பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

திங்கள், 6 அக்டோபர், 2014

ஏலக்காயின் பயன்கள்


 
 All So Read in English : www.masinfom.blogspot.in 

ஏல‌க்கா‌ய் எ‌ன்பது இ‌ஞ்‌சி செடி வகை‌யை‌ச் சே‌ர்‌ந்தது. ப‌ச்சை ‌நிற‌க் கா‌ய்களை‌க் கொ‌ண்டது. ஏல‌க்கா‌ய் ப‌ச்சை ‌நிற‌த்‌திலு‌ம், அட‌‌ர் பழு‌ப்பு ‌நிற‌த்‌திலு‌ம் இரு‌க்கு‌ம்.
ஏல‌க்கா‌ய் நறுமண‌ப் பொருளாக ம‌ட்டு‌ம் இ‌ல்லாம‌ல், பல மரு‌த்துவ‌க் குண‌ங்களை‌க் கொ‌ண்டதாகு‌ம்.


மன இறு‌க்க‌த்தை‌க் குறை‌த்து உட‌ல் பு‌த்துண‌ர்‌ச்‌சி பெற ஏல‌க்கா‌ய் பய‌ன்படு‌கிறது.

ப‌ல் ம‌ற்று‌ம் வா‌ய் தொட‌ர்பான பல ‌பிர‌ச்‌சினைகளு‌க்கு ஏல‌க்கா‌ய் ந‌ல்ல ‌தீ‌ர்வாக அமையு‌ம்.
செ‌ரிமான‌த்‌தி‌ற்கு உதவு‌ம். இதனா‌ல்தா‌ன் நெ‌ய் சே‌ர்‌த்து செ‌ய்ய‌ப்படு‌ம் இ‌னி‌ப்பு‌க‌ளி‌ல் அவ‌சியமாக ஏல‌க்காயை சே‌ர்‌ப்பா‌ர்க‌ள்.
குர‌ல் வளை ம‌ற்று‌ம் தோ‌ல் தொட‌ர்பான நோ‌ய்களை‌த் ‌தீ‌ர்‌க்கு‌ம் ‌ஆ‌ற்ற‌ல் ஏல‌க்கா‌ய்‌க்கு உ‌ண்டு.

மல‌ட்டு‌த் த‌ன்மையை‌ப் போ‌க்குவத‌ற்கு‌ம் ஏல‌க்கா‌‌ய் பய‌ன்படு‌த்த‌ப்படு‌கிறது.

உங்க கருத்தச் சொல்லுங்க..!

All So Read in English : www.masinfom.blogspot.in 

சும்மா ‘கிர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு’ தண்ணி குடிங்க..! (Benefits of Drinking Water)


எப்போதெல்லாம் நமது உடம்பு கூடுதல் தண்ணீருக்காக ஏக்கம் கொள்கிறதோ, அப்போதே நமக்கு தாகம் ஏற்பட்டு விட்டது என்றே பலரும் இன்று வரை நம்பிக் கொண்டுள்ளனர். அது உண்மைதான். ஆனாலும், உடம்பில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்ட தென்பதை அறிந்து கொள்ளும் பொருட்டு, உடம்பின் ஒரு சில அல்லது அனைத்துப் பாகங்களிலிருந்தும், பல்வேறு அறிவிப்புகள் மற்றும் அறிகுறிகளை நாம் காணலாம்.

All So Read in English : www.masinfom.blogspot.in

இந்த அறிகுறிகளை அறிவிப்புகளை நாம் கண்டு கொள்ளாமல் வெறுமனே இருந்துவிட்டால் அதுவே பலவிதப் பெரும் வியாதிகளை (Major Diseases) வரவழைத்துவிடும். இதற்கென மருந்துகள் இருந்தாலும் அவையெல்லாம் குணப்படுத்துமேயன்றி சிகிச்சை அளிக்கவியலாது.
Benefits of Drinking Water

எல்லோருக்குமே நன்றாகத் தெரியும். நிறைய தண்ணீர் குடித்தால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதென்று. இதற்கு என்ன காரணம்-? போதுமான அளவில் உடம்புக்கு நீர் கிடைக்காவிட்டால் அங்கே என்ன நிகழும் என்ற விவரம் பெரும்பாலானவர்களுக்கு தெரியாது.

உடல்நிலையில் ஏற்படும் பல்வேறு கோளாறுகளை தடுத்து நிறுத்தும் பணியில் பெரும்பங்கை தண்ணீரே ஏற்றுக் கொண்டுள்ளது. இதனால் பெரும் வியாதிகள் தொடக்கத்திலே அடக்கப்படுகின்றன. தவிர, பல்வேறு இயற்கையான நிவாரண யுக்திகளில், தண்ணீர்தான் பெரும்பங்கை ஏற்றுள்ளது.

தண்ணீர் அதிக அளவு குடிப்பதால் சிறுநீரக பாதிப்பு (Kidney damage) தவிர்க்கப்படுகிறது.

உடலின் மொத்த எடையில் தண்ணீரின் பங்கு மட்டுமே எழுபது சதவிகிதமாகும். உடலின் அனைத்துப் பாகங்களிலும் அது வியாபித்திருந்தாலும், மூளை மற்றும் நுரையீரல்(Lung) போன்ற உறுப்புகளிலும், இரத்தம், உமிழ்நீர்(Saliva), நிணநீர்(Lymph) போன்ற திரவங்களிலும், ஜீரண முறையில் உள்ள உறுப்புகளின் சுரப்பிகளிலும் அதிகப்படியாகவே அடங்கியுள்ளது.
Benefits of Drinking Water
பிரிட்டன் தேசிய நலவாழ்வு சேவை (The UK National Health Service) ஆலோசனைப்படியும் ஊட்டச்சத்து நிபுணர்கள் மருத்துவர்கள் அறிவுரைப்படியும் தினமும் 1-2 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. எனவே குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு 2 லிட்டர் அளவுக்கு குறைவாக தண்ணீர் அருந்த வேண்டும்.
All So Read in English : www.masinfom.blogspot.in 
 
மாணவர்களுக்கு:

தேர்வு எழுதும் மாணவர்கள் தண்ணீர் ஒரு டம்பளர் தண்ணீர் குடித்துவிட்டு தேர்வு எழுதுவது நல்லது. தண்ணீர் குடிக்காமல் எழுதியவர்களையும் விட தண்ணீர் குடித்து எழுதியவர்களின் மதிப்பெண்கள் கூடுதலாக இருந்ததாக பிரித்தானியாவின் வெஸ்ட்மினிஸ்டர் பலகலைக்கழக ஆய்வாளர்கள்(Britain’s Westminster University researchers) மாணவர்கள் மத்தியில் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. தேர்வுக்கு முன்னர் தண்ணீர் குடித்த மாணவர்களின் புள்ளி முடிவுகளையும் தண்ணீர் குடிக்காத மாணவர்களின் புள்ளி முடிவுகளையும் ஒப்பிட்டுப் பார்த்து தான் குறித்த முடிவுக்கு வந்துள்ளனர்.
உடலில் தண்ணீர் அளவு சீராக இருந்தால் மூளை செல்களுக்கு இடையில் தகவல் வேகமாகப் பரவும். இதனால் பதட்டமின்றி, தேர்வறையில் படித்ததை நினைவில் கொண்டுவந்து எழுதுவது சாத்தியப்படுகிறது.
நிறைய தண்ணீர் குடிப்பவர்களின் உடலில் தேவையில்லாத கொழுப்பு சேர்வது குறையும். மாறாக குறைவாக தண்ணீர் குடித்தால் அதிக கொழுப்பு தேங்கி உடல் எடை அதிகரிக்கும்.

