பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

சனி, 13 பிப்ரவரி, 2021

ஒரு யானையை பாதுகாப்பது என்பது 18 லட்சம் மரங்களை விதைத்தற்கு சமம்! - Top Facts about elephants


 

ஒரு யானையை பாதுகாப்பது என்பது 18 லட்சம் மரங்களை விதைத்தற்கு சமம்!
"ஒரு நாளைக்கு நீங்க எவ்ளோ சாப்பிடுவீங்க சார்? மிஞ்சிப்போனா ஒரு 5 கிலோ? எவ்ளோ தண்ணி குடிப்பீங்க? ரொம்ப அதிகமா ஒரு 8 லிட்டர்? நீங்க சாப்பிடுறதுனால, உங்களைத் தவிர வேற யாருக்காவது ஏதாவது நன்மை இருக்கா சார்..?"
யானைகள் அப்படி என்ன பெரிதாக செய்துவிடுகிறது என்று கேட்கும் அறிவாளிகளுக்கு இதைவிட எளிமையாக பதிலளிக்க முடியவில்லை. யானைகள் மிக எதார்த்தமான குழந்தைகள். யானை எனும் பேருயிரியின் மீதான நம் காதல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 
"ஒரே ஒரு யானை சாப்பிடுறதுல இருந்து ஒரு காடே உருவாகும் சார். ஒரு யானை, ஒரு நாளைக்கு 200 - 250 கிலோ உணவு சாப்பிடும் சார். சராசரியா அதனோட உடல் எடையில இருந்து 5 சதவிகித உணவை சாப்பிடும். ஒரு நாளைக்கு ஒரு யானை 100 - 150 லிட்டர் தண்ணீர் குடிக்கும். இந்த 250 கிலோ உணவுங்கிறதுல, 10 சதவிகிதம் விதைகள் இருக்கும். அதாவது 25 கிலோ விதைகள், குச்சிகள் இருக்கும். அதுல கடைசிக்கும் கடைசியா 10 கிலோ விதைகளும் குச்சிகளும் திரும்ப மண்ணுல விதைக்கப்படும். நினச்சுப் பாருங்க, ஒவ்வொரு யானையும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 10 கிலோ விதைகளை விதைக்குது சார்! எண்ணிக்கையில சொல்லணும்னா, சராசரியா ஒரு யானை ஒரு நாளைக்கு 300 - 500 விதைகளை விதைக்குது…"
அந்தப் பேருயிரிகளின் பிரமிக்கவைக்கும் பரிமாணத்தைப் புரிந்துகொள்ள முடிகிறதா?
500 விதைகளில் குறைந்தது 100 விதைகளாவது முளைத்துவிடும். இது மிகவும் குறைந்தபட்ச எண்ணிக்கைதான். அப்படியென்றால், ஒரு யானை ஒரு மாதத்திற்கு 3000 மரங்களை நடுகிறது. வருடத்திற்கு 36 ஆயிரத்து ஐநூறு மரங்கள். மொத்தமாகப் பார்த்தால் ஒரே ஒரு யானை தன் வாழ்நாளில் 18 லட்சத்து 25 ஆயிரம் மரங்கள் வளரக் காரணமாகிறது. மீண்டும் சொல்கிறோம், இது மிகவும் குறைந்தபட்ச எண்ணிக்கைதான்!
இன்னும் ஆச்சரியங்கள்!
"இப்போ இவ்வளவு சாப்பிடணும்னா அது எவ்வளவு பயணம் செய்யணும்? இப்போவெல்லாம் நம்மளால இந்த இத்துனூண்டு உடம்ப தூக்கிட்டு 10 கிலோமீட்டர்கூட சேர்ந்தாப்பொல நடக்க முடியல. ஆனா ஒரு யானையால ஒரு நாளைக்கு 190 கிலோமீட்டர் நடக்க முடியும்னு ஆய்வுகள் சொல்லுது. சராசரியா ஒரு நாளைக்கு 30 கிலோமீட்டர் தூரம் யானைகள் நடக்கும். அதுவும் 4-5 மணி நேரத்துல."
அப்படியென்றால் சராசரியாக மணிக்கு 15 லிருந்து 20 கிலோமீட்டர் வேகம். யானைகள் இவ்வளவு வேகமாக நடக்குமா என்று வியப்பா இன்னொரு தகவல். யானைகள் மிக வேகமாக ஓடும். யானைகள் துரத்தினால் மனிதர்களால் ஓடித் தப்பிக்க முடியாது. மனிதர்களைவிட 2 மடங்கு வேகத்தில் யானைகள் ஓடும்.
ஏன் 4-5 மணிநேரம் மட்டுமே நடக்கின்றன? மற்ற நேரங்களில் என்ன செய்யும்?
"சாப்புடும்..."
அவ்வளவு நேரமுமா?
"ஒரு நாளைக்கு 12 - 18 மணி நேரம் சாப்பிட்டுகிட்டே இருக்கும் சார்."
அப்போ தூக்கம்?
"யானைகள் இரண்டு மணிநேரம் மட்டுமே தூங்கும்."
யானைகள் இவ்வளவு பிரமிப்பானவையா?
"இன்னொரு சுவாரஸ்யமான தகவல். எந்த பாலூட்டிகளைவிடவும் அதிகமான பேறு காலம் கொண்டவை யானைகள்தான் சார். 22 மாசம்!"
காடுகளின் மூத்த தாய் யானைகள்தான். பழங்காலத்திற்கும் இன்றைய நவீன உலகுக்கும் உள்ள ஆதி உயிர்த் தொடர்புச் சங்கிலியின் எச்சம் இந்த யானைகள்தான்..

சொல்லக் கூடாதவை - சொல்ல வேண்டியவை - Mention and Not mention to Others

 

சொல்லக் கூடாதவை :
1.படிக்கிலன்னா உருப்படாம போய்டுவ.
2.உழைக்கிலன்னா பிச்சைதான் எடுக்கனும்.
3.பணம் இல்லாட்டி ஒரு நாய் உன்னை மதிக்காது.
4.நீ எல்லாம் எச்சில் இலை எடுக்கவும் எச்சில் தட்டு கழுவதான் லாயக்கு.
5.இந்த வாட்டி பரிட்சைல பாஸாகலன்னா ஸ்டெய்ட்டா எருமை மாடு மேய்க்கதான் உன்னை அனுப்ப போறேன்.
( எருமை மாடு மேய்ப்பது அவ்வளவு எளிதான விஷயமா?)
6.காசு பணம் இல்லன்னா சொந்தக்காரங்க மதிக்க மாட்டாங்க.
(எல்லா உறவுகளுமே அப்படித்தான் இருக்கிறார்களா?)
7.அப்பா அம்மா செத்ததுக்கு அப்புறம் நீ பிச்சைதான் எடுக்கப் போற.
8.வீட்டுக்கு அடங்காத பிள்ளையை ஊர் அடக்கும்.
9.பணம் என்ன மரத்திலா காய்க்கிறது ?
10.உன்னோட திமிருக்கு நீ அழிஞ்சிதான் போகப் போற.

