News | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil: News

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

News லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
News லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 2 டிசம்பர், 2016

மருந்து மாத்திரைகள் விலை குறைந்தது தெரியுமா?

********* ******** ******** **********

நேற்று மெடிக்கல்   ஷாப்புக்குச் சென்று

Omez -20 Capsule. வாங்கினேன்.

வழக்கமாக ஒரு கேப்சூல் 4.50₹ வாங்குவார்கள். நேற்றும் அதே விலையைச் சொன்னார்கள்.10 கேப்சூல் வாங்கினேன். பிறகு எக்ஸ்பைரி டேட்டை பின்னால் பார்த்தேன். அப்போதுதான் 15 கேப்யூல் விலை 36 ₹ என போட்டிருந்ததை கவனித்தேன் அவ்வாறு எனில் விலை குறைந்துள்ளது என கண்டு கொண்டு " என்னங்க விலை குறைந்துள்ளதே! பழைய விலையே சொல்றீங்க? என்றேன்.

அதன் பின் ஒரு கேப்சூல் 2.50₹ தந்தார்.

ஆக, ஏமாற்றப் பார்த்துள்ளார்.

பின் வீடு வந்து இன்டர்நெட்டில் சர்ச் செய்து பார்த்ததில்.

886 வகை மெடிசின்ஸ் விலை குறைந்துள்ளது தெரிந்தது. 15% முதல் 60% வரையிலான  விலை குறைந்துள்ளது.

இவை மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அணைத்து நோயுக்குமான மருந்து,மாத்திரைகள்.

மத்திய அரசின் இந்த விலைக் குறைப்பை ஏன் ஊடகங்கள் மறைத்தது.அல்லது நம் கவனத்திற்கு வராமல் போனது எப்படி?
Forwarded as Received!

வெள்ளி, 10 ஜூன், 2016

Memory History அன்று தொடக்கம் இன்று வரை கணணி சேமிப்பகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் (விளக்கப்படம் மூலம்.)

கணனியின் வருகையின் பின் தகவல்  தொழில்நுட்பத்தில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டது. ஒரு காலத்தில் பேனையும் கையும் என்றிருந்த நிலைமை மாறி இன்று அணைத்து துறைகளும் கணணிமயப்படுத்தப்பட்டுள்ளது. கணனியின் பிரதான வன்பொருளான வன்தட்டிலே அணைத்து தரவுகளும் சேமிக்கப்படுகின்றது. இந்த வன்தட்டின் கொள்ளளவு MB, GB என்பதனை தாண்டி TB (1000GB) வரை வளர்ந்திருப்பதுடன் இணைய சேமிப்பகம் என்ற முறையும் வந்துள்ளது. தகவல் தொழில் நுட்ப யுகத்தில் ஏற்பட்ட வேகமான மாற்றத்தால் இந்த வன்தட்டில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டது. இதனை பின்வரும் விளக்கப்படம் மூலம் நன்கு விளங்கிக்கொள்ளலாம்.
The History of Digital Storage 
English Blog  ══►
▂ ▄ ▅ ▆ ▇ █ Please Visit:  www.masinfom.blogspot.com  █ ▇ ▆ ▅ ▄ ▂

வெள்ளி, 6 மே, 2016

எச்சரிக்கை தகவல்..!நண்பர்களே கண்டிப்பாக அனைவருக்கும் பகிரவும்.

ஜோன்சன் & ஜோன்சன் (Johnson & Johnson) கம்பெனியின் தயாரிப்புகளான பேபி ஆயில், சாம்பு, பவுடர், சோப்பு இவைகள் குழந்தைகளுக்கு பயன்படுத்தும் மிக நம்பகமான தயாரிப்பு என்று மக்களால் காலம் காலமாக நம்பப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை குழந்தைகளுக்கு பயன்படுத்தினால் குழந்தைகளுக்கு அலர்ஜி, ஆஸ்மா, கேன்சர், போன்ற நோய்களையும் சில நேரங்களில் உடனே மரணத்தை கூட உண்டாக்க கூடிய அளவுக்கு ஆபத்தானது என்பது தெரியவந்துள்ளது.
கேரளா உணவு தரக்கட்டுப்பாடு வாரியத்தில் இருந்து தொடரப்பட்ட வழக்குக்கு பின்னர் இந்த கம்பெனி சிறிய கண்ணுக்கு தெரியாத எச்சரிக்கை வாசகத்தை அதில் பிரிண்ட் செய்துள்ளது. இதை குழந்தைகள் தொட வேண்டாம் என்று எழுதி இருக்கிறார்கள். இதை குழந்தைகள் தெரியாமல் குடித்து விட்டாலோ அல்லது சுவாசித்தாலோ பெரிய ஆபத்து உண்டாக்கும் என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.
குழந்தைகளுக்கான தாயரிப்பு என்று சொல்லி விட்டு குழந்தைகளை தொடவேண்டாம் என்று சொல்வதில் இருந்து இதன் பயங்கர நச்சு தன்மையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தும் சுத்திகரிக்கபடாத பெட்ரோல்களின் கழிவில் இருந்து தயாரிக்கப்படுவதாகும். இது குறித்து உலக அளவில் இயங்கும் சுகாதார நிறுவனங்கள் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை புறக்கணிக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளன.
இதில் வேடிக்கை என்னவென்றால் Johnson & Johnson தயாரிப்புகளை உபயோகப்படுத்தி அதன் மூலம் வரும் அலர்ஜி மற்றும் நோய்களுக்கு இந்த நிறுவனமே மருந்துக்களையும் தயாரித்து விற்கிறது. எப்படி கம்ப்யூட்டர்களை தயாரித்து விற்று விட்டு, அந்த கம்ப்யூட்டரை ரிப்பேர் ஆக்க வைரஸ்களை பரப்புவதும், அதை சரி செய்ய என்று ஆண்டி வைரஸ் வாங்குங்கள் என்று வியாபாரம் செய்வதும் போன்ற அதே கார்பரேட் கொள்ளைதான் மனித உயிர்களிலும் விளையாடுகிறது. அதுவும் ஒன்றும் அறியாத பச்சிளம் குழந்தைகளின் உயிரோடும் விளையாடுகிறார்கள்.
பெற்றோர்களே உஷார்! இந்த நாசகார ஜோன்சன் & ஜோன்சன் தயாரிப்புகளை புறக்கணிப்போம்! நமது குழந்தைகளை பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாப்போம்!
மேலும் தவலுக்கு இந்த விடியோ கிளிப்பை பார்க்கவும்.
http://www.youtube.com/watch?v=Pn0pYLfF8rQ
-------------------------------------------------------------
JOIN US ══►
▂ ▄ ▅ ▆ ▇ █ See more:  www.masinfom.blogspot.com  █ ▇ ▆ ▅ ▄ ▂

புதன், 4 மே, 2016

ஆதார் கார்டை பயன்படுத்தி புது சிம் வாங்கினால் கட்டணம் குறைப்பு

ஆதார் கார்டு பயன்படுத்தினால், புது சிம் இணைப்பிற்கான கட்டணம் குறைக்கப்படும் என்று தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய (TRAI) தலைவர் சர்மா அறிவித்துள்ளார்.


 

 
ஆதார் அட்டையைப் முகவரிச் சான்றிதழாகப் பயன் படுத்தி புது சிம் காட்டு வாங்கினால் அதற்கான கட்டணம் கணிசமாக குறைக்கப்படும் என்று தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய தலைவர் ஆர்.எஸ்.சர்மா கூறியுள்ளார்.
 
அதன்படி, மின்னணு KYC அடிப்படையில் ஆதார் அட்டையை டிஜிட்டல் அங்கீகாரமாக செயல்பட நடைமுறை படுத்தப்படுத்தப்பட்டால் , அதன் அடிப்படையில் புது சிம் கார்டு இணைப்பிற்கான கட்டணம் பூஜ்யமாக குறைக்கப்படும் என்று சர்மா தெரிவித்துள்ளார்.
 
இந்த முறையை தொலைத் தொடர்புத் துறையிடம் பரிந்துரை செய்துள்ளதாகவும், அதை அவர்கள் வெளிப்படையாக ஏற்றுக் கொண்டதாகவும் சர்மா கூறியுள்ளார். 
 
