பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

புதன், 11 பிப்ரவரி, 2015

தமிழ் இணையதளங்களுக்கான விளம்பர சேவைக்கு மூடு விழா !

tamillanguage

விண்டோஸ் 7 க்கான தொழில்நுட்ப மேம்படுத்துதலை மைக்ரோசாப்ட் நிறுவனம் நிறுத்தியது.

windows-7-box
இதனால் யாரும் பயப்படத் தேவையில்லை. தங்களின் புதிய பதிப்பாக வர  இருக்கும்  விண்டோஸ் 10 இயக்குதளத்தை நேர்த்தியாக வடிவமைக்க முயன்று வரும் இன் நிறுவனம். தனது விண்டோஸ் 8 பெற்ற கசப்பான விமர்சனங்களை நீக்கும் வண்ணம் பல முயற்சிகள் செய்து வருகிறது.
நம்மில் பலரும் விண்டோஸ் XP யே நல்லா இருக்கே என பயன்படுத்தி வருகிறோம். இந்தியாவில் காசு கொடுத்து இயக்குதளம் வாங்குவோர் எண்ணிக்கை குறைவாக உள்ளது, ஆனால் அந்த மென்பொருள்கள் மீது பில்கேட்சை விட அதிகமாக விமர்சனம் செய்வோம்.​ 7 இல் உள்ள பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தொடர்ந்து 2020 வரை தீர்வுகளை அளிப்போம் என மைக்ரோசாப்ட் உறுதியளித்துள்ளது.

சனி, 7 பிப்ரவரி, 2015

விண்டோஸ் பரிணாமம் பற்றிய சில தகவல்கள்

-----------------------------------
* Windows 1.01 (1985)விண்டோஸ்1.0

 நவம்பர் 20,1985 அன்று வெளியிடப்பட்டது.அந்த காலத்தில் கணினி உபயோகம் கடினமாக இருந்த சமயத்தில் விண்டோஸ் 1.0 பதிப்பு வெளியானது. அது ஓரளவு எளிமையாகவும், பல விசயங்களை உள்ளடக்கியும் இருந்தது இது 16bit graphic operating environment கொண்டது. அதை PC தளத்திற்கு ஒரு Multi-tasking graphic பயனர் இடைமுகத்தை சார்ந்த இயக்க சூழலில் செயல்படுத்த மைக்ரோசாப்ட் முதல் முயற்சியாக இருந்தது.

* Windows 2.03 (1987)

முதல் பதிப்பில் இருந்து கண்ட்ரோல் பேனலில் சில திருத்தங்களுடன் 1987-இல் இரண்டாம் பதிப்பு வெளியானது.விண்டோஸ் 2.0 நெருக்கமாகவிண்டோஸ் ்1.0 விடவிண்டோஸ் 2.3 மைக்ரோசாப்ட்தான்முன் வெளியீடு விளம்பரம்,போட்டி கூறப்படுகிறது.

* Windows 2.1 (1988)

மே27,1988அன்று வெளியிடப்பட்டது.இரண்டாம் பதிப்பில் இருந்து புதியதாக பெயிண்ட் மென்பொருள் இணைத்து மேலும் சில மேம்பட்ட வசதிகளுடன் மூன்றாம் பதிப்பு வெளியானது.

* Windows 3.0 (1990)

மே22,1990 அன்று வெளிவந்தது. இந்த மூன்றாம் பதிப்பில் FILE MANAGER ஆனது MS DOS முறையிலிருந்து மேம்படுத்தப்பட்டு புதிய FILE MANAGER மற்றும் PROGRAM MANAGER உருவாக்கப்பட்டது.

* Windows 3.1 (1992)

1992மற்றும்1994இடையில்வெளியிடப்பட்டது,இந்த பதிப்பில் HARD DISK இல் 32 BIT சப்போர்ட் செய்யும் வகையில் மாற்றம் செய்யப்பட்டது. முதல் முறையாக
Minesweeper game உருவாக்கி செயல்படுத்தப்பட்டது.

* Windows 95 (August 1995)

விண்டோஸ் 95 நுகர்வோர ்சார்ந்த கிராபிக்கல் பயனர் இடைமுகத்தை சார்ந்த இயக்க அமைப்பு இருந்தது.இது மைக்ரோசாப்ட் ஆகஸ்ட் 24,1995 அன்று வெளியிடப்பட்டது,மற்றும் நிறுவனத்தின் ்முந்தைய விண்டோஸ் தயாரிப்புகள் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை இருந்தது.வளர்ச்சியிலும் இது விண்டோஸ் 4.0 அல்லது அககுறிப் பெயராக Chicago மூலம் குறிப்பிடப்படுகிறது.

* Windows 98 (1998)

* Windows 2000 (February 2000)

விண்டோஸ் 2000 (மேலும் ்Win2K என குறிப்பிடப்படுகிறது) ஒரு interruptible,கிராபிக்கல் ்மற்றும் uni processor அல்லது சமச்சீரான பல செயலி 32பிட் ன்டெல் x86 கணினிகளில் அல்லது வேலை வடிவமைக்கப்பட்டுள்ளது என்று வணிக நோக்கிய இயக்க முறைமை உள்ளது.இது இயக்க அமைப்புகள் ்மைக்ரோசாப்ட் விண்டோஸ் NT லைன் பகுதியாக உள்ளது மற்றும் February 17,2000 அன்று வெளியிடப்பட்டது.இதுஏப்ரல் 2003 இல் அக்டோபர் 2001மற்றும் Windows Server 2003 ல்விண்டோஸ் எக்ஸ்பி மூலம் வெற்றி பெற்றது.விண்டோஸ் 2000 ஒரு கலப்பின kernel இயக்க அமைப்பு வகைப்படுத்தப்படுகிறது.

* Windows ME Millennium Edition (July 2000)

இந்த பதிப்பு "விண்டோஸ் மீ" அல்லது "விண்டோஸ் மில்லினியம்"என அழைக்கப்படுகிறது. மிகவும் பிரபலமான இந்தப் பதிப்பு தற்போதைய விண்டோஸின் சில செயல்பாடுகளை விட சிறந்த செயல்பாட்டைக் கொண்டு இயங்குகிறது.

* Windows XP (October 2001)

* Windows Vista (January 2007)

இந்தப் பதிப்பின் முகப்பு மட்டும் பிரபலம். ஆனால் சிறந்த பதிப்பாக அனைவராலும் அங்கீகரிக்கப்படவில்லை. இருந்தாலும் முந்தைய பதிப்பில் இருந்து நிறைய மாறுபாடுகள் கொண்டிருந்தது.ஜனவரி 30,2007 அன்று,அதுபொது மக்களுக்கு உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.

* 2009 - Windows 7

இன்றைய தேதிக்கு விண்டோஸின் சிறந்த பதிப்பு இது. பக்க இணைப்புகள் மற்றும் நிறைய மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் இந்த பதிப்பில் புதிதாக இணைக்கப்பட்டன. இதனால் விண்டோஸ்98 மற்றும் விண்டோஸ் எக்ஸ்பி க்கு அடுத்த மைல் கல்லாக இந்தப் பதிப்பு உள்ளது.

* 2012 - Windows 8

* Windows 10 ( 2015)

விரைவில்
நன்றி
ஜீனியஸ்

 "ThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்"
நட்புடன்,
ஸ்ரீபரன்
விண்டோஸ் பரிணாமம் பற்றிய சில தகவல்கள்
-----------------------------------

* Windows 1.01 (1985)விண்டோஸ்1.0

நவம்பர் 20,1985 அன்று வெளியிடப்பட்டது.அந்த காலத்தில் கணினி உபயோகம் கடினமாக இருந்த சமயத்தில் விண்டோஸ் 1.0 பதிப்பு வெளியானது. அது ஓரளவு எளிமையாகவும், பல விசயங்களை உள்ளடக்கியும் இருந்தது இது 16bit graphic operating environment கொண்டது. அதை PC தளத்திற்கு ஒரு Multi-tasking graphic பயனர் இடைமுகத்தை சார்ந்த இயக்க சூழலில் செயல்படுத்த மைக்ரோசாப்ட் முதல் முயற்சியாக இருந்தது.

* Windows 2.03 (1987)

முதல் பதிப்பில் இருந்து கண்ட்ரோல் பேனலில் சில திருத்தங்களுடன் 1987-இல் இரண்டாம் பதிப்பு வெளியானது.விண்டோஸ் 2.0 நெருக்கமாகவிண்டோஸ் ்1.0 விடவிண்டோஸ் 2.3 மைக்ரோசாப்ட்தான்முன் வெளியீடு விளம்பரம்,போட்டி கூறப்படுகிறது.

* Windows 2.1 (1988)

மே27,1988அன்று வெளியிடப்பட்டது.இரண்டாம் பதிப்பில் இருந்து புதியதாக பெயிண்ட் மென்பொருள் இணைத்து மேலும் சில மேம்பட்ட வசதிகளுடன் மூன்றாம் பதிப்பு வெளியானது.

* Windows 3.0 (1990)

மே22,1990 அன்று வெளிவந்தது. இந்த மூன்றாம் பதிப்பில் FILE MANAGER ஆனது MS DOS முறையிலிருந்து மேம்படுத்தப்பட்டு புதிய FILE MANAGER மற்றும் PROGRAM MANAGER உருவாக்கப்பட்டது.

* Windows 3.1 (1992)

1992மற்றும்1994இடையில்வெளியிடப்பட்டது,இந்த பதிப்பில் HARD DISK இல் 32 BIT சப்போர்ட் செய்யும் வகையில் மாற்றம் செய்யப்பட்டது. முதல் முறையாக Minesweeper game உருவாக்கி செயல்படுத்தப்பட்டது.

* Windows 95 (August 1995)

விண்டோஸ் 95 நுகர்வோர ்சார்ந்த கிராபிக்கல் பயனர் இடைமுகத்தை சார்ந்த இயக்க அமைப்பு இருந்தது.இது மைக்ரோசாப்ட் ஆகஸ்ட் 24,1995 அன்று வெளியிடப்பட்டது,மற்றும் நிறுவனத்தின் ்முந்தைய விண்டோஸ் தயாரிப்புகள் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை இருந்தது.வளர்ச்சியிலும் இது விண்டோஸ் 4.0 அல்லது அககுறிப் பெயராக Chicago மூலம் குறிப்பிடப்படுகிறது.

* Windows 98 (1998)

* Windows 2000 (February 2000)

விண்டோஸ் 2000 (மேலும் ்Win2K என குறிப்பிடப்படுகிறது) ஒரு interruptible,கிராபிக்கல் ்மற்றும் uni processor அல்லது சமச்சீரான பல செயலி 32பிட் ன்டெல் x86 கணினிகளில் அல்லது வேலை வடிவமைக்கப்பட்டுள்ளது என்று வணிக நோக்கிய இயக்க முறைமை உள்ளது.இது இயக்க அமைப்புகள் ்மைக்ரோசாப்ட் விண்டோஸ் NT லைன் பகுதியாக உள்ளது மற்றும் February 17,2000 அன்று வெளியிடப்பட்டது.இதுஏப்ரல் 2003 இல் அக்டோபர் 2001மற்றும் Windows Server 2003 ல்விண்டோஸ் எக்ஸ்பி மூலம் வெற்றி பெற்றது.விண்டோஸ் 2000 ஒரு கலப்பின kernel இயக்க அமைப்பு வகைப்படுத்தப்படுகிறது.

* Windows ME Millennium Edition (July 2000)

இந்த பதிப்பு "விண்டோஸ் மீ" அல்லது "விண்டோஸ் மில்லினியம்"என அழைக்கப்படுகிறது. மிகவும் பிரபலமான இந்தப் பதிப்பு தற்போதைய விண்டோஸின் சில செயல்பாடுகளை விட சிறந்த செயல்பாட்டைக் கொண்டு இயங்குகிறது.

