பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

திங்கள், 2 ஜனவரி, 2017

How to stop your smartphone overheating !

Heating up and device getting bursted is not uncommon now, as we see several related things happening around. But let’s dig in to check what causes this. Lithium batteries have what we call it as “thermal runaway”. It is a situation where an already heating up battery makes it worse by generating more heat. How much ever the companies try to make adevice compact, maintaining all the safety for the battery, that isn’t enough to keep the opposite sides far, and the battery too doesn’t get space to properly dissipate the heat out.


It is altogether a different case if you are noticing heat while charging the phone overnight or for a long time, but if you see it getting heated for even gaming or using it with active screen for a long time, you might have to blame not just the battery but several other factors.

 



English Blog  ══►
▂ ▄ ▅ ▆ ▇ █ Please Visit:  www.masinfom.blogspot.com  █ ▇ ▆ ▅ ▄ ▂

பண்ணை மாடுகளின்( ஜெர்சி) உண்மை நிலை

பண்ணை மாடுகளின் உண்மை

பால்  பால்.


அன்றாடம் நம் வாயில் நுழையும் அத்தியாவசியப் பொருளாகமாறிவிட்டது.
காலை எழுந்தவுடன் காபி; பின்பு வாயில் உருகும் நெய் தோசை
என்று பாரதியார் பாட்டு எழுதும் அளவிற்கு பால் மற்றும் பால் பொருட்கள் நம் அன்றாட வாழ்வில் கலந்துவிட்டன. தொலைக்காட்சி விளம்பரங்களும்,நகைச்சுவையாய் சித்தரிக்கப்படும் கார்டூன் படங்களும் நம்மை தினம் தினம் முட்டாளாக்கிசம்பாதிக்கின்றன.

செண்பகமே செண்பகமே என்று பாட்டுப் பாடி பால் கறந்து சினிமாவும் நம்மை முட்டாளாக்கிவிட்டது. உண்மையில் பால் எனும் வெண்மையான திரவத்திற்குப் பின்னால் உள்ள இருண்ட உண்மை தெரியுமா உங்களுக்கு?

 நாம் தெய்வமாக நினைக்கும் பசுக்கள் படும் துயரம் பற்றி அறிவீர்களா? பால் பொருட்களை தவிர்த்து வாழ்தல் உண்மையில் ஆரோக்கியம் என்பதை  அறிவீர்களா? அறிந்து கொள்ள மேலும் படியுங்கள்.
இந்தக் கட்டுரையை எழுதும் முன் நான் பாலைப் பற்றி என்ன நினைத்திருந்தேன் என்று கூறி விடுகிறேன். இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் முட்டை மற்றும் பால் பொருட்களை விரும்பி சாப்பிட்டிருக்கிறேன்.

முட்டையில் உயிர் இல்லை என்றும் பால் கறக்காமல் விட்டால் பசு வேதனைப்படும் என்றும் எனக்கு கற்பிக்கப்பட்ட முட்டாள் தனமான கொள்கைகளைப் பேசி விதண்டாவாதம் செய்து என் தவறுகளை நியாயப்படுத்தியிருக்கிறேன். ஒரு  அன்பர் என்னிடம் பால் சாப்பிடுவதைப் பற்றி வாதாடினார். நான் வழக்கம் போல விதண்டாவாதம் செய்து என் தவறை நியாயப்படுத்தினேன். இப்பொழுது நினைத்தால் வெட்கமாக இருக்கிறது. ஆனால் அவர் என்னிடம் கேட்ட கேள்விகள் என்னை சிந்திக்கச்செய்தன.

பால் உண்மையில் கொடூரமானதா?பால் இல்லாமல் வாழ முடியுமா?என்ன நடக்கிறது பால் பண்ணைகளில்? பசுக்கள் துன்புறுத்தப்படுகின்றனவா?இத்தகைய கேள்விகள் என்னுள் எழுந்தன. கேள்விகளுக்கு பதில் காண முற்பட்டேன். அந்த பதில்களும், என்னை ஒரு நனிசைவனாய் மாறச் செய்த காரணங்களும் இங்கே...

அமைதியாக மென்று கொண்டிருக்கும் வாயும் நிசப்தமான கண்களும் பசுக்களை இவ்வுலகில் எந்த விதப் பற்றும் இல்லாமல் திருப்தியாய் வாழ்வது போல் காட்டிவிடும். ஆனால் அவற்றின் ஆழமான கரிய நிறக் கண்களுக்கு பின்னால் இருக்கும் சங்கதிகள் பல.
வாயில்லா ஜீவன் என்று முத்திரை குத்தப்பட்டிருக்கும் அந்தப் பசுக்கள் உண்மையில் வாயை கண்களில் கொண்டிருக்கின்றன. ஆனால் மனிதன் தான் அதை கவனித்துக் கேட்கத் தவறிகாதில்லா ஜீவனாக வலம் வருகிறான் என்பது மிகவும் கசப்பான உண்மை.
நாய் பூனை போன்ற செல்லப் பிராணிகள் போன்றே மாடுகளும் கூட ஒரு அலாதியான உயிரினம் தான். அவைகளும் தனித்தன்மை பல கொண்டு தமக்குள்ளே வெவ்வேறு விதமான குணநலன்களைப் பெற்றிருக்கின்றன. சில முரண்டு பிடிக்கும், சில கூச்சம் கொண்டு ஒதுங்கி நிற்கும். சில நட்பு பாராட்டும், சில ஆதிக்கம் செலுத்தும். சமீப காலங்களில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகள் பலவும் பசுக்கள் புத்திக்கூர்மை நிறைந்தவை என்று நிரூபிக்கின்றன.

பசுக்கள் தமக்குள் இனம் கண்டு பழகுவதையும், நட்பு பாராட்டுவதையும், நிகழ்ச்சிகளை நீண்ட காலம் நினைவு பாராட்டுவதையும், எதிர்காலம் பற்றி வருத்தம் கொள்வதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து நிரூபித்துள்ளார்கள். மேலும் மனிதர்களைப் போலவே வெற்றியைக் கொண்டாடும் தன்மையும், பாவனைகள் செய்து சந்தோஷங்களைப் பறிமாறிக் கொள்கின்றன என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிக்கல் என்னவென்றால், அவை தோலுக்காகவும்,மாமிசத்துக்காகவும் இனப்பெருக்கம் செய்யப்பட்டு கொல்லப்படுகின்றன.

பிற ஜீவராசிகளைப் போன்றே அவைகளும், குடும்பத்தில் இருந்து பிரிக்கப்படுவதையும் கொல்லப்படுவதையும் விரும்புவதில்லை. அவை பிரிவின் சோகத்தை ஆழமாக உணர்கின்றன.
பசுக்கள் 7 அடி உயரம் கொண்ட சுவற்றை தாண்டியும், நீந்தியும், பல மைல்கள் நடந்து சென்று தன்னிடம் இருந்து பிரிக்கப்பட்ட கன்றை சேர போராட்டங்கள் பல செய்கின்றன. ஆனால் ஆதிக்கம் செலுத்தும் மனிதன் மனிதனாக இல்லாமல் போவதால் அவை கொல்லப்படுகின்றன. பெற்ற தாய் முன்னே பிள்ளை கொல்லப்பட்டு தோலுரிக்கப்படும் அவலம் தோல் பட்டறைகளில் நடக்கிறது. மனிதத்தை உலகுக்கே எடுத்துக் கூறும் வேதங்களும் இதிகாசங்களும் நிறைந்த நம் நாடு பணத்தை நோக்கி சுழல்வதால் ஏற்பட்ட மாய வலையில் மனிதம் மறைந்து போய்விட்டது. :

1.பசுக்கள் பால் கொடுக்கும் இயந்திரங்களா?:

இல்லை. இல்லவே இல்லை. அவை அவ்வாறு சித்தரிக்கப் பட்டன. ஆனால் உண்மையில் ஒரு பெண் எதற்காக மார்பகத்தில் பால் சுரக்கிறாளோ அதே காரணத்திற்காகத்தான் பசுக்களும் பிற பாலூட்டிகளும் பால் சுரக்கின்றன. ஒரு பெண் தன் குழந்தைக்கு ஊட்டமளிக்கவே பால் சுரக்கிறாள். அது போலவே பசுக்களும் அவற்றின் குழந்தைகளின் பசி நீக்கவும் ஊட்டச்சத்து அளிக்கவும் மட்டுமே பால் சுரக்கின்றன. கரு தரித்து பிள்ளை பிறந்தால் தான் ஒரு பாலூட்டியால் பால் தர முடியும். எனவே பாலுக்காக பண்ணையில் வளர்க்கப்படும் பசுக்கள் ஒவ்வொரு வருடமும் பிரசவிக்கப் படுகின்றன. ஒரு பிள்ளையைப் பெற்று எடுக்கும் வலியை உணர்வது தாய் மட்டும் தான். வருடா வருடம் வன்முறையாகக் கற்பழிக்கப்பட்டு பிள்ளை பெறச்செய்தால் ஒரு பெண்ணின் வலி எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கும் ஒரு பசுவின் வாழ்க்கை.
இன்று பசுக்களும் எருதுகளும் இராட்சத இயந்திரங்கள் ஓடும் தொழிற்சாலைகளில் கட்டிவைக்கப்பட்டு இயந்திரங்கள் மூலமாக பால் கறக்கப்படுகின்றன. இயந்திங்கள் அதிகப் பாலை உறிஞ்சி எடுப்பதற்கே முற்படுகின்றன. இயல்பாக சுரக்கும் பாலை விட பல மடங்கு அதிகம் பாலை கறப்பதற்கு அவை அதிக அழுத்தம் கொடுக்கின்றன. இந்த அழுத்தமானது பசுவிற்கு உயிர் போகும் வலியை உண்டு செய்கின்றன. ஆனால் நமக்கென்ன கவலை? என்று நாம் பாலை உறிஞ்சுகிறோம். மேலும் வேலை செய்யும் ஆட்கள் பெரும்பாலும் இயந்திரங்களை சரியாக கவனிப்பதில்லை.

