புதன், 26 பிப்ரவரி, 2020
*ட்ராபிக் ராமசாமி ..............*
ஆண்டுக்கு ஒரு கடை எப்படி?*
தங்கம் பற்றி விழிப்புணர்வு இல்லை மக்களுக்கு...! சில விளம்பரங்கள் சேதாரம் இத்தனை % என்றும், செய்கூலி இல்லை என்று கூறுகின்றது. உண்மை என்ன ?*
_____________________
💫 ஒரு பவுன் தங்கசெயினுக்கு
1.5 கிராம் செம்பு சேர்த்தால் மட்டும் நகை செய்ய முடியும்...!
💫 இது அனைவருக்கும் தெரிந்தது. ஆனால்
8 தங்கத்தில் 1.5 கிராம் கழித்தது போக
6.5 கிராம் நகை செய்யப்படுகின்றது...!
💫 ஆனால் சாமானியன் நகை வாங்கும்போது 6.5 தங்கம் + 1.5 செம்பு இரண்டும் சேர்ந்து 8 கிராம் தங்கமாக பில்லில் போடுகின்றார்கள். அதுமட்டுமின்றி அதற்கு மேலாக சேதாரம் என்று கூறி மேலும் 1.5 கிராம் செம்பை தங்கம் சேர்க்கப்பட்டதாக கூறி செம்பை தங்க விலைக்கு விற்கின்றார்கள்...!
💫 இதில் நான் சொல்லுவது என்ன 6.5 தங்கம் + 1.5 செம்பு (தங்கமாக) + சேதாரம் செம்பு 1.5 = 9.5 கிராம். ஆக 1 பவுன் நகை வாங்குபவர்கள் வெறும் 6.5 கிராம் தங்கத்தை மட்டும் இல்லாமல் 3 கிராம் செம்பை சேர்த்து விட்டு தங்கத்தின் விலையை போட்டுவிடுகின்றார்கள்...!
💫 ஆக 1 பவுன் 8 கிராம் நகைக்கு 9.5 கிராமுக்கு நாம் பணம் கட்டுகின்றோம். யாரை ஏமாற்றுகின்றார்கள் நகைக் கடைகாரர்கள் ! ஏழைகளை ஏமாற்றி ஏழைகளின் இரத்தத்தை ஒட்டுண்ணிகளாக உறிஞ்சி எடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள்...!
💫 ஒருவர் ஒரு புதிய நகைக்கடை திறக்கின்றார் என்றால் ஒரு சில வருடத்தில் பல மாடிகளும் பல ப்ளாட்டுகளையும் வாங்கி குவிக்கின்றார்கள் என்றால் பணம் எப்படி வந்தது ? நான் மேலே சொன்ன கணக்குதான் உண்மை...!
💫 இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை என்ன ? பவுனுக்கு 3 கிராம் என்று வசூல் செய்யும் போது ஒரு கிராம் செம்பின் விலை என்ன ? கணக்கு போட்டு பாருங்கள்...!
1 கிராம் தங்கம் ரூ. 2922/-
8 கிராம் தங்கம் ரூ. 23,376/-
1 கிராம் செம்பு - 4.80
1.5 கிராம் செம்பு - 7.20 or 7/-
6.5 கிராம் தங்கம் - 18,993/-
6.5 கிராம் தங்கம் + 1.5 கிராம் செம்பு அடக்க விலை -18993+7=19000/-
1 பவுனுக்கு தங்கத்தில் லாபம் - 23376-19000= 4376/--
சேதாரம் 1.5 கிராம் = 4383/-
1 பவுனுக்கு மொத்த லாபம் 4376+4383=8759
💫 என்ன தலை சுத்துதா ? எனக்குள் ஒரு ஆதங்கம். ஆனால் இந்த விழிப்புணர்வை மக்கள் எப்போது உணர்கின்றார்களோ அன்று தங்கத்தின் விலை கண்டிப்பாக குறையும்...!
💫 நீங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசையுள்ள நல்ல உள்ளங்களே ! உங்கள் ஆதங்கத்தை காட்ட அதிகப்படி ஷேர் செய்யவும்.
எதுவும் மக்களால் முடியும்...!
*தாய்ப்பாலில் எரிந்த பெரு உடையார் கோவில் தீபம்:**அழியாத வரலாற்று உண்மை*
Author: Infomas | பிப்ரவரி 26, 2020 |
கண் கலங்கிவிட்டேன் இந்த சரித்திர உண்மை யை படித்தினால்
🏹🗡🏹⚔🏹🗡🏹⚔🏹🗡🏹
🚩மாமன்னன் ராஜ ராஜசோழன்🚩
*தாய்ப்பாலில் எரிந்த பெரு உடையார் கோவில் தீபம்:*
*அழியாத வரலாற்று உண்மை*
சோழப்பேரரசன் ராஜராஜசோழனின் அரண்மனை. ஒருநாள் மன்னனைப் பார்த்து ‘சோழப்பேரரசே கோவிலுக்காகக் கொடுத்த நன்கொடைகள் ஏராளம் இருந்தாலும், உங்கள் திருமுகத்தில் தீராத கவலை படிந்திருக்கிறதே என்ன காரணம்?’ என்றார் அமைச்சர்.
மன்னர் கண்மூடி யோசித்தார். நெடுங்காற்றை உள்வாங்கி சீராக மூச்சுவிட்டார். கண் திறந்தார். நிதானமான குரலில் பேசத்தொடங்கினார்.
‘சோழப்பேரரசின் அடையாளம் இந்தப்பெருவுடையார் கோவிலின் மூலம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கும் அழியக்கூடாது என்று தான் கவலைப்படுகிறேன். அரண்மனைகள் தனிச்சொத்து, ஆலயங்கள் மக்கள் சொத்து என்று கருதப்படுமாயின் மக்களுக்கும் இதில் பங்கிருக்க வேண்டும். சோழமண்டலத்தில் கடைக்கோடியில் சிற்றூரில் வாழும் மக்களும் இந்த ஆலயத்தின் பங்குதாரர்களாக மாற்றிவிடும் திட்டத்தைத்தான் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்’ என்றார்.
‘திட்டம் என்ன மன்னா?’ அமைச்சர் கேட்டார்.
‘அதோ அந்தத்திரு விளக்குகள் செல்வந்தர்களின் நேர்த்திக் கடன்களால் எரிகின்றன. தினந்தோறும் கோவில்களில் தீபங்கள் எரிய வேண்டும். அதற்காக ஆடுகளையும், மாடுகளையும் ஏழைகளுக்கு வழங்கப் போகிறேன். அதற்குப்பதிலாக அவர்கள் திரு விளக்குகள் எரிய நெய் தந்தால் மட்டும் போதும். மொத்த வருமானமும் அவர் களுக்கே. அதாவது ஏழையின் அடுப்பும், ஆலயத்தின் திருவிளக்கும் ஒரே திரியில் எரியும். இந்த ஆலயத்தோடு அடித்தட்டு மக்களுக்கு உறவு மேம்படும். இதுதான் என் திட்டம், சரியா?’ என்றார்.
