பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

அறிமுகப்படுத்துகிறோம் ஒரு புரட்சிகரமான Keyboardஐ

அனைவரும் தங்களது மொபைலில் பதிந்தே கொடுக்கப்படும் Keyboardஐயோ அல்லது வெளியில் கிடைக்கக்கூடிய Keyboardஐயோ வைத்து உபயோகித்துக் கொண்டிருக்கிறீர்களா?

அதில் ஒரு வாக்கியத்தை தட்டச்சு செய்ய 10
நிமிடம் ஆகும் எனில்  அதே வாக்கியத்தை இதில் வெரும் 5 நிமிடத்தில் தட்டச்சு செய்துவிடலாம்
இதனில்  இருக்கும் அனைத்து  சிறப்பம்சங்களையும் கூற நினைத்தால் போய்க்கொண்டே இருக்கும் ஆதலால் சுருக்கமாக சொல்லி கிளம்பிவிடுகிறேன்
நாம் இதற்கு முன் type செய்த வார்த்தைகளை சேமித்துக் கொண்டு  மறுமுறை அதனை type செய்ய நினைக்கையில அதனுடைய ் முதல் வார்த்தைக்கு உண்டான எழுத்தை  அழுத்தும்போதே அதனுடைய முழு வார்த்தையயும் இது
உங்கள் முன் கொண்டுவந்து விடுகிறது (Sift Keyboardஐ விட அருமை) அது மட்டுமல்லாமல் வித விதமான themes மற்றும் உங்களுடைய Pictureஐயே இதனுடைய themeஆக வைத்துக்கொள்ளும் வசதி இருப்பினும் type செய்யும்பொழுது  அதிக மென்மையான அனுபவத்தையும்  உணர முடியும்
இதை ஒரு முறை உபயோகித்தால் போதும் நீங்கள் உங்களது போனில் பதிந்து வைத்துள்ள அத்தனை Keyboardஐயும் தூக்கி எறிந்துவிடுவீர்கள் ஏனெனில் இதனுடைய வேகம் வேறு எந்த keyboardலும் இல்லை
இது மொத்தம் 70 வகையான மொழிகளை தட்டச்சு செய்ய உபயோகப்படுவதுதான் இதனுடைய இன்னொரு சிறப்பு   தமிழும் உள்ளடக்கம் என்றாலும் sellinam போல தட்டச்சு செய்ய வசதியாக இல்லை  ் என்பதே ஏமாற்றம்

சரி இதனை டவுன்லோட் செய்ய நினைப்பவர்கள் play store சென்று Touchpal X என்று Type செய்து கிடைக்கும் பட்சத்தில் பெற்றுக்கொள்ளுங்கள் இது முழுக்க முழுக்க இலவசமே
உபயோகித்து நன்றாக இருப்பின் இதை பகிர மறவாதீர் நன்றி
posted by
Aashy
undefined



Read in English==> http://masinfom.blogspot.in/

youtubeல் உள்ள videoக்கள எளிமையாக download செய்ய


பல நண்பர்களுக்கு  youtube videoக்களை ss முறையில் டவுன்லோட் செய்யும் வழிமுறை தெரியாமலேயே இருக்கிறது

 இதன் மூலம் youtube videoவை உங்களது   browserஇலோ அல்லது  download managerஐயோ கொண்டு எளிமையாக  download செய்துவிடலாம் அதை பற்றிய விபரங்களை பார்க்கலாம்

(நான்  opera mobileலில் இதனுடைய செயல் முறையை விளக்குகிறேன் நீங்கள் உங்களுக்கு விருப்பமான  browserல் இதை முயற்ச்சித்துப் பாருங்கள்)

முதலில் உங்களது  browserல் இருந்து  youtube. com சென்று அதில் நீங்கள் டவுன்லோட் செய்ய நினைக்கும்   videoவை தேர்வு செய்யுங்கள்

(முதல் படத்தில் காட்டப்பட்டது நான் தேர்வு செய்தது )தேர்ந்தெடுத்ததும் 
இர்ண்டாவது படத்தில் காட்டப்பட்டதுபோல் 
அதனுடைய address barல் அந்த   videoவிற்கான  linkல்
 
உதாரணமாக  m.youtube.com/watchஎன்பதாக இருக்கும் அதில்  m.ஐ நீக்கிவிட்டு  ss 
என்று சேர்த்துக்கொண்டு
  
 (examble ssyoutube. com/watch search கொடுத்தால் வேலை முடிந்தது
அடுத்து வரும்  linkல் அந்த வீடியோவின் டவுன்லோட் லின்க் அதனுடைய  
formatகள் வாரியாக உங்களுக்கு காண்பிக்கப்படும் அதி உங்களுக்கு தேவையான   formatகளில்  browserலேயோ அல்லது download managerஇலோ  download செய்துவிடலாம்
உபயோகமானது

அனைவருக்கும் பகிருங்கள்

மொபைல் Hang ஆவதிலிருந்து விடுதலை

அனைவருக்கும் இனிய வணக்கம் நாம் அனைவரும் இன்று அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கும்  Android Osஐ நமது மொபைல்களில்  உபயோகித்துக் கொண்டிருக்கிறோம் இதை நாம் அனைவரும் உபயோகிக்க காரணம்  என்ன தெரியுமா?

கூகிள் நிறுவனம் இதை இலவசமாக வெளியிட்டதாலதான் பல மொபைல் நிறுவனங்கள் இதனை தன்னுடைய மாடல்களில் உட்படுத்தி மிகவும் குறைந்த விலையில் உலகச் சந்தைகளில்  விற்பனைக்கு கொண்டு வந்தார்கள் மிகக்குறைந்த விலை என்பதால் மக்களிடத்திலும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது

அது எல்லாம் சரி என்றாவது இதனை நீங்கள் சிந்தித்திருக்கிறீர்களா? கூகிள் ஏன் இப்பேர்பட்ட இயங்கு தளத்தை (O S)ஐ இலவசமாக வெளியிட வேண்டும்?

பதில் மிகவும் சுலபம்
அதில் நிறைய தவறுகள் இருக்கும் ஒரே காரணத்தினால்தான்  அவைகளில் முதன்மை வகிப்பது Mobile Hanging . . . .
இதை சோதனை செய்து அதிலுள்ள அனைத்து தவறுகளையும் திருத்திய பின் இந்த Android Os இலவசமாக கிடைக்காது என்பதே யாரும் எதிர்ப்பார்த்திடாத   உண்மை
அதற்காண சோதனையாளர்கள்தான் நாம் நம்மை வைத்து இவர்கள் இதனுடைய குறைகளை கண்டறிந்து அதை திறுத்தம் செய்வதற்காக பலபேர் கொண்ட குழுக்களை நியமித்திருக்கிறார்கள் அவர்கள் இதனுடைய குறைகளை  திருத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்
ஆனாலும் இதை உபயோகிக்கும் நபர்கள் நாலுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிரார்கள் இந்த OS வேண்டாம் என்று விலகி  இருந்த Nokiaவும் தற்பொழுது இதை பயன்படுத்த தொடங்கியிருக்கிறது ஏனென்றால் பல பல புதிய applicationகள் Android மொபைல்களுக்கு வந்து கொண்டே இருக்கின்றன

சரி நாம் வந்த விசயத்தை கவனிக்கலாம் நமது மொபைல்களில்Hang ஆவதை எப்படி சரி செய்வது ?
அதை முழுமையாக சரிசெய்ய முடியாது ஆனால் அதை நம்மால் கட்டுப்படுத்த முடியும் அதற்கான தீர்வுதான் இந்த பதிப்பு
நாம் மொபைல் வாங்கிய புதிதில் அது Hang ஆவதில்லை அதில் நாம் பல Applicationகளை நிறுவிய பின்னர்தான் அதனுடைய வேகத்தில்  கொஞ்சம் கொஞ்சமாக தடுமாற்றம் ஏற்படுகிறது அப்படியென்றால் Applicationகளை எல்லாம் அழித்து விடவேண்டுமா என்று நினைக்க வேண்டாம் அதை அழிப்பதினால் உங்களது போனின் வேகம் கூடப்போவது இல்லை அதனுடைய உபயோகத்தை நிறுத்த வேண்டும்
அதாவது சில பேர் எனது மொபைலில் நிரைய இடம் இல்லை ஆதலால்  Applicationகளை   Memory cardல்தான் வைத்துள்ளேன் இருந்தாலும் இடப்பற்றாக்குறை ஏற்படுகிறது என்ன செய்ய என கேட்பார்கள்
அவர்கள் அனைவரும் இந்த படத்தை உற்று பாருங்கள் 
இது எனது போனில் இருக்கும் 41.26MB அளவுள்ள ஒரு Application இதை நான் இப்பொழுது மெமரிகார்டிற்கு Move செய்ய போகிறேன்