இதற்கான விதிமுறைகளை அரசு முடிவுசெய்த பிறகு, புதிய சிம்கார்டிற்கான இணைப்பைப் பெற, ஆதார் அட்டை பயோ மெட்ரிக் தகவல் மூலம் அடையாள சரிபார்பு உடனடியாக செயல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.
 
பாக்கிஸ்தானில் அனைத்து சிம் கார்டையும் அங்கீகரிக்க, பயோ மெட்ரிக் பயன்படுத்த முடிவு செய்து கடந்த ஆண்டே அதற்கான திட்டத்தையும் பூர்த்தி செய்துவிட்டது என்று சர்மா குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சனி, 12 மார்ச், 2016

கொடூர நோய்களை பரப்பும் வாழைப்பழம்


ஓர் அதிர்ச்சி தகவல்.

முன்பெல்லாம் டாக்டர்கள் தினமும் ஓரு வாழைப்பழமாவது சாப்பிடுங்கள், உடம்புக்கு ரொம்ப நல்லது என்பார்கள்.

ஆனால் தற்போது மரபணு மாற்று பெரிய மஞ்சள் வாழைபழத்தை சாப்பிடவே வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள்.

இந்த மஞ்சள் வாழை பழம் பார்பதற்க்கு பச்சை வாழைபழம்
போன்றே சிறிது நீண்டு காணப்படும்,

நிறம் மட்டும் மஞ்சள் நிறமாக இருக்கும் காரணம் தற்போது சென்னை வாசிகள் பெரும்பாலோர் உடலில் – தொண்டையில் அலர்ஜி, சைனஸ், தும்மல், வயிற்றுக் கோளாறு, வயிற்றுவலி, சிறுநீரக கற்கள், அடிக்கடி தலைவலி, புட் பாய்சன், என்று கடுமையாக அவதிப்படுகிறார்கள்.
இவர்களை நோயாளிகளாக மாற்றியது இந்த மரபணு மாற்று
மஞ்சள் வாழைப்பழங்கள் தான்.

இயற்கையான வாழைப்பழம் பழுத்தால் இரண்டொரு நாளில் அழுகிவிடும்.
இயற்கையான மஞ்சள், பச்சை வாடன், ரஸ்தாளி, மலைபழம், தேன்கதளி, நாட்டுப்பழம், நாட்டுச்சக்கைப்பழம், கற்பூர வள்ளி, ஏலக்கி ஆகிய வாழைப் பழங்கள் மணமாகவும், நல்ல ருசியாகவும் இருக்கும்.

இந்த பழங்கள் உடம்புக்கு சத்தாகவும், மற்ற உணவை செரிமானமாக்கவும் பயன்படும்.

மலச்சிக்கலால் பாதிக்கப்படுவோரும் தினமும் இரவில்
வாழைப்பழம் சாப்பிடு வார்கள்.

பொதுவாக இயற்கையான வாழை ரகங்களில் நோய் தொற்று ஏற்படும்.
இவற்றை பூச்சுக் கொல்லிகளை பயன்படுத்தி நோயை கட்டுப்படுத்த வேண்டும். இந்த ரகங்களை பழுத்த உடன் நாம் சாப்பிடுவது வழக்கம்.


பூச்சிக்கொல்லிகளை அழிப்பதற்கு பதிலாக பூச்சிகளை கொல்லும் விஷச்சத்தை வாழைமரத்தின் மரபணுவில் செலுத்தி அமெரிக்க விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர்.

இதைத் தான் நாம் பி. டி.வாழை என்று அழைக்கிறோம்.
கேவின் டிஷ் என்ற பெயருடன் இந்த மரபணு மாற்று

வாழைப்பழம் நம்மூரில் கள்ளத்தனமாக விற்கப்படுகிறது.
இப்பழங்களில் விஷத்தன்மை மிக அதிகமாக இருப்பதால் அமெரிக்காவில் இந்த வாழைப்பழம் பயிரிடவோ விற்கவோ அனுமதிக்கப்படவில்லை
ஏழ்மையிலும் பசிபட்டினியிலும் வாடும் ஆப்பிரிக்க நாடு உகாண்டா.
இங்குதான் முதன் முதலில் 2007 -ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உகாண்டா அதிபரை மிரட்டி அந்நாட்டின் பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வர செய்து பி.டி. வாழை எனப்படும் கேவின் டிஷ் வாழைப்பழத்தை முதன் முதலில் பயிரிட செய்தார்.

நோய்களை பரப்பும்:

உகாண்டாவில் பயிரிடுவதற்கு முன்பாகவே இந்தியாவில் சர்வதேச கம்பெனிகள் இந்திய நிறுவனங்களின் துணையுடன் கள்ளத்தனமாக இவ்வகை மரபணு மாற்று பி.டி. கேவின்டிஷ் வாழைப் பழத்தை பயிரிடவும் விற்பனை செய்யவும் ஆரம்பித்து விட்டனர்.

இந்த கேவின்டிஷ் மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழம் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் விற்கப்படுகிறது.

முதலில் சென்னையில் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையத்தில் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரில் இந்த பி.டி. வாழைப்பழம் விற்கப்பட்டது.
மக்களுக்கோ, வியாபாரிகளுக்கோ இதன் கொடூரத்தன்மை பற்றி எதுவும் தெரியாததால் சென்னை முழுவதும் இந்த வாழைப்பழ விற்பனை விரிவு படுத்தப்பட்டது.

மாதக்கணக்கில் வைத்திருந்து விற்றாலும் கெட்டுபோகாது என்ற ஆசை வார்த்தை கூறி வியாபாரிகள் இந்த மரபணுமாற்று கேவின் டிஷ் வாழைப்பழத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

இதனால் சென்னையில் முக்கிய கம்பெனிகளின் சூப்பர் மார்க்கெட்டுகளில் வாழைப்பழம் மட்டுமே விற்கும் நிலை உள்ளது.
மதுரை, சேலம், கோவை, நெல்லை போன்ற நகரங்களில்
இந்த பி.டி. மரபணு மாற்று வாழைப்பழம் அறிமுகப்படுத்தப்பட்டாலும் இதற்குபோதிய வரவேற்பு இல்லை.

இந்த மரபணு மாற்று வாழைப்பழம் இயற்கை வாழைப்பழம் போல் ருசியாக இருக்காது.

இதனால் மற்ற நகரங்களில் இதனை யாரும் வாங்கவில்லை.

எனவே சென்னையில் அறிவிக்கப்படாத தடைபோல வேறு இயற்கையான வாழைப்பழமே விற்காத வண்ணம், சர்வதேச நிறுவனங்கள் கேவின்டிஷ் வாழைப்பழம் மட்டுமே விற்கும் வண்ணம் ரகசியமாக சதி செய்துவிட்டன.

இதற்கு கார்ப்பரேட் கம்பெனிகள் பெரிதும் உதவியாக உள்ளன.
பி.டி. கத்தரிக்காய்க்கே இன்னும் இந்திய அரசு முழுமையான அனுமதி வழங்கவில்லை.

பி.டி.ரக மரபணு காய்கறி, பழங்கள், உயிரை மெல்லமெல்ல கொல்லும் விஷமாகும். ஒருமுறை மட்டும் காய்த்து கனியாகும்.

செயற்கையாக மலட்டுத்தன்மை ஆக்கப்பட்ட மரபணு மாற்று காய்கறி பழங்களை தொடர்ந்து சாப்பிட்டால் மலட்டுத்தன்மை ஏற்படுவதோ டு, கேன்சர், செரிமான கோளாறு, தோல்நோய், சிறு நீரக நோய்கள், அலர்ஜி போன்றவை உண்டாகும்.

இந்நிலையில் இந்திய அரசிடமோ, விவசாயத்துறையிடமோ, பல்கலை கழகங்கள், ஆராய்ச்சி சாலைகளிலோ எந்தவித அனுமதியும் பெறாமல் கேவின்டிஷ் மஞ்சள் வாழைப்பழம் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரால் விற்பனை செய்யப்படுகிறது.

எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது?

