எழுந்து வெளியில் சென்று வருமாறு இருக்க வேண்டும். மூடி வைக்கும் நிலையில் இருக்குமானால், அதை 1 நாட்களுக்கு ஒரு முறை திறந்துவிட வேண்டும்.

 அடையில் இருந்து வெளியே வந்த கோழிகள் உடனடியாக குடிக்கும் வகையில் தண்ணீரை தயாராக ஒரு பாத்திரத்தில் வைக்க வேண்டும்.

 காய்ந்த மிளகாய்கள் இரண்டினை முட்டைகள் அருகில் வைப்பதன் மூலம் ஒட்டுண்ணிகள் கோழிகளை தாக்காது.

 21-வது நாள் குஞ்சுகள் அனைத்தும் பொரித்து விடும். 21 நாட்களில் முட்டைகள் அனைத்தும் பொரிக்கவில்லை எனில், அதே கோழியை மறுபடியும் வேறு முட்டைகள் மீது உட்கார வைக்ககூடாது.

 ஏனெனில் அடைக்காக்கும் கோழிகள் சரியாக உண்ணாது. எனவே தொடர்ந்து முட்டைகள் மீது உட்கார வைப்பதால் நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு கோழி இறக்க வாய்ப்பு உள்ளது.

 கோழிகள் அடையில் இருக்கும் போது பெரும்பாலும் நோய்கள் அவற்றை தாக்காது. ஏனெனில் எந்த நோய்களும் முதலில் வலுவான கோழிகளை மட்டுமே தாக்கும்.

இளம்குஞ்சுகள் பராமரிப்பு :

 பொரித்த குஞ்சுகளுக்கு தண்ணீரில் குளுக்கோஸ் கலந்து வைக்கலாம். கம்பு போன்ற சிறு தானியங்களை உணவாக தர வேண்டும்.

 நாட்டு கோழி குஞ்சுகள் நோய் எதிர்ப்புச் சக்தியை பெற்றிருந்தாலும் கண்டிப்பாக தடுப்பு+சி கொடுக்க வேண்டும்.

 குஞ்சுகள் பொரித்த பதினைந்தாவது நாள் ராணிக்கட் அதாவது, வெள்ளை கழிச்சல் தடுப்பு+சி போன்றவை போடுவதன் மூலம் குஞ்சுகள் இறப்பதை முற்றிலும் தவிர்க்க முடியும்.

 குஞ்சு பிறந்த இருபது நாட்கள் கழித்து குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். பிறகு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்

 பிறந்த குஞ்சுகளுக்கு சிறிது வேப்பிலை, துளசி, தும்பை இலை மற்றும் சிறிது பிரண்டையை சேர்த்து அரைத்து, அரைலிட்டர் தண்ணீரில் கலந்து, அதை இரண்டு நாட்கள் ஒரு முறை கொடுப்பதன் மூலம் பல வியாதிகளை தடுக்கலாம். இது குடற்புழு நீக்க மருந்தாகவும் பயன்படுகிறது.

 இளம் குஞ்சுகளுக்கு மீன் அமிலம் தண்ணீரில் கலந்து கொடுப்பதன் மூலம் வேகமான வளர்ச்சி கிடைக்கும்.

 அதேபோன்று கரையான்களை இளம் குஞ்சுகள் சாப்பிடுவதால், விரைவில் இறக்கை முளைத்து அதிவேக வளர்ச்சிபெறும்.
இதுபோன்ற மேலும் பயனுள்ள விவசாயத் தகவல்களை இலவசமாக பெற கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்யுங்கள்! 

https://goo.gl/9AZRL7 

விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள், ஆர்வம் இருந்தும் விவசாயம் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள் அனைவரும் விவசாயத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!

நோய்கள் உருவாகும் இடங்கள் ! நோய்கள் குணமாகும் இடங்கள் !

நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ, நீரோ, காற்றோ கிடையாது.
இதோ..
1 - இரசாயன வேளாண்மையில் விளைந்த உணவுப்பொருட்கள்
2 - டீ
3 - காபி
4 - வெள்ளை சர்க்கரை
5 - வெள்ளை சர்க்கரையில் செய்த இனிப்பு.
6 - பாக்கெட் பால்.
7 - பாக்கெட் தயிர்
8 - பாட்டில் நெய்
9 - சீமை மாட்டு பால்
10 - சீமை மாட்டு பால் பொருட்கள்.
11 - பொடி உப்பு
12 - ஐயோடின் உப்பு
13 - அனைத்து ரீபையின்டு ஆயில்
14 - பிராய்லர் கோழி
15 - பிராய்லர் கோழி முட்டை
16 - பட்டை தீட்டிய அரிசி
17 - குக்கர் சோறு
18 - பில்டர் தண்ணீர்
19 - கொதிக்க வைத்த தண்ணீர்
20 - மினரல் வாட்டர்
21 - RO தண்ணீர்
22 - சமையலுக்கு அலுமினிய பாத்திரங்கள்
23 - Non Stick பாத்திரங்கள்
24 - மைக்ரோ ஓவன் அடுப்பு
25 - மின் அடுப்பு
26 - சத்துபானம் என்னும் சாக்கடைகள்
27 - சோப்பு
28 - ஷாம்பு
29 - பற்பசை
30 - Foam படுக்கை மற்றும் இருக்கை
31 - குளிர்பானங்கள்
32 - ஜஸ் கீரீம்கள்
33 - அனைத்து மைதா பொருட்கள்
34 - பேக்கரி பொருட்கள்
35 - சாக்லேட்
36 - Branded மசாலா பொருட்கள்
37 - இரசாயன கொசு விரட்டி
38 - Ac
39 - காற்றோட்டம், வெளிச்சம் இல்லா வீடு.
40 - பிஸ்கட்டுகள்
41 - பன்னாட்டு சிப்ஸ்
42 - புகைப்பழக்கம்
43 - மதுப்பழக்கம்
44 - சுடு நீரில் குளிப்பது
45 - தலைக்கு டை
46 - துரித உணவுகள்
47 - குளிர்பெட்டியில் வைத்த அனைத்து உணவுப்பொருட்கள்
48 - சுவை ஏற்றப்பட்ட பாக்கு மற்றும் புகையிலை பொருட்கள்.
49 - ஆங்கில மருந்துகள்
50 - அலோபதி வைத்திய முறை மற்றும் தடுப்பூசிகள்
51 - உடல் உழைப்பு இல்லாமை
52 - பசிக்காமல் உண்பது
53 - அவசரமாக உண்பது
54 - மெல்லாமல் உண்பது
55 - இடையில் தண்ணீர் குடிப்பது
56 - எண்ணை நீக்கப்பட்ட மிளகு சீரகம் போன்ற நறுமண பொருட்கள்.
57 - 6 மணி நேரத்திற்கு மேல் ஆன மாமிசம்
58 - அறியாமை
59 - சுற்றுச்சூழல் மாசுபாடு
60 - அனைத்திற்கும் மேலாக உங்கள் மனம்
அரசு சொல்வது போல் நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ கிடையாது
மேலே குறிப்பிட்ட தவறான உணவு மற்றும் வாழ்க்கைமுறையில் தான் நோய்கள் உருவாகிறது.

