பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

வெள்ளி, 24 ஏப்ரல், 2015

நீங்கள் எந்த அளவு அதிர்ஷ்டசாலி? இத படிங்க....

இதை படிப்பதால் உங்கள் வாழ்கை முறை, கவலைகள், பழக்க வழக்கங்களில் கூட மாற்றம் ஏற்படலாம் ஐந்த நிமிடம் செலவிட்டு இதைப் படியுங்கள்.....

* உண்ண உணவும், உடுக்க உடையும், வசிக்க இடமும் உனக்கு இருந்தால் உலகில் உள்ள 75% மக்களைவிட அதிக வசதிகளை நீ பெற்றிருக்கிறாய்.

* வங்கியில் உனக்குப் பணமிருந்தால் அவ்வாறு உள்ள 8% பணக்காரர்களுள் நீயும் ஒருவன். (80% மக்களுக்கு வங்கிக் கணக்கே இல்லை!)

* உன்னிடம் கணிப்பொறி இருந்தால் நீ அவ்வாறு வாய்ப்பு பெற்ற 1% மனிதர்களுள் ஒருவன்.

* நினைத்த நேரத்தில் நினைத்த நபருடன் மொபைலில் உன்னால் பேச முடிந்தால் அவ்வாறு வாய்ப்பே இல்லாமல் இந்த உலகில் இருக்கும் 175 கோடி மக்களை விட நீ மேலானவன்.

* நோயின்றி, காலையில் புத்துணர்வுடன் நீ எழுந்தால், அந்த வாய்ப்பற்று இரவு படுக்கையிலேயே உயிர் துறந்த பலரைவிட நீ பாக்கியவான்.

* பார்வையின்மை, செவித்திறன் குறைபாடு, வாய் பேசாமை, உள்ளிட்ட எந்த குறைபாடுகளும் இல்லாது நீ இருந்தால் அவ்வாறு உள்ள 20 கோடி மக்களை விட நீ நல்ல நிலையில் இருக்கின்றாய்.

* போர், சிறைத்தண்டனை, பட்டினி போன்ற சித்ரவதையில் நீ சிக்காமல் இருந்தால், உனக்கு உலகிலுள்ள 70 கோடி மக்களுக்குக் கிடைக்காத நல்ல வாழ்க்கை அமைந்துள்ளது என்பதை அறிந்திடு.

* கொடுமைக்கு உள்ளாக்கப்படாமல் நீ விரும்பும் தெய்வத்தைத் தொழ முடிந்தால், உலகிலுள்ள 300 கோடி மக்களுக்குக் கிடைக்காத சலுகையைப் பெற்றவன் நீ.

* உன் பெற்றோரை பிரியாமல் அவர்கள் உங்களுடன் இருந்தால் நீ துன்பத்தை அறியாதவன் என்பதைப் புரிந்து கொள்.

* தாகம் எடுத்தால் குடிப்பதற்கு உங்களுக்கு தண்ணீர் கிடைக்கிறதா? அப்படியெனில் நீங்கள் கொடுத்து வைத்தவர். ஏனெனில், உலகம் முழுதும் சுமார் 100 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு பாதுகாப்பான தண்ணீர் குடிப்பதற்கு இல்லை.

* உன்னால் தலை நிமிர்ந்து நின்று சிரிக்க முடியுமானால் அவ்வாறு செய்ய இயலாத அளவுக்குத் தைரியமும் நம்பிக்கையும் இல்லாதவர்களையும்விட நீ கொடுத்து வைத்தவன்.

*கல்வியறிவு பெற்றிருந்து இந்தச் செய்தியைப் உன்னால் படிக்க முடிந்தால் அவ்வாறு செய்ய இயலாத 80 கோடி பேர்களுக்குக் கிடைக்காத கல்வியை நீ பெற்றுள்ளாய். (உலக அளவில் எழுத படிக்க தெரியாத மக்களின் எண்ணிக்கை மட்டுமே 80 கோடிக்கும் மேல்).

* இணையத்தில் இந்த செய்தியை உன்னால் படிக்க முடிந்தால் அது கிடைக்காத 300 கோடி மக்களை விட நீ மேலானவன்.

* நீங்கள் அனுபவித்து வரும் வசதிகளையும், தொழில்நுட்பத்தையும் அனுபவிக்க இயலாமல் ஏன் அது பற்றிய அறிவு கூட இல்லாமல் கோடிக்கணக்கானோர் இந்த உலகில் இருக்க,

ஆண்டவன் இவ்வளவு விஷயம் உங்களுக்கு கொடுத்திருக்கும்போது நீங்க அதிர்ஷ்டசாலி இல்லையா பின்னே?

நீங்கள் அதிர்ஷ்டசாலிதான் வீண் கவலைகளை விட்டு அந்த கவலைகளை காரணம் காட்டி குடும்பத்தில் குழப்பங்கள், போதைப் பொருட்கள் என்பவற்றை விட்டு நான் அதிர்ஷ்டசாலி என்ற மன தைரியத்தோடு இயன்றளவு மற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள். உங்கள் வாழ்க்கை மேலும் அழகானதாகவும் சிறந்ததாகவும் அமையும்.

நன்றி
@மண்வாசனை

புதன், 15 ஏப்ரல், 2015

இணைய சமவாய்ப்பு நிலை "நெட் நியூட்ராலிட்டி"!http://www.savetheinternet.in

அழைப்பாளன் Azhaippaalan's photo.
"நெட் நியூட்ராலிட்டி"!
தற்போது இணையத்தில் அதிகம் பேசப்படும் விஷயம்
நெட் நியூட்ராலிட்டி.
அப்படியென்றால்..?

மிகச் சுருக்கமாக சொல்வதானால் 'இதுநாள் வரை நீங்கள் இலவசமாகப் பயன்படுத்திய ஆப்ஸ்களை இனி கட்டணம் செலுத்தி பயன்படுத்த வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால், அதனால் உங்களுக்குப் பாதிப்புதானே!
அந்த நிலை ஏற்படாமல் தற்போதுள்ள இணைய சமவாய்ப்பு நிலை தொடர்வதே நெட் நியூட்ராலிடீ.

இதனால் இது பற்றி விவாதம் தற்போது சூடு பிடித்துள்ளது.
இது பற்றி தீர்மானம் செய்ய 'ட்ராய்' (TRAI) மக்களிடம் கருத்து சேகரிப்பு செய்யும் பொருட்டு 20 கேள்விகளை முன் வைத்துள்ளது.
எனவே, இந்த கட்டணத்துக்கு எதிராக, அதாவது, நெட் நியூட்ராலிட்டிக்கு ஆதரவாக, ட்ராய் கேட்கும் 20 கேள்விகளுக்கும் நமது பதிலைப் ஏப்ரல் 24ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

இதனால் நெட் நியூட்ராலிட்டிக்கு ஆதரவு பெருகும். இல்லாவிட்டால் மிகச் சிலர் சொல்லும் கருத்தை வைத்து தவறான முடிவு எடுக்க வாய்ப்புள்ளது.
ஆனால் இக்கேள்விகள் முழுவதையும் படித்து பதிலளிப்பது நம் போன்ற சாதாரண மக்களுக்கு மிகக்கடினம்.
இதற்காகவே

>> http://www.savetheinternet.in

என்ற தளம் தொடங்கப்பட்டுள்ளது.
உங்கள் கணினி மற்றும் மொபைல் ப்ரவுஸரில் இருந்து இத்தளத்தை திறந்தால் அந்த அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதில்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
மேலும்

அவை தானாக நமது ஈமெயில் செயலி வழியாக ட்ராய் க்கு செல்லும் வகையிலும் கூட வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இணைய சமதன்மையைப் பாதுகாக்க தயவு செய்து விரைந்து செயல்படுங்கள். உங்களது ஒரு மின்னஞ்சல் நாளைய செல்போன் கட்டணத்தை தீர்மானிப்பவையாக இருக்கக் கூடும்.
http://www.savetheinternet.in

உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.!!

YOUTUBE வீடியோகளை ANDROID தொலைபேசிகளில் தரவிறக்கம் செய்ய உதவும் (Application) மென்பொருள்


YOUTUBE வீடியோகளை ANDROID தொலைபேசிகளில் தரவிறக்கம் செய்ய உதவும் (Application) மென்பொருள்

சிறந்த பொழுதுபோக்கு வீடியோ தளமான YOUTUBE தளத்தில் இருந்து உங்களுக்கு பிடித்த வீடியோகளை மிக சுலபமாக தரவிறக்கம் செய்துகொள்ள முடியும். இதற்கு TUBE MATE எனும் ANDROID அப்ளிகேசன் உதவுகிறது. இந்த அப்ளிகேசன் மூலம் மிக வேகமாகவும் விரும்பிய தரத்திலும் தரவிறக்கம் செய்ய முடியும்.

