பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

சனி, 6 டிசம்பர், 2014

செல்போன் பயன்படுத்துவதால் செவிட்டுத் தன்மை ஏற்படுமா?

செல்போனால் செவிட்டுத் தன்மை ஏற்படுமா? (Cell phone causing the hard of hearing)
வணக்கம் நண்பர்களே..
செல்போன் பயன்படுத்துவதால் செவிட்டுத் தன்மை ஏற்படுமா?
உறுதியாக செவிட்டுத் தன்மை ஏற்படும் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள். சாதாரணமாக நாம் கேட்கும் திறனின் அளவு 70 டெசிபல் முதல் 75 டெசிபல் வரைதான். இதற்கு அதிகமாக ஒலியின் அளவு ஆகும்போது கேட்கும் திறனில் நிச்சயம் பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

நுட்பான உறுப்புகளில் காதும் ஒன்று. காது கேட்கும் திறன் பாதிப்படையாமல் இருக்க சராசரி ஒலியின் அளவைவிட அதிகமாகும்போது குறைகிறது. அதிகபட்ச உயர்ந்த அளவு 90 டெசிபல் ஒலி அளவுகள் வரை கேட்கும் திறனைத் தாங்குகிறது காதுகள். இதற்கு மேல் அதிகரித்தால் காது “கேக்காது” ஆகவிடும்.

இந்த அளவுகளையே தொடர்ந்து இடைவிடாமல் கேட்பதால் காது பாதிப்புக்கு உள்ளாகும். அதிகபட்சமாக 20 நிமிடங்கள் வரை தொடர்ந்து செல்போன் பேசலாம்.

அரைமணி நேரத்திற்கும் அதிகமாக காதிலிருந்து செல்போனை எடுக்காமல் பேசுவதால் காதில் பிரச்னைகள் உருவாக ஆரம்பிக்கும். கூடவே கதிர்வீச்சுத் தாக்கமும் ஏற்படுவதால் உடலுக்கு கேடு ஏற்படுவதை தடுக்க முடியாது.
செல்போன் மூலம் நாம் கேட்கும் ஒலியின் அளவு 90-100 டெசிபலாக இருக்கும். இது காதுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய அளவு ஆகும். அதிக ஒலியளவைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பதால் காதின் கேட்கும் திறன் விரைவிலேயே குறைந்துவிடும்.
அதிக அதிர்வலைகளை ஏற்படுத்துகிற செல்போனை நாம் காதிலியே வைத்துப் பேசுவதால் காதில் உள்ள நுண்ணிய நரம்புகள் பாதிப்புக்கு உள்ளாகிறது. செல்போனுக்கு டவர், Signal சீராக இல்லாமல் விட்டு விட்டு கிடைப்பதாலும், கதிர்வீச்சின் அளவில் ஏற்ற இறக்கம் இருப்பதாலும் காதின் மிக நுண்ணிய நரம்புகள் பாதிக்கப்படலாம். இதனால் காது கேட்கும் திறன் குறைகிறது.

இதற்கு மாற்றுவழி என்ன? 

செல்போனை தூர வைத்துப் பேசலாம். Hands Free உபயோகிக்கலாம்.. கூடுமானவரை அதிக நேரம் செல்போன் உபயோகிப்பதை தவிர்க்கலாம். எல்லாம் நம்மிடமே உள்ளது. உங்களுடைய காதுகள் நன்றாக கேட்பதற்கும், கேட்காதிருப்பதற்கும் நீங்களே  ்காரணமாக இருப்பீர்கள். முடிந்தவரை செல்போன்  தொடர்ச்சியாக மணிக்கணக்கில் பேசுவதை தவிருங்கள்.. காது கேட்கும் தன்மையை இழக்காமல் இருங்கள்..
நன்றி நண்பர்களே…!
Summary:
Hearing caused by cell phone use. Avoid using the phone for a long time to come hard of hearing preservation. Alternatively, use devices such as hand free.
இந்த பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.ஏதேனும் சந்தேகம் எனில் மின்னஞ்சல் செய்யுங்கள்.நன்றி நண்பர்களே.. மற்றுமொரு புதிய பயனுள்ள பதிவின் வழி சந்திப்போம். 

வெள்ளி, 5 டிசம்பர், 2014

நீங்கள் அன்லிமிடட் பிளானில் இணைய இணைப்பு பெற்றிருக்கிறீர்களா? இணைய வேகத்தை கூட்ட

இணைய வேகத்தை அதிகரிக்க எளிய வழி!
நீங்கள் அன்லிமிடட் பிளானில் இணைய இணைப்பு பெற்றிருக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் இணைய வேகம் கொஞ்சம் குறைவாகவே இருக்கும். அன்லிமிட்ட் பிளான் பயன்படுத்துபவர்களுக்கு இது நன்றாக தெரியும். உங்கள் பிளானில் உள்ளபடி இணைய வேகத்தை அதிகரிக்க ஒரு சுலப வழியைப் பார்ப்போம்.

இணைய வேகம் இடத்திற்கு இடம் மாறும். இதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதைப்பற்றி மற்றொரு பதிவில் பார்ப்போம். நம்மில் பெரும்பாலானோர் Unlimited Internet தான் பெற்றிருப்போம். இவ்வாறான அன்லிமிட்டட் பிளானில் இணைய வேகமானாது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருக்காது. ஒரு கோப்பைத் தரவிறக்கம் செய்ய வேண்டுமெனில் அதற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியது வரும்.

இவ்வாறில்லாமல் இணைய வேகத்தை அதிகரித்து, விரைவாக தரவிறக்கம்(Download), மற்றும் கோப்புகளை மேலேற்றம்(upload) செய்வதற்கும், பிரௌசிங் வேகத்தை அதிகப்படுத்தவும் கீழ்க்கண்ட உத்திகள் உங்களுக்குப் பயன்படும்.

இணைய வேகத்தை அதிகப்படுத்த வழிகள்:

நீங்கள் Windows XP வைத்திருப்பீர்களானால் இந்த முறை உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

Windows XP யில் இணைய வேகத்தை அதிகரிக்கும் வழி முறைகள்:

1.Strar button கிளிக் செய்யுங்கள்.
2. Run கிளிக் செய்யுங்ள். அல்லது CTRL+R கிளிக் செய்தாலும் Run Window-வைப் பெற முடியும்.
3. Run Window-வில் gpedit.msc என தட்டச்சிடுங்கள்.
4. கிளிக் ஓ.கே.
5. அடுத்து தோன்றும் திரையில் computer configuration==>administrativeTemplates தேர்ந்தெடுங்கள்.
6. தோன்றும் சப்மெனுவில் (submenu) நெட்வொர்க் network தேர்ந்தெடுங்கள்.
7. இப்போது தோன்றும் சப்மெனுவில் (submenu) Qos Packet scheduler என்பதை கிளிக் செய்யுங்கள்.
Limit reservable bandwith என்பதை கிளிக் செய்யுங்கள்.
8. அதில் Band with limit என்பதில் 4% என கொடுத்து OK கொடுங்கள்.
இப்போது செய்த மாற்றங்களை சேமித்துவிடுங்கள்.

அனைத்தையும் சரிவர செய்தவுடன் கணினியை மறுதொடக்கம் (Restart) செய்துவிட்டு இன்டர்நெட்டை இயக்கிப் பாருங்கள்.. நிச்சயம் நல்ல மாற்றம் தெரியும். முன்பை விட இணைய வேகம் அதிகரித்திருப்பதை கண்கூடாக பார்ப்பீர்கள்..

விண்டோஸ் 7 - ல் இணைய வேகத்தை அதிகரிக்கும் வழி:

நீங்கள் விண்டோஸ் 7 பயன்படுத்துகிறீர்களா? அப்படி எனில் கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். உங்களின் இணையவேகம் அதிகரிக்கும்.