உயிர் பிழைக்க ஒரே வழி
இயற்கைக்கு திரும்புவது மட்டுமே.
குணமாகும் இடங்கள் !
---------------------------------------------
நோய்கள் குணமாகும் இடங்கள் மருந்தோ மருத்துவமனையோ கிடையாது.
இதோ
1 - இயற்கை வழி வேளாண்மையில் விளைந்த உணவுப்பொருட்கள்.
2 - மூலிகை தேனீர்
3 - சுக்கு மல்லி காபி
4 - பனங்கருப்பட்டி
5 - பனங்கற்கண்டு
6 - வெல்லம்
7 - கரும்பு சர்க்கரை
8 - இதில் செய்த இனிப்புகள்
9 - நாட்டு பசும் பால்
10 - நாட்டு பசு தயிர்
11 - நாட்டு பசு நெய்
12 - நாட்டு பசும்பால் பொருட்கள்
13 - இந்துப்பு
14 - கல் உப்பு
15 - மரச்செக்கில் ஆட்டிய எண்ணெய்கள்
16 - நாட்டு கோழி
17 - நாட்டு கோழி முட்டை
18 - பட்டை தீட்டப்படாத அரிசி
19 - வடித்த சோறு
20 - மண் பானையில் ஊற்றி வைத்த நீர்
21 - பச்சை தண்ணீர்
22 - மூன்றடுக்கு சுத்திகரிப்பு மண் பானை நீர்
23 - மழை நீர்
24 - சமையலுக்கு மண் பாண்டங்கள்
25 - இரும்பு பாத்திரங்கள்
26 - விறகு அடுப்பு
27 - பயோ கேஸ் அடுப்பு
28 - சத்துமாவு கலவை
29 - குளியல் பொடி
30 - சிகைக்காய் பொடி
31 - இயற்கை பற்பொடி
32 - இலவம் பஞ்சு படுக்கை மற்றும் இருக்கை
33 - கோரைப்பாய்
34 - பழச்சாறுகள்
35 - நாட்டுபசும்பால் பழ ஐஸ்கிரீம்கள்
36 - சிறுதானியம், அரிசி தின்பண்டங்கள்
37 - கருப்பட்டியில் செய்த சாக்லேட்
38 - வீட்டில் அரைத்த மசாலா பொருட்கள்
39 - இயற்கை கொசு விரட்டி
40 - வீட்டில் மரம், செடி, கொடிகள்
41 - காற்றோட்டம், வெளிச்சம் உள்ள வீடு
42 - நம் நாட்டு சிப்ஸ்கள்
43 - பனங்கல், பதநீர், தென்னங்கல், இளநீர்
44 - குளிர்ந்த நீரில் குளிப்பது
45 - இயற்கை ஹேர் டை
46 - நம் நாட்டு சிற்றுண்டிகள்
47 - மண் பானை குளிரூட்டி
48 - பச்சை கொட்டை பாக்கு
49 - மரபு மருத்துவங்கள்
50 - உடல் உழைப்பு
51 - பசித்து உண்பது
52 - மெதுவாக சுவைத்து உண்பது
53 - மென்று உமிழ்நீர் கலந்து உண்பது
54 - ஆழ்ந்த நிம்மதியான உறக்கம்
55 - இடையில் தண்ணீர் குடிக்காமல் இருப்பது
56 - எண்ணெய் நீக்கப்படாத நறுமணப்பொருட்கள்
57 - உயிர்பிரிந்து 6 மணி நேரத்திற்குள் சமைத்து சாப்பிட்ட மாமிசம்
58 - புத்திகூர்மை
59 - சுற்றுச்சூழல் தூய்மை
60 - அனைத்திற்கும் மேலாக உங்கள் மன அமைதி
நோய்கள் குணமாகும் இடங்கள் மருந்தோ மருத்துவமனையோ கிடையாது
*உங்களின் உணவுமுறைகளும் வாழ்க்கை முறைகளுமே என்பதுதான் நிதர்சனமான உண்மை
அம்மியில் அரைத்த சட்னி ருசி அதிகம்
   - மிக்ஸி வந்தது;
ஆட்டு உரல் மாவு இட்லி ருசி அதிகம்
   - கிரைண்டர் வந்தது;
உலையில் வைத்த சாதம் ருசி அதிகம்
   - குக்கர் வந்தது;
விறகு அடுப்பு சமையல் ருசி அதிகம்
   - கேஸ் அடுப்பு வந்தது;
வீட்டில் செய்த மசாலா ருசி அதிகம்
   - மசாலா பொடி வந்தது;
பானையில் ஊற்றி வைத்த நீர் ருசி அதிகம்
   - பிரிட்ஜ் வந்தது;
மண்ணில் விளையாட்டு மகிழ்ச்சி அதிகம்
   - வீடியோ கேம் வந்தது;
பாட்டி சொன்ன கதையில் உயிர் இருந்தது
     இயற்கையை நம்பியிருந்தால் இன்பமாய் வாழ்ந்திருப்போம்;
     இயந்திரங்களை நம்பியதால் இயந்திரமாகவே வாழ்கிறோம்..

               முடிந்தவரை இயற்கையை சார்ந்து வாழ்வோம்..

மொத்தத்தில் இயற்கை போய் செயற்கை வந்தது;
    - டி.வி. வந்தது;
1. சர்க்கரை நோய் வந்தது
2.:இரத்தகொதிப்பு வந்தது
3. புற்றுநோய் வந்தது
4. மாரடைப்பு வந்தது
5. ஆஸ்த்துமா வந்தது
6. கொழுப்பு வந்தது
7. அல்சர் வந்தது
ஓட்டுக்கு 2000 ரூபாய்? வீட்டுக்கு வந்தது.                          
கெட்டவர்களின் ஆட்சி நாட்டுக்கு வந்தது .                                                        
இவ்வுளவு வந்தும் நமக்கு புத்தி வந்ததா???
படித்து பகிர வேண்டிய தகவல்.....

வெள்ளி, 8 ஜூன், 2018

✍ *மரமும்* *மனிதனும்* 🌴🌴🌴🌴🌴🌴🌴பலா மரம்

✍ *மரமும்* *மனிதனும்* 🌴🌴🌴🌴🌴🌴🌴பலா மரம்

பலா (Atrocarpus heterophyllus) பூமத்தியரேகைப் பகுதிகளில் அதிகமாகக் காணப்படும் பலா இனத்தைச் சேர்ந்த மரம். மரத்தில் விளையும் பழங்களிலேயே பெரிய பழம் பலாப்பழமாகும். சில இடங்களில் மட்டுமே இது முறையான விவசாய முறைகளின் படி முழுமையான தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. பெரும்பாலும் மற்ற பழத்தோட்டங்களில் துணைப்பயிராகவோ அல்லது வீட்டுத்தோட்டங்களிலோ வளர்க்கப்படுகிறது. விந்தையாக, உலகின் சில இடங்களில் ‘பழங்களின் அரசன்’ என்று போற்றப்படும் பலா சில இடங்களில் பயன்படுத்தப்படாமல் குப்பையில் வீசப்படுகிறது. பலா எங்கு தோன்றியது என்பது பற்றி சரியான குறிப்புகள் ஏதுமில்லை. எனினும், அது இந்தியாவின் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் தோன்றியிருக்கலாம் என நம்பப்படுகிறது. பலா மரம், இந்தியா, பர்மா, இலங்கை, சீனா, மலேசியா, பிலிப்பைன்ஸ், பிரேசில், கென்யா ஆகிய நாடுகளில் பெரும்பாலாக வளர்கிறது.

