பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

20 கூலிக்கு மாறடிக்கும் உயிர்கள் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர்

யாதுமாகி
 
20 கூலிக்கு மாறடிக்கும் உயிர்கள் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர்...கொல்லப்பட்டோர்கள் தமிழர்கள்... கொன்றவர் ஆந்திராகாரர்கள் அதனால் 20 ஆந்திராகாரர்களை கொன்று வஞ்சம் தீர்த்துக் கொள்வோம் என்ற கருத்தில் யெமக்கு உடன்பாடில்லை என்ற போதும்..மனம் கலங்கி குமுறி எழும் கேள்விகளுக்கு குறைவில்லை.

1. மரங்களை அவர்கள் வெட்டியதாகவே இருக்கட்டும் - வெறும் கோடாலியை வைத்து இருக்கும் ஒரு கூலி தொழிலாளியை சுட்டு கொன்றுதான் பிடிக்கவேண்டுமா? அவ்வளவு கோழைகளா நீங்கள்? இல்லை கையால் ஆகாதவர்களா?

2. இந்த துப்பாக்கி சூட்டிற்க்கு ஆணை பிரப்பித்தவர்கள்..கடத்தல்கார கும்பல் தலைவனை பிடிக்க வக்கு இல்லை..கடத்தல் தொடர்புடைய அரசியல்வாதியை பிடிக்க வக்கில்லை..ஒரு புழுவை துப்பாக்கி கொண்டு சுடுவதுதான் உங்கள் வீரமா?

3. இவர்கள் வெட்டியதாக சொல்லப்படும் மரங்களை நீங்கள் எடுத்துக்கொண்டு இவர்கள் உயிர்களை நீங்கள் திருப்பித் தர முடுயுமா?

4. மாட்டை கொன்றால் மல்லுகட்ட மாமேதைகள் பல உண்டு இங்கு ..மனுசனுக்கு இவர்கள் எங்கே போனார்கள்?

5. தொட்டதுக்கெல்லாம் வழக்கு தொடரும் மேன் மக்கள் இப்போ எங்கே போனார்கள்? மனித மிருக உரிமை பாதுகாவலர்கள் எங்கே போனார்கள்?

6. ஒரு சினிமா வெளிவரக்கூடாது என்று சிரத்தை எடுத்து அனைத்து விதங்களிளும் தடை செய்யும் விளம்பர விரும்பிகள் இப்போ எங்கே போனார்கள்?

7. ஒரு சாதியயை மதத்தை ஒரு சொல் சொல்லிவிட்டால் ஊரையே கொளுத்தி தமிழகத்தை ஒரு வழி செய்யும் இன உணர்வாளர்கள் இந்த மனிதர்களுக்கும் கொஞ்சம் உணர்வை ஏன் பகிரவில்லை? ஒரு வேளை இறந்தவர்கள் இன்ன மதம் இன்ன சாதி என்று தெரிந்திருந்தால் போராட்டம் செய்திருப்பர் போலும்..இறந்தவர்கள் கேட்பார் அற்ற மலை வாழ் மக்கள் தானே..

8. ஊழல் குற்றவாளிகளுக்கும் இங்கு பால் குடம் பூஜை அர்ச்சனை தீ மிதிக்க இங்கு தீவிர விசுவாசிகள் பலர் உண்டு...ஈன கூலி தொழிலாளிக்கு தெய்வம் வந்து தான் தீ மிதிக்கனும்.

9. பல பேரை சுட்டுக்கொள்ளும் தீவிரவாதிகளுக்கு கூட வழக்காட இங்கே வழி உண்டு..வயிற்றுப் பிழைப்புக்காக தினம் திண்டாடும் மக்களுக்கோ மரணம் அன்றி வேறு வழி இல்லை..

10. பல திருட்டு ஊழல் வழக்கில் சிக்கியவர்கள் எத்தனையோ பேர் திருப்பதி கோவிலில் தரிசிக்கிறார்கள் அவர்களை சுட தைரியம் இருக்கிறதா?
இந்த படு கொலைக்கு நீதி கிடைக்கும் வரை தமிழகம் ஓங்கி உயர்த்தி ஒரே குரலில் எதிர்ப்பு எழுப்புவதே..தமிழர் என்ற ஒற்றுமையை பிரதிபலிக்கும்.

பட்டுக்கோட்டையின் வரிகள் தான் நினைவிற்க்கு வருகிறது. "பட்ட பகல் திருடர்களை பட்டாடைகள் - கோட்டு சூட்டு மறைக்குது.... ஒரு பஞ்சை தான் எல்லாம் சேர்ந்து திருடன் என்றே உதைக்குது"

ஒரே ஒரு ஏல‌க்காய்..கீழ்க்காணும் நோய்கள் குணமாகும்

ஒரே ஒரு ஏல‌க்காயை எடுத்து வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று வருபவர்களுக்கு கீழ்க்காணும் நோய்கள் குணமாகும்

எனக்கு ப‌சியே இல்லை அதனால் சா‌ப்‌பிடவும் ‌‌பிடி‌க்க‌வி‌ல்லை எ‌ன்று சில கூறுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள், கேட்டிருப்பீர்க ள். அவர்கள் என்ன‍ செய்ய வேண்டுமென்றால் தினந் தோறும் ஒரே ஒரு ஏல‌க்காயை எடுத்து வா‌யி‌ல் போ‌ ட்டுமெ‌ன்றா‌ல், நல்ல‍ப‌சி எடு‌க்கும், நன்றாக உணவை யும் சாப்பிடுவர். இதனால் ஜீரண உறு‌ப்பு‌க‌ள் அனைத் தும் சீராக இயங்கி, உணவை செரிமானம் ஆகும்.

மேலும் நெ‌ஞ்‌சி‌ல் ச‌ளி க‌ட்டி‌க் கொ‌ண்டு மூ‌ச்சு ‌விட ‌சிரம‌ப்படுபவ‌ர்களு‌ம், ச‌ளியா‌ல் இரும‌ல், அடி‌க்கடி வரும் வறட்டு இருமலால் உண்டாகும் வ‌யி‌ற்றுவலிக்கு கூட இந்த ஏல‌க்கா‌ய் ஒரு அருமருந்து என்றால் அது மிகையல்ல‍. அத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஏல‌க்காயை நீங்களும் மெ‌ன்று சா‌ப்‌பி‌டலாமே!




A user's photo.See This web: http://masinfom.blogspot.in/

மாதுளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

மாதுளை மிகவும் சுவையான பழம் மட்டுமின்றி, அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழமும் கூட. மாதுளையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் வளமாக இருப்பதால், இது மிகவும் சக்தி வாய்ந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருளாக கருதப்படுகிறது. மேலும் பலருக்கு மாதுளை பழம் என்றால் ரொம்பவே பிடிக்கும். ஆனால் அதனை உரித்து சாப்பிடுவது என்பதை நினைக்கும் போது பலரும் அதனை வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக, சோம்பேறித்தனப்பட்டு வேறு பழங்களை வாங்கி உட்கொள்கின்றனர்.

எந்த ஒரு பொருளும் எளிதில் கிடைப்பதை விட, கஷ்டப்பட்டு அடையும் போது தான், அதன் அருமை தெரியும். அதுப்போல் தான் மாதுளையை கஷ்டப்பட்டு உரித்து சாப்பிட வேண்டியிருந்தாலும், அதனால் எண்ணற்ற நன்மைகளை நாம் பெறலாம். அதிலும் இதனை அப்படியே சாப்பிட்டாலும் அல்லது ஜூஸாக செய்து குடித்தாலும், அதன் நன்மைகள் ஒன்றே. சரி, இப்போது மாதுளையை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போமா!!!

இதய ஆரோக்கியம் :-

மாதுளையில் இதயத்தைப் பாதுகாக்கும். பாலிஃபீனால்கள், டானின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருக்கிறது. இதனால் இதயத்திற்கு செல்லும் இரத்த நாளங்களில் கெட்ட கொழுப்புக்கள் படிந்து தடிப்புகள் ஏற்பட்டு, அடைப்புகள் ஏற்படுவது தடுக்கப்பட்டு, இதயம் மற்றும் மூளைக்கு இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதன் மூலம் இதய நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.

இரத்த அழுத்தம் :-

மாதுளை இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். இதில் உள்ள இயற்கையான ஆஸ்பிரின், இரத்தம் உறைவதை தடுப்பதோடு, இரத்தத்தின் அடர்த்தியைக் குறைத்து, உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

புற்றுநோயை தடுக்கிறது :-

மாதுளையை அடிக்கடி உட்கொண்டு வந்தால், அது உடலில் சரும செல்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதோடு, உடலில் தேவையற்ற புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், இரத்த வெள்ளையணுக்களை தூண்டி, கிருமிகள் மற்றும் டாக்ஸின்களை உடலில் இருந்து வெளியேற்றி, வலிமையான நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்குகிறது. முக்கியமாக ஆண்கள் இதனை குடித்து வந்தால், புரோஸ்டேட் புற்றநோய் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

வயிற்றை இதமாக்கும் :-

மாதுளை ஜூஸ் வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. அதிலும் 1 டம்ளர் மாதுளை ஜூஸில் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால், செரிமான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.
வலிமையான நோயெதிர்ப்பு மண்டலம் :-
மாதுளையில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் தன்மை அதிகம் இருப்பதால், அவற்றை சாப்பிடும் போது, உடலில் உள்ள பாக்டீரியா மற்றும் வைரஸ்களை எதிர்த்து அழித்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்குகிறது.

இரத்த சோகை :-

இரத்த சோகை உள்ளவர்கள், மாதுளையை அன்றாடம் உட்கொண்டு வந்தால் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரிக்கும். ஏனெனில் மாதுளையில் இரும்புச்சத்து அதிக அளவில் உள்ளது.

எடையைக் குறைக்கும் :-

மாதுளையில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் அதிகமாக இருப்பதால், இதனை உட்கொண்டு வந்தால், உடல் எடை கட்டுப்பாட்டுடன் இருப்பதோடு, நாள்பட்ட நோய்களின் தீவிரமும் குறையும்.

சரும ஆரோக்கியம் :-

மாதுளையை உணவில் அதிகம் சேர்ப்பதன் மூலம், இளமைத் தோற்றம் பாதுகாக்கப்படும். இதற்கு அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தான் காரணம்.

வாய் ஆரோக்கியம் :-

மாதுளையில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை, ஈறுகள் மற்றும் பற்களில் ஏற்படும் நோய்த்தொற்றுகளை எளிதில் எதிர்த்து போராடி, வாய் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது.

விந்தணு உற்பத்தி :-

மாதுளையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், விந்தணுவின் உற்பத்தியை அதிகரிக்கும். எலியின் மீது நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், மாதுளை ஜூஸ் விந்தணுவின் எண்ணிக்கை மற்றும் தரத்தை அதிகரிப்பதாக தெரிய வந்துள்ளது.
A user's photo.

