Infoms | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil: Infoms

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

Infoms லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Infoms லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 29 ஜூன், 2016

Takkaru Takkaru (Official Music Video) Hiphop Tamizha #‎Savejallikattu #Must Watch!!!! #‎டக்கருடக்கரு‬ வீடியோ பாட்டு Hiphop Tamizha ‪#‎ஜல்லிக்கட்டுவேண்டும்‬ ‪#‎வீராராம்‬ ‪#‎Savejallikattu‬

#‎டக்கருடக்கரு‬ வீடியோ பாட்டு Hiphop Tamizha

#‎ஜல்லிக்கட்டுவேண்டும்‬ ‪#‎வீராராம்‬ ‪#‎Savejallikattu‬   #Must Watch
 Takkaru Takkaru (Official Music Video) Hiphop Tamizha
#‎We want Jallikattu ‬  ‪#‎Veeraram‬  ‪#‎Savejallikattu‬
டக்கரு டக்கரு டக்கரு
ஆதி குறும்படம் சூப்பரு சூப்பரு...
எட்டுத்திக்கும் குளவை சத்தம்
அதுவே எங்கள் அடையாளம்....
அடங்காத காளைகளின் ஆட்டம்
அஞ்சாத வீரர்களின் கூட்டம்...
எங்க ஊரு பேரு மதுர
நீ நின்ன பாரு எதிர...
முறுக்குறோம் முறுக்குறோம் மீசைய
நீக்குறோம் நீக்குறோம் ஜல்லிக்கட்டு தடைய ....
ஆடுறோம் பாடுறோம் கொண்டாடுறோம்
தடை நீக்கி தாய் மன்னுல விளையாடுறோம் ...
தமிழன்டா தமிழன்டா தமிழன்டா
நாங்க எல்லோரும் தமிழன்டா....
தடை எண்பது முடிவல்ல - துவக்கம்
ஒலிக்கட்டும் நம் உரிமை முழக்கம்...
#‎புரட்சி‬ வெல்லட்டும்... ‪#‎ஜல்லிக்கட்டுவேண்டும்‬ 

 
Subscribe The Channel : MAS Infotech


வெள்ளி, 24 ஜூன், 2016

How to send facebook Messenger sms on mobile பேஸ்புக் மெசெஞ்சர் மூலம் குறுஞ்செய்திகளை (SMS) அனுப்புவதும் பெறுவதும் எப்படி?

ஆரம்பத்தில் பேஸ்புக் செயலி மூலமே நண்பர்களுடன் அரட்டையடிக்கவும் (Chatting) முடிந்தது.

என்றாலும் தற்பொழுது பேஸ்புக் மெசெஞ்சர் வேறு பேஸ்புக் செயலி வேறு என இரு வேறாக அதன் சேவைகளை வழங்கி வருகிறது.



அந்தவகையில் பேஸ்புக் மெசெஞ்சர் சேவையானது வெறும் அரட்டை அடிப்பதற்கு மாத்திரமின்றி காலநிலை தகவல்களை அறிந்துகொள்வது உட்பட இன்னும் ஏராளமான பல வசதிகளை பெற்றுக்கொள்ள உதவுகிறது.
தற்பொழுது பேஸ்புக் மெசெஞ்சர் மூலமே குறுஞ்செய்திகளை நிர்வகிப்பதற்கான வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வசதியை நீங்களும் பெற்றுக்கொள்ள விரும்பினால் கீலே வழங்கப்பட்டுள்ள இணைப்பு மூலம் பேஸ்புக் மெசெஞ்சர் செயலியை புதிய பதிப்பிற்கு மேம்படுத்திக்கொள்க.

பின்னர் பேஸ்புக் மெசெஞ்சர் செயலியின் அமைப்புகளுக்கான பகுதியில் SMS என்பதை தெரிவு செய்து Default SMS app என்பதை செயற்படுத்திக் கொள்க.
அவ்வளவு தான்.
இனி உங்கள் ஸ்மார்ட்போனுக்கு வரும் அனைத்து குறுஞ்செய்திகளையும் பேஸ்புக் மெசெஞ்சர் மூலமே நிர்வகிக்கலாம்.
பேஸ்புக் நண்பர்களுடன் நீங்கள் மேற்கொள்ளும் அரட்டைகளை வழமை போல் அடையாளம் காண முடிவதுடன் குறுஞ்செய்திகளை இலகுவாக அடையாளம் காண்பதற்கு அவைகள் ஊதா நிறத்தால் அடையாளப்படுத்தி தரப்பட்டுள்ளன.
மேலும் உங்களுக்கு புதிய குறுஞ்செய்திகள் கிடைக்கும் போது அவற்றை Chat Heads வசதி மூலமும் அறிந்து கொள்ளலாம்.
பேஸ்புக் மெசெஞ்சர் செயலியை புதிய பதிப்பிற்கு மாற்றிய பின்னரும் குறுஞ்செய்திகளை பேஸ்புக் மெசெஞ்சர் மூலம் பெற முடியாவிட்டால் உங்கள் ஸ்மார்ட்போனில் செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று General > Default Application எனும் பகுதியின் ஊடாக Messages என்பதை தெரிவு செய்து பேஸ்புக் மெசெஞ்சர் செயலியை தெரிவு செய்க.




FaceBook
Do you Like Share To Social Networks

Like My Page : 

Computer Tips & Tricks




 Hello Friends......
Subscribe The Channel : Tech & Funny Videos:


ஞாயிறு, 19 ஜூன், 2016

குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவது ஏன் தெரியுமா?

Vanaja Jeyasekaran's photo.

குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவது ஏன் தெரியுமா?
நம் நாட்டில் நிறைய பழக்கவழக்கங்கள் காரணம் தெரியாமலேயே மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது.
ஆனால் அப்படி பின்பற்றப்படும் பழக்கவழக்கங்களுக்கு பின்னணியில் நிச்சயம் ஓர் உண்மை மறைந்திருக்கும்.
முறையாக சொன்னால் யாரும் பின்பற்றமாட்டார்கள் என்று நம் முன்னோர்கள் செய்த வேலை தான் இது.
அதில் குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவது என்பது ஒன்று.
பலரும் இது ஓர் குடும்ப வழக்கம், நேர்த்திக்கடன் என்று நினைத்து பின்பற்றி வருகிறார்கள்.
ஆனால் இதற்கு பின்னணியில் உள்ள உண்மையான காரணம் என்னவென்று யாருக்காவது தெரியுமா?
தெரியாதெனில், உங்களது எண்ணத்தை மாற்றி, இனிமேலாவது உண்மையான காரணத்தைத் தெரிந்து கொண்டு பின்பற்றுங்கள்.
‪#‎கருவறையில்‬ 10 மாதம்
பிறக்கும் முன் தாயின் கருவறையில் இருக்கிறோம். இந்த கருவறையில் என்ன சந்தனமும், பன்னீருமா நம்மைச் சுற்றி இருக்கும். இரத்தம், சிறுநீர், மலம் போன்றவை நிறைந்த சூழலில் நாம் இருப்போம்.
‪#‎கடல்_நீர்‬
சாதாரணமாக கடல் நீரில் கை விரல்களை 5 நிமிடம் ஊற வைத்து, பின் அவற்றை நன்கு துடைத்துவிட்டு வாயில் வைத்தால் எப்படி உப்பு அப்படியே இருக்கிறது. 5 நிமிடம் ஊற வைத்த கை விரல்களிலேயே உப்பு இருக்கையில், 10 மாதம் இரத்தம், சிறுநீர், மலம் போன்றவை நிறைந்த சூழலில் இருந்த நம் உடலில் அவை எவ்வளவு ஊறியிருக்கும்.
‪#‎வெளியேறும்_வழி‬
உடலினுள் சேரும் இந்த கழிவுகள் நம்மை விட்டு எளிதில் வெளியே வந்துவிட்டாலும், நம் தலையில் சேரும் கழிவுகள் மயிர் கால்கள் வழியாகத் தான் வெளியேற முடியும். ஆனால் அதற்கான வழிகள் குறைவு. அதற்காகத் தான் குழந்தை பிறந்த சில மாதங்களுக்குள் மொட்டைப் போடுகின்றனர்.
‪#‎மொட்டை_போடாவிட்டால்‬?
ஒருவேளை அப்படி மொட்டை போடாவிட்டால், அக்கழிவுகள் தலையில் அப்படியே தங்கி, பிற்காலத்தில் அதுவே பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.
‪#‎நேர்த்திக்கடன்‬
இப்படி உண்மைக் காரணத்தைச் சொன்னால், பலரும் அலட்சியப்படுத்தி பின்பற்றமாட்டார்கள். எனவே தான் நேர்த்திக்கடன் என்ற பெயரில் நம் முன்னோர்களால் அது பரப்பப்பட்டது.
‪#‎மூன்று_வயதில்_ஓர்_மொட்டை‬
சிலர் தங்கள் குழந்தைக்கு மூன்று வயதில் ஒரு மொட்டையைப் போடுவார்கள். இதற்கு காரணம், முதல் மொட்டையின் போது சில கிருமிகள் விடுபட்டிருந்தால், இரண்டாவது மொட்டையின் போது வெளியேறிவிடும் என்பதற்காகத் தான்.
‪#‎ஆன்மீக_ரீதிக்கே_மரியாதை‬
நம் மக்களிடையே அறிவியல் ரீதியாக சொல்வதை விட, ஆன்மீக ரீதியாக சொன்னால், கட்டாயம் செய்வார்கள் என்பதை நம் முன்னோர்கள் நன்கு அறிந்துள்ளனர். எப்படியோ, இப்போதாவது உண்மையான காரணத்தை தெரிந்து கொண்டோமே. அதுவே போதும்.
Share this

வெள்ளி, 10 ஜூன், 2016

Memory History அன்று தொடக்கம் இன்று வரை கணணி சேமிப்பகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் (விளக்கப்படம் மூலம்.)

கணனியின் வருகையின் பின் தகவல்  தொழில்நுட்பத்தில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டது. ஒரு காலத்தில் பேனையும் கையும் என்றிருந்த நிலைமை மாறி இன்று அணைத்து துறைகளும் கணணிமயப்படுத்தப்பட்டுள்ளது. கணனியின் பிரதான வன்பொருளான வன்தட்டிலே அணைத்து தரவுகளும் சேமிக்கப்படுகின்றது. இந்த வன்தட்டின் கொள்ளளவு MB, GB என்பதனை தாண்டி TB (1000GB) வரை வளர்ந்திருப்பதுடன் இணைய சேமிப்பகம் என்ற முறையும் வந்துள்ளது. தகவல் தொழில் நுட்ப யுகத்தில் ஏற்பட்ட வேகமான மாற்றத்தால் இந்த வன்தட்டில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டது. இதனை பின்வரும் விளக்கப்படம் மூலம் நன்கு விளங்கிக்கொள்ளலாம்.
The History of Digital Storage 
English Blog  ══►
▂ ▄ ▅ ▆ ▇ █ Please Visit:  www.masinfom.blogspot.com  █ ▇ ▆ ▅ ▄ ▂

வியாழன், 26 மே, 2016

Memory Card உங்களது மெமரி கார்ட் போனில் Detect ஆகவில்லையா ? சரி செய்வது எப்படி?

ஸ்மார்ட் போன்களில் பாவிக்கப்படும் மெமரி கார்டுகள் எமக்கு பல்வேறு அளவுகளில் கிடைக்கிறது. பொதுவாக ஸ்மார்ட் போன் பாவனையாளர்கள் அனைவருமே தங்களுடைய ஸ்மார்ட் போனில் மெமரி கார்டு ஒன்றை நிறுவி இருக்கிறோம். எம்முடைய போனுடன் வரும் குறிப்பிட்ட அளவு மெமரியால் எம்முடைய அனைத்து தரவுகளையும் சேமித்து வைக்க முடியாது. ஆகவே பல்வேறு அளவுகளில் கிடைக்க கூட இந்த மெமரி கார்டு-களானது எம்முடைய தேவையை சரிவர நிறைவேற்றிக்கொள்ள முடிகிறது.

இவ்வாறு எமது ஸ்மார்ட் போனில் முக்கிய பங்கை வகிக்கும் இந்த மெமரி கார்டு-கள் பற்றியது தான் இன்றைய பதிவு.

சில வேளைகளில் எம்முடைய ஸ்மார்ட் போனில் குறிப்பிட்ட ஒரு மெமரி கார்டு-ஐ நிறுவும் போது குறிப்பிட்ட மெமரி கார்டு-ஐ ஸ்மார்ட் போனால் கண்டுபிடித்து கொள்ள முடியவில்லை என்ற பிழைச்செய்தி வரும்.

இவ்வாறு உங்களுடைய மெமரி கார்டு-ஐ ஸ்மார்ட் போன் Detect செய்ய முடியாத சந்தர்ப்பமொன்றில் எப்படி மெமரி கார்டு-ஐ சரி செய்து மறுபடியும் ஸ்மார்ட் போனில் எந்த பிரச்சினையும் இல்லாமல் வேலை செய்ய வைப்பது என்று பார்ப்போம்.


உங்களுடைய ஸ்மார்ட் போனை Off செய்து மெமரி கார்டு -ஐ போனில் இருந்து அகற்றுங்கள்.

இப்போது மெமரி கார்டு-ஐ கார்ட் ரீடர் ஒன்றின் மூலம் கணனியுடன் இணையுங்கள்.

உங்களது மெமரி கார்டு ரீடர் உங்களது கணனியில் தோன்றும் வரை காத்திருங்கள்.