* Windows XP (October 2001)

* Windows Vista (January 2007)

இந்தப் பதிப்பின் முகப்பு மட்டும் பிரபலம். ஆனால் சிறந்த பதிப்பாக அனைவராலும் அங்கீகரிக்கப்படவில்லை. இருந்தாலும் முந்தைய பதிப்பில் இருந்து நிறைய மாறுபாடுகள் கொண்டிருந்தது.ஜனவரி 30,2007 அன்று,அதுபொது மக்களுக்கு உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.

* 2009 - Windows 7

இன்றைய தேதிக்கு விண்டோஸின் சிறந்த பதிப்பு இது. பக்க இணைப்புகள் மற்றும் நிறைய மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் இந்த பதிப்பில் புதிதாக இணைக்கப்பட்டன. இதனால் விண்டோஸ்98 மற்றும் விண்டோஸ் எக்ஸ்பி க்கு அடுத்த மைல் கல்லாக இந்தப் பதிப்பு உள்ளது.

* 2012 - Windows 8

அநேகமாகஇந்தஆண்டு இறுதியில் வெளிவரும் என நினைக்கிறேன். முந்தய பதிப்புகளை காட்டிலும், தோற்றம், செயல்பாடுகள், வேகம் போன்றவற்றில் மேம்பட்டு இருக்கும் வகையில் இருக்கும் எனமைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.

* Windows 10 ( 2015)
 விரைவில்

நன்றி
ஜீனியஸ்

தமிழில் புதிய மொபைல்களை பற்றியும், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் டிப்ஸ் பற்றியும் அறிந்துக்கொள்ள

FB Page:https://www.facebook.com/thagavalguru1

மேலும் மொபைல் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட உங்கள் எந்த ஒரு சந்தேகத்தையும் நிவர்த்தி செய்ய/நீங்கள் விருப்பபட்டால் மற்றவர்களுக்கும் பதிலளிக்க "ThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்" குழுமத்திற்க்குவருகை தாருங்கள்.

https://www.facebook.com/groups/ThagavalGuru/

நட்புடன்,
ஸ்ரீபரன்

பென்டிரைவில் write protected பிழையை நீக்குவது எப்படி?












இன்று நாம் பயன்படுத்தும் கணினிச் சார்ந்த டிவைஸ்களில் முக்கிய பங்கு வகிப்பது பென்டிரைவ் என்றால் அது மிகையாது. காரணம் இதன்மூலம் நமக்கு வேண்டிய தகவல்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்தில் எளிதாக எடுத்துச்செல்ல முடியும் என்பதே.

மேலும் தற்போதுள்ள நவீன பென்டிரைவ்களில் (New Type of Pendrive) கோப்புகளின் அளவை மேலும் நீடித்து வைத்துக்கொள்ள முடியும் என்பது கூடுதல் சிறப்பு.. அதாவது பென்டிரைவில் 1GB, 2GB, 4GB, 6GB, 8 GB, என ஆரம்பித்து, தற்பொழுது 64 GB கொள்ளவு கொண்ட பென்டிரைவ்களும் இருப்பதாக கேள்விப்படுகிறோம்.இத்தகையப் பயன்மிக்க பென்டிரைவ்(pendrive) அல்லது மெமரிகார்ட்(memory card) போன்ற ரீமூவபிள் டிவைஸ்களை நாம் பயன்படுத்தும்பொழுது சில சமயம் cannot copy files and folder, drive is write protected. remove write protection or use another disk என்பன போன்ற பிழைச் செய்திகளைக் காட்டும்.

இவ்வாறான பிழைச் செய்திகளை(Error) வருவதற்கு வைரஸ் போன்ற தீங்கிழைக்கும் புரோகிராம்களே(Virus Program) காரணமாக இருக்கும்.

இதுபோன்ற பிழைச்செய்திகள் வருவதற்கு ஒரு முக்கிய காரணம் உங்கள் கணினியில் உள்ள Registry கோப்பில் வைரஸ்கள் 'கை' வைப்பதுதான். அதனாலேயே பெரும்பாலான பிழைச்செய்திகள் இவ்வாறு தோன்றும்.

write protected பிழைச் செய்தி காட்டினால் என்ன செய்வது?

1.உங்களுடைய கணினியில் Start பட்டன் அழுத்துங்கள்

2.Run விண்டோவை திறவுங்கள்.

3.அதில்

reg add "HKLM\System\CurrentcontrolSet\Control\StorageDevicePolicies" /t Reg_dword /vWriteProtect /f/d 0

என கொடுத்து ok பட்டனை அழுத்துங்கள்.

இப்பொழுது உங்களுடைய கணினியில் உள்ள பென்டிரைவை எடுத்துவிட்டு மீண்டும் கணினியில் இணைத்து புணிபுரியத் தொடங்கலாம். இப்பொழுது Write Protected பிழைச்செய்தி தோன்றாது.


 

Facebook Account ஐ முழுவதுமாக Delete செய்வது எவ்வாறு?


ThagavalGuru's photo.
ThagavalGuru's photo.
ThagavalGuru's photo.










சிலர் உபயோகம் இல்லாத Facebook பக்கங்களை Deactivate செய்து வைப்பார்கள். ஆனால் Deactivate செய்த Facebook பக்கம் Register செய்யப்பட்டEmail ID அல்லது Phone Nummber ஐ கொண்டு வேறு Facebook Account திறக்கமுடியாமல் இருக்கும். அதே போன்று Deactivate செய்த Account இல் இருக்கும் Username மீட்டெடுக்கவும்முடியாமல் இருக்கும்.

இதற்காக ஒரு வழி உள்ளது 14 நாட்களில் உங்கள் facebook பக்கத்தைDelete செய்து விடலாம்.

1. உங்கள் கணனியில் Internet Browser இல் ஒரு Tab இல் நீங்கள் Delete செய்ய விரும்ம்பும் Facebook பக்கத்தை Login செய்து கொள்ளுங்கள்.

2. மற்ருமொரு Tab ஐ Open செய்து கீழே உள்ள Link ஐ Open செய்யுங்கள்.
https://www.facebook.com/help/delete_account

3. அதில் Delete செய்வதற்கு Delete என்று காட்டும். அதற்கு Click செய்து உங்கள் Password மற்றும் அதில் தரப்படும் கப்ச Code ஐ சரியாக நிரப்பி உங்கள் Facebook பக்கத்தை Delete செய்து கொள்ளுங்கள்.

14 நாட்களுக்குள் மீண்டும் உங்கள் Account ஐ மீட்டெடுப்பது எவ்வாறு?அது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல உங்கள் Facebook Email/Username மற்றும் Password கொடுத்து open செய்யுங்கள் Cancel Deleting நு காட்டும் அதுக்கு Click செய்தால் போதும்.

அதிக நேரம் தூங்குவது ஆபத்தானது!



அதிக நேரம் தூங்குவது ஒரு விதத்தில் நல்லது தான் என்றாலும், மோசமான பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும்.தினமும் 9 மணிநேரம் தூங்குபவர்களுக்கு சர்க்கரை நோய் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் கூறுகிறது.
அதிக நேரம் தூங்குவதால் கொழுப்புகள் உடலில் அப்படியே தங்கிவிடுகிறது, இதனால் மோசமான பக்கவிளைவுகள் ஏற்படும், உடல் பருமனடையும்.
அதிகமாக தூங்குவதால் மூளையில் உள்ள நரம்பியக்கடத்திகளில் தாக்கம் ஏற்படும், இதனால் கடுமையான தலைவலி, முதுகுவலி உண்டாகும்.
மிக முக்கியமாக பாதிக்கப்பட போவது உங்கள் இதயமே, இதய நோய்கள் ஏற்படுவதற்கு நீங்களே காரணமாகி விட வேண்டாம்.

நகம் கடிக்கும் பழக்கம் இருக்கா? உங்களுக்கான எச்சரிக்கை தகவல்

சுகாதார செய்தி

பெரும்பாலான நபர்களுக்கு நகம் கடிக்கும் பழக்கம் உண்டு, ஆனால் இது மிகவும் மோசமான ஒன்றாகும்.நகம் கடிப்பதால் பல்வேறு ஆரோக்கிய பிரச்னைகளை சந்திக்க நேரிடும், இதனை ஆரம்பத்திலேயே நிறுத்தி விடுவது நல்லது.
* நகங்களை கடிப்பதால், நகத்தை சுற்றியுள்ள சருமம் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும்.
* சில சமயங்களில் நகங்களை கடிப்பவர்கள் அதை விழுங்கவும் வாய்ப்புகள் உண்டு, இப்படி விழுங்குவதால் வயிற்றில் செரிமானம் ஆகாமல் அப்படியே தங்கி பெரும் பிரச்னையை ஏற்படுத்திவிடும்.
* சிறுவர்கள் அடிக்கடி நகம் கடிக்கும் பட்சத்தில், செரிமானம் ஆகாத உணவுத் துகள்கள் குடல் வால் பகுதியில் சேகரமாகும். இதனால் அப்பன்டிசைடிஸ் எனப்படும் குடல் வால் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உண்டு.
* எப்போதும் வாயில் கையை வைத்தவாறு இருப்பதால், அப்பகுதியில் இரத்தக்கசிவு மற்றும் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருக்கும்.
* தொடர்ந்து பற்களால் நகங்களை கடிக்கும் போது அது பற்களின் எனாமலை பாதித்துவிடும், பற்களில் பக்டீரியா, வைரஸ் கிருமிகள் ஊடுருவி மேல் தாடையையும் கீழ் தாடையையும் முழுதாக மூட முடியாத நிலை கூட ஏற்படும்.
* நகம், பாக்டீரியா வளரும் இடம். சல்மனெல்லா(Salmonella), இ.கோலி(E.Coli) பக்டீரியாக்கள் நகம், விரல் நுனிகளில் இருக்கும் அழுக்குகளில் இருக்கின்றன. இதனால் நகங்களைக் கடிக்கும் போது அவை வாய் வழியே உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவி எளிதாய் நோய் தொற்றிக்கொள்ளும்.
* நகம் கடிக்கும் பழக்கம் அடிக்கடி இருந்தால், புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளன.

undefined

தலைமுடியை பராமரிக்க ஆண்களுக்கான சூப்பர் டிப்ஸ்

சுகாதார செய்தி

ஆண்களானாலும் சரி, பெண்களானாலும் சரி தலைமுடியை பராமரிப்பது மிகவும் முக்கியம்.ஏனெனில் இப்போதெல்லாம் இளவயதில் வழுக்கை, வெள்ளை முடி என பல பிரச்னைகள் வருகின்றது.
தலைமுடி சீராக வளர எண்ணெய் தேய்ப்பது மிக அவசியமான ஒன்றாகும், மேலும் மசாஜ் செய்வதும் தலையின் இரத்த ஓட்டத்தை சீராக்கும்.
தலைமுடியை பொதுவாக இவ்வாறு பிரிக்கலாம்