பெங்களூர் வாழைப்பழம் என்று விற்பனை செய்யப்படும் மரபணு மாற்று பி.டி. ரக மஞ்சள் வாழைப்பழம் காட்டு கொட்டை வாழையில், மீன் சோளம், காட்டுமொச்சை இவற்றின் மரபணுவை புகுத்தி கண்டு பிடிக்கப்பட்டதாகும்.
இயற்கையான வாழை ரகங்கள் வாழையடி வாழையாக வாழை மரத்தின் கிழங்கிலிருந்து செடி வளரும்.

அதனை பிரித்து நட்டாலே புதிய வாழையை பயிர் செய்ய முடியும்.
ஆனால் பி.டி. ரக கேவின்டிஷ் வாழை ஒரு முறை மட்டுமே காய்க்கும் வண்ணம் மரபணுவில் மாற்றம் செய்யப்பட்டு செயற்கையாக மலடாக்கப்பட்ட தாகும். எனவே விவசாயிகள் தாமாகவே மறுதடவை பயிர் செய்ய முடியாது.

திசுவளர்ப்பு முறையில் செடி வாழை சர்வதேச கம்பெனிகளின் ஏஜெண்டுகளால் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு பயிரிட வழங்கப்படுகிறது.

இவ்வகை பி.டி. ரக மரபணு மாற்று வாழையை தொடர்ந்து தோட்டத்தில் பயிர் செய்தால் அந்த நிலத்தில் உள்ள நன்மை செய்யும் புழு, பூச்சிகள், பாக்டீரியாக்கள் மொத்தமாக அழிக்கப்பட்டு அந்த நிலம் எந்த பயிரும் வைக்க முடியாத பாலைவனமாக மாறிவிடும்.

அதனை உண்ணும் மனித குலமும் பல நோய்களுக்கு ஆளாக நேரிடும்.

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

LPG மான்யம் வேண்டாமென்று … பிரதமருக்கு விட்டுக் கொடுத்து விடலாமா ?

கொஞ்ச நாட்களுக்கு முன்பெல்லாம், சமையல் வாயு
சிலிண்டர் தீர்ந்தவுடன், அடுத்ததற்கு பதிவு செய்ய போன்
செய்தால், எடுத்தவுடன் -“நான் நரேந்திர மோடி பேசுகிறேன்” என்று ஒரு குரல் ஆரம்பித்து ( இந்தியில் தான்…!)

நீங்கள் அரசு கொடுக்கும் சமையல் வாயுவுக்கான மான்யத்தை விட்டுக் கொடுத்து இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு
உதவலாமே ” – என்கிற வகையில் ஒரு லெக்சர் வரும்….!
(நாம் அழைப்பதால், போன் செலவு நம்முடையது தானே…! )

சில நாட்களுக்கு முன் பிரதமர் ஒரு சம்மேளனத்தில்
பேசும்போது ” இதுவரை 2.8 லட்சம் பேர் தங்களுக்கான
மான்யத்தை விட்டுக் கொடுத்திருக்கிறார்கள். இதனால்
நூறு கோடி ரூபாய் மிச்சமாகும். இது இந்த நாட்டின்
ஏழைகளுக்கான வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவும்.
இன்னும் அதிகம் பேர் ” மான்யத்தை தியாகம் செய்ய ”
முன் வரவேண்டும்” என்றார்.

சம்சாரி ஒருவர் இது குறித்து விலாவாரியாக
விவரித்து ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.
“நான் ஏன் என் LPG மான்யத்தை விட்டுக் கொடுக்க மாட்டேன்”
என்று தலைப்பிட்டு ஆங்கிலத்தில் அந்த கடிதம்
அமைந்திருக்கிறது…. ஒரு நண்பர் அதை எனக்கு அனுப்பி
வைத்து இது குறித்து நீங்களும் எழுதுங்களேன்
என்று கேட்டிருக்கிறார்…

அந்த கடிதம் ஏற்படுத்திய தூண்டுதலில்
அதில் அவர் குறிப்பிடும் சில முக்கிய விஷயங்களையும்
உள்ளடக்கி கீழே நான் எழுதி இருக்கிறேன்….

————-

எங்கள் மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களுக்கு –

சமையல் எரிவாயு மான்யத்தை நான் விட்டுக் கொடுக்க
முன்வர வேண்டுமென்று,
வேலை மெனக்கெட்டு,
என் போனிலேயே,
என் செலவிலேயே – வேண்டி, விரும்பி
கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்….!
மகிழ்ச்சியோடு நானும் இதற்கு ஒப்புக்கொள்வேன்…
ஆனால் அதற்கு முன் கீழ்க்கண்ட விஷயங்கள்
நடைபெற்றால் தேவலை….!!!

– நாட்டின் சாதாரண குடிமகன் இதைச் செய்வதற்கு முன் –
இந்த நாட்டை வழிநடத்திச் செல்லும் அரசியல்வாதிகளும்,
அத்தனை அமைச்சர்களும், சட்டமன்ற, பாராளுமன்ற
உறுப்பினர்களும், முதலில் தங்கள் மான்யத்தை விட்டுக்
கொடுப்பதாக அறிவிக்கச் செய்ய முடியுமா …?

– உங்களில் முக்கால்வாசிப் பேர்கள் தேர்தலில்
போட்டியிடும் நேரத்தில், உங்கள் சொத்து விவரத்தை
அறிவித்திருக்கிறீர்கள்.
அதில் உள்ள கோடீஸ்வரர்கள் அனைவரும் – தங்களுக்கு
சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் என்கிற முறையில்
கிடைக்கும் சலுகைகளை விட்டுக் கொடுப்பதாக
அறிவிக்கச் செய்ய முடியுமா …?

– சட்டமன்ற, பாராளுமன்ற – கூட்டங்களில் அநேக
பிரச்சினைகளில் – எதிரும் புதிருமாக நின்று
அடித்துக் கொள்ளும் நீங்கள் அனைவருமே,
அதெப்படி உங்களது சம்பளம், படி, சலுகைகளை
உயர்த்தி மசோதாக்கள் வரும்போது மட்டும்- ஒருமித்த
குரலில் ஒன்றுபட்டு – உடனடியாக விவாதமே இன்றி
நிறைவேற்றி கொள்கிறீர்கள் …?

– கட்சி அடிப்படையில் நாட்டின் பிரச்சினைகளை
விவாதிப்பதை விட்டு விட்டு, மக்களுக்கு எது நன்மை-
எது தீமை என்கிற கோணத்தில் உருப்படியாக நீங்கள்
விவாதிப்பதை நாங்கள் என்று காண்பது …?

– வளம் பெற்ற நாடான ஜெர்மனியின் சான்ஸ்லர் திருமதி
ஏஞ்சலா மெர்கெல் -தன் அலுவலகத்திற்கு பணிக்குச்
செல்லும்போது பொதுமக்கள் பயன்படுத்தும்
சாதாரண ரயிலில் செல்லும்போது –

– கோடிக்கணக்கான மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே
வாழும் இந்த இந்தியத் திருநாட்டில், அரசியல்வாதிகளான,
அமைச்சர்களான, சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களான
நீங்கள் மட்டும், அரசாங்க செலவில் தனித்தனியே ஒன்றுக்கு மேற்பட்ட கார்களை வைத்துக்கொண்டு பயணிப்பது எப்படி …?

– உங்கள் சொந்த வசதி, சௌகரியங்களுக்காக செலவழிக்கப்படும்
ஒவ்வொரு பைசாவும், இந்த நாட்டின் குடிமக்கள் செலுத்தும்
வரியிலிருந்து தான் எடுக்கப்படுகிறது என்பது உங்கள்
நினைவிற்கு வருவதே இல்லையா …?

– நீங்கள் ஒவ்வொருவரும் பயன்படுத்தும்
தொலைபேசிகளுக்காக –
உபயோகப்படுத்தும் மின் வசதிகளுக்காக –
குடும்பத்தோடு தங்கும் சொகுசு பங்களாக்களுக்காக –
இந்தியா முழுவதும் விமானத்திலும், ரயிலிலும்
பயணப்படுவதற்காக – உருப்படியான
வேலை எதுவும் இல்லாமல்,
சும்மாவே ஊர்சுற்றிப்பார்க்க நீங்கள் மேற்கொள்ளும்
வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக –

-எத்தனை கோடி ரூபாய்களை நாங்கள் வரியாகக்
கொடுக்கிறோம் என்பதை என்றாவது நீங்கள் நினைத்துப்
பார்த்திருக்கிறீர்களா ?