தென்னிந்தியாவில், மாம்பழம் மற்றும் வாழைப்பழத்துக்கு அடுத்ததாக அதிகம் பயன்படுத்தப்படுவது பலா ஆகும். இந்தியாவில், 2000ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, சுமார் 14,286 ஏக்கர் பரப்பளவில் (சுமார் 1,00,000 மரங்கள்) பலா வளர்க்கப்படலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பாலும் வீட்டுத்தோட்டங்களிலும், வெற்றிலை, காப்பி, மிளகு, ஏலக்காய் தோட்டங்களில் நிழலுக்காகவும் பலா வளர்க்கப்படுகிறது. இலங்கையில், முக்கியமாக மரத்திற்காகவும், தாய்லாந்தில் பழத்திற்காகவும் வளர்க்கப்படுகிறது. பலா சாதாரணமாக விதை மூலமே வளர்க்கப்படுகிறது. நீரிலோ, 10% ஜிப்பரெலிக் அமில கரைசலிலோ ஊர வைப்பதன் மூலம் விதைகள் விரைவாக முளைக்கும். விதைகளை நிலத்தில் நேரடியாக நடாமல், நாற்றங்காலிலும் நடலாம். ஆனால், நாற்றுகளை விரைவில் நடாவிட்டால் அவை நாற்றங்காலிலேயே வேர் பிடித்து விடும். பலவிதமான ஒட்டு முறைகளில் பலாச்செடிகள் உருவாக்கப்பட்டாலும், அவை விதைசெடிகள் அளவு பிரபலமடையவில்லை. எனினும், காற்றில் வேர் பிடிக்கச்செய்தல், சிறு தண்டுகளை வேர் பிடிக்கச்செய்தல் ஆகிய முறைகள் மூலம் பலாச்செடிகள் உருவாக்கப்படுகின்றன. திசு வளர்ப்பு முறையிலும் பலாச்செடிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

மருத்துவப் பயன்கள் :

 இதிலுள்ள பொட்டாசியம் சத்து, குறைந்த மற்றும் உயர் ரத்த அழுத்தத்தைச் சீராக வைக்கிறது. இதன்மூலம் மாரடைப்பு நோய் வராமல் தவிர்க்கப்படுகிறது. கொழுப்புச்சத்து இல்லை என்பதால், இதய நோயாளிகளும் சாப்பிடலாம். இதிலுள்ள இரும்புச்சத்து ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, ரத்தக்குறைபாடு வராமல் தடுக்கிறது.

 வைட்டமின் ‘சி’ அதிகமாக உள்ளதால், பலா மிகச்சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகவும் செயலாற்றுகிறது. வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களால் நோய்த்தொற்று உண்டாகாமல் தடுக்கிறது. வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, நோய்எதிர்ப்பு சக்தியைக் கூட்டுகிறது.

பலாவில் உள்ள லிக்னன்ஸ், ஆர்கானிக் கூட்டுத்தொகுப்பான ஐசோஃப்ளேவன்ஸ், சபானின் ஆகியவை புற்று நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது. தவிர, உடல் முதிர்ச்சி ஏற்படாமல் இளமையாகத் தோன்றவும் உதவுகிறது.

செரிமானக்கோளாறு மற்றும் வயிற்றுப்புண்ணை குணப்படுத்துவதில் பலா நன்கு செயலாற்றுகிறது. இதில் உள்ள அதிகளவிலான நார்ச்சத்து, மலச்சிக்கல் உண்டாகாமல் தடுத்து, மலம் இலகுவாக வெளியேறவும் உதவுகிறது. பெருங்குடலையும் சுத்தமாக வைக்கிறது.

 பலாப்பழத்திலுள்ள வைட்டமின் ‘ஏ’ சத்து, பார்வைக் குறைபாடு வராமல் தடுக்கிறது. மாலைக்கண் நோயையும் குணமாக்கும். தொடர்ச்சியாக பலா சாப்பிடுவோருக்கு கண் நோய்கள் வராது. எலும்புகள் பலமின்றி இருத்தல், எலும்புருக்கி நோய் உள்ளோர், பலா சாப்பிட்டு வந்தால் எலும்புகள் பலப்படும்.