அவை சரியான நேரத்தில் நிறுத்தப்படுவதில்லை. அதனால் பால் வற்றிய பிறகும் கூட அவை மடியை விடாமல் உறிஞ்சுகின்றன. இது மிகவும் கொடிய வேதனையாகும். பெருபாலும் பாலுக்காக பண்ணையில் வளர்க்கப்படும் பசுக்கள் அத்தியாவசிய தேவைகள் கூட பூர்த்தியாகாத வகையில் மிகவும் குறுகிய இடங்களில் கட்டி வைக்கப்படுகின்றன. அவை பால் கொடுக்கும் இயந்திரங்கள் போல நடத்தப்படுவது வேதனை. அநேக பசுக்கள் தினந்தோறும் ஹார்மோன் (மரபணு) ஊசி மூலம் அதிகப் பால் கறக்க உந்தப்படுகின்றன. (இதன் காரணமாகவே பசுக்கள் பால் கறக்காமல் விட்டால் அவற்றின் மடி வீங்கிப் போகிறது இயல்பு நிலையில் கன்றுக்கு பால் ஊட்டிய பிறகு எந்த பாலூட்டிக்கும் மடியில் பால் தங்கி வீக்கம் ஏற்படாது.)  ஆக்ஸிடாக்ஸின் (OXYTOXIN-SCHEDULE H DRUG)எனப்படும் வேதிப்பொருள் பரவலாக அனைத்து பால் பண்ணைகளிலும் உபயோகிக்கப்படுகிறது.

இது சட்டவிரோதமானதும் கூட. இந்த வேதிப்பொருள் அதிகப் பால் சுரப்பதற்காக உபயோகிகப்படுகிறது. ஆனால் இது பசுக்களின் அடிவயிற்றில் பிரசவ காலத்தில் ஏற்படும் வலிக்கு சமமான வேதனையை உருவாக்குகிறது. D.A.V.Health Research foundation-ன் பிரதமரான டாக்டர். R.P.பர்ஷார் என்பவரின் ஆய்வுக்கட்டுரையில் அவர் கூறுகிறார், "உத்தரப் பிரதேசம்,ஹரியானா மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களைச் சேர்ந்த68-83% பால் பண்ணைகள் ஆக்ஸிடாக்ஸின் ஊசியை பயன்படுத்துகின்றன. கன்று ஈன்ற பின் 6 மாதங்கள் வரை ஒரு பசு பால் சுரக்கும். ஆனால் கூடுதலாக பல மாதங்கள் செயற்கை கருத்தறிப்பு செய்யாமலே ஆக்ஸிடாக்சின் ஊசியை செலுத்துவதன் மூலம் பால் கறக்கப் படுகின்றது. இந்த ஆக்ஸிடோக்சின் என்பது கறக்கப் படும் பாலில் கலந்து வருவதால் பால் என்பது ஒரு ஆட்கொல்லி விஷமாக மாறுகிறது. தினந்தோறும் இத்தகைய பாலை உட்கொள்வதால் 55க்கும் அதிகமான வியாதிகளை நாம் உட்கொள்கிறோம் என்பது நிதர்சனமாகிறது"

இழந்தை பழம் - அற்புதமான பயன்கள்

நமது தோட்டத்தில் இழந்தை மரம் இருக்கிறது அதை தினமும் தொடர்ந்து சாப்பிட்டபோது பல பல மாற்றங்களை உணர்ந்தேன் அப்போது நாமக்கல்லில் உள்ள நமது உறவினர் ஒருவர் இழந்தைபழம் சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு வெகுவாக கட்டுபடுவதாக கூறியது நினைவிற்கு வந்ததும் நம்மிடம் பணிபுரியும் இருவருக்கு இந்த பழத்தை இரண்டு கைப்பிடியளவு சாப்பிட தந்ததும் தொடர்ந்து இருபது நாட்களில்  சர்க்கரையின் அளவு 280 லிருந்து 160 க்கு குறைந்தது தெரிய வந்தது மற்றொருவருக்கு 340 லிருந்து 200 க்கு குறைந்ததும் மிகவும் ஆச்சர்யமாக இருந்தது இத்துடன் சர்க்கரையை குறைக்க மூலிகை பொடியையும் சேர்த்தே கொடுத்தேன் 

அவர்களின் கூற்று.....
கைக்கால் குடைச்சல் மற்றும் உடல் வலி சோர்வு என்பது துளியும் ஏற்படவில்லை என்பதை கேட்கும் போது ஆஹா இவ்வளவு மேட்டர் இதிலிருக்கா என்று இதை பற்றிய ஆய்வு செய்ய முயன்றேன்.......பித்தத்தை சமநிலை படுத்தி கணையத்தில் இன்சுலின் சுரப்பை அதிகபடுத்தி உடலில் உள்ள சர்க்கரையை எரித்து இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கிறது இதனால் தான் இழந்தை பழம் சாப்பிட்டால் வாந்தி தலைசுற்றல் மயக்கம் எல்லாம் தீரும் என்பது இதன் அடிப்படையில் தான் எங்க அக்கா பேருந்து பயணத்தில் வாந்தி எடுக்கும் அப்போதெல்லாம் இழந்தை பழம் அல்லது இழந்தைவடை ஏதாவது ஒன்றை வாயில் போட்டு அடக்கி வைத்து கொள்வாங்க...

எனது அக்கா தங்கைகள் எல்லோரும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலிக்காக சின்னபாப்பா எனும் மருத்துவச்சி ஆயா உண்டு எங்கள் ஊரில்  அவரிடம் போய் மருந்து வாங்கி சாப்பிடுவது உண்டு அவர் இழந்தைஇலை மற்றும் மிளகு பூண்டு இவற்றை கைஅம்மியில் அரைத்து கோலியளவு தருவார்கள் வலி உடனடியாக போய்விடும் மேலும் அந்த நாட்களில் ஏற்படும் தலைவலி தலையில் நீர் கோர்த்தலுக்கு இதன் இழை அருமையான மருந்து என்று கூறியதையும் கவனத்தில் கொள்வோம் மேலும்  அவரிடம் வினவியதற்கு குழந்தைபேறு இல்லாதவர்களுக்கும் இதை கொடுத்தால் கர்ப்பபையில் உள்ள வாயுவை வெளியேற்றி குழந்தை உருவாக காரணமாக இருக்கிறது என்பதையும் அறிந்து கொண்டேன் .....
பாலைவன பகுதிகளில் வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் நீர் இழப்பை குறைக்க இழந்தை இலையை நீரில் போட்டு குளிந்தாலோ அல்லது குடித்தாலோ மட்டுபடுகிறது என்பதை அறிந்த்தால் தான் நபிகள் நாயகம் அவர்கள் இதை பற்றிய மருந்துவ குறிப்புகளை வழங்கியுள்ளார் என்பதையும் கவனத்தில் கொள்ளவும் மேலும் ஆரேபிய பகுதிகளில் இறந்தவர்களை இந்த இலையை போட்டு கொதிக்க வைத்து அந்த நீரில் குளிபாட்டியதிலிருந்து இன்னொன்றையும் உணரமுடிகிறது இது மிகச்சிறந்த கிருமிநாசினியாகவும் செயல்படுகிறது என்பதையும்
மேலும் அதிவியர்வைக்கு அருமருந்து இது தான் இதன் இலைகளை பரித்து நன்றாக அறைத்து அதன் சாற்றை உள்ளங்கை உள்ளங்காலில் தடவி காலையில் எழுந்து இதன் தலையை போட்டு கொதிக்க வைத்த நீரில் குளித்து பாருங்கள் ஒரு வாரம்  உள்ளங்கால் கை வியர்த்தல் பூரண குணமாகும் .... 

நபிகள் இதை சிறப்பாக குறிப்பிட வியர்வையின் மூலம் உடலில் உள்ள நீர்சத்து குறைவதை மட்டுபடுத்துவதனால் தான் இவற்றை கொண்டாடி இருக்கிறார் பாலைவன பகுதிகளில் உள்ளவர்களுக்கே இதன் அவசியம்புரியும் ......