– உங்கள் சொந்த சௌகரியங்களுக்காக ஆகும் இந்த
செலவுகளை எல்லாம் நீங்களே ஏற்றுக் கொள்ளும்
சுபதினம் என்றாவது வருமென்று குடிமக்களாகிய நாங்கள்
எதிர்பார்க்கலாமா …?
– மிகச் சாதாரண தலைவலி, வயிற்று வலிகளுக்கெல்லாம் கூட,
நட்சத்திர வசதிகள் நிரம்பப்பெற்ற உயர் மருத்துவ மனைகளில்
தங்கி மருத்துவ உதவி பெறுகிறீர்களே…. உங்கள் சக இந்தியர்கள் எத்தனை பேர் சரியான மருத்துவ உதவி கிடைக்காமல்
தினமும் செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை என்றாவது
நீங்கள் எல்லாம் நினைத்துப் பார்த்தது உண்டா …?
– இந்த வசதிகளை எல்லாம் நீங்கள் உங்கள் சொந்தக்காசில்
செய்துக்
கொள்ளும் நா
ள் என்றாவது வருமா…. ?

– அப்படி என்ன தங்கள் உயிருக்கு ஆபத்து வந்துவிடுமென்று
இத்தனை பூனைப்படைகளையும், துப்பாக்கி ஏந்திய
சிப்பாய்களையும் துணைக்கு வைத்துக்கொண்டு Z என்றும்
Z+ என்றும் சொல்லிக் கொண்டு உங்கள் மந்திரிகள் ?திரிகிறார்கள் ?
தினமும் உங்கள் கூட படாடோபத்திற்காக துணைக்கு வரும்
பூனைப்படை, யானைப்படை – எல்லாவற்றிற்கும் கொடுக்கும்
சம்பளப்பணம் – எங்கள் வரியிலிருந்து வருவது தானே ?

– இந்த நாட்டையே பாதுகாக்க வேண்டிய பொறுப்பில்
இருக்கும் – உங்களை பாதுகாக்க நாங்கள் செலவழிக்க
வேண்டியிருக்கும் இந்த பரிதாப நிலை என்று மாறும் …?

– சம்பாதிப்பது ஒரு வேளை சாப்பாட்டிற்கே பற்றாமல்
எத்தனையோ ஏழைக் குடும்பங்கள் இந்த நாட்டின்
நடைபாதைகளில் பட்டினியோடு படுத்துத் தூங்கும்போது –

– உங்களுக்கு ஏன் பாராளுமன்ற கேண்டீன்களில்
மலிவு விலையில் உணவுப் பொருட்கள் …?
ஒரு கப் டீ ஒரு ரூபாய்க்கும்,
ஒரு சாப்பாடு 12 ரூபாய்க்கும்
எந்த குடிமகனுக்கும் இந்த நாட்டில் கிடைப்பதில்லையே….
கோடீஸ்வரர்களான உங்களிடம் கொடுக்க காசில்லையே
என்றா இந்த மலிவு விலை ….?

– உங்களின் இந்த மலிவு விலை சோற்றுக்கு கூட –
அன்றாடங்காய்ச்சியான இந்த நாட்டின் குடிமகன் தான்
காசு கொடுக்கிறான் என்பது உங்கள் மனசாட்சியை
என்றுமே உருத்தவில்லையா ?

– நாங்கள் செலுத்தும் வரிகள் எத்தனையெத்தனை …
Income tax,
Service Tax,
Professional Tax,
Value Added Tax,
Wealth Tax,
Corporation Tax,
Automobile Registration Tax and Property Tax –

சம்பாதிப்பதில் பாதியை வரியாகப் பிடித்துக் கொள்ளும்
இந்த அரசு நிர்வாகம் உங்களுக்கு மட்டும் எல்லாவற்றிலும்
விலக்கு கொடுத்திருப்பது உங்களுக்கு உறுத்தவில்லையா …?
உங்களுக்கும் சேர்த்து தானே, எங்களிடம் வசூல்
செய்யப்படுகிறது…?

உங்களுக்கு, நீங்களே இயற்றிக்கொண்ட சட்டங்கள் மூலம்
கிடைத்துள்ள அத்தனை சலுகைகளையும் விட்டுக் கொடுத்து
இந்த நாட்டின் கௌரவமுள்ள குடிமகனாக நீங்கள்
எல்லாம் மாறும் நாள் வருமா …?

– இந்த நாட்டை நேர்மையாகவும், பொறுப்புடனும்
நிர்வாகம் செய்வதற்கென்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
நீங்கள் அனைவரும் – என்றைக்கு,
உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொண்டுள்ள
இந்த சலுகைகள் அத்தனையையும் விட்டுக் கொடுக்கிறீர்களோ –
அன்றைக்கு நிச்சயம் குடிமக்களாகிய நாங்கள் அனைவரும்
எங்கள் சமையல் எரிவாயு மான்யத்தை –
நீங்கள் கோராமலேயே நாங்கள் அனைவரும் அவசியம்  விட்டுக் கொடுப்போம்…!!!

வியாழன், 28 ஜனவரி, 2016

மாடித்தோட்டம் என்ற பெயரில் விசத்தை விதைக்கும் ........


உஷார்.... உஷார்...உஷார்..
மாடித்தோட்டம்  என்ற பெயரில் விசத்தை விதைக்கும் பன்னாட்டு விதைகளை மக்களை ஏமாற்றி வழங்குவதன் நோக்கம்..
அதிர்ச்சி அளிக்கிறது 

படித்ததில் பிடித்தது.பிடித்ததால் சுட்டது..
நன்றி அந்த முகம் தெரியாத நண்பருக்கு.

நம் கண் முன்னாலேயே ஒரு மிகப் பெரிய அக்கிரமம் நடந்து கொண்டிருக்கிறது. அதன் வீரியம் புரியாமல் நாம் பேசாமல் இருக்கிறோம்.. தோழர் ஶ்ரீஜா வெங்கடேஷின் பதிவைப் படித்ததும்தான் எனக்குள் இந்த கேள்வியே எழுந்தது...

முதலில் தோழரின் பதிவு..
***** 
நேற்றும் முந்தைய தினமும் தமிழ்நாடு தோட்டக்கலைத் துறையினர் சுமார் 50,000 மாடித்தோட்ட பொருட்களை சென்னை முழுவதும் சலுகை விலையில் அளித்திருக்கிறார்கள். நான் சென்று கேட்டபோது தீர்ந்து விட்டது. இனி சென்னையின் அனைத்து வீட்டு மொட்டை மாடிகளிலும் கத்திரி, வெண்டை என்று காய்கள் விளையப் போகின்றன என்று மகிழ்ந்தேன். என் சந்தோஷம் என் தம்பி வீட்டுப் போனதும் மறைந்து போனது. அவர் இந்தப் பொருட்களை வாங்கி வைத்திருந்தார். ஆர்வ மிகுதியால் விதைகளைப் பார்த்தேன்.


