பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

செவ்வாய், 22 செப்டம்பர், 2020

மருந்துகடைகளில் விற்கப்படும் எந்த #மூலிகைபொடி எதற்கு பயன்படும்..?

♦மருந்துகடைகளில் விற்கப்படும் எந்த #மூலிகைபொடி எதற்கு பயன்படும்..?♦

பாதுகாக்க பட வேண்டிய பயனுள்ள குறிப்புகள் இதோ...!

*அருகம்புல் பொடி* 
அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

*நெல்லிக்காய் பொடி* 
பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது

*கடுக்காய் பொடி*
குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

*வில்வம் பொடி* 
அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

*அமுக்கலா பொடி*
தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

*சிறுகுறிஞான் பொடி* 
சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

*நவால் பொடி*
சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

*வல்லாரை பொடி* 
நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

*தூதுவளை பொடி* 
நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

*துளசி பொடி* 
மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

*ஆவரம்பூ பொடி*
இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

*கண்டங்கத்திரி பொடி* 
மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

*ரோஜாபூ பொடி*
இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

*ஓரிதழ் தாமரை பொடி* 
ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும். வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா

*ஜாதிக்காய் பொடி*
நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

*திப்பிலி பொடி*
உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

*வெந்தய பொடி*
வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*நிலவாகை பொடி*
 மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

*நாயுருவி பொடி*
உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

*கறிவேப்பிலை பொடி* 
கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.

*வேப்பிலை பொடி* 
குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*திரிபலா பொடி* 
வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

*அதிமதுரம் பொடி* 
தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

*துத்தி இலை பொடி* 
உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

*செம்பருத்திபூ பொடி* 
அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

*கரிசலாங்கண்ணி பொடி*
காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

*சிறியாநங்கை பொடி* 
அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

*கீழாநெல்லி பொடி,* 
மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

*முடக்கத்தான் பொடி* 
மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது

*கோரைகிழங்கு பொடி* 
தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

*குப்பைமேனி பொடி* 
சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

*பொன்னாங்கண்ணி பொடி*
உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

*முருஙகைவிதை பொடி*
ஆண்மை சக்தி கூடும்.

*லவங்கபட்டை பொடி* 
கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

*வாதநாராயணன் பொடி*
 பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

*பாகற்காய் பவுட்ர்* 
குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

*வாழைத்தண்டு பொடி* 
சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

*மணத்தக்காளி பொடி* 
குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

*சித்தரத்தை பொடி*
 சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

*பொடுதலை பொடி* 
பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

*சுக்கு பொடி*
ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

*ஆடாதொடை பொடி* 
சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

*கருஞ்சீரகப்பொடி* 
சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

*வெட்டி வேர் பொடி*
நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

*வெள்ளருக்கு பொடி* 
இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

*நன்னாரி பொடி*
உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

*நெருஞ்சில் பொடி* 
சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

*பிரசவ சாமான் பொடி* 
பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

*கஸ்தூரி மஞ்சள் பொடி*
தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

*பூலாங்கிழங்கு பொடி*
 குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

*வசம்பு பொடி*
பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

*சோற்று கற்றாலை பொடி*
உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

*மருதாணி பொடி*
கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

*கருவேலம்பட்டை பொடி*
பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்!!!

பனங்கற்கண்டில்_உள்ள_மருத்துவ_குணங்களை_பற்றி_அறிவோம் - Palm Crystals - Tamil Health Tips

#பனங்கற்கண்டில்_உள்ள_மருத்துவ_குணங்களை_பற்றி_அறிவோம்...

பனங்கற்கண்டு வாத பித்தம் நீங்கும். பசியை தூண்டும். புஷ்டி தரும். #நுரையீரல் மற்றும் #தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது. தமிழகத்தில் பனை மரத்தின் வெல்லத்தை இரண்டு வகையாக சொல்வார்கள்.

முற்றிலும் சுத்தப்படுத்தாத, கெட்டியான கரு நிற வெல்லத்தை “#கருப்பட்டி” என்பார்கள். இதை சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும் சர்க்கரை ‘#பனங்கற்கண்டு’ எனப்படும் இதற்கு மருத்துவ குணங்கள் உள்ளன. 
 
பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் #மார்புச்சளி இளகும். முக்கியமாக #தொண்டைப்புண், வலி இவை அகலும்.  பனங்கற்கண்டு, உடல் உஷ்ணம், காங்கை, நீர் சுருக்கு, ஜுரத்தினால் ஏற்படும் வெப்பங்கள் இவற்றுக்கு நல்லது. 

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் பலவிதமான நோய்களை தீர்க்கும் மருந்தாக உள்ளது. பனை நீரிலுள்ள சீனி சத்து உடலுக்கு தேவையான வெப்பத்தை தருகிறது. இதிலிருக்கும் குளுக்கோஸ் மெலிந்து தேய்ந்து வாடிய உடலுடைய குழந்தைகளின் உடலை சீராக்கி நல்ல புஷ்டியை தருகிறது.
 
கருவுற்ற பெண்களுக்கும் மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண் முதலியவைகளை  குணப்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. டைபாய்டு, சுரம், நீர்க்கட்டு முதலிய வியாதிகளை போக்குகின்ற நல்ல மருந்தாகவும் இது செயல்படுகிறது. இதை அருந்துவதால் இருதய நோய் குணமாகும். இருதயம் வலுவடையும்.
 
இதிலிருக்கும் கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது. இதிலிருக்கும் இரும்புச்சத்து பித்தத்தை நீக்கி சொறி, சிரங்கு உள்பட சகல தோல் வியாதிகளையும்  நீக்குவதுடன் கண் நோய், ஜலதோசம், காசநோய் இவைகளையும் நீக்குகிறது.#Palm Crystals

#நன்றி 

உடல் சங்கேதமும் அதன் பாதிப்புகளும் :-

உடல் சங்கேதமும் அதன் பாதிப்புகளும் :-
**************************"***********

**உங்கள் முகத்தில் அரிப்போ நமைச்சலோ எடுத்தால் --- உங்கள் கூந்தலில் சுத்தமில்லை என அர்த்தம்.

**உங்களுக்கு வயிற்றுவலியோ வயிற்றாலையோ இருந்தால் --- உங்கள் கைவிரல் நகங்கள் சுத்தமில்லை என அர்த்தம்.

**உங்கள் கண்களோ மூக்கோ தொடர்ந்து அரிக்குமானால் --- உங்களுக்கு ஜலதோசம் பிடிக்கப்போகிறது என அர்த்தம்.

**உங்களது காதில் அதீத குடைச்சலோ வலியோ வந்தால் --- உங்களுக்கு காய்ச்சல் வர நேரம் வந்துவிட்டது என அர்த்தம்.

**உங்கள் கைமடிப்பு,கழுத்து மடிப்பு,கால் இடுக்கில் கருப்பான பட்டை விழுந்தால் --- உங்கள் கணையத்தில் இன்சுலினின் சுரப்பு அதிகமாகிறது என அர்த்தம்.

**உடலில் இன்சுலின் அதிகம் சுரந்து அதிக பசி எடுக்கிறதென்றால் --- அது நீரிழிவின் ஆரம்பம் என அர்த்தம்.

**உங்கள் கால் பாதங்களில் வெடிப்பு உண்டானால்-- - உடலில் அதிக அழுத்தமும் சூடும் இருக்கிறது என அர்த்தம்.

**உங்கள் முழுங்கால் மூட்டு அல்லது கால்களின் மணிக்கட்டு வலியெடுத்தால் --- உடலில் அதிக எடை கூடிவிட்டது அதனை குறைக்கவேண்டும் என அர்த்தம்.

**தொடர்ந்து உங்களது முதுகுத்தண்டு அல்லது இடுப்புப் பகுதி வலிக்குமானால் --- அந்த இரு எலும்புகளும் மிருதுவாகி தேய்மானம் தொடங்குகிறது என அர்த்தம்.

**உங்கள் உதட்டில் அல்லது மேல்தோலில் வெடிப்பு,பிளவு, தோல் உரிதல் உண்டாகுமானால் --- உடலில் நீர்ச்சத்தும் எண்ணெய்பசையும்  குறைந்துவிட்டது என அர்த்தம்.

**உங்கள் தோள்பட்டை, முதுகுத்தாரை,குதிங்கால் இவற்றில் இருக்கமோ வலியோ வந்தால் --- உடலில் காற்றின் அழுத்தம் கூடி வாயு தேங்கியுள்ளது என அர்த்தம்.

**உங்கள் கைவிரல் கண்களுக்கு மேல் மெல்லிய கருப்புக்கோடு விழுமானால் --- இருதயத்தில் பிரச்சினை தொடங்குகிறது என அர்த்தம்.

**என்னிடம் இருந்து உங்களுக்கு  மெசேஜ் வந்தால் - நல்லதை அறிந்து கொள்ளுங்கள் என அர்த்தம்.

- கு பண்பரசு

வெள்ளி, 4 செப்டம்பர், 2020

பெரும்பாலான சங்கிகளின் குணங்களை பார்ப்போம்!TN BJP

பெரும்பாலான சங்கிகளின் குணங்களை பார்ப்போம்!

மோடி மாடல் வளர்ச்சி என்பான் ஆனால் என்ன அப்படி செய்தார் என்றால் முழிப்பான்!

எளிமையானவர் மோடி என்பான் ஏனடா ஏழரை லட்சத்துக்கு கோட் போடுகிறார் என்றால் முழிப்பான்!

பின் ஒரு வழியாக ஏலம் விட்டு மக்களுக்கு கொடுக்க என்பான்.
ஏலத்தில் வந்த தொகை எவ்வளவு என்றால் அது பிரதம் நிவாரண  நிதிக்கு போய்விட்டது என்பான்.

சரி  பிரதமர் நிவாரண நிதி எவ்வளவு வந்தது என்றால் அது சொல்ல முடியாத ரகசியம் என்பான்.

மோடி மேடையில் இப்படி முழங்குகிறாரே நிருபர்களிடம் பேச மாட்டேங்கிறாரே என்றால் முழிப்பான்.
ஆனால் அவர்  பாராளுமன்றத்திலேயே பேச மாட்டேங்கிறாரே என வாய்க்குள்ளேயே முனுகுவான்.

மோடி ஏழைத்தாயின் மகன் என்பான் 
ஆனால் மோடி அம்பானிக்கும் அதானிக்கும் விளம்பர மாடலாகவும் அரசு பணத்தை அள்ளி அள்ளி கொடுக்கிறாரே என்றால் இஞ்சி தின்ன குரங்காய் இளிப்பான்.

