facts in tamil | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil: facts in tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

facts in tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
facts in tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 20 ஜனவரி, 2021

அடங்கா காம வெறி அதை அடக்கும் ஞான மூலிகை ...அம்மான் பச்சரிசி

அடங்கா காம வெறி அதை அடக்கும் ஞான மூலிகை ...அம்மான் பச்சரிசி

நீங்கள்
1.டீன் ஏஜ் பருவத்தினரா ?

2.சுய இன்ப பழக்கத்தை கை விட முடியாதவரா ?

3.செக்ஸ் வீடியோவுக்கு அடிக்ட் ஆனவரா ?

4.அதீத காம சிந்தனை வயப்படுபவரா ?

5..உங்கள் ஆன்மீக வாழ்வு காமத்தால் தடை படுகிறதா ?

6.நீங்கள் துறவியா ?

அப்படி என்றால் நீங்கள் அனுதினமும் உண்ண வேண்டிய ஞான மூலிகை அம்மான் பச்சரிசி 

சிகப்பு அம்மான் பச்சரிசியை நன்கு சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி சூரணம் செய்து கொதிக்க வைத்த அரை டம்ளர் பாலில் அரை ஸ்பூன் கலந்து காலை இரவு சாப்பிட்டு வரவும்.

அம்மான்பச்சரிசி உங்கள் ஆண்மை பலத்தை குறைக்காது அதனால் பயப்பட வேண்டாம்

விந்து உற்பத்தியை அதிகரிக்கும்
சிறுநீரில் விந்து கழிதலை கட்டுப்படுத்தும் 
நீர்த்துப்போன விந்துவை கெட்டிப்படுத்தும்
ஆகமொத்தம் தாது விருத்தி தாது பலத்தை உண்டாக்கும்

இப்படிப்பட்ட அம்மான் பச்சரிசியின் அற்புதமான செய்கை என்னவென்றால்

மனதில் உள்ள காம எண்ணத்தை தணிக்கும் அற்புத மருந்து
அம்மான் பச்சரிசி சாப்பிட சாப்பிட படிப்படியாக காமவெறி குறைந்துகொண்டே வரும்
மனதளவில் காமம் உங்களை ஆக்கிரமிப்பு செய்யாது 

நமது உடலில் ஆண்மைத்தன்மை குறையவும் செய்யாது மாறாக அதிகரிக்கும்.

பெண்களுக்கு அதிக பால் சுரக்கவும் உதவுகிறது. வெள்ளை அம்மான் பச்சரிசி.

சிவப்பு சிறம் கொண்ட அம்மான் பச்சரிசி தாமிர சத்து அதிகம் கொண்டது.

கீரையாக வைத்து குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.

பீனியல் கிளான்ட் சுரப்பியை வலுவடைய வைத்து காபி,டீ ஆகிய போதை வஸ்து மேல் நாட்டத்தை குறைக்கும் அம்மான் பச்சரிசி மூலிகை.

தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.

தவறாமல் பகிர்வோம்.

செவ்வாய், 19 ஜனவரி, 2021

பா.ஜ.க 4 வருட ஆட்சி. - BJP - Modi

பா.ஜ.க 4 வருட ஆட்சி.
கீழே உள்ள தகவல்களில் எதாவது ஒன்று தவறாக இருந்தாலும் BJP நண்பர்கள் உட்பட யாராக இருந்தாலும் சுட்டிக்காட்டலம்.......

1-பெட்ரோல் / டீசல் வரி 200% உயர்வு
2-மருந்து பொருள் விலை உயர்வு
3-ரயில் கட்டண விலை உயர்வு
4-கேஸ் விலை உயர்வு
5-புதிய வரிகள்
6-பெரு முதலாளிகளின் வாராக்கடன்
7-வெளிநாட்டு கருப்பு பண முதலீட்டாளர்கள் பெயர் வெளியிட மறுத்தல்
8-ரூ.500/1000 தடை மற்றும் வேலை இழப்புகள்
9-ரூபாயின் மதிப்பு
10- மோடி வெளிநாட்டு பயணங்கள்
11- வெளியுறவு கொள்கை
12- ராணுவ வீரர் ஓய்வூதிய திட்ட தாமதம்
13- உதய் மின்திட்டம்
14- தமிழ்நாடு வறட்சி நிவாரணம்
15- தபால் துறை வழியாக கங்கை நீர் விநியோகம்
16- காஷ்மீர் தேர்தல் 8% வாக்குப்பதிவு
17- அருணாசல பிரதேச ஆட்சி கலைப்பு
18- ராணுவத்திற்காண உணவில் முறைகேடு
19- சீனபட்டாசிற்கு எதிரான தேர்தல் நேர பேச்சு
20- பலுசிஸ்தான் தலையீடு
21- இட ஒதுக்கீடு நீக்கம் பற்றிய பேச்சுகள்
22- பென்சன் வட்டி விகிதம் குறைப்பு மற்றும் விதிமுறை மாற்றங்கள்
23- மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பல ஆயிரம் கோடி ஊதியம் தாமதம்
24-ஜி.டி.பி குளறுபடி
25-புதிய வங்கி கட்டணங்கள்
-ஆதார்
26-அந்நிய நேரடி முதலீடு
27-தூய்மை இந்தியா திட்டம்
28-மேக் இன் இந்தியா
29-டிஜிட்டல் இந்திய திட்டம்
30-அணு உலை
31-புல்லட் ரயில்
31-நில கையகப்படுத்தும் மசோதா
33-ஸ்மார்ட் சிட்டி
34-ஹிந்தி திணிப்பு
35-காவேரி நீர்மேலாண்மை ஆணையம்
36-நீதிபதிகள் நியமனம் தாமதம்
37-ஜி.எஸ்.டி
38-சரிந்து வரும் வேலை வாய்ப்புகள்
39-IT ஊழியர்கள் பணி நீக்கம் 
40-காஷ்மீர் தொடர் கிளர்ச்சி - பெல்லட் குண்டு
41-கல்புர்கி கொலை
42-ரோஹித் வெமுலா
43-ஜவாஹர்லால் பல்கலைக்கழகம் சர்ச்சைகள்
44-வருண் காந்தி - ராணுவ ராணுவ ரகசியங்கள்
45-ரகுராம் ராஜன் மாற்றம்
46-ஜல்லிக்கட்டு
47-உத்திரகாண்ட் சீனா ஊடுருவல் 15 கிமீ
48-எல்லை தாண்டிய தாக்குதல். உண்மையா பொய்யா ? தொடர் ராணுவ வீரர்கள் பலி
49-ஜியோ சிம் விளம்பரம்
50-லலித் மோடி
51-வியாபம்
52-கிரண் ரிஜ்ஜு 450 கோடி ஊழல்
53-சுரங்க ஊழல் - மகாராஷ்டிரா & கர்நாடகா
54-தனி விமானம் 2000 கோடி
55-பிரான்ஸ் - பழைய போர் விமானம் அதிக விலை
56-15 லட்சம் ஆடை
57-பாகிஸ்தான் திடீர் வருகை & அதானி தொழில் வாய்ப்புகள்
58-பள்ளி பாட புத்தகங்கள் வரலாறு திரிப்பு
59-முக்கிய பிரச்சனைகளில் மௌனம்
60-பல்வேறு பா.ஜ.க உறுப்பினர்களின் வெடி தயாரிப்பு செயல்பாடுகள்
61-ஓரினச்சேர்க்கை, பலாத்காரம், பெண் பற்றி கலாச்சாரத்திற்கு முரணான கருத்துக்கள்.
62-சஹாரா நிறுவன லஞ்சம் - மோடி முதலமைச்சராக இருந்த போது
62-தனியார் நிறுவன விளம்பரம் - JIO & PAYTM
64-குஜராத் தொழிலதிபர் மகேஷ் ஷா வாக்குமூலம்
65-பதில் இல்லாத தகவல் அறியும் சட்டம் - மோடி கல்வி தகுதி
66-மத்திய மந்திரி நடிகையுமான ஸ்மிருதி இராணியின் கல்வி தகுதி சர்ச்சை
67-தேச பக்தி நாடகங்கள்
68-மேகாலயா கவர்னர் காம லீலை
69-ஜக்கி ஈஷா யோகா நிகழ்ச்சி
70-பாபா ராம்தேவ் - நில ஒதுக்கீடு
71-சமஸ்கிருதம் திணிப்பு
72-புதிய கல்வி கொள்கை
73-பொது சிவில் சட்டம்
74-கங்கை சுத்தப்படுத்தும் திட்டம் - 20,000 கோடி வீண்
75-மாட்டு கறி தடை
76-மாட்டு கறி கொலைகள் - அக்லாக், உனா(குஜராத்)
77-ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மாநாடு - பசுமை தீர்ப்பாயம் அபராதம்
78-அயோத்தி ராமர் கோவில்
79-அமைச்சர்களின் வெறுப்பு பேச்சு
80-கட்டாய சூரிய வணக்கம் / யோகா
81-காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம், தீர்ப்பு & வன்முறை
82-டெல்லி விவசாயிகள் நிர்வான போராட்டம்
83-அதானிக்கு மட்டும் 72,000 கோடி கடன்
84-SBI மினிமம் பேலன்ஸ் 5000
85- சிறுபான்மையினர் விரோத போக்கு
86-மாட்டு அரசியல் 
87- சிறுபான்மையினரும் தலித்துகளும் சங் பரிவாரங்களால் உயிருடன் அடித்து கொல்லப்பட்ட சம்பவங்கள்
88-நீட் தேர்வு
89-ரேஷன் மானியம் நிறுத்தம் .
_90 ஆதார் அட்டை  குழாறுபடிகள்-
(அதிக நண்பர்களைக்
கொண்டவர்கள் பகிர்ந்தால்
தகவல் பலரை சென்றடைய உதவும்.

வியாழன், 26 நவம்பர், 2020

சப்ஜா விதை - Subja Seeds

சப்ஜா விதை;

✔️ பயன்கள்:

️ உடல் குளிர்ச்சி.
️ வயிற்றுப்புண் சரியாகும்.
️ பித்தத்தைக் குறைக்கும்.
️ சிறுநீரக எரிச்சல் சரியாகும்.
️ சிறுநீரகத் தொற்று சரியாகும்.
️ சர்க்கரையின் அளவைக்         கட்டுப்படுத்தும்.
️ பெண்களுக்கு ஏற்படக் கூடிய வெள்ளைபடுதல் சரியாகும்.
️ உஷ்ணத்தால் ஏற்படக் கூடிய கண் எரிச்சல் சரியாகும்
️ வயிற்று எரிச்சல் சரியாகும்.

✒️ பயன்படுத்தும் முறை;

️இரவில் இதை நீரில் ஊறவைத்து 8 மணி நேரம் கழித்து பார்த்தால் ஜவ்வரிசி போல இருக்கும்.
️ இதை பாலில் அல்லது நன்னாரி சர்பத் மற்றும் நீரில் போட்டு சாப்பிடலாம்.


*தாய்ப்பாலில் எரிந்த பெரு உடையார் கோவில் தீபம்:* *அழியாத வரலாற்று உண்மை*

கண் கலங்கிவிட்டேன் இந்த சரித்திர உண்மை யை படித்தினால்
🏹🗡🏹⚔🏹🗡🏹⚔🏹🗡🏹
🚩மாமன்னன் ராஜ ராஜசோழன்🚩
*தாய்ப்பாலில் எரிந்த பெரு உடையார்  கோவில் தீபம்:*

*அழியாத வரலாற்று உண்மை*

சோழப்பேரரசன் ராஜராஜசோழனின் அரண்மனை. ஒருநாள் மன்னனைப் பார்த்து ‘சோழப்பேரரசே கோவிலுக்காகக் கொடுத்த நன்கொடைகள் ஏராளம் இருந்தாலும், உங்கள் திருமுகத்தில் தீராத கவலை படிந்திருக்கிறதே என்ன காரணம்?’ என்றார் அமைச்சர்.

மன்னர் கண்மூடி யோசித்தார். நெடுங்காற்றை உள்வாங்கி சீராக மூச்சுவிட்டார். கண் திறந்தார். நிதானமான குரலில் பேசத்தொடங்கினார்.

‘சோழப்பேரரசின் அடையாளம் இந்தப்பெருவுடையார் கோவிலின் மூலம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கும் அழியக்கூடாது என்று தான் கவலைப்படுகிறேன். அரண்மனைகள் தனிச்சொத்து, ஆலயங்கள் மக்கள் சொத்து என்று கருதப்படுமாயின் மக்களுக்கும் இதில் பங்கிருக்க வேண்டும். சோழமண்டலத்தில் கடைக்கோடியில் சிற்றூரில் வாழும் மக்களும் இந்த ஆலயத்தின் பங்குதாரர்களாக மாற்றிவிடும் திட்டத்தைத்தான் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்’ என்றார்.

‘திட்டம் என்ன மன்னா?’ அமைச்சர் கேட்டார். 

‘அதோ அந்தத்திரு விளக்குகள் செல்வந்தர்களின் நேர்த்திக் கடன்களால் எரிகின்றன. தினந்தோறும் கோவில்களில் தீபங்கள் எரிய வேண்டும். அதற்காக ஆடுகளையும், மாடுகளையும் ஏழைகளுக்கு வழங்கப் போகிறேன். அதற்குப்பதிலாக அவர்கள் திரு விளக்குகள் எரிய நெய் தந்தால் மட்டும் போதும். மொத்த வருமானமும் அவர் களுக்கே. அதாவது ஏழையின் அடுப்பும், ஆலயத்தின் திருவிளக்கும் ஒரே திரியில் எரியும். இந்த ஆலயத்தோடு அடித்தட்டு மக்களுக்கு உறவு மேம்படும். இதுதான் என் திட்டம், சரியா?’ என்றார்.

‘மிகச்சரியானது மன்னா’ என்று வணங்கினார். 

அரசன் ஆணை பிறப்பித்தான். ‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும். கால்நடைகளை ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுங்கள். எந்த நிலை யிலும் நிபந்தனை வழங்காது கட்டுப்பாடு வகுத்து கண்காணியுங்கள் என்றான். 

ஒருநாள் கோவில்களைச் சுற்றி வரும் பொழுது ஒரு கோவிலில் மட்டும் விளக்கு எரியவில்லை. காரணம் கேட்டறிந்தார். 

எவத்தூர் மாராயன் என்பவனுக்கு 42 பசு மாடுகள் வழங்கப்பட்டுள்ளன. அவனுடைய கட்டுப்பாட்டில் எரியவேண்டிய விளக்கு  கடந்த ஏழு நாட்களாக எரியவில்லை என்பதை அறிந்தார்.

‘எவனவன், இறைவன் கட்டளையை நிறைவேற்ற மறுப்பவன். பூட்டுங்கள் தேரை, ஓட்டுங்கள் எவத்தூருக்கு’ என்றான். 

காலி மனையால் சூழப்பட்ட ஒரு குடிசையின் முன் மன்னரின் தேர் நின்றது. ‘பேரரசன் வந்திருக்கிறேன், மாராயா வெளியே வா’  என்று குரல் கொடுத்தார்.
உள்ளே ஒரு பெண்ணின் விசும்பலும் குழந்தையின் அழுகுரலும் கேட்டது. 
சற்று நேரத்தில் கதவைத் திறந்து கசங்கிய சேலையும், கலைந்த கூந்தலும், கலங்கிய கண்களுமாய் பெண்ணொருத்தி வெளியே வந்தாள். அவளது இடுப்பில் நாராய் தொங்கிக் கொண்டிருந்தது, சவலை பாய்ந்த குழந்தை ஒன்று. பேரரசரைக் கண்டதும் அஞ்சி நடுங்கி கீழே விழுந்தாள்.

‘எழுந்திரு பெண்ணே! நீ யார்?’

‘நாந்தாங்க மாராயன் பொஞ்சாதி’

‘உன் கணவன் எங்கே?’

‘என் புரு‌ஷனும், ராசா கொடுத்த மாடுகளும் போன மாசம் காவிரி வெள்ளத்தில் ஆத்தோடு போயிருச்சி...’ 

அவள் சொல்வது மெய்யா என்பது போல திரும்பிப்பார்த்தார். ஆம்! என்று வருத்தத்தோடு தலை அசைத்தனர் பொதுமக்கள். 

‘உனக்காக வருந்துகிறேன். ஆனால் ஒரு கேள்வி. கடந்த மாதம் இறந்தார் என்கிறாய். ஏழு நாட்களுக்கு முன்பு வரை திருவிளக்கு எரிந்திருக்கிறது. கணவனும், மாடுகளும் இறந்தபின் இருபத்து மூன்று நாட்கள் எப்படி நீ விளக்கு எரித்தாய்?’.

அவள் தேம்பித் தேம்பி அழுதாள். இடுப்பில் நழுவிய குழந்தையை மார்போடு கட்டிக்கொண்டு, ‘அதை மட்டும் கேட்காதீர்கள் மன்னா’ என்று கண்கலங்கினாள்.

‘பெண்ணே! அஞ்சாதே உண்மையைச் சொல்’. 

‘சொல்கிறேன் மன்னா! புரு‌ஷன் செத்துப் போயிட்டாலும் ராசாவுக்குக் கொடுத்த வாக்கை மீறக்கூடாது பாருங்க. அதனால என்  தாய்ப்பாலை விற்று மூணு ஆளாக்கு நெய் வாங்கி தீபத்தை எரிய வச்சேன். ஒரு வாரமாய் தாய்ப்பால் வத்திப்போச்சு, திரு விளக்கு அத்துப்போச்சு. எங்களை மன்னிச்சிருங்க மகராசா’ என்று குழந்தையோடு தேரின் காலடியில் விழுந்தாள்.

நடந்ததை அறிந்த பெருமூச்சுவிட்ட மன்னன் ராஜராஜன் துடிதுடித்துப்போனான் .கண்கள் கலங்கியது தேகம் சிலிர்த்தது.

