பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

சனி, 23 மே, 2020

இரயில்வே கோச்களை மருத்துவமனையாக மாற்றும் திட்டம் எதற்குமே பயன்படாத ஒரு உருப்படாத திட்டம்

# இரயில்வே கோச்களை மருத்துவமனையாக மாற்றும் திட்டம் எதற்குமே பயன்படாத ஒரு உருப்படாத திட்டம் எனப் பலரும் இரண்டு மாதம் முன்பே எழுதினோம். 
மருத்துவமனை பற்றிய அடிப்படை புரிதல் இருக்கும் கடைநிலைப் பணியாளர் கூட இப்படி ஒரு டுபாக்கூர் திட்டத்தை ஆதரிக்க மாட்டார். 

ஆனால் நம் அறிவாளிகளோ கிட்டத்தட்ட 5200 கோச்களை அப்படி மாற்றினார்கள். ஒரு கோச்சை மாற்ற செலவு 2 லட்சம் ரூபாய். அந்த 5200 கோச்களில் ஒரு நோயாளிக்கு கூட சிகிச்சை அளிக்க முடியவில்லை (எப்படி முடியும்?). இதுவரை ஒன்றையுமே பயன்படுத்தாததால் மீண்டும் பயணத்திற்கு பயன்படுத்தப்போகிறார்களாம். அப்படி மாற்ற ஒரு கோச்சிற்கு 1 லட்சம் ரூபாய் செலவாம். இதுக்கு பருத்திமூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்.

இவ்வளவு வரிப்பணத்தை தண்டமாக தங்கள் முட்டாள்த்தனத்தால் செலவழித்துவிட்டு, நாடு முழுவதும் கோடிக்கணக்கான தொழிலாளர்களை நடக்க விட்டுள்ளனர். 

ஒரு நாட்ல கூமுட்டைகள் இருக்கலாம். பக்‌ஷே ஒரு நாடே.....
- Sen balan


*முகநூல் பதிவு*

வெள்ளி, 22 மே, 2020

_அனைவரும் படித்து தெரிந்து வைத்து கொள்ள வேண்டிய முக்கியமான பதிவு இது._*

*_அனைவரும் படித்து தெரிந்து வைத்து கொள்ள வேண்டிய முக்கியமான பதிவு இது._*


         *🙏🏻நமசிவய🙏🏻*

*உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு தமிழ்நாடுதான், இங்கு மட்டும், நாற்பாதயிரம் கோயில்கள் உள்ளன, அவ்வளவு கோயில்கள் ஏன்? அவசியம் என்ன?*

சோழர் காலத்தில் தமிழ்நாடு தான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு.

*சுமார் 40,000 கோயில்களை சோழர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டினார்கள். அன்று உலகிலேயே உயர்ந்த கட்டிடம் தஞ்சை பெரிய கோவிலும், கங்கை கொண்ட சோழபுரமும்தான்.*

அப்போது வட அமெரிக்கா, தென் அமெரிக்கா கிடையாது. இலண்டன் ஒரு சிறு மீன் பிடிக்கும் கிராமமாக 1066 -இல் நிறுவப்பட்டது.

*தஞ்சை பெரிய கோபுரம் முழுவதும் தங்கத்தால் போர்த்தப்பட்டது. இது பற்றிக் கல்வெட்டும் உள்ளது. இந்தத் தங்கப் போர்வை 1311 - ஆம் வருடம் மாலிக்கபூரின் படைகளால் கொள்ளையடிக்கப்பட்டு, 500 யானைகள் மேல் எடுத்துச் செல்லப்பட்டது.*

இவ்வளவு கோவில்கள் கட்டுவதற்கு எங்கிருந்து பணம் வந்தது?

*எல்லாம் கடல் வாணிபம் ஏற்றுமதிதான். ஜப்பான் நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. ஆனால் ஏற்றுமதி வியாபாரம் மூலம் அவர்களுக்குத் தங்கம் கிடைக்கிறது. அதே போல் சோழ நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. இரும்பு சாமான்கள், துணிகள், கைவினைப் பொருட்கள், தானிய ஏற்றுமதி மூலம் தங்கம் கிடைத்தது.*

உலகிலேயே ஒரே சீராக 80 இலட்சம் ஏக்கர் விளை நிலம் காவிரிப் படுகைப் பகுதியில்தான் அமைந்துள்ளது. எங்கும் மூன்று போகச் சாகுபடிக்குக் காவிரியில் நீர் வந்து கொண்டிருந்தது.

*வியாபாரத்திலும், ஏற்றுமதியிலும், விவசாயத்திலும் கிடைத்த பணத்தை - தங்கத்தை சோழர்கள் படை பலத்தைப் பெருக்கிக் கொள்ள பயன்படுத்தினர்.*

மலேயா காடுகளிலிருந்தும், மைசூர் காடுகளிலிருந்தும் யானைகள் பிடித்து வரப்பட்டன.
பர்மாவிலிருந்து தங்கம் கொடுத்து குதிரைகள் வாங்கப்பட்டன. 

*ஏன் கோவிலை கட்டினார்கள்?*

*தமிழர்கள் ஏன், கோயில் கோயில் என்று அதைச் சுற்றியே வருகிறோம் ???*

தமிழகத்தை ஆண்ட பெரும்பாலான அரசர்கள் அவரவர் ஆண்ட பொழுது ஏன் மருத்துவமனை கட்டவில்லை, கல்விச்சாலை அமைக்கவில்லை ஆனால் கோயில்களை கட்டினார்கள்.

*கோயில்கள் எப்பொழுதெல்லாம் கட்டப்பட்டன ????*

மக்களுக்கு பிரித்து கொடுக்காமல், அரசன், அரசின் நிலங்களை, ஏன் கோயில்களுக்கு மானியமாக எழுதி வைத்தான் ????

*உலகின் குருவாக தமிழகம் ஆனது எப்படி ???*

எந்த ஒரு அரசும் பட்ஜட் போடும் பொழுது வரி வசூல் என்ன, அதில் அரசு நடத்த அதிகாரிகளுக்கு ஆகும் செலவு, மக்கள் நல திட்டங்களுக்கு ஆகும் செலவு ன்னு வரவு செலவை வைத்து தன்னிறைவு திட்டத்தை அடையத்தான் நிதிநிலை அறிக்கை போடுவார்கள்.

இதையேதான் தமிழக கோயில்கள் செய்தன.

*கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் ன்னு அதைத்தான் சொல்லி வெச்சாங்க.*

மன்னன் கோயில் கட்ட ஆரம்பித்தவுடன், கட்டுமான பணிக்கு அந்த ஊரை சுற்றி உள்ள கட்டுமான கலைஞர்கள், சிற்ப கலைஞர்கள், கல் தச்சர்கள், கட்டுமான பொருட்களான செங்கல், சுண்ணாம்பு போன்றவற்றை உற்பத்தி செய்வோர், அதை ஓரிடத்தில் இருந்து கோயில் கட்டும் இடத்திற்கு கொண்டு செல்லும் போக்குவரத்து, வர்ணம் அடிக்க, ஓவிய கலைஞர்கள், இப்படி அனைவருக்கும் வேலை வாய்ப்பு, அதுவும் அரசரால் கொடுக்கப்படும், அரசு வேலை.

*கோவிலுக்கு மானியமாக கொடுக்கப்படும் நிலங்கள், குத்தகை மூலமாக விவசாயிகளுக்கு விடப்பட்டு அதன் மூலம் விவசாய உற்பத்தி, அதற்கு ஒரு சமூகம்,  பாண்ட மாற்று முறையில், தன்னிறைவு பெற்ற பொருளாதாரம்.*

கோவிலுக்கு கொடுக்கப்பட்ட பசுமாடுகள், அதை கவனித்தல், அதற்கு ஒரு சமூகம், இதனால்  கோயிலுக்கும் அந்த கிராமத்தாருக்கும் பால் சார்ந்த பொருட்கள்.

*நெய்வேத்தியம் சமைக்க சமையல் கலைஞர்கள். அதற்கு ஒரு சமூகம்.*

சமையல் செய்ய பாத்திரங்கள் செய்ய மண்பானை செய்வோர் மற்றும் உலோக பாத்திரம் செய்வோர், அதற்கு ஒரு சமூகம். அவர்களுக்கு  தொடர்ந்து வேலை.

*நந்தவனம் மூலம் தெய்வத்திற்கு பூ மாலை மற்றும் அலங்கார சேவை செய்ய நந்தவனம் காப்போருக்கு வேலை. அதற்கு ஒரு சமூகம். அவருக்கு தொடர்ந்து வேலை இருக்க, அதற்கேற்ப கோவில் உற்சவங்கள்.*

மங்கள இசை இசைக்கும் கலைஞர்கள் ஓர் சமூகம். கூத்து கலைஞர்கள் என, 
அவர்களுக்கும் வருட மானியம் மற்றும் வேலை. மாலை வேளைகளில் ஆன்மீக கச்சேரி என்று மனதிற்கு இனிய பொழுது போக்கு நிகழ்ச்சிகள். 

*தெய்வத்தின் வஸ்திரங்கள் நெய்ய ஒரு சமூகம்.*

அந்த வஸ்திரங்களை துவைக்க ஓரு சமூகம், அவருக்கும் தொடர்ந்து கோவில் மானியம் மூலம் வேலை.

*கோயிலை சுத்தமாக வைத்துக்கொள்ள ஒரு தேவை, அதை செய்ய ஒரு சமூகம். அவருக்கும் கோயில் மூலம் மானியம், வருட வருமானம்.*

இவை அனைத்தையும் நிர்வாகம் செய்ய, கணக்கு பார்க்க, ஒரு சமூகம்.