திமுகவை திமுக தலைவரை ஊழல்வாதி என்பான்.ஏனடா அவர் மேல் ஒரு வழக்கு கூட போட்டு தண்டனை வாங்கி தரவில்லை என்றால் முழிப்பான் .

திராவிட இயக்கங்களால் தான் தமிழ்நாட்டோட வளர்ச்சி கெட்டுபோனது என ஒப்பாரி வைப்பான்.
தேர்தல் நேரத்தில் மட்டும் திராவிட கட்சியோடு ஏன் கூட்டனி வைக்க அலைகிறீர்கள் என்றால் ஊமை பாஷை பேசுவான்.

குஜராத் வளர்ந்து விட்டது என்பான் அப்புறம் ஏனடா கூலி வேலைக்கு குஜராத்திகள் வருகிறார்கள் என்றால் கொழுக்கட்டையை வாயில் வைத்திருப்பவன் போல் இருப்பான்.

இந்தியாவின் வளர்ச்சி மோடி தான் கொண்டு வந்தார் என்பான்.
அதற்கு பிஎஸ்என்எல், ரயில்வே,எல்ஐசிகளை  ஏன் விற்கிறார்  என்றால் விழிப்பான்.

எதற்கெடுத்தாலும் சோனியா வெளிநாட்டுக்காரர் என்பான்.
 ஆனால் உள்நாட்ட்டிலேயே இல்லாமால் எந்நேரமும் உலக நாடுகளுக்கு  மோடி ஏன் ஊர் சுற்றுகிறார் என்றால் எதையாவது சொல்லி நம் காதில் பூ சுற்றுவான்.

நியாயம் நீதி தான் மோடி ஆட்சி என்பான்.
அமித்ஷா வழக்கில் தீர்ப்பு சொன்ன நீதிபதி கதை என்னவானது எனக்கேட்டால் ஓடிப்போவான்.

பாகிஸ்தான் என்றால் பாய்வான்.
 சீனா என்றால் பம்முவான்.
பாகிஸ்தானுக்கு படை அனுப்புகிற மோடி 
நம்மை அடிக்க வருகிற சீனாவுக்கு ஏன் அனுப்பவில்லை என்றால் அதான் டிக் டாக் மற்றும் பப்ஜி ஆப்புகளை தடை செய்து விட்டாரே என் பரவசம் அடைவான்.

மோசமான பொருளாதாரம்  பற்றி கேட்டால் அதை அரசு பார்த்துக்கும் என்பான்
ஆனால் ஆட்சிக்கு வர ஓட்டுக்காக யார் காலிலும் விழுந்து எழுவான்..

ஆட்சிக்கு வந்த பிறகு அத்வானியை எட்டி உதைத்தது போல் அடித்தட்டு மக்களை உதைக்கும் மோடியை அறிவாளி என்பான்.

காரி துப்பும் சு.சாமியிடம் போக மாட்டான்.
கவுரவமாய் விமர்சிக்கும் சிதம்பரத்திடம் வருவான்.

சங்கி மங்கிகளே 
ஒழுங்கா ஆட்சி பண்ண தெரியலைன்னா ஓடி போய் ஓரமா ஜால்ரா தட்டுங்கடாடோய்!!

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

அரசு ஊழியர் யார்?*Government officers

*அரசு ஊழியர் யார்?* *அவர் பெறும் சம்பளம்,* *துறைகள் மற்றும் செலவுகள் குறித்து தெரிந்து கொள்வோம்!!*


*அரசு ஊழியர் யார்?*


*தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள்,1973 பிரிவு.2(3)-ன் படி, ஒரு அரசு ஊழியர்கள் என்பவர் அரசு தன் ஆட்சியின் காரியங்களை ஆற்ற பணி அல்லது பதவிக்கு அமர்த்தும் நபர் என வரையறுக்கபடுகின்றது. இது இந்திய ஆட்சிப் பணியிலிருந்து (I.A.S) கடைநிலை ஊழியர் வரை பொருந்தும்.*


”Officer” என்பது அலுவலர் அதாவது அலுவல்களை செய்பவர் ஆவார். ”Minister’ என்பது செயலாற்றுப் பணியாளர், என பொருள்படும். ”அமைச்சு’ என்றால் பணி செய்தல், உதவியாயிருத்தல், கொடுத்துதவுதல் என பொருள். அதிகாரி என்றால் அரசு நிர்வாகத்தில் ஆனைகளை நடைமுறைபடுத்தும் பொறுப்பிலுள்ள அலுவலர் என பொருள். ஆக அனைத்தும் மக்களுக்கு பணி செய்யவே ஒழிய. அதிகாரி என அதிகாரம் செய்தல் சட்ட விரோதம் ஆகும்.


தமிழ்நாடு அரசு ஊழியர்களை வகைப்படுத்தல்: (Classification of Government Employees)


அரசு ஊழியர்கள்/ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தர ஊதியத்தை (Grade Pay) அடிப்படையாகக் கொண்டு அரசு ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களை கீழ்கண்டவாறு வகைப்படுத்துகிறது..


1. தர ஊதியம் (Grade Pay) ரூபாய் 6,600ம் அதற்கு மேலும் பெறும் அரசு அலுவலர்களை வகை l (கிரேடு) என்றும், (முன்பு A Class)


2. தர ஊதியம் ரூபாய் 4,400 முதல் 6,600க்குள் பெறும் அரசு அலுவலர்கள்/ஆசிரியர்களை வகை II (கிரேடு) என்றும், ( முன்பு B Class)


3. தர ஊதியம் ரூபாய் 4,400க்கு கீழ் பெறும் அரசு ஊழியர்கள்/ஆசிரியர்களை வகை III & lV (கிரேடு) என்றும் பிரிக்கப்படுகிறது. (முன்பு C & D Class).


*அரசு ஊழியர் பெறும் சம்பளம்*


அடிப்படை சம்பளம்( Basic salary), பஞ்சப்படி எனும் அகவிலைப்படி(Dearness Allowances), பயணப்படி (Travelling Allowances), வீட்டுவாடகை படி (House allowance), அரசு ஊழியர் ஆரோக்கிய இன்சூரன்ஸ் திட்டம் (Govt. Employees Health Fund Scheme), வருங்கால வைப்பு நிதிக்கு பங்களிப்பு (provident fund) பொங்கல் பரிசு (Pongal Gift), விழா முன்பணம்(Festival Advance), மருத்துவ படி (Medical Allowance) விடுப்பு பணம்(Encashment of Leave) ஓய்வூதியம், இன்னும் பல


*அரசு ஊழியர்களுக்கான செலவு*


மாநில அரசின் மொத்த வருவாயில் மாநில வரிவருவாய் ரூ. 99,590.13 கோடி வரி அல்லாத ஏனைய வருவாய் 12,318. கோடியில் ரூ.66,908 அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியதிற்கும் செலவிடப்படுகிறது.


*அரசின் முக்கிய துறைகள்*


ஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் நலத் துறை, வேளாண்மை துறை,கால்நடை பராமரிப்பு, பால்வளம் (ம) மீன்வளத் துறை, பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை


கூட்டுறவு,உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு துறை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை


எரிசக்தி, சுற்றுச்சூழல் (ம) வனத்துறை, நிதி துறை, கைத்தறி, கைத்திறன், துணிநூல் (ம) கதர்த்துறை



மக்கள் நல்வாழ்வு (ம) குடும்பநலத்துறை, உயர்கல்வி துறை,நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, உள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தொழில் துறை, தகவல் தொழில் நுட்பவியல் துறை, தொழிலாளர் (ம) வேலைவாய்ப்பு துறை, சட்டத்துறை, நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறை பணியாளர் (ம) நிருவாகச் சீர்திருத்தத் துறை, திட்டம்,வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, பொது துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பள்ளிக் கல்வி துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, சமூக நலம் (ம) சத்துணவுத் திட்டத் துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை, சுற்றுலா,பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை, போக்குவரத்து துறை, இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, பொது (தேர்தல்கள்) துறை,பொதுப்பணி துறை. இத்தனை துறைகளில் ஊழியர்கள் உண்டு.


*தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள்,1973 சொல்வது என்ன?*


தமிழ்நாடு அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், ஆசிரியர்கள், சீருடை பணியாளர்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்விக்கூட ஆசிரியர்கள் மற்றும், மாநில அரசிடம் ஊதியம் பெறும் சட்ட சபை உறுப்பினர்களும், அமைச்சர்களும், வாரியத்தலைவர்களும் அரசு ஊழியர்கள் ஆவார். எனவே இவர்களும் தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகளுக்கு உட்பட்டவர்களே.


*விதி-3*


எந்த அரசு ஊழியரும் வரதட்சணை கொடுக்கவோ, பெறவோ கூடாது.


*விதி-3-A*


எந்த அரசு ஊழியரும் தனியார்களின் கௌரவ விழா, ஓய்வி விழா, நிறுவனங்கள், பொதுமக்கள் அவர்களுடன் புகைப்படம் எடுப்பது போன்ற செயல்களை அரசின் முன் அனுமதியின்றி செய்தல் கூடாது.


*விதி-5*


எந்த அரசு ஊழியரும் பங்குச் சந்தையில் ஈடுபடுதல், வேறு முதலீடுகள் செய்தல், தன் சார்பாக குடும்ப உறுப்பினர்களை ஈடுபடச் செய்தல், எந்த தொழில், வியாபாரம் போன்றவற்றில் ஈடுபடுதல் போன்றவற்றை செய்தல் கூடாது.


*விதி-6 (4) (aa)*


எந்த அரசு ஊழியரும் அரசின் அனுமதியின்றி யாருக்கும் 10,000 ரூபாய்க்கு மேல் அசையும் சொத்தை குத்தகை, அடமானம், வாங்குதல், விற்றல், கொடை செய்தல், பரிமாற்றம் செய்தல் போன்றவற்றை அரசின் அனுமதியின்றி செய்தல் கூடாது.


*விதி-7*


எந்த அரசு ஊழியரும் அரசின் அனுமதியின்றி எந்த வியாபாரம், தொழிலில் ஈடுபடக்கூடாது.


*விதி-11*


எந்த அரசு ஊழியரும் அரசின் அனுமதியின்றி நாளிதழ், தொலைக்காட்சி, வானொலி பிரசுரம் போன்றவற்றை ஈடுபடுதல் கட்டுரை வரைதல் செய்தல் கூடாது.