 சரியான அதிர்ச்சி. அனைத்து விதைகளுமே உயிரியல் முறையில் உருவாக்கப்பட்டவை. அதோடு அதனைத் தயாரித்த கம்பெனியின் பெயர் இந்தோ அமெரிக்கா என்றிருந்தது. கீரை, கத்திரி வெண்டை விதைகளைக் கூடவா அமெரிக்கக் கம்பெனியின் தொழில் நுட்பத்தோடு உருவாக்க வேண்டும்? அத்தனையும் ஹைப்பிரிட் விதைகள். அதாவது அந்த விதையை உபயோகித்து நாம் வெண்டைக்காய் வளர்க்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதிலிருந்து வரும் காய்கள் உண்ணத் தகுந்தவை தான் என்று சொல்கிறார்கள். ஆனால் மறு சுழற்சி முறையில் விளைந்த வெண்டையிலிருந்து நம்மால் விதைகளை எடுக்க முடியாது. இயற்கை விவசாயம், பாரம்பரிய விவசாயம் என்று நாம் அனைவரும் பேசி வரும் நேரத்தில் தோட்டக்கலைத்துறையினரே இப்படிப்பட்ட செயற்கை முறை விதைகளை மக்களுக்கு அளிக்கலாமா? அத்தனையும் சாயமூட்டப்பட்ட விதைகள் வேறு. அது மட்டுமல்ல இயற்கை உரத்தை அளிக்கும் அவர்கள் அடியுரமாக கெமிக்கல்களையும் விநியோகிக்கிறார்கள். இவற்றை கொள்முதல் செய்வது யார்? அந்த இந்தோ அமெரிக்கன் கம்பெனி எங்கிருக்கிறது? என்று யோசித்தால் தலை சுற்றுகிறது. விதை மற்றும் அடியுரங்கள் கொள்முதலில் என்னன்ன முறை கேடுகளோ? கடவுளே! காப்பாற்று!
****** 
இப்போது நமது சந்தேகங்கள்..

தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை மொட்டைமாடி தோட்டம் போடுவதற்காக சலுகை விலையில் தோட்டப் பொருட்களை தருகிறார்கள் என்ற விளம்பரம் தொடர்ந்து என் கண்ணில் பட்டபடியே இருந்தது.. ஓர் அரசுத்துறை இவ்வளவு தூரம் பொது மக்கள் மீது அக்கறையோடு செயல்படுவது என்னை ஆச்சரியப்படுத்தியது..

இந்தப் பதிவைப் படித்தபிறகுதான் இதில் இப்படியொரு கோணம் இருப்பதே எனக்குப் புரிந்தது. மொட்டைமாடிப் பயிரிடலுக்காக அரசு கொடுத்திருக்கும் விதைகள் எல்லாம் வெளிநாட்டு விதைகளாம்.. அனைத்தும் உயிரியல் மாற்று செய்யப்பட்டவை என்று அதிலிருக்கும் லேபிள்களே சொல்கின்றன.. அதாவது மரபணு மாற்றப் பயிர்களாக (Genetically Modified foods) அவை இருப்பதற்கான வாய்ப்புதான் அதிகம் என நினைக்கிறேன்..

நேரடியாக இந்தியாவுக்குள் இது போன்ற மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை இறக்குமதி செய்ய இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.. அந்த கார்ப்பரேட் நிறுவனங்களுடன் அரசு அதிகாரிகள் கூட்டுச் சேர்ந்து நம் மொட்டை மாடி வழியாக இந்தப் பயிர்களை இந்தியாவுக்குள், குறிப்பாக தமிழகத்துக்குள் ஊடுருவ வைக்கிறார்களோ என்ற சந்தேகம் எனக்கு ஏற்படுகிறது.

அப்படி இருந்தால் இது இந்தியப் பயிரிடல் முறைக்கு செய்யும் மிகப் பெரிய துரோகம்.. மொட்டை மாடியில் சிறு அளவில்தானே வளர்க்கிறார்கள் என்று நாம் இதை ஒதுக்கிவிட முடியவே முடியாது.. ஐம்பதாயிரம் வீடுகளின் மொட்டை மாடிகள் என்பது மிகப் பெரிய பரப்பளவு.. அங்கிருந்து தேனீக்களின் மூலம் இந்த கொலைகார பயிர்களின் மகரந்தங்கள் எப்படி எப்படி எல்லாம் பரவக் கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கின்றன என்று நினைத்தாலே பகீர் என்கிறது...

மொட்டை மாடித் தோட்டங்களின் மீது அவ்வளவு அக்கறை கொண்டவர்கள் தோட்டக்கலைத் துறையின் விதைகளையே வழங்கி இருக்கலாமே.. இப்படி அமெரிக்க விதைகளை எதற்காக வழங்க வேண்டும்..? இதிலேயே இதன் பின்னணியில் இருக்கும் துரோகம் நமக்குப் புரியவில்லையா..?
அரசியல்வாதிகள் கார்ப்பரேட் கம்பெனிகளுடன் கூட்டுச் சேர்ந்து நாட்டைக் காட்டிக் கொடுப்பது ஒரு பக்கம் என்றால் இது போல அரசு அதிகாரிகள் தனி வியூகமாக நம் மண்ணையும் பயிர்களையும் மலடாக்கி சாகடிக்க கிளம்பியிருப்பது ஆற்ற முடியாத துயரையும் அச்சத்தையும் நமக்குள் ஏற்படுத்துகிறது..

நண்பர்கள் பத்திரிக்கையாளர்கள் இதற்குள் புகுந்து உண்மை நிலையை வெளிக் கொண்டு வந்தால் நன்று.. சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய பிரச்சினை இது என்றே நான் நினைக்கிறேன்..
மிக மிக அவசரம்...
(Sources Facebook) kindly validate this info

ஐபோனில் Facebook மற்றும் YouTube வீடியோகளை Download செய்வது...? Direct Camera Roll

                                    


இந்த APPLICATION முழுமையாக Chines மொழியில் உள்ளது.

முதலில் உங்களுடைய Apps Store உள்ள இந்த Application Download செய்து கொள்ளுங்கள். Apps name : VEDITOR



அதன் பின்னர் அந்த Application ஓபன் செய்து கொள்ளுங்கள்; அதில் வரும் அதில் உள்ள Download Icon கொடுத்து கொள்ளுங்கள்./




அதன் பின்னர் உங்களுக்கு இவ்வாறு வரும். அதில் Youtube வீடியோ Download செய்வது என்றால் Youtube கிளிக் செய்து கொள்ளுங்கள் அல்லது பேஸ்புக் வீடியோ என்றால் முதலில் உங்களுடைய பேஸ்புக் Login செய்த பின்னர் Download செய்யலாம்.


நான் Youtube வீடியோ ஒன்றை Download செய்து காடுரன் அது போல செய்து பாருங்கள் முதலில் Youtube கிளிக் செய்து ஒரு வீடியோ தேடுங்கள். வீடியோ Play பண்ணுங்கள்.


அதன் பின்னர் வீடியோ Play ஆகும் பொது இவ்வாறு வரும் அதில் நான் காடியத்தை கிளிக் செய்து கொள்ளுங்கள் ( வட்டம் போட்டு காடியத்தை)



அதன் பின்னர் கீழ் நான் இலக்கம் இரண்டு போட்ட இடத்தில கிளிக் செய்து பாருங்கள் உங்களுடைய வீடியோ Download ஆகும்.



இது Download ஆனதும் இலக்கம் முன்று 3 போட்ட இடத்தை கிளிக் செய்து கொள்ளுங்கள். அதில் உங்களுடைய வீடியோ மேல் கிளிக் செய்து நான் வட்டம் இட்டு காடியதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.




அவ்வளவுதான்  oK கொடுங்க


இப்ப உங்களுடைய CAMERA Roll பாருங்க வீடியோ இருக்கும்




பதிவு நல்லா இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் . நன்றி  கமெண்ட்ஸ் இருந்தால் தயவு செய்து பதிவு செய்யுங்கள்.

உங்கள் ஐபோனை வேகமாக செயல்பட வைக்கும் யுக்திகள்:

iPhone_7_illustration_Yasser_Farahi_1000e

அன்றாடம் பயன்படுத்தும் ஐபோன்கள்  நாளடைவில் மிகக் மெதுவாக செயல்படுவது பலருக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு பிரச்சனையே! இது போன்ற பிரச்சனைகளை  சில வழிமுறைகளை கையாண்டால் எளிதில் நீக்கி விடலாம்.   ஐபோன் பயனர்களுக்கான முக்கிய வழிமுறைகள் பின்வருமாறு :

*மொபைலில் அளவுக்கதிகமாக சேமித்து வைத்துள்ள பழைய  புகைப்படங்களை மற்றும் தேவையில்லாத  டாக்குமெண்ட்டுகளை  நீக்குவதும்    மிக  அவசியமே .  நூற்றுக்கணக்கான  அளவு புகைப்படங்கள்  இருப்பின் அவற்றை   கணினியில் ஒரு போல்டரில் போட்டு வைப்பது சிறந்தது.