மெமரி கார்டு-ஐ கணணி ஏற்றுக்கொண்டதும் My Computer-இற்கு சென்று மெமரி கார்டு-க்கான எழுத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

மெமரி கார்டு-ஐ கணனியில் இருந்து திறக்க முயற்ச்சிக்க வேண்டாம்.

அடுத்து உங்களது கணனியில் CMD-யை ஆரம்பியுங்கள்.

அதிலே கீழே காட்டி இருப்பது போல் டைப் செய்யுங்கள்.
chkdsk h: /r


உங்களுடைய மெமரி கார்டு-இன் எழுத்து, h என்பதுடன் replace செய்யப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

டைப் செய்த பின்னர் Enter பட்டன்-ஐ அழுத்துங்கள்.
இப்போது உங்களது மெமரி கார்டு -இல் Error செய்திகளை திருத்துவதட்கான ஸ்கேன் நடைபெறும்.

ஸ்கேன் முடிவடையும் வரை பொறுத்திருங்கள்.

Add caption

ஸ்கேன் முடிவடைந்த பின்னர் உங்களது மெமரி கார்டு-ஐ கணனியில் இருந்து அகற்றி மறுபடியும் உங்களது ஸ்மார்ட் போனில் நிறுவி பாருங்கள். இப்போது உங்களுடைய மெமரி கார்டு ஆனது எந்த விதமான பிரச்சினையும் இல்லாமல் ஸ்மார்ட் போனில் வேலை செய்யும்.

எமது பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது நண்பர்களுடன் சமூக வலைத்தளங்களின் ஊடாக பகிர்ந்து கொள்ளுங்கள்.

English Blog  ══►
▂ ▄ ▅ ▆ ▇ █ Please Visit:  www.masinfom.blogspot.com  █ ▇ ▆ ▅ ▄ ▂

புதன், 4 மே, 2016

ஆதார் கார்டை பயன்படுத்தி புது சிம் வாங்கினால் கட்டணம் குறைப்பு

ஆதார் கார்டு பயன்படுத்தினால், புது சிம் இணைப்பிற்கான கட்டணம் குறைக்கப்படும் என்று தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய (TRAI) தலைவர் சர்மா அறிவித்துள்ளார்.


 

 
ஆதார் அட்டையைப் முகவரிச் சான்றிதழாகப் பயன் படுத்தி புது சிம் காட்டு வாங்கினால் அதற்கான கட்டணம் கணிசமாக குறைக்கப்படும் என்று தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய தலைவர் ஆர்.எஸ்.சர்மா கூறியுள்ளார்.
 
அதன்படி, மின்னணு KYC அடிப்படையில் ஆதார் அட்டையை டிஜிட்டல் அங்கீகாரமாக செயல்பட நடைமுறை படுத்தப்படுத்தப்பட்டால் , அதன் அடிப்படையில் புது சிம் கார்டு இணைப்பிற்கான கட்டணம் பூஜ்யமாக குறைக்கப்படும் என்று சர்மா தெரிவித்துள்ளார்.
 
இந்த முறையை தொலைத் தொடர்புத் துறையிடம் பரிந்துரை செய்துள்ளதாகவும், அதை அவர்கள் வெளிப்படையாக ஏற்றுக் கொண்டதாகவும் சர்மா கூறியுள்ளார். 
 
இதற்கான விதிமுறைகளை அரசு முடிவுசெய்த பிறகு, புதிய சிம்கார்டிற்கான இணைப்பைப் பெற, ஆதார் அட்டை பயோ மெட்ரிக் தகவல் மூலம் அடையாள சரிபார்பு உடனடியாக செயல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.
 
பாக்கிஸ்தானில் அனைத்து சிம் கார்டையும் அங்கீகரிக்க, பயோ மெட்ரிக் பயன்படுத்த முடிவு செய்து கடந்த ஆண்டே அதற்கான திட்டத்தையும் பூர்த்தி செய்துவிட்டது என்று சர்மா குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 30 மார்ச், 2016

Amazon Free Rs. 200 Amazon Gift Card on First Purchase of Rs. 300 [NEW USER ONLY]

Refer and Earn

• [NEW USER ONLY]    Get a Rs. 200 Amazon Gift Card once you sign up and complete your first purchase (excluding Gift Cards) worth Rs. 300 or more.

•  Sign Up You must be new Amazon customer. (Sign Up from this link only)
• You must click and successfully complete the Amazon signup process on the same calendar day.
• You must place an order worth Rs. 300 (excluding shipping, handling and gift-wrapping fees) or more on the Amazon website. Purchases of Kindle ebooks and Amazon Gift Cards are not eligible.
• You will receive a Rs. 200 Gift Card within 30 days.

[NEW USER ONLY] 

Amazon: Sign Up (Rs. 200 Amazon Gift Card on First Purchase of Rs. 300+ applicable on Sign Up from this link only)
Examples:
32GB SanDisk Cruzer Blade Pen Drive + Rs.200 Amazon Gift Card Rs. 522
32GB SanDisk Ultra MicroSD Card Class 10 + Rs. 200 Amazon Gift Card Rs. 549

திங்கள், 28 மார்ச், 2016

சில குறிப்பிட்ட SOFTWAREரை பிறர் பயன்படுத்தாமல் செய்ய

கணிணியில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்தும் போது சில பாதுகாப்பு குறைபாடுகள் வரலாம். நீங்கள் நிறுவியுள்ள மென்பொருளை வேறு யாரும் பயன்படுத்தி விடக்கூடாது என்று நினைக்கலாம்.
சிலர் உங்கள் மென்பொருளில் நுழைந்து எதாவது மாற்றம் செய்துவிடலாம். ஊருக்கு போய்ட்டு வந்தோம். அய்யோ கணினியில் ஏதோ ஆகிவிட்டது என்று புலம்புவர்.

அலுவலகத்தில் வேலை செய்யும் போதும், கல்லூரிகளில், பள்ளிகளில் போன்ற பொது இடங்களில் பணிபுரியும் சூழ்நிலையில் இந்த மாதிரி கட்டுப்படுத்தும் செயல் அவசியமானது. இதனை நீங்கள்Group Policy Editor மூலமாகவும் செய்யலாம்.
ஆனால் எளிமையாக கையாள இலவச மென்பொருள் Appadmin உள்ளது. முக்கியமான மென்பொருள்களை எவரும் பயன்படுத்த முடியாதபடி இந்த மென்பொருள் மூலம் எளிமையாக செய்யலாம். இது மென்பொருள்களுக்கு கடவுச்சொல் கொடுத்து (password protect) அதை முடக்குகிறது. இதன் கடவுச்சொல் தெரிந்தவர்கள் மட்டுமே இதை பயன்படுத்தமுடியும்.
இதில் முதலில் உங்களுக்கான கடவுச்சொல்லை கொடுத்துவிட வேண்டும். பின் Block என்பதை கிளிக் செய்தால் எந்த
மென்பொருளை தடை செய்கிறிர்களோ அதனை தேர்வு செய்துவிட வேண்டும். மேலும் இன்னொரு வசதியாக எந்த மென்பொருளையும் இதன் விண்டோவில் இழுத்து விட்டால் (Drag and drop) கூட போதும். இதன் வடிவமைப்பு பயன்படுத்த எளிமையாக உள்ளது. இதை நிறுவத்தேவையில்லை.(No installation) அப்படியே தரவிறக்கி பயன்படுத்தலாம்.

