பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

புதன், 8 அக்டோபர், 2014

பி.டி.எப். கோப்பு உருவாக்கிட, PDF பக்கங்களை Scrap செய்து சேமித்திட ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்




ஆன்ட்ராய்ட் போன்களில் பி.டி.எப் கோப்புகளை உருவாக்க, அவற்றை எடிட் செய்திட, குறிப்புகள் எழுத, PDF பக்கங்களில் உள்ள குறிப்பிட்ட பகுதியை மட்டும் தனியே பிரித்தெடுத்து புதிய கோப்பாக மாற்றிட, குறிப்பிட்ட பகுதியை மட்டும் கட்செய்து வேண்டிய இடத்தில் ஒட்டிட, இப்படி பல்வேறு வழிகளின் பயன்படும் ஓர் அற்புதமான PDF Slicer, Maker, Scraper அப்ளிகேஷன்  PDF Clip and Scrap ஆகும்.

இதை சுருக்கமாக CUP app என அழைக்கின்றனர்.

Unidocs என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி, மேற்குறிப்பிட்ட அனைத்து செயல்களையும் செய்திடலாம்.

pdf slicer, scraper, maker for android phone
முதல் ஆண்ட்ராய்ட் PDF Clipping புரோகிராம் இதுவாகும்.  CUP அப்ளிகேஷனின் முழுமையான பொருள் CUt (Copy) and Past என்பதாகும்.

மொபைல் போன்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த அப்ளிகேஷனானது, பி.டி.எப் Page - ல் உள்ள குறிப்பிட்ட பகுதியை தேர்வு செய்து, கட் செய்து அதை வேறொரு பி.டி.எப். கோப்பில் பேஸ்ட் செய்வதற்கும், அல்லது புதிய பி.டி.எப் கோப்பாக சேமிப்பதற்கும் பயன்படுகிறது. இந்த செயல்களின் போது PDF Properties மாறாமல் அப்படியே இருக்கும்.

அதாவது ஒரு குறிப்பிட்ட PDF கோப்பு பக்கத்தில் கட் செய்யவிருக்கும் பகுதியும் PDF Properties இழக்காமல், PDF பார்மட்டிலேயே இருக்கும்.

 PDF Clip and Scrap பயன்கள்: 

  • ஒரு படத்தை அல்லது கேமிரா ஷாட்டை புதிய PDF கோப்பாக உருவாக்கலாம்.
  • ஒரு பி.டி.எப் பக்கத்தை கட் செய்து சிறிய பகுதிகளாக மாற்றலாம்.
  • (உதாரணமாக இரட்டைப் பக்கத்தை கேமிரா சாட் எடுத்து அவற்றை ஒவ்வொரு தனித் தனிப் பக்கமாக பிரித்து சேமிக்கலாம்)
  • ஒரு பி.டி.எப் பக்கத்தை சதுர வடிவமாக, வட்ட வடிவமாகவே,விருப்பப்பட்ட வடித்திற்கு கட் செய்துகொள்ளலாம்.
  • அவ்வாறு மாற்றியதை புதிய PDF file லிலோ அல்லது ஏற்கனவே இருக்கும் பழைய பி.டி.எப் கோப்பிலோ Stack செய்துகொள்ளலாம். 
  • அல்லது தேவைப்பட்ட PDF கோப்பில் பேஸ்ட் செய்துகொள்ளலாம்
  • பி.டி.எப் கோப்பில் குறிப்புகள், குறியீடுகளை போன்றவற்றை செய்யலாம்.
  • புதிய பி.டி.எப். கோப்பொன்றை உருவாக்கலாம். 
  • புதிய பி.டி.எப். பக்கத்தை உருவாக்கலாம். ஏற்கனவே இருக்கும் பக்கத்தை டெலீட் செய்யலாம்.
  • Scrap செய்யப்பட்ட பகுதியைமற்ற அப்ளிகேஷனுக்கு அனுப்பலாம்
  • Beans மற்றும் Cups தேர்வு செய்து மற்ற CUP பயனர்களுக்கு அனுப்பலாம்
  • CUP பயனர்கள் அல்லாதவர்களுக்கும் இதன் மூலம் உருவாக்கபட்ட பி.டி.எப் கோப்புகள் Cups and Beans களை WiFi மூலம் பகிர்ந்துகொள்ளலாம்.
இதில் Beans என்பது என்ன? CUPS என்பது என்ன போன்ற விளக்கங்கள் இங்கு தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்துகொள்ளவும், விரிவான விளக்கத்தைப் பெற்றிடவும் சொடுக்க வேண்டிய சுட்டி கீழே:

Download ezPDF Cup - PDF Clip and Scrap app for Anroid Devices

நன்றி.
All so Same in English: http://masinfom.blogspot.in/

பாஸ்போர்ட், விசா பற்றிய தகவல்களை அறிய ஆன்ட்ராய்ட் மொபைல் அப்ளிகேஷன்..!




வெளிநாட்டுக்குச் செல்ல விரும்பி பாஸ்போர்ட், விசாவிற்கு அப்ளை செய்ய இருக்கிறவர்களுக்கு இந்த அப்ளிகேஷன் பயனுள்ளதாக இருக்கும்.

All so Read in English: http://masinfom.blogspot.in/
அப்ளிகேஷனின் பயன்கள்: 

உங்கள் அருகில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகங்களின் முகவரியை தெரிந்துகொள்ளலாம். பாஸ்போர்ட்டிற்கு அப்ளை செய்வதற்கான அப்ளிகேஷன் பார்ம் டவுன்லோட் செய்யலாம்.

நீங்கள் அப்ளை செய்த பாஸ்போர்ட் அப்ளிகேஷனின் நிலை பற்றி அறியலாம்.

இந்த அப்ளிகேஷனில் ஹஜ் சேவைகள் உள்ளது. ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்குத் தேவையான தங்குமிடம், விமான சேவை போன்ற தகவல்களை அறியலாம்.

Ask Your Minister வசதி

Ask Your Minister என்ற வசதியின் மூலம் வெளியுறவுத் துறை மந்திரியிடம் கேள்விகளைக் கேட்டு பதில் பெறலாம்.

மற்றுமொரு முக்கியமான அம்சம்  பாராளுமன்றத்தில் கேட்கப்படும் கேள்வி பதில்களை இந்த அப்ளிகேஷன் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

பிரதமர், வெளியுறவுத்துறை மந்திரிகளின் சுற்றுப் பயணங்கள் குறித்த தகவல்களையும் இதன் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

பயன்மக்க பாஸ்போர்ட், விசா பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய சுட்டி:

Download MEA Government of India android apps

செவ்வாய், 7 அக்டோபர், 2014

ஸ்கிரீன் ரெக்கார்டிங் மற்றும் வீடியோ எடிட்டிங் சாப்ட்வேர்

Screen Recording மற்றும் Video Editing செய்வதற்கு பல்வேறு மென்பொருட்கள் பயன்படுகின்றன.