*அதிகளவு ஏற்றி வைத்துள்ள பயன்பாடுகளை நீக்க வேண்டும்  . ஏனெனில் அவை அதிக அளவு இடங்களை ஐபோனில் ஆக்கிரமிப்பு செய்து ஐபோனை மெதுவாக இயங்கவைக்கும் . இவை எந்த அளவுக்கு  இடங்களை  ஆக்கிரமித்து கொண்டுள்ளன என்பதை அறிய  போனில்  Settings > General > Storage & iCloud Usage > Manage Storage.- க்கு சென்று பார்த்தால் அறியலாம் . இதனால் மிக முக்கியமான பயன்பாடுகளை மட்டும் சேமித்து வைப்பது நன்று.

*பழைய குறுந்தகவல் செய்திகளை    மாதக்கணக்கில் வைத்திருந்தால்   அது மொபைலின் வன்பொருளை பாதிக்கும் வாய்ப்புண்டு.இதற்கு தகுந்த தீர்வு  என்னவென்றால் உங்கள் போனில் உள்ள குறுந்தகவல்களை குறிப்பிட்ட கால வரையறைக்கு மட்டும் சேமித்து  வைத்திருக்கும்  அமைப்புகளை அமைத்துவிட்டால்  அவை குறிப்பிட்ட காலம் வரைக்கும்  இன்பாக்ஸில் காணும்படி செய்யலாம்.இதற்கு  Settings > Messages > Keep Messages. என்று தேர்ந்தெடுக்க வேண்டும்.

*ஐபோனை உங்களது கணினி போன்று பயன்படுத்த வேண்டும். அதாவது  அடிக்கடி இணைய தேடல் வரலாறுகளை  நீக்கிக்  கொண்டே இருப்பது அவசியமே. இடைமாற்று நினைவகம் என்று கூறப்படுகின்ற அதாவது  பலமுறை அணுகப்படும் தரவுகளுக்கு ஒதுக்கப்படும் ஒரு விரைவு நினைவகத்தினை  அடிக்கடி அழித்து  விடுவது அவசியம் . இதற்கு  மொபைலில் Settings > Safari,-க்கு சென்று  Clear History and Website Data  வை தட்டினால் போதும்.

*உங்கள் ஐபோன் மெதுவாக இயங்க ஒரு முக்கிய காரணம் அதிலிருக்கும்  பயன்பாடுகளின்  ஆட்டோ  அப்டேட்டுகலாகத்தான் இருக்கும். தேவையற்ற பயன்பாடுகளின் அப்டடேட்டுகளை நீக்க இது ஒரு சிறந்த வழியாகும். இதற்கு உங்கள் மொபைலில் Settings > iTunes & App Store-க்கு சென்று    OFF MODE  யை  தேர்ந்தெடுக்க வேண்டும்.

*மேற்கூறியது போன்றே  ஆட்டோமேட்டிக்  அப்டேட்டுகளை  தேவையற்ற இசை ,நூல்கள் போன்றவற்றை பதிவிறக்கங்கள் செய்யாமல்   தவிர்கும்படி  செய்யலாம்.இதற்கு  மொபைலில் Settings > iTunes & App Store-க்கு சென்று   apps, books, music -இல்   OFF MODE  யை தட்டினால் போதும்.

*மேலும் அடிக்கடி உங்கள் மொபைலில்  உங்களுக்கு அருகிலிருக்கும் வை-பை இணைப்புகளுடன் இணைக்கவா? என்பது போன்ற கேள்விகளுக்கு ஆம் என்ற பதிலை கொடுத்தால் அது  உங்கள் சாதனத்தை மிக மெதுவாக செயல்பட வைக்கும். இதனை  நீக்க   Settings > Wi-Fi > Ask to Join Networks  இல்   OFF MODE  யை தேர்ந்தெடுக்க வேண்டும் .

*அன்றாடம்  முடிந்த வரையில் ஒருமுறையாவது  ஐபோனை ரீஸ்டார்ட் செய்வதும் மொபைல் வேகத்தை அதிகரிக்கும் வழிகளில் ஒன்றே ! இதனால் ஐபோன் அடிக்கடி மந்தாமாகாமல் தடுக்கலாம்.

*பேட்டரி டாக்டர் என்ற பயன்பாட்டினைக் கொண்டு உங்கள் ஐபோன்கள் எவ்வளவு மெதுவாக  இயங்குகிறது என்பதை அறியலாம். மெதுவாக இயங்குகிறது என்றால் அதிலுள்ள நினைவகத்தை மறு  ஒதுக்கீடு செய்து  வழங்க உதவுகிறது.

இது போன்ற வழிமுறைகளை கடைபிடித்தால்  ஐபோனின் ஆயுள்காலத்தினை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் உங்கல் ஐபோன் சாதனம்   மெதுவாக செயலபாடாமல் தடுக்கலாம்.

திங்கள், 25 ஜனவரி, 2016

மெல்ல கொள்ளும் நஞ்சு( slow poison ) ரீபைண்ட் ஆயில்( Refined oil)

மெல்ல கொள்ளும் நஞ்சு( slow poison )
ரீபைண்ட் ஆயில்( Refined oil)



ரீபைண்ட் ஆயில் பயன்படுத்தாதிங்க!நோயை விலை கொடுத்து வாங்காதிங்க !நாமெல்லாம் நினைக்கிறது போல ரீபைண்ட் ஆயில்னா சுத்திகரிக்க பட்ட எண்ணெய் மட்டும் இல்லங்க சுத்தமா உயிர் சத்துகளே இல்லாதஎண்ணெய்.
ரீபைண்ட் ஆயில் எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா?


மில்லில் இருந்து பெறப்பட்ட எண்ணெய்யில் காஸ்டிக் சோடாவை சேர்த்து கொதிக்க வைத்து முதலில் அதிலிருந்து சோப்பு எடுக்கிறார்கள்.பிறகு அதிகம் இருக்கும் காஸ்டிக் அமிலத்தின் மூலம் அகற்றி நீயூட்ரலைஸ் செய்து அதில் இருக்கும் வாசனையை அறவே நீக்கிவிடுகிறார்கள்.பிறகு அதை சால்வெண்ட் எக்ஸ்ட்ராக்சன் மூலம் பிரித்து எடுக்கிறார்கள்.இதை எல்லாம் நேரில் பார்த்தால் நம்மில் பலருக்கு சாப்பிடவே பிடிக்காது. திரைமறைவில் நடக்கும் இந்த வேலைகள் எல்லாம் மக்களுக்கு தெரியாத காரணத்தால் " சுத்தம் செய்யப்பட்ட எண்ணெய் "என்று நினைத்து ரீஃபைண்ட் ஆயிலை உபயோகித்து கொண்டு இருக்கிறார்கள்.


‪#‎உண்மையில்‬ ரீஃபைண்ட் ஆயில் என்பது அடர்த்தி இல்லாத தண்ணீர் போன்ற ஒரு திரவம்.சமையலுக்கு இதை பயன்படுத்தும் போது சூடு தாங்காமல் உருக்குலைந்து உடல் ஆரோக்கியத்திற்கு தீமை விளைவிக்கும் ஒரு ரசாயன கலவையாக மாறுகிறது.

‪#‎எண்ணெய்‬ விஷமாக மாறிவிட்டதால் இன்று மக்கள் பலவிதமான நோய்களுக்கு உள்ளாகி சிகிச்சைகள் எடுத்து கொள்வதற்க்காக பெரியதொகைகளை செலவளித்து கொண்டு இருக்கிறார்கள்.நமக்கு வரும் நோய்களுக்கு எல்லாம் சுற்றுசூழல் மாசுப்பட்டு இருப்பது தான் காரணம்என்று சொல்லி நம்மை நாமே ஏமாற்றி கொள்கிறோம். 


‪#‎கடந்த‬ 60-70 ஆண்டுகளில் நோய்கள் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மக்களை வாட்டி வதைத்துக்கொண்டு இருக்கிறது. இதற்க்கானகாரணங்களில் முக்கியமான இடத்தை பிடித்து இருப்பது ரீஃபைண்ட் ஆயில்.
யோசிச்சு பாருங்க இவ்வளவு தீமையான ஒரு பொருளை நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தி, நம் ஆரோக்கியத்தை நாமே விலை கொடுத்து பாழ்படுத்தி கொள்கிறோம்.