சொல்ல வேண்டியவை :🙏
1.படிச்சா நல்லா வாழலாம்.படிச்சா வாழ்க்கையில முன்னுக்கு வரலாம்.
2.உழைத்தால் நிறைய சம்பாதிக்கலாம்.
3.நிறைய பணம் சம்பாதித்தால் மதிப்புடன் வாழலாம்.
4.படிச்சி முன்னுக்கு வந்து விட்டால் நாலு பேருக்கு வேலை கொடுக்கலாம்.
5.நீ இந்த பரிட்சைலயும் பாஸாய்டுவ.
எல்லா பரிட்சைலயும் பாஸாய்டுவ எனக்கு உன் மேல அந்த நம்பிக்கை இருக்கு.நீ நல்லபடியா மேல வரமுடியும்.
6.காசு பணம் வந்ததுக்கு பிறகும் எல்லா உறவுகளையும் ஒரே மாதிரி மதிப்பா நடத்தனும்.
7.அப்பா அம்மா நான் சாதிச்சிட்டேன்
என்று சொல்லனும்.
8.படித்து ஊர் மெச்ச வாழும் உறவுகள் மற்றும் நண்பர்கள் பட்டியலை பிள்ளைகளிடம் காட்டுங்கள்.
9.உழைப்பின் மூலமாக வரும் பணத்தின் மதிப்பை புரிய வைக்க வேண்டும்.
10.உன்னோட திறமைக்கு நீ ரொம்ப சீக்கிரமா முன்னுக்கு வர முடியும்.

சொல்ல கூடாதவை.சொல்ல வேண்டியவை வரிசை எண்படி ஒவ்வொன்றையும் பொருத்தி ஒரு முறை படிக்கவும்.
சொல்ல கூடாதவை பட்டியலில் உள்ள வாசகங்களை அன்றாடம் பெரும்பாலான வீடுகளில் உச்சரிக்கப்படுவதை நாம் கேட்கிறோம்.
ஏன் சார் இப்படி என்றால் அப்படி ஆகிவிடக்கூடாது என்பதற்காகதான்
நான் இப்படி பேசுகிறேன் என்ற பதில் கிடைக்கிறது.
ஆனால் எப்படி ஆகக் கூடாது என்று நாம் நினைக்கிறோமோ அப்படி ஆகி நின்ற பிறகுதான் நாம் எங்கே என்ன தவறு செய்தோம் என்று யோசிக்க தொடங்குகிறோம்.
எப்படி ஆக வேண்டும் என்று நினைக்கும் நினைப்பை விட எப்படி ஆகக் கூடாது என்று அதிகமாக நினைப்பதால் மற்றவர்களை அவ்விதம் ஆகி விடக்கூடாது என்று அறிவுறுத்தும் விஷயம் மட்டுமே நடந்து முடிந்து விடுகிறது.
எந்த விஷயத்தை இது நடக்கக் கூடாது என்று பய உணர்வுடன் சிந்திக்கிறோமோ அந்த பய உணர்வு ஆழ்மனதில் நடக்க விரும்பாத விஷயத்தை ஆழமாக பதியும்படி செய்து விடுகிறது.
பெரும்பாலான பிள்ளைகள் தேர்வுகளில் தோற்பதற்கு படிக்கிலன்னா நீ உருப்பட மாட்ட என்ற பெற்றோரின் தொடர்ச்சியான மிரட்டல் நான் உருப்படாமல் போய் விடுவேனா என்ற அச்ச உணர்வை பிள்ளைகளின் ஆழ்மனதில் ஆழமான எண்ணமாக பதிந்து அப்படியே அவர்கள் உருப்படாமல் போய் விடுகிறார்கள்.
படிப்பு மட்டுமல்ல வாழ்வின் அனைத்து விஷயங்களிலும் எதிர்மறையான விளைவுகளை உதாரணம் காட்டாமல் எந்த விஷயத்தை செய்தாலும் அதில் இருந்து கிடைக்க இருக்கும் நற்பலன்களை திரும்ப திரும்ப வலியுறுத்தி கூறுவதன் மூலமாக பிள்ளைகள் நல்ல மன வலிமையையும் நம்பிக்கையும் அடைவார்கள்.
உன்னால் முடியும்.எனக்கு உன் மேல் நம்பிக்கை இருக்கிறது.நீ திறமைசாலி உனக்கு அது மிகவும் எளிதான விஷயம்.இதை செய்வதன் மூலமாக நீ வெற்றி பெற முடியும் உனக்கு மிகவும் பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது.
சமூகத்தில் நீ பெரிய புகழுடன் வாழ அற்புதமான வாய்ப்பு உனக்காக காத்திருக்கிறது.
இது போன்ற வாக்கியங்கள் அறிவுரை கூறுபவர் பெறுபவர் இருவருக்கும் நல்ல நம்பிக்கையும் சாதனை செய்ய உத்வேகத்தையும் ஏற்படுத்தும் வாக்கியங்கள் ஆகும்.
நம்முள் நினைக்கும் எண்ணங்களையும் பிறரிடம் பேசும் வார்த்தைகளையும் நற் பலன்களை அளிக்கக் கூடிய நேர்மறை வார்த்தைகளை உச்சரிப்போம்‌. வார்த்தைகளால் புது வாழ்வை துவக்குவோம்.👍

world Important Days - *உலகின் முக்கிய தினங்கள் :-

*உலகின் முக்கிய தினங்கள் :-
÷÷÷÷÷÷÷ ÷÷÷÷÷÷ ÷÷÷÷÷÷÷÷

*ஜனவரி*
=========
01 - ஆங்கில வருடப் பிறப்பு / உலக வருட தினம்.
05 - உலக டீசல் எந்திர தினம்
06 - உலக வாக்காளர் தினம்
08 - உலக நாய்கள் தினம்
09 - உலக இரும்பு தினம்
12-தேசிய இளைஞர் தினம் 
15-இராணுவ தினம்
26-இந்திய குடியரசு தினம்
26- உலக சுங்க தினம்
29- இந்திய செய்தித்தாள்கள் தினம்
30- உலக தொழுநோய் ஒழிப்பு தினம்
30 -தியாகிகள் தினம் 

*பிப்ரவரி*
÷÷÷÷÷÷÷÷
01 - உலக கைப்பேசி தினம்
03 - உலக வங்கிகள் தினம்
14 - உலக காதலர் தினம்
15 - உலக யானைக்கால் நோய் தினம்
19 - உலக தலைக்கவச தினம்
24 - தேசிய காலால் வரி தினம் 
25 - உலக வேலையற்றோர் தினம்
26 - உலக மதுபான தினம்
28- தேசிய அறிவியல் தினம்

*மார்ச்*
======
08 - உலக பெண்கள் தினம்
15 - உலக நுகர்வோர் தினம்
20 - உலக ஊனமுற்றோர் தினம்
21 - உலக வன தினம்
22 - உலக நீர் தினம்
23 - உலக வானிலை ஆய்வு தினம் / உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்
24 - உலக காசநோய் தினம்
28 - உலக கால்நடை மருத்துவ தினம்
29 - உலக கப்பல் தினம்

*ஏப்ரல்*
÷÷÷÷÷÷
01 - உலக முட்டாள்கள் தினம்
02 - உலக ஓரினச் சேர்க்கையாளர்கள் தினம்
05 - உலக கடல் தினம்
05 - தேசிய கடற்படை தினம் 
07 - உலக சுகாதார தினம்
12 - உலக வான் பயண தினம்
15 - உலக பசும்பால் தினம்
18 - உலக பரம்பரை தினம்
22 - உலக பூமி தினம்
30 - உலக குழந்தைத் தொழிலாளர் தினம்