தேரைவிட்டு கீழிறங்கி தாயையும் குழந்தையையும் சேர்த்தெடுத்து ‘உன்னைப் போன்றவர்களால் தான் பெருமை அடைகிறது என் சோழப்பேரரசு. இன்று முதல் இந்தத்தாயை திருமஞ்சனப் பணிப்பெண்ணாக நியமிக்கின்றேன். அரண்மனை சிற்பியை அழைத்து *தாய்ப்பாலால் விளக்கெரித்த இவள் பெயரை கல் வெட்டில் பொறித்து விடுங்கள்’ என்றான்.*
வரலாறு மறக்கடிக்க பட கூடாது.

எனவே

 *அதிகமாய் பகிருங்கள்..*
🙏🕉🙏
#Cholaperarasu #rajaraja Chola

#அப்பா ஏன் எப்போதும் பின்தங்கி யிருக்கிறார் என்று தெரியவில்லை.....

#அப்பா ஏன் எப்போதும் பின்தங்கி
யிருக்கிறார் என்று தெரியவில்லை.....

1. அம்மா 9 மாதங்கள் வயிற்றில் சுமக்கிறார். அப்பாவோ 25  வருடங்கள் மனதில் வைத்து சுமக்கிறார். ஆனால், இருவருமே சமம்தான். இருந்தாலும் அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை. 

2. தாய் குடும்பத்திற்கு ஊதியம் இல்லாமல் வேலை செய்கிறார். அப்பா தனது சம்பளத்தை குடும்பத்திற்காகவே செலவிடுகிறார். அவர்களின் முயற்சிகள் இரண்டுமே சமம்தான். இருப்பினும் அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை. 

3. அம்மா நீங்கள் விரும்பியதை சமைக்கிறார். அப்பா நீங்கள் விரும்பியதை வாங்கித் தருகிறார். அவர்களின் பாசம் இரண்டுமே சமம்தான். ஆனால், அம்மாவின் பாசம் உயர்ந்ததாக காட்டப்படுகிறது. அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று தெரியவில்லை. 

4. நீங்கள் தொலைபேசியில் பேசும்போது, ​​முதலில் அம்மாவுடன் பேச விரும்புகிறீர்கள். உங்களுக்குக் காயம் ஏற்பட்டால், நீங்கள் ‘அம்மா’ என்று அழுகிறீர்கள். உங்களுக்குத் தேவைப்படும்போது மட்டுமே நீங்கள் அப்பாவை நினைவில் கொள்கிறீர்கள். ஆனால், மற்ற நேரங்களில் நீங்கள் அவரை நினைவில்கூட வைத்திருப்பதில்லை என்று அப்பா எப்போதாவது  நினைத்திருக்கிறாரா? குழந்தைகளிடமிருந்து அன்பைப் பெறும்போது, ​​தலைமுறை தலைமுறைகளாக, அப்பா எப்போதும் பின் தங்கியே இருக்கிறார். ஏன் என்று தெரியவில்லை..

5. அலமாரியில் வண்ணமயமான புடவைகள் மற்றும் குழந்தைகளுக்கான பல ஆடைகள் கொண்டு நிரப்பப்பட்டிருக்கும். ஆனால், அப்பாவின் உடைகளோ மிகவும் குறைவுதான். அவர் தனது சொந்த தேவைகளைப் பற்றி எப்போதும் கவலைப்படுவதில்லை. அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை. 

6. அம்மாவிடம் பல தங்க ஆபரணங்கள் இருக்கும். ஆனால், அப்பாவுக்கென்று ஆபரணம் ஏதும் இருப்பதில்லை. தனக்கென்று ஏதும் வாங்கியதுமில்லை. 
இருந்தாலும்  அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று இன்னமும் தெரியவில்லை.

7. குடும்பத்தை கவனித்துக் கொள்வதற்கு அப்பா அன்றாடம் மிகவும் கடினமாக உழைக்கிறார். ஆனால், அங்கீகாரத்தைப் பெறும்போது, ​​அவர் எப்போதும் பின்தங்கியே இருக்கிறார். அது ஏன் என்று புரியவில்லை.

8. அம்மா கூறுகிறார், "நாம் இந்த மாதம் குழந்தைகளின் பள்ளி/ கல்லூரிக்கு கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும். எனவே, வரும் விசேஷத்துக்கு எனக்காக சேலை எதுவும் வாங்க வேண்டாம்" என்கிறாள். நான் முன்பே முடிவெடுத்து விட்டேன். எனக்கும் வேண்டாம் என்கிறார்.  குழந்தைகளுக்குப் தங்களுக்குப் பிடித்த உணவை வீட்டிலும், வெளியிலும் வாங்கித் தருகிறார். அப்பாவுக்கு என்று எதையும் வைப்பது இல்லை. அப்பா அன்று உணவுடன் ஊறுகாயைப் பொரியலாக எண்ணி  சாப்பிடுகிறார். பிள்ளைகள் மீது அவர்களின் பாசம் இரண்டுமே சமம்தான். ஆனால், அப்பா ஏன் பின் தங்கியிருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை. 

9. பெற்றோர்களுக்கு வயதாகும் போது, ​​குழந்தைகள் சொல்கிறார்கள், வீட்டு வேலைகளை கவனித்துக் கொள்வதில் அம்மா தங்கள் உடன் இருப்பது பயனுள்ளதாக இருக்கும் என்று. ஆனால், அப்பாவோ பயனற்றவர் என்று குழந்தைகள் நினைக்கிறார்கள்.
அப்பா ஏன் பின்தங்கியே இருக்கிறார்?

அவர்தான் குடும்பத்தின் முதுகெலும்பாக இருக்கிறார். அவர் இருக்கும்  காரணத்தால் தான் நம்மால் நிமிர்ந்து நிற்க முடிகிறது. 
இருந்தாலும் அப்பா 
ஏன் பின்தங்கியே இருக்கிறார் என்றுதான்
தெரியவில்லை...,...

படித்ததில் வலித்தது.

*🏛அரசியல் சூழ்ச்சி 💪🏻* Political maneuvering

*🏛அரசியல் சூழ்ச்சி 💪🏻* Political maneuvering



*மூன்று பெண்களை மையப்படுத்தி நகர்ந்ததுதான் இந்த நிர்பயா வழக்கு.......*


 *பாதிக்கப்பட்ட பெண் நிர்பயா, நிர்பயாவின் தாயார் ஆஷாதேவி, குற்றவாளியின் மனைவி புனிதா.. இந்த பெண்கள்தான் பல தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளனர்!*


*நிர்பயா என்பது ஒரு கற்பனை பெயர்... அதன் பொருள் பயம் அற்றவள் என்பது..*


*நண்பனுடன் சினிமா பார்த்துவிட்டு வரும்போதுதான் 5 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்...*



 *பலாத்காரத்தை எதிர்த்ததால், நிர்பயாவின் வயிறு உள்ளிட்ட பகுதிகளில் மனிதாபிமானம் பெயரளவுக்குகூட இன்றி, 5 பேரும் மிருகம் போல தாக்கி ரத்தம் வழிய அடித்தனர்...*


*கதற கதற பலாத்காரம் செய்தனர்...*


*அவரது நண்பரும் தாக்கப்பட்டு, இருவருமே நிர்வாணமாக்கப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டனர்."*


*ஐயாம் ஸாரி மம்மி.. என்னால இந்த வலி, வேதனையை தாங்கவே முடியவில்லை" இதுதான் நிர்பயாவின் கடைசி வார்த்தை..*


 *நிர்பயாவுக்கு தீவிர சிகிச்சை ஆஸ்பத்திரியில் நடந்த நேரம்.. ஒவ்வொரு குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டு வந்ததும் அப்போதுதான்.*


*டெல்லி மாஜிஸ்திரேட்டிடம் நிர்பயாண மரண வாக்குமூலத்தில்*


*எனக்கு வாழணும்னு ஆசையா இருக்கு.. எப்படியாவது என்னை காப்பாற்றுங்கள்.. குற்றவாளிகளை மட்டும் தப்பவிட்டு விடாதீர்கள்" என்றார். நிர்பயாவின் ஆசை இப்போது நிறைவேற்றப்பட்டுள்ளது!*


*அன்று தீர்ப்பை கேட்டதுமே குற்றவாளி முகேஷின் தாயார், நீதிபதிக்கு கை கூப்பி கண்ணீர் மல்க கருணை காட்டுமாறு கோரிக்கை விடுத்தார்..*


*பிறகு மனசு கேட்காமல் நிர்பயாவின் தாயாரிடம் வேகமாக ஓடினார்.. அவரது சேலையைப் பிடித்து பிச்சை கேட்பது "என் பையனை மன்னிச்சுருங்க... அவனோட உயிர் இப்ப உங்க கையில்தான். இரக்கம் காட்டுங்க" என்று அழுதபடி கெஞ்சினார்*


 *நிர்பயாவின் தாயார் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றார்.*


 *ரொம்ப வலிக்குது மம்மி என்று அம்மாவிடம் ஈனகுரலில் அழுத நிர்பயாவின் வார்த்தைகள் அபபோது நினைவுக்கு வந்திருக்கவே செய்யும்... "*



*தெருவில் இனிப்புகளை வைத்தால் அதை நாய்கள் வந்து சாப்பிடதானே செய்யும்? நிர்பயாவின் பெற்றோர் அவரை எதற்காக ராத்திரி நேரத்தில் யாருடனும் வெளியே அனுப்புகிறார்கள்? குற்றவாளிகளின் வக்கீல் சர்மா கேட்ட கேள்வியும் நினைவுக்கு வந்து போயிருக்கவே செய்யும்!*


*பிறகு அமைதியாக சொன்னார், "எனக்கும் ஒரு மகள் இருந்தாள். அவளுக்கு நடந்ததை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா?*


*இந்த நீதிக்காகத்தான் நான் 7 வருஷமா காத்திருந்தேன்.." என்றார். ஒரு வயிறு துடித்தது... இன்னொரு வயிறு தவித்தது.. இருவரின் கண்ணீரால் கோர்ட்டே அந்த சமயம் மயான அமைதியுடன் காட்சி அளித்தது.*


*அநேகமாக இந்த 7 வருஷங்களில் ஆஷாதேவியின் பெரும்பாலான வார்த்தை அவங்களை தூக்குல போடுங்க என்பதுதான்..*


 *ஒவ்வொரு முறை குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பிக்கும்போதும் ஆஷாதேவி துடித்த துடிப்பும், தவிப்பும் வார்த்தைகளில் அடைத்துவிட முடியாது..*


*அன்று ஆஷாதேவி அழுதது போலவே இன்றும் அழுதார்.*


 *ஆனால் நிறைய வித்தியாசம்! இந்த தாயின் ஆசையும் நிறைவேற்றப்பட்டுள்ளது!!*


*இதில் சம்பந்தமே இல்லாதவர் அக்‌ஷய் மனைவி புனிதா.. அப்பாவி பெண்.. அபலை பெண்.. கணவனை மலை போல நம்பியிருந்தவர்..*


*ஒருவேளை அக்‌ஷய் உயிருடன் இருந்திருந்தால் புனிதாவின் நிலைமை அதோகதி என்றுதான் சொல்ல வேண்டும்..*


 *தன் தாலியை காப்பாற்றி கொள்ள கோர்ட் வளாகத்தில் இந்த பெண்ணின் தவிப்பினை உணர முடிகிறது..*


*எங்கோ பிறந்து வளர்ந்து, ஒரு கழிசடைக்கு வந்து கழுத்தை நீட்டி தாலியை வாங்கி கொண்ட இந்த பெண்ணை நினைத்தால் பரிதாபத்தை தவிர எதுவுமே தோன்றவில்லை*



*புனிதாவாகட்டும், அக்‌ஷயாவின் அம்மாவாகட்டும், ஆஷாதேவியாகட்டும்.. இவர்கள் எல்லாருமே தாய்மார்கள்தான்.. 7 வருடமாக இவர்களின் தவிப்புகள், துடிப்புகள், முயற்சிகள், பதறல்கள், கதறகல்கள் எல்லாமே ஒரு முடிவுக்கு வந்துவிட்டன...*



*ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை உண்டு பண்ணி உள்ளனர்.. இவர்களின் கண்ணீர் ஏதோ ஒரு கற்புக்குரிய பாடத்தை தந்திருக்கிறது..*


 *இவை யாவுமே தாய்மையின் வெளிப்பாடுதான்.. இந்த தாய்மையும் ஒரு பெண்மை என்பதை ஆண்கள் உணர்ந்தாலே பாதி குற்றங்கள் குறைந்து விடும்...*


 *இல்லையென்றால் நம் கண்ணதாசன் சொன்னது போலதான்... 'கூக்குரலாலே கிடைக்காது; அது கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது; அந்தக் கோட்டையில் நுழைந்தால் திரும்பாது.*

Covid - கொரோனா - தெளிவான விளக்கம்

கொரோனா - தெளிவான விளக்கம்

கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்யும் டாக்டர் பவித்ரா என்பவரின் நேர்காணலைப் பார்க்க நேர்ந்தது. கேள்விகளுக்கு மிகத் தெளிவாகப் பதில் அளித்திருந்தார். அந்த வீடியோவைப் பகிரலாம் என்று நினைத்திருந்தேன். நண்பர் ஸ்ரீகாந்த் சத்யநாராயணன், அந்த நேர்காணலின் சாரத்தை கேள்வி பதில்களாகத் தொகுத்துப் பதிவு எழுதியிருந்தார். எனவே, அவருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டு, அப்படியே பகிர்கிறேன். அனைவருக்கும் சென்று சேர வேண்டிய விஷயம் இது. (நேர்காணலின் வீடியோ இணைப்பு முதல் கமென்ட்டில்.�)
டாக்டர் பவித்ரா வேங்கடகோபாலன். Ph.D. கொரோனா வைரஸ் ஆய்வாளர்.
எல்லா வதந்திகளையும் மூட்டை கட்டி தூக்கிப் போட்டு விட்டு 2006-2012 வரை கொரோனா வைரஸில் Ph.D செய்த சயின்டிஸ்ட் ஆன அவரிடமிருந்தே அறிந்து கொள்ளுங்கள். நேர்காணலின் தமிழின் எழுத்துத் தொகுப்பு மட்டுமே என்னுடையது.
- Srikanth Sathyanarayanan

முதலில் நல்ல செய்திகள் —
• COVID-19 பாதிக்கப் பட்டால் நூற்றில் 97 சதவிகிதம் குணமாகி உயிர் பிழைக்கும் வாய்ப்பு.
• 1950லேயே கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் குடும்பத்தின் புதிய வைரஸ்தான் இது. அவ்வளவே.
• இதற்கு முன்னும் மனிதர்களைத் தாக்கி இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் மனிதர்களில் வரும் மூன்றில் ஒரு பங்கு சளிக் காய்ச்சலுக்கு கொரோனா வைரஸே காரணம்.
• எல்லா விலங்கிலும் கூட கொரோனா வைரஸ் இருக்கிறது.
• சபீனா சோப்பில் கை கழுவினால் கூட போதுமானது.
• பொதுமக்களுக்கு முகமூடிகள் தேவையில்லை. (மருத்துவ, சுகாதாரப் பணியில் ஈடுபடுகிறவர்களுக்குத்தான் வேண்டும்). பாதிக்கப்பட்டவர்கள் சரியான முறையில் பயன்படுத்தத் தெரிந்தால் மட்டுமே உபயோகிக்க வேண்டும்.
• குழந்தைகளிலும், கர்ப்பிணிப் பெண்களிலும் பாதிப்பின் வீரியம் குறைவே.
• ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் உயிர் பிழைக்கும் சதவிகிதம் மிக அதிகம் (99.1%).
• உலகில் மருந்து கண்டுபிடிக்க முடியாத பல வியாதிகள் இருக்கின்றன. குறிப்பாக டெங்கு. எனவே கொரோனாவிற்கு கூடுதல் அச்சம் தேவையில்லை.
• சிகிச்சை என்பது பாதிப்பைப் பொறுத்தது; நோயைப் பொறுத்தது அல்ல. எனவே நடைமுறையில் உள்ள சிகிச்சைகளே போதுமானது.
• நாய், பூனை, பறவைகள் வைத்திருப்பவர்கள் பொதுவான சுகாதாரத்தைப் பின்பற்றினாலே போதும். செல்லப் பிராணிகளுக்கு என்று குறிப்பாக பாதுகாப்பு எதுவும் தேவை இல்லை.
• பாதிக்கப் பட்டவர்களிலும் 15% பேருக்கு மட்டுமே  ICU, Ventilator தேவைப் படும்.
• பதற்றம் தேவையே இல்லை.

இப்போது புரளிகளைப் பற்றிப் பார்ப்போம்.
• புரளி நம்பர் 1 - வெய்யிலில் வராது.
— வெய்யிலில் கண்டிப்பாக வரும். வெயிலில் காற்றில் ஈரத்தன்மை சற்று அதிகம் இருக்கும். எனவே, பரவும் வேகம் குறைவாக இருக்கலாம். குளிர் காலத்தில் காற்று சற்று காய்ந்து இருக்கும். பரவுதல் சற்று எளிது. அதுவே வித்தியாசம்.

• புரளி நம்பர் 2 - மாமிசம் தின்றால் வரும்.
— ரசத்திலிருந்து மட்டன் பிரியாணி வரை எதை வேண்டுமானாலும் உண்ணலாம். எதைத் தின்றாலும் சுத்தமான தண்ணீரில் சமைத்துச் சாப்பிடுங்கள். சமைத்த உணவில் வைரஸ் பிழைக்காது.

• புரளி நம்பர் 3 - நிறைய தண்ணீர் குடித்தால் வராது.
— தேவையான தண்ணீர் குடிப்பது உடல் நலத்திற்கு நல்லது. எந்த நோயையும் எதிர்த்துப் போராடுவதற்கு உடலுக்கு கூடுதல் பலம் கிடைக்கிறது. மற்றபடி, கொரோனா தாக்குதலுக்கும், தண்ணீர் குடிப்பதற்கும் தொடர்பு இல்லை.

• புரளி நம்பர் 4 - இளவயதினருக்கு வராது.
— வயது வித்தியாசமின்றி எல்லாரையும் தாக்கும், ஆனால் வயதானவர்கள், மற்ற உடல் உபாதைகளுக்கு ஆளானவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் ஆகியோருக்கு பாதிப்பு அதிகம். (குறிப்பாக, Diabetes, HBP, Transplant candidates, Cancer patients etc.,)

• புரளி நம்பர் 5 - கிராமங்களில் வராது.
— காற்று இருக்கும் எல்லா இடங்களிலும் பரவும். கொரோனாவிற்கு நகரம் கிராமம் என்ற வித்தியாசம் எல்லாம் தெரியாது.