போதுமான தண்ணீர் உடலில் இல்லை என்றால் சீராக சிறுநீரகம் (கிட்னி) செயல்படாது. சிறுநீரகம் சரியாக செயல்பவில்லை என்றால் கல்லீரலின் செயல்பாட்டிலும் பிரச்சினை உண்டாகும்.

நாம் உண்ணும் உணவில் இருந்து உடல் இயக்கத்திற்குத் தேவையான புரதத்தை சேமிப்பதே கல்லீரலின் முக்கிய பணி. ஆனால், சிறுநீரக இயக்க குறைபாட்டால் கல்லீரலின் செயல்பாடும் பாதித்து தேவையற்ற கொழுப்பு
உடலில் சேர்ந்து உடல் எடை அதிகரிக்கும்.

மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்க, உடலில் உப்பு சேர்வதை குறைக்க, , அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால், உடலுக்கு தேவையான புரதத்துடன் தண்ணீர் சேரும்போது அதில் உள்ள கழிவுகள் வெளியேறும். இதன் பயனாக தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் அழகான ஒல்லியான தோற்றத்தை பெறும்.

எனவே தாகம் எடுக்கும்போதெல்லாம் போதிய தண்ணீரைக்குடிக்க வேண்டும். தாகமெடுக்கும்போது தவறாமல் தேவையான அளவு தண்ணீர் குடித்தாலே போதுமானது. உடல் என்றும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.
 All So Read English : www.masinfom.blogspot.in

நீங்கள் அனுப்பிய மெயிலை படித்துவிட்டாரா என்பதை அறிய!

நீங்கள் அனுப்பிய மெயிலை படித்துவிட்டாரா என்பதை அறிய!

நீங்கள் ஒரு முக்கியமான நபருக்கு அல்லது நண்பர்களுக்குப் மெயில் அனுப்பி விட்டு அவருடைய பதிலுக்காகக் காத்துக்கொண்டு இருப்பீர்கள்.

குறைந்த பட்சம் அவர் உங்கள் மெயிலை படித்து விட்டாரா? இல்லையா? என்பதை அறிந்து கொண்டால் நன்றாக இருக்கும் அல்லவா? இதை அறிந்து கொள்ள spypig என்ற நிறுவனம் இந்த சேவையை அளிக்கிறது. இதற்கு,

1. முதலில் எப்போதும் போல மெயில் டைப் அடித்து தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

2. இப்போது www.spypig.com இணைய தளத்திற்குச் செல்லுங்கள். அங்கு உங்கள் முகவரி மற்றும் Message Title (Subject) கொடுங்கள்.

3. முதல் படத்தைத் (வெற்றுப் படம்) தேர்ந்து எடுத்து, ”Click to Activate my Spypig” என்பதை கிளிக் செய்யுங்கள்.

4. இப்போது ஒரு பெட்டியில் நீங்கள் தேர்ந்து எடுத்த படம் காட்டப்படும். அதன் மீது கர்சரை வைத்து ரைட் கிளிக் செய்து, “Copy Image (Firefox) & Copy(IE)” copy செய்யவும்.

5. இப்போது நீங்கள் டைப் செய்து வைத்த மெயிலை திறந்து அந்த பக்கத்தின் அடியில் இந்த படத்தை Paste செய்து உடனே மெயிலை அனுப்பி விடுங்கள்.

நீங்கள் அனுப்பிய மெயிலை அவர் திறந்த உடன் எந்த ஊரிலிருந்து படித்தார், எப்போது படித்தார் போன்ற தகவல்கள் உங்கள் மெயிலுக்கு வந்துவிடும்.
நீங்கள் ஒரு முக்கியமான நபருக்கு அல்லது நண்பர்களுக்குப் மெயில் அனுப்பி விட்டு அவருடைய பதிலுக்காகக் காத்துக்கொண்டு இருப்பீர்கள்.
குறைந்த பட்சம் அவர் உங்கள் மெயிலை படித்து விட்டாரா? இல்லையா? என்பதை அறிந்து கொண்டால் நன்றாக இருக்கும் அல்லவா? இதை அறிந்து கொள்ள spypig என்ற நிறுவனம் இந்த சேவையை அளிக்கிறது. இதற்கு,
1. முதலில் எப்போதும் போல மெயில் டைப் அடித்து தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.
2. இப்போது www.spypig.com இணைய தளத்திற்குச் செல்லுங்கள். அங்கு உங்கள் முகவரி மற்றும் Message Title (Subject) கொடுங்கள்.
3. முதல் படத்தைத் (வெற்றுப் படம்) தேர்ந்து எடுத்து, ”Click to Activate my Spypig” என்பதை கிளிக் செய்யுங்கள்.
4. இப்போது ஒரு பெட்டியில் நீங்கள் தேர்ந்து எடுத்த படம் காட்டப்படும். அதன் மீது கர்சரை வைத்து ரைட் கிளிக் செய்து, “Copy Image (Firefox) & Copy(IE)” copy செய்யவும்.
5. இப்போது நீங்கள் டைப் செய்து வைத்த மெயிலை திறந்து அந்த பக்கத்தின் அடியில் இந்த படத்தை Paste செய்து உடனே மெயிலை அனுப்பி விடுங்கள்.
நீங்கள் அனுப்பிய மெயிலை அவர் திறந்த உடன் எந்த ஊரிலிருந்து படித்தார், எப்போது படித்தார் போன்ற தகவல்கள் உங்கள் மெயிலுக்கு வந்துவிடும்.


All So Read English : www.masinfom.blogspot.in

சனி, 4 அக்டோபர், 2014

YouTube க்கு போட்டியாக Yahoo வின் புதிய Video தளம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


 
Google  வழங்கும் ஒரு சேவை Youtube தளத்தில் வீடியோக்களை பகிர மற்றும் கண்டுகளிப்பதாகும். குறிப்பாக இந்தியாவில் சுமார் 30 மில்லியன் வீடியோக்கள் ஒரு மாதத்திற்கு பார்க்கப்படுகிறதாம். Google தளங்களில்  வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருப்பது YouTube தளம். 

இதைப் பார்த்து Yahoo நிறுவனம் Youtube தளத்திற்குப் போட்டியாக புதிய வீடியோ தளத்தை உருவாக்கி உள்ளது. 

இந்தத் தளத்திலும் YouTube தளத்தில் உள்ளதைப் போலவே பல்வேறு பிரிவுகளில் வீடியோக்களை கண்டு ரசிக்கலாம். 

Yahoo தளம் இந்தியாவில் உள்ள டிவி சேனல்கள் மற்றும் சினிமா தயாரிப்பு நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்து கொண்டு காப்புரிமை வழங்கப்பட்ட original வீடியோக்களை மட்டுமே இந்தத் தளத்தில் பகிர்ந்துள்ள்ளது. 

Yahoo நிறுவனம் சில மாதங்களுக்கு முன் தான் முழு நீளத் திரைப்படத்தை காணும் Movieplex வசதியை கொண்டு வந்தது. அதற்குள் இப்பொழுது புதிய தளத்தை அறிமுகம் செய்துள்ளது. 