 மக்னீசியம் மற்றம் கால்சியம் சத்துக்கள் இதற்கு உதவுகின்றன. பிள்ளைகளுக்குச் சாப்பிடக் கொடுத்தால் எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கப்படும். மனித இயக்கத்திற்கு உதவும் தைராய்டு ஹார்மோன் உடலில் உற்பத்தியாகவும், அதை உட்கிரகிக்கவும் தாமிரச் சத்து அவசியம். பலாவிலுள்ள தாமிரச்சத்து இதற்கு உதவி செய்கிறது.

மருந்தாகும் ‘வேர்’ பலா மரத்தின் வேருக்கும் மருத்துவ குணங்கள் உண்டு. மூச்சுத்திணறல், ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டோர், மரத்தின் வேரை நீரில் வேகவைத்து, அந்த சாற்றைப் பருகினால் நோய் விரைவில் குணமாகும். பலாச்சுளைகள் பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய உப்பு சத்துக்களும் உயிர்ச்சத்து ஏ மற்றும் சி யும் அதிக அளவில் கொண்டுள்ளன.

 கொட்டைகள் உயிர்ச்சத்து பி1, பி2 ஆகியவை கொண்டுள்ளன. அதிக அளவில் பலாப்பழம் உண்பது நல்லதல்ல என்ற கருத்து நிலவுகிறது. பழுக்காத பழச்சுளையை அப்படியே உண்பது நல்லதல்ல. அதே போல சமைக்காத கொட்டைகள் ட்ரிப்சின் என்ற புரதச்சிதைவு நொதியை பாதிப்பதால் செரிமாணத்தை பாதிக்ககூடும். பழுத்த பலாச்சுளைகள் மலமிளக்கியாக செயல்படுகின்றன.

ஆசியாவில் பலாப்பழங்கள் பலவாறாக உண்ணப்படுகின்றன. பெரும்பாலும், நன்கு பழுத்த பழத்தின் சுளைகள் அப்படியே உண்ணப்படுகின்றன. சிறு காய்,மற்றும் முற்றிய காய்களின் சுளைகள் கூட கறியாக சமைத்தோ அல்லது மெல்லிய வறுவல்களாகவோ உண்ணப்படுகின்றன.

 ஆனால், மேலை நாடுகளில் பலாப்பழத்தின் மணம் விரும்பத்தகாததாக கருதப்படுகிறது. எனவே, அவர்கள் பெரும்பாலும் முற்றிய காய் சுளைகளையே உண்கின்றனர். மற்ற பழங்களைப் போலவே பலாப்பழத்திலிருந்தும் சாறு, ஐஸ் கிரீம், பழக்கூழ் மற்றும் பல விதமான உணவு வகைகள் தயாரிக்கப்படுகின்றன.

 பலாப்பழத்தின் விதைகள் கூட ஆசியாவில் உணவாகப் பயன்படுத்தப்படுகின்றன. அவை வறுத்தும், வேக வைத்தும், சர்க்கரைப்பாகில் ஊற வைத்தும் உண்ணப்படுகின்றன. இவற்றை அரைத்து மாவும் தயாரிக்கப்படுகிறது. பலாப்பூக்கள் கூட சிலரால் சமைத்து உண்ணப்படுகின்றன. உணவாக மட்டுமின்றி, பலாப்பழத்தின் கடினமான தோல், பெக்டின் வகை கூழ்கள் தயாரிக்க உதவுகிறது. மேலும், இது புகையிலையை பதனிட பயன்படுகிறது.

 முக்கனிகளில் ஒன்றாக முக்கியத்துவம் கொடுத்திருப்பதே, பலாவின் மகத்துவங்களை அறிந்துகொள்ள எளிய சான்று. வைட்டமின் ‘ஏ’, ‘சி’, தயமின், பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து, நையாசின், ரிபோஃப்ளேவின் ஆகிய சத்துக்கள் உள்ள பலா, சிறந்த மருத்துவ குணங்கள் நிரம்பியது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் இதன் உற்பத்தி துவங்கியிருக்கலாம் என்கிறார்கள்.

 இந்தியா, இலங்கை, வங்காளம் மற்றும் தெற்கு ஆசியாவின் பல்வேறு பகுதிகளில் விளைகிறது. தமிழகத்தில் கடலூர், பண்ருட்டி பகுதிகளில் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. பழத்தின் சுளை மற்றும் அதனுள் இருக்கும் விதையும் உணவாகச் சாப்பிடலாம். பலாக்காயை சமைத்து பயன்படுத்தலாம். மரத்தில் விளையும் பழங்களில் பெரியது என்ற பெருமை இதற்கு மட்டுமே உண்டு.

