Tamil health tips | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil: Tamil health tips

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

Tamil health tips லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Tamil health tips லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 22 செப்டம்பர், 2020

எள் தரும் பயன்கள்..

#எள்.!!

ஆயிரம் வருடங்களாக 
மனிதனுடன் பயணிக்கும் பயிர்... 
#எள்.!

மனிதன் முதலில் பயன்படுத்திய எண்ணெய் எள்ளில் இருந்து எடுத்த நல்லெண்ணைய் தான். அப்படிப்பட்ட எள்ளில் பல மருத்துவ குணங்கள் கொட்டிக் கிடக்கிறது.

எள் தரும் பயன்கள்...

👉 எலும்பை வலுப்படுத்தும்.

👉 இரத்த அழுத்தம் சீராகும்.

👉 இருதயம் பலம் பெரும்.

👉 கதிர்வீச்சு பாதிப்பில் இருந்து பாதுகாக்கும்.

👉 மூட்டுவலி பிரச்சனைக்கு சிறந்த நிவாரணி.

👉 முடி உதிர்தல் கட்டுப்படும்.

உடல் சூட்டை தணிக்கும்...!!!


இப்படி பல மருத்துவ குணங்கள் கொண்ட எள் நம் உணவு பட்டியலில் முக்கிய இடம் வகிக்கிறது.

 எள்ளில் இருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெய் பயன்பாடு இன்று நமது உடல்நலத்திற்கு இன்றியமையாதது..

  முக்கியமாக குழந்தைகள் மற்றும் பெண்கள் இதை தினசரி பயன்படுத்துவது மிகவும் அவசியம்.

எள்சிறந்தது தான் ஆனால் உணவில் தினசரி பயன்படுத்த வழி என்ன? என்ற கேள்வி நம் எல்லோருக்கும் உண்டு. நமது பாரம்பரிய உணவுமுறையில் இதற்கான வழி இருந்தது. நம் உணவில் எள்ளு உருண்டை, எள்ளு மாவு, எள்ளு சீடை என்று பலவிதமாக பயன்படுத்தி வந்தோம். ஆனால், இன்று இவை அனைத்தும் நாம் மறந்து விட்டோம். அதனால், ஆரோக்கியத்தையும் இழந்துவிட்டோம்.

நமது தினசரி ஸ்நாக்ஸ் பட்டியலில் எள்ளு மிட்டாயையும் சேர்த்துக்கொள்வோம்... ஆரோக்கியத்தை பேணுவோம் !!

'சுவை மட்டும் தருவது உணவல்ல...

சுவையோடு ஆரோக்கியம் தருவதே சிறந்த உணவு"

மருந்துகடைகளில் விற்கப்படும் எந்த #மூலிகைபொடி எதற்கு பயன்படும்..?

♦மருந்துகடைகளில் விற்கப்படும் எந்த #மூலிகைபொடி எதற்கு பயன்படும்..?♦

பாதுகாக்க பட வேண்டிய பயனுள்ள குறிப்புகள் இதோ...!

*அருகம்புல் பொடி* 
அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

*நெல்லிக்காய் பொடி* 
பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது

*கடுக்காய் பொடி*
குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

*வில்வம் பொடி* 
அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

*அமுக்கலா பொடி*
தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

*சிறுகுறிஞான் பொடி* 
சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

*நவால் பொடி*
சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

*வல்லாரை பொடி* 
நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

*தூதுவளை பொடி* 
நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

*துளசி பொடி* 
மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

*ஆவரம்பூ பொடி*
இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

*கண்டங்கத்திரி பொடி* 
மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

*ரோஜாபூ பொடி*
இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

*ஓரிதழ் தாமரை பொடி* 
ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும். வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா

*ஜாதிக்காய் பொடி*
நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

*திப்பிலி பொடி*
உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

*வெந்தய பொடி*
வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*நிலவாகை பொடி*
 மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

*நாயுருவி பொடி*
உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

*கறிவேப்பிலை பொடி* 
கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.

*வேப்பிலை பொடி* 
குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*திரிபலா பொடி* 
வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

*அதிமதுரம் பொடி* 
தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

*துத்தி இலை பொடி* 
உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

*செம்பருத்திபூ பொடி* 
அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

*கரிசலாங்கண்ணி பொடி*
காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

*சிறியாநங்கை பொடி* 
அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

*கீழாநெல்லி பொடி,* 
மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

*முடக்கத்தான் பொடி* 
மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது

*கோரைகிழங்கு பொடி* 
தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

*குப்பைமேனி பொடி* 
சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

*பொன்னாங்கண்ணி பொடி*
உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

*முருஙகைவிதை பொடி*
ஆண்மை சக்தி கூடும்.

*லவங்கபட்டை பொடி* 
கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

*வாதநாராயணன் பொடி*
 பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

*பாகற்காய் பவுட்ர்* 
குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

*வாழைத்தண்டு பொடி* 
சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

*மணத்தக்காளி பொடி* 
குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

*சித்தரத்தை பொடி*
 சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

*பொடுதலை பொடி* 
பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

*சுக்கு பொடி*
ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

*ஆடாதொடை பொடி* 
சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

*கருஞ்சீரகப்பொடி* 
சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

*வெட்டி வேர் பொடி*
நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

*வெள்ளருக்கு பொடி* 
இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

*நன்னாரி பொடி*
உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

*நெருஞ்சில் பொடி* 
சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

*பிரசவ சாமான் பொடி* 
பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

*கஸ்தூரி மஞ்சள் பொடி*
தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

*பூலாங்கிழங்கு பொடி*
 குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

*வசம்பு பொடி*
பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

*சோற்று கற்றாலை பொடி*
உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

*மருதாணி பொடி*
கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

*கருவேலம்பட்டை பொடி*
பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்!!!

பனங்கற்கண்டில்_உள்ள_மருத்துவ_குணங்களை_பற்றி_அறிவோம் - Palm Crystals - Tamil Health Tips

#பனங்கற்கண்டில்_உள்ள_மருத்துவ_குணங்களை_பற்றி_அறிவோம்...

பனங்கற்கண்டு வாத பித்தம் நீங்கும். பசியை தூண்டும். புஷ்டி தரும். #நுரையீரல் மற்றும் #தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது. தமிழகத்தில் பனை மரத்தின் வெல்லத்தை இரண்டு வகையாக சொல்வார்கள்.

முற்றிலும் சுத்தப்படுத்தாத, கெட்டியான கரு நிற வெல்லத்தை “#கருப்பட்டி” என்பார்கள். இதை சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும் சர்க்கரை ‘#பனங்கற்கண்டு’ எனப்படும் இதற்கு மருத்துவ குணங்கள் உள்ளன. 
 
பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் #மார்புச்சளி இளகும். முக்கியமாக #தொண்டைப்புண், வலி இவை அகலும்.  பனங்கற்கண்டு, உடல் உஷ்ணம், காங்கை, நீர் சுருக்கு, ஜுரத்தினால் ஏற்படும் வெப்பங்கள் இவற்றுக்கு நல்லது. 

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் பலவிதமான நோய்களை தீர்க்கும் மருந்தாக உள்ளது. பனை நீரிலுள்ள சீனி சத்து உடலுக்கு தேவையான வெப்பத்தை தருகிறது. இதிலிருக்கும் குளுக்கோஸ் மெலிந்து தேய்ந்து வாடிய உடலுடைய குழந்தைகளின் உடலை சீராக்கி நல்ல புஷ்டியை தருகிறது.
 
கருவுற்ற பெண்களுக்கும் மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண் முதலியவைகளை  குணப்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. டைபாய்டு, சுரம், நீர்க்கட்டு முதலிய வியாதிகளை போக்குகின்ற நல்ல மருந்தாகவும் இது செயல்படுகிறது. இதை அருந்துவதால் இருதய நோய் குணமாகும். இருதயம் வலுவடையும்.
 
இதிலிருக்கும் கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது. இதிலிருக்கும் இரும்புச்சத்து பித்தத்தை நீக்கி சொறி, சிரங்கு உள்பட சகல தோல் வியாதிகளையும்  நீக்குவதுடன் கண் நோய், ஜலதோசம், காசநோய் இவைகளையும் நீக்குகிறது.#Palm Crystals

#நன்றி 

உடல் சங்கேதமும் அதன் பாதிப்புகளும் :-

உடல் சங்கேதமும் அதன் பாதிப்புகளும் :-
**************************"***********

**உங்கள் முகத்தில் அரிப்போ நமைச்சலோ எடுத்தால் --- உங்கள் கூந்தலில் சுத்தமில்லை என அர்த்தம்.

**உங்களுக்கு வயிற்றுவலியோ வயிற்றாலையோ இருந்தால் --- உங்கள் கைவிரல் நகங்கள் சுத்தமில்லை என அர்த்தம்.

**உங்கள் கண்களோ மூக்கோ தொடர்ந்து அரிக்குமானால் --- உங்களுக்கு ஜலதோசம் பிடிக்கப்போகிறது என அர்த்தம்.

**உங்களது காதில் அதீத குடைச்சலோ வலியோ வந்தால் --- உங்களுக்கு காய்ச்சல் வர நேரம் வந்துவிட்டது என அர்த்தம்.

**உங்கள் கைமடிப்பு,கழுத்து மடிப்பு,கால் இடுக்கில் கருப்பான பட்டை விழுந்தால் --- உங்கள் கணையத்தில் இன்சுலினின் சுரப்பு அதிகமாகிறது என அர்த்தம்.

**உடலில் இன்சுலின் அதிகம் சுரந்து அதிக பசி எடுக்கிறதென்றால் --- அது நீரிழிவின் ஆரம்பம் என அர்த்தம்.

**உங்கள் கால் பாதங்களில் வெடிப்பு உண்டானால்-- - உடலில் அதிக அழுத்தமும் சூடும் இருக்கிறது என அர்த்தம்.

**உங்கள் முழுங்கால் மூட்டு அல்லது கால்களின் மணிக்கட்டு வலியெடுத்தால் --- உடலில் அதிக எடை கூடிவிட்டது அதனை குறைக்கவேண்டும் என அர்த்தம்.

**தொடர்ந்து உங்களது முதுகுத்தண்டு அல்லது இடுப்புப் பகுதி வலிக்குமானால் --- அந்த இரு எலும்புகளும் மிருதுவாகி தேய்மானம் தொடங்குகிறது என அர்த்தம்.

**உங்கள் உதட்டில் அல்லது மேல்தோலில் வெடிப்பு,பிளவு, தோல் உரிதல் உண்டாகுமானால் --- உடலில் நீர்ச்சத்தும் எண்ணெய்பசையும்  குறைந்துவிட்டது என அர்த்தம்.

**உங்கள் தோள்பட்டை, முதுகுத்தாரை,குதிங்கால் இவற்றில் இருக்கமோ வலியோ வந்தால் --- உடலில் காற்றின் அழுத்தம் கூடி வாயு தேங்கியுள்ளது என அர்த்தம்.