- வறண்ட
- எண்ணெய் பதமுள்ள
- இயல்பான

உங்கள் தலைமுடிக்கு ஏற்றவாறு ஷாம்பு, கண்டிஷனர் மற்றும் பராமரிப்பு பொருட்களை தெரிவு செய்வது அவசியம்.
இதனை தெரிவு செய்வதில் குழப்பம் இருந்தால் சரும மருத்துவரை கலந்து ஆலோசிக்க வேண்டும்.
வாரத்திற்கு இருமுறையாவது ஷாம்பு போட்டு குளிப்பது அவசியம், ஷாம்புவை தேர்ந்தெடுத்து பயன்படுத்திய பிறகு அடிக்கடி மாற்றுவது தேவையில்லாத பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
கற்றாழை
தலைமுடிக்கு வலிமையையும், பளபளப்பையும் தருவதில் கற்றாழை முக்கிய பங்கு வகிக்கிறது.
கற்றாழையின் ஜெல் போன்ற பசையை ஸ்கால்ப்பில் அழுத்து தேய்க்க வேண்டும்.
இவ்வாறு கற்றாழையின் ஜெல்லை வாரம் இருமுறை தேய்த்து வந்தால் முடி உதிர்வது படிப்படியாக குறையும்.
வெந்தயம்
2 அல்லது 3 மேசைக்கரண்டி வெந்தயத்தைத் தண்ணீரில், 8- 10 மணி நேரம் ஊற வைத்து, அதனை பசை போல அரைத்து தலையில் தடவ வேண்டும்.
இப்படி செய்தால் தலைமுடி உதிர்வது குறைவதுடன், பொடுகுத் தொல்லையிலிருந்தும் பாதுகாக்கும்.
ஆரஞ்சு பழத் தோல்
ஆரஞ்சு பழத் தோல்களை மிக்ஸியில் போட்டு அரைத்து, தலைமுடியில் வாரமொருமுறை தடவிக் குளித்தால், பொடுகுத் தொல்லை நீங்கும்.
வேப்பிலை
வேப்பிலையை அரைத்து பசை போலாக்கி, அதனைத் தலையில் தடவி குளித்தால், முடி உதிர்வது குறையும்.
மேலும் வேப்பிலைப் பசையுடன் சிறிது தேனும், ஆலிவ் எண்ணெயும் சேர்த்துக் கொண்டால் சிறந்த பலனை பெறலாம்.
செம்பருத்தி
தேங்காய் எண்ணெய், செம்பருத்தி மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.
இதனை இரவு தூங்கும் போது தலையில் தடவி, காலையில் நீரில் நன்கு அலசினால், வலிமையான தலைமுடியை பெறலாம்.
எண்ணெய் மசாஜ்
ஆரோக்கியமான மற்றும் சீரான தலைமுடிக்கு எண்ணெய் தேய்ப்பது அவசியம். குறிப்பாக மசாஜ் செய்வதால் தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.
பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயை கொண்டு மசாஜ் செய்வது நல்ல பலனை அளிக்கும்.
அதிலும் தேங்காய் பால் கொண்டு மசாஜ் செய்தால் வறட்சியை தடுத்து மென்மையாக்குகிறது.
undefined

சிறுநீரகத்தை பாதிக்கும் மோசமான பழக்கங்கள்!

மருத்துவ செய்தி

தற்போதைய காலகட்டத்தில் சிறுநீரக பாதிப்புகளை சந்திக்கும் மனிதர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.சிறுநீரகங்கள் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் நாம் மேற்கொள்ளும் பழக்கவழக்கங்களும், உணவுப் பொருட்களும் தான்.
சிறுநீரகங்கள் உடலில் பல்வேறு பணிகளை மேற்கொள்கிறது. அதில் ஹார்மோன்களை உற்பத்தி செய்வது, இரத்தத்தை சுத்திகரிப்பது, கனிமச்சத்துக்களை உறிஞ்சுவது, சிறுநீரைப் பிரிப்பது, உடலின் அல்கலைன் அமிலத்தை சீராக பராமரிப்பது போன்றவை குறிப்பிடத்தக்கவை.
ஆகவே சிறுநீரக பாதிப்பு ஏற்படாமல் இருக்கு சில பழக்கவழக்கங்களை மேற்கொள்வது நல்லது.
சோடாக்கள்
சோடா அதிகம் குடித்து வந்தால சிறுநீரகங்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படும். இதற்கு காரணம், புரோட்டீன் சிறுநீரகத்தில் அதிகம் தேங்கப்பட்டு, அது சிறுநீரகத்தில் பெரும் தீங்கை விளைவிக்கும்.
வைட்டமின் பி6 குறைபாடு
சிறுநீரகம் பாதிக்கப்படுவதற்கு வைட்டமின் பி6 குறைபாடும் ஒன்று.
வைட்டமின் பி6 குறைபாட்டினால் சிறுநீரக கற்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது, எனவே தினமும் குறைந்தது 1.3 மி.கி வைட்டமின் பி6 எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த வைட்டமின் பி6 மீன், கொண்டைக்கடலை போன்றவற்றில் அதிகம் இருக்கும்.
உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது
சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி பெரிதும் உதவியாக இருக்கும்.
உடல் எடையை சீராக பராமரித்து வந்தாலும் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். ஆகவே அன்றாடம் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.
மக்னீசியம் குறைபாடு
மக்னீசியம் குறைபாடு இருந்தாலும் சிறுநீரக பிரச்சனைகள் ஆரம்பமாகும். உடலுக்கு போதிய மக்னீசியம் கிடைக்காவிட்டால், கால்சியம் சரியான உடலால் உறிஞ்சப்படாமல் மற்றும் உட்கிரகித்துக் கொள்ளாமல் போகும்.
இப்படி இருந்தால் சிறுநீரகத்தில் கால்சியம் அதிகம் தேங்கி சிறுநீரக கற்கள் ஏற்படும். ஆகவே இவற்றைத் தவிர்க்க காய்கறிகள், பீன்ஸ், நட்ஸ், அவகேடோ போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்து வர வேண்டும்.
போதிய தூக்கம் இல்லாதது
தினமும் சரியாக தூங்கி எழாவிட்டாலும் சிறுநீரக பாதிப்பு ஏற்படும். எனவே அன்றாடம் போதிய அளவில் தூங்கி எழ வேண்டும்.
இரவு நேரத்தில் தான் சிறுநீரக திசுக்கள் புதுப்பிக்கப்படும். அப்போது சரியான தூக்கத்தை மேற்கொள்ளதால் இருந்தால் சிறுநீரகமானது நேரடியாக தாக்கப்படும்.
போதிய அளவில் தண்ணீர் குடிக்காதது
தினமும் போதிய அளவில் தண்ணீர் குடிக்காமல் இருப்பதால், சிறுநீரக இயக்கம் பாதிக்கப்படும்.
நீங்கள் தினமும் சரியான அளவில் தண்ணீர் குடித்து வருகிறீர்கள் என்பதை சிறுநீர் கொண்டு கண்டுபிடிக்கலாம்.
சிறுநீரை அடக்குவது
சிறுநீரை அடக்கி வந்தால் சிறுநீர்ப்பையின் அழுத்தம் அதிகரித்து, அதனால் சிறுநீரகம் பாதிக்கப்படுவதோடு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டுவிடும்.
ஆகவே சிறுநீர் வந்தால் அதனை அடக்காமல் உடனே வெளியேற்றிவிடுங்கள்.
உணவில் அதிகமாக உப்பு சேர்ப்பது
உடலுக்கு உப்பு மிகவும் இன்றியமையாதது தான். ஆனால் அந்த உப்பு அளவுக்கு அதிகமானால், அது இரத்த அழுத்தத்தை அதிகரித்து சிறுநீரகத்தில் அழுத்தத்தை அதிகமாக்கும்.
எனவே தினமும் 5.8 கிராம் உப்பை மட்டும் சேர்த்துக் கொண்டு வந்தால், சிறுநீரகங்களை ஆரோக்கியமாக பராமரிக்கலாம்.
காப்ஃபைன்
காபி, டீ போன்றவற்றை அளவுக்கு அதிகமாக குடித்து வருபவர்களுக்கு சிறுநீரகம் சீக்கிரம் பாதிக்கப்படும். ஆகவே அவற்றை அதிகம் குடிக்கும் பழக்கத்தை உடனே கைவிட வேண்டும்.
வலி நிவாரணிகள்
சிலர் எந்த ஒரு வலி வந்தாலும், உடனே மாத்திரை போடுவார்கள். இப்படி மருத்துவர் பரிந்துரைக்காத மாத்திரையை உட்கொண்டால், அது முதலில் சிறுநீரகத்திற்கு தான் பெரும் பாதிப்பை உண்டாக்கும். ஆகவே வலி நிவாரணிகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
ஆல்கஹால் அதிகம் குடிப்பது
ஆல்கஹாலில் உள்ள டாக்ஸின் கல்லீரலை மட்டுமின்றி, சிறுநீரகங்களையும் தான் பாதிக்கும்.
ஆல்கஹால் பருகுவதால் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் அதிக அளவில் அழுத்தத்திறகு உள்ளாகி பாதிப்படையும். ஆகவே ஆல்கஹால் பருகுவதை தவிர்ப்பது நல்லது.
புகைப்பிடித்தல்
புகைப்பிடிப்பதால் இரத்த நாளங்கள் கடினமாகி அதனை அளவு குறைந்து சிறுநீரகங்களுக்கு செல்லும் இரத்த ஓட்டம் குறைந்து, சிறுநீரகங்களின் செயல்பாட்டிற்கு இடையூறு ஏற்பட்டு அது மெதுவாக பாதிக்கப்படும்.
மேலும் ஆய்வு ஒன்றில் ஒரு நாளைக்கு 2 சிகரெட்டிற்கு மேல் புகைத்தால், அது சிறுநீரகத்தை மட்டுமின்றி நுரையீரலையும் பாதித்து இறப்பிற்கு வழிவகுக்கும்.

பல தேசிய இனங்களின் வரிப்பணத்தில் உலக இந்தி மாநாட்டை இந்திய அரசு நடத்துகிறது !!

பல தேசிய இனங்களின் வரிப்பணத்தில் உலக இந்தி மாநாட்டை இந்திய அரசு நடத்துகிறது !!

இந்தியாவில் பல தேசிய இனங்களும் மொழிகளும் இருக்க நடுவண் அரசு மக்கள் வரிப்பணத்தில் வரும் செப்டம்பர் மாதம் இந்திக்கு உலக அளவில் மாநாடு நடத்த உள்ளது. இது கடுமையான கண்டனத்திற்கு உரியது. வரலாறும் வளமும் இல்லாத இந்தி மொழியை உலக அளவில் கொண்டு சேர்க்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் வளமான வரலாறு கொண்ட தமிழ் மொழிக்கு இந்திய அரசு எந்த ஊக்குவிப்பும் கொடுப்பதில்லை.

இந்தியை மட்டுமே இந்திய அரசு ஆட்சி மொழியாக வைத்து அனைத்து தேசிய இனங்களின் மீதும் இந்தியை திணித்து வரும் நிலையில் எதற்கு இந்திக்கு ஒரு மாநாடு தேவைப்படுகிறது? இதற்கு மேல் இந்தி மொழிக்கு வேறு என்ன பரப்புரை மற்றும் ஊக்குவிப்பு தேவைப்படுகிறது? இந்தியால் அழிந்து கொண்டிருக்கும் பண்டைய மொழிகளுக்கு அல்லவா மாநாடு நடத்தப்பட வேண்டும்?

இந்தி அரசின் இத்தகைய மக்கள் விரோத நடவடிக்கையை அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டிக்க வேண்டும். சமூக , பண்பாட்டு, மொழி அமைப்புகள் இந்திய அரசை கண்டித்து அறிக்கை வெளியிட வேண்டும். இந்திக்கு மட்டுமே மக்கள் வரிப்பணத்தில் மாநாடு நடத்தி மற்ற மொழிகளை எல்லாம் குழிதோண்டி புதைக்கும் நடுவண் அரசின் இந்தி வெறியை கட்டாயம் இந்திய மக்கள் அனைவரும் கண்டிக்க வேண்டும். இந்திய அரசு மக்களின் வரிப்பணத்தில் இந்திக்கு மட்டுமே மாநாடு நடத்துவதை நாம் அனுமதிக்க முடியாது.

தூய தமிழ்ச்சொற்கள்
பல தேசிய இனங்களின் வரிப்பணத்தில் உலக இந்தி மாநாட்டை இந்திய அரசு நடத்துகிறது !!

இந்தியாவில் பல தேசிய இனங்களும் மொழிகளும் இருக்க நடுவண் அரசு மக்கள் வரிப்பணத்தில் வரும் செப்டம்பர் மாதம் இந்திக்கு உலக அளவில் மாநாடு நடத்த உள்ளது. இது கடுமையான கண்டனத்திற்கு உரியது. வரலாறும் வளமும் இல்லாத இந்தி மொழியை உலக அளவில் கொண்டு சேர்க்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் வளமான வரலாறு கொண்ட தமிழ் மொழிக்கு இந்திய அரசு எந்த ஊக்குவிப்பும் கொடுப்பதில்லை.