இது வரண்டநில தாவரம் ஆதலால் இதன் குணங்களும் அதிகம் என்பது  உங்களுக்கும்  தெரியும் பேரீட்சையை சாப்பிட்டு உணர்ந்த நல்ல விடயங்களை விட இழந்தைபழத்தை சாப்பிட்டு நான் உணர்ந்தது மிக மிக அதிகம்  மிகவும் சுறுசுறுப்பாக வைத்து கொள்கிறது சோர்வோ கொட்டாவியோ வரவே வராது எவ்வளவு தூரம் நடந்தாலும் கால் வலியோ இயலாமையோ ஏற்பட்டதில்லை எனக்கு..... சேலம் சிவராஜ் கிட்ட லேகியம் வாங்கி சாப்பிடுபவர்கள் பதினைந்து நாள் தொடர்ந்து இழந்தைபழத்தை சாப்பிட்டு விட்டு அப்புறம் சொல்லுங்கள் இழந்தை பழம் இழந்ததை மீட்கும் என்று .....

மேலும் விந்துவில் உயிரணுக்களின் எண்ணிக்கையை கூட கூட்டகூடும் அதற்கான நிறைய முகாந்திரங்கள்  உண்டு யாராவது பயன்படுத்தி பின்பு சோதித்து அதன் முடிவை தெரியமடுத்துங்கள் .....

அற்புதமான முன்னேற்றத்தை உணர்வீர்கள்  இதன் சிறப்பம்சத்திற்கு காரணம் இதிலுள்ள பொட்டாசியம், கால்சியம் ,சோடியம் மற்றும் இரும்பு சத்துக்கள் மிகுதியான இருப்பதனாலே  அதனால் தான் நரம்பு மண்டலம் வலுவடைகிறது  இதன் காரணமாக ஞாபக சக்தியும் அதிகரிக்கிறது... என்கிறார்கள் 

ஒருவேளை இவற்றில் நைட்ரஜனும் இருக்க கூடும் ....ஆய்வுக்குரியதே...
பொட்டாசியம் உள்ளதால் கொஞ்சம் தொண்டை கட்டகூடும் சிலருக்கு அவர்கள் மிளகு தூளையும் உப்பையும் தூவி சாப்பிடுங்கள் .....


அதிக விலை கொடுத்து வாங்கும் கிவி,ஆஸ்திரேலிய ஆப்பிள் போன்ற  மேற்கத்திய பழங்களை விட பத்து ரூபாய்க்கு வாங்கி சாப்பிடும் இழந்தையின் சிறப்பு 100 மடங்கு சிறப்பானவை  என்பதை அனுபவத்தில் உணர்ந்தவன் நான்
சிறியதே அழகு (small is beautiful) fb la errundhu copy pannadhu

நாட்டு மாடு தினமும் 20 லிட்டர் பால்... மாதம் ரூ.60 ஆயிரம் வருமானம்! ***பஞ்சகவ்யா***


தினமும் 20 லிட்டர் பால்... மாதம் ரூ.60 ஆயிரம் வருமானம்!
ஆரம்பக் காலத்தில் பஞ்சகவ்யா கரைசலைப் பயன்படுத்தியவர்கள், அதைப் பரவலாக விவசாயிகளிடம் எடுத்துச் சென்றவர்கள் குறித்த தொடர் இது. பயிர்களுக்கும் மட்டுமல்ல, உயிர்களுக்கும் உகந்தது பஞ்சகவ்யா என்பதையும் பல முன்னோடி விவசாயிகள் நிரூபணம் செய்துள்ளனர். அந்த வகையில் கால்நடை வளர்ப்பில் பஞ்சகவ்யாவின் பங்களிப்புக் குறித்துப் பகிர்ந்துகொள்கிறார், திருப்பூர் மாவட்டம், முத்தூர் பகுதியைச் சேர்ந்த முன்னோடி இளம் விவசாயி நந்தகுமார்.
   
நந்தகுமாரின் தோட்டத்துக்கு நாம் சென்றபோது, களத்துமேட்டில் கட்டப்பட்டிருந்த நாட்டு மாடுகளுக்கு மூங்கில் குழாய் மூலம் பஞ்சகவ்யா கரைசலைக் கொடுத்துக் கொண்டிருந்தார், அவர். நம்மைக் கண்டதும் வரவேற்றுப் பேச ஆரம்பித்தார், நந்தகுமார். 

“நான் இன்ஜினீயரிங் படிச்சிட்டு விவசாயத்துல இறங்கிட்டேன். இங்க 25 நாட்டுமாடுகளை வளர்க்கிறேன். இந்த மாடுகள் மூலமா கிடைக்கிற சாணம், சிறுநீர், பால், தயிர், நெய்... பொருட்களைப் பயன்படுத்திதான் பஞ்சகவ்யா தயாரிக்கிறேன். பயிர்களுக்குக் கொடுத்தது போக, மீதம் இருக்குற பஞ்சகவ்யாவை விற்பனையும் செய்றேன். இப்போ, நாட்டுப் பசும்பாலுக்குத் தேவை அதிகமாயிட்டே வருது. கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் பகுதிகள்ல ஒரு லிட்டர் பால் சுமார் 100 ரூபாய் வரை விற்பனையாகுது. எங்கிட்ட இப்போதைக்கு 7 நாட்டு மாடுகள்தான் கறவையில இருக்கு. எங்க தேவை போக மீதியை விற்பனை செய்றேன். தினமும் 20 லிட்டர் அளவுக்குப் பால் விற்பனை  செஞ்சிட்டிருக்கேன். ஒரு லிட்டர் பால் ரூ.70-க்கு விற்பனை செய்றேன். இதன்படி தினமும், 1,400 ரூபாய் வருமானம் கிடைக்குது. ஆக மாசத்துக்கு பால் மூலமா 42 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது. பால் உற்பத்தி அதிகரிச்சு, நேரடியா பாலை விற்பனை பண்ணும்போது, இன்னும் கூடுதல் வருமானம் கிடைக்கும். விவசாயத்துல நல்ல வருமானம் கிடைக்கிறதாலதான், சாஃப்ட்வேர் கம்பெனிகள்ல கிடைச்ச வேலைகளை விட்டுட்டு இங்க வந்துட்டேன்” என்று முன்னுரை கொடுத்த நந்தகுமார் தொடர்ந்தார்.

“மாடுகள் அதிகமா இருக்குறதால ஒண்ணு மாத்தி ஒண்ணுக்கு ஏதாவது வியாதி வந்துடும். ஆனா, நான் மாடுகளுக்கு அலோபதி மருந்துகளை உபயோகப்படுத்துறதில்லை. மாடுகளுக்கு முழுக்க முழுக்க பஞ்சகவ்யா வைத்தியம்தான். கால்நடைகளுக்கும் பஞ்சகவ்யா கொடுக்கலாம்னு சொல்லிக் கொடுத்தவர், ‘கொடுமுடி’ டாக்டர் நடராஜன் ஐயாதான். அவரோட ஆலோசனைப்படிதான் மாடுகளுக்குப் பஞ்சகவ்யா கொடுத்து வருமுன் காக்கும் வைத்தியம் செஞ்சுக்குறோம். 50 மில்லி வடிகட்டிய பஞ்சகவ்யாவை தண்ணீர் கலக்காமல் கன்னுக்குட்டிகளுக்கு மாசம் ஒரு வாட்டி கொடுக்கிறோம். இதனால, நோய் எதிர்ப்புச் சக்தி கூடுது. கன்னுக்குட்டிகள் மண்ணைத் தின்னு வயிறு உப்பிப் போய் மூச்சுவிட சிரமப்படுற சமயத்துல 100 மில்லி பஞ்சகவ்யாவை மூணு நாளைக்குக் கொடுத்தா சரியாகிடும்.
மேய்ச்சலுக்குப் போற நாட்டு மாடுகள் சில சமயங்கள்ல இளம் சோளப்பயிர்களைத் தின்னுடுச்சுன்னா ‘சொக்கிப் போயிடும்’. இதனால வயிறு உப்பி, எந்திரிக்க முடியாமப் போயிடும். இதுக்கு உடனே வைத்தியம் பார்க்காட்டி மாடு செத்துப் போயிடும். 500 மில்லி பஞ்சகவ்யாவை மூங்கில் குழாய்ல நிரப்பி நேரடியா தொண்டைக்குள் போகுற மாதிரி ஊத்தி விடணும். ரெண்டு மணிநேரம் கழிச்சு மறுபடியும் அதே அளவு பஞ்சகவ்யாவை வாயில ஊத்திவிட்டு, ஒரு மணி நேரம் வரைக்கும் தீவனம் கொடுக்காம மரத்தடியில தனியா கட்டி வெச்சா... கொஞ்ச நேரத்துல வயித்துப் பொருமல் நீங்கி, மாடு அசைபோட ஆரம்பிச்சுடும். சாணம், சிறுநீர் ரெண்டும் முழுசா வெளியேறிடும். அப்புறமா அந்த மாட்டுக்குத் தண்ணீர் காட்டணும். நல்லா தண்ணி குடிச்சுட்டுப் பசுந்தீவனத்தைச் சாப்பிட ஆரம்பிச்சுடும். தொடர்ந்து அஞ்சு நாளைக்கு 200 மில்லி பஞ்சகவ்யாவைக் கொடுத்துட்டு வந்தா, சொக்கிப் போன மாடு முழுசா குணமடைஞ்சிடும்” என்ற நந்தகுமார்,

 நிறைவாக
“கால்நடைகளுக்கு வைக்கோல், சோளத்தட்டை மாதிரியான உலர்தீவனம் ரொம்ப அவசியம். இதை மொத்தமா கிடைக்கிறப்போ வாங்கிப் போர் போட்டுக்குவோம். அப்படிப் போர் போடுறப்போ, வரிசையா கத்தைகளை அடுக்கி, அது மேல 3 சதவிகித பஞ்சகவ்யா கரைசலை வேப்பிலையில முக்கி நல்லா தெளிச்சு விடுவோம். இதேமாதிரி ஒவ்வொரு அடுக்குக்கும் செஞ்சுவிட்டா உலர்தீவனத்துல சுவை கூடிடும். சத்தானதாகவும் மாறிடும். 