• புரளி நம்பர் 6 - மாற்று மருந்துகளில் குணமாகும்.
— எந்தவொரு நோய்க்கும், எந்தவொரு மருந்தும் சந்தைக்கு வருவதற்கு முன், நோயைக் கட்டுப்படுத்தும் அதன் தன்மைக்காகவும், அது பாதுகாப்பானதா என்பதற்காகவும் சோதனை செய்யப்பட்ட பிறகே பரிந்துரைக்கப்படும். கொரோனாவைப் பொறுத்தவரையில், இன்று வரை எந்த மருத்துவத்திலும், பரிசோதிக்கப்பட்ட எந்த மருந்தும் கிடையாது. கொரோனாவிற்கு அப்படி ஒரு மருந்து வர இன்னும் பல மாதங்கள் ஆகலாம். எனவே அறிகுறிகள் இருந்தால், எந்த மருந்தையும் எடுத்துக் கொள்ளாமல் மருத்துவரைப் பாருங்கள். உயிரிழப்பைத் தவிருங்கள்.

• புரளி நம்பர் 7 - அறுபது வயதிற்கு மேற்பட்ட சீனர்களை முடித்துக் கட்ட சீனா உருவாக்கிய வைரஸ்.
— இது அறிவியல் கூடத்தில் உருவாக்கப் பட்ட வைரஸ் அல்ல. GENOME SEQUENCE கொண்டு விலங்கிடமிருந்து எந்த நாளில் மனிதனுக்கு கடத்தப் பட்டது என்பது வரை மிகத் தெளிவாக ஆராய்ந்து கண்டு பிடித்து விட்டார்கள்.

• புரளி நம்பர் 8 - கொரோனா வைரஸ் இருப்பவர்களைக் கடந்து சென்றாலே நமக்கும் வந்து விடும்.
— வராது. நம் மேல் இருமினாலோ, தும்மினாலோ, அவர்களின் எச்சில் விரவி இருக்கும் காற்றை நாம் சுவாசித்தாலோதான் நம்மைத் தாக்கும். அவர்களின் எச்சில் பட்டு ஒரு இடம் காய்ந்து விட்டால், அந்த இடத்தை நாம் தொட்டாலும் வராது.

விழிப்புணர்வுத் தகவல்கள்
• அறியாமை நம்பர் 1 - முகமூடி அணிந்து விட்டால் கை கூட கழுவ வேண்டாம்.
— முதலாவதாக, முகமூடி அணியத் தேவையில்லை. அணிந்தால் சரியாக அணிய வேண்டும். அணிந்தாலும் 4-6 மணி நேரங்களுக்கு ஒரு முறை புதிய முகமூடி அணிய வேண்டும். ஒரு வேளை அதற்கு முன் மாஸ்க்கை வெளிப்புறமாக வடிகட்டியில் தொட்டு விட்டால் தூக்கி எறிந்து விட்டு புதிய மாஸ்க் அணிய வேண்டும். மாஸ்க்  அணிந்தாலும் கை கழுவ வேண்டும்.

• அறியாமை நம்பர் 2. பூண்டு, இஞ்சி, மிளகு சாப்பிட்டால் வராது.
— இவற்றையெல்லாம் சாப்பிட்டாலும் கொரோனா வைரஸ் வரும். மேலும், பூண்டு அதிகமாக பச்சையாயகச் சாப்பிட்டால் தொண்டையில் inflammation வரும். எச்சரிக்கை. Magic ஆன எந்த காய்கறிகளும், பழங்களும் இல்லை.

• கொரோனா வைரஸ்க்கு பயப்பட வேண்டுமா?
- புது வைரஸ். பின்னால் வருத்தப்படுவதை விட இப்போதே பாதுகாப்பாக இருப்பது நல்லது.
- காற்றில் பரவும் வைரஸ். நேரடித் தொடர்பைக் குறைப்பதன்மூலம் கட்டுப்படுத்த வாய்ப்புகள் அதிகம்.
- பாதிக்கப்பட்ட ஒருவர் 2 மீட்டர் தூரத்திற்கு ஒன்றிலிருந்து மூன்று பேர் வரை ஒரே சமயத்தில் பரப்ப முடியும்.
- பாதிக்கப்பட்டவர்கள் கட்டுப்பாடுடன் இருந்தால் பரவலின் வீரியத்தைக் குறைக்க முடியும்.
- தனக்கு கொரோனா இருக்கிறதா இல்லையா என்பதை தனிநபரால் தெரிந்து கொள்ள முடியாது. 
- பரிசோதிப்பதற்கு Proper Test Kit வேண்டும். Inaccurate test kit = Inaccurate results.

• ஏன் இவ்வளவு பதற்றம்?
புது வைரஸ். பரவும் வேகம் அதிகம். மேலும் கடந்த காலங்களை விட நாம் பயணிப்பதும், பொதுவில் ஒன்று கூடுவதும் அதிகமாகி விட்டது. சமூக வலை தளங்கள். 99.5% புரளிப் பரிமாற்றங்கள்.

• என்ன செய்ய வேண்டும்?
1. தனிப்பட்ட சுகாதாரம். 
முடிந்த வரை அடிக்கடி கை கழுவுங்கள். குறைந்த பட்சமாக சாப்பாட்டிற்கு முன், பின். கழிவறைக்குச் செல்லும் முன், பின். வெளியில் இருந்து வந்தால், அழுக்கான இடங்களைத் தொட்டால். இது அனைத்தும் பொதுவாகவே நமக்கு கற்றுக் கொடுக்கப் பட்ட விஷயங்கள் தான். கொரோனா special இல்லை.
2. கூட்டம் தவிருங்கள்.

• முக்கியமாக எதை செய்யக் கூடாது.
வதந்திகளைப் பரப்பாதீர்கள்.
வதந்திகளைப் பரப்பாதீர்கள்.
வதந்திகளைப் பரப்பாதீர்கள்.

ஞாயிறு, 22 நவம்பர், 2020

#மீள்_பதிவு - கொரானாவில் இருந்து உங்களை பாதுகாப்பதற்காக கியூபா மருத்துவர்களின் பரிந்துரைகள் பின்வருமாறு

#மீள்_பதிவு

இத்தாலிக்கு சென்ற கியூபா மருத்துவர்களின் இறந்த நோயாளிகளை அவர்கள் பரிசோதனை செய்ததில் இருந்து கிடைத்த தகவல்கள் இவை.

நாமும் அலட்சியம் செய்யாமல் முடிந்தவரை கொரோனா வைரசை அழிப்பதில் ஒத்துளைப்போம்

கீழ் உள்ள தகவல் வைத்தியர்களின் ஆய்வின் அடிப்படையில் பெறப்பட்டவை முடிந்தவரை நாம்மையும் காத்து மற்றவரையும் காக்க முயற்சிப்போம்

- இந்த கொரோனா வைரஸ் சுவாசக் கால்வாயில் தடித்த சளியை உருவாக்கி, அந்த சளி உறைவதன் மூலமாக சுவாசப் பாதையை அடைக்கிறது.

- மருந்தின் மூலம் சிகிச்சை செய்வதற்கு அடைப்புகள் நீக்கப்பட்டு, சுவாசப்பாதை திறக்கப்படவேண்டும். இப்படி அடைப்பை நீக்கி, சுவாசப் பாதையை திறப்பதற்கு பல நாட்கள் தேவை. அதற்குள் நோயாளி இறந்து விடுகிறார்.

 கொரானாவில் இருந்து உங்களை பாதுகாப்பதற்காக கியூபா மருத்துவர்களின் பரிந்துரைகள் பின்வருமாறு

1. சூடான நீராகாரங்களை அடிக்கடி எடுங்கள். தேநீர், காபி, சூப், வெந்நீர் போன்றவை. அத்துடன், 20 நிமிடத்திற்கு ஓர் தடவை ஓர் மிடறு வெந்நீரை உள்கொள்வது, வாயை ஈரலிப்பாக வைத்திருப்பதுடன், வைரஸை (வாய்க்குள் இருந்தால்) உணவுக் கால்வாய் வழியாக கழுவி வயிற்றை அடைந்து ஜீரண தொகுதியினால் நடுநிலையாக்கப்படும் (neutralise).

2. இயலுமானவரை, ஒவ்வொருநாளும் வெந்நீராலும், உப்பு அல்லது எலுமிச்சம் சாறு அல்லது ‘வினிகர்’ தொண்டையையும், வாயையும் அலசுங்கள் (gargle).

3. covid-19 வைரஸ் உடையிலும், மயிரிலும் ஒட்டிக் கொள்ளும் தன்மை உள்ளது. எந்த சவர்க்காரமும்(சோப்) அல்லது detergent உம் covid-19 ஐ கொல்லக் கூடியது. எனவே, வெளியில் சென்று வீடு திரும்பியவுடன், ஓர் இடத்திலும் தொடாமலும், இருக்காமலும்,(உட்காராமல்) நேரடியாக குளியல் செய்யுங்கள். அல்லது உடலின் அனைத்து பாகங்களையும் சோப்பு போட்டு கழுவிடுங்கள்.

4. நாள்தோறும் உடைகளை தோய்க்க முடியாவிட்டால், சூரிய வெய்யிலில் உலர்த்துவது வைரஸ் ஐ கொல்லக் கூடியது.

5. உலோக மேற்பரப்புகள் மற்றும் தொடு பரப்புகளை (Metalic surface) மிகவும் கவனாமாக கழுவுங்கள். ஏனெனில், உலோக தொடுபரப்புக்களில் பல நாட்கள் வரைக்கும் இந்த வைரஸ் தாக்கு பிடிக்க கூடியது.
கைபிடி சட்டங்கள், கதவின் கைப்பிடிகள் போன்றவற்றில் கவனமெடுத்து, தொடுவதை தவிருங்கள் அல்லது தவிர்ப்பதற்கான முறைகளை (கையுறை) கடைபிடியுங்கள். உங்கள் வீடுகளில் கைபிடி சட்டங்கள், கதவின் கைப்பிடிகள் போன்றவற்றை சுத்தமாக வைத்திருங்கள்.

6. புகை பிடிப்பதை தவிருங்கள்.

7. உங்கள் கைகளை 20 நிமிடத்திற்கு ஓர் தடவை நுரைக்கும் சவர்க்காரத்தினால்(சோப்) 20 நொடி கழுவுங்கள்.

8. மரக்கறி(காய்கறி) மற்றும் பழவகைளை உட்கொள்ளுங்கள். விட்டமின் C மாத்திரமின்றி, உங்களுக்கு நாகத் தாது (Zinc) ஊட்டச்சத்தை தரக்கூடிய உணவுகளை தேடி உண்ணுங்கள்.

9. மிருகங்கள் covid-19 ஐ மனிதருக்கு கடத்துவதில்லை. மனிதனில் இருந்து மனிதனுக்கே கடத்தப்படுகிறது.

10. இயலுமானவரை தடிமன் காய்ச்சலை தவிர்ப்பதற்கு முயற்சியுங்கள். குளிரான உணவுகளை தவிருங்கள்.
எதாவது தொண்டை கரகரப்பு அல்லது தொண்டை அரிப்பு வருவதற்கான அறிகுறிகளோ அல்லது உணர்வோ தென்பட்டால், மேற்கூறிய நடைமுறைகளின் மூலம் தொண்டை கரகரப்பு அல்லது தொண்டை அரிப்பு போன்றவற்றிற்கு எதிர்ப்பை ஏற்படுத்தி கொள்ளுங்கள்.

11.covid-19 தொண்டை கரகரப்பு அல்லது தொண்டை அரிப்பு மூலம் தொற்றி, 3-4 நாட்கள் வரை தொண்டையில் தங்கி இருந்து, சுவாசப் பாதை வழியாக நுரையீரலை சென்றடையும். எனவே தொண்டை கரகரப்பு அல்லது தொண்டை அரிப்பு போன்றவற்றிற்கு மேற்கூறிய முறைகள் மூலம் எதிர்ப்பை ஏற்படுத்தி கொள்ளுங்கள்.

உங்கள் உடல் நலனில் கவனமெடுப்பதுடன், ஏனையோருக்கும் இந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

கரோணாவை முன்னிட்டு தனிமையில் இருந்தபோது சிந்தித்தது,

கரோணாவை முன்னிட்டு தனிமையில் இருந்தபோது சிந்தித்தது,

“நம் முன்னோர்கள் கற்று கொடுத்தது முக்கியமானது  எண்ணெய் தேய்த்து குளித்தல் மற்றும் துணிகளுக்கு காரமிட்டு தூய்மை படுத்துதல்
1.கழிவறையும்,குளியலறையும் வீட்டிற்குள் வைக்காமல் கொல்லைபுறத்தில் வைத்தார்கள்.ஏன்-பெயர் வைக்காத கண்ணுக்கு தெரியாத கிருமிகள்.
2. சலூனுக்கும்,சாவுக்கும் சென்று வந்தால் எதையும் தொடாமல் குளித்தபின் வீட்டிற்குள் வந்தார்கள்.ஏன்-கிருமிகள்.
3. செருப்பை வீட்டின் வெளியே விட்டார்கள்.ஏன்-கிருமிகள்.
4. பள்ளிக்கும்,வெளியேயும் சென்று வந்தால் கைகால் கழுவி வீட்டிற்குள் வரசொன்னார்கள்.ஏன-கிருமிகள்.
5. பிறந்தாலோ,இறந்தாலோ தீட்டு என்று 10, 16 நாட்கள் தனிமைபடுத்தினர்.ஏன்-கிருமிகள்
6. சாவு வீட்டில் சமைக்க கூடாது என்றார்கள்.ஏன்-கிருமிகள்.
7. குடும்பத்திற்கு சமைக்கும் பெண்கள் குளித்துவிட்டு சமைத்தார்கள்.ஏன்-கிருமிகள்.
8. வாசல் பெருக்கி சாணம்,மஞ்சள் தெளித்து கோலமிட்டார்கள்.ஏன்-கிருமிகள்.
9.மண்,செம்பு,வென்கல பாத்திரங்களை உபயோகித்தார்கள்.ஏன்-கிருமிகள்.
10. வீட்டில் சமைத்த உணவு அதிலும் சைவமே பெரும்பாலும் உண்டார்கள்.ஏன்-கிருமிகள்.
தனிமனித ஆரோக்கியம்,சமூகத்தில் சுத்தம்,அண்டை அயலாரோடு அகலாது அனுகாது உறவாடுதல் போன்ற நம் மூதாதையர் வாழ்வியல் நெறியை கிண்டலடித்து,திட்டமிட்டு சிதைத்த மேலைநாட்டு நாகரிகம் அதற்கான விலையை இன்று கொடுத்து கொண்டிருக்கிறது.இனியாவது இளந்தலைமுறையினர்
“மூத்தோர் சொல் வார்த்தையும்,முழு நெல்லிக்காயும் முதலில் கசக்கும் பின்பு இனிக்கும்”என்றுணர்ந்து வளமான வாழ்வு வாழ்தல் நன்று.💐

ஒரே தலைவலி - The only headache

 ஒரே தலைவலி. The only headache.

மருந்துக் கடைக்குச் சென்றேன். மருந்துக் கடையில் இருந்த வேலைக்காரப் பையன் தலைவலிக்கான மாத்திரை ஸ்டிரிப் ஒன்றைத் தந்தான். உனது ‘ஓனர்’ எங்கேப்பா என்று கேட்டேன்.அவருக்குச் சரியான தலைவலி. 

அதோ அந்தக் காப்பிக் கடையில் காப்பி சாப்பிடப் போயிருக்கிறார் என்றான் அவன்!என் கையிலிருந்த தலைவலி மாத்திரை ஸ்டிரிப் என்னைப் பார்த்து ‘ஙே’ என்று விழித்தது!அம்மாவுக்கு பிபியும் (BP) ஷுகரும் ஏறி விட்டது. 

ஆகவே அலறி அடித்துக் கொண்டு டாக்டரைப் பார்க்க காலையிலேயே அம்மாவுடன் கிளம்பினேன்.டாக்டர் யோகா செய்து கொண்டிருந்தார். முக்கால் மணி நேரம் காத்திருந்தோம்.அம்மாவை செக் பண்ணிப் பார்த்த டாக்டர் மருந்துகளை இன்னும் கொஞ்சம் அதிகப் படுத்த வேண்டும் என்றும் வேளாவேளைக்குச் சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை பகன்றார். அவர் எழுதித் தந்த அதிகப்படியான 5, 6 மாத்திரைகள் கொண்ட சீட்டை வாங்கிக் கொண்டேன்.ஒரு ஆவல் உந்த, “டாக்டர், நீங்கள் யோகா செய்கிறீர்களா?” என்று கேட்டேன். 

15 வருடமாகச் செய்து வருவதாகவும் அதனால் தான் பிபி, ஷுகர் இல்லாத ஆரோக்கிய வாழ்வைக் கொண்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.பிபி, ஷுகரைக் குறைக்க அவர் எழுதித் தந்த நீண்ட மாத்திரை சீட்டைப் பார்த்தேன். அது ‘ஙே’ என்று என்னைப் பார்த்து விழித்தது.

மனைவியின் தலைமுடி கோரமாக ஆகிக் கொண்டிருப்பதாக அவளுக்கு ஒரு உணர்வு. "சரி, வா பியூட்டி பார்லர் போவோம்!" என்றேன்.நமது நலனைக் கருதி பல்வேறு பேக்கேஜ்கள் நமக்கு உகந்ததாக இருப்பதாக ரிஸப்ஷனிஸ்ட் அன்புடன் சொன்னாள்.1200 ரூபாயில் ஆரம்பம். 3000 ரூபாய் வரை போகிறது லிஸ்ட்.பேரம் பேசி 3000 ரூபாய் பேக்கேஜை 2400'க்கு முடித்தேன். (அட, என்ன எனது சாமர்த்தியம் பார்த்தீர்களா!)மனைவியின் கேசத்தைக் கோதி விட்டுக் கொண்டிருந்த பெண்மணியின் தலை முடி அழகாக இருந்ததோடு கம கமவென ஒரு நறுமணமும் அதிலிருந்து வந்தது.‘அட, நல்ல வாசனையாக இருக்கிறதே’, என்று அவளைப் பாராட்டினேன்.அவள் நன்றி தெரிவித்ததோடு, காலம் காலமாக அனைவரும் உபயோகித்து வரும் சம்பிரதாயமான எண்ணெயைத் தான் சூடத்தைக் கலந்து உபயோகித்து வருவதாகவும் அதனால் முடி நீண்டு அழகாக இருப்பதாகவும் தெரிவித்தாள்.2400 ரூபாய்க்கு பேரம் பேசிய என்னைப் பார்த்து என் மனைவி விழிக்க அவளைப் பார்த்து நான் விழித்தேன்.