இந்த படத்தில் நீங்கல் கான்பது நான் மெமரி கார்டிற்கு அதை Move செய்தபின் இதனுடைய அளவின் விவரப்பட்டியல்
Total அதே 41.26Mb
USB storage app என்பது மெமரி கார்டுக்கு மாற்றம் செய்யப்பட்ட fileகளின் அளவு 35.56MB
சரி app 4.90MB என்று ஒரு பட்டியல் உள்ளதே அது என்ன அதுதான்  உங்களது போன் மெமரி  என்னதான் நாம் அனைத்து Applicationகளையும் மெமரி கார்டிற்க்கு Move செய்தாலும் அந்த Applicationனின் சில முக்கிய fileகள் மெமரி கார்டிற்க்கு மூவ் ஆவது இல்லை அது நமது போனிலேயே தங்கி விடுகிறது இதுதான் இந்த இடப்பற்றாக்குறைக்கு காரணம்

  • சில பேர் கேட்பீர்கள் அதாவது என்னுடைய போனில் நிரைய  இடம் இருக்கிறது மெமரி கார்டிலும் அதிக இடம் இருக்கிறது ஆனாலும் மொபைல் Hang ஆகிறது அவர்கள் அனைவரும் இந்த படத்தை உற்று பாருங்கள் 


இது Settings>app >running பகுதியில் எனது மொபைலில் காண்பிக்கப்படும் Ram மெமரியின் உபயோக அளவு
என்னுடைய Ram memoryன் அளவு 512Mb
அதின் உபயோக அளவு 432மMb
அதில் காலியான இடம் வெரும் 5 mb
இதுதான் நாம் இப்பொழுது கவனிக்க வேண்டியது
  நமது போன் வேகமாக இயங்க போன் மெமரியோ external memoryயோ freeஆக இருப்பதால்  கிடையாது முழுக்க முழுக்க Ram மெமரியின் அளவில் அதிக இடம் இருக்க வேண்டும்
நீங்கள் உங்களது போனில் Settings>app >running என்ற பகுதிக்கு செல்லுங்கள் அங்கு உங்கள் அனுமதி இல்லாமல் இயங்க கூடிய அனைத்து Applicationகளையும் Force Stop 

கொடுத்து நிறுத்தி விடுங்கள் நாம் அவ்வாறு செய்வதினால் மட்டுமே Ram memoryன் அளவை அதிகரிக்கச் செய்ய முடியும் இப்பொழுது என்னுடைய போனின் ram memoryன் அளவை பாருங்கள் எவ்வளவு இடம் Freeயாக உள்ளது என்று

  • சரி இதை செய்து முடித்ததும் அடுத்து நாம் செய்ய வேண்டியது அதில் குறிப்பிட்டிருக்கும் data 


அது அனைத்து Applicationகளிலும் நம் உபயோகத்தை பொருத்து இருக்கும் அதை ஒரு முறை clear செய்து விடுங்கள் 

  • பிறகு நமது போனில் இருக்கும் 3D மற்றும் ANIMATION WALLPAPERகளை நிறுத்தி விடுங்கள்
  • HOME SCREEN இருக்கும் அதிக APPLICATION SHORTCUT களை அழித்து விடுங்கள் 
  •  history, call logs, messages போன்றவற்றை அதிகம் மொபைலில் தேக்கி வைக்காதீர்கள்
மேற்கண்ட அனைத்தையும் நீங்கள் கடைபிடிப்பதினால் உங்களது போன் வேகமாக இயங்குவதை உங்களால் உணர முடியும் 


இதில் எதாவது சந்தேகம் இருப்பின் FACEBOOK COMMENT பதிவிடலாம்

PLEASE SHARE THIS USEFUL INFORMATION TO YOUR FRIENDS

Posted by
Your Loveble
Aashy 

Memory Cardகளில் இருக்கும் தேவை இல்லாத fileகளை எளிமையாக கண்டறிந்து நீக்க

 
 
(குறிப்பு -
இதில் நான் குறிப்பிட்டுள்ள optionஐ மட்டும் பயன்படுத்துங்கள் ஏனெனில் இது memory card cleaner மட்டும் அல்ல ஒரு system cleaning applicationம் கூட )

Memory Cardகளில் இருக்கும் தேவை இல்லாத fileகளை எளிமையாக கண்டறிந்து நீக்க 

(குறிப்பு -
இதில் நான் குறிப்பிட்டுள்ள optionஐ மட்டும் பயன்படுத்துங்கள் ஏனெனில் இது memory card cleaner மட்டும் அல்ல ஒரு system cleaning applicationம் கூட )

உங்களது மெமரிகார்டில் உள்ள தேவை இல்லாத Fileகளை நீங்கள் கண்டறிந்து நீக்குவது கடினம் உதாரணமாக நீங்கள் உங்கள் மொபைலில் எதாவது ஒரு applicationஐ என்றாவது install செய்திருப்பீர்கள் அதை சிறிது நாள் கழித்து Uninstallம் செய்திருப்பீர்கள் ஆனால் நீங்கள் உபயோகித்த அந்த Applicationன் data Files (caches) அனைத்தும் உங்களது போன் மெமரியிலோ அல்லது மெமரிகார்டிலோ தங்கிவிடும் என்பது பலருக்கும் தெரியாது இதை நாமே கண்டறிந்து ஒவ்வொன்றாக அழிக்க முடியாது ஏனெனில் ஏதாவது முக்கியமான சில folderல் கை வைத்து விட்டால் சிக்கல் நமக்குத்தான்
ஆனால் இந்த SD Maid ( https://play.google.com/store/apps/details?id=eu.thedarken.sdm  )இந்த வேலையை அருமையாக செய்கிறது
இதில் பலவகையான optionகள் கொடுக்கப்பட்டுள்ளன அவைகள் அனைத்தையும் உபயோகிக்க வேண்டாம் பிறகு உங்களுக்கு தேவையான photos மற்றும் Dataவினை தாங்கள் தெரியாமல் அழித்து விட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது
ஆனால் இதில் இருக்கும் crop Finder(படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள படம் ) என்ற optionல் உபயோகப்படாத Applicationகளின் data filesஐ கண்டறிந்து அதை நீக்குவதற்கான அனுமதியை உங்களிடம் கேட்கும் நீங்கள் தேவை இல்லாததை மட்டும் select செய்து நீக்கிவிட்டால் வேலை முடிந்தது இதன் மூலம் தேவை இல்லாததை நீக்குவது மட்டுமல்லாமல் உங்களது போனின் வேகமும் அதிகரிக்கும்

Download Detail

available place - play store
cost - fully free !!!!!
No internet access


Note :- கவனமுடன் செயல்படுங்கள் சந்தேகம் இருப்பின் Comment பன்னுங்க 

POSTED BY
AASHY

சனி, 18 அக்டோபர், 2014

GLOBALSHARE: This is True

GLOBALSHARE:


2 நிமிட வேலை : 2000 ரூ/க்கு மேல் சம்பாதிக்கும் வாய்ப்பு
பிரபலமாகிவிட்ட சமூக வலைத்தளமான ஃஃபேஸ்புக்கிற்குப் போட்டியாக பல நிறுவனங்களும் சமூக வலைத்தளங்களை உருவாக்கிவருகின்றனர்.காரணம் ஆன்லைனில் விளம்பரங்கள் மிக வேகமாக ப‌ரவும் வழி வகுக்கின்றன இந்த தள‌ங்கள் என்பதுஅனைவரும் அறிந்ததே.ஆனால் அனைத்து நிறுவன வலைத்தளங்களும் பிரபலமாகிவிடுவதில்லை . அதனை பிரபலப்படுத்த பல வழிகளைக் கையாளுகிறார்கள்.