--                                                                                                   
 

சனி, 12 மார்ச், 2016

கொடூர நோய்களை பரப்பும் வாழைப்பழம்


ஓர் அதிர்ச்சி தகவல்.

முன்பெல்லாம் டாக்டர்கள் தினமும் ஓரு வாழைப்பழமாவது சாப்பிடுங்கள், உடம்புக்கு ரொம்ப நல்லது என்பார்கள்.

ஆனால் தற்போது மரபணு மாற்று பெரிய மஞ்சள் வாழைபழத்தை சாப்பிடவே வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள்.

இந்த மஞ்சள் வாழை பழம் பார்பதற்க்கு பச்சை வாழைபழம்
போன்றே சிறிது நீண்டு காணப்படும்,

நிறம் மட்டும் மஞ்சள் நிறமாக இருக்கும் காரணம் தற்போது சென்னை வாசிகள் பெரும்பாலோர் உடலில் – தொண்டையில் அலர்ஜி, சைனஸ், தும்மல், வயிற்றுக் கோளாறு, வயிற்றுவலி, சிறுநீரக கற்கள், அடிக்கடி தலைவலி, புட் பாய்சன், என்று கடுமையாக அவதிப்படுகிறார்கள்.
இவர்களை நோயாளிகளாக மாற்றியது இந்த மரபணு மாற்று
மஞ்சள் வாழைப்பழங்கள் தான்.

இயற்கையான வாழைப்பழம் பழுத்தால் இரண்டொரு நாளில் அழுகிவிடும்.
இயற்கையான மஞ்சள், பச்சை வாடன், ரஸ்தாளி, மலைபழம், தேன்கதளி, நாட்டுப்பழம், நாட்டுச்சக்கைப்பழம், கற்பூர வள்ளி, ஏலக்கி ஆகிய வாழைப் பழங்கள் மணமாகவும், நல்ல ருசியாகவும் இருக்கும்.

இந்த பழங்கள் உடம்புக்கு சத்தாகவும், மற்ற உணவை செரிமானமாக்கவும் பயன்படும்.

மலச்சிக்கலால் பாதிக்கப்படுவோரும் தினமும் இரவில்
வாழைப்பழம் சாப்பிடு வார்கள்.

பொதுவாக இயற்கையான வாழை ரகங்களில் நோய் தொற்று ஏற்படும்.
இவற்றை பூச்சுக் கொல்லிகளை பயன்படுத்தி நோயை கட்டுப்படுத்த வேண்டும். இந்த ரகங்களை பழுத்த உடன் நாம் சாப்பிடுவது வழக்கம்.


பூச்சிக்கொல்லிகளை அழிப்பதற்கு பதிலாக பூச்சிகளை கொல்லும் விஷச்சத்தை வாழைமரத்தின் மரபணுவில் செலுத்தி அமெரிக்க விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர்.

இதைத் தான் நாம் பி. டி.வாழை என்று அழைக்கிறோம்.
கேவின் டிஷ் என்ற பெயருடன் இந்த மரபணு மாற்று

வாழைப்பழம் நம்மூரில் கள்ளத்தனமாக விற்கப்படுகிறது.
இப்பழங்களில் விஷத்தன்மை மிக அதிகமாக இருப்பதால் அமெரிக்காவில் இந்த வாழைப்பழம் பயிரிடவோ விற்கவோ அனுமதிக்கப்படவில்லை
ஏழ்மையிலும் பசிபட்டினியிலும் வாடும் ஆப்பிரிக்க நாடு உகாண்டா.
இங்குதான் முதன் முதலில் 2007 -ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உகாண்டா அதிபரை மிரட்டி அந்நாட்டின் பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வர செய்து பி.டி. வாழை எனப்படும் கேவின் டிஷ் வாழைப்பழத்தை முதன் முதலில் பயிரிட செய்தார்.

நோய்களை பரப்பும்:

உகாண்டாவில் பயிரிடுவதற்கு முன்பாகவே இந்தியாவில் சர்வதேச கம்பெனிகள் இந்திய நிறுவனங்களின் துணையுடன் கள்ளத்தனமாக இவ்வகை மரபணு மாற்று பி.டி. கேவின்டிஷ் வாழைப் பழத்தை பயிரிடவும் விற்பனை செய்யவும் ஆரம்பித்து விட்டனர்.

இந்த கேவின்டிஷ் மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழம் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் விற்கப்படுகிறது.

முதலில் சென்னையில் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையத்தில் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரில் இந்த பி.டி. வாழைப்பழம் விற்கப்பட்டது.
மக்களுக்கோ, வியாபாரிகளுக்கோ இதன் கொடூரத்தன்மை பற்றி எதுவும் தெரியாததால் சென்னை முழுவதும் இந்த வாழைப்பழ விற்பனை விரிவு படுத்தப்பட்டது.

மாதக்கணக்கில் வைத்திருந்து விற்றாலும் கெட்டுபோகாது என்ற ஆசை வார்த்தை கூறி வியாபாரிகள் இந்த மரபணுமாற்று கேவின் டிஷ் வாழைப்பழத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

இதனால் சென்னையில் முக்கிய கம்பெனிகளின் சூப்பர் மார்க்கெட்டுகளில் வாழைப்பழம் மட்டுமே விற்கும் நிலை உள்ளது.
மதுரை, சேலம், கோவை, நெல்லை போன்ற நகரங்களில்
இந்த பி.டி. மரபணு மாற்று வாழைப்பழம் அறிமுகப்படுத்தப்பட்டாலும் இதற்குபோதிய வரவேற்பு இல்லை.

இந்த மரபணு மாற்று வாழைப்பழம் இயற்கை வாழைப்பழம் போல் ருசியாக இருக்காது.

இதனால் மற்ற நகரங்களில் இதனை யாரும் வாங்கவில்லை.

எனவே சென்னையில் அறிவிக்கப்படாத தடைபோல வேறு இயற்கையான வாழைப்பழமே விற்காத வண்ணம், சர்வதேச நிறுவனங்கள் கேவின்டிஷ் வாழைப்பழம் மட்டுமே விற்கும் வண்ணம் ரகசியமாக சதி செய்துவிட்டன.