Windows 7-ல் இணைய வேகத்தை அதிகரிக்க முதலில்
1. ரன் விண்டோவை திறக்கச் செய்யுங்கள். (இதற்கு search பாக்சில் run என கொடுத்து என்டர் தட்டலாம். அல்லது Start+R கொடுத்து ரன் விண்டோவைத் திறக்கலாம்.)
2.திறக்கும் run window-வில் system.ini என தட்டச்சிடுங்கள்.
3. புதிய விண்டோ திறகும். அதில் ஏற்கனவே சில நிரல்வரிகள் இருக்கும். அதில் மாற்றம் எதுவும் செய்யவேண்டாம்.
4. திறந்த கோப்பில் கீழ்க்கண்ட நிரல்வரிகளை காப்பி செய்து கோப்பில் உள்ள நிரல்வரிகளுக்கு கீழே பேஸ்ட் செய்துவிடுங்கள்.

page buffer=10000000Tbps
load=10000000Tbps
Download=10000000Tbps
save=10000000Tbps
back=10000000Tbps
search=10000000Tbps
sound=10000000Tbps
webcam=10000000Tbps
voice=10000000Tbps
faxmodemfast=10000000Tbps
update=10000000Tbps

பேஸ்ட் செய்தவுடன் Ctrl+S அழுத்தி மாற்றத்தை சேமித்துவிடுங்கள். அல்லது file==>save கிளிக் செய்யவும். மாற்றம் செய்ததை சேமித்தவுடன் கோப்பை மூடிவிடவும்.
தற்போது Windows xp பயனர்களுக்கு சொன்னதுபோலவே உங்கள் கணினியை Restart செய்யுங்கள். பிரௌசரை திறந்து இணையத்தின் வேகத்தை சோதனை செய்யுங்கள். மாற்றம் தெரிகிறதா?

நிச்சயம் இணைய வேகத்தில் கூடுதல் வேகம் வந்திருக்கும்.

இணைய பாவனையாலர்கலான நாம் இதை நமது நண்பர்கள் அனைவருக்கும் தெரிவிக்கவேண்டியது நமது கடமை எனவே பகிருங்கள் பயனடைய செய்யுங்கள்...

இலவசமாக SMS அனுப்புவதற்க்கான சிறந்த 20 தளங்கள்..!


நாம் அன்றாடம் நம் நண்பர்களுக்கு SMS அனுப்புவோம். ஆனால் ஒரு SMSக்கு 50பைசா 60 பைசா என்று மொபைல் சேவை வழங்கும் நிறுவனம் எடுத்து கொள்கிறது.அல்லது மாதந்தோறும் அதற்கு RATECUTTER போட்டு SMS அனுப்புவோம்.இணையம் இருக்கும் போது நாம் ஏன் 50 பைசா செலவழித்து SMS அனுப்பவேண்டும்.இலவசமாக குறுஞ்செய்தி அனுப்புவதற்கு இணையத்தில் பல தளங்கள் உள்ளன.இதில் இலவசமாக SMS அனுப்பலாமே இதில் சில பயனுள்ள சில தளங்களை பார்போம்.

1.ஐந்து நிமிடத்தில் குறுஞ்செய்திகளை பெறலாம் .
2.136 எழுத்துக்களை கொண்டு SMS அனுப்பலாம்.
3.PHONE BOOK-ல் உங்கள் தொடர்புகளை சேமித்து கொள்ளலாம்


1. http://www.smsze.com

2. http://160by2.com

3. http://fonet.mobi

4. http://www.chikka.com

5. http://evaphone.com/destinations

6. http://www.ring2skype.com

7. http://www.clickatell.com

8. http://www.way2sms.com

9. http://www.txtdrop.com

 10. http://www.ifreesms.co.uk

11. http://www.shinyshack.com/sms

12. http://ukfreesms.com/

13. http://www.mysmsworld.com

14. http://www.uktxt.co.uk

15. http://www.sendafreesms.co.uk

16. http://www.wadja.com

17. http://text4freeonline.com

18. http://www.cbfsms.com

19. http://www.urdumaza.com

20. http://www.textme2day.com

குறிப்பு: இதில் நான் எல்லா தளத்தையும் சோதனை இடவில்லை....! உங்களுக்கு என்ன என்ன தளம் நன்றாக வேலை செய்கிறதோ அதை கீழே உள்ள cmnts இல் போடுங்க.....!

USB ன் தரத்தை சோதிப்பது எப்படி?

USB கருவிகளான பென்டிரைவ், மெமரி கார்டு போன்றவை தகவல்களை சேமித்து வைத்துக் கொள்ள பயன்படுத்தப்படுகின்றன.இவை குறிப்பிட்ட காலம் செயல்பட்ட பின் தானாகவே இயக்கத்தை நிறுத்திக் கொள்கின்றன.
சிலருக்கு தாங்கள் பயன்படுத்தும் பென்டிரைவ் தரமானதா என்பது பற்றி அறியமாட்டார்கள்.
 

மற்றும் பென்டிரைவ் பழுதாகியுள்ளதா என்பதை உறுதிப்படுத்துவதும் கடினமானதே.

பென்டிரைவ் மற்றும் ஏனைய USB கருவிகளின் தரத்தைச் சோதிக்க ChkFlsh என்ற இலவச மென்பொருள் இணையத்தில் கிடைக்கிறது.

இதற்கு முதலில் இந்த மென்பொருளைத் தரவிறக்கியவுடன், http://mikelab.kiev.ua/PROGRAMS/ChkFlsh.zip இந்த LINKஐ பயன்படுத்தவும். உங்கள் பென்டிரைவை கணணியில் இணைக்கவும். பென்டிரைவில் உள்ள தகவல்களை அழித்து விட்டு சோதிக்கப் பயன்படுத்துவது சிறந்தது. இதில் 3 வகையான Access Type கள் இருக்கின்றன. Read Speed, Write Speed, Sector wise Errors போன்ற விடயங்களை சோதித்து அறியலாம்.

Use Temporary file என்பதைக் கிளிக் செய்தால் Write and Read சோதனையைச் செய்ய முடியும்.

உங்கள் பென்டிரைவில் ஏதேனும் தகவல்கள் இருந்து Read Test மட்டுமே மேற்கொள்ள வேண்டும் எனில் As Logical Drive என்பதைக் கிளிக் செய்து கொள்ளவும்.

Test Length என்பதில் One Full Cycle என்பதைத் தெரிவு செய்யவும். பின்னர் Start கொடுத்தால் பென்டிரைவ் சோதிக்கப்படும்.

ஒவ்வொரு கோப்பு செக்டார்களாக(File Sector)களாக சோதிக்கப்பட்டு வரும். இறுதியில் ஒவ்வொரு செக்டாரும் பச்சை வண்ணத்தில் காண்பிக்கப்பட்டால் உங்கள் பென்டிரைவில் எந்த பிரச்னையும் இல்லை என்று அர்த்தம். இத்துடன் இந்த பென் டிரைவின் வேகம் மற்றும் பிழைகள் இருந்தாலும் காண்பிக்கப்படும்.
Sri Patan's photo.
Sri Patan's photo.
Sri Patan's photo.

கேஸ் சிலிண்டர் மானியம் வாங்க அப்ளை செஞ்சாச்சா?

சமையல் எரிவாயு மானியத்தை பெறுவதற்காக விண்ணப்பிப்பதற்கு என்னென்ன நடைமுறைகளை பின்பற்றவேண்டும் என்பது பற்றி, எண்ணெய் நிறுவன அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

இதுகுறித்து எண்ணெய் நிறுவன அதிகாரிகளிடம் கேட்ட போது,”சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை நேரடியாகப்பெறும் திட்டம், இந்தியாவில் 54 மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜனவரி 1-ந்தேதியில் இருந்து இந்தத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்த நேரடி மானியத்தைப் பெறுவதற்காக அடுத்த ஆண்டு 2015-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதி வரை வாடிக்கையாளர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வாய்ப்பை தவறவிட்டால், எரிவாயுக்கான நேரடி மானியத்தை பெறமுடியாமல் போய்விட வாய்ப்புள்ளது.