வியாழன், 9 ஏப்ரல், 2015

உங்கள் மொபைல் அடிக்கடி Hang ஆகுதா ? அப்போ இதை படிங்க!

A user's photo. 
 
நாம் அனைவரும் இன்று அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் Android Osஐ நமது மொபைல்களில் உபயோகித்துக் கொண்டிருக்கிறோம் இதை நாம் அனைவரும் உபயோகிக்க காரணம் என்ன தெரியுமா
 

கூகிள் நிறுவனம் இதை இலவசமாக வெளியிட்டதாலதான் பல மொபைல் நிறுவனங்கள் இதனை தன்னுடைய மாடல்களில் உட்படுத்தி மிகவும் குறைந்த விலையில் உலகச் சந்தைகளில் விற்பனைக்கு கொண்டு வந்தார்கள் மிகக்குறைந்த விலை என்பதால் மக்களிடத்திலும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது
 

அது எல்லாம் சரி என்றாவது இதனை நீங்கள் சிந்தித்திருக்கிறீர்களா? கூகிள் ஏன் இப்பேர்பட்ட இயங்கு தளத்தை (O S)ஐ இலவசமாக வெளியிட வேண்டும்?
பதில் மிகவும் சுலபம்


அதில் நிறைய தவறுகள் இருக்கும் ஒரே காரணத்தினால்தான் அவைகளில் முதன்மை வகிப்பது Mobile Hanging . . . .

இதை சோதனை செய்து அதிலுள்ள அனைத்து தவறுகளையும் திருத்திய பின் இந்த Android Os இலவசமாக கிடைக்காது என்பதே யாரும் எதிர்ப்பார்த்திடாத உண்மை

அதற்காண சோதனையாளர்கள்தான் நாம் நம்மை வைத்து இவர்கள் இதனுடைய குறைகளை கண்டறிந்து அதை திறுத்தம் செய்வதற்காக பலபேர் கொண்ட குழுக்களை நியமித்திருக்கிறார்கள் அவர்கள் இதனுடைய குறைகளை திருத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்

ஆனாலும் இதை உபயோகிக்கும் நபர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிரார்கள் இந்த OS வேண்டாம் என்று விலகி இருந்த Nokiaவும் தற்பொழுது இதை பயன்படுத்த தொடங்கியிருக்கிறது ஏனென்றால் பல பல புதிய applicationகள் Android மொபைல்களுக்கு வந்து கொண்டே இருக்கின்றன
சரி நாம் வந்த விசயத்தை கவனிக்கலாம் நமது மொபைல்களில்Hang ஆவதை எப்படி சரி செய்வது ?

அதை முழுமையாக சரிசெய்ய முடியாது ஆனால் அதை நம்மால் கட்டுப்படுத்த முடியும் அதற்கான தீர்வுதான் இந்த பதிப்பு

நாம் மொபைல் வாங்கிய புதிதில் அது Hang ஆவதில்லை அதில் நாம் பல Applicationகளை நிறுவிய பின்னர்தான் அதனுடைய வேகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தடுமாற்றம் ஏற்படுகிறது அப்படியென்றால் Applicationகளை எல்லாம் அழித்து விடவேண்டுமா என்று நினைக்க வேண்டாம் அதை அழிப்பதினால் உங்களது போனின் வேகம் கூடப்போவது இல்லை அதனுடைய உபயோகத்தை நிறுத்த வேண்டும்

அதாவது சில பேர் எனது மொபைலில் நிரைய இடம் இல்லை ஆதலால் Applicationகளை Memory cardல்தான் வைத்துள்ளேன் இருந்தாலும் இடப்பற்றாக்குறை ஏற்படுகிறது என்ன செய்ய என கேட்பார்கள்
என்னதான் நாம் அனைத்து Applicationகளையும் மெமரி கார்டிற்க்கு Move செய்தாலும் அந்த Applicationனின் சில முக்கிய fileகள் மெமரி கார்டிற்க்கு மூவ் ஆவது இல்லை அது நமது போனிலேயே தங்கி விடுகிறது இதுதான் இந்த இடப்பற்றாக்குறைக்கு காரணம்

சில பேர் கேட்பீர்கள் அதாவது என்னுடைய போனில் நிரைய இடம் இருக்கிறது மெமரி கார்டிலும் அதிக இடம் இருக்கிறது ஆனாலும் மொபைல் Hang ஆகிறது அவர்கள் அனைவரும் இந்த படத்தை உற்று பாருங்கள்

இது Settings>app >running பகுதியில் Ram மெமரியின் உபயோக அளவு
இதுதான் நாம் இப்பொழுது கவனிக்க வேண்டியது

நமது போன் வேகமாக இயங்க போன் மெமரியோ external memoryயோ freeஆக இருப்பதால் கிடையாது முழுக்க முழுக்க Ram மெமரியின்அளவில் அதிக இடம் இருக்க வேண்டும்

நீங்கள் உங்களது போனில் Settings>app >running என்ற பகுதிக்கு செல்லுங்கள் அங்கு உங்கள் அனுமதி இல்லாமல் இயங்க கூடிய அனைத்து
Applicationகளையும் Force Stop கொடுத்து நிறுத்தி விடுங்கள் நாம் அவ்வாறு செய்வதினால் மட்டுமே Ram memoryன் அளவை அதிகரிக்கச் செய்ய முடியும் ,இப்பொழுது போனின் ram memoryன் அளவை பாருங்கள் எவ்வளவு இடம் Freeயாக உள்ளது என்று சரி இதை செய்து முடித்ததும் அடுத்து நாம் செய்ய வேண்டியது அதில் குறிப்பிட்டிருக்கும் data அது அனைத்து Applicationகளிலும் நம் உபயோகத்தை பொருத்து இருக்கும் அதை ஒரு முறை clear செய்து விடுங்கள் பிறகு நமது போனில் இருக்கும் 3D மற்றும் ANIMATION WALLPAPERகளை நிறுத்தி விடுங்கள் HOME SCREEN இருக்கும் அதிக APPLICATION SHORTCUT களை அழித்து விடுங்கள்  history, call logs, messages போன்றவற்றை அதிகம் மொபைலில் தேக்கி வைக்காதீர்கள்

 மேற்கண்ட அனைத்தையும் நீங்கள் கடைபிடிப்பதினால் உங்களது போன் வேகமாக இயங்குவதை உங்களால் உணர முடியும்.

COMPUTER என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா?

alt



நாம் எத்தனையோ ஆண்டுகளாக COMPUTER பயன்படுத்தி வருகிறோம்.  ஆனால் இன்னும் சிலருக்கு COMPUTER 'ன் முழு பெயர் தெரியவில்லை.  அவர்களுக்காக இதை எழுதுகிறேன்.


C  - Common
O  - Oriented
M  - Machine
P  - Particularly
U  - Used for
T  - Trade
E  - Education and
R  - Research


COMPUTER - Common Oriented Machine Particularly Used for Trade Education and Research

Plz Read: www.masinfom.blogspot.com

கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்?