இதற்கு கார்ப்பரேட் கம்பெனிகள் பெரிதும் உதவியாக உள்ளன.
பி.டி. கத்தரிக்காய்க்கே இன்னும் இந்திய அரசு முழுமையான அனுமதி வழங்கவில்லை.

பி.டி.ரக மரபணு காய்கறி, பழங்கள், உயிரை மெல்லமெல்ல கொல்லும் விஷமாகும். ஒருமுறை மட்டும் காய்த்து கனியாகும்.

செயற்கையாக மலட்டுத்தன்மை ஆக்கப்பட்ட மரபணு மாற்று காய்கறி பழங்களை தொடர்ந்து சாப்பிட்டால் மலட்டுத்தன்மை ஏற்படுவதோ டு, கேன்சர், செரிமான கோளாறு, தோல்நோய், சிறு நீரக நோய்கள், அலர்ஜி போன்றவை உண்டாகும்.

இந்நிலையில் இந்திய அரசிடமோ, விவசாயத்துறையிடமோ, பல்கலை கழகங்கள், ஆராய்ச்சி சாலைகளிலோ எந்தவித அனுமதியும் பெறாமல் கேவின்டிஷ் மஞ்சள் வாழைப்பழம் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரால் விற்பனை செய்யப்படுகிறது.

எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது?

பெங்களூர் வாழைப்பழம் என்று விற்பனை செய்யப்படும் மரபணு மாற்று பி.டி. ரக மஞ்சள் வாழைப்பழம் காட்டு கொட்டை வாழையில், மீன் சோளம், காட்டுமொச்சை இவற்றின் மரபணுவை புகுத்தி கண்டு பிடிக்கப்பட்டதாகும்.
இயற்கையான வாழை ரகங்கள் வாழையடி வாழையாக வாழை மரத்தின் கிழங்கிலிருந்து செடி வளரும்.

அதனை பிரித்து நட்டாலே புதிய வாழையை பயிர் செய்ய முடியும்.
ஆனால் பி.டி. ரக கேவின்டிஷ் வாழை ஒரு முறை மட்டுமே காய்க்கும் வண்ணம் மரபணுவில் மாற்றம் செய்யப்பட்டு செயற்கையாக மலடாக்கப்பட்ட தாகும். எனவே விவசாயிகள் தாமாகவே மறுதடவை பயிர் செய்ய முடியாது.

திசுவளர்ப்பு முறையில் செடி வாழை சர்வதேச கம்பெனிகளின் ஏஜெண்டுகளால் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு பயிரிட வழங்கப்படுகிறது.

இவ்வகை பி.டி. ரக மரபணு மாற்று வாழையை தொடர்ந்து தோட்டத்தில் பயிர் செய்தால் அந்த நிலத்தில் உள்ள நன்மை செய்யும் புழு, பூச்சிகள், பாக்டீரியாக்கள் மொத்தமாக அழிக்கப்பட்டு அந்த நிலம் எந்த பயிரும் வைக்க முடியாத பாலைவனமாக மாறிவிடும்.

அதனை உண்ணும் மனித குலமும் பல நோய்களுக்கு ஆளாக நேரிடும்.

வியாழன், 10 மார்ச், 2016

வெள்ளை சீனி | சக்கரையால் உடல்நலக்கேடு


உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகு...ம். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்?
இனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை; சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்.

இந்த வெள்ளை சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள்.

குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயான‌ப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம்.

1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.

2. பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.

3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.

4. 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.

5. அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.

6. சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது.
-->
7. மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு சீனியாக வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது.

8. இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.

தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.

குடலில் மட்டுமல்ல, பல் வலி, பல் சூத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சீனி வியாதி, இரத்த அழுத்தம் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது.

ஆலைகளில் தயாரான வெள்ளை சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.

வியாழன், 28 ஜனவரி, 2016

மாடித்தோட்டம் என்ற பெயரில் விசத்தை விதைக்கும் ........


உஷார்.... உஷார்...உஷார்..
மாடித்தோட்டம்  என்ற பெயரில் விசத்தை விதைக்கும் பன்னாட்டு விதைகளை மக்களை ஏமாற்றி வழங்குவதன் நோக்கம்..
அதிர்ச்சி அளிக்கிறது 

படித்ததில் பிடித்தது.பிடித்ததால் சுட்டது..
நன்றி அந்த முகம் தெரியாத நண்பருக்கு.

நம் கண் முன்னாலேயே ஒரு மிகப் பெரிய அக்கிரமம் நடந்து கொண்டிருக்கிறது. அதன் வீரியம் புரியாமல் நாம் பேசாமல் இருக்கிறோம்.. தோழர் ஶ்ரீஜா வெங்கடேஷின் பதிவைப் படித்ததும்தான் எனக்குள் இந்த கேள்வியே எழுந்தது...

முதலில் தோழரின் பதிவு..
***** 
நேற்றும் முந்தைய தினமும் தமிழ்நாடு தோட்டக்கலைத் துறையினர் சுமார் 50,000 மாடித்தோட்ட பொருட்களை சென்னை முழுவதும் சலுகை விலையில் அளித்திருக்கிறார்கள். நான் சென்று கேட்டபோது தீர்ந்து விட்டது. இனி சென்னையின் அனைத்து வீட்டு மொட்டை மாடிகளிலும் கத்திரி, வெண்டை என்று காய்கள் விளையப் போகின்றன என்று மகிழ்ந்தேன். என் சந்தோஷம் என் தம்பி வீட்டுப் போனதும் மறைந்து போனது. அவர் இந்தப் பொருட்களை வாங்கி வைத்திருந்தார். ஆர்வ மிகுதியால் விதைகளைப் பார்த்தேன்.


 சரியான அதிர்ச்சி. அனைத்து விதைகளுமே உயிரியல் முறையில் உருவாக்கப்பட்டவை. அதோடு அதனைத் தயாரித்த கம்பெனியின் பெயர் இந்தோ அமெரிக்கா என்றிருந்தது. கீரை, கத்திரி வெண்டை விதைகளைக் கூடவா அமெரிக்கக் கம்பெனியின் தொழில் நுட்பத்தோடு உருவாக்க வேண்டும்? அத்தனையும் ஹைப்பிரிட் விதைகள். அதாவது அந்த விதையை உபயோகித்து நாம் வெண்டைக்காய் வளர்க்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதிலிருந்து வரும் காய்கள் உண்ணத் தகுந்தவை தான் என்று சொல்கிறார்கள். ஆனால் மறு சுழற்சி முறையில் விளைந்த வெண்டையிலிருந்து நம்மால் விதைகளை எடுக்க முடியாது. இயற்கை விவசாயம், பாரம்பரிய விவசாயம் என்று நாம் அனைவரும் பேசி வரும் நேரத்தில் தோட்டக்கலைத்துறையினரே இப்படிப்பட்ட செயற்கை முறை விதைகளை மக்களுக்கு அளிக்கலாமா? அத்தனையும் சாயமூட்டப்பட்ட விதைகள் வேறு. அது மட்டுமல்ல இயற்கை உரத்தை அளிக்கும் அவர்கள் அடியுரமாக கெமிக்கல்களையும் விநியோகிக்கிறார்கள். இவற்றை கொள்முதல் செய்வது யார்? அந்த இந்தோ அமெரிக்கன் கம்பெனி எங்கிருக்கிறது? என்று யோசித்தால் தலை சுற்றுகிறது. விதை மற்றும் அடியுரங்கள் கொள்முதலில் என்னன்ன முறை கேடுகளோ? கடவுளே! காப்பாற்று!
****** 
இப்போது நமது சந்தேகங்கள்..

தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை மொட்டைமாடி தோட்டம் போடுவதற்காக சலுகை விலையில் தோட்டப் பொருட்களை தருகிறார்கள் என்ற விளம்பரம் தொடர்ந்து என் கண்ணில் பட்டபடியே இருந்தது.. ஓர் அரசுத்துறை இவ்வளவு தூரம் பொது மக்கள் மீது அக்கறையோடு செயல்படுவது என்னை ஆச்சரியப்படுத்தியது..

இந்தப் பதிவைப் படித்தபிறகுதான் இதில் இப்படியொரு கோணம் இருப்பதே எனக்குப் புரிந்தது. மொட்டைமாடிப் பயிரிடலுக்காக அரசு கொடுத்திருக்கும் விதைகள் எல்லாம் வெளிநாட்டு விதைகளாம்.. அனைத்தும் உயிரியல் மாற்று செய்யப்பட்டவை என்று அதிலிருக்கும் லேபிள்களே சொல்கின்றன.. அதாவது மரபணு மாற்றப் பயிர்களாக (Genetically Modified foods) அவை இருப்பதற்கான வாய்ப்புதான் அதிகம் என நினைக்கிறேன்..

நேரடியாக இந்தியாவுக்குள் இது போன்ற மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை இறக்குமதி செய்ய இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.. அந்த கார்ப்பரேட் நிறுவனங்களுடன் அரசு அதிகாரிகள் கூட்டுச் சேர்ந்து நம் மொட்டை மாடி வழியாக இந்தப் பயிர்களை இந்தியாவுக்குள், குறிப்பாக தமிழகத்துக்குள் ஊடுருவ வைக்கிறார்களோ என்ற சந்தேகம் எனக்கு ஏற்படுகிறது.

அப்படி இருந்தால் இது இந்தியப் பயிரிடல் முறைக்கு செய்யும் மிகப் பெரிய துரோகம்.. மொட்டை மாடியில் சிறு அளவில்தானே வளர்க்கிறார்கள் என்று நாம் இதை ஒதுக்கிவிட முடியவே முடியாது.. ஐம்பதாயிரம் வீடுகளின் மொட்டை மாடிகள் என்பது மிகப் பெரிய பரப்பளவு.. அங்கிருந்து தேனீக்களின் மூலம் இந்த கொலைகார பயிர்களின் மகரந்தங்கள் எப்படி எப்படி எல்லாம் பரவக் கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கின்றன என்று நினைத்தாலே பகீர் என்கிறது...

மொட்டை மாடித் தோட்டங்களின் மீது அவ்வளவு அக்கறை கொண்டவர்கள் தோட்டக்கலைத் துறையின் விதைகளையே வழங்கி இருக்கலாமே.. இப்படி அமெரிக்க விதைகளை எதற்காக வழங்க வேண்டும்..? இதிலேயே இதன் பின்னணியில் இருக்கும் துரோகம் நமக்குப் புரியவில்லையா..?
அரசியல்வாதிகள் கார்ப்பரேட் கம்பெனிகளுடன் கூட்டுச் சேர்ந்து நாட்டைக் காட்டிக் கொடுப்பது ஒரு பக்கம் என்றால் இது போல அரசு அதிகாரிகள் தனி வியூகமாக நம் மண்ணையும் பயிர்களையும் மலடாக்கி சாகடிக்க கிளம்பியிருப்பது ஆற்ற முடியாத துயரையும் அச்சத்தையும் நமக்குள் ஏற்படுத்துகிறது..

நண்பர்கள் பத்திரிக்கையாளர்கள் இதற்குள் புகுந்து உண்மை நிலையை வெளிக் கொண்டு வந்தால் நன்று.. சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய பிரச்சினை இது என்றே நான் நினைக்கிறேன்..
மிக மிக அவசரம்...
(Sources Facebook) kindly validate this info

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் மூலம் பேஸ்புக் பயன்படுத்துபவர்களுக்கான பயனுள்ள உதவிக்குறிப்புகள்

                                               


பேஸ்புக் தளமானது உலகளாவிய ரீதியில் பயன்படுத்தப்படும் மிகப்பெரியதொரு சமூக வலைத்தளமாகும். இதனை கணினி மூலம் பயன்டுத்துபவர்களை விட ஸ்மார்ட் போன்கள் மூலம் பயன்படுத்துபவர்களே இன்று அதிகம்.

அந்த வகையில் இன்று பேஸ்புக் செயலி நிறுவப்படாத ஒரு ஸ்மார்ட் போன் இல்லை என்றே கூற வேண்டும். அத்துடன் பெரும்பாலான மொபைல் சாதனங்களை புதிதாக வாங்கும் போதே அதில் பேஸ்புக் செயலி நிறுவப்பட்டிருக்கின்றன.

எது எப்படியோ சமூக வலைதளத்தில் பேஸ்புக் போல மொபைல் சாதனங்களுக்கான இயங்குதளம் என்றால் ஆண்ட்ராய்டு என்றே கூற வேண்டும். இதனடிப்படையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் மூலம் பேஸ்புக் தளத்தை வலம் வரும் பயனர்களே ஏராளம்.

எனவே நீங்களும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் மூலம் பேஸ்புக் தளத்தை பயன்படுத்துபவர் எனின் பின்வரும் உதவிக்குறிப்புகள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையலாம்.


10. எழுத்துக்களை வெவ்வேறு தோற்றங்களில் பகிர்ந்து கொள்ள 

பொதுவாக பேஸ்புக் தளத்தில் எண்கள் எழுத்துக்கள் குறியீடுகளைக் கொண்டு எமது நிலைத் தகவல்களை பகிந்துகொள்ள முடிந்தாலும் நாம் அதில் தட்டச்சு எழுத்துக்களை வெவ்வேறு தோற்றங்களுக்கு மாற்ற முடிவதில்லை எனினும் Fsymbols எனும் இணையதளமானது நாம் எழுதக்கூடிய எழுத்துக்களை பல அட்டகாசமான தோற்றங்களுக்கு மாற்றித்தருகிறது. பின் அவற்றை பேஸ்புக் தளத்தில் பகிர்ந்து கொள்ளலாம். நாம் எழுதக்கூடிய எழுத்துக்களை சுற்று வட்டமிடப்பட்டதாகவும், தலைகீழாகவும், வலம் இருந்து இடமாகவும் என பல அருமையான தோற்றங்களுக்கு மாற்றிப்பெற்றுக்கொள்ள முடியும்.