இதன் வசதிகள்

YOUTUBE தேடல் மற்றும் விரும்பிய வீடியோ களை லைக் செய்யும் வசதி.

ஒரே நேரத்தில் பல வீடியோ களை தரவிறக்கம் செய்யும் வசதி.

இணைய இணைப்பு இல்லாத போது நிறுத்தப்பட்டால் மீண்டும் தரவிறக்கம் செய்ய முடியும்.

உங்களுக்கு விருப்பமான வீடியோக்கள் கொண்டு உங்களுக்கான PLAYLIST உருவாக்க முடியும். 

MP3 யாக மற்றும் வசதி

வீடியோகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதி.

பல்வேறுபட்ட RESOLUTION தரங்களில் தரவிறக்கம் செய்யலாம் . இதற்கு உங்கள் மொபைலின் தரத்தினை பொறுத்து விரும்பியதை தெரிவு செய்ய முடியும்.

இந்த அப்ளிகேசன் மூலம் தரவிறக்கம் செய்ய விரும்பும் வீடியோவினை தெரிவு செய்து கொண்டு பின்னர் தரவிறக்கம் அல்லது வீடியோவினை பார்ப்பதற்கான  விரும்பத்தை தெரிவு செய்து பின்னர் விரும்பிய RESOLUTION தெரிவு செய்தால் வீடியோ தரவிறக்கம் ஆரம்பிக்கும்.





______________________________________________
தரவிறக்கம் செய்ய முகவரி

செவ்வாய், 14 ஏப்ரல், 2015

Keyboard-ல் இல்லாத நூற்றுகணக்கான Special Character-களை உபயோகிக்க

Special character பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். நாம் உபயோகிக்கும் கணினி keyboard-ல் அனைத்து special Character இருக்காது. நூற்றுகணக்கான Special character-கள் உள்ளது. இந்த special character அனைத்தையும் எப்படி நம் கணினியில் உபயோகிப்பது என பார்க்கலாம். இதற்கென ஒரு இணைய தளம் உள்ளது. இந்த தளத்தில் எண்ணற்ற special characters அடங்கியுள்ளது. இந்த special characters பல்வேறு வகைகளாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது.

முதலில் இந்த http://copypastecharacter.com/ link-ல் click செய்து இந்த தளத்திற்கு செல்லுங்கள்.


இதில் உங்களுக்கு தேவையான special character மீது click  செய்தால் அந்த special character copy செய்யப்படும். மேலே உள்ள படத்தில் நான் வட்டமிட்டு காட்டி இருப்பதை adjust செய்து special character அளவை பெரிது படுத்தி கொள்ளலாம்.

மற்றும் special character-களை Html Code ஆகவும் copy செய்து கொள்ளலாம். இப்படி நூற்றுகணக்கான special characterகளையும் உங்கள் document பதிவிலோ உபயோகித்து கொள்ளலாம்.  இந்த தளம் டிசைனர்களுக்கு மிகவும் பயனுள்ள தளமாக இருக்கும்.
 

வைரஸ் தாக்கிய Pen drive ல் இருந்து பைல்களை மீட்டெடுக்க


தற்பொழுது தகவல்களை சேமிக்க பயன் படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கிய மான பிரச்சினை வைரஸ் பிரச்சினை வெவ்வேறான கணினிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும் பைல்களை பாதிக்கிறது. இப்படி பாதிக்கும் பொழுது உங்கள் பென்ட்ரைவில் உள்ள பைல்கள் மறைக்க பட்டுவிடும் கணினியில் பென்டிரைவை ஓபன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது காலியாக இருக்கும் ஆனால் properties சென்று பார்த்தால்பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தகவல்  ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.

இதற்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணினியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுக்கலாம்.

1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.
 
2) Start ==> Run ==> CMD ==> Enter கொடுக்கவும்.
 
3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.
 
4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது என வைத்து கொள்வோம் அதற்க்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.

5) attrib -s -h /s /d *.* என டைப் செய்யுங்கள் ஒவ்வொரு பகுதிக்கும் Space சரியாக கொடுக்கவும். உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும் உங்களின் விண்டோ இது போல இருக்க வேண்டும்.

  • நீங்கள் சரியாக கொடுத்து உள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.
  • சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும்.
See More Info:  www.masinfom.blogspot.in

VLC மீடியா பிளெயரில் மறைந்து உள்ள 3 ரகசிய பயன்பாடுகள்



கணினி உபயோகிக்கும் அனைவரும் VLC மீடியா பிளேயரை பற்றி அறிந்திருப்போம். கணினியில் வீடியோ ஆடியோ பைல்களை இயக்க உதவும் இலவச மென்பொருள். இந்த மென்பொருளில் ஏராளமான வசதிகள் உள்ளது. மற்றும் இந்த மென்பொருள் வெறும் பிளேயராக மட்டும் இல்லாமல் சில மற்ற வசதிகளையும் கொண்டுள்ளது.  ஆனால் பெருமாலானவர்கள் அந்த வசதிகள் இருப்பது கூட தெரியாமல் அதற்கென தனித்தனி மென்பொருட்களை உபயோகித்து கொண்டிருக்கின்றனர். அதன் படி VLC மீடியா ப்ளேயரில் மறைந்து உள்ள மூன்று ரகசிய வசதிகளை பற்றி இங்கு காண்போம்.


1)Add Watermarks
குறிப்பிட்ட ஒரு வீடியோவுக்கு நம்முடைய பெயரையோ அல்லது நம் பிளாக்கின் பெயரையோ வாட்டர் மார்க்காக கொண்டுவர நாம் வேறு சில மென்பொருட்களை உபயோகித்து கொண்டிருப்போம். ஆனால் இந்த வசதி VLC மீடியா பிலேயரிலே இருக்கிறது.
அதற்கு VLC மென்பொருளை ஓபன் செய்து Tools – Effects and Filters – Video Effects – Vout/Overlay - சென்று வீடியோவுக்கு வாட்டர் மார்க் எபெக்ட் போட்டு கொள்ளலாம்.
2) Video Converter
நம்முடைய வீடியோ பைல்களை கன்வேர்ட் செய்ய ஏராளமான இலவச மென்பொருட்களும், கட்டண மென்பொருள்களும் இருக்கின்றன அதில் நமக்கு பிடித்த மென்பொருளை பயன்படுத்தி நாம் வீடியோவை கன்வேர்ட் செய்கிறோம். ஆனால் VLC Media Player ல் இந்த கன்வேர்ட் செய்யும் வசதியும் உள்ளது. அதை உபயோகிக்க
Media – Open File – Select Video கன்வேர்ட் செய்ய வேண்டிய வீடியோவை தேர்வு செய்து கொண்டு பின்னர் Ctrl+R கொடுக்கவும். அடுத்த விண்டோவில் ADD பட்டனை கிளிக் செய்து மறுபடியும் வீடியோவை தேர்வு செய்து கொண்டு கீழே உள்ள Convert பட்டனை அழுத்தவும்.
  • அடுத்து Destination file என்பதில் Browse கிளிக் செய்து உங்கள் பைல் சேமிக்க வேண்டிய இடத்தை தேர்வு செய்து கொள்ளவும். அடுத்து  மேலே படத்தில் காட்டியுள்ள பட்டனில் கிளிக் செய்து உங்கள் வீடியோ பார்மட் தேர்வு செய்து கொள்ளுங்கள்.
பார்மட் தேர்வு செய்தவுடன் Start பட்டனை அழுத்தினால் உங்கள் வீடியோ கன்வேர்ட் ஆகிவிடும்.
3)Free Online Radio:
VLC மீடியா ப்ளேயரில் ஆன்லைனில் உள்ள ரேடியோக்களை எந்த வித கட்டணமுமின்றி இலவசமாக கேட்டு ரசிக்கலாம். இந்த வசதியை கொண்டு வர VLC யை ஓபன் செய்து Ctrl + L கொடுக்கவும். உங்களுக்கு இன்னொறு விண்டோ ஓபன் ஆகும் அதில் உள்ள Internet என்பதை கிளிக் செய்து ரேடியோ சேனல்கள் ஓபன் ஆகும் அதில் பாடல்களை கேட்டு ரசிக்கலாம்.  இப்படி பயனுள்ள வசதிகள் நமக்கு தெரியாமலேயே VLC மீடியா பிளேயரில் ஒளிந்துள்ளது.
undefined
See More: 
 http://www.masinfom.blogspot.in/