அவற்றில் ஒரு சில மென்பொருட்கள் இலவசமாகவும், ஒரு சில கட்டண மென்பொருட்களாகவும் கிடைக்கின்றன.

சிறந்த டாப் டென் ஸ்கிரீன் ரெக்கார்டிங் மற்றும் வீடியோ எடிட்டிங் சாப்டவேர்கள் கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. தேவையானதை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

1. Ezvid

Ezvid என்பது ஒரு screen recorder program  ஆகும்.  இதன் மூலம் கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் நடைபெறும் இயக்கங்களை ரெக்கார்ட் செய்யலாம்.
ezvid screen recording software
  1. இப் புரோகிராமுடன் in-built video editor-ம் இணைந்துள்ளது.
  2. இதன் மூலம் ரெக்கார்ட் செய்த வீடியோவை, உங்களுடைய விருப்பத்திற்கேற்ப தேவையான இடங்களில் எடிட் செய்துகொள்ள முடியும்.
  3. வீடியோவை இருபகுதிகளாக பிரித்து, இடையே தேவையான இடங்களில் Text -ஐ சேர்த்துக்கொள்ளலாம்.
  4. slideshow effect களை உருவாக்கலாம்.
  5. இப்புரோகிராமின் மூலம்  உருவாக்கப்பட்ட videoக்களை YouTubeக்கு அப்லோட் செய்துகொள்ள முடியும்.
Ezvid screen recorder program  பதவிறக்கம் செய்ய சுட்டி: download Ezvid screen recorder program

2. BlueBerry FlashBack Express Recorder
இது ஒரு வீடியோ ரெக்கார்டர் மென்பொருள் ஆகும். இதன் மூலம் உங்களுடைய வெப் கேமைப் பயன்படுத்தி வீடியோவை ரெக்கார்ட் செய்துகொள்ள முடியும்.

BlueBerry FlashBack Express Recorder

ரெக்கார்டிங்கை நிறுத்தியவுடன் இது தானாகவே FBR கோப்பொன்றை உருவாக்குகிறது. இந்த வீடியோ கோப்புகளை, இதனுடன் இணைந்திருக்கும் வீடியோ எடிட்டரைப் பயன்படுத்தி  அவற்றை எடிட் செய்துகொள்ள முடியும்.

BlueBerry FlashBack Express Recorder program  பதவிறக்கம் செய்ய சுட்டி: downlaod BlueBerry FlashBack Express screen recorder program

3. Screenr
Screenr என்பது online வழியாக Screen Record செய்யப்பயன்படும் ஒரு மென்பொருள் ஆகும். உங்களுடைய கம்ப்யூட்டரில் மென்பொருளை நிறுவ தேவையில்லை.
இப்புரோகிராம் உங்களுடைய கம்ப்யூட்டரில் செயல்பட கண்டிப்பாக Java நிறுவியிருக்க வேண்டும்.

screenr screen and video recording software

உங்களுடைய கம்ப்யூட்டர் திரையில் ரெக்கார்ட் செய்வதற்கான area -வைத் தேர்ந்தெடுத்துவிட்டு, ஸ்கீரீன் ரெக்கார்டிங்கை தொடங்கலாம்.
அதிக பட்சமாக 5 நிமிடங்கள் இந்த முறையில் ரெக்கார்ட் செய்ய முடியும்.

ரெக்கார்ட் செய்த வீடியோவை நண்பர்களுக்கு பகிர, லிங்க் கொடுக்கப்படும். தேவையெனில் MP4 ஆக எக்ஸ்போர்ட் செய்துகொள்ளலாம். அங்கிருந்தே Youtube -லும் அப்லோட் செய்துகொள்ள முடியும். ரெக்கார்ட் செய்யப்படும் வீடியோக்கள் உங்களுடைய அக்கவுண்டிலேயே சேமிக்கப்படும்.

Screenr Recorder program  பதவிறக்கம் செய்ய சுட்டி: download Screenr screen recorder program

4. Rylstim Screen Recorder
Rylstim Screen Recorder -ல் Start Record பட்டனை அழுத்தியவுடன் ஸ்கிரீன் ரெக்கார்டிங் ஆரம்பமாகிவிடுகிறது. கம்ப்யூட்டரில் ஏற்படும் நிகழ்வுகளை காட்சிப்படுத்திக் காட்ட இந்த ரெக்கார்டிங் மென்பொருள் உபயோகமாக இருக்கும். இதில் Audio Recording செய்வதற்கான வசதி இல்லை.

Rylstim Screen Recorder
Rylstim Screen Recorder program  பதவிறக்கம் செய்ய சுட்டி: download Rylstim Screen Recorder program

5. CamStudio
CamStudio வீடியோ எடிட்டிங் புரோகிராம் பல்வேறு வசதிகளை உள்ளடக்கியுள்ளது. மௌஸ் கர்சரை  enable அல்லது  disable செய்யும் வசதி, மைக்ரோ போன் அல்லது இந்த புரோகிராமின் மூலம் sounds Record செய்யும் வசதி மற்றும் ரெக்கார்ட் செய்யப்பட வேண்டிய ஸ்கிரீன் அளவினை நம் வசதிக்கு தகுந்தாறு மாற்றிக்கொள்ளும் வசதி என்பன போன்ற பல்வேறு வசதிகளை இப்புரோகிராம் உள்ளடக்கியுள்ளது.

undefined

CamStudio Recorder program  பதவிறக்கம் செய்ய சுட்டி: downlaod CamStudio screen recorder program

ஆடியோ ரெக்கார்டிங், எடிட்டிங் செய்ய Audacity மென்பொருள்

ஆடியோ ரெக்கார்டிங் செய்ய பயன்படும் ஒரு அருமையான மென்பொருள் Audacity.

ரெக்கார்டிங் மட்டமல்ல... ரெக்கார்ட் செய்ததை எடிட் செய்திடவும் முடியும்.

ரெக்கார்ட் செய்த பகுதியில் தேவையில்லாத பகுதியை தேர்ந்தெடுத்து நீக்க முடியும்.

அல்லது அவற்றை கட் செய்து வேறொரு இடத்தில் சேர்க்க முடியும்.

