Infoms | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil: Infoms

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

Infoms லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Infoms லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 28 ஜனவரி, 2016

உங்கள் ஐபோனை வேகமாக செயல்பட வைக்கும் யுக்திகள்:

iPhone_7_illustration_Yasser_Farahi_1000e

அன்றாடம் பயன்படுத்தும் ஐபோன்கள்  நாளடைவில் மிகக் மெதுவாக செயல்படுவது பலருக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு பிரச்சனையே! இது போன்ற பிரச்சனைகளை  சில வழிமுறைகளை கையாண்டால் எளிதில் நீக்கி விடலாம்.   ஐபோன் பயனர்களுக்கான முக்கிய வழிமுறைகள் பின்வருமாறு :

*மொபைலில் அளவுக்கதிகமாக சேமித்து வைத்துள்ள பழைய  புகைப்படங்களை மற்றும் தேவையில்லாத  டாக்குமெண்ட்டுகளை  நீக்குவதும்    மிக  அவசியமே .  நூற்றுக்கணக்கான  அளவு புகைப்படங்கள்  இருப்பின் அவற்றை   கணினியில் ஒரு போல்டரில் போட்டு வைப்பது சிறந்தது.

*அதிகளவு ஏற்றி வைத்துள்ள பயன்பாடுகளை நீக்க வேண்டும்  . ஏனெனில் அவை அதிக அளவு இடங்களை ஐபோனில் ஆக்கிரமிப்பு செய்து ஐபோனை மெதுவாக இயங்கவைக்கும் . இவை எந்த அளவுக்கு  இடங்களை  ஆக்கிரமித்து கொண்டுள்ளன என்பதை அறிய  போனில்  Settings > General > Storage & iCloud Usage > Manage Storage.- க்கு சென்று பார்த்தால் அறியலாம் . இதனால் மிக முக்கியமான பயன்பாடுகளை மட்டும் சேமித்து வைப்பது நன்று.

*பழைய குறுந்தகவல் செய்திகளை    மாதக்கணக்கில் வைத்திருந்தால்   அது மொபைலின் வன்பொருளை பாதிக்கும் வாய்ப்புண்டு.இதற்கு தகுந்த தீர்வு  என்னவென்றால் உங்கள் போனில் உள்ள குறுந்தகவல்களை குறிப்பிட்ட கால வரையறைக்கு மட்டும் சேமித்து  வைத்திருக்கும்  அமைப்புகளை அமைத்துவிட்டால்  அவை குறிப்பிட்ட காலம் வரைக்கும்  இன்பாக்ஸில் காணும்படி செய்யலாம்.இதற்கு  Settings > Messages > Keep Messages. என்று தேர்ந்தெடுக்க வேண்டும்.

*ஐபோனை உங்களது கணினி போன்று பயன்படுத்த வேண்டும். அதாவது  அடிக்கடி இணைய தேடல் வரலாறுகளை  நீக்கிக்  கொண்டே இருப்பது அவசியமே. இடைமாற்று நினைவகம் என்று கூறப்படுகின்ற அதாவது  பலமுறை அணுகப்படும் தரவுகளுக்கு ஒதுக்கப்படும் ஒரு விரைவு நினைவகத்தினை  அடிக்கடி அழித்து  விடுவது அவசியம் . இதற்கு  மொபைலில் Settings > Safari,-க்கு சென்று  Clear History and Website Data  வை தட்டினால் போதும்.

*உங்கள் ஐபோன் மெதுவாக இயங்க ஒரு முக்கிய காரணம் அதிலிருக்கும்  பயன்பாடுகளின்  ஆட்டோ  அப்டேட்டுகலாகத்தான் இருக்கும். தேவையற்ற பயன்பாடுகளின் அப்டடேட்டுகளை நீக்க இது ஒரு சிறந்த வழியாகும். இதற்கு உங்கள் மொபைலில் Settings > iTunes & App Store-க்கு சென்று    OFF MODE  யை  தேர்ந்தெடுக்க வேண்டும்.

*மேற்கூறியது போன்றே  ஆட்டோமேட்டிக்  அப்டேட்டுகளை  தேவையற்ற இசை ,நூல்கள் போன்றவற்றை பதிவிறக்கங்கள் செய்யாமல்   தவிர்கும்படி  செய்யலாம்.இதற்கு  மொபைலில் Settings > iTunes & App Store-க்கு சென்று   apps, books, music -இல்   OFF MODE  யை தட்டினால் போதும்.

*மேலும் அடிக்கடி உங்கள் மொபைலில்  உங்களுக்கு அருகிலிருக்கும் வை-பை இணைப்புகளுடன் இணைக்கவா? என்பது போன்ற கேள்விகளுக்கு ஆம் என்ற பதிலை கொடுத்தால் அது  உங்கள் சாதனத்தை மிக மெதுவாக செயல்பட வைக்கும். இதனை  நீக்க   Settings > Wi-Fi > Ask to Join Networks  இல்   OFF MODE  யை தேர்ந்தெடுக்க வேண்டும் .

*அன்றாடம்  முடிந்த வரையில் ஒருமுறையாவது  ஐபோனை ரீஸ்டார்ட் செய்வதும் மொபைல் வேகத்தை அதிகரிக்கும் வழிகளில் ஒன்றே ! இதனால் ஐபோன் அடிக்கடி மந்தாமாகாமல் தடுக்கலாம்.

*பேட்டரி டாக்டர் என்ற பயன்பாட்டினைக் கொண்டு உங்கள் ஐபோன்கள் எவ்வளவு மெதுவாக  இயங்குகிறது என்பதை அறியலாம். மெதுவாக இயங்குகிறது என்றால் அதிலுள்ள நினைவகத்தை மறு  ஒதுக்கீடு செய்து  வழங்க உதவுகிறது.

இது போன்ற வழிமுறைகளை கடைபிடித்தால்  ஐபோனின் ஆயுள்காலத்தினை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் உங்கல் ஐபோன் சாதனம்   மெதுவாக செயலபாடாமல் தடுக்கலாம்.

திங்கள், 25 ஜனவரி, 2016

மெல்ல கொள்ளும் நஞ்சு( slow poison ) ரீபைண்ட் ஆயில்( Refined oil)

மெல்ல கொள்ளும் நஞ்சு( slow poison )
ரீபைண்ட் ஆயில்( Refined oil)



ரீபைண்ட் ஆயில் பயன்படுத்தாதிங்க!நோயை விலை கொடுத்து வாங்காதிங்க !நாமெல்லாம் நினைக்கிறது போல ரீபைண்ட் ஆயில்னா சுத்திகரிக்க பட்ட எண்ணெய் மட்டும் இல்லங்க சுத்தமா உயிர் சத்துகளே இல்லாதஎண்ணெய்.
ரீபைண்ட் ஆயில் எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா?


மில்லில் இருந்து பெறப்பட்ட எண்ணெய்யில் காஸ்டிக் சோடாவை சேர்த்து கொதிக்க வைத்து முதலில் அதிலிருந்து சோப்பு எடுக்கிறார்கள்.பிறகு அதிகம் இருக்கும் காஸ்டிக் அமிலத்தின் மூலம் அகற்றி நீயூட்ரலைஸ் செய்து அதில் இருக்கும் வாசனையை அறவே நீக்கிவிடுகிறார்கள்.பிறகு அதை சால்வெண்ட் எக்ஸ்ட்ராக்சன் மூலம் பிரித்து எடுக்கிறார்கள்.இதை எல்லாம் நேரில் பார்த்தால் நம்மில் பலருக்கு சாப்பிடவே பிடிக்காது. திரைமறைவில் நடக்கும் இந்த வேலைகள் எல்லாம் மக்களுக்கு தெரியாத காரணத்தால் " சுத்தம் செய்யப்பட்ட எண்ணெய் "என்று நினைத்து ரீஃபைண்ட் ஆயிலை உபயோகித்து கொண்டு இருக்கிறார்கள்.


‪#‎உண்மையில்‬ ரீஃபைண்ட் ஆயில் என்பது அடர்த்தி இல்லாத தண்ணீர் போன்ற ஒரு திரவம்.சமையலுக்கு இதை பயன்படுத்தும் போது சூடு தாங்காமல் உருக்குலைந்து உடல் ஆரோக்கியத்திற்கு தீமை விளைவிக்கும் ஒரு ரசாயன கலவையாக மாறுகிறது.

‪#‎எண்ணெய்‬ விஷமாக மாறிவிட்டதால் இன்று மக்கள் பலவிதமான நோய்களுக்கு உள்ளாகி சிகிச்சைகள் எடுத்து கொள்வதற்க்காக பெரியதொகைகளை செலவளித்து கொண்டு இருக்கிறார்கள்.நமக்கு வரும் நோய்களுக்கு எல்லாம் சுற்றுசூழல் மாசுப்பட்டு இருப்பது தான் காரணம்என்று சொல்லி நம்மை நாமே ஏமாற்றி கொள்கிறோம். 


‪#‎கடந்த‬ 60-70 ஆண்டுகளில் நோய்கள் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மக்களை வாட்டி வதைத்துக்கொண்டு இருக்கிறது. இதற்க்கானகாரணங்களில் முக்கியமான இடத்தை பிடித்து இருப்பது ரீஃபைண்ட் ஆயில்.
யோசிச்சு பாருங்க இவ்வளவு தீமையான ஒரு பொருளை நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தி, நம் ஆரோக்கியத்தை நாமே விலை கொடுத்து பாழ்படுத்தி கொள்கிறோம்.