*இவர்கள் அனைவரும் அவரவர் வேலையை பார்க்க, அதன் மூலம் வாழ்வாதாரம் பெறவும், கோயில் ஒரு மிகப்பெரிய தொழிற்சாலை. ஆன்மீகம் ஒட்டி வாழ்வாதாரம்.*

பெரு வெள்ளம் வந்து ஊரே மூழ்கி போனாலும், கோயிலின் கோபுரத்தில், கலசம் மூலம், செறிந்த விஞ்ஞான அறிவுடன், அதனுள் 12 வருடம் வரை கெடாத அந்த கிராமத்தில் மண்ணுக்கேற்ப விளையும் விளை பொருட்களின் விதை பொருட்கள்.

*12 வருடத்திற்கு ஒரு முறை அதை மாற்றி அமைத்து, மராமத்து பணிகள் மேற்கொள்ள மேற் சொன்ன அனைவருக்கும் ஒரு கூட்டு வேலை வாய்ப்பு.*

இப்படி அவர் அவருக்கு தெரிந்த பணி, அதை சார்ந்த சமூகம், ஒன்றிணைந்து தன்னையும் காப்பாற்றிக்கொண்டு, தன்னிறைவு வாழ்க்கை என வாழ்வதற்கு கட்டமைக்கப்பட்டதே, நம் ஹிந்து கோயில்கள்.

*ஊருக்கு ஒரு கோயில், அதை சுற்றிலும் அனைத்து சமூகம்,* 

அந்த அந்த ஊரை சுற்றி உள்ள இயற்கை வளங்கள் பாதுகாக்கபட்டு, மூலிகை மூலம் வைத்தியம், அதற்க்கென ஒரு சமூகம் என, 
ஊரை சுற்றியே, ஓர் தன்னிறைவு வாழ்க்கை. 
இப்படி அமைக்கப்பட்டது தான் நம் பொருளாதார கட்டமைப்பு.

*மாத சம்பளம் பணமாக, பணத்திற்கு பொருள், அதன் விலை ஏற்ற இறக்கம், பண வீக்கம், இவை எதுவுமே சாராமல் ஓர் தன்னிறைவு வாழ்க்கை.* 

இதை உடைக்கத்தான், கோயில்கள் தகர்க்கப்பட்டன. இதை தகர்க்கத்தான் கோயிலின் மேல் மாற்று மத படையெடுப்பு நடந்தது.

*கோயில்கள் இல்லாமல் போனால் வாழ்வாதாரம் கெடும் என அந்நிய சக்திகள் அறிந்திருந்தனர்.*

தெய்வங்களுக்கு உயிரூட்டி, அந்த தெய்வங்கள் அங்கே வாழ்வதாகவும், அந்த கோயிலின் சொத்துக்கள், அந்த தெய்வங்களின் சொத்துக்கள் என்றும்,

*எப்படி, உயிருள்ள ஒருவரின் சொத்தை அவர் சம்மதம் இல்லாமல் மற்றவர் அபகரித்து கொண்டாலும், அது அபகரித்தவரின் சொத்து ஆகாதோ, அதே போல, அனைத்து கோயிலின் சொத்துக்களும், அந்த கோயிலில் வாழும் அந்த தெய்வத்திற்கே சொந்தம் என்று காலம் காலமாக நமது சனாதன தர்மத்தில் இருக்கும் நம்பிக்கையும் வகுக்கப்பட்ட கொள்கையும்.*

உயிருள்ள ஒருவர், எப்படி தினமும் குளிப்பாரோ, உடை உடுத்தி கொள்வாரோ, தினமும் உணவு உண்பாரோ, நம் வாழ்வாதாரத்திற்கு உதவும் ஒருவரை நாம் எப்படி போற்றி கவனிப்போமோ, அப்படி  அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக, அனைவரின் சார்பாக,  பூஜைகளை கவனிக்க ஒரு சமூகம்.

  #இப்படி கோவிலை கட்டி சிற்பத்தை தெய்வம் ஆக்கி, அந்த தெய்வம் தான்எல்லா மனிதர்கள் மற்றும் ஜீவர்களுக்கும் ஜீவனம் செய்ய படி அளக்கின்றன, தெய்வத்தின் கீழ்தான் நாம் அனைவரும்,தெய்வம் தான் முதன்மை என்ற மெய்ஞானம் போதித்தி ஆச்சி செய்து வந்த நம் அரசர்கள்#

*இப்படி ஒரு கோயிலை வைத்து, ஆன்மீகம் மூலமாக ஒரு தன்னிறைவு பொருளாதாரத்தை உலகிற்கு வாழ்ந்து காட்டியதாலேயே, தமிழகம் உலக குருவாக திகழ்ந்தது‌.*

          🙏🏻ஆத்ம வணக்கம்🙏🏻

*🌞திருச்சிற்றம்பலம்🌙*

வியாழன், 21 மே, 2020

மது அருந்தும்பொழுது உடலில் என்ன நடக்கிறது?

மது அருந்தும்பொழுது 
உடலில் என்ன நடக்கிறது?

*நாம் மது 
(இனி ஆல்கஹால் அல்லது 
சாராயம் என்று சொல்வோம்) 
அருந்தும்பொழுது 
சிறிது அளவினை 
நம் வயிறு உறிஞ்சிக் கொள்ளும். 

பெரும்பாலான அளவை 
சிறுகுடல் உறிஞ்சிக் கொள்ளும். 

அதனால்தான் 
உணவு உண்டபின்னர் 
மது அருந்தினால் 
போதை ஏற சற்று நேரமாகின்றது.*

*சாராயத்தின் 
செறிவினைப் பொறுத்து 
அது எத்தனை வேகத்தில் 
நம் உடல் உறிஞ்சிக்கொள்கின்றது என்பது மாறுபடும். 

உதாரணமாக 
பீரை விட 
விஸ்கி, 
பிராந்தி, 
வோட்கா 
போன்றவைகள் 
அதிவேகமாக உறிஞ்சிக்கொள்ளப்படும்.*

*உறிஞ்சப்பட்ட சாராயம் 
உடனடியாக நம் ரத்தத்தில் கலந்து 
உடலெங்கும் ஓடத் துவங்கும். 

அதே சமயத்தில் 
நம் உடலும் அதனை வெளியேற்ற 
சற்று பிரயத்தனப்பட்டு வேலை செய்யத் துவங்கும். 

சிறுநீரகம் தன் பங்கிற்கு ஓரளவைச் சிறுநீரில் கலந்து வெளியேற்றும். 

நுரையீரல் தன் பங்கிற்குச் சில அளவை மூச்சுக்காற்றில் வெளியேற்றும். 

(அதனால்தான் Breath Analyserல் கண்டு பிடிக்கின்றார்கள்)*

*கல்லீரல் தன் பங்கிற்கு 
பெரும்பாலான அளவை ஆல்கஹாலை உடைத்து அசிட்டிக் அமிலமாக மாற்றும். 

இத்தனை பேர் சேர்ந்து அந்த ஆல்கஹாலை வெளியேற்றப் போராடிக்கொண்டிருக்கையில் நாம் அதனை விட வேகமாக அதிக அளவில் மது அருந்தினால்... என்னாகும்?*

*அதனால்தான் 
அவைகள் விரைவில் தம் இயல்பில் குன்றி வலுவிழந்து செயலிழந்து போகின்றன. 

இதுவே ஒரு வகையில் மெதுவான தற்கொலை முயற்சி மாதிரிதான்.*

*சரி, இனி ஆல்கஹாலின் செயல்பாடு மூளையினை எப்படிப் பாதிக்கின்றது. 

இரத்தத்தில் கலந்து உடலில் பயணிக்கும் ஆல்கஹால் நம் மூளைக்கும் ஒரு பயணம் போகும்.*

*அதன் அளவை BAC என்பார்கள். அதாவது Blood Alcohol Concentration. இரத்தத்தில் ஆல்கஹாலின் செறிவு.*

*BAC 0.03ல் இருந்து 0.12 சதவீதம் இருக்கையில், 

தான் ஒரு பெரிய பலசாலி, 
தன்னால் எதுவும் முடியும் என்று 
ஒரு எண்ணம் வரும். 

உலகில் எது வந்தாலும் சமாளிக்கும் தைரியம் தன்னிடம் உள்ளது என்று தோன்றும். 

இந்நிலையில் சரியான முடிவுகள் எதுவும் எடுக்க முடியாது. 

ஏனெனில், 
மனதில் முதலில் எது படுகின்றதோ அதுவே சரியானதாகத் தெரியும். 

அந்தச் சூழ்நிலையில் 
யாராவது எதாவது சொன்னாலும், 
அதற்கேற்றவாறே 
மனம் செயல்படத் தோன்றும்.*

*BAC 0.9ல் இருந்து 0.25 சதவீதம் இருக்கையில், 
தூக்கம் தூக்கமாக வரும். 

நினைவுகள் மழுங்கும். 

சற்று முன் நடந்த நிகழ்வுகள் கூட நினைவில் இருக்காது. 

வேகமாக இயங்க முடியாது. 

கையில் இருக்கும் மதுவைத் 
தடுமாறிக் கொட்டிவிட்டு 
அதனை வெறித்துப் பார்ப்பார்கள். 

உடல் ஒத்திசையாது. 

நிலை தடுமாறும். 

நடக்கையில் உடல் தள்ளாடும். 

கண் பார்வை மங்கும். 

கேட்கும் திறன், 
சுவை உணர்தல், 
தொடுதல் போன்ற 
உணர்வுகளில் தடுமாற்றம் 
அல்லது இல்லாமல் போய்விடும்.*

*BAC 0.18ல் இருந்து 
0.30 சதவீதம் இருக்கையில், 
தான் என்ன செய்கின்றோம் 
என்று அவருக்கே தெரியாது. 

குழப்பமாக இருக்கும். 

ஒன்று அதீத பாசக்காரராக 
மாறி விடுவார் அல்லது 
அதீத கோபக்காரராக மாறிவிடுவார். 

அதிகம் உணர்ச்சிவசப்படுவார். 

பார்வை தெளிவாக இருக்காது. 
பேச்சுக் குளறும். 