**உங்கள் கைவிரல் கண்களுக்கு மேல் மெல்லிய கருப்புக்கோடு விழுமானால் --- இருதயத்தில் பிரச்சினை தொடங்குகிறது என அர்த்தம்.

**என்னிடம் இருந்து உங்களுக்கு  மெசேஜ் வந்தால் - நல்லதை அறிந்து கொள்ளுங்கள் என அர்த்தம்.

- கு பண்பரசு

செவ்வாய், 2 ஜூன், 2020

*உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை*

*உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை*

_திடக்கழிவு,_
_திரவக்கழிவு,_
_வாயுக்கழிவு,_ 
_சொந்தக்காசில் சூனியம் வைத்துக்கொள்ளும் *மருத்துவக்கழிவு,*_

     இவைகளை வாழ்நாள் முழுவதும், சிரமமில்லாமல் நீக்கும், எளிமையான,
சுவையான முறை.

      *வெந்நீர்*
              +
*எலுமிச்சை சாரு*
             +
       *தேன்*

*செய்முறை 
*********

   ஒரு டம்ளர் நீரை குறைந்த தனலில் வைக்கவும் !
கொதிக்க வேண்டியதில்லை !
நாம் தாங்கும் சூடு இருந்தால் போதும் !

ஒரு காலி டம்ளரில் 1/2 எலுமிச்சை, சிறியதாயிருந்தால் ஒரு எலுமிச்சை பிழிந்துக்கொள்ளவும் !

3 ஸ்பூன் தேன் சேர்த்து, வெந்நீர் கலந்து, ஸ்பூனில் சிறிது சிறிதாக, அனுபவித்து, உமிழ் நீருடன் நன்றாக உறவாடி, பின் அருந்தவும் !

   காலையில் முதல் உணவாக, வெறும் வயிற்றில் அருந்தவும் !

எல்லா கழிவுகளும் உடனுக்குடன் நீக்கப்படுவதுடன் உடலுக்குத் தேவையான 
உடனடி குளுக்கோஸ், தரமான உயிர்சத்துக்கள் மற்றும் தாது உப்புக்களும் கிடைக்கும் !

*வாழ்நாள் முழுதும் "கேன்சர்" என்ற சொல்லே நம் வாழ்க்கை அகராதியில் இல்லாமல் போகும் !*

   வயது வித்தியாசமின்றி உட்கொள்ளலாம் !

*உணவாகவும்,*
*மருந்தாகவும்,* செயல்புரியும் உன்னத இயற்கை பானம் !

பி . கு :
***

     சர்க்கரை நோயாளிகள் பயமில்லாமல் அருந்தலாம் !

சிறிது சிறிதாக, உமிழ் நீர் சேர்த்து, சுவைத்து உட்கொள்வதால், தேனில் உள்ள குளுக்கோஸ் தரமான குளுக்கோஸாக மாற்றமடைந்து நன்மை மட்டுமே செய்யும் !

   மேலும், "தேன்" நாக்கிற்கு இனிப்பு, உடல் உறுப்புகளுக்கு கசப்பு !

சர்க்கரை நோயாளிகள் தேன் சாப்பிடக்கூடாதென்பது வடிகட்டிய "மூட நம்பிக்கை"!

தொடர்ந்து அருந்துவதால் "அல்சர்" எனும் மருத்துவத்தால் தூண்டப்படும் உபாதை, சொல்லாமல் ஓடிப்போகும்.......!

           - சித்தர்களின் குரல்

மொழஉடலின் மொழி

1.  உடல் - உணவை கேட்கும் மொழி - பசி

2.  உடல் - தண்ணீரை கேட்கும் மொழி  - தாகம்

3.  உடல்  - ஓய்வை கேட்கும் மொழி  - சோர்வு, தலைவலி

4.  உடல் - நுரையீரலை தூய்மை செய்யும் மொழி - தும்மல், சளி, இருமல்.

5.  உடல் - உச்சி முதல் பாதம் வரை உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - காய்ச்சல்

6.  உடல் - காய்ச்சலின் போது உணவை உண்ணாதே என்று சொல்லும் மொழி -  வாய் கசப்பு மற்றும் பசியின்மை 

7.  உடல் - காய்ச்சலின் போது நான் உடலை தூய்மை செய்கிறேன், நீ எந்த வேலையும் செய்யாதே என்று சொல்லும் மொழி - உடல் அசதி

8.  உடல் - எனக்கு செரிமானம் ஆகாத உணவை நான் வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - வாந்தி

9.  உடல் - நான் குடல்களில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - பேதி

10. உடல் - இரத்தத்தில் உள்ள நச்சை நான் தோல் வழியாக வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - வியர்வை

11.. உடல் - நான் வெப்பநிலையை சீர் செய்து இரத்தத்தில் உள்ள நச்சை முறிக்கப்போகிறேன் என்று சொல்லும் மொழி - உறக்கம்

12. உடல் - நான் முறித்த நச்சை இதோ வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - சிறுநீர் கழித்தல்

13. உடல் - உணவில் உள்ள சத்தை பிரித்து இரத்தத்தில் கலந்து, சக்கையை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - மலம் கழித்தல்

       எனவே நாம் அனைவரும் உடலின் மொழி அறிந்து, நமக்கு ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டால் அதை உடனே மருந்தோ, மாத்திரையோ கொண்டு தடை செய்ய வேண்டாம். உடல் தன் வேலையை சீராக செய்ய நாம் அனுமதித்தால் தான், நாம் நோய் எனும் பிணியில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ முடியும்.

      நாம் அனைவரும் முதலில் நம் உடலை நேசிப்போம், நம் உடல் உள் உறுப்புகளை நேசிப்போம், நாம் நம்மை நேசிப்போம்.

       நாம் வெளி உறுப்புகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ, அதே அளவிற்கு நம் உள் உறுப்புகளின் உணர்வுகளும், மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் நாம் ஆரோக்கியமாகவும், அழகான தோற்றத்துடனும் இருக்க முடியும்.

       நம் உடலை நேசிப்போம்.....🙏🙏🙏

புதன், 27 மே, 2020

வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை

Dr ரம்யா_post
வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை

1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள்.
கோடை காலத்திலும் கட்டாயம் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை கழித்தாக வேண்டும்.

2. காலையிலும், இரவு உணவுக்கு முன்பும் கட்டாயம்.
மலம் கழிக்க வேண்டும்.
கண்ட நேரத்தில் கழிப்பது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.

காலை, மாலை இருவேளை குளிக்கவும். மழைக்காலங்களில் காலையில் குளித்தால் போதும்.

3. உள்ளாடைகள் கிழியாவிட்டாலும்
6 மாதத்திற்கு ஒருமுறை மாற்றுங்கள்.
ஒருநாள் பயன்படுத்தியபிறகு கட்டாயம் துவைத்துக் காயப்போடுங்கள்.

4. சிறுவர்கள் 1 ஸ்பூன், பெரியவர்கள் 2 ஸ்பூன் ஊறவைத்த வெந்தயத்தை, வெறும் வயிற்றில் மென்று விழுங்க வேண்டும்,
சர்க்கரையும், இரத்தக் கொதிப்பு வராமல் தடுக்கப்படும்.
வந்தால் கட்டுக்குள் இருக்கும்.

5. காலை உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன்
தோல் நீக்கிய இஞ்சித் துண்டைச் சாப்பிடுங்கள்.
கொழுப்பைக் குறைக்கும். தொப்பையைக் கரைக்கும்.

உணவை நன்றாக மென்று,
பொறுமையாக உண்ணுங்கள்.

6. சுட்ட எண்ணெயை மீண்டும் பயன்படுத்திச் செய்யப்பட்ட பண்டங்களைச் சாப்பிடக் கூடாது.
அதனால் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்;
புற்றுநோயை உருவாக்கும்.

7. மைதா பரோட்டா வேண்டவே வேண்டாம்,
வாழ்நாளைக் குறைக்கும்.
குளிர்பானம், பாக்கெட் தீனிகள் வேண்டாம்.

8. பிராய்லர் கோழிக்கறி வேண்டாம்.
மீன் அல்லது ஆட்டுக்கறி, நாட்டுக் கோழி மட்டும் சாப்பிடுங்கள்.
மது, புகை கூடவே கூடாது.

9. மதியம் சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரம் முன்பு
சுக்குக் காபி சாப்பிடுவது மிகவும் நல்லது.

உண்ட உணவு முழுமையாகச் செரிக்கும் முன்பு
அடுத்த திட உணவு கூடாது.

10. பாதாம், முந்திரி, உலர்பழம், பழங்கள், கீரைகள், டார்க் சாக்லட், கிரின் டீ, கடலை மிட்டாய், எள் உருண்டை, பனைவெல்லம், சோற்றுக்கற்றாழை (ஏழு முறை சுத்தம் செய்து தேன் கலந்து) நாள்தோறும் சாப்பிடவும்.

11. பயோட்டின் (எச் வைட்டமின்) என்ற வைட்டமின் குறைவால், தலைமுடி உதிர்தல், நகங்கள் உடைதல், தோல் நோய், எடை குறைவு, தசைவலி, கொழுப்பு அடைப்பு, மன அழுத்தம் ஏற்படும். இவற்றைத் தவிர்க்க, வேர்க்கடலை, முந்திரி, மீன், முட்டை, வாழைப்பழம், பப்பாளி, தக்காளி, காலிபிளவர், காளான், மோர் சாப்பிடவேண்டும்.

12. காலை அல்லது மாலை 1 மணி நேரம் உடற்பயிற்சி, உங்க குழந்தைகள் மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா???*
தயவு செய்து
*வேர்க்கடலை,*
*பேரீச்சம்பழம்* தினமும் ஸ்நாக்சாக கொடுங்கள்!
*கீரை* வாரம் *3*முறை பருப்புக்கூட்டாகவும்,
*ராகியை*
*சேமியாவாக,கொழுக்கைட்டையாக,ரொட்டியாக வாரம்* இருமுறை கொடுக்கவும்!
*ஆப்பிள்,ஆரஞ்சை* விட *பப்பாளி,கொய்யாவில் சத்துக்கள்* அதிகம்!
தினமும் சாப்பிடக்கொடுங்கள்!
உங்கள் *மனைவியின் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவரா நீங்கள்???*
தயவு செய்து *மண் சட்டியும்,இரும்புக்கடாயும்,மரச்செக்கு எண்ணெய்யும்* வாங்கிக்கொடுக்கவும்!
தினமும் *5பேரிச்சம்பழம்* குறைந்த பட்சம் சாப்பிடக்கட்டாயப்படுத்துங்கள்!
*கருப்பு அரிசி,கருப்பு எள்,கருப்பட்டி,கருப்பு உளுந்து,மண் பானை தண்ணீர் சாப்பிட* வலியுறுத்துங்கள்!
உங்கள் *கணவர்* மீது அதிக அக்கறை கொண்ட *மனைவியா நீங்கள்???*
🚪தயவு செய்து *பிரிட்ஜில் வைத்த குழம்பு வகை,மாவு வகைகளை கொடுக்காதீர்
🥃 *சீரகத்தண்ணீர்,சோம்புத்தண்ணீர்* குடிக்கக்கொடுக்கவும்!
*நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவுப்பழக்கங்களை முடிந்த அளவிற்க்கு பயன்படுத்துவோம் *
*இழந்த ஆரோக்கியத்தை* முழுமையாக மீட்டெடுக்க முடியாது என்றாலும் *50%* ஆரோக்கியத்தை மீட்டெடுக்க *நாம் நம் முன்னோர்களின் பயன்பாட்டில் இருந்த உணவுப் பழக்கத்தை* நாம் நம் நடைமுறை வாழ்க்
கையில் பயன்படுத்துவன் மூலம் *சாத்தியமாகும்.*
*இன்றே! முயற்சிப்போம்! *வாருங்கள்!*

இரவு 10,00 மணி முதல் காலை 5,00 மணி வரை
கட்டாயம் உறங்க வேண்டும்... நமது நலனில் என்றும் உங்களுடன்...