அப்போ என்ன எண்ணெய் தான் வாங்குறது?ரீபைண்ட் செய்யாத நல்லெண்ணெய்,கடலை எண்ணெய்,தேங்காய் எண்ணெய் வாங்கி பயன்படுத்தலாம். இதை தானே நம்மதாத்தா பாட்டி பயன்படுத்தினாங்க.ஒரு வேலை நீங்க இப்படி கேட்டா,அய்யய்யோ அதுல நிறைய கொழுப்பு இருக்குனு சொல்லுவாங்களே! 


அது மட்டும் இல்லாம கொழுப்பு உள்ள எண்ணெய் பயன்படுத்தினா ஹார்ட் அட்டேக், B.P. வரும்,ரொம்ப வெய்ட் போடும்னு சொல்லுவாங்களே! கிராமத்து இளைஞனின் கருத்து : சரிங்க ரீபைண்ட் ஆயில் தானே இப்போ பெரும்பாலும் பயன்படுத்துறோம்.யோசிச்சு பாருங்க உங்க ஊர்ல ஹார்ட்வர்றவங்களோட எண்ணிக்கை குறைஞ்சு இருக்கா இல்ல கூடி இருக்கா. 

என்ன கொடுமைனா முன்னயாவது 60,70 வயசு ஆனவங்களுக்கு பெரும்பாலும் ஹார்ட்அட்டாக் வந்தது. இப்போ தெல்லாம் 25,30,35 வயசு உள்ளவங்களுக்கே ஹார்ட் அட்டக் வருது.அப்போ ரீபைண்ட் ஆயில் உபயோகிச்ச பிறகு நோயின் அளவு ஜாஸ்தி தானே ஆகியிருக்கு?..ஒரு வேலை நீங்க இப்படி கேட்டா : 

சரி ரைட்டு வேற எண்ணெய் வாங்கலாம்னா அதாவது,எள்எண்ணெய் (நல்லெண்ணெய்),கடலை எண்ணெய்,தேங்காய் எண்ணெய் வாங்கலாம்னு பார்த்தா விலை பட்ஜெட்ல அடங்காது போல இருக்கே!.

நான்: ஒரு லிட்டர் கடலை எண்ணெய் 170 ரூபாய்,ஒரு லிட்டர் ரீபைண்ட் ஆயில் 85 ரூபாய்,அப்போ ரீபைண்ட் ஆயில் வாங்குனா உங்களுக்கு பாதி பணம் அதாவது 85 ரூபாய் மிச்சம். 

அந்த பணத்தை சேர்த்து வச்சு என்னா செய்விங்க? நான் சொல்லட்டுமா!!! இப்படி மிச்சம் பிடிச்ச பணத்தை பேங்குல போட்டு வச்சு வட்டியும் முதலுமா டாக்டர் கிட்ட குடுபிங்க.ஆரோக்கியத்திர்க்கு கேடு விளைவிக்கும் பொருளை குறைந்த விலையில் கிடைக்குதேன்னு வாங்கி உபயோகபடுத்திட்டு பின்னால் நோய் வந்த பிறகு மிச்சம் பிடிச்ச பணத்தை டாக்டர் கிட்ட குடுத்துட்டு,உங்களையும் கஷ்ட படித்திக்கிட்டு இருக்கறதுக்கு, நல்ல தரமான பொருளை வாங்கி பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழலாமே!!! ஆரோக்கியம் தானே மிக பெரிய செல்வம்..

எண்ணெய் விலையை நாம் நினைத்தால் குறைக்கலாம். அது எப்படி ?
நாம் எந்த பொருளை விரும்புகிறோமோ அதை வியாபாரிகள் தயாரித்து கொடுக்க தயாராக இருக்கிறார்கள். எதை அதிகமாக வாங்குகிறோமோ அதன் தயாரிப்பும் அதிகரிக்கும். 


தயாரிப்பு அதிகரித்தால் விலை குறையும்.தரமான பொருளை அதிகமாக வாங்கினால் அதன் தயாரிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதன் மூலம் தரமான பொருளை நியாயமான விலையில் வாங்க முடியும். மட்டமான பொருளை விற்கிறார்களே என்று வியாபாரிகளை குறை சொல்லி பயனில்லை.நாம் எதை கேட்கிறோமோ,எதை அதிகம் வாங்குகிறோமோ அதை தானே அவர்கள் விற்ப்பார்கள்.

நீங்கள் விஷம் குடுங்கள் என்று கேட்டால் விஷம் தான் கொடுப்பார்கள்!.அதை விடுத்து அய்யய்யோ விஷத்தை ஏன்வாங்குகிறீர்கள் அதை சாப்பிட்டால் இறந்து விடுவீர்கள் என்று விளக்கம் சொல்லி கொண்டு இருக்க மாட்டார்கள். விஷம் சாப்பிட்டால் இறந்து விடுவீர்கள் என்று தெரிந்து கொள்ளவேண்டியது உங்கள் பொறுப்பு.மேலும் அவர்கள் எதை தயாரிக்கிறார்களோ,அதை ஆஹா ஓஹோ என்று தான்விளம்பரபடுத்துவார்கள். 


அது அவர்கள் வியாபாரயுக்தி.ரீபைண்ட் ஆயில் தயாரிப்பாளர்கள்ரீபைண்ட் ஆயில், பயன்படுத்தினால் கேன்சர்வராது என்று சொல்லி தான் விற்பார்கள். ஆனால் அது உண்மையா பொய்யா என்று நாம் யோசித்து 

வாங்கவேண்டும்.நாளைக்கே அந்த நிறுவனம் ரீபைண்ட் ஆயில் தயாரிப்பை நிறுத்திவிட்டு எள்ளெண்ணெய் விற்றால் அப்போது சொல்லுவார்கள் ரீபைண்ட் ஆயில் பயன்படுத்தினால் கேன்சர் வரும் என்று!!!!

நம் முன்னோர்கள் அந்த காலத்தில் செக்கில் ஆட்டி எடுத்த தேங்காய் எண்ணெயையும்.,நல்லெண்ணையையும் அப்படியே உபயோகித்தனர்.இந்த எண்ணெய்கள் அடர்த்தியாகவும்.,நிறமாகவும்., மணமாகவும் இருக்கும்.இதற்கு காரணம் அந்த எண்ணெய்களில் உள்ள ஊட்டசத்துக்கள் தான்.இதனால் தான் உடல் ஆரோக்கியத்திற்க்கு தேவையான புரோட்டீன்கள், வைட்டமின்கள்,தாதுப்பொருள்கள், நார்ச்சத்துக்கள் , குளோரோபில்,கால்சியம், மெக்னீசியம்,காப்பர், இரும்பு,பாஸ்பரஸ்,வைட்டமின் " இ " போன்றவை நமக்கு கிடைத்து வந்தன..

இந்த தாதுப்பொருட்கள் மூலம் உற்பத்தியாகும் மெழுகு போன்ற பொருள்கள் மூட்டுகளுக்கு சென்று.,எலும்பு தேய்மானத்தை தடுத்தன.


#‎நம்‬ முன்னோர்கள் உடற்பயிற்சி செய்து முடித்ததும் ஒரு கிண்ணம் நிறைய நல்லெண்ணெய் குடிக்கும் வழக்கத்தையும் வைத்து இருந்தனர்.இதை உணவுக்கு மட்டுமின்றி. குளியலுக்கும்,மசாஜ் செய்வதற்க்கும் உபயோகித்த காரணத்தால் அவர்கள் 80 வயது வரை மூட்டு வலியின்றிகால்நடையாகவே சென்று வந்தனர்.அதனால் தான் எல்லாம் அறிந்த நம் முன்னோர்கள் இதை எள் எண்ணெய் என்று சொல்வதற்கு பதிலாக " நல்ல எண்ணெய் "என்று சொன்னார்கள்.

வெளிநாட்டில் கூட இதை " Queen of Oil "என்று அழைக்கிறர்கள்.ஆனால் இன்று நாம் உபயோகிக்கும் ரீஃபைண்ட் ஆயிலில் உயிர்சத்துக்கள் எதுவுமே இல்லை என்பது அதிர்ச்சியான உண்மை.புதுசா புதுசா எதை எதையோ கண்டுபிடுச்சு அதை குறைந்த விலையில் விற்று நம்மை சோதனை எலிகளை போல் பயன்படுத்துகிறார்கள். இதன் முடிவு பத்து வருஷம் கழித்து தான் தெரியும்.அப்போ தான் சொல்வார்கள் இதை பயன்படுத்தியதால் தான் இப்படி என்று!அனால் அப்போது தெரிந்து என்ன பயன்.

யோசிங்க நீங்க சோதனை மனிதராக இருக்க ஆசைபடுரிங்களா? இல்லை ஏற்கனவே நம்ம முன்னோர்கள் காலம் காலமாக உபயோகபடுத்திய உணவு முறையை பின்பற்றி அவர்கள் போலவே 80,90 வயது வரை ஆரோக்கியமாக வாழஆசை படுறிங்களா?.அட்லீஸ்ட் வாழும் காலம் வரை நோயில்லாமல் வாழ வேண்டும் என்பது தானே அனைவரது விருப்பமும்.எதை வாங்குகிறோம் என்பதில் தெளிவாக இருப்போம்.
 

நன்றி : சரவணக்குமார் வே

வியாழன், 18 ஜூன், 2015

எதை எதையோ ஷேர் பண்றீங்க முதலில் இத பண்ணுங்க அவசியம் அனைவரும், அறிய வேண்டிய ஒன்று ......

"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.

