சனி, 23 மே, 2015
திங்கள், 27 ஏப்ரல், 2015
நண்பர்களே Facebook Fake id பற்றிய முழுமையான விவரம் இதில் உள்ளது..
Author: Infomas | ஏப்ரல் 27, 2015 |
இந்த பதிவு உங்களுக்காக நண்பர்களே Facebook Fake id பற்றிய முழுமையான விவரம் இதில் உள்ளது ஒவ்வொறு முறையும் நீங்கள் ஏமாறுவதை என்னால் பாக்க முடியல அதான் இத பத்தி full details ah post panren.:-
1. Facebook la Fake id create பன்றவங்க சம்மந்தமே இல்லாம தான் name வைப்பாங்க. So அவங்க profile and name ah paathaley pothum. கண்டுபுடிச்சிடலாம்
2. Profile la baby photo. Flowers photos மட்டும் இருந்தா அது fake id than.
3. Id create panathula இருந்து ஒரு பதிவு கூட போடாம just profile picture change panitu iruntha அது 100 percent Fake.
4. Friend list la உங்கள தவிற வேரு யாரும் இல்லைனா. அது வேற யாரும் இல்ல உங்க friend than Fake id create panni உங்கள ஓட்டுரான்
5. ஒரே பெண்ணின் ஐந்து அல்லது பத்து photos ah profile la add panni. அது original id தான் னு நம்ப வச்சிடுவாங்க.
(Note: - Girls உங்க photo va fb la upload panaathinga nu solrathuku main reason ithu thaan pa. )
6. Chatting la :- start pannathum hi dear, chellam, Darling nu sonna. யோசிக்காம unfriend panidunga. Athu Fake id than. Because எந்த பொன்னும் தெரியாத ஒரு நபரை இப்படி கூப்பிட மாடாங்க
7. Oru girl ah impress panrathukaaga Fake id create panni. அந்த girl kitta. Avanga original id ya kaamichu. Ithu enoda brother than romba nallavaru vallavaru னு பெருமையா பேசி. நம்பவச்சிடுவாங்க.
( note:- So girls நீங்க என்னோட sister maadri . So konjam carefull ah irunga pa. )
8. Fake id create panravanga நோக்கம் ஒன்று தான் அது வேற எதுவும் இல்ல likes varaatha problem than. தன்னோட பதிவுக்கு like varala nu than. Fake id create panraanga.
9. அப்ப Facebook la பொன்னுங்களே இல்லையா??? னு உங்களுக்கு சந்தேகம் வரும். Dont worry இருக்காங்க but அவங்க maximum Facebook use panna maataanga. 8.30 ku mela chat pana maataanga. அதனால் தான் பசங்கள விட பொன்னுங்க அதிக marks vaanguraanga.
10. 9oclock ku mela oru girl online la iruntha. Athu Fake id. Otherwise antha ponnu avan lover kita pesurathuku use panraanga nu artham.
11. Oru girl id oda first name ku pinadi (ammu, chellam, kutty, ) intha madri illaama. avanga father name irunthuchuna. Athu romba nalla ponnu. But avanga unga request ta eppavumey accept pana maataanga.
12. உங்களுக்காக நா இத type pannirukan. Because Fake id மூலம் பாதிக்க பட்டவர்களுள் நானும் ஒருவன் இனிமே யார்கிட்டையும் ஏமாறாதீர்கள். உஷார் Ah irunga.
( இந்த பதிவு பிடித்திருந்தால் like pannunga. ரொம்ப பிடித்திருந்தால் share pananunga. ரொம்ப ரொம்ப பிடித்திருந்தால் உங்க wishes ah inbox la solunga )
ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்!/ Let's Spread Aathisudi to the World!!
Author: Infomas | ஏப்ரல் 27, 2015 |
ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்!/
Let's Spread Aathisudi to the World!
