Health loss | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil: Health loss

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

Health loss லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Health loss லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 29 ஜூன், 2022

How to find Heart Attack - மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு_பதிவு💞👇🙏🏻

 How to find Heart Attack - மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு_பதிவு💞👇🙏🏻

மாரடைப்புக்கு முன் மூன்றுமணி நேரம்

பிரபல இதயநோய் நிபுணர் பேராசிரியர் சொக்கலிங்கம்  அவர்கள் சொன்ன தகவல் இது.

மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு

S, T, R என்ற இந்த மூன்றெழுத்துக்களை மறக்கக் கூடாது.

S = SMILE
T = TALK
R = RAISE BOTH ARMS

ஒரு திருமண நிகழ்விலோ, பொது இடங்களிலோ அல்லது வீட்டில் இருக்கும் போதோ, ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தடுமாறுவதை, அல்லது கீழே விழுவதைக் கண்டால், உடனே நாம் அவர் மேல் கவனம் செலுத்த வேண்டும்.
ஆனால், அவர் நம்மிடம் தனக்கு ஒன்றும் இல்லை, நான் நன்றாகத்தான் இருக்கிறேன் என்றெல்லாம் சொல்லுவார். நாமும், ஏதாவது பித்த மயக்கமாக இருக்கும் என்று லேசாக விட்டு விடுவோம் ஆனால் உண்மையில் அது ஒரு மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்!!

மாரடைப்பை முன்கூட்டியே உணரக் கூடிய ஒரு உறுப்பு நமது தலைமைச் செயலகமான மூளையாகும். மூளை அறிவிக்கும் முன்னெச்சரிக்கையே அந்த தடுமாற்றமாக இருக்கலாம். அதனை
S T R அதாவது,

SMILE (சிரிக்க சொல்வது 😄),

TALK (பேச சொல்வது😲),

RAISE BOTH ARMS (இரண்டு கைகளையும் மேலே தூக்க சொல்வது🙌🏻)

        இது போன்ற செயல்களை செய்யச் சொல்வது மூலம், அவர்களுக்கு ஏற்படப் போகும் மாரடைப்பை (ஹார்ட் அட்டாக்) முன்கூட்டியே கண்டு பிடித்து விடலாம். அதாவது, இம்மூன்றையும் அவர் சரியாகச் செய்ய வேண்டும்! இல்லையேல் பிரச்சனை பெரிதுதான்!

    உடனடியாக, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதால், உயிரிழப்பை தடுக்கலாம்.
மருத்துவர்கள் கூறும் எச்சரிக்கை என்ன வென்றால், இந்த சோதனை செய்த, 

3 மணி நேரத்திற்குள் மருத்துவ மனைக்கு வந்து விட்டால் போதும், எளிதாக உயிர் இழப்பை தடுத்து விடலாம், என்று உறுதியாக கூறுகிறார்கள்.

       இவை மூன்றும், அவர் நல்லபடியாக சரியாக செய்து விட்டார் என்றால், மேலும் உறுதிபடுத்த ஒரு முக்கியமான செயலை செய்ய வேண்டும் என்று சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுகிறது.

      அதாவது, அவருடை 👅நாக்கை நீட்ட சொல்ல வேண்டும்,

அவர் தனது நாக்கை👅 நேராக நீட்டிவிட்டார் என்றால், அவர் நார்மலாக, நலமாக உள்ளார் என்று தீர்மானிக்கலாம் அவ்வாறு நேராக நீட்டாமல் ஒரு பக்கமாக அதாவது வலது அல்லது இடது பக்கமாக வளைத்து நீட்டினால், அடுத்த 3 மணி நேரத்திற்குள் எப்பொழுது வேண்டுமானாலும், அவருக்கு அட்டாக் வரலாம்.

இதனை படிக்கும், அன்பர்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும், உறவினர் களிடமும், நண்பர்களிடமும், ஜாதி, மத பேதமின்றி, மனிதாபிமான அடிப்படையில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துமாறு, கேட்டுக்கொள்கிறேன்.