புதியதாக ஆடியோ இடைச்செருகல் செய்ய முடியும்.
software-for-audio-recording-and-editing
ரெக்கார்ட் செய்து முடித்தவற்றை ஒலிக்கோப்பாக சேமிக்கலாம்.  உங்களது நண்பர்களுக்கும் அனுப்பி வைக்கலாம். உதாரணமாக வாழ்த்து செய்திகளை ரெக்கார்ட் செய்து அனுப்பலாம்.

சமையல் குறிப்புகள், விபர குறிப்புகள் போன்றவற்றை ரெக்கார்ட் செய்து அனுப்பி வைக்கலாம்.
இது முற்றிலும் இலவசமான மென்பொருள்.

தரவிறக்கம் செய்திட சுட்டி: Download Free audio Recorder, Editor Audacity

ஆடியோ ரெக்கார்ட் செய்யும் முறை: 

மேற்கண்ட சுட்டியை கிளிக் செய்து உங்களுடைய கம்ப்யூட்டரில் நிறுவிக்கொண்டு மென்பொருளைத் திறந்தால் இப்படி காட்சியளிக்கும்.

இதில் மேலே இருக்கும் பட்டன்களை பாருங்கள். வழக்கமான ஒரு ஆடியோ பிளேயரில் இருக்கும் பட்டன்களைப் போல இருக்கும். இதில் கடைசியில் பிரௌன் நிறத்தில் இருக்கும் பட்டனை சொடுக்கி ஆடியோ ரெக்கார்டிங் ஆரம்பிக்கலாம்.

கீழே தெரியும் ஆடியோ கிராபிக்ஸ் , நீங்கள் பேச பேச ரெக்கார்ட் ஆகும் பகுதி. இரண்டும் வலது, இடது ஸ்டீரியோ தடங்கள்.

பேசி முடித்தவுடன் End பட்டனை அழுத்தி ரெக்கார்டிங் நிறுத்திவிடலாம். பிறகு Save கொடுத்து ரெக்கார்ட் செய்ததை சேமிக்கலாம். டிபால்டாக .au பைலாகத்தான் சேமிக்கப்படும்.

தேவையென்றால் File ==>Export தேர்ந்தெடுத்து, தேவையான ஆடியோ பார்மட்டில் சேமித்துக்கொள்ளலாம்.

எடிட்டிங்:

ரெக்கார்ட் செய்த கோப்பில் ஒரு சிலதை சேர்க்க வேண்டும் என்றால், அதை எடிட் செய்து, தேவையானதை ரெக்கார்ட் செய்து அதை இடைச்செருகலாக சேர்க்கலாம்.

ஏற்கனவே ரெக்கார்ட் செய்த கிராபிக்ஸ் பகுதியில் தேவையில்லாத பகுதியை டைமரை நோட் செய்து சரியான இடத்தை தேர்ந்தெடுத்து நீங்கிவிடலாம்.

இந்த பணியை செய்ய வழக்கமாக நாம் நோட்பேடில் பயன்படுத்தும் கட்டளைகளே பயன்படுகின்றன. மௌசை வைத்து டிராக் செய்வதன் மூலம் ரெக்கார்ட் செய்த பகுதியை தேர்ந்தெடுக்கலாம்.

கண்ட்ரோல் சி கொடுப்பதன் மூலம் அதை காப்பி செய்யலாம்.
கண்ட்ரோல் எக்ஸ் கொடுப்பதன் மூலம் கட் செய்யலாம்.
கண்ரோல் வி கொடுப்பதன் மூலம் பேஸ்ட் செய்யலாம்.

கட் செய்த பகுதியை மீண்டும் பேஸ்ட் செய்திடும்பொழுது, கீழே புதிய டிராக்கில் அவை பேஸ்ட் செய்யப்படும்.

வேண்டிய இடத்தில் இடைச்செருக்கலாக செருக, எந்த இடத்தில் சேர்க்க வேண்டுமோ அந்த இடத்தை தேர்ந்தெடுத்து மேலுள்ள Split பட்டனை அழுத்துவதன் மூலம் இடைவெளி ஏற்படும்.

ஸ்பிலிட் செய்யப்பட்ட பகுதியை தேவையான அளவிற்கு நகர்த்தி வைத்துவிட்டு, இடைவெளி ஏற்பட்ட இடத்தில் கீழே புதிய டிராக்கில் சேர்க்கப்பட்ட பகுதியில் இருப்பதை அப்படியே டிராக் செய்து இடைவெளி ஆன இடத்தில் சேர்த்துவிடலாம்.

எடிட்டிங்கை முடித்தவுடன், அவற்றை Save கொடுத்து சேமித்துவிடலாம்.

கம்ப்யூட்டர் வேகம் அதிகரிக்க என்ன செய்யலாம்?

கம்ப்யூட்டர்  வேகம் குறைவாக இருந்தால் அதிக டென்சன் ஏற்படும்.

"நேற்று வரைக்கும் நல்லாதான் இருந்தது.. இன்னைக்கு என்னாச்சுன்னே தெரியல.. கம்ப்யூட்டர் திடீன்னு ஸ்லோ ஆகிடுச்சு.. "

இப்படி நண்பர்கள் அடிக்கடி புலம்புவதைக் கேட்டிருக்கிறேன்.

ஒரே நாளில் கம்ப்யூட்டர் ஸ்லோ ஆகாது என்பதே உண்மை. சிறுக சேமிக்கும் தேவையற்ற கோப்புகள், மென்பொருட்கள், மற்றும் வைரஸ் போன்ற காரணங்களால் கொஞ்சம் கொஞ்சமாக கம்ப்யூட்டர் ஸ்லோ ஆகிவிடும் என்பதே உண்மை.
ஒரு நாளில் திடீஎன  கம்ப்யூட்டர் ஸ்லோவானால் ஏதாவது அதிக கொள்ளளவு உள்ள மென்பொருளை டவுன்லோட் செய்து பாவித்திருப்பீர்கள். அதுதான் காரணமாக இருக்கும்.

பொதுவாக கம்ப்யூட்டர் வேகம் குறைய, என்ன காரணம் என்று ஆராய்ந்தால், உண்மையிலேயே தேவையில்லாத கோப்புகளும், டெம்ப்ரரி பைல்கள் என்று சொல்லப்படும் கணினியில் தேங்கும் தற்காலிக கோப்புகள்தான்.


கம்ப்யூட்டர் ஸ்பீடாக டிப்ஸ்

ஒரு சில வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் கம்ப்யூட்டரை வேகமாக்கலாம்.