அவ்வளவும் original வீடியோக்கள் என்பதால் தரத்தைப் பற்றி கவலை இல்லை. 

வாசகர்கள் வீடியோக்களை upload செய்யும் வசதி இந்த தளத்தில் இல்லை.  மேலும் பல வசதிகளை கொண்டு வந்தால் இந்தத் தளமும் நல்ல வளர்ச்சியை பெரும் என்பதில் ஐயமில்லை. 

இந்த தளத்திற்கு செல்ல - Click Here - 



இன்டர்நெட் இல்லாமல் எப்படி கூகுளில் சர்ச் செய்யலாம்!


இன்டர்நெட் வசதி இல்லாமல் கூகுளில் எப்படி சர்ச் செய்வது? இது கொஞ்சம் கடினமான கேள்வி தான். ஆனால் இதற்கு விடையளிப்பது மிக சுலபம்.
இக்கட்டான தருணங்களில் கைகொடுக்கிறது கூகுளின் சில வசதிகள். மிக முக்கியமான சில தகவல்களை கூகுளில் சர்ச் செய்வதன் மூலம் பெற முடியும். ஆனால் இதற்கு இன்டர்நெட் மிக அவசியம். இன்டர்நெட் இல்லாமலும், மொபைலில் வேண்டிய தகவல்களை பெறலாம்.
உதாரணத்திற்கு உடனடியாக டேக்ஸி தேவைப்படுகிறதென்றால், இது சம்மந்தமானவர்களின் மொபைல் எண் தேவைப்படும். அப்படி மொபைல் எண் எதுவும் இல்லை என்றால் இன்டர்நெட் வசதி கொண்டு தேடுவது வழக்கம்.
இந்த சமயத்தில் இன்டர்நெட் வசதி இல்லை என்றால் பிரவுசிங் சென்டருக்கு சென்று தேடி கொண்டிருக்க முடியாது. இது போன்ற தருணத்தில் டேக்ஸி என்று டைப் செய்து, பின்னர் எந்த இடத்தில் இருக்கிறீர்களோ அந்த இடத்தின் பெயரையும் டைப் செய்து, 9773300000 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.
இப்படி அனுப்பினால் உடனடியாக கூகுளிலின் பட்டியலில் இருந்து டேக்ஸி வழங்கும் சில நிறுவனங்களின் மொபைல் எண்களும், முகவரிகளும் உங்கள் மொபைலிற்கு மெசேஜ் மூலம் தகவல் கிடைக்கும். இந்த பட்டியலில் எந்த நம்பரை தேர்வு செய்து கொள்கிறோமோ அதை தேர்வு செய்து, பின் போன்கால் செய்து டேக்ஸி வசதிக்கு அனுகலாம்.
இது போன்று தகவல்களை கூகுளில் இன்டர்நெட் இருந்தால் தான் பெற முடியும். ஆனால் அவசர தேவைக்காக கூகுள் இந்த சேவையை வழங்குகிறது.

மற்றவர் தொட்டவுடன் கைபேசி திரையை மூடும் புதிய மென்பொருள்!

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி கைபேசி திரையை தொட்டு பயன்படுத்துவோம். அழுத்தும் வேகம், மேலே கீழே தடவுவது என இந்த செயல்கள் ஒவ்வொரு ஆளுக்கும் வேறுபடும்.இந்த வேறுபாடுகளை வைத்து அந்தக் கைப்பேசியின் உரிமையாளர் யார் என்பதை கண்டறிந்து மற்றவர் தொட்டால் திரையை அணைத்துவிடும் புதிய மென்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இலியாநஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர் Cheng Bo மற்றும் அவரின் நண்பர்கள் Silent Sense எனும் இந்த மென்பொருளை எழுதியுள்ளார்கள்.
இதை நிறுவியது முதல் உங்களின் விரல் அசைவு வேகம், தொடும் அழுத்தம், இழுக்கும் முறை  போன்றவற்றை உள்வாங்கி பதிந்துகொள்ளும்.
100 நபர்களிடம் நடத்திய சோதனையில் இந்த மென்பொருள் 98% அளவில் உரிமையாளரை சரியாகக் கண்டுபிடித்துவிட்டது.
பிற மென்பொருள்கள் மற்றும் விளையாட்டுகள் விளையாடும் போது இந்த மென்பொருள் வேலை செய்யாது. ஆனால் முக்கியமாக மின்னஞ்சல், குறுந்தகவல் மற்றும் புகைப்படங்களை பார்க்கும் போது இது செயல்பட்டு பிறர் பயன்படுத்தாத வண்ணம் காக்கும்.
விரைவில் Silent Sense மென்பொருள் அனைவரின் பயன்பாட்டிற்கும் வர இருக்கிறது.

அதிவேக இணையம் – ஆச்சர்யமளிக்கும் தகவல்கள்!

கூகிள் இணையப் பயன்பாட்டு தொழில்நுட்பத்தில் அடுத்த தலைமுறை இன்டர்நெட் ஸ்பீடை (The Next Generation Internet Speed) கொண்டு வர உள்ளது. இந்த தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வரும்பொழுது நிச்சயம் அது ஒரு ஆச்சர்யம் அளிக்கும் விஷயமாகவே இருக்கும்.

சுமார் பத்து வருடங்களுக்குப் பிறகு வரும் என எதிர்பார்க்கப்பட்ட இத்தொழில்நுட்பத்தினை மூன்றே ஆண்டுகளில் பயனர்கள் பெறுவதற்கான முயற்சிகளில் கூகிள் இறங்கிறயுள்ளது.
the-next-generation-internet-speed
the-next-generation-internet-speed
இதுபோன்று அதிவேக இணைய இணைப்பை ஏற்கனவே அமெரிக்காவில் கேன்சஸ் நகரத்தில் பைபர் என்னும் திட்டத்தின் கீழ், அங்கு வசிக்கும் மக்களுக்கு ஒரு நொடிக்கு 1GB Data பரிமாற்ற வேகத்தினை தந்துவருகிறது.
தற்பொழுது ஒரு நொடிக்கு 10 கிகா பிட்ஸ் வேகத்திற்கு இன்டர்நெட் பயன்பாட்டை கொண்டுவரும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது கூகிள். இந்தளவிற்கு இணைய வேகம் அமைந்தால் ஒரு திரைப்படத்தை இணையம் மூலம் 4 வினாடிகளில் பரிமாற்றம் செய்துகொள்ள முடியும்.
இணையத்தின் வேகம் இந்தளவிற்கு இருந்தால், சாப்ட்வேர் சேவைகளை மிக எளிதாக அனைவரும் பெற்றுப் பயன்படுத்த முடியும். அதிகமான கொள்ளவு கொண்ட மென்பொருட்களை ஒரு நொடியில் தரவிறக்கம் செய்து பயன்படுத்திட முடியும்.

இதுபோன்ற அதிவேக இணையவேக தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதில் கூகிளுடன் வேறு சில நிறுவனங்களும் இணைந்துள்ளன.
இதற்கு முன்பு, சீனா, பிரிட்டன் நாடுகள் லைபை – lifi என்ற தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி ஒளி மூலம் டேட்டாவினை அதிக வேகத்தில் பரிமாறிக்கொள்ள முடியும் என நிருபித்திருந்தனர்.