மானியத்திட்டத்தில் பயன்பெற வேண்டும் என்றால், எரிவாயு இணைப்பு உள்ளவர்களுக்கு, அவர்களின் பெயரில் வங்கிக்கணக்கு இருக்கவேண்டும். அவர்கள் முழு தொகை செலுத்தி எரிவாயு வாங்கினாலும், மத்திய அரசு அளிக்கும் மானியத்தொகை, அந்த வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுவிடும். அந்த வகையில் எரிவாயுக்கான மானியத்தை இதன்மூலம் வாடிக்கையாளர் பெற்றுக்கொள்ளலாம்.

இந்தத் திட்டத்தில் சேர்ந்ததில் இருந்து மானியத்தொகை கிடைக்கத் தொடங்கிவிடும். எரிவாயு சிலிண்டரை வாங்கிய 3 அல்லது 4 நாட்களுக்குள் வங்கிக்கணக்கில் மானியத்தொகை வந்து சேர்ந்துவிடும். எரிவாயுக்கான நேரடி மானிய திட்டத்தில் சேர்வதற்கு விண்ணப்பிக்கும் முறை எளிதானதுதான். யார் பெயரில் சிலிண்டர் இருக்கிறதோ, அவர் தனது எரிவாயு சிலிண்டர் முகவரை அணுகவேண்டும். தன்னிடமுள்ள ஆதார் எண் மற்றும் வங்கிக்கணக்கு எண்ணை குறிப்பிட்டு, அவர் கொடுக்கும் படிவம்-1 மற்றும் படிவம்-2 ஆகியவற்றை பூர்த்தி செய்யவேண்டும். படிவம்-1-ஐ வங்கியிலும்,
படிவம்-2-ஐ முகவரிடமும் வழங்கவேண்டும்.

ஆதார் அட்டை அல்லது எண் இல்லை என்றால், வங்கிக்கணக்கு புத்தகத்தை காட்டி முகவரிடம் இருந்து படிவம்-3 மற்றும் படிவம்-4 ஆகியவற்றை வாங்கி பூர்த்தி செய்யவேண்டும். பின்னர் படிவம்-3-ஐ வங்கியிலும், படிவம்-4-ஐ முகவரிடமும் கொடுக்கவேண்டும். வங்கியில் படிவம் செலுத்தப்பட்டது என்பதற்கு அத்தாட்சியாக, படிவத்தின் கடைசி பகுதியை கிழித்து, அதில் வங்கி முத்திரையை பதித்தும், கையெழுத்திட்டும் வழங்குவார்கள். அதை பத்திரமாக வைத்துக்கொள்ளவேண்டும்.

இந்த நடைமுறைகள் மூலம் எரிவாயுக்கான நேரடி மானியத்திட்டத்தில் சேர்ந்துவிடலாம். அதன்பின்னர் எப்போதும்போல் பணத்தை செலுத்தி சிலிண்டரை வாங்கிக்கொள்ளலாம். அதற்கான மானியத்தொகை வங்கிக்கணக்கில் வந்து சேர்ந்துவிடும்.
”என்று அவர்கள் தெரிவித்தனர்.
கேஸ் சிலிண்டர் மானியம் வாங்க அப்ளை செஞ்சாச்சா?
சமையல் எரிவாயு மானியத்தை பெறுவதற்காக விண்ணப்பிப்பதற்கு என்னென்ன நடைமுறைகளை பின்பற்றவேண்டும் என்பது பற்றி, எண்ணெய் நிறுவன அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

இதுகுறித்து எண்ணெய் நிறுவன அதிகாரிகளிடம் கேட்ட போது,”சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை நேரடியாகப்பெறும் திட்டம், இந்தியாவில் 54 மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜனவரி 1-ந்தேதியில் இருந்து இந்தத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்த நேரடி மானியத்தைப் பெறுவதற்காக அடுத்த ஆண்டு 2015-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதி வரை வாடிக்கையாளர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வாய்ப்பை தவறவிட்டால், எரிவாயுக்கான நேரடி மானியத்தை பெறமுடியாமல் போய்விட வாய்ப்புள்ளது.

மானியத்திட்டத்தில் பயன்பெற வேண்டும் என்றால், எரிவாயு இணைப்பு உள்ளவர்களுக்கு, அவர்களின் பெயரில் வங்கிக்கணக்கு இருக்கவேண்டும். அவர்கள் முழு தொகை செலுத்தி எரிவாயு வாங்கினாலும், மத்திய அரசு அளிக்கும் மானியத்தொகை, அந்த வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுவிடும். அந்த வகையில் எரிவாயுக்கான மானியத்தை இதன்மூலம் வாடிக்கையாளர் பெற்றுக்கொள்ளலாம்.

இந்தத் திட்டத்தில் சேர்ந்ததில் இருந்து மானியத்தொகை கிடைக்கத் தொடங்கிவிடும். எரிவாயு சிலிண்டரை வாங்கிய 3 அல்லது 4 நாட்களுக்குள் வங்கிக்கணக்கில் மானியத்தொகை வந்து சேர்ந்துவிடும். எரிவாயுக்கான நேரடி மானிய திட்டத்தில் சேர்வதற்கு விண்ணப்பிக்கும் முறை எளிதானதுதான். யார் பெயரில் சிலிண்டர் இருக்கிறதோ, அவர் தனது எரிவாயு சிலிண்டர் முகவரை அணுகவேண்டும். தன்னிடமுள்ள ஆதார் எண் மற்றும் வங்கிக்கணக்கு எண்ணை குறிப்பிட்டு, அவர் கொடுக்கும் படிவம்-1 மற்றும் படிவம்-2 ஆகியவற்றை பூர்த்தி செய்யவேண்டும். படிவம்-1-ஐ வங்கியிலும், படிவம்-2-ஐ முகவரிடமும் வழங்கவேண்டும்.

ஆதார் அட்டை அல்லது எண் இல்லை என்றால், வங்கிக்கணக்கு புத்தகத்தை காட்டி முகவரிடம் இருந்து படிவம்-3 மற்றும் படிவம்-4 ஆகியவற்றை வாங்கி பூர்த்தி செய்யவேண்டும். பின்னர் படிவம்-3-ஐ வங்கியிலும், படிவம்-4-ஐ முகவரிடமும் கொடுக்கவேண்டும். வங்கியில் படிவம் செலுத்தப்பட்டது என்பதற்கு அத்தாட்சியாக, படிவத்தின் கடைசி பகுதியை கிழித்து, அதில் வங்கி முத்திரையை பதித்தும், கையெழுத்திட்டும் வழங்குவார்கள். அதை பத்திரமாக வைத்துக்கொள்ளவேண்டும்.

இந்த நடைமுறைகள் மூலம் எரிவாயுக்கான நேரடி மானியத்திட்டத்தில் சேர்ந்துவிடலாம். அதன்பின்னர் எப்போதும்போல் பணத்தை செலுத்தி சிலிண்டரை வாங்கிக்கொள்ளலாம். அதற்கான மானியத்தொகை வங்கிக்கணக்கில் வந்து சேர்ந்துவிடும்.
”என்று அவர்கள் தெரிவித்தனர்.

செவ்வாய், 25 நவம்பர், 2014

Android Battery இன் மின் சக்தியை சேமிப்பது எப்படி?