1. அறம் செய விரும்பு /
1. Learn to love virtue.
2. ஆறுவது சினம் /
2. Control anger.
3. இயல்வது கரவேல் /
3. Don't forget Charity.
4. ஈவது விலக்கேல் /
4. Don't prevent philanthropy.
5. உடையது விளம்பேல் /
5. Don't betray confidence.
6. ஊக்கமது கைவிடேல் /
6. Don't forsake motivation.
7. எண் எழுத்து இகழேல் /
7. Don't despise learning.
8. ஏற்பது இகழ்ச்சி /
8. Don't freeload.
9. ஐயம் இட்டு உண் /
9. Feed the hungry and then feast.
10. ஒப்புரவு ஒழுகு /
10. Emulate the great.
11. ஓதுவது ஒழியேல் /
11. Discern the good and learn.
12. ஒளவியம் பேசேல் /
12. Speak no envy.
13. அகம் சுருக்கேல் /
13. Don't shortchange.
14. கண்டொன்று சொல்லேல்/
14. Don't flip-flop.
15. ஙப் போல் வளை /
15. Bend to befriend.
16. சனி நீராடு /
16. Shower regularly.
17. ஞயம்பட உரை /
17. Sweeten your speech.
18. இடம்பட வீடு எடேல் /
18. Judiciously space your home.
19. இணக்கம் அறிந்து இணங்கு /
19. Befriend the best.
20. தந்தை தாய்ப் பேண் /
20. Protect your parents.
21. நன்றி மறவேல் /
21. Don't forget gratitude.
22. பருவத்தே பயிர் செய் /
22. Husbandry has its season.
23. மண் பறித்து உண்ணேல் /
23. Don't land-grab.
24. இயல்பு அலாதன செய்யேல் /
24. Desist demeaning deeds.
25. அரவம் ஆட்டேல் /
25. Don't play with snakes.
26. இலவம் பஞ்சில் துயில் /
26. Cotton bed better for comfort.
27. வஞ்சகம் பேசேல் /
27. Don't sugar-coat words.
28. அழகு அலாதன செய்யேல் /
28. Detest the disorderly.
29. இளமையில் கல் /
29. Learn when young.
30. அரனை மறவேல் /
30. Cherish charity.
31. அனந்தல் ஆடேல் /
31. Over sleeping is obnoxious.
32. கடிவது மற /
32. Constant anger is corrosive.
33. காப்பது விரதம் /
33. Saving lives superior to fasting.
34. கிழமைப்பட வாழ் /
34. Make wealth beneficial.
35. கீழ்மை அகற்று /
35. Distance from the wicked.
36. குணமது கைவிடேல் /
36. Keep all that are useful.
37. கூடிப் பிரியேல் /
37. Don't forsake friends.
38. கெடுப்பது ஒழி /
38. Abandon animosity.
39. கேள்வி முயல் /
39. Learn from the learned.
40. கைவினை கரவேல் /
40. Don't hide knowledge.
41. கொள்ளை விரும்பேல் /
41. Don't swindle.
42. கோதாட்டு ஒழி /
42. Ban all illegal games.
43. கெளவை அகற்று /
43. Don't vilify.
44. சக்கர நெறி நில் /
44. Honor your Lands Constitution.
45. சான்றோர் இனத்து இரு /
45. Associate with the noble.
46. சித்திரம் பேசேல் /
46. Stop being paradoxical.
47. சீர்மை மறவேல் /
47. Remember to be righteous.
48. சுளிக்கச் சொல்லேல் /
48. Don't hurt others feelings.
49. சூது விரும்பேல் /
49. Don't gamble.
50. செய்வன திருந்தச் செய் /
50. Action with perfection.
51. சேரிடம் அறிந்து சேர் /
51. Seek out good friends.
52. சையெனத் திரியேல் /
52. Avoid being insulted.
53. சொற் சோர்வு படேல் /
53. Don't show fatigue in conversation.
54. சோம்பித் திரியேல் /
54. Don't be a lazybones.
55. தக்கோன் எனத் திரி /
55. Be trustworthy.
56. தானமது விரும்பு /
56. Be kind to the unfortunate.
57. திருமாலுக்கு அடிமை செய் /
57. Serve the protector.
58. தீவினை அகற்று /
58. Don't sin.
59. துன்பத்திற்கு இடம் கொடேல் /
59. Don't attract suffering.
60. தூக்கி வினை செய் /
60. Deliberate every action.
61. தெய்வம் இகழேல் /
61. Don't defame the divine.
62. தேசத்தோடு ஒட்டி வாழ் /
62. Live in unison with your countrymen.
63. தையல் சொல் கேளேல் /
63. Don't listen to the designing.
64. தொன்மை மறவேல் /
64. Don't forget your past glory.
65. தோற்பன தொடரேல் /
65. Don't compete if sure of defeat.
66. நன்மை கடைப்பிடி /
66. Adhere to the beneficial.
67. நாடு ஒப்பன செய் /
67. Do nationally agreeables.
68. நிலையில் பிரியேல் /
68. Don't depart from good standing.
69. நீர் விளையாடேல் /
69. Don't jump into a watery grave.
70. நுண்மை நுகரேல் /
70. Don't over snack.
71. நூல் பல கல் /
71. Read variety of materials.
72. நெற்பயிர் விளைவு செய் /
72. Grow your own staple.
73. நேர்பட ஒழுகு /
73. Exhibit good manners always.
74. நைவினை நணுகேல் /
74. Don't involve in destruction.
75. நொய்ய உரையேல் /
75. Don't dabble in sleaze.
76. நோய்க்கு இடம் கொடேல் /
76. Avoid unhealthy lifestyle.
77. பழிப்பன பகரேல் /
77. Speak no vulgarity.
78. பாம்பொடு பழகேல் /
78. Keep away from the vicious.
79. பிழைபடச் சொல்லேல் /
79. Watch out for self incrimination.
80. பீடு பெற நில் /