பள்ளிக் குழந்தைகளுக்கான 5 திறந்த மூல மென்பொருள்கள்

3 ஸ்க்ராட்ச் என்பது நிகழ்வு சார்ந்த நிரலாக்க (Event driven programming) மொழி. இம்மொழியை கொண்டு அசைவூட்டும் படங்கள், செயல்பாடுகள், கதைகள், விளையாட்டுக்கள் போன்றவற்றை உருவாக்கி மாற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள இயலும்.
2
இசுட்டெல்லேரியம் (Stellarium) என்பது வானிலுள்ள கோள்களின் உருவ அமைப்பை காண உதவும்.
3
கால்சியம் (Kalzium) என்பது கட்டற்ற ஆவர்த்தன (Periodical table) அட்டவணை
மென்பொருள். இது தனிமங்களை பற்றிய விவரங்கள் அறிந்து கொள்ள உதவும் தொழில்நுட்பம்.
4
கிம்ப் (GIMP அல்லது GNU Image Manipulation Program) என்பது ‘அடோப் ஃபோட்டோஷாப்’ மென்பொருளுக்கு நிகராக உருவாக்கப்பட்ட ஒரு பொது நிரலாக்க மென்பொருள் ஆகும்.
5

எழுதியவர்: ​சிந்துஜா,
கணினி ஆசிரியர் மற்றும் கட்டற்ற மென்பொருள் (Free Software Activist) ஆர்வலர்,
கேந்திரிய வித்யாலயா,
புதுச்சேரி.
 

திங்கள், 13 ஏப்ரல், 2015

வைரஸிற்கு ஆப்பு வைப்பது எப்படி?


A user's photo.


முதலில் உங்கள் கணினியின் Desktop ல் Flash எனும் பெயரில் அல்லது உங்கள் பெயரில் Folder அதன்பின் நீங்கள் Shift key ஐ அழுத்திக் கொண்டு Flash அல்லது Momory Card ஐ கணினியில் இணைக்க வேண்டும்.(வைரஸ் தானாக பரவாமல் தடுக்க..)

My Computer ல் Right Click செய்ய வரும் Window ல் Manage ல் Click செய்ய Computer Management வரும். அதில் Disk Management ஐ தெரிவுசெய்தால் உங்கள் கணினியில் இருக்கும் Drive கள் தோன்றும். அதில் உங்கள் Flash ஐ Right Click செய்ய வரும் Window ல் Change Drive Letter and Paths ல் Click செய்ய வரும் Window ல் Remove எனும் Button ஐ Click பண்ணியபின் வரும் Confirm Message Box ல் Yes ஐ தெரிவு செய்யுங்கள்.

அதன் திருப்ப உங்கள் Flash I Right Click செய்து Change Drive Letter and Paths ல் Click செய்து பின் Add எனும் Button ஐ Click பண்ணுங்கள். பின் Mount in the following empty NTFS folder ஐ தெரிவு செய்தபின் Browse ஐ Click பண்ணுங்கள். அதன்பின் தோன்றும் Window ல் நீங்கள் Desktop ல் உருவாக்கிய Folder ஐ தெரிவு செய்யுங்கள். பின் OK ஐ click பண்ணுங்கள். இப்போது உங்கள் கணினியின் My Computer ல் இருந்து உங்கள் Flash மறைந்துவிடும். Desktop ல் நீங்கள் உருவாக்கிய Folder உங்கள் Flash ஆக மாறிவிடும்.

உங்கள் Flash ல் வைரஸ் இருந்தால் உங்கள் Flash ஐ உங்கள் கணியுடன் இணைக்கும் போது Auto வாக உங்கள் கணினிக்கு வைரஸ் வராது தடுக்கப்படும். அதேபோல் உங்கள் கணினியில் வைரஸ் இருந்தால் கணினியின் My Computer ல் Flash இல்லாததால் Flash ற்கு வைரஸ் வராது தடுக்கப்படும். இதனால் Flash மூலம் வைரஸ் பரவுவது தடுக்கப்படும். உங்களுக்கும் Open செய்யவும் இலகுவாக இருக்கும். Open with பிரச்சனையும் வராது.

seee more: www.masinfom.blogspot.com

ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

20 கூலிக்கு மாறடிக்கும் உயிர்கள் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர்

யாதுமாகி
 
20 கூலிக்கு மாறடிக்கும் உயிர்கள் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர்...கொல்லப்பட்டோர்கள் தமிழர்கள்... கொன்றவர் ஆந்திராகாரர்கள் அதனால் 20 ஆந்திராகாரர்களை கொன்று வஞ்சம் தீர்த்துக் கொள்வோம் என்ற கருத்தில் யெமக்கு உடன்பாடில்லை என்ற போதும்..மனம் கலங்கி குமுறி எழும் கேள்விகளுக்கு குறைவில்லை.

1. மரங்களை அவர்கள் வெட்டியதாகவே இருக்கட்டும் - வெறும் கோடாலியை வைத்து இருக்கும் ஒரு கூலி தொழிலாளியை சுட்டு கொன்றுதான் பிடிக்கவேண்டுமா? அவ்வளவு கோழைகளா நீங்கள்? இல்லை கையால் ஆகாதவர்களா?

2. இந்த துப்பாக்கி சூட்டிற்க்கு ஆணை பிரப்பித்தவர்கள்..கடத்தல்கார கும்பல் தலைவனை பிடிக்க வக்கு இல்லை..கடத்தல் தொடர்புடைய அரசியல்வாதியை பிடிக்க வக்கில்லை..ஒரு புழுவை துப்பாக்கி கொண்டு சுடுவதுதான் உங்கள் வீரமா?

3. இவர்கள் வெட்டியதாக சொல்லப்படும் மரங்களை நீங்கள் எடுத்துக்கொண்டு இவர்கள் உயிர்களை நீங்கள் திருப்பித் தர முடுயுமா?

4. மாட்டை கொன்றால் மல்லுகட்ட மாமேதைகள் பல உண்டு இங்கு ..மனுசனுக்கு இவர்கள் எங்கே போனார்கள்?

5. தொட்டதுக்கெல்லாம் வழக்கு தொடரும் மேன் மக்கள் இப்போ எங்கே போனார்கள்? மனித மிருக உரிமை பாதுகாவலர்கள் எங்கே போனார்கள்?

6. ஒரு சினிமா வெளிவரக்கூடாது என்று சிரத்தை எடுத்து அனைத்து விதங்களிளும் தடை செய்யும் விளம்பர விரும்பிகள் இப்போ எங்கே போனார்கள்?

7. ஒரு சாதியயை மதத்தை ஒரு சொல் சொல்லிவிட்டால் ஊரையே கொளுத்தி தமிழகத்தை ஒரு வழி செய்யும் இன உணர்வாளர்கள் இந்த மனிதர்களுக்கும் கொஞ்சம் உணர்வை ஏன் பகிரவில்லை? ஒரு வேளை இறந்தவர்கள் இன்ன மதம் இன்ன சாதி என்று தெரிந்திருந்தால் போராட்டம் செய்திருப்பர் போலும்..இறந்தவர்கள் கேட்பார் அற்ற மலை வாழ் மக்கள் தானே..

8. ஊழல் குற்றவாளிகளுக்கும் இங்கு பால் குடம் பூஜை அர்ச்சனை தீ மிதிக்க இங்கு தீவிர விசுவாசிகள் பலர் உண்டு...ஈன கூலி தொழிலாளிக்கு தெய்வம் வந்து தான் தீ மிதிக்கனும்.

9. பல பேரை சுட்டுக்கொள்ளும் தீவிரவாதிகளுக்கு கூட வழக்காட இங்கே வழி உண்டு..வயிற்றுப் பிழைப்புக்காக தினம் திண்டாடும் மக்களுக்கோ மரணம் அன்றி வேறு வழி இல்லை..