*விதி-12*


எந்த அரசு ஊழியரும் அரசின் அனுமதியின்றி பொதுவிழாவில் நடந்த விசயங்களை, கருத்தை சொல்லக் கூடாது. அரச்சின் கொள்கைகள், அரசு பரிபாலனம், அரசின் மற்ற அரசுகளுடனான உறவுகள் பற்றி பேசுதல் கூடாது. அலுவலகம் சாராத கூட்டங்களில் கலந்து கொள்ளுதல், தலைமை ஏற்றல் கூடாது.


*விதி-14*


எந்த அரசு ஊழியரும் தன் குடும்ப உறுப்பினர்கள் அரசியலில் ஈருபடுதலை தடுக்க வேண்டும்.


*விதி-14-A*


எந்த அரசு ஊழியரும் மதம், இனம், இடம், பிறந்த இடம், குடியிருப்பு, மொழி, ஜாதி சம்மந்தமான எந்த அமைப்பிலும் உறுப்பினராகவோ, சம்மந்தப்பட்டோ இருத்தல் கூடாது


*விதி-17*


எந்த அரசு ஊழியரும் நெருங்கிய சொந்தங்கள் தங்களுக்கு கீழ் பணிபுரியவோ, தன் பணி சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனத்தில் பணியமர்ந்திருப்பதையோ அனுமதிக்கக் கூடாது.


*விதி-20*


எந்த அரசு ஊழியரும் முழுமனதுடன், முழு ஈடுபாட்டுடன் பணியில் இருக்க வேண்டும்.


*விதி-20-B*


எந்த அரசு ஊழியரும் பெண் பணியாளர்களுக்கு பாலியல் தொந்திரவு கொடுத்தல், பாலியல் ஆசையை முன்மொழிதல், தொடுதல், கேட்டல், வேண்டல், சைகை, ஆபாசப்படம் காட்டுதல் போன்ற தேவையற்ற காரியங்களில் ஈடுபடக் கூடாது.


*பிரிவு-21*


எந்த அரசு ஊழியரும் அரசின் அனுமதியின்றி அலுவலக நேரத்தில் அல்லது அலுவலின் போது குடித்திருக்கக் கூடாது.


*இதையெல்லாம் ஊழியர்கள் கடைபிடிக்கிறார்களா?*



*அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யலாமா! சட்டம் சொல்வதென்ன?*


# அரசியலமைப்புச் சட்டம் ஷரத்து.19.(1)(c) அமைப்புகள் மற்றும் சங்கங்கள் வைத்துக் கொள்ள உரிமை அளிக்கிறது.


# ஆனால் ஷரத்து 19(4) இன் படி ”இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு அல்லது பொது ஒழுங்கு அல்லது ஒழுக்கத்தின் மீது அக்கரை கொண்டு, சொல்லப்பட்ட உரிமையில் நியாயமான கட்டுப்பாட்டை விதிக்கக் கூடிய நடைமுறையிலுள்ள சட்டம் எதையுமோ அரசு இயற்றிய உட்கூறுகள் பாதிக்கக் கூடாது.


*# இதை P.N.Ramasamy Vs The Commissioner of Coimbatore AIR 1968 (Masdras) 383 Per Ramakrishna J.- என்ற வழக்கில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.*


# O.K.Ghosh Vs.E.X.Joseph, AIR 1963 SC 812 என்ற வழக்கில் சங்கங்கள் அமைப்புகளுக்கு உரிமை கொடுக்கப்பட்ட உரிமை ஒரு உத்திரவாதமான உரிமை என கொள்ள முடியாது, தகுந்த காரணங்கள்: இருப்பின் அவை திரும்பப் பெறப்படும் என் தீர்ப்பளித்துள்ளது.


# தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள்,1973 விதி-16 இன் படி எந்த அரசு ஊழியரும் அரசின் அனுமதியின்றி சங்கத்தில் அமைப்பில் உறுப்பினராக இருக்கக் கூடாது. விதி-22-A இன் படி அலுவலக நேரத்தில், அலுவலக வளாகத்தில் ஊர்வலம் கூட்டங்கள் நடத்தகூடாதென சொல்லப்பட்டுள்ளது.


மேலும் All India Bank Employees’s Association Vs. National Industrial Tribunal என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம், “ வேலைநிறுத்தம் என்பது அரசியலமைப்பு சட்டம் ஷரத்து-19-இன் படி அடிப்படை உரிமையில்லை, ஊழியர்கள் தங்கள் கோரிக்கையை குறிப்பிட்ட எல்லைக்குள் வெளிப்படுத்தலாம் எனவும், தங்கள் குறைகளை வேலைநிறுத்தல் என்ற உரிமையை கோரமுடியாது எனவும் தீர்ப்பளித்தது.


*இறுதியாக!*


எப்படியாவது அரசு வேலைக்கு செல்வது என பெரு முயற்சி எடுத்து சேர்ந்து, அரசின் அத்தனை பணப்பலன்களையும் பெற்று பணிக்கு வந்தது மக்கள் பணி ஆற்றவே. 2002ல் தமிழகத்தில் டெஸ்மா (Tamil Nadu Essential Services Maintenance Act (TESMA), 2002) போன்ற சட்டத்தை இயற்ற அரசை தள்ளியது யார் என எண்ண வேண்டும். மக்களின் வரிப்பணத்தில் மொத்த மக்கள் தொகையில் 2 சதவீத அரசு ஊழியர்களுக்கு அரசு செலவிடும் தொகை 60 சதவீதத்துக்கும் மேல்.என்பதை நினைவுக்கூர்ந்து மக்கள் பணியாற்ற வேண்டுமென்பதே மக்களின் விருப்பம்


மேலும், ஊழியர்கள், அலுவலர்கள் வரும் நேரம், செல்லும் நெரம், அலுவலர்கள் கள ஆய்வு செல்லும் இடம் நேரம்,என அனைத்து பணிகளைச் குறிப்பிடும் மாவட்ட அலுவல கையேடு(District Office Manual), அரசு ஊழியர் நடத்தை விதிகள்(the tamil nadu government servants' conduct rules, 1973), தமிழ்நாடு அரசு சார்நிலை ஊழியர்கள் பணி விதிகள்(tamilnadu government subordinate service rules) என ஒவ்வொரு துறைக்கும் உள்ள பணிவிதிகளை அனைவரும் தெரிந்து அதன்படி நடந்தால் அரசு இயந்திரம் சிறக்கும்.


*நடத்தை விதிகள்*


தமிழக அரசு அலுவலர்களுக்கான சட்ட விதிமுறைகள், அரசாணைகளுடன் குறிப்புகள்


*நடத்தை விதிகள் என்றால் என்ன*?


அரசுப் பணியாளர்களுக்காக அரசு உருவாக்கியுள்ளநடைமுறைகள் மற்றும் விதிகளை அவர்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

சொத்து வாங்குதல், விற்றல், நிதி ஆதாரங்கள் உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகளை அரசுக்கு முறைப்படி தெரிவித்த பின்னரே மேற்கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கைகளை பணிபுரிபவர்கள் கடைபிடிப்பதற்காக தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள், 1976 உருவாக்கப்பட்டது.இந்த விதிகள் அரசுப் பணியில் இருப்பவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் கட்டுப்படுத்தும். தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதி 2(5) &  (6) ன் கீழ்க்கண்டவர்கள் குடும்ப உறுப்பினர்களாக கருதப்படுவார்கள்.தந்தை / வளர்ப்பு தந்தைதாய் / வளர்ப்பு தாய்கணவன்மனைவிமகன் / வளர்ப்பு மகன்மகள் / வளர்ப்பு மகள்சகோதரன்சகோதரிமனைவியின் தாய் மற்றும் தந்தைகணவரின் தாய் மற்றும் தந்தைசகோதரனின் மனைவிசகோதரியின் கணவர்மகளின் கணவர்மகனின் மனைவிஇந்த உறவுமுறைகள் அனைத்தும் தமிழக அரசின் கீழ் பணிபுரியும் ஊழியரின் குடும்ப உறுப்பினர்களாகவே கருதப்படுவர்.உயர்கல்வி பெறுவது தொடர்பான அரச…


1)GO.MS.200 P&AR dt 19.4.96


     உயர்கல்வி பயில அனுமதி

கோரிய அரசு ஊழியரின் விண்ணப்பத்தின் மீது 15 நாட்களுக்குள்

துறைத்தலைவா் அனுமதிதராவிட்டால்,அனுமதி

அளித்ததாக கருதி மேல்படிப்பை தொடரலாம்.


2)GOVT Leter no 14735/s/10/

dt 08.042010

        தகுதிகான் பருவத்தில் உள்ள அரசுஊழியர் தகுதிகான் பருவத்திற்குரிய

அனைத்துதகுதிகளையும் பெற்றும் துறைதலைவரால் தகுதி பெற்றநாளிலிருந்து

ஆறுமாதத்திற்குள்


தகுதிகான்பருவம் நிறைவு

செய்துஆனைகள் பிறப்பிக்க

பட வில்லை என்றால்,தகுதிகான்பருவம் அதுவாகவே நிறைவடைந்ததாக அவ்அரசுப்பணியாளா் கருதிகொள்ளலாம்.


3)GO.MS.NO1988/Public(service-N)dept dt 04.4.75

             துறைத்தலைவரால்

வழங்கப்பட்டதண்டனையை எதிர்த்து மேல்முறையீட்டு

அலுவலருக்கு மேல்முறையீடு

செய்த ஒரு அரசுஊழியரின்  விண்ணப்பத்தின் மீது

ஆறு மாதத்திற்குள் மேல்முறையீட்டு

அலுவலா் இறுதி ஆனைபிறப்பிக்கவேண்டும்.


4)GO.MS.112 P&AR

       அசையாசொத்துவாங்க

அனுமதிகோரி விண்ணப்பித்த அரசு ஊழியரின் விண்ணப்பத்தின்மீது ஆறுமாதத்திற்குள் அனுமதி.வழங்க வேண்டும்

அவ்வாரு ஆறுமாதத்திற்குள் துறைத்தலைவா் அனுமதி

அளிக்கவில்லை, என்றால்

அனுமதி பெற்றதாக கருதப்படும்.

*நன்றி!*


செவ்வாய், 2 ஜூன், 2020

*உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை*

*உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை*

_திடக்கழிவு,_
_திரவக்கழிவு,_
_வாயுக்கழிவு,_ 
_சொந்தக்காசில் சூனியம் வைத்துக்கொள்ளும் *மருத்துவக்கழிவு,*_

     இவைகளை வாழ்நாள் முழுவதும், சிரமமில்லாமல் நீக்கும், எளிமையான,
சுவையான முறை.