உடலின் Reflex செயல்படாது. 

தொடு உணர்வு நன்கு மழுங்கிவிடும். 

எதையேனும் எடுக்க வேண்டும் 
என்றால் 
கை அந்தப் பொருளின் பக்கத்தில் 
போய்த் துழாவிக்கொண்டிருக்கும். 

காரணம் 
பார்வை, 
மூளை, 
கை 
இவற்றிற்கிடையேயான 
ஒத்திசைவு இல்லாமல் போயிருக்கும். 

வலி தெரியாது.*

*BAC 0.25ல் இருந்து 0.4 சதவீதம் இருக்கையில், மட்டையாகி விடுவார்.

எந்தவொரு வெளித்தூண்டல்களும் அவரைப் பாதிக்காது. 

எழுந்து நிற்க முடியாது, 
நடக்க முடியாது. 

வாந்தி எடுக்கலாம். 
நினைவு தப்பிவிடலாம்.*

*BAC 0.35ல் இருந்து 0.50 சதவீதம் இருக்கையில், நினைவு முழுவதும் தப்பிவிடும். 

Reflex சுத்தமாகப் போய்விடும். கருவிழிகூட வெளிச்சத்தில் சுருங்காது விரியாது. 

உடல் சில்லிட்டுப் போகும். 
மூச்சு விடுதல் குறைந்து போகும். 

இதயத் துடிப்பு குறைந்து விடும். 
இறந்து போக அதிக வாய்ப்புள்ளது...

நன்றிகளும்
பிரியங்களும்.

திங்கள், 11 மே, 2020

Amazon Business Books for low price

1. Business Communication for Success  Communication is key to your success - Buy Now

 

2. Strategic Management: For Business strategy - Buy Now

 

3. How to Manage your Boss: *Developing the perfect working Relationship* - Buy Now

 

4. Functional management info system - Buy Now

 

 

5. Database Management System (DBMS) -NEW - Buy Now

 

6. Database System Concepts - Database Management System (DBMS) - Buy Now


ஞாயிறு, 10 மே, 2020

*வேலை இழப்பு / வியாபாரத்தில் ஏற்பட்ட பாதிப்பு/ பண நடமாட்டம் குறைவு காரணமாக*

*காவல்துறை சார்பில் அருமையான எச்சரிக்கை..* 👌👌👌👌

*முன் எச்சரிக்கை செய்தி*

*வேலை இழப்பு / வியாபாரத்தில் ஏற்பட்ட பாதிப்பு/ பண நடமாட்டம் குறைவு காரணமாக*

*பழைய குற்றவாளிகள்/ புதிதாக உருவாகும் புது குற்றவாளிகள்*

*குற்ற சம்பவங்களில் திடீர் முன்னேற்றம் ஏற்படக்கூடும்.*

 1. *மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், இதில் பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் சிறுவர்கள் / பெண்கள், வேலை செய்யும் பெண்கள் / ஆண்கள் உள்ளனர்.*

 2. *விலையுயர்ந்த கடிகாரங்களை அணிய வேண்டாம்.*

 3. *விலையுயர்ந்த சங்கிலிகள், வளையல்கள், மோதிரங்கள் அணிய வேண்டாம் உங்கள் கை பைகளில் கவனமாக இருங்கள்.*

 4. *உங்கள் மொபைல் போன்களை அதிகம் பொதுவில் பயன்படுத்த வேண்டாம்.  மொபைல் பயன்பாட்டை பொதுவில் குறைக்க முயற்சிக்கவும்.*

 5.  *அந்நியர்களுக்கு லிப்ட் சவாரி கொடுக்க வேண்டாம்.*

 6. *தேவையான பணத்தை விட அதிகமாக எடுத்துச் செல்ல வேண்டாம்.*

 7.  *நீங்கள் வெளியில் செல்லும்போது உங்கள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பாதுகாப்பாக வைத்திருங்கள்.*

 8. *உங்கள்  மனைவி மற்றும் குழந்தைகளின் நலனை சரிபார்க்க ஒவ்வொரு முறையும் வீட்டிற்கு போன் பண்ணவும்*

 9.  *வீட்டிலுள்ள பிரதான கதவிலிருந்து பாதுகாப்பான தூரத்தை வைத்திருங்கள், முடிந்தால் கிரில் வாயில்களை பூட்டிக் கொண்டு கிரில்லுக்கு அருகில் செல்ல வேண்டாம்.*

 10.  *குழந்ததைகளை சீக்கிரம் வீடு திரும்புமாறு அறிவுறுத்துங்கள்.*

 11.  *வீட்டை அடைய எந்தவொரு ஒதுங்கிய அல்லது குறுக்கு வெட்டு சந்துகளில் நுழைய வேண்டாம், அதிகபட்ச பிரதான சாலைகளை முயற்சித்துப் பயன்படுத்தவும்*
.
 12.  *நீங்கள் வெளியே இருக்கும் போது உங்கள் சுற்றுப்புறங்களை ஒரு கண் வைத்திருங்கள்.*

 13.  *எப்போதும் கையில் அவசர எண்ணை வைத்திருங்கள்*
.
 14.  *மக்களிடமிருந்து பாதுகாப்பான தூரத்தை வைத்திருங்கள்*
.
 15.  *பொது மக்கள் பெரும்பாலும் முகமூடி அணிந்திருப்பார்கள் *.  அடையாளம் காண்பது கடினம்.*

 16.  *வண்டி சேவைகளைப் பயன்படுத்துபவர்கள் உங்கள் பயண விவரங்களை பெற்றோர், உடன்பிறப்புகள், உறவினர்கள், நண்பர்கள் அல்லது பாதுகாவலர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.*

 17. *அரசு பொது போக்குவரத்து முறையை முயற்சி செய்து பயன்படுத்தவும்*
.
 18. *நெரிசலான பேருந்துகளைத் தவிர்க்கவும்*
.
 19.  *உங்கள் தினசரி நடைப்பயணத்திற்குச் செல்லும்போது காலை 6.00 மணியளவில் முயற்சி செய்யுங்கள், மாலை அதிகபட்சமாக இரவு 8.00 மணிக்குள் பிரதான சாலைகளைப் பயன்படுத்துங்கள்.  வெற்று வீதிகளைத் தவிர்க்கவும்.*

 20  *குழந்தைகள் கல்வி வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டியிருந்தால், பெரியவர்களை கைவிட்டு அழைத்துச் செல்லலாம்.*

 21. *உங்கள் வாகனங்களில் எந்த மதிப்புமிக்க பொருட்களையும் விட வேண்டாம்.*

 *இது குறைந்தது 3 மாதங்களாவது அல்லது ஒட்டுமொத்த நிலைமை  மேம்படும் வரை பின்பற்றப்பட வேண்டும்.*
 *சமூக  அக்கறையோடு!*

சனி, 9 மே, 2020

ஒன்றரை மாதங்களில் சுமார் 12 ஆயிரம் கோடிகளுக்கு விற்பனையை இழந்த ஆங்கில மருந்து ஃபார்மா நிறுவனங்கள்.

ஒன்றரை மாதங்களில் சுமார் 12 ஆயிரம் கோடிகளுக்கு விற்பனையை இழந்த ஆங்கில மருந்து ஃபார்மா நிறுவனங்கள். 

அத்தனை மருந்துகளை உண்ணாமலும் உயிர் வாழும் மனிதர்கள்.

நாளொன்றுக்கு குறைந்தது 10 அறுவை சிகிச்சைகளாவது செய்து வந்த மருத்துவமனைகளில் ஒரு அறுவை சிகிச்சை கூட நடக்கவில்லை.

100, 200 படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனைகளில் காலியாகக் கிடக்கும் படுக்கை அறைகள்.

மூடிக்கிடக்கும் மருத்துவமனைகள்.

அப்படியென்றால் 12 ஆயிரம் கோடிகளுக்கு மருந்து வாங்காதவர்கள், அறுவை சிகிச்சைகள் செய்து கொள்ளாதவர்கள், மருத்துவமனைகளில் படுக்கைகளை நிரப்பாதவர்கள் எல பல ஆயிரக்கணக்கானோர் இறந்திருக்க வேண்டுமே?

ஆனால், இடுகாடு, சுடுகாடுகளிலும் எண்ணிக்கை மிகவும் குறைந்து போனதே.

எங்கே போனார்கள் அத்தனை பேரும் ???

ஆக, 12 ஆயிரம் கோடி ரூபாய்கள் வணிகம் நின்று போனதில் கிழிந்து தொங்குகிறது மருத்துவ வணிக நிறுவனங்களின் முகமூடிகள்.

அடப்பாவிகளா, இதெல்லாம் இல்லாமலே நல்லாதாண்டா நாங்க இருக்கோம்.

அப்போ .. தேவையையும்  செயற்கையா உருவாக்கி பொருட்களை சேவைகளையும் உருவாக்கி விற்பதுதான் "நவீன மருத்துவ அறிவியலா" ?!