அந்த வகையில் டிஜிட்டல் கரன்சியான ஸ்டெல்லர் உருவானபோது அதனைப் பிரபலமாக்க ஒவ்வொரு
ஃபேஸ்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கும்இலவசமாக 10$(ரூ 600)வரை கிடைத்தது என்பதை நம் ONLINE JOB வாசகர்கள் அறிவார்கள்.அதே போன்று ஒரு வாய்ப்பைத் தருகிறது GLOBAL SHARE நிறுவனம்.இந்த நிறுவனம் தற்போது ஃபேஸ்புக்கிறகுப் போட்டியாக FREE CHATTING,VOICE CALLS,FREE VIDEO CALLS, LIKES, COMMENTS, SHARE, VIDEO CONFRENCE,SMS SENDINGஎன அனைத்து வசதிகளையும் இலவசமாக வழங்கும் வகையில் புதிய சமூக வலைத்தளத்தினை உருவாக்கும் முனைப்பில் உள்ளது.
இதற்கு ஆட்கள் திரட்டும் பணிக்காகத்தான் தற்போது இந்த தளத்தில் பதிவு செய்து இணைபவர்களுக்காக தனது நிறுவனத்தின் ஒரு பங்கினை இலவசமாக வழங்குகிறது.
கீழ்கண்ட லிங்க் மூலம் சென்று வரும் தளத்தில் உங்கள் பெயர்,வயது,மெயில் விவரங்களைக் கொடுத்து பதிவு செய்து கொள்ளுங்கள்.

https://www.globallshare.com/en/3205251.html

பதிவு செய்ததும் உங்கள் மெயிலுக்கு ஒரு ஆக்டிவேஷன் மெயில் வரும்.அதில் சென்று அதில் உள்ள லிங்கினைக் சொடுக்கி ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள்.சரியாக ஆக்டிவேட் ஆகாத மெசேஜ் வந்தால் மீண்டும் ஒரு முறை லிங்கினைச் சொடுக்கி ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள்.தற்போது இடது பக்கம் உள்ள GAS WORLD சென்று க்ளிக் செய்து பிறகு டாப்பில் உள்ள 4 டைட்டிலில் (GAS WORLD,WEB OFFICE,INVITE...)உள்ள GAS WORLD ல் சென்று account activation செய்து கொள்ளுங்கள்.
பிறகு இரண்டாவது டைட்டிலில் உள்ள Web Office ஐ ரெஃப்ரஷ் செய்து பார்த்தால் உங்களுக்கான 1 ஷேர் இருக்கும்.
அவ்வளவுதான் உங்கள் ஷேரினை பாதுகாத்து வைத்துக் கொள்ளுங்கள்.
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍=========================================================
இந்த ஆஃப்ர இந்த மாதம் 20ம்தேதி வரைதான்.விரைந்து பதிவு செய்து கொள்ளுங்கள். இது Pre -Launch Organizastion.
அதன் பிறகு இன்னும் 1 மாதத்திற்குள் உங்களுக்கான Share Account Opining மெயில் வரும் போது ஒரு share account கணக்கினைத் தொடங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
01 Dec 2014 லிருந்து இந்த நிறுவனத்தின் ஷேர் பங்குச் சந்தையில் வியாபாரம் ஆக ஆரம்பித்து விடும்.தற்போது நமக்கான 1 ஷேரின் மதிப்பு 28$ (ரூ 1800) என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அதனை அந்த நிறுவனம் வெளியிடும் அன்று 50$க்கு கூட மதிப்பு நிர்ணயம் ஆகி ட்ரேட் ஆகலாம். அன்றே நீங்கள் ஷேரினை விற்று இலாபம்பார்க்கலாம்.எங்கே விற்பது? பணமாக்க்குவது என்பது பற்றிய விவரங்கள் அன்றைய நாளில் வெளியிடப்படும்.

உடல் எடையைக் குறைப்பதற்கான வழிமுறைகள்



இந்த வழிமுறைகளை தொடர்ந்து ஒரு மாதம் பின்பற்றி பாருங்கள். உங்களின் எடை தானாக குறையும். ஒரு வாரத்திற்கு, அரை கிலோவிலிருந்து ஒரு கிலோ வரை எடை குறைந்தால், சரியான வழியில் எடையைக் குறைக்கிறீர்கள் என்று அர்த்தம்.


1 ஒழுங்கான இடைவேளைகளில், குறைந்த அளவில் சாப்பிடுங்கள். ஒருபோதும் பட்டினி கிடக்காதீர்கள். முக்கியமாக, காலை உணவை தவிர்த்தால், அதிகப் பசியெடுத்து, அடுத்த வேளை உணவை ஒரு பிடி பிடிக்க நேரிடும். 

2 தினமும் நடைபயிற்சி செய்யுங்கள். இது உடல்பயிற்சியை விட சிறந்தது. நடைபயிற்சியும் யோகாவும் ஒன்று. 

3 தின்பண்டங்களுக்கு பதிலாக தினமும் மூன்று வகை பழங்கள் சாப்பிடுங்கள். அதில் ஒன்று ஆரஞ்ச், சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் வகைப் பழமாக இருக்கட்டும். 

4 அவரை, கொத்தவரை, பீன்ஸ், கேரட், முட்டைகோஸ், காலி ப்ளவர், முருங்கைக்காய், சௌ சௌ, பீர்க்கங்காய், புடலங்காய், சுரைக்காய், நூல்கோல், அத்திக்காய், பரங்கிக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, பூசணிக்காய், வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளில் ஏதேனும் ஒன்றையாவது தினமும் உணவில் இரண்டு கப் (400 கிராம்) சேருங்கள். உருளை, சேனை போன்ற கிழங்கு வகைகளை தவிர்த்து விடுங்கள். 

5 வாரத்தில் மூன்று நாட்கள் கீரையும், தட்டாம்பயறு, பச்சைப்பயிறு, கறுப்பு சுண்டல் கடலை, கொள்ளுப்பயறு போன்ற பயறு வகைகளும் அவசியம் சேருங்கள். அதோடு, நார்ச்சத்துள்ள கைக்குத்தல் அரிசி, கைக்குத்தல் அவல், முழு கோதுமை, கோதுமை ரவை, கேழ்வரகு, கம்பு போன்ற தானியங்களையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். 

6 அதிக கொழுப்பில்லாத பாலில் (அதாவது 3% அளவே கொழுப்பு சத்துள்ள ‘டோன்டு பாலில்) தயாரித்த காபி, டீ, தயிர் சாப்பிடுங்கள். 

7 தினமும் இரண்டிலிருந்து மூன்று லிட்டர் வரை தண்ணீர் அருந்துங்கள். 

8 அசைவத்தில் மீன், தோல் நீக்கப்பட்ட சிக்கன், முட்டையின் வெள்ளைக் கரு ஆகியவற்றை வேகவைத்து சாப்பிடலாம். கிரேவி வேண்டாம். 

9 நல்லெண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை ஒரு நாளைக்கு மூன்று டீஸ்பூன் உபயோகிக்கவும்.


கட்டாயம் தவிர்க்க வேண்டியவை: 


இனிப்புகள், சர்க்கரை, எண்ணெயில் வறுத்த மற்றும் பொரித்த உணவுகள், மைதா கொண்டு தயாரிக்கப்படும் உணவுகள்(கேக், பப்ஸ், பரோட்டா, பிஸ்கெட்) , மக்காச்சோழ மாவு, வெண்ணெய், நெய், சீஸ், குளிர் பானங்கள்(கோக், பெப்ஸி) மற்றும் மில்க் ஷேக்குகள். அசைவத்தில் மட்டன், பீஃப், போர்க், முட்டையின் மஞ்சள் கரு. 

இந்த வழிமுறைகள் உடல் எடையைக் குறைக்க சொல்லப்பட்டாலும் சர்க்கரை நோயாளிகளுக்கும் மிக ஏற்றவை. 


ஒரு நாளைக்கான உணவுப் பட்டியல்:

நேரம் சாப்பிட வேண்டிய உணவு
காலை 6 மணி சர்க்கரை இல்லாத காபி (அ) டீ – 1டம்ளர் (200 மி.லி)
 
காலை 8 மணி இட்லி – 2 (அ) இடியாப்பம் – 2 (அ) எண்ணெய் இல்லாத தோசை – 1. தொட்டுக் கொள்ள சாம்பார் (அ) காய்கறி சட்னி (வேர்க்கடலை சட்னி, தேங்காய் சட்னி வேண்டாம்.) 
இவற்றுடன் ஏதாவது ஒரு பழம்.
 
முற்பகல் 11 மணி சர்க்கரை இல்லாத, அப்போது பிழியப்பட்ட எலுமிச்சை ஜூஸ் (அ) மோர் - 1 (அ) 2 டம்ளர்.
 
நண்பகல் 1 மணி அரை கப் சாதம், சாம்பார் (அ) பருப்புக் கூட்டு – அரை கப், பொரியல் – 1 கப், தயிர் பச்சடி – 1 கப், சுட்ட அப்பளம் -1. (வடகம், பொரித்த அப்பளம் வேண்டாம்.)
 