நெருங்கிய உறவினருக்கு பெரிய பண்ணை ஒன்று உண்டு. அதில் அயல்நாட்டு கறவைப் பசுக்கள் 150 ஐ அவர் வளர்த்து வந்தார். அவை தரும் பாலைக் கறந்து எடுத்து மெஷின்களில் வைத்துப் பாதுகாத்து வெளிச் சந்தையில் நல்ல விலைக்கு அவர் விற்று வந்தார். அதே பண்ணையில் தொலைவில் இரண்டு நமது உள்ளூர் பசுக்கள் மேய்ந்து கொண்டிருந்தன. ‘அது எதற்காக’, என்று கேட்டேன்.அது குடும்பத்தினரின் உபயோகத்திற்குத் தேவைப்படும் நெய், பால் ஆகியவற்றிற்காக வளர்க்கப்படுவதாகவும் அதைத் தவிர வேறு எந்த நெய், பாலையும் தங்கள் குடும்பத்தினர் உபயோகிப்பதில்லை என்றும் அவர் சொன்னார்.

பிராண்டட் மில்க் சாப்பிடுவோரை நினைத்துக் கொண்டே நமது தேசீயப் பசுக்களைக் கையெடுத்துக் கும்பிட்டேன்.ஒருநாள் மதிய உணவிற்குப் புகழ் பெற்ற உணவு விடுதிக்குக் குடும்பத்தோடு சென்றேன்.சாப்பிட்டு முடிந்தவுடன் பில்லை நீட்டிய மானேஜர், “சாப்பாடு எப்படி சார் இருந்தது? பசு நெய், சுத்தமான ஆயில், பாஸ்மதி அரிசி மட்டும் தான் நாங்கள் உபயோகிக்கிறோம். அடிக்கடி வாருங்கள்” என்று சொன்னார். 

அத்துடன் தன் கேபினுக்கு அழைத்து தனது விஸிடிங் கார்டையும் கொடுத்தார்.அங்கிருந்த டிபன் கேரியரை நான் பார்த்தேன். அப்போது ஹோட்டல் பணியாளர்கள் இருவர் தங்களுக்குள் பேசிக் கொண்டதையும் கேட்டேன்.“சுனில், சாரோட டிபன் பாக்ஸை எடுத்து தனியே வை. அவர் சாப்பிட வர இன்னும் பத்து நிமிடமாகும்”அவரைப் பார்த்து நான் கேட்டேன், “ஏன், உங்கள் சார் இந்த ஹோட்டலிலேயே சாப்பிட மாட்டாரா?”“ஊஹூம்! ஒருபோதும் சாப்பிட மாட்டார். அவருக்கு வீட்டு சாப்பாடு தான் ரொம்ப பிடிக்கும்!”என் கையில் இருந்த 1670 ரூபாய் பில்லைப் பார்த்தேன்.அது ‘ஙே’ என்று விழித்தது.அடடா, இது மாதிரி எனக்குப் பல அனுபவங்கள் ஏற்பட்டு விட்டன.

சில சமயம் சிரிப்பாய் இருக்கிறது; சில சமயம் சிந்திக்கவும் வைக்கிறது!இந்த மல்டி நேஷனல் கம்பெனிகளால் உருவாக்கப்பட்டு வாழ்கையை நடத்துபவர்களாக நாம் ஆகி விட்டோமா என்று தோன்றுகிறது.நம்மை ஏடிஎம் மெஷினாக அவர்கள் ஆக்கி விட்டார்கள். தேவைப்படும் போது நம்மிடமிருந்து பணத்தைப் பெருமளவில் கறக்கிறார்கள்.

இதில் ரகசியம் என்னவென்றால் அவர்கள் விற்கும் பொருள்களை அவர்கள் ஒரு நாளும் நுகர்வதில்லை; அவர்கள் குடும்பத்தினருக்கோ அதைக் காண்பிப்பது கூட இல்லை.நமது பாரம்பரிய பழக்க வழக்கங்களைக் கடைப்பிடித்தோமானால் நமக்கு செலவுக்குச் செலவும் மிச்சம்; ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமும் அற்புதமாக நிலைத்து நீடித்திருக்கும்!சிந்திப்பீர்களா!!!?????வாட்ஸ் அப்

*உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு.* சோழர் காலத்தில் தமிழ்நாடு தான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு.

*உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு.* 

சோழர் காலத்தில் தமிழ்நாடு தான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு.

*சுமார் 40,000 கோயில்களை சோழர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டினார்கள். அன்று உலகிலேயே உயர்ந்த கட்டிடம் தஞ்சை பெரிய கோவிலும், கங்கை கொண்ட சோழபுரமும்தான்.*

அப்போது வட அமெரிக்கா, தென் அமெரிக்கா கிடையாது. இலண்டன் ஒரு சிறு மீன் பிடிக்கும் கிராமமாக 1066 -இல் நிறுவப்பட்டது.

*தஞ்சை பெரிய கோபுரம் முழுவதும் தங்கத்தால் போர்த்தப்பட்டது. இது பற்றிக் கல்வெட்டும் உள்ளது. இந்தத் தங்கப் போர்வை 1311 - ஆம் வருடம் மாலிக்கபூரின் படைகளால் கொள்ளையடிக்கப்பட்டு, 500 யானைகள் மேல் எடுத்துச் செல்லப்பட்டது.*

இவ்வளவு கோவில்கள் கட்டுவதற்கு எங்கிருந்து பணம் வந்தது?

*எல்லாம் கடல் வாணிபம் ஏற்றுமதிதான். ஜப்பான் நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. ஆனால் ஏற்றுமதி வியாபாரம் மூலம் அவர்களுக்குத் தங்கம் கிடைக்கிறது. அதே போல் சோழ நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. இரும்பு சாமான்கள், துணிகள், கைவினைப் பொருட்கள், தானிய ஏற்றுமதி மூலம் தங்கம் கிடைத்தது.*

உலகிலேயே ஒரே சீராக 80 இலட்சம் ஏக்கர் விளை நிலம் காவிரிப் படுகைப் பகுதியில்தான் அமைந்துள்ளது. எங்கும் மூன்று போகச் சாகுபடிக்குக் காவிரியில் நீர் வந்து கொண்டிருந்தது.

*வியாபாரத்திலும், ஏற்றுமதியிலும், விவசாயத்திலும் கிடைத்த பணத்தை - தங்கத்தை சோழர்கள் படை பலத்தைப் பெருக்கிக் கொள்ள பயன்படுத்தினர்.*

மலேயா காடுகளிலிருந்தும், மைசூர் காடுகளிலிருந்தும் யானைகள் பிடித்து வரப்பட்டன.
பர்மாவிலிருந்து தங்கம் கொடுத்து குதிரைகள் வாங்கப்பட்டன. 

*ஏன் கோவிலை கட்டினார்கள்?*

*ஹிந்துக்கள் ஏன், கோயில் கோயில் என்று அதைச் சுற்றியே வருகிறோம் ???*

பாரதத்தை ஆண்ட பெரும்பாலான அரசர்கள் அவரவர் ஆண்ட பொழுது ஏன் மருத்துவமனை கட்டவில்லை, கல்விச்சாலை அமைக்கவில்லை ஆனால் கோயில்களை கட்டினார்கள்.

*கோயில்கள் எப்பொழுதெல்லாம் கட்டப்பட்டன ????*

மக்களுக்கு பிரித்து கொடுக்காமல், அரசன், அரசின் நிலங்களை, ஏன் கோயில்களுக்கு மானியமாக எழுதி வைத்தான் ????

*உலகின் குருவாக பாரதம் ஆனது எப்படி ???*

எந்த ஒரு அரசும் பட்ஜட் போடும் பொழுது வரி வசூல் என்ன, அதில் அரசு நடத்த அதிகாரிகளுக்கு ஆகும் செலவு, மக்கள் நல திட்டங்களுக்கு ஆகும் செலவு ன்னு வரவு செலவை வைத்து தன்னிறைவு திட்டத்தை அடையத்தான் பட்ஜட் போடுவார்கள்.

இதையேதான் ஹிந்து கோயில்கள் செய்தன.

*கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் ன்னு அதைத்தான் சொல்லி வெச்சாங்க.*

மன்னன் கோயில் கட்ட ஆரம்பித்தவுடன், கட்டுமான பணிக்கு அந்த ஊரை சுற்றி உள்ள கட்டுமான கலைஞர்கள், சிற்ப கலைஞர்கள், கல் தச்சர்கள், கட்டுமான பொருட்களான செங்கல், சுண்ணாம்பு போன்றவற்றை உற்பத்தி செய்வோர், அதை ஓரிடத்தில் இருந்து கோயில் கட்டும் இடத்திற்கு கொண்டு செல்லும் போக்குவரத்து, வர்ணம் அடிக்க, ஓவிய கலைஞர்கள், இப்படி அனைவருக்கும் வேலை வாய்ப்பு, அதுவும் அரசரால் கொடுக்கப்படும், அரசு வேலை.

*கோவிலுக்கு மானியமாக கொடுக்கப்படும் நிலங்கள், குத்தகை மூலமாக விவசாயிகளுக்கு விடப்பட்டு அதன் மூலம் விவசாய உற்பத்தி, அதற்கு ஒரு சமூகம்,  பாண்ட மாற்று முறையில், தன்னிறைவு பெற்ற பொருளாதாரம்.*

கோவிலுக்கு கொடுக்கப்பட்ட பசுமாடுகள், அதை கவனித்தல், அதற்கு ஒரு சமூகம், இதனால்  கோயிலுக்கும் அந்த கிராமத்தாருக்கும் பால் சார்ந்த பொருட்கள்.

*நெய்வேத்தியம் சமைக்க சமையல் கலைஞர்கள். அதற்கு ஒரு சமூகம்.*

சமையல் செய்ய பாத்திரங்கள் செய்ய மண்பானை செய்வோர் மற்றும் உலோக பாத்திரம் செய்வோர், அதற்கு ஒரு சமூகம். அவர்களுக்கு  தொடர்ந்து வேலை.

*நந்தவனம் மூலம் தெய்வத்திற்கு பூ மாலை மற்றும் அலங்கார சேவை செய்ய நந்தவனம் காப்போருக்கு வேலை. அதற்கு ஒரு சமூகம். அவருக்கு தொடர்ந்து வேலை இருக்க, அதற்கேற்ப கோவில் உற்சவங்கள்.*

மங்கள இசை இசைக்கும் கலைஞர்கள் ஓர் சமூகம். கூத்து கலைஞர்கள் என, 
அவர்களுக்கும் வருட மானியம் மற்றும் வேலை. மாலை வேளைகளில் ஆன்மீக கச்சேரி என்று மனதிற்கு இனிய பொழுது போக்கு நிகழ்ச்சிகள். 

*தெய்வத்தின் வஸ்திரங்கள் நெய்ய ஒரு சமூகம்.*

அந்த வஸ்திரங்களை துவைக்க ஓரு சமூகம், அவருக்கும் தொடர்ந்து கோவில் மானியம் மூலம் வேலை.

*கோயிலை சுத்தமாக வைத்துக்கொள்ள ஒரு தேவை, அதை செய்ய ஒரு சமூகம். அவருக்கும் கோயில் மூலம் மானியம், வருட வருமானம்.*

இவை அனைத்தையும் நிர்வாகம் செய்ய, கணக்கு பார்க்க, ஒரு சமூகம்.

*இவர்கள் அனைவரும் அவரவர் வேலையை பார்க்க, அதன் மூலம் வாழ்வாதாரம் பெறவும், கோயில் ஒரு மிகப்பெரிய தொழிற்சாலை. ஆன்மீகம் ஒட்டி வாழ்வாதாரம்.*

பெரு வெள்ளம் வந்து ஊரே மூழ்கி போனாலும், கோயிலின் கோபுரத்தில், கலசம் மூலம், செறிந்த விஞ்ஞான அறிவுடன், அதனுள் 12 வருடம் வரை கெடாத அந்த கிராமத்தில் மண்ணுக்கேற்ப விளையும் விளை பொருட்களின் விதை பொருட்கள்.

*12 வருடத்திற்கு ஒரு முறை அதை மாற்றி அமைத்து, மராமத்து பணிகள் மேற்கொள்ள மேற் சொன்ன அனைவருக்கும் ஒரு கூட்டு வேலை வாய்ப்பு.*

இப்படி அவர் அவருக்கு தெரிந்த பணி, அதை சார்ந்த சமூகம், ஒன்றிணைந்து தன்னையும் காப்பாற்றிக்கொண்டு, தன்னிறைவு வாழ்க்கை என வாழ்வதற்கு கட்டமைக்கப்பட்டதே, நம் ஹிந்து கோயில்கள்.

*ஊருக்கு ஒரு கோயில், அதை சுற்றிலும் அனைத்து சமூகம்,* 

அந்த அந்த ஊரை சுற்றி உள்ள இயற்கை வளங்கள் பாதுகாக்கபட்டு, மூலிகை மூலம் வைத்தியம், அதற்க்கென ஒரு சமூகம் என, 
ஊரை சுற்றியே, ஓர் தன்னிறைவு வாழ்க்கை. 
இப்படி அமைக்கப்பட்டது தான் நம் பொருளாதார கட்டமைப்பு.

*மாத சம்பளம் பணமாக, பணத்திற்கு பொருள், அதன் விலை ஏற்ற இறக்கம், பண வீக்கம், இவை எதுவுமே சாராமல் ஓர் தன்னிறைவு வாழ்க்கை.* 

இதை உடைக்கத்தான், கோயில்கள் தகர்க்கப்பட்டன. இதை தகர்க்கத்தான் கோயிலின் மேல் மாற்று மத படையெடுப்பு நடந்தது.

*கோயில்கள் இல்லாமல் போனால் வாழ்வாதாரம் கெடும் என அந்நிய சக்திகள் அறிந்திருந்தனர்.*

தெய்வங்களுக்கு உயிரூட்டி, அந்த தெய்வங்கள் அங்கே வாழ்வதாகவும், அந்த கோயிலின் சொத்துக்கள், அந்த தெய்வங்களின் சொத்துக்கள் என்றும்,

*எப்படி, உயிருள்ள ஒருவரின் சொத்தை அவர் சம்மதம் இல்லாமல் மற்றவர் அபகரித்து கொண்டாலும், அது அபகரித்தவரின் சொத்து ஆகாதோ, அதே போல, அனைத்து கோயிலின் சொத்துக்களும், அந்த கோயிலில் வாழும் அந்த தெய்வத்திற்கே சொந்தம் என்று காலம் காலமாக நமது சனாதன தர்மத்தில் இருக்கும் நம்பிக்கையும் வகுக்கப்பட்ட கொள்கையும்.*

உயிருள்ள ஒருவர், எப்படி தினமும் குளிப்பாரோ, உடை உடுத்தி கொள்வாரோ, தினமும் உணவு உண்பாரோ, நம் வாழ்வாதாரத்திற்கு உதவும் ஒருவரை நாம் எப்படி போற்றி கவனிப்போமோ, அப்படி  அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக, அனைவரின் சார்பாக,  பூஜைகளை கவனிக்க ஒரு சமூகம்.*

இப்படி ஒரு கோயிலை வைத்து, ஆன்மீகம் மூலமாக ஒரு *தன்னிறைவு பொருளாதாரத்தை உலகிற்கு வாழ்ந்து காட்டியதாலேயே, பாரதம் உலக குருவாக திகழ்ந்தது.*

*இயற்கையில் இருந்து கற்றுக் கொள்ள நிறையவே உண்டு*

*இயற்கையில் இருந்து கற்றுக் கொள்ள நிறையவே உண்டு*

🗝️குதிரைகள் குடிக்கும் நீர் நிலைகளில் இருந்து நீரருந்தவும்.  குதிரை ஒருபோதும் கெட்ட தண்ணீரை குடிக்காது.

🗝️பூனை தூங்கும் இடத்தில் உங்கள் படுக்கையை இடுங்கள்.
அமைதி தராத இடத்தில் பூனை உறங்காது.

🗝️புழு துளைத்த கனிகளை உண்ணுங்கள்.
நச்சுக் கனிகளை புழு துளைக்காது.

🗝️பூச்சிகள் உட்கார்ந்திருக்கும் காளானை தைரியமாக உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். விஷக் காளான்கள் மீது பூசிகள் உட்காராது.

🗝️முயல்கள் குழி பறிக்கும் இடத்தில் மரத்தை நடலாம். 
மரம் செழிப்பாக வளரும்.
பாம்பு ஓய்வெடுக்கும் இடத்தில் உங்கள் வீட்டைக் கட்டுங்கள். பாம்புகள் குளுமையான இடங்களில் மட்டுமே ஓய்வெடுக்கும்.

🗝️பறவைகள் வெப்பத்தை தவிர்க்க ஓய்வெடுக்கும் இடத்தில் உங்களுக்கான நீர் ஊற்றினை 
தோண்டுங்கள்.

🗝️பறவைகள் தூங்கப் போகும் நேரத்தில் தூங்கச் சென்று, அவை விழிக்கும் நேரத்தில் எழுந்திருங்கள்..
நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும்.

🗝️அதிகம் இயற்கையான உணவுகளை உண்ணுங்கள். வலுவான கால்களையும், துணிச்சல் மிக்க இதயத்தையும் பெறுவீர்கள்.