✿✿✿ பிடிச்சா லைக் பண்ணுங்கள்... ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...
சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்..✿✿✿....

வெள்ளி, 10 ஏப்ரல், 2020

*சாப்பிட்ட பிறகு செய்யக்கூடாதவைகள்.* *அவசியம் அறிவோம் பல நோய்களை தவிர்ப்போம்.*

*சாப்பிட்ட  பிறகு  செய்யக்கூடாதவைகள்.*

 *அவசியம்  அறிவோம் பல நோய்களை தவிர்ப்போம்.*
=======================
*1. சாப்பிட்டவுடன்  தண்ணிரை  வயிறுமுட்ட  குடிக்க  கூடாது.  இதனால்  ஜிரணநீர்  நீர்ந்து  போய்  அஜிரணமாகும்  பல  நோய்கள்வர  இது  முக்கிய  காரணமாக  அமையும்.*

 *2. சுமார் 40 நிமிடம் கழித்து  தண்ணீர்தாகம்  எடுக்கும்  அப்போது குடிக்கவேண்டும்.*

*3. சாப்பிட்டதும்  படுத்து விடக்கூடாது. காரணம், குடல்  தனது  செயல்பட மிகவும்  சிரமப்படும். ஜீரணம்  முறையாக  நடக்காது.*

*4. குறைந்தது  ஒரு  மணிநேரம்  கழித்தே  உறங்க  வேண்டும்.  இது  மதியம்  ஓய்வு  எடுப்பவர்களுக்கும்  பொருந்தும்.*

*5. சாப்பிட்டதும்  குளிக்க  கூடாது  குறைந்தது 2 மணிநேரம்  கழித்தே  குளிக்க  வேண்டும்.*

*6. சாப்பிட்டு  முடித்ததும்  எந்த  பழங்களையும் சாப்பிடக்கூடாது.  காரணம்,  உணவின் ஜீரண நேரம் குறைந்தது 5 மணிநேரங்களாகும்.*  
*பழங்களின்  நேரம் அதிகபட்சம் 2 மணி நேரம்தான்.*
*இந்த  வித்தியாசத்தால் நாம் சாபிட்ட  பழம்  வாயுவாக  மாற்றம்  பெரும்.  இதில்  ஒரு  பழத்துக்கு  மட்டும்  விதிவிலக்கு  அது  பேரீச்சம்பழம்.*

*7. சாபிட்ட உணவு  ஜீரணமாகாத நிலையில்  வேறு  உணவுகள்  எதையும்  உண்ணக்கூடாது.  காரணம், இவ்வாறு  சாப்பிட்டால்  ஏற்கனவே  சாபிட்ட  உணவு  ஜீரணத்தை கடுமையாக  பாதிக்கும்.  இதனால்  சுகர்  வர  காரணமாக  அமையும்.*

*8. குளிர்பானங்கள், ஐஸ்கீரீம்,  ஐஸ்வாட்டர்  இவைகளையும்  குடிக்க  கூடாது. காரணம், உணவு  ஜீரணமாக  நமது  குடலில்  வெப்பம் இருக்கவேண்டும். அந்த  வெப்பத்தை  இந்த  குளிர்பானங்கள்  இல்லாமல்  செய்துவிடும்.*

*9. சாப்பிட்டதும்  பரபரப்பாக  இயங்குவதோ  நடப்பதோ  பளுவானவற்றை  தூக்துவதோ கூடாது. காரணம், அவ்வாறு செய்தால்  உணவு  கீழ்நோக்கி  செல்லாமல்  மேல்  நோக்கி  வரும்.  இதனால்  நெஞ்சு  எரிச்சல்,  வாயு தொல்லைகள்  ஏற்படும்.*

புதன், 26 பிப்ரவரி, 2020

*கொத்தமல்லி இலைச்சாற்றின் மகத்துவம்*

் இரண்டு நாட்களில் இறந்துவிடுவார் என மருத்துவரால் கைவிடப்பட்டு மரணத்தின் வாசலிலிருந்த தனது சித்தப்பாவை கொத்தமல்லி இலைச்சாறு கொடுத்து காப்பாற்றிய ஒரு அற்புதம்

*கொத்தமல்லி இலைச்சாற்றின் மகத்துவம்*

அரவக்குறிச்சி பெரியாஸ்பத்திரி வார்டில் ஓர் கிழிந்த துணிபோல படுத்திருந்தார்  தாத்தா.

உழைத்து மெலிந்த தேகம். 84 வது வயதில் கல்லீரல் சுத்தமாய் பழுதாகி போய் மரணத்தின் நாட்களை மருத்துவமனையில் எண்ணி கொண்டிருந்தார்...!

ரவுண்ட்ஸ் வந்த சீஃப் டாக்டர் வீரமணி தாத்தாவின் கைநாடியை பிடித்து பார்த்துவிட்டு மேவாயை தடவியபடியே.... இன்னும் இரண்டு நாள்தான் தாங்குவார் சொந்த காரங்களுக்கு எல்லாம் சொல்லி அனுப்பிடுங்க.

. வீட்டுக்கு எடுத்துட்டு போய்டுங்க என்று கூறியபடியே அவர் பிள்ளைகளின் பெருங்குரலெடுத்த அழுகையை காதில் வாங்கிக்கொள்ளாமல் அடுத்த நோயாளியை பார்க்க நகர்ந்தார்...!

ஆம்புலன்ஸில் வீட்டுக்கு கொண்டுவரப்பட்டார் வீரமணி தாத்தா. அவர் மூச்சு எப்போது வேண்டுமானாலும் நின்று விடுவேன் என்று போக்கு காட்டியது

கட்டிலில் மூச்சுவிட சிரமப்பட்டபடி கண்மூடி படுத்திருந்தார் தாத்தா. தம் தங்கை முறையான தாத்தாவின் மகளிடம் விசாரித்தார் அக்கா...

" சாப்பாடு இறங்குதா..?"

"அப்பப்போ கூழாக ஏதாவது கொடுக்கிறோம். கொஞ்சமா உள்ளே போகுது"

"நான் ஒன்னு சொன்னா கேட்பியா தங்கச்சி"

"சொல்லுக்கா... நான் என்ன செய்யனும்...?"

"எப்படியும் இரண்டு நாளில் இறந்திடுவார்னு டாக்கடர் சொல்லிட்டாரு இல்ல. கடைசியா ஒரு முயற்சி செய்து பார்ப்போம்...

 இன்னில இருந்து இந்த இரண்டு நாளும் வெறும் மல்லிச்சாறு மட்டுமே கொடுப்போம். அது கழிவுகளை வெளியேத்தி புது ரத்தத்தை ஊற வைக்கும். சித்தப்பா எழுந்து உட்காருவார்னு எனக்கு நம்பிக்கை இருக்கு..!" சரோஜா அக்காவின் கண்களில் அத்தனை உறுதி.

அவர்கள் குடும்பத்தில் சரோஜா அக்கா மீது மிகுந்த மரியாதை உண்டு. குடும்ப உறுப்பினர்கள் ஒன்றுகூடி ஆலோசித்தனர். அந்த குடும்பத்தின் ஆணிவேர் வீரமணி தாத்தா. அவர் இன்னும் சிலகாலம் உயிரோடு இருந்தால் அதுபோல வேறு சந்தோசம் உண்டா..?

அக்காவின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டனர். வீட்டில் மல்லிச்சாறு தயாரானது. ஓர் எதிர்பார்ப்போடும், பரபரப்போடும் அங்கும் இங்கும் ஓடினர். தாத்தாவை மடியில் கிடத்தி மால்லிச்சாறை அவர் வாயில் சிறிது சிறிதாக புகட்டினர்.

இரண்டுநாள் முழுக்க மல்லிச்சாறு மட்டுமே..! இடையிடையே கொஞ்சமாய் பழச்சாறும். 

டாக்டர் விதித்த கெடு இன்றோடு முடிகிறது. நாளை விடியலில் தாத்தா உயிரோடு இருப்பாரா என்கிற பதைபதைப்பில் உறவினர்கள் எல்லாம் தாத்தாவையே சுற்றி வந்தனர். 

இரவு உறங்கி போனது...!

மூன்றாம் நாள் விடியலில் நெஞ்சு திக்... திக்.. என அடித்து கொள்ள சொந்தங்கள் தாத்தாவை நெருங்கி சென்றனர். 

கண்மூடி படுத்திருந்தவர்..... ஓர் இருமலோடு விழித்து கொண்டார்

ஓடு... மல்லிஜுஸ் எடுத்துட்டு வாங்க.. ஐயாவுக்கு கொடுப்போம். எங்கிருந்தோ குரல் ஒலித்தது....,

மீண்டும் ஓர் இருமல் இருமியபடி தாத்தா எழுந்து உட்கார்ந்தார். 

"ஏன் புள்ள என்ன பார்த்து அழுதுகிட்டு நிக்கித. எதுக்கு இம்புட்டுபேரு வந்திருக்காங்க" தன் மனைவியை கேள்வியோடு பார்த்தார் வீரமணி  தாத்தா.

இந்த எண்பத்தாறு வயதிலும் ஆரோக்கியமாய் இருக்கிறார். நாம் பார்க்கசென்ற நேரம் மனிதர் கட்டிலில் ஒய்யாரமாய் படுத்திருந்தார். எவர் துணையுமின்றி எழுந்து நடமாடுகிறார்.