மற்றுமொரு நிறுவனமான வெரிசான் நிறுவனமும் 10 கிகா பிட் டேட்டா பரிமாற்றச் சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டது. வெரிசான் நிறுவனம் மட்டுமல்லாமல் அமெரிக்காவின் வேறு சில இணைய சேவை நிறுவனங்களும் இந்த அதிவேக தொழில்நுட்பத்தின் மூலம் டேட்டாவினை பரிமாற்றம் செய்தது.
எனினும் கூகிள் நிறுவனம் இத்தொழில்நுட்பத்தினை முறையான ஆய்வின் மூலம் மேற்கொள்வதால், விரைவில் அதிவேக இணைய இணைப்பு உலக மக்கள் அனைவருக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

Desktop Right Click--டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்து பெறும் பயன்கள்

கம்ப்யூட்டர் பயனர்கள் பலரும் டெஸ்டாப்பில் ரைட் கிளிக் செய்து Refresh மட்டுமே செய்வார்கள்.
ரைட் கிளிக் செய்யும்போது தோன்றும் விண்டோவில் மேலும் பல பயனுள்ள வசதிகளும் உள்ளன.
பெரும்பாலான பயனர்கள் அவ்வசதிகளைப் பயன்படுத்துவதே இல்லை. அந்த வசதிகளைப் பற்றியும், அதனுடைய பயன்களையும் தெரிந்துகொள்வோம்.
Right Click செய்யும்பொழுது நமக்கு முதலில் தெரியும் பயன்பாடு view.
இது டெஸ்டாப்பில் இருக்கும் அப்ளிகேஷன்களின் ஷார்ட் கட்கள் மற்றும் கோப்புகளின் ஐகான்களை பார்வைக்கு தோற்றம் அளிக்கும் விதத்தை மாற்றுவதற்குப் பயன்படுகிறது.
இதில் உள்ள ஆப்சன்கள்
1. Large icons
டெக்ஸ்டாப்பில் தோன்றும் ஐகான்களை பெரியதாக காட்ட இந்த வசதி பயன்படுகிறது. ரைட் கிளிக் செய்து view >> Large icons என்பதை தேர்ந்தெடுத்திடும்பொழுது டெஸ்க்டாப்பில் தோன்றும் ஐகான்கள் பெரியதாக  தோற்றமளிக்கும்.
large icons

2. Medium icons
டெக்ஸ்டாப்பில் தோன்றும் ஐகான்களை மீடியமாக காட்ட இந்த வசதி பயன்படுகிறது. ரைட் கிளிக் செய்து view >> Medium icons என்பதை தேர்ந்தெடுத்திடும்பொழுது டெஸ்க்டாப்பில் தோன்றும் ஐகான்கள் மீடியமாக தோற்றமளிக்கும்.
medium-icons
3. Small icons
டெக்ஸ்டாப்பில் தோன்றும் ஐகான்களை சிறியதாக காட்ட இந்த வசதி பயன்படுகிறது. ரைட் கிளிக் செய்து view >> Small icons என்பதை தேர்ந்தெடுத்திடும்பொழுது டெஸ்க்டாப்பில் தோன்றும் ஐகான்கள் மீடியமாக தோற்றமளிக்கும்.
small-icons
4. Auto arrange icons
இந்த வசதியானது டெஸ்க்டாப்பில் அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ள ஐகான்களை தானாகவே ஒழுங்குபடுத்திக்கொள்ளும்.
5. Align icons to grid
இந்த வசதியை தேர்ந்தெடுக்கும்பொழுது டெஸ்க்டாப்பில் உள்ள ஐகான்களை grid – ல் அலைன் செய்து அழகாக காட்டும்.
icons align to grid
6. Show desktop icons
இந்த வசதியை செயல்படுத்தும்பொழுது டெஸ்க்டாப் ஐகான்கள் தெரியும். டிக் மார்க்கை எடுத்துவிட்டால் டெஸ்க்டாப்பில் ஐகான்கள் மறைந்துவிடும்.
7. Show gadgets
விண்டோஸ் 7 ல் பயனுள்ள calendar, clock, cpu meter, currency, feed headlines, picutre puzzle, slide show, weather, windows media center போன்ற கேட்கெட்கள் உள்ளன. அவற்றை நீங்கள் பயன்படுத்திக்கொண்டிருந்தால், அவற்றை டெஸ்டாப்பில் தோன்றச் செய்வதற்கும், தேவையில்லை யெனில் மறையச் செய்வதற்கும் பயன்படும் வசதி இதுவாகும்.
Sort By
இந்த வசதியின் மூலம் டெஸ்டாப்பில் உள்ள ஐகான்களை, Name, Size, Item type, Date modified என்ற வகைகளில் வரிசைப்படுத்தலாம். பெயரின் அடிப்படையில் வரிசைப்படுத்த Name என்பதையும், கோப்புகளின் அளவின் அடிப்படையில் வரிசைப்படுத்த Size என்பதையும், ஐகான்களின் தன்மையின் அடிப்படையில் வரிசைப்படுத்த Item என்பதையும், தேதி அடிப்படையில் வரிசைப்படுத்த Date modified என்ற வசதியையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.
Desktop ல் ரைட்கிளிக் பயன்பாடு என்ற இப்பதிவு புதிய கணினி பயனர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.
நன்றி.

உங்கள் செல்பேசிகளில் இருக்கும் தங்கத்தின் அளவு என்ன?


பயன்படுத்தப்பட்ட செல்பேசிகளில் இருக்கும் தங்கத்தை பிரித்தெடுப்பதன் மூலம் மின்னணுக் கழிவுகளில் இருந்து செல்வத்தை உருவாக்க முடியும் என்று ஐரோப்பிய ஆணையத்தின் சுற்றுச்சூழல் ஆணையர் ஜெனஸ் பொடோக்நிக் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார்.
உங்கள் செல்பேசிகளில் இருக்கும் தங்கத்தின் அளவு என்ன?


அதைத்தொடர்ந்து செல்பேசிகளில் இருந்து தங்கத்தை பிரித்தெடுப்பது தொடர்பான விவாதம் மின்னணு தொழில்நுட்பத் துறையில் மீண்டும் சூடுபிடிக்கத் துவங்கியிருக்கிறது.
 
சரி இந்த பயன்படுத்தப்பட்ட ஸ்மார்ட் போன்களில் இருந்து எவ்வளவு தங்கத்தை பிரித்தெடுக்க முடியும்?
 
இது குறித்த பல்வேறு ஆய்வுகள், மதிப்பீடுகள் இருந்தாலும், பொதுவான மதிப்பீட்டின்படி ஒரு கைப்பையில் இருக்கும் உபயோகப்படுத்தப்பட்ட செல்லிடபேசிகளில் இருந்து ஒரு கிராம் தங்கத்தை பிரித்தெடுக்க முடியும் என்பதை பல்வேறு தொழில்நுட்ப ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன.
 
மின்னணு கழிவுகள் குறித்த ஐநா மன்றத்தின் அறிக்கை ஒன்றில் 41 செல்லிடபேசிகளில் ஒரு கிராம் தங்கம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம் பிரஸ்ஸல்ஸில் இருக்கும் உமிகோர் என்கிற தொழில்நுட்ப நிறுவனம் வெறும் 35 செல்லிடபேசிகளில் இருந்தே கூட ஒரு கிராம் தங்கத்தை பிரித்தெடுக்க முடியும் என்று பிபிசியிடம் தெரிவித்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் கணக்குப்படி ஒரு டன் பயன்படுத்தப்பட்ட செல்லிட பேசிகளில் இருந்து 300 கிராம் தங்கத்தை பிரித்தெடுக்க முடியும்.
 