‘மிகச்சரியானது மன்னா’ என்று வணங்கினார்.
அரசன் ஆணை பிறப்பித்தான். ‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும். கால்நடைகளை ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுங்கள். எந்த நிலை யிலும் நிபந்தனை வழங்காது கட்டுப்பாடு வகுத்து கண்காணியுங்கள் என்றான்.
ஒருநாள் கோவில்களைச் சுற்றி வரும் பொழுது ஒரு கோவிலில் மட்டும் விளக்கு எரியவில்லை. காரணம் கேட்டறிந்தார்.
எவத்தூர் மாராயன் என்பவனுக்கு 42 பசு மாடுகள் வழங்கப்பட்டுள்ளன. அவனுடைய கட்டுப்பாட்டில் எரியவேண்டிய விளக்கு கடந்த ஏழு நாட்களாக எரியவில்லை என்பதை அறிந்தார்.
‘எவனவன், இறைவன் கட்டளையை நிறைவேற்ற மறுப்பவன். பூட்டுங்கள் தேரை, ஓட்டுங்கள் எவத்தூருக்கு’ என்றான்.
காலி மனையால் சூழப்பட்ட ஒரு குடிசையின் முன் மன்னரின் தேர் நின்றது. ‘பேரரசன் வந்திருக்கிறேன், மாராயா வெளியே வா’ என்று குரல் கொடுத்தார்.
உள்ளே ஒரு பெண்ணின் விசும்பலும் குழந்தையின் அழுகுரலும் கேட்டது.
சற்று நேரத்தில் கதவைத் திறந்து கசங்கிய சேலையும், கலைந்த கூந்தலும், கலங்கிய கண்களுமாய் பெண்ணொருத்தி வெளியே வந்தாள். அவளது இடுப்பில் நாராய் தொங்கிக் கொண்டிருந்தது, சவலை பாய்ந்த குழந்தை ஒன்று. பேரரசரைக் கண்டதும் அஞ்சி நடுங்கி கீழே விழுந்தாள்.
‘எழுந்திரு பெண்ணே! நீ யார்?’
‘நாந்தாங்க மாராயன் பொஞ்சாதி’
‘உன் கணவன் எங்கே?’
‘என் புருஷனும், ராசா கொடுத்த மாடுகளும் போன மாசம் காவிரி வெள்ளத்தில் ஆத்தோடு போயிருச்சி...’
அவள் சொல்வது மெய்யா என்பது போல திரும்பிப்பார்த்தார். ஆம்! என்று வருத்தத்தோடு தலை அசைத்தனர் பொதுமக்கள்.
‘உனக்காக வருந்துகிறேன். ஆனால் ஒரு கேள்வி. கடந்த மாதம் இறந்தார் என்கிறாய். ஏழு நாட்களுக்கு முன்பு வரை திருவிளக்கு எரிந்திருக்கிறது. கணவனும், மாடுகளும் இறந்தபின் இருபத்து மூன்று நாட்கள் எப்படி நீ விளக்கு எரித்தாய்?’.
அவள் தேம்பித் தேம்பி அழுதாள். இடுப்பில் நழுவிய குழந்தையை மார்போடு கட்டிக்கொண்டு, ‘அதை மட்டும் கேட்காதீர்கள் மன்னா’ என்று கண்கலங்கினாள்.
‘பெண்ணே! அஞ்சாதே உண்மையைச் சொல்’.
‘சொல்கிறேன் மன்னா! புருஷன் செத்துப் போயிட்டாலும் ராசாவுக்குக் கொடுத்த வாக்கை மீறக்கூடாது பாருங்க. அதனால என் தாய்ப்பாலை விற்று மூணு ஆளாக்கு நெய் வாங்கி தீபத்தை எரிய வச்சேன். ஒரு வாரமாய் தாய்ப்பால் வத்திப்போச்சு, திரு விளக்கு அத்துப்போச்சு. எங்களை மன்னிச்சிருங்க மகராசா’ என்று குழந்தையோடு தேரின் காலடியில் விழுந்தாள்.
நடந்ததை அறிந்த பெருமூச்சுவிட்ட மன்னன் ராஜராஜன் துடிதுடித்துப்போனான் .கண்கள் கலங்கியது தேகம் சிலிர்த்தது.
தேரைவிட்டு கீழிறங்கி தாயையும் குழந்தையையும் சேர்த்தெடுத்து ‘உன்னைப் போன்றவர்களால் தான் பெருமை அடைகிறது என் சோழப்பேரரசு. இன்று முதல் இந்தத்தாயை திருமஞ்சனப் பணிப்பெண்ணாக நியமிக்கின்றேன். அரண்மனை சிற்பியை அழைத்து *தாய்ப்பாலால் விளக்கெரித்த இவள் பெயரை கல் வெட்டில் பொறித்து விடுங்கள்’ என்றான்.*
வரலாறு மறக்கடிக்க பட கூடாது.
எனவே
*அதிகமாய் பகிருங்கள்..*
🙏🕉🙏🚩
ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் இப்போது 10 நிமிடங்களில் இலவச பான் கார்டைப் பெறலாம்! எப்படி விண்ணப்பிப்பது? pan card
Author: Infomas | பிப்ரவரி 26, 2020 |
ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் இப்போது 10 நிமிடங்களில் இலவச பான் கார்டைப் பெறலாம்! எப்படி விண்ணப்பிப்பது?
புதிய பான் கார்டைப் பெற நீங்கள் 2 பக்க விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டிய அவசியமில்லை, மேலும் நாள் கணக்கில் காத்திருக்க வேண்டியதில்லை, ஏனெனில் வரி செலுத்துவோருக்கு வருமான வரித் துறை ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது, ஆதார் அட்டை உள்ள எவரும் ஆன்லைனில் உடனடி பான் கார்டைப் பெற அனுமதிக்கிறது. அதுவும் இலவசமாக. உடனடி இ-பான் கார்டு விண்ணப்ப படிவத்தில் உங்கள் ஆதார் எண்ணை மட்டுமே உள்ளிட வேண்டும், அதன்பிறகு உங்கள் இணைக்கப்பட்ட மொபைல் தொலைபேசி எண்ணில் OTP அனுப்பப்படும்.
ஒரு நிரந்தர கணக்கு எண் (Permanent Account Number) விண்ணப்பதாரருக்கு PDF வடிவத்தில் வெறும் 10 நிமிடங்களில் உடனடியாக வழங்கப்படுகிறது.