*மே*
÷÷÷÷
01 - உலக தொழிலாளர் தினம்
03 - உலக சக்தி தினம்
08 - உலக செஞ்சிலுவை தினம்
09 - உலக கணிப்பொறி தினம்
11 தேசிய தொழில் நுட்ப தினம் 
12 - உலக செவிலியர் தினம்
14 - உலக அன்னையர் தினம்
15 - உலக குடும்ப தினம்
16 - உலக தொலைக்காட்சி தினம்
18 - உலக டெலஸ்கோப் தினம்
24 - உலக காமன்வெல்த் தினம்
27 - உலக சகோதரர்கள் தினம்
29 - உலக தம்பதியர் தினம்
30 - உலக முதிர்கன்னிகள் தினம்
31 - உலக புகையிலை ஒழிப்பு தினம்

*ஜீன்*
÷÷÷÷
01 - உலக டயலசிஸ் தினம்
02 - உலக ஆப்பிள் தினம் (Apple Sys)🛏🛏🛏
04 - உலக இளம் குழந்தைகள் தினம்
05 - உலக சுற்றுப்புற தினம்
10 - உலக அலிகள் தினம்
18 - உலக தந்தையர் தினம்
23 - உலக இறை வணக்க தினம்
25 - உலக புகையிலை தினம்
26 - உலக போதை ஒழிப்பு தினம்
27 - உலக நீரழிவாளர் தினம்
28 - உலக ஏழைகள் தினம்

*ஜீலை*
======
01 - உலக மருத்துவர்கள் தினம்
08 - உலக யானைகள் தினம்
10 - உலக வானூர்தி தினம்
11 - உலக மக்கள் தொகை தினம்
14 - உலக மஞ்சள் தினம் (Turmeric)
16 - உலக தக்காளி தினம் (பிரான்சில் தக்காளித் திருவிழை)

*ஆகஸ்ட்*
========
01 - உலக தாய்ப்பால் தினம்
03 - உலக நண்பர்கள் தினம்
06 - உலக ஹிரோஷிமா தினம்
09 -வெள்ளையனே வெளியேறு தினம் 
09 - உலக நாகசாகி தினம்
18 - உலக உள்நாட்டு மக்களின் சர்வதேச தினம் 
19 - உலக வெளிநாட்டு மக்களின் சர்வதேச தினம் 
29 - உலக தேசிய விளையாட்டு தினம் 
30 - மாநில விளையாட்டு தினம்

*செப்டம்பர்*
÷÷÷÷÷÷÷÷÷÷
05 - ஆசிரியர் தினம் மற்றும் சமஸ்கிருத தினம் 
06 - ஹிந்தி தினம்
07 - பெங்காளி தினம் ( இந்திய தேசியகீதம் எழுதப்பட்ட பெங்காளிய மொழி)
08 - உலக எழுத்தறிவு தினம்
10 - உலக பேனா தினம்
12 - உலக மின்சார தினம்
13 - உலக மாலைக்கண் நோய் தினம்
16 - உலக ஓசோன் தினம்
18 - உலக அறிவாளர் தினம்
20 - உலக எழுத்தாளர்கள் தினம்
21 - உலக பொறியியல் வல்லுனர்கள் தினம்
25 - உலக எரிசக்தி தினம்
26 - உலக ஊமை மற்றும் காது கேளாதோர் தினம்
27 - உலக சுற்றுலா தினம்
28 - உலக எரிமலை தினம்
29 - உலக குதிரைகள் தினம்

*அக்டோபர்*
==========
01 - உலக மூத்தோர் தினம்
02 - உலக சைவ உணவாளர் தினம்
04 - உலக விலங்குகள் தினம்
05 - உலக இயற்கைச் சூழல் தினம்
08 - உலக இயற்கை சீரழிவு குறைப்பு தினம்
08 இந்திய விமானப்படை தினம் 
09 - உலக தபால் தினம்
16 - உலக உணவு தினம்
17 - உலக வறுமை ஒழிப்பு தினம்
24 - உலக ஐக்கிய நாடுகள் சபை தினம்
30 - உலக சிந்தனை தினம்

*நவம்பர்*🛏
÷÷÷÷÷÷÷÷÷
14-குழந்தைகள் தினம் 
18 - உலக மனநோயாளிகள் தினம்
19 - உலக குடியுரிமையாளர்கள் தினம்
26 - உலக சட்ட தினம்
27 - உலக காவலர்கள் தினம்
28 - உலக நீதித்துறை தினம்

*டிசம்பர்*🛏🛏
÷÷÷÷÷÷÷÷
01 - உலக எய்ட்ஸ் தினம்
02 - உலக அடிமைத்தனம் ஒழிக்க ஐ.நா. சபையின் சர்வதேச தினம்
10 - உலக மனித உரிமைகள் தினம்
14 - உலக ஆற்றல் தினம்
15 - உலக சைக்கிள் தினம்
23 - விவசாயிகள் தினம்
25 - திருச்சபை தினம்💐💐💐💐💐💐💐💐💐💐

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2021

சுய ஒழுக்கம் (Self Discipline) - ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டியது

சுய ஒழுக்கம் (Self Discipline) - ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டியது 

 *தொடர்ச்சியாக இரண்டு முறை யாரையும் Phoneல் அழைக்காதீர்கள்*. அவர்கள் முக்கிய வேலையாக இருக்கலாம், அல்லது பேச முடியாத சூழ்நிலையில் இருக்கலாம்

*திருப்பித் தருகிறேன் என்று உங்களிடம் பணம் கடனாக கேட்பவரிடம் மனப்பூர்வமாக கேட்டுக்கொடுங்கள்*. இது திரும்ப வருமா, வராதா என. இது உங்கள் Character ரை அவர் உணரச் செய்யும். இதே போல், இரவல் கொடுக்கும் பேனா, புத்தகம், Lunch box, குடை போன்றவைக்கும்.

 *Hotelல் சாப்பிடலாம் என நண்பர் உட்பட யார் அழைத்தாலும், Menu cardல் costly யாக உள்ள எதையும் Order செய்யாதீர்கள்.* அழைத்தவரையே உங்கள் விருப்பப்படி Order சொல்லுங்கள் என வேண்டலாம்.

 தர்மசங்கடமான இது போன்ற கேள்விகளை தவிர்க்கலாம்.
*இன்னும் கல்யாணம் ஆகலயா?*
*குழந்தைகள் இல்லையா?*
*இன்னும் சொந்தவீடு வாங்கவில்லையா?*
*ஏன் இன்னும் Car வாங்கவில்லை?*
இது நமது பிரச்சினை இல்லைதானே!"

 *தானியங்கி கதவை திறக்க நேர்ந்தால் பின்னால் வருபவர் ஆணோ, பெண்ணோ, சிறியவரோ, பெரியவரோ அவர்கள் வரும்வரை மூடாமல் பிடித்திருப்பது* அவர்களை சமூகத்தில் பொறுப்புள்ளவர்களாக மாறச்செய்யும்!

 நண்பருடன் Taxiயில் சென்றால. *இம்முறை இயலாவிட்டால் மறுமுறை* நீங்கள் காசு கொடுத்துவிடுங்கள்.

*மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளியுங்கள்*. மோசமாக இருந்தாலும், Choiceல் வைத்திருக்கலாம்.

*அடுத்தவர்கள் பேசும்போது இடைமறிக்காதீர்கள்*. அவர்கள் கொட்டட்டும். இறுதியில் அவர்களுக்கே நல்லது தெரிந்துவிடும்.

 *நீங்கள் கிண்டலடிப்பதை சம்பந்தப்பட்டவர் ரசிக்கவில்லை என்றால், மீண்டும் அதைச் செய்துவிடாதீர்கள்*. அவரை உற்சாகப்படுத்துங்கள். உங்கள் மதிப்பை அது மேம்படுத்தும்.