alt 

கம்ப்யூட்டர் கிராஷ் ஆகி நீல வண்ணத்தில் திரை மாறிவிடும். அல்லது அப்படியே திரைக் காட்சி முடங்கிப் போய்விடும்.
சில வேளைகளில் திரையில Fatal error: the system has become unstable or is busy,” it says. “Enter to return to Windows or press ControlAltDelete to restart your computer. If you do this you will lose any unsaved information in all open applications.” என்ற செய்தி கிடைக்கும்.
இதைத்தான் Blue Screen of Death என்று கம்ப்யூட்டர் மொழியில் சொல்வார்கள். ஏன் இவ்வாறு ஏற்படுகிறது என்று இங்கு காணலாம்.
ஹார்ட்வேர் பிரச்னை
கம்ப்யூட்டரில் பல பாகங்கள் ஒன்றிணைந்து இயங்குகின்றன. சில வேளைகளில் இவற்றுக்குள் பிரச்னை வந்தால் இயங்குவது நின்று போகும். ஒவ்வொரு சாதனமும் ஒரு வழியை மேற்கொண்டு அதன் மூலம் தன் இயக்கத்தை மேற்கொள்ளும். பொதுவாக ஒரு கம்ப்யூட்டரில் இத்தகைய வழிகள் குறைந்த பட்சம் 16 இருக்கும். இதில் ஒரே வழியை இரு சாதனங்கள் (பிரிண்டர், கீ போர்டு / மவுஸ்) எடுத்துக் கொள்ளும்போது இயக்கம் நின்று போகும். இவ்வாறு ஏற்படுகையில் Start => Settings => Control pannel => System => Device Manager எனச் சென்று பார்த்தால், பிரச்னை ஏற்பட்ட சாதனத்தின் பெயர் முன்னால் ஒரு மஞ்சள் நிற ஆச்சரியக் குறி தோன்றும். டிவைஸ் மேனேஜரில், கம்ப்யூட்டர் என்பதில் கிளிக் செய்து பார்த்தால், இந்த சேனல் வழிகளுக்கான ஐ.ஆர்.க்யூ எண் காட்டப்படும். ஒரே எண் இருமுறை இருப்பின் பிரச்னை அங்குதான் உள்ளது என்று பொருள். இதற்குத் தீர்வு என்ன? பிரச்னைக்குரிய சாதனத்தை அன் இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்தால் போதும்.
ரம் மெமரி சிப்ஸ்
ராம் மெமரியை உயர்த்துவதற்காகப் புதிய ராம் சிப் ஒன்றை இணைத்திருப்போம். ஆனால் ஒன்றுக்கொன்று வேறுபாடான வேகம் உள்ளவையாக அவை இருக்கலாம். அவற்றிற்கிடையே இணைந்து செல்லும் நிலை ஏற்படாத போது Fatal Exception Error ஏற்படலாம். இதனை கம்ப்யூட்டர் பாகங்களின் இயக்கம் தெரிந்தவர்கள் மூலம், பயாஸ் செட்டிங்ஸ் திறந்து, ராம் wait state நிலையைச் சற்று உயர்த்தலாம். அல்லது ஒரே மாதிரியான வேகத்தில் இயங்கும் சிப்களை அமைக்கலாம்.
ஹார்ட் டிஸ்க் டிரைவ்
பயன்படுத்தத் தொடங்கிய சில வாரங்களில் ஹார்ட் டிஸ்க்கின் ஒழுங்கு நிலை கலையத் தொடங்கும். தேவையற்ற தற்காலிக பைல்கள் தேங்கும். பைல்கள் சிதறியபடி சேமிக்கப்படும். இதனால் இயக்க வேகத்திற்கு ஹார்ட் டிஸ்க் இணையாக இயங்க முடியாமல் போகும். அப்போது கிராஷ் ஆக வாய்ப்புண்டு. எனவே அடிக்கடி ஹார்ட் டிஸ்க்கினைச் சுத்தப்படுத்த வேண்டும். இதற்கு டிபிராக் செய்திட வேண்டும். சி டிரைவில் தங்கும் தேவையற்ற பைல்களை அதற்கான புரோகிராம்கள் கொண்டு நீக்கலாம்.
வீடியோ கார்ட்
சில வேளைகளில் கிராஷ் ஆகும் போது Fatal OE exceptions and VXD errors என்ற செய்தி கிடைக்கும். இது வீடியோ கார்டினால் ஏற்படுவது. இதனைத் தவிர்க்க வீடியோ டிஸ்பிளேயின் ரெசல்யூசனைக் குறைக்கவும். StartSettingsControl PanelDisplaySettings எனச் சென்று ஸ்கிரீன் ஏரியா பாரினை இடது மூலையில் நிறுத்தவும். அதே போல கலர் செட்டிங்ஸ் சென்று 16 பிட் என்ற அளவில் அமைக்கவும்.
வைரஸ்
பெரும்பாலான கம்ப்யூட்டர் கிராஷ்களுக்கு வைரஸ்களே காரணம். சரியான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை நிறுவி, அவ்வப்போது அதனை அப்டேட் செய்வது மட்டுமே இதனைத் தடுக்கும். பல வைரஸ்கள் பூட் செக்டாரைக் கெடுத்து வைக்கும். இதனால் கம்ப்யூட்டரை இயக்கவே முடியாது. எனவே இது போன்ற நிலையில் கை கொடுக்க விண்டோஸ் ஸ்டார்ட் அப் டிஸ்க் ஒன்றை உருவாக்கி கைவசம் வைத்துக் கொள்ளுங்கள்.
பிரிண்டர்
பல வேளைகளில் கம்ப்யூட்டர்கள் பிரிண்ட் எடுக்கையில் கிராஷ் ஆவதை நீங்கள் கவனித்திருக்கலாம். இதற்குக் காரணம் பிரிண்டர்களில் மிகவும் குறைந்த அளவில் பபர் மெமரி இருப்பதே ஆகும். மேலும் கம்ப்யூட்டரின் சிபியு சக்தியை பிரிண்டர்கள் சற்று அதிகமாகவே பயன்படுத்தும். எனவே பல வேலைகளுடன் பிரிண்டிங் வேலையை மேற்கொள்கையில், அல்லது அதிகமான அளவில் பிரிண்டருக்கு டேட்டாவினை அனுப்புகையில் கிராஷ் ஏற்படும். நாம் சாதாரணமாகக் காணாத கேரக்டர்களை பிரிண்டர் அச்சிட்டால் இந்த பிரச்னை தலை தூக்குகிறது என்று பொருள். உடனே பிரிண்டருக்குச் செல்லும் மின்சாரத்தை 10 விநாடிகளுக்கு நிறுத்திப் பின் மீண்டும் இயக்கவும்.
சாப்ட்வேர்
முழுமையாக இல்லாமல் அல்லது மோசமாக இன்ஸ்டால் செய்யப்பட்ட சாப்ட்வேர் தொகுப்புகளால், கம்ப்யூட்டர் கிராஷ் ஆகலாம். இவற்றைச் சரியாக அன் இன்ஸ்டால் செய்திட வேண்டும். இல்லையேல் இவை தொடர்பான வரிகள், ரெஜிஸ்ட்ரியில் இருந்து கொண்டு, இந்த சாப்ட்வேரினை இயக்குகையில் கம்ப்யூட்டரை கிராஷ் ஆகும் நிலைக்குக் கொண்டுவரலாம். ரெஜிஸ்ட்ரியைச் சுத்தம் செய்திடவென வடிவமைக்கப்பட்ட புரோகிராம்களைக் கொண்டு அதனைச் சரி செய்திட வேண்டும். இல்லையேல் மீண்டும் விண்டோஸ் இயக்கத்தினை இன்ஸ்டால் செய்திட வேண்டியதிருக்கும்.
அதிக வெப்பம்
இப்போது வருகின்ற சிபியுக்கள் மீது சிறிய மின் விசிறிகள் பொருத்தப்பட்டு சிபியு இயக்கத்தின் போது உருவாகும் வெப்பம் வெளிக்கடத்தப் படுகிறது. சிபியு அதிக சூடானாலும், அதிக குளிர்ச்சியினால் பாதிக்கப்பட்டாலும், கெர்னல் எர்ரர் (Kernel Error) என்று ஒரு பிரச்னை ஏற்படும். பொதுவாக எந்த வேகத்தில் ஒரு சிபியு இயங்க வேண்டுமோ அதனைக் காட்டிலும் அதிக வேகத்தில் இயங்கும் வகையில், சிபியு செட் செய்யப்பட்டிருந்தாலும் அதிக வெப்ப பிரச்னை ஏற்படும். எனவே சிபியு வின் வேகத்தினை பயாஸ் செட்டிங்ஸ் சென்று குறைக்க வேண்டும்.
மின் ஓட்டம்
கம்ப்யூட்டருக்குச் செல்லும் மின் ஓட்டத்தினைச் சீராகத் தரும் சாதனங்களைக் கொண்டு தராவிட்டால், கிராஷ் ஆகும் வாய்ப்புகள் அதிகம் உண்டு

ஞாயிறு, 5 ஏப்ரல், 2015

www.masinfom.blogspot.in

Tech Info in English Pleas visit this Page:

http://www.masinfom.blogspot.in/
அதிவேகமாக காப்பி செய்யும் சாப்வேர்கள் நாம் பெரும்பாலான கோப்புகளை நகலெடுக்கவும், ஒட்டவும், சில குறுக்கு வழிகளை பயன்படுத்துவோம். அல்லது சுட்டியை பயன்படுத்தி இழுத்து விடுவோம். இப்படி செய்யும் போது ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் கோப்பின் அளவு பெரியதாக இருந்தாலோ அல்லது வைரஸ் ஏதேனும் இருந்தாலோ இதில் பிரச்சனை ஏற்பட்டு காப்பி செய்யப்படுவது பாதியில் நின்று விடும். நமக்கு தேவையான பைல்களை காப்பி செய்ய இயலாமல் போகும் நிலை நமக்கு ஏற்பட்டு விடும். இது போன்ற நிலைக்கு இணையத்தில் சில மென்பொருள் இலவசமாக கிடைக்கின்றன. அதனை பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 1. காப்பி ஹெண்டிலர் 1.3 இது இணையத்தில் கிடைக்கும் ஒரு இலவச மென்பொருள். இதன் மூலம் காப்பி செய்யப்படும் சாதாரண கோப்புகளானது 154 வினாடி வீதமும் ஐ.எஸ்.ஒ போன்ற கோப்புகளை 141 வினாடிகளுக்குள்ளும், ஒரு கணிணியில் இருந்து மற்றொரு கணிணிக்கு கோப்புகளை காப்பி செய்யப்படும் போது 98 வினாடிகுள்ளும் அனைத்து பைல்களை எந்த ஒரு தவறு இல்லாமல் காப்பி செய்துவிடுகின்றது. Copy Handler மேலும் காப்பி செய்யும் போது நிறுத்தி கொள்ளவும், தவறு ஏற்படின் மீண்டும் முதலில் இருந்து காப்பி செய்யம் இதில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும் 2. எக்ஸ் டீரிம் காப்பி 2.1.0 இது இரண்டு விதமாக இணைத்தில் கிடைக்கின்றது. இலவசமாகவும் இதன் சீரியல் நெம்பரை பயன்படுத்தி முழு வெர்சன்களாகவும் பயன்படுத்தி கொள்ளுமாறு இணையத்தில் கிடைக்கின்றது. இதன் மூலம் காப்பி செய்யப்படும் சாதாரண கோப்புகள் மற்றும் இமேஜ் போன்ற பைல்களையும் காப்பி செய்கின்றது. அனைத்து பைல்களை எந்த ஒரு தவறு இல்லாமல் காப்பி செய்துவிடுகின்றது. காப்பி செய்யப்படும் போது பாஸ் காப்பி மற்றும் கேன்சல் போன்ற ஆப்சென்கள் மட்டும் வருகிற்து. ExtremeCopy மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும் 3. பாஸ்ட் காப்பி 2.11 காப்பி செய்யப்படும் மென்பொருள்களில் இணையத்தில் அதிகமான மக்களால் பரிந்துரை செய்யப்பட்ட மென்பொருள் இது. காப்பி செய்யப்படும் வேகத்தின் அளவை அதிகரிக்க பல்வேறு மெனுக்கள் இதில் தரப்பட்டுள்ளது. சாதாரண கோப்புகளானது 1: 110 வினாடி வீதமும் ஐ.எஸ்.ஒ போன்ற கோப்புகளை 1 : 86 வினாடி, ஒரு கணிணியில் இருந்து மற்றொரு கணிணிக்கு கோப்புகளை காப்பி செய்யப்படும் போது 1: 79 வினாடிக்கு அனைத்து பைல்களை எந்த ஒரு தவறு இல்லாமல் காப்பி செய்துவிடுகின்றது. தவறு ஏற்படின் மீண்டும் முதலில் இருந்து காப்பி செய்யம் இதில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும் FastCopy 4. எப் எப் காப்பி 1.0 இது இணையத்தில் கிடைக்கும் இலவச மென்பொருள். மற்றபடி மேலே குறிப்பிட்ட படி மென்பொருள்களின் போல தான் இதுவும் வேலை செய்கின்றது. சாதாரண கோப்புகளை 1: 163 வினாடி வீதமும் ஐ.எஸ்.ஒ போன்ற கோப்புகளை 1 : 86 வினாடிக்குள்ளும் காப்பி செய்கின்றது., ஒரு கணிணியில் இருந்து மற்றொரு கணிணிக்கு கோப்புகளை காப்பி செய்யும் போது மட்டும் இதில் தவறு அடிக்கடி ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும் FF Copy காப்பி / பேஸ்ட் செய்ய . மொத்தம் 16 மென்பொருள்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Copy and WIN : http://ow.ly/KNICZ
அதிவேகமாக காப்பி செய்யும் சாப்வேர்கள் நாம் பெரும்பாலான கோப்புகளை நகலெடுக்கவும், ஒட்டவும், சில குறுக்கு வழிகளை பயன்படுத்துவோம். அல்லது சுட்டியை பயன்படுத்தி இழுத்து விடுவோம். இப்படி செய்யும் போது ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் கோப்பின் அளவு பெரியதாக இருந்தாலோ அல்லது வைரஸ் ஏதேனும் இருந்தாலோ இதில் பிரச்சனை ஏற்பட்டு காப்பி செய்யப்படுவது பாதியில் நின்று விடும். நமக்கு தேவையான பைல்களை காப்பி செய்ய இயலாமல் போகும் நிலை நமக்கு ஏற்பட்டு விடும். இது போன்ற நிலைக்கு இணையத்தில் சில மென்பொருள் இலவசமாக கிடைக்கின்றன. அதனை பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 1. காப்பி ஹெண்டிலர் 1.3 இது இணையத்தில் கிடைக்கும் ஒரு இலவச மென்பொருள். இதன் மூலம் காப்பி செய்யப்படும் சாதாரண கோப்புகளானது 154 வினாடி வீதமும் ஐ.எஸ்.ஒ போன்ற கோப்புகளை 141 வினாடிகளுக்குள்ளும், ஒரு கணிணியில் இருந்து மற்றொரு கணிணிக்கு கோப்புகளை காப்பி செய்யப்படும் போது 98 வினாடிகுள்ளும் அனைத்து பைல்களை எந்த ஒரு தவறு இல்லாமல் காப்பி செய்துவிடுகின்றது. Copy Handler மேலும் காப்பி செய்யும் போது நிறுத்தி கொள்ளவும், தவறு ஏற்படின் மீண்டும் முதலில் இருந்து காப்பி செய்யம் இதில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும் 2. எக்ஸ் டீரிம் காப்பி 2.1.0 இது இரண்டு விதமாக இணைத்தில் கிடைக்கின்றது. இலவசமாகவும் இதன் சீரியல் நெம்பரை பயன்படுத்தி முழு வெர்சன்களாகவும் பயன்படுத்தி கொள்ளுமாறு இணையத்தில் கிடைக்கின்றது. இதன் மூலம் காப்பி செய்யப்படும் சாதாரண கோப்புகள் மற்றும் இமேஜ் போன்ற பைல்களையும் காப்பி செய்கின்றது. அனைத்து பைல்களை எந்த ஒரு தவறு இல்லாமல் காப்பி செய்துவிடுகின்றது. காப்பி செய்யப்படும் போது பாஸ் காப்பி மற்றும் கேன்சல் போன்ற ஆப்சென்கள் மட்டும் வருகிற்து. ExtremeCopy மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும் 3. பாஸ்ட் காப்பி 2.11 காப்பி செய்யப்படும் மென்பொருள்களில் இணையத்தில் அதிகமான மக்களால் பரிந்துரை செய்யப்பட்ட மென்பொருள் இது. காப்பி செய்யப்படும் வேகத்தின் அளவை அதிகரிக்க பல்வேறு மெனுக்கள் இதில் தரப்பட்டுள்ளது. சாதாரண கோப்புகளானது 1: 110 வினாடி வீதமும் ஐ.எஸ்.ஒ போன்ற கோப்புகளை 1 : 86 வினாடி, ஒரு கணிணியில் இருந்து மற்றொரு கணிணிக்கு கோப்புகளை காப்பி செய்யப்படும் போது 1: 79 வினாடிக்கு அனைத்து பைல்களை எந்த ஒரு தவறு இல்லாமல் காப்பி செய்துவிடுகின்றது. தவறு ஏற்படின் மீண்டும் முதலில் இருந்து காப்பி செய்யம் இதில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும் FastCopy 4. எப் எப் காப்பி 1.0 இது இணையத்தில் கிடைக்கும் இலவச மென்பொருள். மற்றபடி மேலே குறிப்பிட்ட படி மென்பொருள்களின் போல தான் இதுவும் வேலை செய்கின்றது. சாதாரண கோப்புகளை 1: 163 வினாடி வீதமும் ஐ.எஸ்.ஒ போன்ற கோப்புகளை 1 : 86 வினாடிக்குள்ளும் காப்பி செய்கின்றது., ஒரு கணிணியில் இருந்து மற்றொரு கணிணிக்கு கோப்புகளை காப்பி செய்யும் போது மட்டும் இதில் தவறு அடிக்கடி ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும் FF Copy காப்பி / பேஸ்ட் செய்ய . மொத்தம் 16 மென்பொருள்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Copy and WIN : http://ow.ly/KNICZ
அதிவேகமாக காப்பி செய்யும் சாப்வேர்கள் நாம் பெரும்பாலான கோப்புகளை நகலெடுக்கவும், ஒட்டவும், சில குறுக்கு வழிகளை பயன்படுத்துவோம். அல்லது சுட்டியை பயன்படுத்தி இழுத்து விடுவோம். இப்படி செய்யும் போது ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் கோப்பின் அளவு பெரியதாக இருந்தாலோ அல்லது வைரஸ் ஏதேனும் இருந்தாலோ இதில் பிரச்சனை ஏற்பட்டு காப்பி செய்யப்படுவது பாதியில் நின்று விடும். நமக்கு தேவையான பைல்களை காப்பி செய்ய இயலாமல் போகும் நிலை நமக்கு ஏற்பட்டு விடும். இது போன்ற நிலைக்கு இணையத்தில் சில மென்பொருள் இலவசமாக கிடைக்கின்றன. அதனை பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 1. காப்பி ஹெண்டிலர் 1.3 இது இணையத்தில் கிடைக்கும் ஒரு இலவச மென்பொருள். இதன் மூலம் காப்பி செய்யப்படும் சாதாரண கோப்புகளானது 154 வினாடி வீதமும் ஐ.எஸ்.ஒ போன்ற கோப்புகளை 141 வினாடிகளுக்குள்ளும், ஒரு கணிணியில் இருந்து மற்றொரு கணிணிக்கு கோப்புகளை காப்பி செய்யப்படும் போது 98 வினாடிகுள்ளும் அனைத்து பைல்களை எந்த ஒரு தவறு இல்லாமல் காப்பி செய்துவிடுகின்றது. Copy Handler மேலும் காப்பி செய்யும் போது நிறுத்தி கொள்ளவும், தவறு ஏற்படின் மீண்டும் முதலில் இருந்து காப்பி செய்யம் இதில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும் 2. எக்ஸ் டீரிம் காப்பி 2.1.0 இது இரண்டு விதமாக இணைத்தில் கிடைக்கின்றது. இலவசமாகவும் இதன் சீரியல் நெம்பரை பயன்படுத்தி முழு வெர்சன்களாகவும் பயன்படுத்தி கொள்ளுமாறு இணையத்தில் கிடைக்கின்றது. இதன் மூலம் காப்பி செய்யப்படும் சாதாரண கோப்புகள் மற்றும் இமேஜ் போன்ற பைல்களையும் காப்பி செய்கின்றது. அனைத்து பைல்களை எந்த ஒரு தவறு இல்லாமல் காப்பி செய்துவிடுகின்றது. காப்பி செய்யப்படும் போது பாஸ் காப்பி மற்றும் கேன்சல் போன்ற ஆப்சென்கள் மட்டும் வருகிற்து. ExtremeCopy மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும் 3. பாஸ்ட் காப்பி 2.11 காப்பி செய்யப்படும் மென்பொருள்களில் இணையத்தில் அதிகமான மக்களால் பரிந்துரை செய்யப்பட்ட மென்பொருள் இது. காப்பி செய்யப்படும் வேகத்தின் அளவை அதிகரிக்க பல்வேறு மெனுக்கள் இதில் தரப்பட்டுள்ளது. சாதாரண கோப்புகளானது 1: 110 வினாடி வீதமும் ஐ.எஸ்.ஒ போன்ற கோப்புகளை 1 : 86 வினாடி, ஒரு கணிணியில் இருந்து மற்றொரு கணிணிக்கு கோப்புகளை காப்பி செய்யப்படும் போது 1: 79 வினாடிக்கு அனைத்து பைல்களை எந்த ஒரு தவறு இல்லாமல் காப்பி செய்துவிடுகின்றது. தவறு ஏற்படின் மீண்டும் முதலில் இருந்து காப்பி செய்யம் இதில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும் FastCopy 4. எப் எப் காப்பி 1.0 இது இணையத்தில் கிடைக்கும் இலவச மென்பொருள். மற்றபடி மேலே குறிப்பிட்ட படி மென்பொருள்களின் போல தான் இதுவும் வேலை செய்கின்றது. சாதாரண கோப்புகளை 1: 163 வினாடி வீதமும் ஐ.எஸ்.ஒ போன்ற கோப்புகளை 1 : 86 வினாடிக்குள்ளும் காப்பி செய்கின்றது., ஒரு கணிணியில் இருந்து மற்றொரு கணிணிக்கு கோப்புகளை காப்பி செய்யும் போது மட்டும் இதில் தவறு அடிக்கடி ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும் FF Copy காப்பி / பேஸ்ட் செய்ய . மொத்தம் 16 மென்பொருள்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Copy and WIN : http://ow.ly/KNICZ
அதிவேகமாக காப்பி செய்யும் சாப்வேர்கள் நாம் பெரும்பாலான கோப்புகளை நகலெடுக்கவும், ஒட்டவும், சில குறுக்கு வழிகளை பயன்படுத்துவோம். அல்லது சுட்டியை பயன்படுத்தி இழுத்து விடுவோம். இப்படி செய்யும் போது ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் கோப்பின் அளவு பெரியதாக இருந்தாலோ அல்லது வைரஸ் ஏதேனும் இருந்தாலோ இதில் பிரச்சனை ஏற்பட்டு காப்பி செய்யப்படுவது பாதியில் நின்று விடும். நமக்கு தேவையான பைல்களை காப்பி செய்ய இயலாமல் போகும் நிலை நமக்கு ஏற்பட்டு விடும். இது போன்ற நிலைக்கு இணையத்தில் சில மென்பொருள் இலவசமாக கிடைக்கின்றன. அதனை பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 1. காப்பி ஹெண்டிலர் 1.3 இது இணையத்தில் கிடைக்கும் ஒரு இலவச மென்பொருள். இதன் மூலம் காப்பி செய்யப்படும் சாதாரண கோப்புகளானது 154 வினாடி வீதமும் ஐ.எஸ்.ஒ போன்ற கோப்புகளை 141 வினாடிகளுக்குள்ளும், ஒரு கணிணியில் இருந்து மற்றொரு கணிணிக்கு கோப்புகளை காப்பி செய்யப்படும் போது 98 வினாடிகுள்ளும் அனைத்து பைல்களை எந்த ஒரு தவறு இல்லாமல் காப்பி செய்துவிடுகின்றது. Copy Handler மேலும் காப்பி செய்யும் போது நிறுத்தி கொள்ளவும், தவறு ஏற்படின் மீண்டும் முதலில் இருந்து காப்பி செய்யம் இதில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும் 2. எக்ஸ் டீரிம் காப்பி 2.1.0 இது இரண்டு விதமாக இணைத்தில் கிடைக்கின்றது. இலவசமாகவும் இதன் சீரியல் நெம்பரை பயன்படுத்தி முழு வெர்சன்களாகவும் பயன்படுத்தி கொள்ளுமாறு இணையத்தில் கிடைக்கின்றது. இதன் மூலம் காப்பி செய்யப்படும் சாதாரண கோப்புகள் மற்றும் இமேஜ் போன்ற பைல்களையும் காப்பி செய்கின்றது. அனைத்து பைல்களை எந்த ஒரு தவறு இல்லாமல் காப்பி செய்துவிடுகின்றது. காப்பி செய்யப்படும் போது பாஸ் காப்பி மற்றும் கேன்சல் போன்ற ஆப்சென்கள் மட்டும் வருகிற்து. ExtremeCopy மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும் 3. பாஸ்ட் காப்பி 2.11 காப்பி செய்யப்படும் மென்பொருள்களில் இணையத்தில் அதிகமான மக்களால் பரிந்துரை செய்யப்பட்ட மென்பொருள் இது. காப்பி செய்யப்படும் வேகத்தின் அளவை அதிகரிக்க பல்வேறு மெனுக்கள் இதில் தரப்பட்டுள்ளது. சாதாரண கோப்புகளானது 1: 110 வினாடி வீதமும் ஐ.எஸ்.ஒ போன்ற கோப்புகளை 1 : 86 வினாடி, ஒரு கணிணியில் இருந்து மற்றொரு கணிணிக்கு கோப்புகளை காப்பி செய்யப்படும் போது 1: 79 வினாடிக்கு அனைத்து பைல்களை எந்த ஒரு தவறு இல்லாமல் காப்பி செய்துவிடுகின்றது. தவறு ஏற்படின் மீண்டும் முதலில் இருந்து காப்பி செய்யம் இதில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும் FastCopy 4. எப் எப் காப்பி 1.0 இது இணையத்தில் கிடைக்கும் இலவச மென்பொருள். மற்றபடி மேலே குறிப்பிட்ட படி மென்பொருள்களின் போல தான் இதுவும் வேலை செய்கின்றது. சாதாரண கோப்புகளை 1: 163 வினாடி வீதமும் ஐ.எஸ்.ஒ போன்ற கோப்புகளை 1 : 86 வினாடிக்குள்ளும் காப்பி செய்கின்றது., ஒரு கணிணியில் இருந்து மற்றொரு கணிணிக்கு கோப்புகளை காப்பி செய்யும் போது மட்டும் இதில் தவறு அடிக்கடி ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும் FF Copy காப்பி / பேஸ்ட் செய்ய . மொத்தம் 16 மென்பொருள்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Copy and WIN : http://ow.ly/KNICZ