அதேமாதிரி மடிவீக்கம் கண்ட பசுக்களுக்கு 200 மில்லி பஞ்சகவ்யா கொடுத்து... மடிகள்லயும் பூசி விடுவோம். இதுமாதிரி ரெண்டு மாசம் காலையிலயும் சாயங்காலமும் செஞ்சா மடிவீக்கம் குணமாகிடும். கன்னுக்குட்டியா இருந்தாலும் சரி, வளர்ந்த மாடா இருந்தாலும் சரி, அதுக்கு குடற்புழு நீக்கம் அவசியம். கன்னுக்குட்டிகளுக்கு அதிகாலை நேரத்துல வெறும் வயித்துல 100 மில்லி பஞ்சகவ்யாவை தொடர்ந்து மூணு நாளைக்குக் கொடுத்தா குடற்புழுக்கள் வெளியேறிடும். மாடுகளோட வயசுக்கேத்த மாதிரி பஞ்சகவ்யா அளவைக் கூட்டிக்கலாம் இதேமாதிரி கால்நடைகளுக்கு கொடுக்கப்படும் பஞ்சகவ்யாவை வடிகட்டியே கொடுக்க வேண்டும்” என்ற எச்சரிக்கை சொல்லிவிட்டுக் கன்றுகளுக்குப் பஞ்சகவ்யா கொடுக்க ஆரம்பித்தார்.

தொடர்புக்கு, நந்தகுமார், செல்போன்: 96980 57805

“மீன்களுக்குப் பஞ்சகவ்யா கொடுக்கலாமா?”
பசுமை விகடன் வாசகர்கள் பலர், ‘கொடுமுடி’ டாக்டர் நடராஜனைத் தொடர்பு கொண்டு பஞ்சகவ்யா குறித்த பல சந்தேகங்களைக் கேட்டு வருகிறார்கள். டாக்டர் நடராஜனிடம் வாசகர்கள் கேட்ட கேள்விகள், அதற்கு அவர் அளித்த பதில்கள் ஆகியவற்றில் சில இங்கே இடம்பெறுகின்றன. 

“கோ சஞ்சீவி என்பது என்ன... அது எதற்குப் பயன்படுகிறது?”
ஆர்.செண்பகவல்லி, கோவில்பட்டி. 

“கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கு உடனடி நிவாரணம் கொடுக்கும் மூலிகைப் பொடி, கோ சஞ்சீவி. இதை எளிதாக நாமே தயாரித்து கால்நடைகளுக்குக் கொடுக்கலாம்.
அமுக்கிரா கிழங்கு, உசிலை இலை (அரப்பு இலை), வேப்பிலை ஆகியவற்றில் தலா 300 கிராம் எடுத்துக்கொள்ளவும். சீந்தில் இலை கொடி, நிலவேம்புச் செடி ஆகியவற்றில் தலா 50 கிராம் எடுத்துக் கொள்ளவும். இந்த ஐந்து பொருட்களையும் மூன்று நாட்கள் நிழலில் காயவைத்து... உரலில் இடித்து நன்றாகப் பொடியாக்கினால், அதுதான் கோ சஞ்சீவி. இதில் 50 கிராம் பொடியை ஆடு மாடுகள் குடிக்கும் தண்ணீர் அல்லது தீவனத்தில் கலந்து கொடுத்து வந்தால், பருவத்தில் சினைப்பிடிக்கும். நன்றாகத் தீவனம் எடுக்கும். பிறக்கும் கன்றுகள் ஆரோக்கியமாக இருக்கும். அதிகப் பால் சுரக்கும்.” 

“வளர்ப்பு மீன்களுக்குப் பஞ்சகவ்யா கொடுக்கலாமா?”
மு.சக்கரபாணி, பாமணி, நாகப்பட்டினம். 

“தாராளமாக கொடுக்கலாம். சாணத்துடன் கூடிய பஞ்சகவ்யாவை மீன் குட்டையில் போட்டுவர, நீர்த் தாவரங்களும், புழு, பூச்சிகளும் அதிகமாக உருவாகும். அது மீன்களுக்கு ஊட்டமான உணவாக மாறும். குளத்தில் புதிதாகத் தண்ணீர் விடும்போது சாணம் கலந்த பஞ்சகவ்யா ஊற்றுவது நல்லது. இடைப் பருவத்தில் மீன் குட்டையில் பஞ்சகவ்யா கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.”

தொடர்புக்கு, டாக்டர் நடராஜன், செல்போன்: 94433 58379.

பரிசோதனைகள் தொடரும்!
கால்நடைகளுக்குப் பஞ்சகவ்யா கொடுப்பது குறித்துப் பேசிய டாக்டர் நடராஜன், “நானும், கால்நடை மருத்துவர் ஆறுமுகமும் சேர்ந்து ஆடு, மாடு, கோழி, நாய்னு பஞ்சகவ்யா கொடுத்துச் சோதனைகள் செஞ்சோம். சோதனைகளைச் செய்யச் சொன்னவர், நம்மாழ்வார் அய்யாதான். அந்தச் சோதனைகள்ல நல்ல தீர்வு கிடைச்சது. கால்நடைகளுக்குப் பஞ்சகவ்யாவை மேல்பூச்சா பூசும்போது தோல் உண்ணி தொல்லையும் நீங்குச்சு. முடி உதிர்வது குறைஞ்சு தோல் பளபளப்பா மாறுச்சு.

ரொம்ப நாள் சினைப்பிடிக்காம இருந்த பசுமாடுகளுக்கு 200 மில்லி பஞ்சகவ்யாவை தினமும் கொடுத்தப்போ, மூணு மாசத்துல சினைக்குத் தயாரானது. இதுமாதிரி இன்னும் நிறைய சோதனைகள் செஞ்சுதான் கால்நடைகளுக்குப் பஞ்சகவ்யாவைப் பரிந்துரைச்சோம். இன்னமும் சோதனைகள் தொடர்ந்துட்டுதான் இருக்கு” என்றார்.
கழிச்சலைத் தடுக்கும் பஞ்சகவ்யா!

சேவல்களுக்குப் பஞ்சகவ்யா கொடுத்து சிறப்பான முறையில் வளர்த்து வருவதாக, ஈரோடு மாவட்டம், சிவகிரி பகுதியைச் சேர்ந்த சீனுவை நமக்குப் பரிந்துரைத்தார், டாக்டர் நடராஜன். சீனுவின் பண்ணையில் அவரைச் சந்தித்தோம். 

“டாக்டரோட சிஷ்யர் புரவிமுத்து என்னோட நண்பர். அவர் மூலமாகத்தான் சேவல்களுக்கும் பஞ்சகவ்யா கொடுக்கலாம்னு தெரிஞ்சிகிட்டேன். டாக்டர்தான் பஞ்சகவ்யாவ தயாரிக்கிற, பயன்படுத்துற முறைகள சொல்லிக் கொடுத்தார். எங்கிட்ட கீரி, மயிலு, காகம், வல்லூறு, ஆந்தை, பொன்னிறம்னு பல ரகங்கள்ல 150 சண்டைச் சேவல்கள் இருக்கு. வெள்ளைக்கழிச்சல் நோய்தான் கோழி இனங்களுக்கு எமன். கோடைகாலத்துல இந்த நோய் தாக்கும். ஒரு கோழிக்கு கழிச்சல் வந்திட்டா, எல்லா கோழிகளுக்கும் வேகமாப் பரவ ஆரம்பிச்சுடும். இதைச் சரியா கவனிக்காட்டி கோழிகளைக் காப்பாத்த முடியாது. முறையா பஞ்சகவ்யா கொடுக்குற கோழிகளுக்கு, இந்த நோய் தாக்குறதில்லை. வெயில் காலங்கள்ல கோழிகள் தண்ணீர் அதிகமா குடிக்கும். அதனால குடிநீர்லயே பஞ்சகவ்யாவைக் கலந்து வெச்சுடணும். 100 மில்லி தண்ணீருக்கு 3 மில்லி பஞ்சகவ்யானு கலந்து வெச்சுடணும். குறிப்பா பருவம் மாறுற காலங்கள்லயே இதைத் தொடர்ந்து கொடுக்க ஆரம்பிச்சிட்டா, கழிச்சல் நோய் தாக்காது. கம்பு, சோளம், மக்காச்சோளம், கேழ்வரகு மாதிரியான சிறுதானியங்களை, வடிகட்டிய 3 சதவிகித பஞ்சகவ்யா கரைசல்ல நனைச்சு, நிழலில் உலர்த்தி வாரம் ஒரு நாள் கொடுப்போம். அதனால எதிர்ப்புச் சக்தி அதிகரிச்சு எந்த நோயும் வர்றதில்லை” என்றார். 