 யார் உதவினாலும் பாரபட்சமின்றி *நன்றி சொல்லுங்கள்*.

. பொதுவில் புகழுங்கள். *தனியாக இருக்கையில் குறைகளை சுட்டிக்காட்டலாம்*.

 *உடல்பருமனை ஒருபோதும் கிண்டலடிக்காதீர்கள்.*
"நீங்கள் பார்க்க Smartடாக, Cuteடாக இருக்கீங்க" என்று கூறுங்கள். உடல் எடை குறைக்க அவராக கேட்டால் ஒழிய நாம் அறிவுரை வழங்கக் கூடாது.

 *யாராவது அவர்கள் Photoவைக் காட்ட Phoneனைக் கொடுத்தால் Galleryயில் இடது வலதாக தள்ளிப் பார்க்காதீர்கள்*. அடுத்து என்ன இருக்கும் என்று உங்களுக்குத் தெரியாது.

 *யாரும் தனக்கு Doctor Appointment இருக்கிறது, போகவேண்டும் என்றால், உடனே என்ன நோய்க்கு என்று கேட்டுவிடாதீர்கள்*. அவர்களின் தனிப்பட்ட நோய்கள் பற்றி மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்று கருதலாம். *விரைவில் நலமடைவீர்கள் என்று நம்புகிறேன்* என்று கூறலாம்.

 *நண்பர்களிடமோ யாரிடமோ நேரில் சந்தித்துப் பேசும்போது Phoneனை நோண்டிக்கொண்டிருக்காதீர்கள்*.

 *கேட்டால் தவிர அறிவுரை வழங்காதீர்கள்*.

 நீண்ட நாட்கள் கழித்து யாரையும் சந்தித்தால், அவர்களின் *சம்பளம், வயது ஆகியவற்றைக் கேட்காதீர்கள்*. அவர்களாகவே சொன்னால் தவிர.

 தெருவில் யாரையாவது சந்திக்க நேர்த்தால், *Styleகாக கருப்புக்கண்ணாடி அணிந்திருந்தால் கழற்றிவிட்டுப் பேசுங்கள்*. கண்பார்த்து பேசுதல் நம்பிக்கைக்கு நல்லது.

 யார் தனிப்பட்டப் பிரச்சினையிலும் நேரடியாக *வலிய போய் தலையிடாதீர்கள்.*

வியாழன், 21 ஜனவரி, 2021

முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை - old Generation - Tamil Generation

 

தவளை கத்தினால் மழை.

🌝 அந்தி ஈசல் பூத்தால் 
அடை மழைக்கு அச்சாராம். 
🌝 தும்பி பறந்தால் தூரத்தில் மழை.
🌝 எறும்பு ஏறில் பெரும் புயல்.
🌝 மார்கழி மழை மண்ணுக்கு உதவாது. 
🌝 தை மழை நெய் மழை.
🌝 மாசிப் பனி மச்சையும் துளைக்கும். 
🌝 தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு.
🌝 புற்று கண்டு கிணறு வெட்டு.
🌝 வெள்ளமே ஆனாலும் 
பள்ளத்தே பயிர் செய். 
🌝 காணி தேடினும் கரிசல் மண் தேடு.
🌝 களர் கெட பிரண்டையைப் புதை.
🌝 கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி 
கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு.
🌝 நன்னிலம் கொழுஞ்சி 
நடுநிலம் கரந்தை 
கடை நிலம் எருக்கு.
🌝 நீரும் நிலமும் இருந்தாலும் 
பருவம் பார்த்து பயிர் செய்.
🌝 ஆடிப்பட்டம் பயிர் செய். 
🌝 விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.
🌝 மழையடி புஞ்சை
மதகடி நஞ்சை.
🌝 களரை நம்பி கெட்டவனும் இல்லை மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை.
🌝 உழவில்லாத நிலமும் 
மிளகில்லாத கறியும் வழ வழ. 
🌝 அகல உழவதை விட 
ஆழ உழுவது மேல் .
🌝 புஞ்சைக்கு நாலு உழவு 
நஞ்சைக்கு ஏழு உழவு.
🌝 குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை.
🌝 ஆடு பயிர் காட்டும் 
ஆவாரை கதிர் கட்டும்.
🌝 கூளம் பரப்பி கோமியம் சேர் .
🌝 ஆற்று வண்டல் தேற்றும் பயிரை. 
🌝 நிலத்தில் எடுத்த பூண்டு 
நிலத்தில் மடிய வேண்டும்.
🌝 காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும்.
🌝 தேங்கி கெட்டது நிலம் 
தேங்காமல் கெட்டது குளம்.
🌝 கோரையை கொல்ல கொள்ளுப் பயிர் விதை.
🌝 சொத்தைப் போல் 
விதையை பேண வேண்டும்.
🌝 விதை பாதி வேலை பாதி.
🌝 காய்த்த வித்திற்கு பழுது இல்லை. 
🌝 பாரில் போட்டாலும் பட்டத்தில் போடு.
🌝 கோப்பு தப்பினால் 
குப்பையும் பயிராகாது.
🌝 ஆடி ஐந்தில் விதைத்த விதையும் புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர்கள் வைத்த தனம். 
🌝 கலக்க விதைத்தால்
களஞ்சியம் நிறையும்.
அடர விதைத்தால் போர் உயரும்.

வாழ்க வையகம்! 
வாழ்க வளமுடன்! 
எல்லா உயிர்களும் இன்பமாக வாழ்ந்தால் மட்டுமே நாம் நலமோடு வாழ இயலும்.

#உழவே_தலை.
தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.
நீர் இன்றி அமையாது உலகு.

"என் மக்கள்"
கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்.

கடைசி மரமும் வெட்டி உண்டு
கடைசி மரமும் விஷம் ஏறிக்
கடைசி மீனும் பிடி பட
அப்போதுதான் உறைக்கும்.
இனி பணத்தைச் சாப்பிட 
முடியாது என்பது!!

ஆறும் குளமும் மாசு அடைந்தால்
சோறும் நீறும் எப்படி கிடைக்கும்!.
நீர் நிலைகளை காப்போம்.
இணைவோம்.

நம் மூத்த முன்னோர் சொல்மிக்க மந்திரமில்லை.
மேழிச் செல்வம் கோழை படாது...

#முன்னோர்கள் சொன்ன ஒவ்வொரு பழமொழி வார்த்தைகளிலும் அர்த்தங்கள் உள்ளது..

அனைவரும் அறிந்துகொள்ளுங்கள்
old Generation - Tamil Generation 

புதன், 20 ஜனவரி, 2021

அடங்கா காம வெறி அதை அடக்கும் ஞான மூலிகை ...அம்மான் பச்சரிசி

அடங்கா காம வெறி அதை அடக்கும் ஞான மூலிகை ...அம்மான் பச்சரிசி

நீங்கள்
1.டீன் ஏஜ் பருவத்தினரா ?

2.சுய இன்ப பழக்கத்தை கை விட முடியாதவரா ?

3.செக்ஸ் வீடியோவுக்கு அடிக்ட் ஆனவரா ?

4.அதீத காம சிந்தனை வயப்படுபவரா ?

5..உங்கள் ஆன்மீக வாழ்வு காமத்தால் தடை படுகிறதா ?

6.நீங்கள் துறவியா ?

அப்படி என்றால் நீங்கள் அனுதினமும் உண்ண வேண்டிய ஞான மூலிகை அம்மான் பச்சரிசி 

சிகப்பு அம்மான் பச்சரிசியை நன்கு சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி சூரணம் செய்து கொதிக்க வைத்த அரை டம்ளர் பாலில் அரை ஸ்பூன் கலந்து காலை இரவு சாப்பிட்டு வரவும்.