 ஃப்ருக்டோஸ், சுக்ரோஸ் அதிகமாக இருப்பதே பலாப்பழத்தின் இனிப்புச் சுவைக்குக் காரணம். இது, சாப்பிட்டவுடன் உடலுக்கு உடனடி ஆற்றல் தரும். சோர்வாக இருக்கும்போது, இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் உடல் சோர்வு நீங்கி, புத்துணர்ச்சி கிடைக்கும். ரத்த அழுத்தம் உள்ளோர் அவசியம் சாப்பிட வேண்டிய உணவுப் பட்டியலில் தவிர்க்க முடியாதது பலா.
🌱🌱🌱🌱🌱

✍ *மரமும்* *மனிதனும்* 🌴🌴🌴🌴🌴🌴🌴“மரம் வளர்ப்போம்”,

✍ *மரமும்* *மனிதனும்* 🌴🌴🌴🌴🌴🌴🌴“மரம் வளர்ப்போம்”, “இயற்கையைக் காப்போம்”, “இயற்கையை நேசி” “இயற்கையோடு வாழ்வோம்” இதுபோன்ற சொல்லடைகள் சமீப காலமாக அதிகம் பேசப்பட்டு வருகின்றன. காரணம் புவி வெப்பம் அடைந்து மனிதன் அழிவை நோக்கி செல்ல வேண்டிய கட்டாயமாகிவிட்டது. இதனை தவிர்க்கவே மனித மனங்கள் இயற்கை பக்கம் வேகமாக திரும்பியிருக்கின்றது. எனவே புவி வெப்பமயமாவதைத் தடுக்கும் முக்கிய காரணியாக இருக்கும் மரங்களை வளர்க்க வேண்டும். இது இன்றைய இன்றியமையாத அவசியமாகயிருக்கின்றது. எனவே “வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்” என்ற நிலைமாறி “ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்” என்று பேசும் நிலைக்கு வந்துள்ளோம். எனவே இன்று இயற்கை அழிவை காக்க, வெப்பம் தவிர்க்க முதற்காரணியாக மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் என்ற உணர்வை பெறுவோம்.

“இன்றிருக்கும் நிலையே தொடர்ந்தால் இன்னும் 10 ஆண்டுகளில் தமிழகம் பாலைவனமாகும் என்பதில் சந்தேகமில்லை” என்று ஓர் ஆய்வு கட்டுரையில் படித்தேன். எனவேதான் இத்தகைய அவல நிலையை போக்க அரசு, பல தொண்டு நிறுவனங்கள், ஆர்வலர்கள், கல்வி நிறுவனங்கள் போன்ற அமைப்புகள் மரம் வளர்க்கும் பல ஏற்பாடுகளை செய்கின்றன. அவ்வப்போது விழிப்புணர்வு பேரணிகளையும் நடத்தி வருகின்றன.

“மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்” இது ஒவ்வொருவர் மனதிலும் ரீங்காரமிட வேண்டிய சொல்லாகும். மரங்கள் இயற்கையின் கொடை, இவைகள் பூமித்தாய் என்ற முதல் குழந்தைகள். இதை நாம் அழிக்க கூடாது. மாறாக அதைக் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. ஏனெனில் இயற்கையன்னை அனைத்தையும் நமது நலனுக்குத்தானே தந்து கொண்டிருக்கிறாள்.

நலம் தரக்கூடிய நம்மை, வாழ வைக்கக்கூடிய மரங்களை இயற்கை செல்வங்களை நாம் அழிக்கலாமா ? அழிக்கக் கூடாது. இன்று நடப்பது என்ன ? இயற்கை அழிக்கப்படுகிறது, மரங்கள் கொலை செய்யப்படுகின்றன. மணல் அள்ளப்படுகின்றன.

விவசாய நிலம் வாழுமிடமாக (பிளாட்) மாறுகிறது. அதனால் தான் நாம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றோம். (எ.கா.) சுனாமி, நிலநடுக்கம், அதிக வெப்பம், புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை சீற்றங்களால் நாம்தான் பாதிக்கப்படுகின்றோம். ஒன்றை நாம் மறந்துவிடக்கூடாது. “நாம் எந்தளவு இயற்கையை நேசிக்கிறோமோ, அதைவிட பன்மடங்கு இயற்கை நம்மை நேசிக்கும்.

“ஆற்றிலே போட்டாலும் அளந்துபோடு”

அதுபோலவே இயற்கையை நாம் அழிக்கும்போது அதன் சீற்றமும் பன்மடங்காகத்தான் இருக்கும். இதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். மரம் நடுவதன் அவசியத்தை நாம் தெரிந்து கொள்வோம்.

மரங்களினால் கிடைக்கும் நன்மைகள் :

1. தொழில்நுட்பங்களால் ஏற்படும் மாசு நிறைந்த சூழலை மரங்கள் தூய்மைப்படுத்தும்.

2. மரங்கள் தூய்மையான காற்றை வழங்கும்.

3. மரங்கள் வெப்பம் தணிக்கும்.

4. மரங்கள் பறவைகளின் சரணாலயம்.

5. மரங்கள் மண் அரிப்பை தடுக்கும்.

6. நிலத்தடி நீரைக் காக்கும்.