தொடர்புக்கு: சீனு, செல்போன்: 85268 54774

#TNneed jallikattu

வியாழன், 29 டிசம்பர், 2016

தேனீக்கள் - Theenikal Don't hesitate please forward to all.


தேனீக்கள்மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு
நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம்
இருக்காது! ’ என்று சொல்லியிருக்கிறார்
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து
இனிக்கும் செய்தியல்ல....!

தேனீ............உலகின் மிக சுவாரஸ்யமான,
நுணுக்கமான உயிரினம்.

அந்தத் தேனீக்களைப் பற்றி ஆச்சரியமான
மற்றும் அதிர்ச்சியான விஷயத்தைத்
தெரிந்துகொள்ளலாமா.............?
முதலில்... ஆச்சரியம்.

தக்கனூண்டு
சைஸில் இருக்கும் தேனீதான் உலகின் மிகச்
சிறந்த மகரந்தச் சேர்க்கையாளர்.

தென்னை, வாழை, பூசணி, ஆப்பிள், பீச்
போன்ற பல பழ வகைகள் காபி, ஏலக்காய்,
பருத்தி போன்ற செடிகள் மற்றும் உணவு
தானியங்கள் எனப் பல கோடி மகரந்தச்
சேர்க்கைகளுக்குக் காரணமாக இருக்கும்
தேனீக்கள்தான், உலகின் 80 சதவிகித
உணவுப் பொருள்களின் பெருக்கத்துக்கும்
காரணம்.

தேனீயின் தகவல் பரிமாற்ற முறை, ஸ்கைப்,
வாட்ஸ்அப் முறைகளை விடத்
துல்லியமானது.

யானை, ஆமைகளுக்கு
ஞாபகசக்தி அதிகம் என்போம்.
ஆனால், அவற்றைவிடவும் கூர்மையான ஞாபகசக்தி
கொண்டவை தேனீக்கள்.

இதுபோல இன்னும்
பல ஆச்சரியங்கள் அந்தத் தக்கனூண்டு
உடம்பில் இருக்கின்றன.
ஆனால், அதிர்ச்சி
தரும் விஷயம்...

அந்தத் தேனீக்கள் இப்போது
'அழிந்துவரும் உயிரினங்கள்’ பட்டியலில்
இடம்பிடித்திருக்கின்றன.

ஆம்... 'உலகை உலுக்கும் செய்தி’ என்றால்,
நிச்சயம் இதுதான்.

ஒட்டுமொத்த மக்கள்
தொகையாலும் பூமிக்கு விளையாத
நன்மை, ஒரே ஒரு தேனீயால் விளையும்.

அந்த அளவுக்குத் தேனீயின் ஒவ்வொரு
சிறகசைப்பும் பூமிப் பந்தில் பசுமைப்
போர்வையைப் போத்துகிறது.

தேனீக்களின் 'லைஃப்ஸ்டைல்’ பற்றி
தெரிந்துகொண்டால்தான், அது
காடுகளின் பெருக்கத்துக்கு எப்பேர்ப்பட்ட
நன்மை விளைவிக்கிறது என்று புரியும்.

தேனீக்களின் வாழ்வியல் குணங்களைப்
பற்றி கேட்டதும், சுவாரஸ்யமாகப்
பட்டியலிட்டார் தமிழ்நாடு வேளாண்மை
பல்கலைக்கழகத்தின் பூச்சிகள் துறையைச்
சேர்ந்த டாக்டர் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்.

''உலகத்தில் அஞ்சு வகை தேனீக்கள் இருக்கு.
மலைத் தேனீ, இந்தியத் தேனீ, கொம்புத்தேனீ, இத்தாலியன் தேனீ, கொடுக்கில்லாத்தேனீ.

இதில் இந்திய, இத்தாலிய மற்றும்
கொடுக்கில்லாத் தேனீக்களைத் தான் மனிதர்கள் வளர்ப்பாங்க.

 மத்த தேனீக்கள்
தானாகவே காட்டில் வளரும்..

ஒரு
குடும்பத்தில் ஒரு ராணித் தேனீ, சில
நூறு ஆண் தேனீக்கள், பல்லாயிரம் பணித்
தேனீக்கள் (பெண்கள்) இருக்கும்.

இதில் ஆண்
தேனீக்களுக்கு 90 நாள்களும், பணித்
தேனீக்களுக்கு 70 நாள்களும், ராணித்
தேனீக்கு இரண்டு வருடங்களும் ஆயுள்.

ராணித் தேனீக்களுக்கு முட்டையிடுவது
மட்டும்தான் வேலை.

ஆண் தேனீக்கு,
ராணியோடு புணர்வதும் தேன் கூட்டைப்
பாதுகாப்பதும் கடமை.

மற்ற எல்லா
வேலைகளும் பணித் தேனீக்கள் பொறுப்பு.
உணவுச் சேகரிப்பு, தேன்கூடு கட்டுவது,
தேனைப் பக்குவப்படுத்துவது, கூட்டைச்
சுத்தமாகப் பராமரிப்பதுனு எல்லா
வேலைகளையும் பணித் தேனீக்கள்தான்
கவனிக்கும்.

தேனீக்களின் பொறியியல் அறிவு
அபாரமானது.

தேன் கூட்டை அறுங்கோண
வடிவத்துல கட்டும். ஏன்னா, அப்பத்தான் ஒரு
சென்ட்டிமீட்டர் இடத்தைக்கூட வீணாக்காம
முழுசாப் பயன்படுத்த முடியும்.

ஆண்
தேனீகளுக்குப் பெரிய அறுங்கோண செல், பணித் தேனீக்களுக்குச் சிறிய
அறுங்கோண செல் வடிவத்தில் கூடு
கட்டிட்டு, ராணித் தேனீக்கு சிலிண்டர்
வடிவில் செல் கட்டும்.

கூட்டின் கட்டுமானம்
திருப்தியாக இருந்தால் மட்டுமே, ராணித்
தேனீ அதில் முட்டையிடும்.

பூக்களின் மகரந்தம், மதுரம்... இரண்டும்தான்
தேனீக்களின் உணவு.

அப்போதைய பசிக்கு
அப்போதே சாப்பிட்டுவிடும்.

அப்புறம் ஏன்
தேன் சேகரிக்கிறது?

குளிர் காலங்கள், பூ
பூக்காத காலங்களில் உணவுத்
தட்டுப்பாட்டைச் சமாளிக்கத்தான் தேன்
சேகரிக்கிறது.

தேனீக்கள் தேன் சேகரித்துப்
பதப்படுத்துவதுதான் உலகின் சிறந்த
உணவுப் பதப்படுத்தும் தொழில்நுட்பம்.

தேன் தேடிச் செல்லும் பணித் தேனீக்கள்,
பூக்களின் மதுரத்தை உறிந்து தன் உடலில்
இருக்கும் 'தேன் பை’யில்
சேகரித்துக்கொள்ளும்.

அந்த மதுரம்
முழுவதும் செரிக்காமல், தேனீயின்
வயிற்றில் இருக்கும் நொதிகளுடன்
சேர்ந்து திரவமாக மாறிவிடும்.

கூட்டுக்குத் திரும்பி வரும் தேனீக்கள்,
கூட்டின் வாசலில் காத்திருக்கும்
தேனீக்களிடம் அந்தத் திரவத்தை
ஒப்படைக்கும்.

அதற்காக ஏப்பமிட்டு
ஏப்பமிட்டு தேன் பையில் இருந்து
திரவத்தை வெளியில் கொண்டுவந்து
எதிர் தேனீயின் வாயில் கொட்டும்.

ஒரு தேனீ இப்படி 50 முறை கக்கினால்தான், ஒரு துளி தேன் சேரும்.

கூட்டைப் பராமரிக்கும்
தேனீக்கள் அந்தத் திரவத்தைக் கூட்டின் ஓர்
ஒரத்தில் இருக்கும் தேனடையில் கக்கி,
அதில் இன்வர்டோஸ் எனும் நொதியைச்
சேர்க்கும்.

பிறகு அந்தத் திரவத்தில்
இருந்து நீர்த்தன்மை வற்றிப் போவதற்காக
தன் இறகை ஆட்டி ஆட்டி ஆவியாக்கும்.

பிறகு தேனைப் பாதுகாக்க ஒருவகை
மெழுகைப் பூசிவைக்கும்.