10. பல திருட்டு ஊழல் வழக்கில் சிக்கியவர்கள் எத்தனையோ பேர் திருப்பதி கோவிலில் தரிசிக்கிறார்கள் அவர்களை சுட தைரியம் இருக்கிறதா?
இந்த படு கொலைக்கு நீதி கிடைக்கும் வரை தமிழகம் ஓங்கி உயர்த்தி ஒரே குரலில் எதிர்ப்பு எழுப்புவதே..தமிழர் என்ற ஒற்றுமையை பிரதிபலிக்கும்.

பட்டுக்கோட்டையின் வரிகள் தான் நினைவிற்க்கு வருகிறது. "பட்ட பகல் திருடர்களை பட்டாடைகள் - கோட்டு சூட்டு மறைக்குது.... ஒரு பஞ்சை தான் எல்லாம் சேர்ந்து திருடன் என்றே உதைக்குது"

ஒரே ஒரு ஏல‌க்காய்..கீழ்க்காணும் நோய்கள் குணமாகும்

ஒரே ஒரு ஏல‌க்காயை எடுத்து வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று வருபவர்களுக்கு கீழ்க்காணும் நோய்கள் குணமாகும்

எனக்கு ப‌சியே இல்லை அதனால் சா‌ப்‌பிடவும் ‌‌பிடி‌க்க‌வி‌ல்லை எ‌ன்று சில கூறுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள், கேட்டிருப்பீர்க ள். அவர்கள் என்ன‍ செய்ய வேண்டுமென்றால் தினந் தோறும் ஒரே ஒரு ஏல‌க்காயை எடுத்து வா‌யி‌ல் போ‌ ட்டுமெ‌ன்றா‌ல், நல்ல‍ப‌சி எடு‌க்கும், நன்றாக உணவை யும் சாப்பிடுவர். இதனால் ஜீரண உறு‌ப்பு‌க‌ள் அனைத் தும் சீராக இயங்கி, உணவை செரிமானம் ஆகும்.

மேலும் நெ‌ஞ்‌சி‌ல் ச‌ளி க‌ட்டி‌க் கொ‌ண்டு மூ‌ச்சு ‌விட ‌சிரம‌ப்படுபவ‌ர்களு‌ம், ச‌ளியா‌ல் இரும‌ல், அடி‌க்கடி வரும் வறட்டு இருமலால் உண்டாகும் வ‌யி‌ற்றுவலிக்கு கூட இந்த ஏல‌க்கா‌ய் ஒரு அருமருந்து என்றால் அது மிகையல்ல‍. அத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஏல‌க்காயை நீங்களும் மெ‌ன்று சா‌ப்‌பி‌டலாமே!




A user's photo.See This web: http://masinfom.blogspot.in/

மாதுளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

மாதுளை மிகவும் சுவையான பழம் மட்டுமின்றி, அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழமும் கூட. மாதுளையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் வளமாக இருப்பதால், இது மிகவும் சக்தி வாய்ந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருளாக கருதப்படுகிறது. மேலும் பலருக்கு மாதுளை பழம் என்றால் ரொம்பவே பிடிக்கும். ஆனால் அதனை உரித்து சாப்பிடுவது என்பதை நினைக்கும் போது பலரும் அதனை வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக, சோம்பேறித்தனப்பட்டு வேறு பழங்களை வாங்கி உட்கொள்கின்றனர்.

எந்த ஒரு பொருளும் எளிதில் கிடைப்பதை விட, கஷ்டப்பட்டு அடையும் போது தான், அதன் அருமை தெரியும். அதுப்போல் தான் மாதுளையை கஷ்டப்பட்டு உரித்து சாப்பிட வேண்டியிருந்தாலும், அதனால் எண்ணற்ற நன்மைகளை நாம் பெறலாம். அதிலும் இதனை அப்படியே சாப்பிட்டாலும் அல்லது ஜூஸாக செய்து குடித்தாலும், அதன் நன்மைகள் ஒன்றே. சரி, இப்போது மாதுளையை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போமா!!!

இதய ஆரோக்கியம் :-

மாதுளையில் இதயத்தைப் பாதுகாக்கும். பாலிஃபீனால்கள், டானின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருக்கிறது. இதனால் இதயத்திற்கு செல்லும் இரத்த நாளங்களில் கெட்ட கொழுப்புக்கள் படிந்து தடிப்புகள் ஏற்பட்டு, அடைப்புகள் ஏற்படுவது தடுக்கப்பட்டு, இதயம் மற்றும் மூளைக்கு இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதன் மூலம் இதய நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.

இரத்த அழுத்தம் :-

மாதுளை இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். இதில் உள்ள இயற்கையான ஆஸ்பிரின், இரத்தம் உறைவதை தடுப்பதோடு, இரத்தத்தின் அடர்த்தியைக் குறைத்து, உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

புற்றுநோயை தடுக்கிறது :-

மாதுளையை அடிக்கடி உட்கொண்டு வந்தால், அது உடலில் சரும செல்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதோடு, உடலில் தேவையற்ற புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், இரத்த வெள்ளையணுக்களை தூண்டி, கிருமிகள் மற்றும் டாக்ஸின்களை உடலில் இருந்து வெளியேற்றி, வலிமையான நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்குகிறது. முக்கியமாக ஆண்கள் இதனை குடித்து வந்தால், புரோஸ்டேட் புற்றநோய் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

வயிற்றை இதமாக்கும் :-

மாதுளை ஜூஸ் வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. அதிலும் 1 டம்ளர் மாதுளை ஜூஸில் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால், செரிமான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.
வலிமையான நோயெதிர்ப்பு மண்டலம் :-
மாதுளையில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் தன்மை அதிகம் இருப்பதால், அவற்றை சாப்பிடும் போது, உடலில் உள்ள பாக்டீரியா மற்றும் வைரஸ்களை எதிர்த்து அழித்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்குகிறது.

இரத்த சோகை :-

இரத்த சோகை உள்ளவர்கள், மாதுளையை அன்றாடம் உட்கொண்டு வந்தால் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரிக்கும். ஏனெனில் மாதுளையில் இரும்புச்சத்து அதிக அளவில் உள்ளது.

எடையைக் குறைக்கும் :-

மாதுளையில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் அதிகமாக இருப்பதால், இதனை உட்கொண்டு வந்தால், உடல் எடை கட்டுப்பாட்டுடன் இருப்பதோடு, நாள்பட்ட நோய்களின் தீவிரமும் குறையும்.

சரும ஆரோக்கியம் :-

மாதுளையை உணவில் அதிகம் சேர்ப்பதன் மூலம், இளமைத் தோற்றம் பாதுகாக்கப்படும். இதற்கு அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தான் காரணம்.

வாய் ஆரோக்கியம் :-

மாதுளையில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை, ஈறுகள் மற்றும் பற்களில் ஏற்படும் நோய்த்தொற்றுகளை எளிதில் எதிர்த்து போராடி, வாய் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது.

விந்தணு உற்பத்தி :-

மாதுளையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், விந்தணுவின் உற்பத்தியை அதிகரிக்கும். எலியின் மீது நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், மாதுளை ஜூஸ் விந்தணுவின் எண்ணிக்கை மற்றும் தரத்தை அதிகரிப்பதாக தெரிய வந்துள்ளது.
A user's photo.

வியாழன், 9 ஏப்ரல், 2015

உங்கள் மொபைல் அடிக்கடி Hang ஆகுதா ? அப்போ இதை படிங்க!

A user's photo. 
 
நாம் அனைவரும் இன்று அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் Android Osஐ நமது மொபைல்களில் உபயோகித்துக் கொண்டிருக்கிறோம் இதை நாம் அனைவரும் உபயோகிக்க காரணம் என்ன தெரியுமா
 

கூகிள் நிறுவனம் இதை இலவசமாக வெளியிட்டதாலதான் பல மொபைல் நிறுவனங்கள் இதனை தன்னுடைய மாடல்களில் உட்படுத்தி மிகவும் குறைந்த விலையில் உலகச் சந்தைகளில் விற்பனைக்கு கொண்டு வந்தார்கள் மிகக்குறைந்த விலை என்பதால் மக்களிடத்திலும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது
 

அது எல்லாம் சரி என்றாவது இதனை நீங்கள் சிந்தித்திருக்கிறீர்களா? கூகிள் ஏன் இப்பேர்பட்ட இயங்கு தளத்தை (O S)ஐ இலவசமாக வெளியிட வேண்டும்?
பதில் மிகவும் சுலபம்


அதில் நிறைய தவறுகள் இருக்கும் ஒரே காரணத்தினால்தான் அவைகளில் முதன்மை வகிப்பது Mobile Hanging . . . .