அப்போ என்ன எண்ணெய் தான் வாங்குறது?ரீபைண்ட் செய்யாத நல்லெண்ணெய்,கடலை எண்ணெய்,தேங்காய் எண்ணெய் வாங்கி பயன்படுத்தலாம். இதை தானே நம்மதாத்தா பாட்டி பயன்படுத்தினாங்க.ஒரு வேலை நீங்க இப்படி கேட்டா,அய்யய்யோ அதுல நிறைய கொழுப்பு இருக்குனு சொல்லுவாங்களே! 


அது மட்டும் இல்லாம கொழுப்பு உள்ள எண்ணெய் பயன்படுத்தினா ஹார்ட் அட்டேக், B.P. வரும்,ரொம்ப வெய்ட் போடும்னு சொல்லுவாங்களே! கிராமத்து இளைஞனின் கருத்து : சரிங்க ரீபைண்ட் ஆயில் தானே இப்போ பெரும்பாலும் பயன்படுத்துறோம்.யோசிச்சு பாருங்க உங்க ஊர்ல ஹார்ட்வர்றவங்களோட எண்ணிக்கை குறைஞ்சு இருக்கா இல்ல கூடி இருக்கா. 

என்ன கொடுமைனா முன்னயாவது 60,70 வயசு ஆனவங்களுக்கு பெரும்பாலும் ஹார்ட்அட்டாக் வந்தது. இப்போ தெல்லாம் 25,30,35 வயசு உள்ளவங்களுக்கே ஹார்ட் அட்டக் வருது.அப்போ ரீபைண்ட் ஆயில் உபயோகிச்ச பிறகு நோயின் அளவு ஜாஸ்தி தானே ஆகியிருக்கு?..ஒரு வேலை நீங்க இப்படி கேட்டா : 

சரி ரைட்டு வேற எண்ணெய் வாங்கலாம்னா அதாவது,எள்எண்ணெய் (நல்லெண்ணெய்),கடலை எண்ணெய்,தேங்காய் எண்ணெய் வாங்கலாம்னு பார்த்தா விலை பட்ஜெட்ல அடங்காது போல இருக்கே!.

நான்: ஒரு லிட்டர் கடலை எண்ணெய் 170 ரூபாய்,ஒரு லிட்டர் ரீபைண்ட் ஆயில் 85 ரூபாய்,அப்போ ரீபைண்ட் ஆயில் வாங்குனா உங்களுக்கு பாதி பணம் அதாவது 85 ரூபாய் மிச்சம். 

அந்த பணத்தை சேர்த்து வச்சு என்னா செய்விங்க? நான் சொல்லட்டுமா!!! இப்படி மிச்சம் பிடிச்ச பணத்தை பேங்குல போட்டு வச்சு வட்டியும் முதலுமா டாக்டர் கிட்ட குடுபிங்க.ஆரோக்கியத்திர்க்கு கேடு விளைவிக்கும் பொருளை குறைந்த விலையில் கிடைக்குதேன்னு வாங்கி உபயோகபடுத்திட்டு பின்னால் நோய் வந்த பிறகு மிச்சம் பிடிச்ச பணத்தை டாக்டர் கிட்ட குடுத்துட்டு,உங்களையும் கஷ்ட படித்திக்கிட்டு இருக்கறதுக்கு, நல்ல தரமான பொருளை வாங்கி பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழலாமே!!! ஆரோக்கியம் தானே மிக பெரிய செல்வம்..

எண்ணெய் விலையை நாம் நினைத்தால் குறைக்கலாம். அது எப்படி ?
நாம் எந்த பொருளை விரும்புகிறோமோ அதை வியாபாரிகள் தயாரித்து கொடுக்க தயாராக இருக்கிறார்கள். எதை அதிகமாக வாங்குகிறோமோ அதன் தயாரிப்பும் அதிகரிக்கும். 


தயாரிப்பு அதிகரித்தால் விலை குறையும்.தரமான பொருளை அதிகமாக வாங்கினால் அதன் தயாரிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதன் மூலம் தரமான பொருளை நியாயமான விலையில் வாங்க முடியும். மட்டமான பொருளை விற்கிறார்களே என்று வியாபாரிகளை குறை சொல்லி பயனில்லை.நாம் எதை கேட்கிறோமோ,எதை அதிகம் வாங்குகிறோமோ அதை தானே அவர்கள் விற்ப்பார்கள்.

நீங்கள் விஷம் குடுங்கள் என்று கேட்டால் விஷம் தான் கொடுப்பார்கள்!.அதை விடுத்து அய்யய்யோ விஷத்தை ஏன்வாங்குகிறீர்கள் அதை சாப்பிட்டால் இறந்து விடுவீர்கள் என்று விளக்கம் சொல்லி கொண்டு இருக்க மாட்டார்கள். விஷம் சாப்பிட்டால் இறந்து விடுவீர்கள் என்று தெரிந்து கொள்ளவேண்டியது உங்கள் பொறுப்பு.மேலும் அவர்கள் எதை தயாரிக்கிறார்களோ,அதை ஆஹா ஓஹோ என்று தான்விளம்பரபடுத்துவார்கள். 


அது அவர்கள் வியாபாரயுக்தி.ரீபைண்ட் ஆயில் தயாரிப்பாளர்கள்ரீபைண்ட் ஆயில், பயன்படுத்தினால் கேன்சர்வராது என்று சொல்லி தான் விற்பார்கள். ஆனால் அது உண்மையா பொய்யா என்று நாம் யோசித்து 

வாங்கவேண்டும்.நாளைக்கே அந்த நிறுவனம் ரீபைண்ட் ஆயில் தயாரிப்பை நிறுத்திவிட்டு எள்ளெண்ணெய் விற்றால் அப்போது சொல்லுவார்கள் ரீபைண்ட் ஆயில் பயன்படுத்தினால் கேன்சர் வரும் என்று!!!!

நம் முன்னோர்கள் அந்த காலத்தில் செக்கில் ஆட்டி எடுத்த தேங்காய் எண்ணெயையும்.,நல்லெண்ணையையும் அப்படியே உபயோகித்தனர்.இந்த எண்ணெய்கள் அடர்த்தியாகவும்.,நிறமாகவும்., மணமாகவும் இருக்கும்.இதற்கு காரணம் அந்த எண்ணெய்களில் உள்ள ஊட்டசத்துக்கள் தான்.இதனால் தான் உடல் ஆரோக்கியத்திற்க்கு தேவையான புரோட்டீன்கள், வைட்டமின்கள்,தாதுப்பொருள்கள், நார்ச்சத்துக்கள் , குளோரோபில்,கால்சியம், மெக்னீசியம்,காப்பர், இரும்பு,பாஸ்பரஸ்,வைட்டமின் " இ " போன்றவை நமக்கு கிடைத்து வந்தன..

இந்த தாதுப்பொருட்கள் மூலம் உற்பத்தியாகும் மெழுகு போன்ற பொருள்கள் மூட்டுகளுக்கு சென்று.,எலும்பு தேய்மானத்தை தடுத்தன.


#‎நம்‬ முன்னோர்கள் உடற்பயிற்சி செய்து முடித்ததும் ஒரு கிண்ணம் நிறைய நல்லெண்ணெய் குடிக்கும் வழக்கத்தையும் வைத்து இருந்தனர்.இதை உணவுக்கு மட்டுமின்றி. குளியலுக்கும்,மசாஜ் செய்வதற்க்கும் உபயோகித்த காரணத்தால் அவர்கள் 80 வயது வரை மூட்டு வலியின்றிகால்நடையாகவே சென்று வந்தனர்.அதனால் தான் எல்லாம் அறிந்த நம் முன்னோர்கள் இதை எள் எண்ணெய் என்று சொல்வதற்கு பதிலாக " நல்ல எண்ணெய் "என்று சொன்னார்கள்.