இத்தனை
நடைமுறைகளுக்குப் பிறகுதான் நாம்
சுவைக்கும் தேன் உருவாகும்.

தேன்
எடுப்பவர்கள் கொஞ்சம் தேனை
தேனிக்களுக்கு எனக் கூட்டில்
விட்டுத்தான் எடுப்பார்கள்.

அதுதான் தேன்
சேகரிக்கும் தர்மம் !

இந்த வேலை நடக்கும்போது ராணித் தேனீ
அதை வேடிக்கை மட்டுமே பார்க்கும்.

இனப்பெருக்கக் காலத்தில் மட்டும்தான்
அதற்கு வேலை வரும். அந்தச் சமயத்தில்
வேகமாக ராணித் தேனீ உயரத்துக்குப்
பறக்கும்.

அதை எந்த ஆண் தேனீ துரத்திப்
பிடிக்கிறதோ, அதோடுதான் இணை
சேரும் ராணி.

புணர்ச்சி முடிந்தவுடன்
ஆண் இறந்துவிடும்.

அதன் பிறகு ராணித்
தேனீ முட்டையிட, முட்டையில் இருந்து
வரும் தேனீக்களைப் பணித் தேனீக்கள்தான்
வளர்ப்புத் தாயாக வளர்க்கும்!

தேன் சேகரிப்பதற்கான தகவல்களை
தேனீக்கள் பகிர்ந்துகொள்ளும் முறை
அட்டகாசமானது.

உணவுத் தேவை
ஏற்படும்போது 'ஸ்கவுட்’ ஆக சில தேனீக்கள்
முன்னே சென்று பூக்கள் இருக்கும்
இடத்தைக் கண்டுபிடித்துவிட்டுக்
கூட்டுக்குத் திரும்பும்.

கூட்டில் உள்ள மற்ற பணித் தேனீக்களுக்கு ஸ்கவுட் தேனீக்கள்,
தாங்கள் கண்டுபிடித்த தோட்டம் அல்லது
சோலை எந்தத் திசையில் எவ்வளவு
தூரத்தில் உள்ளது என்பதை நடனம் ஆடித்
தெரிவிக்கும்.

இதில் இரண்டு வித நடனங்கள் உள்ளன. வட்ட
நடனம் மற்றும் வாலாட்டு நடனம்.
வட்ட
நடனத்தில் வட்டமிட்டு வட்டமிட்டு பூக்கள்
இருக்கும் தொலைவை மட்டும் குறிக்கும்.

வாலாட்டு நடனத்தில் உயரப் பறந்து வாலை
ஆட்டினால், சூரியன் இருக்கும் அதே திசையில் உணவு உள்ளது என்றும், கீழே
பறந்து வாலை ஆட்டினால், சூரியனுக்கு
நேரெதிர் திசையில் தோட்டம் உள்ளது
என்றும் அர்த்தம்.

வாலை வேகமாக
ஆட்டினால், சோலை அருகில் உள்ளது
என்றும், மெதுவாக ஆட்டினால்,
தொலைவில் உள்ளது என்றும் அர்த்தம்.

சூரியன், சோலையின் திசை, தங்கள்
கூட்டின் இருப்பிடம்... இந்த மூன்றையும்
சம்பந்தப்படுத்தி நடன அசைவுகள் இருக்கும்.

இந்த நுட்பமான நடன ரகசியத்தைக்
கண்டுபிடித்த ஆஸ்திரிய ஸ்காலர்
கார்ல்வான் ஃப்ரிஸ்-க்கு நோபல் பரிசு
கொடுத்தார்கள்.

தேன் சேகரிக்கும் போது தேனீக்களின்
காலில் ஒட்டிக்கொள்ளும் பூக்களின்
மகரந்தம், அடுத்தடுத்து பூக்களின் மேல்
உட்காரும்போது, விதவிதமான
கூட்டணியுடன் பரவும்.

இதுதான்
காடுகளின், சோலைகளின் பரவலுக்குக்
காரணம்.

தேனீக்களை அதிகம்
காடுகளுக்குள் தான் பார்க்க முடியும்.

காரணம், தேனீக்கள் இருக்கிற இடத்திலேயே
இயற்கையாகவே அடர்ந்த காடுகள்
உருவாகிவிடும்!''

''அழியும் உயிரினம் பட்டியலில் இடம்
பிடிக்கும் அளவுக்கு தேனீக்களுக்கு என்ன
ஆபத்து?''

''அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கத்திய
நாடுகளில் தேனீக்கள் அழிந்துவரும்
உயிரினங்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில்
மட்டும் உலகின் மூன்றில் ஒரு பங்கு
தேனீக்கள் அழிந்துவிட்டன.
அதாவது,
தேனீக்களின் அழிவு சதவிகிதம் 42
சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.

இன்னும்
இந்தியாவில் தேனீக்களுக்கு அந்த அளவுக்குப் பெரிய அபாயம் ஏற்படவில்லை.

ஆனால், கூடிய சீக்கிரமே அந்த நிலைமை
வரலாம்.

தேனீக்களின் இந்தப் பேரழிவுக்குக் காரணம்,
Colony Collapse Disorder - சுருக்கமாக... CCD.
அதாவது கூட்டில் இருந்து உணவு
சேகரிக்கச் சென்ற பணித் தேனீக்கள்
கொத்துக் கொத்தாகக்
காணாமல் போய்விடும்.

ராணி மட்டும்
கூட்டில் இருக்கும். பணித் தேனீக்கள்
கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து ஒரு
கட்டத்தில் இல்லாமலேயே போய்விட்டால்,
ராணித் தேனீ என்ன செய்வதெனத்
தெரியாமல் குழம்பி, சீக்கிரமே
இறந்துவிடும்.

இல்லையெனில் வேறுகூடு தேடிப் போய்விடும்.

பணித்
தேனீக்கள் இப்படித் தொலைந்து போவதற்குப் பல காரணங்கள் உண்டு.

அதில்
முக்கியமானது... செயற்கை உரம்,
பூச்சிக்கொல்லி, மரபணு மாற்றப்பட்ட
பயிர்கள்.

செயற்கை உரத்தில் உள்ள நியோ
நிக்டினாய்ட்ஸ் எனப்படும் வேதிப்பொருள்,
தேனீக்களின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து
அவற்றின் நினைவுத்தினை
மழுங்கடித்துவிடும்.

இதனால்
கூட்டுக்குத் திரும்பும் வழி மறந்துபோய்
பறந்துபோய் அலைந்து திரிந்து
இறந்துவிடும்.

மரபணு மாற்றப்பட்ட உணவுப்
பயிர்களின் விதைகளை 'டெர்மினேட்டர்
சீட்ஸ்’ என்பார்கள்.

அதாவது, அந்தப் பயிர்கள்
'விதை தானியத்தை’ உருவாக்காது.
மலட்டு விதைகளைத் தான் உருவாக்கும்.

அப்படியான மரபணு மாற்றப்பட்ட பயிர்களின்
மகரந்தத்தில் உள்ள புரோட்டீன் தேனீக்களிடம்
செரிமானக் கோளாறுகளை உண்டாக்கி,
ஒரு கட்டத்தில் தேனீக்களைக்
கொன்றேவிடும்.

இப்படி விவசாயத்தில் 'வணிக
லாபத்துக்காக’ மனிதன் செய்த பல
மாற்றங்கள் தேனீக்களை அழிக்கின்றன.

ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஐந்து
வருடங்களாக விவசாய உற்பத்தி
பெருமளவு குறைந்து வருவதற்குக்
காரணம் தேனீக்களின் இறப்பு எனத்
தெரியவந்தது.

அதனால், அங்கு செயற்கை
உரம், மரபணு மாற்றப்பட்ட விதைகள்
போன்றவற்றைத் தடை செய்துவிட்டனர்.

வளர்ப்புத் தேனீக்களைப் பிடித்து வந்து
தங்கள் வயல்களில் பறக்கவிட்டு
மகரந்தச்சேர்க்கை உண்டாக்க
முயற்சிக்கிறார்கள்.

பல லட்சம் தேனீக்களை
அழித்த சுயநல மனிதனால், ஒரே ஒரு
தேனீயைக்கூட உருவாக்க முடியாது.

இதை நாம் எப்போது உணர்வோம்?'' என்று
வருத்தமாகச் சொல்கிறார் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்.

'தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து
மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு
நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம்
இருக்காது!’ என்று சொல்லியிருக்கிறார்
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

ORGANIC
FARMING
Don't hesitate   , please forward to all.

வெள்ளி, 2 டிசம்பர், 2016

மருந்து மாத்திரைகள் விலை குறைந்தது தெரியுமா?

********* ******** ******** **********

நேற்று மெடிக்கல்   ஷாப்புக்குச் சென்று

Omez -20 Capsule. வாங்கினேன்.