இந்தியை மட்டுமே இந்திய அரசு ஆட்சி மொழியாக வைத்து அனைத்து தேசிய இனங்களின் மீதும் இந்தியை திணித்து வரும் நிலையில் எதற்கு இந்திக்கு ஒரு மாநாடு தேவைப்படுகிறது? இதற்கு மேல் இந்தி மொழிக்கு வேறு என்ன பரப்புரை மற்றும் ஊக்குவிப்பு தேவைப்படுகிறது? இந்தியால் அழிந்து கொண்டிருக்கும் பண்டைய மொழிகளுக்கு அல்லவா மாநாடு நடத்தப்பட வேண்டும்?

இந்தி அரசின் இத்தகைய மக்கள் விரோத நடவடிக்கையை அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டிக்க வேண்டும். சமூக , பண்பாட்டு, மொழி அமைப்புகள் இந்திய அரசை கண்டித்து அறிக்கை வெளியிட வேண்டும். இந்திக்கு மட்டுமே மக்கள் வரிப்பணத்தில் மாநாடு நடத்தி மற்ற மொழிகளை எல்லாம் குழிதோண்டி புதைக்கும் நடுவண் அரசின் இந்தி வெறியை கட்டாயம் இந்திய மக்கள் அனைவரும் கண்டிக்க வேண்டும். இந்திய அரசு மக்களின் வரிப்பணத்தில் இந்திக்கு மட்டுமே மாநாடு நடத்துவதை நாம் அனுமதிக்க முடியாது. 

இதயத்துக்கு ஏற்ற சமையல் எண்ணெய் எது?

இன்றைய நல்ல தகவல்...


பொறுமையாய் படியுங்கள்.... பயனடையுங்கள்...

நம் அன்றாட சமையலில் எண்ணெய்யின் பயன்பாடு பற்ற உங்களுக்கு சொல்லத் தெரியவேண்டியதில்லை. எண்ணெய் இல்லாத சமையலை நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு நம் சமையல் முறையில் அசைக்கமுடியாத இடம் பிடித்திருக்கிறது எண்ணெய்.
சமையல் கலைப் புத்தகத்தில் இடம் பெற வேண்டிய தகவல்கள் எல்லாம் மாறி மருத்துவப் புத்தகத்துக்கு வந்துவிட்டதா என நினைக்காதீர்கள். எண்ணெய் பற்றி இங்கு பேசுவதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது.

நாம் பயன்படுத்துகிற எண்ணெய்க்கும் இதய நலனுக்கும் மிக நெருக்கமான தொடர்பு இருக்கிறது. எண்ணெய் பற்றி சில விஷயங்களைச் சொன்னால்தான் உங்களால் அந்தத் தொடர்பு பற்றி முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும்.
எண்ணெய்யைச் சமையலில் பயன்படுத்துவதற்கு அடிப்படைக் காரணம் என்ன?

நாம் சாப்பிடும் உணவுக்கு அது சுவையையும், நறுமணத்தையும் கூட்டுகிறது.
சமையல எண்ணெய்களை ஆற்றலின் பெட்டகம் என்று சொல்லலாம். மிகவும் குறைந்த அளவில் அதிக வெப்ப ஆற்றலைத் தரக்கூடியது எண்ணெய்.
கொழுப்பில் கரையும் தன்மையுள்ள உயிர்ச்சத்துகளை ஒரு இடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு எடுத்துச் செல்லும் ஊடகமாகச் செயல்படுகிறது.
உணவுக் குழல், இரைப்பையில் உள்ள மென் திசுக்களைப் புற்றுநோயில் இருந்து பாதுகாக்கத் துணை புரிகிறது.

மேலே சொன்னவை போன்ற பல காரணங்களுக்காகத்தான் எண்ணெய்யை நாம் உபயோகிக்கிறோம். நம்மில் பலர் எண்ணெய்யும், கொழுப்பும் வேறு வேறு என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவெனில் எண்ணெய் என்பது திட நிலையில் உள்ள கொழுப்பு. கொழுப்பு என்பது திட நிலையில் உள்ள எண்ணெய் (A fat is a solid OIL and an oil is a LIQUID fat). கொழுப்பும், எண்ணெய்யும் புறத்தோற்றத்தில்தான் வித்தியாசப்படுகின்றனவே தவிர, வேதியியல் மூலக்கூறு அடிப்படையில் இரண்டும் ஒன்றுதான்.

பொதுவாக ஒரு மனிதனுக்குத் தினமும் தேவைப்படும் சக்தியானது 1800 கலோரிகள் என வைத்துக் கொள்வோம். இந்த மொத்தக் கலோரிகள் தேவையில் சுமார் 4 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் சமையல் எண்ணெய்யைப் பாதுகாப்பாக அன்றாடம் பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது 72 கலோரிகள் அளவு வெப்பத்தைத் தரக்கூடிய சமையல் எண்ணெய்யைப் பயன்படுத்தலாம். கிராம் அளவில் கணக்கிட்டால் 9 கிராம் அளவு உள்ள எண்ணெய் போதும்.

சமையலுக்கு எந்த எண்ணெய்யைப் பயன்படுத்துகிறோம் என்பது இந்தியாவைப் பொருத்தவரை மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது. அந்தந்த மாநிலத்தில் பயிர் செய்யும் எண்ணெய் வித்துகளின் தன்மையை அடிப்படையாகக் கொண்டே இது தீர்மானிக்கப்படுகிறது.

வட மாநிலங்களில் கடுகு எண்ணெண்யையும், தென் மாநிலங்களில் தேங்காய் எண்ணெய், நெய், நல்லெண்ணெய் போன்ற எண்ணெய்களையும் காலம் காலமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

17ம் நூற்றாண்டுக்குப் பிறகு போர்ச்சுகீசியர்களின் உபயத்தால் கடலை எண்ணெய்யைப் பயன்படுத்தி வருகிறோம். அண்மையில் சூரியகாந்தி எண்ணெய், மக்காச்சோள எண்ணெய், தவிட்டு எண்ணெண், பருத்திகொட்டை எண்ணெய் போன்ற எண்ணெய்களையும் சமையலுக்குப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறோம்.

பொதுவாக சமையல் எண்ணெய்யின் தன்மை, அதில் அடங்கியிருக்கும் ஹைட்ரஜன் அணுக்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. ஒரு எண்ணெய்யில் எந்த அளவு ஹைட்ரஜன் அணுக்கள் உள்ளனவோ அதை அடிப்படையாகக் கொண்டு செறிவுற்ற, கொழுப்பு செறிவற்ற என எண்ணெய் வகைகளை இரண்டு பிரிவுகளாகப் பிரித்துள்ளனர்.

கொழுப்பு எந்தவிதமான சிதைவு மாற்றங்களும் இல்லாமல் கெட்டியான நிலையில் இருக்கும். வெண்ணெய், நெய், விலங்கினங்களின் கொழுப்பு வகைகள், தேங்காய் எண்ணெய், பாமாயில் போன்றவை செறிவுற்ற

கொழுப்புச் சில உதாரணங்கள்.

இவற்றில் தேங்காய் எண்ணெய்யும், பாமாயிலும் திரவ நிலையில் இருந்தாலும், வேதியியல் அடிப்படையில் செயல்படும் போது மற்றவகையான சேறிவுற்ற கொழுப்புபோலவே இருக்கும். இந்தக் கொழுப்பு வகையில் வருகிற சமையல் எண்ணெய்யை சமையலுக்குப் பயன்படுத்தும்போது மிக்க கவனம் தேவை.

ஏனென்றால், இவ்வகையான சமையல் எண்ணெய்கள் ஓரளவு நன்மை தந்தாலும், இவற்றை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால் இதயம் மற்றும் இதயம் தொடர்புடைய ரத்தக் குழாய்களுக்குப் பலவகையான சிக்கல்களை காலப்போக்கில் ஏற்படுத்தக்கூடும்.

இவ்வகையான சமையல் எண்ணெய்கள் தோலுக்குத்தான் சிறந்தவை. இதயத்துக்கு அல்ல என்று சொல்வதுண்டு (Oil is good for the skin but bad for the heart).
அளவுக்கு அதிகமாக தினசரி சமையலில் செறிவுற்ற எண்ணெய்யைப் பயன்படுத்துவதால் இதயத்தில் பலவகையான பாதிப்புகள் ஏற்படுகின்றன.
குறிப்பாக இதயத் தமனிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. இவ்வகையா எண்ணெண் ரத்தக் குழாய்களில் கொலஸ்ட்ராலாக அளவுக்கு அதிகமாகச் சேர்ந்துவிடுகிறது. அளவுக்கு அதிகமாகப் படியும் கொலஸ்ட்ரால் இதயத் தமனிகளின் உள்விட்டத்தை முழுமையாக அடைப்பதால் இதயத்துக்குச் செல்லும் ரத்தமானது தடைபட்டு இதயத் தமனி நோய் ஏற்படுகிறது.
செறிவுய்ய கொழுப்பு (Unsaturated Fat) கார்பன் சங்கிலித் தொடரில் ஹைட்ரஜன் அணுக்கள் முழுமையாக இல்லாமல், குறைவான அளவில் இருக்கும் கொழுப்பு வகை எண்ணெய்களை செறிவற்ற கொழுப்பு எண்ணெய் (Unasturated Fatty oils) என்று சொல்வார்கள்.

ஹைட்ரஜன் அணுக்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு இவற்றைப் பொதுவாக மியூஃபா எண்ணெய் என்றும் பியூஃபா எண்ணெய் என்றும் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரித்துள்ளனர்.

பியூஃபா கொழுப்பு!

கார்பன் சங்கிலித் தொடரில் ஹைட்ரஜன் அணுக்களின் எண்ணிக்கையானது ஒன்றுக்கு மேல் குறைவாக இருந்தால் அவ்வகையானது ஒன்றுக்கு மேல் குறைவாக இருந்தால் அவ்வகையை பியூஃபா என்பது (PUFA) எண்ணெய் என்று சொல்வார்கள். (பியூஃபா என்பது Poly Saturated Fatty Acid என்பதன் சுருக்கம்).
பியூஃபா எண்ணெய்யை ஒமேகா 3 இன்றியமையா கொழுப்பு அமிலம் (Omega-6 Essential Fatty Acid) என்றும் பலவகைகளாகப் பிரித்துள்ளனர்.
பெயருக்கு ஏற்றார்போல் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் நம் உடலுக்கு இன்றியமையாதவையாக இருக்கின்றன. நம் உடலின் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் பல முக்கியமான பணிகளை நிறைவேற்றுவது இவைதான்.

ஒமேகா கொழுப்பு அமிலங்கள் நமது உடலில் உள்ள செல்களைப் பராமரிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. மேலும் இவ்வகை அமிலங்கள், பிராஸ்டாகிளாண்டென் (Prosta Glanden) என்ற ஹார்மோன் சுரக்கத் துணைபுரிகிறது. ரத்த உறைவைத் தடுக்கவும் ரத்த அழுத்த அளவை சீராக வைத்துக் கொள்ளவும், நோய் தடுக்கும் ஆற்றல் அதிகமாகவும் இவை துணை புரிகின்றன. இதயத்தைப் பாதுகாப்பதிலும் ஒமேகா கொழுப்பு
அமிலங்களுக்குப் பெரும் பங்கு உண்டு.