அம்மான்பச்சரிசி உங்கள் ஆண்மை பலத்தை குறைக்காது அதனால் பயப்பட வேண்டாம்

விந்து உற்பத்தியை அதிகரிக்கும்
சிறுநீரில் விந்து கழிதலை கட்டுப்படுத்தும் 
நீர்த்துப்போன விந்துவை கெட்டிப்படுத்தும்
ஆகமொத்தம் தாது விருத்தி தாது பலத்தை உண்டாக்கும்

இப்படிப்பட்ட அம்மான் பச்சரிசியின் அற்புதமான செய்கை என்னவென்றால்

மனதில் உள்ள காம எண்ணத்தை தணிக்கும் அற்புத மருந்து
அம்மான் பச்சரிசி சாப்பிட சாப்பிட படிப்படியாக காமவெறி குறைந்துகொண்டே வரும்
மனதளவில் காமம் உங்களை ஆக்கிரமிப்பு செய்யாது 

நமது உடலில் ஆண்மைத்தன்மை குறையவும் செய்யாது மாறாக அதிகரிக்கும்.

பெண்களுக்கு அதிக பால் சுரக்கவும் உதவுகிறது. வெள்ளை அம்மான் பச்சரிசி.

சிவப்பு சிறம் கொண்ட அம்மான் பச்சரிசி தாமிர சத்து அதிகம் கொண்டது.

கீரையாக வைத்து குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.

பீனியல் கிளான்ட் சுரப்பியை வலுவடைய வைத்து காபி,டீ ஆகிய போதை வஸ்து மேல் நாட்டத்தை குறைக்கும் அம்மான் பச்சரிசி மூலிகை.

தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.

தவறாமல் பகிர்வோம்.

செவ்வாய், 19 ஜனவரி, 2021

பா.ஜ.க 4 வருட ஆட்சி. - BJP - Modi

பா.ஜ.க 4 வருட ஆட்சி.
கீழே உள்ள தகவல்களில் எதாவது ஒன்று தவறாக இருந்தாலும் BJP நண்பர்கள் உட்பட யாராக இருந்தாலும் சுட்டிக்காட்டலம்.......

1-பெட்ரோல் / டீசல் வரி 200% உயர்வு
2-மருந்து பொருள் விலை உயர்வு
3-ரயில் கட்டண விலை உயர்வு
4-கேஸ் விலை உயர்வு
5-புதிய வரிகள்
6-பெரு முதலாளிகளின் வாராக்கடன்
7-வெளிநாட்டு கருப்பு பண முதலீட்டாளர்கள் பெயர் வெளியிட மறுத்தல்
8-ரூ.500/1000 தடை மற்றும் வேலை இழப்புகள்
9-ரூபாயின் மதிப்பு
10- மோடி வெளிநாட்டு பயணங்கள்
11- வெளியுறவு கொள்கை
12- ராணுவ வீரர் ஓய்வூதிய திட்ட தாமதம்
13- உதய் மின்திட்டம்
14- தமிழ்நாடு வறட்சி நிவாரணம்
15- தபால் துறை வழியாக கங்கை நீர் விநியோகம்
16- காஷ்மீர் தேர்தல் 8% வாக்குப்பதிவு
17- அருணாசல பிரதேச ஆட்சி கலைப்பு
18- ராணுவத்திற்காண உணவில் முறைகேடு
19- சீனபட்டாசிற்கு எதிரான தேர்தல் நேர பேச்சு
20- பலுசிஸ்தான் தலையீடு
21- இட ஒதுக்கீடு நீக்கம் பற்றிய பேச்சுகள்
22- பென்சன் வட்டி விகிதம் குறைப்பு மற்றும் விதிமுறை மாற்றங்கள்
23- மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பல ஆயிரம் கோடி ஊதியம் தாமதம்
24-ஜி.டி.பி குளறுபடி
25-புதிய வங்கி கட்டணங்கள்
-ஆதார்
26-அந்நிய நேரடி முதலீடு
27-தூய்மை இந்தியா திட்டம்
28-மேக் இன் இந்தியா
29-டிஜிட்டல் இந்திய திட்டம்
30-அணு உலை
31-புல்லட் ரயில்
31-நில கையகப்படுத்தும் மசோதா
33-ஸ்மார்ட் சிட்டி
34-ஹிந்தி திணிப்பு
35-காவேரி நீர்மேலாண்மை ஆணையம்
36-நீதிபதிகள் நியமனம் தாமதம்
37-ஜி.எஸ்.டி
38-சரிந்து வரும் வேலை வாய்ப்புகள்
39-IT ஊழியர்கள் பணி நீக்கம் 
40-காஷ்மீர் தொடர் கிளர்ச்சி - பெல்லட் குண்டு
41-கல்புர்கி கொலை
42-ரோஹித் வெமுலா
43-ஜவாஹர்லால் பல்கலைக்கழகம் சர்ச்சைகள்
44-வருண் காந்தி - ராணுவ ராணுவ ரகசியங்கள்
45-ரகுராம் ராஜன் மாற்றம்
46-ஜல்லிக்கட்டு
47-உத்திரகாண்ட் சீனா ஊடுருவல் 15 கிமீ
48-எல்லை தாண்டிய தாக்குதல். உண்மையா பொய்யா ? தொடர் ராணுவ வீரர்கள் பலி
49-ஜியோ சிம் விளம்பரம்
50-லலித் மோடி
51-வியாபம்
52-கிரண் ரிஜ்ஜு 450 கோடி ஊழல்
53-சுரங்க ஊழல் - மகாராஷ்டிரா & கர்நாடகா
54-தனி விமானம் 2000 கோடி
55-பிரான்ஸ் - பழைய போர் விமானம் அதிக விலை
56-15 லட்சம் ஆடை
57-பாகிஸ்தான் திடீர் வருகை & அதானி தொழில் வாய்ப்புகள்
58-பள்ளி பாட புத்தகங்கள் வரலாறு திரிப்பு
59-முக்கிய பிரச்சனைகளில் மௌனம்
60-பல்வேறு பா.ஜ.க உறுப்பினர்களின் வெடி தயாரிப்பு செயல்பாடுகள்
61-ஓரினச்சேர்க்கை, பலாத்காரம், பெண் பற்றி கலாச்சாரத்திற்கு முரணான கருத்துக்கள்.
62-சஹாரா நிறுவன லஞ்சம் - மோடி முதலமைச்சராக இருந்த போது
62-தனியார் நிறுவன விளம்பரம் - JIO & PAYTM
64-குஜராத் தொழிலதிபர் மகேஷ் ஷா வாக்குமூலம்
65-பதில் இல்லாத தகவல் அறியும் சட்டம் - மோடி கல்வி தகுதி
66-மத்திய மந்திரி நடிகையுமான ஸ்மிருதி இராணியின் கல்வி தகுதி சர்ச்சை
67-தேச பக்தி நாடகங்கள்
68-மேகாலயா கவர்னர் காம லீலை
69-ஜக்கி ஈஷா யோகா நிகழ்ச்சி
70-பாபா ராம்தேவ் - நில ஒதுக்கீடு
71-சமஸ்கிருதம் திணிப்பு
72-புதிய கல்வி கொள்கை
73-பொது சிவில் சட்டம்
74-கங்கை சுத்தப்படுத்தும் திட்டம் - 20,000 கோடி வீண்
75-மாட்டு கறி தடை
76-மாட்டு கறி கொலைகள் - அக்லாக், உனா(குஜராத்)
77-ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மாநாடு - பசுமை தீர்ப்பாயம் அபராதம்
78-அயோத்தி ராமர் கோவில்
79-அமைச்சர்களின் வெறுப்பு பேச்சு
80-கட்டாய சூரிய வணக்கம் / யோகா
81-காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம், தீர்ப்பு & வன்முறை
82-டெல்லி விவசாயிகள் நிர்வான போராட்டம்
83-அதானிக்கு மட்டும் 72,000 கோடி கடன்
84-SBI மினிமம் பேலன்ஸ் 5000
85- சிறுபான்மையினர் விரோத போக்கு
86-மாட்டு அரசியல் 
87- சிறுபான்மையினரும் தலித்துகளும் சங் பரிவாரங்களால் உயிருடன் அடித்து கொல்லப்பட்ட சம்பவங்கள்
88-நீட் தேர்வு
89-ரேஷன் மானியம் நிறுத்தம் .
_90 ஆதார் அட்டை  குழாறுபடிகள்-
(அதிக நண்பர்களைக்
கொண்டவர்கள் பகிர்ந்தால்
தகவல் பலரை சென்றடைய உதவும்.