வழிமுறைகள்:
  • கம்ப்யூட்டர் Boot ஆகி முடியும் வரை எந்த ஒரு அப்ளிகேஷனை இயக்காமல் இருக்க வேண்டும். 
  • Recycle bin - ல் இருக்கும் கோப்புகளையும் அதிலிருந்து நீக்கிவிட வேண்டும். 
  • டெஸ்டாப்பில் தேவையில்லாத, அதிகம் பயன்படுத்தாத ஷார்கட்கள், பைல்களை வைக்க வேண்டாம். 
  • இன்டர்நெட் பயன்படுத்தி முடித்த பிறகு, Run விண்டோவில் %temp%  என கொடுத்து டெம்ப்ரரி பைல்களை தேர்ந்தெடுத்து நீக்கிவிடுங்கள். 
  • சிஸ்டம் பைல்கள் இருக்கும் Drive -ல் வேறெந்த கோப்புகளையும் சேமித்து வைக்காதீர்கள். பொதுவாக சிஸ்டம் பைல்கள் C டிரைவில்தான் இருக்கும். 
  • ஒரு அப்ளிகேஷனை பயன்படுத்திவிட்டு மூடியவுடன் ஒரு முறை கம்ப்யூட்டரை ரெப்ரஸ் செய்ய மறக்காதீர்கள். அவ்வாறு செய்யும்பொழுது RAM - மெமரியிலிருக்கும் தேவையில்லாத கோப்புகள் நீக்கப்படும். 
  • Refresh செய்ய டெஸ்க்டாப் சென்று f5 அழுத்துங்கள். (உடனே டெஸ்க்டாப் செல்ல Start பட்டனை அழுத்திக்கொண்டு  D எழுத்து விசையை அழுத்துங்கள். டெஸ்டாப் தோன்றிவிடும். )இப்பொழுது F5 கொடுத்துப் பாருங்கள்.. கம்ப்யூட்டர் ரெப்ரஸ் ஆகிவிடும். 
  • டெஸ்க்டாப்பில் அதிக அளவுடைய வால்பேப்பர்களை வைத்தாலும் சிறிது வேகம் குறையும். 
  • தேவையற்ற, பயன்படுத்தாத அப்ளிகேஷன்கள், புரோகிராம்கள் எதுவும் இன்ஸ்டால் செய்து வைத்திருந்தால், அதை UNINSTALL செய்திடுங்கள். 
  • மாதம் ஒரு முறை உங்களுடைய Hard disk - ஐ Defragment செய்யுங்கள். இதனால் அதில் உள்ள கோப்புகள் ஒழுங்கமைப்படுவதோடு, தேவையற்ற இடைவெளிகளும் சரிசெய்யப்படும். 
நன்றி.

திங்கள், 6 அக்டோபர், 2014

புதிய ஆன்ட்ராய்ட் பிரௌசர் அப்ளிகேஷன் Skyfire 4.0















 All So Read in English : www.masinfom.blogspot.in

ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்களில் இன்டர்நெட் பிரௌசிங் செய்ய பயன்படும் Browser Apps - பிரௌசர் அப்ளிகேஷன்கள் பல உள்ளன. அவற்றில் Skyfire Browser சிறப்பாக செயல்படுகிறது. தற்போது இந்த அப்ளிகேஷனின் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது.

இதன் Flash content-சப்போர்ட் செய்யும் தன்மை, யூடியூப் போன்று இணையப்பக்கங்களில் பொதியப்பட்டுள்ள வீடியோக்களை Streamed things தனியாக சிறிய PopUp Windows (பாப் அப் விண்டோ) u  வில் திறப்பது போன்ற சிறப்புகளைப் பெற்றிருக்கிறது.

அனைத்துவிதமான கம்ப்யூட்டர் பொதிகள் Skyfire's server -ஆல் கையாளப்பட்டு, பிறகு உங்களுடைய Handset-ற்கு அனுப்புகிறது. வேகம் குறைந்த ஆன்ட்ராய்ட் போன்களில் கூட வேகமாக செயல்படுகிறது.

இதில் உள்ள மேலதிக வசதிகள் கீழே ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Skyfire 4.0 Android Browser Features

  • Flash Video
  • User Agent Switching
  • Facebook QuickView
  • Fireplace Feed Reader
  • Popular Pages
  • Related Ideas
  • Skyfire OneTouch Search
  • Facebook Like Button
  • Twitter Integration
  • Sports, News & Finance Buttons
  • Google Reader
Skyfire 4.0 Browser Apps டவுன்லோட் செய்ய சுட்டி: Download Skyfire 4.0 Browser apk
All So Read in English : www.masinfom.blogspot.in

சுறுசுறுப்பா இருக்கணுமா? இரத்தத்தை சுத்தமாக்குங்க..!

உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும்.
இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.
பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். இதுதவிர, செம்பருத்திப் பூவை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.
முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.
நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் கூட இரத்தம் விருத்தி ஆகிறது.
இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது. தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் கூட இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.


All So Read in English : www.masinfom.blogspot.in

இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொ‌‌ண்டது.
இன்றைய காலகட்டத்தில் பெரும் அச்சுறுத்தல் இரத்தக் குழாய் அடைப்பு. இதனை சாதாரண தவிர்த்துவிடலாம் என்கிறது இயற்கை வைத்தியம். தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் போதும் இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும்.
இதற்கடுத்தது இரத்தம் அழுத்தம். இதனை முற்றிலுமாக போக்க வழி உண்டு. கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீரகப் பொடி 12 நேரம் ஊறவைத்து குடித்து வந்தால் போதும். மேலும், ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சீர்படும். இதுதவிர, அகத்திக் கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டால் வந்தாலும் இரத்தக் கொதிப்பு குணமாகும்.
இரத்தக்கட்டு, சுளுக்கு நிவர்த்தியாக, மஞ்சள், உப்பு, சுண்ணாம்பு ஆகியவற்றை வெந்நீர் விட்டு அரைத்து அந்த விழுதை சூடு செய்து சுளுக்கின் மீது பற்றுபோட்டால் போதும்.
விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.

All So Read in English : www.masinfom.blogspot.in

ஏலக்காயின் பயன்கள்


 
 All So Read in English : www.masinfom.blogspot.in 

ஏல‌க்கா‌ய் எ‌ன்பது இ‌ஞ்‌சி செடி வகை‌யை‌ச் சே‌ர்‌ந்தது. ப‌ச்சை ‌நிற‌க் கா‌ய்களை‌க் கொ‌ண்டது. ஏல‌க்கா‌ய் ப‌ச்சை ‌நிற‌த்‌திலு‌ம், அட‌‌ர் பழு‌ப்பு ‌நிற‌த்‌திலு‌ம் இரு‌க்கு‌ம்.
ஏல‌க்கா‌ய் நறுமண‌ப் பொருளாக ம‌ட்டு‌ம் இ‌ல்லாம‌ல், பல மரு‌த்துவ‌க் குண‌ங்களை‌க் கொ‌ண்டதாகு‌ம்.