      *வெந்நீர்*
              +
*எலுமிச்சை சாரு*
             +
       *தேன்*

*செய்முறை 
*********

   ஒரு டம்ளர் நீரை குறைந்த தனலில் வைக்கவும் !
கொதிக்க வேண்டியதில்லை !
நாம் தாங்கும் சூடு இருந்தால் போதும் !

ஒரு காலி டம்ளரில் 1/2 எலுமிச்சை, சிறியதாயிருந்தால் ஒரு எலுமிச்சை பிழிந்துக்கொள்ளவும் !

3 ஸ்பூன் தேன் சேர்த்து, வெந்நீர் கலந்து, ஸ்பூனில் சிறிது சிறிதாக, அனுபவித்து, உமிழ் நீருடன் நன்றாக உறவாடி, பின் அருந்தவும் !

   காலையில் முதல் உணவாக, வெறும் வயிற்றில் அருந்தவும் !

எல்லா கழிவுகளும் உடனுக்குடன் நீக்கப்படுவதுடன் உடலுக்குத் தேவையான 
உடனடி குளுக்கோஸ், தரமான உயிர்சத்துக்கள் மற்றும் தாது உப்புக்களும் கிடைக்கும் !

*வாழ்நாள் முழுதும் "கேன்சர்" என்ற சொல்லே நம் வாழ்க்கை அகராதியில் இல்லாமல் போகும் !*

   வயது வித்தியாசமின்றி உட்கொள்ளலாம் !

*உணவாகவும்,*
*மருந்தாகவும்,* செயல்புரியும் உன்னத இயற்கை பானம் !

பி . கு :
***

     சர்க்கரை நோயாளிகள் பயமில்லாமல் அருந்தலாம் !

சிறிது சிறிதாக, உமிழ் நீர் சேர்த்து, சுவைத்து உட்கொள்வதால், தேனில் உள்ள குளுக்கோஸ் தரமான குளுக்கோஸாக மாற்றமடைந்து நன்மை மட்டுமே செய்யும் !

   மேலும், "தேன்" நாக்கிற்கு இனிப்பு, உடல் உறுப்புகளுக்கு கசப்பு !

சர்க்கரை நோயாளிகள் தேன் சாப்பிடக்கூடாதென்பது வடிகட்டிய "மூட நம்பிக்கை"!

தொடர்ந்து அருந்துவதால் "அல்சர்" எனும் மருத்துவத்தால் தூண்டப்படும் உபாதை, சொல்லாமல் ஓடிப்போகும்.......!

           - சித்தர்களின் குரல்

மொழஉடலின் மொழி

1.  உடல் - உணவை கேட்கும் மொழி - பசி

2.  உடல் - தண்ணீரை கேட்கும் மொழி  - தாகம்

3.  உடல்  - ஓய்வை கேட்கும் மொழி  - சோர்வு, தலைவலி

4.  உடல் - நுரையீரலை தூய்மை செய்யும் மொழி - தும்மல், சளி, இருமல்.

5.  உடல் - உச்சி முதல் பாதம் வரை உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - காய்ச்சல்

6.  உடல் - காய்ச்சலின் போது உணவை உண்ணாதே என்று சொல்லும் மொழி -  வாய் கசப்பு மற்றும் பசியின்மை 

7.  உடல் - காய்ச்சலின் போது நான் உடலை தூய்மை செய்கிறேன், நீ எந்த வேலையும் செய்யாதே என்று சொல்லும் மொழி - உடல் அசதி

8.  உடல் - எனக்கு செரிமானம் ஆகாத உணவை நான் வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - வாந்தி

9.  உடல் - நான் குடல்களில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - பேதி

10. உடல் - இரத்தத்தில் உள்ள நச்சை நான் தோல் வழியாக வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - வியர்வை

11.. உடல் - நான் வெப்பநிலையை சீர் செய்து இரத்தத்தில் உள்ள நச்சை முறிக்கப்போகிறேன் என்று சொல்லும் மொழி - உறக்கம்

12. உடல் - நான் முறித்த நச்சை இதோ வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - சிறுநீர் கழித்தல்

13. உடல் - உணவில் உள்ள சத்தை பிரித்து இரத்தத்தில் கலந்து, சக்கையை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - மலம் கழித்தல்

       எனவே நாம் அனைவரும் உடலின் மொழி அறிந்து, நமக்கு ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டால் அதை உடனே மருந்தோ, மாத்திரையோ கொண்டு தடை செய்ய வேண்டாம். உடல் தன் வேலையை சீராக செய்ய நாம் அனுமதித்தால் தான், நாம் நோய் எனும் பிணியில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ முடியும்.

      நாம் அனைவரும் முதலில் நம் உடலை நேசிப்போம், நம் உடல் உள் உறுப்புகளை நேசிப்போம், நாம் நம்மை நேசிப்போம்.

       நாம் வெளி உறுப்புகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ, அதே அளவிற்கு நம் உள் உறுப்புகளின் உணர்வுகளும், மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் நாம் ஆரோக்கியமாகவும், அழகான தோற்றத்துடனும் இருக்க முடியும்.

       நம் உடலை நேசிப்போம்.....🙏🙏🙏

புதன், 27 மே, 2020

சந்தனமும் , ஜவ்வாதும் மணக்கும் எங்கள்திருப்பத்தூர் மாவட்டம்.

சந்தனமும் , ஜவ்வாதும் மணக்கும் எங்கள்
திருப்பத்தூர் மாவட்டம்.

#திருப்பத்தூர்மாவட்டம்.

ஆசியாவிலேயே அதிகம் சந்தனம் விளையும்  ஜவ்வாது மலை காடுகள் உள்ளது எங்கள் திருப்பத்தூர் மாவட்டம்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு படித்த இசுலாமிய கல்லூரி உள்ள வாணியம்பாடி.

ஏழைகளின் ஊட்டி என்று போற்றப்படும் ஏலகிரிமலை இருப்பதும் இங்கேதான்.

உலகத்திலேயே முதன்முதலாக விண்கல் விழுந்து இறந்த மனிதனும் எங்கள்  ஊர் (நாட்றம்பள்ளி  காமராஜ்)  தான்.

உலகநாயகன் கமல்ஹாசன் சினிமாவில் பாடிய முதல் பாடல் எழுதிய ஆம்பூர் அடுத்த மிட்டாளம். நேதாஜி.

500 படங்களுக்கு மேல் சண்டை பயிற்சி அளித்த ஆர்.எஸ்.பாபு பிறந்த ஆம்பூர்.

பிரபல "நாயுடு ஹால் "முதலாளியின் சொந்த ஊர் ஆம்பூர் அடுத்த பள்ளித்தெரு (எ) காந்திநகர்.
  
முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரான.ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மாமியார் ஊர் திருப்பத்தூர்.

நக்ஸலைட்டுகளை அழிப்புப் போரில் 7 போலீசார் இறந்து தமிழ்நாடு காவல்துறைக்கு பெருமையை சேர்த்த திருப்பத்தூர்.

முன்னாள் பாரதப்பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் தன் மகன் பேரரறிவாளனை மீட்க நீதி போராட்டம் நடத்தி வரும் பாசத்தாய் அற்புதம்மாள் வாழ்ந்து வரும் சோலையார்பேட்டை.

கவிக்கோ அப்துல் ரகுமானும், கவியருவி அப்துல் காதரும் பேராசிரியர்களாக பணியாற்றிய வாணியம்பாடி இசுலாமிய கல்லூரி.

தமிழ் வளர்த்த மதுரைக்கும், காரைக்குடிக்கும் போட்டியாக முதல்வர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள், வெளிமாநில ஆளுநர்கள், அயல் நாட்டு அமைச்சர்களை அழைத்து வந்து ஆண்டு தோறும் "முத்தமிழ் மன்றம் விழா "நடத்தி தமிழ் வளர்க்கும் வாணியம்பாடி.

 ராஜ் டி.வி.யில அகடவிகடம் நடத்துற V.L.பாஷ்கர்ராஜ்  எங்க ஊரு வாணியம்பாடிதான்.

நடிகர் சந்தானத்துக்கு அத்தை ஊரும் எங்க  ஆம்பூர்தான்.

குளித்து மகிழவும் , கொண்டாட்டம் போடவும் "ஜலகாம்பாறை " நீர்வீழ்ச்சி.

ஆசியாவின் மிகப்பெரிய வான் தொலைநோக்கி உள்ள ஆலாங்காயம் அடுத்த காவனூர்.

திருக்குறள் தெளிவுரை தந்த டாக்டர்.மு.வரதராசன் பணியாற்றிய திருப்பத்தூர்.

டால்மியாபுரத்தை கல்லக்குடியாக்கும் போராட்டத்தில் கலைஞர்.மு.கருணாநிதியோடு இரயில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்த ஆலாங்காயம் அடுத்த முல்லை சத்தியின் ஊர்.

சொல்லின் செல்வர் ஈ.வி.கே.சம்பத்துக்கும் மாமியார் ஊர் திருப்பத்தூர்.

முன்னாள் தமிழக முதல்வர்கள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சி தலைவி ஜெ.ஜெயலலிதா பெரும்பாலான ஆடைகள் தந்து அழகு பார்த்த எம்.ஜி.நாயுடு பிறந்த ஆம்பூர் அடுத்த பள்ளித்தெரு (எ) காந்திநகர்.

தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி தலைவரான விஜயகாந்த் மனைவி பிரேமலதா படித்த ஆம்பூர்

உலக பெரும் பணக்காரன் புரூனே சுல்தான் வீட்டில் சம்பந்தம் வைத்தவர்கள் ஆம்பூர்க்காரர்கள்.

1000 ஆண்டுகளுக்கு முந்தைய வர்ண பூச்சு ஓவியங்கள் இன்று வரை அழியாமல் காட்சி தரும் ஆம்பூர் அடுத்த மலையாம்பட்டு கிராமத்தில் உள்ள அரும்பாவி மலை என்னும் ஆர்மா மலை.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்திக்கு பிரியாணி செய்து போட விமானத்தில் போய் வந்த பக்காத்தியும் (பிரியாணி செய்பவரை எங்க ஊருல அழகா பக்காத்தினுதான் கூப்பிடுவோம்)  எங்கள் ஆம்பூர்தான்.

உலகின் 100 -க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு காலணிகளை ஏற்றுமதி செய்யும் மாவட்டம்.