கம்ப்யூட்டரை முறையாக இயக்கி உலக வெப்பமயம் ஆவதைத் தடுப்போம் | Computer Maintenance Methods in Tamil

இன்றைய சுற்றுப் புறச் சூழல் ஆய்வாளர்கள் அனைவரும் உலக வெப்பமயமாவதைத் தடுக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர். இதில் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களும் ஆற்ற வேண்டிய கடமை உள்ளது. இது குறித்து ஆய்வு செய்த டப்ட்ஸ் (Tufts) பல்கலைக் கழகம், சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. இவற்றைப் பின்பற்றுவதால், ஏற்கனவே நாம் புவி வெப்பமயமாதலில் ஏற்படுத்திய அழிவைச் சரி செய்ய முடியாது என்றாலும், சீதோஷ்ண நிலை மாறிவருவதனை ஓரளவிற்குத் தடுக்கலாம்.
15 நிமிடங்கள் அல்லது அதற்கும் மேலாக (உணவு சாப்பிடுதல், வெகுநேரம் தொலைபேசியில் பேசுதல், மேலதிகாரி அறைக்கு வேலை நிமித்தம் செல்லுதல் போன்றவைகளுக்காக) கம்ப்யூட்டரைப் பயன்படுத்தப் போவதில்லை என்றால், மானிட்டரை ஆப் செய்துவிடுங்கள்.

ஒரு மணி நேரத்திற்கு மேல் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தப் போவதில்லை என்றால், கம்ப்யூட்டரை நிறுத்திவிடுங்கள். இது காப்பி எடுக்கும் சாதனம், பிரிண்டர், ஸ்கேனர் மற்றும் பேக்ஸ் சாதனங்களுக்கும் பொருந்தும். கம்ப்யூட்டர் ஒன்றை 24 மணி நேரம் தொடர்ந்து இயக்குவதால், ஓராண்டில் அது 1,500 பவுண்ட் கார்பன் டை ஆக்ஸைடை வெளியே அனுப்புகிறது. மரம் ஒன்று ஒவ்வொரு ஆண்டும் 3 முதல் 15 பவுண்ட் கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சுகிறது. அப்படியானால், ஒரு கம்ப்யூட்டர் விடும் கெட்ட காற்றை நீக்கிச் சுத்தப்படுத்த 100 முதல் 500 மரங்கள் வரை தேவையாயிருக்கும்.
நீங்கள் புது கம்ப்யூட்டர் வாங்குவதாக இருந்தால், லேப்டாப் கம்ப்யூட்டரை வாங்குங்கள். லேப்டாப், டெஸ்க்டாப் கம்ப்யூட்டரைக் காட்டிலும் கால் பங்கு மின்சக்தியே பயன்படுத்துகிறது. மானிட்டர் வாங்குவதாக இருந்தால், எல்.சி.டி. மானிட்டர்களையே வாங்கவும். அவை சி.ஆர்.டி. மானிட்டரைக் காட்டிலும் மூன்றில் ஒரு பங்கு சக்தியையே பயன்படுத்துகின்றன.
உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பவர் மேனேஜ்மெண்ட் வசதியை அவசியம் பயன்படுத்தவும். கம்ப்யூட்டரை ஸ்டேன்ட் பை மோடில் வைத்திட வேண்டாம்.ஏனென்றால் அந்நிலையிலும், மின்சக்தியை கம்ப்யூட்டர் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கும். ஸ்விட்ச் ஆப் செய்தால் தான் இது முற்றிலும் நிறுத்தப்படும்.
மானிட்டரை ஆப் செய்து, பின் மீண்டும் அதனை இயக்குவது சிலருக்கு வரக்கூடிய பழக்கமாக இருக்காது. இவர்களுக்கு உதவிட ஒரு சிறிய அப்ளிகேஷன் புரோகிராம் உள்ளது. இதனை இன்ஸ்டால் செய்து, செட் செய்திட வேண்டிய தில்லை. ஜஸ்ட், டவுண்லோட் செய்து இயக்கினால் போதும். இந்த புரோகிராமின் பெயர் MonitorES(Monitor Energy Saver). இதனை  
1.
https://code.google.com/p/monitores/downloads/detail?name=MonitorESLite.exeஎன்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாகப் பெறலாம்.
2.
https://github.com/ukanth/monitores
இது தானாக மானிட்ட ரை ஆப் செய்கிறது; மீடியா புரோகிராம்கள் பயன்படுத்தவில்லை என்றால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறது. இன்ஸ்டண்ட் மெசஞ்சரையும் பயன் படுத்தாவிட்டால், தற்காலிக செய்தி அனுப்பி நிறுத்தி வைக்கிறது; பெரிய அளவில் ஏற்படும் ஒலியை நிறுத்துகிறது. நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து எழுந்து நகர்ந்து, ஆனால் கம்ப்யூட்டர் அருகிலேயே இருந்தால், மானிட்டரை கண்ட்ரோல் + எப்2 அழுத்தி ஆப் செய்துவிடலாம். பின் மீண்டும் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்க்கத் தொடங்குகையில், ஏதாவது ஒரு கீயை அழுத்தினால் போதும்.
இதே போல Green Monitor என்றும் ஒரு அப்ளிகேஷன்
 http://greenutils.com/ Site/GreenUtils.html என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து கிடைக்கிறது. இதனையும் டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்.
நாம் இந்த கம்ப்யூட்டர் மானிட்டரை நிறுத்தியா, உலகம் வெப்பமயமாவது தடைபடப் போகிறது என்று எண்ண வேண்டாம். சிறுதுளி பெருவெள்ளம். எனவே உங்கள் பங்கையும் அளியுங்கள். மற்றவர்களையும் இந்த வழியைப் பின்பற்றுமாறு தூண்டுங்கள்.

இலவச டவுண்லோட் புரோகிராம்கள் - free download programs

இன்டர்நெட் பயன்பாடும் தகவல் பரிமாற்றமும் பெருகி வரும் இந்நாளில் எளிதான வேகமான டவுண்லோட் செய்திடும் புரோகிராம்களின் தேவையும் அதிகரித்து வருகிறது. இன்டர்நெட் இணைப்பு வழங்கும் வேகத்தைப் பயன்படுத்தி நாம் டவுண்லோட் செய்திடும் பைல்களை எந்த சிக்கலுமின்றி வேகமாக இறக்கித் தர நமக்கு டவுண்லோட் மேனேஜர் புரோகிராம்கள் தேவைப்படுகின்றன. 

அவ்வகையில் இணையத்தில் பல இலவச புரோகிராம்கள் நமக்கு கிடைக்கின்றன. பயர்பாக்ஸ் தொகுப்புடன் இத்தகைய வசதி இணைந்தே இருந்தாலும் டவுண்லோட் மேனேஜர் புரோகிராம்கள் தரும் பல வசதிகள் அதில் இல்லை. ஒரே பைலுக்கான பல டவுண்லோட் இøணைப்புகள், பிரிவு பிரிவாக டவுண்லோட் செய்திடும் வசதி, பல பைல்களை ஒரே முறை கிளிக் செய்து டவுண்லோட் செய்திடும் வசதி போன்ற பல வசதிகளை இந்த டவுண்லோட் மேனேஜர்கள் தருகின்றன. பொதுவாக இந்த கூடுதல் வசதிகள் எல்லாம் இத்தகைய புரோகிராம்களில் கட்டணம் செலுத்திப் பெறும் பதிப்புகளில் மட்டுமே கிடைக்கும். ஆனால் இலவச புரோகிராம்கள் அதிகமான எண்ணிக்கையில் உருவாக்கப்பட்டு கிடைக் கும் இந்நாளில் மேல் குறிப்பிட்ட வசதிகள் இலவசமாகக் கிடைக்கும் புரோகிராம்களிலேயே தரப்பட் டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு சில டவுண்லோட் மேனேஜர்களில் அதிகமான எண்ணிக்கையில் இந்த வசதிகள் தரப்பட்டிருப்பது இன்னும் சிறப்பாகும். அவற்றில் மிகச் சிறந்த
மூன்று டவுண்லோட் மேனேஜர் புரோகிராம்கள் குறித்து இங்கு தகவல்கள் தரப்படுகின்றன.

Free Download Manager
1. புரோகிராம் பெயர் : FreeDownload Manager
2. வழங்குபவர் : FreeDownload Manager.org
3. இன்டர்நெட் தள முகவரி: http://www.freeDownloadManager.org/download.htm 
4. பைல் அளவு: 5754 கேபி.

இது ஒரு ஓப்பன் சோர்ஸ் சாப்ட் வேர் தொகுப்பு. இதன் பெயருக்கேற்ற வகையில் சிறப்பான பல வசதிகளை இந்த புரோகிராம் தருகிறது. அனைத்து பிரவுசர் தொகுப்புகளுடன் இணைந்து செயல்படுகிறது. மிக அழகாக வடிவமைக்கப்பட்ட இன்டர்பேஸ் இயங்குகிறது. எப்.டி.பி. மற்றும் எச்.டி.டி.பி. வகைகளுக்குத் தனித்தனியே கிளையண்ட் புரோகிராம்கள் இணைக்கப்பட்டுள்ளன.