Battery இன் மின் சக்தியை சேமிப்பது எப்படி (அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய விவரம்) நாம் மின் சக்தியை சேமிக்கும் விதத்தை அறிவதற்கு முன் அது எவ்வாறெல்லாம் வீணாகிறது என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்
1 மொபைல் 2g network இல் இருப்பதை விட 3g network இல் அதிக மின் சக்தியை இழக்கிறது ஆதலால் charge செய்ய முடியாத சூழலில் மொபைலை 2g network ல் வைத்து இயக்குவது மிகவும் நல்லது
3g network ல் அதிகமானா உஷ்னத்தை உங்கள் மொபைல் வெளிப்படுத்தினால் அதை உடனடியாக அனைத்து வைப்பது சிறந்தது
2 application களை அதிகமாக இயக்கும்பொழுது மின் சக்தி வேகமாக குறைகிறது ஆதலால் வெளி இடங்களில் இருக்கும்பொழுது தேவையான application ஐ மட்டும் இயக்குவது சிறந்தது
3 wifi மற்றும் ப்ளுடூத் ஆகியவற்றின் செயலுக்கு இடையில் அதிக மின் சக்தி இழக்கப்படும்
ஆதலால் Bluetooth head phone களை அதிகம் பயன்படுத்த வேண்டாம் wifi ஐ உபயோகித்து முடித்த உடன் அதை அனைத்து வைப்பது சிறந்தது இது Bluetooth ற்க்கும் பொருந்தும்
4 நாம் இருக்கும் இடத்தில் அலைவரிசை அதாவது signel குறைந்து காணப்பட்டால் அப்பொழுது நமது மொபைலின் கதிர்வீச்சு அதிகளவில் வெளிப்படும் இதன் இயக்கம் மின் ஆற்றலை விரைவில் செயலிழக்க வைத்து விடும்
5 display brightness தேவையான அளவு adjust செய்து உபயோகித்துக் கொள்ளுங்கள் இரவு நேரங்களில் அதிக அளவு வைத்து உபயோகிப்பது கண்ணுக்கு கெடுதலை விளைவிக்கும் மிகவும் கம்மியாக bright வைக்கும்.இதை பின்பற்றினாலே பொதும் தேவையான அளவு மின்சக்தியை சேமிக்கலாம்

Photo: Battery இன் மின் சக்தியை சேமிப்பது எப்படி (அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய விவரம்) நாம் மின் சக்தியை சேமிக்கும் விதத்தை அறிவதற்கு முன் அது எவ்வாறெல்லாம் வீணாகிறது என்பதை பற்றி தெரிந்துகொள்வோம் 
1 மொபைல் 2g network இல் இருப்பதை விட 3g network இல் அதிக மின் சக்தியை இழக்கிறது ஆதலால் charge செய்ய முடியாத சூழலில் மொபைலை 2g network ல் வைத்து இயக்குவது மிகவும் நல்லது
3g network ல் அதிகமானா உஷ்னத்தை உங்கள் மொபைல் வெளிப்படுத்தினால் அதை உடனடியாக அனைத்து வைப்பது சிறந்தது 
2 aplication களை அதிகமாக இயக்கும்பொழுது மின் சக்தி வேகமாக குறைகிறது ஆதலால் வெளி இடங்களில் இருக்கும்பொழுது தேவையான application ஐ மட்டும் இயக்குவது சிறந்தது 
3 wifi மற்றும் ப்ளுடூத் ஆகியவற்றின் செயலுக்கு இடையில் அதிக மின் சக்தி இழக்கப்படும் 
ஆதலால் Bluetooth head phone களை அதிகம் பயன்படுத்த வேண்டாம் wifi ஐ உபயோகித்து முடித்த உடன் அதை அனைத்து வைப்பது சிறந்தது இது Bluetooth ற்க்கும் பொருந்தும் 
4 நாம் இருக்கும் இடத்தில் அலைவரிசை அதாவது signel குறைந்து காணப்பட்டால் அப்பொழுது நமது மொபைலின் கதிர்வீச்சு அதிகளவில் வெளிப்படும் இதன் இயக்கம் மின் ஆற்றலை விரைவில் செயலிழக்க வைத்து விடும் 
5 display brightness தேவையான அளவு adjust செய்து உபயோகித்துக் கொள்ளுங்கள் இரவு நேரங்களில் அதிக அளவு வைத்து உபயோகிப்பது கண்ணுக்கு கெடுதலை விளைவிக்கும் மிகவும் கம்மியாக bright வைக்கும்.இதை பின்பற்றினாலே பொதும் தேவையான அளவு மின்சக்தியை சேமிக்கலாம்

படம் வரைய புது அப்பிளிக்கேஷன் அறிமுகம்..!

இலகுவாக படம் வரைய புது அப்பிளிக்கேஷன் அறிமுகம்..!
அன்ரோயிட் மொபைல் சாதனங்களுக்கான Corel Painter அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இலகுவாக படங்களை வரைந்து கொள்ளமுடியும்.
இதில் 70 வரையான Painter Brush தரப்பட்டுள்ளதுடன், வரைந்த படங்களை JPEG, PNG மற்றும் PSD கோப்பு வகைகளில் சேமிக்கும் வசதியும் தரப்பட்டுள்ளது.
4.99 டொலர்களே பெறுமதியான இந்த அப்பிளிக்கேஷனை கூகுள் பிளே தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
தரவிறக்கச் சுட்டி : -
https://play.google.com/store/apps/details…

Thanks to ThagavalGuru
ThagavalGuru's photo.
ThagavalGuru's photo.






ThagavalGuru's photo.

ஞாயிறு, 23 நவம்பர், 2014

பேஸ்புக்கில் TrustedContacts பற்றி அறிவீர்களா?

பாஸ்வேர்டை மறந்துவிட்டாலோ அல்லது யாரேனும் ஹாக் செய்து விட்டாலோ நம் பேஸ்புக் அக்கவுண்ட்டில் நுழைய முடியவில்லை என்றால் நாம் நம் ஈமெயில் மூலம் நம் கணக்கை திரும்ப பெறலாம். நம்மால் ஈமெயில் கணக்கை அக்செஸ் செய்ய முடியவில்லை என்றால் நம் Trusted Contacts மூலம் நம் கணக்கை திரும்ப பெற முடியியும்.

இதன் முக்கிய அவசியம் என்னவெனில் நம்மால் ஈமெயில், போன் மூலமும் நம் பேஸ்புக் கணக்கை திரும்ப பெற முடியவில்லை என்றால் Trusted Contacts இல்லை என்றால் நம் கணக்கை திரும்ப பெறுவது மிக கடினமாக இருக்கும். அதே சமயத்தில் இந்த வசதியை நாம் பயன்படுத்தினால் நம் கணக்கைதிரும்ப பெறுவது எளிதாகும்.

Trusted Contacts என்பதில் பெயருக்கு ஏற்றாற் போல் உங்களுக்கு நம்பிக்கையானவர்களை மட்டும் சேருங்கள், அதே போல பேஸ்புக்கை அடிக்கடி பயன்படுத்தும் நண்பராகவும் அவர் இருக்கட்டும்.எப்படி Trusted Contacts-ஐ சேர்ப்பது?உங்கள் பேஸ்புக் கணக்கில் Settings >> Security என்ற பக்கத்திற்கு செல்லவும். இப்போது கீழே உள்ளது போல Trusted Contacts என்ற ஒரு பகுதி இருக்கும்.
Security Settingsஅதில் “Choose Trusted Contacts” என்பதை கிளிக் செய்யுங்கள். இப்போது எப்படி Trusted Contacts மூலம் நம் கணக்கை திரும்ப பெற இயலும் என்ற சொல்லப்பட்டிருக்கும். அதிலும் ”Choose Trusted Contacts” என்பதை கிளிக் செய்யுங்கள்.

Choose Trusted Contactsஇப்போது அடுத்த விண்டோவில் உங்களின் Trusted Contacts-ஐ நீங்கள் Add செய்யலாம்.Choose Trusted Contacts 2இதில் 3-5 நண்பர்களை நீங்கள் சேர்க்கலாம்.
இதன் மூலம் FACEBOOK கணக்கை இலகுவாக மீட்க முடியும்.
Sri Patan's photo.
Sri Patan's photo.
Sri Patan's photo.