இ-பான் கார்டு ஒரு நகலைப் போலவே சிறந்தது என்றாலும், வெறும் ₹ 50 க்கு மறுபதிப்புக்கு ஆர்டர் செய்வதன் மூலம் நீங்கள் விரும்பினால் லேமினேட் செய்யப்பட்ட பான் கார்டையும் பெறலாம்.
உடனடி பான் அட்டைக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
1) இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.
https://www.incometaxindiaefiling.gov.in/e-PAN/index.html?lang=eng
2) இந்த பக்கத்தில் “புதிய பான் பெறு” (Get New PAN) என்பதைக் கிளிக் செய்க.
3) உங்கள் ஆதார்-இணைக்கப்பட்ட மொபைல் தொலைபேசியில் OTP ஐ உருவாக்க புதிய பான் கார்டு மற்றும் கேப்ட்சா குறியீட்டை ஒதுக்க உங்கள் ஆதார் எண்ணை உள்ளிடவும்.
4) OTP ஐ சரிபார்க்கவும்.
5) ஆதார் விவரங்களை சரிபார்க்கவும்.
6) பான் கார்டு பயன்பாட்டிற்கும் உங்கள் மின்னஞ்சல் ஐடியை சரிபார்க்க உங்களுக்கு விருப்பம் இருக்கும்.
7) அந்த ஆதார் எண்ணின் e-KYC தரவு இந்திய தனித்துவ அடையாள ஆணையத்துடன் (UIDAI) பரிமாறிக்கொள்ளப்படுகிறது, அதன் பிறகு உங்களுக்கு உடனடி e-PAN வழங்கப்படும். முழு செயல்முறையும் முடிய 10 நிமிடங்களுக்கு மேல் ஆகாது.
8) “Check Status/ Download PAN” என்ற முகவரியில் ஆதார் எண்ணைச் சமர்ப்பிப்பதன் மூலம் உங்கள் பான் பி.டி.எஃப் வடிவத்தில் பதிவிறக்கம் செய்யலாம். உங்கள் மின்னஞ்சல் ஐடி ஆதார் தரவுத்தளத்தில் பதிவுசெய்யப்பட்டால், உங்கள் மின்னஞ்சல் மூலம் PAN ஐ PDF வடிவத்தில் பெறுவீர்கள்.
புதிய பான் கார்டைப் பெறுவதற்கான முழு செயல்முறையும் இப்போது இலவசமாகவும் எளிதாகவும் காகிதமற்றதாகவும் மாறிவிட்டது. நீங்கள் எந்த ஆவணங்களையும் போர்ட்டலில் பதிவேற்றவும் தேவையில்லை.
இதற்கு முன்பு ஒருபோதும் பான் ஒதுக்கப்படாதவர்களுக்கு மட்டுமே இந்த வசதி கிடைக்கிறது, மொபைல் தொலைபேசி எண் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் DD-MM-YY வடிவத்தில் முழுமையான பிறந்த தேதி ஆதார் அட்டையில் கிடைக்கிறது. தவிர, உடனடி e-PAN கார்டு வசதி சிறார்களுக்கு கிடைக்கவில்லை.
இந்த ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி வரவுசெலவுத் திட்டத்தில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பான் ஒதுக்கீடு செய்வதற்கான செயல்முறையை மேலும் எளிதாக்குவதற்கு, அரசாங்கம் ஒரு புதிய முறையைத் தொடங்கும் என்று அறிவித்ததை அடுத்து, இதன் கீழ் எந்தவொரு தேவையும் இல்லாமல் ஆதார் அடிப்படையில் ஆன்லைனில் பான் உடனடியாக ஒதுக்கப்படுகிறது.
*கொத்தமல்லி இலைச்சாற்றின் மகத்துவம்*
Author: Infomas | பிப்ரவரி 26, 2020 |
் இரண்டு நாட்களில் இறந்துவிடுவார் என மருத்துவரால் கைவிடப்பட்டு மரணத்தின் வாசலிலிருந்த தனது சித்தப்பாவை கொத்தமல்லி இலைச்சாறு கொடுத்து காப்பாற்றிய ஒரு அற்புதம்
*கொத்தமல்லி இலைச்சாற்றின் மகத்துவம்*
அரவக்குறிச்சி பெரியாஸ்பத்திரி வார்டில் ஓர் கிழிந்த துணிபோல படுத்திருந்தார் தாத்தா.
உழைத்து மெலிந்த தேகம். 84 வது வயதில் கல்லீரல் சுத்தமாய் பழுதாகி போய் மரணத்தின் நாட்களை மருத்துவமனையில் எண்ணி கொண்டிருந்தார்...!
ரவுண்ட்ஸ் வந்த சீஃப் டாக்டர் வீரமணி தாத்தாவின் கைநாடியை பிடித்து பார்த்துவிட்டு மேவாயை தடவியபடியே.... இன்னும் இரண்டு நாள்தான் தாங்குவார் சொந்த காரங்களுக்கு எல்லாம் சொல்லி அனுப்பிடுங்க.
. வீட்டுக்கு எடுத்துட்டு போய்டுங்க என்று கூறியபடியே அவர் பிள்ளைகளின் பெருங்குரலெடுத்த அழுகையை காதில் வாங்கிக்கொள்ளாமல் அடுத்த நோயாளியை பார்க்க நகர்ந்தார்...!
ஆம்புலன்ஸில் வீட்டுக்கு கொண்டுவரப்பட்டார் வீரமணி தாத்தா. அவர் மூச்சு எப்போது வேண்டுமானாலும் நின்று விடுவேன் என்று போக்கு காட்டியது
கட்டிலில் மூச்சுவிட சிரமப்பட்டபடி கண்மூடி படுத்திருந்தார் தாத்தா. தம் தங்கை முறையான தாத்தாவின் மகளிடம் விசாரித்தார் அக்கா...
" சாப்பாடு இறங்குதா..?"
"அப்பப்போ கூழாக ஏதாவது கொடுக்கிறோம். கொஞ்சமா உள்ளே போகுது"
"நான் ஒன்னு சொன்னா கேட்பியா தங்கச்சி"
"சொல்லுக்கா... நான் என்ன செய்யனும்...?"
"எப்படியும் இரண்டு நாளில் இறந்திடுவார்னு டாக்கடர் சொல்லிட்டாரு இல்ல. கடைசியா ஒரு முயற்சி செய்து பார்ப்போம்...
இன்னில இருந்து இந்த இரண்டு நாளும் வெறும் மல்லிச்சாறு மட்டுமே கொடுப்போம். அது கழிவுகளை வெளியேத்தி புது ரத்தத்தை ஊற வைக்கும். சித்தப்பா எழுந்து உட்காருவார்னு எனக்கு நம்பிக்கை இருக்கு..!" சரோஜா அக்காவின் கண்களில் அத்தனை உறுதி.