தமிழ்நாட்டிலேயே 400 ஆண்டுகளுக்கு முன்னரே கலைமகளாம் சரஸ்வதிக்கு கோவில் கட்டப்பட்ட ஆலயம் உள்ள ஆம்பூர் அடுத்த மிட்டாளம் ஊட்டல் கோவில்.

தனித்தமிழ் இயக்கத்துக்கு தன்னையே அர்ப்பணித்த மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் கொஞ்சம் காலம் பயின்றதும், ஆசிரியராக பணியாற்றியதும் (ஆம்பூர் ) வேலூர் மாவட்டம்.

தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய ரயில் விபத்து நடந்த வாணியம்பாடி.

பிரபல நடிகை லட்சுமியின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்தவர்களும் எங்க ஊர் (ஆம்பூர்) தான்.

அண்மை காலத்தில் அதிகமாய் ஆன்மீக பக்தர்கள் வந்து வணங்கும் ஆம்பூர் ஆஞ்சநேயர் கோவில்.

வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை

Dr ரம்யா_post
வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை

1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள்.
கோடை காலத்திலும் கட்டாயம் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை கழித்தாக வேண்டும்.

2. காலையிலும், இரவு உணவுக்கு முன்பும் கட்டாயம்.
மலம் கழிக்க வேண்டும்.
கண்ட நேரத்தில் கழிப்பது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.

காலை, மாலை இருவேளை குளிக்கவும். மழைக்காலங்களில் காலையில் குளித்தால் போதும்.

3. உள்ளாடைகள் கிழியாவிட்டாலும்
6 மாதத்திற்கு ஒருமுறை மாற்றுங்கள்.
ஒருநாள் பயன்படுத்தியபிறகு கட்டாயம் துவைத்துக் காயப்போடுங்கள்.

4. சிறுவர்கள் 1 ஸ்பூன், பெரியவர்கள் 2 ஸ்பூன் ஊறவைத்த வெந்தயத்தை, வெறும் வயிற்றில் மென்று விழுங்க வேண்டும்,
சர்க்கரையும், இரத்தக் கொதிப்பு வராமல் தடுக்கப்படும்.
வந்தால் கட்டுக்குள் இருக்கும்.

5. காலை உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன்
தோல் நீக்கிய இஞ்சித் துண்டைச் சாப்பிடுங்கள்.
கொழுப்பைக் குறைக்கும். தொப்பையைக் கரைக்கும்.

உணவை நன்றாக மென்று,
பொறுமையாக உண்ணுங்கள்.

6. சுட்ட எண்ணெயை மீண்டும் பயன்படுத்திச் செய்யப்பட்ட பண்டங்களைச் சாப்பிடக் கூடாது.
அதனால் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்;
புற்றுநோயை உருவாக்கும்.

7. மைதா பரோட்டா வேண்டவே வேண்டாம்,
வாழ்நாளைக் குறைக்கும்.
குளிர்பானம், பாக்கெட் தீனிகள் வேண்டாம்.

8. பிராய்லர் கோழிக்கறி வேண்டாம்.
மீன் அல்லது ஆட்டுக்கறி, நாட்டுக் கோழி மட்டும் சாப்பிடுங்கள்.
மது, புகை கூடவே கூடாது.

9. மதியம் சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரம் முன்பு
சுக்குக் காபி சாப்பிடுவது மிகவும் நல்லது.

உண்ட உணவு முழுமையாகச் செரிக்கும் முன்பு
அடுத்த திட உணவு கூடாது.

10. பாதாம், முந்திரி, உலர்பழம், பழங்கள், கீரைகள், டார்க் சாக்லட், கிரின் டீ, கடலை மிட்டாய், எள் உருண்டை, பனைவெல்லம், சோற்றுக்கற்றாழை (ஏழு முறை சுத்தம் செய்து தேன் கலந்து) நாள்தோறும் சாப்பிடவும்.

11. பயோட்டின் (எச் வைட்டமின்) என்ற வைட்டமின் குறைவால், தலைமுடி உதிர்தல், நகங்கள் உடைதல், தோல் நோய், எடை குறைவு, தசைவலி, கொழுப்பு அடைப்பு, மன அழுத்தம் ஏற்படும். இவற்றைத் தவிர்க்க, வேர்க்கடலை, முந்திரி, மீன், முட்டை, வாழைப்பழம், பப்பாளி, தக்காளி, காலிபிளவர், காளான், மோர் சாப்பிடவேண்டும்.

12. காலை அல்லது மாலை 1 மணி நேரம் உடற்பயிற்சி, உங்க குழந்தைகள் மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா???*
தயவு செய்து
*வேர்க்கடலை,*
*பேரீச்சம்பழம்* தினமும் ஸ்நாக்சாக கொடுங்கள்!
*கீரை* வாரம் *3*முறை பருப்புக்கூட்டாகவும்,
*ராகியை*
*சேமியாவாக,கொழுக்கைட்டையாக,ரொட்டியாக வாரம்* இருமுறை கொடுக்கவும்!
*ஆப்பிள்,ஆரஞ்சை* விட *பப்பாளி,கொய்யாவில் சத்துக்கள்* அதிகம்!
தினமும் சாப்பிடக்கொடுங்கள்!
உங்கள் *மனைவியின் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவரா நீங்கள்???*
தயவு செய்து *மண் சட்டியும்,இரும்புக்கடாயும்,மரச்செக்கு எண்ணெய்யும்* வாங்கிக்கொடுக்கவும்!
தினமும் *5பேரிச்சம்பழம்* குறைந்த பட்சம் சாப்பிடக்கட்டாயப்படுத்துங்கள்!
*கருப்பு அரிசி,கருப்பு எள்,கருப்பட்டி,கருப்பு உளுந்து,மண் பானை தண்ணீர் சாப்பிட* வலியுறுத்துங்கள்!
உங்கள் *கணவர்* மீது அதிக அக்கறை கொண்ட *மனைவியா நீங்கள்???*
🚪தயவு செய்து *பிரிட்ஜில் வைத்த குழம்பு வகை,மாவு வகைகளை கொடுக்காதீர்
🥃 *சீரகத்தண்ணீர்,சோம்புத்தண்ணீர்* குடிக்கக்கொடுக்கவும்!
*நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவுப்பழக்கங்களை முடிந்த அளவிற்க்கு பயன்படுத்துவோம் *
*இழந்த ஆரோக்கியத்தை* முழுமையாக மீட்டெடுக்க முடியாது என்றாலும் *50%* ஆரோக்கியத்தை மீட்டெடுக்க *நாம் நம் முன்னோர்களின் பயன்பாட்டில் இருந்த உணவுப் பழக்கத்தை* நாம் நம் நடைமுறை வாழ்க்
கையில் பயன்படுத்துவன் மூலம் *சாத்தியமாகும்.*
*இன்றே! முயற்சிப்போம்! *வாருங்கள்!*

இரவு 10,00 மணி முதல் காலை 5,00 மணி வரை
கட்டாயம் உறங்க வேண்டும்... நமது நலனில் என்றும் உங்களுடன்...

✿✿✿ பிடிச்சா லைக் பண்ணுங்கள்... ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...
சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்..✿✿✿....

பயனுள்ள வலைத்தளங்கள்..!*

*பயனுள்ள வலைத்தளங்கள்..!* 

இன்று நாம் வீட்டில் முடங்கியிருக்கும் காலகட்டத்தில் தொலைக்காட்சிகளில் சில நிகழ்ச்சிகளை பார்க்கும் போது எரிச்சலூட்டுகின்றன அப்படி இருக்கப் பல பயனுள்ள செயலிகள்,யூடியூப் லிங்குகள், வலைத்தளங்கள் போன்றவற்றைத் தொகுத்துள்ளேன். பலரும் நேரமே போகமாட்டேங்கிதுனு புலம்பல்களைக் கேட்டதன் விளைவாக இந்தத் தொகுப்பு. மேலும் போட்டித் தேர்வு படிக்கும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

செயலிகள் (Apps):

Blinkist : புதினங்கள் அல்லாத சுய முன்னேற்றம், அறிவியல் போன்ற மற்ற புத்தகங்களின் சுருக்கங்களைக் கொண்ட ஒரு செயலி. இதில் ஒலிப்புத்தகங்களும் அடங்கும்

TED : இதைப்பற்றி பலரும் அறிந்திருப்பர். இதன் செயலியை டவுன்லோட் செய்து கொஞ்சம் கொஞ்சமாக நமக்குப் பிடித்த வீடியோக்களை ஒரு Playlist ஆக உருவாக்க ஆரம்பித்தால் நம்முடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு பரிந்துரைக்கும்

Curiosity : நாம் நினைத்தே பார்க்காத பல சுவாரஸ்யமான தகவல்களைப் படிக்கலாம்

DailyArt தினமும் ஒரு ஓவியம் மற்றும் அந்த ஓவியத்தின் பின் இருக்கும் வரலாற்றை பற்றிக் கூறும் செயலி.

CuriosityStream டாக்குமெண்டரி வீடியோக்களின் இருப்பிடம் என்றே சொல்லலாம்.‌ அவ்வளவு இருக்கும்.‌

Reddit : இந்த செயலி கிட்டத்தட்ட கோரா போல தான். கேள்வி கேட்டால் பதில் கிடைக்கும். ஆனால் ஒரு சில நாட்கள் பிடிக்கும் புரிவதற்கு. கொஞ்சம் கொசகொச என்று இருப்பது போல் கூடத் தோன்றும்

Stack Exchange இதுவும் கோரா, ரெட்டிட் போல் தான். கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் வலைத்தளங்கள்:


Wikipedia : “அட என்ன தம்பி நீ?! இது கூட தெரியாதா?” என்று நீங்கள் நினைப்பது கேட்கிறது. ஆனால் வீக்கிப்பீடியாவில் முதல் பக்கத்தில் தினம் ஒரு புதிய தகவலை Featured article என்று போடுவார்கள். இதை தினமும் படித்தாலே ஒரு வருடத்தில் 300+ விஷயங்களைக் கற்றுக் கொள்ளலாம். இது பலருக்குத் தெரிவதில்லை.

Wayback Machine மிகப் பழைய மற்றும் புதிய புத்தகங்கள் கூட பல கிடைக்கும். 

Top Documentary Films இதுவும் ஒரு டாக்குமெண்டரி களஞ்சியம்.

Listverse டாப் 10 இது, டாப் 10 அது, டாப் 10 எது, டாப் 10 ஏதேதோ என்று பட்டியலுக்கெல்லாம் பட்டியலாய் விளங்கும் ஒரு தளம்.