மாலை 4 மணி சர்க்கரை இல்லாத காபி (அ) டீ – 1 டம்ளர் (200 மி.லி)
 
மாலை 5.30 மணி ஏதாவது பழங்கள் இரண்டு
 
இரவு 8.00 மணி எண்ணெய் இல்லாத சப்பாத்தி – 2, பருப்பு (அ) பசலைக்கீரை (அ)
காய்கறிக் கலவை கூட்டு. இதனுடன் முளைக் கட்டிய பயறு – 1 கப் (அ) கேழ்வரகு தோசை – 1. சாம்பார், காய்கறி சாலட் – 1 கப், மோர் (அ) கோதுமை ரவை உப்புமா(காய்கறிக் கலவையுடன்) – ஒரு கப், ஏதேனும் ஒரு காய் தயிர் பச்சடி – 1 கப்.
படுக்கப்போகும்போது ஏதேனும் ஒரு பழம் (அ) சர்க்கரை இல்லாத பால் – 1 டம்ளர். இரவு உணவிற்கும், படுக்கப்போவதற்கும் குறைந்தபட்சம் இரண்டு மணி நேரமாவது இடைவெளி வேண்டும்

இந்த வழிமுறைகளை தொடர்ந்து ஒரு மாதம் பின்பற்றி பாருங்கள். உங்களின் எடை தானாக குறையும். ஒரு வாரத்திற்கு, அரை கிலோவிலிருந்து ஒரு கிலோ வரை எடை குறைந்தால், சரியான வழியில் எடையைக் குறைக்கிறீர்கள் என்று அர்த்தம்.


1 ஒழுங்கான இடைவேளைகளில், குறைந்த அளவில் சாப்பிடுங்கள். ஒருபோதும் பட்டினி கிடக்காதீர்கள். முக்கியமாக, காலை உணவை தவிர்த்தால், அதிகப் பசியெடுத்து, அடுத்த வேளை உணவை ஒரு பிடி பிடிக்க நேரிடும். 

2 தினமும் நடைபயிற்சி செய்யுங்கள். இது உடல்பயிற்சியை விட சிறந்தது. நடைபயிற்சியும் யோகாவும் ஒன்று. 

3 தின்பண்டங்களுக்கு பதிலாக தினமும் மூன்று வகை பழங்கள் சாப்பிடுங்கள். அதில் ஒன்று ஆரஞ்ச், சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் வகைப் பழமாக இருக்கட்டும். 

4 அவரை, கொத்தவரை, பீன்ஸ், கேரட், முட்டைகோஸ், காலி ப்ளவர், முருங்கைக்காய், சௌ சௌ, பீர்க்கங்காய், புடலங்காய், சுரைக்காய், நூல்கோல், அத்திக்காய், பரங்கிக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, பூசணிக்காய், வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளில் ஏதேனும் ஒன்றையாவது தினமும் உணவில் இரண்டு கப் (400 கிராம்) சேருங்கள். உருளை, சேனை போன்ற கிழங்கு வகைகளை தவிர்த்து விடுங்கள். 

5 வாரத்தில் மூன்று நாட்கள் கீரையும், தட்டாம்பயறு, பச்சைப்பயிறு, கறுப்பு சுண்டல் கடலை, கொள்ளுப்பயறு போன்ற பயறு வகைகளும் அவசியம் சேருங்கள். அதோடு, நார்ச்சத்துள்ள கைக்குத்தல் அரிசி, கைக்குத்தல் அவல், முழு கோதுமை, கோதுமை ரவை, கேழ்வரகு, கம்பு போன்ற தானியங்களையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். 

6 அதிக கொழுப்பில்லாத பாலில் (அதாவது 3% அளவே கொழுப்பு சத்துள்ள ‘டோன்டு பாலில்) தயாரித்த காபி, டீ, தயிர் சாப்பிடுங்கள். 

7 தினமும் இரண்டிலிருந்து மூன்று லிட்டர் வரை தண்ணீர் அருந்துங்கள். 

8 அசைவத்தில் மீன், தோல் நீக்கப்பட்ட சிக்கன், முட்டையின் வெள்ளைக் கரு ஆகியவற்றை வேகவைத்து சாப்பிடலாம். கிரேவி வேண்டாம். 

9 நல்லெண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை ஒரு நாளைக்கு மூன்று டீஸ்பூன் உபயோகிக்கவும்.


கட்டாயம் தவிர்க்க வேண்டியவை: 



இனிப்புகள், சர்க்கரை, எண்ணெயில் வறுத்த மற்றும் பொரித்த உணவுகள், மைதா கொண்டு தயாரிக்கப்படும் உணவுகள்(கேக், பப்ஸ், பரோட்டா, பிஸ்கெட்) , மக்காச்சோழ மாவு, வெண்ணெய், நெய், சீஸ், குளிர் பானங்கள்(கோக், பெப்ஸி) மற்றும் மில்க் ஷேக்குகள். அசைவத்தில் மட்டன், பீஃப், போர்க், முட்டையின் மஞ்சள் கரு. 

இந்த வழிமுறைகள் உடல் எடையைக் குறைக்க சொல்லப்பட்டாலும் சர்க்கரை நோயாளிகளுக்கும் மிக ஏற்றவை. 


ஒரு நாளைக்கான உணவுப் பட்டியல்:

நேரம் சாப்பிட வேண்டிய உணவு
 
காலை 6 மணி சர்க்கரை இல்லாத காபி (அ) டீ – 1டம்ளர் (200 மி.லி)
 
காலை 8 மணி இட்லி – 2 (அ) இடியாப்பம் – 2 (அ) எண்ணெய் இல்லாத தோசை – 1. தொட்டுக் கொள்ள சாம்பார் (அ) காய்கறி சட்னி (வேர்க்கடலை சட்னி, தேங்காய் சட்னி வேண்டாம்.) இவற்றுடன் ஏதாவது ஒரு பழம்.
 
முற்பகல் 11 மணி சர்க்கரை இல்லாத, அப்போது பிழியப்பட்ட எலுமிச்சை ஜூஸ் (அ) மோர் - 1 (அ) 2 டம்ளர்.
 
நண்பகல் 1 மணி அரை கப் சாதம், சாம்பார் (அ) பருப்புக் கூட்டு – அரை கப், பொரியல் – 1 கப், தயிர் பச்சடி – 1 கப், சுட்ட அப்பளம் -1. (வடகம், பொரித்த அப்பளம் வேண்டாம்.)
 
மாலை 4 மணி சர்க்கரை இல்லாத காபி (அ) டீ – 1 டம்ளர் (200 மி.லி)
 
மாலை 5.30 மணி ஏதாவது பழங்கள் இரண்டு
 
இரவு 8.00 மணி எண்ணெய் இல்லாத சப்பாத்தி – 2, பருப்பு (அ) பசலைக்கீரை (அ)
காய்கறிக் கலவை கூட்டு. இதனுடன் முளைக் கட்டிய பயறு – 1 கப் (அ) கேழ்வரகு தோசை – 1. சாம்பார், காய்கறி சாலட் – 1 கப், மோர் (அ) கோதுமை ரவை உப்புமா(காய்கறிக் கலவையுடன்) – ஒரு கப், ஏதேனும் ஒரு காய் தயிர் பச்சடி – 1 கப்.
படுக்கப்போகும்போது ஏதேனும் ஒரு பழம் (அ) சர்க்கரை இல்லாத பால் – 1 டம்ளர். இரவு உணவிற்கும், படுக்கப்போவதற்கும் குறைந்தபட்சம் இரண்டு மணி நேரமாவது இடைவெளி வேண்டும்

ஞாயிறு, 12 அக்டோபர், 2014

பென்டிரைவில் write protected பிழையை நீக்குவது எப்படி?

வணக்கம் நண்பர்களே..!

இன்று நாம் பயன்படுத்தும் கணினிச் சார்ந்த டிவைஸ்களில் முக்கிய பங்கு வகிப்பது பென்டிரைவ் என்றால் அது மிகையாது. காரணம் இதன்மூலம் நமக்கு வேண்டிய தகவல்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்தில் எளிதாக எடுத்துச்செல்ல முடியும் என்பதே.
write protect pendrive

மேலும் தற்போதுள்ள நவீன பென்டிரைவ்களில் (New Type of Pendrive) கோப்புகளின் அளவை மேலும் நீடித்து வைத்துக்கொள்ள முடியும் என்பது கூடுதல் சிறப்பு.. அதாவது பென்டிரைவில் 1GB, 2GB, 4GB, 6GB, 8 GB, என ஆரம்பித்து, தற்பொழுது 64 GB கொள்ளவு கொண்ட பென்டிரைவ்களும் இருப்பதாக கேள்விப்படுகிறோம்.

இத்தகையப் பயன்மிக்க பென்டிரைவ்(pendrive) அல்லது மெமரிகார்ட்(memory card) போன்ற ரீமூவபிள் டிவைஸ்களை நாம் பயன்படுத்தும்பொழுது சில சமயம் cannot copy files and folder, drive is write protected. remove write protection or use another disk என்பன போன்ற பிழைச் செய்திகளைக் காட்டும்.

உடனே என்னவோ ஏதோவென்று, பதறாதீர்கள். இவ்வாறான பிழைச் செய்திகளை(Error) வருவதற்கு வைரஸ் போன்ற தீங்கிழைக்கும் புரோகிராம்களே(Virus Program) காரணமாக இருக்கும்.