அவர்கள் குடும்பத்தில் சரோஜா அக்கா மீது மிகுந்த மரியாதை உண்டு. குடும்ப உறுப்பினர்கள் ஒன்றுகூடி ஆலோசித்தனர். அந்த குடும்பத்தின் ஆணிவேர் வீரமணி தாத்தா. அவர் இன்னும் சிலகாலம் உயிரோடு இருந்தால் அதுபோல வேறு சந்தோசம் உண்டா..?
அக்காவின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டனர். வீட்டில் மல்லிச்சாறு தயாரானது. ஓர் எதிர்பார்ப்போடும், பரபரப்போடும் அங்கும் இங்கும் ஓடினர். தாத்தாவை மடியில் கிடத்தி மால்லிச்சாறை அவர் வாயில் சிறிது சிறிதாக புகட்டினர்.
இரண்டுநாள் முழுக்க மல்லிச்சாறு மட்டுமே..! இடையிடையே கொஞ்சமாய் பழச்சாறும்.
டாக்டர் விதித்த கெடு இன்றோடு முடிகிறது. நாளை விடியலில் தாத்தா உயிரோடு இருப்பாரா என்கிற பதைபதைப்பில் உறவினர்கள் எல்லாம் தாத்தாவையே சுற்றி வந்தனர்.
இரவு உறங்கி போனது...!
மூன்றாம் நாள் விடியலில் நெஞ்சு திக்... திக்.. என அடித்து கொள்ள சொந்தங்கள் தாத்தாவை நெருங்கி சென்றனர்.
கண்மூடி படுத்திருந்தவர்..... ஓர் இருமலோடு விழித்து கொண்டார்
ஓடு... மல்லிஜுஸ் எடுத்துட்டு வாங்க.. ஐயாவுக்கு கொடுப்போம். எங்கிருந்தோ குரல் ஒலித்தது....,
மீண்டும் ஓர் இருமல் இருமியபடி தாத்தா எழுந்து உட்கார்ந்தார்.
"ஏன் புள்ள என்ன பார்த்து அழுதுகிட்டு நிக்கித. எதுக்கு இம்புட்டுபேரு வந்திருக்காங்க" தன் மனைவியை கேள்வியோடு பார்த்தார் வீரமணி தாத்தா.
இந்த எண்பத்தாறு வயதிலும் ஆரோக்கியமாய் இருக்கிறார். நாம் பார்க்கசென்ற நேரம் மனிதர் கட்டிலில் ஒய்யாரமாய் படுத்திருந்தார். எவர் துணையுமின்றி எழுந்து நடமாடுகிறார்.
தொடர்ந்து..." இந்த மல்லிசாறை எல்லா ஏழை,பாளைகளும் குடிக்கோணும். டாக்டர் கிட்டபோயி ஆயிரகணக்குல செலவு பண்ணியும் குணமாகத என் நோய் இந்தமல்லிசாறால குணமாயிட்டுதே. எனக்கு இருந்த சுகர்நோயும் இப்ப இல்ல. மல்லிச்சாறு பத்தி எல்லா மக்களுக்கும் எடுத்து சொல்லுங்கள்
அமிர்த பானம் கொத்தமல்லி இலைச்சாறு தயாரிப்பது எப்படி?:
நாட்டு கொத்துமல்லி இலை - கால் கட்டு,
தேங்காய் - 1 ,
நாட்டு சர்க்கரை - தேவையான அளவு
சுத்தம் செய்த கொத்துமல்லி இலையுடன் தேங்காய் சேர்த்து அரைத்து வடிகட்டவும்.
இதன் கூட தேவையான அளவு தண்ணீர்,நாட்டு சர்க்கரை கலந்து பருகலாம்.
இந்த சாற்றினை கண்டிப்பாக அடுப்பில் வைக்க கூடாது.
(1)வெறும் கொத்துமல்லி இலைச்சாறுடன் எலுமிச்சை சாறு,உப்பும்,மிளகு தூளும் சேர்த்து அருந்தலாம்.
(2)கொத்துமல்லி இலைச்சாறுடன்,பசும்மோர், உப்பும் கலந்தும் அருந்தலாம்.
(3)கொத்துமல்லி இலைச்சாறு அருந்தும் நாள் அன்று பசிக்கும் போது மட்டுமே சாப்பிட வேண்டும்.
இதை தொடர்ந்து பருகுவதால் காமாலை, கேன்சர் போன்ற மிகக் கொடிய நோய்கள் அனைத்தும் குணமாகும்.
உடலில் உள்ள கழிவுகள் அனைத்தையும் வெளியேற்றும்.
வயிறு சம்பந்தபட்ட அனைத்து பிரச்சினைகளையும் குணமாக்கும்.
கல்லீரலை பலப்படுத்தும்.
பித்தம் கட்டுக்குள் இருக்கும்.
இதை தயார் செய்வது மிகவும் எளிதானது.
இதை அனைவரும் பருகலாம்,
தினமும் தண்ணீர்க்கு, டீ, காபிக்கு பதில் இதை அருந்தலாம்.
கொத்துமல்லிக்கு பதில் கருவேப்பிலையும் , புதினாவையும் இதே போன்று சாறு தயார் செய்து உபயோகிக்கலாம்.
ஆனாலும் கொத்துமல்லி இலைச்சாறுதான் சிறந்தது.
ஞாயிறு, 2 பிப்ரவரி, 2020
கணுக்கால் உள்வளைவு ஊனத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் குணம் ஆக
Author: Infomas | பிப்ரவரி 02, 2020 |
இன்று காலை கோவை அரசு மருத்துவமனைக்கு நானும் என் மனைவி மற்றும் இளைய மகன் மூன்று பேரும் இரண்டு சக்கர வாகனத்தில் சென்று இருந்தோம்.
மருத்துவமனைக்கு செல்லும் முன்பு சிங்காநல்லூரில் உள்ள பிரபல சாந்தி சோஷியல் சர்விஸ் கேண்டினில் காலை உணவு சாப்பிட்டு விட்டு ஒரு சிக்னலில் நின்று கொண்டு இருந்தோம்,
அப்பொழுது என் வாகனத்திற்கு முன்பு ஒரு பெண் 3 வயதுள்ள தன் குழந்தையை மடியில் வைத்து கொண்டு தன் கணவருடன் சிக்னலில் இரு சக்கர வாகனத்தில் உக்காந்து கொண்டு இருந்தனர்,
அப்பொழுது என் வாகனத்திற்கு முன்பு ஒரு பெண் 3 வயதுள்ள தன் குழந்தையை மடியில் வைத்து கொண்டு தன் கணவருடன் சிக்னலில் இரு சக்கர வாகனத்தில் உக்காந்து கொண்டு இருந்தனர்,
அக்குழந்தை வேடிக்கை பார்த்துக்கொண்டு சிரித்து கொண்டு இருந்ததை ரசித்து கொண்டு இருந்த வேளையில் அந்த குழந்தையின் இரண்டு கால்களில் ஒரு கால்கள் மட்டும் சற்று வித்தியாசமாக இருப்பதை கண்டேன்,,
நான் சற்று முன்னோக்கி சென்று அக்குழந்தையின் கால்களை சற்று உற்று பார்த்த பின் தான் தெரிந்தது அந்த குழந்தைக்கு ஒரு கால் ஊனம் என்று...