(http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் புகார்களை அளிக்கலாம். நீங்கள் அளித்துள்ள
புகார் சம்பந்தமாக

தாங்கள் செய்துள்ள புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
(http://cmcell.tn.gov.in/login.php)

தபால் மூலம் அனுப்பும் புகார்கள்....
Chief Minister's Special Cell ,
Secretariat, Chennai - 600 009.
Phone Number : 044 - 2567 1764
Fax Number : 044 - 2567 6929
E-Mail : cmcell@tn.gov.in
[05:11, 07/06/2015] ‪+91 98421 71532‬: தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள்
01.அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ்
02.அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி
03.அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி
04.அ.இ.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
05.அ.இ. லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம்
06.இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்
07.இந்திய ஜனநாயகக் கட்சி
08.இந்திய தேசிய லீக்
09.இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)
10.இந்தியப் பொதுவுடமைக் கட்சி
11.இந்தியா ஜனநாயக கட்சி
12.இந்து மக்கள் கட்சி
13.இந்து முன்னணி
14.இல்லத்தார் முன்னேற்றக் கழகம்
15.காமன்வீல் கட்சி
16.கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி
17சென்னை மாகாண சங்கம்
18.ஜனநாயக மக்கள் கூட்டணி
19.ஜனநாயக முற்போக்குக் கூட்டணி
20.தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்
21.தமிழக முன்னேற்ற கழகம்
22.தமிழக முன்னேற்ற முன்னணி
23.தமிழக ராஜீவ் காங்கிரசு
24.தமிழக வாழ்வுரிமை கட்சி
25.தமிழரசுக் கழகம்
26.தமிழ் தேசியக் கட்சி
27.தமிழ் மாநில காங்கிரசு
28.தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
29.தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி
30.தமிழ்நாடு தேசிய ஆன்மிக மக்கள் கட்சி
31.தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
32.தாயக மறுமலர்ச்சி கழகம்
33.கொங்குநாடு முன்னேற்றக் கழகம்
34.திராவிட முன்னேற்றக் கழகம்
35.திராவிடர் கழகம்
36.தேசிய முற்போக்கு திராவிட கழகம்
37.தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு
38.கொங்கு இளைஞர் பேரவை
39.நாம் தமிழர் கட்சி
40.பாட்டாளி மக்கள் கட்சி
41.புதிய தமிழகம் கட்சி
42.மக்கள் இயக்கம் (தமிழ்நாடு)
43.மனிதநேய மக்கள் கட்சி
44.மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
45.முக்குலத்தோர் மக்கள் கட்சி
46.மூவேந்தர் முன்னணிக் கழகம்
47.மூவேந்தர் முன்னேற்றக் கழகம்
48.விடுதலைச் சிறுத்தைகள்
49.தமிழின முன்னேற்ற கழகம்
50.பொது இயக்கங்கள் / கழகங்கள் / கூட்டமைப்புகள்
மற்றும் கம்யூனிஸ்ட்கள்

[05:11, 07/06/2015] ‪

+91 98421 71532‬:
உங்களுக்கான பிரச்சினைகள் தொடர்கிறதா
தீர்வு கிடைக்கவில்லையா.
கவலை வேண்டாம்
இவற்றில் ஏதேனும் ஒன்றிலாவது உங்களுக்கு தீர்வு கிடைக்கலாம்...

அவசரதேவைகளுக்கு
குறித்து வைத்துக்கொள்ளுங்கள்....



TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY GOVERNOR His Excellency Thiru. K. ROSAIAH
Office : 044 2567 0099
Intercom : 5618
Residence : 044 2235 1313

CHIEF MINISTER Hon. Selvi J JAYALALITHAA
Telephone No : 044 2567 2345
Intercom : 5666

LEADER OF OPPOSITION Thiru. VIJAYKANT
Telephone No. : 044 2567 0821, 2567 0271/104
Residence: Telephone No. : 044 2376 4377

SECRETARY Thiru A.M.P. JAMALUDEEN, M.Sc., B.L.,
Telephone No : 2567 2611, 2567 0271/105 Cell No : 77080 70111
Residence Telephone No : 2615 6146

Kalaignar Karunanidhi
FB ADMIN 9941127722 (admin)
Kalaignar Arangam
+(91)-44-24327261, +(91)-9444221426

All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
+91 – 44 – 2813 07 87
+91 – 44 – 2813 22 66
+91 – 44 – 2813 3510

தமிழக செய்தி ஊடகங்கள்

www.dailythanthi.com
044 2538 7731

dinakaran daily newspaper
Ph: 91-44-42209191 Extn:21102
Ph: 91-44-42209191 Extn:21240, 21241

To send articles for Dinamani Daily -
dinamanimds@dinamani.com
+91-44-2345 7601 - 07

The Hindu (Head Office)
+(91)-7299911222, 9710011222, 9710929060, 9884024167, 9841725344, 9841810070, 9841245778
+(91)-44-28576300, 28575757, 28589060, 28575711, 28575714, 28410643, 28416250, 28575729, 28576309, 28418297 .
+(91)-44-28415325, 28416290

புதிய தலைமுறை - New Generation Media Corporati...
+(91)-44-45969500, 45969530
+(91)-8754417308
Puthiya Thagaval The News
+(91)-9382222900

Sun Network
+(91)-9844154181
Sun TV Network Ltd (Corporate ...
+(91)-44-44676767, 42059595

Raj Television Network Ltd
+(91)-44-24352926, 24351898, 24334376, 24334150, 24334149, 24334151, 24351307
+(91)-44-24341260, 24336332

Vijay TV
+(91)-44-39304050, 28205562, 28316000, 28224722
+(91)-44-28224755

Jaya TV
+(91)-44-43960000, 43960144

News 7 Tamil
+(91)-7708384077
+(91)-44-40300777, 40777777

Tamil News
+(91)-44-28544460, +(91)-9600646353
Tamil News Agency
+(91)-44-26156783

தமிழக மனித உரிமை அமைப்புகள்

International Human Rights Association
+(91)-8807708423
Human Rights Council Of India
+(91)-22-28978877, +(91)-9619774060
Human Rights Association Of India
+(91)-22-22813876, +(91)-9320111118
Human Rights Foundation
+(91)-9321451179, 9819390199
Human Rights Association Of India
+(91)-9870731819
Human Right's India
+(91)-22-24944704, +(91)-9987876587
HUMAN RIGHTS ORG (Regd.)
+(91)-9702820786

ஞாயிறு, 24 மே, 2015

*Folder Lock® Pro இலவசமாக

நண்பர்களுக்கு வணக்கம் , நான் இன்று பதிவிடும் App உங்களுக்கு பயன்படும் என்று நம்புகிறேன்
☆★☆ ---> Folder Lock® Pro <--- ☆★☆
இதன் விலை PlayStore இல் 250 ருபாய் .. ஆனால் உங்களுக்கா இலவசமாக இதோ
லிங்க் : Folder Lock® Pro
உங்கள் Personal Files ஐ Password உடன் பாதுகாக்க சூப்பர் App....E.g. Photos, Videos, Documents, Contacts, Wallet Cards, Notes and Audio Recordings in Android Phones
இதில் உள்ள ஒரு சிறப்பு அம்சம் , நீங்கள் Lock செய்த Data வை Online இல் Save பண்ண முடியும்
மேலும் இதில் பல அம்சங்கள் உள்ளது அதை கீழே பார்போம்
*Folder Lock® Pro இன் அம்சங்கள்
★Protect and hide sensitive audio, videos and photos
★Lock down important documents
★Cloud backup with Drop box
★Write secure notes
★Record voice memos secretly
★Share your locked data
★Directly lock photos/videos from phone’s gallery
★Create contacts and contact groups, also send multiple secret SMS to them
★Options to save data on phone’s memory or external memory card
★Recovery of lost data
★Decoy password (fake login)
★Panic switch to prevent others from snooping on your lock data.
★Hide traces of Folder Lock using stealth mode
★Security credentials including Password, pattern and pin
★Recover security credentials
★Brute force attack prevention
★Take snaps of unauthorized login attempts
முடிந்தால் ஒரு ஷேர் செய்து நண்பர்களுக்கு பகிரவும்
எதாவது சந்தேகம் இருந்தால் கமெண்ட் பாக்ஸ் இல் கேளுங்க
முடிந்தால் ஒரு ஷேர் செய்து நண்பர்களுக்கு பகிரவும்
=======================================
.
இந்த பக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
.
ஆண்ட்ராய்டு- Android Hacks And New Apps's photo.

வேறு ஒரு நிறுவனத்துடைய SIM யை இன்னொரு USB Dongle இல் உபயோகிப்பது எப்படி?