80. Follow path of honor.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் /
81. Protectyour benefactor.
82. பூமி திருத்தி உண் /
82. Cultivate the land and feed.
83. பெரியாரைத் துணைக் கொள் /
83. Seek help from the old and wise.
84. பேதைமை அகற்று /
84. Eradicate ignorance.
85. பையலோடு இணங்கேல் /
85. Don't comply with idiots.
86. பொருள்தனைப் போற்றி வாழ் /
86. Protect and enhance your wealth.
87. போர்த் தொழில் புரியேல் /
87. Don't encourage war.
88. மனம் தடுமாறேல் /
88. Don't vacillate.
89. மாற்றானுக்கு இடம் கொடேல் /
89. Don't accommodate your enemy.
90. மிகைபடச் சொல்லேல் /
90. Don't over dramatize.
91. மீதூண் விரும்பேல் /
91. Don't be a glutton.
92. முனைமுகத்து நில்லேல் /
92. Don't join an unjust fight.
93. மூர்க்கரோடு இணங்கேல் /
93. Don't agree with the stubborn.
94. மெல்லி நல்லாள் தோள்சேர் /
94. Stick with your exemplary wife.
95. மேன்மக்கள் சொல் கேள் /
95. Listen to men of quality.
96. மை விழியார் மனை அகல் /
96. Dissociate from the jealous.
97. மொழிவது அற மொழி /
97. Speak with clarity.
98. மோகத்தை முனி /
98. Hate any desire for lust.
99. வல்லமை பேசேல் /
99. Don't self praise.
100. வாது முற்கூறேல் /
100. Don't gossip or spread rumor.
101. வித்தை விரும்பு /
101. Long to learn.
102. வீடு பெற நில் /
102. Work for a peaceful life.
103. உத்தமனாய் இரு /
103. Lead exemplary life.
104. ஊருடன் கூடி வாழ் /
104. Live amicably.
105. வெட்டெனப் பேசேல் /
105. Don't be harsh with words and deeds.
106. வேண்டி வினை செயேல்/
106. Don't premeditate harm.
107. வைகறைத் துயில் எழு /
107. Be an early-riser.
108. ஒன்னாரைத் தேறேல் /
108. Never join your enemy.
109. ஓரம் சொல்லேல் /
109. Be impartial in judgement.
/ Avvaiyaar.
வெள்ளி, 24 ஏப்ரல், 2015
நீங்கள் எந்த அளவு அதிர்ஷ்டசாலி? இத படிங்க....
Author: Infomas | ஏப்ரல் 24, 2015 |
இதை படிப்பதால் உங்கள் வாழ்கை முறை, கவலைகள், பழக்க வழக்கங்களில் கூட மாற்றம் ஏற்படலாம் ஐந்த நிமிடம் செலவிட்டு இதைப் படியுங்கள்.....
* உண்ண உணவும், உடுக்க உடையும், வசிக்க இடமும் உனக்கு இருந்தால் உலகில் உள்ள 75% மக்களைவிட அதிக வசதிகளை நீ பெற்றிருக்கிறாய்.
* வங்கியில் உனக்குப் பணமிருந்தால் அவ்வாறு உள்ள 8% பணக்காரர்களுள் நீயும் ஒருவன். (80% மக்களுக்கு வங்கிக் கணக்கே இல்லை!)
* உன்னிடம் கணிப்பொறி இருந்தால் நீ அவ்வாறு வாய்ப்பு பெற்ற 1% மனிதர்களுள் ஒருவன்.
* நினைத்த நேரத்தில் நினைத்த நபருடன் மொபைலில் உன்னால் பேச முடிந்தால் அவ்வாறு வாய்ப்பே இல்லாமல் இந்த உலகில் இருக்கும் 175 கோடி மக்களை விட நீ மேலானவன்.
* நோயின்றி, காலையில் புத்துணர்வுடன் நீ எழுந்தால், அந்த வாய்ப்பற்று இரவு படுக்கையிலேயே உயிர் துறந்த பலரைவிட நீ பாக்கியவான்.
* பார்வையின்மை, செவித்திறன் குறைபாடு, வாய் பேசாமை, உள்ளிட்ட எந்த குறைபாடுகளும் இல்லாது நீ இருந்தால் அவ்வாறு உள்ள 20 கோடி மக்களை விட நீ நல்ல நிலையில் இருக்கின்றாய்.
* போர், சிறைத்தண்டனை, பட்டினி போன்ற சித்ரவதையில் நீ சிக்காமல் இருந்தால், உனக்கு உலகிலுள்ள 70 கோடி மக்களுக்குக் கிடைக்காத நல்ல வாழ்க்கை அமைந்துள்ளது என்பதை அறிந்திடு.
* கொடுமைக்கு உள்ளாக்கப்படாமல் நீ விரும்பும் தெய்வத்தைத் தொழ முடிந்தால், உலகிலுள்ள 300 கோடி மக்களுக்குக் கிடைக்காத சலுகையைப் பெற்றவன் நீ.
* உன் பெற்றோரை பிரியாமல் அவர்கள் உங்களுடன் இருந்தால் நீ துன்பத்தை அறியாதவன் என்பதைப் புரிந்து கொள்.
* தாகம் எடுத்தால் குடிப்பதற்கு உங்களுக்கு தண்ணீர் கிடைக்கிறதா? அப்படியெனில் நீங்கள் கொடுத்து வைத்தவர். ஏனெனில், உலகம் முழுதும் சுமார் 100 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு பாதுகாப்பான தண்ணீர் குடிப்பதற்கு இல்லை.
* உன்னால் தலை நிமிர்ந்து நின்று சிரிக்க முடியுமானால் அவ்வாறு செய்ய இயலாத அளவுக்குத் தைரியமும் நம்பிக்கையும் இல்லாதவர்களையும்விட நீ கொடுத்து வைத்தவன்.
*கல்வியறிவு பெற்றிருந்து இந்தச் செய்தியைப் உன்னால் படிக்க முடிந்தால் அவ்வாறு செய்ய இயலாத 80 கோடி பேர்களுக்குக் கிடைக்காத கல்வியை நீ பெற்றுள்ளாய். (உலக அளவில் எழுத படிக்க தெரியாத மக்களின் எண்ணிக்கை மட்டுமே 80 கோடிக்கும் மேல்).
* இணையத்தில் இந்த செய்தியை உன்னால் படிக்க முடிந்தால் அது கிடைக்காத 300 கோடி மக்களை விட நீ மேலானவன்.
* நீங்கள் அனுபவித்து வரும் வசதிகளையும், தொழில்நுட்பத்தையும் அனுபவிக்க இயலாமல் ஏன் அது பற்றிய அறிவு கூட இல்லாமல் கோடிக்கணக்கானோர் இந்த உலகில் இருக்க,
ஆண்டவன் இவ்வளவு விஷயம் உங்களுக்கு கொடுத்திருக்கும்போது நீங்க அதிர்ஷ்டசாலி இல்லையா பின்னே?