உடனே அந்த குழந்தையின் தந்தையிடம் சிக்னல் முடிந்தவுடன் வண்டியை சற்று ஓரமாக நிறுத்துங்கள் உங்கள் குழந்தையை பற்றி சிறிது பேசவேண்டும் என்று கூறியதும் அவரும் வண்டியை சற்று ஓரமாக நிறுத்தினார்..
முதலில் எங்களை அவரிடம் அறிமுகம் செய்து கொண்டு, பிறகு அவருடைய குழந்தையின் கால்களை பற்றி விசாரிக்க ஆரம்பித்தேன்,,
அந்த பெண் குழந்தை பிறக்கும் போதே ஒரு கால் ஊனமாக தான் பிறந்தது என்றும் கால்களை சரி செய்ய தனியார் மருத்துவமனையில் லட்ச ரூபாய் செலவாகும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர் எங்களால் அவ்வளவு பணம் செலவு செய்யும் அளவுக்கு எங்களுக்கு வசதி இல்லை என்று வேதனையுடன் தெரிவித்தார்,, சரி இதெல்லாம் ஏன் கேக்கறீங்க என்று என்னிடம் கேட்க ஆரம்பித்தார்...
நான் என் மகனை அவரிடம் காண்பித்து என் மகனின் கால்கள் எப்படி உள்ளது என கேட்க, அவரும் நன்றாக தான் உள்ளது என்று கூறினார்..
பிறகு நான் என் மகனை பற்றிய விவரங்களை அவரிடம் கூற ஆரம்பித்தேன்,,
பிறகு நான் என் மகனை பற்றிய விவரங்களை அவரிடம் கூற ஆரம்பித்தேன்,,
என் மகனின் பெயர் அர்சத்,, பவானி அரசு மருத்துவமனையில் பிறக்கும் போதே இவனுக்கு இரண்டு கால்களும் ஊனம் உங்கள் மகள் போலவே தான் என் மகனுக்கும் கால்கள் ஊனமாக பிறந்தான்,,
இதுக்கு கணுக்கால் உள்வளைவு ஊனம்னு (clubfoot) சொல்லுவாங்க,, அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து குணமாக்கிவிட்டோம் என்று கூறியதும் அவர் சற்று அதிர்ச்சி அடைந்து இதை எப்படி சரி பண்ணிங்க தெளிவா சொல்லுங்க நானும் என் மகளுக்கு சரி பண்ணனும்னு கேட்க ஆரம்பித்தார்..
மகன் ஊனமாக பிறந்து விட்டானே என்று நானும் உங்களை போல தான் மனவேதனையில் திகைத்து போய் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த வேளையில், என் மகன் பிறப்பதற்கு முன்பு ஒரு பதிவை வாட்ஸப் குழுவில் சேர் செய்தது நினைவுக்கு வந்தது,
அந்த பதிவை மீண்டும் தேடி பார்த்த பொழுது அது கணுக்கால் உள்வளைவு ஊனத்திற்கு அரசு மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என்ற பதிவு,,
நான் பகிர்ந்த பதிவு கடைசியில் எனக்கே தேவைப்பட்டது..
அந்த பதிவை மீண்டும் தேடி பார்த்த பொழுது அது கணுக்கால் உள்வளைவு ஊனத்திற்கு அரசு மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என்ற பதிவு,,
நான் பகிர்ந்த பதிவு கடைசியில் எனக்கே தேவைப்பட்டது..
அந்த பதிவில் இருந்த அலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசினேன்,, மறுமுனையில் பேசியவர்கள் குழந்தையை தூக்கி கொண்டு கோவை அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும் என்று கூற, நானும் என் மனைவியும், பிறந்து 7 நாள் மட்டுமே ஆன இவனை தூக்கி கொண்டு கோவை அரசு மருத்துவமனைக்கு வந்தோம்,,
என் மகனை மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு கால் பாதங்களை வளைத்து மாவுகட்டு போட ஆரம்பித்தார்கள்,,
போடப்பட்ட மாவுகட்டுகளை அடுத்த வாரம் வரைக்கும் வைத்து இருக்கவேண்டும்,, பிறகு ஒரு வாரம் கழித்து மீண்டும் மாவுகட்டுகளை அவிழ்த்து புதிய மாவுகட்டுகளை கட்டுவார்கள்,, இப்படி ஒவ்வொரு மாவுகட்டுகளை கட்டும் பொழுதும் கால் பாதத்தின் மேல் பகுதி எலும்புகளை நேராக வளைத்து கட்டு கட்டுவார்கள்,,
வாரத்திற்கு ஒரு மாவுகட்டு,,
இப்படி 15 வாரம் பவானில இருந்து வந்து கட்டு போட்டு போவோம்,,
அப்புறம் 15 மாவுகட்டு முடிஞ்சதும் குழந்தையோட இரண்டு குதிங்கால் மேல் பகுதியிலும் அறுவைசிகிச்சை செய்து ஒரு வாரம் மருத்துவமனைல தங்கினோம்,,
அதுக்கு அப்புறம் ஒரு ஷூ கொடுப்பாங்க அதை தினமும் போடுகிட்டே வந்தோம்,, குழந்தைகள் வளர வளர ஷூ வும் இலவசமாவே மாத்தி கொடுதாங்க,, இப்படி 5 வயசு வரைக்கும் ஷூ போட்டு வந்த கண்டிப்பா குணம் ஆகிடும்,,
நாங்கள் இப்பொழுது 3 வருடங்
களாக சிகிச்சைக்கு வந்து கொண்டு இருக்கிறோம் இப்ப கூட நாங்க மருத்துவமனைக்கு செல்ல தான் வந்து இருக்கின்றோம் என்று சொல்லி முடிச்சதும் அவர் முகத்துல கொஞ்சம் சந்தோசத்துடன் இருந்தார்.. அவர் என் மகளின் கால்களை சரி செய்ய எனக்கு உதவுங்கள் என்று கேட்க நானும் அவரை அழைத்து கொண்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சென்றேன்,, அவர் மருத்துவரிடம் சிகிச்சைக்கான விளக்கங்களை அறிந்து கொண்டு தன் மகளுக்கு சிகிச்சை அளிக்க முடிவுசெய்து உள்ளார்..
இவரை போன்று சில பேர் இந்த கணுக்கால் ஊனத்திற்கு அரசு மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது என்ற விவரம் தெரியாமல் உள்ளனர்,,
அவர்களுக்கான பதிவு தான் இது..