வெள்ளி, 21 நவம்பர், 2014

அன்னை தெரேசாவின் சிந்தனைகள்...

* துன்பத்தில் இறைவனைத் தேடுவோர் பலர். ஆனால், எப்போதும் இறையன்பில் வாழ்பவனே பாக்கியசாலி.

* அற்பமான மனிதர், அற்பமான பொருள் என்று எதுவும் உலகில் இல்லை. நீங்கள் மதிப்பளித்தால் உலகமும் உங்களுக்கு மதிப்பளிக்கும்.

* கண்ணீர் மல்க கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள். நிச்சயம், உங்கள் மனபாரம் தீர்ந்துவிடும். பிரச்னைக்குரிய தீர்வினைப் பெற்று மனம் மகிழ்வீர்கள்.

* வாழ்க்கை மிகவும் குறுகியது. அதனால், வாய்ப்பு கிடைக்கும்போதே நல்ல எண்ணங்களைச் செயலாக்கி விடுங்கள்.

* அன்பை மனதில் நிரப்புங்கள். குடும்ப ஒற்றுமைக்கு வழிஏற்படுத்துங்கள். இதன்மூலம் வளர்ச்சியும் முன்னேற்றமும் உண்டாகும்.

* யாரையும் எதற்காகவும் ஏமாற்றக் கூடாது. ஏமாற்ற நினைப்பவனை ஒருநாள் இறைவன் ஏமாற்றிவிடுவது உறுதி.

* சந்தனத்தைத் தொட்ட கையில் நறுமணம் கமழ்வது போல, இறைசிந்தனையில் ஆழ்ந்த மனத்தில்அருள்மணம் கமழத் தொடங்கிவிடும்.

* யாரையும் வார்த்தையால் துன்புறுத்தக் கூடாது. இதனால் நம் சுபாவமே கொடுமையானதாக மாறிவிடும் அபாயம் உண்டு.
அன்னை தெரேசாவின் சிந்தனைகள்...

* துன்பத்தில் இறைவனைத் தேடுவோர் பலர். ஆனால், எப்போதும் இறையன்பில் வாழ்பவனே பாக்கியசாலி.

* அற்பமான மனிதர், அற்பமான பொருள் என்று எதுவும் உலகில் இல்லை. நீங்கள் மதிப்பளித்தால் உலகமும் உங்களுக்கு மதிப்பளிக்கும்.

* கண்ணீர் மல்க கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள். நிச்சயம், உங்கள் மனபாரம் தீர்ந்துவிடும். பிரச்னைக்குரிய தீர்வினைப் பெற்று மனம் மகிழ்வீர்கள்.

* வாழ்க்கை மிகவும் குறுகியது. அதனால், வாய்ப்பு கிடைக்கும்போதே நல்ல எண்ணங்களைச் செயலாக்கி விடுங்கள்.

* அன்பை மனதில் நிரப்புங்கள். குடும்ப ஒற்றுமைக்கு வழிஏற்படுத்துங்கள். இதன்மூலம் வளர்ச்சியும் முன்னேற்றமும் உண்டாகும்.

* யாரையும் எதற்காகவும் ஏமாற்றக் கூடாது. ஏமாற்ற நினைப்பவனை ஒருநாள் இறைவன் ஏமாற்றிவிடுவது உறுதி. 

* சந்தனத்தைத் தொட்ட கையில் நறுமணம் கமழ்வது போல, இறைசிந்தனையில் ஆழ்ந்த மனத்தில்அருள்மணம் கமழத் தொடங்கிவிடும்.

* யாரையும் வார்த்தையால் துன்புறுத்தக் கூடாது. இதனால் நம் சுபாவமே கொடுமையானதாக மாறிவிடும் அபாயம் உண்டு. Thanks to
முழுநிலவு முழுமுதலோன்

புதன், 19 நவம்பர், 2014

உங்களது மொபைலின் இண்டர்நெட்டின் வேகம் உங்களுக்கு தெரியுமா ?


இது உங்களுடைய போனின் இண்டர்நெட் வேகத்தை நொடிக்கு நொடி தெரியப்படுத்திக்கொண்டே இருக்கும் monthly internet pack உபயோகிப்பவர்கள் இதில் தங்களின் ஆரம்பம் மற்றும் முடியும் நாளை செட் செய்துவிட்டால் போதும் ஒரு மாதம் முடிந்ததும் தானாக இனைப்பை நிருத்திவிடும் .limit pack உபயோகிப்பவர்களுக்கு இப்பொழுது 1GB உபயோகப்படுத்த அதில் செட் செய்தால் போதும் 1GB நீங்கள் உபயோகித்ததும் தானாக இண்டெர்நெட் இனைப்பை துண்டித்து mobile balance குறையாமல் பார்த்துக்கொள்ளும் இதனை பேற இங்கு செல்லவும் https://play.google.com/store/apps/details?id=com.internet.speed.meter.lite
ஜெக தீ ஷ்'s photo.

செவ்வாய், 18 நவம்பர், 2014

மொபைல்-ல் உள்ள‌ ஃப்ளைட் மோட் – நீங்கள் அறியாத பயனுள்ள‌ அரிய தகவல்கள்


 
ஸ்மார்ட் போன்கள் அனைத்தி லும், ஃப்ளைட்மோட் என்று ஒரு ஆப்ஷன் தரப்படுகிறது. பலர் இதனைப் பயன்படுத்துவது இல்லை. எனவே இது குறித்து கவலைப்படுவதில்லை. ஆனால், சில வேளைகளில், இந்த ஆப்ஷ னை இயக்கிவிட்டு, பேசமுடியாதநிலை உருவாகும்போது, மற்றவர் சொல்லி, இதனை இயங்கா நிலையில் வைக்கின்றனர். இந்நிலை இயக்கப்படு கையில் என்ன நடக்கிறது என் று இங்கு பார்க்கலாம்.
ஸ்மார்ட் போனை ஃப்ளைட் மோடில் வைக்கையில்,

அதன் செல்லுலர் ரேடியோ, வை பி, புளுடூத் ஆகியவை செயல்படுவதில்லை. செல்டவர்களுடன் போனால் தொடர்புகொள்ள முடியாது. பேச அழைப்பு விடுக்க முடியாது. எஸ்.எம்.எஸ். அனுப்ப முடியாது. அதாவது செல்டவர்கள் மூலம் மேற்கொள்ளப்படும் எந்த பணியையும் மேற்கொள்ள முடியாது.
போன் வை பி நெட்வொர்க்கில் இணைய முடியாது. இதனால், அந்த நெட்வொர்க் வழியே எந்த சாதனத்தையும் தொடர்புகொள்ள இயலாது. ஏற்கனவே, வை பி செயல்பாட்டை இயக்க நிலையில் வைத்திருந்தால், ஃப்ளைட் மோடில், அது தானாகவே செயல் இழக்கும்.

ஃப்ளைட் மோடில், புளுடூத் இயங்காது. பெரும்பாலானவர்கள், புளுடூத் இயக்கி தங்களுடைய ஹெட் செட்டினை இயக்குவார்கள். இது செயல்படாது. ஆனால், மவுஸ் மற்றும் கீ போர்ட் ஆகியவற்றை இயக்க முடியும்.
இந்நிலையில் ஜி.பி.எஸ். எனப்படும் நம்போன் இயங்கும் இடத்தை அறியும் தொழில் நுட்பம் இயங்காது. பொதுவாக விமான நிறுவனங்கள் இதனை இயக்குவதைத் தடை செய்துள்ளன. இந்தநிலை இயக்கப்படுகையில், ஸ்மார்ட் போனில், உள்ள ஃப்ளைட்மோட்ஐ கான் இயக்கப்பட்டிருக்கும் நிலையில் ஒளி விட்டபடி இருக்கும். ஐபோன், ஐபேட் மற்று ம் ஸ்மார்ட் போன்களில் இது மேலாகக் காட்டப்படும்.