இந்த ஆய்வுகளின் அடிப்படையில் பேசிய ஜெனஸ் பொடோக்நிக், நிலத்தில் இருந்து தங்கத்தை பிரித்தெடுக்கும்போது ஒரு டன் தங்கத்தாதில் இருந்து ஒரே ஒரு கிராம் தங்கம் தான் பிரித்தெடுக்கப்படுவதாக தெரிவித்தவர் ஆனால் 41 ஸ்மார்ட் போன்களில் இருந்து நாம் அதே ஒரு கிராம் தங்கத்தை பிரித்தெடுக்க முடியும் என்று வாதிட்டார்.
 
அதாவது தங்கச்சுரங்கங்களில் சுமார் ஆயிரம் கிலோ தாதில் இருந்து ஒரு கிராம் தங்கத்தை பிரித்தெடுப்பதைவிட, வெறும் 41 ஸ்மார்ட் போன்களில் இருந்து அதே அளவான ஒரு கிராம் தங்கத்தை பிரித்தெடுப்பது எளிய செயல் என்பது அவரது வாதம்.
 
செல்பேசிகளில் இருந்து தங்கத்தை பிரித்தெடுப்பது லாபம் தருமா?
 
உங்கள் செல்பேசிகளில் இருக்கும் தங்கத்தின் அளவு என்ன?
இந்த கணக்கெல்லாம் கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், செல்பேசிகளில் இருக்கும் தங்கத்தை பிரித்து எடுக்க ஆகும் செலவை விட பிரித்தெடுக்கப்படும் தங்கத்தின் மதிப்பு அதிகம் இருந்தால் மட்டுமே இந்த மாதிரி செல்லிடபேசிகளில் இருந்து தங்கத்தை பிரித்து எடுக்கும் செயல் வர்த்தக ரீதியில் லாபம் ஈட்டும் தொழிலாக மாற முடியும்.
 
அந்த கோணத்தில் பார்த்தால், நம்மிடம் இருக்கும் ஒரு செல்பேசியில் இருந்து கிடைக்கும் தங்கத்தின் மதிப்பு என்பது சராசரியாக இன்றைய நிலையில் வெறும் நூறு (இந்திய) ரூபாய்க்கும் குறைவாக இருக்கிறது. இந்த நூறு ருபாய்க்கும் குறைவான மதிப்புள்ள தங்கத்தை பிரித்தெடுக்க ஆகும் செலவோ அதைவிட அதிகமாக இருக்கும் என்கிறார்கள் மின்னணு தொழில்நுட்ப வல்லுநர்கள். எனவே பயன்படுத்தப்பட்ட செல்பேசிகளில் இருந்து தங்கத்தை பிரித்தெடுப்பது வர்த்தக ரீதியில் லாபம் தரக்கூடிய தொழில் அல்ல என்கிறார்கள் இவர்கள்.
 
ஆனால் வேறு சில மின்னணு தொழில்நுட்ப வல்லுநர்களோ, தங்கத்தை பிரித்தெடுக்க ஆகும் செலவை விட, பிரித்தெடுக்கப்படும் தங்கத்தின் மதிப்பு கூடுதலாக இருக்கும் என்றும், இது லாபகரமான முயற்சியாகவே இருக்கும் என்றும் வாதாடுகிறார்கள்.
 
இந்த வாதப்பிரதிவாதங்கள் ஒரு புறம் இருக்க, இன்னொரு கணக்கு இதில் இருக்கும் வேறொரு சிக்கலை விளக்குகிறது. இன்றைய நிலையில் நிலத்தில் இருந்து ஒரு நாளைக்கு சுமார் ஏழறை டன் தங்கம் வெட்டி எடுக்கப்படுகிறது. இதே அளவு தங்கத்தை நாம் பயன்படுத்தப்பட்ட செல்பேசிகளில் இருந்து எடுக்க வேண்டுமானால் ஒரு நாளைக்கு சாராசரியாக சுமார் 30 கோடி செல்பேசிகளை நாம் மறு சுழற்சி செய்யவேண்டும். அப்படி செய்தோமானால், உலகத்தில் தற்போது இருக்கும் சுமார் எழுநூறு கோடி செல்பேசிகளும் 23 நாட்களில் மறுசுழற்சி செய்து முடிந்துவிடும் என்கிறார்கள் மின்னணு விஞ்ஞானிகள்

வெள்ளி, 3 அக்டோபர், 2014

CAPTCHA Text என்றால் என்ன என்று உங்களுக்கு தெரியுமா?

இணைய தளங்களில், படிவம் ஏதேனும் ஒன்றை நிரப்பி முடித்த பின்னர், கப்சா ரெக்ஸ்ட் (CAPTCHA Text) ஒன்றை மேற்கொள்ளும்படி கேட்கும். இதில் சாய்வான எழுத்துக்கள், எண்கள் தரப்படுகின்றன. பெரும்பாலான நேரங்களில், இது சரியாகத் தெரிவதே இல்லை. இதனை ஏன் கப்சா ரெக்ஸ்ட் என்று சொல்கிறார்கள். இதன் விரிவாக்கம் என்ன?

இணையம் பயன்படுத்துவோரில் பெரும்பாலானவர்களுக்கு இந்த கேள்வி ஒரு சந்தேகமாக இருந்திருக்கும். நீங்கள் கேட்டுவிட்டீர்கள். இதோ அது பற்றிய பதில் குறிப்பு. கப்சா ரெக்ஸ்ட் என்பதன் விரிவாக்கம் Completely Automated Public Turing test to tell Computers and Humans Apart ஆகும். இணையத் தொடர்பில், பின்னூட்டங்களைப் பெறுகையில், கம்ப்யூட்டருக்கும் மனிதனுக்கும் இடையே வேறுபாட்டினைக் காண இந்த சோதனை நடத்தப்படுகிறது.  

ஏனென்றால், ஆன்லைனில், கம்ப்யூட்டரே சில கேள்விகளுக்குப் பதில் அளித்து, பாஸ்வேர்ட், யூசர் நேம் போன்றவற்றை வழங்கும் வகையில் புரோகிராம் அமைக்க முடியும் என்பதால், மனிதர்கள் மட்டுமே பதில்களைத் தரும் வகையில் இந்த சோதனை தரப்படுகிறது. எழுத்துக்கள் மற்றும் எண்கள், பல கோணங்களில் சரியான உருவமற்று இருப்பது போல இவை அமைக்கப்பட்டு காட்டப்பட்டு, அவற்றை உள்ளீடு செய்திடுமாறு செய்வதே கப்சா ரெக்ஸ்ட் சோதனை. 

இதனை ஒரு கம்ப்யூட்டர் படிக்க முடியாமல் செய்திட எந்த அளவிற்கு முடியுமோ, அந்த அளவிற்கு அமைக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

உங்களுக்குக் காட்டப்படும் கப்சா ரெக்ஸ்ட் சோதனைக்கான எழுத்துக்கள் அல்லது எண்களைச் சரியாகப் படிக்க முடியவில்லை என்றால், அருகில் வட்டவடிவ அம்புக் குறியாகக் காட்டப்படும் ஐகானை அழுத்தவும். புதிய எழுத்துகள் அடங்கிய கப்சா ரெக்ஸ்ட் சோதனை தரப்படும்.

பாஸ்வேர்ட் மறந்துடுச்சா.கவலையே படாதீங்க...