தற்பொழுது என் மகன் குணமடைந்து மற்ற குழந்தைகளை போலவே ஓடியாடி விளையாடுகிறான்..
இது போன்று கணுக்கால் உள்வளைவு ஊனத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை நீங்கள் காண நேர்ந்தால் எனக்கு தெரிவிக்கவும்..
சுபான் எஸ்.எம்.
சனி, 18 ஜனவரி, 2020
Amazon Great Indian Festival - 19th - 22nd Jan 2020 - Best Mobiles
Author: Infomas | ஜனவரி 18, 2020 |
Amazon Great Indian Festival - 19th - 22nd Jan 2020 - Daily Essentials
Author: Infomas | ஜனவரி 18, 2020 |
புதன், 15 ஜனவரி, 2020
🙏 வணக்கம் 🙏 நீங்கள் கேட்ட நான்கு கேள்வி? - பதில் இதோ👇..
Author: Infomas | ஜனவரி 15, 2020 |
🙏 வணக்கம் 🙏
முதலில் சகோதரர் விக்கி அவர்களுக்கு நன்றி.
🗣️நீங்கள் கேட்ட நான்கு கேள்விகளில் முதலாவது கேள்வி 👉இனவாதம் பேசுவது சரியா? என்பதற்கு பதில் இதோ👇..
✍️உள்ளபடி யாதுமென உற்றுணர்ந்தேன் அக்கணமே
கள்ளமனம் போனவழி காணேன் பராபரமே✍️
💓தாயுமானவர் 💓
🗣️எதையுமே கள்ளமனம் கொண்டு சொல்லாமல் உள்ளதை உள்ளபடியே நேர்மையாக கூறவேண்டும் என்று தாயுமானவர் நமக்கெல்லாம் அறிவுறுத்துகின்றார்.
💓திருவள்ளுவர் 💓
நல்லாண்மை என்பது ஒருவருக்குத் தான் பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்✍️
🗣️நல்ல ஆண்மகனுக்கு அழகு என்பது தான் 👉பிறந்த வீட்டையும் நாட்டையும் நீயே ஆள்வது போல் பார்த்துக் கொள்ள வேண்டும்👈 என்று ஐயன் 💓திருவள்ளுவர்💓 கூறுகின்றார்.
🗣️இது
👉தமிழர்களுக்கு மட்டுமல்ல👈
🗣️உலகில் உள்ள அனைத்து மொழி வழி தேசிய இனங்களுக்கும் பொருந்தும்.
🗣️தமிழ்நாட்டை தமிழர் தான் ஆளவேண்டும். அதுபோல
👉ஒவ்வொரு மாநிலத்தின் தாய் மொழியை பேசுகின்ற மக்கள் தான் அந்தந்த மாநிலங்களை ஆளவேண்டும்👈.
🗣️இப்போ சொல்லுங்க திருவள்ளுவர் இனவாதியா???🤔
💓பாரதியார்💓
✍️தமிழ்த் திருநாடு தன்னைப் பெற்ற-எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா✍️
💓தமிழ்நாட்டை💓, தன்னை பெற்றெடுத்த 👉தாய் 👈 என்று நினைத்து தினமும் 💓பாரதியார்💓 கும்பிடச் சொல்கின்றார்.
🗣️இப்போ சொல்லுங்க பாரதியார் இனவாதியா?🤔
💓பாரதிதாசன் 💓
✍️அவனவன் நாட்டில் அவனவன் வாழ்க-மற்றயல் நாட்டைச் சுரண்டுதல் அடியோடு வீழ்க!✍️
அவன் அவன் அவனுடைய நாட்டில் தான் வாழ வேண்டும் என்று
💓பாரதிதாசன்💓 கூறுவதால்,
💓பாரதிதாசன் 💓 இனவாதியா?🤔
💓பாவலரேறு பெருஞ்சித்திரனார் 💓
✍️கெஞ்சுவதில்லை பிறர்பால்!
அவர் செய் கேட்டினுக்கும்
அஞ்சுவதில்லை, மொழியையும்
நாட்டையும் ஆளாமல் துஞ்சுவதில்லை,✍️
மொழியையும் நாட்டையும்
💓பெருஞ்சித்திரனார் 💓 ஆளச் சொல்லிவிட்டார்,
🗣️இதனால் இவர் இனவாதியா?🤔
🗣️இதுபோல் 💓தமிழையும் தமிழ்நாட்டையும்💓 தம் உயிராக நினைத்து வாழ்ந்தவர்களின் கூற்றுக்கள் ஏராளம் உண்டு. அவற்றையெல்லாம் சொல்ல நாட்கள் போதாது🤝
இப்போது சொல்லுங்கள்
💓நாம் தமிழர்💓
👉இனவாதம் பேசுகின்றாதா?🤔 இல்லை
👉தன்மானம் பேசுகின்றார்?🤔
ஞாயிறு, 5 ஜனவரி, 2020
ஒவ்வொரு விவசாயியும் ஏன் அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்புக் கணக்கைத் திறக்க வேண்டும்; நன்மைகள் மற்றும் அம்சங்களைப் படியுங்கள்
Author: Infomas | ஜனவரி 05, 2020 |
ஒவ்வொரு விவசாயியும் ஏன் அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்புக் கணக்கைத் திறக்க வேண்டும்; நன்மைகள் மற்றும் அம்சங்களைப் படியுங்கள்
திட்டம் மற்றும் வட்டி விகிதத்தை அறிந்து கொள்ளுங்கள்
ஒவ்வொரு மாதமும் உங்கள் வருவாயிலிருந்து சிறிது பணத்தை சேமித்து அஞ்சல் அலுவலகத்தின் சேமிப்புக் கணக்கில் டெபாசிட் செய்தால், உங்களுக்கு ஒரு நிலையான விகிதத்தில் வட்டி வழங்கப்படுகிறது. நீங்கள் தபால் நிலையத்தின் சேமிப்புக் கணக்குகளில் பணத்தை டெபாசிட் செய்தால், தபால் அலுவலகம் உங்களுக்கு 4 சதவீத வட்டியை வழங்கும். இந்த வட்டி விகிதம் ஒரு சிறிய சேமிப்பு திட்டத்தில் வழங்கப்படும்.
தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம்
தேசிய சேமிப்பு சான்றிதழ் என்பது ஒரு நிலையான வருமான முதலீட்டு திட்டமாகும், இது நீங்கள் எந்த தபால் நிலையத்திலும் திறக்க முடியும். இந்திய அரசாங்கத்தின் முன்முயற்சி, இது ஒரு சேமிப்பு பத்திரமாகும், இது சந்தாதாரர்களை - முக்கியமாக சிறிய முதல் நடுத்தர வருமான முதலீட்டாளர்களை - வருமானத்தில் சேமிக்கும்போது முதலீடு செய்ய ஊக்குவிக்கிறது. இந்தத் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்தால், பிரிவு 80 சி இன் கீழ் வரியைச் சேமிக்கும் வசதியைப் பெறுவீர்கள், வங்கிகளுடன் ஒப்பிடும்போது பணம் இரட்டிப்பாகியது.