பொதுவாக மொபைல் போன்கள் செல்டவர்களை தங்கள் சிக்னல்களுக்காக சிரமத்துடன் தேடுவதால், விமானப் பயணங்களில், அதன் சாதனங்கள் இயக்கம் பாதிக்கப்படும். எனவே, ஃப்ளைட்மோடில், போன்களை அமைக்க வேண்டியதிருக்கும். பொதுவாகவே, செல்டவர்களிலிருந்து சிக்னல்கள் கிடைக்காததால், நாம் போனைப் பயன்படுத்துவது இல்லை. மேலே செல்லாமல், விமான நிலையத்தினுள் உள்ள விமானங்களில் அமர்ந்திருக்கையில், போன்கள் செல்டவர்களைத் தொடர்பு கொள்ள முடியும். இது போன்ற சூழ்நிலைகளில், நாம் நம் செல் போன்களை இயக்கக் கூடாது என விமான ஊழியர்கள் தடுத்துவிடுவார்கள்.

நீங்கள் விமானத்தில் இல்லாத போதும், இந்த நிலை உங்களுக்கு உதவிடும். உங்கள் போனில் உள்ள பேட்டரி சக்தியைக் காப்பாற்ற இதனை இயக்கலாம். ஏரோ பிளேன் மோட் இயக்கப்படுவதால், பல வயர் லெஸ் நெட்வொர்க் பணி கள் மேற்கொள்ளப்படாது.

எனவே, பேட்டரியின் மின் சக்தி மிச்சமாகிறது. ஆனால், இதனை இயக்கினால், நமக்கு அழைப்புகளும் கிடைக்காது என்பதனை நினைவில்கொள்ளவேண்டு ம்.
சில பயணியர் விமான நிறுவனங்கள், தங்கள் விமானங்களில் பயணம்செய்வோரிடம், கட்டணம் பெற்றுக்கொண்டு, வை பி இயக்க அனுமதிக்கின்றனர். அப்போது அழைப்புகளை இயக்க முடியாது. ஆனால், வை பி இயக்க முடியும். அதன் மூலம் சில சாதனங்களைத் தொடர்பு கொள்ள முடியும். குறிப்பாக இன்டர்நெட் சேவையினைப் பயன்படுத்த முடியும்.

விரைவில், பயணிகள் கட்டணம் செலுத்தி, மொபைல் போன்களுக்கான அழைப்புகளையும் மேற்கொள்ளக் கூடிய வசதியினை விமான நிறுவனங்கள் தரும் காலம் வரு ம் என அனைவரும் எதிர்பா ர்க்கின்றனர்.
- அழகன் மா. தேவி

உடல் எடையை குறைக்க உதவும் பழச்சாறுகள்...

உடல் எடையை குறைக்க உதவும் பழச்சாறுகள்...

ஜூஸ் குடித்தால் அடிக்கடி பசி ஏற்படுவதை குறைத்து நீண்ட நேரம் வயிற்றினை நிறைத்து வைத்திருக்கும். இதனால் கண்ட கண்ட உணவு பொருட்களை சாப்பிடமாட்டோம். இப்போது உடல் எடையை குறைக்க உதவும் பழச்சாறுகளை பார்ப்போம்.

எலுமிச்சை ஜூஸ்:

பொதுவாக எலுமிச்சை உடல் எடைக்குறைப்பதற்கு முக்கிய பங்கு. அதிலும் ஏழே நாட்களில் எடையில் மாற்றம் தெரிய, எலுமிச்சை ஜூஸில் 1 சிட்டிகை உப்பு, மற்றும் தேன் சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும்.

தக்காளி ஜூஸ்:

ஏழே நாட்களில் எடையில் நல்ல மாற்றம் வேண்டுமெனில், 3 தக்காளியை வேக வைத்து அதனை அரைத்து, அதில் வெல்லம் சேர்த்து தினமும் மூன்று வேளை குடித்து வரவேண்டும்.

அவகேடோ ஜூஸ்:

 அவகேடோவை அரைத்து ஜூஸ் போட்டு, தேன் சேர்த்து குடித்து வந்தால், தொப்பை குறைந்துவிடும். மேலும் இதில் நல்ல கொழுப்புகள் இருப்பதால், உடலில் உள்ள கலோரிகளை எரித்துவிடும்.

திராட்சை ஜூஸ்:

கிரேப் புரூட்டில் வைட்டமின்கள் மற்றும் நல்ல கொழுப்புகள் இருப்பதால், இதனை கொண்டு ஜூஸ் போட்டு குடித்து வந்தால், உடல் எடை குறைவதோடு, சருமமும் நன்கு பொலிவோடு இருக்கும்.

கொய்யா ஜூஸ்:

கொய்யாவில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், இதனை ஜூஸ் போட்டு வாரத்திற்கு இரண்டு நாட்கள் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அது உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்துவிடும்

ஆரஞ்சு பழ ஜூஸ்:

ஆரஞ்சு பழ ஜூஸை குடித்தாலும், எடையில் மாற்றம் தெரியும். அதிலும் ஆரஞ்சுப் பழ ஜூஸில் சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும். குறிப்பாக வெதுவெதுப்பான தண்ணீரில் ஜூஸ் போட்டு குடிக்க வேண்டும்.

அன்னாசி ஜூஸ்:

அன்னாசியை மட்டும் அரைத்தால், அது கெட்டியாக ஜூஸ் போன்று இருக்கும். ஆகவே அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து பசியாக இருக்கும் நேரத்தில் குடித்தால் பசியானது உடனே அடங்கும்.
உடல் எடையை குறைக்க உதவும் பழச்சாறுகள்...

ஜூஸ் குடித்தால் அடிக்கடி பசி ஏற்படுவதை குறைத்து நீண்ட நேரம் வயிற்றினை நிறைத்து வைத்திருக்கும். இதனால் கண்ட கண்ட  உணவு பொருட்களை சாப்பிடமாட்டோம். இப்போது உடல் எடையை குறைக்க உதவும் பழச்சாறுகளை பார்ப்போம்.

எலுமிச்சை ஜூஸ்: பொதுவாக எலுமிச்சை உடல் எடைக்குறைப்பதற்கு முக்கிய பங்கு. அதிலும் ஏழே நாட்களில் எடையில் மாற்றம் தெரிய, எலுமிச்சை  ஜூஸில் 1 சிட்டிகை உப்பு, மற்றும் தேன் சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புகள்  கரையும். 

தக்காளி ஜூஸ்: ஏழே நாட்களில் எடையில் நல்ல மாற்றம் வேண்டுமெனில், 3 தக்காளியை வேக வைத்து அதனை அரைத்து, அதில் வெல்லம் சேர்த்து  தினமும் மூன்று வேளை குடித்து வரவேண்டும். 

அவகேடோ ஜூஸ்: அவகேடோவை அரைத்து ஜூஸ் போட்டு, தேன் சேர்த்து குடித்து வந்தால், தொப்பை குறைந்துவிடும். மேலும் இதில் நல்ல  கொழுப்புகள் இருப்பதால், உடலில் உள்ள கலோரிகளை எரித்துவிடும். 

திராட்சை ஜூஸ்: கிரேப் புரூட்டில் வைட்டமின்கள் மற்றும் நல்ல கொழுப்புகள் இருப்பதால், இதனை கொண்டு ஜூஸ் போட்டு குடித்து வந்தால், உடல்  எடை குறைவதோடு, சருமமும் நன்கு பொலிவோடு இருக்கும். 