9. நண்பர்களின் இற்றைபடுத்தல்களை அறிய பேஸ்புக் விட்ஜெட் வசதியை பயன்படுத்தலாமே 

ஆண்ட்ராய்டு பேஸ்புக் விட்ஜெட்


எமது ஸ்மார்ட் போனுக்கு நாம் செயலிகளை நிறுவும் போது பெரும்பாலான செயலிகள் அவற்றுக்கான விட்ஜெட்டை வசதியுடன் நிறுவப்படுகின்றன. இவற்றின் மூலம் குறிப்பிட்ட செயலியில் உள்ள வசதிகளை ஹோம் ஸ்க்ரீனில் இருந்தவாறே மிக இலகுவில் பெற்றுக்கொள்ளலாம்.

அதே போல் பேஸ்புக் செயலிக்கான விட்ஜெட் வசதியை உங்கள் ஸ்மார்ட் போனின் ஹோம் ஸ்க்ரீன் பகுதியில் இணைத்துக் கொள்வதன் மூலம் ஹோம் ஸ்க்ரீனில் இருந்தவாறே உங்கள் நண்பர்களின் இடுகைகளை கண்காணிக்கலாம்.

விட்ஜெட்டை இணைக்கும் முறையானது சாதனத்துக்கு சாதனம் வேறுபடலாம் இருப்பினும் பெரும்பாலான ஸ்மார்ட் போன்களில் அதன் ஹோம் ஸ்க்ரீனை தொடர்ச்சியாக சிறிது நேரம் அழுத்துவதன் மூலம் விட்ஜெட்களை இணைப்பதற்கான வசதியை பெறலாம்.


8. நோட்டிபிகேஷகளை நிர்வகிக்க 

பேஸ்புக் தளத்தில் எமக்கு புதியதொரு செய்தி (Message) வரும் போதும், புதிய நண்பர்களின் கோரிக்கை வரும் போதும், புகைப்படங்களில் நாம் Tag செய்யப்படும் போதும் என இன்னும் பல்வேறு சந்தர்பங்களில் எமது பேஸ்புக் கணக்கில் நிகழும் பல்வேறு மாற்றங்களை நாம் உடனுக்குடன் அறிந்து கொள்வதற்காக பேஸ்புக் செயலியில் நோட்டிபிகேஷன் வசதி தரப்பட்டுள்ளது.

பேஸ்புக் ஆண்ட்ராய்டு நோட்டிபிகேஷன்


இது ஒரு சிறந்த வசதியாக இருந்தாலும் அளவுக்கு அதிகமான நோட்டிபிகேஷன்கள் வரும் போது அதுவே எமக்கு தொந்தரவாகவும் அமைந்துவிடுவதுண்டு.

எனவே எமது பேஸ்புக் கணக்கில் ஏற்படும் மிக முக்கியமான மாற்றங்களுக்கு மாத்திரம் நோட்டிபிகேஷன்கள் தோன்றும் வகையில் பேஸ்புக் செயலியை அமைத்துக் கொள்ள முடியும்.

பேஸ்புக் செயலியின் வலது மேல் மூலையில் தோன்றும் மூன்று கோடுகளாலான மெனு பட்டனை சுட்டும் போது தோன்றும் App Settings ===> Notification எனும் பகுதி மூலம் மேற்குறிப்பிட்ட செயற்பாட்டை மேற்கொள்ளலாம்.


7. அருகிலுள்ள நண்பர்களையும் இடங்களையும் அறிய 

அத்துடன் கணினியின் மூலம் பெறமுடியாத ஆனால் ஸ்மார்ட் போன்கள் மூலம் பெற முடிகின்ற ஒரு வசதியே Nearby Places மற்றும் Nearby Friends என்பதாகும். நீங்கள் உலகின் எந்த ஒரு பகுதிக்கு சென்றாலும் உங்களுக்கு அருகில் இருக்கும் விடுதிகள், உணவகங்கள், விற்பனை நிலையங்கள் போன்ற இன்னும் பல இடங்களையும் Nearby Friends என்பதன் மூலம் உங்களுக்கு அருகில் இருக்கும் உங்களது முகநூல் நண்பர்களையும் அறிந்து கொள்ளலாம்.

பேஸ்புக் செயலியின் மெனு பகுதியில் தரப்பட்டுள்ள Nearby Places மற்றும் Nearby Friends என்பவற்றை சுட்டுவதன் மூலம் மேற்குறிப்பிட்ட வசதிகளை பெறலாம்.


6. தானாக இயங்கும் வீடியோ கோப்புக்களின் செயற்பாட்டை தடுக்க:

பேஸ்புக் தளத்தில் பகிரப்படக்கூடிய வீடியோ கோப்புக்கள் தானாகவே இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் எமது பேஸ்புக் பக்கத்தில் தோன்றக்கூடிய அனைத்து வீடியோ கோப்புக்களும் தானாக இயங்குவதால் தேவையற்ற விதத்தில் எமது தரவுப்பாவனை அதிகரிக்கின்றது.



எனவே இதனை தவிர்த்துக்கொள்ள Video Auto Play வசதியை நிறுத்திக் கொள்ளலாம். இதனை மேற்கொள்ள நாம் மேலே குறிப்பிட்ட வகையில் App Settings பகுதிக்கு சென்று அதில் தரப்பட்டிருக்கும் Auto Play என்பதை சுட்டுக. பின் Never Auto Play Video என்பதை தெரிவு செய்வதன் மூலம் வீடியோ கோப்புக்கள் தானாக இயங்குவதை தடுக்கலாம்.


5. பதிவுகளை சேமிக்க:

பேஸ்புக் தளத்தில் பகிரப்படக்கூடிய கருத்துக்கள், புகைப்படங்கள், வீடியோ கோப்புக்கள், இணைய இணைப்புகள் போன்றவற்றை பிறகொரு சந்தர்பத்தில் பார்ப்பதற்காக அதனை சேமித்து வைக்க முடியும்.

இதனை மேற்கொள்வதற்கு குறிப்பிட்ட பதிவின் வலது மேல் மூலையில் தரப்பட்டுள்ள அம்புக்குறி அடையாளத்தை சுட்டும் போது பெறப்படும் சாளரத்தில் Save Video அல்லது Save Link எனும் பட்டனை சுட்டுவதன் மூலம் அவற்றை பிறகொரு சந்தர்பத்தில் பார்த்துக் கொள்ளும் வகையிலும் சேமித்துக் கொள்ளலாம்.