வழக்கமாக ஒரு கேப்சூல் 4.50₹ வாங்குவார்கள். நேற்றும் அதே விலையைச் சொன்னார்கள்.10 கேப்சூல் வாங்கினேன். பிறகு எக்ஸ்பைரி டேட்டை பின்னால் பார்த்தேன். அப்போதுதான் 15 கேப்யூல் விலை 36 ₹ என போட்டிருந்ததை கவனித்தேன் அவ்வாறு எனில் விலை குறைந்துள்ளது என கண்டு கொண்டு " என்னங்க விலை குறைந்துள்ளதே! பழைய விலையே சொல்றீங்க? என்றேன்.

அதன் பின் ஒரு கேப்சூல் 2.50₹ தந்தார்.

ஆக, ஏமாற்றப் பார்த்துள்ளார்.

பின் வீடு வந்து இன்டர்நெட்டில் சர்ச் செய்து பார்த்ததில்.

886 வகை மெடிசின்ஸ் விலை குறைந்துள்ளது தெரிந்தது. 15% முதல் 60% வரையிலான  விலை குறைந்துள்ளது.

இவை மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அணைத்து நோயுக்குமான மருந்து,மாத்திரைகள்.

மத்திய அரசின் இந்த விலைக் குறைப்பை ஏன் ஊடகங்கள் மறைத்தது.அல்லது நம் கவனத்திற்கு வராமல் போனது எப்படி?
Forwarded as Received!

செவ்வாய், 8 நவம்பர், 2016

Flash News : Indian Gov Rs 500/and Rs 1000 note s are invalid from tomorrow onwards

இன்று  இரவு 12 மணி முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது : பிரதமர் நரேந்திர மோடி

புதுடெல்லி: டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்த பிறகு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். நாட்டு மக்களுடன் பல முக்கியமான சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புவதாக மோடி தெரிவித்தார். உலக பொருளாதாரத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதாக சர்வதேவ செலவாணி நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளதாக மோடி தெரிவித்தார். ஏழை மக்களின் முன்னேற்றத்துக்காகவே தமது அரசு அர்ப்பணிப்புடன் பாடுபடுவதாக தெரிவித்த மோடி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே தமது அரசின் இலக்காகும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

செவ்வாய், 25 அக்டோபர், 2016

Jio 4G may remain free until March 2017 - ஜியோ 4ஜி : மார்ச் 2017 வரை எல்லாமே இலவசம் தான்!

ஜியோ சிம் வாங்கிட்டீங்கனா, இந்தச் செய்தி உங்களுக்கானது தான். ஜியோ சிம் இலவச சேவைகளை டிசம்பர் மாதம் வரை வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தக் காலக்கெடு மேலும் சில மாதங்களுக்கு நீட்டிக்கப்பட

ரிலையன்ஸ் ஜியோ தனது 4ஜிசேவைகளை இலவசமாக வழங்கி மற்ற நிறுவனங்களின் சேவை கட்டணத்தையும் குறைக்க வைத்தது. ஜியோ பாதிப்பில் சிக்கிய நிறுவனங்கள் இன்று வரை தங்களின் சேவை கட்டணங்களைக் குறைத்து வருகின்றன. செப்டம்பர் மாதம் முதல் பல்வேறு காரணங்களைக் காட்டி புதுப்புது சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஜியோ சேவைகள் அனைத்தும் இலவசமாக வழங்கும் காலக்கெடு டிசம்பர் 3 ஆம் தேதியுடன் நிறைவு பெறுவதாக டிராய் அறிவித்தது. இந்நிலையில்ரிலையன்ஸ் ஜியோ தனது சேவைகளை மேலும் சில காலம் வரை நீட்டிக்கலாம் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.

தகவல்

வெளியாகியிருக்கும் புதிய தகவல்களின் படி ரிலையன்ஸ் ஜியோ தனது டேட்டா மற்றும் வாய்ஸ் கால் சேவைகளை மார்ச் 2017 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கலாம் எனக் கூறப்படுகின்றது.

வரவேற்பு

100 மில்லியன் என்ற பயனாளர் எண்ணிக்கையை அடைய ரிலையன்ஸ் ஜியோ தனது அறிமுகச் சலுகையினை மார்ச் 2017 வரை நீட்டிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜியோவின் டேட்டா சேவைகள் ஜிபி ஒன்றிற்கு ரூ.130-140 வரை இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

டிராய்

டிராய் விதிமுறைகளின் படி எந்த டெலிகாம் நிறுவனமும் தனது சேவைகளை 90 நாட்களுக்கும் அதிகமாமக இலவசமாக வழங்க முடியாது, இருந்தும் அறிமுகச் சலுகையின் போது வழங்கப்படும் சலுகைகளுக்கு எவ்வித விதிமுறைகளும் இல்லை எனச் சந்தை வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதி

பயனர்களுக்கு அறிவிக்கப்பட்ட சலுகைகளைப் பின்பற்றாமல் இருப்பது அவர்களை ஏமாற்றுவதற்குச் சமமானது என ரிலையன்ஸ் ஜியோ அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

கட்டணம்

ஜியோ சேவைகளைப் பயன்படுத்துவதில் பயனர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். ஜியோ அறிவித்த சேவைகளைப் பயனர்கள் முழுமையாக அனுபவிக்கும் வரை ஜியோ சேவைகளை இலவசமாகப் பயன்படுத்தும் உரிமை அவர்களுக்கு உள்ளது என டிராய் மற்றும் அரசாங்கத்திடம் ஜியோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ரிலையன்ஸ் ஜியோவின் திட்ட மேலாண்மை குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

அனுமதி

மேலும் பயனர்களுக்கு இலவச ஜியோ சேவைகளை வழங்க டிராய் அனுமதி தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இன்டர்கணெக்ஷன் சார்ந்த பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கும் வரை ஜியோ பல்வேறு வித்தியாச தீர்வுகளைப் பெற ஜியோ முயற்சிக்கும்.

மாற்றம்

டிராய் மற்றும் ரிலைன்ஸ் ஜியோ விதிமுறைகளை வைத்துப் பார்க்கும் போது ஜியோ தனது சேவைகளை நீட்டிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக டெலிகாம் சந்தையைச் சேர்ந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திங்கள், 24 அக்டோபர், 2016

ஞாயிறு, 23 அக்டோபர், 2016

How to use Hard disk in a RAM


1 ) உங்களது கணனியில் My Computer-ஐ Right click செய்து Properties செல்லுங்கள்.

2 ) அடுத்து Advanced System Settings > Advanced > Settings-இற்கு செல்லுங்கள்.

3 ) அடுத்து தோன்றும் திரையில் Advanced-ஐ கிளிக் செய்யுங்கள்.

4 ) அங்கே Virtual Memory-இல் Change என்பதை கிளிக் செய்யுங்கள்.

5 ) அடுத்து Automatically manage... எனும் டிக்கை எடுத்து விடுங்கள்.

6 ) அங்கே உங்களது கணனியின் C டிரைவ்-ஐ தெரிவு செய்யுங்கள்.

7 ) அடுத்து Recommended என்று இருப்பதில் C டிரைவ்-இலிருந்து எவ்வளவு MB அளவு வரை RAM ஆக உபயோகிக்கலாம் என்று காட்டப்படும்.

8 ) அங்கே Custom Size என்பதை தெரிவு செய்யுங்கள்.

9 ) அடுத்து Initial Size, Maximum Size என்று இருக்கும் இரண்டிலும் நீங்கள் ஹர்ட் டிஸ்க்-இல் இருந்து RAM-இற்கு மாற்ற நினைக்கும் MB அளவை டைப் செய்யுங்கள்.

10 ) அடுத்து Set என்பதை கிளிக் செய்யுங்கள்.

11 ) இறுதியாக OK என்பதை கிளிக் செய்யுங்கள்.

Tech tamil

வியாழன், 25 ஆகஸ்ட், 2016

Do-not-clear-browser-cache-memory அடிக்கடி இணையத்தை பயன்படுத்துபவர்கள் அவசியம் அறிந்து வைத்திருக்க வேண்டிய Browser Cache Memory பற்றிய தகவல்

Browser Cache Memory என்றால் என்ன? 

உங்கள் கணனியில் உள்ள ஒரு இணைய உலாவியை பயன்படுத்தி நீங்கள் புதியதொரு இணையத்தளத்திற்கு பிரவேசித்த பின் மீண்டும் அதே தளத்திற்கு பிரவேசிக்கையில் குறிப்பிட்ட தளம் முன்னர் எடுத்துக் கொண்ட நேரத்தினையும் பார்க்க சற்று குறைந்த நேரத்தில் அதாவது வேகமாக திறக்கப்படுவதனை அவதானித்துள்ளீர்களா? இதற்கான காரணம் என்ன தெரியுமா?

நீங்கள் குறிப்பிட்ட ஒரு இணைய உலாவியை பயன்படுத்தி ஒரு இணையதளத்துக்கு பிரவேசிக்கையில் குறிப்பிட்ட தளத்தின் Logo, மற்றும் ஏனைய புகைப்படங்கள் மற்றும் கோப்புக்கள் போன்றன உங்கள் இணைய உலாவியின் மூலம் தானாக தரவிறக்கப்பட்டு தற்காலிகமாக சேமிக்கப்படுகின்றது. இதுவே "Temporary Internet Files" அல்லது Browser Cache Memory என அழைக்கப்படுகின்றது.