மன இறு‌க்க‌த்தை‌க் குறை‌த்து உட‌ல் பு‌த்துண‌ர்‌ச்‌சி பெற ஏல‌க்கா‌ய் பய‌ன்படு‌கிறது.

ப‌ல் ம‌ற்று‌ம் வா‌ய் தொட‌ர்பான பல ‌பிர‌ச்‌சினைகளு‌க்கு ஏல‌க்கா‌ய் ந‌ல்ல ‌தீ‌ர்வாக அமையு‌ம்.
செ‌ரிமான‌த்‌தி‌ற்கு உதவு‌ம். இதனா‌ல்தா‌ன் நெ‌ய் சே‌ர்‌த்து செ‌ய்ய‌ப்படு‌ம் இ‌னி‌ப்பு‌க‌ளி‌ல் அவ‌சியமாக ஏல‌க்காயை சே‌ர்‌ப்பா‌ர்க‌ள்.
குர‌ல் வளை ம‌ற்று‌ம் தோ‌ல் தொட‌ர்பான நோ‌ய்களை‌த் ‌தீ‌ர்‌க்கு‌ம் ‌ஆ‌ற்ற‌ல் ஏல‌க்கா‌ய்‌க்கு உ‌ண்டு.

மல‌ட்டு‌த் த‌ன்மையை‌ப் போ‌க்குவத‌ற்கு‌ம் ஏல‌க்கா‌‌ய் பய‌ன்படு‌த்த‌ப்படு‌கிறது.

உங்க கருத்தச் சொல்லுங்க..!

All So Read in English : www.masinfom.blogspot.in 

சும்மா ‘கிர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு’ தண்ணி குடிங்க..! (Benefits of Drinking Water)


எப்போதெல்லாம் நமது உடம்பு கூடுதல் தண்ணீருக்காக ஏக்கம் கொள்கிறதோ, அப்போதே நமக்கு தாகம் ஏற்பட்டு விட்டது என்றே பலரும் இன்று வரை நம்பிக் கொண்டுள்ளனர். அது உண்மைதான். ஆனாலும், உடம்பில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்ட தென்பதை அறிந்து கொள்ளும் பொருட்டு, உடம்பின் ஒரு சில அல்லது அனைத்துப் பாகங்களிலிருந்தும், பல்வேறு அறிவிப்புகள் மற்றும் அறிகுறிகளை நாம் காணலாம்.

All So Read in English : www.masinfom.blogspot.in

இந்த அறிகுறிகளை அறிவிப்புகளை நாம் கண்டு கொள்ளாமல் வெறுமனே இருந்துவிட்டால் அதுவே பலவிதப் பெரும் வியாதிகளை (Major Diseases) வரவழைத்துவிடும். இதற்கென மருந்துகள் இருந்தாலும் அவையெல்லாம் குணப்படுத்துமேயன்றி சிகிச்சை அளிக்கவியலாது.
Benefits of Drinking Water

எல்லோருக்குமே நன்றாகத் தெரியும். நிறைய தண்ணீர் குடித்தால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதென்று. இதற்கு என்ன காரணம்-? போதுமான அளவில் உடம்புக்கு நீர் கிடைக்காவிட்டால் அங்கே என்ன நிகழும் என்ற விவரம் பெரும்பாலானவர்களுக்கு தெரியாது.

உடல்நிலையில் ஏற்படும் பல்வேறு கோளாறுகளை தடுத்து நிறுத்தும் பணியில் பெரும்பங்கை தண்ணீரே ஏற்றுக் கொண்டுள்ளது. இதனால் பெரும் வியாதிகள் தொடக்கத்திலே அடக்கப்படுகின்றன. தவிர, பல்வேறு இயற்கையான நிவாரண யுக்திகளில், தண்ணீர்தான் பெரும்பங்கை ஏற்றுள்ளது.

தண்ணீர் அதிக அளவு குடிப்பதால் சிறுநீரக பாதிப்பு (Kidney damage) தவிர்க்கப்படுகிறது.

உடலின் மொத்த எடையில் தண்ணீரின் பங்கு மட்டுமே எழுபது சதவிகிதமாகும். உடலின் அனைத்துப் பாகங்களிலும் அது வியாபித்திருந்தாலும், மூளை மற்றும் நுரையீரல்(Lung) போன்ற உறுப்புகளிலும், இரத்தம், உமிழ்நீர்(Saliva), நிணநீர்(Lymph) போன்ற திரவங்களிலும், ஜீரண முறையில் உள்ள உறுப்புகளின் சுரப்பிகளிலும் அதிகப்படியாகவே அடங்கியுள்ளது.
Benefits of Drinking Water
பிரிட்டன் தேசிய நலவாழ்வு சேவை (The UK National Health Service) ஆலோசனைப்படியும் ஊட்டச்சத்து நிபுணர்கள் மருத்துவர்கள் அறிவுரைப்படியும் தினமும் 1-2 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. எனவே குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு 2 லிட்டர் அளவுக்கு குறைவாக தண்ணீர் அருந்த வேண்டும்.
All So Read in English : www.masinfom.blogspot.in 
 
மாணவர்களுக்கு:

தேர்வு எழுதும் மாணவர்கள் தண்ணீர் ஒரு டம்பளர் தண்ணீர் குடித்துவிட்டு தேர்வு எழுதுவது நல்லது. தண்ணீர் குடிக்காமல் எழுதியவர்களையும் விட தண்ணீர் குடித்து எழுதியவர்களின் மதிப்பெண்கள் கூடுதலாக இருந்ததாக பிரித்தானியாவின் வெஸ்ட்மினிஸ்டர் பலகலைக்கழக ஆய்வாளர்கள்(Britain’s Westminster University researchers) மாணவர்கள் மத்தியில் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. தேர்வுக்கு முன்னர் தண்ணீர் குடித்த மாணவர்களின் புள்ளி முடிவுகளையும் தண்ணீர் குடிக்காத மாணவர்களின் புள்ளி முடிவுகளையும் ஒப்பிட்டுப் பார்த்து தான் குறித்த முடிவுக்கு வந்துள்ளனர்.
உடலில் தண்ணீர் அளவு சீராக இருந்தால் மூளை செல்களுக்கு இடையில் தகவல் வேகமாகப் பரவும். இதனால் பதட்டமின்றி, தேர்வறையில் படித்ததை நினைவில் கொண்டுவந்து எழுதுவது சாத்தியப்படுகிறது.
நிறைய தண்ணீர் குடிப்பவர்களின் உடலில் தேவையில்லாத கொழுப்பு சேர்வது குறையும். மாறாக குறைவாக தண்ணீர் குடித்தால் அதிக கொழுப்பு தேங்கி உடல் எடை அதிகரிக்கும்.