தொடர்ந்து..." இந்த மல்லிசாறை எல்லா ஏழை,பாளைகளும் குடிக்கோணும். டாக்டர் கிட்டபோயி ஆயிரகணக்குல செலவு பண்ணியும் குணமாகத என் நோய் இந்தமல்லிசாறால குணமாயிட்டுதே. எனக்கு இருந்த சுகர்நோயும் இப்ப இல்ல. மல்லிச்சாறு பத்தி எல்லா மக்களுக்கும் எடுத்து சொல்லுங்கள்

அமிர்த பானம் கொத்தமல்லி இலைச்சாறு தயாரிப்பது எப்படி?:

நாட்டு கொத்துமல்லி இலை - கால் கட்டு,

தேங்காய் - 1 ,

நாட்டு சர்க்கரை - தேவையான அளவு 

சுத்தம் செய்த கொத்துமல்லி இலையுடன் தேங்காய் சேர்த்து அரைத்து வடிகட்டவும்.

இதன் கூட தேவையான அளவு தண்ணீர்,நாட்டு சர்க்கரை கலந்து பருகலாம். 

இந்த சாற்றினை கண்டிப்பாக அடுப்பில் வைக்க கூடாது. 

(1)வெறும் கொத்துமல்லி இலைச்சாறுடன் எலுமிச்சை சாறு,உப்பும்,மிளகு தூளும் சேர்த்து அருந்தலாம்.

(2)கொத்துமல்லி இலைச்சாறுடன்,பசும்மோர், உப்பும் கலந்தும் அருந்தலாம்.

(3)கொத்துமல்லி இலைச்சாறு அருந்தும் நாள் அன்று பசிக்கும் போது மட்டுமே சாப்பிட வேண்டும்.

 இதை தொடர்ந்து பருகுவதால் காமாலை, கேன்சர் போன்ற மிகக் கொடிய நோய்கள் அனைத்தும் குணமாகும்.

உடலில் உள்ள கழிவுகள் அனைத்தையும் வெளியேற்றும்.

வயிறு சம்பந்தபட்ட அனைத்து பிரச்சினைகளையும் குணமாக்கும்.

கல்லீரலை பலப்படுத்தும்.
பித்தம் கட்டுக்குள் இருக்கும்.

இதை தயார் செய்வது மிகவும் எளிதானது.

இதை அனைவரும் பருகலாம்,

தினமும் தண்ணீர்க்கு, டீ, காபிக்கு பதில் இதை அருந்தலாம்.

கொத்துமல்லிக்கு பதில் கருவேப்பிலையும் , புதினாவையும் இதே போன்று சாறு தயார் செய்து  உபயோகிக்கலாம். 

ஆனாலும் கொத்துமல்லி இலைச்சாறுதான் சிறந்தது.

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2020

கணுக்கால் உள்வளைவு ஊனத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் குணம் ஆக

இன்று காலை கோவை அரசு மருத்துவமனைக்கு நானும் என் மனைவி மற்றும் இளைய மகன் மூன்று பேரும் இரண்டு சக்கர வாகனத்தில் சென்று இருந்தோம்.
மருத்துவமனைக்கு செல்லும் முன்பு சிங்காநல்லூரில் உள்ள பிரபல சாந்தி சோஷியல் சர்விஸ் கேண்டினில் காலை உணவு சாப்பிட்டு விட்டு ஒரு சிக்னலில் நின்று கொண்டு இருந்தோம்,
அப்பொழுது என் வாகனத்திற்கு முன்பு ஒரு பெண் 3 வயதுள்ள தன் குழந்தையை மடியில் வைத்து கொண்டு தன் கணவருடன் சிக்னலில் இரு சக்கர வாகனத்தில் உக்காந்து கொண்டு இருந்தனர்,
அக்குழந்தை வேடிக்கை பார்த்துக்கொண்டு சிரித்து கொண்டு இருந்ததை ரசித்து கொண்டு இருந்த வேளையில் அந்த குழந்தையின் இரண்டு கால்களில் ஒரு கால்கள் மட்டும் சற்று வித்தியாசமாக இருப்பதை கண்டேன்,,
நான் சற்று முன்னோக்கி சென்று அக்குழந்தையின் கால்களை சற்று உற்று பார்த்த பின் தான் தெரிந்தது அந்த குழந்தைக்கு ஒரு கால் ஊனம் என்று...
உடனே அந்த குழந்தையின் தந்தையிடம் சிக்னல் முடிந்தவுடன் வண்டியை சற்று ஓரமாக நிறுத்துங்கள் உங்கள் குழந்தையை பற்றி சிறிது பேசவேண்டும் என்று கூறியதும் அவரும் வண்டியை சற்று ஓரமாக நிறுத்தினார்..
முதலில் எங்களை அவரிடம் அறிமுகம் செய்து கொண்டு, பிறகு அவருடைய குழந்தையின் கால்களை பற்றி விசாரிக்க ஆரம்பித்தேன்,,
அந்த பெண் குழந்தை பிறக்கும் போதே ஒரு கால் ஊனமாக தான் பிறந்தது என்றும் கால்களை சரி செய்ய தனியார் மருத்துவமனையில் லட்ச ரூபாய் செலவாகும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர் எங்களால் அவ்வளவு பணம் செலவு செய்யும் அளவுக்கு எங்களுக்கு வசதி இல்லை என்று வேதனையுடன் தெரிவித்தார்,, சரி இதெல்லாம் ஏன் கேக்கறீங்க என்று என்னிடம் கேட்க ஆரம்பித்தார்...
நான் என் மகனை அவரிடம் காண்பித்து என் மகனின் கால்கள் எப்படி உள்ளது என கேட்க, அவரும் நன்றாக தான் உள்ளது என்று கூறினார்..
பிறகு நான் என் மகனை பற்றிய விவரங்களை அவரிடம் கூற ஆரம்பித்தேன்,,
என் மகனின் பெயர் அர்சத்,, பவானி அரசு மருத்துவமனையில் பிறக்கும் போதே இவனுக்கு இரண்டு கால்களும் ஊனம் உங்கள் மகள் போலவே தான் என் மகனுக்கும் கால்கள் ஊனமாக பிறந்தான்,,
இதுக்கு கணுக்கால் உள்வளைவு ஊனம்னு (clubfoot) சொல்லுவாங்க,, அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து குணமாக்கிவிட்டோம் என்று கூறியதும் அவர் சற்று அதிர்ச்சி அடைந்து இதை எப்படி சரி பண்ணிங்க தெளிவா சொல்லுங்க நானும் என் மகளுக்கு சரி பண்ணனும்னு கேட்க ஆரம்பித்தார்..
மகன் ஊனமாக பிறந்து விட்டானே என்று நானும் உங்களை போல தான் மனவேதனையில் திகைத்து போய் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த வேளையில், என் மகன் பிறப்பதற்கு முன்பு ஒரு பதிவை வாட்ஸப் குழுவில் சேர் செய்தது நினைவுக்கு வந்தது,
அந்த பதிவை மீண்டும் தேடி பார்த்த பொழுது அது கணுக்கால் உள்வளைவு ஊனத்திற்கு அரசு மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என்ற பதிவு,,
நான் பகிர்ந்த பதிவு கடைசியில் எனக்கே தேவைப்பட்டது..
அந்த பதிவில் இருந்த அலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசினேன்,, மறுமுனையில் பேசியவர்கள் குழந்தையை தூக்கி கொண்டு கோவை அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும் என்று கூற, நானும் என் மனைவியும், பிறந்து 7 நாள் மட்டுமே ஆன இவனை தூக்கி கொண்டு கோவை அரசு மருத்துவமனைக்கு வந்தோம்,,
என் மகனை மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு கால் பாதங்களை வளைத்து மாவுகட்டு போட ஆரம்பித்தார்கள்,,
போடப்பட்ட மாவுகட்டுகளை அடுத்த வாரம் வரைக்கும் வைத்து இருக்கவேண்டும்,, பிறகு ஒரு வாரம் கழித்து மீண்டும் மாவுகட்டுகளை அவிழ்த்து புதிய மாவுகட்டுகளை கட்டுவார்கள்,, இப்படி ஒவ்வொரு மாவுகட்டுகளை கட்டும் பொழுதும் கால் பாதத்தின் மேல் பகுதி எலும்புகளை நேராக வளைத்து கட்டு கட்டுவார்கள்,,
வாரத்திற்கு ஒரு மாவுகட்டு,,
இப்படி 15 வாரம் பவானில இருந்து வந்து கட்டு போட்டு போவோம்,,
அப்புறம் 15 மாவுகட்டு முடிஞ்சதும் குழந்தையோட இரண்டு குதிங்கால் மேல் பகுதியிலும் அறுவைசிகிச்சை செய்து ஒரு வாரம் மருத்துவமனைல தங்கினோம்,,
அதுக்கு அப்புறம் ஒரு ஷூ கொடுப்பாங்க அதை தினமும் போடுகிட்டே வந்தோம்,, குழந்தைகள் வளர வளர ஷூ வும் இலவசமாவே மாத்தி கொடுதாங்க,, இப்படி 5 வயசு வரைக்கும் ஷூ போட்டு வந்த கண்டிப்பா குணம் ஆகிடும்,,
நாங்கள் இப்பொழுது 3 வருடங்





களாக சிகிச்சைக்கு வந்து கொண்டு இருக்கிறோம் இப்ப கூட நாங்க மருத்துவமனைக்கு செல்ல தான் வந்து இருக்கின்றோம் என்று சொல்லி முடிச்சதும் அவர் முகத்துல கொஞ்சம் சந்தோசத்துடன் இருந்தார்.. அவர் என் மகளின் கால்களை சரி செய்ய எனக்கு உதவுங்கள் என்று கேட்க நானும் அவரை அழைத்து கொண்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சென்றேன்,, அவர் மருத்துவரிடம் சிகிச்சைக்கான விளக்கங்களை அறிந்து கொண்டு தன் மகளுக்கு சிகிச்சை அளிக்க முடிவுசெய்து உள்ளார்..
இவரை போன்று சில பேர் இந்த கணுக்கால் ஊனத்திற்கு அரசு மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது என்ற விவரம் தெரியாமல் உள்ளனர்,,
அவர்களுக்கான பதிவு தான் இது..
தற்பொழுது என் மகன் குணமடைந்து மற்ற குழந்தைகளை போலவே ஓடியாடி விளையாடுகிறான்..
இது போன்று கணுக்கால் உள்வளைவு ஊனத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை நீங்கள் காண நேர்ந்தால் எனக்கு தெரிவிக்கவும்..
சுபான் எஸ்.எம்.

புதன், 1 ஜனவரி, 2020

மாடுகளுக்கு குடற்புழு நீக்கம்...!



மாடுகளுக்கு குடற்புழு நீக்கம்...! 

மாடுகளுக்கு குடற்புழு இருந்தால் பலவித நோய்களுக்கு ஆளாகும். அந்த குடற்புழுக்களை நீக்க இயற்கை முறையில் உள்ள தீர்வு குறித்து இங்கு காண்போம். தேவையானவை : வெங்காயம் - 1, பு+ண்டு - 5 பல், கடுகு 10 கிராம், வேப்ப இலை 1 கையளவு, சீரகம் 10 கிராம், பாகற்காய் 50 கிராம், மஞ்சள் 5 கிராம், மிளகு 5 கிராம், வாழைத்தண்டு 100 கிராம், தும்பை இலை ஒரு கையளவு மற்றும் வெல்லம் 100 கிராம் ஆகியவற்றை எடுத்து கொள்ள வேண்டும். 