7. முக்கியமாக மழை பெய்ய பெரிதும் உதவுகின்றன.

8. பூ, காய், கனி, கீரை போன்ற உணவு வகைகளை தருகின்றன.

9. மருந்தாக பயன்படுகின்றன.

10. அழகு தரும் மர வேலைபாடுகளுக்கு உதவுகின்றன.

11. இயற்கை உரம் தருகின்றன.

12. இயற்கை சீற்ற அழிவை தடுக்கின்றன.

13. வீடு, கட்டடங்கள் கட்ட பயன்படுகின்றன.

14. நோய் தடுப்புக்கு உதவுகின்றன.

எனவே அன்பர்களே !

மரங்களை வளர்ப்போம் !

காடுகளை உருவாக்குவோம் !

மழை பெறுவோம்.

“பசுமையான தமிழகம் உருவாக்குவோம்.

இது நம்மால் முடியும்”

உங்களாலும் முடியும். செய்வீங்களா ? நம்புகிறேன். நீங்க நிச்சயம் ஒரு மரமாவது நடுவீங்க
🌱🌱🌱🌱🌱

திங்கள், 4 ஜூன், 2018

குடக்கூத்து

#குடக்கூத்து...

முழுதும் அழிந்துபோன தென்னக கலைகளில் குடக்கூத்தும் ஒன்று. குடத்தை தலை, முதுகு, கை, தோள், முழங்கால், முழங்கை, இடுப்பு போன்ற பகுதிகளில் அசையாமல் வைத்துக்கொண்டு இந்த நடனத்துக்கான அடவுகளை அமைத்து ஆடுவதால் இந்த பெயர்.

தற்போது வழக்கிலிருக்கும் கரகாட்டத்தின் ஆதி இந்த குடக்கூத்துதான்.

மாதவி ஆடிய பதினொறு ஆடல்களில் குடக்கூத்தும் ஒன்று...

வெள்ளி, 1 ஜூன், 2018

தமிழனின் பொருளாதாரத்தையும் நிலத்தையும் வடநாட்டுக்காரனிடம் இழக்காதீர்கள்.

வடநாட்டுக்காரனுடன் அதிகம்
உறவாடும் ஒரு நண்பர் இன்று கொடுத்த
அதிர்ச்சி தகவல்.
பாண்டிச்சேரி அரவிந்த் ஆசிரமம், தஞ்சை
சாஸ்த்ரா பல்கலைகழகம், கோவை ஈஸா
போன்ற பெரும் பணக்காரர்கள்,
கல்வியாளர்கள், மார்வாடி
வியாபாரிகள் போன்றோருக்கு RSS
உத்தரவிட்டுள்ளதாம். தமிழகத்தின்
நிலப்பரப்புகளை வடநாட்டவர்கள்
அதிகளவில் ஆக்கிரமித்து ஆதிக்கம்
செலுத்த வேண்டுமாம். இதன்
காரணமாகவே மார்வாடி ஜெயின்
செளராஷ்ட்ரா பீகாரி குஜராத்தி
அதிகமானோர் தமிழ்நாட்டில் படிக்க
வருவதும், வியாபாரம் செய்வதும்,
நிலம் வாங்கி வீடு கட்டுவதும்
தற்போது பரவலாக தமிழகத்தில்
சொத்துக்களையும் வாங்குகின்றனர்.
இன்னும் 40 - 50 வருடங்களில் தமிழகம்
வடமாநிலத்தவரின் ஆதிக்கத்தின் கீழ்
வந்துவிடும் பிறகு தானாகவே
தமிழன் அடிமை இனமாக
மாறிடுவான்.
தமிழர்களே பாசிசத்தின் கோர
பிடியிலிருந்து பாதுகாத்து
கொள்ள...
யாரும் உங்கள் சொத்துக்களை தமிழர்
அல்லாதோரிடம் விற்காதீர்கள். தமிழர்கள்
புதிதாக சொத்து வாங்குவதாக
இருந்தால் வடமாநிலத்தவனிடம் உள்ள
தமிழ் மண்ணை வாங்குங்கள். வட
நாட்டுக்காரன் வியாபாரத்தை
புறக்கணித்து நஷ்டம் ஏற்படுத்தி
தமிழகத்தை விட்டு துரத்துங்கள்.
தமிழனின் பொருளாதாரத்தையும்
நிலத்தையும் வடநாட்டுக்காரனிடம்
இழக்காதீர்கள்.
உஷார்
பரப்புங்கள்
தமிழக மருத்துவ கல்லூரிகளில்
வடநாட்டுக் காரன் சேருவதற்காக தான்
நீட் தேர்வே அறிமுகப்படுத்தப்பட்டது.
அறிவோம் சூழ்ச்சியை
வெல்வோம் மதியால்...

இதை சேமித்து வைத்து, அடிக்கடி படியுங்கள்.