வியாழன், 26 நவம்பர், 2020

சப்ஜா விதை - Subja Seeds

சப்ஜா விதை;

✔️ பயன்கள்:

️ உடல் குளிர்ச்சி.
️ வயிற்றுப்புண் சரியாகும்.
️ பித்தத்தைக் குறைக்கும்.
️ சிறுநீரக எரிச்சல் சரியாகும்.
️ சிறுநீரகத் தொற்று சரியாகும்.
️ சர்க்கரையின் அளவைக்         கட்டுப்படுத்தும்.
️ பெண்களுக்கு ஏற்படக் கூடிய வெள்ளைபடுதல் சரியாகும்.
️ உஷ்ணத்தால் ஏற்படக் கூடிய கண் எரிச்சல் சரியாகும்
️ வயிற்று எரிச்சல் சரியாகும்.

✒️ பயன்படுத்தும் முறை;

️இரவில் இதை நீரில் ஊறவைத்து 8 மணி நேரம் கழித்து பார்த்தால் ஜவ்வரிசி போல இருக்கும்.
️ இதை பாலில் அல்லது நன்னாரி சர்பத் மற்றும் நீரில் போட்டு சாப்பிடலாம்.


*தாய்ப்பாலில் எரிந்த பெரு உடையார் கோவில் தீபம்:* *அழியாத வரலாற்று உண்மை*

கண் கலங்கிவிட்டேன் இந்த சரித்திர உண்மை யை படித்தினால்
🏹🗡🏹⚔🏹🗡🏹⚔🏹🗡🏹
🚩மாமன்னன் ராஜ ராஜசோழன்🚩
*தாய்ப்பாலில் எரிந்த பெரு உடையார்  கோவில் தீபம்:*

*அழியாத வரலாற்று உண்மை*

சோழப்பேரரசன் ராஜராஜசோழனின் அரண்மனை. ஒருநாள் மன்னனைப் பார்த்து ‘சோழப்பேரரசே கோவிலுக்காகக் கொடுத்த நன்கொடைகள் ஏராளம் இருந்தாலும், உங்கள் திருமுகத்தில் தீராத கவலை படிந்திருக்கிறதே என்ன காரணம்?’ என்றார் அமைச்சர்.

மன்னர் கண்மூடி யோசித்தார். நெடுங்காற்றை உள்வாங்கி சீராக மூச்சுவிட்டார். கண் திறந்தார். நிதானமான குரலில் பேசத்தொடங்கினார்.

‘சோழப்பேரரசின் அடையாளம் இந்தப்பெருவுடையார் கோவிலின் மூலம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கும் அழியக்கூடாது என்று தான் கவலைப்படுகிறேன். அரண்மனைகள் தனிச்சொத்து, ஆலயங்கள் மக்கள் சொத்து என்று கருதப்படுமாயின் மக்களுக்கும் இதில் பங்கிருக்க வேண்டும். சோழமண்டலத்தில் கடைக்கோடியில் சிற்றூரில் வாழும் மக்களும் இந்த ஆலயத்தின் பங்குதாரர்களாக மாற்றிவிடும் திட்டத்தைத்தான் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்’ என்றார்.

‘திட்டம் என்ன மன்னா?’ அமைச்சர் கேட்டார். 

‘அதோ அந்தத்திரு விளக்குகள் செல்வந்தர்களின் நேர்த்திக் கடன்களால் எரிகின்றன. தினந்தோறும் கோவில்களில் தீபங்கள் எரிய வேண்டும். அதற்காக ஆடுகளையும், மாடுகளையும் ஏழைகளுக்கு வழங்கப் போகிறேன். அதற்குப்பதிலாக அவர்கள் திரு விளக்குகள் எரிய நெய் தந்தால் மட்டும் போதும். மொத்த வருமானமும் அவர் களுக்கே. அதாவது ஏழையின் அடுப்பும், ஆலயத்தின் திருவிளக்கும் ஒரே திரியில் எரியும். இந்த ஆலயத்தோடு அடித்தட்டு மக்களுக்கு உறவு மேம்படும். இதுதான் என் திட்டம், சரியா?’ என்றார்.

‘மிகச்சரியானது மன்னா’ என்று வணங்கினார். 

அரசன் ஆணை பிறப்பித்தான். ‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும். கால்நடைகளை ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுங்கள். எந்த நிலை யிலும் நிபந்தனை வழங்காது கட்டுப்பாடு வகுத்து கண்காணியுங்கள் என்றான். 

ஒருநாள் கோவில்களைச் சுற்றி வரும் பொழுது ஒரு கோவிலில் மட்டும் விளக்கு எரியவில்லை. காரணம் கேட்டறிந்தார். 

எவத்தூர் மாராயன் என்பவனுக்கு 42 பசு மாடுகள் வழங்கப்பட்டுள்ளன. அவனுடைய கட்டுப்பாட்டில் எரியவேண்டிய விளக்கு  கடந்த ஏழு நாட்களாக எரியவில்லை என்பதை அறிந்தார்.

‘எவனவன், இறைவன் கட்டளையை நிறைவேற்ற மறுப்பவன். பூட்டுங்கள் தேரை, ஓட்டுங்கள் எவத்தூருக்கு’ என்றான். 

காலி மனையால் சூழப்பட்ட ஒரு குடிசையின் முன் மன்னரின் தேர் நின்றது. ‘பேரரசன் வந்திருக்கிறேன், மாராயா வெளியே வா’  என்று குரல் கொடுத்தார்.
உள்ளே ஒரு பெண்ணின் விசும்பலும் குழந்தையின் அழுகுரலும் கேட்டது. 
சற்று நேரத்தில் கதவைத் திறந்து கசங்கிய சேலையும், கலைந்த கூந்தலும், கலங்கிய கண்களுமாய் பெண்ணொருத்தி வெளியே வந்தாள். அவளது இடுப்பில் நாராய் தொங்கிக் கொண்டிருந்தது, சவலை பாய்ந்த குழந்தை ஒன்று. பேரரசரைக் கண்டதும் அஞ்சி நடுங்கி கீழே விழுந்தாள்.

‘எழுந்திரு பெண்ணே! நீ யார்?’

‘நாந்தாங்க மாராயன் பொஞ்சாதி’

‘உன் கணவன் எங்கே?’