டவுண்லோட் செய்யப்பட வேண்டிய புரோகிராம்களை பகுதி பகுதிகளாகப் பிரித்து ஒரே நேரத்தில் வேகமாக டவுண்லோட் செய்து தருகிறது. டவுண்லோட் செய்திடும் நேரத்தில் இன்டர்நெட் தொடர்பு விட்டுப் போனாலோ அல்லது கம்ப்யூட்டர் முடங்கிப் போனாலோ அடுத்த முறை விட்டுப்போன இடத்திலிருந்து பைலை டவுண்லோட் செய்து இணைத்து தரும் திறன் கொண்டது. வீடியோ தளங்களிலிருந்து டவுண்லோட் செய்வதுடன் பார்மட்டுகளையும் மாற்றி தருகிறது. இதனுடன் இணைத்துத் தரப்பட்டுள்ள அப்லோட் மேனேஜர் புரோகிராம் பைல்களைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள அப்லோட் செய்திடும் வசதியைத் தருகிறது. ஒரு பைலை பல்வேறு லிங்க்குகளிலிருந்து ஒரே நேரத்தில் டவுண்லோட் செய்து தரும் திறன் கொண்டது. டவுண்லோட் செய்யப்படும் பைல்களை அதன் வகைகளுக்கிணங்க சேவ் செய்து நிர்வகிக்க உதவிடுகிறது.
ஒரு பைலை டவுண்லோட் செய்திடும் முன் அந்த பைல் குறித்து மற்றவர்கள் என்ன கருத்து தெரிவித்துள்ளார்கள் என்று காட்டப்படுகிறது. அதே போல நீங்களும் உங்கள் கருத்தைப் பதிவு செய்திடலாம். இதனால் கெடுதல் விளைவிக்கும் பைல்களை டவுண்லோட் செய்திடுவதனைத் தவிர்க்கலாம். மற்றவர்களுக்கும் எச்சரிக்கை செய்திடலாம்.

முழு இணையதளத்தையும் அப்படியே டவுண்லோட் செய்திடும் திறன் கொண்டது. இதற்கென எச்.டி.எம்.எல். ஸ்பைடர் என ஒரு புரோகிராம் பிரிவு தரப்படுகிறது. அதனால் தான் இதனை சைட் ரிப்பர் (‘site ripper’) என அழைக்கின்றனர்.

Orbit Downloader

1. புரோகிராம் பெயர் : OrbitDownloader
2. வழங்குபவர் : OrbitDownloader.com
3. இன்டர்நெட் தள முகவரி: http://www.orbitdownloader.com/download.htm 
4. பைல் அளவு: 2217 கேபி.

டவுண்லோட் மேனேஜர் புரோகிராம்களின் லீடர் என இது செல்லமாக அழைக்கப்படுகிறது. ஆடியோ மற்றும் வீடியோ பைல்களை டவுண்லோட் செய்திட துணை புரியும் நோக் கத்துடன் இந்த புரோகிராம் உருவாக்கப்பட்டதாக தெரிகிறது. புதிய சில அம்சங்களுடன் வழக்கம்போலான இ.எக்ஸ்.இ. மற்றும் காம் பைல்கள் மட்டுமின்றி ஸ்ட்ரீமிங் மீடியா வகையைச் சேர்ந்த ஆடியோ மற்றும் வீடியோ பைல் களை டவுண்லோட் செய்திடுகிறது. யு–ட்யூப் மற்றும் மை ஸ்பேஸ் போன்ற சில தளங்களிலிருந்து நேரடியாக டவுண் லோட் செய்திடும் வசதியைத் தருகிறது. இன்றைக்குக் கிடைக்கும் சிறந்த டவுண் லோட் மேனேஜர் புரோகிராம்களில் ஒன்று எனப் பலராலும் பாராட்டுப் பெற்றது.

இதனைப் பயன்படுத்த எந்தவிதமான ரெஜிஸ்ட்ரேஷனும் தேவையில்லை. விளம்பரங்களோ அல்லது ஸ்பை வேர் புரோகிராம்களோ இல்லை என சான்று பெற்றது. யு–ட்யூப் வீடியோக்களை டவுண்லோட் செய்திட இது மிக உகந்தது என பாராட்டுப் பெற்றது. தற்போதைய பதிப்பு 2.7.3.

Flash Get
1. புரோகிராம் பெயர் : FlashGet
2. வழங்குபவர் : Trend Media
3. இன்டர்நெட் தள முகவரி: http://www.flashget.com/download.htm 
4. பைல் அளவு: 4520கேபி.

இன்டர்நெட்டில் மிக அதிகமான எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களைக் கொண் டுள்ள புரோகிராமாக இது அறிவிக்கப்பட்டுள்ளது. டவுண் லோட் செய்கையில் நாம் பொதுவாக எதிர்நோக்கும் இரண்டு பிரச்னைகளை இது எளிதாக தீர்த்து வைக்கிறது. முதலாவது வேகம்; இரண்டாவது டவுண்லோட் செய்யப் பட்ட பைல்களைக் கையாளும் முறை; அவற்றை சோதனை செய்துவகைப்படுத்தும் வழிகள்.

இந்த புரோகிராம் முதலில் சீன சொல்லை ஒட்டி ஒஞுtஞிச்ணூ என அழைக்கப் பட்டது. இதன் புதிய பதிப்பு 1.9.6. இதில் மல்ட்டி சர்வர் ஹைபர் த்ரெடிங் டெக்னாலஜி பயன்படுத்தப்படுகிறது. இதனால் பல்வேறு புரோடோகால் முறைகளை இதில் பயன்படுத்தி டவுண் லோட் செய்திடலாம். இறக்கப் படும் பைலின் அளவிற்கேற்ப பைல் இறக்கப் படும் வேகம் 6 முதல் 10 முறை அதிகரிக்கப்படுகிறது. 

டவுண்லோட் செய்யப் படும் பைலை பகுதிகளாகப் பிரித்து ஒரே நேரத்தில் இந்த பகுதிகளை டவுண்லோட் செய்து பின் இணைத்துத் தருகிறது. ஒரு பைல் மட்டுமல்ல, ஒரே நேரத்தில் பல பைல்களை இது போல பிரிவுகளாகப் பிரித்து டவுண்லோட் செய்கிறது. அத்துடன் எந்த நேரத்தில் எந்த பைலை டவுண்லோட் செய்திட வேண்டும் என வரையறை செய்திடலாம். இதனால் நம் இன்டர் நெட் இணைப்பு வேகத்தினை ஒட்டியும் நம் தேவையை பொறுத்தும் டவுண் லோட் செய்திட முடிகிறது.

இந்த புரோகிராமைப் பயன்படுத்துகையில் எந்த அட்–வேர் புரோகிராமும் குறுக்கிடாது. எந்தவிதமான ஸ்பைவேர் புரோகிராமும் இல்லை என்று பலராலும் கணிக்கப்பட்டுள்ளது. மிகக் குறைவான ராம் மெமரியைப் பயன்படுத்துவதால் டவுண்லோட் செய்திடுகையில் நம்முடைய வேலையை கம்ப்யூட் டரில் தொடர்ந்து மேற் கொள்ளலாம். டவுண்லோட் முடிந்தவுடன் தானாக கம்ப்யூட்டரில் உள்ள ஆண்டி வைரஸ் தொகுப்பினை இயக்கி டவுண்லோட் செய்யப் பட்ட பைலில் வைரஸ் எதுவும் இருக்கிறதா என்று சோதனை செய்கிறது.


ஒரே பைலுக்கான பல டவுண்லோட் இøணைப்புகள், பிரிவு பிரிவாக டவுண்லோட் செய்திடும் வசதி, பல பைல்களை ஒரே முறை டவுண்லோட் செய்திடும் வசதிபோன்ற பல வசதிகளை இந்த டவுண்லோட் மேனேஜர்கள் தருகின்றன. அவற்றில் மிகச் சிறந்த மூன்று டவுண்லோட் மேனேஜர் புரோகிராம்கள் குறித்து இங்கு தகவல்கள் தரப்படுகின்றன. டவுண்லோட் செய்கையில் நாம் பொதுவாக எதிர்நோக்கும் இரண்டு பிரச்னைகளை இது தீர்த்து வைக்கிறது. முதலாவது வேகம்; இரண்டாவது டவுண்லோட் செய்யப்பட்ட பைல்களைக் கையாளும் முறை; அவற்றை சோதனை செய்து வகைப்படுத்தும் வழிகள். 

MICRO SD - எஸ்.டி. கார்ட்கள் - சில தகவல்கள்

 செக்யூர் டிஜிட்டல் (Secure Digital) அல்லது எஸ்.டி. கார்ட் எனப்படும் மெமரி கார்டுகள், தற்போது அனைத்து டிஜிட்டல் சாதனங்களிலும் பயன்படுத்தப்பட்ட்டு வருகின்றன. மொபைல் போன், டிஜிட்டல் கேமரா, ஜி.பி.எஸ். நேவிகேஷன் சாதனங்கள் மற்றும் டேப்ளட் கம்ப்யூட்டர்களில் இவற்றை ஒரு முக்கிய பகுதியாகவே நாம் இயக்குகிறோம். இதனை நாம் எல்லாரும் பயன்படுத்தினாலும், அதன் தன்மை, வகைகள் குறித்து அவ்வளவாக யாரும் தெரிந்து வைத்திருப்பதில்லை. சில தகவல்களை இங்கு காணலாம்.
 
செக்யூர் டிஜிட்டல் கார்டின் வரையறைகள் 1999ல் முடிவு செய்யப்பட்டன. மல்ட்டி மீடியா கார்டுக்கு மேலான வகையில் இதனை அமைத்தனர். இந்த கார்டின் அடிப்படைத் தன்மை எப்படி இருக்க வேண்டும் என்பதனை எஸ்.டி. கார்ட் அசோசியேஷன் என்னும் அமைப்பு முடிவு செய்கிறது. ஏறத்தாழ 400 பிராண்ட் பெயர்களில், எஸ்.டி. கார்டுகள் தயார் செய்யப்படுகின்றன. ஏறத்தாழ 8,000 மாடல் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. 


செக்யூர் டிஜிட்டல் பார்மட் என்று சொல்லும் போது அதில் நான்கு வகையான கார்ட் பிரிவுகள் உள்ளன. அவை Standard Capacity (SDSC), the High Capacity (SDHC), the extended Capacity (SDXC), மற்றும் SDIO. 
இவை குறித்து அறிய முற்படுகையில் பல சந்தேகங்கள் நமக்கு எழுகின்றன. அவற்றை இங்கு காணலாம்.
 
1. எஸ்.டி. கார்ட் என்பது ஒரு சாலிட் ஸ்டேட் டிவைஸ். இதில் நகரும் பகுதி என எதுவும் இல்லை. எலக்ட்ரிக்கல் சர்க்யூட்களையே இவை சார்ந்திருக்கின்றன.
 