★★★ SuNdAy SpEcIaL ★★★
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நாம் பயன் படுத்தும் இணையச்சேவை வழங்குனர்களின் (Airtel, Reliance ,Docomo, Mts,vodafone, Idea & BSNL) Dongle இதை நாம் வாங்கினால் அவர்களுடைய SIM யை தவிர வேறு எந்த SIM யையும் உபயோகிக்க‌ இயலாதவாறு தடுத்து வைத்து இருப்பார்கள்.
நாம் வேறு ஒரு நிறுவனத்துடைய SIM யை இன்னொரு Dongle இல் போட்டால் Unlock Code கேட்கும்.அதில் சரியான Code யை நாம் கொடுத்து விட்டால் அந்த Dongle , Unlock செய்யப்பட்டு விடும்.சரி இந்த Unlock Code யை எப்படி கண்டுபிடிப்பது?
முதலில் உங்களுடைய Dongle இன் 15 இலக்கத்தை கொண்ட IMEI Number ஐ கண்டுபிடியுங்கள்.இது Dongle இன் பின் புறத்தில் காணப்படும். இதை அப்படியே Copy செய்து இந்த தளம் சென்று
★Huawei Dongle எனில் இந்த
http://www.wintechmobiles.com/tools/huawei-code-calculator/ தளத்திற்கும்
அல்லது
★ZTE Dongle எனில்
இந்தhttp://www.wintechmobiles.com/?ddownload=959
★All Dongle Unlock Software Free Download
http://unlockalltypeusbmodem.weebly.com/unlock-dongle.html
தளத்திற்கு சென்று

உங்களுடைய DONGLEஇன் IMEI கொடுத்து CALCULATE CODES கொடுக்கவும்.
இப்போது உங்களுடைய Dongle க்குறிய Unlock Code கிடைக்கும். அதை அப்படியே Copy செய்து விட்டு, வேறு ஒரு நிறுவனத்துடைய SIM இனை Dongle லில் போடுங்கள்.உங்களிடம் Unlock Code திரும்பவும் கேட்கும், அந்த இடத்தில் Paste செய்து கொள்ளுங்கள் Unlock ஆகிவிடும். சிம்பிள் அவ்வளவுதான்.\
பெரும்பாலனோர் இது வரை ஒரு முறை சரீஸ் டிஸ்கனெக்ட் செய்யப்பட்டால் அந்த டாங்கிலை காட்சி பொருளாகத்தான் வைத்திருப்பர். இனி (Airtel, Reliance ,Docomo, Mts,vodafone, Idea & BSNL) Dongle எதை வேண்டுமானாலும் உபயோகிக்க‌ முடியும்
முடிந்தால் ஒரு ஷேர் செய்து நண்பர்களுக்கு பகிரவும்
========================================
.
இந்த பக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள்
நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
.
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
.
ஆண்ட்ராய்டு- Android Hacks And New Apps's photo.

NovaPDF Lite 8 இலவச Licence Key

 

Word documents, Excel sheets, PowerPoint presentations, AutoCad drawings, E-mails, மற்றும் Web pages போன்றவைகளை அவற்றின் தரத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படாதவாறு PDF கோப்புக்களாக மாற்றிக்கொள்வதற்கும் அவற்றினை மிக நேர்த்தியாக நகல் (Print) எடுப்பதற்கும் NovaPDF Lite எனும் மென்பொருள் துணைபுரிகிறது.

NovaPDF Lite 8 எனும் இந்த மென்பொருளானது $19.99 பெறுமதியான கட்டணத்தை செலுத்தி பெறவேண்டிய மென்பொருளாகும். இருப்பினும் கீழுள்ள இணைப்பை சுட்டுவதன் மூலம் பெறப்படும் இணையப்பக்கத்தில் உங்கள் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிட்டு Get Free Licence என்பதனை அழுத்துவதன் மூலம் இலவச Licence Key ஐ உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு பெற்றுக்கொள்ளலாம்.

இதனை தரவிறக்க கீழுள்ள இணைப்பை சுட்டுக.
====> NovaPDF-Lite-8
இலவச Licence Key ஐ பெற கீழுள்ள இணைப்பை சுட்டுக.
====> Free-Licence-Key_Tamilinfotech
.
.
.
.
.
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக்கொள்ளலாம்.

செல்போன் தொலைந்தால் என்ன செய்ய வேண்டும்?

Padmanabhan Ks's photo.

*********************************************************
செல்போன்களின் எண்ணிக்கை, செல்போன் வாங்குவோரின் எண்ணிக்கை மற்றும் செல்போன் தயாரிப்பு நிறுவனங்களின் எண்ணிக்கை எப்படி நாளுக்குநாள் அதிகரித்து வருகிறதோ அதேபோலத்தான் செல்போன் தொலைப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிறது. சில போன்கள் திருடப்படுகின்றன. சில செல்போன்களை நாமாகவே தொலைத்துவிடுகின்றோம். அப்படி செல்போன் தொலைந்துபோனால் உடனடியாக செய்யவேண்டியது என்ன என்பதையே இன்று நாம் பார்க்கவிருக்கிறோம்.

சாதாரண செல்போன் காணாமல் போனால் கூட அதிக கவலை இல்லை. ஸ்மார்ட்போன்கள் எனப்படுகின்ற அதிநவீன, விலையுயர்ந்த செல்போன் காணாமல்போனால் என்ன செய்ய? ஸ்மார்ட்போன் அனுகூலங்களை மட்டுமே பயன்படுத்திக் கொள்ள துடிப்பாக இருக்கும் பலரும் அது தரும் பாதுகாப்பு அம்சங்களை பயன்படுத்த தவறுகிறார்கள். தகவல்கள் கீழே!

செல்போன் பாதுகாப்பு:

ஒரு ஸ்மார்ட்போனை வாங்கிய கையோடு அதன் 'செட்டிங்ஸ்' வழங்கும் அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் ஆராய்ந்து பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இதற்கு விற்பனை பிரதிநிதி அல்லது அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டரில் தேவையான உதவி கிடைக்கும். பின் நம்பர், பேட்டர்ன் லாக் எனப்படும் பல கடவுச்சொற்கள் முறையானது உங்கள் செல்போன் அல்லது ஸ்மார்ட்போனை மற்றொருவர் பயன்படுத்துவதற்கெதிராக செயல்படும்.

மொபைல் டிராக்கிங்:

மொபைல் டிராக்கிங் என்னும் வசதியை ஆக்டிவேட் செய்வதன் மூலம், உங்களது சிம்கார்டு தவிர்த்து வேறு சிம்கார்டுகளை உங்கள் மொபைலில் பொறுத்தினால்... அந்த சிம்கார்டு குறித்த விபரங்களை உங்கள் குடும்பத்தினர் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்குமாறும் அமைக்கலாம்.

மொபைல் இன்ஷூரன்ஸ்:

பல ஆயிரங்கள் மதிப்புள்ள ஒரு ஸ்மார்ட்போனுக்கான இன்ஷூரன்ஸ் வெறும் நூற்று சொச்ச ரூபாய்கள் தான். போலீஸில் புகார் கொடுத்ததற்கான சான்றோடு, மொபைல் வாங்கியதற்கான பில், காப்பீட்டு விபரம் இவற்றை இணைத்து காப்பீட்டு நிறுவனத்திடம் நேரடியாகவோ, தபால் மூலமோ அணுகினால், தொலைந்த போனுக்கான காப்பீடு கிடைக்கும்.

சிம்கார்டை பிளாக் செய்க:

மொபைல் காணாமல் போனது உறுதியானதும் நீங்கள் சந்தாதாரராக இணைப்பில் இருக்கும் செல்போன் நிறுவனத்தை தொடர்புகொண்டு உங்கள் சிம் கார்டை முடக்குங்கள். பின்னர் அருகிலிருக்கும் கிளையை அணுகி அதே எண்ணில் புதிய சிம்கார்டை, பேலன்ஸ் டாக் டைமுடன் பெற்றுக் கொள்ளுங்கள்.

காவல் நிலையத்தில் புகார்:

சிம்கார்டை பிளாக் செய்ததற்கும், புதிய சிம் வழங்கியதற்குமான அவர்கள் வழங்கும் அத்தாட்சி நகலோடு, செல்போன் பில் நகலையும் இணைத்து, காவல் நிலையத்தில் புகார் செய்யுங்கள். முடிந்தால் திருடுபோன செல்போனை கண்டுபிடித்து தருவார்கள் அல்லது சில நாட்களுக்குப் பின்னர், 'கண்டுபிடிக்க முடியவில்லை' என்பதற்கான சான்றை தருவார்கள்.

மொபைல் பேங்கிங் வசதியை முடக்குங்கள்:

ஸ்மார்ட் போன் தொலைந்து போவதில், இன்னுமொரு பண இழப்பை தவிர்க்கும் நடவடிக்கை. மொபைல் பேங்கிங் செயல்பாட்டை முடக்குவதுதான். இதற்கு உங்கள் வங்கி சேவையாளர் மையத்தை கால்சென்டர் உதவியுடன் அணுகி மேற்படி இணைப்பில் இருக்கும் மொபைல் பேங்க் வசதியை ரத்து செய்யுமாறு கோரலாம்.

அந்தரங்க படங்களை தவிருங்கள்:

தனிப்பட்ட மற்றும் அந்தரங்க படங்கள், வீடியோக்களை ஸ்மார்ட்போனில் இருப்பு வைப்பதை தவிர்க்க வேண்டும். அந்த மாதிரியான பர்சனல் படங்களை எடுக்காமல் தவிர்ப்பதே உத்தமம். ஸ்மார்ட் போனில் சேகரிக்கும் ஏனைய படங்கள், வீடியோக்களை அவை பதிந்திருக்கும் ஃபோல்டருக்கு தனியாக பாஸ்வேர்டு உபயோகிப்பதன் மூலம் பாதுகாக்கலாம்.

ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்கள்:

நீங்கள் பயன்படுத்தும் செல்போன் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படுவதாக இருந்து, உங்கள் போனில் அதிநவீன வசதிகள் இல்லாவிட்டால் இலவசமாக கிடைக்கும் ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்கள் பயன்படுத்தியும் பாதுகாக்கலாம்.

சாதாரண செல்போனாக இருந்தால்,

1. அது தொலைவதற்கு முன்பே, அந்த போனில் இருந்து *#06# என்ற எண்ணுக்கு போன் செய்யுங்கள்.

2. உங்கள் செல்போனில் 15 டிஜிட் நம்பர் வரும்,

3. இந்த நம்பர் தங்கள் செல்போனின் IMEI (International Mobile station Equipment Identity) number ஆகும்.