நீங்கள் சேமிப்புக் கணக்கைத் திறக்கும்போது மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள்
Rate of interest: If you open a savings account, then it gets a 4 percent interest rate annually. This interest rate has been fixed for the third quarter of the current financial year.
The minimum investment for opening an account: The minimum investment for opening a savings account is 500 rupees.
Minimum transaction: The account holder needs to make about one financial transaction (deposit or withdrawal) in three financial years to run this account.
Income Tax: The interest of 10 thousand rupees found in the Post Office Savings Account has been completely tax-free.
சனி, 4 ஜனவரி, 2020
Indan Gas - இன்டேன் கேஸ் வாடிக்கையாளர்களுக்கு வணக்கம்!*
Author: Infomas | ஜனவரி 04, 2020 |
*இன்டேன் கேஸ் வாடிக்கையாளர்களுக்கு வணக்கம்!*
இண்டேன் கேஸ் வாடிக்கையாளர்கள் இனி எந்த சிரமமும் இல்லாமல் இலவசமாக Whatsapp மூலம் கேஸ் பதிவு செய்து கொள்ளும் வசதியை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
*75888 88824* என்ற தொலைபேசி எண்ணை உங்கள் மொபைல் போனில் இன்டேன் கேஸ் வாட்ஸ்அப் புக்கிங் என சேமித்துக் கொள்ளவும்.
*A. கேஸ் இணைப்பில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து கேஸ் பதிவு செய்யும் வழிமுறை.*
*REFILL*
என மட்டும் டைப் செய்து அனுப்பினால் உடனே பதிவு ஆனதற்கான விபரங்கள் உடனே உங்கள் வாட்ஸப்பில் வந்துவிடும்.
*B. கேஸ் இணைப்பில் பதிவு செய்யாத மொபைல் என்னிலிருந்து கேஸ் பதிவு செய்யும் வழிமுறைகள்*
*REFILL#<உங்கள் 16 இலக்க LPG ID>*
என டைப் செய்து அனுப்பினால் உடனே பதிவு ஆனதற்கான விபரங்கள் உங்கள் வாட்ஸப்பில் வந்துவிடும்.
Example. : REFILL#7500000051153961
*C. உங்கள் கேஸ் பதிவின் STATUS யை தெரிந்து கொள்ள வழிமுறைகள்.*
STATUS#<உங்கள் புக்கிங் Order நம்பர்>
என டைப் செய்து அனுப்பினால் உடனே உங்கள் பதிவின் status தகவல் உங்கள் வாட்ஸப்பில் வந்துவிடும்.
Example : STATUS#2-000120518460
புதன், 1 ஜனவரி, 2020
Tirupattur - திருப்பத்தூர் மாவட்டம்
Author: Best Buy Offers | ஜனவரி 01, 2020 |
திருப்பத்தூர் தற்போது வேலூர் மாவட்டத்தில்
அடங்கிய தாலுகா மற்றும் வருவாய்
கோட்டமாக உள்ளது
அடங்கிய தாலுகா மற்றும் வருவாய்
கோட்டமாக உள்ளது
தமிழ் நாட்டின் சந்தன நகரம் என அழைக்கப்படும்
திருப்பத்தூரில் ஆசியாவின் மிகப்பெரிய
சந்தனமரக் கிடங்கு உள்ளது
1911ல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின்போது 100
ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட ஒரே இடத்தில் சார்
ஆட்சியர் அலுவலகம் ஒருங்கிணைந்த நீதிமன்ற
வளாகம்,
மாவட்ட கல்வி அலுவலகம், மாவட்ட வன
அலுவலகம்,
அலுவலகம்,
அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர்
அலுவலகம், உள்ளிட்ட பல்வேறு அரசு
அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
அலுவலகம், உள்ளிட்ட பல்வேறு அரசு
அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
அணைத்து அரசு அலுவலகங்களும் அருகருகே
அமைந்திருப்பது திருப்பத்தூர் நகரின்
தனிச்சிறப்பு ஆகும்
இப்பகுதியில் இயற்க்கை எழில் மிகுந்த ஏலகிரி
ஜலகாம்பறை ஜவ்வாதுமலை உள்ளிட்ட
சுற்றுலா தளங்கள் உள்ளன
இக்கோட்டத்தில் ஆலங்காயம் அருகே உள்ள
வைன்னு பாப்பு தொலைநோக்கி மையம்
ஆசிய அளவில் மிகப்பெரியது ஆகும்
2008 வரை திருப்பத்தூர் ஒரு மக்களவை
தொகுதியாக இருந்து வந்தது. திருப்பத்தூரில் இருந்து வேலூர் 90 கி.மீ
தொலைவிலும் இதனை சார்ந்த மாவட்டத்தின் கடைசி எல்லையில் உள்ள கிராமங்கள் 130 கிலோ மீட்டருக்கும் அதிக தூரத்தில் அமைந்துள்ளது
இதனால் பொதுமக்கள் மாணவர்கள் வணிகர்கள் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் திருப்பத்தூரில் இருந்து இரண்டரை மணி
நேரத்திற்கு மேலும் ஜவ்வாது மலை புதுர்நாடு போன்ற மாவட்டத்தின் கடைகோடி கிராமங்களில் இருந்து 4 மணி நேரத்திற்கு
மேலும் செலவு செய்து தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் மாவட்ட கருவூலம்
மற்றும் மாவட்ட அரசு வருவாய் துறை அலுவலகங்களை மிகுந்த சிரமத்துடன் அணுக வேண்டிய நிலை உள்ளது
இப்பகுதியை சேர்ந்தவர்கள் அவசர
சிகிச்சைக்காக வேலூர் அல்லது தர்மபுரிக்கு
செல்வதற்குள் பலர் உயிரிழக்க நேரிடுகிறது
மாவட்ட தலைநகரம் மிக அதிக தொலைவில்
உள்ளதால் இந்த மாவட்டத்தை நிர்வகிப்பது அரசு
அதிகாரிகளுக்கு மிகவும் சிரமமாக உள்ளது
இந்த பகுதிகளுக்கு அலுவல் நிமித்தம் உயர்
அதிகாரிகள் சென்று வர ஒரு நாளை செலவிட
வேண்டியுள்ளது.