சேமிக்கப்பட்டவற்றை பெற்றுக்கொள்ள மெனு பகுதியில் தரப்பட்டுள்ள Saved என்பதை சுட்ட வேண்டும்.


4. வேண்டாமே கவலை:

உங்கள் பேஸ்புக் கணக்கை இன்னும் ஒருவர் உபயோகப்படுத்துவதாக உணர்கிறீர்களா? 

இதற்கு பெரும்பாலும் எமது கவனயீனமே ஒரு காரணமாக அமைந்துவிடலாம். நாம் பொது இடங்களில் இருக்கும் கணினிகளிலோ அல்லது நண்பர்களின் ஸ்மார்ட் போன்கள் மூலமாகவோ எமது முகநூல் கணக்கை பயன்படுத்தி விட்டு அதனை Logout செய்ய மறந்தால் இவ்வாறான நிலைமைகள் ஏற்படுவதுண்டு.

இருப்பினும் இதற்கு கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

பேஸ்புக் செயலியின் மெனு பகுதியில் தரப்பட்டுள்ள Account settings ===> Security ===> Active Sessions எனும் பகுதி மூலம் நாம் Logout செய்ய மறந்த சாதனங்களில் இருந்து எமது பேஸ்புக் கணக்கை Logout செய்துகொள்ள முடியும்.



3. நண்பர் தான் ஆனால் பதிவுகள் வேண்டாம்:

முகநூலில் இருக்கும் நண்பர் ஒருவர் பகிரக்கூடிய தகவல்கள் உங்களுக்கு பிடிக்கவில்லைய? எனவே அவரது பதிவுகள் உங்களுக்கு தோன்றாமல் இருக்க அவரை நண்பர் பட்டியலில் இருந்து நீக்கிவிட வேண்டும் என்ற அவசியமில்லை. இதற்கு பதிலாக அவரை Unfollow செய்யலாம். இதன் போது அவர் தொடர்ச்சியாக எமது நண்பர் பட்டியலில் இருந்தாலும் அவர் பகிரக்கூடிய தகவல்கள் எமக்கு தோன்ற மாட்டாது.




இதனை மேற்கொள்ள குறிப்பிட்ட நண்பரின் சுயவிவர (Profile) பகுதிக்குச் சென்று Following என்பதை சுட்டுவதன் மூலம் Unfollow என்பதை தெரிவு செய்ய வேண்டியது தான்.


2. பதிவுகளை தவறாமல் பார்க்க வேண்டுமெனில்:

மேலே குறிப்பிட்ட முறைக்கு மாறாக ஒரு நண்பரின் அல்லது உங்களுக்கு பிடித்த ஒரு பேஸ்புக் பக்கத்தின் பதிவுகளை தவறாமல் பெற்றுக்கொள்ள விரும்பினால் அதற்கும் வசதி தரப்பட்டுள்ளது.

இதனை மேற்கொள்ள வேண்டுமெனில் குறிப்பிட்ட நண்பரின் அல்லது முகநூல் பக்கத்தின் Profile பகுதிக்கு சென்று  Following என்பதை சுட்டும்போது பெறப்படும் சாளரத்தில் See First என்பதை அழுத்த வேண்டும்.



1. அடிக்கடி அரட்டையில் ஈடுபடும் நண்பர்களை Pin செய்துகொள்ள:

நீங்கள் அடிக்கடி அரட்டையில் ஈடுபடும் நண்பர்களை அரட்டைக்கான பகுதியில் (Chatting Window) Pin செய்துகொள்ள முடியும். இதன் மூலம் நீங்கள் Pin செய்யும் நண்பர்களின் பெயர்கள் அரட்டைக்கான சாளரத்தின் மேற்பகுதியில் தோன்றும். 

எனவே அரட்டையில் ஈடுபடவேண்டிய ஒவ்வொரு சந்தர்பங்களிலும் உங்கள் நண்பர் பட்டியலில் இருந்து அவர்களை தேடிப்பெற வேண்டிய அவசியம் இருக்காது.



பேஸ்புக் செயலியின் வலது மேல் மூலையில் தரப்பட்டுள்ள நண்பர்களை அடையாளப்படுத்தும் குறியீட்டை சுட்டுவதன் மூலம் உங்கள் நண்பர்களின் பட்டியலை பெறலாம்.

பின் அதில் தரப்பட்டுள்ள EDIT என்பதை சுட்டுவதன் மூலம் நீங்கள் அடிக்கடி அரட்டையில் ஈடுபடும் நண்பர்களை Pin செய்துகொள்ள முடியும்.

ஐபோனில் Facebook மற்றும் YouTube வீடியோகளை Download செய்வது...? Direct Camera Roll

                                    


இந்த APPLICATION முழுமையாக Chines மொழியில் உள்ளது.

முதலில் உங்களுடைய Apps Store உள்ள இந்த Application Download செய்து கொள்ளுங்கள். Apps name : VEDITOR



அதன் பின்னர் அந்த Application ஓபன் செய்து கொள்ளுங்கள்; அதில் வரும் அதில் உள்ள Download Icon கொடுத்து கொள்ளுங்கள்./




அதன் பின்னர் உங்களுக்கு இவ்வாறு வரும். அதில் Youtube வீடியோ Download செய்வது என்றால் Youtube கிளிக் செய்து கொள்ளுங்கள் அல்லது பேஸ்புக் வீடியோ என்றால் முதலில் உங்களுடைய பேஸ்புக் Login செய்த பின்னர் Download செய்யலாம்.


நான் Youtube வீடியோ ஒன்றை Download செய்து காடுரன் அது போல செய்து பாருங்கள் முதலில் Youtube கிளிக் செய்து ஒரு வீடியோ தேடுங்கள். வீடியோ Play பண்ணுங்கள்.


அதன் பின்னர் வீடியோ Play ஆகும் பொது இவ்வாறு வரும் அதில் நான் காடியத்தை கிளிக் செய்து கொள்ளுங்கள் ( வட்டம் போட்டு காடியத்தை)



அதன் பின்னர் கீழ் நான் இலக்கம் இரண்டு போட்ட இடத்தில கிளிக் செய்து பாருங்கள் உங்களுடைய வீடியோ Download ஆகும்.



இது Download ஆனதும் இலக்கம் முன்று 3 போட்ட இடத்தை கிளிக் செய்து கொள்ளுங்கள். அதில் உங்களுடைய வீடியோ மேல் கிளிக் செய்து நான் வட்டம் இட்டு காடியதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.




அவ்வளவுதான்  oK கொடுங்க


இப்ப உங்களுடைய CAMERA Roll பாருங்க வீடியோ இருக்கும்




பதிவு நல்லா இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் . நன்றி  கமெண்ட்ஸ் இருந்தால் தயவு செய்து பதிவு செய்யுங்கள்.

Popular Posts

Facebook

Blog Archive