Neatorama இணையத்தில் உள்ள சுவாரசியமான விஷயங்களை ஒரே இடத்தில் குவிப்பது தான் இந்தத் தளம்.

HowStuffWorks இதில் பலதரப்பட்ட தலைப்புகள் பற்றிப் படிக்கலாம்.

Mental Floss : அவ்வப்போது சென்று வரலாம் ஏதாவது புதிதாக இருந்து கொண்டே இருக்கும் இத்தளத்தில். ஏற்கனவே அறிவியல், வரலாறு, உணவு, விலங்குகள் என்று பலதரப்பட்ட தலைப்புகளில் நிறைய இருக்கிறது அதையெல்லாம் கூட படித்துக் கொண்டிருக்கலாம்.

யூடியுப் சேனல்கள்:

Biography பல பிரபலமானவர்களின் சரித்திரங்களை சுருக்கமாகச் சொல்லும் ஒரு சேனல்.

Veritasium பல வாழ்க்கை மற்றும் அறிவியல் உண்மைகளை பதிவிடும் ஒரு சேனல்.

NASA நாசாவின் official யூடியுப் சேனல்.

minutephysics இயற்பியலை அழகாக படமெல்லாம் வரைந்து விளக்குவார்கள். பார்க்கவே ஆசையாக இருக்கும்


TEDx Talks TED என்பது உலகளாவிய மக்களை கருத்தில் கொண்டு பேசுவது. TEDx என்பது எந்த ஊரில் நடக்கிறதோ அந்த ஊர் மக்களை கருத்தில் கொண்டு பேசுவது. இதில் இருக்கும் வீடியோக்களும் அருமையாக இருக்கும்.

DOCUMENTARY TUBE மறுபடியும் டாக்குமெண்டரி வீடியோ விரும்பிகளுக்கான ஒரு புதையல்.

SciShow தினம் ஒரு அறிவியல் தகவல்.

Kurzgesagt – In a Nutshell இதுவும் அறிவியல் பற்றிப் பேசும் ஒரு சேனல். இந்த சேனலின் Animationகாகவே மெய்மறந்து பார்ப்பேன்


Numberphile எண்கள் எண்கள் எண்கள் மட்டுமே! எண்களைப் பற்றிய வீடியோக்கள்.

Big Think ஏதாவது ஒரு தலைப்பு பற்றி தினமும் இந்திய நேரப்படி மாலை 3:30 மணிக்கு பதிவிடுவார்கள்.

IT'S HISTORY வரலாற்றில் நடந்த அனைத்தைப் பற்றியும் பதிவிட வேண்டும் என்ற நோக்கோடு செயல்படும் ஒரு சேனல்.

*இயற்கையில் இருந்து கற்றுக் கொள்ள நிறையவே உண்டு*

*இயற்கையில் இருந்து கற்றுக் கொள்ள நிறையவே உண்டு*

🗝️குதிரைகள் குடிக்கும் நீர் நிலைகளில் இருந்து நீரருந்தவும்.  குதிரை ஒருபோதும் கெட்ட தண்ணீரை குடிக்காது.

🗝️பூனை தூங்கும் இடத்தில் உங்கள் படுக்கையை இடுங்கள்.
அமைதி தராத இடத்தில் பூனை உறங்காது.

🗝️புழு துளைத்த கனிகளை உண்ணுங்கள்.
நச்சுக் கனிகளை புழு துளைக்காது.

🗝️பூச்சிகள் உட்கார்ந்திருக்கும் காளானை தைரியமாக உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். விஷக் காளான்கள் மீது பூசிகள் உட்காராது.

🗝️முயல்கள் குழி பறிக்கும் இடத்தில் மரத்தை நடலாம். 
மரம் செழிப்பாக வளரும்.
பாம்பு ஓய்வெடுக்கும் இடத்தில் உங்கள் வீட்டைக் கட்டுங்கள். பாம்புகள் குளுமையான இடங்களில் மட்டுமே ஓய்வெடுக்கும்.

🗝️பறவைகள் வெப்பத்தை தவிர்க்க ஓய்வெடுக்கும் இடத்தில் உங்களுக்கான நீர் ஊற்றினை 
தோண்டுங்கள்.

🗝️பறவைகள் தூங்கப் போகும் நேரத்தில் தூங்கச் சென்று, அவை விழிக்கும் நேரத்தில் எழுந்திருங்கள்..
நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும்.

🗝️அதிகம் இயற்கையான உணவுகளை உண்ணுங்கள். வலுவான கால்களையும், துணிச்சல் மிக்க இதயத்தையும் பெறுவீர்கள்.

🗝️மீன்களை போல அடிக்கடி நீரில் நீந்துங்கள். 
நீங்கள் பூமியில் நடக்கும் போது கூட மீன்களைப் போலவே உணர்வீர்கள்.

🗝️அடிக்கடி வானத்தைப் பாருங்கள். உங்கள் எண்ணங்களில் வெளிச்சமும், தெளிவும் பிறக்கும். 

🗝️நிறைய அமைதியாக இருங்கள், கொஞ்சம் பேசுங்கள். உங்கள் இதயத்தில் மௌனம் குடிகொள்ளும். உங்கள் ஆன்மா எப்போதும் அமைதியாக இருக்கும்.

சனி, 23 மே, 2020

இரயில்வே கோச்களை மருத்துவமனையாக மாற்றும் திட்டம் எதற்குமே பயன்படாத ஒரு உருப்படாத திட்டம்

# இரயில்வே கோச்களை மருத்துவமனையாக மாற்றும் திட்டம் எதற்குமே பயன்படாத ஒரு உருப்படாத திட்டம் எனப் பலரும் இரண்டு மாதம் முன்பே எழுதினோம். 
மருத்துவமனை பற்றிய அடிப்படை புரிதல் இருக்கும் கடைநிலைப் பணியாளர் கூட இப்படி ஒரு டுபாக்கூர் திட்டத்தை ஆதரிக்க மாட்டார். 

ஆனால் நம் அறிவாளிகளோ கிட்டத்தட்ட 5200 கோச்களை அப்படி மாற்றினார்கள். ஒரு கோச்சை மாற்ற செலவு 2 லட்சம் ரூபாய். அந்த 5200 கோச்களில் ஒரு நோயாளிக்கு கூட சிகிச்சை அளிக்க முடியவில்லை (எப்படி முடியும்?). இதுவரை ஒன்றையுமே பயன்படுத்தாததால் மீண்டும் பயணத்திற்கு பயன்படுத்தப்போகிறார்களாம். அப்படி மாற்ற ஒரு கோச்சிற்கு 1 லட்சம் ரூபாய் செலவாம். இதுக்கு பருத்திமூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்.

இவ்வளவு வரிப்பணத்தை தண்டமாக தங்கள் முட்டாள்த்தனத்தால் செலவழித்துவிட்டு, நாடு முழுவதும் கோடிக்கணக்கான தொழிலாளர்களை நடக்க விட்டுள்ளனர். 

ஒரு நாட்ல கூமுட்டைகள் இருக்கலாம். பக்‌ஷே ஒரு நாடே.....
- Sen balan


*முகநூல் பதிவு*

வெள்ளி, 22 மே, 2020

_அனைவரும் படித்து தெரிந்து வைத்து கொள்ள வேண்டிய முக்கியமான பதிவு இது._*

*_அனைவரும் படித்து தெரிந்து வைத்து கொள்ள வேண்டிய முக்கியமான பதிவு இது._*


         *🙏🏻நமசிவய🙏🏻*

*உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு தமிழ்நாடுதான், இங்கு மட்டும், நாற்பாதயிரம் கோயில்கள் உள்ளன, அவ்வளவு கோயில்கள் ஏன்? அவசியம் என்ன?*

சோழர் காலத்தில் தமிழ்நாடு தான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு.

*சுமார் 40,000 கோயில்களை சோழர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டினார்கள். அன்று உலகிலேயே உயர்ந்த கட்டிடம் தஞ்சை பெரிய கோவிலும், கங்கை கொண்ட சோழபுரமும்தான்.*

அப்போது வட அமெரிக்கா, தென் அமெரிக்கா கிடையாது. இலண்டன் ஒரு சிறு மீன் பிடிக்கும் கிராமமாக 1066 -இல் நிறுவப்பட்டது.

*தஞ்சை பெரிய கோபுரம் முழுவதும் தங்கத்தால் போர்த்தப்பட்டது. இது பற்றிக் கல்வெட்டும் உள்ளது. இந்தத் தங்கப் போர்வை 1311 - ஆம் வருடம் மாலிக்கபூரின் படைகளால் கொள்ளையடிக்கப்பட்டு, 500 யானைகள் மேல் எடுத்துச் செல்லப்பட்டது.*

இவ்வளவு கோவில்கள் கட்டுவதற்கு எங்கிருந்து பணம் வந்தது?

*எல்லாம் கடல் வாணிபம் ஏற்றுமதிதான். ஜப்பான் நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. ஆனால் ஏற்றுமதி வியாபாரம் மூலம் அவர்களுக்குத் தங்கம் கிடைக்கிறது. அதே போல் சோழ நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. இரும்பு சாமான்கள், துணிகள், கைவினைப் பொருட்கள், தானிய ஏற்றுமதி மூலம் தங்கம் கிடைத்தது.*

உலகிலேயே ஒரே சீராக 80 இலட்சம் ஏக்கர் விளை நிலம் காவிரிப் படுகைப் பகுதியில்தான் அமைந்துள்ளது. எங்கும் மூன்று போகச் சாகுபடிக்குக் காவிரியில் நீர் வந்து கொண்டிருந்தது.

*வியாபாரத்திலும், ஏற்றுமதியிலும், விவசாயத்திலும் கிடைத்த பணத்தை - தங்கத்தை சோழர்கள் படை பலத்தைப் பெருக்கிக் கொள்ள பயன்படுத்தினர்.*

மலேயா காடுகளிலிருந்தும், மைசூர் காடுகளிலிருந்தும் யானைகள் பிடித்து வரப்பட்டன.
பர்மாவிலிருந்து தங்கம் கொடுத்து குதிரைகள் வாங்கப்பட்டன. 

*ஏன் கோவிலை கட்டினார்கள்?*

*தமிழர்கள் ஏன், கோயில் கோயில் என்று அதைச் சுற்றியே வருகிறோம் ???*

தமிழகத்தை ஆண்ட பெரும்பாலான அரசர்கள் அவரவர் ஆண்ட பொழுது ஏன் மருத்துவமனை கட்டவில்லை, கல்விச்சாலை அமைக்கவில்லை ஆனால் கோயில்களை கட்டினார்கள்.