வெள்ளி, 24 ஏப்ரல், 2020

*இன்னும் சில நாட்களில் ஊரடங்கு அடங்கி விடும். இன்றைய தலைமுறைக்கு இது ஒரு அழியா பாடம் ஆகும் இந்த ஊரடங்கு.*

*இன்னும் சில நாட்களில் ஊரடங்கு அடங்கி விடும். இன்றைய தலைமுறைக்கு இது ஒரு அழியா பாடம் ஆகும் இந்த ஊரடங்கு.*

*1. மக்களே  நீங்கள் நிச்சயம் வேலைக்கு செல்ல வேண்டும் குடும்பத்துக்காக வருமானம் ஈட்ட வேண்டும். இன்று முதல் ஒரு வருடத்திற்கு சிக்கனமாக இருக்கவும் தேவையற்றவைகளுக்கு செலவு செய்ய வேண்டாம்.* 

*2. கூடிய வரையில் சிறு வியாபாரிகள் கடையில் பொருள்களை வாங்குங்கள். மால் மற்றும் சூப்பர்மார்கெட்களை தவிர்த்து விடுங்கள்.* 

*3. Amazon /flip cart போன்ற online நிறுவனங்கள் செய்தித்தாள்களில் 5 அல்லது 6 பக்கங்களை ஆக்கிரமித்து விளம்பரம் கொடுத்தார்கள் வியாபாரத்தை பெருக்கினார்கள் ஊரடங்கு சமயத்தில் எல்லாம் காணாமல் போனார்கள் ஒரு வருடத்திற்கு நாம் அவர்களைத் தவிர்த்தால் அவர்கள் காணாமல் போய் விடுவார்கள்.*

*4. நகைக் கடைகளை புறக்கணியுங்கள் இன்று சவரன் 5000 ரூபாய்களைத் தொட்டு உள்ளது. ஒரு கிராம் வாங்க வேண்டும் என்றால். நீங்கள் புற்றீசல் போல நகைக் கடைகளை ஆக்கிரமித்தால் லாபம் நகை கடைக்காரர்களுக்கே. இந்த 2 மாத நஷ்டக் கணக்கை உங்கள் தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள் ஜாக்கிரதை. ஒரு வருடத்திற்கு நீங்கள் நகைகள் வாங்கவில்லை என்றால் ஊரில் பாதி நகைக்கடைகள் காணாமல் போய் விடும்.* 

*5. திரை அரங்குகளை புறக்கணியுங்கள். எந்த ஹீரோவும் நமக்கு ஒரு சிறு நன்மை கூடச் செய்யவில்லை. இந்த ஊரடங்கு முடிந்த  நேரத்தில். மனைவியின் தாலியை அறுத்து ஹீரோவின் 70 அடி cut out வைக்க வேண்டாம். அதற்குப் பால் ஊற்றவும் வேண்டாம். ஏன் என்றால் அந்தத் தகுதி அவர்களுக்கு இல்லை. 2000 ரூபாய் கொடுத்து பிடித்த நாயகன் படத்தை முதல் ஷோ பார்ப்பதினால் உங்கள் குடும்பங்களில் மங்களம் பெறப் போவதில்லை. ஒரு மூன்று மாதங்கள் பொறுங்கள் உலக தொலைக்காட்சிகளில் முதன் முறையாக திரைக்கு வந்த சில நாட்களே ஆன படம் என்று தொலைக்காட்சிகளில் நீங்கள் காணலாம்.*  

*6. பெரும் குடிமகன்களுக்கு ஒரு வார்த்தை 2 மாதம் rehabilitation center செல்லாமல் குடியை நிறுத்திய இந்த ஊரடங்கிற்கு நன்றி சொல்லுங்கள். படிப்படியாக குடியை நிறுத்தி உங்கள் குடும்பங்களைக் காப்பாற்றுங்கள்.*

*7. வாகனம் மற்றும் கார் வாங்குவதை அறவே தவிர்த்து விடுங்கள். ஏன் அரசாங்கம்  விதித்த BS 4 வாகனங்கள் நிறைய உள்ளன. அதை விற்பதற்கு வாகன உற்பத்தியாளர்கள் நீதிமன்றம் மூலமாகவோ அல்லது வேறுவிதமாகவோ discount என்கிற பெயரில் RTO ஆபீஸ் மூலமாக உங்கள் தலையில் கட்டி விடுவார்கள் ஜாக்கிரதை. அவர்களைப் பொறுத்தவரை ஆங்கிலத்தில் zero inventory Management என்கிற கொள்கையில் BS 4 வாகனங்களை கழித்துக் கட்டி விடுவார்கள் நீங்கள் ஏமாற வேண்டாம்.*

*8. 35000 ரூபாய் பெறுமான AC இன்று 10000 ரூபாய்க்கு விற்பனை என்று கூவிக் கூவி விற்பார்கள். இதனால் நஷ்டம் நமக்கே. ஏன் என்றால் Quality Compromise strategy will be adopted. அதே போல சீனாவில் இருந்து வரும் மொபைல் போன்றவைகளை online shop மூலமாக ஏகப்பட்ட discount கொடுத்து உங்கள் கைகளை அரிப்பு எடுக்கச் செய்வார்கள் ஜாக்கிரதை. ஒரு வருடம் மொபைல் வாங்கவில்லை என்றால் நமது குடி முழுகிப் போயிடாது.*

*9. மக்களே வாழ்விற்கு இது தேவை என்கிற நிலை வந்தால் மட்டுமே அந்தப் பொருள்களை வாங்குங்கள். அகலக்கால் அல்லது ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு நிரந்தர கடன்காரனாக அல்லது குடிகாரனாக மாறி விடாதீர்கள்.*

*10. கடன் அட்டை (Credit Card ) உபயோகத்தை கூடிய அளவு தவிர்த்து விடுங்கள். வரவு எட்டணா செலவு பத்தணா என்கிற பாடல்களை நினைவு கொள்ளுங்கள்.*

*11.குழந்தைகளே தயவு செய்து உங்கள் பெற்றோர்களை வருத்தாதீர்கள். என் friend I Phone 12 லேட்டஸ்ட் மாடல் வைத்து* *இருக்கிறான் அதே போல எனக்கும் வேண்டும் என்று அடம் பிடிக்காதீர்கள்.* *விரலுக்கு தகுந்த வீக்கம் வேண்டும்.*

*இன்னும் ஒரு ஆண்டு நமக்கு சோதனையான காலம். அதைக் கடந்து விட்டால் இன்று புறநகரில் 70 லட்சம் விற்கும் வீடு 50 லட்சத்திற்கு வந்து விடும் பிறகு வாங்கிக் கொள்ளலாம். ஒரு வருட பொறுமை உங்களை 20 லட்சம் வரை சேமிப்பிற்கு வழி வகுத்து இருக்கிறது. அதே போல தங்கம் விலையும் நீங்கள் ஒரு வருடம் வாங்க வில்லை என்றால் அடுத்த வருடம் பாதி விலையில் உங்களுக்குக் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. தயவு செய்து காத்திருக்கவும்.*

*ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே என்கிற எம்ஜிஆர் ன் பாடல் வரிகள்  இன்னும் வருடத்திற்கு நமக்குத் தேவை என்பதை மறந்து விடாதீர்கள்.*

*சிக்கனமும் சேமிப்பும் நமக்கு சோறு போடும். ஊதாரித்தனம் நமது வம்சத்தை அழித்து விடும் ஜாக்கிரதை.*

*கலியுகத்தின் கொடுமைகளை இன்னும் ஒரு வருடம் நாம் கண் முன்னே காணப் போகிறோம் ஜாக்கிரதை. விலை உயர்ந்த நகைகளையோ அல்லது வேறு ஏதாவதோ போட்டுக் கொண்டு சாலையில் செல்ல வேண்டாம். ஏன் என்றால் பஞ்சத்தின் கொடுமை நமது நாட்டில் உள்ள சட்டத்தை திருடர்கள் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு திருட்டுச் செயலில் அல்லது அதை விட கொடுமையான செயல்களில் ஈடுபடுவார்கள். ஒரு ரூபாய்க்காக கொலை செய்யும் கயவர்கள் உண்டு இந்த நாட்டிலே.*

*பகிர்வு*

செவ்வாய், 14 ஏப்ரல், 2020

*தமிழ் புத்தாண்டு??*

*தமிழ் புத்தாண்டு??*

*சுறவம்*
தை முதல்நாளே தமிழர்களுக்குத் தமிழ்ப்புத்தாண்டு என்று எடுத்து உரைத்தவர்கள் யாரெல்லாம் தெரியுமா?

01. மறைமலை அடிகளார் (1921)
02. தேவநேயப் பாவாணர்
03. பெருஞ்சித்திரனார்
04. பேராசிரியர் கா.நமசிவாயகொண்டாடுங்கள் சுப்பிரமணியனார்
06. மு.வரதராசனார்
07. இறைக்குருவனார்
08. வ. வேம்பையனார்
09. பேராசிரியர் தமிழண்ணல்
10. வெங்காலூர் குணா
11. கதிர். தமிழ்வாணனார்
12. சின்னப்பத்தமிழர்
13. கி.ஆ.பெ. விசுவநாதர்
14. திரு.வி.க
15. பாரதிதாசனார்
16. கா.சுப்பிரமணியனார்
17. ந.மு.வேங்கடசாமியார்
18. சோமசுந்தர் பாரதியார்
19. புலவர் குழுவினர் (1971)

மலையகத்தில்
01. கோ.சாரங்கபாணியார்
02. சா.சி. குறிஞ்சிக்குமரனார்
03. அ.பு.திருமாலனார்
04. பேராசிரியர் இர.ந. வீரப்பனார்
05. கம்பார் கனிமொழி குப்புசாமி
06. மணி. வெள்ளையனார்
07. திருமாறன்
08. இரெ.சு.முத்தையா
09. இரா. திருமாவளவனார்
10. இர. திருச்செல்வனார்

இவர்களோடு 500க்கும் அதிகமான தமிழறிஞர்கள் கூடி விவாதித்து ஆரிய திணிப்பான சித்திரை வருடப்பிறப்பினை விடுத்து தை முதல் நாளே தமிழாண்டின் துவக்கம் என்று முடிவு செய்து அறிவித்தார்கள்.

இன்று பிறக்கும் புத்தாண்டு தமிழ்ப்புத்தாண்டு அல்ல என்பதற்கு ஒரே ஒரு விளக்கம் மட்டும்.