ஒமேகா கொழுப்பு அமிலங்களை, தேவையான அளவில் அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால் நன்மை தரும் கொலஸ்ட்ரால் உற்பத்தியை கல்லீரல் அதிகமாக்குகிறது. நன்மைதரும் கொலஸ்ட்ரால் இதயத் தமனிகளின் உள் பகுதியில் படியும் கொழுப்புத் துகள்களை அகற்றி, ரத்தக் குழாய்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதால்தால் இவற்றை ரத்தக் குழாய்களைத் தூய்மைப்படுத்தும் துப்புரவாளர்கள் என்று குறிப்பிடுவதுண்டு. எனவே ரத்தத்தில் நன்மை தரும் கொலஸ்ட்ராலின் அளவு அதிகமாவதால் இதயத் தமனி அடைப்புகளில் இருந்து இதயத்துக்குப் பாதுகாப்பு கிடைக்கிறது.
ஒமேகா 3 கொழுப்பு எண்ணெய்கள், மீன் வகை உணவுகளிலும், சோயா, மொச்சையில் இருந்து தயாரிக்கப்படம் எண்ணெய்யிலும் மிக அதிகமாக உள்ளன. இதுபோல் ஒமேகா 6 கொழுப்பு எண்ணெய்கள், சூரியகாந்தி எண்ணெய், மக்காச்சோள எண்ணெய் போன்றவற்றில் மிக அதிகமாக உள்ளது.

ஒரு தனி மனிதனின் அன்றாட எண்ணெய்த் தேவையில் பியூஃபா வகை கொழுப்பு, மூன்றில் ஒரு பங்கு என்ற அளவில் சேர்க்கப்பட வேண்டும்.
மியூஃபா கொழுப்பு!

கொழுப்பு அமில சங்கிலித் தொடரில் ஒரு இணை ஹைட்ரஜன் அணுக்கள் குறைந்தால் அவ்வகையான சமையல் எண்ணெய்களை மியூஃபா எண்ணெய்கள் என்று சொல்வார்கள். MONO UNASATURATED FATTY ACID என்பதன் சுருக்கம்தான் மியூஃபா (mufa) என்பதாகும்.

மியூஃபா வகைக் கொழுப்பாலும் நம் உடலுக்குப் பல நன்மைகள் கிடைக்கின்றன.

நமது உடலில் உள்ள கோடிக்கணக்கான செல்களின் அமைப்பைச் சிதைவுறாமல் நிலை நிறுத்துகிறது.

நமது ரத்தத்தில் உள்ள தீமை தரும் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்க உதவுகிறது. நன்மை தரும் கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கத் துணைபுரிகிறது. மியூஃபா வகை கொழுப்பு கடுகு எண்ணெய்யிலும், கடலை எண்ணெய்யிலும் அதிக அளவில் உள்ளது.

எண்ணெய்யில் பல வகைகள் இருந்தாலும், இதயத்துக்கு ஏற்ற மிகச்சிறந்த எண்ணெய் என்றால் ஆலிவ் எண்ணெய்யைத்தான் (Oilve Oil) சொல்ல வேண்டும். உலக அளவில் மேலை நாடுகளில் இதயத்துக்கு ஏற்ற சிறந்த சமையல் எண்ணெய்யாக ஆலிவ் எண்ணெய்தான் கருதப்படுகிறது.
இந்த எண்ணெய்யைச் சமையலுக்குப் பயன்படுத்தும் மேலை நாடுகளில் இதய நோய்களின் தாக்கம் மிகமிகக்குறைவாக இருப்பதாக பலவகையான ஆய்வு முடிவுகள் உறுதி செய்துள்ளன. ஆனால் இதன் விலை மிகவும் அதிகமாக இருப்பதால் நம் நாட்டுச் சூழலுக்கு இந்த எண்ணெய் ஒத்துவருவதில்லை. மேலும் இதன் மனமானது நம்முடைய சுவைக்கு ஏற்றதாகவும் இல்லை. நம் நாட்டில் பெரும்பாலும் பலவகையான சாலடுகள் தயாரிக்கத்தான் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.

உலக அளவில் ஆலிவ் எண்ணெய் சிறந்ததாகக் கருதப்பட்டாலும் நம் நாட்டு மக்களின் சுவைக்கு ஏற்ப, நமது அன்றாடத் தேவைக்கு ஏற்ப, நமது சமையல் முறைக்கு ஏற்ப நமது உடல் நலத்துக்கு ஏற்ப, குறிப்பாக இதயத்தின் நலம் காக்கும் தன்மையுள்ள சிறந்த சமையல் எண்ணெய் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

தொன்று தொட்டு நம் நாட்டில் பலவகையான சமையல் எண்ணெய்களைப் பயன்படுத்தி வந்தாலும் ஒவ்வொரு எண்ணெய்க்கும் சில சிறப்புத் தன்மைகளும் சில தீய தன்மைகளும் இயற்கையாகவே ஒரு சேர இருக்கும். எனவே நாம் அன்றாட சமையலுக்கு ஒரு குறிப்பிட்ட சமையல் எண்ணெயைப் பயன்படுத்துவதால், முழுமையான பயனைப் பெற இயலாது.

எனவே நம் நாட்டில் பயன்படத்தும் சிறந்த சமையல் எண்ணெய்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை அன்றாட சமையலுக்கு ஏற்றபடி கலவையாகப் பயன்படுத்துவதுதான் சரியான வழிமுறை.

செறியுற்ற கொழுப்பு என்றும் பியூஃபா கொழுப்பு என்றும் மியூஃபா கொழுப்பு என்றும் சமையல் எண்ணெய் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன என்பதை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். இந்த மூன்று வகையான கொழுப்பு வகைகளில் இருந்து இதயத்தைப் பாதுகாக்கக்கூடிய எண்ணெய்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை 1: 1 : 1 என்ற அளவில் தினசரி சமையலுக்கு அளவாகப் பயன்படுத்தினால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

அதாவது நல்லெண்ணெய் (எள் எண்ணெய்), சூரியகாந்தி எண்ணெய், கடலை எண்ணெய் இவற்றை இதயத்துக்கு ஏற்ற சிறந்த எண்ணெய்களாக நாம் தேர்வு செய்யலாம். இந்த எண்ணெய்களைத் தினசரி சமையலுக்கு மாறி மாறி தனித்தனியாக பயன்படுத்தலாம். அல்லது இந்த மூன்று எண்ணெய்களையும் 1: 1: 1: என்ற சம அளவில் கலந்து தினமும் சமையலுக்குப் பயன்படுத்துவதால் இதயத்தின் நலனைப் பாதுகாக்க முடியும். இவ்வாறு மூன்று வகையான எண்ணெய்களையும் கலந்த கலவை எண்ணெய் இனிமையான எண்ணெய் (ஷிஷ்மீமீt ஷீவீறீ) என்று அழைக்கப்படுகிறது.

சமையல் எண்ணெய்களைத் தேர்ந்தெடுக்கும்போது இன்னொரு விஷயத்தையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நமது உடல் அமைப்பு அன்றாட உடல் உழைப்பு, நமது அன்றாட தேவை இவற்றை அடிப்படையாகக் கொண்டு எண்ணெய்யை அளவோடு பயன்படுத்தினால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். இந்தக் கணக்கைப் பற்றிக் கவலைப் படாமல், சுவைக்காக அளவுக்கு அதிகமாக எண்ணெய்களைப் பயன்படுத்துவது இதய நலனைப் பெரிதும் பாதிக்கக்கூடும்.
இன்றைய நல்ல தகவல்...

இதயத்துக்கு ஏற்ற சமையல் எண்ணெய் எது? 

பொறுமையாய் படியுங்கள்.... பயனடையுங்கள்...

நம் அன்றாட சமையலில் எண்ணெய்யின் பயன்பாடு பற்ற உங்களுக்கு சொல்லத் தெரியவேண்டியதில்லை. எண்ணெய் இல்லாத சமையலை நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு நம் சமையல் முறையில் அசைக்கமுடியாத இடம் பிடித்திருக்கிறது எண்ணெய்.

சமையல் கலைப் புத்தகத்தில் இடம் பெற வேண்டிய தகவல்கள் எல்லாம் மாறி மருத்துவப் புத்தகத்துக்கு வந்துவிட்டதா என நினைக்காதீர்கள். எண்ணெய் பற்றி இங்கு பேசுவதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது.
நாம் பயன்படுத்துகிற எண்ணெய்க்கும் இதய நலனுக்கும் மிக நெருக்கமான தொடர்பு இருக்கிறது. எண்ணெய் பற்றி சில விஷயங்களைச் சொன்னால்தான் உங்களால் அந்தத் தொடர்பு பற்றி முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும்.

எண்ணெய்யைச் சமையலில் பயன்படுத்துவதற்கு அடிப்படைக் காரணம் என்ன?

நாம் சாப்பிடும் உணவுக்கு அது சுவையையும், நறுமணத்தையும் கூட்டுகிறது.

சமையல எண்ணெய்களை ஆற்றலின் பெட்டகம் என்று சொல்லலாம். மிகவும் குறைந்த அளவில் அதிக வெப்ப ஆற்றலைத் தரக்கூடியது எண்ணெய்.

கொழுப்பில் கரையும் தன்மையுள்ள உயிர்ச்சத்துகளை ஒரு இடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு எடுத்துச் செல்லும் ஊடகமாகச் செயல்படுகிறது.

உணவுக் குழல், இரைப்பையில் உள்ள மென் திசுக்களைப் புற்றுநோயில் இருந்து பாதுகாக்கத் துணை புரிகிறது.

மேலே சொன்னவை போன்ற பல காரணங்களுக்காகத்தான் எண்ணெய்யை நாம் உபயோகிக்கிறோம். நம்மில் பலர் எண்ணெய்யும், கொழுப்பும் வேறு வேறு என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவெனில் எண்ணெய் என்பது திட நிலையில் உள்ள கொழுப்பு. கொழுப்பு என்பது திட நிலையில் உள்ள எண்ணெய் (A fat is a solid OIL  and an oil is a LIQUID  fat). கொழுப்பும், எண்ணெய்யும் புறத்தோற்றத்தில்தான் வித்தியாசப்படுகின்றனவே தவிர, வேதியியல் மூலக்கூறு அடிப்படையில் இரண்டும் ஒன்றுதான்.

பொதுவாக ஒரு மனிதனுக்குத் தினமும் தேவைப்படும் சக்தியானது 1800 கலோரிகள் என வைத்துக் கொள்வோம். இந்த மொத்தக் கலோரிகள் தேவையில் சுமார் 4 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் சமையல் எண்ணெய்யைப் பாதுகாப்பாக அன்றாடம் பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது 72 கலோரிகள் அளவு வெப்பத்தைத் தரக்கூடிய சமையல் எண்ணெய்யைப் பயன்படுத்தலாம். கிராம் அளவில் கணக்கிட்டால் 9 கிராம் அளவு உள்ள எண்ணெய் போதும்.

சமையலுக்கு எந்த எண்ணெய்யைப் பயன்படுத்துகிறோம் என்பது இந்தியாவைப் பொருத்தவரை மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது. அந்தந்த மாநிலத்தில் பயிர் செய்யும் எண்ணெய் வித்துகளின் தன்மையை அடிப்படையாகக் கொண்டே இது தீர்மானிக்கப்படுகிறது.

வட மாநிலங்களில் கடுகு எண்ணெண்யையும், தென் மாநிலங்களில் தேங்காய் எண்ணெய், நெய், நல்லெண்ணெய் போன்ற எண்ணெய்களையும் காலம் காலமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

17ம் நூற்றாண்டுக்குப் பிறகு போர்ச்சுகீசியர்களின் உபயத்தால் கடலை எண்ணெய்யைப் பயன்படுத்தி வருகிறோம். அண்மையில் சூரியகாந்தி எண்ணெய், மக்காச்சோள எண்ணெய், தவிட்டு எண்ணெண், பருத்திகொட்டை எண்ணெய் போன்ற எண்ணெய்களையும் சமையலுக்குப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறோம்.

பொதுவாக சமையல் எண்ணெய்யின் தன்மை, அதில் அடங்கியிருக்கும் ஹைட்ரஜன் அணுக்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. ஒரு எண்ணெய்யில் எந்த அளவு ஹைட்ரஜன் அணுக்கள் உள்ளனவோ அதை அடிப்படையாகக் கொண்டு செறிவுற்ற, கொழுப்பு செறிவற்ற என எண்ணெய் வகைகளை இரண்டு பிரிவுகளாகப் பிரித்துள்ளனர்.