4. இதனை தாங்கள் டைரியிலோ அல்லது வேறு இடத்திலோ குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

5.மொபைல் காணாமல் போனது உறுதியானதும் நீங்கள் சந்தாதாரராக இணைப்பில் இருக்கும் செல்போன் நிறுவனத்தை தொடர்புகொண்டு உங்கள் சிம் கார்டை முடக்குங்கள். பின்னர் அருகிலிருக்கும் கிளையை அணுகி அதே எண்ணில் புதிய சிம்கார்டை, பேலன்ஸ் டாக் டைமுடன் பெற்றுக் கொள்ளுங்கள்.

6. அதன்பிறகு , உடனே இந்த (IMEI) நம்பரை cop@vsnl.net - க்கு மெயில் அனுப்ப வேண்டும்.

7. தங்களது செல்போன் இருக்குமிடம் 24 மணி நேரத்துக்குள் GPRS (General Pocket Radio Service) மூலம் கண்டறியப்படும்.

சனி, 23 மே, 2015

புதன், 15 ஏப்ரல், 2015

இணைய சமவாய்ப்பு நிலை "நெட் நியூட்ராலிட்டி"!http://www.savetheinternet.in

அழைப்பாளன் Azhaippaalan's photo.
"நெட் நியூட்ராலிட்டி"!
தற்போது இணையத்தில் அதிகம் பேசப்படும் விஷயம்
நெட் நியூட்ராலிட்டி.
அப்படியென்றால்..?

மிகச் சுருக்கமாக சொல்வதானால் 'இதுநாள் வரை நீங்கள் இலவசமாகப் பயன்படுத்திய ஆப்ஸ்களை இனி கட்டணம் செலுத்தி பயன்படுத்த வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால், அதனால் உங்களுக்குப் பாதிப்புதானே!
அந்த நிலை ஏற்படாமல் தற்போதுள்ள இணைய சமவாய்ப்பு நிலை தொடர்வதே நெட் நியூட்ராலிடீ.

இதனால் இது பற்றி விவாதம் தற்போது சூடு பிடித்துள்ளது.
இது பற்றி தீர்மானம் செய்ய 'ட்ராய்' (TRAI) மக்களிடம் கருத்து சேகரிப்பு செய்யும் பொருட்டு 20 கேள்விகளை முன் வைத்துள்ளது.
எனவே, இந்த கட்டணத்துக்கு எதிராக, அதாவது, நெட் நியூட்ராலிட்டிக்கு ஆதரவாக, ட்ராய் கேட்கும் 20 கேள்விகளுக்கும் நமது பதிலைப் ஏப்ரல் 24ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

இதனால் நெட் நியூட்ராலிட்டிக்கு ஆதரவு பெருகும். இல்லாவிட்டால் மிகச் சிலர் சொல்லும் கருத்தை வைத்து தவறான முடிவு எடுக்க வாய்ப்புள்ளது.
ஆனால் இக்கேள்விகள் முழுவதையும் படித்து பதிலளிப்பது நம் போன்ற சாதாரண மக்களுக்கு மிகக்கடினம்.
இதற்காகவே

>> http://www.savetheinternet.in

என்ற தளம் தொடங்கப்பட்டுள்ளது.
உங்கள் கணினி மற்றும் மொபைல் ப்ரவுஸரில் இருந்து இத்தளத்தை திறந்தால் அந்த அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதில்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
மேலும்

அவை தானாக நமது ஈமெயில் செயலி வழியாக ட்ராய் க்கு செல்லும் வகையிலும் கூட வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இணைய சமதன்மையைப் பாதுகாக்க தயவு செய்து விரைந்து செயல்படுங்கள். உங்களது ஒரு மின்னஞ்சல் நாளைய செல்போன் கட்டணத்தை தீர்மானிப்பவையாக இருக்கக் கூடும்.
http://www.savetheinternet.in

உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.!!

செவ்வாய், 14 ஏப்ரல், 2015

Keyboard-ல் இல்லாத நூற்றுகணக்கான Special Character-களை உபயோகிக்க

Special character பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். நாம் உபயோகிக்கும் கணினி keyboard-ல் அனைத்து special Character இருக்காது. நூற்றுகணக்கான Special character-கள் உள்ளது. இந்த special character அனைத்தையும் எப்படி நம் கணினியில் உபயோகிப்பது என பார்க்கலாம். இதற்கென ஒரு இணைய தளம் உள்ளது. இந்த தளத்தில் எண்ணற்ற special characters அடங்கியுள்ளது. இந்த special characters பல்வேறு வகைகளாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது.

முதலில் இந்த http://copypastecharacter.com/ link-ல் click செய்து இந்த தளத்திற்கு செல்லுங்கள்.


இதில் உங்களுக்கு தேவையான special character மீது click  செய்தால் அந்த special character copy செய்யப்படும். மேலே உள்ள படத்தில் நான் வட்டமிட்டு காட்டி இருப்பதை adjust செய்து special character அளவை பெரிது படுத்தி கொள்ளலாம்.

மற்றும் special character-களை Html Code ஆகவும் copy செய்து கொள்ளலாம். இப்படி நூற்றுகணக்கான special characterகளையும் உங்கள் document பதிவிலோ உபயோகித்து கொள்ளலாம்.  இந்த தளம் டிசைனர்களுக்கு மிகவும் பயனுள்ள தளமாக இருக்கும்.
 

வியாழன், 9 ஏப்ரல், 2015

COMPUTER என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா?

alt



நாம் எத்தனையோ ஆண்டுகளாக COMPUTER பயன்படுத்தி வருகிறோம்.  ஆனால் இன்னும் சிலருக்கு COMPUTER 'ன் முழு பெயர் தெரியவில்லை.  அவர்களுக்காக இதை எழுதுகிறேன்.


C  - Common
O  - Oriented
M  - Machine
P  - Particularly
U  - Used for
T  - Trade
E  - Education and
R  - Research


COMPUTER - Common Oriented Machine Particularly Used for Trade Education and Research

Plz Read: www.masinfom.blogspot.com

ஞாயிறு, 5 ஏப்ரல், 2015

கம்ப்யூட்டரை முறையாக இயக்கி உலக வெப்பமயம் ஆவதைத் தடுப்போம் | Computer Maintenance Methods in Tamil

இன்றைய சுற்றுப் புறச் சூழல் ஆய்வாளர்கள் அனைவரும் உலக வெப்பமயமாவதைத் தடுக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர். இதில் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களும் ஆற்ற வேண்டிய கடமை உள்ளது. இது குறித்து ஆய்வு செய்த டப்ட்ஸ் (Tufts) பல்கலைக் கழகம், சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. இவற்றைப் பின்பற்றுவதால், ஏற்கனவே நாம் புவி வெப்பமயமாதலில் ஏற்படுத்திய அழிவைச் சரி செய்ய முடியாது என்றாலும், சீதோஷ்ண நிலை மாறிவருவதனை ஓரளவிற்குத் தடுக்கலாம்.
15 நிமிடங்கள் அல்லது அதற்கும் மேலாக (உணவு சாப்பிடுதல், வெகுநேரம் தொலைபேசியில் பேசுதல், மேலதிகாரி அறைக்கு வேலை நிமித்தம் செல்லுதல் போன்றவைகளுக்காக) கம்ப்யூட்டரைப் பயன்படுத்தப் போவதில்லை என்றால், மானிட்டரை ஆப் செய்துவிடுங்கள்.