இதை சோதனை செய்து அதிலுள்ள அனைத்து தவறுகளையும் திருத்திய பின் இந்த Android Os இலவசமாக கிடைக்காது என்பதே யாரும் எதிர்ப்பார்த்திடாத உண்மை

அதற்காண சோதனையாளர்கள்தான் நாம் நம்மை வைத்து இவர்கள் இதனுடைய குறைகளை கண்டறிந்து அதை திறுத்தம் செய்வதற்காக பலபேர் கொண்ட குழுக்களை நியமித்திருக்கிறார்கள் அவர்கள் இதனுடைய குறைகளை திருத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்

ஆனாலும் இதை உபயோகிக்கும் நபர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிரார்கள் இந்த OS வேண்டாம் என்று விலகி இருந்த Nokiaவும் தற்பொழுது இதை பயன்படுத்த தொடங்கியிருக்கிறது ஏனென்றால் பல பல புதிய applicationகள் Android மொபைல்களுக்கு வந்து கொண்டே இருக்கின்றன
சரி நாம் வந்த விசயத்தை கவனிக்கலாம் நமது மொபைல்களில்Hang ஆவதை எப்படி சரி செய்வது ?

அதை முழுமையாக சரிசெய்ய முடியாது ஆனால் அதை நம்மால் கட்டுப்படுத்த முடியும் அதற்கான தீர்வுதான் இந்த பதிப்பு

நாம் மொபைல் வாங்கிய புதிதில் அது Hang ஆவதில்லை அதில் நாம் பல Applicationகளை நிறுவிய பின்னர்தான் அதனுடைய வேகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தடுமாற்றம் ஏற்படுகிறது அப்படியென்றால் Applicationகளை எல்லாம் அழித்து விடவேண்டுமா என்று நினைக்க வேண்டாம் அதை அழிப்பதினால் உங்களது போனின் வேகம் கூடப்போவது இல்லை அதனுடைய உபயோகத்தை நிறுத்த வேண்டும்

அதாவது சில பேர் எனது மொபைலில் நிரைய இடம் இல்லை ஆதலால் Applicationகளை Memory cardல்தான் வைத்துள்ளேன் இருந்தாலும் இடப்பற்றாக்குறை ஏற்படுகிறது என்ன செய்ய என கேட்பார்கள்
என்னதான் நாம் அனைத்து Applicationகளையும் மெமரி கார்டிற்க்கு Move செய்தாலும் அந்த Applicationனின் சில முக்கிய fileகள் மெமரி கார்டிற்க்கு மூவ் ஆவது இல்லை அது நமது போனிலேயே தங்கி விடுகிறது இதுதான் இந்த இடப்பற்றாக்குறைக்கு காரணம்

சில பேர் கேட்பீர்கள் அதாவது என்னுடைய போனில் நிரைய இடம் இருக்கிறது மெமரி கார்டிலும் அதிக இடம் இருக்கிறது ஆனாலும் மொபைல் Hang ஆகிறது அவர்கள் அனைவரும் இந்த படத்தை உற்று பாருங்கள்

இது Settings>app >running பகுதியில் Ram மெமரியின் உபயோக அளவு
இதுதான் நாம் இப்பொழுது கவனிக்க வேண்டியது

நமது போன் வேகமாக இயங்க போன் மெமரியோ external memoryயோ freeஆக இருப்பதால் கிடையாது முழுக்க முழுக்க Ram மெமரியின்அளவில் அதிக இடம் இருக்க வேண்டும்

நீங்கள் உங்களது போனில் Settings>app >running என்ற பகுதிக்கு செல்லுங்கள் அங்கு உங்கள் அனுமதி இல்லாமல் இயங்க கூடிய அனைத்து
Applicationகளையும் Force Stop கொடுத்து நிறுத்தி விடுங்கள் நாம் அவ்வாறு செய்வதினால் மட்டுமே Ram memoryன் அளவை அதிகரிக்கச் செய்ய முடியும் ,இப்பொழுது போனின் ram memoryன் அளவை பாருங்கள் எவ்வளவு இடம் Freeயாக உள்ளது என்று சரி இதை செய்து முடித்ததும் அடுத்து நாம் செய்ய வேண்டியது அதில் குறிப்பிட்டிருக்கும் data அது அனைத்து Applicationகளிலும் நம் உபயோகத்தை பொருத்து இருக்கும் அதை ஒரு முறை clear செய்து விடுங்கள் பிறகு நமது போனில் இருக்கும் 3D மற்றும் ANIMATION WALLPAPERகளை நிறுத்தி விடுங்கள் HOME SCREEN இருக்கும் அதிக APPLICATION SHORTCUT களை அழித்து விடுங்கள்  history, call logs, messages போன்றவற்றை அதிகம் மொபைலில் தேக்கி வைக்காதீர்கள்

 மேற்கண்ட அனைத்தையும் நீங்கள் கடைபிடிப்பதினால் உங்களது போன் வேகமாக இயங்குவதை உங்களால் உணர முடியும்.

COMPUTER என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா?

alt



நாம் எத்தனையோ ஆண்டுகளாக COMPUTER பயன்படுத்தி வருகிறோம்.  ஆனால் இன்னும் சிலருக்கு COMPUTER 'ன் முழு பெயர் தெரியவில்லை.  அவர்களுக்காக இதை எழுதுகிறேன்.


C  - Common
O  - Oriented
M  - Machine
P  - Particularly
U  - Used for
T  - Trade
E  - Education and
R  - Research


COMPUTER - Common Oriented Machine Particularly Used for Trade Education and Research

Plz Read: www.masinfom.blogspot.com

கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்?