ஞாபக மறதி என்பது மனிதர்கள் அனைவருக்கும் இருக்கும். சில சமயங்களில் ஞாபக மறதி பாடாய் படுத்தும்.

'
நேத்துதான் புதுசா பாஸ்வேர்ட் மாத்தினேன்.. அதுக்குள்ள மறந்துடுச்சு' என்று புலம்புபவர்களும் உண்டு. 
அல்லது எப்பொழுதோ பயன்படுத்திய பழைய பாஸ்வேர்ட்அடிக்கடி மனசுக்குள், நினைவிற்கு வரும். ஆனால் என்ன செய்தாலும் புதிதாக மாற்றின பாஸ்வேர்ட் மட்டும் ஞாபகத்துக்கு வரவே வராது.. 
இப்படி நீங்கள் எப்பொழுதாவது கணினியின் கடவுச்சொல்லை மறந்துவிட்டு புலம்பியிருக்கிறீர்களா? அப்படின்னா கண்டிப்பா இந்த கட்டுரையை படிங்க....

"நான் மறக்கவே மாட்டேன்ப்பா.. எனக்கு பிரைன் மெமரி பவர் (Brain Memory Power)அதிகம்" என்று சொல்பவர்களுக்கு கூட கண்டிப்பாக இது பயன்படும். நீங்களும் படித்துப் பாருங்கள்.. உங்களோட நண்பர்களுக்கும் சொல்லுங்க.


உங்களோட கம்ப்யூட்டர் பாஸ்வேர்ட் உங்களுக்கு அடிக்கடி மறந்து போய்விட்டால் என்ன செய்வது? 

அதற்கான தீர்வை இப்பொழுது பார்ப்போம். 

நிச்சயம் உங்களிடம் USB Pendrive இருக்கும். இதன் மூலம் உங்கள் பாஸ்வேர்டை உள்ளிட்டு கணினியை இயங்கச் செய்வது தற்போதைய புதிய தொழில்நுட்பமாக உள்ளது.

அதாவது நீங்கள் உங்கள் பாஸ்வேர்ட்டை தட்டச்சிடாமல், உங்கள் யூ.எஸ்.பி (பென்டிரைவை) இணைப்பதன் மூலம் கணினி பாஸ்வேர்டை பெற்றுக்கொண்டு திறந்துகொள்ளும். இவ்வாறு உங்கள் கணினிக்கு யூ.எஸ்.பி. அல்லது பிளாஃபி மூலம் பாஸ்வேர்ட் செட் செய்யும் முறைக்கும் PASSWORD RESET DISK என்று பெயர்.

PASSWORD RESET DISK உருவாக்குவது எப்படி?
  • உங்கள் கணினியை உயிர்ப்பித்துக்கொள்ளுங்கள்.
  • Start button கிளிக் செய்து Control Panel செல்லுங்கள்.
  • யூசர் அக்கவுண்ட்ஸ் (USER ACCOUNTS)என்பதில் கிளிக் செய்யவும்.
  • அதில் உங்கள் பயனர் கணக்கை தேர்ந்தெடுக்கவும்.
  • இப்பொழுது தோன்றும் பக்கத்தில் இடதுபுறம் Create a Password Reset Disk கிளிக் செய்யவும்.
  • இப்பொழுது உங்களுடைய USB Drive அல்லது பிளாஃபி டிஸ்க் கேட்கும்.  USB Drive ஐ செருகவும்.
  • அடுத்து அது கேட்கும் வழிமுறைகளைப் பின்பற்றவும். அதாவது தற்பொழுது நீங்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கும் யூசர் நேம், பாஸ்வேர்ட் கொடுத்து உங்கள் Password Reset Disk உருவாக்கிக்கொள்ளுங்கள்.
Password Reset Disk பயன்படுத்துவது எப்படி?
1.        உங்கள் கணினியை உயிர்ப்பித்தவுடன் Welcome Screen தோன்றும்.
2.        பிறகு உங்கள் யூசர் நேம் கொடுத்து என்டர் அழுத்தவும்.
3.        இப்பொழுது உங்களுடைய பாஸ்வேர்ட் ரீசெட் டிஸ்க்கினை இணைக்குமாறு செய்தி தோன்றும்.
4.        அடுத்து யூஸ் யுவர் பாஸ்வேர் டிஸ்க் (use your password Disk) என்பதில் கிளிக் செய்யவும்.
5.        அப்பொழுது பாஸ்வேர்ட் ரீசெட் விசார்ட் password reset wizard திறக்கும்.
6.        அதனைத் தொடர்ந்து புதிய பாஸ்வோர்ட்(password) உருவாக்குவதற்கான வழிமுறைகள் கிடைக்கும். அவ்வழிமுறைகளைப் பின்பற்றி நீங்கள் புதிய பாஸ்வேர்ட் ஒன்றினை உருவாக்கிக்கொள்ளலாம்.
ஒவ்வொரு முறையும் நீங்கள் பாஸ்வேர்டை மறக்கும்பொழுதும் இந்த பாஸ்வேர்ட் ரீசெட் டிஸ்கைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.




இதோ "கத்தி" படத்தின் கேம் வந்தாச்சு

இதோ "கத்தி" படத்தின் கேம் வந்தாச்சு 󾦀

முதலில் உங்கள் நண்பர்களுக்கு Share பண்ணிட்டு, அப்புறம் டவுன்லோட் பண்ணுங்க 

☆★☆ --------> Kaththi - Official 3D Game <-------- ☆★☆

லிங்க் : https://play.google.com/store/apps/details?id=com.skyTou.kaththi3dgame

Windows மொபைல் பயன்படுதுரவங்க கீழே உள்ள லிங்க் இல் சென்று டவுன்லோட் பண்ணிகொங்க

For Windows User : http://www.windowsphone.com/en-us/store/app/kaththi-official-3d-game/c2b6f575-b6c6-4932-81fa-804792e928f3

Enjoy 󾍛󾍛

உங்கள் நண்பர்களுக்கு Share பண்ண மறந்துவிடாதீர்கள் 

====================================================
ஏதாவது சந்தேகம் இருந்தால் Comment Box இல் கேளுங்கள்

இது உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள் 

[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅] 

..☆ Like ✔: ஆண்ட்ராய்டு- Android Hacks And New Apps
இதோ "கத்தி" படத்தின் கேம் வந்தாச்சு
முதலில் உங்கள் நண்பர்களுக்கு Share பண்ணிட்டு, அப்புறம் டவுன்லோட் பண்ணுங்க
☆★☆ --------> Kaththi - Official 3D Game <-------- ☆★☆
லிங்க் : https://play.google.com/store/apps/details?id=com.skyTou.kaththi3dgame

Windows மொபைல் பயன்படுதுரவங்க கீழே உள்ள லிங்க் இல் சென்று டவுன்லோட் பண்ணிகொங்க

For Windows User : http://www.windowsphone.com/en-us/store/app/kaththi-official-3d-game/c2b6f575-b6c6-4932-81fa-804792e928f3

Enjoy
உங்கள் நண்பர்களுக்கு Share பண்ண மறந்துவிடாதீர்கள்
====================================================
ஏதாவது சந்தேகம் இருந்தால் Comment Box இல் கேளுங்கள்
இது உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]