🗝️மீன்களை போல அடிக்கடி நீரில் நீந்துங்கள். 
நீங்கள் பூமியில் நடக்கும் போது கூட மீன்களைப் போலவே உணர்வீர்கள்.

🗝️அடிக்கடி வானத்தைப் பாருங்கள். உங்கள் எண்ணங்களில் வெளிச்சமும், தெளிவும் பிறக்கும். 

🗝️நிறைய அமைதியாக இருங்கள், கொஞ்சம் பேசுங்கள். உங்கள் இதயத்தில் மௌனம் குடிகொள்ளும். உங்கள் ஆன்மா எப்போதும் அமைதியாக இருக்கும்.

மைதாவில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் வேண்டாம் (MAIDA) - Dr.சிவராமன் அவர்கள் பேச்சின் சுருக்கம்.

Dr.சிவராமன் அவர்கள் பேச்சின் சுருக்கம்.

✖மைதாவில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் வேண்டாம் (MAIDA)

✖பிஸ்கட், பிரட், புரோட்டா, சத்து இல்லை என்பதால் அல்ல, அதில் விஷம் தான் உள்ளது.!

இதை கொடுத்தால் உங்கள் கண்முன்னே உங்கள் சந்ததிகளின்
அழிவை காண்பீர்கள்.!
விழித்து கொள்ளுங்கள்.!

✖ சாக்லெட் வேண்டாம்.! (CHOCHALATES)

✔ வேண்டிய அளவு கடலை மிட்டாய், எள் மிட்டாய் வாங்கி கொடுங்கள்.!

✖pizza, burgers தவிர்க்கவும்.!
(AVOID JUNK FOOD)

✔ கோதுமையை சொந்தமாக அரைத்து பயன்படுத்துங்கள்.! (WHEAT)
கடையில் உள்ளதில் சப்பாத்தி உப்ப, மிருதுவாக்க (Gluten) எனும் வேதிப் பொருள் சேர்க்கப்படுகிறது!

✔ பழங்களில் கொய்யா, வாழைப்பழம், விதை உள்ள திராட்சை
Melons அதிகம் சேர்த்துகொள்ளுங்கள்.!

✖ corn flakes,oats வேண்டாம்.!

✔ கம்பு, தினை, ராகி, வரகு, சாமை, குதிரை வாலி பயன்படுத்தவும்.!

✖சீனியே வேண்டாம்.! (SUGAR)

✔ தேன், வெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டு பயன்படுத்தவும்.

✔ black tea without sugar good

✔ சுக்கு, கொத்தமல்லி காபி நல்லது.

✖யார் வீட்டிற்கு சென்றாலும் குழந்தைகளுக்கு சாக்லெட் பிஸ்கட் வாங்கி செல்லாதீர்கள்.

✔ கடலைமிட்டாய், எள்மிட்டாய் வாங்கி செல்லுங்கள்.!
இது Dr.சிவராமன் அவர்களின் வேண்டுகோள்.!!

✔ நாம் தான் முதலில் திருந்தவேண்டும்.!
பிள்ளைகளுக்கு அனைத்தையும் தருவதாய் மார்தட்டி கொள்ளும் நாம்
விஷத்தை கொடுத்து தளிரை கருக்க வேண்டாம்.!

Hyper activity because of these types of food also

✔ பிள்ளைகளின் உடலை விஷத்தை கொடுத்து
சம்மட்டியால் அடித்து கொண்டிருக்கும் நாம்
பிள்ளைகளுக்கு பொறுமையாக கூறி புரிய வைப்போம்.!
வாழவேண்டும் ஆரோக்கியத்துடன்...!!

✔ நல்ல விசயங்களை படித்து விட்டு ஷேர் பண்ணுவோம்.....!

✔ ஓர் ஆண் தெரிந்து கொள்ளும் விசயம் அவனை மட்டுமே மாற்றும்....!

✔ஒர் பெண் தெரிந்து கொண்ட விசயம் குடும்பத்தையே மாற்றும்....!

✔எனவே, தயவுசெய்து இதை உங்கள் குடும்ப பெண் களுக்கு புரிய வையுங்கள்...!

மாற்றம் நிச்சயம்....!!
இயற்கை மருத்துவம்:-

1) என்றும் 16 வயது வாழ ஓர் 🍈 ""நெல்லிக்கனி.""

2) இதயத்தை வலுப்படுத்த🌺 ""செம்பருத்திப் பூ"".

3) மூட்டு வலியை போக்கும் 🌿 ""முடக்கத்தான் கீரை.""

4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் 🍃""கற்பூரவல்லி"" (ஓமவல்லி).

5) நீரழிவு நோய் குணமாக்கும் 🌿""அரைக்கீரை.""

6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும்
🌿""மணத்தக்காளிகீரை"".

7) உடலை பொன்னிறமாக மாற்றும் 🍂""பொன்னாங்கண்ணி கீரை.""

8) மாரடைப்பு நீங்கும் 🍊""மாதுளம் பழம்.""

9) ரத்தத்தை சுத்தமாகும் 🌱""அருகம்புல்.""

10) கான்சர் நோயை குணமாக்கும் 🍈"" சீதா பழம்.""

11) மூளை வலிமைக்கு ஓர் ""பப்பாளி பழம்.""

12) நீரிழிவு நோயை குணமாக்கும் "" முள்ளங்கி.""

13) வாயு தொல்லையிலிருந்து விடுபட 🌿""வெந்தயக் கீரை.""

14) நீரிழிவு நோயை குணமாக்க 🍈"" வில்வம்.""

15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் 🌿""துளசி.""

16) மார்பு சளி நீங்கும் ""சுண்டைக்காய்.""

17) சளி, ஆஸ்துமாவுக்கு 🌿""ஆடாதொடை.""

18) ஞாபகசக்தியை கொடுக்கும் 🌿""வல்லாரை கீரை.""

19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் 🌿""பசலைக்கீரை.""

20) ரத்த சோகையை நீக்கும் 🍒"" பீட்ரூட்.""

21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும்🍍"" அன்னாசி பழம்.""

22) முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை 🌾(முள் முருங்கை)

23) கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ் 🌿🍪 கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.

24) மார்புசளி, இருமலை குணமாக்கும் ""தூதுவளை""

25) முகம் அழகுபெற 🍇""திராட்சை பழம்.""

26) அஜீரணத்தை போக்கும் 🍃"" புதினா.""

27) மஞ்சள் காமாலை விரட்டும் 🌱“கீழாநெல்லி”

28) சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும் “வாழைத்தண்டு”.

பகிர்ந்து கொள்ளுங்கள் கண்டிப்பாக மற்றவர்களும் அறிந்துகொள்ளட்டும்..!!

நன்றி .. > வாழ்க வளத்துடன்

முகமூடியின் பக்க விளைவுகள்?

முகமூடியின் பக்க விளைவுகள்?
 ----------------------------------------
 மாஸ்க் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பயன்படுத்தப்பட வேண்டும்.  நீங்கள் அதை நீண்ட நேரம் அணிந்தால், கவனம் செலுத்துங்கள்…

 1 = இரத்தத்தில் ஆக்ஸிஜன் குறைகிறது.

 2 = மூளையில் ஆக்ஸிஜன் குறைகிறது.

 3 = நீங்கள் பலவீனமாக உணர ஆரம்பிக்கிறீர்கள்.

 4 = மரணத்திற்கு வழிவகுக்கும்.

  *ஆலோசனை*
 --------------
 A = நீங்கள் தனியாக இருக்கும்போது அதை அணிய வேண்டாம்.  முகமூடி அணிந்த ஏ.சி.யுடன் என் காரில் நிறைய பேரை நான் இன்னும் பார்க்கிறேன்.  அறியாமை அல்லது கல்வியறிவின்மை?

 பி = இதை வீட்டில் பயன்படுத்த வேண்டாம்.

 சி = நெரிசலான இடத்தில் மற்றும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும்போது மட்டுமே இதைப் பயன்படுத்தவும்.

  டி = அதன் பயன்பாட்டைக் குறைக்கவும், பெரும்பாலும் உங்களை கூட்டத்திலிருந்து பிரிப்பதன் மூலம்.

 இ = எப்போதும் இரண்டு முகமூடிகளை வைத்திருங்கள்
  ஒவ்வொரு 4-5 மணி நேரத்திலும் மாற்றங்களைச் செய்யுங்கள்.

  எஃப் = முகமூடிகளை நீண்ட நேரம் பயன்படுத்த வேண்டாம்

 *பத்திரமாக இருக்கவும் !!*

  இந்த தகவலை உங்களிடம் வைத்திருக்க வேண்டாம்.  இதை உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வழங்குங்கள்…

 *உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் விரும்புகிறேன்.* 🙏

*தேர்தல் ஆணையம் யார் கையில்.* ? Election Commission

 *தேர்தல் ஆணையம் யார் கையில்.* ?


6 *ஆண்டு தேர்தல் தடை* *அம்போ... சசிகலா முதல்வர்* *ஆவார் எப்படி? பி.ஜே.பி போட்ட பாதை அப்படி!*

இந்தக் கட்டுரையை லில்லி தாமஸிடமிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்.

நான்காம் வகுப்பு படிக்கும் போதே தன் பெயருக்கு முன்னால், `வழக்கறிஞர் லில்லி தாமஸ்' எனப் போட்டுக்கொண்டவர் அவர். பின்னாளில் அதைச் சாதித்தும் காட்டியவர். கோட்டயத்தைச் சேர்ந்த லில்லி தாமஸ், சட்டத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண். அரசியலில் குற்றப் பின்னணியினரை ஒழிக்க 86-ம் வயதிலும் உச்சநீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டினார் லில்லி தாமஸ்.


`அரசியல்வாதிகள் கிரிமினல் வழக்கில் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டால், அவர்கள் மேல்முறையீடு செய்யும் அவகாசம் முடியும் வரையிலோ அல்லது மேல்முறையீடு செய்தால் அதன் இறுதித்தீர்ப்பு வரும் வரையிலோ பதவியில் தொடர முடியும்’ என்றது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 8 (4). இந்தச் சட்டப் பிரிவைப் பயன்படுத்தித்தான் தண்டனை விதிக்கப்பட்ட பிறகும் கிரிமினல் குற்றவாளிகள் `மக்கள் பிரதிநிதி'களாக வலம் வந்தார்கள். `இந்தச் சட்டப் பிரிவு 8 (4) அரசியலமைப்புச் சட்டத்துக்கே விரோதமானது. இந்தப் பிரிவு செல்லாது' என அறிவிக்கக்கோரி பொதுநல வழக்கு போட்டார் லில்லி தாமஸ். அந்த வழக்கில்தான், `அப்பீல் மனு முடியும் வரை காத்திருக்கக் கூடாது. கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்ற உடனேயே எம்.பி., எம்.எல்.ஏ-க்களின் பதவி ரத்தாகும்’ என அரசியல்வாதிகளின் தலையில் 2013-ம் ஆண்டு இடியை இறக்கியது சுப்ரீம் கோர்ட்.

இந்தத் தீர்ப்பால் எம்.பி பதவி இழந்த முதல் அரசியல்வாதி ரஷீத் மசூத். அவரைத் தொடர்ந்து லாலு, ஜெகதீஷ் சர்மா, நம்ம ஊர் செல்வகணபதி, ஜெயலலிதா, பாலகிருஷ்ணரெட்டி என அடுத்தடுத்து  அரசியல்வாதிகளின் பதவிகள் பறிபோயின.

பதவி இழந்த லாலு, ஜெயலலிதா, செல்வகணபதி, பாலகிருஷ்ண ரெட்டி ...
இப்படி சிறைக்குப் போகும் அரசியல்வாதிகள் தண்டனை முடிந்து வெளியே வந்த பிறகு, ஆறு ஆண்டுகளுக்குத் தேர்தலில் நிற்க முடியாது. `தண்டனை பெற்றவர்கள், தண்டனை அறிவிக்கப்பட்ட உடனேயே பதவியில் தொடர்வதற்கான தகுதியை இழப்பதோடு, தண்டனை முடிந்தபிறகும் அடுத்த ஆறாண்டுகள் வரை தேர்தலில் போட்டியிட முடியாது' என்கிறது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்.

` *ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது' என்கிற கூர் தீட்டப்பட்ட கத்தியை இன்றைக்கு சிக்கிம் முதல்வருக்காக* *மழுங்கடித்துவிட்டது தேர்தல் ஆணையம்.* 

பவன் குமார் சாம்லிங்
கடந்த நாடாளுமன்றத் தேர்தலோடு சிக்கிம் சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடைபெற்றது. 20 ஆண்டுகளுக்கும் மேல் முதல்வராகக் கோலோச்சிக்கொண்டிருந்த `சிக்கிம் ஜனநாயக முன்னணி' தலைவர் பவன் குமார் சாம்லிங்கை வீழ்த்தி, `சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா'வின் தலைவர் பிரேம் சிங் தமாங் முதல்வரானார். முதல்வரானாரே தவிர, தமாங் எம்.எல்.ஏ ஆகவில்லை. அடுத்த ஆறு மாதங்களுக்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ ஆனால்தான், அவரால் முதல்வராக நீடிக்கமுடியும்.

ஆனால், அதிலும் ஒரு சிக்கல். 
முன்பு தமாங் அமைச்சராக இருந்த காலத்தில், அதாவது 1996-97-ம் ஆண்டு கறவை மாடுகள் வழங்கும் திட்ட ஊழலில் சிக்கி, ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றார் தமாங். தண்டனை அனுபவித்து, 2018 ஆகஸ்ட் 10-ம் தேதிதான் சிறையிலிருந்து வெளியே வந்தார். அன்றிலிருந்து அவர் ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. பிறகு எப்படி முதல்வரானார் என்கிற கேள்விக்கு விடை தேட வேண்டியதில்லை.

சிக்கிம் சட்டசபைத் தேர்தலில் `சிக்கிம் ஜனநாயக முன்னணி' 15 இடங்களில் வென்று இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்தது. 

`` *ஆட்சியைப் பிடிக்க முடியாத மாநிலங்களில் கட்சியைக் கைப்பற்று"* 

என்கிற சூத்திரத்தை சிக்கிமிலும் செய்தது பி.ஜே.பி. தேர்தல் முடிந்த இரண்டே மாதத்தில் `சிக்கிம் ஜனநாயக முன்னணி'யின் 10 எம்.எல்.ஏ-க்கள் திடீரென பி.ஜே.பி-யில் ஐக்கியமானார்கள். இதனால் பவன்குமார் சாம்லிங்கின் `சிக்கிம் ஜனநாயக முன்னணி' எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது.

அதிகாரங்களைக் குவித்து வைத்திருக்கும் மத்திய பி.ஜே.பி ஆட்சியின் ஆசி, தமாங்குக்குத் தாராளமாகக் கிடைத்தது. 

விளைவு தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றை அளிக்கிறார் தமாங். `ஆறு ஆண்டுகளுக்குத் தேர்தலில் நிற்க முடியாது என்ற சட்டத்திருத்தம் 2003-ம் ஆண்டுதான் கொண்டுவரப்பட்டது. முன்னதாக நடந்த வழக்குக்கு, பின்னர் நிறைவேற்றிய சட்டத்தைக் கொண்டு தண்டனை விதிக்க முடியாது. 

ஆறு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது செல்லாது’ என மனுவில் குறிப்பிடுகிறார். தேர்தல் ஆணையமும் அதை ஏற்றுக்கொண்டு, தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட தடையை 13 மாதங்களாகக் குறைத்து உத்தரவு பிறப்பிக்கிறது. இதன் மூலம் கடந்த அக்டோபர் 21-ம் தேதி நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தலில் நின்று, தமாங் வெற்றி பெறுகிறார் . *முதல்வராகத் தொடர்கிறார்* 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என மார்தட்டிக் கொள்ளும் இந்தியாவுக்கு இது சாபக்கேடு. தேர்தலில் போட்டியிட முடியாத ஒருவரை அதிலிருந்து விடுவித்து மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது தேர்தல் ஆணையம். சிக்கிம் இடைத்தேர்தலுக்காக தமாங்கும் மோடியும் கூட்டணி போட்டனர். அதற்காகத் தேர்தல் ஆணையத்தின் மூலம் கைம்மாறு நடத்தப்பட்டிருக்கிறது.

 *அரசியலில் `கிரிமினல்' கலப்பதை எதிர்ப்பதில் தான்தான் `முன்னோடி' எனக் காட்டிக் கொண்ட பி.ஜே.பி-யின்* *முகத்திரை தமாங் விவகாரத்தில் கிழிந்து* *தொங்குகிறது* .
 *தமாங்குக்கு பதவிப்* *பிரமாணம் செய்து* *வைக்கிறார் கவர்னர்* ..

சிக்கிம் சட்டமன்ற பொதுத்தேர்தலில் தமாங் போட்டியிடவில்லை. ஆனால், தேர்தலில் அவரது கட்சி வெல்கிறது. அவருடைய கட்சி எம்.எல்.ஏ-களால் முதல்வராக தேர்வு செய்யப்படுகிறார் தமாங். அவருக்கு கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்திருக்கிறார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அது நிலுவையில் உள்ள போதுதான், தேர்தல் கமிஷன் தமாங்குக்கு சலுகை காட்டுகிறது. 

இந்த இடத்தில் இந்தியாவே திரும்பிப் பார்த்த ஜெயலலிதா வழக்கை கவனத்திலே எடுத்துக்கொள்ளவில்லை சிக்கிம் கவர்னரும், தேர்தல் ஆணையமும்.

டான்சி வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்ற ஜெயலலிதா, 2001 சட்டசபைத் தேர்தலில் போட்டியிட முடியவில்லை. நான்கு தொகுதிகளில் தாக்கல் செய்த ஜெயலலிதாவின் வேட்புமனுக்கள் அன்றைக்கு நிராகரிக்கப்பட்டன. தேர்தலில் அ.தி.மு.க. வென்று, ஆட்சியைப் பிடித்தது. கவர்னராக இருந்த பாத்திமா பீவி ஜெயலலிதாவுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தபோது கடும் எதிர்ப்பு கிளம்பியது. உச்சநீதிமன்றத்தில் வழக்கும் பாய்ந்தது.

தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்த ஜெயலலிதாவுக்கு முதல்வராகப் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது தவறு.     எம்.எல்.ஏ ஆக முடியாத ஒருவர் எப்படி முதல்வர் ஆக முடியும்?' எனச் சொல்லி ஜெயலலிதாவின் முதல்வர் பதவியை 2001 செப்டம்பர் 21-ம் தேதி பறித்து உத்தரவிட்டது நீதிபதி பரூச்சா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச். இதனால், ஜெயலலிதா அமைச்சரவையே கவிழ்ந்து, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை அமைந்தது.

` *ஜெயலலிதா முதல்வராக நியமிக்கப்பட்டது* *செல்லாது' என 18 ஆண்டுகளுக்கு முன்பு உச்சநீதிமன்றம் உரக்கச்* *சொன்ன விஷயம், சிக்கிம் கவர்னருக்கும் தேர்தல்* *கமிஷனுக்கும் கொஞ்சம்கூட உரைக்கவில்லை* *என்றால் இவர்கள் எல்லாம் ஜனநாயகத்தின்* *காவலர்களா... அல்லது குற்றவாளிகளுக்குத்* *துணை போகும் ஏவலர்களா என்று கேள்வி எழுப்புகிறான்* *இந்த தேசத்தின் வாக்காளன்* .

சிக்கிம் முதல்வராக தமாங் பதவியேற்ற தேதி 2019 மே 27. அதாவது, தமாங் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்ட காலம் அது. சட்டமன்ற உறுப்பினராகப் போட்டியிடக்கூடத் தகுதியில்லாத தமாங்கை, ஆளுநர், முதலமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தது செல்லுமா? அவர் முதலமைச்சராகத் தொடர்வது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்பது அரசியல் தெரியாத பத்தாம் வகுப்பு மாணவனுக்குக்கூட தெரிந்த உண்மை, அரசியல் அறிந்த சட்டம் தெரிந்த சிக்கிம் ஆளுநருக்குத் தெரியாதா... ஆள்வோருக்கு புரியாதா... மத்திய அரசு, தேர்தல் ஆணையம், நீதித்துறை, ஆளுநர் மாளிகை என அனைத்து அதிகார அமைப்புகளும் வாய் மூடிவிட்டன.

 *`பி.ஜே.பி-யின் கண்ணசைவுக்குத் தேர்தல் கமிஷன் செயல்படுகிறது'* என்கிற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை நிரூபிப்பது போலத்தானே இருக்கிறது தமாங் விவகாரம். தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்த ஒருவருக்கு முதல்வராகப் பதவிப்பிரமாணம் செய்து வைத்ததே தவறு. கவர்னர் மூலம் அந்த தவற்றையும் செய்துவிட்டு, அந்த முதல்வர், தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாகத் தடைக்காலத்தைக் குறைத்துவிட்டு அந்த முதல்வரோடு கூட்டணி அமைத்து இடைத் தேர்தலையும் சந்திக்கிறது பி.ஜே.பி.

 *லில்லி தாமஸ் மேட்டருக்கு வருவோம்.*

 அவர் போட்ட வழக்கால்தான் `அப்பீல் மனு முடியும் வரை காத்திருக்கக்கூடாது. கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகளின் எம்.பி., எம்.எல்.ஏ பதவிகள் உடனடியாக ரத்தாகும்’ என 2013 ஜூலை 10-ம் தேதி தீர்ப்பு எழுதியது உச்சநீதிமன்றம். இதனால் தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகள் மேல் முறையீடு செய்வதற்கு முன்பே பதவியை இழக்கும் அபாயம் உருவானது. இந்தத் தீர்ப்பு வெளியான நேரத்தில் மத்தியில் மன்மோகன் சிங் தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது.

உச்சநீதிமன்றம் இப்படி கடிவாளம் போட்டதும் கிட்டத்தட்ட எல்லாக் கட்சிகளும் ஒருமித்த குரலுடன் எதிர்ப்பு தெரிவித்தன. 2013 ஆகஸ்ட் 1-ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், குற்ற வழக்குகளில் தண்டிக்கப்படும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பதவியைப் பறிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாகச் சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினார்கள். சுப்ரீம் கோர்ட் உத்தரவை, பயனற்றதாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டது மன்மோகன் சிங் அரசு. அதற்குக் காரணம் அன்றைக்கு லோக்சபா எம்.பி.,க்கள், 543 பேரில், 162 பேர் மீது குற்ற வழக்குகள் இருந்தன. மாநில எம்.எல்.ஏ.,க்கள் 4,032 பேரில், 1,258 பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தன.

மக்கள் பிரதிநிதி'களைப் பாதுகாக்கும் வகையில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில், திருத்தம் மேற்கொள்ள முடிவு செய்தார்கள். அந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு ஒன்றை 2013 ஆகஸ்ட் 13-ம் தேதி தாக்கல் செய்தது மன்மோகன் சிங் அரசு. அதில், `இந்தத் தீர்ப்பு, அரசியல் ரீதியாகப் பழிவாங்கவே பயன்படும். அப்பீல் மனு நிலுவையில் இருக்கும்போதே பதவியைப் பறித்துவிட்டால், அப்பீல் மனுவில் அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்தால், அவரால் மறுபடியும் பதவியைப் பெற முடியாது. ஒருவர் எப்போது பதவி பறிப்புக்கு ஆளாவார் என்று சட்டம் இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்குத்தான் உள்ளது. அதை நீதிமன்றம் எடுத்துக் கொள்ளக்கூடாது. இதுபோன்ற அரசியல் சட்ட விவகாரங்களை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது தவறு. அதிக நீதிபதிகளைக்கொண்ட அரசியல் சட்ட அமர்வுதான் விசாரிக்க வேண்டும். தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்' எனச் சொன்னது.

மறு சீராய்வு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், `தண்டனை பெற்ற, எம்.பி. எம்.எல்.ஏ.,க்களின் பதவிகளைப் பறிக்கலாம் என, ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவு சரியானதுதான். நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், எந்தத் தவறும் இல்லை. மிகவும், அலசி ஆராய்ந்து அளிக்கப்பட்ட தீர்ப்பு அது. இந்த விஷயத்தில், மறு பரிசீலனைக்கே இடமில்லை' என 2013 செப்டம்பர் 3-ம் தேதி திட்டவட்டமாகத் தெரிவித்தது.

இதனால் உச்சநீதிமன்றத் தீர்ப்பை நிராகரிக்கும் வகையில் அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்து, அமைச்சரவையின் ஒப்புதலையும் பெற்றது மன்மோகன் சிங் ஆட்சி. நீதிமன்ற உத்தரவையும் மீறி, குற்றப் பின்னணி எம்.பி., எம்.எல்.ஏ-களை காப்பாற்றும் மன்மோகன் சிங் அரசின் அவசரச் சட்டத்துக்கு அன்றைக்கு எதிர்க்கட்சியாக இருந்த பி.ஜே.பி கடுமையாக எதிர்த்தது. `அவசரச் சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கக் கூடாது' எனச் சொல்லி 2013 செப்டம்பர் 27-ம் தேதி அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி உள்ளிட்ட பி.ஜே.பி தலைவர்கள் அன்றைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியைச் சந்தித்து, வலியுறுத்தினார்கள். அந்தச் சந்திப்புக்குப் பிறகு பேட்டி அளித்த அத்வானி, ``தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்கும் அவசரச் சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது'' எனக் கர்ஜித்தார். அந்தக் கட்சிதான் இன்றைக்கு தமாங் விஷயத்தில் அரசியல் சாசனத்தையே துச்சமெனத் தூக்கி வீசியிருக்கிறது.

மன்மோகன் சிங் அரசு கொண்டு வந்த அவசரச் சட்டத்துக்குக் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே எதிர்ப்புக் குரல் ஒன்று எழுந்தது. அது ராகுல் காந்தியின் குரல். பி.ஜே.பி தலைவர்கள் எல்லாம் ஜனாதிபதியைச் சந்திக்கப் போனபோது திடீரென்று டெல்லி பிரஸ் கிளப்புக்கு விஜயம் செய்தார் ராகுல் காந்தி.

நீண்ட நேரம் பிரஸ் மீட் நடத்தப்போவதில்லை. நான் என்ன சொல்ல விரும்புகிறேனோ அதைச் சொல்லிவிட்டு, என் வேலையைப் பார்க்கப்போகிறேன்'' என்று சொன்ன ராகுல் காந்தி, ``கிரிமினல் பின்னணி உள்ள மக்கள் பிரதிநிதிகளைப் பாதுகாக்கக் கொண்டு வரப்பட்ட அவசரச் சட்டம் முட்டாள்தனமானது. அதைக் கிழித்து குப்பையில் எறியுங்கள்'' என்றார் ஆவசேமாக. காங்கிரஸ் ஆட்சிக்குள்ளேயே `சேம் சைடு கோல்' போட்ட தருணம் அது. அவசரச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் அனுப்பினார் ராகுல் காந்தி.

ராகுல் காந்தி ஆக்ரோஷமாகக் கர்ஜித்த நேரத்தில், பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்கா வாஷிங்டன்னில் உள்ள ஹோட்டலில் தூங்கிக்கொண்டிருந்தார். அவரின் கருத்தை அறிய ஊடகத்தினர் அங்கே குவிந்தனர். ``எழுப்பப்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து, நான் இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்துப் பரிசீலிக்கப்படும்'' என அறிக்கை விட்டார் மன்மோகன். ஆனால், பி.ஜே.பி-யோ இதை `ஒரு அரசியல் நாடகம்' என அன்றைக்கு வர்ணித்தது. ``சுயமரியாதை இருந்தால் பிரதமர் மன்மோகன் சிங் தமது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்'' என்றார் அன்றைக்கு ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அருண் ஜேட்லி.

வெங்கையா நாயுடுவோ, ``ராகுல் காந்தி சொல்வது போல முட்டாள்தனமான அரசின் பிரதமர் மன்மோகன்சிங் பதவியில் தொடரலாமா? பதவியிலிருந்து விலகி தனது தன்மானத்தை வெளிப்படுத்த வேண்டும்'' என்றார். ``பிரதமரையும் அவரது கேபினட்டையும் 'நான்சென்ஸ்' எனக்கூறுகிறார் ராகுல் காந்தி. தனக்குச் சுயமரியாதை இருக்கிறது என்பதைக் கொஞ்சம்கூட வெளிப்படுத்தாமல் அமைதி காக்கிறார் மன்மோகன் சிங். பிரதமருக்குக் கொஞ்சமாவது சுய மரியாதை இருக்க வேண்டாமா'' எனக் கேள்வி எழுப்பினார் நிதின் கட்கரி

அன்றைக்குக் காட்டிய `ஆக்ரோஷம்' எல்லாம் இன்றைக்கு ஆட்சியில் அமர்ந்ததும் `வேஷம்' ஆகிவிட்டது.

நரேந்திரமோடி மட்டும் சும்மா இருந்திருப்பாரா... பி.ஜே.பி. பிரதமர் வேட்பாளராக அன்றைக்கு அறிவிக்கப்பட்டிருந்த மோடி என்ன சொன்னார் தெரியுமா... 2013 செப்டம்பர் 2-ம் தேதி டெல்லியில் நடந்த விகாஸ் கூட்டத்தில் பங்கேற்ற மோடி, `` *டெல்லியில் அம்மா ஒரு பக்கம் ஆட்சி புரிகிறார், மகன் ஒரு* *பக்கம் ஆட்சி நடத்துகிறார். ஒரு ஆட்சிக்குள் பல ஆட்சிகள் நடக்கிறது.* *காங்கிரஸ் கட்சியே நமது பிரதமரை மதிப்பதில்லை. பிறகு ஷெரீப் எப்படி* *மதிப்பார்... ராகுல் காந்தி நான்சென்ஸ் என்றபோது பிரதமர் மன்மோகன்சிங் மறுப்பு* *தெரிவிக்கவில்லை.* *நீங்கள் காங்கிரஸின் பட்டத்து இளவரசன் தலைமையில் செயல்பட விரும்புகிறீர்களா...* *அல்லது இந்திய அரசியல் சாசனச் சட்டத்தின் கீழ் செயல்பட* *விரும்புகிறீர்களா?'' எனக் கேள்வி எழுப்பினார் மோடி.*

அந்த மோடிதான் இன்றைக்குப் பிரதமர் நாற்காலியில் அமர்ந்து கொண்டு, தமாங்குக்கு ஆதரவாக அரசியல் சாசனத்தையே தூக்கி எறிகிறார். ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு, லாலு, ரஷீத் மசூத், ஜெகதீஷ் சர்மா ஆகியோரின் எம்.பி பதவிகள் பறிக்கப்பட்ட போது அன்றைக்கு பி.ஜே.பி வரவேற்றுக் கொண்டாடியது. ஆனால், ஆட்சியில் அமர்ந்ததும் தமாங்கைப் போற்றுகிறது.

2014 நாடாளுமன்றத் தேர்தலை பி.ஜே.பி எதிர்கொண்டபோது குஜராத் காந்தி நகர் பிரசாரக்கூட்டத்தில் பேசிய மோடி, `` *அரசியல், குற்றவாளிகள் மயமாவது வருத்தத்தை* *அளிக்கிறது. அரசியலைக் குற்றவாளிகளின்* *பிடியிலிருந்து விடுவிப்பேன்* .

 *பி.ஜே.பி ஆட்சிக்கு* *வந்தால், குற்றம் புரிந்த எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்கள் ஓராண்டுக்குள் சிறைக்கு* *அனுப்பப்படுவார்கள். பி.ஜே.பி-யினராக இருந்தாலும் அவர்கள்* *மீதும் நடவடிக்கை பாயும். குற்றவாளிகளின்* *பிடியிலிருந்து* *அரசியலை விடுவிக்க எனக்கு ஒருமுறை வாய்ப்பு தாருங்கள்''* என்றார்.

வென்று ஆட்சியில் அமர்ந்து ஐந்தாண்டுகள் ஓட்டியும் விட்ட மோடி, அடுத்து வந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் வென்று மீண்டும் பிரதமரானார். அந்தத் தேர்தலில் பி.ஜே.பி சார்பில் நிறுத்தப்பட்ட 433 வேட்பாளர்களில் 175 பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள். பி.ஜே.பி களமிறக்கிய வேட்பாளர்களில் 40 சதவிகிதத்தினர் கிரிமினல் பின்னணியினர். மோடி போட்டது அத்தனை பொய் வேஷம்.

வழக்கு தொடர்பாக ஒருவர் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று விதிக்கப்படும் கால அளவைக் குறைக்கவோ, ரத்துசெய்யவோ 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 11-வது பிரிவின் கீழ், தலைமைத் தேர்தல் ஆணையருக்கு அதிகாரம் இருக்கிறது. உண்மைதான். அதைத்தான் தேர்தல் ஆணையம் பயன்படுத்தியிருக்கிறது என வாதம் வைக்கப்பட்டாலும் நியாயமான அணுகுமுறையா இது? பி.ஜே.பி கூட்டணிக் கட்சிக்காக தமாங்குக்குத் தரப்பட்ட சலுகையைக் காட்டி ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவர்களும் சிறைக்குப் போய்விட்டு வந்தவர்களும் அரியணையில் அமர்வார்கள்.

 *மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலின் தரம் இன்னும்* *மேம்படுத்தப்பட வேண்டும்...*

 ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை அதிகப்படுத்த வேண்டும்... குற்றப்பின்னணியினர் அரசியலில் ஆதிக்கம் செலுத்துவதைக் கட்டுப்படுத்த வேண்டும்... நீண்ட ஆண்டுகளாகப் பேசப்பட்டு வரும் தேர்தல் சீர்திருத்தங்கள் அமலுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதையெல்லாம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் குழி தோண்டி புதைத்துவிடலாம்.

தமாங்கைப் பின்பற்றி தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் தமது அரசியலை பி.ஜே.பி ஆடத் தொடங்கலாம். சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் நான்கு ஆண்டு தண்டனை அனுபவித்து வரும் சசிகலா 2021 பிப்ரவரியில்தான் விடுதலை ஆக வேண்டும். ஏற்கெனவே அனுபவித்த சிறை நாள்கள், நன்னடத்தைக் காரணங்களால் 2020 ஜூலையிலேயே சசிகலா வெளியே வரலாம். அதிலிருந்து அவர் ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. ஆனாலும் சசிகலா தேர்தலில் போட்டியிடுவார். காரணம் தமாங் ஏற்படுத்தியுள்ள முன்னுதாரணம். பி.ஜே.பி. ஆட்சி போட்டுக் கொடுத்த பாதை.

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா மீது எப்.ஐ.ஆர் போடப்பட்டது 1995-ம் ஆண்டு. அது போதாது? `

ஆறு ஆண்டுகளுக்குத் தேர்தலில் நிற்க முடியாது என்ற சட்டத்திருத்தம் 2003-ம் ஆண்டுதான் கொண்டுவரப்பட்டது. 1995-ம் போடப்பட்ட வழக்குக்குப் பிறகு நிறைவேற்றிய சட்டத்தைக்கொண்டு தண்டனை விதிக்க முடியாது. ஆறு ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டது செல்லாது’ எனத் தேர்தல் ஆணையத்தின் கதவுகளைத் தட்டுவார் சசிகலா. அதிகார வர்க்கத்தின் ஆசி இருந்தால் முதல்வர் நாற்காலியில்கூட வந்து அமர்வார்.

 *ஜனநாயகத்தின் ஆணிவேர்களைக் காப்பவர்கள் லில்லி தாமஸ்கள்தான்.* *அதைக் காப்பாற்றுவோம் எனச் சொல்லி அரியணையில் அமரும் ஆட்சியாளர்கள் அல்ல.*

 *ஆய்வுக்கு ........*

திங்கள், 16 நவம்பர், 2020

*தேனின் வகைகளும் பயன்களும்*

*இயற்கையே சிறந்த மருத்துவர்*

*தேனின் வகைகளும் பயன்களும்* 

தேன் உடலின் ஒவவோர் உறுப்புக்கும் ஊட்டத்தை அளிக்கக்கூடியது. அதனால்தான் தேனை அமிர்தத்துக்கு நிகராகச் சொல்கின்றனர்.