alt 

கம்ப்யூட்டர் கிராஷ் ஆகி நீல வண்ணத்தில் திரை மாறிவிடும். அல்லது அப்படியே திரைக் காட்சி முடங்கிப் போய்விடும்.
சில வேளைகளில் திரையில Fatal error: the system has become unstable or is busy,” it says. “Enter to return to Windows or press ControlAltDelete to restart your computer. If you do this you will lose any unsaved information in all open applications.” என்ற செய்தி கிடைக்கும்.
இதைத்தான் Blue Screen of Death என்று கம்ப்யூட்டர் மொழியில் சொல்வார்கள். ஏன் இவ்வாறு ஏற்படுகிறது என்று இங்கு காணலாம்.
ஹார்ட்வேர் பிரச்னை
கம்ப்யூட்டரில் பல பாகங்கள் ஒன்றிணைந்து இயங்குகின்றன. சில வேளைகளில் இவற்றுக்குள் பிரச்னை வந்தால் இயங்குவது நின்று போகும். ஒவ்வொரு சாதனமும் ஒரு வழியை மேற்கொண்டு அதன் மூலம் தன் இயக்கத்தை மேற்கொள்ளும். பொதுவாக ஒரு கம்ப்யூட்டரில் இத்தகைய வழிகள் குறைந்த பட்சம் 16 இருக்கும். இதில் ஒரே வழியை இரு சாதனங்கள் (பிரிண்டர், கீ போர்டு / மவுஸ்) எடுத்துக் கொள்ளும்போது இயக்கம் நின்று போகும். இவ்வாறு ஏற்படுகையில் Start => Settings => Control pannel => System => Device Manager எனச் சென்று பார்த்தால், பிரச்னை ஏற்பட்ட சாதனத்தின் பெயர் முன்னால் ஒரு மஞ்சள் நிற ஆச்சரியக் குறி தோன்றும். டிவைஸ் மேனேஜரில், கம்ப்யூட்டர் என்பதில் கிளிக் செய்து பார்த்தால், இந்த சேனல் வழிகளுக்கான ஐ.ஆர்.க்யூ எண் காட்டப்படும். ஒரே எண் இருமுறை இருப்பின் பிரச்னை அங்குதான் உள்ளது என்று பொருள். இதற்குத் தீர்வு என்ன? பிரச்னைக்குரிய சாதனத்தை அன் இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்தால் போதும்.
ரம் மெமரி சிப்ஸ்
ராம் மெமரியை உயர்த்துவதற்காகப் புதிய ராம் சிப் ஒன்றை இணைத்திருப்போம். ஆனால் ஒன்றுக்கொன்று வேறுபாடான வேகம் உள்ளவையாக அவை இருக்கலாம். அவற்றிற்கிடையே இணைந்து செல்லும் நிலை ஏற்படாத போது Fatal Exception Error ஏற்படலாம். இதனை கம்ப்யூட்டர் பாகங்களின் இயக்கம் தெரிந்தவர்கள் மூலம், பயாஸ் செட்டிங்ஸ் திறந்து, ராம் wait state நிலையைச் சற்று உயர்த்தலாம். அல்லது ஒரே மாதிரியான வேகத்தில் இயங்கும் சிப்களை அமைக்கலாம்.
ஹார்ட் டிஸ்க் டிரைவ்
பயன்படுத்தத் தொடங்கிய சில வாரங்களில் ஹார்ட் டிஸ்க்கின் ஒழுங்கு நிலை கலையத் தொடங்கும். தேவையற்ற தற்காலிக பைல்கள் தேங்கும். பைல்கள் சிதறியபடி சேமிக்கப்படும். இதனால் இயக்க வேகத்திற்கு ஹார்ட் டிஸ்க் இணையாக இயங்க முடியாமல் போகும். அப்போது கிராஷ் ஆக வாய்ப்புண்டு. எனவே அடிக்கடி ஹார்ட் டிஸ்க்கினைச் சுத்தப்படுத்த வேண்டும். இதற்கு டிபிராக் செய்திட வேண்டும். சி டிரைவில் தங்கும் தேவையற்ற பைல்களை அதற்கான புரோகிராம்கள் கொண்டு நீக்கலாம்.
வீடியோ கார்ட்
சில வேளைகளில் கிராஷ் ஆகும் போது Fatal OE exceptions and VXD errors என்ற செய்தி கிடைக்கும். இது வீடியோ கார்டினால் ஏற்படுவது. இதனைத் தவிர்க்க வீடியோ டிஸ்பிளேயின் ரெசல்யூசனைக் குறைக்கவும். StartSettingsControl PanelDisplaySettings எனச் சென்று ஸ்கிரீன் ஏரியா பாரினை இடது மூலையில் நிறுத்தவும். அதே போல கலர் செட்டிங்ஸ் சென்று 16 பிட் என்ற அளவில் அமைக்கவும்.
வைரஸ்
பெரும்பாலான கம்ப்யூட்டர் கிராஷ்களுக்கு வைரஸ்களே காரணம். சரியான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை நிறுவி, அவ்வப்போது அதனை அப்டேட் செய்வது மட்டுமே இதனைத் தடுக்கும். பல வைரஸ்கள் பூட் செக்டாரைக் கெடுத்து வைக்கும். இதனால் கம்ப்யூட்டரை இயக்கவே முடியாது. எனவே இது போன்ற நிலையில் கை கொடுக்க விண்டோஸ் ஸ்டார்ட் அப் டிஸ்க் ஒன்றை உருவாக்கி கைவசம் வைத்துக் கொள்ளுங்கள்.
பிரிண்டர்
பல வேளைகளில் கம்ப்யூட்டர்கள் பிரிண்ட் எடுக்கையில் கிராஷ் ஆவதை நீங்கள் கவனித்திருக்கலாம். இதற்குக் காரணம் பிரிண்டர்களில் மிகவும் குறைந்த அளவில் பபர் மெமரி இருப்பதே ஆகும். மேலும் கம்ப்யூட்டரின் சிபியு சக்தியை பிரிண்டர்கள் சற்று அதிகமாகவே பயன்படுத்தும். எனவே பல வேலைகளுடன் பிரிண்டிங் வேலையை மேற்கொள்கையில், அல்லது அதிகமான அளவில் பிரிண்டருக்கு டேட்டாவினை அனுப்புகையில் கிராஷ் ஏற்படும். நாம் சாதாரணமாகக் காணாத கேரக்டர்களை பிரிண்டர் அச்சிட்டால் இந்த பிரச்னை தலை தூக்குகிறது என்று பொருள். உடனே பிரிண்டருக்குச் செல்லும் மின்சாரத்தை 10 விநாடிகளுக்கு நிறுத்திப் பின் மீண்டும் இயக்கவும்.
சாப்ட்வேர்
முழுமையாக இல்லாமல் அல்லது மோசமாக இன்ஸ்டால் செய்யப்பட்ட சாப்ட்வேர் தொகுப்புகளால், கம்ப்யூட்டர் கிராஷ் ஆகலாம். இவற்றைச் சரியாக அன் இன்ஸ்டால் செய்திட வேண்டும். இல்லையேல் இவை தொடர்பான வரிகள், ரெஜிஸ்ட்ரியில் இருந்து கொண்டு, இந்த சாப்ட்வேரினை இயக்குகையில் கம்ப்யூட்டரை கிராஷ் ஆகும் நிலைக்குக் கொண்டுவரலாம். ரெஜிஸ்ட்ரியைச் சுத்தம் செய்திடவென வடிவமைக்கப்பட்ட புரோகிராம்களைக் கொண்டு அதனைச் சரி செய்திட வேண்டும். இல்லையேல் மீண்டும் விண்டோஸ் இயக்கத்தினை இன்ஸ்டால் செய்திட வேண்டியதிருக்கும்.
அதிக வெப்பம்
இப்போது வருகின்ற சிபியுக்கள் மீது சிறிய மின் விசிறிகள் பொருத்தப்பட்டு சிபியு இயக்கத்தின் போது உருவாகும் வெப்பம் வெளிக்கடத்தப் படுகிறது. சிபியு அதிக சூடானாலும், அதிக குளிர்ச்சியினால் பாதிக்கப்பட்டாலும், கெர்னல் எர்ரர் (Kernel Error) என்று ஒரு பிரச்னை ஏற்படும். பொதுவாக எந்த வேகத்தில் ஒரு சிபியு இயங்க வேண்டுமோ அதனைக் காட்டிலும் அதிக வேகத்தில் இயங்கும் வகையில், சிபியு செட் செய்யப்பட்டிருந்தாலும் அதிக வெப்ப பிரச்னை ஏற்படும். எனவே சிபியு வின் வேகத்தினை பயாஸ் செட்டிங்ஸ் சென்று குறைக்க வேண்டும்.
மின் ஓட்டம்
கம்ப்யூட்டருக்குச் செல்லும் மின் ஓட்டத்தினைச் சீராகத் தரும் சாதனங்களைக் கொண்டு தராவிட்டால், கிராஷ் ஆகும் வாய்ப்புகள் அதிகம் உண்டு

ஞாயிறு, 5 ஏப்ரல், 2015

www.masinfom.blogspot.in

Tech Info in English Pleas visit this Page:

http://www.masinfom.blogspot.in/
அதிவேகமாக காப்பி செய்யும் சாப்வேர்கள் நாம் பெரும்பாலான கோப்புகளை நகலெடுக்கவும், ஒட்டவும், சில குறுக்கு வழிகளை பயன்படுத்துவோம். அல்லது சுட்டியை பயன்படுத்தி இழுத்து விடுவோம். இப்படி செய்யும் போது ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் கோப்பின் அளவு பெரியதாக இருந்தாலோ அல்லது வைரஸ் ஏதேனும் இருந்தாலோ இதில் பிரச்சனை ஏற்பட்டு காப்பி செய்யப்படுவது பாதியில் நின்று விடும். நமக்கு தேவையான பைல்களை காப்பி செய்ய இயலாமல் போகும் நிலை நமக்கு ஏற்பட்டு விடும். இது போன்ற நிலைக்கு இணையத்தில் சில மென்பொருள் இலவசமாக கிடைக்கின்றன. அதனை பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 1. காப்பி ஹெண்டிலர் 1.3 இது இணையத்தில் கிடைக்கும் ஒரு இலவச மென்பொருள். இதன் மூலம் காப்பி செய்யப்படும் சாதாரண கோப்புகளானது 154 வினாடி வீதமும் ஐ.எஸ்.ஒ போன்ற கோப்புகளை 141 வினாடிகளுக்குள்ளும், ஒரு கணிணியில் இருந்து மற்றொரு கணிணிக்கு கோப்புகளை காப்பி செய்யப்படும் போது 98 வினாடிகுள்ளும் அனைத்து பைல்களை எந்த ஒரு தவறு இல்லாமல் காப்பி செய்துவிடுகின்றது. Copy Handler மேலும் காப்பி செய்யும் போது நிறுத்தி கொள்ளவும், தவறு ஏற்படின் மீண்டும் முதலில் இருந்து காப்பி செய்யம் இதில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும் 2. எக்ஸ் டீரிம் காப்பி 2.1.0 இது இரண்டு விதமாக இணைத்தில் கிடைக்கின்றது. இலவசமாகவும் இதன் சீரியல் நெம்பரை பயன்படுத்தி முழு வெர்சன்களாகவும் பயன்படுத்தி கொள்ளுமாறு இணையத்தில் கிடைக்கின்றது. இதன் மூலம் காப்பி செய்யப்படும் சாதாரண கோப்புகள் மற்றும் இமேஜ் போன்ற பைல்களையும் காப்பி செய்கின்றது. அனைத்து பைல்களை எந்த ஒரு தவறு இல்லாமல் காப்பி செய்துவிடுகின்றது. காப்பி செய்யப்படும் போது பாஸ் காப்பி மற்றும் கேன்சல் போன்ற ஆப்சென்கள் மட்டும் வருகிற்து. ExtremeCopy மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும் 3. பாஸ்ட் காப்பி 2.11 காப்பி செய்யப்படும் மென்பொருள்களில் இணையத்தில் அதிகமான மக்களால் பரிந்துரை செய்யப்பட்ட மென்பொருள் இது. காப்பி செய்யப்படும் வேகத்தின் அளவை அதிகரிக்க பல்வேறு மெனுக்கள் இதில் தரப்பட்டுள்ளது. சாதாரண கோப்புகளானது 1: 110 வினாடி வீதமும் ஐ.எஸ்.ஒ போன்ற கோப்புகளை 1 : 86 வினாடி, ஒரு கணிணியில் இருந்து மற்றொரு கணிணிக்கு கோப்புகளை காப்பி செய்யப்படும் போது 1: 79 வினாடிக்கு அனைத்து பைல்களை எந்த ஒரு தவறு இல்லாமல் காப்பி செய்துவிடுகின்றது. தவறு ஏற்படின் மீண்டும் முதலில் இருந்து காப்பி செய்யம் இதில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும் FastCopy 4. எப் எப் காப்பி 1.0 இது இணையத்தில் கிடைக்கும் இலவச மென்பொருள். மற்றபடி மேலே குறிப்பிட்ட படி மென்பொருள்களின் போல தான் இதுவும் வேலை செய்கின்றது. சாதாரண கோப்புகளை 1: 163 வினாடி வீதமும் ஐ.எஸ்.ஒ போன்ற கோப்புகளை 1 : 86 வினாடிக்குள்ளும் காப்பி செய்கின்றது., ஒரு கணிணியில் இருந்து மற்றொரு கணிணிக்கு கோப்புகளை காப்பி செய்யும் போது மட்டும் இதில் தவறு அடிக்கடி ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும் FF Copy காப்பி / பேஸ்ட் செய்ய . மொத்தம் 16 மென்பொருள்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Copy and WIN : http://ow.ly/KNICZ
அதிவேகமாக காப்பி செய்யும் சாப்வேர்கள் நாம் பெரும்பாலான கோப்புகளை நகலெடுக்கவும், ஒட்டவும், சில குறுக்கு வழிகளை பயன்படுத்துவோம். அல்லது சுட்டியை பயன்படுத்தி இழுத்து விடுவோம். இப்படி செய்யும் போது ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் கோப்பின் அளவு பெரியதாக இருந்தாலோ அல்லது வைரஸ் ஏதேனும் இருந்தாலோ இதில் பிரச்சனை ஏற்பட்டு காப்பி செய்யப்படுவது பாதியில் நின்று விடும். நமக்கு தேவையான பைல்களை காப்பி செய்ய இயலாமல் போகும் நிலை நமக்கு ஏற்பட்டு விடும். இது போன்ற நிலைக்கு இணையத்தில் சில மென்பொருள் இலவசமாக கிடைக்கின்றன. அதனை பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 1. காப்பி ஹெண்டிலர் 1.3 இது இணையத்தில் கிடைக்கும் ஒரு இலவச மென்பொருள். இதன் மூலம் காப்பி செய்யப்படும் சாதாரண கோப்புகளானது 154 வினாடி வீதமும் ஐ.எஸ்.ஒ போன்ற கோப்புகளை 141 வினாடிகளுக்குள்ளும், ஒரு கணிணியில் இருந்து மற்றொரு கணிணிக்கு கோப்புகளை காப்பி செய்யப்படும் போது 98 வினாடிகுள்ளும் அனைத்து பைல்களை எந்த ஒரு தவறு இல்லாமல் காப்பி செய்துவிடுகின்றது. Copy Handler மேலும் காப்பி செய்யும் போது நிறுத்தி கொள்ளவும், தவறு ஏற்படின் மீண்டும் முதலில் இருந்து காப்பி செய்யம் இதில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும் 2. எக்ஸ் டீரிம் காப்பி 2.1.0 இது இரண்டு விதமாக இணைத்தில் கிடைக்கின்றது. இலவசமாகவும் இதன் சீரியல் நெம்பரை பயன்படுத்தி முழு வெர்சன்களாகவும் பயன்படுத்தி கொள்ளுமாறு இணையத்தில் கிடைக்கின்றது. இதன் மூலம் காப்பி செய்யப்படும் சாதாரண கோப்புகள் மற்றும் இமேஜ் போன்ற பைல்களையும் காப்பி செய்கின்றது. அனைத்து பைல்களை எந்த ஒரு தவறு இல்லாமல் காப்பி செய்துவிடுகின்றது. காப்பி செய்யப்படும் போது பாஸ் காப்பி மற்றும் கேன்சல் போன்ற ஆப்சென்கள் மட்டும் வருகிற்து. ExtremeCopy மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும் 3. பாஸ்ட் காப்பி 2.11 காப்பி செய்யப்படும் மென்பொருள்களில் இணையத்தில் அதிகமான மக்களால் பரிந்துரை செய்யப்பட்ட மென்பொருள் இது. காப்பி செய்யப்படும் வேகத்தின் அளவை அதிகரிக்க பல்வேறு மெனுக்கள் இதில் தரப்பட்டுள்ளது. சாதாரண கோப்புகளானது 1: 110 வினாடி வீதமும் ஐ.எஸ்.ஒ போன்ற கோப்புகளை 1 : 86 வினாடி, ஒரு கணிணியில் இருந்து மற்றொரு கணிணிக்கு கோப்புகளை காப்பி செய்யப்படும் போது 1: 79 வினாடிக்கு அனைத்து பைல்களை எந்த ஒரு தவறு இல்லாமல் காப்பி செய்துவிடுகின்றது. தவறு ஏற்படின் மீண்டும் முதலில் இருந்து காப்பி செய்யம் இதில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும் FastCopy 4. எப் எப் காப்பி 1.0 இது இணையத்தில் கிடைக்கும் இலவச மென்பொருள். மற்றபடி மேலே குறிப்பிட்ட படி மென்பொருள்களின் போல தான் இதுவும் வேலை செய்கின்றது. சாதாரண கோப்புகளை 1: 163 வினாடி வீதமும் ஐ.எஸ்.ஒ போன்ற கோப்புகளை 1 : 86 வினாடிக்குள்ளும் காப்பி செய்கின்றது., ஒரு கணிணியில் இருந்து மற்றொரு கணிணிக்கு கோப்புகளை காப்பி செய்யும் போது மட்டும் இதில் தவறு அடிக்கடி ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும் FF Copy காப்பி / பேஸ்ட் செய்ய . மொத்தம் 16 மென்பொருள்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Copy and WIN : http://ow.ly/KNICZ