நீங்கள் அதிர்ஷ்டசாலிதான் வீண் கவலைகளை விட்டு அந்த கவலைகளை காரணம் காட்டி குடும்பத்தில் குழப்பங்கள், போதைப் பொருட்கள் என்பவற்றை விட்டு நான் அதிர்ஷ்டசாலி என்ற மன தைரியத்தோடு இயன்றளவு மற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள். உங்கள் வாழ்க்கை மேலும் அழகானதாகவும் சிறந்ததாகவும் அமையும்.
நன்றி
@மண்வாசனை
புதன், 15 ஏப்ரல், 2015
இணைய சமவாய்ப்பு நிலை "நெட் நியூட்ராலிட்டி"!http://www.savetheinternet.in
Author: Infomas | ஏப்ரல் 15, 2015 |
தற்போது இணையத்தில் அதிகம் பேசப்படும் விஷயம்
நெட் நியூட்ராலிட்டி.
மிகச் சுருக்கமாக சொல்வதானால் 'இதுநாள் வரை நீங்கள் இலவசமாகப் பயன்படுத்திய ஆப்ஸ்களை இனி கட்டணம் செலுத்தி பயன்படுத்த வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால், அதனால் உங்களுக்குப் பாதிப்புதானே!
அந்த நிலை ஏற்படாமல் தற்போதுள்ள இணைய சமவாய்ப்பு நிலை தொடர்வதே நெட் நியூட்ராலிடீ.
இதனால் இது பற்றி விவாதம் தற்போது சூடு பிடித்துள்ளது.
இது பற்றி தீர்மானம் செய்ய 'ட்ராய்' (TRAI) மக்களிடம் கருத்து சேகரிப்பு செய்யும் பொருட்டு 20 கேள்விகளை முன் வைத்துள்ளது.
எனவே, இந்த கட்டணத்துக்கு எதிராக, அதாவது, நெட் நியூட்ராலிட்டிக்கு ஆதரவாக, ட்ராய் கேட்கும் 20 கேள்விகளுக்கும் நமது பதிலைப் ஏப்ரல் 24ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
இதனால் நெட் நியூட்ராலிட்டிக்கு ஆதரவு பெருகும். இல்லாவிட்டால் மிகச் சிலர் சொல்லும் கருத்தை வைத்து தவறான முடிவு எடுக்க வாய்ப்புள்ளது.
ஆனால் இக்கேள்விகள் முழுவதையும் படித்து பதிலளிப்பது நம் போன்ற சாதாரண மக்களுக்கு மிகக்கடினம்.
இதற்காகவே
>> http://www.savetheinternet.in
என்ற தளம் தொடங்கப்பட்டுள்ளது.
உங்கள் கணினி மற்றும் மொபைல் ப்ரவுஸரில் இருந்து இத்தளத்தை திறந்தால் அந்த அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதில்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
மேலும்
அவை தானாக நமது ஈமெயில் செயலி வழியாக ட்ராய் க்கு செல்லும் வகையிலும் கூட வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இணைய சமதன்மையைப் பாதுகாக்க தயவு செய்து விரைந்து செயல்படுங்கள். உங்களது ஒரு மின்னஞ்சல் நாளைய செல்போன் கட்டணத்தை தீர்மானிப்பவையாக இருக்கக் கூடும்.
http://www.savetheinternet.in
உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.!!
YOUTUBE வீடியோகளை ANDROID தொலைபேசிகளில் தரவிறக்கம் செய்ய உதவும் (Application) மென்பொருள்
Author: Infomas | ஏப்ரல் 15, 2015 |
செவ்வாய், 14 ஏப்ரல், 2015
Keyboard-ல் இல்லாத நூற்றுகணக்கான Special Character-களை உபயோகிக்க
Author: Infomas | ஏப்ரல் 14, 2015 |
இதில் உங்களுக்கு தேவையான special character மீது click செய்தால் அந்த special character copy செய்யப்படும். மேலே உள்ள படத்தில் நான் வட்டமிட்டு காட்டி இருப்பதை adjust செய்து special character அளவை பெரிது படுத்தி கொள்ளலாம்.
www.masinfom.blogspot.in
வைரஸ் தாக்கிய Pen drive ல் இருந்து பைல்களை மீட்டெடுக்க
Author: Infomas | ஏப்ரல் 14, 2015 |
தற்பொழுது தகவல்களை சேமிக்க பயன் படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கிய மான பிரச்சினை வைரஸ் பிரச்சினை வெவ்வேறான கணினிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும் பைல்களை பாதிக்கிறது. இப்படி பாதிக்கும் பொழுது உங்கள் பென்ட்ரைவில் உள்ள பைல்கள் மறைக்க பட்டுவிடும் கணினியில் பென்டிரைவை ஓபன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது காலியாக இருக்கும் ஆனால் properties சென்று பார்த்தால்பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தகவல் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.
இதற்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணினியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுக்கலாம்.
1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.
5) attrib -s -h /s /d *.* என டைப் செய்யுங்கள் ஒவ்வொரு பகுதிக்கும் Space சரியாக கொடுக்கவும். உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும் உங்களின் விண்டோ இது போல இருக்க வேண்டும்.
- நீங்கள் சரியாக கொடுத்து உள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.
- சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும்.