      மருத்துவர்களின் புள்ளி விவரப்படி, இதனை அனைவரிடமும் எடுத்து சொல்வதன் மூலம் 10 சதவீத மரணத்தை தவிர்க்கலாம் என்றும் சொல்கிறார்!!

             பகிர்வு

புதன், 9 மார்ச், 2022

வயிறு உப்புசம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சினைகளுக்கு இயற்கை முறையில் தீர்வு! -

 வயிறு உப்புசம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சினைகளுக்கு இயற்கை முறையில் தீர்வு!

எதனால் உப்பி விடுகிறது..?

இந்த பிரச்சினைக்கு முக்கிய காரணம் வாயுக்கள் அதிகம் உள்ள உணவு பொருட்களை நாம் உண்பதே.

குறிப்பாக ப்ரோக்கோலி, பீன்ஸ், குளிர்பானங்கள், காலிஃளார் போன்றவை முதன்மையான காரணிகளாக உள்ளது. மேலும், இந்த நிலை உங்களுக்கு மலச்சிக்கல், வாயு தொல்லை, வயிறு உப்பசம் என பல கோளாறுகளை தரும்.

 சீமை சாமந்தி டீ

வயிறு உப்பி கொண்டே போவதை விரைவிலே குணப்படுத்த இந்த சீமை சாமந்தி டீ உதவும்.

செய்முறை :-  நீரை கொதிக்க விட்டு அதில் சீமை சாமந்தி பூவை போடவும். 5-10 நிமிடம் கொதிக்க விட்டு, ஆறியவுடன் வடிகட்டி கொள்ளவும். இந்த டீயுடன் தேன் வேண்டுமானால் சேர்த்து கொள்ளலாம். தினமும் 2 அலல்து முறை இந்த டீயை குடித்து வந்தால் எளிதாக வயிற்று உப்பசத்தை குறைத்து விடலாம்.

 இஞ்சி டீ

வயிற்று உப்பி கொண்டிருக்கும் பிரச்சினைக்கு வேறொரு அற்புதமான தீர்வு இந்த இஞ்சி தான். தண்ணீரை கொதிக்க விட்டு அதில் சிறிது இஞ்சியை நசுக்கி போடவும். 5 நிமிடம் கொதிக்க விட்ட பின், இதனை வடிகட்டி கொள்ளவும். பிறகு இவற்றுடன் தேனை கலந்து குடித்து கொள்ளலாம்.

 புதினா டீ

உங்களின் பிரச்சினையை மிக சுலபமாக குணப்படுத்த கூடிய ஆற்றல் இந்த புதினா டீயிற்கு உள்ளது.

செய்முறை :- முதலில் நீரை கொதிக்க விட்டு, பிறகு கை நிறைய புதினா இலைகளை அந்த நீரில் போடவும். 5 நிமிடம் மிதமான சூட்டில் கொதிக்க விட்டு இறக்கி கொள்ளவும். பிறகு இதனை வடிகட்டி 1 ஸ்பூன் தேன் கலந்து குடித்து வரலாம்.

இவ்வாறு ஒரு நாளைக்கு 2 முறை குடித்து வருவதால் செரிமான பிரச்சினை, வயிற்று உப்பசம் போன்ற பல பிரச்சினைகள் குணமாகும்.

நம் வீட்டில் இருக்கும் இந்த எலுமிச்சையை வைத்தே நாம் வயிற்று உப்பசத்தை எளிதாக குணப்படுத்தி விடலாம். அதற்கு, முதலில் நீரை கொதிக்க விட்டு அதில் எடுத்து கொள்ளவும். பிறகு இதனுடன் எலுமிச்சை சாற்றை 1 ஸ்பூன் & தேன் கலந்து குடித்து வரவும். இதனை தினமும் காலையில் குடித்து வந்தால் விரைவாக உப்பிய வயிறு குறைந்து விடும்.