இதுபோன்ற பிழைச்செய்திகள் வருவதற்கு ஒரு முக்கிய காரணம் உங்கள் கணினியில் உள்ள Registry கோப்பில் வைரஸ்கள் 'கை' வைப்பதுதான். அதனாலேயே பெரும்பாலான பிழைச்செய்திகள் இவ்வாறு தோன்றும்.

சரி.. write protected பிழைச் செய்தி காட்டினால் என்ன செய்வது? அதற்கான தீர்வுதான் என்ன? என்கிறீர்களா?

இதோ தீர்வு..

  1. உங்களுடைய கணினியில் Start பட்டன் அழுத்துங்கள்.
  2. Run விண்டோவை திறவுங்கள்.
  3. அதில்
reg add "HKLM\System\CurrentcontrolSet\Control\StorageDevicePolicies" /t Reg_dword /vWriteProtect /f/d 0

என கொடுத்து ok பட்டனை அழுத்துங்கள்.

அவ்வளவுதான். இப்பொழுது உங்களுடைய கணினியில் உள்ள பென் டிரைவை எடுத்துவிட்டு மீண்டும் கணினியில் இணைத்து புணிபுரியத் தொடங்கலாம். இப்பொழுது Write Protected பிழைச்செய்தி தோன்றாது.

நன்றி

பென்டிரைவைப் பாதுகாக்க default safe remove வசதி

Quickly remove USB devices without using Safe Removal

ரீமூவல் டிவைஸ் என்று சொல்லப்படும் பென்டிரைவ் போன்றவைகளை யு.எஸ்.பி  போர்ட்டில் செருகிப் பயன்படுத்துவீர்கள்.

சிலநேரங்களில் வேலை முடிந்ததும் Pendrive-வை USB Port லிருந்து எடுக்கும்பொழுது Safe Removal கொடுக்காமலேயே அப்படியே அதை உருவி எடுத்துவிடுவோம்.


சிலருக்கு Safe Removal கொடுக்காவிட்டால் என்ன நிகழும் என்று தெரிந்திருந்தும், அப்படிச் செய்யாமல் உடனடியாக USB Port லிருந்து Pendrive வை நீக்கிவிடுவார்கள்.

காரணம் வேலை செய்து முடித்துவிட்டு, உடனடியாக அதை எடுத்துவிட வேண்டும் என்ற எண்ணம்தான் காரணம்.

சரி.. இப்படி நீங்களாகவே Safe Remove கொடுக்காமல்,

usb safe remove default

usb safe remove default

தானாகவே Safe Remove கொடுப்பது எப்படி?  

என்பதைப் பார்ப்போம்.

  1. உங்களுடைய கணினியில் பெட்டிரைவை செருகவும்.
  2. இப்போது mycomputer Icon மீது ரைட் கிளிக் செய்யவும்.
  3. தோன்றும் பெட்டியில் Manage என்பதைச் சொடுக்கவும்.
  4. தோன்றும் பெட்டியில் Device Manager என்பதில் கிளிக் செய்யவும்.
  5. கிளிக் செய்தவுடன் கணினியில் உள்ள அனைத்து டிவைஸ்களும் அதில் காட்சியளிக்கும்.
  6. தோன்றும் காட்சியில் Disk Drives என்பதில் டபுள் கிளிக் செய்யவும்.
  7. தோன்றும் கீழ்விரி பட்டியலில் உங்களுடைய பென்டிரைவின் பெயரைத் தேடி அதில் டபுள் கிளிக் செய்யவும்.
  8. இப்போது தோன்றும் விண்டோவில் இரண்டாவதாக உள்ள Polices என்பதைக் கிளிக் செய்து,  Quick Removal (Default) என்பதைக் கிளிக் செய்து தேர்வு செய்து வெளியேறுங்கள். 

இனி, நீங்கள் ஒவ்வொரு முறையும் பென்டிரைவை USB port-லிருந்து நீக்கும்பொழுதும் Safe Remove கொடுக்கத் தேவையில்லை. உங்களுடைய பென்டிரைவும் எந்த பாதிப்பும் அடையாமல் பாதுகாப்புடன் இருக்கும்.

வெள்ளி, 10 அக்டோபர், 2014

சுறுசுறுப்பா இருக்கணுமா? இரத்தத்தை சுத்தமாக்குங்க..!

உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும்.

இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.
பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். இதுதவிர, செம்பருத்திப் பூவை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.

முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.

நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் கூட இரத்தம் விருத்தி ஆகிறது.
இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது. தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் கூட இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.
இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொ‌‌ண்டது.
இன்றைய காலகட்டத்தில் பெரும் அச்சுறுத்தல் இரத்தக் குழாய் அடைப்பு. இதனை சாதாரண தவிர்த்துவிடலாம் என்கிறது இயற்கை வைத்தியம். தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் போதும் இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும்.

இதற்கடுத்தது இரத்தம் அழுத்தம். இதனை முற்றிலுமாக போக்க வழி உண்டு. கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீரகப் பொடி 12 நேரம் ஊறவைத்து குடித்து வந்தால் போதும். மேலும், ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சீர்படும். இதுதவிர, அகத்திக் கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டால் வந்தாலும் இரத்தக் கொதிப்பு குணமாகும்.

இரத்தக்கட்டு, சுளுக்கு நிவர்த்தியாக, மஞ்சள், உப்பு, சுண்ணாம்பு ஆகியவற்றை வெந்நீர் விட்டு அரைத்து அந்த விழுதை சூடு செய்து சுளுக்கின் மீது பற்றுபோட்டால் போதும்.

விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.

இயற்கையான அழகு குறிப்புகள் Natural beauty tips

தற்காலத்தில் தங்களின் அழகை வெளிப்படுத்திக் காட்டுவதில் பெண்களுக்கு அதிக ஆர்வமும், போட்டியும் இருக்கிறது..
ஒவ்வொருவரும் தன்னைவிட அழகானவர்கள் யாரும் இல்லை என மனதில் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.
அவரவர் மனதில் அவரவர்களே கதாநாயகனாக, கதாநாயகியாக உருவகித்துக்கொண்டு வாழ்ந்துவருகிறோம். இது அனைவருக்கும் மனதில் இருக்கும் பொதுவான எண்ணங்கள்தான்.

இருப்பினும் இயற்கையை மீறி சில செயற்கைத் தனங்களைச் செய்வதன் மூலம் தம்முடைய அழகை வெளிப்படுத்த எத்தனை முயற்சிகளில் இறங்கி பரீசித்துப் பார்ப்பவர்கள் இன்று ஏராளம். இதில் ஆண் பெண் என்ற பேதம் இல்லை..
இயற்கையான முறையில், இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே நம்முடைய உடலழகைப் பேண முடியும்.

இயற்கையான அழகு குறிப்புகள்

முதலில் நகம். நகத்தை தூய்மையாக வைத்துக்கொண்டாலே உடலில் பாதி நோய்கள் அண்டாது. மருத்துவர்கள் கூட வைத்தியம் பார்த்தவுடன் அடிக்கடி கைக்களை சோப்பு நீரில் கழுவுவதை நாம் பார்த்திருப்போம்.
காரணம் மனிதர்களுக்கு கிருமிகள் பெரும்பாலும் கைகளின் மூலமாகவே வாயிற்கும், வயிற்றும் சென்று பல உபாதைகளை ஏற்படுத்துகிறது. அதனால்தான் கைகளை நன்றாக கழுவி சுத்தம் செய்து பிறகே சாப்பிட வேண்டும் என்றும், அடிக்கடி நகத்தை கடிக்க கூடாதென்றும் பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள்.

நகத்தைப் பராமரிக்க: 

பாலில் பேரிச்சம் பழத்தை கலந்து பருகிவர நகங்கள் கூடுதல் பலமடைவதோடு, உடைவதும் குறையும். பாதாம் எண்ணையை நகத்தில் தடவி வர நகங்களுக்கு கூடுதல் பளபளப்பு கிடைக்கும்.

இதழ்களை பராமரிக்க: 

நம் வீட்டில் பொரியலுக்கு வாங்கும் பீட்ருட் சிறிதளவு இருந்தாலே போதும். உங்களுக்கு எந்த வித Lipstick-ம் தேவையில்லை. பீட்ரூட்டை வெட்டி உங்கள் இதழ்களில் இலாசக லிப்ஸ்டிக் பூசுவதைப் போல அழுத்தி தேய்த்து வந்தாலே போதும். உங்களுக்கு இயற்கை கொவ்வைச் செவ்வாய் இதழ்கள் கிடைக்கும்.
பலரையும் கவர்ந்திழுக்கும் இயற்கையான செந்நெறி உதடுகளைப் பெறலாம்.
கூடவே இந்தப் பதிவில் இருப்பதைப் போலவும் நீங்கள் செய்து பார்க்கலாம்.