VLC மீடியா பிளெயரில் மறைந்து உள்ள 3 ரகசிய பயன்பாடுகள்
Author: Infomas | ஏப்ரல் 14, 2015 |
கணினி உபயோகிக்கும் அனைவரும் VLC மீடியா பிளேயரை பற்றி அறிந்திருப்போம். கணினியில் வீடியோ ஆடியோ பைல்களை இயக்க உதவும் இலவச மென்பொருள். இந்த மென்பொருளில் ஏராளமான வசதிகள் உள்ளது. மற்றும் இந்த மென்பொருள் வெறும் பிளேயராக மட்டும் இல்லாமல் சில மற்ற வசதிகளையும் கொண்டுள்ளது. ஆனால் பெருமாலானவர்கள் அந்த வசதிகள் இருப்பது கூட தெரியாமல் அதற்கென தனித்தனி மென்பொருட்களை உபயோகித்து கொண்டிருக்கின்றனர். அதன் படி VLC மீடியா ப்ளேயரில் மறைந்து உள்ள மூன்று ரகசிய வசதிகளை பற்றி இங்கு காண்போம்.
- அடுத்து Destination file என்பதில் Browse கிளிக் செய்து உங்கள் பைல் சேமிக்க வேண்டிய இடத்தை தேர்வு செய்து கொள்ளவும். அடுத்து மேலே படத்தில் காட்டியுள்ள பட்டனில் கிளிக் செய்து உங்கள் வீடியோ பார்மட் தேர்வு செய்து கொள்ளுங்கள்.
http://www.masinfom.blogspot.in/
பள்ளிக் குழந்தைகளுக்கான 5 திறந்த மூல மென்பொருள்கள்
Author: Infomas | ஏப்ரல் 14, 2015 |
இசுட்டெல்லேரியம் (Stellarium) என்பது வானிலுள்ள கோள்களின் உருவ அமைப்பை காண உதவும்.
கால்சியம் (Kalzium) என்பது கட்டற்ற ஆவர்த்தன (Periodical table) அட்டவணை
மென்பொருள். இது தனிமங்களை பற்றிய விவரங்கள் அறிந்து கொள்ள உதவும் தொழில்நுட்பம்.
கிம்ப் (GIMP அல்லது GNU Image Manipulation Program) என்பது ‘அடோப் ஃபோட்டோஷாப்’ மென்பொருளுக்கு நிகராக உருவாக்கப்பட்ட ஒரு பொது நிரலாக்க மென்பொருள் ஆகும்.
கேந்திரிய வித்யாலயா,
புதுச்சேரி.
திங்கள், 13 ஏப்ரல், 2015
வைரஸிற்கு ஆப்பு வைப்பது எப்படி?
Author: Infomas | ஏப்ரல் 13, 2015 |
முதலில் உங்கள் கணினியின் Desktop ல் Flash எனும் பெயரில் அல்லது உங்கள் பெயரில் Folder அதன்பின் நீங்கள் Shift key ஐ அழுத்திக் கொண்டு Flash அல்லது Momory Card ஐ கணினியில் இணைக்க வேண்டும்.(வைரஸ் தானாக பரவாமல் தடுக்க..)
My Computer ல் Right Click செய்ய வரும் Window ல் Manage ல் Click செய்ய Computer Management வரும். அதில் Disk Management ஐ தெரிவுசெய்தால் உங்கள் கணினியில் இருக்கும் Drive கள் தோன்றும். அதில் உங்கள் Flash ஐ Right Click செய்ய வரும் Window ல் Change Drive Letter and Paths ல் Click செய்ய வரும் Window ல் Remove எனும் Button ஐ Click பண்ணியபின் வரும் Confirm Message Box ல் Yes ஐ தெரிவு செய்யுங்கள்.
அதன் திருப்ப உங்கள் Flash I Right Click செய்து Change Drive Letter and Paths ல் Click செய்து பின் Add எனும் Button ஐ Click பண்ணுங்கள். பின் Mount in the following empty NTFS folder ஐ தெரிவு செய்தபின் Browse ஐ Click பண்ணுங்கள். அதன்பின் தோன்றும் Window ல் நீங்கள் Desktop ல் உருவாக்கிய Folder ஐ தெரிவு செய்யுங்கள். பின் OK ஐ click பண்ணுங்கள். இப்போது உங்கள் கணினியின் My Computer ல் இருந்து உங்கள் Flash மறைந்துவிடும். Desktop ல் நீங்கள் உருவாக்கிய Folder உங்கள் Flash ஆக மாறிவிடும்.
உங்கள் Flash ல் வைரஸ் இருந்தால் உங்கள் Flash ஐ உங்கள் கணியுடன் இணைக்கும் போது Auto வாக உங்கள் கணினிக்கு வைரஸ் வராது தடுக்கப்படும். அதேபோல் உங்கள் கணினியில் வைரஸ் இருந்தால் கணினியின் My Computer ல் Flash இல்லாததால் Flash ற்கு வைரஸ் வராது தடுக்கப்படும். இதனால் Flash மூலம் வைரஸ் பரவுவது தடுக்கப்படும். உங்களுக்கும் Open செய்யவும் இலகுவாக இருக்கும். Open with பிரச்சனையும் வராது.
seee more: www.masinfom.blogspot.com
ஞாயிறு, 12 ஏப்ரல், 2015
20 கூலிக்கு மாறடிக்கும் உயிர்கள் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர்
Author: Infomas | ஏப்ரல் 12, 2015 |
1. மரங்களை அவர்கள் வெட்டியதாகவே இருக்கட்டும் - வெறும் கோடாலியை வைத்து இருக்கும் ஒரு கூலி தொழிலாளியை சுட்டு கொன்றுதான் பிடிக்கவேண்டுமா? அவ்வளவு கோழைகளா நீங்கள்? இல்லை கையால் ஆகாதவர்களா?