தயாரிக்கும் முறை : 

மிளகு, சீரகம் மற்றும் கடுகை தண்ணீரில் 30 நிமிடம் ஊறவைத்து, அதை மற்ற பொருட்களுடன் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். தயார் செய்த கலவையை சிறிய உருண்டைகளாக பிரித்து உப்புடன் சேர்த்து, ஒரு நாளைக்கு ஒரு முறை என மூன்று நாட்களுக்கு கொடுக்க வேண்டும்.

சர்க்கரை வியாதியிருப்பதால் காலில் ஏற்பட்ட சிராய்ப்பு காயம் செப்டிக்காக புரையோடிய புண் சாரியாக

சுமார் 20 வருடங்களுக்கு முன் எனது நெருங்கிய நண்பன் கொடுமுடி தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருப்பதை கேள்விப் பட்டு அவரைப் பார்க்கச் சென்றோம்.

என்னை கண்டதும் என் நண்பனும் அவன் மனைவியும் கதறி அழுதனர் .உடன் டாக்டரிடம் சென்று நண்பனின் வியாதியைப் பற்றி விசாரித்தேன். என் நண்பனுக்கு சர்க்கரை வியாதியிருப்பதால் காலில் ஏற்பட்ட சிராய்ப்பு காயம் செப்டிக்காக புரையோடிவிட்டதாகவும்   

எங்கு சென்றாலும் குணமாகாது என்றும், உடனடியாக முழங்கால் வரை அந்த காலை அறுத்து அகற்றி விட்டால் உயிர் பிழைக்கலாம் என்றார்.
நான் நண்பன் மற்றும் அவன் மனைவியிடம் எந்த உதவி வேண்டுமானாலும் தகவல் கொடுங்கள் என்றும் கூறிவிட்டு கண்ணீரோடு திரும்பினேன்.
     
 20 நாட்கள் கடந்து விட்டது என் நண்பனிடம் இருந்து ஒரு தகவலுமில்லை.நானாக அந்த கிராமத்துக்காரர் ஒருவரிடம் என் நண்பனின் நிலை என்ன இருக்கிறதா என்று கேட்டேன், அடுத்து அவன் சிரித்துக் கொண்டே உங்கள் நண்பன் தற்போது நன்கு நடக்கிறார் காலில் கட்டு எதுவுமில்லை சிறு வடு தான் இருக்கிறது. டாக்டர் அப்படி சொன்னாரே இது எப்படி நடந்தது என்றேன். 

முத்தூர் வெள்ளகோவிலிருந்து தாராபுரம் ரோட்டில் 8 - வது கிலோ மீட்டரில் உள்ள  தாசவ நாயக்கன்ப்பட்டி என்று ஒரு கிராமம் இருக்கிறது அங்கே சில குடும்பங்கள் மட்டும் ஒரு முலிகை எண்ணெய் கட்டுப் போடுகிறார்கள்(மணீயன் -  9443357325/ 150 வருட பாரம்பரீயமிக்க சித்த வைத்தியர்)ஒரு வாரத்தில் பலன் கிட்டி விடுகிறது இது ஒரு குடும்ப. வைத்தியம் என்றார். உடனடியாக நண்பனின் கிராமத்திற்கு சென்று அந்த நாளையே அவரோடு கழித்தோம்.40 நாட்களில் பைக்கில் வர ஆரம்பித்து விட்டார் .

இவ்வளவு ஆண்டுகளுக்கு ப் பின் நான் கொடுமுடி வடக்கு வீதியில் எல்லை பகவதியம்மன் கட்டுமான பணிக்காக அங்கு சென்று கவனிப்பேன் .அப்போது   அந்த பகுதியை சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவர் பாத்திலேயே பெரிய பேண்டேஜோடு நொண்டி நொண்டி வருவார். டாக்ஸி வந்து நிற்க்கும் அதில் தடுமாறி ஏறுவார் . மாலை 3 மணிக்கு மேல் புது துணிக்கட்டோடு வந்து இறங்குவார் .சுமார் 10 நாட்களுக்கு இது தெடர்ந்தது.

ஒரு நாள் டாக்ஸியில் ஏறப்போன அவரைக் கூப்பிட்டேன் என்ன விபரம் என்ன என்றுக்கேட்டேன்,சர்க்கரை இருப்பதால் காலில் இருக்கும் புண் ஆறவில்லை என்றும் உள்ளுர் வைத்தியம் முடிந்து ஈரோடு வைத்தியம் தொடர்வதாக கூறினார்.

    எனக்கு உடனடியாக தாச வநாயக்கன்ப்பட்டி ஞாபகம் வந்தது. ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு என்றேன் 1500ரூபாய் என்றார்.

    சரி நான் சொல்வதற்காக தாசவநாயக்கன்ப்பட்டி செல்லுங்கள் என்று சொல்லி தாச வவநாயக்கன்ப்பட்டி அனுப்பினேன்.இரண்டு நாள் கழித்து அவரை பார்த்தேன்.காலில் கட்டிலில்லை எண்ணெய்ப் பூச்சு மட்டும் இருந்தது.ஒரே ஒரு முறை சென்று 1 பாட்டில் முலிகை எண்ணெயோடு வந்தவர் புண் தழும்புக்கூட இல்லாமல் காலை குதித்துக் காட்டி சிரிக்கிறார்....

    எல்லோரும் ஷேர் செய்யுங்கள்.....
   நம்புங்கள் சென்று பலனடையுங்கள்...
V.Navaneethan
Health Inspector
Chithode - 8248636098

வள்ளியம்மாள் குருகுலம்.

நேற்று நண்பர் ஒருவரின் உறவினருக்கு புற்றுநோய் உள்ளது மருந்து வாங்க போக வேண்டும் என்றார். சரி என்று இருவரும் கேரளாவுக்கு கிளம்பினோம். கோவையில் இருந்து தடாகம் வழியில் சென்று ஆனைக்கட்டி சென்று அங்கிருந்து முக்காலி செல்ல வேண்டும்.. முக்காலியில் இருந்து நம் சிறியரக சடான் கார்கள் செல்ல முடியாது. ஜீப் வகைகள் வண்டியில் செல்வதே உத்தமம். மிக மோசமான வனதுறை சாலையில் போனால் இருக்கின்றது வள்ளியம்மாள் குருகுலம்.

பாதுகாக்கப்பட்ட வனபகுதியில் பிரம்மாண்ட கட்டிடங்களுடன் உள்ளது இந்த ஒற்றை மூலிகை வைத்தியசாலை. இது எப்படி சாத்தியம் அதுவும் கேரளத்தில் என்று சேட்டன்மார்களிடம் சம்சாரித்தால்.

பிரிட்டிஸ் அரசு வள்ளியம்மாள் என்கின்ற ஆதிகுடி இருளர் பெண்ணுக்கு  112ஏக்கரை பட்டயம் போட்டு தந்துள்ளார்கள். அரிய வகை மூலிகை வளர்க்க அன்று வந்த பிரிட்டிஸ் கவர்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சாகும் நிலையில் இருந்தவரை இருளர் பெண் வைத்திச்சிகள் சில கிழங்கு, மரபட்டை, வேர்களை பொடி செய்து கொடுக்க அவர் மீண்டு நீண்ட காலம் உயிர் வாழ்ந்திருக்கின்றார். அவர் பட்டயம்  செய்து கொடுத்த உரிமையில் இவர்கள் வாழ்ந்து பயன்படுத்தி வருகின்றனர். மூன்று பரம்பரை ஆட்கள் இடங்கள் இங்கு உள்ளது. அவ்வகையில் வள்ளியம்மாள், பொன்னியம்மாள், லட்சுமியம்மாள் என மூவர் உள்ளனர். முக்கியமானவர் வள்ளியம்மாள் ரவீந்திரன் வைத்தியர்.

பெயரை கொடுத்து விட்டு வைத்தியரை பார்க்க காத்திருந்தால் நிறைய பேர் அமர்ந்திருந்தார்கள். அவர்களிடம் விசாரித்தால் மிகப்பெரிய ஆச்சர்யம்.
கும்பகோணத்தை சேர்ந்த ஒருவர் தஞ்சை மீனாட்சியில் கைவிடப்பட்டவர் மூன்று மாதம்தான் உங்கள் ஆயுள் என்று சொல்லப்பட்டவராம் எட்டு லட்சம் வரை செலவு செய்தவராம். சாகத்தானே போறோம் கடைசி முயற்சியாக இதை பார்ப்போம் என்று வந்தவர் பதினாறு மாதங்களாக வருகின்றேன் என்றார்.

இங்கு பெரும்பாலும் அலோபதி கைவிடப்பட்ட நிலையில் வருகின்றார்கள். பொள்ளாச்சியை சேர்ந்த முரளி என்பவர் சொல்கின்றார். ராமகிருஸ்ணாவுல பதினைந்து லட்சம் செலவு செஞ்சேனுங்க வீட்டை காட்டை வித்து பாத்தணுங்க கடைசில சாவு உனக்கு கன்பார்முடான்டானுக.. தென்னை மரத்து மாத்திரைய வாங்கி வச்சுட்டுத்தானுங்க இங்க வந்தேன்... இதை ஒரு மாசம் பாப்போம். சரியாகுலையா இருக்கற சொத்தை பொண்டாட்டி பேர்ல எழுதி வச்சுட்டு நாம செத்தரலாம்முன்னுதான் வந்தேன். இன்னிக்கு மூணு வருசம் ஆச்சுங்க..என்னோட நோய் குணமாயிருச்சு ஆனாலும் மருந்தை நிறுத்தலை   இன்னும் பத்து வருசம் வாழ்ந்தா போதுங்க எம் பையனை கரையேத்திருவேன் என்று தன் மகனை கட்டியணைத்து கண்ணீர் விடுகின்றார்.

இப்படி பல பேரின் கதை சொல்ல...ஆச்சரியமாக உள்ளது. வைத்தியரிடம் கேட்ட போது இந்த வைத்தியம் முதல் ஸ்டேஜ்ல இருந்தால் 100%குணப் படுத்தி விடலாம். ஆனால் நம்பிக்கையிருப்பதில்லை... சுற்றிவிட்டுதான் இங்கு வருகின்றார்கள். நான்காவது ஸ்டேஜ்ஜில் 80%பேரை பிழைக்க வைத்திருக்கின்றேன்... அதற்கு மேல் இறைவன் கருணை என்றார்.

இது சாத்தியமா? உண்மையா? என்று அவநம்பிக்கையோடுதான் சென்றேன். அங்கு இருந்த மருந்து வாங்க வந்த 100பேர்களின் கதைகளை கேட்ட போது நம்பிக்கையுள்ளது.