2. எஸ்.டி. கார்ட்கள் மூன்று அளவுகளில் கிடைக்கின்றன. அவை standard SD (32 x 24 millimeters), miniSD (20 x 21.5 millimeters) and microSD (15 x 11 millimeters)
 
3. SD, SDHC and SDXC என்று குறிப்பிடுகையில், நாம் எஸ்.டி. கார்ட்களின் எந்த தன்மையைக் கொண்டு வேறுபடுத்துகிறோம்? எஸ்.டி. கார்ட் வளர்ச்சி, கெபாசிட்டி திறன் ஆகியவையே இந்த மூன்றின் வகைகளை வேறுபடுத்திக் காட்டுகின்றன. 
 
4. ஒரு வீடியோ பதிவில், எஸ்.டி. கார்டின் வேகத்திறன் முக்கிய பங்கினைக் கொண்டுள்ளது என்பது சரியா? ஆம், உண்மையே. ஒரு எஸ்.டி. கார்டின் வேகம் அதிகமாக இருந்தால், வீடியோ பதிவின் போது, டேட்டா அதிகமாக கைப்படுத்தப்படும். என்னும் தரத்தில் வேகம் இருந்தால், நொடிக்கு 312 எம்.பி. தகவல்கள் எழுதப்படும் மற்றும் படிக்கப்படும். இதனால், நிச்சயம் நல்ல தெளிவான வீடியோ பதிவு ஏற்படும்.
 
5. எஸ்.டி. கார்ட் வரையறையில், அதன் உள்ளார்ந்த சி.பி.ஆர்.எம். தொழில் நுட்பம் எதனைக் குறிக்கிறது? இது Content Protection for Recordable Media (CPRM) என்று விரித்துச் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு எஸ்.டி. கார்டிலும் இந்த தொழில் நுட்பம் உள்ளது. 
 
6. எஸ்.டி. கார்டில் உள்ள லாக் சிஸ்டத்தை இயக்கிவிட்டால், மீண்டும் அதில் எதுவும் எழுத முடியாதா? இந்த பூட்டு சிஸ்டம் பூட்டவும், மீண்டும் திறந்து இயக்கவும் என்ற வகையில் உள்ளது. மூடிவிட்டால், எழுதவோ, உள்ளிருப்பவற்றை மாற்றவோ முடியாது. மீண்டும் திறந்து, அழிக்கவும், மேலே எழுதவும் முடியும்.
 
7. எந்த வகை மிகச் சிறிய எஸ்.டி. கார்ட்?
எஸ்.டி. (SD) மற்றும் எஸ்.டி. எச்.சி (SDHC) கார்ட்களைக் காட்டிலும், எஸ்.டி. எக்ஸ்.சி. (SDXC) கூடுதல் கெபாசிட்டி திறன் கொண்டது. இதே போல் தான் இவற்றின் மைக்ரோ எஸ்.டி. கார்ட் வகைகளும். மிகச் சிறிய microSDXC கார்ட், microSD and microSDHC கார்ட்களைக் காட்டிலும் அதிக கொள்ளளவு கொண்டது.
 
8. பெரிய எஸ்.டி.கார்ட் ஸ்லாட்டில், மைக்ரோ எஸ்.டி. கார்டை செலுத்தி, தகவல்களைப் படிக்க இயலுமா? தாராளமாகப் பயன்படுத்தலாம். ஆனால், அந்த எஸ்.டி.கார்ட் ரீடர், அதன் கெபாசிட்டி பார்மட்டினைப் படித்து தகவல்களைத் தரும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
 
9. எஸ்.டி.கார்ட் ஒன்றை பார்மட் செய்திட, எஸ்.டி.கார்ட் அசோசியேஷன் பரிந்துரைக்கும் வழி என்ன? இந்த அசோசியேஷன் SD Formatter software என்ற சாப்ட்வேர் புரோகிராமினை இதற்கென வழங்குகிறது. ஹார்ட் ட்ரைவிற்கான, டிஸ்க் மேனேஜ்மெண்ட் டூல்களை இதற்குப் பயன்படுத்தலாம். ஆனால், அவை எஸ்.டி.கார்டில் உள்ள காப்பி பாதுகாப்பு தொழில் நுட்பத்தினைக் கெடுத்துவிடலாம்.
 
10. ஒரு எஸ்.டி. கார்டினை எத்தனை முறை எழுதவும் அழிக்கவும் செய்திடலாம்? இவற்றைத் தயாரிக்கும் தோஷிபாவின் கூற்றுப்படி, 10,000 சுழற்சிகள் வரை ஒரு எஸ்.டி.கார்டில், டேட்டாவினைப் பதியலாம் மற்றும் அழிக்கலாம். ஒரு கார்டில் ஒவ்வொரு நாளும், ஒரு முறை டேட்டாவினை முழுமையாக அழித்து எழுதினாலும், 10,000 சுழற்சிகள் மேற்கொள்ள 27 ஆண்டுகள் ஆகும்.
 

கணினியில் இருந்து வரும் Beep ஒலி

கணினியில் ஒலிக்கும் Beep ஒலி பலருக்கும் புரியாத ஒன்றாகவே இருந்து வருகிறது.


இதன் பயன்பாடானது, கணனியில் தோன்றும் பிரச்சனைகளை குறிக்கும் வண்ணம் ஒலிக்கும். கணனியை ஆன் செய்தவுடன் bios ஆனது booting ஆகும் நேரத்தில் ஹார்டுவேர் பாகங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என சோதிக்கும். அப்படி ஏதாவது ஒரு சில பாகங்கள் சரியில்லை என்றால் உடனே கணினியில் இருந்து பீப் ஒலி ஒலிக்க தொடங்கும்.

அப்படி ஒலிக்கும் ஒலியின் எண்ணிக்கையை வைத்தே நாம் எதில் சிக்கல் இருக்கிறது என கண்டறியலாம்.

1- 2 - 3 முறை பீப் சத்தம்:
ram அல்லது motherboard ல் பிரச்சனைகள் இருப்பதைக் குறிக்கும்

4 முறை பீப் சத்தம்:
Timer ல் தோன்றும் பிரச்சனையை சரி செய்யும் விதமாக ஒலிக்கும்.

5 முறை பீப் சத்தம்:
Processer ல் சிக்கல் இருப்பதைக் குறிக்கும்.



6 முறை பீப் சத்தம்:
Keyboard, Keyboard Controlல் தோன்றும் சிக்கலை குறிக்கும் விதமாக ஒலிக்கும்.

7 முறை பீப் சத்தம்:
motherboard இல் உள்ள Jumpers சரியாக உள்ளாதா, இல்லை சரியாக வேளை செய்கிறதா என்பதை உணர்த்தும் விதமாக ஒலிக்கும்.

8 முறை பீப் சத்தம்:
Display சமந்தமான பிரச்சனைகளை குறிக்கும் விதமாக அமையும்.

11 முறை பீப் சத்தம்:
Cach Memory சமந்தமான சிக்கல்கள் இந்த பீப் சத்ததின் மூலம் தெரிவிக்கப்படும்.

1 தொடர் பீப், மற்றும் 3 குறுகிய பீப்:
Memory தொடர்பான பிரச்சனைகள் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

1 தொடர் பீப், மற்றும் 8 குறுகிய பீப்:
Display இல் தோன்றும் பிரச்சனைகள் இந்த பீப் சத்ததின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

1 முறை குறுகிய பீப் சத்தம்:
சாதாரணமான ஒலி மற்றும் உங்கள் கணினி நல்ல விதமாக வேளை செய்வதை குறிக்கும்.

தொடர் மற்றும் குறுகிய பீப் சத்தம்:
  கணினி மிகுந்த சிக்கலில் இருப்பதை குறிக்கும்.

1 தொடர் மற்றும் 1 குறுகிய பீப் சத்தம்:
Motherboard-ல் பிரச்சனை இருப்பதைக் குறிக்கும்.

1 தொடர் மற்றும் 2 குறுகிய பீப் சத்தம்:
Videoவில் தோன்றும் பிரச்சனைகளை குறிக்கும்

3 முறை தொடர் பீப் சத்தம்:
Video circuit-ல் உள்ள சிக்கலை குறிக்கும் வண்ணம் ஒலிக்கும்.

இப்போது கணினியில் ஒலிக்கும் பீப் சத்ததை வைத்தே உங்கள் கணினியில் உள்ள குறைபாடுகளை நீங்களே தெரிந்து கொள்ளலாம்.

சனி, 28 மார்ச், 2015

இனி Twitter இல் பாட்டும் கேட்கலாம்!!!

17-nowucanlistentomusic
மிக வேகமாக  செய்திகள்  பரவக் காரணமாக இருக்கும் சமூக ஊடகமான  டிவிட்டர், விரைவு  செய்திகளுக்கான தளமாகவே இயங்கி  வருகிறது. மிக சிறப்பான  செய்தி  ஊடகமாக  இருந்தாலும் அது  தனது  வருவாயை பெருக்குவதில் சில  சிக்கலை  சந்தித்து  வருகிறது. சமூக  வலைதளங்களை பொருத்தவரை பயனாளர்கள் அதிக நேரம் தனது  தளத்தில் தக்கவைக்கும்போதே  விளம்பர வருவாயை பெற முடியும். அதனால் அதிக  

நேரம் பயனாளர்களை தன் தளத்திலேயே தக்கவைத்துகொள்ள பல்வேறு புதிய முயற்சிகளை  எடுத்து வருகிறது.

  அதன் ஒரு கட்டமாக இப்பொழுது, பயனாளர்கள் தங்கள்  timelines மற்றும் செய்தி பிரிவுகளில் இருந்தபடியே பாடல், இசை அல்லது எதேனும் ஒரு ஒலி களை கேட்கும் வாய்ப்பினை அளிக்க உள்ளது.
 A portrait of the Twitter logo in Ventura
   இதற்காக பெர்லினை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும்.  ஒலிச் சேவை நிறுவனமான SoundCloud உடன் இணைந்து செயல்பட உள்ளது. SoundCloud ஆடியோவுக்காண  யூ டியூப் என்று கூட சொல்லலாம்.
 இந்த சேவைக்கு Audio Card என்று  பெயரிட்டுள்ளனர். மேலும் தற்பொழுது SoundCloud இணைந்து  துவங்கினாலும்,  வரும் காலத்தில் மேலும் பல நிறுவனங்களை தன்னுடன் இது  இணைத்து கொள்ளும் எனத் தெரிகிறது.
sdfsf
 அதே போல இந்த Audio Card சேவையில் இசை கலைஞர்கள்  தங்கள் சிறந்த படைப்புகளை  மக்களிடம்  எடுத்து செல்ல உதவுகிறது. இது  இசை கலைஞர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் மிக  சிறந்த வாய்ப்பாகும்.

ஆப்பிளின் iTunes ஆதிகத்திலேயே  இந்தத் துறை இருக்கிறது. இப்பொழுது SoundCloud உடன் இணைந்து  டிவிட்டர் இந்த துறையில் இறங்குகிறது. டிவிட்டர் நல்ல வாய்ப்பாக அதற்க்கு  வேகமாக செய்தி  பரப்பக் கூடிய கோடிக்கணக்கான பயனர்கள்  இருப்பதே  ஆகும்.