2. இந்த துப்பாக்கி சூட்டிற்க்கு ஆணை பிரப்பித்தவர்கள்..கடத்தல்கார கும்பல் தலைவனை பிடிக்க வக்கு இல்லை..கடத்தல் தொடர்புடைய அரசியல்வாதியை பிடிக்க வக்கில்லை..ஒரு புழுவை துப்பாக்கி கொண்டு சுடுவதுதான் உங்கள் வீரமா?
3. இவர்கள் வெட்டியதாக சொல்லப்படும் மரங்களை நீங்கள் எடுத்துக்கொண்டு இவர்கள் உயிர்களை நீங்கள் திருப்பித் தர முடுயுமா?
4. மாட்டை கொன்றால் மல்லுகட்ட மாமேதைகள் பல உண்டு இங்கு ..மனுசனுக்கு இவர்கள் எங்கே போனார்கள்?
5. தொட்டதுக்கெல்லாம் வழக்கு தொடரும் மேன் மக்கள் இப்போ எங்கே போனார்கள்? மனித மிருக உரிமை பாதுகாவலர்கள் எங்கே போனார்கள்?
6. ஒரு சினிமா வெளிவரக்கூடாது என்று சிரத்தை எடுத்து அனைத்து விதங்களிளும் தடை செய்யும் விளம்பர விரும்பிகள் இப்போ எங்கே போனார்கள்?
7. ஒரு சாதியயை மதத்தை ஒரு சொல் சொல்லிவிட்டால் ஊரையே கொளுத்தி தமிழகத்தை ஒரு வழி செய்யும் இன உணர்வாளர்கள் இந்த மனிதர்களுக்கும் கொஞ்சம் உணர்வை ஏன் பகிரவில்லை? ஒரு வேளை இறந்தவர்கள் இன்ன மதம் இன்ன சாதி என்று தெரிந்திருந்தால் போராட்டம் செய்திருப்பர் போலும்..இறந்தவர்கள் கேட்பார் அற்ற மலை வாழ் மக்கள் தானே..
8. ஊழல் குற்றவாளிகளுக்கும் இங்கு பால் குடம் பூஜை அர்ச்சனை தீ மிதிக்க இங்கு தீவிர விசுவாசிகள் பலர் உண்டு...ஈன கூலி தொழிலாளிக்கு தெய்வம் வந்து தான் தீ மிதிக்கனும்.
9. பல பேரை சுட்டுக்கொள்ளும் தீவிரவாதிகளுக்கு கூட வழக்காட இங்கே வழி உண்டு..வயிற்றுப் பிழைப்புக்காக தினம் திண்டாடும் மக்களுக்கோ மரணம் அன்றி வேறு வழி இல்லை..
10. பல திருட்டு ஊழல் வழக்கில் சிக்கியவர்கள் எத்தனையோ பேர் திருப்பதி கோவிலில் தரிசிக்கிறார்கள் அவர்களை சுட தைரியம் இருக்கிறதா?
இந்த படு கொலைக்கு நீதி கிடைக்கும் வரை தமிழகம் ஓங்கி உயர்த்தி ஒரே குரலில் எதிர்ப்பு எழுப்புவதே..தமிழர் என்ற ஒற்றுமையை பிரதிபலிக்கும்.
பட்டுக்கோட்டையின் வரிகள் தான் நினைவிற்க்கு வருகிறது. "பட்ட பகல் திருடர்களை பட்டாடைகள் - கோட்டு சூட்டு மறைக்குது.... ஒரு பஞ்சை தான் எல்லாம் சேர்ந்து திருடன் என்றே உதைக்குது"
ஒரே ஒரு ஏலக்காய்..கீழ்க்காணும் நோய்கள் குணமாகும்
Author: Infomas | ஏப்ரல் 12, 2015 |
எனக்கு பசியே இல்லை அதனால் சாப்பிடவும் பிடிக்கவில்லை என்று சில கூறுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள், கேட்டிருப்பீர்க ள். அவர்கள் என்ன செய்ய வேண்டுமென்றால் தினந் தோறும் ஒரே ஒரு ஏலக்காயை எடுத்து வாயில் போ ட்டுமென்றால், நல்லபசி எடுக்கும், நன்றாக உணவை யும் சாப்பிடுவர். இதனால் ஜீரண உறுப்புகள் அனைத் தும் சீராக இயங்கி, உணவை செரிமானம் ஆகும்.
மேலும் நெஞ்சில் சளி கட்டிக் கொண்டு மூச்சு விட சிரமப்படுபவர்களும், சளியால் இருமல், அடிக்கடி வரும் வறட்டு இருமலால் உண்டாகும் வயிற்றுவலிக்கு கூட இந்த ஏலக்காய் ஒரு அருமருந்து என்றால் அது மிகையல்ல. அத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஏலக்காயை நீங்களும் மென்று சாப்பிடலாமே!
See This web: http://masinfom.blogspot.in/
மாதுளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
Author: Infomas | ஏப்ரல் 12, 2015 |
எந்த ஒரு பொருளும் எளிதில் கிடைப்பதை விட, கஷ்டப்பட்டு அடையும் போது தான், அதன் அருமை தெரியும். அதுப்போல் தான் மாதுளையை கஷ்டப்பட்டு உரித்து சாப்பிட வேண்டியிருந்தாலும், அதனால் எண்ணற்ற நன்மைகளை நாம் பெறலாம். அதிலும் இதனை அப்படியே சாப்பிட்டாலும் அல்லது ஜூஸாக செய்து குடித்தாலும், அதன் நன்மைகள் ஒன்றே. சரி, இப்போது மாதுளையை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போமா!!!