விண்டோஸ் 10-ஐ அறிமுகம் செய்தது மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் இயங்குதளத்தின் புதிய பதிப்பாக விண்டோஸ் 10-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. கணினி, டேப்லட், மொபைல் ஆகிய அனைத்துக்கும் இனி ஒரே இயங்குதளமாக விண்டோஸ் டென் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
windows 10
தற்போதைய விண்டோஸ் 8.1 பதிப்பின் மேம்படுத்தளாக  விண்டோஸ் 9-ஐ நேற்று வெளியிடப்படும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிய இயங்குதளத்திற்கு விண்டோஸ் 10 என்று பெயரிட்டுள்ளது.
இதற்கு காரணம், இந்த புதிய அப்டேட் முன்னெப்போதும் இல்லாத வகையில் நவீன வசதிகள் இருக்கும் என்பதால் விண்டோஸ் 9-ஐ புறக்கணித்துவிட்டு விண்டோஸ் 10 என பெயரிட்டுள்ளது.
புதிய வசதிகள்:
Start Menu:
windows 10 start menu
விண்டோஸ் 7 போன்ற பழைய விண்டோஸில் உள்ளது போல ஸ்டார்ட் மெனுவை மீண்டும் கொண்டு வந்துள்ளது. மேலும் நம் விருப்பப்படி மாற்றியமைக்கும் வசதியும் உள்ளது.
Apps Window:

windows 10 App
விண்டோஸ் ஸ்டோர் அப்ளிகேசன்கள் இனி சாதாரணமான டெஸ்க்டாப் அப்ளிகேசன்கள் செயல்படுவது போல தனி விண்டோவில் செயல்படும்.
ஒரே சமயத்தில் நான்கு அப்ளிகேசன்கள்:
windows 10 multi screen
ஒரே சமயத்தில் நான்கு அப்ளிகேசன்களை எவ்வித தடையுமின்றி பயன்படுத்தலாம்.
Task View:
windows 10 task view
நாம் திறந்திருக்கும் அனைத்து கோப்புகள், அப்ளிகேசன்களை பார்க்க புதிய டாஸ்க் வீவ்.
மேலும் பல வசதிகளுடன் விண்டோஸ் 10 இயங்குதளம் 2015-ஆம் வருடம் வெளியிடப்படுகிறது. விண்டோஸ் 8 பயனாளர்களுக்கு இது இலவசமாக கிடைக்குமா? அல்லது அனைவரும் பணம் கட்டி இதனை பெற வேண்டுமா? என்பதை மைக்ரோசாப்ட் தெரிவிக்கவில்லை.
இதன் சோதனைப்பதிப்பை http://preview.windows.com/ என்ற முகவரிக்கு சென்று பதிவிறக்கம் செய்யலாம். இது சோதனை பதிப்பு என்பதால் பிரச்சனைகள், பிழைகள் இருக்கலாம்.

வியாழன், 2 அக்டோபர், 2014

வாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள்

வாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள் சின்ன சின்ன உணவு மருத்துவம்
– கே.எஸ்.சுப்ரமணி

நீரிழிவு நோயை எளிதில் கட்டுப்படுத்த அறுபது கிராம் கொத்து மல்லிக் கீரையைக் காலையில் சாறாக மாற்றி வெறும் வயிற்றில் அருந்தி வரவும். முப்பது நாட்கள் இதைப் பின்பற்றினால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். இந்தச் சாறை அருந்தியதும் அடுத்த அரைமணி நேரத்திற்கு வேறு எதுவும் சாப்பிடக்கூடாது. இரத்த அழுத்த நோயாளிகள் எனில் இந்தச் சாறில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து அருந்தி வரவும். இதனால் இவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.


சோரியாசிஸ் குணமாகும்!
சோரியாசிஸ் என்னும் கடுமையான தோல் வியாதி மற்றும் மஞ்சள்காமாலை நோயாளிகள் குணமாக 15 மிளகைப் பொடியாக்கி, இரண்டு தேக்கரண்டி கற்கண்டு சேர்த்து ஒன்றரை டம்ளர் தண்ணீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் அருந்தவும். பத்து நாட்கள் இதே முறையில் அருந்திப் பிறகு அடுத்த ஐந்து நாட்கள் இந்தக் கலவையில் 5 பாதம் பருப்பையும் ஊறவைத்துச் சேர்த்து அரைத்து அருந்தவும். இந்த மருத்துவம் மிகவும் சக்தி வாய்ந்தது. முதல் பதினைந்து நாட்களில் ஓரளவுதான் குணமாகி இருந்தால், அடுத்து பத்துநாட்கள் இடைவெளிவிட்டு மீண்டும் 15 நாட்கள் இதே முறையில் அருந்தி வரவும். இதனால் கல்லீரல் பலம் பெறும்.

நெஞ்சு வலியா?
அடிக்கடி நெஞ்சு வலியா? ஆனால் பரிசோதனையில் இதயம் நன்றாக இருக்கிறதா? இந்த நிலையில் மாதுளம்பழம், திராட்சைப்பழம் முதலியவற்றை வீட்டிலேயே சாறாக்கி அருந்தி வரவும். கொலாஸ்ட்ராலை மாதுளம் பழமும், நெஞ்சு வலியை திராட்சை சாறும் நீக்கிவிடும். 35 வயதுக்கு மேல் ஃபாஸ்ட் புட் உணவு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இந்தியாவில் இதயநோய் அதிகரித்து வருவதற்கு துரித உணவு வகைகளும் காரணமாக இருக்கினறனவாம்.

பெண்களுக்கு வாழைப் பூ!மாதவிலக்குக் கோளாறுகள் உள்ளவர்கள் அவிக்கப்பட்ட வாழைப் பூவுடன் தயிர் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இரத்தப் போக்குக் கட்டுப்படும். ஒழுங்கற்ற மாதவிலக்கை அறுபது கிராம் பீட்ரூட் குணமாக்கும். அறுபது கிராம் பீட்ரூட்டைச் சாறாக்கித் தினமும் அருந்தவும். மாதவிலக்கு நேரத்தில் இதைப் போல் மூன்று முறை தினமும் அருந்தவும். இல்லையெனில் சுக்குக்காபி அருந்திவரவும். இரவு படுக்கைக்குச் செல்லும்போது ஒரு கப் பசும்பால் அருந்துவதும் நல்லது.

எலுமிச்சம் பழச்சாறும் அதில் சேர்க்கப்படும் ஒரு தேக்கரண்டித் தேனும் உடல் பருமனை மிக வேகமாகக் குறைக்கவல்லவை. இதனால் உடலுக்கும் சக்தி கிடைக்கும். ஆனால், இதனுடன் பசிக்கிறதே என்ற கண்டதையும் தின்றால் பலன் ஏதும் இராது.
தயிரைக் குறைக்கலாமா?உடலில் விஷத்தன்மை ஏறாமல் இருக்க தயிர் உதவுகிறது. தினமும் தயிர் சேர்த்து வந்தால் குடல் பாதை ஆரோக்கியமாக இருக்கும். இது மற்ற உணவு வகைகளிலிருந்து உடலில் சேரும் தாது உப்புக்களை உடல் நன்று உறிஞ்சிக் கொள்ள உதவுகிறது. மேலும் எல்லா உறுப்புகளும் தயிர் மூலம் விஷத்தன்மை சேராமல் தடுக்கப்படுவதால் இளமையும் தொடர்கிறது. இதனால் வயோதிகத்தையும் தள்ளிப்போடலாம். இந்த உண்மைகளை நோபல் பரிசு பெற்ற ரஷ்ய விஞ்ஞானி மெச்சினி கோஃப் என்பவர்தான் கண்டுபிடித்தார்.

நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் வேகவேகமாக எப்போதும் நடக்கப் பழகி கொண்டால் மூட்டுவலி, தசைவலி குறையும். எலும்பு மெலியும் ஆஸ்டியோ போரோசிஸ் நோயும் முன் கூட்டியே இதனால் தடுக்கப்படும்.

வள்ளிக்கிழங்கு நல்லதா?
தினமும் நமக்குத் தேவையான அதிமுக்கியமான வைட்டமின், அஸ்கார்பிக் அமிலம் எனற் வைட்டமின்தான். இதை எல்லோரும் ஆரஞ்சு, நெல்லிக்காய் மூலம் பெறலாம். ஆனால் இவ்விரண்டையும் எப்போதாவது சாப்பிடுகிறவர்கள் என்ன செய்வது? சர்க்கரை வள்ளிக்கிழங்கு சிறிதளவு பச்சை மிளகாயும் சேர்த்துக் கொள்வதுதான் நல்லது. இரண்டிலிருந்தும் ஒரு நாளுக்குத் தேவையான அளவான வைட்டமின் சி கிடைத்துவிடுகிறது. வள்ளிக்கிழங்கில், ஒரு நாள் தேவைக்கான வைட்டமின் உள்ளது. வள்ளிக்கிழங்கு சாப்பிடாத நாளில் உருளைக்கிழங்கு சாப்பிடவும். வெளியில் சுற்றுபவர்களுக்கு சிகரெட் புகை, பெட்ரோல் கார்களின் புகை, கதிர்வீச்சுகள் முதலியவற்றால் புற்றுநோய் முதல் கண்நோய் வரை வர வாய்ப்புள்ளது. எனவே, வைட்டமின் சி-யை எல்லா வயதுக்காரர்களும் பெற இந்த இரு கிழங்குகளையும் அடிக்கடி சாப்பிடவும்.

மூளை வளர்ச்சிக்கு அரிய கீரை!
நினைவாற்றலுக்கு மட்டுமல்ல, மூளை வளர்ச்சி, சொறிசிரங்கு, வயிற்றுப்புண், வறட்டு இருமல் முதலியவற்றை வல்லாரைக்கீரை விரைந்து குணமாக்கும். வாரம் ஒரே ஒரு நாள் மட்டும் பருப்புடன் சேர்த்த இந்தக் கீரையைச் சமைத்துச் சாப்பிட வேண்டும். அடிக்கடி இக்கீரையைச் சாப்பிட்டால் மூளை பாதிக்கப்படலாம். உடலில் வலி வரும். பள்ளிக்குழந்தைகள், இரத்த சோகை நோயாளிகள், மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்கள், ஆஸ்டியே, போரொசிஸ் என்னும் எலும்பு மெலிவு நோயால் அவதிப்படும் பெண்கள், கொலாஸ்டிரல் பிரச்சனை உள்ளவர்கள் வாரம் ஒரு முறை வல்லாரைக்கீரையைச் சாப்பிட்டால் (கொஞ்சம் கசக்கும்) வளமுடன் வாழ நல்ல உடல் நலம் தொடர்ந்து பாதுகாப்பாக இருக்கும்.

நன்றி: tamilvanan.com

பப்பாளி – அற்புத மருத்துவ குணங்கள்..!!

மக்கள், தேவையில்லாமல் இப்பழத்தின் மீது வெறுப்பைக் காட்டுகின்றனர். வேறு சிலரோ பப்பாளிப் பழம் உஷ்ணமானது ( Heat ) என்று வதந்தியைப் பரப்பி வருகின்றனர். மிக எளிமையாக விளையக் கூடிய இதன் விலையும் மிகமிகக் குறைவாக இருப்பதால் இப்பழத்தை பலர் விரும்புவதில்லை போலும்.
ஆனால், இயற்கை மருத்துவர்களும், இயற்கை உணவாளர்களும் இப்பழத்தின் அருமையா எண்ணி வியக்கின்றனர். பப்பாறிக் காயிலிருந்து எடுக்கப்படும் பால் ( Latex ) பல்வேறு மருந்துகள் தயாரிக்கப் பயன்படுவதால் இது வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இப்பழத்தின் சிறப்பை உணர்ந்து கொள்ள இதைவிட வேறு செய்தியும் வேண்டுமா?
சாப்பிடும் முறைகள்
பப்பாளிக்காயை பொறியல் செய்து உண்ணலாம். அல்லது சாறு போல் அரைத்தும் அருந்தலாம்.
இப்பழத்தைத் துண்டுகளாக நறுக்கி ஒரு தட்டில் வைத்து அதன் மீது சீரகத்தூள், தேன், சிறதளவு எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடுவது மிகவும் நல்லது.
இப்பழத்துண்டுகிளின் மீது பனங்கற்கண்டுத் தூள் தூவியும் சாப்பிடலாம்.
சப்பாத்தி, தோசை போன்றவற்றிற்குத் தொட்டுக் கொள்வதற்கு ஜாம் போல பயன் படுத்தலாம்.
இரவு உணவில் பப்பாளிப் பழத்தினைக் கண்டிப்பாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அசைவப்பிரியர்களுக்கு ஓர் செய்தி
ஆட்டு இறைச்சி சமைக்கும்போது பப்பாளிக்காயை துண்டுகளாக நறுக்கி சிறிதளவு சேர்த்து வேகவைத்தால் இறைச்சி மென்மையாகவும் சுவையாகவும் இருக்கும்.
பலன்கள்
* பப்பாளிப்பழம் செரிமான நோய்களை குணப்படுத்துவதோடு மலச்சிக்கல்களைப் போக்கும் ஆற்றல் வாய்ந்தது.
 
* இரத்தத்தில் உள்ள அமிலத் தன்மையை அகற்றும், இரத்த சோகை என்னும் நோயை குணப்படுத்தும்.
 
* நமது உடலில் காயம்பட்டு வெளியேறுகின்ற இரத்தமானது உடனடியாக உறைவதற்குத் தேவையான என்ஸைம்கள் இப்பழத்தில் அடங்கியுள்ளன.
 
* கல்லீரல், மண்ணீரல் நோய்க்கு பப்பாளிப் பழமே சிறந்த உணவாகும்.
 
* பப்பாளிப் பழத்தின் விட்டமின் ‘ ஏ ‘ மிகுதியாக அடங்கியுள்ளது.
 
* பப்பாளிக்காயை சாறு அரைத்துக்குடித்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் வெறியேறும்.
 
* தினசரி பப்பாளியை உண்டு வந்தால் உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு இளமைப்பொலிவோடு வாழாலாம்.
 
பப்பாளிப்பழத்தின் நன்மைகளை அளவிடமுடியாது.
இக்கட்டுரையைப் படிக்கும் வாசகர்களே! 
 
இன்றே உங்களது வீட்டின் கொல்லைபுறத்தில் சில பப்பாளி மரக்கன்றுகளை நட்டு வையுங்கள். அரிய நன்மைகளைத் தந்திடும் சுவையான பப்பாளிகளை உங்கள் இல்லங்களிலேயே உற்பத்தி செய்யுங்கள். ஓய்வு நேரத்தைப் பயனுள்ளதாக மாற்றுங்கள்.

Popular Posts

Facebook

Blog Archive