IBMனு ஒரு கம்பெனி இருந்துச்சாம்…


IBM Logo
IBM Logo
நம்மில் பலருக்கும் இப்பிடி ஒரு கம்பெனி இருந்ததே மறந்திருக்கும். ஒரு காலத்தில் IBM Computer னு சொன்ன உடனே “அவளுகென்ன என் தங்கத்துக்கு” என கொஞ்சினர் மக்கள்.
கால ஓட்டத்தில் IBM என்றாலே அது பெரிய பெரிய நிறுவனங்களுக்கு மென்பொருள் & வன்பொருள் தயாரிக்கும் ஒரு நிறுவனம் என அடையாளப்படுத்தப்பட்டது.   கடைநிலை பயணர்களாகிய நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் ஆராய்ச்சிகளை IBM செய்து வருகிறது.
அந்த ஆராய்ச்சிகள், நமது மொபைல், கணினி, லேப்டோப் போன்றவற்றில் பல புதிய நோக்கிகளை (Sensors)  பொருத்தி, நமது கணினி / மொபைல் பயன்பாட்டை அதன் உச்சத்திற்கு எடுத்துச் செல்லும் ஆராய்ச்சிகள்.

1.  மொபைலில் உள்ள Vibrator இன் செயலாக்கத்தை மேம்படுத்துவதன் மூலம், நம் திரையைத் தடவிப் பார்த்தால், ஒரு துணி / சேலை போன்றவற்றின் மேற்பரப்பை தொடுவது போன்ற உணர்வை ஏற்படுத்துவது.  (இது பல Online  துணி விற்பனை தளங்களுக்கு பெரியும் பயனாக இருக்கும்).

2.  வாசனையை நுகர்ந்து பார்க்கக் கூடிய புதிய Sensor களைப் பொருத்துவது.

3.  அறு சுவைகளை அறிந்து அதன் விகிததாச் சாரங்களை தெரிவிப்பது.

4. சுற்றுப் புறத்தில் உள்ள அதிர்வு, சப்தங்களை உணர்ந்து … எச்சரிகைகளை தெரிவிப்பது…

5. வெவ்வேறு கலாசார மக்கள் Call Center ஐ தொடர்பு கொண்டு பேசும் போது அவர்களின் ஒலியை  மற்ற கலாச்சார மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் மாற்றுவது.

(மதுரை தமிழ் to சென்னைத் தமிழ் , Indian English to  American accent)

இது போல் பல ஆராய்ச்சிகளை IBM  மேற்க் கொண்டு வருவதாகவும். சிறு சிறு மனித மூளையின் செயல்பாடுகளை ஒவ்வொரு Sensorராக மாற்றும் முயற்சிகள் இவை, என IBM India/South Asia இயக்குநர் மற்றும் முதன்மை தொழில்நுட்ப அலுவலர் (Cheif Technology Officer)  திரு. ரமேஷ் கோபிநாத் தெரிவித்துள்ளார்.
  கார்த்திக்

​ஓட்டை காலணாவை பல கோடி ருபாய்​ ​ கொடுத்து வாங்கிய கூகள் நிறுவனம்.

nest-thermostat
கடந்த வாரம்  கூகள்  நிறுவனம்  ஒரு சிறிய  நிறுவனத்தை  ​​3.2 பில்லியன்  அமெரிக்க டாலர்களைக் கொடுத்து வாங்கியது. ​​ இது  தகவல்  தொழில்நுட்பத் ​
​துறையில் இருக்கும் அனைவரையும் மிகவும் ஆச்சர்யப்பட  வைத்த ஒரு வர்த்தகம்.
ஆம்,  வீட்டினுள்  இருக்கும் தட்பவெட்ப  நிலை  போன்றவற்றை  அறிவிக்கும்  இரண்டு  அங்குல  விட்டமே  இருக்கும் ஒரு சாதனத்தை
தயாரிக்கும்  நெஸ்ட்  (Nest) என்ற  நிறுவனத்தை  மிக மிக அதிக விலை கொடுத்து  ரொக்கமாகக்   (திருடா திருடா படத்தில் வரும் லாரியை  நினைவில் கொள்ளவும்) ​
​ கொடுத்து  வாங்கியது.  TechTamil Karthi
வீட்டில்  தீப்பிடித்தால்  எச்சரிக்கை செய்வது, பூட்டிய வீட்டில்  ஆள்  நடமாட்டம்  இருந்தால் எச்சரிக்கை செய்வது போன்ற செயல்களை முதன்மையாகச் செய்யும்  இந்தப்  பெட்டியை  கூகிள் ஆர்வமாக வங்கியுள்ளது பல  சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே அமெரிக்க  புலனாய்வு  நிறுவனம்  அனைத்து  பெரிய  தகவல் தொழில்நுட்ப  நிறுவனங்களிடம்  இருந்து அதன் அனைத்து  பயனாளர்  விவரங்களை  உளவு  பார்த்து வருகிறது. இந்த நிலையில் கூகல் 24 மணி நேரமும் நம்  வீட்டை கண்காணிக்கும்  ஒரு  பொருளை  நம்  வீடுகளில்  (இப்பொழுதைக்கு  அமெரிக்காவில் இருக்கும் உங்கள் பெரியப்பா  வீடு எனலாம் ) மாட்டும் போது.
அது  அமெரிக்க  புலனாய்வு  நிறுவனம்  மறைமுகமாக யார்  எந்த வீட்டில்  எப்போது இருக்கிறார், ஆள் எத்தனை  நாளாக  வீட்டில் இல்லை  போன்ற விவரங்களை சேகரிப்பது போல் ஆகிவிடும். இதனால்  தனி மனித சுதந்திரம் என்ற ஒன்றே இல்லாமல் போய்  விடும்  என கருத்து  தெரிவிகிறார்கள்.

தங்கக்  குடம்  எப்படி  மண்  குடமானது?


இத்தனை  கோடி  டாலர்  கொடுத்து வாங்கிய  ஒரு பொருளை , சரோசா  தேவி  பயன்படுத்திய  சோப்பு டப்பா  எனும் அளவில்  சொல்லும் விதமாக  நேற்று  ஒருவர்  Nest போன்ற ஒரு பொருளை புதிதாக உருவாக்கி    ” திறந்த நிரல் மூல “​ ​ (Opensource) ஆக  வெளியிட்டு  கலவரத்தை  ஏற்படுத்தியுள்ளார். சந்தையில்  கிடைக்கும் பொருள்களை வைத்தே  உருவாக்கிய இந்த  பொருளை  யாராலும்  லினக்ஸ்  போல்  மேம்படுத்த முடியும்.
இது  நெஸ்ட்  செய்யும்  அனேக  வேலைகளையும், அதே மாதிரியான  இயக்கு நிரல்  (OS) கொண்டு உருவாக்கியுள்ளார்.
ஒரே  நாளில்  புதிதாக  மற்ற  நிறுவனங்களால்  உருவாக்கக் கூடிய  ஒரு பொருளை வாங்கி ஒரே  வாரத்தில் மீளாத் தோல்வியில்  துவண்டுள்ளது  கூகள்.குறிப்பு : கூகள்  நிறுவனம்  முழுமையாக எந்த ஒரு புதிய கண்டுபிடிப்பையும் பெரிதாக  செய்யவில்லை., அதன் அனைத்து  தயாரிப்புகளும்  விலை கொடுத்து வாங்கி  தங்கள் நிறுவனத்துடன் இணைத்துக் கொண்டவையே.

வெள்ளி, 27 மார்ச், 2015

அருகம்புல் சாறு குடிப்பதனால் ஏற்படும் பலன்கள் - இயற்கை வைத்தியம்.

* 1. நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.

* 2. இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும்.

* 3. வயிற்றுப் புண் குணமாகும்.

* 4. இரத்த அழுத்தம் (பீ.பி) குணமாகும்.

* 5. நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.

* 6. சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும்.

* 7. நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும்.

* 8. மலச்சிக்கல் நீங்கும்.

* 9. புற்று நோய்க்கு நல்ல மருந்து.

* 10. உடல் இளைக்க உதவும்

* 11. இரவில் நல்ல தூக்கம் வரும்.

* 12. பல், ஈறு கோளாறுகள் நீங்கும்.

* 13. மூட்டு வலி நீங்கும்.

* 14. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்.

* 15. நம் உடம்பை தினமும் மசாஜ் செய்தது போலிருக்கும்.

* 16. அருகம்புல் இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும். இது எளிதில் அனைவருக்கும் கிடைக்கக்கூடியது. பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளது.

* 17. அருகம்புல் சாறு எடுத்து உட்கொண்டால் உடலில் ஏற்படும் பல வியாதிகளுக்கு விடைகொடுக்கலாம். கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் அருகம்புல் எளிதாகக் கிடைக்கிறது.

* 18. இதைப் பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின் தண்ணீரைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுத்து அருந்தலாம். தேவைப்பட்டால், அருகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். மிக்ஸியைப் பயன்படுத்தியும் சாறு எடுக்கலாம்.

* அருகம்புல் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மிலி அளவுக்கு பருகலாம்.
"அருகம்புல் சாறு குடிப்பதனால் ஏற்படும் பலன்கள் - இயற்கை வைத்தியம்.

* 1. நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.

* 2. இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும்.

* 3. வயிற்றுப் புண் குணமாகும்.

* 4. இரத்த அழுத்தம் (பீ.பி) குணமாகும்.

* 5. நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.

* 6. சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும்.

* 7. நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும்.

* 8. மலச்சிக்கல் நீங்கும்.

* 9. புற்று நோய்க்கு நல்ல மருந்து.

* 10. உடல் இளைக்க உதவும்

* 11. இரவில் நல்ல தூக்கம் வரும்.

* 12. பல், ஈறு கோளாறுகள் நீங்கும்.

* 13. மூட்டு வலி நீங்கும்.

* 14. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்.

* 15. நம் உடம்பை தினமும் மசாஜ் செய்தது போலிருக்கும்.

* 16. அருகம்புல் இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும். இது எளிதில் அனைவருக்கும் கிடைக்கக்கூடியது. பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளது.

* 17. அருகம்புல் சாறு எடுத்து உட்கொண்டால் உடலில் ஏற்படும் பல வியாதிகளுக்கு விடைகொடுக்கலாம். கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் அருகம்புல் எளிதாகக் கிடைக்கிறது.

* 18. இதைப் பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின் தண்ணீரைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுத்து அருந்தலாம். தேவைப்பட்டால், அருகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். மிக்ஸியைப் பயன்படுத்தியும் சாறு எடுக்கலாம்.

* அருகம்புல் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மிலி அளவுக்கு பருகலாம்."

Popular Posts

Facebook

Blog Archive