Browser Cache Memory இன் பயன் தான் என்ன?


முன்னர் பிரவேசித்த தளத்துக்கு நீங்கள் மீண்டும் செல்கையில் ஏற்கனவே தரவிறக்கப்பட்டு சேமிக்கப்பட்ட அவைகள் மீண்டும் தரவிரக்கப்படாமல் சேமிக்கப்பட்ட படங்கள் குறிப்பிட்ட இடத்துக்கு பிரதி செய்யப்படுகின்றது. இதன் மூலம் குறிப்பிட்ட தளத்திற்கு எம்மால் மிகவேகமாக பிரவேசிக்க முடிவதுடன் எமது தரவுப்பாவனையும் கட்டுப்படுத்தப் படுகின்றது.

இணைய உலாவியில் சேமிக்கப்பட்ட இவைகளை பார்க்க முடியுமா?


ஆம், இவைகளை குறிப்பிட்ட இணைய உலாவியில் பார்க்க விரும்பினால் Firefox இணைய உலாவியில் about:cache என Address Bar இல் தட்டச்சு செய்து Enter அலுத்துக. Google Chrome இல் chrome://cache என Address Bar இல் தட்டச்சு செய்து Enter அலுத்துக.

சேமிக்கப்பட்ட இவைகள் இவைகள் நீக்கப்பட வழியுள்ளதா?


நாம் கணணியை பேணுவதற்காக பயன்படுத்தும் Ccleaner, Glary Utilities போன்ற மென்பொருள்கள் இந்த Cache Memory இல் இருக்கக் கூடிய கோப்புக்களையும் நீக்கி விடுகின்றது. எனவே நாம் இணையதளங்களுக்கு பிரவேசிக்கும் ஒவ்வொரு தடவையும் புதிதாக படங்கள் தரவிரக்கப்படுவதால் நமது தரவுப் பாவனையும் அதிகரிப்பதுடன் வேகமான இணைய உலாவளையும் மேற்கொள்ள முடிவதில்லை.

இவைகள் நீக்கப்படாமல் பாதுகாக்க முடியுமா?


எனவே நீங்கள் கணணியை பேணுவதற்காக பயன்படுத்தும் மென்பொருள்களில் Browser Cache Memory இனை தவிர்த்து ஏனையவைகளை மாத்திரம் நீக்கும் படி அமைத்திடலாம்.


Ccleaner மென்பொருள் பயன்படுத்துபவர் எனின்.

Browser Cache on ccleaner

  • நீங்கள் Ccleaner மென்பொருளை பயன்படுத்துபவர் எனின் குறிப்பிட்ட மென்பொருளை திறந்து Cleaner என்பதனை சுட்டி தரப்பட்டிருக்கும் இணைய உலாவிகளுக்குக் கீழே இருக்கும் Internet Cache என்பதில் இருக்கும் Tick அடையாளத்தினை மாத்திரம் நீக்கி விடுக.
  • அவ்வளவு தான். இனி உங்கள் Browser Cache Memory இல் உள்ள படங்கள் நீக்கப்படாது எனவே வேகமான இணைய அனுபவத்தினை பெற முடியும்.

Glary Utilities மென்பொருள் பயன்படுத்துபவர் எனின்.

 
Browser Cache on Glary utilities

  • இதனை Glary Utilities மென்பொருளில் மேற்கொள்ள விரும்பினால் குறிப்பிட்ட மென்பொருளின் வலது மூலையில் தரப்பட்டிருக்கும் Menu என்பதனை சுட்டி Settings செல்க பின் திறக்கப்படும் சாளரத்தில் Temporary Files Cleaner என்பதனை சுட்டுக பின் Browser என்பதற்குக் கீழ் தரப்பட்டிருக்கும் Mozilla Firefox Cache, Google Chrome Cache, Opera Cache என்பதில் இருக்கும் Tick அடையாளத்தினை நீக்கி விடுக அவ்வளவு தான்.

அவ்வாறன்றி இது போன்ற தற்காலிக கோப்புக்களை நீக்க நீங்கள் மூன்றாம் நபர் மென்பொருளை பயன்படுத்தாமல் குறிப்பிட்ட இணைய உலாவியில் தரப்பட்டிருக்கும் வசதியை பயன்படுத்துபவர் எனின் இதனை Mozilla Firefox இல் மேற்கொள்ள பின்வரும் வழிமுறையை பின்பற்றுக.

நீங்கள் Mozilla Firefox இணைய உலாவி பயன்படுத்துபவர் எனின்.

 
Browser Cache on Firefox

  • Firefox ====> Option சென்று Privacy எனும் Tab ஐ சுட்டுக.
  • பின் History என்பதற்குக் கீழ் You may want to clear your recent history, or remove individual cookies.  என்பதில் clear your recent history என்பதனை சுட்டுக.
  • இனி தோன்றும் சாளரத்தில் Details என்பதனை சுட்டி Cache என்பதில் இருக்கும் Tick அடையாளத்தினை நீக்கி விடுக.
  • அவ்வளவுதான்.

நீங்கள் Google Chrome இணைய உலாவி பயன்படுத்துபவர் எனின்.

  •  இதனை Google Chrome இணைய உலாவியில் மேற்கொள்ள குறிப்பிட்ட இணைய உலாவியின் வலது மூலையில் தரப்பட்டிருக்கும் customize and control google chrome என்பதனை சுட்டி Tools ====> clear Browsing Data என்பதனை அலுத்துக அல்லது Ctrl+Shift+Del விசைகளை ஒரே நேரத்தில் அலுத்துக.
  • பின் தோன்றும் சாளரத்தில் Cached images and files என்பதில் இருக்கும் Tick அடையாளத்தினை நீக்கி விடுக.

ஒரே நேரத்தில் பலருக்கு forward செய்யும் புதிய வசதி வாட்ஸ்அப் சேவையில் அறிமுகம்


வாட்ஸ்அப் பற்றி அறியாதவர்கள் யார் தான் இருக்க முடியும். வாட்ஸ்அப் சேவையானது புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் அது இன்றுவரை மெசேஜிங் சேவையில் முன்னிலை வகித்து வருகிறது.
வாட்ஸ்அப்  forward
அந்தவகையில் வாட்ஸ்அப் பயனர்களை குதூகலிக்கச் செய்யும் மற்றுமொரு வசதியும் இதில் அறிமுகப்படுத்தப்பட்ட்டுள்ளது.


அதாவது வாட்ஸ்அப் மூலம் பெறப்பட்ட ஒரு செய்தியை பலருக்கு அனுப்பவேண்டிய (Forward) தேவை ஏற்பட்டால் நாம் அவற்றை தனித்தனியாகவே ஒவ்வொருவருக்கும் அனுப்பி வந்தோம் என்றாலும் இதன் பின்னர் அவ்வாறான சிரமங்கள் உங்கள் இருக்காது.
மாறாக குறிப்பிட்ட செய்தியை ஒரே நேரத்தில் பலருக்கு அனுப்பி வைக்கக்கூடிய புதிய வசதி இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை வாட்ஸ்அப் செயலியின்  2.16.230 எனும் பதிப்பில் பெற்றுக்கொள்ளலாம். இந்த பதிப்பு இதுவரை கூகுள் ப்ளே ஸ்டோரில் அறிமுகப்படுத்தப்படவில்லை. இருந்த போதிலும் இதனை கீழுள்ள  இணைப்பை பயன்படுத்தி APK மிர்ரர் தளத்தில் இருந்து இதனை தரவிறக்கிக்கொள்ளலாம்.
இந்த வசதியை பயன்படுத்துவது மிகவும் இலகு. இருப்பினும் இதற்கான வழிமுறைகள் கீழே வழங்கப்பட்டுள்ளன.

வாட்ஸ்அப் செய்தியை ஒரே நேரத்தில் பலருக்கு forward செய்வது எப்படி?

படி 1: முதலில் வாட்ஸ்அப் செயலியின் 2.16.230  எனும் பதிப்பை உங்கள் ஆண்ட்ராய்டு போனுக்கு தரவிறக்கிக் கொள்க.
படி 2: பின்னர் வழமைபோல் வாட்ஸ்அப் செயலியை திறந்து பலருக்கு அனுப்பவேண்டிய ஒரு செய்தியை தெரிவு செய்க.
படி 3: இனி Forward செய்வதற்கான பட்டனை அழுத்தியதன் பின்னர் ஒரே நேரத்தில் பலருக்கு அனுப்புவதற்கான வசதி தோன்றும்.
வாட்ஸ்அப்  forward
படி 4: பின்னர் அதன் மூலம் தேவையான நபர்களையும் குழுக்களையும் தெரிவு செய்வதன் மூலம் ஒரே நேரத்தில் பலருக்கு அந்த செய்தியை அனுப்பலாம்.

அவ்வளவுதான்.
பல புதுப்புது தகவல்களை உடனுக்குடன் அறிந்திட தொடர்ந்தும் இணைந்திருங்கள் எம்முடன்.

Popular Posts

Facebook

Blog Archive