கொய்யா ஜூஸ்: கொய்யாவில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், இதனை ஜூஸ் போட்டு வாரத்திற்கு இரண்டு நாட்கள் வெறும் வயிற்றில் குடித்து  வந்தால், அது உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்துவிடும் 

ஆரஞ்சு பழ ஜூஸ்: ஆரஞ்சு பழ ஜூஸை குடித்தாலும், எடையில் மாற்றம் தெரியும். அதிலும் ஆரஞ்சுப் பழ ஜூஸில் சிறிது தேன் சேர்த்து குடிக்க  வேண்டும். குறிப்பாக வெதுவெதுப்பான தண்ணீரில் ஜூஸ் போட்டு குடிக்க வேண்டும். 

அன்னாசி ஜூஸ்: அன்னாசியை மட்டும் அரைத்தால், அது கெட்டியாக ஜூஸ் போன்று இருக்கும். ஆகவே அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து  பசியாக இருக்கும் நேரத்தில் குடித்தால் பசியானது உடனே அடங்கும்.
Karthikeyan Mathan

மதிப்பெண் சான்றிதழ் தொலைந்துவிட்டால் திரும்ப பெறுவது எப்படி? -

சான்றிதழ் தொலைந்துவிட்டால் திரும்ப பெறுவது எப்படி? - தெரிந்துகொள்வோம்

ஒருவருடைய பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலைப்பள்ளி மதிப்பெண் சான்றிதழ் எதிர்பாராத வகையில் தொலைந்துவிட்டால் அல்லது தீவிபத்து, வெள்ளம், கரையான் போன்றவற்றால் சிதிலமாகி இழக்க நேரிட்டால் அதன் நகலை பெற முடியும். அதற்கான நடைமுறை வழிகளை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

* முதலில் மனுதாரர் தங்கள் பகுதியிலுள்ள காவல்நிலையத்தில் தேவையான தகவல்களுடன் புகார் அளிக்க வேண்டும்.

* அடுத்து தொலைத்துவிட்ட விவரத்தை தினசரி பத்திரிகையில் அறிவிப்பு விளம்பரம் செய்ய வேண்டும்.

* இதற்கு குறைந்தது ரூ.500 வரை செலவழிக்க நேரிடும்.

* பின்னர் காவல்நிலையத்தில் சான்றிதழை கண்டுப்பிடிக்க முடியவில்லை என்று கொடுக்கப்படும் சான்றிதழை பெற வேண்டும்.

* இதனை தாசில்தாரிடம் கொடுத்து அவரிடம் சான்றிதழ் பெற வேண்டும்.

* சான்றிதழ் நகல் பெறுவதற்காக அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்திற்கு வங்கி வரவோலை வாங்க வேண்டும்.

* பின்னர் பத்திரிகை விளம்பரத்தை வெட்டி எடுத்து தாசில்தார் சான்றிதழ், வங்கி வரைவோலை முதலியவற்றை கோரிக்கை மனு ஒன்று எழுதி அதனுடன் இணைக்க வேண்டும்.

* மனுதாரர் எந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ்2 படித்தாரோ அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலம் மாவட்ட கல்வி அதிகாரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.

* அதனை மாவட்ட அதிகாரி பரிசீலனை செய்து மாநில அரசு தேர்வு துறை இயக்குநருக்கு மதிப்பெண் சான்றிதழ் நகல் வழங்க சிபாரிசு செய்வார்.

* சான்றிதழ் தன்மைக்கேற்ப (படித்த ஆண்டின்) 3 அல்லது 6 மாதங்களுக்குள் சான்றிதழ் நகல் பள்ளி கல்வி தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும்.

* இதனை இறுதியாக எந்த பள்ளியில் படித்து முடித்தோமோ, அந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் பெற முடியும்
சான்றிதழ் தொலைந்துவிட்டால் திரும்ப பெறுவது எப்படி? - தெரிந்துகொள்வோம் 

ஒருவருடைய பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலைப்பள்ளி மதிப்பெண் சான்றிதழ் எதிர்பாராத வகையில் தொலைந்துவிட்டால் அல்லது தீவிபத்து, வெள்ளம், கரையான் போன்றவற்றால் சிதிலமாகி இழக்க நேரிட்டால் அதன் நகலை பெற முடியும். அதற்கான நடைமுறை வழிகளை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

* முதலில் மனுதாரர் தங்கள் பகுதியிலுள்ள காவல்நிலையத்தில் தேவையான தகவல்களுடன் புகார் அளிக்க வேண்டும். 

* அடுத்து தொலைத்துவிட்ட விவரத்தை தினசரி பத்திரிகையில் அறிவிப்பு விளம்பரம் செய்ய வேண்டும். 

* இதற்கு குறைந்தது ரூ.500 வரை செலவழிக்க நேரிடும். 

* பின்னர் காவல்நிலையத்தில் சான்றிதழை கண்டுப்பிடிக்க முடியவில்லை என்று கொடுக்கப்படும் சான்றிதழை பெற வேண்டும். 

* இதனை தாசில்தாரிடம் கொடுத்து அவரிடம் சான்றிதழ் பெற வேண்டும். 

* சான்றிதழ் நகல் பெறுவதற்காக அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்திற்கு வங்கி வரவோலை வாங்க வேண்டும்.

* பின்னர் பத்திரிகை விளம்பரத்தை வெட்டி எடுத்து தாசில்தார் சான்றிதழ், வங்கி வரைவோலை முதலியவற்றை கோரிக்கை மனு ஒன்று எழுதி அதனுடன் இணைக்க வேண்டும். 

* மனுதாரர் எந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ்2 படித்தாரோ அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலம் மாவட்ட கல்வி அதிகாரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். 

* அதனை மாவட்ட அதிகாரி பரிசீலனை செய்து மாநில அரசு தேர்வு துறை இயக்குநருக்கு மதிப்பெண் சான்றிதழ் நகல் வழங்க சிபாரிசு செய்வார். 

* சான்றிதழ் தன்மைக்கேற்ப (படித்த ஆண்டின்) 3 அல்லது 6 மாதங்களுக்குள் சான்றிதழ் நகல் பள்ளி கல்வி தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும். 

* இதனை இறுதியாக எந்த பள்ளியில் படித்து முடித்தோமோ, அந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் பெற முடியும்·

மழைக்கால நோய்க்கான வீட்டு வைத்தியம்!

ருவ மழையும், குளிரும் பாடாய்ப்படுத்துகிறது. குழந்தைகள், முதியவர்கள், உடல் பலவீனமானவர்கள் மட்டுமல்லாமல், பெரும்பாலானோருக்கு தலைவலியில் தொடங்கி ஜலதோஷம், மூக்கடைப்பு, ஒழுகும் மூக்கு, தும்மல், சளி, சைனஸ், கபம் கட்டுதல் என்று மளிகைக்கடை பில் போல நீளுகிறது பிரச்னைகளின் பட்டியல். இவையெல்லாம் தொற்றாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும்... வந்தபின் நிவாரணம் பெறவும், கீழ்க்கண்ட வீட்டு வைத்தியங்களை கடைபிடிக்கலாமே!

* குழந்தைகள் தொடங்கி அனைவருமே காலை எழுந்ததும் சூடுபொறுக்கும் வெந்நீரில் முகம் கழுவுவது நல்லது. டீ போடுவதற்காக தேயிலைத் தூளைக் கொதிக்க வைக்கும்போது துளசி அல்லது இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்துக் குடித்தால், சளித்தொல்லைகளில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். எலுமிச்சை ஜூஸ் அல்லது எலுமிச்சை டீ குடிக்கலாம். இஞ்சி, நெல்லிக்காய், கறிவேப்பிலை போன்றவற்றை அரைத்து சாறு எடுத்து அதனுடன் எலுமிச்சை சாறு, தேன், தேவைப்பட்டால் சர்க்கரை கலந்து குடித்தால் கூடுதல் பலன் கிடைக்கும்.