இதய ஆரோக்கியம் :-
மாதுளையில் இதயத்தைப் பாதுகாக்கும். பாலிஃபீனால்கள், டானின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருக்கிறது. இதனால் இதயத்திற்கு செல்லும் இரத்த நாளங்களில் கெட்ட கொழுப்புக்கள் படிந்து தடிப்புகள் ஏற்பட்டு, அடைப்புகள் ஏற்படுவது தடுக்கப்பட்டு, இதயம் மற்றும் மூளைக்கு இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதன் மூலம் இதய நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.
இரத்த அழுத்தம் :-
மாதுளை இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். இதில் உள்ள இயற்கையான ஆஸ்பிரின், இரத்தம் உறைவதை தடுப்பதோடு, இரத்தத்தின் அடர்த்தியைக் குறைத்து, உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
புற்றுநோயை தடுக்கிறது :-
மாதுளையை அடிக்கடி உட்கொண்டு வந்தால், அது உடலில் சரும செல்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதோடு, உடலில் தேவையற்ற புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், இரத்த வெள்ளையணுக்களை தூண்டி, கிருமிகள் மற்றும் டாக்ஸின்களை உடலில் இருந்து வெளியேற்றி, வலிமையான நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்குகிறது. முக்கியமாக ஆண்கள் இதனை குடித்து வந்தால், புரோஸ்டேட் புற்றநோய் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
வயிற்றை இதமாக்கும் :-
மாதுளை ஜூஸ் வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. அதிலும் 1 டம்ளர் மாதுளை ஜூஸில் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால், செரிமான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.
வலிமையான நோயெதிர்ப்பு மண்டலம் :-
மாதுளையில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் தன்மை அதிகம் இருப்பதால், அவற்றை சாப்பிடும் போது, உடலில் உள்ள பாக்டீரியா மற்றும் வைரஸ்களை எதிர்த்து அழித்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்குகிறது.
இரத்த சோகை :-
இரத்த சோகை உள்ளவர்கள், மாதுளையை அன்றாடம் உட்கொண்டு வந்தால் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரிக்கும். ஏனெனில் மாதுளையில் இரும்புச்சத்து அதிக அளவில் உள்ளது.
எடையைக் குறைக்கும் :-
மாதுளையில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் அதிகமாக இருப்பதால், இதனை உட்கொண்டு வந்தால், உடல் எடை கட்டுப்பாட்டுடன் இருப்பதோடு, நாள்பட்ட நோய்களின் தீவிரமும் குறையும்.
சரும ஆரோக்கியம் :-
மாதுளையை உணவில் அதிகம் சேர்ப்பதன் மூலம், இளமைத் தோற்றம் பாதுகாக்கப்படும். இதற்கு அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தான் காரணம்.
வாய் ஆரோக்கியம் :-
மாதுளையில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை, ஈறுகள் மற்றும் பற்களில் ஏற்படும் நோய்த்தொற்றுகளை எளிதில் எதிர்த்து போராடி, வாய் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது.
விந்தணு உற்பத்தி :-
மாதுளையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், விந்தணுவின் உற்பத்தியை அதிகரிக்கும். எலியின் மீது நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், மாதுளை ஜூஸ் விந்தணுவின் எண்ணிக்கை மற்றும் தரத்தை அதிகரிப்பதாக தெரிய வந்துள்ளது.
வியாழன், 9 ஏப்ரல், 2015
உங்கள் மொபைல் அடிக்கடி Hang ஆகுதா ? அப்போ இதை படிங்க!
Author: Infomas | ஏப்ரல் 09, 2015 |
கூகிள் நிறுவனம் இதை இலவசமாக வெளியிட்டதாலதான் பல மொபைல் நிறுவனங்கள் இதனை தன்னுடைய மாடல்களில் உட்படுத்தி மிகவும் குறைந்த விலையில் உலகச் சந்தைகளில் விற்பனைக்கு கொண்டு வந்தார்கள் மிகக்குறைந்த விலை என்பதால் மக்களிடத்திலும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது
அது எல்லாம் சரி என்றாவது இதனை நீங்கள் சிந்தித்திருக்கிறீர்களா? கூகிள் ஏன் இப்பேர்பட்ட இயங்கு தளத்தை (O S)ஐ இலவசமாக வெளியிட வேண்டும்?
பதில் மிகவும் சுலபம்
அதில் நிறைய தவறுகள் இருக்கும் ஒரே காரணத்தினால்தான் அவைகளில் முதன்மை வகிப்பது Mobile Hanging . . . .
இதை சோதனை செய்து அதிலுள்ள அனைத்து தவறுகளையும் திருத்திய பின் இந்த Android Os இலவசமாக கிடைக்காது என்பதே யாரும் எதிர்ப்பார்த்திடாத உண்மை
அதற்காண சோதனையாளர்கள்தான் நாம் நம்மை வைத்து இவர்கள் இதனுடைய குறைகளை கண்டறிந்து அதை திறுத்தம் செய்வதற்காக பலபேர் கொண்ட குழுக்களை நியமித்திருக்கிறார்கள் அவர்கள் இதனுடைய குறைகளை திருத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்
ஆனாலும் இதை உபயோகிக்கும் நபர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிரார்கள் இந்த OS வேண்டாம் என்று விலகி இருந்த Nokiaவும் தற்பொழுது இதை பயன்படுத்த தொடங்கியிருக்கிறது ஏனென்றால் பல பல புதிய applicationகள் Android மொபைல்களுக்கு வந்து கொண்டே இருக்கின்றன
சரி நாம் வந்த விசயத்தை கவனிக்கலாம் நமது மொபைல்களில்Hang ஆவதை எப்படி சரி செய்வது ?