கொழுப்பு எந்தவிதமான சிதைவு மாற்றங்களும் இல்லாமல் கெட்டியான நிலையில் இருக்கும். வெண்ணெய், நெய், விலங்கினங்களின் கொழுப்பு வகைகள், தேங்காய் எண்ணெய், பாமாயில் போன்றவை செறிவுற்ற கொழுப்புச் சில உதாரணங்கள்.

இவற்றில் தேங்காய் எண்ணெய்யும், பாமாயிலும் திரவ நிலையில் இருந்தாலும், வேதியியல் அடிப்படையில் செயல்படும் போது மற்றவகையான சேறிவுற்ற கொழுப்புபோலவே இருக்கும். இந்தக் கொழுப்பு வகையில் வருகிற சமையல் எண்ணெய்யை சமையலுக்குப் பயன்படுத்தும்போது மிக்க கவனம் தேவை.

ஏனென்றால், இவ்வகையான சமையல் எண்ணெய்கள் ஓரளவு நன்மை தந்தாலும், இவற்றை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால் இதயம் மற்றும் இதயம் தொடர்புடைய ரத்தக் குழாய்களுக்குப் பலவகையான சிக்கல்களை காலப்போக்கில் ஏற்படுத்தக்கூடும்.

இவ்வகையான சமையல் எண்ணெய்கள் தோலுக்குத்தான் சிறந்தவை. இதயத்துக்கு அல்ல என்று சொல்வதுண்டு (Oil is good for the skin but bad for the heart).

அளவுக்கு அதிகமாக தினசரி சமையலில் செறிவுற்ற எண்ணெய்யைப் பயன்படுத்துவதால் இதயத்தில் பலவகையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. குறிப்பாக இதயத் தமனிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. இவ்வகையா எண்ணெண் ரத்தக் குழாய்களில் கொலஸ்ட்ராலாக அளவுக்கு அதிகமாகச் சேர்ந்துவிடுகிறது. அளவுக்கு அதிகமாகப் படியும் கொலஸ்ட்ரால் இதயத் தமனிகளின் உள்விட்டத்தை முழுமையாக அடைப்பதால் இதயத்துக்குச் செல்லும் ரத்தமானது தடைபட்டு இதயத் தமனி நோய் ஏற்படுகிறது.
செறிவுய்ய கொழுப்பு (Unsaturated Fat) கார்பன் சங்கிலித் தொடரில் ஹைட்ரஜன் அணுக்கள் முழுமையாக இல்லாமல், குறைவான அளவில் இருக்கும் கொழுப்பு வகை எண்ணெய்களை செறிவற்ற கொழுப்பு எண்ணெய் (Unasturated Fatty oils) என்று சொல்வார்கள்.

ஹைட்ரஜன் அணுக்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு இவற்றைப் பொதுவாக மியூஃபா எண்ணெய் என்றும் பியூஃபா எண்ணெய் என்றும் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரித்துள்ளனர்.

பியூஃபா கொழுப்பு!

கார்பன் சங்கிலித் தொடரில் ஹைட்ரஜன் அணுக்களின் எண்ணிக்கையானது ஒன்றுக்கு மேல் குறைவாக இருந்தால் அவ்வகையானது ஒன்றுக்கு மேல் குறைவாக இருந்தால் அவ்வகையை பியூஃபா என்பது (PUFA) எண்ணெய் என்று சொல்வார்கள். (பியூஃபா என்பது Poly Saturated Fatty Acid என்பதன் சுருக்கம்).

பியூஃபா எண்ணெய்யை ஒமேகா 3 இன்றியமையா கொழுப்பு அமிலம் (Omega-6 Essential Fatty Acid) என்றும் பலவகைகளாகப் பிரித்துள்ளனர்.

பெயருக்கு ஏற்றார்போல் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் நம் உடலுக்கு இன்றியமையாதவையாக இருக்கின்றன. நம் உடலின் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் பல முக்கியமான பணிகளை நிறைவேற்றுவது இவைதான்.

ஒமேகா கொழுப்பு அமிலங்கள் நமது உடலில் உள்ள செல்களைப் பராமரிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. மேலும் இவ்வகை அமிலங்கள், பிராஸ்டாகிளாண்டென் (Prosta Glanden) என்ற ஹார்மோன் சுரக்கத் துணைபுரிகிறது. ரத்த உறைவைத் தடுக்கவும் ரத்த அழுத்த அளவை சீராக வைத்துக் கொள்ளவும், நோய் தடுக்கும் ஆற்றல் அதிகமாகவும் இவை துணை புரிகின்றன. இதயத்தைப் பாதுகாப்பதிலும் ஒமேகா கொழுப்பு அமிலங்களுக்குப் பெரும் பங்கு உண்டு.

ஒமேகா கொழுப்பு அமிலங்களை, தேவையான அளவில் அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால் நன்மை தரும் கொலஸ்ட்ரால் உற்பத்தியை கல்லீரல் அதிகமாக்குகிறது. நன்மைதரும் கொலஸ்ட்ரால் இதயத் தமனிகளின் உள் பகுதியில் படியும் கொழுப்புத் துகள்களை அகற்றி, ரத்தக் குழாய்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதால்தால் இவற்றை ரத்தக் குழாய்களைத் தூய்மைப்படுத்தும் துப்புரவாளர்கள் என்று குறிப்பிடுவதுண்டு. எனவே ரத்தத்தில் நன்மை தரும் கொலஸ்ட்ராலின் அளவு அதிகமாவதால் இதயத் தமனி அடைப்புகளில் இருந்து இதயத்துக்குப் பாதுகாப்பு கிடைக்கிறது.

ஒமேகா 3 கொழுப்பு எண்ணெய்கள், மீன் வகை உணவுகளிலும், சோயா, மொச்சையில் இருந்து தயாரிக்கப்படம் எண்ணெய்யிலும் மிக அதிகமாக உள்ளன. இதுபோல் ஒமேகா 6 கொழுப்பு எண்ணெய்கள், சூரியகாந்தி எண்ணெய், மக்காச்சோள எண்ணெய் போன்றவற்றில் மிக அதிகமாக உள்ளது.

ஒரு தனி மனிதனின் அன்றாட எண்ணெய்த் தேவையில் பியூஃபா வகை கொழுப்பு, மூன்றில் ஒரு பங்கு என்ற அளவில் சேர்க்கப்பட வேண்டும்.

மியூஃபா கொழுப்பு!

கொழுப்பு அமில சங்கிலித் தொடரில் ஒரு இணை ஹைட்ரஜன் அணுக்கள் குறைந்தால் அவ்வகையான சமையல் எண்ணெய்களை மியூஃபா எண்ணெய்கள் என்று சொல்வார்கள். MONO UNASATURATED FATTY ACID என்பதன் சுருக்கம்தான் மியூஃபா (mufa) என்பதாகும்.

மியூஃபா வகைக் கொழுப்பாலும் நம் உடலுக்குப் பல நன்மைகள் கிடைக்கின்றன.

நமது உடலில் உள்ள கோடிக்கணக்கான செல்களின் அமைப்பைச் சிதைவுறாமல் நிலை நிறுத்துகிறது.

நமது ரத்தத்தில் உள்ள தீமை தரும் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்க உதவுகிறது. நன்மை தரும் கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கத் துணைபுரிகிறது. மியூஃபா வகை கொழுப்பு கடுகு எண்ணெய்யிலும், கடலை எண்ணெய்யிலும் அதிக அளவில் உள்ளது.

எண்ணெய்யில் பல வகைகள் இருந்தாலும், இதயத்துக்கு ஏற்ற மிகச்சிறந்த எண்ணெய் என்றால் ஆலிவ் எண்ணெய்யைத்தான் (Oilve Oil) சொல்ல வேண்டும். உலக அளவில் மேலை நாடுகளில் இதயத்துக்கு ஏற்ற சிறந்த சமையல் எண்ணெய்யாக ஆலிவ் எண்ணெய்தான் கருதப்படுகிறது.
இந்த எண்ணெய்யைச் சமையலுக்குப் பயன்படுத்தும் மேலை நாடுகளில் இதய நோய்களின் தாக்கம் மிகமிகக்குறைவாக இருப்பதாக பலவகையான ஆய்வு முடிவுகள் உறுதி செய்துள்ளன. ஆனால் இதன் விலை மிகவும் அதிகமாக இருப்பதால் நம் நாட்டுச் சூழலுக்கு இந்த எண்ணெய் ஒத்துவருவதில்லை. மேலும் இதன் மனமானது நம்முடைய சுவைக்கு ஏற்றதாகவும் இல்லை. நம் நாட்டில் பெரும்பாலும் பலவகையான சாலடுகள் தயாரிக்கத்தான் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.

உலக அளவில் ஆலிவ் எண்ணெய் சிறந்ததாகக் கருதப்பட்டாலும் நம் நாட்டு மக்களின் சுவைக்கு ஏற்ப, நமது அன்றாடத் தேவைக்கு ஏற்ப, நமது சமையல் முறைக்கு ஏற்ப நமது உடல் நலத்துக்கு ஏற்ப, குறிப்பாக இதயத்தின் நலம் காக்கும் தன்மையுள்ள சிறந்த சமையல் எண்ணெய் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

தொன்று தொட்டு நம் நாட்டில் பலவகையான சமையல் எண்ணெய்களைப் பயன்படுத்தி வந்தாலும் ஒவ்வொரு எண்ணெய்க்கும் சில சிறப்புத் தன்மைகளும் சில தீய தன்மைகளும் இயற்கையாகவே ஒரு சேர இருக்கும். எனவே நாம் அன்றாட சமையலுக்கு ஒரு குறிப்பிட்ட சமையல் எண்ணெயைப் பயன்படுத்துவதால், முழுமையான பயனைப் பெற இயலாது.

எனவே நம் நாட்டில் பயன்படத்தும் சிறந்த சமையல் எண்ணெய்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை அன்றாட சமையலுக்கு ஏற்றபடி கலவையாகப் பயன்படுத்துவதுதான் சரியான வழிமுறை.

செறியுற்ற கொழுப்பு என்றும் பியூஃபா கொழுப்பு என்றும் மியூஃபா கொழுப்பு என்றும் சமையல் எண்ணெய் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன என்பதை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். இந்த மூன்று வகையான கொழுப்பு வகைகளில் இருந்து இதயத்தைப் பாதுகாக்கக்கூடிய எண்ணெய்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை 1: 1 : 1 என்ற அளவில் தினசரி சமையலுக்கு அளவாகப் பயன்படுத்தினால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

அதாவது நல்லெண்ணெய் (எள் எண்ணெய்), சூரியகாந்தி எண்ணெய், கடலை எண்ணெய் இவற்றை இதயத்துக்கு ஏற்ற சிறந்த எண்ணெய்களாக நாம் தேர்வு செய்யலாம். இந்த எண்ணெய்களைத் தினசரி சமையலுக்கு மாறி மாறி தனித்தனியாக பயன்படுத்தலாம். அல்லது இந்த மூன்று எண்ணெய்களையும் 1: 1: 1: என்ற சம அளவில் கலந்து தினமும் சமையலுக்குப் பயன்படுத்துவதால் இதயத்தின் நலனைப் பாதுகாக்க முடியும். இவ்வாறு மூன்று வகையான எண்ணெய்களையும் கலந்த கலவை எண்ணெய் இனிமையான எண்ணெய் (ஷிஷ்மீமீt ஷீவீறீ) என்று அழைக்கப்படுகிறது.