1. பிரபவ 2. விபவ 3. சுக்கில 4. பிரமோதூத 5. பிரஜோத்பத்தி 6. ஆங்கீரஸ 7. ஸ்ரீமுக 8. பவ 9. யுவ 10. தாது 11. ஈஸ்வர 12. வெகுதான்ய 13. பிரமாதி 14. விக்கிரம 15. விஷு 16. சித்ரபானு 17.சுபாணு 18. தாரண 19. பார்த்திப 20. விய 21. சர்வகித்து 22.சர்வதாரி 23. விரோதி 24. விக்ருதி 25. கர 26. நந்தன 27. விஜய 28. ஜய 29. மன்மத் 30. துர்முகி 31. ஹேவிளம்பி 32. விளம்பி 33. விகாரி 34. சார்வரி 35. பிலவ 36. சுபகிருது 37. சோபகிருது 38. குரோதி 39. விசுவாசு 40. பராபவ 41. பிலவங்க 42. கீலக 43. செமிய 44. சாதரண 45. விரோதிகிருது 46. பரிதாபி 47. பிரமாதீச 48. ஆனந்த 49. ராஷஸ 50. நள 51. பிங்கள 52. காளயுக்தி 53. சித்தாத்திரி 54. ரெத்திரி. 55. துன்பதி 56. துந்துபி 57. ருத்ரோகாரி 58. ரக்தாஷி 59. குரோதன 60. அக்ஷய

இந்த அறுபதில் எது தமிழ் வார்த்தை...

யாராவது சொல்ல முடியுமா?

தமிழர்கள் காலத்தை வகுத்த விதம் பிரம்மிப்பானது. தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பிரித்தார்கள்.ஒரு நாளைக்கூட ஆறு சிறு பொழுதுகளாக பிரித்து வைத்திருந்தார்கள். 

வைகறை
காலை
நண்பகல்
எற்பாடு
மாலை
யாமம்

என்று அவற்றை அழைத்தார்கள்.

அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைகள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள்.ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.

அதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு, அதாவது 24 மணிநேரத்தோடு அச்சாகப் பொருந்துகின்றன. 

தமிழர்கள் ஒரு நாள் பொழுதை, _தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்_.

(1 நாழிகை - 24 நிமிடங்கள்
60 நாழிகை - 1440 நிமிடங்கள்
இதனை இன்றைய கிருத்தவ கணக்கீட்டின் படி பார்த்தால்
1440 நிமிடங்கள் - 24 மணித்தியாலங்கள்
24 மணித்தியாலங்கள் - 1 நாள்)

பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள்.

ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.

1. இளவேனில் - (தை---மாசி)
2. முதுவேனில் - (பங்குனி - சித்திரை)
3. கார் - (வைகாசி - ஆனி)
4. கூதிர் - (ஆடி - ஆவணி)
5. முன்பனி (புரட்டாசி - ஐப்பசி)
6. பின்பனி (கார்த்திகை - மார்கழி)

மேற்கண்ட மாதக்கணக்கில் இளவேனில் என்பது சித்திரை-  வைகாசி மாதங்களுக்கு உரிய காலம் என சிலர் வாதிடுகிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு.

சித்திரை மாதத்தில் (வேனில்) வெயில் தன் அதிகபட்ச உக்கிரத்தை அடைவதால் அதை முதுவேனில் என்றும் தைமாதத்தில் தொடங்கும் வெயிலை 'இளவேனில்' எனவும் பண்டைத் தமிழர்கள் அழகாகப் பகுத்திருந்தார்கள். 

காலத்தை, அறுபது நாழிகைகளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் (தை) தொடங்குகின்றான். 

இங்கே ஒரு மிக முக்கியமான செய்தியை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்!

பண்பாட்டுப் பெருமைகொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள்.

தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.

தமிழர்கள்  நாம் மட்டும் ஆரியப் பழக்கத்துக்கு மாறிவிட்டோம்! 
இடையில் வந்த இடைச்செருகலால் வந்த வினை இது. நம் இளவேனில் காலம் தை மாதம் தான். அதனால்தான் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு என்கிறோம். தமிழர்க்கு எதிரான சக்திகளின் சூழ்ச்சிக்குப் பலியாகாமல், தமிழின், தமிழரின் பெருமையைப் பாதுகாக்கும் பொருட்டுத் தமிழர் யாவரும் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி மகிழ்வோம். இதுகுறித்துப்  பாவேந்தர் பாரதிதாசன் நமக்குத் தரும் அறிவுரையைக் கேளுங்கள்.

நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம்                                                  கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!
*-பாவேந்தர் பாரதிதாசன்*

*அப்படி இந்த நாளை கொண்டாடிதான் ஆக்வேண்டுமெனில் சித்திரை திருநாளாக கொண்டாடுங்கள்.*

வெள்ளி, 10 ஏப்ரல், 2020

*சாப்பிட்ட பிறகு செய்யக்கூடாதவைகள்.* *அவசியம் அறிவோம் பல நோய்களை தவிர்ப்போம்.*

*சாப்பிட்ட  பிறகு  செய்யக்கூடாதவைகள்.*

 *அவசியம்  அறிவோம் பல நோய்களை தவிர்ப்போம்.*
=======================
*1. சாப்பிட்டவுடன்  தண்ணிரை  வயிறுமுட்ட  குடிக்க  கூடாது.  இதனால்  ஜிரணநீர்  நீர்ந்து  போய்  அஜிரணமாகும்  பல  நோய்கள்வர  இது  முக்கிய  காரணமாக  அமையும்.*

 *2. சுமார் 40 நிமிடம் கழித்து  தண்ணீர்தாகம்  எடுக்கும்  அப்போது குடிக்கவேண்டும்.*

*3. சாப்பிட்டதும்  படுத்து விடக்கூடாது. காரணம், குடல்  தனது  செயல்பட மிகவும்  சிரமப்படும். ஜீரணம்  முறையாக  நடக்காது.*

*4. குறைந்தது  ஒரு  மணிநேரம்  கழித்தே  உறங்க  வேண்டும்.  இது  மதியம்  ஓய்வு  எடுப்பவர்களுக்கும்  பொருந்தும்.*

*5. சாப்பிட்டதும்  குளிக்க  கூடாது  குறைந்தது 2 மணிநேரம்  கழித்தே  குளிக்க  வேண்டும்.*

*6. சாப்பிட்டு  முடித்ததும்  எந்த  பழங்களையும் சாப்பிடக்கூடாது.  காரணம்,  உணவின் ஜீரண நேரம் குறைந்தது 5 மணிநேரங்களாகும்.*  
*பழங்களின்  நேரம் அதிகபட்சம் 2 மணி நேரம்தான்.*
*இந்த  வித்தியாசத்தால் நாம் சாபிட்ட  பழம்  வாயுவாக  மாற்றம்  பெரும்.  இதில்  ஒரு  பழத்துக்கு  மட்டும்  விதிவிலக்கு  அது  பேரீச்சம்பழம்.*

*7. சாபிட்ட உணவு  ஜீரணமாகாத நிலையில்  வேறு  உணவுகள்  எதையும்  உண்ணக்கூடாது.  காரணம், இவ்வாறு  சாப்பிட்டால்  ஏற்கனவே  சாபிட்ட  உணவு  ஜீரணத்தை கடுமையாக  பாதிக்கும்.  இதனால்  சுகர்  வர  காரணமாக  அமையும்.*

*8. குளிர்பானங்கள், ஐஸ்கீரீம்,  ஐஸ்வாட்டர்  இவைகளையும்  குடிக்க  கூடாது. காரணம், உணவு  ஜீரணமாக  நமது  குடலில்  வெப்பம் இருக்கவேண்டும். அந்த  வெப்பத்தை  இந்த  குளிர்பானங்கள்  இல்லாமல்  செய்துவிடும்.*

*9. சாப்பிட்டதும்  பரபரப்பாக  இயங்குவதோ  நடப்பதோ  பளுவானவற்றை  தூக்துவதோ கூடாது. காரணம், அவ்வாறு செய்தால்  உணவு  கீழ்நோக்கி  செல்லாமல்  மேல்  நோக்கி  வரும்.  இதனால்  நெஞ்சு  எரிச்சல்,  வாயு தொல்லைகள்  ஏற்படும்.*

செவ்வாய், 7 ஏப்ரல், 2020

*இத்தனை ஆண்டு காலமாக நம் தலையில் மிளகாய் அரித்து கொள்ளை லாபம் பார்த்த உணவகங்களின் உரிமையாளர்கள் எங்கே போய் பதுங்கிக் கொண்டனர்*!

*இத்தனை ஆண்டு காலமாக நம் தலையில் மிளகாய் அரித்து கொள்ளை லாபம் பார்த்த உணவகங்களின் உரிமையாளர்கள் எங்கே போய் பதுங்கிக் கொண்டனர்*!

*தலப்பாக்கட்டி* 

*அடையாறு ஆனந்தபவன் என்கின்ற A2B*

 *சரவணபவன்* 

*ஹோட்டல் சங்கீதா*

*ரத்னா கபே*

*ஹோட்டல் சவேரா* 

*ஹோட்டல்  உட்லண்ட்ஸ்*

*ஹோட்டல் புகாரி* 

*ஹோட்டல் அசோகா*

*ஆரிய பவன்கள்*

*ஹோட்டல் அன்னபூர்ணா*

போன்ற முன்னணி உணவகங்களின் உரிமையாளர்கள் உணவுக்காக அவர்கள் நிர்ணயித்த கட்டணத்தை கேள்வியின்றி  செலுத்தி உணவருந்திய நாம் இன்று இல்லத்தில்  வீட்டோட அமர்ந்து  உணவு தயாரிக்கும்  பொழுது தெரிகிறது  ஒரு நூறு ரூபாயில் எத்தனை பேர் உணவருந்தலாம் என்பதை கண்கூடாக சிந்திக்க வைக்கிறது மனம். அதனால் இத்தனை நாட்கள் நம்மளை ஏமாற்றி  அவர்கள் நிர்ணயித்த கட்டணத்தை கட்ட வைத்து நம் தலையில் மிளகாய் அரித்து கொள்ளை லாபம் அடித்து பெரிய மனிதர்களாக உலாவரும் இவர்கள் நினைத்தால் தினம் ஒரு பத்தாயிரம் பேருக்கு இலவசமாக உணவு சமைத்து தரலாம் அந்த அளவிற்கு மின்சாதனப் பொருட்களும் உபயோகப் பொருட்களும் இவர்களிடம் உள்ளது.மக்களுக்காக பணிபுரியும் காவலர்கள்,மருத்து வர்கள்,தூய்மை பணியாளர்கள்,மற்றும்   பொதுமக்களுக்கு சேவையாற்ற முன்வரவில்லை ஏன்?