போதுமான தண்ணீர் உடலில் இல்லை என்றால் சீராக சிறுநீரகம் (கிட்னி) செயல்படாது. சிறுநீரகம் சரியாக செயல்பவில்லை என்றால் கல்லீரலின் செயல்பாட்டிலும் பிரச்சினை உண்டாகும்.

நாம் உண்ணும் உணவில் இருந்து உடல் இயக்கத்திற்குத் தேவையான புரதத்தை சேமிப்பதே கல்லீரலின் முக்கிய பணி. ஆனால், சிறுநீரக இயக்க குறைபாட்டால் கல்லீரலின் செயல்பாடும் பாதித்து தேவையற்ற கொழுப்பு
உடலில் சேர்ந்து உடல் எடை அதிகரிக்கும்.

மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்க, உடலில் உப்பு சேர்வதை குறைக்க, , அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால், உடலுக்கு தேவையான புரதத்துடன் தண்ணீர் சேரும்போது அதில் உள்ள கழிவுகள் வெளியேறும். இதன் பயனாக தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் அழகான ஒல்லியான தோற்றத்தை பெறும்.

எனவே தாகம் எடுக்கும்போதெல்லாம் போதிய தண்ணீரைக்குடிக்க வேண்டும். தாகமெடுக்கும்போது தவறாமல் தேவையான அளவு தண்ணீர் குடித்தாலே போதுமானது. உடல் என்றும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.
 All So Read English : www.masinfom.blogspot.in

நீங்கள் அனுப்பிய மெயிலை படித்துவிட்டாரா என்பதை அறிய!

நீங்கள் அனுப்பிய மெயிலை படித்துவிட்டாரா என்பதை அறிய!

நீங்கள் ஒரு முக்கியமான நபருக்கு அல்லது நண்பர்களுக்குப் மெயில் அனுப்பி விட்டு அவருடைய பதிலுக்காகக் காத்துக்கொண்டு இருப்பீர்கள்.

குறைந்த பட்சம் அவர் உங்கள் மெயிலை படித்து விட்டாரா? இல்லையா? என்பதை அறிந்து கொண்டால் நன்றாக இருக்கும் அல்லவா? இதை அறிந்து கொள்ள spypig என்ற நிறுவனம் இந்த சேவையை அளிக்கிறது. இதற்கு,

1. முதலில் எப்போதும் போல மெயில் டைப் அடித்து தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

2. இப்போது www.spypig.com இணைய தளத்திற்குச் செல்லுங்கள். அங்கு உங்கள் முகவரி மற்றும் Message Title (Subject) கொடுங்கள்.

3. முதல் படத்தைத் (வெற்றுப் படம்) தேர்ந்து எடுத்து, ”Click to Activate my Spypig” என்பதை கிளிக் செய்யுங்கள்.

4. இப்போது ஒரு பெட்டியில் நீங்கள் தேர்ந்து எடுத்த படம் காட்டப்படும். அதன் மீது கர்சரை வைத்து ரைட் கிளிக் செய்து, “Copy Image (Firefox) & Copy(IE)” copy செய்யவும்.

5. இப்போது நீங்கள் டைப் செய்து வைத்த மெயிலை திறந்து அந்த பக்கத்தின் அடியில் இந்த படத்தை Paste செய்து உடனே மெயிலை அனுப்பி விடுங்கள்.

நீங்கள் அனுப்பிய மெயிலை அவர் திறந்த உடன் எந்த ஊரிலிருந்து படித்தார், எப்போது படித்தார் போன்ற தகவல்கள் உங்கள் மெயிலுக்கு வந்துவிடும்.
நீங்கள் ஒரு முக்கியமான நபருக்கு அல்லது நண்பர்களுக்குப் மெயில் அனுப்பி விட்டு அவருடைய பதிலுக்காகக் காத்துக்கொண்டு இருப்பீர்கள்.
குறைந்த பட்சம் அவர் உங்கள் மெயிலை படித்து விட்டாரா? இல்லையா? என்பதை அறிந்து கொண்டால் நன்றாக இருக்கும் அல்லவா? இதை அறிந்து கொள்ள spypig என்ற நிறுவனம் இந்த சேவையை அளிக்கிறது. இதற்கு,
1. முதலில் எப்போதும் போல மெயில் டைப் அடித்து தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.
2. இப்போது www.spypig.com இணைய தளத்திற்குச் செல்லுங்கள். அங்கு உங்கள் முகவரி மற்றும் Message Title (Subject) கொடுங்கள்.
3. முதல் படத்தைத் (வெற்றுப் படம்) தேர்ந்து எடுத்து, ”Click to Activate my Spypig” என்பதை கிளிக் செய்யுங்கள்.
4. இப்போது ஒரு பெட்டியில் நீங்கள் தேர்ந்து எடுத்த படம் காட்டப்படும். அதன் மீது கர்சரை வைத்து ரைட் கிளிக் செய்து, “Copy Image (Firefox) & Copy(IE)” copy செய்யவும்.
5. இப்போது நீங்கள் டைப் செய்து வைத்த மெயிலை திறந்து அந்த பக்கத்தின் அடியில் இந்த படத்தை Paste செய்து உடனே மெயிலை அனுப்பி விடுங்கள்.
நீங்கள் அனுப்பிய மெயிலை அவர் திறந்த உடன் எந்த ஊரிலிருந்து படித்தார், எப்போது படித்தார் போன்ற தகவல்கள் உங்கள் மெயிலுக்கு வந்துவிடும்.


All So Read English : www.masinfom.blogspot.in

சனி, 4 அக்டோபர், 2014

YouTube க்கு போட்டியாக Yahoo வின் புதிய Video தளம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


 
Google  வழங்கும் ஒரு சேவை Youtube தளத்தில் வீடியோக்களை பகிர மற்றும் கண்டுகளிப்பதாகும். குறிப்பாக இந்தியாவில் சுமார் 30 மில்லியன் வீடியோக்கள் ஒரு மாதத்திற்கு பார்க்கப்படுகிறதாம். Google தளங்களில்  வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருப்பது YouTube தளம். 

இதைப் பார்த்து Yahoo நிறுவனம் Youtube தளத்திற்குப் போட்டியாக புதிய வீடியோ தளத்தை உருவாக்கி உள்ளது. 

இந்தத் தளத்திலும் YouTube தளத்தில் உள்ளதைப் போலவே பல்வேறு பிரிவுகளில் வீடியோக்களை கண்டு ரசிக்கலாம். 