முகத்தைப் பராமரிக்க: 

உங்களுக்கு அமுல்பேபி போன்ற கொழுக் மொழுக் முகத்தைப் பெற வேண்டுமா? நீங்கள் செய்வதென்னவோ சுலபமான வேலைதான்.
நன்கு பழுத்த பப்பாளிப் பழத்தை முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து உங்கள் முகத்தை கழுவிப் பாருங்கள்.
பயற்றம்பருப்பு மாவுடன், தர்பூசணி பழச்சாற்றைக் கலந்து, அக்கலவையை முகத்தில் பூசி வர உங்கள் முகம் பொலிவு பெறுவது உறுதி.
இந்த இரண்டு முறைகளை நீங்கள் பின்பற்றினாலே உங்கள் முகம் “பளிச் பளிச்” போங்க..!

கழுத்தை பராமரிக்க: 

நிறையப் பெண்கள் செய்யும் தவறே இதுதான்.. அழகாக முகத்தை பரிமரிக்க தெரிந்தவர்கள் கழுத்தை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள். இதனால் கழுத்து கருத்துப்போய் முகம் மட்டும் பொலிவாக காட்சி தரும்.
சிறிதளவு ரோஸ்வாட்டர், சிறுது வெங்காயச்சாறு, ஆலிவ் எண்ணெய் இரண்டு சொட்டு, இவற்றுடன் சிறிதளவு பயத்த மாவு கலந்து கழுத்தைச் சுற்றி பூசிவிடுங்கள். ஒரு பத்து நிமிடம் கழித்து கழுத்திலிருந்து தாடை நோக்கி இலேசாக மசாஜ் செய்துவிடுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்ய நாளடைவில் உங்கள் கழுத்தும் கருமை நிறம் நீங்கி பள பளக்கும்.

சருமத்தைப் பராமரிக்க: 

ஒரு ஸ்பூன் ஈஸ்ட்டுடன், முட்டைகோசின் இலையில் சாறு எடுத்து கலந்துகொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சருமம் எங்கும் பூசி வர சூரிய ஒளியால் கருமை அடைந்த தோலின் நிறம் இயற்கை நிறத்திற்கு மாறிவிடும். முன்பு இருந்ததைவிட சருமத்தில் நிறம் சிவப்பாக காட்யளிக்கும்.

கருவளையம் நீங்க: 

கருவளையம் என்றாலே கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையத்தைத்தான் குறிக்கும். கருவளையம் நீங்க இதுதான் சிறந்த வழி. வெள்ளரிக்காய் விடையை பொடி செய்து, அதில் தயிர் சேர்த்து பசைப்போல(Paste)ஆக்குங்கள். இந்த பேஸ்ட்டை கருவளையும் உள்ள பகுதியில் தொடர்ந்து பூசி வர முப்பது நாளில் கருவளையும் இருந்த இடம் காணாமல் போயிருக்கும்.

கருப்பு திட்டுகளை நீக்க: 

சிலருக்கு முகத்தில், மூக்கில், கண்ணங்கள் என அசிங்கமாக கருப்பு நிற திட்டுகள் காணப்படும். இதை கிராம புறத்தில் “மங்கு” என குறிப்பிடுவார்கள். இவற்றைப் போக்க, ஜாதிக்காய், சந்தனம், வேப்பங்கொழுந்து ஆகியவற்றை நீர்கலந்து நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்த பற்றை முகத்தில் இருக்கும் கருப்பு திட்டுகள் இருக்கும் இடத்தில் பசைப்போல தடவுங்கள். சில முறை இந்த முறையை நீங்கள் கையாண்டால் போதும் முகத்தில் உள்ள அசிங்கமான மங்கு(கருந்திட்டு)மறைந்துவிடும்.

Nature cleanser (இயற்கை கிளென்சர்)

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பால் ஒரு நல்ல cleanser ஆகும். குளிர்ந்த பாலில் பஞ்சை நனைத்து முகம் துடைக்கலாம். இது ஒரு சிறந்த க்ளென்சிங் ஆகும்.
இளநீரும் ஒரு மிகச்சிறந்த க்ளென்சிங் பொருள். எனவே நீங்கள் தேங்காய் உடைக்கும்போது வெளியேறும் நீரை வீணாக்காமல் அவற்றை முகத்தில் தடவிக்கொள்ளலாம்.
எண்ணெய் பசை உள்ள சருமத்தை உடையவர்கள் எலுமிச்சை சாற்றில் சில துளிகள் பால் சேர்த்து கலந்து, கலவையில் பஞ்சினை நனைத்து சருமத்தை துடைக்காலம்.
வறண்ட சருமத்தை உடையவர்கள் பாலுடன் தேன் கலந்து பயன்படுத்தலாம்.

முகப்பரு போக்க: 

முகத்தை, முகத்தின் அழகை கெடுப்பதில் முகப்பருவிற்கு பெரும்பங்கு உண்டு. பரு வந்து காய்ந்து போனால் முகத்தில் திட்டு திட்டாக, கருமை நிறத்துடன் முகம் பொலிவிழந்து காணப்படும். எனவே முகத்தில் பரு வராமல் பார்த்துக்கொள்வது நல்லது. முகப்பருவை நீக்க ஜாதிக்காயை நீரில் ஊறவைத்து அரைத்துக்கொள்ளுங்கள்.
அதனுடன் சந்தனத் தூளைக் கலந்து முகப்பரு, முகப்பரு தழும்புகளின் மீது தடவி வர முகப்பருக்கள் நீங்கும். முகம் பொலிவு பெறும்.
இரண்டு ஸ்பூன் புதினா சாற்றுடன், ஒரு ஸ்பூன் பயிற்ற மாவைக் கலந்து முகப்பரு தழும்புகளின் மீது பூசிவர முகப்பரு தழும்புகள் நீங்கும்.

முகம் பொலிவு பெற ஒரு Hi-tech இயற்கை மருத்துவ முறை: 

பாதாம் பருப்பு. பெயரிலேயே இது ஒரு அந்தஸ்தை கொண்டுள்ளது. இந்த பாதாம் பருப்பை ஊறவைத்து  பாலுடன் சேர்த்து நன்றாக அரைத்தெடுங்கள். பேஸ்ட்போல ஆக்கிக்கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை முகத்தில் பூசுங்கள். 20-25 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவிப் பாருங்கள்.. நீங்களே வித்தியாசத்தை உணர்வீர்கள்…
முகம் பளிச் பளிச்தான் போங்க…!!

மற்றொரு இயற்கையான எளிய முறை:

கடலை மாவு.. இது நம் வீட்டிலேயே அடிக்கடி பயன்படக்கூடியது இல்லையா…? காலையில் குளிக்கப் போகும் முன் இதை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் குழநைத்து முகத்தில் தடவுங்கள். அரைமணி நேரம் ஊறிய பிறகு குளித்துவிடுங்கள். தொடர்ந்து இரண்டு வாரங்கள் இந்த முறையைப் பின்பற்றினாலே உங்கள் முகம் பளபளக்க ஆரம்பித்துவிடும். விரைவான பலனைக் கொடுப்பதில் கடலைமாவு முன்னணி வகிக்கிறது.

முகச்சுருக்கம் போக்க: 

ஆவாரை இருக்கும்போது சாவாரைக் கண்டதுண்டோ..? இது பழமொழி. இந்த பழமொழியிலிருந்தே ஆவாரையின் மருத்துவ குணத்தை நாம் உணரலாம். இது முகச்சுருக்கத்தைப் போக்கவும் பயன்படுகிறது. ஆவாரம் பூவை காய வையுங்கள்.  காய்ந்த ஆவாரம் பூ பொடி செய்து 5 கிராம் எடுத்துக்கொள்ளுங்கள். கூடவே காய்ந்த புதினா இலைப் பொடி 5 கிராம், கடலை மாவு 5 கிராம், பாசிப்பயிறு மாவு(பயற்ற மாவு)5 கிராம்.
இவற்றுடன் Olive Oil கலந்து நன்கு குழைத்து முகத்தில் பூசி பதினைந்து நிமிடங்கள் ஊறவிடுங்கள். பிறகு நன்கு குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவுங்கள். தொடர்ந்து இரண்டு வாரங்கள் இந்த முறையைச் செய்து வந்தால் தோலில் சுருக்கங்கள் மறைந்து தோல் இளமை பெறும். புதுப்பொலிவுடன் காட்சி தரும்.