மேற்சொன்ன முறைகளை வைத்தே உங்களின் வயிற்று உப்பசத்தை எளிமையாக குணப்படுத்தி விடலாம்.

12 வகையான நோய்களுக்கு பாட்டி வைத்தியம்!! - Grandmother's cure for 12 types of diseases - Home Remedies

 12 வகையான நோய்களுக்கு பாட்டி வைத்தியம்!! -  Grandmother's cure for 12 types of diseases

✍️என்னதான் நாம் நவீன காலத்தை நோக்கி மாறிக்கொண்டே இருந்தாலும், நம்முடைய சில பழங்கால பழக்க வழக்கத்தை விட்டு மட்டும் மாறுவதில்லை அவற்றில் ஒன்றுதான், பாட்டி வைத்தியம்.

இன்று பாட்டி வைத்தியத்தில், உடலின் பலவகையான பிரச்சனைகளை வீட்டில் இருந்தே சரி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

1. தலைவலி குணமாக: Headache

கற்பூரவல்லி இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை ஒன்றாக கலந்து நெற்றியில் பற்றுப் போட்டு வந்தால் தலைவலி குணப்படும்.

வெற்றிலையை நன்றாக இடித்து சாறு பிழிந்து கொள்ளவும். இந்த சாறில் கிராம்பை நன்றாக அரைத்து கொண்டு, நெற்றியின் இரண்டு பொட்டு பகுதியில் நன்றாக தேய்த்து வந்தால் தலை வலி குணமாகும்.

2. வாய் புண் குணமாக:Mouth sore

மோரில் உப்பு சேர்த்து 5 நிமிடம் வரை வாயில் வைத்திருந்து, பின்பு வாய் கொப்பளிக்க வேண்டும். இந்த முறையை ஒரு வாரம் வரை தொடர்ந்து செய்து வர வாய் புண் குணமாகும்.

நன்கு பழுத்த நாவல் பழத்தை உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குணமாகும்.

3. பல் வலி குணமாக:Toothache

பல் வலி ஏற்படும் போது சிறிது மிளகுத்தூளில் கிராம்பு எண்ணெய் கலந்து வலி இருக்கும் பல்லில் தடவி வந்தால் வலி குறையும்.

4. வறட்டு இருமல் குணமாக:dry cough

கிராம்பை இடித்து பொடி செய்து கொள்ளவும். அந்த பொடியுடன் பனங்கற்கண்டு சேர்த்து பாலில் கலந்து காய்ச்சி சாப்பிட்டால் வறட்டு இருமல் குணமாகும்.

வேலிப்பருத்திச் சாறு, துளசிச் சாறு, பசு வெண்ணெய், கருஞ்சீரகம் ஆகியவற்றை சேர்த்துக் காய்ச்சி வடித்து, காலை, மாலை என சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்.

5. விக்கல் குணமாக:Hiccups

விக்கல் வரும்போது 1 கிண்ணம் அளவு தயிரை எடுத்து 1 தேக்கரண்டி உப்பு சேர்த்து கலந்து மெதுவாக குடித்து வர விக்கல் குணமாகும்.

விடாமல் விக்கல் எடுத்தால் துளசி இலைகளை பச்சையாக சாப்பிட்டு வந்தால் விக்கல் குறையும்.

6. ஓயாத சளி குணமாக:Cold

வெற்றிலை சாறை கொதிக்க வைத்து அந்த சாறை நெற்றியில் பற்றுப் போட்டு வந்தால் ஓயாத சளி குணமாகும்.

தூதுவளைச் சாறு, துளசி இலைச் சாறு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வந்தால் ஓயாத சளிக் குறையும்.

7. கழுத்துச் சுளுக்கு குணமாக:Neck sprain

ஆமணக்கு எண்ணெயை கழுத்தில் சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் தடவி அதன் மேல் புளிய இலையை ஒட்ட வைத்து இரண்டு மணிநேரம் கழித்து வெந்நீரால் உருவி விட்டால் கழுத்தில் ஏற்பட்ட சுளுக்கு குறையும்.