யாராவது உங்களுக்கு தெரிந்தவர்கள் கை விடப்பட்ட நிலையில் இருந்தால் இங்கு அனுப்புங்கள் இன்னும் கொஞ்சம் காலம் வாழட்டும்.
83448 88786‬: 

Address
டாக்டர் பட்டர் கட்டர்  VALLIYAMMAL GURUKULAM, Tribal Traditional Ottamooli Cancer Treatment Center,Ph: 09946097562, address: CHINDAKKI,MUKKALI,ATTAPADY,PALAKKAD-678581

எலுமிச்சை துண்டுகளை தூங்கும் போது வைத்திருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

தூங்கும் போது பக்கத்தில் #எலுமிச்சை துண்டுகளை வையுங்கள்! நடக்கும் அதிசயம் இதோ!

எலுமிச்சையில் ஏராளமான மருத்துவ நன்மைகள் உள்ளது என்பது நாம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அல்லவா?
அந்த வகையில் அதிக மருத்துவ சக்தி கொண்ட எலுமிச்சையின் ஒரு துண்டை இரவில் படுக்கும் போது அருகில் வைத்துக் கொண்டு தூங்கினால் நடக்கும் அதிசயங்கள் இதோ!

எலுமிச்சை துண்டுகளை தூங்கும் போது வைத்திருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

► சிலருக்கு இரவில் தூங்கும் போது மூக்கடைப்பு பிரச்சனைகள் ஏற்படும். அதனால் ஏற்படும் தூக்கமின்மை பிரச்சனையை தடுக்க, இரவில் படுக்கும் போது, ஒரு துண்டு எலுமிச்சையை அருகில் வைத்து தூங்கினால், மூக்கடைப்பு நீங்கி, சுவாசிக்கும் திறன் மேம்படும்.
► எலுமிச்சை காற்றில் உள்ள அசுத்தத்தை உறிஞ்சி, சுத்தமான காற்றை வழங்குவதுடன், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை உறிஞ்சி, சுத்தமான காற்றினை சுவாசிக்க உதவுகிறது.
► இரவில் படுக்கும் போது அருகில் ஒரு துண்டு எலுமிச்சையை வைத்துக் கொண்டு தூங்கினால், அதிலிருந்து வெளிவரும் நறுமணத்தால் உடல் மற்றும் மனம் அமைதியாகி, மன அழுத்தம் ஏற்படுவது தடுக்கப்படும்.
► எலுமிச்சையில் இருந்து வெளிவரும் நறுமணம் நமது உடம்பில் ரத்த அழுத்தத்தைக் குறைத்து, சீராக்குகிறது. எனவே படுக்கும் போது எலுமிச்சை துண்டுகளை வைத்திருப்பது மிகவும் நல்லது.
► எலுமிச்சை ஒரு நல்ல இயற்கை பூச்சிக்கொல்லியாக பயன்படுகிறது. ஏனெனில் இந்த எலுமிச்சை துண்டை அருகில் வைத்துக் கொண்டு தூங்குவதால், அதிலிருந்து வரும் நறுமணம், பூச்சிகள் நம்மை அண்டாமல் தடுக்கிறது.
► இரவில் படுக்கும் போது ஒரு துண்டு எலுமிச்சையை அருகில் வைத்துக் கொண்டு தூங்கினால், இரவு முழுவதும் அதன் காற்றினை சுவாசித்து, மறுநாள் காலையில் உடல் புத்துணர்ச்சியுடனும், ஆற்றலுடனும் இருப்பதை உணரக்கூடும்.
► எலுமிச்சை பழத்தில் இருந்த வெளிவரும் நறுமணம், மூளையில் செரடோனின் என்னும் ஹார்மோனின் உற்பத்தியை அதிகரித்து, மனநிலையை சந்தோஷமாகவும், நேர்மறையான எண்ணங்களுடனும் இருக்க உதவுகிறது.
(

முழங்கால் வலிக்கு இத பண்ணுங்க - நல்ல பதிவுகளை பகிர்வோம்

வைரம் #பிரண்டை சாற்றில் பொடியாகும் என்று #போகர் கூறினார்.
உலகிலேயே கடினமான பொருள் வைரம், அதில் உள்ள கார்பன் பிணைப்பை உடைக்கும் தன்மை இதன் சாற்றுக்கு உண்டு!

#முழங்கால் வலிக்கு ஏதாவது பண்ணுங்க என்றார்கள்......

கடந்த இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட பின்பு கடந்த ஒருவாரமாக வலி சுத்தமாக இல்லை என்பது மட்டுமின்றி உடல் சோர்வு அறவே இல்லாமல் இருக்கிறது என்றார்கள்....
எங்கம்மா ஏர் உழுவும் காலங்களில் கால் வலியை போக்க பிரண்டை, மல்லிதலை, தூதுவளை, கறிவேப்பிலை சேர்த்து துவையல் செய்து தந்த ஞாபகம் அதையே இங்கு செய்தோம் ......
பிரண்டையில் உள்ள மிகையான #சுண்ணாம்பு சத்து(#கால்சியம்) தான் எலும்பு மச்சையில் திரவம் அதிகமாக சுரக்க கால்சியம் தேவை அதுமட்டுமின்றி வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து பிரண்டை என போகர் நிகண்டுவில் குறிப்பிடபட்டுள்ளது குறிப்பாக சிறுகுடலில் ஏற்படும் குறைபாடுகள் பிரண்டையால் உடனடியாக நிவர்த்தியாகும் இதை எனது அனுபவத்தில் உணர்ந்தேன் ......

பிரண்டை உப்பை சுமார் 300mg தேனில் அல்லது நெய்யில் தினமும் சாப்பிட்டு வர உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றபட்டு உடல் குறைப்பு ஏற்படுகிறது சிறுகுடல் மற்றும் வயிற்றில் உள்ள வாயு முழுவதும் வெளியேறுவதை உடனடியாக உணரலாம்......

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்புவலி மற்றும் வயிற்று வலிக்கு பிரண்டை துவையல்(அ)உப்பை பயன்படுத்தினால் வலி இல்லாமல் போகும் பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டிற்கு இது அரு மருந்து.....

நிறைய குறைபாடுகள் பிரண்டையால் குணமாகும்போது எதற்கு கால்சியம் மாத்திரை சாப்பிட்டு சிறுநீரகத்தை பாழ் பண்ணனும் யோசிங்க.....
இதற்கு மற்றொரு பெயர் "வஜ்ஜிரவல்லி" தேகத்தை வஜ்சிரமாக்கும் என்பதனால் தானோ என்னவோ....
நல்ல பதிவுகளை பகிர்வோம்

நாமே நம்முடைய சிறுநீரைப் சோதனை செய்து தெரிந்து கொள்ள முடியும்.

நான்கு சொட்டு நல்லெண்ணெயை எடுத்து, சிறுநீரில் விட்டு பாருங்கள்..!! அடுத்த கணத்தில் தெரியவரும், அதிர்ச்சி..?

பொதுவாக நம்முடைய உடலில் என்ன பிரச்சனையாக இருந்தாலும் ரத்தப் பரிசோதனை அல்லது சிறுநீர் பரிசோதனை செய்து பார்த்து, டாக்டர் கூறுவதை கேட்டு நம்முடைய பிரச்சனையைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
ஆனால் நம்முடைய சித்தர்கள் எந்த ஒரு டாக்டரின் துணை இன்றி அவர்களுடைய சிறுநீரை அவர்களாகவே சோதனை செய்து, என்ன வியாதி இருக்கிறது என்று கண்டுபிடித்துவிடுவார்கள்.
சித்தர்கள் சிறுநீரைப் பரிசோதித்துப் பார்க்கும் முறை அவ்வளவு கஷ்டமானது கிடையாது.

அந்த முறையைப் பயன்படுத்தி நாமே நம்முடைய சிறுநீரைப் சோதனை செய்து தெரிந்து கொள்ள முடியும்.

நம்முடைய உடலில் உண்டாகும் எல்லா வகையான பிரச்சனைகளுக்கும் வாதம், பித்தம், கபம் என்ற மூன்றும் தான் காரணம் என்று ஆரம்பத்திலே நம் முன்னோர்கள் கூறி சென்றுள்ளனர்
அதில் எந்த ஒன்று நம்முடைய உடலில் அதிகமாக இருக்கிறது என்று தெரிந்து கொண்டாலே போதும் அதை நாம் குணப்படுத்த முடியும்.
இதைத்தான் நம்முடைய சித்தர்கள் சிறுநீர் பரிசோதனை மூலம் கண்டுபிடித்தனர். இந்த மூன்றும் சிறுநீரில் எந்த அளவுக்கு உள்ளது என்பதை வைத்து நோயை குணபடுத்தி உள்ளனர்

எவ்வாறு செய்யலாம்..?

காலையில் எழுந்ததும் சிறுநீரை ஒரு தெளிவான கண்ணாடி டம்ளரில் எடுத்து அதில் நான்கு சொட்டு நல்லெண்ணெயை அதில் விட்டு சிறுது நேரம் கழித்து பாருங்கள். அறிவியல் ரீதியாக என்ன நடக்கிறது..?

அந்த எண்ணெய்த்துளி சிறுநீரின் மேல் கயிறு போல நெளிந்து காணப்பட்டால் உடலில் வாதம் அளவுக்கு அதிகமாக இருக்கிறது என்று பொருள்..அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையாக அதை குணபடுத்த பார்க்க வேண்டும்..

அதுவே மோதிரம் போல வட்ட வடிவில் அல்லது கோள வடிவில் இருந்தால் உங்களுக்கு பித்த நோய் இருப்பதாக பொருள்..

சிறுநீரின் மேல் எண்ணெய் முத்துப்போல் அங்கொன்று இங்கொன்றாக நின்றுகொண்டிருந்தால் கபம் அதிகமாக இருக்கிறதென்று பொருள்.

அதேபோல் எண்ணெய்த்துளி மிக வேகமாக சிறுநீருக்குள் பரவினால் நோய் விரைவில் குணமடையும் என்பதாக பொருள்
எண்ணெய்த்துளி அப்படியே இருந்தால் நோய் குணமாத் தாமதமாகும்.

உடனடியாக அதை குறைக்க நடவடிக்கை எடுப்பது நல்லது
அதுவே எண்ணெய்த்துளி சிதறினாலோ சிறுநீருக்குள் அமிழ்ந்துவிட்டாலோ நோயை குணப்படுத்த முடியாது.மிகவும் சிரமமான நிலை என்று அர்த்தம்..
நன்றிகளும்

பிரியங்களும்.

எது சிறந்த ஸ்நாக்ஸ் தெரியுமா?

சாப்பிடும் அரைமணி நேரம் முன்னரும் சாப்பிட்டு அரைமணி நேரம் பிறகும் கடலைமிட்டாய் சாப்பிட்டால் உமிழ்நீர் நன்கு சுரக்கும்

எது சிறந்த ஸ்நாக்ஸ் தெரியுமா?