*கோயில்கள் எப்பொழுதெல்லாம் கட்டப்பட்டன ????*

மக்களுக்கு பிரித்து கொடுக்காமல், அரசன், அரசின் நிலங்களை, ஏன் கோயில்களுக்கு மானியமாக எழுதி வைத்தான் ????

*உலகின் குருவாக தமிழகம் ஆனது எப்படி ???*

எந்த ஒரு அரசும் பட்ஜட் போடும் பொழுது வரி வசூல் என்ன, அதில் அரசு நடத்த அதிகாரிகளுக்கு ஆகும் செலவு, மக்கள் நல திட்டங்களுக்கு ஆகும் செலவு ன்னு வரவு செலவை வைத்து தன்னிறைவு திட்டத்தை அடையத்தான் நிதிநிலை அறிக்கை போடுவார்கள்.

இதையேதான் தமிழக கோயில்கள் செய்தன.

*கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் ன்னு அதைத்தான் சொல்லி வெச்சாங்க.*

மன்னன் கோயில் கட்ட ஆரம்பித்தவுடன், கட்டுமான பணிக்கு அந்த ஊரை சுற்றி உள்ள கட்டுமான கலைஞர்கள், சிற்ப கலைஞர்கள், கல் தச்சர்கள், கட்டுமான பொருட்களான செங்கல், சுண்ணாம்பு போன்றவற்றை உற்பத்தி செய்வோர், அதை ஓரிடத்தில் இருந்து கோயில் கட்டும் இடத்திற்கு கொண்டு செல்லும் போக்குவரத்து, வர்ணம் அடிக்க, ஓவிய கலைஞர்கள், இப்படி அனைவருக்கும் வேலை வாய்ப்பு, அதுவும் அரசரால் கொடுக்கப்படும், அரசு வேலை.

*கோவிலுக்கு மானியமாக கொடுக்கப்படும் நிலங்கள், குத்தகை மூலமாக விவசாயிகளுக்கு விடப்பட்டு அதன் மூலம் விவசாய உற்பத்தி, அதற்கு ஒரு சமூகம்,  பாண்ட மாற்று முறையில், தன்னிறைவு பெற்ற பொருளாதாரம்.*

கோவிலுக்கு கொடுக்கப்பட்ட பசுமாடுகள், அதை கவனித்தல், அதற்கு ஒரு சமூகம், இதனால்  கோயிலுக்கும் அந்த கிராமத்தாருக்கும் பால் சார்ந்த பொருட்கள்.

*நெய்வேத்தியம் சமைக்க சமையல் கலைஞர்கள். அதற்கு ஒரு சமூகம்.*

சமையல் செய்ய பாத்திரங்கள் செய்ய மண்பானை செய்வோர் மற்றும் உலோக பாத்திரம் செய்வோர், அதற்கு ஒரு சமூகம். அவர்களுக்கு  தொடர்ந்து வேலை.

*நந்தவனம் மூலம் தெய்வத்திற்கு பூ மாலை மற்றும் அலங்கார சேவை செய்ய நந்தவனம் காப்போருக்கு வேலை. அதற்கு ஒரு சமூகம். அவருக்கு தொடர்ந்து வேலை இருக்க, அதற்கேற்ப கோவில் உற்சவங்கள்.*

மங்கள இசை இசைக்கும் கலைஞர்கள் ஓர் சமூகம். கூத்து கலைஞர்கள் என, 
அவர்களுக்கும் வருட மானியம் மற்றும் வேலை. மாலை வேளைகளில் ஆன்மீக கச்சேரி என்று மனதிற்கு இனிய பொழுது போக்கு நிகழ்ச்சிகள். 

*தெய்வத்தின் வஸ்திரங்கள் நெய்ய ஒரு சமூகம்.*

அந்த வஸ்திரங்களை துவைக்க ஓரு சமூகம், அவருக்கும் தொடர்ந்து கோவில் மானியம் மூலம் வேலை.

*கோயிலை சுத்தமாக வைத்துக்கொள்ள ஒரு தேவை, அதை செய்ய ஒரு சமூகம். அவருக்கும் கோயில் மூலம் மானியம், வருட வருமானம்.*

இவை அனைத்தையும் நிர்வாகம் செய்ய, கணக்கு பார்க்க, ஒரு சமூகம்.

*இவர்கள் அனைவரும் அவரவர் வேலையை பார்க்க, அதன் மூலம் வாழ்வாதாரம் பெறவும், கோயில் ஒரு மிகப்பெரிய தொழிற்சாலை. ஆன்மீகம் ஒட்டி வாழ்வாதாரம்.*

பெரு வெள்ளம் வந்து ஊரே மூழ்கி போனாலும், கோயிலின் கோபுரத்தில், கலசம் மூலம், செறிந்த விஞ்ஞான அறிவுடன், அதனுள் 12 வருடம் வரை கெடாத அந்த கிராமத்தில் மண்ணுக்கேற்ப விளையும் விளை பொருட்களின் விதை பொருட்கள்.

*12 வருடத்திற்கு ஒரு முறை அதை மாற்றி அமைத்து, மராமத்து பணிகள் மேற்கொள்ள மேற் சொன்ன அனைவருக்கும் ஒரு கூட்டு வேலை வாய்ப்பு.*

இப்படி அவர் அவருக்கு தெரிந்த பணி, அதை சார்ந்த சமூகம், ஒன்றிணைந்து தன்னையும் காப்பாற்றிக்கொண்டு, தன்னிறைவு வாழ்க்கை என வாழ்வதற்கு கட்டமைக்கப்பட்டதே, நம் ஹிந்து கோயில்கள்.

*ஊருக்கு ஒரு கோயில், அதை சுற்றிலும் அனைத்து சமூகம்,* 

அந்த அந்த ஊரை சுற்றி உள்ள இயற்கை வளங்கள் பாதுகாக்கபட்டு, மூலிகை மூலம் வைத்தியம், அதற்க்கென ஒரு சமூகம் என, 
ஊரை சுற்றியே, ஓர் தன்னிறைவு வாழ்க்கை. 
இப்படி அமைக்கப்பட்டது தான் நம் பொருளாதார கட்டமைப்பு.

*மாத சம்பளம் பணமாக, பணத்திற்கு பொருள், அதன் விலை ஏற்ற இறக்கம், பண வீக்கம், இவை எதுவுமே சாராமல் ஓர் தன்னிறைவு வாழ்க்கை.* 

இதை உடைக்கத்தான், கோயில்கள் தகர்க்கப்பட்டன. இதை தகர்க்கத்தான் கோயிலின் மேல் மாற்று மத படையெடுப்பு நடந்தது.

*கோயில்கள் இல்லாமல் போனால் வாழ்வாதாரம் கெடும் என அந்நிய சக்திகள் அறிந்திருந்தனர்.*

தெய்வங்களுக்கு உயிரூட்டி, அந்த தெய்வங்கள் அங்கே வாழ்வதாகவும், அந்த கோயிலின் சொத்துக்கள், அந்த தெய்வங்களின் சொத்துக்கள் என்றும்,

*எப்படி, உயிருள்ள ஒருவரின் சொத்தை அவர் சம்மதம் இல்லாமல் மற்றவர் அபகரித்து கொண்டாலும், அது அபகரித்தவரின் சொத்து ஆகாதோ, அதே போல, அனைத்து கோயிலின் சொத்துக்களும், அந்த கோயிலில் வாழும் அந்த தெய்வத்திற்கே சொந்தம் என்று காலம் காலமாக நமது சனாதன தர்மத்தில் இருக்கும் நம்பிக்கையும் வகுக்கப்பட்ட கொள்கையும்.*

உயிருள்ள ஒருவர், எப்படி தினமும் குளிப்பாரோ, உடை உடுத்தி கொள்வாரோ, தினமும் உணவு உண்பாரோ, நம் வாழ்வாதாரத்திற்கு உதவும் ஒருவரை நாம் எப்படி போற்றி கவனிப்போமோ, அப்படி  அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக, அனைவரின் சார்பாக,  பூஜைகளை கவனிக்க ஒரு சமூகம்.

  #இப்படி கோவிலை கட்டி சிற்பத்தை தெய்வம் ஆக்கி, அந்த தெய்வம் தான்எல்லா மனிதர்கள் மற்றும் ஜீவர்களுக்கும் ஜீவனம் செய்ய படி அளக்கின்றன, தெய்வத்தின் கீழ்தான் நாம் அனைவரும்,தெய்வம் தான் முதன்மை என்ற மெய்ஞானம் போதித்தி ஆச்சி செய்து வந்த நம் அரசர்கள்#

*இப்படி ஒரு கோயிலை வைத்து, ஆன்மீகம் மூலமாக ஒரு தன்னிறைவு பொருளாதாரத்தை உலகிற்கு வாழ்ந்து காட்டியதாலேயே, தமிழகம் உலக குருவாக திகழ்ந்தது‌.*

          🙏🏻ஆத்ம வணக்கம்🙏🏻

*🌞திருச்சிற்றம்பலம்🌙*

வியாழன், 21 மே, 2020

மது அருந்தும்பொழுது உடலில் என்ன நடக்கிறது?

மது அருந்தும்பொழுது 
உடலில் என்ன நடக்கிறது?

*நாம் மது 
(இனி ஆல்கஹால் அல்லது 
சாராயம் என்று சொல்வோம்) 
அருந்தும்பொழுது 
சிறிது அளவினை 
நம் வயிறு உறிஞ்சிக் கொள்ளும். 

பெரும்பாலான அளவை 
சிறுகுடல் உறிஞ்சிக் கொள்ளும். 

அதனால்தான் 
உணவு உண்டபின்னர் 
மது அருந்தினால் 
போதை ஏற சற்று நேரமாகின்றது.*

*சாராயத்தின் 
செறிவினைப் பொறுத்து 
அது எத்தனை வேகத்தில் 
நம் உடல் உறிஞ்சிக்கொள்கின்றது என்பது மாறுபடும். 

உதாரணமாக 
பீரை விட 
விஸ்கி, 
பிராந்தி, 
வோட்கா 
போன்றவைகள் 
அதிவேகமாக உறிஞ்சிக்கொள்ளப்படும்.*

*உறிஞ்சப்பட்ட சாராயம் 
உடனடியாக நம் ரத்தத்தில் கலந்து 
உடலெங்கும் ஓடத் துவங்கும். 

அதே சமயத்தில் 
நம் உடலும் அதனை வெளியேற்ற 
சற்று பிரயத்தனப்பட்டு வேலை செய்யத் துவங்கும். 