சம அளவு எலுமிச்சைச்சாறு மற்றும் தேன் எடுத்து நன்றாக கலந்து சுளுக்கு இருக்கும் இடத்தில் சிறிது விட்டு நன்கு தடவி விட்டு வந்தால் சுளுக்கு குறையும்.

8. தூக்கமின்மை குணமாக:Insomnia

வெங்காயத்தை தோல் உரித்து அதில் சிறிதளவு உப்பைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். நன்றாக வெந்தவுடன் அந்த நீரை வடிகட்டிக் கொள்ளவேண்டும். வெங்காய தண்ணீரை எடுத்து இரவில் உண்ணும் சுடுசோற்றில் கலந்து சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை குறையும்.

நல்லெண்ணெயில் பாகற்காய் சாறு கலந்து படுக்கும் முன் இந்த எண்ணெயை உச்சந்தலையில் ஊற்றி நன்றாக தேய்த்து விட்டு படுத்தால் தூக்கம் நன்றாக வரும்.

9. மூலம் குணமாக:

கண்டங்கத்திரிப் பூ, நல்லெண்ணெய், வேப்ப எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து காய்ச்சி மூலத்தில் தடவி வந்தால் மூலநோய் குறையும்.

திப்பிலி, சுக்கு, எள் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து நன்கு அரைத்து பொடி செய்து, ஒரு நாளைக்கு மூன்று வேளை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் குறையும்.

10. நினைவாற்றல்:

பத்து பதினைந்து கருஞ்சீரக விதைகளை மென்று தின்று வந்தால் நினைவாற்றல் பெருகும்.

வல்லாரை கீரையை தினமும் துவையல் செய்து சாப்பிட நினைவாற்றல் பெறுகும்.

11. ஒற்றை தலைவலி குணமாக:

ஒற்றை தலைவலி ஏற்படும் போது 1 டம்ளர் கேரட் சாறில் சிறிது வெள்ளரிகாய் சாறு மற்றும் பீட்ரூட் சாறு கலந்து குடித்து வந்தால் ஒற்றை தலைவலி குறையும்.

முட்டைகோஸ் இலைகளை நன்கு நசுக்கி ஒரு சுத்தமான துணியில் கட்டி, அதைக் கொண்டு தலையின் மீது ஒத்தடம் கொடுத்தால் ஒற்றைத் தலைவலி குறையும்.

12. கால் ஆணி குணமாக:

அத்திக்காயை எடுத்து நன்றாக அரைத்து வடிகட்டி அதன் சாறை கால் ஆணி மீது தடவி வந்தால் கால் ஆணி குறையும். கால் மிருதுவாகும்.

மல்லிகை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து கால் ஆணி மீது பூசி வந்தால் கால் ஆணி குறையும்.

Tamil health tips -வீட்டு வைத்தியம்

இயற்கையாக உடல் சூடு குறைய கோடை பானங்கள் - summer drinks - Decrease body heat naturally

 

அடுத்து நாம் எதிர்கொள்ள இருக்கும் வெயில் காலம்
சில இயற்கை வைத்திய டிப்ஸ்....Decrease body heat naturally

✍  இயற்கையாக உடல் சூடு குறைய

வெண்ணெய் மற்றும் பால்

ஒரு டம்ளர் பாலில் 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும், உடல் வெப்பத்தைக் குறைக்கலாம். ஆனால் உங்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பின், இம்முறையைத் தவிர்க்கவும்.
வைட்டமின் சி  நிறைந்த உணவுப் பொருட்களான ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவை கோடையில் உடல் வெப்பத்தைத் தணிக்க உதவும். எனவே இப்பழங்களைக் கொண்டு ஜூஸ் போட்டு பருகுவதன் மூலம் உடல் வெப்பத்தைக் குறைக்கலாம்

மோர்

கோடையில் மோர் உடலைக் குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும். மேலும் மோரில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் புரோபயாடிக்குகள் போன்றவை அதிகம் உள்ளதால், இது கோடையில் உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்.