தேனின் வகைகள்

எந்தப் பூவில் இருந்து தேன் எடுக்கப்படுகிறதோ, அந்தப் பூவின் தன்மையைப் பொருத்து தேனின் தன்மையும் குணமும் மாறுபடும். அதற்குக் காரணம் அதன் மகரந்த போலன்.

நாவல், வேம்பு, முருங்கை, மா, தும்பை, பூர்க்கு, புளியம், துளசி, பூண்டு மற்றும் வெங்காரமது போன்ற 300-க்கும் அதிகமான தேன் வகைகள் உள்ளன. பொதுவாக, தேனை நல்ல தூக்கம், தொண்டைக்கட்டு, உடல் எடை, மேனி அழகு, வயிற்றுப்புண், கொப்புளம் ஆகியவற்றுக்குப் பயன்படுத்தலாம்.

சித்த மருத்துவத்தில் தேன் கிடைக்கக்கூடிய இடத்தைப் பொருத்து, தேனை ஐந்தாகப் பிரிக்கின்றனர்.

மலைத் தேன்: மலைகளில் கிடைப்பது. அனைத்து மருந்துகளுடனும் சேர்த்துப் பயன்படுத்தலாம். குறிப்பாக, கண் நோயைக் குணப்படுத்தக்கூடியது.

கொம்புத் தேன்: மரத்தில் கிடைப்பது. வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும்.

பொந்துத் தேன்: மரப்பொந்துகளில் கிடைப்பது. எடை சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும்.

புற்றுத் தேன்: மலைப் புற்றுகளில் கிடைப்பது. குழந்தைகளுக்கு வாந்தி, விக்கலை நிறுத்தப் பயன்படும்.

மனைத் தேன்: வீடுகளில் கிடைப்பது. முடி சம்பந்தப்பட்ட நோய்களைத் தடுக்கும்.

தேனில் உள்ள நீர் அளவு குறையும்போது, தேன் கற்கண்டு உருவாகும். தேன் கற்கண்டு (டெரிஜியம்) கண்புரை மற்றும் கண்சதை வளர்வதைத் தடுக்கும்.

பாலுடன் தேன் சேர்த்துச் சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும், தூக்கம் அதிகரிக்கும்.

பால், பாசிப்பயறு மற்றும் தயிரைத் தேனுடன் சேர்த்து முகத்தில் பூசிவர முகப் பொலிவு கூடும்.

கிரீன் டீ உடன் தேன் சேர்த்துச் சாப்பிட்டால், தூக்கம் வருவதைத் தடுக்கலாம்.

தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து, தலையில் தடவி, ஓரு மணி பின் குளிக்க,முடிக் கொட்டுதல் நிற்கும்.

தேனை, சுண்ணாம்புடன் சேர்த்துப் பத்து போட்டால், வலி, வீக்கங்கள் குறையும்.

தூதுவளைச் சாறு, தேன் சேர்த்துக் குடிக்க, சளியைக் குணப்படுத்தும்.

கேரட், தேன் சேர்த்துச் சாப்பிட்டால், ரத்தசோகைப் போகும்.

தேங்காய்ப்பாலுடன் தேன் சேர்த்துச் சாப்பிட்டால், குடல் புண், வாய்ப்புண்கள் ஆறும்.

பார்லி அரிசிக் கஞ்சியைத் தேனுடன் சேர்த்துச் சாப்பிட, அல்சர் குணமாகும்.

தேனுடன் ஆமணக்கு 15 மி.லி சேர்த்துச் சாப்பிட, குழந்தைகளுக்கு சிறுநீர் பிரிவது சீராகும்.

பூண்டு, தேனைச் சேர்த்துச் சாப்பிட்டால், தொண்டைப் புண் சரியாகும்.

தேனை வெந்நீர் சேர்த்துக் குழந்தைகளுக்குக் கொடுத்தால், வயிற்றுப்போக்கு
சரியாகும்.

துளசி, தும்பை மற்றும் தேனை சிறிது சிறிதாய் சேர்க்க, மூச்சுத் திணறல் குறையும்.

இரண்டு டீஸ்பூன் ஆமணக்கு எண்ணெய், ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்துச் சாப்பிட்டால், மூச்சுத் திணறல் உள்ளவர்களுக்கு
பலன் தரும்.

தேன், மிளகுடன் சேர்ந்துச் சாப்பிட, தொண்டைக் கரகரப்பு நீங்கும்.

பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால், நல்ல சக்தி உண்டாகும்.

பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட, நல்ல தூக்கம் வரும். இதயம் பலம் பெறும்.

40 வயதைக் கடந்தவர்கள், நீர் அல்லது பாலுடன் தேன் சேர்த்துச் சாப்பிட்டால்,
கால்சியம் சத்தின் அளவு கூடும்.

தேனை, தீப்புண்களின் மீது தடவிவர புண்கள் ஆறும்.

ஆரஞ்சுப் பழச்சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டால், நல்ல தூக்கம் வரும்.

நெல்லிக்காய் சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டால், இன்சுலின் சுரக்கும்.

எலுமிச்சைச் சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டால், இருமல் குணமாகும்.

இஞ்சிச் சாற்றுடன் தேன் சேர்த்துச் சாப்பிட்டால், பித்தம் தீரும்.

ரோஜாப்பூ, கல்கண்டு, தேன் கலந்து சாப்பிட்டால், உடல் வெப்பம் தணியும்.

மாதுளை மனப்பாகு – மூன்று மாத கர்ப்பிணிகள், மாதுளம் பழச்சாறு, தேன், பன்னீர் ரோஸ், கல்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால், வயிற்று எரிச்சல் குறைவதுடன், ஹீமோகுளோபின் அளவும் அதிகரிக்கும். மேலும், வாந்தி வருவது போன்ற உணர்வு குறையும்.

தேனை யாருக்குக் கொடுக்கக் கூடாது

ஒரு வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்குத் தேன் கொடுக்கக் கூடாது.

சர்க்கரை நோயாளிகள் தேன் அதிக அளவு எடுத்துக்கொள்ளக் கூடாது.

தேனை எப்படிச் சாப்பிடக் கூடாது

தேனை சூடுபடுத்தக் கூடாது.

தேனை நெய் மற்றும் எண்ணெய் உடன் சம அளவு சேர்த்துச் சாப்பிடக் கூடாது.

போலன் அதிகமாக உள்ள தேனைச் சாப்பிடக் கூடாது!!!🙏🙏

சனி, 7 நவம்பர், 2020

நாம், அந்த பங்கிலோ வேறு பங்கிலோ ஒவ்வொரு முறையும் பெட்ரோல் மற்றும் டீசல் வாங்கும்போது முறையே ஒவ்வொரு லிட்டருக்கு 6 பைசாவும் 4 பைசாவும் கழிவறை பராமரிப்பு செலவுக்காகக் நம் கையிலிருந்து கொடுக்கிறோம். Petrol bunk

இந்தியாவில் ஹோட்டல்கள் மட்டுமல்லாது ஓவ்வொரு பெட்ரோல் பங்க்களும் சரியான பராமரிப்புள்ள குடிநீர் மற்றும் கழிவறை வசதியை பொதுமக்களின் உபயோகத்திற்காக கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்பது மத்திய அமைச்சகத்தின் விதியாகும். 

நாம், அந்த பங்கிலோ வேறு பங்கிலோ ஒவ்வொரு முறையும் பெட்ரோல் மற்றும் டீசல் வாங்கும்போது முறையே ஒவ்வொரு லிட்டருக்கு 6 பைசாவும் 4 பைசாவும் கழிவறை பராமரிப்பு செலவுக்காகக் நம் கையிலிருந்து கொடுக்கிறோம்.

அதனால் அடுத்த முறை அவசரம் எனில், உங்கள் கூகிள் மேப்பில் பக்கத்திலுள்ள பெட்ரோல் பங்ககளை கண்டுபிடியுங்கள்.

இந்த இலவசமாக கழிவறை உபயோகப்படுத்தும் வசதி அங்கு இல்லை என்றாலோ, இருந்தும் நம்மை உபயோகப்படுத்த தடுத்தாலோ, பூட்டி வைத்து சாவி ஓனரிடம் உள்ளது என்று சிப்பந்திகள் மறுத்தாலோ, கழிப்பறை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இல்லையென்றாலோ, உங்கள் மொபைல் போனில் அந்த பங்க் மற்றும் கழிப்பறையின் புகைப்படத்தை எடுத்துக்கொண்டு, பங்கின் பெயர், முகவரியுடன் தேதி குறிப்பிட்டு கூகிள் பிளே ஸ்டோரில் (Google Play Store) - ல் உள்ள ஸ்வஸ்தா மொபைல் ஆப் (Swachhta@PetroPump App) மூலம் புகார் பதிவு செய்யலாம்.

பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், இந்திய அரசு (Ministry of Petroleum and Natural Gas, Government of India) மூலம் 3 நாள்களுக்குள் நேரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு உங்களுக்கு குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல் அனுப்பப்படும். 

பொதுமக்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் இந்தச் செய்தியை பகிர்ந்திடவும் கேட்டுகொள்கின்றேன்.

திங்கள், 12 அக்டோபர், 2020

பாஜக அரசின்*போக்கை மக்களிடம் கொண்டு செல்வோம்.❗*

*இந்தப் பதிவை முழுமையாகபடித்து முடிந்தவரை பகிருங்கள்🤝🏼* 

👺🌐📌⁉️🇮🇳👿
             ⚖️
             😴
*பாஜக அரசின்*போக்கை மக்களிடம் கொண்டு செல்வோம்.❗* 

*அவர்களிடம் #முகநூலில் கருத்து #சன்டை போட #தேவையில்லை.❗*

 *சொன்னாலும் அவர்கள் போலி வரலாற்றையே  கையிலெடுப்பர்.❗*

   *நாம்* 😴 🤔 🥱

*#மக்களிடம் இந்த #கேள்விகளை #வைப்போம்...❗*

*பதிலை அவர்கள் #தேர்தல் வாக்குகள் #மூலம் திருப்பி #தரட்டுமே...❗*.

*இந்த பாஜக அரசு...⁉️*

     *#எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பயன்படும்,*

 *பணம் யாருடைய நேர்மையான சம்பாத்தியம்❓*
    
*#ரபேல் விமான  கோப்புகள் ஏன் மாயமானது❓*              
*பாஜக மீது கேள்வி கேட்கும் #நீதிபதிகளின் மீது மட்டுமே #கற்பழிப்பு புகார்களும்* 

*#கொலைமிரட்டல்களும் கொலையும் செய்யப்படுவது ஏன்❓*
      
          *#மோடியை பிரமோட் (முன் நிறுத்த) செய்ய பயன்படுத்தப்பட்ட  #பத்தாயிரம்கோடி பணம் யாருடையது❓* 
     
       *அத்தனை #ஊழல்வாதிகளும் பாஜகவில் இணைந்தவுடன் #பரிசுத்தமாவது எப்படி⁉️*
     
        *#எதிர்க்கட்சிகள் பாஜக மீது குற்றச்சாட்டு கூறியவுடன் அவர்கள்மீது மட்டும்,*

*#வருமானவரித்துறை #அமலாக்கத்துறை ரெய்டுகள் நடப்பது ஏன்❓* 

*குற்றச்சாட்டுகள் கூறியவர்,*
 *#அமைதியானவுடன் அந்த வழக்குகள் #மாயமாவது ஏன்❓*
    
        *#பல லட்சங்கள் கோடி #கருப்புபணம்,*

 *வெளிநாடுகளில் பதுக்கியதாக சொல்லப்பட்ட கருப்பு பணத்தில்,* 

*இதுவரை ஏன் ஒரு #பைசாகூட #மீட்கப்படவில்லை❓*

*குறைந்தபட்சம் கருப்பு பணம் #பதுக்கியவர் #பட்டியலைக்கூட வெளியிட முடியவில்லை❓*
     
       *#பாஜக ஆட்சிக்கு வரும்வரை,* 

*#கருப்புபணமாக இருந்தவை பாஜக ஆட்சிக்கு வந்தவுடன்,* 

*#முதலீட்டு பணமாக மாறிய மர்மம் என்ன? ஜீ பூம்பா சொன்ன சூத்திரதாரி யார்❓*
       
         *#ஏன் நாட்டின் #பாதுகாப்புதுறை உட்பட அத்தனை துறைகளும் #தனியாருக்கு விற்கப்படுகிறது❓*
     
        *#கடந்த தேர்தலில் #கைப்பற்றபட்ட ""2 கண்டெய்னர்"" பணம் யாருடையது என்பதை,*

*ஏன் வெளிப்படையாக இதுவரை அறிவிக்க முடியவில்லை❓*
 *பத்திரிக்கைகளில்,* 

*இவ்வளவு வெட்டவெளிச்சமான* 

*கண்டெயினர்களின் கதியே இதுவென்றால்,* 

*தெரியாமல் கைமாறிய கண்டெயினர்களின் எண்ணிக்கை என்ன❓*
      
          *#மோடி பல்லாயிரம் கோடி அரசு பணத்தை செலவழித்து,*

 *வெளிநாடுகளுக்கு செல்வது,*

 *முதலீடுகளை ஈர்க்கதான் என்றால்,*

 *ஏன் இதுவரை ஒரு பைசாகூட வெளிநாட்டு "முதலீடு" இந்தியாவிற்கு வரவில்லை❓*
      
         *#மோடியின் வெளிநாட்டு பயணங்களில் அவரோடு செல்லும்,*

*தொழிலதிபர்கள் மட்டும் வெளிநாடுகளில் பல லட்சம் கோடிகள் முதலீடு செய்வது எப்படி❓*
       
        *#மோடியின் வெளிநாட்டு பணம் இந்தியாவிற்கு முதலீடுகளை கொண்டு வரவா❓*

 *அல்லது அவரது நண்பர்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்ய முகவராக செல்கிறாரா❓*
      
       *#இந்தியாவின் முக்கிய ஊழல்வாதியாக கூறப்பட்டு*

 *தண்டனை அனுபவிக்கும் லாலு பிரஷாத் யாதவின் காலத்தில்,*

 *#லாபத்தில் இயங்கிய "ரயில்வே" தனியாருக்கு விற்கும் அளவிற்கு❗*
 *#நஷ்டம் அடைந்து ஏன்❓*
       
        *#பெட்ரோல் மீதான 300 சதவீதம் இலாபம் அரசுக்கு மட்டுமே நோக்கம் என்றால்,* 

*இன்னமும் 50 சதவீதத்திற்கு மேலான பெட்ரோல் தனியார் வசம் இருப்பது ஏன்❓*
      
        *#தேசிய நெடுஞ்சாலைகள் அமைத்து 15 ஆண்டுகள் கடந்த பின்னரும்,*

*டோல்கட்டணங்கள் வசூலிக்க தனியாருக்கு தொடர்ந்து அனுமதி வழங்குவது ஏன்❓*
       
        *#யாரிடமும் கொடுக்காமல் மிக ரகசியமாக பாதுகாக்கப்படும் என்று,* 

*பொதுமக்களிடம் உறுதியளிக்கப்பட்டு பெறப்பட்ட ஆதார் தகவல்கள்,*

 *ரிலையன்சின் ஜியோ நிறுவனத்திற்கு முழுவதுமாக வழங்கப்பட்ட காரணம் என்ன❓*
      
        *#ஏழை விவசாயிகளுக்கும் மாணவர்களுக்கும்,* 
*ஆயிரம் ரூபாய் கூட தள்ளுபடி செய்யப்படாத கடன்கள்,*
 *பெருநிறுவனங்களுக்கு மட்டும்⁉️*
 *பல்லாயிரக்கணக்கான கோடிகள் தள்ளுபடி செய்யப்படுவதன் மர்மம் என்ன❓*
     
       *#பல்லாயிரங் கோடிகள் உபரிபணம் இருக்கும்*

*எல்ஐசி பங்குகள் தனியாருக்கு விற்கப்படும் காரணம் என்ன❓*

 *எல்ஐசியில் எந்தவிதமான நஷ்டம் ஏற்பட்டது?*

    *#கொரோனா காரணத்தால் ஊரடங்கு என்ற பெயரில் மக்களை கால்நடைகளாக நடக்கவிட்டு*

*பசி- பட்டினிபோட்டு ஆயிரக்கணக்கான மனிதர்களை கொன்றுவிட்டு-* 

*காட்டில் சுதந்திரமாக வாழுகின்ற மயிலை,*

 *வீட்டில் அடைத்து  உணவளித்து பிராயச்சித்தம் தேடுகிறாரா Mr.மோ (ச) டி ஜீ.....⁉️*A

கொரனாவுக்கு இது தான் கடைசி தீர்வு - Corona Solution

கொரனாவுக்கு இது தான் கடைசி தீர்வு

 கொரோனா வைரஸ் கிருமி பற்றி உயிர்தொழில் நுட்ப துறையில் முனைவர் பட்டம் பெற்ற ஒரு மருத்துவரின் அருமையான 
விளக்க பதிவு!!

*நான் Dr.P.மணி.
நான் உயிர்தொழில் நுட்ப துறை (Biotechnology )ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளேன். 

இப்போது கும்பகோணம்அன்னை அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மருத்துவ குழுமத்தின் இயக்குநராக பணியாற்றி வருகிறேன்.

என்னிடம் என் மாணவர்கள் மற்றும் நண்பர்கள் ஏன் இன்னும் கொரானாவிற்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை? இந்த கொரோனா வைரஸ் கிருமி தொற்றிலிருந்து நம்மை எப்படி பாதுகாத்து கொள்வது?என விளக்கம் கேட்டனர்.

கொரோனா வைரஸ் கிருமி தொற்று பற்றி எனக்கு தெரிந்த அறிந்த உயிரியல் விளக்கத்தை கீழ்கண்டவாறு பதிவிடுகின்றேன். 

முழுமையான உயிர் பெறாத ஒரு அரைகுறை உயிரி தான் கொரோனா வைரஸ் .