மற்றொரு முறை: வெள்ளிக் காய் துண்டு இரண்டும், நாட்டுத் தக்காளி ஒன்றும், சிறிதளவு புதினா இலை அவற்றை எடுத்து நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். பிறகு அரைத்த விழுதை முகத்தில் நன்றாக பூசி பதினைந்து நிமிடங்கள் ஊறவிடுங்கள். பிறகு முகத்தை நல்ல தூய்மையான, குளிர்ந்த நீரில் கழுவுங்கள். உங்கள் முகத்தோற்றத்தில் பளபளப்பை காண முடியும். தொடர்ந்து இவ்வாறு இரண்டு வாரங்கள் செய்து வர உங்களால் நம்ப முடியாத அளவிற்கு உங்கள் முகம் பொலிவு பெற்றிருக்கும்.
மேலே குறிப்பிட்ட அனைத்தும் இயற்கையாக விளைந்த பொருட்களைப் பயன்படுத்தி செய்வதால் எந்த வித பக்கவிளைவுகள் ஏற்படாது. மேலும் இயற்கை மருத்துவப் பொருட்களைக் கொண்டு செய்வதால் முழுப் பயன்களையும் பெற குறைந்த பட்சம் இரண்டு வாரங்கள், பதினைந்து நாட்கள் ஆகும். நம்பிக்கையோடு செய்து பாருங்கள்.. நீங்களும் உலக அழகிதான்…!!! உலக அழகன்கள்தான்…!!!

இந்த பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா?
 உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்.
 
 நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.ஏதேனும் சந்தேகம் எனில் மின்னஞ்சல் செய்யுங்கள்.நன்றி நண்பர்களே.. மற்றுமொரு புதிய பயனுள்ள பதிவின் வழி சந்திப்போம். 

வியாழன், 9 அக்டோபர், 2014

இணைய வேகத்தை அதிகரிக்க இலவச மென்பொருள்

உங்கள் Internet speed குறைவாக உள்ளதா? ஏதாவது இணையதளத்தில் தரவிறக்கம் செய்யும்போது மிக குறைந்த வேகத்தில் இணையம் செயல்படுகிறதா?

ஒரு மென்பொருளையோ, அல்லது நீங்கள் விரும்பும் விடியோ, படங்கள் தரவிறக்கம் செய்ய அதிக நேரம் எடுத்துக்கொள்கிறதா? அப்படியெனில் இந்த மென்பொருள் உங்களுக்குப் பயன்படும்.
free download manager software
 speed up your internet speed -free software (FDM)
FDM எனும் இம்மென்பொருளைப் பயன்படுத்தி, நீங்கள் விரும்பிய கோப்புகள் எதுவாயினும் இணையத்தில் விரைவாக தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். தரவிறங்கும் வேகம் அதிகரிக்கும்.

FDM என்பதன் விரிவாக்கம் Free Download Manager என்பதாகும்.
Free Download Manager Software-ன் பயன்கள்:
இந்த மென்பொருள் மூலம் ஒரு கோப்பைத் தரவிறக்கம் செய்யும்போது கிடைக்கும் வேகம் எவ்வளவு தெரியுமா? 600% சதவிகிதம் தரவிறங்கும் வேகம் அதிகரிக்கிறது.
ஒரு மென்பொருளை தரவிறக்கம் செய்துகொண்டிருக்கும்போது, பாதியில் ஏதேனும் தடை ஏற்பட்டால், மீண்டும் அம்மென்பொருளை புதியதாக தரவிறக்கம் செய்ய தேவையில்லை. எதுவரைக்கும் தரவிறங்கியிருக்கிறதோ, அதிலிருந்து தொடர்ந்து தரவிறங்குகிறது. இதனால் உங்கள் நேரமும், இணைய நேரமும் மிச்சமாகிறது.
YouTube, Flash Video க்களை தரவிறக்கம் செய்துகொள்ளும் வசதி..!
Http, FTB, Bit Torrent ஆகியவற்றிலிருந்து எளிதாக, விரைவில் தரவிறக்கும் வசதி..
இந்த FDM மென்பொருளை download செய்ய :
http://www.freedownloadmanager.org/download.htm
மென்பொருளைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள இந்த காணொளியைக் காணுங்கள்..!

 AII SO READ IN ENGLISH==>>   http://masinfom.blogspot.in/2014/10/how-to-increase-your-download-speed.html
நன்றி நண்பர்களே..!

அழிந்துபோன சிம்கார்ட் தகவல்களை மீட்டெடுக்க இலவச மென்பொருள்

சிம்கார்டிலிருந்து தவறுதலாக அழிக்கப்பட்ட தகவல்களை மீட்டெடுக்க பல்வேறு வகையான மென்பொருள் உள்ளன. அவற்றை SIM Card Data Recovery மென்பொருட்கள் என்போம். இப்பதிவில் நான் அறிந்துகொண்ட சிம் டேட்டா ரெகவர் மென்பொருட்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளேன். 

GSM மொபைல் போன்களில் போன் மெமரி மட்டுமல்லாமல், சிம்கார்டிலும் தகவல்களை சேமிக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியும். சிம்கார்டில் சேமிக்கக்கூடிய தகவல்கள்: 

1. Call History
2. Phone Book Numbers
3. SMS

இதுபோன்ற தகவல்களை தேவையில்லை என அழித்திருப்பீர்கள். அல்லது தவறுதலாக அழிக்கப்பட்டிருக்கும். 
 Sim Card Data Recover software
அழிக்கப்பட்ட தகவல்களிலிருந்து ஒன்றிரண்டு போன் நம்பர்களோ அல்லது கால் ஹிஸ்டரியிலிருந்து உங்களுக்கு ஏதேனும் ஒருசில தகவல்கள் தேவைப்படும். ஆனால் அந்த சமயத்தில் அத்தகவல்களைத் திரும்ப பெற வழியின்றி தவித்திருப்பீர்கள். 


அதுபோன்ற சூழலில் உங்களுக்குப் பயன்படக்கூடியவைதான் SIM Card Data Recovery மென்பொருள்கள்.

இதுபோன்ற சிம்கார்ட் டேட்டா ரெகவரி மென்பொருள்களை பல்வேறு நிறுவனங்கள் தயாரித்து வழங்குகிறது.

ஃப்ரீ டவுன்லோட்ஸ் சென்டர் என்ற தளத்தில் இதுபோன்ற பல மென்பொருள்கள் மிகுந்து கிடக்கின்றன.

அவற்றில் சிம்கார்ட் டேட்டா ரெகவரி, சிம்கார்ட் ரெகவரி டூல், சிம் ரீஸ்டோர், சிம்கார்ட் கான்டாக்ட் ரெகவரி சாப்ட்வேர், சிம்கார்ட் கான்டாக்ட் ரெட்ரைவல் டூல், ரெகவர் யுவர் சிம்கார்ட், சிம் ரெகவரி, எஸ்.எம்.எஸ். ரெகவரி யுட்டிலிட்டி, ரெகவர் டெலீட்டட் எஸ்.எம்.எஸ், ரிகவர் சிம்கார்ட் போன்ற இருபதுக்கும் மேற்பட்ட மென்பொருள்கள் உள்ளன.

ஒவ்வொரு சிம்கார்ட் ரிகவரி மென்பொருளைப் பற்றியும், அந்த மென்பொருளுக்குரிய நிறுவனம் அல்லது மென்பொருள் கிடைக்கக்கூடிய தளத்தைப் பற்றிய விளக்கங்களும் அத்தளத்தில் குறிக்கப்பட்டுள்ளன. 

உங்களுக்கு விருப்பமான மென்பொருளை அதிலிருந்து தரவிறக்கம் செய்து, அத்தளத்தில் கூறப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றி நீங்கள் உங்கள் சிம்கார்டில் அழிக்கப்பட்ட தகவல்களை மீட்டெடுக்கலாம்.

மென்பொருள் பற்றிய மேலதிக தகவல்களுக்கு நீங்கள் செல்ல வேண்டிய முகவரி: Free Downloads center

முக்கிய குறிப்பு: மென்பொருள்கள்பற்றிய நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பு குறித்த தகவல்களை நன்றாக படித்தறிந்த பிறகு தேவையான மென்பொருளை டவுன்லோட் செய்யவும்.
நன்றி.

பென்டிரைவில் File Transfer Speed அதிகரித்திட

சில நேரங்களில் பென்டிரைவில் கோப்பு பரிமாற்றம் (File Transfer to Pendrive)செய்திடும்பொழுது, அதன் வேகம் மிக குறைவானதாக இருக்கும்.

உதாரணமாக ஒரு பெரிய கோப்பொன்றை கம்ப்யூட்டரிலிருந்து பென்டிரைவிற்கு மாற்றிடும்பொழுது, பறிமாற்றம் செய்துகொள்ளும் வேகம் மிக குறைவாகவும், பறிமாற்றத்திற்கான நேரம் அதிகமாகவும் இருக்கும்.

இதுபோன்ற சூழல்களில் பயனர்களுக்கு அதிக டென்சன் ஏற்படும்.