இதை  சேமித்து வைத்து, அடிக்கடி படியுங்கள்.

இதைப் படிப்பதால், உங்கள் வாழ்க்கை முறை, கவலைகள், பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்படலாம்.

* உண்ண உணவும், உடுத்த உடையும், வசிக்க இடமும் உனக்கு இருந்தால்,  உலகில் உள்ள 75% மக்களை விட நீ வசதி பெற்றிருக்கிறாய்.

* உனக்கு வங்கியில் பணமிருந்தால், அவ்வாறு உள்ள 8% பணக்காரர்களுள், நீயும் ஒருவன். உலகில் உள்ள 80% மக்களுக்கு வங்கி கணக்கே இல்லை.

* உன்னிடம் கணிப்பொறி இருந்தால் நீ அவ்வாறு வாய்ப்பு பெற்ற 1% மனிதர்களுள் ஒருவன்.

* நினைத்த நேரத்தில், நினைத்த நபருடன் மொபைலில் உன்னால் பேச முடிந்தால்.. அவ்வாறு வாய்ப்பே இல்லாமல் இந்த உலகில் இருக்கும் 175 கோடி மக்களை விட நீ மேலானவன்.

*நோயின்றி காலையில், புத்துணர்வுடன் நீ எழுந்தால், அந்த வாய்ப்பற்று இரவு படுக்கையிலையே, உயிர் துறந்த பலரை விட நீ பாக்கியசாலி.

* பார்வையும், செவித் திறன், வாய் பேசாமை உள்ளிட்ட எந்த குறைபாடுகளும், இல்லாது நீ இருந்தால், அவ்வாறு உள்ள உலகில் உள்ள 20 கோடி மக்களை விட நீ நல்ல நிலையில் இருக்கிறாய்.

* போர், பட்டினி, சிறைத்தண்டனை போன்ற சித்ரவதையில் நீ சிக்காமல் இருந்தால், உலகில் உள்ள 70 கோடி மக்களுக்கு கிடைக்காத நல்ல வாழ்க்கை அமைந்துள்ளது என அறிந்து கொள்.

*கொடுமைகளுக்கு உள்ளாகாமல், நீ விரும்பும் தெய்வத்தை தொழ முடிந்தால், உலகில் உள்ள 300 கோடி மக்களுக்கு கிடைக்காத சலுகையை நீ பெற்றுள்ளாய்.

* உன் பெற்றோரை பிரியாமல் அவர்களுடன் இருந்தால், நீ துன்பத்தை அறியாதவன் என்பதை புரிந்து கொள்..!!

* தாகம் எடுத்தால் குடிப்பதற்கு உங்களுக்கு தண்ணீர் கிடைத்தால் நீங்கள் கொடுத்து வைத்தவர் தான்.

உலகம் முழுதும், சுமார் 100 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு பாதுகாப்பான தண்ணீர் குடிப்பதற்கு இல்லை.

* கல்வி அறிவு பெற்று, இந்த செய்தியை உன்னால் படிக்க முடிந்தால், உலக அளவில் எழுத படிக்க இயலாத 80  கோடிக்கும் மேல் உள்ளவர்களுக்கு கிடைக்காத கல்வியை நீ பெற்றுள்ளாய்.

* இணையத்தில் இந்த செய்தியை, உன்னால் படிக்க முடிந்தால், அது கிடைக்காத 300 கோடி மக்களை விட நீ மேலானவன்..!!

* உன்னால் தலை நிமிர்ந்து நின்று சிரிக்க முடியுமானால், அவ்வாறு செய்ய இயலாத அளவுக்கு தைரியமும், நம்பிக்கையும் இல்லாதவர்களை விட, நீ கொடுத்து வைத்தவன்..!!

* நீங்கள் அனுபவித்து வரும், வசதிகளையும்.. தொழில் நுட்பத்தையும் அனுபவிக்க இயலாமல், ஏன் அது பற்றிய அறிவு கூட இல்லாமல்,  கோடிக்கணக்கானோர் இவ்வுலகில் இருக்க, ஆண்டவன் இவ்வளவு விசயம் உங்களுக்கு கொடுத்திருக்கும் போது, நீங்கள் அதிர்ஷடசாலி இல்லையா பின்ன..??

* நீங்கள் அதிர்ஷடசாலி தான்..!!!

வீண் கவலைகளை விட்டு,அந்த கவலைகளை காரணம் காட்டி குடும்பத்தில் குழப்பங்கள், போதை பொருட்கள் என்பவற்றை விட்டு விட்டு,  நான் அதிர்ஷடசாலி என்ற தைரியத்தோடு
உங்களால் இயன்றவரை மற்றவர்களுக்கு உதவுங்கள்.
God is Great!

படித்ததில் சிறந்தது.

Popular Posts

Facebook

Blog Archive