‘என் புரு‌ஷனும், ராசா கொடுத்த மாடுகளும் போன மாசம் காவிரி வெள்ளத்தில் ஆத்தோடு போயிருச்சி...’ 

அவள் சொல்வது மெய்யா என்பது போல திரும்பிப்பார்த்தார். ஆம்! என்று வருத்தத்தோடு தலை அசைத்தனர் பொதுமக்கள். 

‘உனக்காக வருந்துகிறேன். ஆனால் ஒரு கேள்வி. கடந்த மாதம் இறந்தார் என்கிறாய். ஏழு நாட்களுக்கு முன்பு வரை திருவிளக்கு எரிந்திருக்கிறது. கணவனும், மாடுகளும் இறந்தபின் இருபத்து மூன்று நாட்கள் எப்படி நீ விளக்கு எரித்தாய்?’.

அவள் தேம்பித் தேம்பி அழுதாள். இடுப்பில் நழுவிய குழந்தையை மார்போடு கட்டிக்கொண்டு, ‘அதை மட்டும் கேட்காதீர்கள் மன்னா’ என்று கண்கலங்கினாள்.

‘பெண்ணே! அஞ்சாதே உண்மையைச் சொல்’. 

‘சொல்கிறேன் மன்னா! புரு‌ஷன் செத்துப் போயிட்டாலும் ராசாவுக்குக் கொடுத்த வாக்கை மீறக்கூடாது பாருங்க. அதனால என்  தாய்ப்பாலை விற்று மூணு ஆளாக்கு நெய் வாங்கி தீபத்தை எரிய வச்சேன். ஒரு வாரமாய் தாய்ப்பால் வத்திப்போச்சு, திரு விளக்கு அத்துப்போச்சு. எங்களை மன்னிச்சிருங்க மகராசா’ என்று குழந்தையோடு தேரின் காலடியில் விழுந்தாள்.

நடந்ததை அறிந்த பெருமூச்சுவிட்ட மன்னன் ராஜராஜன் துடிதுடித்துப்போனான் .கண்கள் கலங்கியது தேகம் சிலிர்த்தது.

தேரைவிட்டு கீழிறங்கி தாயையும் குழந்தையையும் சேர்த்தெடுத்து ‘உன்னைப் போன்றவர்களால் தான் பெருமை அடைகிறது என் சோழப்பேரரசு. இன்று முதல் இந்தத்தாயை திருமஞ்சனப் பணிப்பெண்ணாக நியமிக்கின்றேன். அரண்மனை சிற்பியை அழைத்து *தாய்ப்பாலால் விளக்கெரித்த இவள் பெயரை கல் வெட்டில் பொறித்து விடுங்கள்’ என்றான்.*
வரலாறு மறக்கடிக்க பட கூடாது.

எனவே

 *அதிகமாய் பகிருங்கள்..*
🙏🕉🙏
#Cholaperarasu #rajaraja Chola

#அப்பா ஏன் எப்போதும் பின்தங்கி யிருக்கிறார் என்று தெரியவில்லை.....

#அப்பா ஏன் எப்போதும் பின்தங்கி
யிருக்கிறார் என்று தெரியவில்லை.....

1. அம்மா 9 மாதங்கள் வயிற்றில் சுமக்கிறார். அப்பாவோ 25  வருடங்கள் மனதில் வைத்து சுமக்கிறார். ஆனால், இருவருமே சமம்தான். இருந்தாலும் அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை. 

2. தாய் குடும்பத்திற்கு ஊதியம் இல்லாமல் வேலை செய்கிறார். அப்பா தனது சம்பளத்தை குடும்பத்திற்காகவே செலவிடுகிறார். அவர்களின் முயற்சிகள் இரண்டுமே சமம்தான். இருப்பினும் அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை. 

3. அம்மா நீங்கள் விரும்பியதை சமைக்கிறார். அப்பா நீங்கள் விரும்பியதை வாங்கித் தருகிறார். அவர்களின் பாசம் இரண்டுமே சமம்தான். ஆனால், அம்மாவின் பாசம் உயர்ந்ததாக காட்டப்படுகிறது. அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று தெரியவில்லை. 

4. நீங்கள் தொலைபேசியில் பேசும்போது, ​​முதலில் அம்மாவுடன் பேச விரும்புகிறீர்கள். உங்களுக்குக் காயம் ஏற்பட்டால், நீங்கள் ‘அம்மா’ என்று அழுகிறீர்கள். உங்களுக்குத் தேவைப்படும்போது மட்டுமே நீங்கள் அப்பாவை நினைவில் கொள்கிறீர்கள். ஆனால், மற்ற நேரங்களில் நீங்கள் அவரை நினைவில்கூட வைத்திருப்பதில்லை என்று அப்பா எப்போதாவது  நினைத்திருக்கிறாரா? குழந்தைகளிடமிருந்து அன்பைப் பெறும்போது, ​​தலைமுறை தலைமுறைகளாக, அப்பா எப்போதும் பின் தங்கியே இருக்கிறார். ஏன் என்று தெரியவில்லை..

5. அலமாரியில் வண்ணமயமான புடவைகள் மற்றும் குழந்தைகளுக்கான பல ஆடைகள் கொண்டு நிரப்பப்பட்டிருக்கும். ஆனால், அப்பாவின் உடைகளோ மிகவும் குறைவுதான். அவர் தனது சொந்த தேவைகளைப் பற்றி எப்போதும் கவலைப்படுவதில்லை. அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை. 

6. அம்மாவிடம் பல தங்க ஆபரணங்கள் இருக்கும். ஆனால், அப்பாவுக்கென்று ஆபரணம் ஏதும் இருப்பதில்லை. தனக்கென்று ஏதும் வாங்கியதுமில்லை. 
இருந்தாலும்  அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று இன்னமும் தெரியவில்லை.

7. குடும்பத்தை கவனித்துக் கொள்வதற்கு அப்பா அன்றாடம் மிகவும் கடினமாக உழைக்கிறார். ஆனால், அங்கீகாரத்தைப் பெறும்போது, ​​அவர் எப்போதும் பின்தங்கியே இருக்கிறார். அது ஏன் என்று புரியவில்லை.

8. அம்மா கூறுகிறார், "நாம் இந்த மாதம் குழந்தைகளின் பள்ளி/ கல்லூரிக்கு கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும். எனவே, வரும் விசேஷத்துக்கு எனக்காக சேலை எதுவும் வாங்க வேண்டாம்" என்கிறாள். நான் முன்பே முடிவெடுத்து விட்டேன். எனக்கும் வேண்டாம் என்கிறார்.  குழந்தைகளுக்குப் தங்களுக்குப் பிடித்த உணவை வீட்டிலும், வெளியிலும் வாங்கித் தருகிறார். அப்பாவுக்கு என்று எதையும் வைப்பது இல்லை. அப்பா அன்று உணவுடன் ஊறுகாயைப் பொரியலாக எண்ணி  சாப்பிடுகிறார். பிள்ளைகள் மீது அவர்களின் பாசம் இரண்டுமே சமம்தான். ஆனால், அப்பா ஏன் பின் தங்கியிருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை. 

9. பெற்றோர்களுக்கு வயதாகும் போது, ​​குழந்தைகள் சொல்கிறார்கள், வீட்டு வேலைகளை கவனித்துக் கொள்வதில் அம்மா தங்கள் உடன் இருப்பது பயனுள்ளதாக இருக்கும் என்று. ஆனால், அப்பாவோ பயனற்றவர் என்று குழந்தைகள் நினைக்கிறார்கள்.
அப்பா ஏன் பின்தங்கியே இருக்கிறார்?