 சேவையாற்றாத இவர்களின் உரிமத்தை ஏன் அரசு நிராகரிக்க கூடாது ? 

சமூக சேவகர்கள் தயார் நிலையில் உள்ளனர் இவர்கள் உணவுப் பொட்டலங்கள் தயாரித்து தந்தாள் அவரவர் பகுதியில் அடங்கியுள்ள பொது மக்களிடம் கொண்டு போய் சேர்க்க *உத்தர விடுமா அரசு*? 

*சிந்திப்போம் சுயநலமின்றி மக்களை காக்க*

*என்றும் மக்கள் நலனில் *🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

வெள்ளி, 3 ஏப்ரல், 2020

பாய் (கோரை) விரித்து உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள்....

பாய் (கோரை) விரித்து உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள்....

1.பொதுவாக தரையில் பாய் விரித்து நாம் தரையில் உறங்குவதே ஒரு சிறந்த "யோகாசனம்" எனலாம்.

2.பிறந்த குழந்தைகளை பாயில் உறங்க வைப்பதால் அதன் முதுகெலும்பு நேர்படுத்தப்படுகிறது. குழந்தைகளுக்கு இளம் வயது கூண் முதுகு விழுவதை தடுக்கிறது, [கல்வி கற்க்கும் மாணவ மாணவிகளுக்கு இளம் வயது முதுகுவலி வராமலும் தடுக்கும் ]

3.கர்ப்பினி பெண்கள் பாயில் உறங்குவது சுக பிரசவத்திற்கு உதவிடும். [பாயில் படுக்கையில் பெண்களுக்கு இடுப்பு எலும்பு விரிகிறது. இடுப்பு எலும்பு விரிந்தாலே ஆப்பரேசன் இல்லாத சுக பிரசவம்தான்.]

4.மூட்டுவலி,முதுகுவலி,தோள்பட்டை தசை பிடிப்பு போன்ற பிரச்சினை உள்ளவருக்கு பாயில் உறங்குவதே ஒரு சிறந்த தீர்வாகும்.

5.பாயில் இரு கால் விரித்து மல்லாக்க படுக்கையில் உடலின் எங்கும் இரத்த ஓட்டம் சீராக பாய்கிறது. ஞாபக சக்தியை அதிகமாக தருகிறது. [பாயில் தலையணை இல்லாமல் உறங்குவதே சாலச் சிறந்தது.]

6.ஆண்கள் பாயில் படுக்கையில் அவர்களின் மார்பகம் மற்றும் தசைகள் தளர்ந்து விரியும்.

7.பாய் உடல்சூட்டை உள்வாங்கக் கூடியது.

8.பெரியோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சீர்வரிசைசாமான்கள் கொடுக்கையில் பாய் இல்லாமல் ஒரு சீர்வரிசையே கிடையாது எனலாம்.

9.ஒரு பாய் மூன்று ஆண்டுகள் வரை அதன் தன்மையை இழக்காது.

10.கட்டிலில் விரித்து உறங்கும் பஞ்சு மெத்தையை விட வெறும் தரையில் பாய் விரித்து உறங்குவதால்
உடல் உஷ்ணம் அடைவதையும்...

உடலின் வளர்ச்சியையும்...

ஞாபக சக்தியையும்...

மன அமைதியையும்...

நீண்ட உடல் மற்றும் மன ஆரோக்கியத்தையும் தருகிறது.....

புதன், 25 மார்ச், 2020

சீனவிடம் இருந்து பிந்திய மருத்துவ அறிவுரைகள், சீன மருத்துவர்கள் இறந்த நோயாளிகளை பிரேத பரிசோதனை செய்ததில் இருந்து.

சீனவிடம் இருந்து பிந்திய மருத்துவ அறிவுரைகள், சீன மருத்துவர்கள் இறந்த நோயாளிகளை பிரேத பரிசோதனை செய்ததில் இருந்து.

1) இந்த வைரசு சுவாசக் கால்வாயில் தடித்த சளியை உருவாக்கி, அந்த சளி உறைவதன் மூலமாக சுவாசப் பாதையை அடைகிறது.

2) மருந்தின் மூலம் சிகிச்சை செய்வதத்திற்கு அடைப்புகள் நீக்கப்பட்டு, சுவாசப் பாதை திறக்கப்படவேண்டும். இப்படி அடைப்பை நீக்கி, சுவாசப் பாதையை திறப்பதற்கு எண்ணுக்கணக்கிலான நாட்கள் தேவை.

கொரானாவில் இருந்து உங்களை பாதுகாப்பதற்கான சீன மருத்துவர்களின் பரிந்துரைகள் பின்வருமாறு:

1) சூடான நீராகாரங்களை அடிக்கடி எடுங்கள் - தேநீர், காபி, சூப், வெந்நீர் போன்றவை. அத்துடன், 20 நிமிடத்திற்கு ஓர் தடவை ஓர் முறடு வெந்நீரை உள்கொள்வது வாயை ஈரலிப்பாக வைத்திருப்பதுடன், வைரஸை (வாய்க்குள் இருந்தால்) உணவுக்கு கால்வாய் வழியாக கழுவி வயிற்ற்றை அடைந்து சமிபாடு தொகுதியினால் நடுநிலையாக்கப்படும் (neutralise)

2)  இயலுமானவரை, ஒவ்வொருநாளும் வெந்நீராலும்,  உப்பு அல்லது எலுமிச்சம் சாறு  அல்லது வினிகர் தொண்டையையும், வாயையும் அலசுங்கள் (gargle)

3) covid-19 வைரஸ் உடையிலும், மயிரிலும் ஒட்டிக் கொள்ளும் தனமாய் உள்ளது. எந்த சவர்க்காரமமும் அல்லது detergent உம் covid-19 ஐ கொல்லக்  கூடியது. எனவே, வெளியில் சென்று வீடு திரும்பியவுடன், ஓர் இடத்தில் தொடாமலும், இருக்காமலும், நேரடியாக குளியல்  செய்யுங்கள்  அல்லது தோயுங்கள்.

4) நாள்தோறும் உடைகளை தோய்க்க முடியாவிட்டால், சூரிய வெய்யிலில் உலர்த்துவது வைரஸ் ஐ கொல்லக்  கூடியது.     

5) உலோக மேற்பரப்புகள் மற்றும் தொடு பரப்புகளை (metalic surface) மிகவும் கவனாமாக கழுவுங்கள்.   ஏனெனில், உலோக  தொடுப்பரப்புக்களில் 9 நாட்கள் வரைக்கும் இந்த வைரஸ் தாக்கு பிடிக்க கூடியது.

6) கைபிடி  சட்டங்கள், கதவின் கைப்பிடிகள் போன்றவற்றில் கவனமெடுத்து, தொடுவதை தவிருங்கள் அல்லது தவிர்ப்பதற்கன முறைகளை (கையுறை) கடைபிடியுங்கள். உங்கள் வீடுகளில் கைபிடி  சட்டங்கள், கதவின் கைப்பிடிகள் போன்றவற்றை சுத்தமாக வைத்திருங்கள்.

7) புகை பிடிப்பதை தவிருங்கள்.

😎 உங்கள் கைகளை 20 நிமிடத்திற்கு ஓர் தடவை நுரைக்கும் சவர்க்கரத்தினால் 20 நொடி கழுவுங்கள்.

9)  மரக்கறி மற்றும் பழவகைளை உட்கொள்ளுங்கள். விற்றமின் C மாத்திரமின்றி, உங்கள் நாக தாது (Zinc) ஊட்டச்சத்தை தரக்கூடிய அல்லது கூட்டக்கூடியதாக இருக்கும் வழிமுறைகளை கையாளுங்கள்.

10) மிருகங்கள் covid-19 ஐ மனிதருக்கு கடத்துவதில்லை. மனிதனில் இருந்து மனிதனுக்கே கடத்தப்படுகிறது.

11) இயலுமானவரை தடிமன் காய்ச்சலை தவிர்பதற்கு முயற்சியுங்கள். குளிரான உணவுகளை தவிருங்கள்.

12) எதாவது தொண்டை கரகரப்பு அல்லது தொண்டை அரிப்பு வருவதற்கன அறிகுறிகளோ அல்லது உணர்வோ தென்பட்டால், மேற்கூறியவற்றின் மூலம்    தொண்டை கரகரப்பு அல்லது தொண்டை அரிப்பு போன்றவற்றிற்கு எதிர்ப்பை ஏற்படுத்தி கொள்ளுங்கள்.

13)    covid-19 தொண்டை கரகரப்பு அல்லது தொண்டை அரிப்பு மூலம் தொற்றி, 3-4 நாட்கள் வரை தொண்டையில் தங்கி இருந்து, சுவாசப் பாதை வழியாக நுரையீரலை சென்றடையும். எனவே தொண்டை கரகரப்பு அல்லது தொண்டை அரிப்பு போன்றவற்றிற்கு மேற்கூறிய படிமுறைகள் மூலம்  எதிர்ப்பை ஏற்படுத்தி கொள்ளுங்கள்.

14) உங்களில் கவனமெடுப்பதுடன், ஏனையோருக்கும் இந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
(நண்பர் ஒருவரின் பதிவில் இருந்து...)

புதன், 18 மார்ச், 2020

பக்கவாதம் தடுப்பது எப்படி?