அதை முழுமையாக சரிசெய்ய முடியாது ஆனால் அதை நம்மால் கட்டுப்படுத்த முடியும் அதற்கான தீர்வுதான் இந்த பதிப்பு
நாம் மொபைல் வாங்கிய புதிதில் அது Hang ஆவதில்லை அதில் நாம் பல Applicationகளை நிறுவிய பின்னர்தான் அதனுடைய வேகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தடுமாற்றம் ஏற்படுகிறது அப்படியென்றால் Applicationகளை எல்லாம் அழித்து விடவேண்டுமா என்று நினைக்க வேண்டாம் அதை அழிப்பதினால் உங்களது போனின் வேகம் கூடப்போவது இல்லை அதனுடைய உபயோகத்தை நிறுத்த வேண்டும்
அதாவது சில பேர் எனது மொபைலில் நிரைய இடம் இல்லை ஆதலால் Applicationகளை Memory cardல்தான் வைத்துள்ளேன் இருந்தாலும் இடப்பற்றாக்குறை ஏற்படுகிறது என்ன செய்ய என கேட்பார்கள்
என்னதான் நாம் அனைத்து Applicationகளையும் மெமரி கார்டிற்க்கு Move செய்தாலும் அந்த Applicationனின் சில முக்கிய fileகள் மெமரி கார்டிற்க்கு மூவ் ஆவது இல்லை அது நமது போனிலேயே தங்கி விடுகிறது இதுதான் இந்த இடப்பற்றாக்குறைக்கு காரணம்
சில பேர் கேட்பீர்கள் அதாவது என்னுடைய போனில் நிரைய இடம் இருக்கிறது மெமரி கார்டிலும் அதிக இடம் இருக்கிறது ஆனாலும் மொபைல் Hang ஆகிறது அவர்கள் அனைவரும் இந்த படத்தை உற்று பாருங்கள்
இது Settings>app >running பகுதியில் Ram மெமரியின் உபயோக அளவு
இதுதான் நாம் இப்பொழுது கவனிக்க வேண்டியது
நமது போன் வேகமாக இயங்க போன் மெமரியோ external memoryயோ freeஆக இருப்பதால் கிடையாது முழுக்க முழுக்க Ram மெமரியின்அளவில் அதிக இடம் இருக்க வேண்டும்
நீங்கள் உங்களது போனில் Settings>app >running என்ற பகுதிக்கு செல்லுங்கள் அங்கு உங்கள் அனுமதி இல்லாமல் இயங்க கூடிய அனைத்து
Applicationகளையும் Force Stop கொடுத்து நிறுத்தி விடுங்கள் நாம் அவ்வாறு செய்வதினால் மட்டுமே Ram memoryன் அளவை அதிகரிக்கச் செய்ய முடியும் ,இப்பொழுது போனின் ram memoryன் அளவை பாருங்கள் எவ்வளவு இடம் Freeயாக உள்ளது என்று சரி இதை செய்து முடித்ததும் அடுத்து நாம் செய்ய வேண்டியது அதில் குறிப்பிட்டிருக்கும் data அது அனைத்து Applicationகளிலும் நம் உபயோகத்தை பொருத்து இருக்கும் அதை ஒரு முறை clear செய்து விடுங்கள் பிறகு நமது போனில் இருக்கும் 3D மற்றும் ANIMATION WALLPAPERகளை நிறுத்தி விடுங்கள் HOME SCREEN இருக்கும் அதிக APPLICATION SHORTCUT களை அழித்து விடுங்கள் history, call logs, messages போன்றவற்றை அதிகம் மொபைலில் தேக்கி வைக்காதீர்கள்
மேற்கண்ட அனைத்தையும் நீங்கள் கடைபிடிப்பதினால் உங்களது போன் வேகமாக இயங்குவதை உங்களால் உணர முடியும்.
Popular Posts
-
மனித உடலில் உள்ள முக்கியமான உறுப்புகள் - Important organs in the human body மனித உடலில் உள்ள முக்கியமான 12 உறுப்புகளில் ஒவ்வொரு உறுப்பும் 2 ...
-
மஞ்சள் காமாலை நோய் மிகவும் கொடியது மரனத்தை தரக்௯டியது இந்த நோயை ஆங்கில மருத்துவத்தால் சரி செய்ய இயலாது அப்படி பார்த்தாலும் நோய் வள...
-
Browser Cookies Cookies என்ற வார்த்தையை நாம் அடிக்கடி இணையத்தில் பார்த்து இருப்போம். தொழில்நுட்பத்தோடு தொடர்பில்லாம...
-
அடங்கா காம வெறி அதை அடக்கும் ஞான மூலிகை ...அம்மான் பச்சரிசி நீங்கள் 1.டீன் ஏஜ் பருவத்தினரா ? 2.சுய இன்ப பழக்கத்தை கை விட முடியாத...
-
கணினிப் பயன்படுத்துபவர்கள் அதிகம் உச்சரிக்கக் கூடிய வார்த்தைகளில் ப்ரொகிராம் என்ற வார்த்தையும் அடங்கும். Program என்ற வார்த்தைக்கு தமிழில்...