புதினா டீ

புதினாவை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டி தேன் கலந்து குடித்து வர, அதில் உள்ள குளிர்ச்சித்தன்மையினால் உடல் சூடு தணியும்.

சோம்பு நீர்

ஒரு கையளவு சோம்பை எடுத்து நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீரை வடிகட்டி, தினமும் காலையில் குடித்து வர, உடல் வெப்பம் குறையும்.

கற்றாழை ஜூஸ்

கற்றாழையின் ஜெல்லை தினமும் முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவி வந்தால், அது உடலைக் குளுமைப்படுத்துவதை நன்கு உணர முடியும். மேலும் கற்றாழையின் ஜெல்லை 2 ஸ்பூன் எடுத்துக் கொண்டு, அத்துடன் சிறிது தேன் மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து குடித்து வர, கோடையில் பிடித்த உடல் சூடு குறையும்.

கரும்பு ஜூஸ்

கோடையில் தெருவின் மூலைமுடுக்குகளில் கரும்பு ஜூஸ் விற்பதைக் காண்பீர்கள். இந்த கரும்பு ஜூஸை குடிப்பதால், கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து நல்ல விடுதலைக் கிடைக்கும்.

முள்ளங்கி

பலருக்கும் முள்ளங்கி பிடிக்காது. இதற்கு அதன் சுவையே காரணம். ஆனால் இந்த காய்கறியை கோடைக்காலத்தில் சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனெனில் முள்ளங்கியில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. கோடையில் வெப்ப பக்கவாதம் வருவது பொதுவானது. இதற்கு காரணம் அதிகப்படியான உடல் சூடு மற்றும் உடல் வறட்சி தான். இதைத் தவிர்க்க வேண்டுமானால், அடிக்கடி முள்ளங்கியை கோடைக்காலத்தில் சாப்பிடுங்கள்.

வெள்ளரிக்காய்

கோடையில் அதிகம் விற்கப்படும் ஓர் காய்கறி தான் வெள்ளரிக்காய். இது மிகவும் சுவையாகவும், நீர்ச்சத்து நிறைந்ததாகவும் இருப்பதோடு, கோடையில் இதை சாப்பிட்டால், உடல் வறட்சி தடு, உடல் சூடு பிடிப்பது தடுக்கப்படும். எனவே இந்த வெள்ளரிக்காயை சாலட் போன்று செய்து, அடிக்கடி சாப்பிடுங்கள்.

முலாம் பழம்

கோடையில் விற்கப்படும் மற்றொரு சுவையான பழம் தான் முலாம் பழம். இந்த பழத்திலும் நீர்ச்சத்து மற்றும் அத்தியாவசிய சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. இந்த முலாம் பழத்தை ஜூஸ் தயாரித்து தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், கோடைக்காலத்தில் சந்திக்கும் பல ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

இளநீர்

நம் அனைவருக்குமே உடல் சூடு என்றதும் குடிக்கத் தோன்றும் ஓர் பானம் இளநீர். இந்த இளநீர் ஒருவரது உடல் சூட்டைத் தணிப்பதோடு, உடலை வறட்சி அடையாமலும் தடுக்கும். மேலும் இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள், உடலின் ஆற்றலை மேம்படுத்தும். எனவே கோடையில் தவறாமல் ஒரு இளநீரைக் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.
   

தர்பூசணி

உடல் சூட்டைக் குறைக்க உதவும். இதற்கு அதில் உள்ள அதிகளவிலான நீர்ச்சத்து தான் காரணம். மேலும் தர்பூசணியை ஒருவர் தொடர்ச்சியாக கோடையில் சாப்பிட்டு வந்தால், உடல் வறட்சியைத் தடுத்து, உடலை போதிய நீர்ச்சத்துடன் வைத்துக் கொள்ளும். அதற்கு தர்பூசணியை சிறு துண்டுகளாக்கி, அத்துடக் சிறிது நாட்டுசர்க்கரை மற்றும் குளிர்ந்த பால் சேர்த்து அரைத்துக் குடியுங்கள். இல்லாவிட்டால், அதை சாலட் போன்று செய்தும் சாப்பிடலாம்.