அவர்தான் குடும்பத்தின் முதுகெலும்பாக இருக்கிறார். அவர் இருக்கும்  காரணத்தால் தான் நம்மால் நிமிர்ந்து நிற்க முடிகிறது. 
இருந்தாலும் அப்பா 
ஏன் பின்தங்கியே இருக்கிறார் என்றுதான்
தெரியவில்லை...,...

படித்ததில் வலித்தது.

*🏛அரசியல் சூழ்ச்சி 💪🏻* Political maneuvering

*🏛அரசியல் சூழ்ச்சி 💪🏻* Political maneuvering



*மூன்று பெண்களை மையப்படுத்தி நகர்ந்ததுதான் இந்த நிர்பயா வழக்கு.......*


 *பாதிக்கப்பட்ட பெண் நிர்பயா, நிர்பயாவின் தாயார் ஆஷாதேவி, குற்றவாளியின் மனைவி புனிதா.. இந்த பெண்கள்தான் பல தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளனர்!*


*நிர்பயா என்பது ஒரு கற்பனை பெயர்... அதன் பொருள் பயம் அற்றவள் என்பது..*


*நண்பனுடன் சினிமா பார்த்துவிட்டு வரும்போதுதான் 5 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்...*



 *பலாத்காரத்தை எதிர்த்ததால், நிர்பயாவின் வயிறு உள்ளிட்ட பகுதிகளில் மனிதாபிமானம் பெயரளவுக்குகூட இன்றி, 5 பேரும் மிருகம் போல தாக்கி ரத்தம் வழிய அடித்தனர்...*


*கதற கதற பலாத்காரம் செய்தனர்...*


*அவரது நண்பரும் தாக்கப்பட்டு, இருவருமே நிர்வாணமாக்கப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டனர்."*


*ஐயாம் ஸாரி மம்மி.. என்னால இந்த வலி, வேதனையை தாங்கவே முடியவில்லை" இதுதான் நிர்பயாவின் கடைசி வார்த்தை..*


 *நிர்பயாவுக்கு தீவிர சிகிச்சை ஆஸ்பத்திரியில் நடந்த நேரம்.. ஒவ்வொரு குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டு வந்ததும் அப்போதுதான்.*


*டெல்லி மாஜிஸ்திரேட்டிடம் நிர்பயாண மரண வாக்குமூலத்தில்*


*எனக்கு வாழணும்னு ஆசையா இருக்கு.. எப்படியாவது என்னை காப்பாற்றுங்கள்.. குற்றவாளிகளை மட்டும் தப்பவிட்டு விடாதீர்கள்" என்றார். நிர்பயாவின் ஆசை இப்போது நிறைவேற்றப்பட்டுள்ளது!*


*அன்று தீர்ப்பை கேட்டதுமே குற்றவாளி முகேஷின் தாயார், நீதிபதிக்கு கை கூப்பி கண்ணீர் மல்க கருணை காட்டுமாறு கோரிக்கை விடுத்தார்..*


*பிறகு மனசு கேட்காமல் நிர்பயாவின் தாயாரிடம் வேகமாக ஓடினார்.. அவரது சேலையைப் பிடித்து பிச்சை கேட்பது "என் பையனை மன்னிச்சுருங்க... அவனோட உயிர் இப்ப உங்க கையில்தான். இரக்கம் காட்டுங்க" என்று அழுதபடி கெஞ்சினார்*


 *நிர்பயாவின் தாயார் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றார்.*


 *ரொம்ப வலிக்குது மம்மி என்று அம்மாவிடம் ஈனகுரலில் அழுத நிர்பயாவின் வார்த்தைகள் அபபோது நினைவுக்கு வந்திருக்கவே செய்யும்... "*



*தெருவில் இனிப்புகளை வைத்தால் அதை நாய்கள் வந்து சாப்பிடதானே செய்யும்? நிர்பயாவின் பெற்றோர் அவரை எதற்காக ராத்திரி நேரத்தில் யாருடனும் வெளியே அனுப்புகிறார்கள்? குற்றவாளிகளின் வக்கீல் சர்மா கேட்ட கேள்வியும் நினைவுக்கு வந்து போயிருக்கவே செய்யும்!*


*பிறகு அமைதியாக சொன்னார், "எனக்கும் ஒரு மகள் இருந்தாள். அவளுக்கு நடந்ததை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா?*


*இந்த நீதிக்காகத்தான் நான் 7 வருஷமா காத்திருந்தேன்.." என்றார். ஒரு வயிறு துடித்தது... இன்னொரு வயிறு தவித்தது.. இருவரின் கண்ணீரால் கோர்ட்டே அந்த சமயம் மயான அமைதியுடன் காட்சி அளித்தது.*


*அநேகமாக இந்த 7 வருஷங்களில் ஆஷாதேவியின் பெரும்பாலான வார்த்தை அவங்களை தூக்குல போடுங்க என்பதுதான்..*


 *ஒவ்வொரு முறை குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பிக்கும்போதும் ஆஷாதேவி துடித்த துடிப்பும், தவிப்பும் வார்த்தைகளில் அடைத்துவிட முடியாது..*


*அன்று ஆஷாதேவி அழுதது போலவே இன்றும் அழுதார்.*


 *ஆனால் நிறைய வித்தியாசம்! இந்த தாயின் ஆசையும் நிறைவேற்றப்பட்டுள்ளது!!*


*இதில் சம்பந்தமே இல்லாதவர் அக்‌ஷய் மனைவி புனிதா.. அப்பாவி பெண்.. அபலை பெண்.. கணவனை மலை போல நம்பியிருந்தவர்..*


*ஒருவேளை அக்‌ஷய் உயிருடன் இருந்திருந்தால் புனிதாவின் நிலைமை அதோகதி என்றுதான் சொல்ல வேண்டும்..*


 *தன் தாலியை காப்பாற்றி கொள்ள கோர்ட் வளாகத்தில் இந்த பெண்ணின் தவிப்பினை உணர முடிகிறது..*


*எங்கோ பிறந்து வளர்ந்து, ஒரு கழிசடைக்கு வந்து கழுத்தை நீட்டி தாலியை வாங்கி கொண்ட இந்த பெண்ணை நினைத்தால் பரிதாபத்தை தவிர எதுவுமே தோன்றவில்லை*



*புனிதாவாகட்டும், அக்‌ஷயாவின் அம்மாவாகட்டும், ஆஷாதேவியாகட்டும்.. இவர்கள் எல்லாருமே தாய்மார்கள்தான்.. 7 வருடமாக இவர்களின் தவிப்புகள், துடிப்புகள், முயற்சிகள், பதறல்கள், கதறகல்கள் எல்லாமே ஒரு முடிவுக்கு வந்துவிட்டன...*



*ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை உண்டு பண்ணி உள்ளனர்.. இவர்களின் கண்ணீர் ஏதோ ஒரு கற்புக்குரிய பாடத்தை தந்திருக்கிறது..*


 *இவை யாவுமே தாய்மையின் வெளிப்பாடுதான்.. இந்த தாய்மையும் ஒரு பெண்மை என்பதை ஆண்கள் உணர்ந்தாலே பாதி குற்றங்கள் குறைந்து விடும்...*


 *இல்லையென்றால் நம் கண்ணதாசன் சொன்னது போலதான்... 'கூக்குரலாலே கிடைக்காது; அது கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது; அந்தக் கோட்டையில் நுழைந்தால் திரும்பாது.*

Popular Posts

Facebook

Blog Archive