பக்கவாதம் :

மூளையின் ஒரு பக்கத்தில் ரத்த ஓட்டம் குறைந்து, அந்தப் பகுதி செயல்படாமல் போகும்போது, உடலின் எதிர்பாகத்தில் ஒரு கை, ஒரு கால் மற்றும் முகத்தில் ஒரு பகுதி செயலற்றுப் போவதைப் ‘பக்கவாதம்’ (Stroke) என்று சொல்கிறோம்.

வலது, இடது என்று மூளையை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். உடலின் வலது பக்கச் செயல்பாட்டை இடது பக்க மூளை கட்டுப்படுத்துகிறது. இடது பக்கச் செயல்பாட்டை வலது பக்க மூளை கண்காணிக்கிறது. ஆகவே, மூளையின் வலது பக்கம் செயல்படவில்லை என்றால், உடலில் இடது பக்கம் செயல்படாது. மூளையின் இடது பக்கம் செயல்படவில்லை என்றால், உடலில் வலது பக்கம் செயல்படாது. பொதுவாக, வலது பக்கம் பக்கவாதம் வருமானால் பேச்சு பாதிக்கும். காரணம், பேச்சுக்குத் தேவையான சமிக்ஞைகள் மூளையின் இடது பக்கத்திலிருந்து வருவதுதான்.

காரணங்கள்:

50 வயதைத் தாண்டியவர்களுக்கு இந்த வாய்ப்பு அதிகம். அதாவது, இந்த வயதுக்கு மேல் பத்தாண்டுகளுக்கு ஒரு முறை பக்கவாதம் வருகிற வாய்ப்பு 2 மடங்கு அதிகரிக்கிறது. குடும்பத்தில் பெற்றோருக்கு அல்லது அவர்களின் சந்ததியினருக்கு பக்கவாதம் வந்திருந்தால், அவர்கள் குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.

உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, அதிக ரத்தக் கொழுப்பு, மாரடைப்பு, இதயவால்வு கோளாறுகள், இதயச் செயலிழப்பு, இதயத்துடிப்புக் கோளாறுகள் போன்றவை பக்கவாதம் வருவதற்கு அடித்தளம் அமைக்கின்ற முக்கிய நோய்கள். புகைப்பிடித்தல், அடுத்தவர் விடும் புகையைச் சுவாசித்தல், மது அருந்துதல், பருமன், உடல் உழைப்பு குறைந்த வாழ்க்கைமுறை ஆகியவை பக்கவாதம் வருவதைத் தூண்டுகின்றன. தலைக்காயம், மூளையில் ஏற்படும் தொற்று போன்றவற்றாலும் பக்கவாதம் வரலாம். முன் அறிவிப்புகள் இன்றி பக்கவாதம் பெரும்பாலும் திடீரென்றுதான் வருகிறது.


பக்கவாதத்தின் அறிகுறிகள் :

1. முகத்தில் அல்லது உடலில் ஒரு பக்கத்தில் மரத்துப்போதல், பலவீனம் அடைதல், தளர்ச்சி அடைதல் அல்லது ஒரு பக்கமாக இழுப்பது போன்ற உணர்வு, உடல் செயலிழத்தல்.

2. பேசும்போது திடீரென வார்த்தைகள் குழறுதல்... மற்றவர்கள் பேசுவதைப் புரிந்துகொள்வதில் பிரச்சனை... எளிய வாக்கியங்களைக்கூட வெளிப்படுத்த முடியாத நிலைமை...

3. நடக்கும்போது தள்ளாடுதல்... நேராக நிற்க முடியாத நிலைமை, ஒரு காலில் மட்டும் உணர்ச்சி குறைந்திருப்பது...

4. பேசிக்கொண்டிருக்கும்போது சட்டென்று சில நொடிகள் பேச்சு நின்றுபோகும். பார்வை திடீரென்று குறைந்து உடனே தெளிவாகும். இரட்டைப் பார்வை ஏற்படும்.

நடந்து செல்லும்போது தலைசுற்றும். உணவை வாய்க்குக் கொண்டுசெல்லும்போது கை தடுமாறும். கையெழுத்துப் போடும்போது கை விரல்கள் திடீரென ஒத்துழைக்காது. வழக்கத்துக்கு மாறான தலைவலி, வாந்தி.

பக்கவாத நோயின் அறிகுறிகள் வெளியில் தெரிந்த 2 அல்லது 3 மணி நேரத்துக்குள் தக்க சிகிச்சை அளிக்காவிட்டால் உடலின் ஒரு பகுதி முழுவதுமாக செயலிழந்துவிடும். ஆகவே, காலம் தாழ்த்தாமல் சிகிச்சை பெறுகிறவர்களுக்கு பாதிப்பு குறையும்.

தடுப்பது தான் எப்படி?

ரத்த அழுத்தம் சரியாக இருக்கட்டும்! முப்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் மாதம் ஒருமுறை தங்கள் ரத்த அழுத்தத்தை சோதித்துக் கொள்ள வேண்டும். இந்த அளவு அதிகமாக இருந்தால், அதைக் கட்டுப்படுத்த மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகளைத் தொடர்ந்து முறைப்படி எடுத்துக்கொள்ள வேண்டும். ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்க வேண்டுமென்றால், உணவுமுறையும் முக்கியம். ரத்த அழுத்த நோய்க்கு முதல் எதிரி சமையல் உப்பு (சோடியம் குளோரைடு). நாளொன்றுக்கு 3லிருந்து 5 கிராம் வரை உப்பு போதுமானது. இதற்கு மேல் உப்பு உடலுக்குள் போனால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். இதைத் தவிர்க்க ஊறுகாய், கருவாடு, அப்பளம். வடகம், சிப்ஸ், பாப்கார்ன், முந்திரிப்பருப்பு, புளித்த மோர் போன்றவற்றை முழுமையாகத் தவிர்க்க வேண்டும்.

இறைச்சி, முட்டையின் மஞ்சள்கரு, தயிர், நெய், வெண்ணெய், பாலாடை, ஐஸ்கிரீம், சாஸ் மற்றும் சாக்லெட் ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது. காரமும் புளிப்பும் மிகுந்த உணவுகள், சோடா உப்பில் தயாரிக்கப்பட்ட உணவுகள் ஆகியவற்றை ஒதுக்க வேண்டும். எண்ணெயில் பொரித்த, வறுத்த, ஊறிய உணவுகள் வேண்டவே வேண்டாம். தேங்காய் எண்ணெயும் பாமாயிலும் ஆகவே ஆகாது. நல்லெண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றைக்கூட மிகக் குறைந்த அளவில்தான் உபயோகிக்க வேண்டும். நார்ச்சத்துள்ள உணவுகளை விரும்பிச் சாப்பிடுங்கள். கோதுமை, கேழ்வரகு, சோளம் போன்ற முழு தானியங்கள்... கொய்யா, தர்ப்பூசணி, மாதுளை போன்ற பழங்கள்... பீன்ஸ், பட்டாணி போன்ற பயறுகள்... புதினா, கொத்தமல்லி போன்ற பச்சை இலைகள்... காய்கறிகள், கீரைகள் ஆகியவற்றில் நார்ச்சத்து அதிகம்.

ரத்த நாள அடைப்பு 

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ரத்த நாள அடைப்பு பிரச்சனை வரலாம். 
இதயத்துக்கு வெளியே உள்ள சுத்த ரத்தக் குழாய்கள் சுருங்குவதை பெரிப்ரல் ஆர்ட்டீரியல்டிசிஸ் என்று அழைப்பார்கள். 
ஒருவித கெட்ட கொழுப்பு கரைபடுவதால் இது உருவாகிறது. 
ரத்த நாளங்களில் `பிளேக்’ என்று சொல்லக்கூடிய அழுக்கானது படியலாம். 
இது கையிலும் படியலாம். காலிலும் படியலாம். 
இதனால் சுத்தமான ரத்த நாளங்கள் அடைபடுகின்றன. 
ரத்தம் போவது தடைபடுகிறது. 
குறிப்பாக, காலுக்கு ரத்தம் செல்வது தடைபடுகிறது. 
ரத்தம் போகாவிட்டால், என்ன நேரிடும்?
அங்குள்ள திசுக்கள் அழியும். இதனால் காலை எடுக்க வேண்டிவரும். 
இதற்கு முக்கியமான காரணம் புகைபிடித்தல். 
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் இது வரலாம். 
அதிக கொழுப்பு உள்ளவர்கள், 
அதிக மன அழுத்தம் உள்ளவர்கள், 
இதய நோய் உள்ளவர்களிடம் இது காணப்படும். சிலருக்கு வலி, மரத்துப் போதல், குத்துதல், கால் ஆடுசதையில் வலி போன்றவை காணப்படும்.
காலில் நாடிப் பார்க்க வேண்டும். அப்பொழுது காலில் புண்கள் வரும். குறிப்பாக விரல்கள், பாதங்கள் இவற்றில் புண் வந்தால் ஆறாது, நாள்பட்டு ஆறும். காலினுடைய நிறம் சற்று நீல நிறத்தில் காணப்படும். ஒரு காலின் சூடு, அடுத்த காலின் சூட்டிலிருந்து மாறுபடும். நகங்களில் மாறுபாடு காணப்படும். ஆண்மைக் குறைவு ஏற்படும். குறிப்பாக நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை வரலாம்.
இவர்கள் உடற்பயிற்சி, உணவு முறை, கொழுப்பை குறைக்கிற மருந்துகள், ரத்த அழுத்தத்தை குறைக்கிற மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். வேலை செய்யும்போது ஆடுசதையில் வலி வரும். ஓய்வு எடுத்தால் குறைந்துவிடும். ரத்தம் போகாததுதான் இதற்குக் காரணம். இவர்கள் பொதுவாகவே நடந்தால் வலி ஏற்படுகிறது என்பார்கள்.
5 நிமிஷம் ஓய்வெடுத்த பின் வலி குறைந்து விட்டது’ என்று சொல்வார்கள். இவர்களுக்கு டாப்ளர் டெஸ்ட் என்று சொல்லக்கூடிய காலில் ரத்தம் எவ்வாறு ஒடுகிறது என்று பார்க்கும் சோதனையை செய்ய வேண்டும். ஆஞ்சியோகிராபி பரிசோதனை செய்து பார்ப்பவர்களும் உண்டு. புகையிலையை அறவே ஒழிக்க வேண்டும். ஒழுங்காக உடற்பயிற்சி செய்ய வேண்டும். நீரிழிவு நோய், கொழுப்பு, ரத்த அழுத்த நோய் போன்றவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும். சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் பூரணமாக முழுமையாக குணப்படுத்த முடியும். 

http://www.siddharmedicine.in/ 

@ 9943909495, 04258-226495

கொரோனா வைரசும் தமிழன் மறந்த தமிழர் நோய்த்தடுப்பு_மரபுகளும்

கொரோனா வைரசும் தமிழன் மறந்த தமிழர் நோய்த்தடுப்பு_மரபுகளும்  

1. இரு கை கூப்பி வணக்கம் சொல்லியது.