வணக்கம் இன்று ஸ்னாக்ஸ் என்ற பெயரில் எதை எதையே வாங்கி சாப்பிடுகிறோம். ஆனால் அது உடலுக்கு நல்லதா? கெட்டதா? என்று கூட யோசிப்பதில்லை! அதுமட்டுமல்ல முந்திரி பாதாம் பிஸ்தா இவற்றில்தான் சத்து அதிகம் என்றும் நினைக்கின்றோம். உண்மையில் உடலுக்கு அனைத்து நன்மைகளையும் அள்ளி தரும் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்க கூடிய எளிய விலை குறைவான ஸ்னாக்ஸ் ஒன்று உள்ளது. அது நம்ம கடலைமிட்டாய் தான்.

இதில் கடலையும் வெல்லமும் சேர்ந்து ஒரு அருமையான சுவையான மற்றும் பல மருத்துவ நன்மைகளை நமக்கு அள்ளிக் கொடுக்கிறது. தொடர்ந்து இறுதிவரை பாருங்கள் உங்களுக்கே புரியும்.

பொதுவாக கடலையில் பித்தம் இருந்த போதும் அதனுடன் வெல்லம் சேர்க்கப்படும் பொழுது கடலை கூறிய பித்த சேர்க்கையை சீர் செய்துவிடும். அதுமட்டுமல்ல கடலையும் வெல்லமும் சேர்ந்து புரதம் இரும்பு செலினியம் மற்றும் பல சத்துக்களை கொண்ட ஒரு சிறந்த ஸ்நாக்ஸ் ஆக உருப்பெறுகிறது.

பொதுவாக கடலை மிட்டாயில் சேர்க்கப்படும் நிலக்கடலையில் கார்போஹைட்ரேட் நார்ச் சத்தும் கரையும் நல்ல கொழுப்பு

புரோட்டீன்
வைட்டமின்கள்
இரும்புச்சத்து
கால்சியம்
துத்தநாகம்
மாங்கனீஸ்
பாஸ்பரஸ்
பொட்டாசியம்
மற்றும் நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துகள் அனைத்தும் நிறைந்துள்ளன.

அதேபோன்று வெல்லத்தில் பல்வேறு சத்துக்களும் இரும்பு சத்தும் கால்சியமும் அபரிமிதமாக உள்ளது. மேலும் நிலக்கடலையில் உள்ள விட்டமின் பி உடலுக்குத் தேவையான ஆற்றலை கொடுக்கக்கூடியது தசைகளின் வலிமைக்கும் இது உதவுகிறது. மேலும் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. அதுமட்டுமல்ல இதிலுள்ள விட்டமின் பி 3 மூளையின் செயல்பாட்டை தூண்டுவதோடு நினைவாற்றலை அதிகரிக்க உதவும். எனவே கடலை மிட்டாயை குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸாக கொடுக்க வேண்டியது மிக மிக அவசியம்.

அதேபோன்று நிலக்கடலையை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் இதய நோய் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் குறைகிறது. இதில் உள்ள நல்ல கொழுப்பு சத்தான மோனே அன் சாச்சுரேட் போலிக் அமிலம் போன்றவை இதய வால்வுகளை பாதுகாக்கிறது. அந்தவகையில் கடலை மிட்டாய் சாப்பிடும் பொழுது இந்த நன்மைகளை இயல்பாகவே கிடைத்துவிடும். அதுமட்டுமல்ல நிலக்கடலையில் அதிக அளவு புரோட்டீன் உள்ளது சோயாபீன்ஸிற்கு அடுத்து தரமான உயர்ந்த புரதம் வேர்க்கடலையில் தான் உள்ளது. முட்டையில் உள்ளதைவிட இரண்டரை மடங்கு அதிகமான புரதம் நிலக்கடலையில் உள்ளது.

அதாவது இரைச்சி உணவுகளுக்கு நிகரான சத்துக்கள் இதில் கிடைக்கிறது. மேலும் வெல்லத்துடன் சேர்ந்து இதன் மருத்துவ நன்மைகள் மேலும் அதிகரிக்கிறது. அதேபோன்று நிலக்கடலையில் ட்ரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட்டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும் உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. இந்த செரட்டோன் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மன அழுத்தத்தைப் போக்குகிறது. எனவே இந்த கடலை மிட்டாயை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் அவசியம் சாப்பிட வேண்டும்.

அதேபோன்று நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் உள்ளதால் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் அவசியம். கருப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள் நீர்கட்டிகள் ஏற்படாதது. கருவின் மூளை மற்றும் நரம்பு வளர்ச்சி சிறப்பாக அமையும். அதிலும் இவர்கள் கடலை மிட்டாய் சாப்பிடும் பொழுது அதன் பலன் இரட்டிப்பு அடையும்.

அடுத்து நிலக்கடலையில் உள்ள பாலிபெனால் என்ற ஆன்டிஆக்சிடன்ட் நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் உதவுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் காத்துக்கொள்ளலாம். முக்கியமாக நிலக்கடலையில் உள்ள சக்திகள் ஆண்கள் பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் வாய்ப்புகளை குறைகிறது. அந்த வகையில் இந்த கடலை மிட்டாய் அனைவருக்குமே மிகவும் சிறந்தது.

அதேபோல் நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. மேலும் இரத்த ஓட்டம் சீராகிறது. மேலும் இது மிகுந்த நார்சத்து உள்ளது என்பதால் மலச்சிக்கல் ஏற்படாது. பொதுவாக பாதாம் பிஸ்தா முந்திரிப்பருப்புகளில்
தான் சத்துக்களை விட நிலக்கடலையில் சத்துக்கள் மிக அதிகம். நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு.

அதனால்தான் இது ஏழைகளின் முந்திரி என்று அழைக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல இதனுடன் வெல்லம் சேருவதால் நன்மைகள் நமக்குக் இரட்டிப்பாக கிடைக்கிறது. எனவே கெட்ட கொழுப்பில்லாத கடலை மிட்டாயை குழந்தைகளுக்கு மட்டும் இல்லாமல் அனைவருமே தினமும் சாப்பிட்டு வந்தால் பல உடல்நல நன்மைகள் எளிதாகப் பெற்றுவிட முடியும். எனவே நமது பாரம்பரிய உணவான கடலை மிட்டாயை இனி அடிக்கடி சாப்பிடுங்கள் நோய் இல்லாத வாழ்வை பெறுங்கள்.

பிறந்த குழந்தைக்கு பயன்படுத்தும் பொருட்களில் இருந்து #பிளாஸ்டிக் இல்லா உலகம் படைக்க புத்தாண்டில் உறுதியேற்போம்.💪💪

பிறந்த குழந்தைக்கு பயன்படுத்தும் பொருட்களில் இருந்து 
#பிளாஸ்டிக் இல்லா உலகம் படைக்க புத்தாண்டில் உறுதியேற்போம்.💪💪

✅குழந்தைகளுக்கு அரிச்சுவடி சொல்லிக் கொடுக்கும் பொழுதே,  
மண்ணை மலடாக்கும் பிளாஸ்டிக்கை பற்றியும் சொல்லிக் கொடுங்கள்.

✅நாளைய தலைமுறைக்கு 
நெகிழி தாக்கம் இல்லாத உலகை விட்டுச் செல்வோம்.

✅முதல் ஆறு மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானது.

✅ஆறு மாதத்திற்கு பிறகு இதர உணவுகளோடு 2 வயது வரை தாய்ப்பால் கொடுக்கலாம்.

✅மாட்டுப்பால் ஒரு வயது வரை கண்டிப்பாக கொடுக்க கூடாது.

✅மாட்டுப்பால் அல்லது பவுடர் பால் கொடுக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படும்போது பால் டப்பாவில் கொடுக்காமல் பாலாடை சங்கு அல்லது டம்ளரில் (குவளை) கொடுத்துப் பழகுங்கள்.

✅போர்வெல் எனும் பாதாளத்திற்குள் தவறி விழுந்து இறந்த சுஜித்திற்காக நாடே வருத்தப்பட்டது.

ஆனால் பாட்டில் பால் எனும் பாதளத்திற்குள் பெற்றோர்களாலே தள்ளப்பட்டு வாந்திபேதி,நிமோனியா வால் பலியாகும் சுஜித்துகள் ஏராளம்.

விழித்திடுவோம் தமிழா💪💪

#no_plastic #no_bottle_feed #breastfeed
#wbw #newborn_care #தாய்ப்பால் 
#நலவாழ்வு

செவ்வாய், 3 டிசம்பர், 2019

சப்பாத்தி சாப்பிட்டா வெய்ட் குறையுமாமே டாக்டர் ?

~சப்பாத்தி சாப்பிட்டா வெய்ட் குறையுமாமே டாக்டர் ?
நெஜமாவா?

எங்க அப்பாவுக்கு சுகர் இருக்கு. 10 வருஷமா டெய்லி ராத்திரி 4 சப்பாத்தி சாப்புடுறார்... ஆனாலும் சுகர் குறையல.

சரி...சப்பாத்தி பத்தி இன்னைக்கு பாப்போம்.

சப்பாத்தி ல என்ன இருக்கு??

கோதுமை.

இன்னும் தெளிவா சொல்லப்போனா குட்டை கோதுமை (Atta)

சப்பாத்தி சாப்பிட்டா எப்டி சார் எடை குறையும்-ன்னு நெனைக்குறீங்க !!

~அதுல கலோரி கம்மி டாக்டர்.

இல்லைங்க.

~அதுல கார்போஹைட்ரேட் கம்மி டாக்டர்

அதுவும் இல்லைங்க.

சரி...இப்போ நாம எப்பவும் சாப்பிடுற அரிசி சாதத்தையும்,சப்பாத்தியையும் எடுத்துப்போம்.

*ஒரு Bowl அரிசி சாதத்துல இருக்க கலோரி - 281
*4 சப்பாத்தியில் உள்ள கலோரி - 360

*ஒரு Bowl அரிசி சாதத்துல இருக்க
கார்போஹைட்ரேட்-62 கிராம்
*4 சப்பாத்தியில் உள்ள கலோரி - 69 கிராம்.

ஆக மொத்தம் அரிசியை விட சப்பாத்தியில கலோரியும் அதிகம்,கார்போஹைட்ரேட் உம் அதிகம்.

அப்புறம் எப்டி இந்த சப்பாத்தி சாப்பிடுற கலாச்சாரம் உருவாச்சு ??

1980கள் ல உடல் பருமனும்,நீரிழிவு நோயும் தலை தூக்க ஆரம்பிச்சதும்,மக்கள் மேற்கொண்ட உணவு முறை தான் இந்த சப்பாத்தி.

அதாவது நம்ம வீடு இருக்கு...அதுல பாயோ,வெறும்தரையிலோ படுத்து தூங்குறப்ப ஜம்முன்னு தூங்குவோம்..ஏன்னா நமக்கு பழக்கப்பட்ட இடம்.

இதுவே வேற யார் வீட்டுலயோ நமக்கு நம்ம பஞ்சு மெத்தையே குடுத்தாலும் தூக்கம் வராது.