இதனால் மக்கள் நலன் சார்ந்த நிகழ்வுகளில் கலந்துகொள்ள குறிப்பிட்ட இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
மற்றும் பிற அரசு அதிகாரிகள் குறித்த நேரத்திற்குள் வந்து சேர முடிவதில்லை இதனால் பொதுமக்கள் அதிகமாக பாதிக்கப்படுவதோடு மாவட்ட நிர்வாகம் செயல்பட முடியாத நிலை ஏற்படுகிறது மேற்கண்ட சூழ்நிலைகள் காரணமாக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக திருப்பத்துரை
தலைமை இடமாக கொண்டு தனி மாவட்டம் அமைத்திட வேண்டும் என பொதுமக்கள் பட்டதாரி இளைஞர்கள் வழக்கறிஞர்கள் வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்
டு வருகிறது.
தற்போது வேலூர் மாவட்டத்தில் 13 வட்டங்களும்
( புதிதாக அறிவிக்கப்பட்ட பேரணாம்பட்டு,
நெமிலி வட்டங்கள் உட்பட), 843 வருவாய்
கிராமங்களும் 39 இலட்சத்து 36 ஆயிரத்து 331
மக்கள் தொகையும் 6067. ச.கி.மீ பரப்பளவும்
கொண்டு உள்ளது
தமிழ் நாட்டில் மொத்தம் உள்ள 32 மாவட்டங்களில்
வேலூர் மாவட்டம் மக்கள் தொகையில் 3வது
பெரிய மாவட்டமாகவும் பரப்பளவில் 4வது
பெரிய மாவட்டமாகவும் உள்ளது
அரசாணை 279 நாள் 09.06.2013ன் படி புதிய
மாவட்டம் அமைக்க 10இலட்சம் மக்கள் தொகையும்
200 கிராமங்களும் 2500 ச.கி.மீ பரப்பளவு மற்றும் 5
வட்டங்கள் தேவை.
திருப்பத்தூர் கோட்டத்தில் மட்டும் 217 வருவாய்
கிராமங்களும் 12 இலட்சத்து 17 ஆயிரத்து 362
மக்கள் தொகையும் உள்ளது
தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் 5143 ச.கி.மீ
பரப்பளவுடன் 18 இலட்சத்து 79 ஆயிரத்து 809 மக்கள்
தொகை கொண்டுள்ளது இம்மாவட்டத்தில்
புதிதாக பர்கூர்
சூளகிரி ஆகிய 2 வட்டங்கள் உருவாக்கப்பட்டு
ள்ளதால் அங்கு இப்போது 7 வட்டங்கள் உள்ளன
ஒரு மாவட்டத்திற்கு 5 வட்டங்கள் போதுமானது
என்பதால்
7 வட்டங்களை கொண்டுள்ள கிருஷ்ணகிரி
மாவட்டத்திலிருந்து ஊத்தங்கரை வட்டத்தை
பிரித்து திருப்பத்தூர் மாவட்டத்தோடு
இணைக்கலாம்
ஊத்தங்கரையிலிருந்து
கிருஷ்ணகிரி 50 கி.மீ தொலைவிலும்,
திருப்பத்தூர் வெறும் 25 கி.மீ தொலைவிலும்
உள்ளது குறிப்பிடத்தக்கது
திருப்பத்தூர் கோட்டத்தில் உள்ள 4 வட்டங்களோடு
ஒரே ஒரு வட்டத்தை இணைத்தாலே தனி
மாவட்டத்திற்கு தேவையான 2500 ச.கி.மீ
பரப்பளவும் 5 வட்டங்களும் கிடைத்துவிடும்
எனவே திருப்பத்தூர் கோட்டத்தில் உள்ள ஆம்பூர்
வாணியம்பாடி திருப்பத்தூர் நாட்றம்பள்ளி
ஆகிய 4 வட்டங்களுடன் ஊத்தங்கரை அல்லது
பேரணாம்பட்டு இவற்றில் எதாவது ஒரு
வட்டத்தை இணைத்து திருப்பத்தூரை தலைமை
இடமாக கொண்டு தனி மாவட்டத்தை உருவாக்கி,
எங்கள் பகுதி மக்களின் நீண்ட காலமாக உள்ள
நியாயமான கோரிக்கையை பரிசீலித்து உரிய
உத்தரவினை பிறப்பித்திட பொதுமக்கள் சார்பில்
வேண்டுகிறேன்.
மாடுகளுக்கு குடற்புழு நீக்கம்...!
Author: Infomas | ஜனவரி 01, 2020 |
மாடுகளுக்கு குடற்புழு நீக்கம்...!
மாடுகளுக்கு குடற்புழு இருந்தால் பலவித நோய்களுக்கு ஆளாகும். அந்த குடற்புழுக்களை நீக்க இயற்கை முறையில் உள்ள தீர்வு குறித்து இங்கு காண்போம். தேவையானவை : வெங்காயம் - 1, பு+ண்டு - 5 பல், கடுகு 10 கிராம், வேப்ப இலை 1 கையளவு, சீரகம் 10 கிராம், பாகற்காய் 50 கிராம், மஞ்சள் 5 கிராம், மிளகு 5 கிராம், வாழைத்தண்டு 100 கிராம், தும்பை இலை ஒரு கையளவு மற்றும் வெல்லம் 100 கிராம் ஆகியவற்றை எடுத்து கொள்ள வேண்டும்.
தயாரிக்கும் முறை :
மிளகு, சீரகம் மற்றும் கடுகை தண்ணீரில் 30 நிமிடம் ஊறவைத்து, அதை மற்ற பொருட்களுடன் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். தயார் செய்த கலவையை சிறிய உருண்டைகளாக பிரித்து உப்புடன் சேர்த்து, ஒரு நாளைக்கு ஒரு முறை என மூன்று நாட்களுக்கு கொடுக்க வேண்டும்.
Popular Posts
-
மனித உடலில் உள்ள முக்கியமான உறுப்புகள் - Important organs in the human body மனித உடலில் உள்ள முக்கியமான 12 உறுப்புகளில் ஒவ்வொரு உறுப்பும் 2 ...
-
மஞ்சள் காமாலை நோய் மிகவும் கொடியது மரனத்தை தரக்௯டியது இந்த நோயை ஆங்கில மருத்துவத்தால் சரி செய்ய இயலாது அப்படி பார்த்தாலும் நோய் வள...
-
Browser Cookies Cookies என்ற வார்த்தையை நாம் அடிக்கடி இணையத்தில் பார்த்து இருப்போம். தொழில்நுட்பத்தோடு தொடர்பில்லாம...
-
அடங்கா காம வெறி அதை அடக்கும் ஞான மூலிகை ...அம்மான் பச்சரிசி நீங்கள் 1.டீன் ஏஜ் பருவத்தினரா ? 2.சுய இன்ப பழக்கத்தை கை விட முடியாத...
-
கணினிப் பயன்படுத்துபவர்கள் அதிகம் உச்சரிக்கக் கூடிய வார்த்தைகளில் ப்ரொகிராம் என்ற வார்த்தையும் அடங்கும். Program என்ற வார்த்தைக்கு தமிழில்...