சமையல் எண்ணெய்களைத் தேர்ந்தெடுக்கும்போது இன்னொரு விஷயத்தையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நமது உடல் அமைப்பு அன்றாட உடல் உழைப்பு, நமது அன்றாட தேவை இவற்றை அடிப்படையாகக் கொண்டு எண்ணெய்யை அளவோடு பயன்படுத்தினால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். இந்தக் கணக்கைப் பற்றிக் கவலைப் படாமல், சுவைக்காக அளவுக்கு அதிகமாக எண்ணெய்களைப் பயன்படுத்துவது இதய நலனைப் பெரிதும் பாதிக்கக்கூடும்.

ATM அட்டை வைத்திருப்பவர்கள் இதனை ஒரு தடவை வாசிக்கவும் - தெரிந்துகொள்வோம்

முன்பெல்லாம் ஒரு வங்கியில் கணக்கு வைத்து பராமரிப்பது என்பது பெரிய விஷயமாக இருந்தது. ஆனால், இப்போதோ ஒருவருக்கே பல வங்கிகளில் கணக்குகள் இருப்பது என்பது சர்வசாதாரணம் என்றாகி விட்டது. அதன் விளைவு, இன்றைக்கு பலரது பர்ஸையும் வண்ண, வண்ண ஏ.டி.எம் கார்டுகள் அலங்கரித்து வருவதைப் பார்க்கலாம். இது ஒருபுறம் வளர்ச்சியாக இருந்தாலும், இதன் பாதிப்புகள் அதிகம்..? என்ன அவை..?
கார்டு தொலைந்தால்..?


சிலர் ஏ.டி.எம் கார்டை தொலைத்துவிட்டு, தொலைத்தது கூட தெரியாமல் பல மணிநேரம் இருந்து விடுகிறோம். பிறகு ஞாபகம் வந்து தேடிப் பார்த்துவிட்டு, வங்கியின் உதவி எண்ணுக்கு தகவல் சொல்வதற்குள், கிட்டத்தட்ட நான்கு, ஐந்து முறையாவது அந்த கார்டு பயன்படுத்தப்பட்டு பணம் திருடப்பட்டிருப்பது தெரிய வரும். தொலைந்துபோன ஏ.டி.எம் கார்டைக் கொண்டு, பின் நம்பர் தெரியாமல் எப்படி பயன்படுத்துவார்கள்? ஒரு ஏ.டி.எம் கார்டை கொண்டு ஏ.டி.எம்-மில் பணம் எடுக்கத்தான் பின் நம்பர் தேவை. அதுவே கடைகளில் பொருட்களை வாங்கி அதற்கான தொகையை ஏடிஎம்-ல் செலுத்தும்போது, பின் நம்பர் தேவையில்லை. எனவே ஏ.டி.எம் கார்டு தொலைந்தவுடன் அதை உடனே சம்மந்தப்பட்ட வங்கிக்கு தெரியப்படுத்தி கார்டை பிளாக் செய்வது மிக மிக முக்கியம்

ஏமாற்றுப் பேர்வளிகள் பலவிதம்!

சில சமயங்களில் ஏ.டி.எம். சென்டரில் பின்னால் நிற்கும் ஆட்களோ, செக்யூரிட்டியோகூட தண்ணீர் எடுக்க வருவதுபோல் வந்து பாஸ்வேர்டை தெரிந்து வைத்துக்கொண்டு மோசடியில் ஈடுபட வாய்ப்புள்ளது. எனவே, ஏ.டி.எம். மையத்தை விட்டு வெளியில் வரும்போது கார்டு இருக்கிறதா என்று உறுதி செய்துவிட்டு வெளியேறுவது நல்லது.

வங்கியின் அவுட்சோர்ஸிங் வேலைகளைச் செய்து வரும் பி.பீ.ஓ நிறுவன ஊழியர்கள் கூட, பின் நம்பர் உள்ளிட்ட தகவல்களை ‘பாதுகாப்புக்காக’ விசாரிப்பதுபோல் விசாரிப்பார்கள். தகவல்கள் நம்மிடம் இருந்து கிடைத்துவிட்டால், மின்னல் வேகத்தில் டூப்ளிகேட் கார்டை தயாரித்து மோசடியில் ஈடுபட அதிக வாய்ப்பு உள்ளது. என்னதான் அவசர வேலையாக இருந்தாலும் நண்பர்கள், உறவினர்களிடம் ஏ.டி.எம். கார்டைக் கொடுத்து பணம் எடுக்க அனுப்புவதையும் தவிர்க்க வேண்டும்.

பின் நம்பர் பத்திரம்!

முடிந்தவரை ஏ.டி.எம். பின் நம்பரை யாரும் எளிதில் கண்டுபிடிக்காத மாதிரி வைத்திருப்பது அவசியம். பிறந்த நாள், திருமண நாள், வண்டி நம்பர், அலுவலக எண் போன்ற எளிதில் கணிக்கக் கூடிய எண்களைத் தவிர்க்கவும். பாஸ்வேர்ட் மறந்துவிடும் என ஏ.டி.எம் கார்டின் அட்டையிலேயே பாஸ்வேர்டினை எழுதி வைக்கும் முட்டாள்தனம் வேண்டவே வேண்டாம்.

ஸ்கேனிங் திருட்டு!

நாம் பயன்படுத்தும் ஏ.டி.எம். கார்டு பிளாஸ்டிக்கால் ஆனது. அதன் பின்புறம் ஃபிலிம் போல ஒரு ஸ்டிக்கர் இருக்கும். அதில் உள்ள விவரங்கள்தான் ஏ.டி.எம். மெஷினுக்குத் தேவையான விவரங்கள். ஒரிஜினல் கார்டை ஒரு கருவியில் சொருகி, அதிலுள்ள தகவல்களை காப்பி எடுத்துக்கொண்டு, அதை வேறொரு பிளாஸ்டிக் கார்டில் பதிவு செய்து டூப்ளிகேட் கார்ட் ரெடி செய்து மோசடி செய்யவும் அதிக வாய்ப்பிருக்கிறது. எனவே, ஓட்டல்கள், பார்கள் போன்ற இடங்களில் கார்டை கொடுத்துவிட்டு பில் போடச் சொன்னால், அவர்கள் அதைக் ஸ்கேன் செய்துவிடலாம் என்பதால், நேரில் சென்று பில் போட்டுவிட்டு வருவது முக்கியம்.

ஆன்லைன் திருட்டு!

ஏ.டி.எம். எண், பாஸ்வேர்ட்-ஐ இணையத்தில் அளித்து, டிக்கெட், ஷாப்பிங் என்று பல தேவைகளுக்கும் பயன்படுத்தும்போது, அது பாதுகாப்பான வலைதளமா, ஃபிஷிங் திருட்டா என்று விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். இணையத்தில் பாதுகாப்பில்லாத தளங்களில் பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்வதை தவிர்க்கவும்
விழிப்புணர்வு அவசியம்!

திருடர்களுக்கு அரசும், வங்கியும் சேர்ந்து வாயில் லட்டு வைத்து ஊட்டிவிடுவது போல அல்லாமல், ஒருவர் ஏ.டி.எம். கார்டை எப்படிப் பயன்படுத்த வேண்டும், எந்தெந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஏ.டி.எம். மையம் அமைக்கும் இடத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிபார்த்தே
அதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.
ATM அட்டை வைத்திருப்பவர்கள் இதனை ஒரு தடவை வாசிக்கவும் - தெரிந்துகொள்வோம் 

முன்பெல்லாம் ஒரு வங்கியில் கணக்கு வைத்து பராமரிப்பது என்பது பெரிய விஷயமாக இருந்தது. ஆனால், இப்போதோ ஒருவருக்கே பல வங்கிகளில் கணக்குகள் இருப்பது என்பது சர்வசாதாரணம் என்றாகி விட்டது. அதன் விளைவு, இன்றைக்கு பலரது பர்ஸையும் வண்ண, வண்ண ஏ.டி.எம் கார்டுகள் அலங்கரித்து வருவதைப் பார்க்கலாம். இது ஒருபுறம் வளர்ச்சியாக இருந்தாலும், இதன் பாதிப்புகள் அதிகம்..? என்ன அவை..?

 கார்டு தொலைந்தால்..?

சிலர் ஏ.டி.எம் கார்டை தொலைத்துவிட்டு, தொலைத்தது கூட தெரியாமல் பல மணிநேரம் இருந்து விடுகிறோம். பிறகு ஞாபகம் வந்து தேடிப் பார்த்துவிட்டு, வங்கியின் உதவி எண்ணுக்கு தகவல் சொல்வதற்குள், கிட்டத்தட்ட நான்கு, ஐந்து முறையாவது அந்த கார்டு பயன்படுத்தப்பட்டு பணம் திருடப்பட்டிருப்பது தெரிய வரும். தொலைந்துபோன ஏ.டி.எம் கார்டைக் கொண்டு, பின் நம்பர் தெரியாமல் எப்படி பயன்படுத்துவார்கள்? ஒரு ஏ.டி.எம் கார்டை கொண்டு ஏ.டி.எம்-மில் பணம் எடுக்கத்தான் பின் நம்பர் தேவை. அதுவே கடைகளில் பொருட்களை வாங்கி அதற்கான தொகையை ஏடிஎம்-ல் செலுத்தும்போது, பின் நம்பர் தேவையில்லை. எனவே ஏ.டி.எம் கார்டு தொலைந்தவுடன் அதை உடனே சம்மந்தப்பட்ட வங்கிக்கு தெரியப்படுத்தி கார்டை பிளாக் செய்வது மிக மிக முக்கியம்

ஏமாற்றுப் பேர்வளிகள் பலவிதம்! 

சில சமயங்களில் ஏ.டி.எம். சென்டரில் பின்னால் நிற்கும் ஆட்களோ, செக்யூரிட்டியோகூட தண்ணீர் எடுக்க வருவதுபோல் வந்து பாஸ்வேர்டை தெரிந்து வைத்துக்கொண்டு மோசடியில் ஈடுபட வாய்ப்புள்ளது. எனவே, ஏ.டி.எம். மையத்தை விட்டு வெளியில் வரும்போது கார்டு இருக்கிறதா என்று உறுதி செய்துவிட்டு வெளியேறுவது நல்லது. 

வங்கியின் அவுட்சோர்ஸிங் வேலைகளைச் செய்து வரும் பி.பீ.ஓ நிறுவன ஊழியர்கள் கூட, பின் நம்பர் உள்ளிட்ட தகவல்களை ‘பாதுகாப்புக்காக’ விசாரிப்பதுபோல் விசாரிப்பார்கள். தகவல்கள் நம்மிடம் இருந்து கிடைத்துவிட்டால், மின்னல் வேகத்தில் டூப்ளிகேட் கார்டை தயாரித்து மோசடியில் ஈடுபட அதிக வாய்ப்பு உள்ளது. என்னதான் அவசர வேலையாக இருந்தாலும் நண்பர்கள், உறவினர்களிடம் ஏ.டி.எம். கார்டைக் கொடுத்து பணம் எடுக்க அனுப்புவதையும் தவிர்க்க வேண்டும்.

பின் நம்பர் பத்திரம்! 

முடிந்தவரை ஏ.டி.எம். பின் நம்பரை யாரும் எளிதில் கண்டுபிடிக்காத மாதிரி வைத்திருப்பது அவசியம். பிறந்த நாள், திருமண நாள், வண்டி நம்பர், அலுவலக எண் போன்ற எளிதில் கணிக்கக் கூடிய எண்களைத் தவிர்க்கவும். பாஸ்வேர்ட் மறந்துவிடும் என ஏ.டி.எம் கார்டின் அட்டையிலேயே பாஸ்வேர்டினை எழுதி வைக்கும் முட்டாள்தனம் வேண்டவே வேண்டாம்.

ஸ்கேனிங் திருட்டு! 