ஒரு மணி நேரத்திற்கு மேல் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தப் போவதில்லை என்றால், கம்ப்யூட்டரை நிறுத்திவிடுங்கள். இது காப்பி எடுக்கும் சாதனம், பிரிண்டர், ஸ்கேனர் மற்றும் பேக்ஸ் சாதனங்களுக்கும் பொருந்தும். கம்ப்யூட்டர் ஒன்றை 24 மணி நேரம் தொடர்ந்து இயக்குவதால், ஓராண்டில் அது 1,500 பவுண்ட் கார்பன் டை ஆக்ஸைடை வெளியே அனுப்புகிறது. மரம் ஒன்று ஒவ்வொரு ஆண்டும் 3 முதல் 15 பவுண்ட் கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சுகிறது. அப்படியானால், ஒரு கம்ப்யூட்டர் விடும் கெட்ட காற்றை நீக்கிச் சுத்தப்படுத்த 100 முதல் 500 மரங்கள் வரை தேவையாயிருக்கும்.
நீங்கள் புது கம்ப்யூட்டர் வாங்குவதாக இருந்தால், லேப்டாப் கம்ப்யூட்டரை வாங்குங்கள். லேப்டாப், டெஸ்க்டாப் கம்ப்யூட்டரைக் காட்டிலும் கால் பங்கு மின்சக்தியே பயன்படுத்துகிறது. மானிட்டர் வாங்குவதாக இருந்தால், எல்.சி.டி. மானிட்டர்களையே வாங்கவும். அவை சி.ஆர்.டி. மானிட்டரைக் காட்டிலும் மூன்றில் ஒரு பங்கு சக்தியையே பயன்படுத்துகின்றன.
உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பவர் மேனேஜ்மெண்ட் வசதியை அவசியம் பயன்படுத்தவும். கம்ப்யூட்டரை ஸ்டேன்ட் பை மோடில் வைத்திட வேண்டாம்.ஏனென்றால் அந்நிலையிலும், மின்சக்தியை கம்ப்யூட்டர் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கும். ஸ்விட்ச் ஆப் செய்தால் தான் இது முற்றிலும் நிறுத்தப்படும்.
மானிட்டரை ஆப் செய்து, பின் மீண்டும் அதனை இயக்குவது சிலருக்கு வரக்கூடிய பழக்கமாக இருக்காது. இவர்களுக்கு உதவிட ஒரு சிறிய அப்ளிகேஷன் புரோகிராம் உள்ளது. இதனை இன்ஸ்டால் செய்து, செட் செய்திட வேண்டிய தில்லை. ஜஸ்ட், டவுண்லோட் செய்து இயக்கினால் போதும். இந்த புரோகிராமின் பெயர் MonitorES(Monitor Energy Saver). இதனை  
1.
https://code.google.com/p/monitores/downloads/detail?name=MonitorESLite.exeஎன்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாகப் பெறலாம்.
2.
https://github.com/ukanth/monitores
இது தானாக மானிட்ட ரை ஆப் செய்கிறது; மீடியா புரோகிராம்கள் பயன்படுத்தவில்லை என்றால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறது. இன்ஸ்டண்ட் மெசஞ்சரையும் பயன் படுத்தாவிட்டால், தற்காலிக செய்தி அனுப்பி நிறுத்தி வைக்கிறது; பெரிய அளவில் ஏற்படும் ஒலியை நிறுத்துகிறது. நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து எழுந்து நகர்ந்து, ஆனால் கம்ப்யூட்டர் அருகிலேயே இருந்தால், மானிட்டரை கண்ட்ரோல் + எப்2 அழுத்தி ஆப் செய்துவிடலாம். பின் மீண்டும் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்க்கத் தொடங்குகையில், ஏதாவது ஒரு கீயை அழுத்தினால் போதும்.
இதே போல Green Monitor என்றும் ஒரு அப்ளிகேஷன்
 http://greenutils.com/ Site/GreenUtils.html என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து கிடைக்கிறது. இதனையும் டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்.
நாம் இந்த கம்ப்யூட்டர் மானிட்டரை நிறுத்தியா, உலகம் வெப்பமயமாவது தடைபடப் போகிறது என்று எண்ண வேண்டாம். சிறுதுளி பெருவெள்ளம். எனவே உங்கள் பங்கையும் அளியுங்கள். மற்றவர்களையும் இந்த வழியைப் பின்பற்றுமாறு தூண்டுங்கள்.

இலவச டவுண்லோட் புரோகிராம்கள் - free download programs

இன்டர்நெட் பயன்பாடும் தகவல் பரிமாற்றமும் பெருகி வரும் இந்நாளில் எளிதான வேகமான டவுண்லோட் செய்திடும் புரோகிராம்களின் தேவையும் அதிகரித்து வருகிறது. இன்டர்நெட் இணைப்பு வழங்கும் வேகத்தைப் பயன்படுத்தி நாம் டவுண்லோட் செய்திடும் பைல்களை எந்த சிக்கலுமின்றி வேகமாக இறக்கித் தர நமக்கு டவுண்லோட் மேனேஜர் புரோகிராம்கள் தேவைப்படுகின்றன. 

அவ்வகையில் இணையத்தில் பல இலவச புரோகிராம்கள் நமக்கு கிடைக்கின்றன. பயர்பாக்ஸ் தொகுப்புடன் இத்தகைய வசதி இணைந்தே இருந்தாலும் டவுண்லோட் மேனேஜர் புரோகிராம்கள் தரும் பல வசதிகள் அதில் இல்லை. ஒரே பைலுக்கான பல டவுண்லோட் இøணைப்புகள், பிரிவு பிரிவாக டவுண்லோட் செய்திடும் வசதி, பல பைல்களை ஒரே முறை கிளிக் செய்து டவுண்லோட் செய்திடும் வசதி போன்ற பல வசதிகளை இந்த டவுண்லோட் மேனேஜர்கள் தருகின்றன. பொதுவாக இந்த கூடுதல் வசதிகள் எல்லாம் இத்தகைய புரோகிராம்களில் கட்டணம் செலுத்திப் பெறும் பதிப்புகளில் மட்டுமே கிடைக்கும். ஆனால் இலவச புரோகிராம்கள் அதிகமான எண்ணிக்கையில் உருவாக்கப்பட்டு கிடைக் கும் இந்நாளில் மேல் குறிப்பிட்ட வசதிகள் இலவசமாகக் கிடைக்கும் புரோகிராம்களிலேயே தரப்பட் டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு சில டவுண்லோட் மேனேஜர்களில் அதிகமான எண்ணிக்கையில் இந்த வசதிகள் தரப்பட்டிருப்பது இன்னும் சிறப்பாகும். அவற்றில் மிகச் சிறந்த
மூன்று டவுண்லோட் மேனேஜர் புரோகிராம்கள் குறித்து இங்கு தகவல்கள் தரப்படுகின்றன.

Free Download Manager
1. புரோகிராம் பெயர் : FreeDownload Manager
2. வழங்குபவர் : FreeDownload Manager.org
3. இன்டர்நெட் தள முகவரி: http://www.freeDownloadManager.org/download.htm 
4. பைல் அளவு: 5754 கேபி.

இது ஒரு ஓப்பன் சோர்ஸ் சாப்ட் வேர் தொகுப்பு. இதன் பெயருக்கேற்ற வகையில் சிறப்பான பல வசதிகளை இந்த புரோகிராம் தருகிறது. அனைத்து பிரவுசர் தொகுப்புகளுடன் இணைந்து செயல்படுகிறது. மிக அழகாக வடிவமைக்கப்பட்ட இன்டர்பேஸ் இயங்குகிறது. எப்.டி.பி. மற்றும் எச்.டி.டி.பி. வகைகளுக்குத் தனித்தனியே கிளையண்ட் புரோகிராம்கள் இணைக்கப்பட்டுள்ளன.

டவுண்லோட் செய்யப்பட வேண்டிய புரோகிராம்களை பகுதி பகுதிகளாகப் பிரித்து ஒரே நேரத்தில் வேகமாக டவுண்லோட் செய்து தருகிறது. டவுண்லோட் செய்திடும் நேரத்தில் இன்டர்நெட் தொடர்பு விட்டுப் போனாலோ அல்லது கம்ப்யூட்டர் முடங்கிப் போனாலோ அடுத்த முறை விட்டுப்போன இடத்திலிருந்து பைலை டவுண்லோட் செய்து இணைத்து தரும் திறன் கொண்டது. வீடியோ தளங்களிலிருந்து டவுண்லோட் செய்வதுடன் பார்மட்டுகளையும் மாற்றி தருகிறது. இதனுடன் இணைத்துத் தரப்பட்டுள்ள அப்லோட் மேனேஜர் புரோகிராம் பைல்களைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள அப்லோட் செய்திடும் வசதியைத் தருகிறது. ஒரு பைலை பல்வேறு லிங்க்குகளிலிருந்து ஒரே நேரத்தில் டவுண்லோட் செய்து தரும் திறன் கொண்டது. டவுண்லோட் செய்யப்படும் பைல்களை அதன் வகைகளுக்கிணங்க சேவ் செய்து நிர்வகிக்க உதவிடுகிறது.
ஒரு பைலை டவுண்லோட் செய்திடும் முன் அந்த பைல் குறித்து மற்றவர்கள் என்ன கருத்து தெரிவித்துள்ளார்கள் என்று காட்டப்படுகிறது. அதே போல நீங்களும் உங்கள் கருத்தைப் பதிவு செய்திடலாம். இதனால் கெடுதல் விளைவிக்கும் பைல்களை டவுண்லோட் செய்திடுவதனைத் தவிர்க்கலாம். மற்றவர்களுக்கும் எச்சரிக்கை செய்திடலாம்.

முழு இணையதளத்தையும் அப்படியே டவுண்லோட் செய்திடும் திறன் கொண்டது. இதற்கென எச்.டி.எம்.எல். ஸ்பைடர் என ஒரு புரோகிராம் பிரிவு தரப்படுகிறது. அதனால் தான் இதனை சைட் ரிப்பர் (‘site ripper’) என அழைக்கின்றனர்.

Orbit Downloader

1. புரோகிராம் பெயர் : OrbitDownloader
2. வழங்குபவர் : OrbitDownloader.com
3. இன்டர்நெட் தள முகவரி: http://www.orbitdownloader.com/download.htm 
4. பைல் அளவு: 2217 கேபி.

டவுண்லோட் மேனேஜர் புரோகிராம்களின் லீடர் என இது செல்லமாக அழைக்கப்படுகிறது. ஆடியோ மற்றும் வீடியோ பைல்களை டவுண்லோட் செய்திட துணை புரியும் நோக் கத்துடன் இந்த புரோகிராம் உருவாக்கப்பட்டதாக தெரிகிறது. புதிய சில அம்சங்களுடன் வழக்கம்போலான இ.எக்ஸ்.இ. மற்றும் காம் பைல்கள் மட்டுமின்றி ஸ்ட்ரீமிங் மீடியா வகையைச் சேர்ந்த ஆடியோ மற்றும் வீடியோ பைல் களை டவுண்லோட் செய்திடுகிறது. யு–ட்யூப் மற்றும் மை ஸ்பேஸ் போன்ற சில தளங்களிலிருந்து நேரடியாக டவுண் லோட் செய்திடும் வசதியைத் தருகிறது. இன்றைக்குக் கிடைக்கும் சிறந்த டவுண் லோட் மேனேஜர் புரோகிராம்களில் ஒன்று எனப் பலராலும் பாராட்டுப் பெற்றது.