ஒரு ஆர்என்ஏ
(நமது செல்களில் ஜீன் எனப்படும் டிஎன்ஏ இருப்பது மாதிரி வைரஸ்களில் இருப்பது டிஎன்ஏவின் அரைகுறை வடிவமான RNA) 
அதைச் சுற்றி ஒரு புரதம் (Protein) மற்றும் கொழுப்பு சேர்ந்த ஒரு உறைதான் கொரோனா வைரஸ் (ஆல்கஹால் கொண்ட சானிடைசர்கள், சோப்பு நுரை பட்டால் இந்த உறை கரைந்து வைரஸ் அவுட்). 

அந்த உறையின் மீது ஆங்காங்கே முட்கள். இது தான் கொரோனா வைரஸ். 

இந்த முட்களின் வேலை எளிதாக எதிலும் ஒட்டிக் கொள்ளவதே.

இந்த முட்களும் புரதத்தால் ஆனவையே.

கொரோனா வைரசில் இந்த முட்கள் பார்ப்பதற்கு கிரீடத்தில் (Crown) இருக்கும் வேலைப்பாடு போல இருப்பதால் இந்த வைரசுக்கு கொரோனா வைரஸ் எனப் பெயர்.

இதை ஏன் அரைகுறை உயிரி என்கிறோம்.

இந்த வைரஸ்களால் தானாக வாழ முடியாது. 

இது ஒரு முழுமையான 
ஒட்டுண்ணி. 

ஏதோ ஒரு உயிரினத்தின் செல்லுக்குள் புகுந்து அந்த 
செல்லில் இருக்கும் திட, திரவப் பொருட்களையே உணவாக்கிக் கொண்டு பல்கிப் பெருகுவது தான் வைரஸ்களின் வேலை. 

செல்லுக்கு வெளியே சில மணி நேரமோ அல்லது சில நாட்களோ தான் இதனால் தாக்குப் பிடிக்க முடியும்.

இந்த வைரஸ் மூக்கு, வாய் 
அல்லது கண் வழியாக உள்ளே நுழைந்தவுடன் முதலில் 
தொண்டை பகுதியை தாக்குகிறது. 

தொண்டையில் உள்ள திசுக்களின் செல்களில் இது பல்கிப் பெருகியவுடன் தான் தொண்டை வலியும் இருமலும் தொடங்குகிறது. 

இந்த வைரஸ்களை எதிர்த்து நம் உடலின் எதிர்ப்பு சக்தி (Immune system)உடனே மோதலை தொடங்குகிறது. 

அந்த மோதலின் அறிகுறி தான் காய்ச்சல். 

பெரும்பாலான வைரஸ்கள் 
அதிக வெப்ப நிலையை தாங்க முடியாதவை என்பதால், உடலின் வெப்ப நிலையை உயர்த்தி வைரஸ்களை காலி செய்ய நமது உடலின் எதிர்ப்பு சக்தி முயற்சிக்கிறது.

இந்த மோதலின்போதே பெரும்பாலான வைரஸ்களை 
நமது உடல் கொன்று விடுகிறது, 
கொரோனா வைரஸ் உள்பட. 

நமது உடலின் Immune system ஒரு மாபெரும் பாதுகாப்பு அரண். 

வைரஸோ, பாக்டீரியாவோ 
அல்லது வேறு ஒரு நுண்ணுயிரோ உடலுக்குள் புகுந்தவுடன் அவற்றை நமது உடல் இரு வகையான காரணிகளை வைத்து அடையாளம் கண்டுபிடிக்கிறது.

முதலாவது அந்த நுண்ணுயிர் வெளியிடும் வேதியியல் பொருட்கள், இரண்டாவது அந்த நுண்ணுயிரின் உருவம்.

இது வெளியில் இருந்து வந்த பொருள் என்பதை கண்டுபிடித்த உடனே நமது ரத்தத்தின் வெள்ளை அணுக்கள் அவற்றை கொல்லும் வேலையில் இறங்குகின்றன. 

வைரஸ், பாக்டீரியாவை அப்படியே விழுங்கி ஏப்பம் விடும் வேலைக்கு Macrophages, Neutrophils போன்ற அடியாட்களை வெள்ளை அணுக்கள் அனுப்புகின்றன.

ஆனால், இதையும் தாண்டி வைரஸோ பாக்டீரியாவோ 
உடலை பதம் பார்க்க ஆரம்பித்தால், அடுத்த கட்ட அரண்கள் வேலையில் இறங்கும். 

அதில் ஒன்று Innate lymphoid cells. 

இதன் ஒரு பிரிவான T- Killer cellகளின் வேலை வைரஸ்களால் பாதிக்கப்பட்ட உடல் செல்களை கொன்று, வெளியேற்றி உடல் திசுக்கள் மேலும் மோசமடையாமல் தடுப்பது. 

மேலும் வைரஸ்களுக்கு உணவாகிக் கொண்டிருக்கும் செல்களின் எண்ணிக்கையை குறைப்பது. 
இது தான் இதன் வேலை.

அதே நேரத்தில் Macrophages, Neutrophils போன்றவற்றால் தடுக்க முடியாத வைரஸ்களை ஒழித்துக் கட்ட நமது உடல் அனுப்பும் பிரம்மாஸ்திரம் தான் B cells எனப்படும் வைரஸ்களை தாக்கும் செல்கள்.

இந்த செல்கள் வைரஸ்களின் உருவத்தை அடையாளம் கண்டு, அதன் மீது ஒட்டிக் கொண்டு, அப்படியே இழுத்துச் சென்று Lumph nodes எனப்படும் நிணநீர் சுரப்பிகளில் வைத்து, அங்கு சுரக்கும் ரசாயனங்கள் உதவியோடு வைரஸ்களை கொல்லும்.

இந்த உடல் எதிர்ப்பு சக்தி 
ஒரு பக்கம் இருக்க, தொண்டைப்பகுதியை 
அடைந்த கொரோனா 
வைரஸ்கள் அடுத்ததாக 
நமது உடலை பாதிப்பது நுரையீரலை.

நுரையீரலின் உள் சுவற்றில் இருப்பவை மிக லேசான பில்லியன் கணக்கான எபிதீலியல் செல்கள். 

இந்த செல்களில் கொரோனா வைரஸ் ஒட்டிக் கொண்டு, துளை போட்டு தனது ஆர்என்ஏவை உள்ளே நுழைக்கும்.

இந்த ஆர்என்ஏ செல்லுக்குள் போய் லட்சக்கணக்கில் தனது பிரதிகளை ஜெராக்ஸ் மெசின் மாதிரி காப்பி எடுக்கும். 

இந்த ஒவ்வொரு ஆர்என்ஏவும் ஒரு வைரசாக மாறும்.

அந்த செல் முழுக்கவே வைரஸ்களால் நிறையும்போது, அந்த செல்லே வெடித்து மடியும். 

அந்த வெடிப்பில் இருந்து கிளம்பும் லட்சக்கணக்கான வைரஸ்கள் அடுத்தடுத்த செல்களை இதே போல தாக்கி அழித்து,பல்கிப் பெருகும்.

10 நாட்களில் நுரையீரலின் பெரும்பாலான செல்களை 
இந்த வைரஸ் ஆக்கிரமிக்கும்.

இதுவரையும் கூட பிரச்சனை அதிகமில்லை. 

ஆனால், இந்த வைரஸ்களை அழிக்க நமது உடலின் Immune cells எனப்படும் எதிர் தாக்குதல் செல்கள் நுரையீரலில் நுழைந்து தாக்க ஆரம்பிக்கும்போது தான் பிரச்சனையே துவங்குகிறது.
 
மற்ற வைரஸ்களில் இருந்து கொரோனா இங்கே தான் மாறுபடுகிறது. ழ

இந்த கொரோனா வைரஸ், 
நமது உடலின் எதிர் தாக்குதல் செல்களுக்குள்ளேயே நுழைந்து அதையும் சேதப்படுகின்றன. 

சேதப்படுத்துவதோடு மட்டுமல்ல, அந்த செல்களின் ஜீன்களில் குழப்பத்தையும் ஏற்படுத்துகின்றன.

நமது Immune system செல்கள் ஒன்றோடு ஒன்று தகவல் பரிமாறிக் கொள்வது சைட்டோகைன்ஸ் (Cytokines) எனப்படும் ஒரு வேதிப் பொருள் மூலம் தான்.

ஜீன்கள் பாதிக்கப்பட்ட எதிர் தாக்குதல் செல்கள் குழப்பமான சைட்டோகைன் தகவல்கள் அனுப்ப, நுரையீரலை பாதுகாக்க கிளம்பி வரும் Neutrophils செல்கள், கொரோனா வைரஸ்களுக்கு பதிலாக உடலின் எதிர்ப்பு சக்தி செல்களை தாக்க ஆரம்பிக்கும்.

அதே போல பாதிக்கப்பட்ட நுரையீரல் செல்களை தற்கொலை செய்ய வைத்து நோய் மேலும் பரவாமல் தடுக்க வேண்டிய வேலைக்காக வரும் T- Killer cellகள் வந்த வேலையை விட்டு விட்டு, நன்றாக இருக்கும் நுரையீரல் செல்களை அழியச் சொல்லி தகவல் தரும். 

இதனால் நுரையீரல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி, அடுத்ததாக பாக்டீரியா தாக்குதல், நிமோனியா உள்ளிட்ட தோற்று நோய்களுக்கு ஆளாக நேரிடும். 

இந்த இடத்தில் தான் மரணங்கள் நிகழ்கின்றன.

இப்படி உடலின் எதிர்ப்பு சக்தியையே நமது உடலுக்கு 
எதிராக திருப்பி விடுவதில் தான் கொரோனா வைரசின் முழு சக்தியும் அடங்கியுள்ளது. 

வைரசின் உருவத்தை வைத்து அடையாளம காணும் B- cellகள் கூட கொரோனாவிடம் இதுவரை எளிதில் வெற்றியை ஈட்டவில்லை.

இந்த வைரஸ்கள் அனுப்பும் வேதியல் தகவல்கள் (Cytokines) எல்லா நேரமும் ஒரே மாதிரியாக இல்லை. 

அவை லட்சக்கணக்கான வகைகளில் மாறிக் கொண்டே இருப்பதால் T-killer cells, B cells ஆகியவற்றால் இவற்றை சரியாக அடையாளம் காண முடியவில்லை. 

இது தான் இந்த வைரசுக்கு எதிராக மருந்தோ தடுப்பு ஊசியோ தயாரிப்பதில் பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருகிபது.

நாம் உண்ணும் அல்லது ஊசி மூலம் போட்டுக் கொள்ளும் மருந்துகள் உடலுக்குள் சென்றவுடன் வேதியியல் தகவல்களாக மாறித்தான் நோயை ஏற்படுத்தும் கிருமிகளோடு நேரடியாக மோதுகின்றன,அல்லது உடலின் Immune system- உடன் பேசி, வேண்டிய எதிர்ப்பு மருந்தை உடலையே தயாரிக்க வைக்கின்றன.

 ஆனால், கொரோனா நமது உடல் எதிர்ப்பு சக்தி சிஸ்டத்தையே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு சென்றுவிடுவது தான் இந்த வைரசுக்கு எதிராக எந்த மருந்தை வைத்து போராடுவது என்ற குழப்பத்தில் மருத்துவ உலகை ஆழ்த்தியுள்ளது.

கொரோனா வைரஸ்களின் கெமிக்கல் தாக்குதல்களால் குழம்பிப்போன T-killer cells, 
B cells-களும் ஏற்கனவே 
கொரோனா பாதித்த நுரையீரல்களை மேலும் 
பாதித்து உலகெங்கும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. 

ஆனால், ஏற்கனவே நுரையீரல் பிரச்சனை, நோய் எதிர்ப்பு சக்தியில் பிரச்சனை உள்ளவர்களில் தான் இந்த உயிரிழப்புகள் அதிகமாக ஏற்படுகிறது.

நல்ல உடல் நிலையில் உள்ளவர்களுக்கு பிரச்சனை குறைவாகவே உள்ளது.

உடலில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் பெரும் குழப்பத்துக்கிடையிலும் பெரும்பாலான நேரங்களில் 
நமது உடல் எதிர்ப்பு சக்தி 
சிஸ்டம் கொரோனா வைரஸை தோற்கடித்துவிடுகிறது.

 நீரிழிவு நோய் உள்ளவர்களின் ரத்தத்தில் அதிகமாக இருக்கும் சர்க்கரையால் உடலின் எதிர்ப்பு சக்தி முடக்குகிறது.

அதே போல இதயக் கோளாறு, 
பி.பி உள்ளவர்களின் உடலில் நுண்ணிய ரத்தக் குழாய்கள் போதிய ரத்தத்தை எடுத்துச் செல்வதில் சிக்கல் வருவதால், உடலின் எல்லா பகுதிக்கும் 
போதிய சக்தி கிடைப்பதில்லை, 
நோய் எதிர்ப்பு சக்தி உள்பட.

ஆனால், சர்க்கரை அளவும் பிபியும் மருந்துகள், உடற்பயிற்சி மூலம் கட்டுப்பாட்டில் உள்ளவர்களுக்கு பிரச்சனை இல்லை. 

இங்கேயும் உடலின் எதிர்ப்பு 
சக்தி கொரோனாவை தோற்கடித்துவிடுகிறது என்பது தான் நல்ல செய்தி.

கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடித்துவிடுவார்களா? என்பது தெரியவில்லை.

35 ஆண்டுகளுக்கு முன் வந்த எய்ட்ஸ் நோய்க்கு இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. 

அந்த எச்ஐவி வைரசும் கொரோனா வைரஸ் ரகத்தை சேர்ந்தது தான். 

அதுவும் நமது உடலின் எதிர்ப்பு சக்தியை கதிகலங்க வைக்கும் வைரஸ் தான்.

ஆனால், கொரோனா மாதிரி 
எச்ஐவி வைரஸ் மூலம் இவ்வளவு சாதாராணமாக இருமல், தும்மல் மூலம் எல்லாம் பரவவில்லை. 

அந்த வகையில் கொரோனா தான் கொடூரம்.

அதற்குத் தான் வீட்டிலேயே 
முடங்க சொல்கிறார்கள்.

இன்னும் மருந்து கண்டுபிடிக்க இயலாத நிலையில், இந்த நோயில் 
இருந்து தப்பிப்பதே உசிதம்.

இந்த நோய் தாக்குதலை தவிர்ப்பதே இதற்கான இப்போதையே ஒரே மருந்து!

தனித்திருப்போம்!விழிப்புடன் இருப்போம்!!வீட்டிலேயே இருப்போம்!!!கொரோனாவை ஒழிப்போம்!!!!

(தற்போதைய வாட்ஸ் ஆப் செட்டிங்கில் forward மெஸேஜை ஒரு முறைதான் forward செய்ய முடியும் என்பதாலும்,ஒவ்வொரு தடவையாக பல நண்பர்களுக்கு forward செய்வதில் ஏற்படும் சிரமத்தை குறைப்பதற்காக எனக்கு வாட்ஸ் ஆப்பில் வந்த இந்த பயனுள்ள மெஸேஜை காப்பி&பேஸ்ட் செய்து பதிவிட்டுள்ளேன்.
#Corona Solution 

சனி, 26 செப்டம்பர், 2020

பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தான் ஒருவன்.....!!

பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தான் ஒருவன்.....!!

குடிக்க கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்து விட்டது....!!

அவன் போக வேண்டிய தூரமோ அதிகம்......!! 

குடிக்கத் தண்ணீர் இல்லாமல்......,

அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான்.....!!

தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது.....!! 

மிகவும் கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான்.....!!

அங்கே ஆட்கள் யாரும் இல்லை.....!! 

ஒரு கையால் அடித்து இயக்கும்,

 "அடி பம்பும் ..... ,
அருகே ஒரு ஜக்கில், தண்ணீரும் இருந்தன.....!! 

ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள்....!!

"ஜக்கில் உள்ள தண்ணீரை அந்தப் பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும்"....!!

"குடித்து விட்டு " 
     
மறுபடியும் ஜக்கில்,
         
" தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்."...!!!!

அந்தப் பம்ப் செட்டோ மிகவும் பழையதாக இருந்தது.....!!

அந்தத் தண்ணீர் ஊற்றினால்..... ,

அது இயங்குமா...,

தண்ணீர் வருமா....,,

என்பது அவனுக்கு சந்தேகமாக இருந்தது....!!

அது இயங்கா விட்டால்....,

அந்தத் கொஞ்சத் தண்ணீரும் வீணாகி விடும்.....!!

அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால்....... ,

தாகமும் தணியும்......!!

உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.....!!

அந்தப் பயணி யோசித்தான்....!!

தண்ணீரைக் குடித்து விடுவதே ....., 

புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது........!!

ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல்......,

 அந்தப் பம்ப் இயங்குவதாக இருந்து,

அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் நான் குடித்து விட்டால் ,

அது மகாபாதகம் என்று இதயம் சொன்னது.......!!

இனி தன்னைப் போலத் தாகத்தோடு வருபவர்களுக்கு,

எந்த பயனும் இல்லாமல் போக....,

தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது.....!! 

அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை......!!

ஆனது ஆகட்டும் என்று......,

அந்தப் பம்பில் அந்தத் தண்ணீரை ஊற்றி விட்டு,

அதை அடித்து இயக்க ஆரம்பித்தான்.....!! 

தண்ணீர் வர ஆரம்பித்தது....!!

தாகம் தீர,
வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு,

தான் பயணத்திற்காக கொண்டு வந்த குடுவையில் சேகரித்து கொண்டான்.....!!

அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில்....,

அவன் மனம் நிறைந்திருந்தது.....!!

நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை....,

பிறருக்கும்,
அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும்......!!

எந்த ஒரு நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது....!!

  "அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன "....,

 என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது....!!

  "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" ....!!
       
என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால்...,

 "இந்த உலகம் என்றும் இன்பமயமாகி விடும்"....!!!
உண்மையில் இன்று நம் நிஜ வாழ்க்கையில் 99.99 சதவீத மக்கள் சுயநலத்திற்காக உள்ளார்கள்... ஆனால் வெறும் 00.01 சதவீத மக்கள் மட்டுமே பொதுநலத்துடன் இருப்பதால் இந்த உலகம் இன்னும் அழிந்து போகாமல் இயங்குகிறது...

🌷🌷

Popular Posts

Facebook

Blog Archive