அதிவேகமாக காப்பி செய்யும் சாப்வேர்கள் நாம் பெரும்பாலான கோப்புகளை நகலெடுக்கவும், ஒட்டவும், சில குறுக்கு வழிகளை பயன்படுத்துவோம். அல்லது சுட்டியை பயன்படுத்தி இழுத்து விடுவோம். இப்படி செய்யும் போது ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் கோப்பின் அளவு பெரியதாக இருந்தாலோ அல்லது வைரஸ் ஏதேனும் இருந்தாலோ இதில் பிரச்சனை ஏற்பட்டு காப்பி செய்யப்படுவது பாதியில் நின்று விடும். நமக்கு தேவையான பைல்களை காப்பி செய்ய இயலாமல் போகும் நிலை நமக்கு ஏற்பட்டு விடும். இது போன்ற நிலைக்கு இணையத்தில் சில மென்பொருள் இலவசமாக கிடைக்கின்றன. அதனை பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 1. காப்பி ஹெண்டிலர் 1.3 இது இணையத்தில் கிடைக்கும் ஒரு இலவச மென்பொருள். இதன் மூலம் காப்பி செய்யப்படும் சாதாரண கோப்புகளானது 154 வினாடி வீதமும் ஐ.எஸ்.ஒ போன்ற கோப்புகளை 141 வினாடிகளுக்குள்ளும், ஒரு கணிணியில் இருந்து மற்றொரு கணிணிக்கு கோப்புகளை காப்பி செய்யப்படும் போது 98 வினாடிகுள்ளும் அனைத்து பைல்களை எந்த ஒரு தவறு இல்லாமல் காப்பி செய்துவிடுகின்றது. Copy Handler மேலும் காப்பி செய்யும் போது நிறுத்தி கொள்ளவும், தவறு ஏற்படின் மீண்டும் முதலில் இருந்து காப்பி செய்யம் இதில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும் 2. எக்ஸ் டீரிம் காப்பி 2.1.0 இது இரண்டு விதமாக இணைத்தில் கிடைக்கின்றது. இலவசமாகவும் இதன் சீரியல் நெம்பரை பயன்படுத்தி முழு வெர்சன்களாகவும் பயன்படுத்தி கொள்ளுமாறு இணையத்தில் கிடைக்கின்றது. இதன் மூலம் காப்பி செய்யப்படும் சாதாரண கோப்புகள் மற்றும் இமேஜ் போன்ற பைல்களையும் காப்பி செய்கின்றது. அனைத்து பைல்களை எந்த ஒரு தவறு இல்லாமல் காப்பி செய்துவிடுகின்றது. காப்பி செய்யப்படும் போது பாஸ் காப்பி மற்றும் கேன்சல் போன்ற ஆப்சென்கள் மட்டும் வருகிற்து. ExtremeCopy மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும் 3. பாஸ்ட் காப்பி 2.11 காப்பி செய்யப்படும் மென்பொருள்களில் இணையத்தில் அதிகமான மக்களால் பரிந்துரை செய்யப்பட்ட மென்பொருள் இது. காப்பி செய்யப்படும் வேகத்தின் அளவை அதிகரிக்க பல்வேறு மெனுக்கள் இதில் தரப்பட்டுள்ளது. சாதாரண கோப்புகளானது 1: 110 வினாடி வீதமும் ஐ.எஸ்.ஒ போன்ற கோப்புகளை 1 : 86 வினாடி, ஒரு கணிணியில் இருந்து மற்றொரு கணிணிக்கு கோப்புகளை காப்பி செய்யப்படும் போது 1: 79 வினாடிக்கு அனைத்து பைல்களை எந்த ஒரு தவறு இல்லாமல் காப்பி செய்துவிடுகின்றது. தவறு ஏற்படின் மீண்டும் முதலில் இருந்து காப்பி செய்யம் இதில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும் FastCopy 4. எப் எப் காப்பி 1.0 இது இணையத்தில் கிடைக்கும் இலவச மென்பொருள். மற்றபடி மேலே குறிப்பிட்ட படி மென்பொருள்களின் போல தான் இதுவும் வேலை செய்கின்றது. சாதாரண கோப்புகளை 1: 163 வினாடி வீதமும் ஐ.எஸ்.ஒ போன்ற கோப்புகளை 1 : 86 வினாடிக்குள்ளும் காப்பி செய்கின்றது., ஒரு கணிணியில் இருந்து மற்றொரு கணிணிக்கு கோப்புகளை காப்பி செய்யும் போது மட்டும் இதில் தவறு அடிக்கடி ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும் FF Copy காப்பி / பேஸ்ட் செய்ய . மொத்தம் 16 மென்பொருள்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Copy and WIN : http://ow.ly/KNICZ
அதிவேகமாக காப்பி செய்யும் சாப்வேர்கள் நாம் பெரும்பாலான கோப்புகளை நகலெடுக்கவும், ஒட்டவும், சில குறுக்கு வழிகளை பயன்படுத்துவோம். அல்லது சுட்டியை பயன்படுத்தி இழுத்து விடுவோம். இப்படி செய்யும் போது ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் கோப்பின் அளவு பெரியதாக இருந்தாலோ அல்லது வைரஸ் ஏதேனும் இருந்தாலோ இதில் பிரச்சனை ஏற்பட்டு காப்பி செய்யப்படுவது பாதியில் நின்று விடும். நமக்கு தேவையான பைல்களை காப்பி செய்ய இயலாமல் போகும் நிலை நமக்கு ஏற்பட்டு விடும். இது போன்ற நிலைக்கு இணையத்தில் சில மென்பொருள் இலவசமாக கிடைக்கின்றன. அதனை பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 1. காப்பி ஹெண்டிலர் 1.3 இது இணையத்தில் கிடைக்கும் ஒரு இலவச மென்பொருள். இதன் மூலம் காப்பி செய்யப்படும் சாதாரண கோப்புகளானது 154 வினாடி வீதமும் ஐ.எஸ்.ஒ போன்ற கோப்புகளை 141 வினாடிகளுக்குள்ளும், ஒரு கணிணியில் இருந்து மற்றொரு கணிணிக்கு கோப்புகளை காப்பி செய்யப்படும் போது 98 வினாடிகுள்ளும் அனைத்து பைல்களை எந்த ஒரு தவறு இல்லாமல் காப்பி செய்துவிடுகின்றது. Copy Handler மேலும் காப்பி செய்யும் போது நிறுத்தி கொள்ளவும், தவறு ஏற்படின் மீண்டும் முதலில் இருந்து காப்பி செய்யம் இதில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும் 2. எக்ஸ் டீரிம் காப்பி 2.1.0 இது இரண்டு விதமாக இணைத்தில் கிடைக்கின்றது. இலவசமாகவும் இதன் சீரியல் நெம்பரை பயன்படுத்தி முழு வெர்சன்களாகவும் பயன்படுத்தி கொள்ளுமாறு இணையத்தில் கிடைக்கின்றது. இதன் மூலம் காப்பி செய்யப்படும் சாதாரண கோப்புகள் மற்றும் இமேஜ் போன்ற பைல்களையும் காப்பி செய்கின்றது. அனைத்து பைல்களை எந்த ஒரு தவறு இல்லாமல் காப்பி செய்துவிடுகின்றது. காப்பி செய்யப்படும் போது பாஸ் காப்பி மற்றும் கேன்சல் போன்ற ஆப்சென்கள் மட்டும் வருகிற்து. ExtremeCopy மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும் 3. பாஸ்ட் காப்பி 2.11 காப்பி செய்யப்படும் மென்பொருள்களில் இணையத்தில் அதிகமான மக்களால் பரிந்துரை செய்யப்பட்ட மென்பொருள் இது. காப்பி செய்யப்படும் வேகத்தின் அளவை அதிகரிக்க பல்வேறு மெனுக்கள் இதில் தரப்பட்டுள்ளது. சாதாரண கோப்புகளானது 1: 110 வினாடி வீதமும் ஐ.எஸ்.ஒ போன்ற கோப்புகளை 1 : 86 வினாடி, ஒரு கணிணியில் இருந்து மற்றொரு கணிணிக்கு கோப்புகளை காப்பி செய்யப்படும் போது 1: 79 வினாடிக்கு அனைத்து பைல்களை எந்த ஒரு தவறு இல்லாமல் காப்பி செய்துவிடுகின்றது. தவறு ஏற்படின் மீண்டும் முதலில் இருந்து காப்பி செய்யம் இதில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும் FastCopy 4. எப் எப் காப்பி 1.0 இது இணையத்தில் கிடைக்கும் இலவச மென்பொருள். மற்றபடி மேலே குறிப்பிட்ட படி மென்பொருள்களின் போல தான் இதுவும் வேலை செய்கின்றது. சாதாரண கோப்புகளை 1: 163 வினாடி வீதமும் ஐ.எஸ்.ஒ போன்ற கோப்புகளை 1 : 86 வினாடிக்குள்ளும் காப்பி செய்கின்றது., ஒரு கணிணியில் இருந்து மற்றொரு கணிணிக்கு கோப்புகளை காப்பி செய்யும் போது மட்டும் இதில் தவறு அடிக்கடி ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும் FF Copy காப்பி / பேஸ்ட் செய்ய . மொத்தம் 16 மென்பொருள்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Copy and WIN : http://ow.ly/KNICZ

Popular Posts

Facebook

Blog Archive