2. வாசல் முற்றத்தில்  நீரில் கால் கழுவி பிறகு வீடுநுழைந்தது.

3. மாவிலை தோரணங்கள் கட்டியது.

4. மஞ்சள் பூசி குளித்தது தெளித்து விளையாடியது.

5. உணவில் மிளகு சுக்கு மஞ்சள் சேர்ந்தது.

6. வாழை இலையில் உணவு பரிமாறியது .

7. வேப்பங்குச்சி உப்பு கரி கொண்டு பல் துலக்கியது.

8. வேப்பம் இலையில் புகை போட்டது.

9. மாட்டுச் சாணம் தெளித்து வாசல் பெருக்கியது.

10. வருடம் ஒரு முறை வீட்டிற்கு வெள்ளை அடித்தது.
     
11.எலுமிச்சம் பழம் காய்ந்த மிளகாய் படிகாரம் உத்திரசங்கு இவைகளை தலை வாசலில் தொங்க விட்டது.

12. நெரிசல் மிக்க இடங்களில் இருந்து திரும்பியதும் உடைகளை கழற்றி வீட்டிற்கு வெளியே வைத்தது. பின்வாசல் வழியாக சென்று குளித்துவிட்டு வீட்டில் நுழைந்தது.

13. வெற்றிலை பாக்கு போடுவதும்.

14. கசாயம் ஊறல் குடிப்பதும்.

15. வெள்ளாவியில் உடை வெளுத்தது.

16.மரண வீட்டிற்கு சென்றுவந்தால் மஞ்சள் நீர் தெளித்து நீராடி வீட்டிற்குள் செல்லுதல்.

17.இறந்த பிரேதத்தை எரித்தது.

18. அம்மை வந்தால் வெப்பம்  பத்திரம் போடுதல்.

19. வீட்டு முற்றத்தில் துளசிச் செடியை நாட்டி வைத்தல்.

20. மாலை நேரம் வீட்டில் சாம்பிராணி ஏற்றி புகை போட்டது. 

இவை அனைத்துமே கிருமியை தடுப்பதும் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதும் சுத்தமாக வாழ்வதுக்கு மட்டுமே தமிழனால் உருவாக்கப்பட்ட மரபு  என்பது புரியாமல் இன்று நடக்கும் பெரு அழிவில் பங்காளர்களாக இருக்கிறோம்

"நீ புதைத்ததை நீயே எடுத்துவிடு இல்லாவிட்டால் நீயே புதைக்கப்படுவாய்"

இணையத்தளத்தில் இருந்து ...

செவ்வாய், 10 மார்ச், 2020

அரசியல்வாதிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது

அரசியல்வாதிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது

 இந்த காரணத்தைப் பகிரவும் ஆதரிக்கவும்

 இப்போது தலைவர்களின் தலைவர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார், அதை உங்கள் மதிப்பீட்டிற்கு அனுப்புகிறார் ..

 இந்தியாவின் அன்பான / மரியாதைக்குரிய குடிமக்கள் ... இந்த செய்தியைப் படிக்குமாறு நீங்கள் கோரப்படுகிறீர்கள், நீங்கள் ஒப்புக்கொண்டால், தயவுசெய்து உங்கள் தொடர்பில் உள்ள அனைவருக்கும் அனுப்புங்கள், மேலும் மேலும் மேலும் அனுப்புமாறு அவர்களிடம் கேளுங்கள்.

 மூன்று நாட்களில், இந்த செய்தி முழு இந்தியாவிலும் இருக்க வேண்டும்.  ஒவ்வொரு குடிமகனும் இந்தியாவில் குரல் எழுப்ப வேண்டும்.  __

 2018 மேம்பாட்டுச் சட்டம்

 எம்.பி.க்கள் ஓய்வூதியம் பெறக்கூடாது, ஏனெனில் அரசியல் ஒரு வேலை அல்லது வேலைவாய்ப்பு அல்ல, ஆனால் ஒரு இலவச சேவை.  - அரசியல் என்பது பொது பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் ஒரு தேர்தல், ஓய்வு இல்லை, ஆனால் அவர்கள் மீண்டும் அதே சூழ்நிலையில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படலாம்.  (தற்போது அவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கிறது, 5 வருட சேவைக்குப் பிறகு).

 இதில் இன்னொரு கோளாறு என்னவென்றால், ஒருவர் முதலில் கவுன்சிலராக இருந்து, பின்னர் சட்டமன்ற உறுப்பினராகி, பின்னர் எம்.பி. ஆகிவிட்டால், அவருக்கு ஒன்று அல்ல, மூன்று ஓய்வூதியங்கள் கிடைக்கும்.

 இதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய நாட்டின் குடிமக்களுக்கு இது ஒரு பெரிய துரோகம் ...

 மத்திய ஊதியக்குழுவுடன், பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பள கொடுப்பனவு திருத்தப்பட்டு வருகிறது .... இதை வருமான வரியின் கீழ் கொண்டு வர வேண்டும் ....

  தற்போது, ​​எம்.பி.க்கள் தங்களது சம்பளத்தையும் கொடுப்பனவுகளையும் தன்னிச்சையாக வாக்களிப்பதன் மூலம் தன்னிச்சையாக அதிகரிக்கின்றனர், அந்த நேரத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டுள்ளன.

 எம்.பி.க்களின் சுகாதார பராமரிப்பு முறை நிராகரிக்கப்பட வேண்டும் .. மேலும் இந்தியாவின் பொது சுகாதாரம் போன்ற சுகாதாரப் பாதுகாப்பு மற்ற குடிமக்களைப் போலவே அவர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும் .. தற்போது அவர்களின் சிகிச்சை பெரும்பாலும் வெளிநாடுகளில் செய்யப்படுகிறது .. அவர்கள் அதை வெளிநாட்டில் செய்ய வேண்டுமானால், அவர்கள் அதைப் பெற வேண்டும்  தங்கள் சொந்த செலவில் செய்யப்படுகிறது.

 மின்சாரம், நீர் மற்றும் தொலைபேசி பில் போன்ற அனைத்து சலுகைகளும் முடிவுக்கு வர வேண்டும்.  (அவர்கள் இதுபோன்ற பல சலுகைகளைப் பெறுவது மட்டுமல்லாமல், அவற்றை தவறாமல் அதிகரிக்கிறார்கள்) -

 குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்க வேண்டும், தண்டனையான பதிவுகள், குற்றவியல் குற்றச்சாட்டுகள் மற்றும் உறுதியுடன் சந்தேகத்திற்கிடமான நபர்கள், கடந்த கால அல்லது நிகழ்காலத்தை நாடாளுமன்றத்தில் இருந்து தடை செய்ய வேண்டும் ..

 அவர்களால் ஏற்படும் நிதி இழப்புகள், அலுவலகத்தில் உள்ள அரசியல்வாதிகள் காரணமாக அவர்களிடமிருந்தும் மீட்கப்பட வேண்டும், அவர்களின் வேட்பாளர்கள், சொத்துக்கள் - எம்.பி.க்களும் பொதுவான குடிமக்களுக்கு பொருந்தும் அதே விதிகளை பின்பற்ற வேண்டும்.

 குடிமக்களால் எல்பிஜி எரிவாயு மானியத்திற்கு விலக்கு இல்லை ... பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு கிடைக்கும் மானியங்கள் மற்றும் பாராளுமன்ற கேண்டீனில் மானிய உணவு உள்ளிட்ட பிற மானியங்கள் திரும்பப் பெறப்படாவிட்டால்.

 பாராளுமன்றத்தில் பணியாற்றுவது ஒரு மரியாதை, கொள்ளையடிக்கும் இலாபகரமான வாழ்க்கை அல்ல.

 இலவச ரயில் மற்றும் விமானப் பயணம் நிறுத்தப்பட வேண்டும்.

 சாமானியர்கள் தங்கள் வேடிக்கையை ஏன் தாங்க வேண்டும்?

 ஒவ்வொரு நபரும் குறைந்தது இருபது பேருடன் தொடர்பு கொண்டால், இந்தியாவில் பெரும்பாலான மக்கள் இந்த செய்தியைப் பெற மூன்று நாட்கள் மட்டுமே ஆகும்.

 இந்த சிக்கலை எழுப்ப இது சரியான நேரம் என்று நீங்கள் நினைக்கவில்லையா?

 மேலே உள்ளதை நீங்கள் ஏற்றுக்கொண்டால், அதை அனுப்பவும்.

 இல்லையென்றால், அதை நீக்கு.

 நீங்கள் எனது 20+ பேரில் ஒருவர், இதைத் தொடரவும் ...

 நன்றி.

 https://www.facebook.com/100002669372058/posts/2373980772700879/?sfnsn=scwspmo

Popular Posts

Facebook

Blog Archive