* காலை உணவைச் சூடாக உண்பது நலம். சட்னியில் இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்துக்கொள்ளுங்கள். தோசை மாவுடன் முசுமுசுக்கை இலையை அரைத்துச் சேர்த்து சுட்டுச் சாப்பிட்டால், நெஞ்சுச்சளியை விரட்டும். உளுந்த மாவுடன் கல்யாண முருங்கை இலையை பொடிப் பொடியாக நறுக்கிச் சேர்த்து வடை செய்து சாப்பிட்டாலும் சளிப் பிரச்னைக்கு நல்லது.
* மதிய உணவுக்குச் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்த குழம்பும், தூதுவளை துவையல், இஞ்சி துவையல், கொள்ளு துவையலும் நல்லது. சின்னவெங்காயத்தை பச்சையாக உரித்து மதிய உணவில் சேர்த்து சாப்பிடலாம். மிளகு ரசமும் நல்லது.

* மூக்கடைப்பு இருந்தால், விரலி மஞ்சளை நல்லெண்ணெயில் தோய்த்து எடுத்து தீயில் வாட்டி, அதன் புகையை சுவாசிக்கலாம். நொச்சி இலைகளைத் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அதன் ஆவியை சுவாசிப்பதாலும் மூக்கடைப்பு விலகும். நொச்சி இலை கிடைக்காதவர்கள், வேப்பிலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து மஞ்சள்தூள் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கியதும் போர்வையால் போர்த்தி வேது (ஆவி) பிடித்தால்... தலைபாரம், மூக்கடைப்பு, ஜலதோஷம் சரியாகும். ஜாதிக்காயை நீர்விட்டு உரசி எடுத்துக்கொண்டு, கரண்டியில் வைத்து சூடுபடுத்த வேண்டும். குழம்பு போன்று வந்ததும் மூக்கின் மேல் பற்று போட்டாலும் மூக்கடைப்பு விலகும்.

* தலைபாரம், தும்மல், நீர்கோத்தல் போன்ற பிரச்னைகள் இருந்தால், தலையணை உறையில் நொச்சி இலைகளை வைத்து உறங்க, நிம்மதியான தூக்கம் வரும். நொச்சி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அதன் ஆவியை சுவாசித்து வந்தாலும் இந்தப் பிரச்னைகள் நீங்கும்.
சுக்குவெந்நீர் தயாரியுங்கள் இப்படி!

*மாலையில் சுக்கு காபி குடிக்கலாம். இதை சுக்கு காபி என்று சொல்வதைவிட சுக்கு வெந்நீர் என்பதே சரியாக இருக்கும். சுக்கு வெந்நீர் செய்ய... மிளகு 10 கிராம் என்றால், சுக்கு 20 கிராம், 40 கிராம் தனியா (கொத்தமல்லி விதை), நான்கைந்து ஏலக்காய் சேர்த்துப் பொடியாக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து, கருப்பட்டி (பனைவெல்லம்) சேர்த்து வடிகட்டிக் குடிக்கலாம். கிடைக்கும்பட்சத்தில்... துளசி, தூதுவளை, ஓமவல்லி இலைகளைச் சேர்த்துக் கொள்ளலாம். சிற்றுண்டி ஏதாவது சாப்பிட விரும்பினால் ஓமவல்லி இலைகளை பஜ்ஜி மாவில் தோய்த்து பஜ்ஜி செய்து சாப்பிடலாம்.

பூண்டுப்பால் தயாரியுங்கள் இப்படி!

* இரவில் உறங்கப்போவதற்கு முன், பூண்டுப்பால் சாப்பிடலாம். பூண்டுப்பால் செய்ய 50 மில்லி பால், 50 மில்லி தண்ணீர், உரித்த பூண்டுப்பற்கள் 10 போட்டு பாதியாக வற்றும் வரை கொதிக்க வைக்க வேண்டும். அடுப்பிலிருந்து கீழே இறக்குவதற்கு முன் 2 சிட்டிகை மஞ்சள்தூள், 2 சிட்டிகை மிளகுத்தூள் சேர்த்துக்கொள்ளவும். பிறகு, பனங்கற்கண்டு (இல்லாதபட்சத்தில் சர்க்கரை) சேர்த்து கடைந்து சாப்பிடவும்.

மணத்தக்காளி சூப் வைக்கலாம் இப்படி!

* ஜலதோஷம், தொண்டை கரகரப்பு, இருமல் இருந்தால்... மணத்தக்காளி சூப் நல்ல பலன் தரும். எப்படிச் செய்வது? மணத்தக்காளி கீரை, மிளகு, சீரகம், பூண்டு, சின்னவெங்காயம், தக்காளி, உப்பு சேர்த்து நீர் விட்டு கொதிக்க வைத்து, பாதியாக வற்றியதும் இறக்கி வடிகட்டி, பொறுக்கும் சூட்டில் குடிக்கவும்.

இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் வீட்டு வைத்தியங்கள் அனைத்துமே பெரிதாக செலவு வைக்காமல், பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாமல், ஆரோக்கியத்தை உங்களுக்குப் பரிசளிக்கக் கூடியவை. இவற்றை தேவையைப் பொறுத்து அனைவருமே மேற்கொள்ளலாம்.

-எம். மரிய பெல்சின்

Thanks To
Vikatan EMagazine

திங்கள், 17 நவம்பர், 2014

பொடுகை நீக்க.. .Natural remedies to remove dandruff

பொடுகைப் போக்க வேப்பம்பூ: 
podugu thollai neenga
 
தலையில் உள்ள பொடுகை நீக்குவதற்கு வேப்பம்பூ பயன்படுகிறது.  இது கோடை காலம் ஆகையால் வேப்பம்பூ (Neem flowers) அதிகம் கிடைக்கும். நூறுகிராம் அளவுள்ள வேப்பம்பூவை , இருநூறு கிராம் தேங்காய் எண்ணையுடன் (Coconut Oil) கலந்து நன்கு காய்ச்சி எடுக்க வேண்டும். 
காய்ச்சிய எண்ணெய் இளம் சூடாக இருக்கும்பொழுது எடுத்து தலையில் நன்கு தேய்த்து ஊறவைக்கவும். 

அரைமணி நேரம் கழித்து தலைக்கு குளியுங்கள்.
தொடர்ந்து வாரத்திற்கு மூன்று முறை இவ்வாறு வேப்பம்பூ கலந்த எண்ணையைத் தேய்த்து குளித்துவர, உங்களைப் பாடாய் படுத்திய பொடுகு தொல்லை போயே போய்விடும். 
எளிமையான இந்த இயற்கை வைத்தியத்தைப் பயன்படுத்தி பொடுகு தொல்லையை தவிர்த்திடுங்கள். 
 
பொடுகை போக்க மற்றொரு முறை: 
 
மருதாணி இலையை (henna leaves) ஒரு கப் எடுத்துக்கொண்டு, அதனுடன் வெந்தயம் (fenugreek seeds), வேப்பிலை (Neem leaves), துளசி (Tulsi), சீயக்காய்  (Soap nut) ஆகியவற்றைக் கலந்து நன்கு அரைத்துக்கொள்ளவும். 
அரைத்த கலவையுடன் ஒரு எலுமிச்சைப் பழத்தை இரண்டாக நறுக்கி அரை எலுமிச்சை பழச்சாற்றை (Lemon juice) அக்கலவையுடன் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். 
எலுமிச்சைபழச் சாறுக்கு பதில் தயிரையும் (Curd) இதற்குப் பயன்படுத்தலாம். 
நன்கு கலக்கப்பட்ட கலைவை தலையில் பூசி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு தலைக்கு நன்கு அலசி குளிக்கவும். இவ்வாறு தொடர்ந்து ஒரு மாத காலம் செய்துவர  பொடுகு தொல்லை போயே போய்விடும். இக்கலைவையைப் பயன்படுத்துவதால் தலைமுடியும் ‘கருகரு’வென நன்கு வளரும். 
This post explained how to remove the Dandruff using in the natural system.  
நன்றி. 
 
- தங்கம்பழனி
 
Allso Read in English
 

Popular Posts

Facebook

Blog Archive