நாம் பயன்படுத்தும் ஏ.டி.எம். கார்டு பிளாஸ்டிக்கால் ஆனது. அதன் பின்புறம் ஃபிலிம் போல ஒரு ஸ்டிக்கர் இருக்கும். அதில் உள்ள விவரங்கள்தான் ஏ.டி.எம். மெஷினுக்குத் தேவையான விவரங்கள். ஒரிஜினல் கார்டை ஒரு கருவியில் சொருகி, அதிலுள்ள தகவல்களை காப்பி எடுத்துக்கொண்டு, அதை வேறொரு பிளாஸ்டிக் கார்டில் பதிவு செய்து டூப்ளிகேட் கார்ட் ரெடி செய்து மோசடி செய்யவும் அதிக வாய்ப்பிருக்கிறது. எனவே, ஓட்டல்கள், பார்கள் போன்ற இடங்களில் கார்டை கொடுத்துவிட்டு பில் போடச் சொன்னால், அவர்கள் அதைக் ஸ்கேன் செய்துவிடலாம் என்பதால், நேரில் சென்று பில் போட்டுவிட்டு வருவது முக்கியம். 

ஆன்லைன் திருட்டு! 

ஏ.டி.எம். எண், பாஸ்வேர்ட்-ஐ இணையத்தில் அளித்து, டிக்கெட், ஷாப்பிங் என்று பல தேவைகளுக்கும் பயன்படுத்தும்போது, அது பாதுகாப்பான வலைதளமா, ஃபிஷிங் திருட்டா என்று விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். இணையத்தில் பாதுகாப்பில்லாத தளங்களில் பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்வதை தவிர்க்கவும் 

விழிப்புணர்வு அவசியம்! 

திருடர்களுக்கு அரசும், வங்கியும் சேர்ந்து வாயில் லட்டு வைத்து ஊட்டிவிடுவது போல அல்லாமல், ஒருவர் ஏ.டி.எம். கார்டை எப்படிப் பயன்படுத்த வேண்டும், எந்தெந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஏ.டி.எம். மையம் அமைக்கும் இடத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிபார்த்தே அதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.

கை முட்டிகளில் உள்ள கருமை நிறம் மறைய டிப்ஸ் - இயற்கை வைத்தியம்



சிலர் பார்க்க நல்ல கலராக இருந்தாலும் கை, கால் முட்டிகளில் கருப்பாக இருக்கும். நன்கு தேய்த்துக் குளித்தாலும் அந்த நிறம் மாற மாட்டேனென்கிறது என்று புலம்புவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு எளிய தீர்வு உள்ளது. ஒரு கொய்யாப்பழம் எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்தால் ‘ஸ்க்ரப்’ போல வரும். அத்துடன் ஒரு எலுமிச்சைப் பழத்தின் சாறை எடுத்துக் கலந்து கை, கால், மூட்டுகளில் நன்கு தேய்த்து மசாஜ் செய்து நன்றாக காய்ந்ததும் கழுவவும்.

பிறகு அந்த இடத்தில் மாய்ஸ்சரைசர் பூசவும். இவ்வாறு தொடர்ந்து 2 வாரம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். பால், தேன், கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கலக்கி, கருப்பான இடங்களில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும்.

இதுவும் விரைவில் நல்ல பலனைத்தரும். தேவைப்பட்டால் பாதாம் பவுடர் சேர்த்துக் கொள்ளலாம். ஆரஞ்சு தோல் பவுடர், பால் இவற்றை சம அளவில் எடுத்து ஒன்றாக குழைத்து முட்டிகளில் பூசி 15 நிமிடத்துக்கு பிறகு கழுவி வந்தாலும் படிப்படியாக கருப்பு நிறம் மாறும். இதனை தினமும் செய்து வர வேண்டும்.
கை முட்டிகளில் உள்ள கருமை நிறம் மறைய டிப்ஸ் - இயற்கை வைத்தியம் 

சிலர் பார்க்க நல்ல கலராக இருந்தாலும் கை, கால் முட்டிகளில் கருப்பாக இருக்கும். நன்கு தேய்த்துக் குளித்தாலும் அந்த நிறம் மாற மாட்டேனென்கிறது என்று புலம்புவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு எளிய தீர்வு உள்ளது. ஒரு கொய்யாப்பழம் எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்தால் ‘ஸ்க்ரப்’ போல வரும். அத்துடன் ஒரு எலுமிச்சைப் பழத்தின் சாறை எடுத்துக் கலந்து கை, கால், மூட்டுகளில் நன்கு தேய்த்து மசாஜ் செய்து நன்றாக காய்ந்ததும் கழுவவும்.

பிறகு அந்த இடத்தில் மாய்ஸ்சரைசர் பூசவும். இவ்வாறு தொடர்ந்து 2 வாரம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். பால், தேன், கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கலக்கி, கருப்பான இடங்களில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். 

இதுவும் விரைவில் நல்ல பலனைத்தரும். தேவைப்பட்டால் பாதாம் பவுடர் சேர்த்துக் கொள்ளலாம். ஆரஞ்சு தோல் பவுடர், பால் இவற்றை சம அளவில் எடுத்து ஒன்றாக குழைத்து முட்டிகளில் பூசி 15 நிமிடத்துக்கு பிறகு கழுவி வந்தாலும் படிப்படியாக கருப்பு நிறம் மாறும். இதனை தினமும் செய்து வர வேண்டும்.

வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

கீழே கூறபட்டுள்ள லிங்க்-ல் சென்று TSU வில் இணைந்து கொள்ளுங்கள்.
https://www.tsu.co/Keshithasri
 
சமூக வலைதலங்களிலேயே சிறந்த இணையதளம் யுடியூப் தான். காரணம் இந்த இணையத்தில் தான் வாடிக்கையாளர்களுக்கு பணம் சம்பாதிக்கும் வசதியை ஏற்படுத்தி தந்துள்ளது. சமூக வலைத்தளம் + மணி. எனவே தான் வீடியோக்களின் அரக்கனாக யுடியூப் திகழ்கிறது.

ஆனால் உலக அளவில் முன்னணி சமூக வலைதளங்கலான பேஸ்புக், ட்விட்டர் இணையதளங்கள் பலரை அடிபடுத்தி அவர்களின் நேரங்களை வீணடித்து கோடிகோடியாக பணத்தை சம்பாதிக்கின்றன.

தற்பொழுது பேஸ்புக் தளத்திற்கு போட்டியாக TSU என்ற இணையதளம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனுடைய சிறப்பு அம்சமே யுடியூப் போன்று பயன்பாட்டாளர்களுக்கு பணம் கொடுப்பது தான்.

கீழே கூறபட்டுள்ள லிங்க்-ல் சென்று TSU வில் இணைந்து கொள்ளுங்கள்.
https://www.tsu.co/Keshithasri

அது எப்படி என விரிவாக பார்ப்போம்:-

முகநூல், டுவிட்டர் இணையத்தில் பல மணி நேரங்களை தினமும் வெட்டியாக செலவு செய்கின்றோம். அதே நேரத்தை TSU என்ற இணையதளத்தில் செலவிட்டால் பணமழை கொட்டோகொட்டென கொட்டும்.
TSU என்ற சமுக வலைத்தளம் அதில் கருத்துக்களை பகிர்பவர்களுக்கும் லைக் மற்றும் கமெண்ட் செய்பவர்களுக்கும் அவர்களுக்கான பணத்தை வழங்குகிறது என்றால் நம்ப முடிகிறதா? நம்பி தான் ஆக வேண்டும்.

TSU என்பது முகநூலை (Facebook ) போன்ற வேகமாக வளர்ந்துவரும் ஒரு சமுக தொடர்பு ஊடகமாகும். கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கபட்ட TSU மிக வேகமாக வளர்ந்து வருகின்றது. TSU வுக்கும் Facebook-க்கும் என்ன வித்தியாசம் என்றால் தினமும் பல கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்தும் Facebook-ல் உள்ள விளம்பரங்கள் மூலமாக வரும் பணம் முழுவதுமாக Facebook மட்டுமே எடுத்துகொள்ளும். அனால் TSU விளம்பரங்கள் மூலம் வரும் பணத்தில் 90% ஐ மக்களுக்கே திருப்பி வழங்கி விடுகிறது. மிகுதி 10% பணத்தை தனது இணைய வளர்சிக்காக வைத்து கொள்கிறது.

எந்த பயனும் இல்லாமல் Facebook ஐ தினமும் மணி கணக்கில் பயன்படுத்தும் மக்கள் TSU வில் இணைந்து Facebook இல் என்ன செய்கிறோமோ அதையே ( status போடுதல், like இடுதல், share செய்தல்) TSU இணையத்தில் செய்தால் பணம் கிடைக்கிறது.

சுமார் 500 முதல் 1000 நண்பர்கள் நீங்கள் வைத்திருந்தால் போதும் மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். உங்கள் நட்பு எல்லையை விரிவு படுத்திக்கொண்டால் உங்கள் வருமானமும் அதிகமாகிக்கொண்டே போகும்.
தினமும் எவ்வளவு பணம் சம்பாதித்துள்ளோம் என TSU profile இல் தினமும் உங்களுக்கு சேர வேண்டிய பணம் காண்பிக்கபட்டுகொண்டு தான் இருக்கும். உங்கள் பணம் 100 டாலர்கள் வந்ததும் நீங்கள் உங்கள் பணத்தை அனுப்பி வைக்கும்படி கோரிக்கை விடுத்தால் உங்கள் முகவரிக்கு செக் மூலமாக அவர்கள் அனுப்பி வைப்பார்கள்.

இதில் இணைந்துகொள்ள மற்ற இணையதளங்கள் போலவே ஈமெயில் முகவரியை கொடுத்து இணைத்துகொள்ளலாம். ஆனால் இந்த இணையதளத்தில் நேரடியாக இணைந்துகொள்ள முடியாது யாரவது ஒருவர் refer செய்யும் லிங்கை க்ளிக் செய்வதன் மூலமே இணைந்து கொள்ள முடியும்.
பரிந்துரைக்கபட்ட லிங்க் கீழே கொடுக்கபட்டுள்ளது. அதில் சென்றீர்கள் என்றால் நேரடியாக இணைந்து கொள்ள முடியும். கீழே கூறபட்டுள்ள லிங்க்-ல் சென்று TSU வில் இணைந்து கொள்ளுங்கள்.
https://www.tsu.co/Keshithasri

https://lh3.ggpht.com/qpR_iF8zfRl2ilSe1LR-K7LhsBbQgzb6ytoCeG4RzsISaTmj_vrVE6eddZFTMKW5nfo=h900


செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

வாட்ஸ்ஆப் வாய்ஸ் கால் சேவை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது:



வாட்ஸ்ஆப் வாய்ஸ் கால் சேவை இந்தியாவில்
அறிமுகப்படுத்தப்பட்டது:

ஏற்கனவே குறிப்பிட்டதை அடுத்து வாட்ஸ்ஆப் நிறுவனம் ஆன்டிராய்டு பயனாளிகளுக்கு வாய்கால் சேவையை வழங்கியது. இந்த புதிய சேவை இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலருக்கும் நேற்று முதல் கிடைக்க ஆரம்பித்துள்ளது.

இது குறித்து வாட்ஸ்ஆப் தரப்பில் இருந்து எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்ஆப் மூலம் அழைப்புகளை மேற்கொள்ள 'வாட்ஸ் அப்' வலைதளம் சென்று, .apk என்ற ஃபைலை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பதிவிறக்கம் செய்தாலும், பிறருடன் பேச முடியாது.

மறு தரப்பில் பேசுபவரிடமும், .apk பைல் இருந்தால் மட்டும் தான் பேச முடியும். இல்லை என்றால், நண்பருக்கும் அதே பைலை அனுப்பி, அதன் மூலமாகவும் பேச முடியும்.

கடந்த மாதம் வெப் வாட்ஸ்ஆப் நீட்டிப்பும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. வாட்ஸ்ஆப் நிறுவனத்தை பேஸ்புக் கைப்பற்றியதை அடுத்து இது போன்ற சேவைகள் வெளியாகி வரும் நிலையில் இது போன்று பல சேவைகளை அதன் பயனாளிகள் எதிர்பார்க்கின்றனர்.

Source: one india

Popular Posts

Facebook

Blog Archive