Yahoo தளம் இந்தியாவில் உள்ள டிவி சேனல்கள் மற்றும் சினிமா தயாரிப்பு நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்து கொண்டு காப்புரிமை வழங்கப்பட்ட original வீடியோக்களை மட்டுமே இந்தத் தளத்தில் பகிர்ந்துள்ள்ளது. 

Yahoo நிறுவனம் சில மாதங்களுக்கு முன் தான் முழு நீளத் திரைப்படத்தை காணும் Movieplex வசதியை கொண்டு வந்தது. அதற்குள் இப்பொழுது புதிய தளத்தை அறிமுகம் செய்துள்ளது. 

அவ்வளவும் original வீடியோக்கள் என்பதால் தரத்தைப் பற்றி கவலை இல்லை. 

வாசகர்கள் வீடியோக்களை upload செய்யும் வசதி இந்த தளத்தில் இல்லை.  மேலும் பல வசதிகளை கொண்டு வந்தால் இந்தத் தளமும் நல்ல வளர்ச்சியை பெரும் என்பதில் ஐயமில்லை. 

இந்த தளத்திற்கு செல்ல - Click Here - 



இன்டர்நெட் இல்லாமல் எப்படி கூகுளில் சர்ச் செய்யலாம்!


இன்டர்நெட் வசதி இல்லாமல் கூகுளில் எப்படி சர்ச் செய்வது? இது கொஞ்சம் கடினமான கேள்வி தான். ஆனால் இதற்கு விடையளிப்பது மிக சுலபம்.
இக்கட்டான தருணங்களில் கைகொடுக்கிறது கூகுளின் சில வசதிகள். மிக முக்கியமான சில தகவல்களை கூகுளில் சர்ச் செய்வதன் மூலம் பெற முடியும். ஆனால் இதற்கு இன்டர்நெட் மிக அவசியம். இன்டர்நெட் இல்லாமலும், மொபைலில் வேண்டிய தகவல்களை பெறலாம்.
உதாரணத்திற்கு உடனடியாக டேக்ஸி தேவைப்படுகிறதென்றால், இது சம்மந்தமானவர்களின் மொபைல் எண் தேவைப்படும். அப்படி மொபைல் எண் எதுவும் இல்லை என்றால் இன்டர்நெட் வசதி கொண்டு தேடுவது வழக்கம்.
இந்த சமயத்தில் இன்டர்நெட் வசதி இல்லை என்றால் பிரவுசிங் சென்டருக்கு சென்று தேடி கொண்டிருக்க முடியாது. இது போன்ற தருணத்தில் டேக்ஸி என்று டைப் செய்து, பின்னர் எந்த இடத்தில் இருக்கிறீர்களோ அந்த இடத்தின் பெயரையும் டைப் செய்து, 9773300000 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.
இப்படி அனுப்பினால் உடனடியாக கூகுளிலின் பட்டியலில் இருந்து டேக்ஸி வழங்கும் சில நிறுவனங்களின் மொபைல் எண்களும், முகவரிகளும் உங்கள் மொபைலிற்கு மெசேஜ் மூலம் தகவல் கிடைக்கும். இந்த பட்டியலில் எந்த நம்பரை தேர்வு செய்து கொள்கிறோமோ அதை தேர்வு செய்து, பின் போன்கால் செய்து டேக்ஸி வசதிக்கு அனுகலாம்.
இது போன்று தகவல்களை கூகுளில் இன்டர்நெட் இருந்தால் தான் பெற முடியும். ஆனால் அவசர தேவைக்காக கூகுள் இந்த சேவையை வழங்குகிறது.

மற்றவர் தொட்டவுடன் கைபேசி திரையை மூடும் புதிய மென்பொருள்!

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி கைபேசி திரையை தொட்டு பயன்படுத்துவோம். அழுத்தும் வேகம், மேலே கீழே தடவுவது என இந்த செயல்கள் ஒவ்வொரு ஆளுக்கும் வேறுபடும்.இந்த வேறுபாடுகளை வைத்து அந்தக் கைப்பேசியின் உரிமையாளர் யார் என்பதை கண்டறிந்து மற்றவர் தொட்டால் திரையை அணைத்துவிடும் புதிய மென்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இலியாநஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர் Cheng Bo மற்றும் அவரின் நண்பர்கள் Silent Sense எனும் இந்த மென்பொருளை எழுதியுள்ளார்கள்.
இதை நிறுவியது முதல் உங்களின் விரல் அசைவு வேகம், தொடும் அழுத்தம், இழுக்கும் முறை  போன்றவற்றை உள்வாங்கி பதிந்துகொள்ளும்.
100 நபர்களிடம் நடத்திய சோதனையில் இந்த மென்பொருள் 98% அளவில் உரிமையாளரை சரியாகக் கண்டுபிடித்துவிட்டது.
பிற மென்பொருள்கள் மற்றும் விளையாட்டுகள் விளையாடும் போது இந்த மென்பொருள் வேலை செய்யாது. ஆனால் முக்கியமாக மின்னஞ்சல், குறுந்தகவல் மற்றும் புகைப்படங்களை பார்க்கும் போது இது செயல்பட்டு பிறர் பயன்படுத்தாத வண்ணம் காக்கும்.
விரைவில் Silent Sense மென்பொருள் அனைவரின் பயன்பாட்டிற்கும் வர இருக்கிறது.

அதிவேக இணையம் – ஆச்சர்யமளிக்கும் தகவல்கள்!

கூகிள் இணையப் பயன்பாட்டு தொழில்நுட்பத்தில் அடுத்த தலைமுறை இன்டர்நெட் ஸ்பீடை (The Next Generation Internet Speed) கொண்டு வர உள்ளது. இந்த தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வரும்பொழுது நிச்சயம் அது ஒரு ஆச்சர்யம் அளிக்கும் விஷயமாகவே இருக்கும்.