அதே கான்செப்ட் தான் இங்கேயும்.

ரொம்ப நாளா அரிசி சோறே சாப்பிட மக்களுக்கு,சப்பாத்தி ன்னு ஒன்னு குடுத்தா கம்மியா அளவோட சாப்பிடுவாங்க ன்னு அறிமுகம் செய்யப்பட்டது தான் இந்த சப்பாத்தி கலாச்சாரம்...ஆனா நம்ம ஆளுங்க வட இந்தியர்களை காட்டிலும் 10-12 சப்பாத்தி ன்னு வெளுத்து வாங்குராங்க.

சப்பாத்தி ன்னு சொன்னதும் நமக்கு யார் நியாபகம் வர்றது.

அதே தான்.."பஞ்சாபி சிங் ஹே".

பஞ்சாபி ல இருக்க சிங் எல்லாருக்கும் சப்பாத்தி தான் நமக்கு அரிசி மாதிரி.

ஆனா விஷயம் தெரியுமா பாஸ்....இந்தியாவிலேயே அதிக உடல் பருமனால் அவதிப்படும் மாநிலம் நம்ம சிங் சகோஸ் இருக்க பஞ்சாப் தான்.

அப்புறம்,இந்த சப்பாத்தி ல GLUTEN ன்னு ஒரு பொருள் இருக்கு...ரொம்ப கெடுதல் உடலுக்கு...வயிறு சம்மந்தப்பட்ட கெடுதல்கள்,Celiac Disease,Leaky Gut Syndrome,மூட்டு சம்மந்தப்பட்ட Reactive Arthritis ன்னு சகலத்தையும் வர வெச்சிடும் இந்த Gluten.

சொல்லப்போனா இட்லி சாப்பிடுறவன விட 4 சப்பாத்தி சாப்பிடுறவனுக்கு தான் உடல் நிலை பாதிக்கும்...சுகர் ஏறும்.மூட்டு வலி,வயிற்றுப்போக்கு ன்னு எல்லாம் வரும்.

குறைவான மாவுச்சத்து மட்டும் தான் ஆரோக்கியமான வாழ்வியலுக்கு திறவுகோல்.
சப்பாத்தி ல அது இல்லவே இல்லை.

அதனால சப்பாத்தி வெறும் சப்பை தான்.

நன்றி❣️

Dr.Aravindha Raj.

#BETTER_HEALTH_FOR_BETTER_LIFE

வெள்ளி, 29 நவம்பர், 2019

அதிர்ச்சியான_தகவல்-என்ன இது #அஸ்பர்டேம்?என்ன இது #அசேசல்பேம்_பொட்டாசியம்?

என்ன இது #அஸ்பர்டேம்?
என்ன இது #அசேசல்பேம்_பொட்டாசியம்?

#அதிர்ச்சியான_தகவல்...மற்றும் மீள்பதிவு...

ஆங்கில இந்து பேப்பரை படித்தேன் பக்கம் 5ல் கோக்க கோலா முழுப்பக்க விளம்பரம் இருந்தது. ஒரே ஒரு டப்பா (கீழே உள்ளது) படத்துக்கு எதுக்கு ஒரு பக்கத்துக்கு விளம்பரம் என உற்றுநோக்கினால் கீழே நான்கு வரிகளில் சின்னதாய் சில விபரங்கள், அவைகள் கீழ் வருமாறு....

☎ terms and conditions:
contains no fruit added flavours artificial sweeteners.

☎ this carbonated water contains an admixture of #aspartame and #acesulfame_potassium. not recommended for children. 

என்ன இது #அஸ்பர்டேம்?
என்ன இது #அசேசல்பேம்_பொட்டாசியம்?

#குழந்தைக்கு உகந்தது அல்ல என்று வேறு இருந்தது! சரி என இணையத்தில் தேடிப்பார்த்தேன்.

🔇🔇இந்த இரு #இராயணங்களின் பக்கவிளைவுகள் சாதாரண #தலைவலி முதல் மிகக்கொடிய #புற்றுநோய் வரை நம் உடலில் ஏற்படுத்தக்கூடியது என்றும் அதோடு பல்வேறு நோய்கள், உடல் உபாதைகள் ஏற்படுத்தக்கூடியது எனப் பட்டியல் நீண்டது!🔕

பலமுறை நானே எழுதியுள்ளேன் குளிர்பானங்கள் பூச்சிமருந்துகளுக்கு சமம் என நண்பர்களோடு திரையரங்கு சென்றால் கூட அங்கு #குளிர்பானம் வாங்கினால் அதன் தீங்கை எடுத்துச்சொன்னால் நம்மை தான் ஏதோ வேற்றுகிரக வாசிகள் போல பார்க்கின்றனர்....!!!

விவசாயத்துக்கு தண்ணி இல்ல,குடிக்க நிலத்தடி தண்ணி கிடையாது கேன் தண்ணி தான், இவ்வளவு பிரச்சனை நாட்டுக்கு! பல நோய் பிரச்சனை உடலுக்கு!

முடிந்த வரை பகிரவும் பலருக்கு இது புரியட்டும்!!!

திங்கள், 18 நவம்பர், 2019

நீங்கள் 10அடிக்கு 10 அடிஅறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு தூங்குகின்றவரா?

நீங்கள் 10அடிக்கு 10 அடி
அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு தூங்குகின்றவரா?

அப்படியானால் அவசியம் படியுங்கள்....

சிறுநீரக கோளாறு – ஏன் ஏற்படுகிறது ? - எப்படி தடுப்பது ?

நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு தூங்குகின்றவரா, அப்படியானால் உங்களுக்கு சிறுநீரக செயலிழப்பு(KIDNEY FAILURE), மூட்டுக்களில் வலி (RHEUMATOID ARTHRITIS) (கழுத்து, முழங்கை, முன்கை மணிக்கட்டு, கீழ்முதுகு வலி, முதுகுத் தண்டுவட எலும்பில் வலி,முழங்கால் மூட்டு வலி,கணுக்கால் எலும்பில் வலி,குதிங்கால் வலி ), சிறு நீரகக் கல், இவை எல்லாம் உண்டாக வாய்ப்புள்ளது. இதை வாத நோய்கள் என்பார்கள்.

பழந்தமிழர் வாழ்வியலின்படி , ஒரு பெரியவர் சன்னலை மூடித் தூங்கினால் காற்று தீட்டுப்பட்டுவிடும் என்று கூறினார். நான் அப்போது இது என்ன கூத்து காற்றுக்கும் தீட்டா என்று எண்ணினேன்.அதை விளக்கிக் கூறவும் கேட்டேன்.அவரால் விளக்க முடியவில்லை.ஆனால் அக்கு பஞ்சர் விஞ்ஞானம் இதற்கு விளக்கம் அளித்தது.

அக்கு பஞ்சரில் சிறுநீரகத்தை இரண்டாவது நுரையீரல் என்பார்கள்.ஒரு நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு ஒருவர் மட்டுமே தூங்கினாலே 3அல்லது 31/2 மணி நேரத்திற்குள்ளாக அறைக்குள்ளே உள்ள காற்றில் உள்ள பிராண வாயுவின்,(ஆக்ஸிஜன்,OXYGEN,02) அளவு குறைந்துவிடும். இதையே அந்தப் பெரியவர் தீட்டு என்கிறார்.

பொதுவாக காற்றில் பிராண வாயுவின் அளவு 21% இருக்கும்.ஆனால் பூட்டிய அறையில் ஒருவர் தூங்கும்போது மூச்சின் அளவு அதிகரிக்கும் வேகத்தாலும் சாதாரணமாக உட்கார்ந்திருக்கும் போது 15 மூச்சும்,தூங்கும்போது 64 மூச்சும்) அறையில் உள்ள காற்றில் பிராண வாயுவின் அளவு குறைந்து 10% சதவிகிதத்துக்கும் கீழே வந்துவிடும்.

அப்போது நுரையீரலால் இரத்தத்தில் பிராண வாயுவின் அளவை சரியாக வைக்க முடியாத போது,உடலில் உயிர் காப்பாற்றப்பட பிராண வாயுவின் தேவை அதிகரிக்க அதிகரிக்க,சிறுநீரகம் அந்த அத்தியாவசியமான வேலையை செய்ய முற்படுகிறது. அது நம் உடலில் தண்ணீரில் உள்ள ஆக்ஸிஜனை எடுத்து உடலுக்கு கொடுக்கும் வேலையை செய்கிறது.(தண்ணீரில் இரு பங்கு ஆக்ஸிஜனும் ஒரு பங்கு ஹைட்ரஜனும் உள்ளது,இது போக நீரில் ஆக்ஸிஜனும் கரைந்து உள்ளது).எனவேதான் சிறுநீரகம் இரண்டாவது நுரையீரல் என்றழைக்கப்படுகிறது.

சிறுநீரகம் மேற்கண்ட வேலையை செய்ய ஆரம்பித்தவுடன் அதுவரை அது செய்து கொண்டிருக்கும் வேலையான இரத்தத்தை வடிகட்டி சுத்தப்படுத்தும் வேலை நிறுத்தப்படுகிறது.நம் உடலில் உள்ள தண்ணீரில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தவுடன் அந்த கழிவு நீர் வெளியேற நமக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு தூண்டப்படுகிறது.மீண்டும் புதிய ஆக்ஸிஜன் நிறைந்த தண்ணீர் தேவைப்படுவதால் தண்ணீர் தாகமும் தூண்டப்படுகிறது.இதனாலேயே சிறுநீரகம் அதீதமான வேலைப் பழுவுடன் தள்ளாடுகிறது.

இதனால் சிறுநீரகத்தில் அழுக்குகள், தேங்குவதோடு, இரத்தத்தில் யூரிக் அமிலம் முதலான அழுக்குகள் அதிகரிக்கின்றது,மூட்டுகளில் மூட்டுகளில் யூரிக் அமிலம் படிவங்களாக படிகின்றன.

விளைவு யூரிக் அமிலம் படிவுகளாக சிறுநீரகத்தில் படிந்து கற்களாக மாறுகிறது.இரத்தத்தில் யூரிக் அமிலத்தால் இரத்தம் அழுக்கடைந்து இரத்தத்தின் தடிமம் அதிகரித்து இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் இதயம் அதிக வேலைப் பழுவுக்கு ஆளாகிறது.

மூட்டுகள் யூரிக் அமிலப் படிவங்களால் அரிக்கப்படுகின்றன. இதனால் மூட்டுக்களில் வலி உண்டாகின்றது. இதனாலேயே A/C அறையில் தூங்கும் போது அதிக தண்ணீர் தாகம் எடுக்கிறது. மூட்டுக்களில் வலி வருகிறது 

இவ்வளவு பிரச்சினைகளையும் உண்டாக்கும் காற்றோட்டமில்லாத அறையில் தூங்காதீர்கள். ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படையான இது போன்ற விசயங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Popular Posts

Facebook

Blog Archive