சிறுநீரகம் தன் பங்கிற்கு ஓரளவைச் சிறுநீரில் கலந்து வெளியேற்றும். 

நுரையீரல் தன் பங்கிற்குச் சில அளவை மூச்சுக்காற்றில் வெளியேற்றும். 

(அதனால்தான் Breath Analyserல் கண்டு பிடிக்கின்றார்கள்)*

*கல்லீரல் தன் பங்கிற்கு 
பெரும்பாலான அளவை ஆல்கஹாலை உடைத்து அசிட்டிக் அமிலமாக மாற்றும். 

இத்தனை பேர் சேர்ந்து அந்த ஆல்கஹாலை வெளியேற்றப் போராடிக்கொண்டிருக்கையில் நாம் அதனை விட வேகமாக அதிக அளவில் மது அருந்தினால்... என்னாகும்?*

*அதனால்தான் 
அவைகள் விரைவில் தம் இயல்பில் குன்றி வலுவிழந்து செயலிழந்து போகின்றன. 

இதுவே ஒரு வகையில் மெதுவான தற்கொலை முயற்சி மாதிரிதான்.*

*சரி, இனி ஆல்கஹாலின் செயல்பாடு மூளையினை எப்படிப் பாதிக்கின்றது. 

இரத்தத்தில் கலந்து உடலில் பயணிக்கும் ஆல்கஹால் நம் மூளைக்கும் ஒரு பயணம் போகும்.*

*அதன் அளவை BAC என்பார்கள். அதாவது Blood Alcohol Concentration. இரத்தத்தில் ஆல்கஹாலின் செறிவு.*

*BAC 0.03ல் இருந்து 0.12 சதவீதம் இருக்கையில், 

தான் ஒரு பெரிய பலசாலி, 
தன்னால் எதுவும் முடியும் என்று 
ஒரு எண்ணம் வரும். 

உலகில் எது வந்தாலும் சமாளிக்கும் தைரியம் தன்னிடம் உள்ளது என்று தோன்றும். 

இந்நிலையில் சரியான முடிவுகள் எதுவும் எடுக்க முடியாது. 

ஏனெனில், 
மனதில் முதலில் எது படுகின்றதோ அதுவே சரியானதாகத் தெரியும். 

அந்தச் சூழ்நிலையில் 
யாராவது எதாவது சொன்னாலும், 
அதற்கேற்றவாறே 
மனம் செயல்படத் தோன்றும்.*

*BAC 0.9ல் இருந்து 0.25 சதவீதம் இருக்கையில், 
தூக்கம் தூக்கமாக வரும். 

நினைவுகள் மழுங்கும். 

சற்று முன் நடந்த நிகழ்வுகள் கூட நினைவில் இருக்காது. 

வேகமாக இயங்க முடியாது. 

கையில் இருக்கும் மதுவைத் 
தடுமாறிக் கொட்டிவிட்டு 
அதனை வெறித்துப் பார்ப்பார்கள். 

உடல் ஒத்திசையாது. 

நிலை தடுமாறும். 

நடக்கையில் உடல் தள்ளாடும். 

கண் பார்வை மங்கும். 

கேட்கும் திறன், 
சுவை உணர்தல், 
தொடுதல் போன்ற 
உணர்வுகளில் தடுமாற்றம் 
அல்லது இல்லாமல் போய்விடும்.*

*BAC 0.18ல் இருந்து 
0.30 சதவீதம் இருக்கையில், 
தான் என்ன செய்கின்றோம் 
என்று அவருக்கே தெரியாது. 

குழப்பமாக இருக்கும். 

ஒன்று அதீத பாசக்காரராக 
மாறி விடுவார் அல்லது 
அதீத கோபக்காரராக மாறிவிடுவார். 

அதிகம் உணர்ச்சிவசப்படுவார். 

பார்வை தெளிவாக இருக்காது. 
பேச்சுக் குளறும். 

உடலின் Reflex செயல்படாது. 

தொடு உணர்வு நன்கு மழுங்கிவிடும். 

எதையேனும் எடுக்க வேண்டும் 
என்றால் 
கை அந்தப் பொருளின் பக்கத்தில் 
போய்த் துழாவிக்கொண்டிருக்கும். 

காரணம் 
பார்வை, 
மூளை, 
கை 
இவற்றிற்கிடையேயான 
ஒத்திசைவு இல்லாமல் போயிருக்கும். 

வலி தெரியாது.*

*BAC 0.25ல் இருந்து 0.4 சதவீதம் இருக்கையில், மட்டையாகி விடுவார்.

எந்தவொரு வெளித்தூண்டல்களும் அவரைப் பாதிக்காது. 

எழுந்து நிற்க முடியாது, 
நடக்க முடியாது. 

வாந்தி எடுக்கலாம். 
நினைவு தப்பிவிடலாம்.*

*BAC 0.35ல் இருந்து 0.50 சதவீதம் இருக்கையில், நினைவு முழுவதும் தப்பிவிடும். 

Reflex சுத்தமாகப் போய்விடும். கருவிழிகூட வெளிச்சத்தில் சுருங்காது விரியாது. 

உடல் சில்லிட்டுப் போகும். 
மூச்சு விடுதல் குறைந்து போகும். 

இதயத் துடிப்பு குறைந்து விடும். 
இறந்து போக அதிக வாய்ப்புள்ளது...

நன்றிகளும்
பிரியங்களும்.

திங்கள், 11 மே, 2020

Amazon Business Books for low price

1. Business Communication for Success  Communication is key to your success - Buy Now

 

2. Strategic Management: For Business strategy - Buy Now

 

3. How to Manage your Boss: *Developing the perfect working Relationship* - Buy Now

 

4. Functional management info system - Buy Now

 

 

5. Database Management System (DBMS) -NEW - Buy Now

 

6. Database System Concepts - Database Management System (DBMS) - Buy Now


ஞாயிறு, 10 மே, 2020

*வேலை இழப்பு / வியாபாரத்தில் ஏற்பட்ட பாதிப்பு/ பண நடமாட்டம் குறைவு காரணமாக*

*காவல்துறை சார்பில் அருமையான எச்சரிக்கை..* 👌👌👌👌

*முன் எச்சரிக்கை செய்தி*

*வேலை இழப்பு / வியாபாரத்தில் ஏற்பட்ட பாதிப்பு/ பண நடமாட்டம் குறைவு காரணமாக*

*பழைய குற்றவாளிகள்/ புதிதாக உருவாகும் புது குற்றவாளிகள்*

*குற்ற சம்பவங்களில் திடீர் முன்னேற்றம் ஏற்படக்கூடும்.*

 1. *மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், இதில் பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் சிறுவர்கள் / பெண்கள், வேலை செய்யும் பெண்கள் / ஆண்கள் உள்ளனர்.*

 2. *விலையுயர்ந்த கடிகாரங்களை அணிய வேண்டாம்.*

 3. *விலையுயர்ந்த சங்கிலிகள், வளையல்கள், மோதிரங்கள் அணிய வேண்டாம் உங்கள் கை பைகளில் கவனமாக இருங்கள்.*

 4. *உங்கள் மொபைல் போன்களை அதிகம் பொதுவில் பயன்படுத்த வேண்டாம்.  மொபைல் பயன்பாட்டை பொதுவில் குறைக்க முயற்சிக்கவும்.*

 5.  *அந்நியர்களுக்கு லிப்ட் சவாரி கொடுக்க வேண்டாம்.*

 6. *தேவையான பணத்தை விட அதிகமாக எடுத்துச் செல்ல வேண்டாம்.*

 7.  *நீங்கள் வெளியில் செல்லும்போது உங்கள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பாதுகாப்பாக வைத்திருங்கள்.*

 8. *உங்கள்  மனைவி மற்றும் குழந்தைகளின் நலனை சரிபார்க்க ஒவ்வொரு முறையும் வீட்டிற்கு போன் பண்ணவும்*

 9.  *வீட்டிலுள்ள பிரதான கதவிலிருந்து பாதுகாப்பான தூரத்தை வைத்திருங்கள், முடிந்தால் கிரில் வாயில்களை பூட்டிக் கொண்டு கிரில்லுக்கு அருகில் செல்ல வேண்டாம்.*

 10.  *குழந்ததைகளை சீக்கிரம் வீடு திரும்புமாறு அறிவுறுத்துங்கள்.*

 11.  *வீட்டை அடைய எந்தவொரு ஒதுங்கிய அல்லது குறுக்கு வெட்டு சந்துகளில் நுழைய வேண்டாம், அதிகபட்ச பிரதான சாலைகளை முயற்சித்துப் பயன்படுத்தவும்*
.
 12.  *நீங்கள் வெளியே இருக்கும் போது உங்கள் சுற்றுப்புறங்களை ஒரு கண் வைத்திருங்கள்.*

 13.  *எப்போதும் கையில் அவசர எண்ணை வைத்திருங்கள்*
.
 14.  *மக்களிடமிருந்து பாதுகாப்பான தூரத்தை வைத்திருங்கள்*
.
 15.  *பொது மக்கள் பெரும்பாலும் முகமூடி அணிந்திருப்பார்கள் *.  அடையாளம் காண்பது கடினம்.*

 16.  *வண்டி சேவைகளைப் பயன்படுத்துபவர்கள் உங்கள் பயண விவரங்களை பெற்றோர், உடன்பிறப்புகள், உறவினர்கள், நண்பர்கள் அல்லது பாதுகாவலர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.*

 17. *அரசு பொது போக்குவரத்து முறையை முயற்சி செய்து பயன்படுத்தவும்*
.
 18. *நெரிசலான பேருந்துகளைத் தவிர்க்கவும்*
.
 19.  *உங்கள் தினசரி நடைப்பயணத்திற்குச் செல்லும்போது காலை 6.00 மணியளவில் முயற்சி செய்யுங்கள், மாலை அதிகபட்சமாக இரவு 8.00 மணிக்குள் பிரதான சாலைகளைப் பயன்படுத்துங்கள்.  வெற்று வீதிகளைத் தவிர்க்கவும்.*

 20  *குழந்தைகள் கல்வி வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டியிருந்தால், பெரியவர்களை கைவிட்டு அழைத்துச் செல்லலாம்.*

 21. *உங்கள் வாகனங்களில் எந்த மதிப்புமிக்க பொருட்களையும் விட வேண்டாம்.*

 *இது குறைந்தது 3 மாதங்களாவது அல்லது ஒட்டுமொத்த நிலைமை  மேம்படும் வரை பின்பற்றப்பட வேண்டும்.*
 *சமூக  அக்கறையோடு!*

Popular Posts

Facebook

Blog Archive