இவ்வாறான மெதுவான டேட்டா பரிமாற்றம் ஏற்படாமல் தவிர்த்து, விரைவான தகவல்கள் பறிமாற்றம் செய்திட வழியுண்டு.
To-increase-pen-drive-data-transfer-speed

பென்டிரைவில் தகவல் பரிமாற்ற வேகத்தை அதிரிக்கும் வழிமுறைகள்:

1. கீபோர்டில் Start Button + E அழுத்தி My Computer செல்லவும்.
2. பென்டிரைவிற்கான Drive-ல் ரைட் கிளிக் செய்து Properties செல்லவும்.
3. தோன்றும் விண்டோவில் Hardware எனும் டேபை கிளிக் செய்யவும்.
4. காட்டப்படும் விண்டோவில் பென்டிரைவிற்கான டிரைவை தேர்ந்தெடுத்துக்கொண்டு, கீழுள்ள Properties என்பதை கிளிக் OK கொடுக்கவும்.
5.  தற்பொழுது திறக்கும் விண்டோவில் Change Settings என்பதை சொடுக்கவும்.
6. உடன் தோன்றும் விண்டோவில் Policies என்ற டேபை  கிளிக் செய்து, கீழிருக்கும் Better Performance என்பதை தேர்ந்தெடுத்து, OK கிளிக் செய்யவும்.

முடிந்தது. இனி உங்களுடைய பென்டிரைவின் தகவல் பரிமாற்ற வேகம் முன்பு இருந்ததை விட அதிக வேகமாக இருக்கும்.

புதன், 8 அக்டோபர், 2014

இலவசமாக கோப்புகளை இணையத்தில் சேமிக்க

எதற்கெடுத்தாலும் நம்முடைய கம்ப்யூட்டரையே நம்பி இருக்க முடியுமா? கம்ப்யூட்டரும் மிஷின்தானே..! அதுவும் வெப்பமடைந்தால் பழுதாக வாய்ப்பிருக்கிறது..!

ஏதாவது முக்கியமான கோப்புகளை சேமித்து வைத்திருப்பீர்கள். திடீரெனப் பார்த்தால் ஒரு நாள் கம்ப்யூட்டர் கிராஷ்(Computer Crash) ஆகி, கோப்புகள் அனைத்தும் மாயமாகியிருக்கும். எங்கேடா அந்த முக்கியமான பைல் என்று தேடிப்பார்த்து, பைத்தியம் பிடிக்காத குறையாக தேடியிருப்பீர்கள்.


இதுபோன்ற சூழ்நிலைகள் வராமல் இருக்க, அதுபோன்ற முக்கியமான கோப்புகளை (Very Important Files) இரண்டு மூன்று பேக்கப்கள் வைத்திருப்பது மிகவும் பயன்தரும். அதுவும் ஆன்லைனில் கோப்புகளை பாதுகாத்தால் எப்பொழுது வேண்டுமானாலும் அவற்றை நாம் தரவிறக்கிப் பயன்படுத்திக்கொள்ள முடியும் இல்லையா?

ஆன்லைனில் கூட நிறைய தளங்கள் இதுபோன்ற வசதிகளைக் கொடுக்கிறது. கூகிள் ட்ரைவ் (Google Drive) உட்பட....

அதுபோன்றதொரு தளம்தான் Just Cloud. இத்தளத்தில் நீங்கள் விரும்பிய கோப்புகளை தரவேற்றம் செய்து, பிறகு வேண்டிய நேரத்தில் தரவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும்.

இத்தளத்தில் உங்களுடைய கோப்புகளை (அது எவ்விதமான கோப்புகளாக இருப்பினும்)சேமித்தப் பிறகு எவ்வளவு நாட்கள் கழித்துப் பார்த்தாலும் சேமிக்கப்பட்ட கோப்புகள் அப்படியே இருக்கும். அதனால் வேண்டும்போது கோப்புகளை பார்வையிடலாம். தேவைப்பட்டால் கோப்புகளை தரவிறக்கம் செய்தும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

கோப்புகளை உங்களிடம் உள்ள கணினி, டேப்ளட் பிசி, ஆண்ட்ராய்ட் மொபைல் என எந்த சாதனமாக இருந்தாலும் பார்வையிட முடியும் என்பது இதன் சிறப்பு வசதியாகும்.
  1. இவ்வசதியைப் பெற ஜஸ்ட் குலூட் டாட் காமிற்குச் செல்லுங்கள்.
  2. அத்தளத்தில் sign up செய்யுங்கள்.
  3. கணினியில் உள்ள கோப்புகளைத் தேர்ந்தெடுங்கள்.
  4. குளூட் டாட் காமில் தரவேற்றம் செய்யுங்கள்.
  5. நீங்கள் எங்கு இருப்பினும், எந்த ஒரு இன்டர்நெட் டிவைஸ் (computer, tablet pc, android mobile, iPhone, iPad ) வைத்திருந்தாலும், அங்கிருந்தே உங்களுடைய கோப்புகளை அணுகுங்கள்.
All so Read in English: http://masinfom.blogspot.in/



மிகச்சிறந்த வசதியைக் கொடுக்கும் இத்தளம் கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை.. முற்றிலும் இலவசமே.. பயன்படுத்த எளிதானது. தெளிவானது...

மேலும் விபரங்கள் அறிய இத்தளத்திற்கு Cloud Storage தளத்திற்குச் செல்லுங்கள்.

இப்பதிவு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். பிடித்திருந்தால் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களிடமும் பேஸ்புக், ட்விட்டர், கூகிள் ப்ளஸ் தளங்களின் வழியாக பகிர்ந்துகொள்ளுங்கள்.


All so Read in English: http://masinfom.blogspot.in/
நன்றி..

ஸ்மார்ட் போன்களுக்கான இலவச PDF கிரியேட்டர்

இது ஸ்மார்ட் போன்களுக்கான இலவச PDF Creator மென்பொருளாகும். Sonic PDF Creator என்றழைக்கப்படும் இந்த மென்பொருளானது Android Mobile முதல் டேப்ளட் பிசி- Tablet PC வரைக்கும் அனைத்து ஸ்மார்ட் போன்களில் செயல்படுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஸ்மார்ட் போனிலிருக்கும் பிரிண்டபிள் கோப்புகளை (Printable Files) பி.டி.எப் கோப்புகளாக மாற்றம் செய்யலாம்.
இதைப் பயன்படுத்தி Microsoft Documents களிலிருந்து உடனடியாக PDF கோப்புகளை உருவாக்க முடியும்.

ஸ்மார்ட்போனிலுள்ள அனைத்துவிதமான Printable கோப்புகளை PDF கோப்பாக உருவாக்கிவிடலாம்.

இனி ஒவ்வொரு முறையும் கோப்புகளை கம்ப்யூட்டர் மூலம் பி.டி.எப் கோப்பாக மாற்றி, பிறகு ஸ்மார்ட்போன்களில் தரவேற்றம் செய்து பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

Sonic PDF Creator - ஐ பயன்படுத்தி ஒரு கோப்பினை எப்படி PDF கோப்பாக மாற்றுவது என்பதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 Sonic PDF Creator -ல் PDF File உருவாக்கும் முறை:

  • உங்கள் ஸ்மார்ட் போனில் உள்ள டாக்குமெண்ட்களை Sonic PDF Creator மூலம் திறவுங்கள். 
  • Sonic Pdf Creator -ல் கோப்பு இறங்கியவுடன் PDF conversion ஆரம்பித்துவிடும். 
  • புதியதாக உருவாக்கப்பட்ட PDF கோப்புகள் உங்கள் ஸ்மார்ட் போனில் (Smart Phone's Storage ) சேமிக்கப்பட்டுவிடும். 
  • சேமிக்கப்பட்ட  PDF கோப்புகளை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம். இமெயில் அனுப்பலாம். மற்ற அப்ளிகேஷ்னகளிலும் (Use them Other applications) பயன்படுத்த முடியும்.
Android Smartphone, Tablet PC போன்ற ஸ்மார்ட் போன் சாதனங்களுக்காகவே உருவாக்கப்பட்ட இச்சிறந்த மென்பொருள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இம்மென்பொருளை தரவிறக்கம் செய்யவும், மேலும் அதிக விபரங்களைப் பெறவும் கீழிருக்கும் சுட்டியை அழுத்தவும்.

Download Sonic PDF Creator for Smart Phones

Sonic PDF Creator is a application to create PDF files. It is for tablets, smartphones and android Mobile. It is lightweight mobile PDF solution that provides accurate and high quality conversions on the go.

Instantly create PDF files from Microsoft Office documents right from Your Android phone in just to simple taps. 
thanks & source: https://play.google.com

All so Read in English: http://masinfom.blogspot.in/



நன்றி:

Popular Posts

Facebook

Blog Archive