சுமார் பத்து வருடங்களுக்குப் பிறகு வரும் என எதிர்பார்க்கப்பட்ட இத்தொழில்நுட்பத்தினை மூன்றே ஆண்டுகளில் பயனர்கள் பெறுவதற்கான முயற்சிகளில் கூகிள் இறங்கிறயுள்ளது.
the-next-generation-internet-speed
the-next-generation-internet-speed
இதுபோன்று அதிவேக இணைய இணைப்பை ஏற்கனவே அமெரிக்காவில் கேன்சஸ் நகரத்தில் பைபர் என்னும் திட்டத்தின் கீழ், அங்கு வசிக்கும் மக்களுக்கு ஒரு நொடிக்கு 1GB Data பரிமாற்ற வேகத்தினை தந்துவருகிறது.
தற்பொழுது ஒரு நொடிக்கு 10 கிகா பிட்ஸ் வேகத்திற்கு இன்டர்நெட் பயன்பாட்டை கொண்டுவரும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது கூகிள். இந்தளவிற்கு இணைய வேகம் அமைந்தால் ஒரு திரைப்படத்தை இணையம் மூலம் 4 வினாடிகளில் பரிமாற்றம் செய்துகொள்ள முடியும்.
இணையத்தின் வேகம் இந்தளவிற்கு இருந்தால், சாப்ட்வேர் சேவைகளை மிக எளிதாக அனைவரும் பெற்றுப் பயன்படுத்த முடியும். அதிகமான கொள்ளவு கொண்ட மென்பொருட்களை ஒரு நொடியில் தரவிறக்கம் செய்து பயன்படுத்திட முடியும்.

இதுபோன்ற அதிவேக இணையவேக தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதில் கூகிளுடன் வேறு சில நிறுவனங்களும் இணைந்துள்ளன.
இதற்கு முன்பு, சீனா, பிரிட்டன் நாடுகள் லைபை – lifi என்ற தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி ஒளி மூலம் டேட்டாவினை அதிக வேகத்தில் பரிமாறிக்கொள்ள முடியும் என நிருபித்திருந்தனர்.

மற்றுமொரு நிறுவனமான வெரிசான் நிறுவனமும் 10 கிகா பிட் டேட்டா பரிமாற்றச் சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டது. வெரிசான் நிறுவனம் மட்டுமல்லாமல் அமெரிக்காவின் வேறு சில இணைய சேவை நிறுவனங்களும் இந்த அதிவேக தொழில்நுட்பத்தின் மூலம் டேட்டாவினை பரிமாற்றம் செய்தது.
எனினும் கூகிள் நிறுவனம் இத்தொழில்நுட்பத்தினை முறையான ஆய்வின் மூலம் மேற்கொள்வதால், விரைவில் அதிவேக இணைய இணைப்பு உலக மக்கள் அனைவருக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

Desktop Right Click--டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்து பெறும் பயன்கள்

கம்ப்யூட்டர் பயனர்கள் பலரும் டெஸ்டாப்பில் ரைட் கிளிக் செய்து Refresh மட்டுமே செய்வார்கள்.
ரைட் கிளிக் செய்யும்போது தோன்றும் விண்டோவில் மேலும் பல பயனுள்ள வசதிகளும் உள்ளன.
பெரும்பாலான பயனர்கள் அவ்வசதிகளைப் பயன்படுத்துவதே இல்லை. அந்த வசதிகளைப் பற்றியும், அதனுடைய பயன்களையும் தெரிந்துகொள்வோம்.
Right Click செய்யும்பொழுது நமக்கு முதலில் தெரியும் பயன்பாடு view.
இது டெஸ்டாப்பில் இருக்கும் அப்ளிகேஷன்களின் ஷார்ட் கட்கள் மற்றும் கோப்புகளின் ஐகான்களை பார்வைக்கு தோற்றம் அளிக்கும் விதத்தை மாற்றுவதற்குப் பயன்படுகிறது.
இதில் உள்ள ஆப்சன்கள்
1. Large icons
டெக்ஸ்டாப்பில் தோன்றும் ஐகான்களை பெரியதாக காட்ட இந்த வசதி பயன்படுகிறது. ரைட் கிளிக் செய்து view >> Large icons என்பதை தேர்ந்தெடுத்திடும்பொழுது டெஸ்க்டாப்பில் தோன்றும் ஐகான்கள் பெரியதாக  தோற்றமளிக்கும்.
large icons

2. Medium icons
டெக்ஸ்டாப்பில் தோன்றும் ஐகான்களை மீடியமாக காட்ட இந்த வசதி பயன்படுகிறது. ரைட் கிளிக் செய்து view >> Medium icons என்பதை தேர்ந்தெடுத்திடும்பொழுது டெஸ்க்டாப்பில் தோன்றும் ஐகான்கள் மீடியமாக தோற்றமளிக்கும்.
medium-icons
3. Small icons
டெக்ஸ்டாப்பில் தோன்றும் ஐகான்களை சிறியதாக காட்ட இந்த வசதி பயன்படுகிறது. ரைட் கிளிக் செய்து view >> Small icons என்பதை தேர்ந்தெடுத்திடும்பொழுது டெஸ்க்டாப்பில் தோன்றும் ஐகான்கள் மீடியமாக தோற்றமளிக்கும்.
small-icons
4. Auto arrange icons
இந்த வசதியானது டெஸ்க்டாப்பில் அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ள ஐகான்களை தானாகவே ஒழுங்குபடுத்திக்கொள்ளும்.
5. Align icons to grid
இந்த வசதியை தேர்ந்தெடுக்கும்பொழுது டெஸ்க்டாப்பில் உள்ள ஐகான்களை grid – ல் அலைன் செய்து அழகாக காட்டும்.
icons align to grid
6. Show desktop icons
இந்த வசதியை செயல்படுத்தும்பொழுது டெஸ்க்டாப் ஐகான்கள் தெரியும். டிக் மார்க்கை எடுத்துவிட்டால் டெஸ்க்டாப்பில் ஐகான்கள் மறைந்துவிடும்.
7. Show gadgets
விண்டோஸ் 7 ல் பயனுள்ள calendar, clock, cpu meter, currency, feed headlines, picutre puzzle, slide show, weather, windows media center போன்ற கேட்கெட்கள் உள்ளன. அவற்றை நீங்கள் பயன்படுத்திக்கொண்டிருந்தால், அவற்றை டெஸ்டாப்பில் தோன்றச் செய்வதற்கும், தேவையில்லை யெனில் மறையச் செய்வதற்கும் பயன்படும் வசதி இதுவாகும்.
Sort By
இந்த வசதியின் மூலம் டெஸ்டாப்பில் உள்ள ஐகான்களை, Name, Size, Item type, Date modified என்ற வகைகளில் வரிசைப்படுத்தலாம். பெயரின் அடிப்படையில் வரிசைப்படுத்த Name என்பதையும், கோப்புகளின் அளவின் அடிப்படையில் வரிசைப்படுத்த Size என்பதையும், ஐகான்களின் தன்மையின் அடிப்படையில் வரிசைப்படுத்த Item என்பதையும், தேதி அடிப்படையில் வரிசைப்படுத்த Date modified என்ற வசதியையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.
Desktop ல் ரைட்கிளிக் பயன்பாடு என்ற இப்பதிவு புதிய கணினி பயனர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.
நன்றி.

Popular Posts

Facebook

Blog Archive