மாதுளை ஜூஸ்

கோடைக்காலத்தில் தினமும் காலையில் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸில் 2-3 துளிகள் பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து குடித்து வர வேண்டும். இதனால் உடலில் உள்ள அதிகப்படியான வெப்பம் குறைவதைக் காணலாம்.

தண்ணீர்

உடல் வெப்பத்தைக் குறைப்பதற்கான வழி என்னவன்று கேட்டால், முதலில் பலருக்கும் தண்ணீர் தான் நினைவில் வரும். ஆகவே ஒரு அகன்ற பாத்திரத்தில் குளிர்ந்த நீரை நிரப்பி, அதில் கால்களை ஊற வைக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வர, உடலில் உள்ள அதிகமான வெப்பம் வெளியேறும். மேலும் குடிக்கும் நீரின் அளவையும் அதிகரிக்க வேண்டும்.

எள்

உடலின் வெப்பநிலையை சீராகப் பராமரிக்க தினமும் இரவில் படுக்கும் முன், 1 டேபிள் ஸ்பூன் எள்ளை சாப்பிட வேண்டும். குறிப்பாக எள்ளில் ஓபியேட்ஸ் உள்ளது மற்றும் இதனை அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. மேலும் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது.

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும் ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்...!!!

summer drinks  - Decrease body heat naturally
💐💐

செவ்வாய், 22 செப்டம்பர், 2020

உடல் பருமனைக் குறைக்க சில வழிகள்

உடல் பருமனைக் குறைக்க சில வழிகள்
 
* இஞ்சியைத் தோல் சீவி அரைத்து, ஒரு கரண்டி சாறு எடுத்து, அதனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் இளம் சூடான நீரில் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால் (Gingerol), ஜின்ஜிபெரின் (Zingiberine) மற்றும் தேன் ஆகியவை செரிமானத்தைத் தூண்டுவதுடன் தேவையற்ற கொழுப்பையும் எரிக்கும்.
 
* கீழாநெல்லி, வெந்தயம், மஞ்சள், கறிவேப்பிலை, நெல்லிக்காய் சம அளவு எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் நீரில் கலந்து உண்ண, உடலின் கொழுப்பு குறைந்து, எடையும் சீராகும்.
 
* சிறுகுறிஞ்சான், நெருஞ்சில், மூக்கிரட்டை, சீரகம், திப்பிலி, மிளகு, ஓரெடை எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தேனில் உண்ண உடல் எடை குறையும்.
 
* பெருஞ்சீரகத்தைப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தண்ணீர் சேர்த்து அருந்த, உடல் எடை குறையும்.
 
* எலுமிச்சைச் சாறு ஒரு கரண்டி சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் நீரில் கலந்து பருக வேண்டும். இதில் உள்ள வைட்டமின் சி ரத்தத்தைச் சுத்திகரிப்பதுடன் கொழுப்பைக் குறைத்து உடலின் எடையையும் குறைக்கிறது. 

* நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஒட்டுதல், யோகா, தியானம், முதலியவற்றை மேற்கொண்டால் உடல்பருமன் நிச்சயம் குறையும். 

* சேர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்:தக்காளி, கோஸ், பப்பாளி, வெள்ளரி, தர்பூசணி, புரூகோலி, ஆப்பிள், ஓட்ஸ், வால்நட், பாதாம், பருப்பு வகைகள், மோர்.
 
* நீக்க வேண்டிய உணவுப் பொருட்கள்:இனிப்புகள், வெள்ளை ரொட்டி, பட்டை தீட்டப்பட்ட தானியங்கள், துரித வகை உணவுகள், எண்ணெய் மற்றும் கொழுப்பு மிகுந்த உணவு வகைகள். தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.

.வாழ்க வளமுடன்

Popular Posts

Facebook

Blog Archive