இதனைப் பயன்படுத்த எந்தவிதமான ரெஜிஸ்ட்ரேஷனும் தேவையில்லை. விளம்பரங்களோ அல்லது ஸ்பை வேர் புரோகிராம்களோ இல்லை என சான்று பெற்றது. யு–ட்யூப் வீடியோக்களை டவுண்லோட் செய்திட இது மிக உகந்தது என பாராட்டுப் பெற்றது. தற்போதைய பதிப்பு 2.7.3.

Flash Get
1. புரோகிராம் பெயர் : FlashGet
2. வழங்குபவர் : Trend Media
3. இன்டர்நெட் தள முகவரி: http://www.flashget.com/download.htm 
4. பைல் அளவு: 4520கேபி.

இன்டர்நெட்டில் மிக அதிகமான எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களைக் கொண் டுள்ள புரோகிராமாக இது அறிவிக்கப்பட்டுள்ளது. டவுண் லோட் செய்கையில் நாம் பொதுவாக எதிர்நோக்கும் இரண்டு பிரச்னைகளை இது எளிதாக தீர்த்து வைக்கிறது. முதலாவது வேகம்; இரண்டாவது டவுண்லோட் செய்யப் பட்ட பைல்களைக் கையாளும் முறை; அவற்றை சோதனை செய்துவகைப்படுத்தும் வழிகள்.

இந்த புரோகிராம் முதலில் சீன சொல்லை ஒட்டி ஒஞுtஞிச்ணூ என அழைக்கப் பட்டது. இதன் புதிய பதிப்பு 1.9.6. இதில் மல்ட்டி சர்வர் ஹைபர் த்ரெடிங் டெக்னாலஜி பயன்படுத்தப்படுகிறது. இதனால் பல்வேறு புரோடோகால் முறைகளை இதில் பயன்படுத்தி டவுண் லோட் செய்திடலாம். இறக்கப் படும் பைலின் அளவிற்கேற்ப பைல் இறக்கப் படும் வேகம் 6 முதல் 10 முறை அதிகரிக்கப்படுகிறது. 

டவுண்லோட் செய்யப் படும் பைலை பகுதிகளாகப் பிரித்து ஒரே நேரத்தில் இந்த பகுதிகளை டவுண்லோட் செய்து பின் இணைத்துத் தருகிறது. ஒரு பைல் மட்டுமல்ல, ஒரே நேரத்தில் பல பைல்களை இது போல பிரிவுகளாகப் பிரித்து டவுண்லோட் செய்கிறது. அத்துடன் எந்த நேரத்தில் எந்த பைலை டவுண்லோட் செய்திட வேண்டும் என வரையறை செய்திடலாம். இதனால் நம் இன்டர் நெட் இணைப்பு வேகத்தினை ஒட்டியும் நம் தேவையை பொறுத்தும் டவுண் லோட் செய்திட முடிகிறது.

இந்த புரோகிராமைப் பயன்படுத்துகையில் எந்த அட்–வேர் புரோகிராமும் குறுக்கிடாது. எந்தவிதமான ஸ்பைவேர் புரோகிராமும் இல்லை என்று பலராலும் கணிக்கப்பட்டுள்ளது. மிகக் குறைவான ராம் மெமரியைப் பயன்படுத்துவதால் டவுண்லோட் செய்திடுகையில் நம்முடைய வேலையை கம்ப்யூட் டரில் தொடர்ந்து மேற் கொள்ளலாம். டவுண்லோட் முடிந்தவுடன் தானாக கம்ப்யூட்டரில் உள்ள ஆண்டி வைரஸ் தொகுப்பினை இயக்கி டவுண்லோட் செய்யப் பட்ட பைலில் வைரஸ் எதுவும் இருக்கிறதா என்று சோதனை செய்கிறது.


ஒரே பைலுக்கான பல டவுண்லோட் இøணைப்புகள், பிரிவு பிரிவாக டவுண்லோட் செய்திடும் வசதி, பல பைல்களை ஒரே முறை டவுண்லோட் செய்திடும் வசதிபோன்ற பல வசதிகளை இந்த டவுண்லோட் மேனேஜர்கள் தருகின்றன. அவற்றில் மிகச் சிறந்த மூன்று டவுண்லோட் மேனேஜர் புரோகிராம்கள் குறித்து இங்கு தகவல்கள் தரப்படுகின்றன. டவுண்லோட் செய்கையில் நாம் பொதுவாக எதிர்நோக்கும் இரண்டு பிரச்னைகளை இது தீர்த்து வைக்கிறது. முதலாவது வேகம்; இரண்டாவது டவுண்லோட் செய்யப்பட்ட பைல்களைக் கையாளும் முறை; அவற்றை சோதனை செய்து வகைப்படுத்தும் வழிகள். 

சனி, 28 மார்ச், 2015

இனி Twitter இல் பாட்டும் கேட்கலாம்!!!

17-nowucanlistentomusic
மிக வேகமாக  செய்திகள்  பரவக் காரணமாக இருக்கும் சமூக ஊடகமான  டிவிட்டர், விரைவு  செய்திகளுக்கான தளமாகவே இயங்கி  வருகிறது. மிக சிறப்பான  செய்தி  ஊடகமாக  இருந்தாலும் அது  தனது  வருவாயை பெருக்குவதில் சில  சிக்கலை  சந்தித்து  வருகிறது. சமூக  வலைதளங்களை பொருத்தவரை பயனாளர்கள் அதிக நேரம் தனது  தளத்தில் தக்கவைக்கும்போதே  விளம்பர வருவாயை பெற முடியும். அதனால் அதிக  

நேரம் பயனாளர்களை தன் தளத்திலேயே தக்கவைத்துகொள்ள பல்வேறு புதிய முயற்சிகளை  எடுத்து வருகிறது.

  அதன் ஒரு கட்டமாக இப்பொழுது, பயனாளர்கள் தங்கள்  timelines மற்றும் செய்தி பிரிவுகளில் இருந்தபடியே பாடல், இசை அல்லது எதேனும் ஒரு ஒலி களை கேட்கும் வாய்ப்பினை அளிக்க உள்ளது.
 A portrait of the Twitter logo in Ventura
   இதற்காக பெர்லினை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும்.  ஒலிச் சேவை நிறுவனமான SoundCloud உடன் இணைந்து செயல்பட உள்ளது. SoundCloud ஆடியோவுக்காண  யூ டியூப் என்று கூட சொல்லலாம்.
 இந்த சேவைக்கு Audio Card என்று  பெயரிட்டுள்ளனர். மேலும் தற்பொழுது SoundCloud இணைந்து  துவங்கினாலும்,  வரும் காலத்தில் மேலும் பல நிறுவனங்களை தன்னுடன் இது  இணைத்து கொள்ளும் எனத் தெரிகிறது.
sdfsf
 அதே போல இந்த Audio Card சேவையில் இசை கலைஞர்கள்  தங்கள் சிறந்த படைப்புகளை  மக்களிடம்  எடுத்து செல்ல உதவுகிறது. இது  இசை கலைஞர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் மிக  சிறந்த வாய்ப்பாகும்.

ஆப்பிளின் iTunes ஆதிகத்திலேயே  இந்தத் துறை இருக்கிறது. இப்பொழுது SoundCloud உடன் இணைந்து  டிவிட்டர் இந்த துறையில் இறங்குகிறது. டிவிட்டர் நல்ல வாய்ப்பாக அதற்க்கு  வேகமாக செய்தி  பரப்பக் கூடிய கோடிக்கணக்கான பயனர்கள்  இருப்பதே  ஆகும்.

IBMனு ஒரு கம்பெனி இருந்துச்சாம்…


IBM Logo
IBM Logo
நம்மில் பலருக்கும் இப்பிடி ஒரு கம்பெனி இருந்ததே மறந்திருக்கும். ஒரு காலத்தில் IBM Computer னு சொன்ன உடனே “அவளுகென்ன என் தங்கத்துக்கு” என கொஞ்சினர் மக்கள்.
கால ஓட்டத்தில் IBM என்றாலே அது பெரிய பெரிய நிறுவனங்களுக்கு மென்பொருள் & வன்பொருள் தயாரிக்கும் ஒரு நிறுவனம் என அடையாளப்படுத்தப்பட்டது.   கடைநிலை பயணர்களாகிய நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் ஆராய்ச்சிகளை IBM செய்து வருகிறது.
அந்த ஆராய்ச்சிகள், நமது மொபைல், கணினி, லேப்டோப் போன்றவற்றில் பல புதிய நோக்கிகளை (Sensors)  பொருத்தி, நமது கணினி / மொபைல் பயன்பாட்டை அதன் உச்சத்திற்கு எடுத்துச் செல்லும் ஆராய்ச்சிகள்.

1.  மொபைலில் உள்ள Vibrator இன் செயலாக்கத்தை மேம்படுத்துவதன் மூலம், நம் திரையைத் தடவிப் பார்த்தால், ஒரு துணி / சேலை போன்றவற்றின் மேற்பரப்பை தொடுவது போன்ற உணர்வை ஏற்படுத்துவது.  (இது பல Online  துணி விற்பனை தளங்களுக்கு பெரியும் பயனாக இருக்கும்).

2.  வாசனையை நுகர்ந்து பார்க்கக் கூடிய புதிய Sensor களைப் பொருத்துவது.

3.  அறு சுவைகளை அறிந்து அதன் விகிததாச் சாரங்களை தெரிவிப்பது.

4. சுற்றுப் புறத்தில் உள்ள அதிர்வு, சப்தங்களை உணர்ந்து … எச்சரிகைகளை தெரிவிப்பது…

5. வெவ்வேறு கலாசார மக்கள் Call Center ஐ தொடர்பு கொண்டு பேசும் போது அவர்களின் ஒலியை  மற்ற கலாச்சார மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் மாற்றுவது.