வெளிநாட்டில் கூட இதை " Queen of Oil "என்று அழைக்கிறர்கள்.ஆனால் இன்று நாம் உபயோகிக்கும் ரீஃபைண்ட் ஆயிலில் உயிர்சத்துக்கள் எதுவுமே இல்லை என்பது அதிர்ச்சியான உண்மை.புதுசா புதுசா எதை எதையோ கண்டுபிடுச்சு அதை குறைந்த விலையில் விற்று நம்மை சோதனை எலிகளை போல் பயன்படுத்துகிறார்கள். இதன் முடிவு பத்து வருஷம் கழித்து தான் தெரியும்.அப்போ தான் சொல்வார்கள் இதை பயன்படுத்தியதால் தான் இப்படி என்று!அனால் அப்போது தெரிந்து என்ன பயன்.

யோசிங்க நீங்க சோதனை மனிதராக இருக்க ஆசைபடுரிங்களா? இல்லை ஏற்கனவே நம்ம முன்னோர்கள் காலம் காலமாக உபயோகபடுத்திய உணவு முறையை பின்பற்றி அவர்கள் போலவே 80,90 வயது வரை ஆரோக்கியமாக வாழஆசை படுறிங்களா?.அட்லீஸ்ட் வாழும் காலம் வரை நோயில்லாமல் வாழ வேண்டும் என்பது தானே அனைவரது விருப்பமும்.எதை வாங்குகிறோம் என்பதில் தெளிவாக இருப்போம்.
 

நன்றி : சரவணக்குமார் வே

புதன், 2 டிசம்பர், 2015

கோல்கேட்டில் கலக்கப்படும் இரசாயனம் புற்றுநோய் கட்டியை உண்டாக்குகிறது - ஆய்வில் அதிர்ச்சி!!

உலக அளவில் பெரும் முன்னணி டூத்பேஸ்ட் நிறுவனமாக விளங்கி வருகிறது கோல்கேட். பெரும்பாலான மக்கள் இந்த டூத் பேஸ்ட்டை தான் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், கடந்த வருடம் நச்சுயியல் ஆய்வு கழகத்தினால் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், கோல்கேட் பொருட்களில் பயன்படுத்தப்படும் ஒருவகை இரசாயனம் ஆனது புற்றுநோய் ஏற்படுத்தும் அபாயம் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 
 
வெளிநாடுகளில் தடை செய்யப்பட்டு இந்தியாவில் விற்கப்பட்டு வரும் பொருட்கள்!!! 
இது, துணி துவைக்கும் சோப்பு, வாசனை திரவியம் போன்ற பொருட்களில் கலக்கப்படும் இரசாயனம் என்ற அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ட்ரைக்ளோசான்(triclosan) எனப்படும் இந்த இரசாயனம் குறித்த ஆய்வுகள் கடந்த 2003-ம் ஆண்டில் இருந்தே பெருமளவில் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது....

பயங்கரமான இரசாயனம்
 
 ட்ரைக்ளோசான் எனப்படும் இந்த இரசாயனம் மிகவும் பயங்கரமானது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 
 
இது டியோடிரன்ட், ஆன்டிசெப்டிக், மற்றும் கை கழுவும் திரவங்கள் போன்றவற்றில் பரவலாக சேர்க்கப்படும் இரசாயனம் என்று கூறப்படுகிறது. மேலும் சில வகையான துணி துவைக்கும் சலவை சோப்புகளிலும் கூட இது சேர்க்கப்படுகிறது.
 
நச்சுயியல் ஆய்வு கழகம் 
 
நச்சுயியல் ஆய்வு கழகம் (Chemical Research in Toxicology) வெளியிட்ட ஆய்வறிக்கையில் , இந்த இரசாயனம் புற்றுநோய் கட்டியை உண்டாக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது என ஊர்ஜிதம் செய்யப்பட்டது.
நச்சுயியல் ஆய்வு கழகம் நச்சுயியல் ஆய்வு கழகம் (Chemical Research in Toxicology) வெளியிட்ட ஆய்வறிக்கையில் , இந்த இரசாயனம் புற்றுநோய் கட்டியை உண்டாக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது என ஊர்ஜிதம் செய்யப்பட்டது. 
 
 
முக்கியமான பிரச்சனை 
 
இந்த தீங்கு விளைவிக்கும் மூலப்பொருள், சருமத்தை ஊடுருவி, இரத்தத்தில் கலந்து ஹார்மோன் சமநிலையை சீர்குலைந்து போக செய்கிறது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
 
 
கனடாவில் தடை 
 
உலகிலேயே கனடாவில் மட்டும் தான் ட்ரைக்ளோசான் எனப்படும் இந்த இரசாயனம் தடை செய்யப்பட்டுள்ளது. முதலில் இதன் பக்கவிளைவுகள் பற்றி அறிந்துக் கொண்ட கனடா அரசு பின்னாளில் மொத்தமாக தடை செய்தது.
 
 
மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் 
 
இனி, இது குறித்து மக்கள் தான் ட்ரைக்ளோசான் எனப்படும் கேடு விளைவிக்கும் இரசாயன கலப்பு உள்ள பொருட்களை பயன்படுத்தலாமா, வேண்டாமா என முடிவு செய்ய வேண்டும். உங்கள் உடல்நலன் அனைத்தையும் விட முக்கியமானது என்பதை நீங்கள் மறந்துவிட கூடாது.

ஞாயிறு, 24 மே, 2015

வேறு ஒரு நிறுவனத்துடைய SIM யை இன்னொரு USB Dongle இல் உபயோகிப்பது எப்படி?

★★★ SuNdAy SpEcIaL ★★★
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நாம் பயன் படுத்தும் இணையச்சேவை வழங்குனர்களின் (Airtel, Reliance ,Docomo, Mts,vodafone, Idea & BSNL) Dongle இதை நாம் வாங்கினால் அவர்களுடைய SIM யை தவிர வேறு எந்த SIM யையும் உபயோகிக்க‌ இயலாதவாறு தடுத்து வைத்து இருப்பார்கள்.
நாம் வேறு ஒரு நிறுவனத்துடைய SIM யை இன்னொரு Dongle இல் போட்டால் Unlock Code கேட்கும்.அதில் சரியான Code யை நாம் கொடுத்து விட்டால் அந்த Dongle , Unlock செய்யப்பட்டு விடும்.சரி இந்த Unlock Code யை எப்படி கண்டுபிடிப்பது?
முதலில் உங்களுடைய Dongle இன் 15 இலக்கத்தை கொண்ட IMEI Number ஐ கண்டுபிடியுங்கள்.இது Dongle இன் பின் புறத்தில் காணப்படும். இதை அப்படியே Copy செய்து இந்த தளம் சென்று
★Huawei Dongle எனில் இந்த
http://www.wintechmobiles.com/tools/huawei-code-calculator/ தளத்திற்கும்
அல்லது
★ZTE Dongle எனில்
இந்தhttp://www.wintechmobiles.com/?ddownload=959
★All Dongle Unlock Software Free Download
http://unlockalltypeusbmodem.weebly.com/unlock-dongle.html
தளத்திற்கு சென்று

உங்களுடைய DONGLEஇன் IMEI கொடுத்து CALCULATE CODES கொடுக்கவும்.
இப்போது உங்களுடைய Dongle க்குறிய Unlock Code கிடைக்கும். அதை அப்படியே Copy செய்து விட்டு, வேறு ஒரு நிறுவனத்துடைய SIM இனை Dongle லில் போடுங்கள்.உங்களிடம் Unlock Code திரும்பவும் கேட்கும், அந்த இடத்தில் Paste செய்து கொள்ளுங்கள் Unlock ஆகிவிடும். சிம்பிள் அவ்வளவுதான்.\
பெரும்பாலனோர் இது வரை ஒரு முறை சரீஸ் டிஸ்கனெக்ட் செய்யப்பட்டால் அந்த டாங்கிலை காட்சி பொருளாகத்தான் வைத்திருப்பர். இனி (Airtel, Reliance ,Docomo, Mts,vodafone, Idea & BSNL) Dongle எதை வேண்டுமானாலும் உபயோகிக்க‌ முடியும்
முடிந்தால் ஒரு ஷேர் செய்து நண்பர்களுக்கு பகிரவும்
========================================
.
இந்த பக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள்
நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
.
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
.
ஆண்ட்ராய்டு- Android Hacks And New Apps's photo.

Popular Posts

Facebook

Blog Archive