(மதுரை தமிழ் to சென்னைத் தமிழ் , Indian English to  American accent)

இது போல் பல ஆராய்ச்சிகளை IBM  மேற்க் கொண்டு வருவதாகவும். சிறு சிறு மனித மூளையின் செயல்பாடுகளை ஒவ்வொரு Sensorராக மாற்றும் முயற்சிகள் இவை, என IBM India/South Asia இயக்குநர் மற்றும் முதன்மை தொழில்நுட்ப அலுவலர் (Cheif Technology Officer)  திரு. ரமேஷ் கோபிநாத் தெரிவித்துள்ளார்.
  கார்த்திக்

​ஓட்டை காலணாவை பல கோடி ருபாய்​ ​ கொடுத்து வாங்கிய கூகள் நிறுவனம்.

nest-thermostat
கடந்த வாரம்  கூகள்  நிறுவனம்  ஒரு சிறிய  நிறுவனத்தை  ​​3.2 பில்லியன்  அமெரிக்க டாலர்களைக் கொடுத்து வாங்கியது. ​​ இது  தகவல்  தொழில்நுட்பத் ​
​துறையில் இருக்கும் அனைவரையும் மிகவும் ஆச்சர்யப்பட  வைத்த ஒரு வர்த்தகம்.
ஆம்,  வீட்டினுள்  இருக்கும் தட்பவெட்ப  நிலை  போன்றவற்றை  அறிவிக்கும்  இரண்டு  அங்குல  விட்டமே  இருக்கும் ஒரு சாதனத்தை
தயாரிக்கும்  நெஸ்ட்  (Nest) என்ற  நிறுவனத்தை  மிக மிக அதிக விலை கொடுத்து  ரொக்கமாகக்   (திருடா திருடா படத்தில் வரும் லாரியை  நினைவில் கொள்ளவும்) ​
​ கொடுத்து  வாங்கியது.  TechTamil Karthi
வீட்டில்  தீப்பிடித்தால்  எச்சரிக்கை செய்வது, பூட்டிய வீட்டில்  ஆள்  நடமாட்டம்  இருந்தால் எச்சரிக்கை செய்வது போன்ற செயல்களை முதன்மையாகச் செய்யும்  இந்தப்  பெட்டியை  கூகிள் ஆர்வமாக வங்கியுள்ளது பல  சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே அமெரிக்க  புலனாய்வு  நிறுவனம்  அனைத்து  பெரிய  தகவல் தொழில்நுட்ப  நிறுவனங்களிடம்  இருந்து அதன் அனைத்து  பயனாளர்  விவரங்களை  உளவு  பார்த்து வருகிறது. இந்த நிலையில் கூகல் 24 மணி நேரமும் நம்  வீட்டை கண்காணிக்கும்  ஒரு  பொருளை  நம்  வீடுகளில்  (இப்பொழுதைக்கு  அமெரிக்காவில் இருக்கும் உங்கள் பெரியப்பா  வீடு எனலாம் ) மாட்டும் போது.
அது  அமெரிக்க  புலனாய்வு  நிறுவனம்  மறைமுகமாக யார்  எந்த வீட்டில்  எப்போது இருக்கிறார், ஆள் எத்தனை  நாளாக  வீட்டில் இல்லை  போன்ற விவரங்களை சேகரிப்பது போல் ஆகிவிடும். இதனால்  தனி மனித சுதந்திரம் என்ற ஒன்றே இல்லாமல் போய்  விடும்  என கருத்து  தெரிவிகிறார்கள்.

தங்கக்  குடம்  எப்படி  மண்  குடமானது?


இத்தனை  கோடி  டாலர்  கொடுத்து வாங்கிய  ஒரு பொருளை , சரோசா  தேவி  பயன்படுத்திய  சோப்பு டப்பா  எனும் அளவில்  சொல்லும் விதமாக  நேற்று  ஒருவர்  Nest போன்ற ஒரு பொருளை புதிதாக உருவாக்கி    ” திறந்த நிரல் மூல “​ ​ (Opensource) ஆக  வெளியிட்டு  கலவரத்தை  ஏற்படுத்தியுள்ளார். சந்தையில்  கிடைக்கும் பொருள்களை வைத்தே  உருவாக்கிய இந்த  பொருளை  யாராலும்  லினக்ஸ்  போல்  மேம்படுத்த முடியும்.
இது  நெஸ்ட்  செய்யும்  அனேக  வேலைகளையும், அதே மாதிரியான  இயக்கு நிரல்  (OS) கொண்டு உருவாக்கியுள்ளார்.
ஒரே  நாளில்  புதிதாக  மற்ற  நிறுவனங்களால்  உருவாக்கக் கூடிய  ஒரு பொருளை வாங்கி ஒரே  வாரத்தில் மீளாத் தோல்வியில்  துவண்டுள்ளது  கூகள்.குறிப்பு : கூகள்  நிறுவனம்  முழுமையாக எந்த ஒரு புதிய கண்டுபிடிப்பையும் பெரிதாக  செய்யவில்லை., அதன் அனைத்து  தயாரிப்புகளும்  விலை கொடுத்து வாங்கி  தங்கள் நிறுவனத்துடன் இணைத்துக் கொண்டவையே.

சனி, 21 மார்ச், 2015

மிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி? - புதியவர்களுக்கு

இணையத்தில் இருக்கும் பல நண்பர்கள் இன்னமும் எப்படி தமிழில் தட்டச்சு செய்வது என்று கேட்கிறார்கள். தமிழ் மொழி பயன்படுத்துதலில் புதியவர்களுக்கு மிக எளிதாக தட்டச்சு செய்யும் வசதி தருவது Google Tamil Transliteration. இதனை எப்படி பயன்படுத்துவது என்று இந்தப் பதிவின் மூலம் அறியலாம். 


1.முதலில் இங்கே சென்று தட்டச்சு மென்பொருளை தரவிறக்கம் செய்யவும். இதில் தமிழ் மொழியை தெரிவு செய்த பின் 32Bit/64Bit என்பதை தெரிவு செய்து தரவிறக்கம் செய்து கொள்ளவும். எது என்று தெரியாதவர்கள் 32Bit தெரிவு செய்யவும். 

2.Windows 7/Vista/XP பயன்படுத்தும் அன்பர்கள் இதை பயன்படுத்த இயலும். 

3.இதை இப்போது இன்ஸ்டால் செய்யவும். 

4.இன்ஸ்டால் செய்து முடித்தவுடன் Desktop -Task Bar இல் Right Click செய்து Toolbars -> Language bar என்பதை தெரிவு செய்யவும். 



இதில் இந்த வசதி வராத நண்பர்கள் கீழே உள்ளதை பின் பற்றவும். 

5. Windows 7/Vista பயனாளிகள்
 
    • Control Panel ->Date, Time, Language, and Regional Options--> Regional and Language Options -> Keyboard and Languages என்பதற்கு செல்லவும். 
    • Change keyboards... என்பதை கிளிக் செய்து Text services and input languages என்பதை ஓபன் செய்யவும். 
    • Language Bar க்கு வரவும். 
    •  Language Bar -ல் உள்ள  Docked in the taskbar  என்ற ரேடியோ பட்டனை Enable செய்ய வேண்டும். 
    • இப்போது Apply கொடுக்கவும்.  இப்போது நீங்கள் மேலே கூறி உள்ள Step-4 ஐ செய்யவும். 
    •  
6.Windows XP பயனாளிகள்
    • Control Panel -> Regional and Language Options -> Languages tab -> Text services and input languages (Details) -> Advanced Tab என்பதற்கு செல்லவும். 
    • முதலில் System configuration, என்பதில் Turn off advanced text services என்பது கிளிக் செய்யப்படாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.           

    • Regional and Language Options -> Languages tab -> Text services and input languages (Details) -> Advanced Tab என்பதற்கு மீண்டும் செல்லவும்.  
    • இப்போது Settings>Language Bar ஐ கிளிக் செய்து அதில் Details >Language bar என்பதை தெரிவு செய்து வருவதில் Show the Language bar on the desktop என்பதை கிளிக் செய்து விடவும். 
    • இப்போது எல்லாவற்றையும் Apply கொடுத்து விடவும். 

7. இப்போது உங்கள் Tool Bar இல் கீழே உள்ளது போல ஒன்று வந்து சேர்ந்து விடும். இதில் தட்டச்சு செய்யும் போது கிளிக் செய்தால் Tamil என்று வரும். 


8.இது உங்களுக்கு Desktop இல் இவ்வாறு தோற்றம் அளிக்கும்.


9. இப்போது நீங்கள் எளிதாக தட்டச்சு செய்ய முடியும். உதாரணம்: 

Amma - அம்மா, 
karpom - கற்போம் 


இதில் மாற்று வார்த்தைகள் அடுத்தடுத்து வருவதை கவனிக்கவும். இதை Key Board-இல் உள்ள Arrow பட்டன்களை பயன்படுத்தி தெரிவு செய்ய முடியும். 

10.இதில் சரியாக தட்டச்சு செய்தும் உங்களுக்கு சில எழுத்துகள் வரவில்லை என்றால் Ctrl+K என்பதை கொடுத்து குறிப்பிட்ட எழுத்தை இடைச் செருகலாக சேர்க்கலாம். ‌

11. இதில் இருந்து உடனடியாக ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய CTRL+G கொடுக்கவும்.

Popular Posts

Facebook

Blog Archive